தமிழ் அரங்கம்

Saturday, September 15, 2007

'வளர்ச்சி"யின் சீனா அவலத்தில் தொழிலாளர்கள்

டலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்... சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஒருவரல்ல, இருவரல்ல; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொத்தடிமைக் கொடூரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள்; மற்றவர்கள் கிராமப்புற விவசாயிகள்.

ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணிநேர ஓய்வில்லாத வேலை; சோர்ந்து உட்கார்ந்தால் கங்காணிகளின் சவுக்கடி; வேலை செய்ய மறுத்தால் சம்மட்டி அடி அல்லது பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு போடப்படும். அங்கிருந்து யாரும் தப்பச் செல்ல முடியாதபடி வேட்டை நாய்களும் துப்பாக்கி ஏந்திய கங்காணிகளும் காவலுக்கு நிற்பர். வெற்றுக் கால்களுடன் பாதுகாப்புச் சாதனங்கள் ஏதுமின்றி வேலை செய்யும் இக்கொத்தடிமைகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் ஏராளம். ஆனாலும் எந்த மருத்துவ சிகிச்சையும் கிடையாது. படுகாயமடைந்தோ, நோய்வாய்ப்பட்டோ ஒரு தொழிலாளி மரணமடைந்தால், அவர் அங்கேயே புதைக்கப்படுவார். சீனாவின் ஷான்சி, ஹோனான் மாநிலங்களிலுள்ள செங்கற் சூளைகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அளித்த சாட்சியங்களைக் கண்டு அந்நாட்டு மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

சீனாவின் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், சோசலிச விவசாயக் கூட்டுப் பண்ணைகளைத் தகர்த்து தனியாருக்கு நிலத்தைச் சொந்தமாக்கி, முதலாளித்துவத்தை நிலைநாட்டியதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான விவசாயிகள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றனர். நகரங்களுக்கு நாடோடிகளாக ஓடி, அங்கும் பிழைக்க வழியின்றி செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாகி உழல்கின்றனர்.

இக்கொத்தடிமைத் தொழிலில் கொழுத்த ஆதாயம் கிடைப்பதால், சமூக விரோத கும்பல்களால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். தமது அன்புக் குழந்தைகளைக் காணவில்லை என்று துடிக்கும் பலநூறு பெற்றோர்களின் கண்ணீர் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டிய பிறகு, அதிகார வர்க்கமும் போலீசும் வேறுவழியின்றி நடவடிக்கைகளை மேற்கொண்டபோதுதான், இக்கொத்தடிமைக் கூடாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரங்கள் அதிகார வர்க்கம்போலீசின் ஆதரவோடு நடந்து வந்துள்ளன என்றும், உள்ளூர் போலி கம்யூனிஸ்டு தலைவர்களின் பினாமிகளே இவற்றை நடத்தி வந்துள்ளனர் என்றும் பத்திரிகைகள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி வருகின்றன. பெய்ஜிங்கிலுள்ள சீன மக்கள் பல்கலைக் கழக சமூகவியலாளரான சௌ ஷியோ ஜெங், ""சீனாவில் ஏறத்தாழ 2 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்; அமைப்பு ரீதியில் திரண்டுள்ள புதுப்பணக்கார குற்றக் கும்பல்களே நாட்டை வழிநடத்துகின்றன'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், நாட்டில் கொத்தடிமைக் கொடூரங்கள் நீடிப்பதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஆனால், இது வெறும் காகித அறிவிப்பாகவே முடிந்து போய்விட்டது. கொத்தடிமைக் கூடாரங்கனை நடத்தி வந்த புதுப்பணக்கார குற்றக் கும்பல்களில் ஒரு சிலரைப் போலீசார் கைது செய்த போதிலும், அவர்கள் அனைவரும் விரைவிலேயே விடுதலையாகி விட்டனர். அவர்கள் மீது பெயரளவுக்குக்கூட வழக்குகள் போடப்படவில்லை. காரணம், இக்குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலி கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சீன போலி கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் அங்கம் வகித்த முக்கிய புள்ளியான லீ பெங்கும் அவரது குடும்பமும் வீட்டுமனை ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் கோடி கோடியாய் சுருட்டிய விவகாரம் நாடெங்கும் நாறியது. அந்த விவகாரம் அடங்குவதற்குள் சியாமென் துறைமுக நகரைச் சேர்ந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஊழல்கடத்தல் மோசடிகளில் சிக்கினார். அதைத் தொடர்ந்து பல போலி கம்யூனிஸ்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட விவகாரம் சந்தி சிரித்தது. சீன போலி கம்யூனிஸ்டு அரசாங்கம் ஊழல் அதிகாரிகள் சிலரைக் கைது செய்து சிறையிலடைத்ததோடு, சிலருக்குத் தூக்குத் தண்டனை விதித்து, இத்தகைய ஊழல்மோசடிகளை ஒடுக்க முயற்சித்தது.

ஆனால், அதற்குப் பின்னரும் ஷாங்காய் நகர போலி கம்யூனிஸ்டுத் தலைவர் சென் லியாங் யூ, காண்டன் நகர செயலாளர், வூஹான் மாநிலச் செயலர் எனப் பலரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானது. இப்போது, குற்றக் கும்பல்களோடு கூட்டுச் சேர்ந்து போலி கம்யூனிஸ்டு பிரமுகர்கள் கொத்தடிமைக் கூடாரங்களை நடத்தி வந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

செங்கற் சூளைகள், சுரங்கங்கள் மட்டுமல்ல; நகரங்களில் கட்டுமானத் தொழில், ஆயத்த ஆடை தயாரிப் புக் கூடங்கள், ஏற்றுமதிக்கான விளையாட்டு பொம்மை தயாரிப்பு, நெசவு மற் றும் காலணி தயாரிப்பு நிலையங்களிலும் அறிவிக்கப்படாத கொத்தடிமைத்தனம் கொடிகட்டிப் பறக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி, சீன ஆட்சியாளர்கள் இத்தகைய தொழிற்கூடங்களில் தொழிலாளர்கள் சங்கமாகத் திரளவும் தடை விதித்துள்ளனர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா வின் முதலாளிகள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு சம்ப ளம் கூட கொடுக்காமல் ஏய்க்கின்றனர்.

பெய்ஜிங் நகரில் ஓராண்டு காலமாக சம்பளம் தராமல் ஏய்த்த அன்னிய கட்டுமான நிறுவன முதலாளிகளின் பங்களாக்களை முற்றுகையிட்டு, தடுப்பரண்களை எழுப்பி 2003ஆம் ஆண்டில் சீனத் தொழிலாளிகள் போராடினர். ஷென்சென் நகரில் சம்பளம் தராமல் ஏய்த்த முதலாளிகளின் கார்களை சாலைப் பணியாளர்கள் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே போல தெற்கே ஃபூஷன் நகரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களும், வட கிழக்கே டா குயிங் எண்ணெய் துரப்பணத் தொழிலாளர்களும், ஜியாங்ஷி மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் சம்பள பாக்கிக்காகவும் பென்ஷன் தொகை முடக்கப்பட்டதை எதிர்த்தும் போராடினர்.

முறையாக சம்பளப் பாக்கியைக் கொடுக்காவிடில் உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என்று சீன ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த போதிலும் எந்த முதலாளியும் அதைப் பொருட்படுத்துவதில்லை. முதலாளிகளின் சட்டைப் பையிலுள்ள சீன அரசாங்கம் அதற்கு மேல் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. தீவிரமாகிவிட்ட வேலையின்மையைச் சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி முதலாளிகள் சுரண்டுவதும், சம்பளம் கூடத் தராமல் ஏய்ப்பதும் நாடெங்கும் தீவிரமாகிவிட்டது. சீனாவின் நகர்ப்புற வேலையின்மை 7%க்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இது 9%க்கு எட்டிவிட்டால் சமூகக் கொந்தளிப்புகள் தீவிரமாகிவிடும் என்று சீனாவின் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், சீனாவின் யதார்த்த நிலைமைகளை மூடிமறைத்துவிட்டு, சீனா பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டிவிட்டதாகவும், வல்லரசாகப் பரிணமித்து வருவதாகவும் ஏகாதிபத்தியவாதிகள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து, அன்னிய மூலதனத்தைத் தாராளமாக அனுமதித்து, பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளதாக ஏற்றிப் போற்றுகின்றனர். வரைமுறையற்ற சுரண்டல்சூறையாடலுக்கு கதவை அகலத் திறந்து விட்டுள்ள ""சீனாவைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று இங்குள்ள போலி கம்யூனிசத் துரோகிகளுக்கு உபதேசிக்கின்றனர். சீன போலி கம்யூனிச ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய தனியார் முதலாளித்துவ சேவையை, சோசலிசத்தை நோக்கிய வளர்ச்சியாகச் சித்தரித்து இங்குள்ள இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் துதிபாடுகின்றனர்.

ஆனால், சோசலிசம் பூத்துக் குலுங்கிய சீனாவோ, இன்று கொத்தடிமைத்தனத்திலும் கொடூர சுரண்டலிலும் சிக்கிக் குமுறிக் கொண்டிருக்கிறது. சீன மக்களோ, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் தலை மையை எதிர்நோக்கி மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சிக்காகக் காத்திருக்கிறார்கள்.

· குமார்

Friday, September 14, 2007

மகிந்த சிந்தனை என்றால் என்ன?

பி.இரயாகரன்
15.09.2007


லங்கையில் அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் மகிந்தாவின் குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதுதான், மகிந்த சிந்தனை. இதை நிறுவும் ஆட்சி, இன்று என்றுமில்லாத வகையில் நெருக்கடிக்குள்ளாகி நாடு சீரழிகின்றது. மக்கள் தமது அடிப்படை தேவைகளைக் கூட வாங்க முடியாத வகையில், அன்றாடம் விலையேற்றத்தை மகிந்த சிந்தனை திணிக்கின்றது. நாடு சர்வதேசக் கடனை நம்பி, நடுக்கடலில் தத்தளிக்கின்றது. இதையெல்லாம் மூடிமறைக்கவே, புலிப் பயங்கரவாதத்தின் பெயரில் ஒரு யுத்தப் பிரகடனம்.

புலிகள் புலித் தமிழீழம் மூலம், தமிழ் மக்களுக்கு சொர்க்கத்தைப் படைக்கப் போவதாக கூறித் தான், தமிழ் மக்களை ஒடுக்கி ஒரு பாசிச புலிச் சர்வாதிகாரத்தை திணித்துள்ளனர். இதுபோல், அரசு புலிப் பயங்கரவாதிகளை ஒழிப்பதன் மூலம், இலங்கையில் சொர்க்கத்தை உருவாக்கப் போவதாக கூறிக்கொண்டு, இராணுவ சர்வாதிகாரத்தை அனைத்து மக்கள் மீதும் திணிக்கின்றது. இப்படிப்பட்ட மகிந்த சிந்தனை மூலமாக, குடும்ப அதிகாரமும் குடும்பப் பொருளாதாரமும் வீங்கி வெம்புகின்றது.

இதன் விளைவு என்ன. தமிழ் மக்களில் பெரும்பான்மை மக்களை முற்றாகவே அகதி வாழ்வுக்குள் தள்ளிவிட்டது. இதன் விளைவால் அகதி மக்கள், தமது அனைத்து பொருளாதார வளத்தையுமே முற்றாக இழந்துவிட்டனர். வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சர்வதேச நிதி கும்பலிடமும், தன்னார்வ சதி கும்பல்களிடம், மக்கள் தமது உழைப்பு சார்ந்த தன்மானத்தை இழந்து கையேந்தி அலையும் கூட்டமாக மாற்றப்பட்டுவிட்டனர்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள், இலங்கையில் எந்தப் பொருளையும் சுதந்திரமாக வாங்கி நுகர முடியாது. அந்தளவுக்கு புலிப் பயங்கரவாதிகளின் பெயரில், ஒரு பொருளாதாரத் தடை. தமிழ் மக்களோ தெரு நாய்களாகப்பட்டு வேட்டையாடப்படுகின்றனர். அன்றாடம் கைது, கடத்தல், காணாமல் போதல், படுகொலை என்பதே இயல்பான நிலையாகியுள்ளது. தமிழ் மக்களை இரத்தத்தை உறைய வைக்கும் இயல்பான பீதிக்குள், சிறைவைத்துள்ளனர். அனைத்துச் சிந்தனையையும், சுதந்திரத்தையும் இது கண்காணித்து, கருவறுக்கின்றது. ஒட்டுமொத்தமாகவே செயற்படும் சுதந்திரத்தை தமிழ் மக்கள் முற்றாகவே இழந்துவிட்டனர். தமிழ் இனம் தனது தேசிய அடிப்படைகளையும், தேசிய இருப்புக்கான சமூகக் கூறுகளையும் இழக்கும் வண்ணம், அவர்கள் சமூக ரீதியாக இழிந்து போகுமாறு சின்னாபின்னப்படுத்தி சிதைக்கப்படுகின்றனர்.

மகிந்த சிந்தனை இது மட்டுமல்ல. தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த பொருளாதார அடிப்படைகளையும், ஆதாரங்களையும் திட்டமிட்டு அழிக்கின்றது. ஒவ்வொரு தமிழ் பிரதேசமும், சிங்கள பேரினவாத இராணுவ சூறையாடலுக்குள் சிக்கிச் சிதைகின்றது. தமிழ் இனம் பல கூறுகளாக சின்னாபின்னப் படுத்தப்படுகின்றது.

இப்படி மகிந்த சிந்தனையானது தனது இராணுவ சர்வாதிகாரத்தை, தமிழ் மக்கள் மீது ஒரு தலைப்பட்சமாக திணிக்கின்றது. அதை நடைமுறைப்படுத்த தமிழ் கூலிக் குழுக்களை ஆயுதபாணியாக்கியுள்ளது. அவர்களிடையே முரண்பாட்டை ஊதி, அதைக்கொண்டு தமிழ் இனத்தை கூறு போடுகின்றது. எங்கும் எதிலும், தமிழரிடையே ஒரு காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகின்றது. அராஜகத்தையே தமிழ் பகுதியில் மகிந்த சிந்தனை உருவாக்கியுள்ளது.

இவை அனைத்தும் புலிகளின் பெயரில், ஒரு இராணுவ சர்வாதிகாரம் மூலம் இவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ் பிரதேசத்தின் எதார்த்தம். தமிழ் மக்கள் மேலான இந்தக் காட்டுமிராண்டித்தனமாக செயலை நியாயப்படுத்த, சிங்கள மக்கள் மேல் என்றுமில்லாத சுமையை சுமத்திவிடுகின்றனர். சிங்கள மக்கள் அன்றாட வாழ்வுக்காகவே மாரடிக்கின்ற அளவுக்கு, வாழ்க்கைச் சுமை சுமத்தப்படுகின்றது. இராணுவ இயந்திரம், மக்களின் மொத்த வளத்தையும் சூறையாடிச் செல்லுகின்றது. இந்த மகிந்த சிந்தனையை அமுல்செய்யும் குடும்பம், இதன் மூலம் இலங்கையில் மிகப்பெரிய கோடீஸ்வரக் கும்பலாகின்றது.

இந்த நிலையில் சர்வதேச விலைக்கு, இலங்கைச் சந்தை தடம் புரண்டு செல்லுகின்றது. மக்களின் தேவையை சர்வதேச விலையில் வாங்க நிர்ப்பந்திக்கின்றது மகிந்த சிந்தனை. ஆனால் மக்களின் கூலியோ, சர்வதேச மட்டத்தை கிட்டக் கூட நெருங்க முடிவதில்லை. அத்துடன் இலங்கை நாணயம், அன்றாடம் தனது பெறுமதியை இழக்கின்றது. இதனால் மக்கள் வாழ்க்கைத் தரம் அன்றாடம் வீழ்ச்சி காண்கின்றது. வாழ்க்கையின் வீழ்ச்சியால், மக்கள் தமது தேவையை பூர்த்தி செய்ய பணம் இருப்பதில்லை. இப்படி மக்களைப் பட்டினியில் தள்ளிவிட்டு, அந்தப் பொருட்களை வாங்கிய கடனுக்காக மகிந்த சிந்தனையை ஏற்றுமதி செய்கின்றது. என்ன ராஜதந்திரம், என்ன வக்கிரம்.

இந்த மகிந்த சிந்தனை தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களையும் சொந்த நாட்டில் வாழ முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. மறுபக்கம் இராணுவ பொருளாதாரமோ, பாரிய ஊழல் மூலம் கோடிகோடியாக மகிந்த சிந்தனை சுருட்டுகின்றது.

இதை விமர்சிப்பவர்கள், புலிகளின் பெயரில் கைது செய்யப்படுகின்றனர். அத்துடன் கடத்தல், படுகொலை என்ற பொது அச்சுறுத்தலை எங்கும் எதிலும் விடுக்கின்றனர். எங்கும் அச்சத்தையும், பீதியையும் வாழ்வாக்கிவிடுகின்றனர். மாபியாத்தனம் சமூகத்தின் போக்கில் வளர்ச்சியுறுகின்றது.

இப்படிப்பட்ட மகிந்த சிந்தனையைப் பற்றி பலரும் சிலாகிக்கின்றனர். சிலர் அதனைப் போற்றுகின்றனர். சிலர் அதைத் திட்டுகின்றனர். இலங்கை ஜனாதிபதியின் மகிந்த சிந்தனையில் இனப்பிரச்சனை முதல் உள்நாட்டு திட்டமிடல் வரை காயடிக்கப்படுகின்றது.

ஜே.வி.பி கூறுகின்றது மகிந்த சிந்தனைப்படி தான், அவருக்கு ஆதரவு வழங்கியதாக! புலியெதிர்ப்பு குள்ளநரி ஆனந்தசங்கரியும், மகிந்த சிந்தனையை ஏற்றிப் போற்றுகின்றது. இப்படி பல விதமானவர்களின், பலவித அரசியல் கிறுக்குத்தனங்கள்.

இப்படிப்பட்ட மகிந்த சிந்தனை எதைத்தான் எதார்த்தத்தில் செய்கின்றது.

1. அது தனது சொந்த குடும்ப அதிகாரத்தை நிறுவியுள்ளது.
2. ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை, அனைத்து மக்கள் மீதும் திணித்துள்ளது.
3. உலகமயமாதலை தீவிரமாக அமுல்படுத்துகின்றது.
4. தமிழ் இனத்தின் இருப்பையே அழித்து, அதை அடக்கி ஒடுக்குகின்றது.
5. அனைத்து சிந்தனைச் சுதந்திரத்தையும் விமர்சன சுதந்திரத்தையும் ஓடுக்கி, அதன் உணர்ச்சியையே அறுத்தெறிகின்றது
6. நாட்டின் அனைத்து முற்போக்கு கூறுகளையும் ஓடுக்கி, பிற்போக்கு கூறுகளை முன்னிலைக்கு கொண்டு வருகின்றது.
7. காட்டுமிராண்டித்தனமான அதிகாரப் பண்பாடும், பொருளாதார சூறையாடலும், சமூக ஒழுக்கமாகின்றது.

இவற்றின் மூலம் இலங்கையை ஏகாதிபத்திய நலன்களையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்தையும் மறு ஒழுங்கமைக்கின்றது. தேசிய கூறுகளை அழித்து விடுகின்றது. மாறாக பிற்போக்கான தேசிய கூறுகள் மூலம், நாட்டை அன்னியனுக்கு தாரைவார்த்து, நாட்டைத் திவாலாக்கி வருகின்றது. தேசிய பொருளாதாரத்தை முற்றாகச் சிதைத்து, பன்னாட்டு முதலாளிகளின் விருப்பமும் தேவையும் ப+ர்த்தி செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் புலிப்பயங்கரவாதத்தின் பெயரில் நடக்கும், தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் மூலம் கவனமாக மூடிப் பாதுகாக்கப்படுகின்றது.

இதற்கு ஏற்ற வகையில் இராணுவ சர்வாதிகாரத்தை நடைமுறையாக்குகின்றது. புலியின் பெயரால், புலிகளை வெற்றி கொள்வதாக பீற்றிக் கொண்டு நடத்துகின்ற ஒரு இராணுவ ஆட்சி தான், மகிந்த சிந்தனை. இப்படி தனது குடும்பத்தவர்கள் மூலம் நிர்வகிக்கின்ற, ஒரு பாசிச சர்வாதிகார கட்டமைப்பாகும்.

இந்த சர்வாதிகார பாசிசம் எப்படி கட்டமைக்கப்படுகின்றது.

1. எதிர்தரப்பை விலைக்கு வாங்குகின்றது. மறுதளத்தில் செயலற்றதாகி முடக்குகின்றது. இல்லாது போனால் போட்டியாளரை உயிருடன் இல்லாது ஒழிக்கின்றது.

2. புலிப்பயங்கரவாதம் என்ற பெயரில் நடக்கும் புலியொழிப்பு என்பது, படுகொலைகள் கடத்தல்கள் காணாமல்போதலாகி விட்டது.

3. தனது கட்டுபாடல்லாத பிரதேசம் முழுவதின் மீதும், ஒரு முழுமையான யுத்த பிரகடனத்தை செய்து, அதையே ஆணையில் வைத்துள்ளது.

4. தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் வண்ணம், சகல சமூக பொருளாதாரக் கூறுகளையும் திட்டமிட்டு அழிக்கின்றது. அத்துடன் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குதல் நடத்துகின்றது.

5. தமிழ் பகுதியிலான பன்னாட்டு நிறுவனங்களின் அன்னிய நிறுவனங்களினதும் தேவைகளை, தனது யுத்த ஆக்கிரமிப்பு மூலமே கைப்பற்றி தாரைவார்க்கின்றது.

இப்படி ஒட்டமொத்த மனிதவிரோத செயல்கள் தான் மகிந்த சிந்தனை. அன்னிய மூலதனத்தின் நலன்கள் தான் மகிந்த சிந்தனை. இதற்கு பின்னால் சிங்கள தேசியம் என எதுவும் கிடையாது. மாறாக குடும்ப அதிகாரம் மூலமான, இராணுவ சர்வாதிகாரம் தான் மகிந்த சிந்தனை. இந்த சிந்தனை நோக்கம் என்பது, பாசிச வழிகளில் நாட்டை முற்றாக உலகமயமாக்குவது தான். இதன் மூலம் இலங்கையில் தனது குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதாகும். அதாவது அதிகார அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் குடும்ப ஆதிக்கத்தை நிறுவுவதுதான், மகிந்த சிந்தனை. இந்த மகிந்த சிந்தனை மக்களை அடக்கியொடுக்கி செழித்து வாழ்கின்ற ஒரு கும்பலுக்கு, மாமா வேலை பார்க்கின்றது.


Thursday, September 13, 2007

அமெரிக்கா

Wednesday, September 12, 2007

தமிழ் மக்களையே குதறித் தின்னும் குள்ளநரி

பி.இரயாகரன்
12.09.2007


ல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஏகாதிபத்தியதுடனும் பேரினவாதத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கப் புறப்பட்ட ஆனந்தசங்கரி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் குள்ளநரியாகி தமிழ் மக்களையே குதற ஆரம்பித்துள்ளார்.

இந்தக் குள்ளநரி பாசிசப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், பேரினவாத பேய்களுக்கு தலைமை தாங்கும் மகிந்தவுக்கும் நாலு கடிதம் எழுதியதன் மூலம், புலியெதிர்ப்புக் கும்பல் மூலம் தனக்கு விளம்பரத்தைத் தேடிக்கொண்டவர் தான். நல்ல ஏகாதிபத்திய விசுவாசியாக இருந்ததால், பிசாசுகள் அந்த விசுவாசத்தைப் போற்றி ஒரு கோடி ரூபா பணத்தைப் பரிசாக வழங்கியது. அந்தப் பொதுப் பணத்துக்கு என்ன நடந்தது என்று கேட்டு, நாலு கடிதத்தை ஆனந்தசங்கரியை நோக்கி எழுத வேண்டியது தான் பாக்கி. தமிழ் பேசும் மக்களின் கதியோ, போக்கிரிகளின் பின்னால் நாறுகின்றது.

ஏகாதிபத்திய பிசாசுகள் ஆனந்தசங்கரியின் கடிதத்தை வைத்து 'அகிம்சை மற்றும் சகிப்புக்கு" ஒரு கோடி ரூபா பரிசுத் தொகையை யுனெஸ்கோ ஊடாக வழங்கியது. ஏகாதிபத்திய சேவைக்கு தான் என்ற போதும், தமிழ் மக்களின் பெயரிலான ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட பொதுப் பணம் தான் இது. இந்த பணத்துக்கு என்ன நடந்தது?

அதை அவர் தமிழ் சமூகத்துக்காக பயன்படுத்தவில்லை. ஜனநாயகத்தை மீட்பதற்கான ஒரு அறக்கட்டளையாகவோ, ஒரு பொது நிதியாகவோ அப் பணத்தை வைப்பிலிடவில்லை. தமிழ் மக்களின் துயரத்தைச் சொல்லி கிடைத்த பணத்தை, தனது தனிப்பட்ட பணமாக மாற்றிவிட்டார். இப்படிப்பட்டவர்கள் கடைந்தெடுத்த மக்கள் விரோதிகள் தான். இந்தப் பணத்தை சொந்த பந்தங்களுக்குள் முடக்கியதுடன், ஆடம்பரமாக உலகம் சுத்தும் வாலிபனாகித் திரிகின்றார்.

புலிகள் மட்டும் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தில் வாழவில்லை. புலியைச் சொல்லி புலியெதிர்ப்பு ஜனநாயகத்தின் பெயரில் பெற்ற பணத்தையும் கூட, பொறுக்கித் தின்னும் கூட்டம் இன்றும் அலை மோதுகின்றது. இந்த வகையில் ஆனந்தசங்கரி என்ற குள்ளநரியும் வெட்கமானமின்றி மக்களின் பெயரில் பொறுக்கித் தின்னுகின்றது.

இந்தப் பணம் விடுபட்டு போன உறவுகளை, பணம் சார்ந்து மீள உறவாட வைத்துள்ளது. நாற்றம் பிடித்த ஆனந்தசங்கரியின் அரசியல் ஒழுக்கக்கேட்டின் மீது, புதிய உறவுகள் கொசுக்கள் போல் மொய்க்கின்றன. சொந்த பந்தங்களினதும் குடும்பத்தினதும் வாழ்வை உயர்த்த, ஆனந்தசங்கரிக்கோ புலிகளின் பாசிசம் உதவி வருகின்றது. தமிழ் மக்கள் பாவம். அவர்களின் பெயரில் வாழ்கின்ற ஓட்டுண்ணிக் கூட்டம், ஏகாதிபத்திய ஆசியுடன் மக்களையே உறிஞ்சி வீரியமாகி வளருகின்றது.

இந்த குள்ளநரியனுக்கோ, இந்த பொதுச் சொத்தை அபகரித்தது போதவில்லை. பொதுப் பணத்தைத் திருட, புதிய முயற்சியில் இந்த குள்ளநரி மறுபடியும் இறங்கியுள்ளது. கூட்டணியின் சொத்தாக முடங்கியுள்ள 12 கோடி ரூபா பெறுமதியான சொத்தைத் திருட, இந்த குள்ளநரி புறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முடங்கியுள்ள இந்தச் சொத்தை அனுபவிக்க, கூட்டணியை இயங்குவதாக காட்டவேண்டும். இதற்கு கூட்டணி என்ற ஒரு போலி அமைப்பு அவருக்கு தேவைப்படுகின்றது.

இந்தக் குள்ளநரி வஞ்சகன் புலியின் பாசிசத்தில் உயிர் வாழும் புலி எதிர்ப்புக் கும்பலைக் கொண்டு அதனை உருவாக்கியுள்ளது. இது ஒரு மட்டத்தில் அம்பலமான போது, பணத்தை கூட்டமைப்புக்கு ஊடாக புலிகள் பெற்றுவிடுவார்கள் என்று சொந்த சுய புலியெதிர்ப்பு விளக்கத்தை வழங்குகின்றது. செய்வதோ கயவாளித்தனமான இரகசிய திருட்டு. அது அம்பலமாகும் போது அதற்கு புலியொழிப்பு அரசியல் முலாம். புலிகளுக்கு செல்லவிடாது தடுக்க, ஒரு புலியெதிர்ப்பு அமைப்பு. நல்ல அரசியல் வித்தைகள், நல்ல அரசியல் வேடிக்கை. பாவம் தமிழ் மக்கள், இப்படிப்பட்ட மீட்பாளர்களை நம்பினால், இருக்கின்ற கோவணத்தையும் பறிகொடுப்பதைத் தவிர வேறு வழி தமிழ் மக்களுக்கு கிடையாது.

பணத்தைக் கைப்பற்ற கூட்டணிக் கிளையானது, முன் கூட்டியே திட்டமிட்ட நபர்களைக் கொண்டு லண்டனில் உருவாக்கப்பட்டது. பிசாசுடன் கூடி விபச்சாரம் செய்யும் புலியெதிர்ப்பு சித்தாந்தி சிவலிங்கம் உள்ளிட்ட ஒரு திருட்டுக் குழு உருவாக்கப்பட்டது.. தமழ் மக்களின் பெயரில், கிடைத்த ஒரு கோடியை தனது தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தும் ஒழுக்கக் கேட்டை அரசியலாக கொண்ட இந்த பேர்வழிகள், புலிகளின் பெயரில் திருடுவதும் வாழ்வதும் அம்பலமாகின்றது.

மண்ணில் ஒரு கூட்டணிக் கிiளையை உருவாக்கி திருடும் பலம், புலியின் பாசிசத்தின் முன்னால் இவர்களுக்கு கிடையாது. ஆனந்தசங்கரி மகிந்த சிந்தனை என்ற போற்றும் குடும்ப சர்வாதிகாரம், இந்த திருட்டுக்கு சட்டப்படி உதவத் தயாராகவே உள்ளது. இந்தத் திருட்டை மூடிமறைக்க, ஒரு சம்பிரதாயம் தேவைப்படுகின்றது. இதனால் தான் இந்த குள்ளநரி, வெளிநாட்டில் கிளைகளை அமைக்க முனைகின்றது.

லண்டனின் திடீர் கிளை, புலியெதிர்ப்பு பன்னாடைகளை மையப்படுத்தி காய் நகர்த்தி தனது சதியை ஆரம்பித்துள்ளது. இது போன்று பாரிஸ், ஜெர்மனி என்று எங்கும், கூட்டணியின் பணத்தைத் திருட தொழில்முறை திருட்டுக் கிளைகளை அமைக்கின்றனர். ஜெர்மனியில் ஆனந்தசங்கரியின் கடிதத் தலைப்பை கொண்டு, அகதிகளிடம் பணம் வாங்கி கொழுத்த ஜெகநாதன் (ரீ.பி.சி புலியெதிர்ப்பு ஆய்வாளர்களில் ஒருவர்) உள்ளிட்டு தேனீ இணையம் வரை, இந்த கொள்ளைக்கு உடந்தையாக அக்கம்பக்கமாக செயல்படுகின்றது.

குள்ளநரியன் ஆனந்தசங்கரி அரசின் பாதுகாப்பில், அவர்களின் பணத்தில் பேரினவாதத்துக்காக குலைப்பதற்கு அப்பால் எந்த அரசியலும் கிடையாது. இந்த குள்ளநரியனின் பேரினவாத சார்பு கடிதங்களை, மகிந்த சிந்தனை தொகுத்து உலகெங்கும் பேரினவாத அரசே விநியோகம் செய்கின்றது. இப்படிப்பட்ட தமிழ் விரோதி, தனது பொறுக்கித்தனத்தைக் கொண்டு தமிழ் மக்களின் சார்பில் பெற்ற பரிசுத் தொகையை சுருட்டிக்கட்டியது. இதற்கு புலியெதிர்ப்பு கும்பல் ஆலவட்டம் பிடித்து உதவுகின்றனர். அதில் தமது பங்கு என்ன என்பது, அடுத்த கட்ட குழு மோதலுக்கு போதுமான அளவுக்கு, புலியெதிர்ப்புக் கும்பலின் உள்ளான பிளவுகளாக அரங்கேறி வருகின்றது.

மறுபக்கத்தில் மகிந்த சிந்தனையை பாராட்டும் ஆனந்தசங்கரி, அதன் எடுபிடியாக அதிலும் நக்கிப் பிழைக்கின்றார். மகிந்த சிந்தனை என்பது குடும்ப ஆட்சியும், பாசிச பயங்கரவாத சர்வாதிகாரமுமாகும். இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக செயல்பட்டு, நாட்டை விற்றலாகும். இதற்கு உறுதுணையாக நின்று, இதில் ஒட்டிக்கொண்டு பிழைக்கும் கும்பலில் ஆனந்தசங்கரியும் ஒருவர். தமிழ் மக்களை வேட்டையாடும் மகிந்த சிந்தனையினால் லாபம் பெறும் தீவிர பக்தர்களில் ஆனந்தசங்கரியும் ஒருவர்.

இந்த பொறுக்கி தான், தன்னை ஜனநாயகவாதி என்கின்றது. 'அகிம்சை மற்றும் சகிப்பு" க்காக பணம் வாங்கி சுருட்டிய இந்த குள்ளநரி, லண்டனில் நடந்த அமிர்தலிங்கம் நினைவுரைக் கூட்டத்தில் புழுப்போல் நெளிந்தது ஏன்? அங்கு ஒருவரின் மாற்றுக் கருத்தை சகித்துக் கொள்ளமுடியாது கொதித்துப் போன ஆனந்தசங்கரி, அதை அடக்கி ஒடுக்கி பேசவிடாது தடுத்தார். ஆனந்தசங்கரியின் 'அகிம்சை மற்றும் சகிப்பு" சார்ந்த இந்த ஜனநாயகத்தின் பரிசுகேடு என்பது, மகிந்த சிந்தனையாலானது. இப்படி புலியெதிர்ப்பு புல்லுருவித்தனம் அங்கும் அம்பலமானது.


Tuesday, September 11, 2007

கிழக்குப் பாசிட்டுகள், வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு விடுத்த படுகொலை மிரட்டல்

பி.இரயாகரன்
11.09.2007

ருணா தலைமையிலான பாசிச கும்பல், கிழக்கில் புதிய கொலைக்களத்தை உருவாக்கி வருகின்றது. பேரினவாதிகளின் கூலிக்கும்பலாகவே மாரடிக்கும் இந்தக் கும்பல், தமது அரசியல் நக்குண்ணித்தனத்தை, வடக்கு மக்களுக்கு எதிராக வெளிப்படுத்துகின்றது. கிழக்கில் இருந்து புலிகள் ஒழிக்கப்பட்ட நிலையில், கிழக்கு மக்களுக்கு எதிரியாக வடக்கு மக்களைக் காட்டுகின்றது.


உண்மையில் என்ன தான் நடக்கின்றது. இதுவரை கருணா கும்பல் புலிகளை எதிரியாக காட்டி அரசியல் விபச்சாரம் செய்தவர்கள், இன்று எதிரியாக யாரைக் காட்டுவது என்ற புதிய அரசியல் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். புதிய வளர்ப்பு எசமானனான அரசை, தமது எதிரியாகக் காட்டமுடியாது. அந்த அரசின் தயவில் நக்கி, அதில் உண்ணியாக வாழ்பவர்கள், தமது அரசியல் இருப்பு சார்ந்து புதிய எதிரி தேவைப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு மக்களையே, தனது எதிரியாக இன்று காட்டத் தொடங்கிவிட்டனர்.


அண்மையில் துண்டுப்பிரசுரம் மூலம் விடுத்த கொலை அச்சுறுத்தல், இதன் ஒரு அங்கம். அரசுடன் தன்னைப் போல் இணைந்து இயங்கும் போட்டிக் கைக்கூலி துரோகக் குழுக்களின் தலைவர்களுக்கு விடப்பட்டது எச்சரிக்கை, உள்ளடக்க ரீதியாக அவ்வச்சுறுத்தல் அவர்களை நோக்கியதல்ல. மாhறக இதன் பின்னணியும், அரசியல் நோக்கமும் தெளிவானது. அதாவது உண்மையில் வடக்கு மக்களுக்கு விடப்பட்ட, ஒரு கொலை அச்சுறுத்தல் தான் இது.


போட்டிக்குழுக்களுடனான கிழக்கு அதிகாரம் தொடர்பான மோதல் என்பது, இந்தப் பாசிச அரசியல் வழிகளில் தான் தீர்க்கப்படுகின்றது. கருணா என்ற கிழக்குவாதம் பேசும் பாசிச கூலிக் கும்பலால், அரசியல் ரீதியாக மாற்றுக்குழுக்களை எதிர்கொள்ள முடியாது. மாற்றுக் குழு அரசியலை விமர்சித்து அரசியல் செய்ய, இந்தக் கும்பலிடம் எந்த மாற்று அரசியலும் கிடையாது. இது தான் அரசுடன் சேர்ந்து இயங்கும் அனைத்து கூலிக் குழுக்களின் நிலையும் கூட.


இதுபோல் தான் புலிகளை எதிர்த்து புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் கும்பல்களிடமும், புலிக்கு மாற்றாக வேறு அரசியல் எதுவும் கிடையாது. இதனால் அது குறுகிய புலியெதிர்ப்பில் ஈடுபடுகின்றது. அரசின் கிழக்கு கூலிக்கும்பலாக செயல்படும் இந்தக் கும்பலின் அரசியல் என்பது, பேரினவாதத் தேவையை ஓட்டியதே. இதுதான் அதன் இருப்பும், அதன் பலமும். இதற்கு வெளியில் மக்களுக்கு முன்வைக்கவென, எந்த சொந்த அரசியலும் கிடையாது.


அரசு வடக்கு கிழக்கென தனது கூலிக் குழுக்களை பிரிப்பதுடன், பிரித்து கையாள்வதுடன், ஒன்றுடன் ஒன்று மோத வைக்கின்றது. இது தான் பேரினவாதத்தின் புலிக்கு பிந்தைய தேவையாகும். வடக்கு கிழக்காக தமிழ் மக்களை மோதவைப்பதே, பேரினவாதத்தின் நீண்ட கால தேவையும் திட்டமும் கூட. இதற்கு தனது கூலிக் குழுக்களை மோத வைப்பது அவசியம். அது படிப்படியாக அரங்குக்கு வரத்தொடங்குகின்றது. இதன் போக்கில், இதை புலிகளின் உதிரியான படுகொலைகளையும் பயன்படுத்துகின்றது. இதில் வெற்றி பெறுவது, பேரினவாத நலன்கள் தான்.


மறுபக்கத்தில் நிலவும் யாழ் மேலாதிக்கம் பற்றிப் பேச இந்த கருணா என்ற அரச கூலிக்கும்பலுக்கு, எந்த அருகதையும் கிடையாது. அதற்குரிய அரசியல் அடிப்படையும் கிடையாது. அதற்கான அரசியல் தகுதியும் கிடையாது.


பேரினவாத சதிக்கும் தேவைக்கும் ஏற்ப, கூலிக்கு மாரடிக்கும் இந்தக் கும்பலால் அரசியல் ரீதியாக யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக எதையும் முன்வைக்க முறியடிக்க முடியாது. இதனால் அது அரசியல் ரீதியாக இழிந்து போகின்றது. வடக்கு மக்களை எதிரியாக காட்டி, அவர்களை கொல்லுதல் தான், அவர்களின் எதிர்கால நடவடிக்கையாக பரிணமிக்கின்றது. இப்படி கிழக்கு மேலாதிக்க பாசிட்டுக்களுக்கு, தெரிந்த ஒரேயொரு அரசியல் தமிழ் மக்களை பிளந்து கொல்லுதல் தான்.


முன்பு புலிகள் பேரினவாதத்தை அல்ல, சிங்கள மக்களை எதிரியாக காட்டினர். பேரினவாத அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் அடிப்படை அவர்களிடம் இருக்கவில்லை. சிங்களவன் என்ற கூறிக் கொலை செய்கின்ற அரசியல் மூலம் தமிழ் தேசியத்தையே கற்பழித்தனர். இப்படித் தான் அனைத்து குழுக்களும் செயல்பட்டன.


இன்று அதன் வழி வந்த கருணா என்ற பாசிட், தனது எதிரியாக இதுவரையும் புலியைக் காட்டி ஒட்டுண்ணியாக வாழமுடிந்தது. கிழக்கை புலிகளிடம் இருந்து பேரினவாதம் கைப்பற்றிய பின், தனது அரசியல் இருப்பைக் காட்ட கருணா கும்பலுக்கு புதிய எதிரி தேவைப்படுகின்றது. தனது எதிரியாக வடக்கு மக்களைக் காட்டுவதைத் தவிர, வேறு எந்த அரசியல் குறுக்கு வழியும் இந்தக் கைக்கூலியிடம் கிடையாது.


