இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
பு.ஜ. வாசகர்களும், தமிழக மக்களும் நேபாள நாட்டில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையையும், அதனையொட்டி ஐக்கிய நேபாளப் பொதுவுடமை கட்சி (மாவோயிஸ்ட்) எடுத்திருக்கும் முடிவுகளையும், அம்முடிவுகளின் அடிப்படையில் அமைந்த அக்கட்சியின் நடைமுறையையும், அதற்கு நேபாள உழைக்கும் மக்கள் அளித்து வரும் ஆதரவையும் புரிந்து கொள்ள, தோழர் பசந்தாவின் நேர்காணல் பெருமளவில் உதவும் என நம்புகிறோம்.
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.
Saturday, October 17, 2009
Friday, October 16, 2009
அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவக் கோரும் மகிந்த அரசியல்
அரச பாசிசத்தை ஆதரிப்பது அவசியம் என்று படம் காட்டிய கூட்டம் ஒன்றை, நேரடியாக சென்று எம்மால் பார்க்க முடிந்தது. அவர்கள் வைத்த மையவாதம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அரசுடன் சேர்ந்து செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் எமக்கு கிடையாது என்பதுதான். இதைத் தவிர தமக்கு வேறு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்கின்றனர். அதேநேரம் எம்மக்கள் பற்றி, அரசுடன் தானே பேசவேண்டும் என்கின்றனர். அரசிடம் இருந்து சிறுக சிறுக, சாத்தியமானவற்றை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவே தாம் முனைவதாக கூறுகின்றனர்.
தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
தாங்கள் அரசுடன் இணைந்து இப்படி செய்வதற்கு எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது என்கின்றனர். மக்கள் மேலான கரிசனை தான், தம்மை இப்படித் செய்யத் தூண்டுகின்றது என்கின்றனர். இப்படி அரசுடன் சேர்ந்து இயங்கும் கூலிக் குழு உறுப்பினர்கள் முதல் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் வரை, ஒன்றாக சேர்ந்தே மகிந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வலைக்குள் அப்பாவிகள் பலர்
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்