அன்றைய வரலாற்றுத் தவறுகள்: இன்றைய வரலாற்றுத் தேவைகளாக, ஆக்கப்படுகிறது!
இருந்தாப் போல், ''தேடகம்'' ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது( -மாசி 20 -2009 ''தேசம் நெற்''- ). 1989ல் இருந்து இயங்கி வந்த ''தேடகம்''(நூலகம்), ''தேடல்''(சஞ்சிகை), சமூக சேவைகள், தேடல் பதிப்பகம், கலை இலக்கிய மன்றம் போன்ற உப பிரிவுகளைக் கொண்டு இயங்கி வந்த ''தமிழர் வகைத்துறை வள நிலையம்'' (கனடா), புலிகள் தீயிட்டதன் பின், பத்தோடு பதினொன்றாக யாழ் வீழ்ச்சியுடன் காணமற் போனது.
இன்று புலிகள் மீதான நெருக்கடி, இவர்களை மாம்பழத்துப் புளுவாக துடிக்க வைத்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல! புற்றீசலாக இவர்கள் இன்று வெளிட்டிருக்கும் அறிக்கை, இவர்களின் தொட்டில் கொள்கையின் தொடர்ச்சியே! ''தேடல்'' சஞ்சிகையில் வெளிவந்த கருத்துக்கள் இவர்களின் கருத்துமல்ல. "தேடலில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் எழுத்தாளர்களின் பொறுப்பு என்னும் சம்பிரதாயத்தை தாங்கி வருகிறது" என்ற பரவலான தமிழ் சஞ்சிகைகளின் ''நடு நிலைமை''க்கான தாரகை மந்திரத்தைத்தான் தேடலும் வரிந்து கொண்டிருந்தது. (அன்று புலிகளுக்கும், புலிகள் மீதான கடும் விமர்சனத்துக்கும் இடையே, இவர்கள் தம்மை ''நடு நிலைமை'' ஆளர்களாக இருத்தி வைப்பதற்கே...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
No comments:
Post a Comment