கோயபல்ஸ்சின் சீடன்தான், பேரினவாத அரசின் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய
இதைச் செய்ய கைதேர்ந்த பாசிச பேச்சாளர்களை முன்னிறுத்துகின்றது. இதன் மூலம் அனைத்தையும் தமக்கு சாதகமாக திரித்து புரட்டுகின்ற, அரசியல் சகுனிகளைக் கொண்டு பேரினவாதப் பிரச்சாரம் இயங்குகின்றது.
எங்கும் பாசிச பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. இனப்பிரச்சனையைத் தீர்க்க போவதாக காட்ட, ஒரு குழு. பத்திரிகைத்துறையை அடித்து நொருக்கியபடி, அதற்;கும் கண்டனம். இனத்தின் மேலான வெற்றியல்ல இது என்று கூறியபடி, வெடியை வாங்கிக் கொடுத்து வெற்றியைக் கொண்டாடும் போக்கிரித்தனம். கொலை, கப்பம், கடத்தல் இதை புலியெழிப்பாக நடத்தியபடி, அதற்கு கண்டனம். கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் மக்களின் கையில் சிங்கக்கொடியைக் கொடுத்து ஊர்வலம் விடும் ஜனநாயகம். பாசிசத்தை மூடிமறைக்க, அரசியலே கோமாளித்தனமாகின்றது. இப்படி இந்தப் பேரினவாத பாசிசம் செயலூக்கமுள்ளதாக, அனைத்தையும் திரித்துப் புரட்டுவதாக உள்ளது. மக்களை அடக்கியொடுக்குவதில் கூட, அது தனித்திறன் பெறுகின்றது. இதன் முன் புலிகள் நிலைதடுமாறி வீழ்கின்றனர்.
உண்மையில் புலிகளின் தவறுகள்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment