Friday, June 9, 2006

மீண்டும் ரி.பி.சி மீது புலிகளின் தாக்குதல்

மீண்டும் ரி.பி.சி மீது புலிகளின் தாக்குதல்

பி.இரயாகரன்
09.06.2006


08.6.2006 அன்று புலியெதிர்ப்பு அரசியல் விவாதம் நடந்த கொண்டிருந்த நேரத்தில், ரி.பி.சி மீது மிகவும் திட்டமிட்ட வகையில் தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தினர். நிகழ்ச்சிகள் அடிக்கடி தடைப்பட்ட நின்ற நிலையிலும், இது தொழில் நுட்பக் கோளாறல்ல, புலிகளின் வழமையான பாசிச கொலைகார விளையாட்டுதான் என்று செய்தி பின்னால் வெளிவந்துள்ளது.



நோர்வேயில் அமைதி, சமாதானம் பற்றி தமிழ்செல்வன் யாரோ யாரோ என்று ஒப்பாரி பாடி பாடையை ஆட்ட, இங்கு அவர்களின் அரசியல் வாரிசுகள் மரணவீட்டை நடத்த முனைகின்றனர். மானம் கெட்ட அரசியல் பிழைப்பு. ஊரார் பணத்தில் இந்த மாதிரியான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு அன்றாடம் நடத்தப்படுகின்றது. எந்த வேலைவெட்டியுமின்றி, ஊரார் பணத்தில் தின்று குடித்தபடி, பலாத்காரமாக கருவை உருவாக்கி ஊர்சுற்றும் சமூக விரோதிகள், கருக்கலைப்பு நடத்த திரிகின்றனர். இவர்கள் தான் பாசிசப் புலிகள்.



தமிழ்தேசியம் என்ற பெயரில் புலிகளின் வரலாறு முழுக்க இது போன்ற ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்த வண்ணமே உள்ளது. வன்முறையும் கொலையுமின்றி, அவர்களுக்கு உணவு ஜீரணிப்பதில்லை. வெள்ளையும் சுள்ளையுமாக வெள்ளை வேட்டி கட்டி திரியும் இந்த பாசிச மாமிசக் கும்பலின், மீண்டும் ரி.பி.சி மீதான தாக்குதல் என்பது உள்ளடகத்தில் மொத்த சமூக அமைப்பு மீதான வன்முறையாக உள்ளது.



அண்மையில் சிறிரங்கன் மீதும், இது போன்ற ஒரு அநாகரிகமான கொலை மிரட்டலையும், உளவியல் தாக்குதலையும் புலிகள் நடத்தினர். இதன் போது நக்கித் திரியும் புலிப் பினாமிகள் இது உண்மையா? பொய்யா? என்று சொந்த பாசிச வக்கிர புத்தியை கொட்டிக் கொண்டனர். அவர்கள் மட்டும் இதற்கு துணையாக நிற்கவில்லை. ரி.பி.சியும் அதன் எடுபிடி இணையங்களும் கூட இதை முற்றாக இருட்டடிப்பு செய்து, புலிக்கு பக்க துணையாக நின்றனர். சிறிரங்கன் புலியை மட்டுமல்ல, புலியெதிர்ப்பையும் எதிர்த்து எழுதுபவர் என்ற ஒரே காரணத்தினால், அவர் மீதான வன்முறைக்கு அனைவரும் உடந்தையாக இருந்தனர். இப்படி பொது வன்முறை மீதான கண்டனத்தைக் கூட செய்யமுடியாத நிலையில், ரி.பி.சியை சுற்றியுள்ள புலியெதிர்ப்பு அணியும் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர்.