இதன் விளைவு எதிர்காலத்தில், வடக்கு மக்களை கிழக்கில் கொல்லுதல் தான் அதன் அடுத்த கட்ட வேலைத்திட்டம். அத்துடன் அவர்களை வெளியேற்றுதல் என்ற நிகழ்ச்சியையும், இந்த கூலிக் கும்பல் செய்யும். இதுதான் பேரினவாத அரசின் நடைமுறைத் திட்டம்.


கருணா கும்பல் மீதான தொடர்ச்சியான பலதரப்பு குற்றச்சாட்டுகளுக்கு, புலிகளைப் போல் அதே புரட்டல் பதில். அத்துடன் உருட்டல், மிரட்டல், சுத்துமாத்தும், படுகொலைகள். நாற்றமெடுக்கும் இந்த கிழக்குப் பாசிட்டுகள் கதை மாறாது. இந்த நிலையில் கருணா கும்பலின் ஒடிப்போகாத புதிய பேச்சாளர், ஐயோ இந்த துண்டுப் பிரசுரத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமிலை என்று பி.பி.சியில் கூவுகினறார். அப்படி என்றால் யார் இதை வெளியிட்டது எனக் கேட்ட போது, அதைப் புலிகள் என்றார்.


இதில் உள்ள அரசியல் வேடிக்கை என்னவென்றால், புலிகள் இதை வெளியிட்டு இருந்தால், கருணா கும்பலின் கிழக்கு மேலாதிக்க பாசிச நிலையை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர் அல்லவா! இந்த நிலையில் அதை புலிவிட்டால் என்ன, நீங்கள் விட்டால் என்ன, எல்லாம் ஒன்று தான். உங்கள் நிலைப்பாட்டைத் தான் வடக்குக்கு எதிரான துண்டுப்பிரசுரம் கொண்டுள்ளது. நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்களோ, என்ன செய்ய முனைகின்றீர்களோ, எதைச் செய்கின்றீர்களோ, அதையே துண்டுப்பிரசுரம் கொண்டுள்ளது.


இதை புலி விட்டதாக நீங்கள் கூறினாலும் சரி, இல்லை நீங்கள் ஒரு முகவரியற்ற பெயரில் விட்டாலும் சரி, உங்களின் மக்கள் விரோத அரசியல் அதில் அப்படியேயுள்ளது. கறைபடிந்த வக்கிரம், வடக்குக்கு எதிரான அரசியலாகவன்றி எப்படித் தான் பரிணமிக்கும்.


இந்த கிழக்கு பாசிசக் கும்பலிடம், மாற்று அரசியல் எதுவும் கிடையாது. எதிரி இன்றி, கருணா அரசியல் அனாதையாக முடியுமா? முடியாது. அரசிடம் நக்கி வாழ, இன்று வடக்கு மக்கள் என்ற புதிய எதிரி தேவைப்படுகின்றது. இதனடிப்படையில் வடக்கு மக்கள் மேல் படுகொலைகள் நடக்கும். அதை புலியின் பெயரில் கருணா கும்பல் அவிக்கமுனையும். இந்த பாசிசக் கைக்கூலி அரசியலில் எல்லாமே சாத்தியம்.


இந்த கூலிக் கும்பல், தாமல்ல என்று கூற தாம் ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் என்கின்றது. தாம் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாம். வேடிக்கை தான். பேரினவாத இராணுவத்தின் கூலிக் கும்பலுக்கு வெளியில், வேறு எதுவுமற்றவர்கள் இவர்கள். தமது இருப்புக்கான செயல் என்பது, கொலை முதல் அனைத்து மனிதவிரோத நடத்தைகள் கொண்ட ஒரு வெறும் கூலிக் கும்பல்.


இந்த கூலி ஜனநாயகவாதிகள், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் அரசியல் இருப்பும், அதன் நடைமுறையும் என்ன? பேரினவாதத்தின் தயவில், அதன் பாதுகாப்பில், அது கொடுக்கும் பணத்தில் நின்று, தமிழ் மக்களை புலிகளின் பெயரில் வேட்டையாடுவது தான். அத்துடன் தமிழ் மக்களை வடக்கு கிழக்கு மக்களாகப் பிளந்து, வடக்கு மக்களை படுகொலைக்கு அழைத்துச் செல்வதன் மூலம், கிழக்கு மக்களை மேலும் ஒடுக்குவது தான், இந்த கும்பலில் பாசிச இலட்சியம்.


புலிகளில் இருந்தபோது, இந்த கருணா என்ற பாசிட் எதையெல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்தானோ, அதையே இன்று பேரினவாதத்துக்காக செய்கின்றான். வாலாட்டி நக்கும் வேட்டை நாயாக, நாய்க்குரிய வேட்டைப் பண்புடன், மக்கள் மேல் இந்த பாசிட் பாய்ந்து குதறுகின்றது. ஊட்டி வளர்ப்பவர்களை எட்டப்பனாக நக்குவதும், மற்றவர்களை வேட்டையாடுவதுமே, இந்தக் கும்பலின் துரோக அரசியலாகும்.


அன்று யாழ் மேலாதிக்கவாதிகளும் கிழக்கு கருங்காலிகளும் சேர்ந்து, கிழக்கில் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த வரலாறு எம் முன்னால் உள்ளது. இன்று சிங்களப் பேரினவாத பாசிட்டுகளுடன் சேர்ந்து, வடக்கு மக்களை கொலை செய்ய தூபமிடுகின்றனர்.


பேரினவாத பாசிச அரசுடன் சோந்து இயங்கும் கிழக்கு கூலிக்கும்பல்களால், வடக்குக்கு எதிராக விடப்படும் அச்சுறுத்தல் என்பது, பேரினவாதத்தின் திட்டமிட்ட சொந்த சதிதான். தமிழ் மக்களை வடக்கு கிழக்காக பிளந்து, அவர்களின் தேசிய கோரிக்கைக்கு வேட்டு வைப்பது, பேரினவாதத்தின் இலட்சியம்.


இந்த பேரினவாத தேவையை, தனது சொந்த வழிகளில் செய்யமுடியாது. அதைக் கிழக்கு மக்கள் ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் கருணா என்ற கிழக்கு கைக்கூலியைக் கொண்டு சாதிக்க முனைவது, இன்று தெளிவாகவே ஊரறிய அம்பலமாகின்றது.


கருணா எட்டப்பனுக்குரிய சலுகைகள், வசதிகளுடன் களத்தில் இறங்கிவிடப்பட்டுள்ளான். கிழக்கு மக்களை வடக்கு மக்களுக்கு எதிராக நிறுத்தி, பிளக்கின்ற அரசியல் பித்தலாட்டங்களை அரங்கேற்றுவதையே, கருணா மூலம் பேரினவாதம் கோருகின்றது. அதை நோக்கி முன்னேறுகின்ற பேரினவாதபடிகளில் ஒன்று தான், இந்தத் துண்டுப்பிரசுரம்.


இந்த கிழக்கு பாசிட்டுக்களுக்கு கிழக்கு மக்களின் துயரங்களையும் தீர்க்கும், எந்த அரசியல் அடிப்படையும், அரசியல் நேர்மையும் கிடையாது. தானும் தனது கிழக்கு கும்பலும் நன்றாக பேரினவாதத்தை நக்கி வாழும் கனவில், தமிழ் மக்களை மேலும் பிளந்து பந்தாடுகின்ற வக்கிரமே, இன்று புலியின் பெயரால் அரங்கேறுகின்றது. கருணா என்ற கிழக்கு பாசிட்டின் உதயம், ஒரு கிழக்கு எட்டப்பனின் வரலாறாகவே வரலாறு இதைப் பதிவு செய்யும். மன்னிக்க முடியாத, மனித குலத்தின் எதிரிகள் அணியில், முடிவின்றி தொடர்ந்தும் பலர் போட்டிபோட்டு இணைகின்ற இன்றைய காலகட்டத்தில், அவற்றை சமரசமின்றி தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி போராடவேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.


Monday, September 10, 2007

பாலஸ்தீனப் பிளவும் அமெரிக்கச் சதியும்



பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போர், மேலும் ஒரு பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) ஓர் அங்கமான ஃபதா இயக்கத்திற்கும், முசுலீம் அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பதவி அதிகாரச் சண்டை, உள்நாட்டுப் போராக மாறக் கூடிய சூழல் உருவாகி இருப்பதுதான் இப்பின்னடைவுக்கான காரணம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, ஆஸ்லோ ஒப்பந்தம் என்ற பெயரில் ஓர் "அமைதி' ஒப்பந்தத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியம் பாலஸ்தீன மக்கள் மீது திணித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்பொழுது பாலஸ்தீன பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்படும் மேற்குக் கரையையும், காசா முனையையும் நிர்வகிப்பதற்காக, பாலஸ்தீன ஆணையம் என்ற பெயரில் ஓர் அதிகார நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.

சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாகப் போவதன் தொடக்கப்புள்ளி என வருணிக்கப்பட்ட இந்த பாலஸ்தீன ஆணையம், நடைமுறையில், அமெரிக்கஇசுரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ஏஜெண்டாகத்தான் செயல்பட்டு வருகிறது. ஒரு முனிசிபாலிடிக்கு இருக்க வேண்டிய சுய அதிகாரம் கூட இல்லாத இந்த பாலஸ்தீன ஆணையத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் இந்த நாய்ச் சண்டையின் காரணமாக, இன்று பாலஸ்தீனப் பிராந்தியம் இரண்டாகப் பிளவுபட்டுப் போய்விட்டது.

மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசாமுனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டதன் மூலம், ஒரு உள்நாட்டுப் போரைச் சந்திக்க வேண்டிய அபாயத்தில் பாலஸ்தீன மக்களைத் தள்ளிவிட்டுள்ளன. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்த பிறகுதான், பாலஸ்தீனத்தில் அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இரண்டாவது இண்டிஃபதா (சுதந்திரப் போர்) நடந்தது. அதனால், இந்தப் பிளவை, ஏகாதிபத்தியவாதிகள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.

