மனித படுகொலைகளைக் கண்டு ரசிப்பவர்கள் தான், பம்பாய் மரணத்தை கண்டு புலம்புகின்றனர்
இவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள், இதைப் பார்த்து ரசிக்கின்றோம். காலம் ப+ராவும் கொலை வெறியுடன், மற்றவனை அடக்கியொடுக்கி திரிந்த கும்பல், அதிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசிக்கின்றோம். மனிதத்தை வதைக்கும் கொடுங்கோலர்கள், பதைபதைக்க அதன் அத்திவாரமே ஆடுவதைக் நாம் கண்டு மனக்கிளர்ச்சி கொள்கின்றோம்.
சாதியின்பெயரால், மதத்தின் பெயரால் கொன்று குவித்த ஆவிகள், இதை பார்த்து குதூகலமடைகின்றன. ஆளும் அரச பயங்கரவாதமும், அதன் துணையுடன் ஆட்டம் போடும் இந்துத்துவவாதிகளால், மனிதம் சிதைக்கப்பட்ட போதெல்லாம் எந்த நீதி விசாரணையும் நடந்தது கிடையாது. இந்தக் குற்றத்துக்காக யாரும் தண்டிக்கப்பட்டது கிடையாது. இந்த குற்றவாளிகளும் அவர்களின் ரசிகர் கூட்டமும் தான் 'பயங்கரவாதம்" தண்டிக்கப்பட்ட வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர். படுபாதகமான தம் செயலுக்காக தாம் கொல்லப்படுவதற்கு எதிராக, கொல் என்று கொக்கரிக்கின்றனர். சித்திரவதைக் கூடங்களையும், சிறைக் கொட்டகைகளையும், சட்டங்களையும், தண்டனைகளையும் மக்களுக்கு எதிராகவே 'பயங்கரவாதத்தின்" பெயரில் உருவாக்குகின்றனர். இப்படி அரச பயங்கரவாதம் மக்கள் மேல் குதறியதும், அதற்கு எதிரான போராட்டமும் தான் மனித வரலாறு.
பம்பாய் தாக்குதல், செப் 11 போல் ஆளும் வர்க்கத்ததைக் கிலி கொள்ள வைத்துள்ளது. இதைக் காட்டி யுத்த வெறியும், அடக்குமுறையும், அடிப்படைவாதமும் மேல்நிலைக்கு உசுப்பேற்றப்படுகின்றது.
இந்தத் தாக்குதல் உலகம் இரண்டாக........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment