Tuesday, December 29, 2009

பிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும்

தமிழ்மக்கள் மேல் அரச பாசிசமும், புலிப் பாசிசமும் பாய்ந்து குதறிய போது, "முன்னேறிய பிரிவு" என்று தம்மைத்தாம் கூறும் கூட்டம் என்னதான் செய்தது!? அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா? வரலாற்றில் அது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடியதாக, எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க "முன்னேறிய பிரிவு" என்று தன்னை தான் அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று குழையடிக்கின்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக, மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்திருக்கவில்லை.


மக்கள் தங்கள் வாழ்வை இழந்து போராடிக்கொண்டு இருந்தபோது, கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்தவர்கள் ஒருபுறமும். மறுபுறம் புரட்சி பற்றி கனவு காண வைத்துக் கொண்டும் இருந்தனர். பிரபாகரன் செத்தான் என்றவுடன் பதறியடித்துக் கொண்டு, பாயை விட்டு எழும்பியவர்களும், கனவு கலைந்தவர்களும் "மார்ச்சியம்" "புரட்சி" என்று உருவெடுத்தாடுகின்றனர். தம்மைப் போல் தான் அனைவரும் படுத்துக் கிடந்தனர், கனவு கண்டனர் என்ற கூறிக் கொண்டு, சுயவிமர்சனத்தை அனைவரின் பெயரிலும்;, சுயவிமர்சனம் என்றால் என்ன என்று கூறத்தொடங்கியுள்ளனர். இப்படி கனவு கலைந்த கையுடன், இன்று குழையடிக்கும் அரசியலை முன்தள்ளுகின்றனர்.

1983 இல் இயக்கங்கள் வீங்கி வெம்பிய போது, அது மார்க்சியத்தையும் சோசலிச தமிழீழத்தையும் கூட சேர்த்தே முன்வைத்தது. இது நந்திக் கடற்கரையில் முடியும்வரை ஆயிரம் வே~ம் போட்டது. பிரபாகரன் செத்தவுடன், 1983 இல் நடந்தது போல் மீண்டும் மார்க்சியம் புரட்சி ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


No comments:

Post a Comment