இந்த நிலையில் ரி.பி.சி மீதான தாக்குதல் என்பது, புலிகளின் பாசிச நடத்தைகளின் தொடர்ச்சிதான். சில புலி ஆதரவு கும்மியடிகள் நிதர்சனம் டொட் கொம் புலியுடன் தொடர்பு கிடையாது என்றும், அதைத் தாம் பார்ப்பதில்லை என்று கூறியபடி, புலி அல்லாதவர்களை வசதியாக வசதி கருதி விமர்சித்து வந்தனர். நாற்றத்துக்கு சென்ற் அடித்துவிட்டு, நாம் நாறுவதில்லை என்று நடிப்பவர்கள் தான் இவர்கள். ஆனால் இந்த நிதர்சனம் டொட் கொம் முதல் , அதன் ஒட்டுண்ணி எடுபிடிகள் வரை, அனைவரும் பாசித்தின் ஊற்றுமூலத்தின் மையமாக இருப்பவர்கள்.



ரி.பி.சியின் கருத்தை கருத்தாக எதிர் கொள்வதும், அதை அம்பலப்படுத்துவம் அவசிமானது. அதை புலிகளின் பாசிச அரசியலால் எதிர்கொள்ள முடிவதில்லை. புலிகளின் பாசிச நடவடிக்கைகள் அன்றாடம் அம்பலமாகின்ற நிலையில், அரசியல் ரீதியாக ரி.பி.சியை அம்பலப்படுத்த புலிகளிடம் எந்த அரசியலும் கிடையாது என்பதே உண்மை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அப்பட்டமான, இது போன்ற தாக்குதல்கள் தான்.



ரி.பி.சி இன்று எதிர்ப்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை மக்களுக்கு எதிராக அரங்கேற்றுகின்றனர். புலிகளின் பாசிசத்தை தமது செங்கம்பளமாக மாற்றி, அதில் ராஜநடை போட்டபடியே எதிர்ப்பரட்சிகர மக்கள் விரோத அரசியல் செய்கின்றனர். இந்த வகையில் எமது அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் திணறுகின்றனர். மக்களை முன்னிறுத்துபவர்கள் மீது இருட்டடிப்பு, அவதூறுகளை கட்டுவது புலியெதிர்ப்பின் அரசியல் உள்ளடக்கமாக இன்று உள்ளது. அவர்களாலும் புலியைப் போல் அரசியல் ரீதியாக எம்முடன் விவாதிக்க முடிவதில்லை. தம் மீது அரசியல் விமர்சனம் செய்பவர்கள் மீது, பாசிசத்தை அடிப்படையாக கொண்ட எதிர்புரட்சிகர அவதூறை புனைவது, மாற்றுக் கருத்தை பிரசுரிக்காமை, போன்ற பலவற்றை எதிர்வினையாக கையாளுகின்றனர். கருத்தை மட்டும் விவாதிப்பதில்லை. இவர்கள் புலியின் மற்றொரு வலதுசாரிய தொங்கில் நிற்கின்ற நிலையில், நாங்கள் அவர்களை அரசியல் ரீதியாக உறுதியாக கருத்தின் அடிப்படையில் எதிர்கொள்கின்றோம்.



இந்த நிலையிலும் ரி.பி.சி வானொலி புலியின் வன்முறை மூலம் நிறுத்தப்படுவதையும், அதில் பணியாற்றுபவர்களை கொல்ல முயல்வதையும் நாம் மௌனமாக அங்கீகரிக்க முடியாது. இந்த தாக்குதல்கள், வன்முறைகள் அவர்கள் மீதானது மட்டுமல்ல, மாறாக மொத்த சமூகத்தின் மீதானதே. மொத்த மக்களையும் அடக்கியொடுக்கி, மூச்சுக் கூட வெளிவராதா வண்ணம் காலுக்கு கீழ் இட்டு மிதிப்பதையே அடிப்படையாக கொண்டது.



புலிகளின் சில மனித விரோத செயல்களை மக்கள் அரசியலுக்கு வெளியில் சம்பவ ரீதியாக அம்பலப்படுத்தும் ரி.பி.சி, அதே அரசியலால் புலியாக இருக்கும் வரலாற்றுப் போக்கில் கூட, நாம் அவர்கள் மீதான வன்முறையை கடுமையாக கண்டிப்பது அவசியமாகின்றது. மொத்த சமூகத்தின் இருத்தலையே இது அனுமதிப்பதில்லை என்ற வகையில், இதைப் போராடி எதிர்கொள்வது அவசியமாகின்றது.



No comments: