Saturday, April 4, 2009

பழைய தோசைக்காக புளித்துக் கிடக்கும் உழுத்தந் தலைகள்

இன்று தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தின் ஊடாகவே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் என்று ஒரு பகுதியினர் வாதிட்டு வருகின்றனர். இதற்கு இவர்கள் புலிகள் பலவீனப்பட்டு விட்டதையும் இதனால் அரசியல் தீர்வைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்றும் - இவர்கள் வாதிட்டு வருகின்றனர்.

ஒர் ஆயுத ரீதியான போராட்டம் ஒர் இராணுவத் தீர்வுக்கானது என்றும் இதற்கு எந்த அரசியலும் கிடையாது என்றும் ஒரு துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் குண்டு ஒர் அரசியலின் அதிகார மொழி என்பதையும் மறுத்துரைக்கும் ஒரு தலைமறைவான பிரச்சாரம் என்பதை இவர்கள் வசதியாக மறைத்து விடப் பார்க்கிறார்கள்.

இன்று இனப்பிரச்சனை இலங்கை அரசியலில் புரையோடிய பிரச்சனையாக உள்ளதாவும் அரசியல் வாதிகளின் கடந்தகால தவறுகளாகவே இவைகள் உருவாகி விட்டதாகவும் இவர்கள் கருதுகின்றனர். அதாவது பாராளுமன்றத்தில் இவர்கள் சரிவர நடந்து கொள்ளாததே இதன் மூலகாரணம் என்பதே இவர்களின் முடிந்த முடிவாகும். அதாவது இவர்களின் கருத்துப்படி இப்பிரச்சனைக்கான தீர்வு ஒன்றில் நல்ல அரசியல் வாதிகள் இப்பிரச்சினையை பாராளுமன்றத்துக்குள் முன்னெ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

2 comments:

  1. ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு....
    17.05.2009 மாலை மணி 5...
    உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
    வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
    எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
    தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!

    ReplyDelete
  2. கதை எழுதுகிற ஆசாமியாலும்,நடனக்காரியாலும்,தமிழர்கலுக்கு ஆபத்து!

    ReplyDelete