தமிழ் அரங்கம்

Showing posts with label பேரினவாதிகள். Show all posts
Showing posts with label பேரினவாதிகள். Show all posts

Tuesday, May 5, 2009

தமிழினத்தையே நலமடிக்கின்றனர் பேரினவாதிகள்


இவையெல்லாம் பேரினவாதம் திட்டமிட்டு தமிழ்மக்களை வதைக்க, வதைக்கும் முகாமாக மாற்றியுள்ளது. புலிகளிடம் இருந்து மக்களை மீட்க 'மனிதாபிமான" யுத்தம் என்ற பெயரில், ஆயிரக்கணக்கில் படுகொலைகளை தமிழ் மக்கள் மேல் அரங்கேற்றியது இந்த பாசிச அரசு. இந்த படுகொலையில் இருந்து தப்பி வந்த மக்களை 'மீட்பு" என்ற பெயரில் இன்று பிடித்துவைத்துள்ள கொலைகாரர்கள், அந்த அப்பாவி மக்களையே பலாத்காரமாக சிறைவைத்துள்ளது. மக்களுக்கே இந்தக் கதை என்றால், சரணைடைந்த புலிகள் மற்றும் பிடிபட்ட புலிகளுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சரணடைபவர்கள் வதைக்கப்பட்டு, சிதைக்கப்படுகின்றார்கள். இதைவிட அவர்கள் மரணம் மேன்மையானதாக இருந்திருக்கும்.

புலியல்லாத அப்பா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 19, 2009

இலங்கையின் முதன்மைப் பிரச்சினை புலிப் பாசிசமா?

இதை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி நிற்கின்றது. சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும் தேனீ மற்றும் ரீ.பீ.சீயில் சிவப்பு கம்பளம் விரித்து, புலியெதிர்ப்பு அரசியலை விபச்சாரம் செய்தவர்கள் தான் இவர்கள். திடீரென்று அதில் இருந்து பிரிந்து, புதிய புலியெதிர்ப்பு அணியாகவே மறுபடியும் வந்துள்ளனர்.

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று விபச்சாரத்தை கைவிட்டு ஓடவெளிக்கிட்டவர்கள், கையில் கிடைத்த சிவப்பு துணியை போர்த்திய படி ஓடி வந்தனர். மறுபடியும் மிக மோசமான அப்பட்டமான பேரினவாதிகள் தான் நாங்கள் என்பதை அடித்துக் கூறுகின்றனர். இதை சோபாசக்தியின் சத்தியக்கடதாசியில் இந்த ஆபாசத்தை அரங்கேற்றியுள்ளனர். வெட்கக்கேடான ஆபாசமாக சிவப்பு சாயம் அடித்த இவர்களின் அரசியல் படி, தமிழ் மக்களுக்கு என்று தனித்துவமான அரசியல் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என்பதே இவர்களின் அரசியலாகும். பேரினவாதம் என்பது கற்பனையானது. அ..........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்