எமது இனஅழிவு அரசியலால் நாம் இழந்துபோனவையே வரலாறாகின்றது
எதிரியின் இன அழிப்பு அரசியல், எம்மிடம் இன அழிவு அரசியலாகியது. இப்படி எம்மினத்தை நாமும் சேர்ந்து அழித்த பெருமையே, எம் வீர வரலாறாகும். ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் இளம் இரத்தத்தைக் கொண்டு, தமிழினத்தை சுடுகாட்டில் நிறுத்திய பெருமை எம்மைச் சேரும். எம் விடிவையே, மறுத்தவர்கள் நாம்.
நாம் மானிடப் பண்பை இழந்தோம். மானிட இருப்பையும், வாழ்வையும் இழந்தோம். பகுத்தறிவை இழந்தோம். உண்மைகளை இழந்தோம். மனித நேசிப்பையே இழந்தோம். எம் வாழ்வில், எதைத்தான் நாம் இழக்கவில்லை. சொல்லுங்கள். நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். ஒரு மானிடனாக வாழும், மனிதத் தகுதியைக் கூட நாம் இழந்துவிட்டோம். உலக மக்கள் எம்மை கண்டுகொள்ளாத வகையில், நாம் எல்லா மனிதத் தகுதியையும் நாமே மறுத்தோம். நாம் வாழ்வதற்காக, மற்றவர்களுடன் சேர்ந்து போராடக் கற்றுக்கொள்ளவில்லை.
நாம் இழந்து போனவைகள், இருந்ததை இழந்து போனவைகள் என்று, எம்மை எம் வாழ்வை திரும்பிப் பார்ப்பது அவசியம். இதை நாம் சுயவிமர்சனமாக கொள்வதன் மூலம், வாழ்வதற்காக போராடக் கற்றுக் கொள்ளமுடியும்;. நாம் இன்று போராடும் சுதந்திரத்தையே...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.
No comments:
Post a Comment