2005ஆம் ஆண்டு இறுதியில், பாலஸ்தீன ஆணையத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற பொழுதே, இந்தப் பிளவிற்கான விதை தூவப்பட்டது. அத்தேர்தலில் அமெரிக்க இசுரேல் கூட்டணி ஃபதா இயக்கத்தையும், அதன் தலைவரான முகம்மது அப்பாஸையும் ஆதரித்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அத்தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. பாலஸ்தீன ஆணையத்தின் அதிபராக முகம்மது அப்பாஸும், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஹனியா பிரதமராகவும் இருக்கும் எதிரும், புதிருமான நிலையை 2005 தேர்தல் உருவாக்கியது. பாலஸ்தீன ஆணையத்தின் பெரும்பான்மை ஹமாஸிடம் இருந்தபொழுதும், அதிகார வர்க்கப் பதவிகளில் ஃபதா இயக்கத்தினர் நிரம்பியிருந்தனர்.

""ஹமாஸின் தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது'' என அறிவித்த அமெரிக்கா, தனது தலையாட்டி பொம்மையான அதிபர் முகம்மது அப்பாஸ் மூலம், ஹமாஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முயன்றது. மேலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, பாலஸ்தீனத்துக்குத் தர வேண்டிய நிதி உதவிகளைத் தராமல் முடக்கி வைத்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து இசுரேலும், பாலஸ்தீன ஆணையத்தின் சார்பாக வசூலித்த வரிப் பணத்தைத் தராமல் முடக்கியது.

இப்பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ""பாலஸ்தீன மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 1,60,000 அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களுக்குச் சம்பளம் தர முடியாமல் போனது. மேற்குக் கரையிலும், காசா முனையிலும் 12 இலட்சம் பாலஸ்தீன மக்கள் பட்டினிச் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர்'' என ஐ.நா. மன்றமே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு, பாலஸ்தீனத்தில் அன்றாட வாழ்க்கை மோசமடைந்தது. இன்னொருபுறமோ, இப்பொருளாதார நெருக்கடி முற்ற, முற்ற ஃபதாவிற்கும் ஹமாஸுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்தது.

ஹமாஸோடு நேரடியாக மோதி, அவ்வமைப்பை நிர்மூலமாக்கும் திட்டத்தோடு ஃபதா இயக்கத்தைச் சேர்ந்த 500 பேருக்கு ஆயுதப் பயிற்சியும், உதவியும் அளித்து, எகிப்தின் வழியாக காசா முனைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது; அதிபர் அப்பாஸின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிறப்பு அதிரடிப் படைக்கும் அமெரிக்காவால் 160 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு, இந்தச் சகோதரச் சண்டை கொம்பு சீவிவிடப்பட்டது.

இசுரேலோ, தனது இராணுவச் சிப்பாய் ஒருவரை ஹமாஸ் இயக்கம் கடத்தி விட்டது எனக் குற்றஞ்சுமத்தி, ஹமாஸ் அமைப்பின் தலைமையிடம் இருக்கும் காசா முனைப் பகுதி மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் இயக்கத்தின் தலைவரும் பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமருமான இஸ்மாயில் ஹனியா உள்ளிட்டு, ஹமாஸ் இயக்கத்தின் அமைச்சர்களையும், ஆணைய உறுப்பினர்களையும் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப் போவதாக அறிவித்ததோடு, அவர்களின் மீது ""ராக்கெட்'' தாக்குதல்களையும் நடத்தியது.

இப்பொருளாதார நெருக்கடியும், இராணுவ முற்றுகையும் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்திய விளைவுகளால், தங்கள் நாடுகளும் பாதிக்கப்படுமோ எனப் பயந்து போன சௌதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஃபதாவிற்கும், ஹமாஸிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, ""மெக்கா ஒப்பந்தத்தை'' உருவாக்கின. இதன்படி, சில முக்கிய அமைச்சர் பதவிகளை, ஹமாஸ் இயக்கம் ஃபதாவிற்கு விட்டுக் கொடுப்பது என்றும், அதற்கு ஈடாக, ஹமாஸின் ஆயுதப் படையைப் பாலஸ்தீன ஆணையத்தின் படையோடு இணைத்துக் கொள்வது என்றும் இதன் அடிப்படையில் தேசிய ஐக்கிய அரசை அமைப்பது என்றும் முடிவானது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா விரும்பாததால், அதிபர் முகம்மது அப்பாஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டார். மேலும், பாலஸ்தீன ஆணையத்திற்குப் புதிதாகத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்தார். இதனால், பதவிஅதிகாரத்துக்காக நடந்த இந்தச் சண்டை முற்றி, மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசா முனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டுவிட்டன.

ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே மோதல் நடந்து வந்தபொழுது, ""இந்த வன்முறையை நாங்கள் வரவேற்கிறோம்'' என வெளிப்படையாக அறிவித்த அமெரிக்கா, இப்பொழுது, ""நாம் இரண்டுவிதமான பாலஸ்தீனத்தை எதிர்கொள்கிறோம்; ஃபதாவின் மேற்குக் கரைக்கு தேவையான உதவிகளைச் செய்வது; ஹமாஸின் காசா முனையைக் கசக்கிப் பிழிவது'' என்ற திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகக் கொக்கரிக்கிறது.

""அமைதி'' ""சமாதானம்'' என்ற பெயரில் தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை மூடி மறைத்துவந்த ஃபதா இயக்கம், இப்பொழுது அம்மணமாக நிற்கிறது. இந்தப் பிளவுக்குப் பிறகு, அதிபர் அப்பாஸ், ஹமாஸ் அரசைக் கலைத்துவிட்டதோடு, அமெரிக்காவின் விருப்பப்படி உலக வங்கியின் முன்னாள் ஊழியரான சலாம் ஃபய்யத்தை பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமராகவும்; அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் பயிற்சி அளிக்கப்பட்ட முகம்மது தஹ்லானைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்திருக்கிறார்.

""இது, காசா முனையின் இரண்டாவது விடுதலை'' என ஹமாஸ் தனது வெற்றியைப் பீற்றிக் கொண்டாலும், இந்த இரண்டாவது விடுதலையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு அதனிடம் அரசியல் திட்டமோ, சமூக ஆதரவோ கிடையாது. தனது வெளியுலகத் தொடர்புக்கு மட்டுமல்ல, தண்ணீர், மின்சாரம், எரிசக்தி, வேலை வாய்ப்பு, வர்த்தகம், மருத்துவ வசதிகள் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் இசுரேலின் தயவை நாடியே காசாமுனை இருக்கிறது.

ஏறத்தாழ 14 இலட்சம் பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் காசா முனை மிகப் பெரிய அகதிகள் முகமாகத்தான் இருந்து வருகிறது. அங்கு வசிப்போரில் 80 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வேலை வாய்ப்பு அற்றவர்களாக, வறுமையோடு உழன்று வருகின்றனர். இவர்களை மேலும், மேலும் கசக்கிப் பிழிவதன் மூலம் ஹமாஸை அடக்கிவிட முடியும் என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டம்.

மேலும், ஈராக் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மேற்காசிய நாடுகளைத் தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யும் திட்டத்தோடு அமெரிக்கா இயங்கி வருகிறது. இப்பொழுது, அதிகாரப் போட்டியால் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, அமெரிக்காவைப் பொறுத்தவரை, பழம் நழுவி பாலில் விழுந்த கதையைப் போன்றதாகும். ஈராக்கை, சன்னி, ஷியா, குர்து என மூன்று பகுதிகளாகக் கூறு போடும் அமெரிக்காவின் சதி, அங்கு முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும், பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்தி வந்தாலும், அதனின் நடைமுறை நோக்கம், தனது ஆயுதப் படைகளை, பாலஸ்தீன ஆணையத்தின் படைகளோடு இணைத்து ""அதிகாரத்தைப்'' பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறில்லை. இதனால்தான், ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் புறக்கணிப்பதாக கூறிவந்த ஹமாஸ், பின்னர் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன ஆணையம், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் பங்கு பெறும் சமரச நிலையை மேற்கொண்டது.

மேலும், ஏகாதிபத்திய அடிவருடித்தனம், ஊழல், கோஷ்டி சண்டையால் ஃபதா இயக்கம் சீரழிந்து போய்விட்டதால்தான், ஹமாஸ் இயக்கத்திற்கு பாலஸ்தீன மக்கள் வாக்களித்தார்களேயன்றி, அதனுடைய மத அடிப்படைவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஹமாஸுக்கு வெற்றியை அளிக்கவில்லை. எனவே, காசா முனையில் ஹமாஸ் அடைந்திருக்கும் ""வெற்றியை'' நீண்ட நாட்களுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஃபதா இயக்கத்தோடு சமரசம் செய்து கொள்வது; இல்லையென்றால், அமெரிக்க இசுரேல் கூட்டணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கிச் செல்வது என்பதுதான் இந்த ""வெற்றி''யின் எதிர்கால முடிவாக இருக்கும்.

· செல்வம்

Sunday, September 9, 2007

பாசிசப் புலி தோற்றுக் கொண்டிருக்கின்றது

பி.இரயாகரன்
09.09.2007

ன்னியை இராணுவம் கைப்பற்றாமலே, புலிகள் தோற்றுக் கொண்டிருக்கின்றனர். புலிப் பாசிட்டுகளின் வரலாறு இப்படித் தான் முடியும். பாசிட்டுகளின் சொந்த வரலாற்று விதி, இப்படித் தான் நடக்கும். பாசிசம் ஏற்படுத்தியுள்ள போலியான பிரமைகளும், பிரமிப்புகளும் சாய்ந்து பொடிப்பொடியாக நொருங்கும் போது, பாசிட்டுகள் வரலாற்றில் நிற்பதற்கே இடமிருக்காது.

ஒரு இனத்தையே காவு கொண்டு உருவான பாசிட்டுகள், வரலாற்றில் நீடித்ததாக வரலாறு கிடையாது. அது போல் அவர்களின் சொந்த பாசிச வரலாறு அவர்கள் மீதே நிச்சயமாக காறி உமிழும். நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, இது நடந்தேயாகும்.

புலிகளிடம் இன்றும் தக்கவைத்துள்ள பலம், அவர்கள் நினைத்த இடத்தில் நினைத்ததை செய்ய முடியும் என்ற பிரமை, அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும் என்ற திமிர், இவைகள் எதுவும் இதை தடுத்து நிறுத்தி விடாது. அந்த சக்தி அவற்றுக்கு கிடையாது.

புலி பாசிட்டுகள் கருதுவது போல், மனித இனம் என்பது வெறும் இயந்திரங்களல்ல. அவர்கள் பாசிசத்துக்கு தலையாட்டும் பொம்மைகளுமல்ல. எப்படி வாழ்ந்தாலும், நீண்ட காலம் அடங்கியொடுங்கி வாழ்வது கிடையாது.

புலிகள் பாசிச கொலை வெறியாட்டங்கள் மூலம், முழுச் சமூகத்தையும் செயலற்றதாக்கினர். இப்படி தான், தனக்கு இசைவாக அனைத்தையும் அடிமைப்படுத்தினர். இதனால் சமூகம் அடங்கியொடுங்கி பாசிசமே மனித வாழ்வென்று நம்பி வாழ்ந்ததும் கிடையாது, வாழ்வதும் கிடையாது. அது தனது சொந்த வழிகளில், இதை எதிர்த்து இயங்குகின்றது.

மக்கள் புலிப் பாசிசத்துக்குள் அடங்கியொடுங்கி கிடந்தாலும், பாசிசத்துடன் என்றும் உடன்பட்டதில்லை. அதன் கோரமான செயல்பாட்டில் பங்குபற்றியதில்லை. தனது பந்த பாசங்கள் கொல்லப்படுவதையும், மிருகத்தனமாக அடக்கியொடுக்கப்படுவதையும், ஒருநாளும் உள்ளார அங்கீகரித்ததில்லை. இதைப் பகிரங்கமாக தெரிவிக்க முடியாவிட்டாலும், அதில் இருந்து விலகி மௌனமாக ஒதுங்கி விடுவதன் மூலம் எதிர்ப்பு ஆரம்பமாகின்றது. இப்படித்தான் புலியை எதிர்த்து, புலியை தம்மில் இருந்து அந்த மக்கள் ஒழிக்கின்றனர், ஒழித்துக்கட்டுகின்றனர். புலிகளை ஒழிப்பதில் மக்கள் வெற்றி பெற்று வருகின்றார்கள்.

இன்றும் மாபெரும் பாசிச கட்டமைப்பைக் கொண்டுள்ள புலிகள், மாபெரும் இராணுவ இயந்திரமாக காணப்பட்ட போதும், அது நொருங்கிக் கொண்டு இருக்கின்றது. இதை இனியும் சரிசெய்ய முடியாது. அதன் செயற்பாட்டுக்குரிய, உணர்வு பூர்வமான பாசிச நலன்கள் மெதுவாக அவர்களின் உள்ளேயே அன்னியமாகி வருகின்றது.

ஏன் இன்றும் புலிகள் வெளிப்படையாக மிகப்பெரிய ஒரு இராணுவம். தமிழ் மக்களின் அனைத்து செல்வவளங்களையும், அவர்களின் மூச்சுக்களையும் கூட ஒருங்கிணைத்த ஒரு பாசிச இராணுவ இயந்திரம் தான். தாம் தமது பாசிச நலன்களுடன் தப்பிப் பிழைக்க, தமது பிரதேசத்தில் வாழ்கின்ற முழு மக்களையும் பலாத்காரமாகவே இராணுவமயமாக்குகின்றது. இன்றும் தாம் இல்லாத இடங்களில் கூட, தமது அதிகாரத்தையும், அடக்குமுறையையும் கொண்டு, அனைத்தையும் தமக்கு அடிபணிய வைக்கின்றது. ஏன் யாரையும் விலைக்கு வாங்கவும், பிழைப்புவாத பினாமிகளைக் கொண்டு அனைத்தையும் தாமாகக் காட்டவும் கூட முடிகின்றது. அவர்களால் இந்தா புலிகள் வெல்லுகின்றனர், இந்தா அரசு தோற்கின்றது என்று அனைத்துப் பினாமி ஊடகவியலிலும் கூட கூறமுடிகின்றது.

அத்துடன் சர்வதேச வலைப்பின்னலை அடிப்படையாகக் கொண்ட உளவுப்பிரிவையும், ஆயுதம் ஏந்திய குண்டர்களையும் கொண்டு இயங்கமுடிகின்றது. சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுடனான புலிகளின் அரசியல் உறவு என்பது, மாபியாத்தனத்துடன் தொடர்ச்சியாக இன்றும் பாதுகாக்க முடிகின்றது.

உலகின் பல பாகத்தில், புலிப் பாசிச மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் விரோத நிலையை தக்கவைக்க முடிகின்றது. இதற்குள்ளாக கூட்டங்கள், சதிகள், இரகசிய சூழ்ச்சித் திட்டங்களை இன்றும் தீட்ட முடிகின்றது. ஏகாதிபத்திய மக்கள் விரோத நாசகாரர்களுடன் சேர்ந்து சதியாலோசனைகளையும் செய்ய முடிகின்றது. இப்படி எங்கும், எதிலும், எல்லாவிதத்திலும் அமர்க்களமான சதிகள், காய் நகர்த்தல்கள், சுத்துமாத்துக்கள். அனைத்துமே மக்களின் பெயரில் இன்றும் புலிகளால் செய்ய முடிகின்றது.

இந்தளவு இருந்த போதும், புலிகளின் பாசிச வரலாறு முடிவை நோக்கி நகருகின்றது. இதை நம்ப முடியாதவர்கள், நம்ப மறுப்பவர்கள், புலிகளின் வரலாற்றின் சொந்த விதியை அவர்களின் கண்ணால் காண்பார்கள். அது தவிர்க்க முடியாதது. இது எமது சொந்த விருப்பங்களோ, கற்பனைகளோ அல்ல. மாறாக புலிப் பாசிசம் உருவாக்கிய சொந்த வரலாற்றின், இறுதிக் கால கட்டம் தான் அரங்கேறுகின்றது. அதையே நாங்கள் எடுத்துக் காட்டுகின்றோம்.

இவை எவையும் பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றிகள் அல்ல. பேரினவாதத்தால் தமிழ் மக்களை ஒருநாளும் வெல்லமுடியாது. அப்படி இருக்க, எப்படி புலிகள் தோற்கின்றனர்?

உண்மையில் தமிழ் மக்கள் தான் புலிகளைத் தோற்கடித்துக் கொண்டு இருக்கின்றனர். புலிப் பாசிசத்தை அவர்கள் தமது சொந்த வழியில் ஒழித்துக் கட்டுகின்றனர்.

புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடியை புலிகளே அறுத்து, பாசிசம் என்னும் இடை மதிலால் அதைப் பிளந்துவிட்டனர். இப்படி தமிழ் மக்களுடன் இருந்த தொப்புள் உறவை மறுத்து, சொந்தத் தாயையே எட்டி உதைத்தனர். இப்படி தாயின் தாலாட்டை உதறியும், தாயின் அரவணைப்பை எட்டியும் உதைத்த புலிகள், பாசிட்டுகளாகி தறிகெட்டு அதிகார வெறியில் திமிரெடுத்துத் திரிந்தனர். அராஜகத்துடன் கூடிய லும்பன் தனம் மூலம், சமூகத்தையே நலமடித்தனர். புலிகளை உருவாக்கிய தமிழ் சமூகமே, இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. தமது சொந்த வாயைப் பொத்தி, மௌனமாகி, படிப்படியாக ஓதுங்கிக் கொண்டதன் மூலம், புலிகளின் இருப்புக்கு இப்படியே தான் வேட்டு வைத்தனர், வைத்து வருகின்றனர்.

இதன் விளைவு, பலமான இந்த பாசிச இயந்திரத்தில், வெடிப்புகளையும் சிதைவுகளையும் அன்றாடம் உருவாக்குகின்றது. இதற்கு தலைமை தாங்குவோர் முதல் கீழ் அணிகள் வரை, படிப்படியாக புலிகளின் பாசிச இலட்சியத்தில் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெற்றுத்தனமான குருட்டு நம்பிக்கைகள், பொய்யான பரப்புரைகளை நம்பி ஊர்ந்தவர்கள், தொடர்ந்து நடக்க கால்கள் இல்லை என்பதை காண்கின்றனர். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் ஊர முடிவதில்லை. தாம் எதற்காக போராடுகின்றோம் என்பதைக் கூட, அவர்களால் இன்று உணர முடிவதில்லை.

ஏன் தமது பக்க அரசியலை சொல்ல அவர்களிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது. அனைத்தையும் இராணுவ வெற்றிகள் மூலமும், அனைத்தையும் தியாகி துரோகி என்றும் பறைசாற்றி நின்றவர்களின் தகவல் மையம் முற்றாக செயல் இழந்துவிட்டது. 400க்கு மேற்பட்ட புலி இணையங்கள், அவர்களின் ஊதுகுழல் ஊடகங்கள் வம்பளக்க செய்தியின்றி, வீரம் பேச நாதியின்றி படுத்து உறங்குகின்றது. பேரினவாதிகளுக்கு இடையில் நடக்கும் குத்துவெட்டுகளை, புலி முரண்பாட்டைச் சார்ந்து புலிகளின் தகவல்கள் முக்கி முனங்குகின்றது.

புலிகள் தோற்கின்றனர். இதற்கான காரணம் என்ன? இதற்கான உட்கூறுகளை 23.09.2006 எழுதிய எனது கட்டுரை, முன் கூட்டியே இதை விரிவாக ஆராய்கின்றது. 'அரசியல் ரீதியாக தோற்ற புலிகள்இ இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?"

கிழக்கு முதல் வன்னிவரை புலிகள் இராணுவ ரீதியில் தொடர்ச்சியாக யுத்தம் செய்ய முடியாத நிலைக்குள் அவர்கள் சென்றுவிட்டனர். உணர்வு ப+ர்வமாக யுத்தம் செய்யும் மனநிலையை புலி அணிகள் இழந்துவிட்டன. யுத்தத்ததை வழிநடத்துபவர்கள் தமது பாசிச போராட்டம் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். மக்களில் இருந்து அன்னியமாகியதன் விளைவு, தனிமைவாதத்தில் சிக்கி நாற்றமடிக்கும் பிணமாய் அழுகிச் சிதைகின்றனர். எங்கெல்லாம் அவர்கள் எதிரியின் யுத்த முனையை எதிர்கொள்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் இழப்பதற்கு ஆயுதங்களையும் உயிரையுமே வைத்துள்ளனர். இதனால் அன்றாடம் புலிகளின் ஆயுதங்களும், புலிகளின் உடல்களும் எதிரியால் கைப்பற்றப்படுகின்றது. புலிகளின் வரலாற்றில் இப்படி நடந்து கொண்டிருப்பது இதுதான் முதல் தடவை மட்டுமின்றி, இதுவே இறுதியானதுமாகும்.

இராணுவத்தை தாக்க வருபவர்கள் அன்றாடம் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முடிவதில்லை. புலியல்லாத பிரதேசத்தில் தாக்குதல்கள் நடத்த முனையும் போது, அம்முயற்சிகள் தோல்வி பெறுகின்றன. எதிரி முன்கூட்டியே இவற்றைக் கைப்பற்றுவது, முறியடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகின்றது. புலியல்லாத பிரதேசத்தில் பேரினவாதம் நடத்துகின்ற படுகொலைகள், கடத்தல்கள் மூலம், புலிகளின் சிறு செயற்பாடுகள் கூட முடக்கப்படுகின்றது. புலிகள் பணத்தைக் கொடுத்து எதிரியை வாங்கி நடத்திய தாக்குதல்கள், அனைத்தும் படிப்படியாக இல்லாது ஒழிக்கப்படுகின்றது. புலிகளின் உளவு சார்ந்த தகவல் மையமே அதிர்ந்து ஒடுங்கி முடங்குகின்றது.

புலிகளின் நிதியாதாரங்கள் முதல் வரி மற்றும் கப்பம் போன்றன ஒரு தேக்கத்தின் எல்லையை எட்டியுள்ளது. புலம்பெயர் சமூகத்தில் நடைபெறும் கைதுகள், முழு செயல்பாட்டை முடக்கி வருகின்றது. சர்வதேச ரீதியான புலிகளின் இரகசியமான ஆயுத செயல்தளம், முழுவீச்சில் இயங்க முடியாது அழிந்து வருகின்றது.

இப்படி எங்கும் எதிலும் பாரிய நெருக்கடிக்குள் புலிகள் சிதைந்து அழிகின்றனர். புலிகளின் உள்ளே பாரிய சந்தேகங்கள், இடைவெளிகள். தலைமைக்குள் பரஸ்பரம் நம்பிக்கையீனம். இப்படி புலிகள் தனக்குள்ளேயே சிக்கி, உள் முரண்பாடுகள் கொதிநிலையை அடைந்து வருகின்றது. கைதுகள் சித்திரவதைகள், குற்றச்சாட்டுகள் பொதுவான உள்ளியக்க விதியாகிவிட்டது. இதுவே அன்றாடம் பெருகிச் செல்லுகின்றது. உயிரோட்டமாக, உணர்வுபூர்வமாக, நம்பிக்கை விசுவாசத்துடன் செயல்பட முடியாத நம்பிக்கையீனம், அமைப்பையே சூனியமாக உருவாக்கிவிட்டது.

சூனியம் வைத்தது போல் ஒவ்வொன்றாக தகர்கின்றது. எங்கும் எதிலும் அதிருப்தி. நம்பிக்கையீனங்கள் மலிந்து போய்விட்டது. இலட்சியப்பற்று என்பது மறந்து, அதை அறவே காணமுடியாத ஒன்றாகிவிட்டது.

தமிழ் மக்கள் எப்படி தமது அழிவுக்கான யுத்தத்தை வெறுக்கின்றனரோ, அப்படி புலிகளின் அணிகள் கூட புலிகளின் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் வலிந்து திணிக்கப்படும் போது, தோல்வியும் மரணமும் முன் கூட்டியே தீர்மானமாகி விடுகின்றது.

எதற்காக இப்படி போராடுகின்றோம், மரணிக்கின்றோம் என்பது கூட தெரியாத சோகம். விளைவு உள் மோதல்கள், அமைப்பு ஆட்களை இல்லாது ஒழித்தல் என்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. அனைத்தையும் கட்டுப்படுத்த, வன்னி மண்ணில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கும்பலின் காட்டுத்தனமான அதிகாரம். இதுவொரு அராஜக லும்பன்களாக, மக்கள் மேலான வன்முறையையே தனது போராட்டமாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு வீட்டுப் பெண்ணையும் இவர்கள் கற்பழித்தால் கூட, கேட்க நாதியற்ற வன்னிச் சமூகமாக இவர்களால் இழிவுக்குள்ளாகி வருகின்றனர். அந்தளவுக்கு வன்முறையின் கோரம், கொடூரம். இப்படி கொடூரமாக இயங்கும் அராஜகத்தையே அடிப்படையாகக் கொண்ட புலிக்கும்பல் ஒருபுறம், மறுபக்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட இதனுடன் தொடர்பற்ற புலி இராணுவம்.

லும்பன்கள் நடத்துகின்ற மனித விரோத சமூக இழிவாடல்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவத்தின் உட்கட்டமைப்பின் உணர்வையே சிதைக்கும் வண்ணம் அதற்கு நஞ்சிடுகின்றது. கட்டாயப்படுத்தி பலாத்காரமாக கடத்தி வரப்படும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும், தனக்கு நேர்ந்த துயரக் கதை முதல் தனது சொந்த சமூகத்துக்கு நேருகின்ற அவலத்தை சொல்லி புலம்புவதன் மூலம், புலிகளின் இராணுவம் கறையான் புற்றெடுக்கின்றது. புலிகளின் இராணுவத்தில் நடக்கும் உணர்வு ரீதியான சிதைவு, முழு இராணுவக் கட்டமைப்பையும் சிதைக்கும் தொற்று நோயாகின்றது. தாம் யாருக்காக இதையெல்லாம் செய்கின்றோம் என்ற விடைதெரியாத சோகம், சொல்லி மாளமுடியாது உணர்வு ரீதியாகவே அதற்குள் மாண்டு போகின்றனர்.

வன்னியை இராணுவம் பிடிக்காமலே, வன்னி தோற்றுக் கொண்டு இருக்கின்றது. பேரினவாதம் ஒரு தீர்வுப்பொதியை வைத்துவிட்டால், அது புலிக்குள்ளான புதிய மோதலாக சிதைவாக மாறிவிடும். தீர்வு புலியைப் பிளக்கும், சிதைக்கும். உட் குழுக்கள், கொடுப்பதை ஏற்றுக்கொள்ளக் கோரும் முரணான மனநிலை, யுத்தம் செய்ய விரும்பாமை மேலும் அதிகரிக்கும். இதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மீதான அவநம்பிக்கை உருவாகும். சந்தேகங்கள் புலிகளை மேலும் அம்பலமாக்கும். மக்கள் மத்தியில் இதன் விளைவும், அதன் எதிர்வினையும் புலிக்கு எதிரானதாக மாறும்.

புலிகளை யுத்தமின்றி தோற்கடிக்கக் கோரியே தான், உலகம் தீர்வை முன்வைக்கக் கோரி அரசை நிர்ப்பந்திக்கின்றது. இனவாதிகள் இடையிலான முரண்பாடு தான், புலியை இன்னமும் பாதுகாக்கின்றது. உலகளவில் அதிகார மட்டத்தில் இருந்து எழும் யுத்தத்துக்கு எதிரான குரல்கள், யுத்தம் மூலம் புலிகளை தோற்கடிப்பதை விட ஒரு தீர்வுப் பொதி மூலம் புலியை அழிக்க முடியும் என்பதை தெளிவாக கண்டு கொண்டுள்ளது. இதற்குரிய நிலைமை மிகவும் கனிந்து காணப்படுகின்றது. வன்னியில் இன்றைய நிலைமைகள், புலியை தோற்கடித்துவிடும்.

மறுபக்கத்தில் பேரினவாத வக்கிரம் மேலோங்கி நிற்கின்றது. புலிகள் உணர்வு ரீதியாக யுத்தம் செய்ய முடியாத மனநிலையைப் பயன்படுத்தி, யுத்தம் மூலம் வெற்றி கொள்ள எண்ணுகின்றது. பேரினவாத சிங்கள பாசிட்டுகள், புலிகளின் மக்கள் விரோத நிலையை அடிப்படையாக கொண்டு, இந்த வெற்றிகளைத் தமது வெற்றியாக காண்பிக்கின்றனர். புலிக்கு எதிரான மக்களின் உணர்வை தனக்கு சார்பாக மாற்றி, அவர்களை புலிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி, தமிழ் இனத்தை யுத்தம் மூலம் வெல்ல முனைகின்றது.

புலிகள் கடந்த காலத்தில் மாற்று இயக்கத்தை, மாற்றுக் கருத்தாளனை நர வேட்டையாடி கொன்று குவித்து, மக்களை இதன் பின் அண்டவிடாது தனிமைப்படுத்தி அழித்தனர். அதையே இன்று பேரினவாதம் அப்படியே புலிகளாக இனம் காணப்பட்டவர்கள் மீது, அதன் ஆதரவாளர்கள் மீது கையாளுகின்றது. புலிகளுடன் தொடர்பு கொள்ளாத வரை உனக்கு ஆபத்தில்லை என்ற புலி விதியையே கையாளுகின்றது. புலியைப் போல், புலியையே வேட்டையாடுகின்றது. அதன் ஆதரவாளர்களை முடக்குகின்றது. புலிகளில் இருந்து மக்களை தனிமைப்படுத்தி வெல்லுகின்றது.

புலி ஆதரவாளர்கள் முதல் புலிகள் வரை அரசு சிறைச்சாலை பாதுகாப்பானது என்று கருதி நூற்றுக்கணக்கில், சுயபாதுகாப்பு கோரி சிறையில் வாழமுனைகின்றனர். அங்கு பாதுகாப்பு உறுதி என்று கருதி, புலியைச் சார்ந்தவர்கள் மக்களிடமிருந்து விலகி வாழும் சூழலை பேரினவாதம் உருவாக்கியுள்ளது. மக்களுடன் புலிகள் வாழமுடியாத நிலை.

இப்படி பல தளத்தில் புலிகள் தமது சொந்த பாசிச வழிகளில் தோற்றுக் கொண்டிருப்பது என்பது, தற்செயலானதல்ல. இது தான் பாசிசத்தின் வரலாற்று விதி. மக்களைக் கடந்து எந்த வரலாறும் நிலைத்தாக ஒரு மனித வரலாறு கிடையாது.