பாசிசப் புலியில் கருணா என்ற தனிநபருக்கு ஏற்பட்ட முரண்பாடு கிழக்கு பிரிவினையாகியது. அதுவோ இன்று பேரினவாதத்தின் கிழக்கு கூலிக் கும்பலாகி நிற்கின்றது. இது கிழக்கு மக்களின் 'ஜனநாயகம்" கிழக்கு தமிழ் மக்கள் 'நலன்" என்று பல்வேறு கோசங்களுக்கு ஊடாக, தனது மக்கள் விரோத பாசிசத்தை விதைத்தனர், விதைக்கின்றனர்.
கிழக்குக் கூலிக் கும்பலுக்கெல்லாம் தலைமை தாங்கும் ஒரு ரவுடியை, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்ற தலைவனாக இனம் கண்ட பேரினவாதம், அவனை தனது கிழக்கு முதலமைச்சராக்கியது. இப்படி 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்" என்று இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் புகழும் இந்த நிகழ்வுகள் அனைத்தும், பேரினவாத சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பத்தான் நடக்கின்றது. இப்படி இருக்க, இந்த கூலிக்கு மாரடிக்கும் கிழக்கு பாசிட்டுக்களை, கிழக்கு மக்களின் விருப்பாகவும், தேர்வாகவும் கூறுகின்றனர். புலியெதிர்ப்பு கிழக்கு பாசிட்டுக்களின், ஒரேயொரு அரசியலாக இதுவே உள்ளது.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment