தமிழ் அரங்கம்

Saturday, October 20, 2007

வன்னி மக்களின் துயரங்கள்...

புலிகளின் தனிமனித பயங்கரவாதம் உருவாக்கிய இராணுவ வாதங்கள் சொந்த நெருக்கடியில் சிக்கி திணறுகின்றது. இப்படி மக்களின் வாழ்வியலில் இருந்து அன்னியமாகிய புலியிசம், தொடர்ச்சியாகவே தோற்கின்றது. இதன் விளைவு பேரினவாதத்தின் வெற்றியாகின்றது. புலிகளின் அரசியல் தமது சொந்த வர்க்க நலனுக்குள், அதுவும் குறுகிய ஒரு சிறு கும்பலின் நலனாகிவிட்ட நிலையில், அதை தனது சொந்த இராணுவ வழிகளில் தொடர்ச்சியாகவே பாதுகாக்க முனைகின்றனர்.


இதன் விளைவு தமது சொந்த தோல்வியை தவிர்ப்பதற்கான தற்காப்புக்கான இறுதி யுத்தத்தை, தமிழீழத்துக்கான இறுதி யுத்தமாக கூறிக்கொண்டு நடத்துகின்ற வெறியாட்டம் தான், இன்றைய வன்னித் துயரம். இதற்காக எல்லாவிதமான பாசிச கூத்துகளையும் மக்கள் மீது நடத்துகின்றனர்.

இப்படி புலிகள் தமது சொந்த அதிகார வன்முறைக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மக்களின் மீதும், இந்த புலிப் பயங்கரவாத வன்முறையை ஏவி விட்டுள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து விலகி தாமும் தம்பாடும் என்று வாழ்ந்தவர்களை, இனி அப்படி வாழமுடியாது என்பதை புலிகள் தமது வன்முறை மூலம் வீட்டுக்கு வீடு தமது அடாவடித்தனத்தால் உணர்த்தி வருகின்றனர்.

முன்பு வீட்டுக்கு ஒருவர் புலியில் இணையவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இணைத்தவர்கள், இன்று வீட்டில் ஒருவரைத் தவிர அனைவரையும் புலியுடன் பலாத்காரமாக இணைக்கின்றனர். முன்பு குழந்தைகளை பலாத்காரமாக திருடியவர்கள், இன்று சமூகத்தையே சூறையாடுகின்றனர். மக்கள் ஒடி ஒளிய முடியாத வகையில் மக்களையே கண்காணிக்கும் புலியிசமும், மறுபக்கம் மக்கள் பற்றிய முழு விபரத்தையும் திரட்டிவைத்துக் கொண்டு அலையும் சமூக விரோத லும்பன்கள்.

வீடுவீடாக புகுந்து, குழந்தைகளை குற்றவாளிச் சமூகமாக இழுத்துச் செல்லுகின்ற புலிக் காட்டுமிராண்டித்தனம். இதை தடுக்கும் பெற்றோருக்கு அடி உதை, கை கால் முறிப்பு முதல் மரணம் வரை பரிசாக கிடைக்கின்றது. எங்கும் இதை உணர்ந்தும், அனுபவித்தும், தெரிந்து கொண்டும் வாழ்கின்றது வன்னிபெரு நிலப்பரப்பு.

இது சார்ந்த மரணவோலங்கள் கேட்காத வன்னிக் கிராமம் கிடையாது. ஒவ்வொரு நாளும் வன்னிக்காடெங்கும் இது எதிரொலிக்கின்றது. மறுபுறம் புலிகளினால் பலாத்காரமாக இழுத்துச் செல்லப்படுபவர்கள், கட்டாயப் பயிற்சிக்குள்ளாகின்றனர். இதன் போது, அதை மீறுபவர்களுக்கு அடி உதை முதல் மரணம் வரை அன்றாடம் புலியிசத்தின் தீர்ப்பாகின்றது.

இப்படி ஆங்காங்கே உயிரற்ற சடலங்கள் பெற்றோரிடம் கொடுக்கப்படுகின்றது. ஏன் எப்படி இந்த மரணம் நிகழ்ந்தது என்று யாரும், சொந்த சுயவிசாரணையை செய்யமுடியாது. மரணங்களும், மரண ஓலங்களுமே கிராமங்களில் பொது நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. இதைக் கடந்து வாழ்தல் என்பது, புலி நிர்வாகத்தில் சாத்தியமற்ற ஒன்றாகிவிட்டது. மரணத்தின் வருகை புலியிசத்தின் வழியில் மட்டுமல்ல, பேரினவாதத்தின் குரூரத்தாலும் கூட விதைக்கப்படுகின்றது.


வன்னி நிலப்பரப்பு எங்கும், எதிலும் கண்காணிப்பும், தண்டனைகளும். வன்னியில் நிகழும் மரணங்களில் சுய ஒப்பாரியைக் கூட வைக்கமுடியாது. புலியிசத்தின் ஆட்சி, அதன் நீதி, அதன் ஒழுக்கம், அதன் பண்பாடு என அனைத்துமே இதுவாகிவிட்டது.


புலியிசத்தின் பாசிச கொடுங்கோலே, சமூக செங்கோலாக திணிக்கப்பட்டுவிட்டது. யாரும் ஏன் எதற்கு என்று மூச்சுவிட முடியாது. அனைத்தையும் தலையில் சுமந்த படி, பீதி பொருந்திய ஒரு ஊமையாக வாழுகின்ற சமூக வாழ்க்கையைத் தான், சுபிட்சமாக காட்டுகின்ற புலியிசத்தின் வக்கிரம்.

மக்கள் தாம் ஏன் எதற்கு புலிகளின் நுகத்தடியின் கீழ் இப்படி நடைப்பிணமாக வாழ்கின்றோம், மரணிக்கின்றோம் என்று கூட தெரியாத அளவுக்கு, மனித துயரங்கள்.

எங்கும் எதிலும் புலிகளின் அத்துமீறல்கள். இவை அனைத்தும் புலித் தமிழீழத்தின் பெயரில் தான் அரங்கேற்றுகின்றன. இதன் மூலம் தான், தமிழ் மக்களுக்கு சொர்க்கத்தை பெற்றுத்தரப் போகின்றார்களாம்!

அதற்காக மக்கள் புலிப் பயங்கரவாதத்துக்கு இரையாவதை கண்டுகொள்ளக் கூடாது என்பதே புலிக்கட்டுப்பாடு. இதையே தமிழீழப் போராட்டத்தின் போராட்ட வழி என்று கூறுகின்ற புலிப் பாசிசமும், அரங்கேறுகின்றது.

ஆனால் இந்த புலியிசம் தோற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வினாடியும் மக்களிடம் புலிகள் தோற்கின்றனர். இந்த தோல்வி கிழக்கில் மட்டுமல்ல வன்னியிலும் தொடங்கிவிட்டது. இதை ஒரு பாரிய இராணுவ வெற்றி மூலம் வெற்றியாக காட்டி தடுக்கின்ற கடந்த கால புலி உத்திகள், வன்னித் தோல்வியை தவிர்த்துவிடாது.

கிழக்கில் பேரினவாதத்தின் வெற்றி என்பது, கிழக்கு மக்களிடம் புலிகள் தோற்றதன் விளைவாகும். இந்த தோல்வி என்பது, வெல்ல முடியாத அரசியல் நிபந்தனைகளாலானது. இதே நிலைமை வன்னியில் இன்று எதார்த்தமாகிவிட்டது. பேரினவாதத்தின் சொந்த கூலி மனப்பாங்கைத் தாண்டி, அது தனது ஆக்கிரமிப்பு வெறியுடன் வெல்லும் அளவுக்கு, புலிகள் மக்களில் இருந்து நிரந்தரமாகவே அன்னியமாகிவிட்டனர். மக்களை வெறும் மந்தைகளாக்கி, அவர்களை நடைப்பிணமாக்கியவர்கள் புலிகள். இப்படி அடக்கியொடுக்கியதன் விளைவால், மக்கள் தமது சொந்த சுயத்தை இழந்துவிட்டனர். மக்கள் தாம் தப்பிப்பிழைக்கவே, அங்குமிங்குமாக நாயிலும் கீழாக அலைபாய்கின்றனர்.

மக்களுக்கு வெளியில் வன்முறையை நம்பி இயங்கும் லும்பன் கும்பல், அதுவும் மனித பண்பாடற்ற காட்டுமிராண்டிகளால் ஒருநாளும் மக்களை தலைமை தாங்கமுடியாது.

மனிதத்தை நேசிக்கவோ, மனிதத்தை வாழவைக்கவோ இவர்களால் முடியாது. தட்டிச் சுருட்டி தின்பதில் தொடங்குகின்ற புலியிச வக்கிரமே, அனைத்துமாகி மிதக்கின்றது.

இந்த மக்களை காப்பாற்ற, வழிகாட்ட யாரும் கிiடாது. ஒருபுறம் பேரினவாதம் மறுபக்கம் புலியிசம். இதற்குள் புலியெதிர்ப்பு அணி புலியொழிப்பு என்று, மக்களின் முதுகில் குத்தி தனது துரோகத்தை காறி உமிழ்கின்றது. இப்படி இலங்கை வாழ் தமிழ் மக்களின் துயரங்களில் வாழ்கின்ற புல்லுருவிகளின் செயல்பாடுகளே அரசியலாகின்றது.

மக்களுக்காக, அவர்களின் சொந்த விடுதலைக்கான எந்த அரசியல் வழிகாட்டலையும், ஏன் எந்த முயற்சியையும் யாரும் செய்வது கிடையாது. இதுவே மக்களின் துயரத்தை தொடர்ச்சியாக பலமடங்காக்குகின்றது. சுற்றிச் சுற்றி இந்த மக்கள் விரோத அரசியல் சாக்கடைக்குள் மக்களை ஆழ்த்தி, மனித துயரத்தை தக்கவைத்து பிழைப்பதே எதார்த்தமாகி, அதுவே அரசியலாகி விடுகின்றது. இதற்கு வெளியில் சிந்திக்கவும், மக்கள் தமக்காக தமது சொந்த விடுதலைக்காக போராடவும் வேண்டியுள்ளது. இதை மறுத்து நிற்கும் அனைத்தையும், அம்பலப்படுத்தி போராட வேண்டிய காலகட்டத்தில் தான், இந்த வன்னித் துயரம் மக்களின் தலைவிதியாக மக்கள் விரோதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.


பி.இரயாகரன்
31.07.2007


Friday, October 19, 2007

ஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும் ...

ழந்தமிழ் இலக்கியங்கள் பெண் வழிபாட்டின் பல்வேறு தகவல்களை விட்டுச் சென்றுள்ளது. பெண்ணே உலகத்தைப் படைத்தவள் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. "மோடு" என்பது வயிறு என்று பொருள். எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய்த் தெய்வம் மோடி என்றழைக்கப்பட்டாள்31 (பெரும்பாணாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை - 458), மேடடேந்தரிவை (இராவண காண்டம் - 106), பெருமோட்டுக்கிழதன் (தனிப்பாடல்), பெரு மோட்டாள் (தகடூர் யாத்திரை)22 என்ற பெண் தெய்வங்கள் ஆண் உறவின்றி கன்னியாகவே உலகத்தைப் படைத்தாள் என்ற கருத்து, பெண்தெய்வ வழிபாட்டின் மூலம், பெண்; தலைமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இதையே தாயுமானவர்,
"அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேபின்னையும் கன்னியென மறைபேசும்..."22- என்ற பாடலும் சரி, திருவாரூர் புராணம் "உலக முழுதீன்ற பெருங்கன்னி..."22 என்ற வரிகளும் சரி, "யமுனை, கங்கை, சரஸ்வதி, காவேரி போன்ற பெண்ணின் பெயரிலான ஆறுகளும் சரி, கடல்கொள் செல்வி (அகநானூறு-370) கானமர் செல்வி (அகநானூறு-345) காடமர் செல்வி (மணிமேகலை-6.53, 18.115) நீர் நிலக் கடவுள்.134 இதுபோன்ற பல பெண் தெய்வ வழிபாடுகள் இலக்கியச் சான்றாக எம்முன் எஞ்சிக் கிடக்கின்றது. காட்டை அடிப்படையாகக் கொண்டு "காடுகாள், கானமர் செல்வி, காடுகிழாள், காடமர் செல்வி"31 போன்ற பெண் தெய்வங்களை மக்கள் வழிபட்டனர். இங்கு காட்டின் செழிப்பை, காடமர் செல்வி என்று பெண்ணின் இளமைச் செழிப்பை அடிப்படையாகக் கொண்டு, பெண் தெய்வமாக வழிபட்டனர். இதை மாற்றிய ஆணாதிக்கம், பெண் தெய்வங்களை ஆண் தெய்வத்துக்கு அடிமைப்படுத்துவது அவசியமாகியது.

இந்து மதம் உயிரின் தோற்றத்தை "ஜீவாத்மா, அழியாத ஒன்று, கூடுவிட்டுப் பாய்வது ஆத்மா, அதனால் மனிதர்கள் பிறக்கின்றனர்"23 என்று விளக்கிச் சொல்லுகின்றது. இந்திய மதம் சார்ந்த தத்துவவியலில் உலகம் தோன்றியது பற்றி பால் சார்ந்து இரு விளக்கங்கள் இருக்கின்றது. உலகை ஜகன்மாதா பெற்று எடுத்ததாகவும், பிரமன் படைத்ததாகவும் உள்ள புனைவுகள் பெண்வழிச் சமூகம், ஆண் வழிச் சமூகத்தின் இரு வேறுபட்ட படைப்பு பற்றிய விளக்கங்கள் ஆகும்;. பார்ப்பனிய இந்து ஆதிக்கம் ஆண் வழிப்பட்ட போக்கில் பிரமனையும், சிறு வழிபாடுகள் தாய் வழிப்பட்ட போக்கில் ஜகன்மாதாவையும் குறிப்பிடுவதும், இன்று அவை ஆண்வழிப்பட்ட ஒற்றைப் போக்கில் மாறிச் செல்வதையும் நாம் காணமுடியும்.

உலகில் எந்த மதம் என்றாலும் விதிவிலக்கின்றி பெண்ணை ஆணுக்குக் கீழ் நிலையில் வைப்பதைத் தவிர்க்கவில்லை. மதங்களும், அதன் கோட்பாடுகளும் தனியுடைமை சமூகத்தின் பின்னால் உருவாக்கப்பட்டதால், ஒட்டுண்ணிகள் மதத்தை வைத்து வாழ இருக்கும் சமுதாயத்தைப் பிரதிபலிக்க வேண்டியிருந்தது. எதுவெல்லாம் எதார்த்தமாகச் சமுதாயத்தின் போக்காக இருந்ததோ, அதை எல்லாம் அதன் பிளவுகளில் நியாயப்படுத்த மதம் பின்நிற்கவில்லை. இதில் தமது நலனையடைய சீர்திருத்தத்தைத் தான் மதங்கள் செய்தன. இருந்த மனிதப் பிளவுகளைப் பண்பாட்டுக் கலாச்சார ரீதியில் இறுக்கி அதைக் கடவுளின் பெயரில் மனித மூளையில் அறையும் வேலைகளை மதம் வெற்றிகரமாகச் செய்து முடித்தது.

மனிதப் பிளவுகள் மனிதத் துன்பத்தின் ஆத்மா ஆகியது. இதனால் மனிதனின் அச்சம், கண்ணீர், இயலாமை, துயரங்களை வடிகால் இட்டு வளர்த்தெடுத்த மதமும், மதக் கோட்பாடுகளும் மனிதப் பிளவுகளைப் புறநிலையாக இட்டுக் காட்டின. இந்த வகையில் பெண்ணின் தாழ்ந்த நிலையை நியாயப்படுத்தின. இந்த வளர்ச்சி என்பது சமூகமயமாகியபோது அக்காலத்திய இலக்கியங்கள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது இருந்த ஆணாதிக்கச் சமூகத்தைச் சட்ட நெறி ஒழுங்குக்குள் நியாயப்படுத்தி, ஒழுக்கமாகப் புகட்டப்பட்டது. இதை மீறுவது மதக் குற்றமாகக் கடவுளின் பெயரில் அடக்குமுறைகள் பரிசாக வழங்கப்பட்டது. மத ஆதிக்கம் மூலம் நீடித்த சட்ட ஒழுங்குகள் பெண்ணை வீட்டு ஜென்மங்களாக, வளர்ப்பு நாய்களாக வாலாட்டக் கற்றுக் கொடுத்தது. இருந்தும் வீட்டு அதிகாரத்தையும் இழந்த பெண் பாலியலை வழங்கும் ஒரு இயந்திரமாக, குழந்தையை வளர்க்கும் இயந்திரமாக, ஆணுக்குச் சேவை செய்யும் வேலைக்காரியாக மதங்கள் புகழ்ந்து பெண்ணின் இழிவைப் புகழ்ச்சிக்குரியதாக மாற்றின. இதில் எந்த மதமும் விதிவிலக்கை வழங்கி விடவில்லை.

பெண் வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகத்தை உருவாக்கிய போது, பெண்வழிக் கடவுள்களுக்குக் கட்டாயமான திருமணத்தை ஆண் தெய்வங்களுக்குப் பார்ப்பனர்கள் செய்வித்தனர். அதேநேரம் பல மக்கள் கூட்டத்தில் இருந்த ஆண் தெய்வங்களை ஒரு ஆண் தெய்வமாகக் காட்டி, அவற்றுக்குப் பல பெயர்களைக் கொடுத்தனர். பல தெய்வங்களை ஒருதாரக் குடும்ப அமைப்பின் வடிவில் உறவினராக்கினர். இதுதான் இன்று உருவாகியுள்ள இந்துமதக் குடும்பத்தின் வடிவமாகும். இந்துக் குடும்பத்தில் பெண் தெய்வங்கள் தமது கடந்தகால மேன்மையை இழந்தன. இன்றும் இந்தியாவில் சில பாகங்களில் இந்துப் பெண் தெய்வ வழிபாட்டில் சில தேவதைகள் எஞ்சியுள்ளனர். "பிலிமாக்கா, புதுபுடிக்கி, தார்சி, டோய், கொல்ல, கடாபா, கங்காதிகாரா, ஒக்காலு, காங்கா, வறந்தி, வறல்லிகர், ஒக்கலிகா, வெறலவ, வெறாலெயா, இடிகா"11 போன்ற தேவதைகள், இந்தப் பார்ப்பன ஒருதார மணத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை. இன்றும் அவை, "பச்சைவாழி அம்மன், அங்காளம்மன், பொறையாத்தா, பொன்னியம்மன், கங்கையம்மன், பிடாரி, குடிதாங்கி அம்மன், திரௌபதி அம்மன், கீப்பாஞ்ச அம்மன்...."28 போன்ற பெண் தெய்வங்களாகக் கிராமப்புறத்தில் எஞ்சிக்கிடக்கின்றனர்.

இந்து சமயத்தில் பெரும்பாலும் எல்லாப் பெண் தெய்வங்களும் சுதந்திரமான வௌ;வேறு மக்கள் கூட்டத்தின் பெண் வழிக் கடவுளாக இருந்தவர்களே. ஆணாதிக்கம் பெண்களுக்கு மேல் திணித்த கட்டாயத் திருமணத்தையே கடவுளுக்கும் பொதுவாக்கினர். பார்ப்பனர்கள் தமது ஆண் வழிக் கடவுள் மற்றும், உருவான ஆணாதிக்கக் கடவுளர்களாகக் கட்டாயமான திருமணம் மற்றும் உறவு வழியூடாக இந்து மதத்தை ஆணாதிக்க ஒருதார மணவடிவில் உருவாக்கினர். அதேநேரம் திருமணம் புரியாத பெண் கடவுள்களை மோசமான தெய்வங்களாகக் காட்டி மாற்றியதுடன், அவைகளைக் கிராமப்புற எல்லைக்கு ஆணாதிக்கச் சமூகம் துரத்தியடித்தது. அதேநேரம் கிராமப்புறத் தெய்வங்கள் ஆண் பாதுகாப்பை உள்ளடக்கியதாக்கி, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் தெய்வங்களை அடிமையாக்கினர்.

அனைவருக்கும் தெரிந்த உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். சிவபெருமான் உமாதேவியாருக்கிடையில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அதில் முடிவின்றி நீடித்ததால், நாட்டியத்தை ஆடுகின்றனர். நாட்டியத்தைச் சிவபெருமான் தொடர முடியாததால் திடீரென ஒருகாலைப் பூமியிலும் மறுகாலை விண்ணிலும் வைத்து ஆடுகின்றார். இதில்தான் உமாதேவியார் காலைத் தூக்கி வைத்து ஆடுவது, பெண்ணின் ஒழுக்கமல்ல என்பதால் தோற்கின்றார். இங்கு ஏன் உமாதேவியார் காலைத் தூக்கிவைத்து ஆடமுடியாது என்ற கேள்விக்கு, ஆணாதிக்க அமைப்பு பெண்ணின் மீதான ஒழுக்கக் கோவையால் கட்டுப்படுத்துகின்றது. ஏன் சிவபெருமான் போட்டியைக் குழப்பி, அத்துமீறிக் காலை மேல் நோக்கி வைத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றார். இது அதர்மமான நடத்தையல்லவா?. ஒரே நிலையில் உமாதேவியரோடு போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில்தானே, அடுத்த கட்டத்தைச் சிவபெருமான் தொடங்குகின்றார். வென்றது உமாதேவியார் அல்லவா!. ஆணாதிக்க ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லவா, சிவபெருமானின் வெற்றி ஏற்கப் படுகின்றது. ஆனால், ஆணாதிக்க அமைப்பு உமாதேவியார் வெற்றியை மறுக்கின்றது. ஆணாதிக்க அமைப்பில் தோற்ற உமாதேவியாரின் ஆணவத்தை அடக்க, சிவன் பூலோகம் சென்று வாழ சாபம் இடுகின்றார். அப்போதும் உமாதேவியாரின் துணையாக முருகன் (மகன்) அனுப்பப் படுகின்றான்.

பெண் ஆணுக்கு அடங்கி பாதுகாப்புப் பெற்று வாழமுடியுமே ஒழிய, சுதந்திரமாக வாழும் உயிரல்ல என்பதைத்தான், ஆணாதிக்கக் கதை தனது சமூக இருப்பை நோக்கி புனைந்து காட்டுகின்றது.

ஆண் லிங்க வழிபாடுகள் எல்லாம் இதில் இருந்து உருவாகின்றது. உமாதேவியாரின் பெண் உறுப்பில் தாங்கி நிற்கும் லிங்கத்தை நோக்கிய வழிபாடு எல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தி, ஆணைத் தாங்கி வாழ வேண்டுகின்றது. இந்தியாவில் சில இடத்தில் காணப்படும் "குடிதாங்கி அம்மன்"28 பெண் உறுப்பால் ஆனவை. இது பெண் வழிபாட்டின் எச்சமாக இருக்கின்றது. இன்று அப்பெண் உறுப்பைப் பாவாடைகட்டி மறைக்கின்ற போதே, ஆணாதிக்கப் பண்பாட்டின் வெளிபாடாகின்றது. பின் அதற்கு ஆண் தெய்வக் கண்காணிப்பு என்று தொடரும் நடத்தைகள் எல்லாம், எப்படி ஆணாதிக்க மதமாகக் கடவுள்கள் சமுதாயத்தையொட்டி மாறிவந்ததைக் காட்டுகின்றது.

இந்து சமயத்தின் ஆதாரமான ரிக்வேதத்தில் பெண்ணைக் குறித்த ஆணாதிக்கம் "பிரகஸ்பதி உன்னை எனக்காகக் கொடுத்திருக்கின்றான்;. நீ, நான் ஆகின்ற கணவனோடுச் சேர்ந்து சந்தானவாதியாக இருப்பாய். ஒரு நூறு சம்போகத்தின் ஆயுளை அனுபவித்துக் கொண்டு என்னுடைய அடிமையாக இருப்பாய்"10 என்று பெண்ணின் அடிமைத்தனத்தை ரிக்வேதம் பறைசாற்றுகின்றது. இந்து மதத்தின் அடிப்படையில் அதன் பின்னால் உள்ளோரின் கோட்பாடுகள் இவைதான். மேலும் "திருமணத்திற்குப்பின் பெண் கணவனின் வீட்டிற்குச் செல்ல வேண்டியவள்"10 என ரிக்வேதம் கூறுகின்றது. பெண் வழிச் சமூகத்தை மறுத்து ஆண் வழிச் சமூகத்தை மதம் மூலம் இறுக்கும் ரிக்வேதம், தாய்வழி வீட்டில் இருந்து பெண்ணை அகற்றுவதைக் காட்டுகின்றது. இங்கு இந்த உபதேசங்கள் பெண்ணின் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. இந்த ரிக்வேதம் கி.மு 1200 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு, கி.மு 600 களில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பெண் வழிச் சமூகம் ஆணாதிக்கச் சமூகமாக வளர்ச்சி பெற்ற போராட்டத்தையே இந்த ரிக்வேதச் சுலோகங்கள் எமக்குக் காட்டுகின்றன.
பார்ப்பனிய இந்து மதம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பு சார்ந்து, கடவுளை அடைய உருவாக்கிய தானங்களில் பெண்ணும் உள்ளடங்கியிருந்தாள். பத்து வகையான தானங்களை சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் கொடுப்பதன் மூலம் மோட்சத்தை, புண்ணியத்தை, பண்பாட்டைப் பேணமுடியும் என்று கூர்மப்புராணம் கூறுகின்றது. "1.தங்கம், 2.குதிரை, 3.திலா, 4.நாகம், 5.அடிமைப் பெண், 6.இரதம், 7.நிலம், 8.வீடு, 9.மகள், 10.பசு"27 என்று கோருவதில், மகளும், அடிமைப் பெண்ணும் ஆணாதிக்கத் தேவையை அடிப்படையாகக் கொண்டே இந்துப் பார்ப்பனியம் தானமாக்கியது. இது நடைமுறையில் அமுலில் இருந்ததற்கு நாயன்மார் வரலாறுகளும், இந்துப் புராணங்களும் நிறையவே ஆதாரங்களைத் தருகின்றது. இன்றைய சடங்குகள் அதன் தொடர்ச்சியாக இருப்பது வேடிக்கையான நிகழ்ச்சிகள் அல்ல. திருமணத்தில் "கன்னிகாதானம்" கூட பார்ப்பனர்களின் உரிமை வழியாகத் தொடரும் ஒரு சடங்குதான்.

பெண்ணை அடிமையாகவே இந்து மதம் கருதுகின்றது. "உயர் சாதிப் பெண் கணவனிடம் நன்றியுள்ளவளாக இல்லாதிருந்தால் அவள் நாய்களால் விழுங்கப்பட வேண்டியவள் (நாய்க்கு உணவாக்கப்படுபவள்). அவளைச் சோரம் இழைத்தவன் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் கிடத்திக் கொல்லவேண்டும்"27 என்று மனுநீதி 374, 375 குறிப்பிடுகின்றது. அதேநேரம் கீழ்ச்சாதிப் பெண்ணைக் குறித்து மனுநீதி (11-178 இல்) "ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்துவிட்டால் அத்தகைய குழந்தை உயிரோடு இருந்தாலும் பிணம் போன்றதே" அத்துடன் அக்குழந்தை தந்தையின் சாதிக்கு ஏழு தலைமுறைக்குப் பின் உயர்த்தப்பட முடியும் என்ற மோசடியுடன் கூடிய சதி நிர்வாணமாகின்றது. இங்குச் சூத்திரப் பெண்களின் அடிமைத்தனம், வைப்பாட்டித்தனம், இணங்கிப் போகும் அடிமைத்தனத்தை இந்துமதம் ஆணாதிக்கம் சார்ந்து சமூகப் பண்பாக்கியது. இந்து மதம் பெண்கள் மேல் குறிப்பிட்ட சில வன்முறைகளைக் கையாண்டது.

தேவதாசி பிரதா என்ற சடங்கின் மூலம் கடவுளுக்குப் பெண்களைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம்;, கோயில் விபச்சாhரிகளை உருவாக்கியது.

சதிபிராரா என்ற சடங்கின் மூலம் கணவனின் சிதையில் பெண் ஏற வைக்கப்பட்டாள். பெண் மறுத்தபோது பலாத்காரமாகத் தள்ளி எரியூட்டினர்.
கங்கா பிரவர் என்ற சடங்கின் மூலம் குழந்தை இல்லாத பெண்கள் கங்கையில் நீராடியதுடன், முதல் குழந்தையைக் கங்கை நீருக்குப் பலிகொடுத்தனர்.

நரவதா என்ற சடங்கின் மூலம் ஒரு குழந்தையின் நலனுக்காக, ஏழைக் குழந்தைகள் அல்லது அநாதைக் குழந்தைகளைப் பிடித்து வந்து தேவதைக்குப் பலி கொடுத்தனர்.

கன்யவதா என்ற சடங்கில் இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யும் போது, உறவினர்க்கு முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பதால், இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைகளைக் கொன்றனர். இது போன்று காலத்தால் அழிந்தும், அழியாததுமான பல நூறு காட்டுமிராண்டிச் சடங்குகள், 2000 விரதங்கள், அது சார்ந்த தானங்கள் என நீண்டு, இந்துமதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

பெண்ணின் நிலை பற்றி, "சிவனும் சூரியனும் உன்னுடைய கரங்களைப் பிடித்திருக்கின்றனர். அதனால் நீ தர்மபூர்வமாக என் மனைவியாய் இருக்கின்றாய். நான் உன் கணவனாகவும் இருக்கின்றேன்;"10 என்பதன் மூலம் மதத்தின் பெயரில் இந்து மதம் பெண்ணை இழிவுக்குள்ளாக்குகின்றது. பெண் ஆணின் கரத்தைப் பிடித்திருக்கவில்லை, ஆணே பிடித்திருப்பதன் மூலம் பெண் ஓடிவிடாது சிறைப்பிடிப்பதையே காட்டுகின்றது.

இ;ன்று சிவசேனை முதல் இந்திய பாரதிய ஜனதாக் கட்சி ஈறாக இந்து மதச் சிவில் சட்டத்தை இந்து மக்கள் மீது திணித்து பாசிசக் காட்டுமிராண்டித்தனத்தை அமுல் செய்யத் துடிக்கின்றனர். இந்த இந்துச் சட்டம் என்பது பார்ப்பனியத்தின் ஆதாரமான மனுவின் சட்டமே. இந்த மனுவின் ஆணாதிக்கம் பெண்ணை அன்றில் இருந்து அடிமைப்படுத்தியதையும், இன்று இந்து இராஜ்ஜியத்தில் பெண்ணையும் அவள் வென்ற உரிமைகளையும் தாழ்த்தத் துடிக்கின்ற ஆணாதிக்கக் கோட்பாடுகளை மேலே ஆராய்ந்துள்ளேன், பார்க்க.

பெண்கள் குறித்து இந்து சமயத்தின் பல்வேறு இலக்கியங்கள், வரலாறுகள், மத ஆவணங்கள்.... எப்படி அடிமைப்படுத்தி இழிவுபடுத்தின என்பதைத் தொடர்ந்து ஆராய்வோம்.

ரிக்வேதம் 8.3.17 இல், "பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்"32 என்ற கூற்றின் பின் பெண்கள் பற்றிய ஆணாதிக்கத்தின் நிலை இன்றுவரை மாறிவிடவில்லை. பெண்கள் உறுதியற்றவர்கள், நேர்மையற்றவர்கள் என்ற பழிப்புரை ஆணாதிக்கத்தின் அதிகாரத் திமிராகும். பெண்களைச் சமூகத்தில் இருந்து நசுக்க, அவர்கள் சமூக இயக்கத்தில் பங்கு கொள்வதைத் தடுக்க இந்த நிபந்தனை அடிப்படையானதாகின்றது. பெண் படிப்படியாக ஆணாதிக்கப் பண்பாட்டு வடிவமாக மாற்றப்பட்டாள். தொடர்ந்து ரிக் வேதம் 10.95.10 இல், "பெண்கள் நட்பு நீடித்ததல்ல, அவர்கள் கழுதைப் புலியின் தன்மையுடையவர்கள்"32 என்ற கூற்று பெண்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியாத தனிமனித வாதங்களின் மையம் என்கிறது ரிக்வேதம். ஆண்களின் தனிச் சொத்துரிமையும், அதனால் ஏற்பட்ட தனிமையின் மையவாதத்தையும் திருப்பி பெண்கள் மீது அள்ளி வீசி விடுவதே இவை. அத்துடன் கழுதைப்புலி என்றதன் மூலம் ஆண்களைப் புலியாக உருவகமாக்கியதன் மூலம் பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். பெண்களின் ஒன்று சேர்ந்த செயல் மற்றும் அவர்களின் போராட்டம் போன்றவற்றை மறுக்க, அதை நட்புக்குப் பங்கமானதன் குறியீடாகவும், அதேநேரம் அவை கழுதைப்புலிக்கு ஒத்ததாகவும் காட்டிச் சிறுமைப்படுத்திய ஆணாதிக்கத்தின் கொச்சைத்தனங்கள்தான் இவை.

மேலும் ரிக்வேதத்தில் 4.17.16 இல், "இந்திரன், நாம் விரும்பும் மனைவிகளைக் கொடுப்பவன்," 5.31.3 இல், "இந்திரா! உன்னை விட மேலானவன் வேறு யாருமில்லை, ஏனெனில் மனைவியில்லாதவருக்கு மனைவிகளை - காதல் கிழத்திகளைத் தருகிறாய்"32 என்று இந்திரன் என்ற பார்ப்பானை வணங்கும் இந்த விதியில் பெண் ஒரு பொருளாக ஆண் இனம் காண்பதைக் காட்டுகின்றது. இந்து மதத்தில் பெண்ணைக் குறித்துக் காட்டும் பொருள் பற்றிய மதிப்பீட்டுக்கு எதிரான போராட்டமின்றி பெண் விடுதலையடைய முடியாது. பொருட்களைப்பற்றி மனித மதிப்பீட்டை மாற்றாது, பெண் என்ற பொருளைப் பற்றிய மனிதச் செயற்பாட்டையும் மாற்றமுடியாது.

அத்துடன் இந்துச் சூத்திரம் பெண்ணை ஆணின் போகத்துக்குரிய படைப்பாக இந்திரன் படைத்தான் என்று கூறுவதன் மூலம் பெண் பாலியல் பண்டமாகின்றாள். அத்துடன் யுத்தங்களில் வென்று வரும் வீரனுக்குப் பெண்கள் பரிசளிக்கப்பட்டதுடன், பெண்கள் பலாத்காரமாக அவர்களின் குடும்பத்தில் இருந்த மற்றைய பொருட்களுடன் சேர்த்து சூறையாடப்பட்டாள். இதற்கு வேதங்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. இங்கும் பெண் பண்டத்துடன் பண்டமாகக் கவரவும், கற்பழிக்கவும் இருந்த உரிமையை இந்து மதம் அங்கீகரித்தது. பெண் ஒரு உயிருள்ள மனுசி என்பதை மறுத்த இந்து ஆணாதிக்கம், பெண்களின் உணர்வுகளை என்றும் மதித்ததில்லை, மதிக்கப் போவதுமில்லை.

போர் வீரர்களின் வெற்றியைப் பறைசாற்ற ரிக்வேதத்தில் 8.48.88 இல், "ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்"32 என்று கூறும்போதே யுத்தத்தின் ஆர்வத்தை, கொடுமையை எமக்குக் காட்டுகின்றது. இன்று உலகு எங்கும் யுத்தத்தில் பெண்கள் சூறையாடப்படுவதும், யுத்தத்தின் முன்னும் பின்னும் பெண்களை ஆண்களுக்கு விநியோகிப்பதும் காணமுடிகின்றது. சிங்கள இனவெறி அரசு இனவாத இராணுவத்துக்கு எல்லைப்புற பெண்களையும், ஏழைப்பெண்களையும் விபச்சார வாடகைக் கூலிகளாக மாற்றிப் பணிபுரியவைத்ததை எல்லா எல்லைப் புறமும் காட்டுகின்றது.
யுத்தத்தில் பெண்கள் பகடைக்காயாகவும், அவள் சூறையாடப்படவும் கூடியநிலையில் தான் யுத்தத்தை ஒடுக்கும் வர்க்கம் கட்டியமைக்கின்றது. பெண்கள் யுத்தத்தில் ஊக்கத்தைக் கொடுக்க கூடிய பண்டமாகின்றனர். அதேநேரம் அப்பெண்களை ஆக்கிரமிப்பாளன் கற்பழிக்கும் உரிமையை வேறு சுவீகரித்துக் கொள்கின்றான். இதற்குப் பெண்கள் எதிர்ப்பது என்பது சமூகத்துக்கு எதிரான குற்றமாகக் காட்டப்பட்டது. பெண்களின் உணர்வுகள், உரிமைகளை ஒவ்வொரு யுத்த ஆக்கிரமிப்பும் மேலும் அடக்கியதாகவே வரலாறு காட்டுகின்றது. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் பெண்ணைச் சிலநேரத்தில் விடுவித்தும், சிலநேரத்தில் மோசமான அடக்குமுறையையும் கூட கையாண்டுள்ளது. விடுதலை என்பது அதன் இலட்சியத்தின் வழியில் மக்களின் அணிதிரட்டலுக்கு உட்பட்டதாக எல்லைப்படுத்தியது.

பெண்களை ஆண்களின் சொத்தாகக் கருதிய ஆணாதிக்க ரிக்வேதம் அதை எப்படி பெண்கள் மீது அடக்கி ஆண்டதுடன், அதை நாட்டின் பாதுகாப்புடன் உவமையாக்கினர் எனப் பார்ப்போம்;. ரிக்வேதம் 7.2.63 இல், "பொதுவான கணவன் ஒருவன் தன் காதல் கிழத்திகளை வைத்திருப்பதுபோல், தான் கைப்பற்றிய கோட்டைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்."32 இதேபோல் தர்மநீதி என்ற நூலை எழுதிய யக்ஞவல்கியர் பெண் பற்றிக் குறிப்பிடுவதைப் பார்ப்போம். "உடைமைகளில் ஒன்றான பெண்களை மனிதன் கொள்ள வேண்டும்;."32 "மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டுவைக்காதே"32 என்று பெண்ணை ஆணின் உடைமையாக்கி அதை நியாயப்படுத்திய அடக்குமுறையைக் காட்டுகின்றது. பொருள், கல்வி, பெண் வேறுபாடு இன்றி சொத்தாக மதிப்பிடும் தனிச்சொத்துரிமை பெண்ணை மனுசியாக மதித்ததில்லை. பெண் செல்வங்களில் ஒன்றாக மாற்றியதையும், அவள் ஆணின் தனிச் சொத்துரிமையின் ஒரு அங்கமாக இருக்க நிர்பந்தித்ததும், பெண்ணை அடக்கி ஆளாகக் கூடிய ஒரு வீட்டு நாயாக வளர்க்க ஆண் கற்றுக் கொள்ளும் உரிமையை நியாயப்படுத்துவதே, இந்து ஒழுக்கநூல்கள் மற்றும் மத நூல் விளக்கங்கள்.

இதை மேலும் ஆராய்வோம்;. பீஷ்மர், "வேத சாஸ்திரி கட்டளைப்படி புருஷர்கள் தங்கள் மனைவிகளை, பூர்வீகப் புண்ணியத்தினாலோ அல்லது தெய்வச் சங்கற்பத்தாலோ தானடைந்த பொருளாகவே கருத வேண்டும்."32 ஆண் அடையும் தனிச் சொத்துரிமையில் பெண் ஒரு அங்கம் தான் என்பதைத் தனிச் சொத்துரிமை வளர்ந்து வந்த காலத்தில் எடுத்தியம்பப்பட்டது. அத்துடன் பெண்ணைச் சமூகத்தின் முன்மாதிரியான மரியாதைக்குரியவளாகக் கருதிய சமூகத்தை மாற்ற இவ்விதிகள், கொள்கைகள், விளக்கங்கள் அவசியமாகியதை வேறு இது நிறுவுகின்றது. சமுதாயம் இதற்குப் புறம்பான வழியில் இருந்து வந்ததையும், இதற்குப் புறம்பான போராட்டத்தையும் கொண்டு இருந்த மனித வரலாற்றில் பெண் மீதான அடக்கமுறையைப் புராணங்கள் மூலம், மதம் மூலம் அடக்கி ஆண்ட வரலாற்றை இவை காட்டுகின்றன.

அத்துடன் பெண்ணின் இடத்தை அடையாளம் காட்டிய மதக் கோட்பாட்டாளர்கள், அவளுக்கான கடமையாக அடிமைவேலை, அதன் கடமை, சமூகத்தில் அவளின் நிலை பற்றி குறிப்பிடுவதைப் பார்ப்போம். அதர்வன வேதம் 14.1.52 இல், "மேலும் அவள் (கணவனால்) அவனுடைய போஷ்யா அல்லது அடிமை கீழ்ப்பட்டவள் என்று அழைக்கப்பட்டவள்."32 "உபநிடதத்தில் மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே, காமவேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள்."32 "மனிதன் தனக்கு உதவிக்காக நீண்ட நாள் கஷ்டப்பட்டான். கடைசியாகத் தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய, தனக்கு எல்லா இன்;பத்தையும் தரக்கூடிய ஒன்றை மனைவி என்ற உருவத்தில் பெற்றான்."32 பெண் போகத்தின் இடமாகவும், மனிதனுக்குப் படைக்கப்பட்ட பொருளாகவும் கருதும் பார்ப்பனிய இந்து தர்மம் பெண்ணை மனுசியாகவே மதிக்கவில்லை. ஆணின் உதவியாளாகப் பெண்ணை நிலைநிறுத்தி, ஆணின் கஷ்டத்தைப் போக்கும் ஒன்றாகவே மனைவி உருவத்தில் ஆண் பெற்றான் என்ற விளக்கம் ஆணின் மேன்மையைப் போற்றிப் பெண்ணைச் சிறுமைப்படுத்துகின்றது. ஏதோ ஆண்தான் சமூகத்தைக் கட்டியமைத்ததாகவும், பெண் அதற்கு இடையில் வந்து உதவியதாகவும் கூறுவதன் மூலம் பெண்ணின் உழைப்பு மற்றும் கண்டுபிடிப்பை மறுப்பதில்தான் ஆணாதிக்கம் தனது கிறுக்குத்தனத்தை நிறுவியது. பெண்ணை அடிமையாக விளக்கிய அதேநேரம், குழந்தை பெறும் இயந்திரமாக, அதிகாரபூர்வ மனைவியின் வேலைக்காரியாக, அதிகாரபூர்வமற்ற மனைவியாக்கப்பட்டாள். ஆணின் காமத்தைத் தணிக்கும் ஒரு ஊடகமாகவே கருதிய இந்துப் பார்ப்பனியம் பெண்ணின் காமத்தை இட்டும், அவர்களின் உணர்ச்சியையிட்டும் கவலைப்படவில்லை. மாறாகப் பெண்ணின் காம உணர்ச்சியை மறுத்து பெண்ணை மனரீதியாக மனநோயாளியாக்கினர். இந்த மனநோயாளர்களின் அத்து மீறல்களைத் தடுக்க பெண் மீதான இரும்புப் பிடியிலான ஆணாதிக்க ஒழுக்கம், சட்டம் பெண்ணைக் குதறியது. அத்துடன் பெண்ணைக் கொச்சைப்படுத்தியது. அதைப் பார்ப்போம்.

மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், "பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. - எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! - எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள். - நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்"32 என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக் கூறுகின்றது.

பெண்களின் பிறப்பை ஒரு கேவலமான படைப்பாகக் காட்டும் ஆணாதிக்கம் சமூகத்தின் அனைத்துக் கேடுகளுக்கும் பெண்ணைக் குற்றம் சாட்டுகின்றது. தனிச் சொத்துரிமை வடிவில் மனிதர்களின் வாழ்க்கையைத் தனிமனிதர்களின் நலனில் இருந்து சிலருக்காக மாற்றியபோதுதான் ஆணாதிக்கம் சமூகத்தின் கேடுகளுக்கான மூலமாகியது. பெண்களின் தாய்வழி உரிமையைத் தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியில் படிப்படியாகப் பறித்தெடுத்த ஆணாதிக்கம், பெண்ணை இழிநிலைக்குத் தள்ளியதுடன், அதை நிரந்தரமாக்கப் பெண்ணின் பிறப்பு முதல் அனைத்தையும் கேவலப்படுத்தியுள்ளது. பெண்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யாத ஆணாதிக்கத்தின் சுயத்திருப்தி போக்கால், பெண் அதிர்வுற்று அத்துமீறி பாலியல் பூர்த்தியை அடைய முயல்வதை ஆணாதிக்கம் கொடூரமான வகையில் இழிவுபடுத்தப் பின்நிற்கவில்லை.

அத்துடன் பலதாரமணத்தில் பெண்ணுக்கு இருந்த பாலியல் உரிமையைக் கட்டுப்படுத்த, பெண்ணின் பாலியல் உரிமையை ஒருதாரமணத்தில் நிலைநிறுத்த, பெண்ணின் பாலியல் நாட்டத்தை இழிவுபடுத்துகின்றது. ஆண்களின் அடங்காத பாலியல் வேட்கை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப எல்லையின் அத்துமீறும் ஆண் பலதாரமணத்தில் இருந்தபடியே, ஒருதார மணத்தைக் கடைபிடிக்க மறுப்பதாகப் பெண்கள் மீது குற்றம்சாட்டிக் கேவலப்படுத்துகின்றனர். அத்துடன் பெண்கள் பற்றி எவ்வளவு கேவலமாக உவமைப்படுத்தித் திட்டமுடியுமோ அந்தளவுக்கு ஆணாதிக்கம் பெண்ணை இழிவுசெய்கின்றது. மகாபாரதம் போன்ற இதிகாசக் கற்பனைக் கதைகள் மூலம் பெண்களை இழிவுபடுத்தும் பாதையை மீளக் கட்டியமைக்க முயலும் முயற்சியில் மதவாத அரசியல் அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அங்கு பெண்கள் பற்றிய பார்வை இதைவிட மேலான நிலையில் இருந்து விடப் போவதில்லை. பெண்பெற்ற உரிமைகளை இழப்பதற்கான பாதையில் இவை மீள் உருவாக்கம் பெறுகின்றன.

தொடர்ந்து மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39.8 இல், "அதாவது பெண்களின் அறிவு, கண்டு பிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது." 49.22 இல், "பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. 43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள்;. தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள். 43.24 இல், உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டு, முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள். 43.24 இல், அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். 43.24 இல், "ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்."32
பெண்ணை ஆண் தனது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய ஓர் இயந்திரமே என்று இந்துப் பார்ப்பனியம் கூறுகின்றது. இந்து தர்மம் தனது தர்மத்தில் பெண்ணை ஜடமாக அணுகுகின்றது. மற்ற மிருகத்தில் கருணை காட்டுவதுபோல் நடிக்கும் இந்து மதம், பெண்கள் விடயத்தில் கருணையைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாகப் பெண்ணை இயந்திரமான வேலைக்காரியாகக் காட்டுவதும், ஆணின் ஒருதலைப்பட்சமான பாலியல் இன்பத்துக்குப் பயன்படுத்தக்கூடிய உருவமாகக் காண்கின்றது. பெண்ணின் அறிவைத் தந்திரத்தின் சதியாகக் காண்பதும், அதன் மீதான ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆழமான தந்திரமாகக் காண்கின்றது.

வியட்நாம் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின்போது வியட்நாம் மக்களின் தந்திரமான யுத்தத்தைக் காட்டுமிராண்டித்தனமாகக் கண்டதுபோல், ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் எதிர்ப்பை ஆழமானதும் தந்திரமானதுமாகத் தூற்றுகின்றது. அத்துடன் அவளை வஞ்சகத்தின் வடிவமாகவும், பாலியலில் தான் விரும்பியவனைத் தவிர பிற ஆண்களுக்குச் சுதந்திரமாக விட்டுக் கொடுக்க மறுப்பதாகவும் தூற்றுகின்றது. தான் விரும்பியவனுடன் உடன் புணரவும், தேவையெனின் பிரிந்து செல்லவும் தயாரான ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம்தான் இன்றைய அடக்குமுறை ஆணாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டது. பெண் தான் நேசிப்பவனுடன் வாழவும், தேவையெனின் பிரிந்து சென்ற அன்றைய வரலாற்றினைக் காட்டும் இந்த அவதூற்று ஆதாரங்கள், பெண் கடந்த காலத்தில் பெண்ணுரிமையைப் பெற்று இருந்ததை நிறுவுகின்றது. இதன் மீதான அவதூறும், பெண்ணின் திருப்தி ஒரு ஆணிடம் சாத்தியமில்லை என்றதன் மூலம், பெண்ணைக் கொச்சைப்படுத்தி பெண்ணை விலங்கிட்ட ஆணாதிக்கமே, தான் ஒரு பெண்ணிடம் திருப்தியடையாது, பல பெண்களை நாடும் பலதார மணத்தை இன்றுவரை விட்டுக் கொடுத்துவிடவில்லை. பெண்ணிடம் எதுவும் இல்லை. அவர்களிடம் கருணையில்லை. அவர்களிடம் அன்பு வைத்தல் கூடாது என ஆண்களை எச்சரிக்கும் இந்து தர்மங்கள் அதை மீறுபவன் அழிந்து போவான் என்று சாபம் இட்டு, இதற்கு எதிராக ஆண்களை மிரட்டி, ஆணாதிக்கத்தைப் பணியவைத்து, நிறுவியது.

மனு இதை 9.15 இல், "எல்லா மனிதர்களும் கடவுளர்களாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள். பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து, மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களைச் சிருஷ்டி செய்தார். ஆகவே, பெண்கள் மனிதச் சமுதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களாதலால் அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும் இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்."32
எல்லோரும் மனிதர்களாக வாழவும், எல்லோரும் தமது தேவைக்கு ஏற்ப வாழ்வதையும் மறுத்த இந்து தர்மம் பெண்ணை இழிநிலைக்குத் தள்ளியதைப் புராணங்கள் மூலம் நியாயப்படுத்தினர். தேவர்கள் என்ற பார்ப்பனர்கள் சாதி வடிவத்தை உருவாக்கி, அதில் பெண்களை இழிநிலைக்குத் தள்ளிய, தனிச்சொத்துரிமையின் பிரதிநிதிகளான பார்ப்பனர்களின் கனவைப் பெண்களின் வீழ்ச்சியுடன் நிறைவாக்கப்பட்டது. பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்ததையும், அவர்கள் வீPழ்ச்சிக்காகப் பிறந்ததாகவும் பார்ப்பனியப் புளுகுகளுடன் ஆணாதிக்கம் நிறுவப்பட்டது. பெண்களின் வாழ்வு அந்தஸ்து பறிக்கப்பட்டதைப் புராண இலக்கியங்கள் ஒத்துக்கொள்வதை வேறு இது நிறுவுகின்றது. இந்த வீழ்ச்சிக்குப் பெண்கள் பலம் இல்லாதது தான் காரணம் என்று விளக்கம் கூறப்பட்டது.

மனிதனை மனிதன் சுரண்டி, உபரியை ஆண் திரட்டத் தொடங்கிய போது பெண் அங்கு பலவீனமான ஜீவன் ஆக்கப்பட்டாள். பெண்கள் வீட்டிலும் விவசாயத்திலும் தங்கியிருக்க, ஆண் பெண்ணை விட அதிக உணவாக இறைச்சியை உண்ணத் தொடங்கி, இறைச்சியை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கியதைத் தொடர்ந்து அவன் உயிர்கள் மீதான அழிப்புக் கண்ணோட்டத்தைப் பெற்றதுடன், பெண்ணைவிட அதிக பலம் பெற்றான். குரங்கு மனிதக் குரங்காகவும், பின்னால் மனிதனாகவும் மாறிவந்த காலக்கட்டத்தில், மனிதன் நிலையாக வாழத் தொடங்கும் முன்பு, நிலத்தில் வாழத் துவங்கியபோதே விலங்குகளுக்கு எதிரான தற்காப்பு யுத்தம் அடிப்படையான நிபந்தனையாக இருந்தது. இந்தத் தற்காப்பில் கொல்லப்பட்ட மிருகங்கள் மனிதனின் புதிய உணவாகின. இந்தத் தற்காப்பில் பலம் பெற்றபோது தாக்குதல் நிலைக்கு மாறி இறைச்சி பிரதான உணவாகியது.
பெண் குழந்தைகளின் தற்காப்பு கருதி, நிலையாகத் தங்கி, பாதுகாப்பை உறுதி செய்யாதபோது, பெண்கள் முக்கியமான திருப்பமாகத் தாவர உற்பத்தியைக் கண்டுபிடித்ததன் மூலம் தாவர உணவு உண்பதும் பிரதான வழக்குக்கு வந்தது. தற்காப்பு மாறி மிருக வேட்டையை உணவாகவும், பின்னால் வளர்ச்சிபெற்ற அழிப்புக் கண்ணோட்டமே மனிதர்கள் மீது உபரி அடிப்படையில் மேலும் வலு பெற்றபோது, அவன் பலசாலியாக நினைக்கத் தொடங்கிய அதேநேரம் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றி சீரழிந்தான். பெண்; அதிகளவு உணவு தாவரம் சார்ந்து இருந்;த அதேநேரம், விவசாய உற்பத்தி மற்றும் சிறு விலங்குக் குட்டிகளை வளர்த்தல் போன்றவற்றால் கருணையும், பரிவும் கொண்டவளாக இருந்தாள். இது ஆணின் அழிப்புக் கொள்கைக்கு எதிராக இருந்ததால், இதைப் பலவீனமாக ஆணாதிக்கம் விளக்கியது. இதன் தொடர்ச்சியில் உணவு வகையில் ஏற்பட்ட இரண்டு வேறுபாட்டால், உடல் பலத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நீண்ட பரிணாம வளர்ச்சியில் உடல் கூறுகளின் சில இயல்புகள் தீவிர மாற்றம் கண்டது. இதையே புராண இந்து தர்மம் பெண்ணின் பலவீனமாகக் கூறி அவளை வீழ்ச்சியின் மையமாக விளக்கியது.

இன்று உலகில் பலமான சமூகம் என்பது நவீன ஆயுதங்கள், தனிச் சொத்துரிமையின் பலம் (சொத்துள்ளவன்)ளூ அதிகாரத்தில் உள்ளவன் பலமானவனாக இருப்பதும், மக்கள் பலவீனமானவர்களாக இருப்பதும் பொதுவான மதிப்பீடாகும்;. இது நாட்டுக்கு நாடு கூட பொருந்தும். ஆனால், மக்கள் சக்தி அணிதிரண்டால் இந்த பலம் என்பது நொறுங்கி விடுவது எதார்த்தமாக உள்ளது. இதுதான் ஆண் பெண்ணுக்கிடையிலான நிலையும் கூட. ஆணாதிக்கம் பெண்ணைப் பலவீனமாகக் காட்டுவது என்பது தனது சமூக அதிகாரத்தில் இருந்துதானே ஒழிய மக்களின் பலத்தில் இருந்து அல்ல.

பெண்கள் மீதான பாலியல் கட்டுப்பாட்டை ஆண் தனக்குச் சார்பாக ஆணாதிக்கப் பலத்தில் இருந்து கையாளும்போது பெண் வஞ்சிக்கப் படுகின்றாள். வஞ்சிக்கப்பட்ட பெண் அந்த ஆணிடம் விசுவாசமாக நடக்க மறுத்து, தனது உணர்ச்சியைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்தால், ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, அதை அவளின் நிலையற்ற தன்மையின் பலவீனமாக இட்டுக்காட்டுகின்றது. அவள் பாலியலில் அடங்காப்பிடாரி என்ற கோட்பாட்டை ஆணாதிக்கச் சூறையாடலின் பின் ஜோடிக்கின்றது. அவள் ஆணாதிக்க அடக்குமுறையின் கீழ் ஒருவனின் மனைவியாக இருக்க மறுக்கும்போது, ஆசையும் நிலையற்ற பலவீனத்தின் வீழ்ச்சியையும் கொண்டவள், எனவே ஆண்கள் அவளைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆள வேண்டும் என புராணங்கள் சமூகத்துக்கு ஆலோசனை வழங்கி, அடக்கியது.
ஆணாதிக்கம் பல மனைவியைச் சட்டப்படியும், சட்டத்துக்குப் புறம்பாகவும் கொண்டு பலவீனமாக வாழ்ந்தபடி, ஒருதார மணத்தில் பலதார மணத்தை ஆண் தொடர்வதுடன், விபச்சாரத்தை ஆதாரமாகக் கொண்டு தன்னைப் பாதுகாத்து நிலைநிறுத்துகின்றது.. இதற்காக மதத்தின் பெயரிலும், சடங்கின் பெயரிலும், உரிமையின் பெயரிலும் பெண்களை இழிநிலைக்கு இட்டுச் சென்று ஆண் அனுபவிப்பதைப் பலமானதாக ஜோடித்தது. ஆண் பல பெண்ணுடனான பாலியல் உறவு கொள்ளும் நடத்தை பலமானதாகவும், பெண்ணின் பல ஆணுடனான நடத்தை பலவீனமானதாகவும் ஆணாதிக்கம் விளக்கம் கொடுத்து பெண்ணை நசுக்கியது. ஆண் - பெண்ணுக்கிடையில், ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான விளக்கத்தை ஒரே நடத்தையைக் கொண்டு விளக்கப்பட்டது. இதன் மூலம் ஆணின் நடத்தை சமூக அங்கீகாரத்துக்கும், பெண்ணின் நடத்தை சமூகத் தூற்றலுக்கும் உள்ளாகியது. இதன் மூலம் பெண்ணின் நடத்தை தடை செய்யப்பட்டது. ஆணின் நடத்தை நியாயப்படுத்தப்பட்டதுடன், இன்றுவரை இதுவே ஆண் - பெண் முரண்பாட்டின் எதிர்த் தன்மையில் பொதுப் போக்காகவுள்ளது. இதிலிருந்து எந்தச் சமூகமும், எந்த மதமும் விலகி நின்றுவிடவில்லை.

இதை மேலும் இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், "உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்."32 பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள், எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது. இது எதார்த்தத்தில் பெண்மீதான அடக்குமுறையாக உள்ளது. ஆணாதிக்கக் கூற்றுக்களின் பின்னால் இவை எல்லாம் ஆணின் பொதுப்போக்காக இருக்க, அதைப் பெண்ணுக்குப் பூச் சூட்டியது ஏன்? அதுதான் இந்தியப் பெண்கள் தலையில் பூச் சூட்டுகின்றனரோ? ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அதிகாரத்தில் பெண் நுழைவதைத் தடுக்கவும், அதை எதிர்த்துப் பெண் போராடுவதை முறியடிக்கவுமே இப்படி பெண்மீது ஜோடித்து அழகுகாட்டுகின்றனர்.
பெண்ணின் அவல நிலை கண்டு அதற்கு எதிராகப் போராட முயலும் ஆண்களைக் கட்டுப்படுத்த, பெண்ணின் குணம் பற்றிய விளக்கம் ஆணை மந்தையாக்குகின்றது. பெண் ஆணின் ஆணாதிக்கத்தின் மீது குற்றஞ்சாட்டும் போது அது கொடுமையானது என்று, ஆணாதிக்கப் பார்ப்பனியம் எதை எல்லாம் ஆணுக்கு நியாயப்படுத்தி பெண்ணுக்குக் கொடுமையாகக் காட்டியதோ, அதேவழியில் பெண்ணைக் கொடுமைக்காரியாக்கியது. பெண், குழந்தைக்குக் கொடுத்த பின்பே மிகுதியை உண்ணும் தாய்மை உணர்வை, தனக்கும் சேர்த்து கடமையாக்கிய ஆணாதிக்கம்தான், உள்ளமில்லாதவர்கள் என்று பெண்ணைக் குற்றம் சாட்டுகின்றது. தாய்மை உணர்வு குழந்தைக்குச் செய்த கடமைகளை, ஆணாதிக்கம் தனக்கு நிபந்தனையாக்கி, வீட்டு வேலைக்காரியாக்கிய பின்தான் உள்ளமில்லாதவள் என்கின்றது. பெண்ணின் இயற்கையான பாலியல் உணர்வும், குழந்தை பெறுவதையும் ஆணாதிக்கம் தனது உணர்வுக்கும், பொருளாதார நலனுக்கும் தீனிபோடும் பாலியல் ஊடகமாக்கியது. அத்துடன் ஆணின் தனிச் சொத்துரிமைக்கு வாரிசுகளைப் பெறும் பண்டமாக்கி, அவளை ஆணுக்குக் கடமை செய்யும் பெண்ணாக்கிய பின்பு, அவளைக் கருணையற்ற உள்ளமில்லாதவள் என்கின்றது. உண்மையில் கருணை பற்றியும், உள்ளம் பற்றியும் பேசும் அருகதை ஆணாதிக்கத்துக்கு இருக்கமுடியாது. இந்தக் கொடூரத்தைச் செய்த ஆணாதிக்கம், அதைப் பெண்ணுக்கு இல்லை என்பதுதான் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையின் சமூகப் பலமாகும்;. சமூகப் பலம் சொத்துரிமையின் வடிவில் எப்போதும் தீர்மானிக்கப்படுவதால் அதைப் பெற்றுள்ள ஆணாதிக்கப் பண்பாடு சமூகமயமாகியது.

பெண் ஆணாதிக்கத்துடன் முரண்பட்ட போராட்டத்தில் ஆணைவிட மேன்மையான பாத்திரத்தை, ஆணுக்கான கடமையில் வழங்குவதன் மூலம் பெண்ணைத் திருப்திப்படுத்தவும், ஆணின் நோக்கங்களை நிறைவு செய்வதும் அவசியமாக இருந்தது. ஆணாதிக்கம் பெண்ணைப் பாலியல் பண்டமாகவும் ஆணின் சுகத்தைப் பூர்த்தி செய்ய படைக்கப்பட்டதாகவும் புராண மற்றும் இந்து தர்மம் கூற்றுகளை நிறைவு செய்ய பெண்ணைப் புகழ்ந்தவற்றைப் பார்ப்போம். இராமாயணத்தின் பிந்தியகால விளக்கங்களில் "பெண்ணின் முகங்கள் பூக்களைப் போன்றவைகள். அவர்களின் மொழிகள் தேன் போன்றவைகள். அவர்கள் உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக்கூடியது. அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர் யாருமில்லை"32 என்ற விளக்கங்கள் ஆணாதிக்கத்தின் பாலியல் வெற்றியைப் பறைசாற்றுகின்றது.

பெண்ணின் முகம், மொழி ஆணாதிக்கப் பாலியல் கண்ணோட்டத்துக்கு இசைவாக உள்ள நிலையில் அதை ஆணாதிக்கம் புகழ்கின்றது. பாலியலில் ஈடுபடும் ஆணின் தேர்வுகள் இந்த எல்லைக்குள் அலைபாய்கின்றன. இந்த இரண்டும் இல்லை என்றால் அவளை அரக்கியாக வருணிக்கத் தொடங்குகின்றது. பெண் தனது உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கும்போது, அது ஆணின் கொடூரத்தை அம்பலப்படுத்தும் போது, ஆணின் கருணை உள்ளமில்லாத் தன்மை அம்பலப்படும்போது, அவை ஆணாதிக்கத்தின் நாற்றத்தால் அம்பலப்படும்போது, இதை அடிப்படையாகக் கொண்டு இழிவான நடத்தை கொண்டதாகக் குறிப்பிட்டுப் பெண்ணை ஆணாதிக்கம் வருணிக்கின்றது. இதனால்தான் பெண் கணவனையோ, ஆணையோ நிமிர்ந்து, எதிர்த்துப் பேசக் கூடாது என ஆணாதிக்க இந்து தர்மம் கோரி அமுல் செய்கின்றது.

இந்துப் பண்பாட்டில் உருவான ஆணாதிக்கம் பெண்ணிடம் இரகசியம் சொல்ல முடியாது என்கின்றது. ஏனெனின் அவள் பகிரங்கமாக்கி விடுவாள் என்று கூறும் நடைமுறையில் உள்ள பழமொழிகள், பண்பாடுகள் ஏன் ஏற்பட்டன எனக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். சமூக இயக்கத்தில் இருந்து பெண் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சொந்தக் குடும்பத்திலேயே ஆணுடன் பேச முடியாத சூழலில், சொந்த மொழியையே சில எல்லைக்குள் வைக்கும்படி ஆணாதிக்கம் மட்டுப்படுத்தியது. அவளின் தொடர்புகள் சுற்றுவட்டாரத்தில் அதேநிலையில் வாழும் பெண்ணாக இருப்பதால், அவளின் மொழி எல்லை குறுகிய நிலையில், அவர்கள் பேசிக்கொள்ள விடயங்கள் அற்ற நிலையில் பேசியே ஆக வேண்டிய துயரத்தால் பீடித்துப் போய் நிற்கின்றாள். இது மட்டுமே அவளின் துயரத்தைப் போக்கும் வடிகாலாக எஞ்சுகின்றது.

கணவனின் ஆணாதிக்கக் கொடூரத்தை வெளியில் சொல்ல முடியாத வழிபாட்டு, பண்பாட்டு அடக்குமுறை, இதனால் தனக்கு எதெல்லாம் தெரிந்ததோ அதை எல்லாம் கொட்டித் தீர்த்து, பரம இரகசியமாவது தவிர்க்க முடியாத எல்லையாக இருந்தது. பெண்ணின் மொழி இதற்கு அப்பால் விரியாத நிலையில், பெண்ணின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் பகிரக் கோருகின்றது. அத்துடன் அவள் பகிர்ந்துண்டு வாழ்ந்த வாழ்க்கை மனிதச் சமூகத்தில் ஆணாதிக்க வழி சுரண்டும் இரகசிய மொழியை இயல்பில் தன்னையறியாமலே மறுக்கின்றது. இது ஆணாதிக்க மட்டத்தில் மோதல்களையும், புகைச்சலையும் கொண்டுவருகின்றது. இதில் இருந்தே ஷஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று பெண்ணை இழிவுபடுத்துகின்றது ஆணாதிக்கம். பெண் பேசும் பொருட்களின் எல்லை சுருங்கி பெண்ணை அன்னியப்படுத்திய ஆணாதிக்கம், பெண்ணை மௌனிக்கக் கோரியது. பெண் தனது குறுகிய வட்டத்தில் பரம இரகசியமாகத் தெரிந்ததைப் பேசுவது மட்டுமே அவளின் மொழியைப் பாதுகாத்தது மட்டுமல்ல, அவளின் மொழி இதுவாகவே இருந்தது. மொழியின் வளர்ச்சி என்பது ஆணாதிக்கப் பொருட்களிலும், பெண்ணை அடிமைப் படுத்திய உழைப்பின் எல்லைக்குள்ளும், அதன் வர்க்கப் போராட்டத்துக் குள்ளும் கட்டியமைக்கப்படுகின்றது.

பெண்ணை இழிவுபடுத்துவது ஆணாதிக்கத்தின் பண்பாகியது. இதனால் உருவான இலக்கியம் ஆணாதிக்க ஒழுக்கத்தைப் பெண் மீது திணித்தது. பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், "ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்."32 இதையே சுக்ரன் "பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்."32 சுக்ரா 3.163 இல், "பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம், 4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்"32 என்று புராண இலக்கியங்கள் தனது ஆணாதிக்கப் பெண் மதிப்பீட்டை முன்வைத்தது மட்டுமின்றி, பெண் கொடுமைப்படுத்தப்பட்டாள். பெண் உண்மையில் ஒருவனை நேசிக்க முடியாதவள் என்று கூறி, பெண்ணை அடக்கி, ஆணாதிக்கம் கட்டுப்படுத்தியதை இது காட்டுகின்றது. இது அன்று ஆண் அடக்குமுறைக்குள் பெண் நேசிக்க மறுத்த போராட்டத்தைக் காட்டுகின்றது. பெண்வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகம் வளர்ச்சி பெற்றபோது பெண் தனது சுதந்திரத்தைத் தக்கவைத்த போராட்டத்தில் தனது உரிமையினை நிலை நாட்டியபோது அதைத் தூற்றி, ஆண்வழிச் சமூகத்தைப் பெண்ணடிமைத்தனம் மீது கட்டியமைத்ததைக் காட்டுகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் ஒருவனை மட்டும் நேசிக்கக் கற்றுக் கொண்டாள். ஆனால் ஆண் அதை எப்போதும் மறுத்தான்.

இந்த நேசிப்பு என்பது ஆணாதிக்கப் பாலியல் வேட்கையின் தற்காப்பில் பெண் ஒரு ஆணைத் தெரிவு செய்த நிகழ்வுளூ அதைத் தொடர்ந்து காதலிக்க தொடங்கிய வரலாற்றில், அக்காதல் ஒருதார மணத்தில் நிபந்தனையாக இருந்ததில்லை. மாறாக, பெண் ஆணைத் தெரிவு செய்து கூடி வாழ்வதும், விலகிச் செல்வதும் அவளின் சுதந்திரமாக இருந்தது. இந்தச் சுதந்திரம் மறுக்கப்பட்ட வளர்ச்சியின் நீட்சியில்தான் பெண் மீதான நேசமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ஆணாதிக்கம் குறிப்பிட்ட தனி ஒரு ஆணை நேசிக்க நிர்ப்பந்திக்கின்றது. அத்துடன் முன்னைய சமூகங்கள் பெண்வழிச் சமூகமாக இருந்ததால், ஆண்வழிச் சமூகம் தனக்குள் கட்டுப்படுத்த முயன்றபோது அதை எதிர்த்து பெண்வழிச் சமூகம் போராட நிர்ப்பந்தித்தது. இதனால் பெண்ணின் போராட்டத்தை மறுத்த ஆணாதிக்க ஒழுக்கவியல், பெண்ணைக் கொலைக்காரியாக்கிக் குற்றம் சாட்டுகின்றது.
பெண்வழி, ஆண்வழி உறவுமுறையால் அடக்கப்பட்டது இலகுவாக நடந்துவிடவில்லை. மாறாக, கடினமான போராட்டத்தைக் குடும்பத்துக்குள்ளும், வெளியிலும் பெண் நடத்தினாள். பெண்வழிச் சடங்குகள், கடமைகள், உரிமைகள் பறிக்கப்பட்டபோது, பெண் அதற்காக உயிரைக் கூட விட்டு உள்ளதை, அவளின் பழைய தொடர்ச்சியான சடங்குகள் காட்டுகின்றன. இதை மேலே விவாதித்துள்ளேன். பெண்ணின் குணமாகக் காட்டப்படுபவை ஆணின் தனிச்சொத்துரிமையின் பகைமையான பக்கங்கள் ஆகும்;. ஆணுடைய தனிச் சொத்துரிமையின் மூர்க்கமான போக்குகள் அம்பலப்படும்போது, அதைப் பெண்ணின் குணங்களாகக் காட்டுவது ஆணாதிக்கத்துக்கு அவசியமாகின்றது. தனிச் சொத்துரிமையைக் கைப்பற்ற பொய், அதன் மீதான நிலையின்மை, அதை அடைய வஞ்சகம், இதற்காக இயற்கையை அழித்து சூறையாடும் மூடத்தனம், இதற்காகப் பேராசை, நேர்மையற்ற உள்ளத்தைக் கொண்ட மாசு, மனிதனைச் சூறையாடுவதில் கொடுமை, இதை எல்லாம் அடைவதில் வெட்கமற்ற துடுக்குத்தனம் ஆகியவை ஆணாதிக்கத்தின் பொதுப்பண்பாகும்.

பெண் உழைப்பில் (குழந்தை வளர்ப்பு, வீட்டுவேலை...) நேர்மை, அதைச் செய்வதில் உறுதி, குழந்தைகளில் அன்புடன் கூடிய நேர்மை, அறிவில் சமூகப் (இயற்கை அறிவு) புத்திசாலித்தனம், பகிர்ந்து உண்ணல், இதைச் செய்வதில் மாசற்ற தன்மை, இதை அடைவதில் பரிவு, இதைச் சாதிப்பதில் சகிப்பு ஆகியவை பெண்ணின் பொதுப்பண்பாகும். இதுதான் மனிதப் பண்பாகும்;. பாலியல் நடத்தைகள் என அனைத்திலும் இந்த ஆணாதிக்க மதிப்பீட்டுக்கு எதிர்மறைத் தன்மை காணப்படுகின்றது. ஆணாதிக்கத்துக்கும் பெண்ணுக்கும் உள்ள பிளவால் இவை பொதுவாகப் பிளந்து போயுள்ளது. ஆணாதிக்கம் பெண் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஆணாதிக்க ஆணினுடையவை. இதைப் பெண்கள் மீது திணித்துப் பெண்ணை எப்படி அடக்கியது எனப் பார்ப்போம்.
அர்த்த சாத்திரம் 3-3-59 இல், "பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டில் மீது அடிகள் கொடுக்கலாம்;."32 இதை இராமாயணம் 25-17 இல், "ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம். சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் - அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கொன்று விடலாம். உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார். ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளைத் தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்."132
ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகள், அதனால் எழுந்த சமூக ஒழுக்கத்தை, வன்முறை மூலம் இந்து தர்மம் பெண்கள் மீது கட்டியமைக்கின்றது. பெண்கள் மீதான ஆணின் அதிகாரம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் என்பது ஆணாதிக்கம் பெண்ணை அடிக்கும் உரிமையை வழங்கியது. அத்துடன் சமூகத்துக்குத் தீங்கு என்ற கண்ணோட்டத்தில் பெண்கள் கொல்லப்பட்டனர். அதாவது ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தைத் தகர்த்து, கேள்விக்குள்ளாக்கும் பெண்கள் கொல்லப்பட்டனர். பார்ப்பனிய முட்டாள்த்தனம், மூடநம்பிக்கை, அடிமைப்படுத்துதல், அவதூறுகள், வன்முறை ஆகியவை மீது கேள்வி எழுப்பிய பெண்கள் கொல்லப்பட்டனர்.

இவை எல்லாம் உலகளாவிய சமூகத்திலும் பொதுவாக நடந்தவைதான். மதத்தின் ஆதிக்கம், அதன் அதிகாரச் செல்வாக்கு மனித ஒழுக்கத்தை ஒழுங்கமைத்து, கண்காணித்து, கட்டுப்படுத்தியது. பெண் பற்றிய ஆணாதிக்க வரையறைகள் மீறப்பட்டபோது அவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆணாதிக்கத்தால் கொல்லப்பட்டு, ஒழுக்கத்தை நிலைநாட்ட உதாரணம் காட்டும் பெண்களான தாடகை, மாதா வரலாறு முதலியவற்றை, அவர்கள் ஏன், எதற்காகக் கொல்லப்பட்டனர் என்பதை ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் போராட்ட வழியில் ஆராய வேண்டியுள்ளது. இது பற்றிய விபரம் முழுமையாக எடுக்க முடியாததால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்.

சமூகத்தில் ஆணாதிக்கம் கோலோச்ச, கோலோச்ச பெண்கள் மீதான வெறுப்பு அதிகரித்தது. ஆண் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பும், இலாபமும் உடையவனாக மாறியதால், அவன் சமூகத்தின் மேலான நபராக மதிக்கப்பட்டான். பெண்ணைச் சமூகத்தின் இழி பிறவியாகப் புராண இலக்கியங்கள் மக்களுக்குப் புகட்டின. ஆண் பரிசம் கொடுத்து பெண் பெற்ற முறைக்குப் பதில், பெண் சீதனம் கொடுக்கும் முறை பெண்ணைச் சுமையாக்கியது. சொத்துரிமை ஆணின் கையில் இருந்த நிலையில் மேலும் சீதனமூடாக அவளது சொத்தைத் தனதாக்கும் கண்ணோட்டத்தில், சீதனம் கொடுப்பது பெண் மீதான சுமையாக மாறியது. எனவே, சொத்தற்ற பெண் சீதனம் கொடுக்க சொந்தக் குடும்பத்தில் ஆணைச் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒழுக்கமாக மாறியது. இதனால் பெண்ணின் வாழ்வு மேலும் இழிநிலைக்குத் தரம்தாழ்ந்தது. பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு ஆண்களிடத்தில் உருவானது. இது குறித்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சொத்தை ஆணின் சொத்து கவர்ந்தது. பெரிய மூலதனம் சிறிய மூலதனத்தை விழுங்குவது போல், எஞ்சியிருந்த பெண்ணின் சொத்தையும், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சொத்தையும் சீதனம் சூறையாடியது. இதனால் பெண்குழந்தை மீதான ஆணின் வெறுப்பை, ஆணாதிக்கப் புராண இதிகாச ஒழுக்கங்கள் விளக்கம் கொடுத்து சமுதாயமயமாக்கியது.

அதர்வண வேதத்தில் 6-2-3 இல், "குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை. பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும் இங்கே ஆண் மகவு பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்."32 காதபாசன் ஹிதா 27ஏ யில், "பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்"32 என்று சொத்துரிமை பறிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்திய ஆணாதிக்க விளக்கத்தினூடாக வெறுக்கப்பட்டாள். ஆண் குழந்தை வேண்டி வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தை பெற்ற தாய், குழந்தைப் பேறு இல்லாத பெண் சமூகத்தால் தூற்றுதலுக்கு உள்ளாக்கப்பட்டாள். ஆணாதிக்கம் இதற்காகப் பெண்ணைத் துன்புறுத்தியது. அடிப்படையில் ஆண் சார்ந்த வாரிசுக் கண்ணோட்டமும், பெண்ணின் சொத்திழப்புமே ஆணாதிக்கம் கோலோச்சியதற்கான அடிப்படையாகும்.

இது இன்று எப்படி பொதுவாகச் சொத்துடைய வர்க்கம் மற்றைய வர்க்கத்தைச் சுரண்டி, அதையே ஜனநாயகமாகக் கையாண்டு கேவலப்படுத்தி, அடிமைப்படுத்துகின்றதோ அந்தளவுக்கு நிகரானது. இன்று பெண் குழந்தை பற்றிய இந்து - இந்தியச் சமூகத்தில் காணப்படும் கண்ணோட்டம் இந்த வரலாற்று வழி உருவாக்கப்பட்டவையே. இவை நவீனப்பட்டபோது நாகரிகமாக, பெண்ணின் பூர்சுவா சுதந்திரக் கோரிக்கையின் பின், பெண் குழந்தையைக் கருவிலேயே கொலை செய்வதும் சரி, இதற்கு வசதியற்றவர்கள் பெண் சிசுவைப் பிறந்தபின் கொல்வதும் சரி பிறந்த பின் பெண் குழந்தையை வேண்டாவெறுப்பாக வளர்ப்பது, திட்டுவது, புறக்கணிப்பது, ஒதுக்குவது, சொந்தக் குடும்பத்திலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது எல்லாம் பழைய ஆணாதிக்க இந்து தர்ம ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பட்டவைதான். பெண் கரு அழிப்பு, குழந்தைக் கொலை, பெண்ணின் ஒதுக்கப்பட்ட வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஆதாரமான ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது என்பது இந்து தர்மத்தைத் தகர்ப்பதால் மட்டுமே வெற்றிபெற முடியும். இது அனைத்துப் பிரிவு மக்கள் ஒற்றுமைக்கும் அதாவது சர்வதேச ஆணாதிக்க ஒழிப்புக்கும் முன்நிபந்தனையும் ஆகும். அந்தளவுக்கு இந்து தர்மம் மனித ஒழுக்கத்தைக் கட்டிப்போட்டு ஆணாதிக்க வக்கிரத்தைப் பெண்கள் மீது திணிக்கின்றது.

ஆணாதிக்கச் சுரண்டல் யுத்தங்களில் பெண்களை அபகரித்துக் கொண்டுவந்த போதும் சரி, ஆணாதிக்கத் திருமண எல்லைக்குள் பெண்ணை வன்முறையாகச் சூறையாடிய போதும் சரி, பெண்களின் பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கும் தண்டனையாகவே பெண்களைக் கொடுமைப் படுத்தியது. ரிக் வேதத்தில், "யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ அல்லது விவாகச் சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டுச் சாமான்களைப் போலவே நடத்தவேண்டும்."32 ஆணாதிக்க ஒழுக்க மீறலை வெளியில் உள்ள ஆண்கள் அவள் மீது நிகழ்த்தும் போது, பெண்ணின் வாழ்வை மேலும் சீரழிவாக்கி, சித்திரவதைப்படுத்திக் கொடுமைப்படுத்தியது. குற்றவாளியாக ஆணாதிக்க ஆண் இருக்கும் நிலையில், பெண்ணுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்பெண் இருந்த பண்ட மதிப்பில் மேலும் தரம் தாழ்த்தி, சமூக அந்தஸ்து மேலும் குறைக்கப்பட்டு சமூகத்தின் கறையாக்கப்பட்டாள். அவளைச் சமூகத்தில் யாரும் விரும்பியதுபோல் கண்காணிக்கவும், வேலை வாங்கவும், சிறந்த பாலியல் சரக்காகவும், அடிமட்ட வேலைக்காரியாகவும் அப்பெண்களைக் கண்காணித்து, சமூக ஒழுக்கத்தை வரையறுத்து, சித்ரவதை செய்தே சுரண்டியது. இதன் போக்குகள் இன்றுவரைகூட எதார்த்தத்தில் உள்ளதைக் காணமுடிகின்றது.
நீதியின் ஒழுக்கத்தில் சிறந்த கதாநாயகர்கள் ஆக்கி மக்களுக்கு ஒழுங்கமைத்த பாண்டவர் கதையில், பஞ்சபாண்டவர்கள் தமது மனைவியைச் (இங்கு திரௌபதி ஐவருக்குப் பொது மனைவியைக் கூட) சூதாட்டத்தில் பணயமாக வைத்தபோது பெண்ணை ஒரு பொருளாக, சரக்காகத் தரம் தாழ்த்தப்பட்டதையே காட்டுகின்றது. இதுபோல் இராமாயணத்தில் இராமன் பரதனுக்குத் தான் வகிக்கும் பதவி, மனைவி என அனைத்தையும் கொடுத்தபோது, இங்கும் பெண்ணை எப்படி இந்து தர்மம் சரக்காக்கிக் கைமாற்றியதைக் காட்டுகின்றது. இதை வால்மீகி இராமாயணம் 2-19-14 இல், தெளிவாகவே உணர்த்தி விடுகின்றது.

இதை ஒத்த ஒன்றை ரிக்வேதம் 40-31-24 இல் பார்ப்போம். "ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டுப் பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, பிரியமாயிருப்பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும், சிறந்த ஊழியராகவும் இருப்பதனால்தான் சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில், மற்றவர்கள் தங்கள் கைகளைத் தனது மனைவி மீது போடுகின்றனர் என்று வேறு கூறுகின்றார்."32 பெண் மிக மோசமாக நடத்தப்பட்டாள். பெண்ணை ஆண் சூதாட்டத்தில் வைக்கத் தடையாக இருப்பது அவளின் அழகு (பாலியல் கவர்ச்சி), அவளின் அன்பு (ஆணின் பாலியலைப் பூர்த்தி செய்யும் சரக்கு), தோழமை (ஆணின் சொத்து), கடமை தவறாத வேலைக்காரி என்ற ஆணின் நலன் சார்ந்த இலாபம்தான். இவைதான் பெண்ணைச் சூதாட்டத்தில் வைப்பதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகின்றன.

சூதாட்டத்தில் அவனின் பொருள் சார்ந்த சூறையாடும் கவனம் பெண்ணின் உரிமையைப் பணயம் வைக்கின்றது. அதாவது, மற்ற சூதாட்ட ஆண்களின் ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தில் பெண் மீதான கவனத்தைத் திருப்பவும், பெண் மீது கைபோடவும் அனுமதித்து. ஆண் சூதாட்டத்தில் வெற்றியைச் சாதிக்க முனைவதன் மூலம், பெண் பணம் திரட்டும் சரக்காகின்றாள். இதனால் ஆணாதிக்கப் பார்வையில் அழகான பெண்ணின் பாத்திரம், ஆணின் பொருள் ஈட்டவும் ஓர் ஊடகமாக இருக்கின்றது. இன்றுவரை அனைத்து சூதாட்டம் மற்றும் இது போன்றவற்றில், குறிப்பாக ஆணாதிக்க உற்பத்திகளை மக்களின் தலையில் கட்டிவிட, அழகான பெண்மீதான பார்வை மற்றும் அவளின் பாலியல் உடல், அங்ககச் செயல்கள் மீது திருப்பியே மனிதச் சமூகத்தை அடிமைப்படுத்தவும், சுரண்டவும் முடிகின்றது. இதற்கு வெளியில் இந்த முதலாளித்துவச் சந்தைப்படுத்தல் சாத்தியமில்லை.

ஆணாதிக்கம் தகர்கின்றபோது இந்தச் சுரண்டல் அமைப்பும் தகர்ந்து போகும்;. சந்தையே ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைக் கைவிட்டால் சுரண்டுவதைக் கைவிட்டதாக அர்த்தம். எனவே, முதலாளித்துவச் சந்தைப்படுத்தலைத் தகர்க்காமல் பெண் பாலியல் ரீதியில் விளம்பரம் செய்யப்படுவதைத் தடுக்கமுடியாது. ஒன்றுடன் ஒன்று கலந்துறவாடும் இந்த ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையின் நோக்கில், வேறுபட்ட பொருளாதாரச் சமுதாயப் பண்பாட்டிலும் காலத்தைத் தாண்டி, ஒரே போக்கில், ஒரே நிலையில், ஒரே நோக்கத்துக்காகப் பெண்ணை அழகுபடுத்துவது முதல் அனைத்தையும் பயன்படுத்தியது. இங்கு பெண் உடலியல் கூறுகளிலும் சரி, சிந்தனையிலும் சரி, செயலாற்றுவதிலும் சரி இந்த ஆணாதிக்க அமைப்புக்கு வெளியில் சுதந்திரமாக இயங்க முடியாது.
பெண், ஆணின் ஆணாதிக்கச் சரக்குப் பண்டமாக இச்சமூகத்தில் இயங்குகின்ற ஓர் இயந்திரம் மட்டுமே. பெண் அன்றும் ஆணின் சொத்துதான். இதற்குப் பொருத்தமாகச் சத்தியத்தின் நாயகனான அரிச்சந்திரன் தான்பெற்ற கடனுக்காகத் தனது மனைவியை விற்கின்றான். மனைவி ஆணை விற்க முடியுமா என்றால் இல்லை. மனைவியைச் சத்தியத்தின் நாயகன் விற்றால் அதில் சத்தியம் இருப்பதில்லை ஆணின் தனிப்பட்ட சொத்தாகின்றது. பொருளைச் சூறையாடுவது, பறிப்பது, சுரண்டுவது, சொத்து சேர்ப்பது போன்றன இச்சத்தியத்தின் குறிக்கோளில் அடங்கும். அந்தவகையில் பெண்ணை விற்பது, வாங்குவது, பண்டமாகச் சந்தையில் விடுவது என எதையும் செய்யக் கூடிய நிலை என்பது ஆணாதிக்கச் சத்தியத்துக்குப் புறம்பானவையல்ல.

பெண் பொருளியல் பண்டம்தான் என்பதை அன்று முதல் இன்று வரை ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை நியாயப்படுத்தி, அமுல் செய்து வருகின்றது. அரிச்சந்திர மயானகாண்டம் எந்தக் கட்டத்திலும் சந்திரமதியை விற்றதைக் கண்டிக்கவில்லை. அதற்காகக் கேட்போர் கூட்டங்களில் சோகத்தை, கண்ணீரை வரவழைக்கவில்லை. மாறாக, இடையில் பறையனாகிய நிகழ்வை மட்டுமே சோகமாகக் கருதியது. வாழ்க்கை முழுவதையும் பார்ப்பனியம் கேவலப்படுத்தியுள்ள பறையனான அந்த மக்களை இட்டு ஒருக்காலும் கண்ணீர் வடித்ததில்லை. சத்தியம், ஜனநாயகம் என்பன ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையில் ஏற்படும் பாதிப்புகள் மீதே கோரப்பட்டன. இவைதான் எல்லா மார்க்சிய எதிர்ப்பு, ஆணாதிக்கக் கோட்பாட்டாளர்களின் சத்தியமாகவும், நீதியாகவும், ஜனநாயகமாகவும் உள்ளது. இது இன்றுவரை எதார்த்தமாகவும், வக்கிரமாகவும் உள்ளது.
இந்த இந்துப் புராணங்கள் இன்று மீண்டும் முன்னணிக்குக் கொண்டுவரப்படும் நிலையில், இராமனின் ஆணாதிக்கக் கற்பு நோக்கு சீதையை இழிவுபடுத்திய வக்கிரத்தைப் பார்ப்போம். ஒரு வண்ணான் சந்தேகப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இறை அவதாரமாகக் கருதப்படும் இந்து நாயகன் இராமன், தனது மனைவி சீதையை, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போதும் காட்டுக்குத் துரத்திவிட்டான். பெண்கள் தம் மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தை, சாதியச் சமூகத்தில் இழிவாக்கப்பட்ட சாதி, ஆண்களுக்கு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது சாதிப் பிளவைத் தாண்டி அடிநிலைச் சாதி ஆண்கள், உயர்சாதிப் பெண்களின் ஒழுக்கத்தின் மீது கேள்வி எழுப்பவும் கண்காணிக்கவும் உரிமை பெற்று இருப்பதை இது நிறுவுகின்றது. வண்ணானின் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, இராமன் சீதை மீதான சந்தேகத்தைக் கொண்டு தண்டிக்கும் உரிமையை விளக்கமின்றி அமுல்படுத்த ஆணாதிக்க ஒழுக்கம் கோரியது, கோருகின்றது. இறை அவதாரம் பெற்ற இராமனாகப் புராணங்கள் புளுகிய போதும், இராவணன் இடம் இருந்து சீதையை மீட்டபோது, (முரண்பட்ட பல வரலாற்றுக் கதைகள் இருந்தபோதும்) சீதை தனது கற்பை நிலை நாட்ட தீ மிதித்து ஆணாதிக்க ஒழுக்கத்தை நிறுவ வேண்டி ஏற்பட்டது.

இன்று இராமன் பெயரில் நிகழும் படுகொலைகள், கற்பழிப்புகள்.... பின்னாலான ஆணாதிக்க ஒழுக்கத்தை, அன்றே சொந்த மனைவி மீது நடத்தப்பட்டதை, கற்பின் ஒழுக்கத்தின் பின் நியாயப்படுத்தப்பட்டது. இறைவன் என்று கூறப்படும் பார்ப்பனிய இந்துக் கடவுளான இராமன் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், சந்தேகத்தின் ஜென்மமாகவும் இருப்பதை, பெண்ணை நாயைப்போல் போடுதடியாக நடத்துவதை எப்படி ஜனநாயகவாதிகள் ஏற்றுக் கொள்ளமுடியும்;. இராம ஜென்ம பூமி சார்ந்த இந்து மதப் பார்ப்பன ஆட்சியாளர்களின் அதிகாரத்தில், இந்துச் சட்டக் கோவை உருவாக்கப்படின் பெண் பெற்று இருந்த உரிமைகள் எல்லாம் இராமன் பெயரால் அடக்கப்படும் என்பது தெட்டத்தெளிவானது.
பஞ்சபாண்டவர்களின் ஒரே மனைவியான திரௌபதி தனது ஐந்து புருசனுக்கு வெளியில் இன்னுமொரு ஆணை விரும்புவதாகக் கூறியபோது, இதை ஆணாதிக்கம் தமது விபச்சார நிலையில் நியாயப்படுத்தியது. இன்று பெண்ணியம் பேசும் ஆணாதிக்கப் பெண்ணியவாதிகள் பலதாரமுறையைத் தாமே எடுத்து நியாயப்படுத்துவதும், வாழ்வதும் இதன் போக்கில்தான். அதாவது சமுதாயத்தில் இருக்கக் கூடிய ஆணாதிக்கப் பலதாரமுறையை இப்பெண்ணியவாதிகள் தமக்கும் விரிவுபடுத்தும் பண்பாட்டில் ஆணாதிக்கமயமாகின்றனர்.

வரைமுறையற்ற ஆணாதிக்கப் புணர்ச்சியை ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் உண்டு என்ற கோரிக்கையின் பின், இது இன்று ஏகாதிபத்தியப் பண்பாடாகின்றது. அதாவது எல்லைகடந்த ஏகாதிபத்தியத் தலையீடு, கைப்பற்றல், அனுபவித்தலையே பெண் - ஆண் மீது செய்யும் ஆணாதிக்க உரிமை ஏகாதிபத்தியப் பெண்ணியமாகின்றது. இந்த வகையில் பெண் குடித்தல், புகைத்தல், பலதார விபச்சாரம் போன்ற ஆணாதிக்கக் கேடுகளில் இருந்து இரவல் வாங்கி உரிமையாகின்றாள். இதுபோன்ற கோரிக்கைகள் ஆணாதிக்கம் தனக்காக வைத்து இருப்பதும், நியாயப் படுத்துவதும், பெண்ணின் ஜனநாயகக் கோரிக்கையாகி விடுவதில்லை. மாறாக ஆணாதிக்கமயமாதலாகும். ஆணின் மனித விரோதச் செயல்களைப் பெண் இரவல் வாங்க முன்வைக்கும் பெண்ணியம் ஆணாதிக்கமாகும்;. இதற்கு எதிராக ஆணாதிக்க ஒழுக்கக் கேடுகளை எதிர்த்து பெண் போராட வேண்டுமே ஒழிய அதைக் கோரி போராடுவது கூடாது.

பெண்ணின் கற்பைப் போற்றும் இந்து தர்மக் கதைகளை ஒட்டி கண்ணகி பாண்டிய மன்னனிடம் கூறியவற்றைப் பார்ப்போம்.

1. காட்டுக்குச் சென்ற அழகிய பெண்ணை ஒருவன் உடலுறவு கொள்கின்றான். பின்னால் அந்த ஆண் அப்பெண்ணைத் தெரியாது என மறுக்கின்றான். பின்னால் இறைவனை வேண்டியபோது அவள் உறவு செய்த குடிசையும், அருகில் இருந்த மரமும் சாட்சி சொன்ன பின்பே அவளை அவன் ஏற்றுக்கொள்கின்றான். இதனால் இவள் பத்தினி.

2. இரண்டு பெண்கள் ஆற்றங்கரையில் மண் பொம்மை செய்து விளையாடினர். ஒரு பெண்ணைப் பார்த்து, மணற் பொம்மையை அவள் கணவன் என்று மற்ற பெண் கூறியதால், அப்பொம்மையை வெள்ளம் அடிக்காது பாதுகாத்தாள். எனவே அவள் பத்தினி.

3. கரிகாலச் சோழனுடைய மகளின் புருஷனை ஆற்றுவெள்ளம் அடித்துச் செல்ல, அவள் கடலிடம் முறையிட்டுத் திருப்பி பெற்றாள் என்பதால் பத்தினியாகின்றாள்.

4. பெண் ஒருத்தியைக் கணவன் விட்டுச் சென்ற நிலையில் கல்லாகி கடற்கரையில் கணவனைப் பார்த்து கிடந்தாள். கணவன் வந்தவுடன் மீள உருவம் பெற்று வீடு வந்தாள். எனவே இவள் கற்புள்ள பத்தினியாகின்றாள்.

5. பெண் ஒருத்தியை ஆண் விட்டுச் சென்ற நிலையில், வேறு ஒருவன் அவளை உற்றுப் பார்த்ததால், அவள் தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிக் கொண்டு வாழ்ந்தாள். கணவன் வந்த பின் அவள் பழையபடி மாறியதால் கற்புள்ள பத்தினியாகின்றாள்.

6. ஒருத்தியின் மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழுந்துவிட, தன் குழந்தையையும் கிணற்றில் போட்டு, பின் வெளிவர வேண்டிப் பெற்றதால் இவள் கற்புள்ள பத்தினியாகின்றாள்.

7. இரண்டு தோழிகள் விளையாடும்போது, நீ மகளும் நான் மகனும் பெற்றால் அவர்கள் இருவரும் கணவனும் மனைவியாக இருப்பர் எனக்கூறி விளையாடினராம்;. இதைப் பின் அப்பெண் தனது மகளிடம் கூற அவள் தோழியின் மகனுக்கு மனைவியானதால் கற்புள்ள பத்தினியாகின்றாள்.கற்பு பற்றி இந்த ஆணாதிக்கக் கூற்றுகளைக் கூறிய கண்ணகி, பாண்டியனை அழிக்கின்றாள். இவைகள் எதை எமக்கு விளக்குகின்றன. பெண் மீதான அன்றைய ஆணாதிக்கக் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகின்றன. இன்று இதன் போக்குகள் சில வேறுபாட்டுடன் இருப்பது காணமுடியும்.
இன்று ஒரு பெண்ணின் நம்பிக்கையை, காதலைப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி பின் கைவிடுவது எதார்த்தமாக உள்ளது. பெண் காதல் செய்யும்போது தற்காப்பு நிலையிலும், ஆண் தாக்குதல் நிலையிலும் எப்போதும் அணுகுகின்றனர். பெண்கள் மீதான ஆணின் பாலியல் நடத்தைகள் பெண்ணை அனுபவித்தபின் துப்பிவிடத் தயாரான தன்மையில் இருப்பதைப் பொதுவாகக் காணமுடியும். கருத்தரிப்பு ஏற்படாதவரை, இவை பகிரங்கமாகச் சமூகத்துக்குத் தெரியவராத வரை, இந்த உறவு சுதந்திரமாக நீடிக்கின்றது. கருத்தரிப்பு ஆணின் மறுப்புக்குச் சமுதாய அடையாளமாகின்றது. அதுவரை சுதந்திரமான காதல் என்பது, பாலியல் அனுபவிப்புவரை எல்லைப்படுகின்றது. இன்று கருஅழிப்பு என்பது இதனால் பெருகுவதும், ஆண் - பெண்ணை ஏமாற்றுவதும் காணமுடியும். பின்னால் ஏமாற்றியவனையே கட்டாயத்தின் பேரில் கட்டிவைப்பதும் நிகழ்வாக உள்ளது. இதுதான் கற்பழிப்புகளின் மீதான பொது வடிவமாக உள்ளது. இது மட்டும்தான் அப்பெண்ணின் நிம்மதியான சமூக அங்கீகாரமாகவும், திருமணமாகவும் இருக்கின்றது.

புராணங்கள் ஊடாகக் கற்பு பற்றிய ஆணாதிக்க ஒழுக்கவியல் கோட்பாடுகள் நடைமுறை வடிவமாக வரும்போது, மணற் பொம்மைகளும், நினைவுகளும் நிறைவேறாத கற்பனை வாழ்க்கைகளும் நிறைந்ததே பெண்களின் கண்ணீர் வாழ்க்கை. மணற் பொம்மைக்கே கணவனுக்குரிய அந்தஸ்தைக் கோரி பெண்ணை மண்டியிடவைத்த ஆணாதிக்கம், ஆணின் எல்லையில்லாத வக்கிரச் சுதந்திரத்தைப் பெண்மீது நிறுவியதை இது காட்டுகின்றது. இதையொட்டியே பெண் வழிபாட்டு முறைகள் கூட உருவாக்கப்பட்டன. அதாவது வெறும் கற்சிலைக்கு அர்த்தமற்ற கடவுள் விசுவாசத்தை எப்படி சமூகம் கொடுக்கிறதோ, அதையே கணவன் விடயத்தில் பெண்ணை அனுசரிக்கக் கோரியது. மணல், கல் என எதிலும் இதை விட்டுவைக்கவில்லை. இதற்கு இசைவாக ஆணாதிக்கப் பழமொழிகளையும் சமூகம் உருவாக்கிக் கொண்டது. "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று கூறியே பெண்ணை ஆணின் அடிமையாகச் சேவகம் செய்யும்படி நிர்ப்பந்தித்தது. பெண்ணின் பாலியல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திய சமூகம், பெண்ணின் உணர்வைத் தடுக்க, கல்லாலான கணவனைக் கூடக் கட்டியழ வைத்தது. குடும்பத்தின் அதிகாரம் பெண்ணின் சுதந்திரத்தை மறுக்கும் எல்லா நிலையிலும் பெண்ணுக்குப் போலியான பொம்மைக் கணவனையோ, வேறு மற்றோ (வழிபாடு.. போன்றன) பரிசளித்து, துயரத்தில் தள்ளிவிடுகிறது சமூகம்.

கணவனை இழந்த பெண் தனது வாழ்க்கையை, இயற்கை உணர்வுகளைச் சுதந்திரமாகத் தீர்க்கமுடியாத ஆணாதிக்கச் சமூகத்தில் பெண், கணவனை நினைத்து உருகக் கோரியது. அவன் வருவான் என்று காத்து இருக்க அல்லது அதை நினைத்து இலயித்திருக்க கோரியது. இல்லாது போனால், அப்பெண்ணின் அழகைச் சிதையவிட்டு வாழ அல்லது ஆணே, பெண்ணின் அழகைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி ஆணாதிக்க ஒழுக்கத்தை நிலைநிறுத்தினர். இதை நிலைநிறுத்த வீட்டில் பெண்ணைப் பூட்டி சிறைவைத்தனர் அல்லது காவலுக்கு ஆள் வைத்தனர். இதன் மீதான சந்தேகத்தைப் போக்க அடித்து நொறுக்கி மிதிப்பது ஒழுக்கக் காப்பாகியது. இப்படி அன்றும் சரி, இன்றும் சரி ஆணாதிக்க நிகழ்வுகள் எதார்த்தமாக நவீனப்பட்டு உள்ளது. அன்று ஒரு பெண்ணின் முகத்தைக் கணவன் அலங்கோலப்படுத்தியும், பெண்ணை வீட்டில் அடைத்துக் கல்லாக இருக்கச் செய்து அன்றும் சரி, இன்றும் சரி ஆணாதிக்கப் பாலியல் ஒழுக்கக் கோட்பாடு;கள் நிறுவப்பட்டன. ஆணின் இயல்பான சந்தேகக் குணம், பாலியலில் ஒருதலைபட்சமான ஆணின் நுகர்வு, பெண்ணை அதே நோக்கோடுச் சந்தேகிக்கின்றது. பெண் எப்படி மௌனமாகப் பாலியல் பூர்த்தியின்றி வாழமுடிகின்றது என்ற கேள்வி, ஆணின் சந்தேகத்தை நியாயப்படுத்துகின்றது. இதனால் பெண்ணை அலங்கோலப்படுத்துவது, துன்புறுத்துவது ஆணாதிக்கச் சந்தேகப் பண்பாடகின்றது.

பெண் எப்போதும் கல்லாகவும், குரங்காகவும் இருக்க மாற்றப்பட்டாள். அவளின் கடமைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதை மீறுவது குற்றமாகக் காணப்பட்டது. மாற்றாள் குழந்தை தவறி விழுந்து விட்டதால், கடமை தவறிய மனைவியாக இருப்பதைத் தடுக்க தன் குழந்தையையே அவள் கிணற்றில் போடும் அளவுக்குக் கடமை, கட்டுப்பாடு, கற்பு பெண்ணை மிரட்டியது. கடமையைச் செய்யாது என்ன செய்தாய்? யாருடன் குலவினாய்? என்ற சந்தேகங்களை எதிர் கொண்டதால், அவள் தன் குழந்தையையும் கொல்லத் துணிந்தாள், துணிகின்றாள்.

மறுதளத்தில் இன்று வரை நீடிக்கும் குழந்தைத் திருமணம் அன்று குழந்தை பிறக்கும் முன்பே தீர்மானகரமாகியது. இது பெண்ணின் கற்புக்கான எடுத்துக்காட்டுப் பண்பாடாக விளக்கியது. இன்று பெண்கள் கருவில் உள்ள குழந்தையைப் பெறுவது அல்லது அழிப்பது பெண்ணின் உரிமை என்ற ஆணாதிக்கப் பெண்ணியக் கோட்பாட்டைப் போல், அன்று பெண்கள் திருமணத்துக்கு முன்பே குழந்தை மீதான வாழ்க்கையை யாருடன் என்று, தீர்மானிக்கும் ஆணாதிக்க உரிமையைக் கொண்டு பெண் பண்பாட்டைக் கட்டிப் பாதுகாத்தாள். இன்று கருவில் வைத்தே குழந்தை உயிர் வாழ்வதைத் தீர்மானிக்க ஆணாதிக்கப் பெண் விரும்புகின்றாள். இதை இன்று பெண்ணின் உரிமை என்கின்றாள். அன்று அதைப் பண்பாடு, கலாச்சாரம் என்றாள். அன்று கருவுறும் முன்பே பிறக்க போகும் குழந்தை யாருடன் வாழ்வது என்பதைத் தீர்மானித்தாள். இதுதான் பத்தினி பெண்ணின் கற்புக் கோட்பாடாகும். இதுவே இன்று ஆணாதிக்கப் பெண்ணியமாகும்.

இன்று பெண்ணை இழுத்துச் செல்லும் அதிகார வர்க்கம் பெண்ணின் உடலை அனுபவிக்கச் சுதந்திரமாகின்றது. ஆணாதிக்கச் சுதந்திர, ஜனநாயகத்திடமிருந்து பெண்ணைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் வந்துவிடுவதில்லை.

துரியோதனன்கள் உடுப்பைப் பிடுங்கியபோது எந்தக் கிருஷ்ணனும் வருவதில்லை. அவள் கற்பு இழந்தவளாகத் தூற்றப் படுகின்றாள். ஏனெனின் அவள், இந்தச் சுதந்திரமான சூறையாடும் தனிச் சொத்துரிமை சட்ட அமைப்பில் குற்றவாளி, எனவே, பெண்ணைக் கற்பழிக்கும் உரிமை அந்த ஆணாதிக்க வர்க்கத்தின் உரிமையாகும்;. இதுதான் இந்தச் சமூகத்தின், பத்தினியின் கற்புத்தனமாகும்;. இதையே கணவனும் ஏற்று, பெண்ணைச் சமூகத்திலிருந்து கேவலப்படுத்தி சித்ரவதை செய்கின்றான்.

இதற்கு மறுபுறத்தில், பெண்ணை உரிந்துவிடுவது பண்பாடாகின்றது. இந்த உரியும் நடத்தை புதிய கலையாகின்றது. விளம்பரங்கள் முதல் டிஸ்கோவரை பெண்ணின் உடுப்பைப் பிடுங்கி உரிவது, பெண்ணின் சுதந்திரத் தாகமாகின்றது. உதாரணமாகப் பெண்ணை, மலம் துடைக்கும் பேப்பர் மூலம் நிர்வணமான பெண்ணை, சுற்றிலும் கட்டற்ற சுதந்திரமான டிஸ்கோவில் நிறுத்தும்போது, சம்பையினின் உள்ளிருக்கும் காற்று அழுத்தத்தைக் கொண்டு பலர் சேர்ந்து மதுவினால்; பெண்ணை ஈரமாக்கி நிர்வாணமாக்கும் நவீன துரியோதனர்கள், கட்டற்ற, சுதந்திர நீதி மூலதனத்தை விரயமாக்க, புதிய மூலதனம் குவிகின்றது. உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் குவிக்கும் மூலதனத்தில், தனது பங்கை மூலதனத்துக்கு வெளியில் ஆணாதிக்க ஆபாசத்தைச் சுதந்திரமாகப் பொழுது போக்கும், சுதந்திரமாகக் கிறுக்குத்தனம் பண்ணும் பல ஆயிரம் மாடல்களாகப் பெண்ணை விபச்சார எல்லைக்குள் நிர்வாணப்படுத்துகின்றது. இது நவீனப் பண்பாடாக வருவதும், பெண்ணியம் இதற்குள் கோட்பாடாகச் சிதைவதையும் அவர்களின் கோரிக்கைகளை மேலும் நிர்வாணப்படுத்துகின்றது.

இன்று கற்பும் காதலும் தன்னளவில் விபச்சாரத்தைக் கோருகின்றது. சகுந்தலையின் தந்தையாகிய விசுவாமித்திரன் முனிவர்களுக்கே முனிவர். இந்த முனிவர் மேனகை மீது காதல் செய்கின்றார். இந்த மேனகை யார்? அவள் தெய்வக் கன்னிகை. தெய்வக் கன்னிகை என்பவர்கள் (தேவதாசிகள்) விபச்சாரிகள். விபச்சாரிகளுடன் உடல் உறவு கொண்ட முனி அதை நியாயப்படுத்த, அவர்கள் தவத்தைக் குழப்ப முயன்றதாகக் கூறியே தன்னை நியாயப்படுத்த முடிந்தது. இந்த முனியின் மகள் சகுந்தலையைத் துஷ்யந்தன் காதல் கொண்டு இச்சையைத் தீர்த்தான். இந்த இச்சைத் தீர்ந்தவுடன் அவனுக்கு அந்த உறவு மறந்து போய்விட்டதாம். எப்படி இருக்கிறது அந்தக்கால ஆளும் வர்க்கங்களினதும், கடவுள் எடுபிடிகளினதும் ஒழுக்கம்? இந்த ஒழுக்கம் ஆணாதிக்கப் பாலியல் தேவைக்குச் சார்பாகக் கடவுளை உள்ளடக்கி, நியாயப்படுத்துகிறது. ஆண், பெண்ணை அனுபவிக்க காதல், மனைவி, விபச்சாரி என்று எத்தனை வடிவங்கள். அதேபோல் அனைத்தும் ஆணின் தேவையைப் பூர்த்தி செய்ய தெய்வக் கன்னிகைகளானாலும், பெண் பாலியல் நோக்கில் பயன்பாட்டுப் பொருள்தான்.

இதிலிருந்து வீட்டுவேலைக்காரிக்கும், விபச்சாரிக்கும் இடையில் உள்ள வேறுபாடு அனுசரிக்க கோருகின்றது, வழக்கில் உள்ள பழமொழி ஒன்று "காதல் கிழத்தி வாழ்க்கைக்கு உதவாள்", "வாழ்க்கைக் கிளத்தி காதலுக்கு உதவாள்" என்று கூறப்படும் விளக்கங்கள் ஆணின் பலதாரமணத்தை நியாயப்படுத்துகின்றன. இதேபோல் பெண்ணுக்கு ஆணாதிக்கம் உரிமை வழங்கிவிடவில்லை. அதாவது காதலுக்கு வாழ்க்கை மனைவி உதவாள் என்பதன் மூலம் அவளிடம் காதல் செய்ய எதுவுமில்லை. அவள் கணவனுக்கும் அவனைச் சுற்றியும் காதலுக்குப் பதில் வேலைக்காரியாக வாழ்கின்றாள் என்பதையே இப்பழமொழி நிறுவுகின்றது. கணவனின் உண்மையான காதலி அவனின் விபச்சாரி அல்லது வைப்பாட்டிதான் என்பதை நிறுவும்போது இருக்கும் இக்குடும்ப அமைப்பை எதற்குக் கட்டி அழவேண்டும்? பெண் வேலைக்காரியாக வாழக் கோருவதற்கு அப்பால் இருக்கும் இந்தக் குடும்பம் பெண்ணுக்கு வேறு எதையும் வழங்கி விடவில்லை.

அதேநேரம் வீட்டு வேலைக்காரியாகிய மனைவியை முன்நின்று கணவன் கூட்டிக் கொடுக்க ஆணாதிக்க இந்து தர்மம் கோருகின்றது. அதாவது கடவுளின் தொண்டர்களான பார்ப்பனர்கள், பக்தர்கள் இடம் கேட்டால், கேட்பதைக் கொடுக்கும்படி இந்து தர்மம் கோரியது. இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார். பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது பெண்டாட்டியை வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி, அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன். இதேபோல் ஆழ்வார் வீட்டில் ஒரு பக்தன் சாப்பாட்டுக்குப் போனார். உணவு சமைக்க உணவு இல்லாத நிலையில், கடையில் கடன் உதவி கேட்க, அவன் இவன் மனைவியைக் கேட்டான். இதற்கு அவன் பெண்டாட்டியைப் படுக்க விட்டு விருந்து வைத்தாராம்.

எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால் படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், பணக்காரக் கும்பல்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர். குழந்தை மருந்தின்றி உயிருக்குப் போராடும் போதோ, மருந்து வாங்கக் காசு இல்லாதபோதோ, வறுமையில் உணவுக்குக் கையேந்தும்போதோ, வேலை தேடிப் பெண் அலையும்போதோ, உயர் அதிகாரி பெண்ணின் உரிமையை மறுக்கும்போதோ .... படுக்கையில் பெண்ணின் உடலைப் பகிரங்கமாகவே கோருகின்றது, உலகமயமாதல் பண்பாடு. அன்று நிலப்பிரபுத்துவப் பக்திப் பண்பாடு, பக்தியால் பெண்ணைக் கூட்டிக் கொடுக்க கோரியது. அந்தளவுக்குப் பார்ப்பனியம் தனது சொந்தச் சதித்திட்டங்கள் மூலம் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் இருந்தபடி, பெண்ணை அனுபவித்ததை இறைப்பக்தியின் பின் நிகழ்த்தியது. பெண் தனது சொந்தக் கருத்தை விட ஆணின் பண்டமாக, அவனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு ஜந்துவாக, வாழ்ந்ததைக் காட்டுகின்றது, காட்டுகின்றன. இது இன்று பணத்துக்கு முன்னால், பெண் தொடர்ந்தும், ஆணின் பண்டமாகத் தொடர்வது பெண்ணின் வரலாறாக உள்ளது.

ஆண் பலதார மணத்தில் சுகித்திருக்க பெண்ணை அடிமையாக்கினான். இறை புருஷனாகக் கருதப்படும் இராமனின் அப்பன் தசரதன, 60,000 மனைவிகளைக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. இதுபோல் கிருஷ்ணன் ஆயிரக்கணக்கான கோபிகளுடன்; இருந்ததை இன்றும் வெட்கமின்றி, ரோஷமின்றி இரசித்துக் கேட்கின்றோம். இளம் கன்னிகள் தசரதன், கிருஷ்ணன் போன்றோர் முன் நடமாட முடியாத அளவுக்கு அவர்கள் மோசமான ஆணாதிக்க வெறியர்களாகத் திரிந்தனர். பெண்களைத் தமது அந்தப்புரத்தில் சிறைவைத்து, வக்கிரங்களை அரங்கேற்றிய வரலாற்றுப் போக்கில் தான் பெண்கள் தமக்குள்ளும், ஆண்கள் தமக்குள்ளும் இயற்கைக்குப் புறம்பான பாலியல் நடத்தையை, ஆணாதிக்க வழியில் கையாண்டதன் மூலம் அவர்கள் தமது பாலியல் உணர்ச்சியைத் தீர்த்தனர். பெண்கள், ஆண்கள் பால் வேறுபாடின்றி ஆணாதிக்க ஒடுக்கமுறையால் தமது பாலியல் தேவையை ஒருதார மணத்தில் பூர்த்தி செய்யமுடியாது போன நிலையில், கூட்டமாக ஆண் - பெண் தனித்து விடப்பட்ட நிலையில் ஓரினச் சேர்க்கை அவர்களின் தவிர்க்கமுடியாத ஆணாதிக்க நிலையாகியது.
இயற்கையின் பாலியல் தீர்வை மறுத்து, ஆணாதிக்கச் சமுதாயத்துக்கேயுரிய பாலியல் தீர்வை, மனிதனின் பாலியல் வரலாறாகக் கொள்ளும் எல்லா நிலையிலும் ஓரினச் சேர்க்கை அங்கீகாரத்தைக் கொடுக்கின்றது. இன்று கிடைக்கும் அங்கீகாரமும் போராட்டமும் இயற்கையின் பாலியல் தேர்வில் இருந்து அல்ல, மாறாகச் செயற்;கையான ஆணாதிக்கப் பாலியல் விளைவால், அதற்குள் கோரப்படுபவைதான். இது மனித வரலாற்றை இயற்கையின் வரலாற்றுக்குப் பதில் பூமியின் வரலாறாக இன்று காட்டுவதற்கு ஒப்பானது. அதாவது இயற்கையின் அனைத்தையும் உள்ளடக்கிய வரலாற்றை மறுத்து, மனிதனின் மிகக்குறுகிய வரலாறை இயற்கை வரலாறு ஆக்கிய தனிச் சொத்துரிமைபோல், ஆணாதிக்கப் பாலியல் வரலாறு இயற்கையை மறுத்த பாலியலில் கோருகின்றது. இது ஓரினச் சேர்க்கை முதல் கூட்டுக் கலவிவரை அனைத்தையும் மனிதனின் இயற்கை வரலாறாக மாற்றக் கோருகின்றது. பெண்ணின் போராட்டத்தை ஆணாதிக்கம் இதற்குள் வரையறுக்கின்றது. இதைத்தான் தீவிரவாதமாகக் காட்ட முயல்கின்றது. இதை ஜனநாயகமாக, தனிமனிதச் சுதந்திரமாக இயற்கையை மறுத்து நிறுவமுயல்கின்றது. தனிச் சொத்துரிமையின் தனிமனித ஜனநாயகம், அனைத்து சமூகத்தின் பொதுஇயக்கமாக உள்ள நிலையில், இது அங்கீகாரத்தை எதிர்ப்பின்றி அராஜக வழியில் பெறுகின்றது, கோருகின்றது.

பெண்கள் மீது பெற்றோரால் கையாளப்படும் ஆணாதிக்க அதிகாரம் என்பது, மிருகப் பண்ணைகளை வைத்திருந்த கடந்தகால, நிகழ்கால மனித வரலாற்று வடிவத்துக்கு ஒப்பானது. இந்தப் பண்ணை வளர்ப்பு முறையினால், பெண்களுக்கு இடையில் தவிர்க்கமுடியாத, இயற்கைக்குப் புறம்பான பாலியல் நடத்தைகள் வளர்ச்சிபெற்றன. இதுபோல் நிரந்தர இராணுவங்கள், கட்டாய உழைப்பு, சிறைகள் ஆண்களின் புதியவகையிலான பாலியல் நடத்தையைக் கோரியது. இதைவிட ஆண் - பெண்ணுக் கிடையிலான பாலியல் நெருக்கடிகள், இயல்பான புறத் தடைகள், அகத்தடைகள் போன்றன, மேலும் இயற்கையை மறுத்த புணர்ச்சி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அடைக்கலமாவது சமூக விளைவாகியது. இது சமூகத்தில் காணப்படும் ஆண் - பெண் பிளவுக்குள், மேலும் பாலியல் நடத்தைகளைத் தீவிரமாக, புதியவடிவில், புதிதானவற்றை இந்தச் சமூகப் பொருளாதார, வர்க்க, பண்பாட்டு எல்லைக்குள் தோற்றுவித்தது.

பெண்ணுக்கு ஒருதாரமணம் நிபந்தனையாக மாற்றப்பட்ட நிலையில், பெண் சந்தித்த பாலியல் நெருக்கடிக்குத் தீர்வு மறுக்கப்பட்டது. விவாகரத்து, சுயமான தெரிவு, கற்புக் கோட்பாடுகள் போன்றனவற்றைப் பெண்ணுக்கு மறுத்து, ஒருதார மணத்தை வன்முறையாக ஆணாதிக்கம் திணித்தது. இங்கும் இயற்கைக்குப் புறம்பான பாலியல் தேர்வு, பெண்ணுக்கு மட்டும் திணிக்கப்பட்ட ஒருதாரமணத்தின் விளைவாக இருந்தது. ஆணுக்குப் பலதாரமணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம், இயற்கையைச் சார்ந்து மட்டும் பாலியலைத் தேர்ந்துவிடவில்லை. மாறாகச் சமுதாயத்தைப் பெண் உள்ளடக்கி, அடக்கியாள இருந்த நிபந்தனைகள், அவனுக்கு இயற்கைக்குப் புறம்பான பாலியல் தேர்வை விதியாக்கியது.

இந்து சமயத்தில் முருகன் போன்ற கடவுள்கள் இரண்டு பெண்டாட்டிக்காரனாக இருப்பதை இன்று வரை மறுக்காத சமூகம், பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இது எதார்த்த மனித வாழ்வில் வெட்டுமுகப் பக்கங்களாக இன்று உள்ளது. அதேநேரம் கற்பு கோட்பாடுகள் பணப் பலத்தை ஒட்டி மாறுதல் அடைகின்றன. வழக்கில் உள்ள ஒரு கூற்று ஒன்று, "பத்து பணத்துக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை" என்றும், இடம் கிடைத்தால் எந்தப் பெண்ணும் பதிவிரதையாய் இருக்க முடியாதென்றும்"32 தர்மச் சாத்திரம் கூறுகின்றது. இயற்கையில் ஆண் - பெண்ணின் விருப்பங்கள், தேர்வுகள் இந்தச் சமூகத்தின் எல்லைக்குள், அதன் ஆதிக்கத்துக்குள் இருப்பவைதான். இப்போது இருக்கும் ஒழுக்கம் அதன் முரண்பட்ட ஜனநாயக விரோதத் தன்மையால் ஒழுக்கக்கேட்டைக் கொண்டது. இதனுடன் மற்றைய ஒழுக்கமான தனிச்சொத்துரிமையைப் பாதுகாக்கும் பணம், நிபந்தனையின்றி ஒழுக்கக்கேட்டைக் கொண்டது. இரண்டு ஒழுக்கக்கேடுகள் பற்றி ஏங்கெல்ஸ் கூறியது போல், அதாவது கணிதத்தில் இரண்டு எதிர்மறைகளின் பெருக்கம் நேராவதுபோல், இரண்டு ஒழுக்கக்கேடுகள் ஒழுக்கமாகின்றன.

பணமும், ஜனநாயக விரோதமும் ஒன்று சேர்ந்த எல்லாப் போக்கிலும் அவை மறு ஒழுக்கமாகப் புதுவிளக்கம் காண்கின்றன. வரலாறு முழுக்க ஒழுக்கக்கேடுகள் தொடர்ச்சியாக நேராகி ஒழுக்கமாக வந்த நிலையில்தான், பணமும், ஜனநாயக விரோதமும் புதிய ஒழுக்கமாகின்றது. இன்று வரலாற்றில், பணத்தின் வலிமை மரபான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்கத்தைத் தகர்த்துள்ளது. முதலாளித்துவத்தைத் தொடர்ந்து ஏகாதிபத்திய வளர்ச்சியில், பணமும் தனிச்சொத்துரிமையின் தனிமனித ஜனநாயகத்தின் ஒழுக்கமும் சமூகத்துக்கான எதிர்மறை ஒழுக்கக் கேடாக உள்ள அதேநேரம், இவை இரண்டும் இணைந்து நேராகி புதிய ஒழுக்கப் பண்பாட்டை உருவாக்கின்றன. இந்த ஒழுக்கக்கேடு ஆண், பெண்ணை விடுவித்ததாக, தனிச் சொத்துரிமையின் ஜனநாயகத்தால் பூசி மெழுகப்பட்டபோது, இதைப் பெண்ணியமாக முன்வைப்பதும், கோருவதும் அதிகரிக்கின்றது.
இந்தப்போக்கு கடந்த நிலப்பிரபுத்துவ வரலாற்றில் பணத்தை வைத்திருந்தவர்களின் அந்தரங்கமான, அந்தப்புர நடத்தையின் ஒழுக்கமாக இருந்தது. பணம் கற்பை அந்தப்புரத்தில் இல்லாததாக்கியது. ஆனால், சமூகத்தில் அது கற்பாகவே நீடித்தது. இன்று அந்தப் பணம் கற்பைச் சமூகத்தளத்தில் மறுதலிக்கின்றது. பணத்தின் சுதந்திர எல்லை விரிவடைகின்ற போது அதற்கே உரியவகையில், அதற்கு உட்பட்ட சமூக நடத்தையைச் சுதந்திரமாக மாற்றுகின்றது. இந்த மாற்றம் சமூகத்தின் சுதந்திரமல்ல. மாறாகப் பணத்தின் சுதந்திரமாகின்றது. இதை வைத்திருப்பவனின் சுதந்திரமாக எல்லைப்படுகின்றது. இதைப்பாதுகாக்க, இதைச் சமூகச் சுதந்திரம் என்று திரிக்கப்படுகின்றது. இது பெண்ணின் கற்பை மறுக்கின்றது. பெண் பணத்தின் முன் வெறும் பண்டம் தான் என்பதாக இனம் காட்டுகின்றது. அதாவது மனித உழைப்பை இயந்திரங்கள் தனது பாகத்தின் ஒரு உறுப்பாக்கியது போல், பணம் பெண்ணின் நிலையைத் தனக்குள் ஆணாதிக்கம் சார்ந்த அங்கமாக்கியது. பெண் சுதந்திரமாகப் பாலியலில், விபச்சாரத்தில் ஈடுபட, மூலதனம் தனது இரகசியத் தளத்தில் இருந்து இன்று பகிரங்கத் தளத்தில் பண்பாடாகின்றது.

மனித உழைப்பு இயந்திரத்தின் முன் சமூக மதிப்பிழந்து, உதிரிப்பாகமாகிச் சீரழிந்த வரலாறு போல், தனிச்சொத்துரிமையின் உச்சத்தில் உருவான அதன் சுதந்திரத்தில், பாலியல் விபச்சாரத்தைப் பொது அங்கமாக்கி வருகின்றது. பெண் முன்பை விட தனிச்சொத்துரிமையின் ஆதிக்கச் சுதந்திரத்தில் மேலும் மதிப்பிழந்து போனாள், போகின்றாள். இந்துதர்மம் தனது ஏகாதிபத்திய விசுவாசக் கைக்கூலித்தனத்தில், இராணுவ ஒழுங்கமைப்புக்குள் விபச்சாரத்தைத் தீவிரமாக்க மத அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி அதனூடாக ஒழுக்கமாக்குகின்றனர்.

Thursday, October 18, 2007

இந்து ஆணாதிக்கப் பார்ப்பனியத்தில், சாதி வடிவில் இறுகிய குடும்பத் தன்மைகள்

சாதி ஒடுக்குமுறை பற்றி இன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், பாட்டாளிவர்க்கம் மட்டுமே இதைச் சரியாக இனம் காண்கின்றது. இதுபற்றி நாம் பிறிதொரு நூலில் ஆராய்வோம். ஆனால் சாதியை உருவாக்குவதில் குடும்பத்தின் பங்கு என்ன என்பது இப்புத்தகத்தின் குறிப்பான விடயமாகும். உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை இந்துமதம் பாதுகாத்தபடிதான், சாதியமைப்பில் பாலியல் விளக்கத்தையும் கொடுத்தது.

அர்த்த சாஸ்திரம் (3,8) இல், "சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்"27, "உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."27 சாதிய ரீதியாகப் பிளந்து, தனிச்சொத்துரிமை சாதியமைப்பு, ஆணாதிக்க ரீதியாகத் தாழ்ந்த சாதிப் பெண்களை உயர்சாதி ஆண்களுக்கு அடிமையாக்கி, பாலியல் இன்பத்தைக் கேள்வி கடந்து அனுபவிக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டது. இங்கு பெண்ணின் கற்பு பற்றிய ஆணாதிக்க விளக்கம் உயர்சாதி ஆணாதிக்கத்தால் சொந்த நலன் சார்ந்து சமுதாய ரீதியாகவே மீறப்படுகின்றது. பெண்ணின் கற்புரிமை அவளை மீறிச் சூறையாடப்படுகின்றது. இன்று நடக்கும் சாதி வன்முறைகளில், இந்து பாசிச வழியில் கற்பழிப்பு பொது வடிவமாகின்றது. அது மறைமுகமாக, நேரடியாக நியாயப்படுத்தப்படுகின்றது. இனி சாதியப் பிறப்பை இந்து ஆணாதிக்க விளக்க வழியில் ஆராய்வோம்.

பிறப்பின் சாதிப் பிளவை இட்டு இந்து மதம் எப்படி விளக்கம் தருகின்றது எனப் பார்ப்போம். "சாலசாம்பவன் என்பவன் இறைச்சியைத் தினமும் சிவலிங்கத்துக்குப் படைத்து வந்தானாம். ஒருநாள் காமதேனு என்ற பசு, தேவர் உலகத்தில் இருந்து இறங்கிவந்ததாம். தந்தை, மகனைப் பார்த்து, "இன்று நீ அதன் தசையை அறுத்து சிவலிங்கத்துக்குப் படை" என்று கூறியதுடன், அந்த இறைச்சியை உண்ணக் கூடாது என்றும் கூறிச் சென்றானாம். மூத்தமகன் அதன்படி செய்தபோது அவனின் கர்ப்பிணியாக இருந்த மனைவி அவ்விறைச்சியை உண்ணவிரும்பினாள். (கிறிஸ்தவத்தில் ஆப்பிளைத் தின்று சாத்தானின் பிறப்பாகியது பெண்ணால்தானே) அதனால் அதில் ஒரு பகுதியை உண்ணக் கொடுத்தான். இதனால் காமதேனு அவ்விடத்தில் இறந்துவிட்டதாம். தந்தை வந்து அதிர்ச்சியடைந்து காமதேனு இறந்த காரணத்தை அறிந்து, இளையமகனிடம் பூசையை ஒப்படைத்ததுடன், மூத்த மகனைச் சேரிக்கு செல் என்றாராம்."28
இந்தக் கதை பலவிடயத்தை எமக்கு உணர்த்துகின்றது. இந்தியச் சமுதாயத்தின் மூத்தகுடிகள் தாழ்சாதி மக்கள் என்பதையும், சாதி ரீதியாகப் பிறப்பைப் பார்ப்பனியம் தனது நலனில் இருந்து புனைந்ததையும் காட்டுகின்றது. கறுப்பு - வெள்ளை பிறப்பைப் பற்றி கிறிஸ்தவ மதம் பைபிளில் கொடுக்கும் விளக்கும் இதுபோன்றதே. ஒருநாள் தந்தை மூன்று மகன்களுடனும் அமர்ந்திருக்கும்போது, தந்தையின் உடுப்பு விலகியிருந்ததாம். இதை ஒரு மகன் பார்த்து சிரித்தானாம். மற்றைய மகன் கண்டும் காணாதது போல் இருந்தானாம். மற்றவன் அதை மூடிவிட்டானாம். மூடிவிட்டவன் வெள்ளையனாகவும், கண்டும் காணாதவன் போல் இருந்தவன் மண் நிறப் பிறப்பாகவும் (ஆசியா வகை), மற்றவன் கறுப்பனாகவும் பிறந்ததாக ஆசியக் கிறிஸ்தவம் விளக்குகின்றது. இதுபோல் இன்னொரு ஐரோப்பிய விளக்கம் சாத்தானின் பிறப்பு கறுப்பாகவும், கடவுளின் பிறப்பு வெள்ளையாகவும் இனவெறியுடன் பைபிள் எடுத்துரைக்கின்றது. பிறப்புகள் பற்றிய விளக்கங்கள் சமுதாயத்தின் அடக்குமுறைகளை நியாயப்படுத்த உருவாக்கப்பட்டதைக் காட்டுகின்றது. இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது சொந்தச் சாதியை எப்படி அடையாளம் காண்கின்றான் எனின், தந்தை வழியிலேயே ஒழிய தாய் வழியில் அல்ல. இந்த அடையாளம் கூட குழந்தையின் பிறப்புக்கு முன்பே, அதாவது கருவுக்கு முன்பே, ஆணினதும் பெண்ணினதும் விந்திலேயே தீர்மானகரமாகச் சாதியடையாளத்தைப் பெற்றுவிடுகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பிறப்பு, விந்து இணைவில்தான் தீர்மானமாகின்றது. ஆனால், சாதி அதற்கு முன்பே சாதி அடையாளத்துடன் தான் இணைகின்றது. ஆணாதிக்கம் வெற்றிபெற முன்பு சாதி என்பது இருந்ததில்லை. மாறாகக் கல்வி கற்ற குருகுலத்தில் குழந்தையின் வருணத் தொழிலை ஒட்டிக் குருவே தீர்மானித்தார். இந்த உரிமையைத் தந்தைக்கு மாற்றியதுடன் சாதிக் கட்டமைப்பு தீர்மானகரமாகின்றது.

அடுத்து, கல்வி கற்பிக்கும் குருவுக்கு இருந்த உரிமையை, தந்தையின் கைக்கு மாற்றியதன் மூலம் தந்தையின் தொழில் பரம்பரையாகி, தொழில் சார்ந்த வருணம் சாதியாகப் பரிணமிக்கின்றது. அடுத்து கல்வி கற்று வெளியேறும்போது அது பாராட்டாக இருந்த வரலாற்றை மாற்றி, ஒரு புனிதச் சமயச் சடங்காக மாற்றப்பட்டதன் மூலம் தந்தைவழி சடங்குரிமை சாதிப் படியைத் தீர்மானகரமாக்குகின்றது. அடுத்து, கல்வியில் மாற்றம் செய்யப்பட்டது. முன்பு பயிற்சிக்குப் பின்பு கல்வி என்பதை மாற்றி கல்விக்குப் பின் பயிற்சி என்பதன் மூலம், தந்தை ஆதிக்கக் கல்வி பெற்ற பின் பயிற்சியைக் குருவிடம் பெறுதல் என்று மாற்றப்பட்டது. இதன் மூலம் தந்தை அதிகாரம் தீர்மானகரமாகின்றது.

பல்வேறுபட்ட மனிதர்களுடன் சேர்ந்து, பல்வேறு கலைகளைப் பயின்று, அதில் இருந்து தொழிலை ஒட்டி வருணங்கள் உருவாக்கப்பட்டதை மாற்றினார் மனு (மனு என்பது அவரின் சொந்தப் பெயர் அல்ல. அவரின் சொந்தப் பெயர் சுமதி பார்க்கவ ஆகும்). அத்துடன் இதை எழுதிய காலத்தில் இவை அமுல்படுத்தப்படவில்லை. மாறாக கி.மு 170-150-இக்கும் இடைப்பட்ட காலத்தில் புஷ்யமித்திரரின் காலத்தில் புத்தத்துக்கு எதிராகச் செய்த படுகொலைகளின்போது, அதாவது ஒரு புத்தத் துறவியின் தலைக்கு 100 பொற்காசு என்று அறிவித்து நடத்திய பார்ப்பனிய ஆதிக்க வன்முறையின் போதே மனு ஸ்மிருதி என்ற பெயரில் அது சமூகத்தின் விதியாக்கப்பட்டது. மனுவின் காலத்தில் அவ்விதிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிராகப் ஷபானா என்ற கவிஞன் எதிர்த்து பாடியுள்ளதுடன், அன்று நடந்த கொலைகளையும் அம்பலப்படுத்தியதை அறியமுடிகின்றது. அத்துடன் அவ்வாட்சியைக் கைப்பற்ற நடத்திய பார்ப்பனிய வெறியாட்டத்தை நியாயப்படுத்த பல புதிய விதிகளையும் புகுத்தினர். (பார்க்க - அம்பேத்கர் நூலை.)13

தந்தையிடம் கல்வி கற்பிக்கும் உரிமையை வழங்கி, பரம்பரைத் தொழிலை உருவாக்கியும், குருவின் கல்வி கற்பிக்கும் உரிமையைப் பறித்தும், பயிற்சியை இரண்டாம் காலக் கட்டத்திற்கு உருவாக்கியதன் மூலம், தந்தைவழி சாதிப் பரம்பரை வருணத்துக்குப் பதில் உருவாகின்றது. இப்படி ஆணாதிக்க வழியில் குழந்தைக்குச் சாதி வடிவத்தைத் தந்தை கொடுத்தார். இதனால் பெண்ணின் திருமண உறவுகளில் கூட ஒழுங்கமைப்பு சாதிக் கண்ணோட்டத்தில், ஆணாதிக்க வடிவத்தை மனு மீள ஒழுங்கமைக்கின்றார். அதை ஆராய்வோம். அதாவது மன்னர் பரம்பரை (சத்திரியப் பரம்பரை) எப்படி அதிகார ஆட்சியாளர்களாக உருவாக என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் சாதி உருவாக்கத்திலும் தீர்மானகரமான பங்கை வழங்கியது.
தந்தைவழி சாதியமைப்பை உருவாக்க மனு 9.317 இல், .... "பிராமணர்கள் கற்றறிந்தவர்களாக இருந்தாலும், அறிவிலியாக இருந்தாலும் சக்திமிக்க தெய்வமாவார்கள். நெருப்பானது வேள்வியில் வளர்க்கப்பட்டாலும,; வீட்டில் வளர்க்கப்பட்டாலும் சக்திவாய்ந்த தெய்வமாயிருப்பது போல்"25 என்ற உவமைகளுடன் வருணத்தைச் சாதியாக மாற்றிய பார்ப்பனிய மனுதர்மம் குழந்தைகளின் வாரிசுரிமையைத் தந்தைக்குரிமையாக்கியது. இதை மேலும் மனு 9.319 இல், ... "பிராமணர்கள் எல்லாவிதமான இழிந்த தொழில்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எப்போதும் மரியாதை அளிக்கவேண்டும். ஏனென்றால் அவர்களிடம் எல்லாவற்றையும் கடந்த தெய்வத்தன்மை இருக்கின்றது"25 என்று ஏற்படுத்தியதன் மூலம் தொழில் சார்ந்து உருவான வருணம் தந்தைவழி சார்ந்து அதை மறுக்கத் தொடங்கியது. தொழில் சார்ந்த வருணத்துக்குப் பதில் தொழில் சாராத தந்தையின் பரம்பரை உரிமை சாதிப் படிநிலையை உருவாக்கியது. இது பின்னால் சில விதிவிலக்குடன் தொழில்களுக்குள்ளும் வளர்ச்சிப் போக்கில் புகுந்தது.

அதாவது பொருளாதார ஏற்றத் தாழ்வை உயர்த்தும் தந்தைவழி ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை, ஒரு தொழிலை முற்றுமுழுதாகப் பரம்பரையாக்க முடியாத போக்கில் சில தொழில்களைத் தீண்டத் தகாதோருக்கு மட்டும் ஒதுக்கியும், விலக்கியும்;, பார்ப்பனர்களுக்கும் சிலதைச் சிலருக்கு ஒதுக்கியும், விலக்கியும், என எல்லா பிரிவுக்கும் வரையறுத்ததன் மூலம் அடுத்த கட்டப் பாய்ச்சலைப் பார்ப்பனியம் தனக்குச் சார்பாக்கியது. தொழில்ரீதியில் தந்தை வழி வாரிசுரிமையின்றி திறமையின் அடிப்படையில் இருந்த வருணத்தைத் தகர்த்த பார்ப்பனியம், தொழில் சாராத சாதி வருணத்தை உருவாக்கி, தொழில் ரீதியிலும் முழுமையான சாதிவருணத்தைப் புகுத்த முடியாத தனிச்சொத்துரிமையின் சுரண்டல் நலன்கள் குறுக்கிட்டன. எனவே, இதில் பண்பாட்டுத் தளத்தில் ஒருகட்டப் பாய்ச்சலை மட்டும் ஏற்படுத்துவதில் இருந்து நடைமுறைப்படுத்தினர்.

மாற்றி அமைக்கப்பட்ட மனிதப் பிளவில் ஆண் - பெண்ணின் சேர்க்கையை ஒட்டிய பண்பாட்டுக் கலாச்சார ஒழுக்கங்கள் புதிய ஆணாதிக்க மனுதர்மப் போக்கைக் கோரத் தொடங்கியது. முன்பு வருணத்துக்கு இடையில் தந்தையின் பரம்பரை உரிமை இல்லாததால் இலகுவாக வருணம் கடந்த திருமணம், தந்தையின் வாரிசுரிமை சாதிக்கட்டமைப்பை ஏற்படுத்திய போது, திருமணத்திலும் தந்தைவழி ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டது. புத்தமதத்தை வெற்றி பெற்ற பார்ப்பனியம் அதற்கு முன் இருந்த சதுர்வருணத்தை மீள உருவாக்கியது. இருந்தபோதும் இந்தச் சதுர்வருணத்தில் நாலு பிரிவுகள் இருந்தபோதும் இங்கு கலப்பு மணங்கள் சாதாரணமாக நிகழ்ந்ததைப் பிராமணரான வியாச ரிஷியின் குடிவழிப் பட்டியலில் ஆதாரமாகக் (பார்க்க - அம்பேத்கரின் ஆய்வு நூல்கள்) காண முடியும். பல புகழ்பெற்ற முனிவர்களின் திருமணங்கள் எல்லாம் கலப்பு மணங்கள்தான்.

இதைத் தடுக்க மனு உருவாக்கிய ஆணாதிக்கச் சட்டங்கள், கட்டுப்பாடுகள் ஏராளமானவை. மனு 3.12 இல், "இரு பிறப்பாளர்களில் முதல் திருமணத்துக்கு, சமமான சாதியைச் சேர்ந்தவர் (மனைவியர்) பரிந்துரைக்கப்படுகின்றனர்."25 மனு 3.13 இல், "சூத்திர வருணத்தைச் சேர்ந்த பெண் சூத்திரனின் மனைவியாயிருக்க முடியும்..."25 மனு 3.15 இல், "இரு பிறப்பாளர்கள், மடமையினால், கீழ் (சூத்திரன்) சாதி மனைவியரை மணக்கும்போது, விரைவில் தங்களுடைய குடும்பங்களையும், தங்கள் குழந்தைகளையும் சூத்திரர்களின் நிலைக்குத் தாழ்த்தி விடுகிறார்கள்."25 மனு 3.17 இல், "சூத்திர மனைவியுடன் உடலுறவு கொள்கிற பிராமணன் இறந்தபின் நரகத்தில் ஆழ்வான். அவளிடம் அவன் குழந்தை பெற்றால் அவன் பிராமணன் என்ற அந்தஸ்தை இழந்து விடுவான்"25 என்ற தர்மத்தை மனு உருவாக்கி, பார்ப்பனியத் தந்தைவழி சமூக அமைப்பை உறுதிப்படுத்தினர்.
சாதி கடந்த திருமணத்தில், ஆணின் முந்திய உயர்சாதி தந்தைவழி உரிமை பறிக்கப்பட்டு, பெண்ணின் நிலைக்குத் தரம்தாழ்த்தும் ஆணாதிக்கம் பெண்ணின் சாதியடையாளத்தை ஆணுக்குக் கொடுக்கின்றது. இதன்மூலம் குழந்தை பெண்ணின் தாழ்சாதி நிலையைப் பெண்வழியில் பெற்றுக் கொள்கின்றது. சாதிக் கட்டமைவில் ஆண் சார்ந்த உயர்சாதி அழிப்பை, பெண்வழியில் இனம் காட்டுவது ஆணாதிக்கத் தந்தை வழிமுறைக்கு எதிரானதாக இருந்த போதும், ஆணாதிக்க மனுதர்மம் சாதியைக் கட்டமைப்பதில் தீவிரமாக இருந்ததைக் காட்டுகின்றது.

இந்த நடைமுறை சார்ந்த சாதி ஒழுக்கங்கள் ஆணாதிக்க ஆண்களின் பாலியல் வேட்கையையோ, தாழ்ந்த சாதிப் பெண்களுடனான உறவையோ தடுத்துவிடவில்லை. ஆண்கள் கீழ்சாதிப் பெண்களை நோக்கிச் செல்வதும், இதனால் அவர்களின் சாதி அடையாளம் அழிதலும், அதேநேரம் முன்பு வழக்கில் இருந்த திருமணமுறையினால் குழந்;தை ஆண்வழியில் அடையாளம் காண்பதும், அதேநேரம் உயர் சாதிப் பெண் தாழ்சாதி ஆணுடன் உடலுறவு கொள்ளும்போது, குழந்தை தாழ்ந்த சாதியை அடைவதும் சமூக நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதைத் தடுக்க மனு செய்த சதி குழந்தையைப் பெண்வழி சாதியால் அடையாளம் காண்பித்ததன் மூலம், உயர்சாதிப் பெண்கள் கீழ்நிலை அடைவதைத் தடுத்தது. அதேநேரம் தாழ்ந்த சாதி பெண்ணின் குழந்தை, பெண்ணின் மூலம் ஆணாதிக்கச் சமூகத்தில் அடையாளம் காண்பது என்பது, ஆணின் பொறுப்பில் இருந்து குழந்தையைச் சாதியின் மூலம் ஒதுக்கியது. இங்கு தந்தைக்கும் குழந்தைக்கும் இடையில் சாதி தடுப்பாகியது. இதனால் உண்மையில் விரும்பிய ஆண் - பெண் உறவு குழந்தையின் சாதியால் பிளவுபட்டு, பெண்ணை விபச்சார நிலைக்கு அல்லது வைப்பாட்டி நிலைக்குத் தரம்தாழ்த்தி, உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை அனுபவிக்க இருந்த சாதித்தடையைத் தகர்த்து இலகுவாக்கியது மனுதர்மம்.
இது உயர்சாதிப் பெண்களின் நிலையை மேம்படுத்திவிடவில்லை.

ஆணாதிக்கத்தின் அடிமைநிலையைப் பெண் மீதான புதிய கட்டுப்பாடுகள் ஊடாக இறுக்கி, பெண்ணின் ஒழுக்கத்தை உயர்சாதிக்குள் நிறைவு செய்ததன் மூலம், பெண்ணின் புணர்ச்சியைக் கண்காணித்து, அவளுக்குப் பிறக்கும் குழந்தையின் சாதிக் கலப்பைத் தடுத்தனர். தாழ்ந்த சாதிப் பெண்ணின் ஒழுக்கத்தை உயர்சாதி எல்லைக்குள் வரையறுத்த மனுதர்மம், உயர் சாதிப் பெண்ணின் ஒழுக்கத்தை உயர்சாதிக்குள் எல்லைப்படுத்தியது. இங்கு இரட்டைத் தன்மை ஏற்பட்டது. தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் உயர் சாதி ஆணுக்கும் பிறக்கும் குழந்தையைத் தாழ்ந்த சாதியாகக் கண்ட ஆணாதிக்க இந்து தர்மம், உயர் சாதி பெண்ணுக்கும் தாழ்ந்த சாதி ஆணுக்கும் இடையில் பிறக்கும் குழந்தையைத் தாழ்சாதிக்குள் பெண்ணையும் சேர்த்துத் தள்ளிச் சென்று ஒழுக்கப் பண்பாடாக்கியது. சாதிகடந்த உறவுகள் கள்ள உறவாகத் தொடர்வது வழக்காக இருந்தது. உயர்சாதிப் பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஆணுடன் கள்ள உறவு கொள்வதும், சாதி அடிப்படையில் மறைப்பதும் இலகுவாக இருந்தது. இதைக் கொண்ட ஒரு சம்பவத்தை உள்ளடக்கிய கதை வழக்கு ஒன்றைப் பார்ப்போம்.

"குமரி மாவட்டக் கடலோரக் கிராமங்களில் ஒன்றான புத்தூரில் குறும்பு இனப்பெண் முக்குவருடன் கள்ள உறவு வைத்திருந்தாள். ஒருநாள் உறவு கொள்ளும்போது கணவன் வந்துவிடவே, முக்குவரைத் தண்ணீர் கேட்டுக் குடிக்க வந்தவர்போல் அப்பெண் நிறுத்தினாள். வீட்டில் இருந்து கெண்டியில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றும்போது, அப்பெண் முக்குவரிடம் கெண்டியைத் தொடாதே என்று பலமுறை கூறித் தண்ணீர் வார்த்தாளாம். தண்ணீர் குடித்துவிட்டு வெளியில் வந்த முக்குவர் ஷசூத்திரத்தி குண்டி தருவாளாம் கெண்டி தரமாட்டாளாம் என்று கூறிச் சென்றாராம்."28 இந்தக் கதை வழக்கில் பெண் கள்ள உறவில் சாதிகடந்து அனுபவித்த உணர்வு, சாதிக்கட்டுமானத்தில் பொருட்களைத் தொடுவதை மறுக்கின்றது. உயர்சாதிப் பெண்கள் கீழ்சாதி ஆண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவது ஆதிக்கச் சாதியின் அடிப்படையில் இலகுவானதாக இருக்கின்றது. (டானியலின் சில இலக்கியப் படைப்புகள் இதற்குள் வெளிப்படுகின்றது.)

இதைப் போன்ற மற்றொரு கதை வழக்கைப் பார்ப்போம். பனைமரம் தோன்றிய வரலாற்றைப் பார்ப்போம். "காட்டில் சுனை ஒன்றை உருவாக்கி வலங்கையர்களைக் காளி வளர்த்து வர, அந்தச் சுனை நீரை ஒரு பிராமணனும் அவன் மனைவியும் குடித்துவிடுகின்றனர். ஆத்திரமடைந்த காளி அவர்களைத் தலைகீழாக நட்டுவிட ஆண் - பெண் பனையாக வளர்ந்தனராம்."28 மதக் கதைகள் பல்வேறு சமூக விளைவுகளை வெளிப்படுத்தியபோதும், பிறப்புகளின் வக்கிரங்கள் விகாரமானவை. பிறப்புகள் இழிவாடப்படுகின்றன. இயற்கையான பாலியல் உறவு, பரிணாம வளர்ச்சி இறைக் கோட்பாடுகளின் பின்னால் கோரமாக்கப்படுகின்றது. இந்த இடத்தில் பனையேறும் தாழ்ந்த சாதி ஆண்கள், உயர்சாதிப் பார்ப்பனப் பெண்களைத் தழுவுவதாகக் காட்டுவதன் மூலம், பனையேறுவது இழிவு என்ற பதத்தைக் கேலி செய்து பார்ப்பனியப் பெண்ணைப் பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்துவதன் மூலம், சமுதாயத்தின் சில பொதுத் தன்மைகளைப் பிரதிபலிக்கின்றது. உயர்சாதிப் பெண்கள் தாழ்ந்த சாதி ஆண்களைப் பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தி தமது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தும் தன்மையும், உயர் சாதி ஆண் தாழ்ந்த சாதிப் பெண்ணைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியபோது, சாதி ஆதிக்கம் பாலியலில் முரண்பட்டு இரண்டு தளத்தில் இயங்கியுள்ளது.

கீதையில் அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த உபதேசத்தில், யுத்தம் சாதிக்கலப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை முன்வைக்கின்றது. அதை ஆராய்வோம்."குலகஷயே ப்ரணச்யந்தி குலதர்மா: ஸ்நாதனா: தாமே நஷ்டே குலங் க்ருத்ஸ்ன - மதர்மோ பிபவத்யுத"23- என்று அத்தியாயம் 1 சுலோகம் 40 இல், "கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்து விட்டால், குலப் பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணச் சாங்கரியம் (குலங்களின் கலப்பு) ஏற்பட்டுவிடும்"23 என்று அருச்சுனன் கூறும்போது, ஆணாதிக்கச் சாதியமைப்பின் வெட்டவெளிச்சமான ஆதிக்கம் வெளிப்படுகின்றது.
ந்தச் சாதிய ஆணாதிக்க ஒழுக்கத்தைக் குலைப்பவர்கள் துன்பத்தை அனுபவிப்பர் என்று கூறி செல்லும். அத் 1. சுலோகம் 41ஐப் பார்ப்போம்."அதர்மாபிபவாத் க்ருஷண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:ஸ்த்ரீஷீ துஷ்டாஸீ வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர"23
இதன் அர்த்தம், "அவ்விதக் கலப்பு, குலத்தை அழித்தவர்களுக்கும் அந்தக் குலத்திற்கும் நரகத்தையே தரும். இவர்களுடைய பித்ருக்களெல்லாம் சிராத்த பிண்டமும் தர்ப்பண ஜலமும் அற்று நரகங்களில் விழுவார்கள்"23 என்று கூறும்போது, சாதியம் தகர்கின்றபோது சாதியக் கலப்பு பொருளாதார ரீதியாகப் பார்ப்பனியத்தின் தனிச்சொத்துரிமையைத் தகர்க்கும். இதனால் ஆணாதிக்கம் பலவீனப்பட்டு, பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். இதையே நரகத்துக்குச் சமமானது என்றும், இது குலத்தின் ஆணாதிக்கச் சாதிய ஆதிக்கப் பொருளாதார நலனைத் துடைத்தெறியும் என்ற அடிப்படையில், யுத்தத்தையிட்டு அருச்சுனன் பின் வாங்குவதையே காட்டுகின்றது. இந்தச் சிதைவை எப்படி வருணிக்கின்றான் என அத்தியாயம் 1 சுலோகம் 39 இல் பார்ப்போம்."சுகம் ந ஜ்ஙேயமஸ்மாபி: பாபாத ஸ்மாந்நிவர்த்திதும் குலகஷயக்ருதம் தோஷம் ப்ரபஸ்யத்பிர் ஜநார்த ந"23
இதன் அர்த்தம் "குலம் அழிந்தால் புராதனமான குலத்தர்மங்கள் அழிந்து போகும். தர்மம் அழிந்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்ந்துவிடும்"23 என்ற அடிப்படையான காரணத்தில் இருந்தே, கீதையை இந்துமதம் தூக்கிபிடிக்கின்றது. இந்தச் சிதைவால் ஏற்படும் விளைவையும் பார்ப்போம்."ஸங்கரோ நரகாயைவ குலக்னானாம் குலஸ்ய சபதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்த - பிண்டோதக - க்ரியா"23 அத் 1. சுலோகம் 42 இல் கூறும் அர்த்தம், "வர்ணக் கலப்பை உண்டாக்குகின்ற குலப் பாதகர்களின் இத்தகைய தீங்குகளால் நிலையான சாதி தர்மங்களும், குலத் தர்மங்களும் அழிந்துபோகும்"23 என்று சாதியக் கடமைகள் சிதைவதால் ஏற்படும், ஆதிக்கச் சாதியின் சிதைவை வெளிப்படுத்துகின்றது. இது சமுதாயத்தின் பண்பாட்டு, கலாச்சாரச் சிதைவைப் பறைசாற்றுகின்றது. இந்தச் சிதைவால் நரகம் கிடைக்கும் என்று அடுத்த சுலோகம் கூறிச் செல்லுகின்றது. நரகம் என்பது சுகபோகமாக வாழ்வது அழிந்து போகும் என்பதை குறித்துச் சொல்லுகின்றது. அடுத்தவன் உழைப்பைச் சாதியக் கடமையாக்கி, அதை நிலையான சாதியாக்கித் திருமணக் கலப்பை மறுத்து, பெண்ணை அடிமையாக்கி வாழும் சுகபோகம், அழிகின்றபோது அது நரகமாக, சமுதாய இழிவாக இருப்பது கண்டே கீதை அஞ்சுகின்றது.

இந்த மகாபாரதத்தை எழுதிய வியாசர் கூட கலப்புத் திருமணத்தின் பிறப்பு என்பதும், அவர் பார்ப்பானாக மாறியதும் விசித்திரமன்று. பராசன் என்ற பார்ப்பன ரிஷிக்கு காளியென்ற மீனவப் பெண்ணிடம் பிறந்த மகனே வியாசர். இந்த வியாசர்க்கு க்ருதாசி என்ற வேத மங்கை பிறந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. மகாபாரதத்தில் நடந்த ஏராளமான கலப்பு மணப்பிறப்பைக் காணமுடியும். இதை "ஏகாதச ஸங்கர வர்ணம்"23 என்று அழைக்கப்பட்டது.

"கர்ணன் (சூத்திரப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தவன்.), உக்ரன் (சூத்திரப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தவன்), அம்பஷ்டன் (வைசியப் பெண்ணுக்கும் பார்ப்பனுக்கும் பிறந்தவன்), மாகதன் (சத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தவன்), ஸீதன் (பார்ப்பனப் பெண்ணுக்கும் சத்திரியனுக்கும் பிறந்தவன்), சண்டாளன் (பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன்)... என எண்ணற்ற பிறப்புகள் சாதிகடந்து காணப்படுகின்றது. இன்று இந்தச் சாதி கடந்த கலப்புப் பிறப்பே ஆயிரக்கணக்கான சாதிகளைப் பிளந்து பிளந்து உருவாக்கியது. திருமணக் கலப்பே புதிய சாதிகளின் ஊற்றுமூலமாகும். சாதிக்கலப்பு சாதியை ஒழிப்பதற்குப் பதில், புதிய சாதியை உருவாக்கக் காரணமாக, மதத்தில் இருந்து விடுபடாமையும், சாதியக் கடமை பொருளாதார ரீதியாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதும் முக்கியமானதாகும். அத்துடன் இதன் மேல் ஆணாதிக்க வடிவம் சாதியைக் கடந்த போதும், தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டத்தில் இறுகிக் கிடந்ததுமாகும். இது ஒட்டுமொத்தத்தில் புதிய சாதிகளைக் கிளைவிட்டு உருவாக்கியது. இது இரகசியமான சாதி கடந்த பாலியல் உறவாக மாறுகின்ற போதும், அல்லது அதிகாரத்தின் மூலம் பாலியலைக் கீழ்ச் சாதிப் பெண்ணை உயர் சாதி ஆணும், உயர் சாதிப் பெண் கீழ்ச் சாதி ஆணைப் பயன்படுத்தியபோது, விபச்சாரமும்; வைப்பாட்டித்தனமும் பொதுப் பண்பாக்கியது.

சாதிய ரீதியாக வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் வளர்த்த மனுதர்மம், ஆண் திருமணத்தின் மூலம் கீழ்ச்சாதியாவதைத் தடுத்தது. எதிர் நிலையில் பெண் மீறியபோது நிகழ்ந்த அந்த அத்துமீறல்களில் பெண்கள் எரிக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

"பார்ப்பனர்களுக்கும் ஷத்திரியர்களுக்குமிடையில் நிகழ்ந்த கலப்பு மணத்தில் பிறந்தவர்கள்தான் தான்ஸீதர்கள்;"122 இவர்கள் தான் வேதத்தை இயற்றவும், கொண்டு சென்று பிரச்சாரம் செய்யவும் செய்தனர். இங்கிருந்தே இந்தக் கலப்பு மணம் சாத்தியமாகின்றது.

மகாபாரத ஆசிரியர் அசுரச் சாதியைச் சேர்ந்த பெண்களைக் கிருஷ்ணன் மணப்பதை எதிர்க்காத தன்மையில் சாதிக் கூறுகள் பலவீனமான அக்காலக்கட்டம் வெளிப்படுகின்றது அல்லது ஆணாதிக்கத்தின் தேவை சாதிகடந்த வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுவதும் இயல்பாக வெளிப்படுகின்றது. அக்காலத்தில் பார்ப்பனரே ஏற்க மறுத்த இந்தப் பாலியல் ஒழுங்கைத் தடுக்கக் கடும் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. மனு 8.382 இல், "ஒரு பார்ப்பான் ஏனைய இரு வர்ணப் பெண்களுடனோ, சூத்திரப் பெண்களுடனோ உடலுறவு கொண்டால் 1000 பணம் தண்டம் கொடுக்க வேண்டும்."13 மனு 8.383 இல், "பாதுகாப்பில்லாத சத்திரியப் பெண்களுடன் உறவு கொண்ட வைசியனுக்குப் பணம் 500 தண்டம் விதிக்கப்படும்.
இதே குற்றத்தைச் செய்த சத்திரியனுக்குத் தண்டனை 500 அபராதம் அல்லது கழுதை மூத்திரத்தைத் தலையில் ஊற்றி மொட்டையடிக்க வேண்டும்."13 மனு 8.384 இல், "(உறவினர்) பாதுகாப்பில்லாத வைசிய அல்லது சத்திரிய அல்லது சூத்திரப் பெண்களுடன் உடலுறவு கொண்ட பார்ப்பானுக்கு அபராதப் பணம் 500, மிகக் கீழ்சாதிப் பெண்ணுடன் உறவு கொண்டால் பார்ப்பானுக்கு அபராதப் பணம் 1000."13
இந்த விதிகள் மனுவின் பலமுரண்பட்ட போக்கில் வெளிப்படுவதுடன் ஆணாதிக்கச் சாதிச் சட்டமாகின்றது. மனு எழுதியதற்கும் அதை அமுல்படுத்தமுடியாத வரலாற்றுப் போராட்டத்தின் பின், மாறிவந்த காலத்தில் மனுவுக்குள் இணைக்கப்பட்ட விதிகளும் இணைந்து ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான பல விதிகள் ஆகின்றபோது சிக்கலுக்குள்ளாகின்றது. ஆனால் இந்த விதிகள் பல காலக் கட்டத்தின் ஊடாக மனுவுக்குச் சேர்ப்பும், திருத்தத்தையும் பார்ப்பனியள நலன் சார்ந்து உள்வாங்கி ஒடுக்கும் வடிவமாக மாறியது தெளிவாகும் போது, (இதற்குப் பல ஆதாரங்கள் சம்பவத்துடன் உள்ளது.) இதை எதிர்த்த போராட்டம் சிக்கலுக்கு உள்ளாவதில்லை.

சாதி கடந்த உறவு மற்றும் திருமணத்தைப் பார்ப்பனர்களே தமது ஆணாதிக்கப் புணர்ச்சி வேட்கையில் மீறியதையும், அதை மதிக்க மறுத்ததையும் இவை காட்டுகின்றது. பழைய கலப்பு மணங்கள் (புகழ் பெற்ற பல படைப்புகளில் ஆதாரம் உள்ளது) தொடர்ச்சியாக வேரறுக்க, இந்த உறவுகள் மீது கடும் தண்டனைமுறை ஏற்படுத்தப்பட்டது. இங்கு இந்த உறவுகள் என்பது எல்லை கடந்து, கட்டுப்பாடு அற்று, நெளிவு சுழிவான வகையில், இலகுவானதாக இருந்ததை நிறுவுகின்றது. ஆண் - பெண் இலகுவாக பரஸ்பரம் உறவு கொண்டதைத் தடுக்க பெண்கள் பற்றிய விதி எமக்குக் (மேலுள்ள விதிகளைத் தொகுத்து விமர்சித்துள்ளேன்.) காட்டுகின்றன. இங்கு சாதிக்குள் மட்டும் இவ்விதிகள் கட்டுப்பாட்டைக் கோருகின்றனவே ஒழிய, மறுதளத்தில் சொந்தச் சாதிப் பெண்களிடத்தில் சலுகையை வழங்குகின்றது அல்லது மென்மையாக அணுகுகின்றது. ஆணாதிக்கப் பார்ப்பனியப் பெண்கள் மீதான குடும்ப முறையைச் சாதிக்குள் நிறுத்தியதன் மூலம், உலகில் உள்ள பெண்களின் பொதுத் தன்மையில் இருந்து, சிறப்பான ஒடுக்குமுறையைப் பெண்கள் எதிர் கொள்கின்றனர்.

இந்தியச் சமூகத்தில் சாதி கடந்த திருமண உரிமையைக் கோரிப் போராடும் ஜனநாயக உரிமை, எல்லா சமூகத்தையும் விட சிறப்பானவையாகும்;. உலகில் நிறம், தேசியம், இனம், மதம், வர்க்கம் சார்ந்த திருமணத் தடைகள் எப்படி ஆணாதிக்கக் கொடூரமாக இருக்கின்றதோ, அதை விட மோசமான சுற்றுச் சூழலுக்குள்ளேயே சாதித் திருமணத்தடை, கேவலமான பாத்திரத்தை வகிப்பதால் ஆணாதிக்க ஒழிப்பிலும், சாதி ஒழிப்பிலும் இவை தீர்க்கமான ஜனநாயகப் போராட்டமாக உள்ளது. சாதி ஆணாதிக்கம் கீழ்ச்சாதி பெண்ணைக் கேவலப்படுத்தக் கொச்சைப்படுத்த தயங்கவில்லை. சம்பூரண அரிச்சந்திராவில், "தலையைத் தாங்குறாப் போல குத்து முலையைத் தாங்குறான் பள்ளீரே"29 என்று பார்ப்பனியம் பெண்ணை இழிவுபடுத்தி இரசிக்கின்றது. குற்றாலக் குறவஞ்சியில் குறத்தியை மேல்சாதிக்காரன் அறிமுகம் செய்யும் போது, "மொழிக்கொரு பசப்பும், முலைக்கொரு குலுக்கும்விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு சிமிட்டும்வெளிக்கொரு பகட்டும் ஆய்"29- என்று பெண்களை இழித்துக் காட்டும்.

ஆணாதிக்கச் சாதியம் குறவனைப் பற்றி கூறும் போது "முட்டப்படா முலையானையே முட்டவோ சிங்கி ஒக்கப்படுக்க ஒதுக்க இடம் பார்க்கவோ சிங்கி"29 - என்று கேவலப்படுத்துகின்றது. இந்த வரிகளை மனுதர்மமே இந்த வக்கிர இலக்கியங்களைப் படைப்பவர்களுக்கு வழங்குகின்றது. மனுதர்மம் "முலையை முட்டவோ படுக்க இடம் பார்க்கவோ மாட்ட"29 என்ற பார்ப்பனிய விளக்கங்களை எடுத்துக் கையாளும்போது சொந்த வக்கிரத்தை, அந்த மக்கள் மீது திணிப்பதன் மூலம் கொச்சைப்படுத்துவது நிகழ்கின்றது. ஆனால், அந்த மக்களின், நயவஞ்சகமற்ற வெளிப்பாடு அவர்களின் பாடல் மூலம் வெளிப்படுகின்றது.

"பொய் பொட்டுப் பேசமாட்டோம்போலீசுக்குப் போக மாட்டோம் களவு திருட்டு செய்யமாட்டோம்கச்சேரிக்குப் போகமாட்டோம் -எங்கபொண்டாட்டி புள்ளைகளைப்பேதமாக எண்ண மாட்டோம்மஞ்சி மலை நரிக்குறவர் நாங்களே சாமி .. .."29
- என்று பாடும் போது அவர்களின் வஞ்சகமற்ற வெளிப்பாடு வெகுளித்தனத்தில் பிறக்கின்றது. ஆணாதிக்க வக்கிரம் அவர்களைக் கேவலப்படுத்தியதன் விளைவே இந்தப் பாடலின் வெளிப்பாடாகும.; இதில் தங்கள் மனைவி, பிள்ளைகளிடையே பேதம் பாராட்டுவதில்லை என்ற வரிகள், அவர்களின் உயர்ந்த மனிதத் தன்மையை வெளிப்படுத்துகின்றது. ஆனால், சாதி ஆணாதிக்கம் அந்தப் பெண்களைப் பார்க்கின்ற விதமே சொந்த வக்கிரத்தில் எழுவதை நாம் காணமுடியும். இந்த மாதிரியான கொச்சைப்படுத்தல் ஊடாகவே சாதி கலந்த திருமணங்களைப் பிளப்பது அரங்கேறுகின்றது.

சாதியத்தின் பிறப்பைக் கூட கலப்பு மணத்தில் இழிவால் உருவானதாக இந்து மதம் குறிப்பிட தவறவில்லை. "தெய்வக் குமாரர் மனு குமாரத்திகளோடுக் கூடிவாழ்ந்து, இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றதினால் அக்காலத்திலும் பிற்காலத்திலும் இராட்சதர் பூமியிலிருந்தார்கள். அவர்களே பூர்வத்தில் பேர் பெற்ற பலவான்கள்"16 என்று பார்ப்பனரான தெய்வக் குமாரரை எதிர்த்துப் போரிட்ட இராட்சதர்கள், பார்ப்பனக் கலப்பால் உருவானவர்கள் என்பதைக் கூறுவதன் மூலம், அம் மக்களின் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டம் இழிவுபடுத்தப்பட்டது. எப்போதும் கலப்பு சாதிப் பிரிவுகள் உக்கிரமாக இருதளத்திலும் இருந்து போராடுவதும், அவர்களின் இருவழித் தொடர்பும் சாத்தியமாக்கியது. இந்தச் சாதி முரண்பாடு, இதனால் விழித்தெழும் போராட்டம் மீதான இழிவுபடுத்தலுக்கு எதிராக முனைப்பு பெற்ற நிலையில், இதை இந்து தர்மம் கலப்பின் இழிவாக இனம் காட்டியது. இந்திய பழங்குடிகளான அசுரர்கள் (இராட்சதர்கள்) மீதான பார்ப்பனியப் பொருளாதாரச் சாதி ஆதிக்கத்தைப் பாதுகாக்க, கலப்புத் திருமணத்துக்கு எதிரான குரலாகச் சாதியமும் ஆணாதிக்கமும் சேர்ந்து வளர்ச்சி பெற்றதை இது காட்டுகின்றது.

ஆனால், தாழ்ந்த சாதிகளில் சமுதாயத்தின் உயர்ந்த அறிவாளிகள் உருவான போது, பார்ப்பனர்கள் அதைப் பார்ப்பன - சூத்திரக் கலப்பின் மூலம் ஏற்பட்ட அறிவு என்று கதைகளை உருவாக்கினர். "எழுத்தச்சன், கண்ணச்ச பணிக்கா போன்ற சூத்திரச் சாதி கவிஞர்களைப் பார்ப்பனியக் கலப்பின் விளைவாக"11 அறிவைப் பெற்றனர் என்று கூறியே, சூத்திரர்களின் கல்வியை, திறமையைக் கொச்சைப்படுத்தி புதிய அடக்குமுறையைக் கையாண்டனர்.

அதேநேரம் பெண்ணின் ஒழுக்கத்தைப் பேண நடத்தை விதிகள் சமூகத்துக்கு முன்வைக்கப்பட்டன. மனு 9.4 இல், "உரிய காலத்தில் தன் பெண்ணிற்கு மணம் முடிக்காத தந்தை கண்டிக்கப்பட வேண்டியவர்."13 மனு 9.88 இல், "உரிய வயதை அடையாவிட்டாலும் அதாவது பருவமடையாவிட்டாலும் தந்தை தன் மகளை விதிமுறைகளுக்கேற்ப சமமான சாதியைச் சேர்ந்த சிறப்பான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்"13 என்று பெண்களின் உரிமையை, சுயத்தைப் பாலியல் சுதந்திரத்தில் இருந்து பறித்ததன் மூலம், ஆண் வழி ஆணாதிக்கச் சாதி ஒழுங்கு சொத்துரிமையும் இறுக்கமாக்கப்பட்டது. பெண்ணின் சுதந்திரமான பாலியல் தேர்வும், ஈடுபாடும் பார்ப்பனிய ஆண்வழி சமூகத்தை, சாதியத்தை, தனிச்சொத்துரிமையை எதிர்ப்பதாக இருந்தது. இதன் கடமையை ஒழுங்குபடுத்த தந்தைக்குக் கடமையாக்கியதுடன், சிறுவயதுக் குழந்தைத் திருமணம் வேறு புகுத்தப்பட்டதன் மூலம் ஆணாதிக்க ஒழுக்கம் பேணப்பட்டது.. இதைச் செய்யாத தந்தை கண்டனத்துக்கு உரியவரானார். இன்று இந்தியா இலங்கை சமூகங்களில் இவை நீடிப்பதையும் இதில் இருந்தே நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இதை அமுல்படுத்த சிறுமியின் திருமணத்தை மனு விதிந்துரைக்கின்றார். மனு 9.94 இல், "முப்பது வயதுள்ள ஆணுக்கு 12 வயதுள்ள பெண்ணையும் 24 வயதுள்ளவன் 8 வயதுள்ள பெண்ணையும் மணம் முடிக்கலாம்"13 என்றதன் மூலம் பெண் குழந்தையின் சிறுவயதுக் கல்வி மறுக்கப்பட்டு, அவள் அறிவு கணவனுக்கு உட்பட்டதாகவும், பொதுஅறிவு சாதிக்கு உட்பட்டதாகவும் நிறைவு செய்யப்பட்டது. இதன் மூலம் பெண்ணின் அறிவு, சுய ஆற்றல், பரந்த சமூக அறிவு முடக்கப்பட்டது. இது அறிவற்ற இயந்திரத்தனத்தில் இருந்து கணவனுக்கு விசுவாசமாக, சாதிக்கு விசுவாசமாகச் சேவைசெய்யக் கோரியது. பெண்ணின் சுயமான பாலியல் தேர்வு, ஈடுபாடு என்பது சிறுவயதிலேயே நலமடிக்கப்பட்ட நிலையில், பெண் கணவனுக்குப் பயன்பாட்டுப் பொருளாகப் பண்டமாக்கபபட்டாள்.

இந்தச் சிறுவயது திருமணங்கள் சிறுவயது விதவைகளை அபராதமாக உற்பத்தி செய்தது. அத்து மீறிய ஆணின் பாலியல் வேட்கைக்குப் பலியான பெண், மரணத்தின் எல்லையில் ஊசலாடினாள். அத்துடன் சிறுவயதுக் குழந்தைகள் சிறுவயது திருமணத்தால் கர்ப்பமாவதால் பெண்ணின் இறப்பை விரைவுபடுத்தியது. வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண் சாதிக்கடமைக்குள்ளான மருத்துவத்தை மட்டும் பெறக் கோரிய நிலையில், குழந்தை பிறப்பு என்பது பெண்ணின் இறப்பாகியது.

இது ஒருபுறம் நிகழ்கின்றபோது, வயது இடைவெளியினால் கணவனின் இறப்பு மனைவியின் இறப்பைவிட அதிகமானதாக இருந்தது. இதனால் பெண் விதவைகளின்; எண்ணிக்கை அதிகரித்தது. இந்த விதவைகள் பார்ப்பனிய ஒழுக்க, ஆணாதிக்கக் கோட்பாட்டைச் சிதைத்தது. பெண்ணின் பராமரிப்பு அல்லது அவளின் வாழ்க்கைக்கான பொருளாதாரம் என்பது, ஆண்வழிச் சொத்துரிமையை மற்றும் ஒருதார மணத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இதனால் பெண் குறித்த கணவனின் ஆண்மரபைத் தாண்டி, மறுமணம் செய்தல் தவிர்க்க முடியாத விதியாகியது. இவை பார்ப்பனிய ஒழுக்கத்தின் ஆணாதிக்க வழியைக் கேள்விக்குள்ளாக்கியது. குறித்த ஒரு பெண் மீதான ஆணின் ஆதிக்கம் வலுவிழந்தது.

எனவே, பெண் மீதான மறுமணத்தடை ஏற்படுத்துவதைப் பார்ப்பனிய மனுதர்மம் தனது ஆணாதிக்க வழியில் நிறைவு செய்தது. இதைச் செய்ய பெண்ணை ஆசைகளிலும், உலக நுகர்விலும் இருந்து அகற்றுவது அவசியமாகியது. இதனால் வெள்ளை ஆடை அணிவது, மொட்டையடித்தல், சுபகாரியத்தில் ஈடுபட தடை, தீட்டு கொண்ட பெண், நல்ல விடயத்துக்கு ஆகாத பெண்.... போன்ற பல விதிகள் இன்று வரை சமூக விதியாக உள்ளது. இதையே அன்று மனு 5.157 இல் "விதவையானவள் அவள் தன் சொந்த விருப்பத்தோடு காய், கனி, கிழங்கு முதலியவற்றை உண்டு, தன் உடலை இளைக்கச் செய்யவேண்டும். தன் கணவன் இறந்த பின்னால் வேறொரு ஆடவனின் பெயரைக்கூட உச்சரிக்க அவளை அனுமதிக்க கூடாது."13 மனு 5.161 இல், "குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் மறுமணம் செய்து கொள்ளும் ஒருபெண் தன் இறந்த கணவனை அவமதிப்பதோடு தனக்குத் தானே இழிவையும் தேடிக் கொள்கிறாள். அவள் சொர்க்கத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவாள்"13 என்ற ஒழுங்கில் பெண் மீதான கட்டுப்பாடு ஆணாதிக்கக் கணவன் வழியில் தீர்மானமாகியது. கணவனின் சொத்தாக, பண்டமாகப் பாவிக்கப்பட்ட பெண்ணுக்குக் கணவனின் பின்னான சுயமான வாழ்க்கையும் கூட அர்த்தம் அற்றதாக்கப்பட்டது. மாறாக, கணவனின் சொத்தான மனைவி, மகனின் சொத்தாக்கப்பட்டாள். தந்தை கணவனுக்கு விற்றதன் மூலம், அதாவது தானமாகப் பொருளுடன் கொடுத்ததன் மூலம், கணவன் பாலியலை அனுபவிக்கவும், பிள்ளை பெறவும், தனக்குச் சேவை செய்யவும் உருவாக்கிய பொம்மையின் உரிமையாளர் இறந்தால், அந்தப் பெண் மகனின் சொத்தாக, மகனுக்குச் சேவை செய்பவளாக மாற்றப்பட்டாள்.
பெண்ணை உணர்ச்சி அற்ற மரக்கட்டையாக மாற்றிய போது, பெண்ணின் சுயவிருப்பத்தில் உணவு வகையைப் பயன்படுத்துவதை மனுதர்மம் கோரியது. இது இன்றும் பெண்கள் சுயவிருப்பத்தில் விரதங்கள், மரக்கறி உணவுகளை உண்பதும், அதற்காகப் போராடுவதும் இதில் இருந்தே காணமுடிகின்றது. அதே நேரம் வேறொரு ஆணின் பெயரை உச்சரிப்பதைத் திட்டவட்டமாகத் தடை செய்தனர். மதத்தின் ஊடான ஆதிக்கம் விதவைப் பெண்ணின் ஒழுக்கத்தைக் கோரியதுடன், உணர்ச்சியை அடக்கக் கோரியது. இந்தத் தடை பெண்ணின் சுயப் பொருளாதார ஆதாரத்தை அற்றதாக்கியது. வாழவழியற்ற பெண்களை, இந்தப் பார்ப்பனிய ஒழுக்கத்துக்குட்பட்டு உணர்ச்சியைக் கட்டுப்படுத்தப்பட முடியாத பெண்களை, விபச்சாரத்திலும் கள்ள உறவிலும் ஈடுபட பார்ப்பனிய ஒழுக்கம் நிர்ப்பந்தித்தது. இதை மனுவுக்குப் பிந்திய பார்ப்பனியம் தடுக்க, கண்ட வழிதான் உடன் கட்டை ஏறுதல் ஆகும். இந்த உடன் கட்டைக்கு முந்திய காலத்தில், மனுவுக்குப் பிந்திய வரலாற்றில் விதவைகளின் ஒழுக்கம் பற்றிய நிறைய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன.

மனுவைப் போல் புகழ் பெற்ற யக்ஞவல்கியர் (கி.பி. 150-200 இல்) எழுதியதைப் பார்ப்போம். "கணவனைப் பிரிந்த பெண் தந்தை, மகன், சகோதரன், மாமியார் அல்லது தனது மாமா ஆகியோரைப் பிரிந்து வாழக்கூடாது. அவ்வாறு இல்லையெனில் தண்டனைக்கு உள்ளாவாள்"13 என்றதன் மூலம் ஆணாதிக்க விதியை மறுத்து பெண்கள் வாழ முற்பட்டதையும், போராடியதையும், சமூகத் தண்டனை வழங்கப்பட்டதையும் காணமுடிகின்றது. தந்தை, கணவன், மகன் போன்ற ஆணாதிக்கச் சிறைக்குள், அதை நிறைவு செய்யக் கூடிய சிறையான சகோதரன், மாமா, மாமி என்று விரிந்த தளத்தில் விதவைத்தனத்தை அமுல்படுத்த அதிகாரத்தை வழங்குகின்றனர். இந்த இடத்தில் மாமி அதிகாரத்தைப் பெண்மூலமே ஆணாதிக்கம் உருவாக்கி வலுப்பெறுகின்றது. மகனின் மீது பெற்றுக் கொண்ட உரிமையையும், கணவனின் மீதான உரிமையையும் ஒரு பெண் மூலம் மாற்றி அமைத்த பாத்திரம் தான் மாமியார் ஆகும். தான் அனுபவித்த கொடூரத்தை, மீள ஒரு பெண்ணுக்குச் செய்வித்து இன்பம் காணும் ஆணாதிக்க அதிகார வடிவத்தின் பிரதிபலிப்புதான் மாமியார் கொடுமையாகும். இங்கு ஆணின் சுமை மகனுடைய அன்பின் வழியில், ஆதிக்கத்தின் வழியில் அரங்கேறுகின்றது. பாடசாலை ராக்கிங் வடிவில் எதிர்த் தன்மை பெற்று அதிகாரவடிவில், ஒரு குடும்பக் கட்டமைவில் வெளிப்படுகின்றது. இங்கு இரக்கம் என்பது ஏற்படாத வகையில் இது பண்பாடு, கலாச்சார உரிமை வகையினமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
பெண்ணின் விதவைத்தனம் அத்து மீறலாக மனுவுக்குப் பிந்திய வரலாற்றில் தொடர்ந்ததால் தண்டனை கொடுக்கப்பட்டதை யக்ஞவல்கியரின் கூற்று தெளிவாக்குகின்றது. இதற்குப் பிந்திய மிதக்சாரா என்ற விரிவுரையை எழுதிய விக்னேஸ்வரர் (கி.பி 1070-1100 இல்) "இது (சதி) கன்னி வாழ்க்கை வாழ்வதற்கு மாற்று வழியாகும்."13 இதை அவர் வலியுறுத்தி "அவருக்குப் (கணவனுக்கு) பிறகு சிதையில் வீழ்த்துவதில் பெரிய நன்மை இருக்கிறது"13 என்றதன் மூலம் பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தைப் பாதுகாக்க மாற்றுவழிகளை ஆணாதிக்கப் பார்ப்பனியம் அமுல்படுத்தியது. இதைத் தாண்ட பெண்ணுக்கு உரிமையில்லை. அதாவது விவாகரத்து முதல் கணவனின் மரணத்தின் பின் கூட பெண் சுயமாக வாழமுடியாது. இதைப் பாதுகாக்க பெண்ணின் கட்டாய விதவைக் கோலமும் கொடூரமான கண்காணிப்பும் கையாளப்படுகின்றது.

இதில் ஏற்பட்ட பெண்ணின் அதிருப்திகள் ஒழுக்க மீறல்களாக வெளிப்பட்ட போது, இதற்குப் பார்ப்பனியம் கண்ட வழி பெண்ணைக் கணவனின் சிதையில் எரியூட்டுவதே. ஆணுக்கு இவை விதிவிலக்காக இருந்தன. ஆணைப் பின்னால் முன்புபோல் பலதார மணத்தில் வாழ அனுமதிக்கும் பார்ப்பனியத் தர்மம், பெண்களை நாயைவிட மோசமாகத் தாழ்த்தி ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தியது.

மனுதர்ம ஒழுக்கங்களை மீறும்போது கடுமையான அடக்குமுறைகள் கையாளப்பட்டது. இதில் ஆண் - பெண் வேறுபாட்டைக் காட்டவில்லை. ஆனால், ஆண் - பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கையும், சாதிக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கையும் அந்தந்தச் சலுகைகளுடன் தீவிரமாகக் கடைப்பிடிக்க வன்முறை கையாளப்பட்டது. இது மட்டும் தான் மனுதர்மத்தின் வெற்றிக்கும், பார்ப்பனியத்தின் உன்னதமான வாழ்க்கைக்கும், ஆண்களின் நலன்களை உள்ளடக்கிய ஆணாதிக்கச் சமூகத்தை ஒழுங்கமைக்க இருந்த பாதையாகும்.

சாதிகடந்த திருமணம் செய்ய முற்பட்டவர்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர். அதை மீறுபவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இதன் மூலம் சமூகப் புறக்கணிப்புத் தண்டனை முறை என்பது சம்பந்தப்பட்டவனின் அழிவைப் பறைசாற்றியது. இது இன்றும் தொடர்வதை நாம் காணமுடியும். இது ஒருபுறம் நிகழ்கின்றபோது, மறுபக்கத்தில் சாதிகடந்த உறவுகளுக்குக் கடும் தண்டனை கீழ் இருந்து மேலாக அமுல்படுத்தப்பட்டது. மனு 8.374 இல், "(உறவினர்) பாதுகாப்புடைய அல்லது தனித்து வாழ்கின்ற உயர்சாதிப் பெண்ணுடன் உடலுறவுகொள்ளும் சூத்திரன் கீழ்க்கண்டவாறு தண்டிக்கப்படுவான். அவள் தனித்து வாழும் பெண்ணாயிருந்தால் குற்றம் செய்த அவன் உறுப்பை இழப்பான். அவள் பாதுகாப்புடைய பெண்ணாயிருந்தால் அவன் கொல்லப்படுவான், அவன் சொத்து பறிமுதல் செய்யப்படும்"13 என்றதன் மூலம் தனித்து வாழும் பெண்ணின் பாதுகாப்பை விட பாதுகாப்பில் வாழும் பெண்ணைச் சார்ந்து தண்டனை கொடூரமாக இருந்தது. இங்கு ஆணாதிக்கத்தின் பாதுகாப்பு பெற்ற பெண், மற்றும் வெளிக் கண்காணிப்பு கொண்ட பெண் என இரு தளத்திலும் தண்டனை வேறுபாடு, ஆணாதிக்கத்தின் உச்சக் கொடூரமாக இருந்தது. இங்கு இவை பலாத்காரமான கற்பழிப்பு அல்ல, மாறாக விரும்பிய உறவுக்கான இத் தண்டனை என்பது, பெண் ஒரு ஆணைச் சாதி கடந்து விரும்பும்போது அவ்வாண் உயிரையே பறிக்கும் அளவுக்குப் பார்ப்பனியச் சர்வாதிகார நிலைமை இருந்தது. அதேநேரம் பெண்ணை விரும்பும் ஆண் தன்னை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான். இதனால் பெண்ணின் கற்பை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் பேணுவதில் ஆணாதிக்கம் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியது. வரலாற்றில் பெண் தான் விரும்பியவனுடன் உடலுறவு கொள்ளும் கற்புத் தன்மையைப் பார்ப்பனியம் கற்பழித்தது. மாறாக, ஆணாதிக்கப் பார்ப்பனியம் நாணம் பூட்டும் ஆணுடன் மட்டும் கொள்ளும் உறவே கற்பு என்று விளக்கத்தைக் கொடுத்துக் கண்காணித்தது. வரலாற்றில் இன்று வரை பெண் ஆண் துணையின்றி வாழும்போது, ஆணை நேசித்தாலும் அதை வெளிக்காட்டாத அச்சத்திலும், அதேநேரம் ஆணைக் கண்டு இரசிப்பதிலும் தன்னை எல்லைப்படுத்த வேண்டிய மன உளவியலில் சிக்கிக் கொண்டாள்.

சொந்தத் தீர்மானத்தைக் கொண்டு கற்பைப் பேணும் பெண், அதனடிப்படையில் காதலிக்கும் போது சமூக ஒழுக்கத்தை மீறி பகிரங்கமாகின்றபோது ஆண் கொல்லப்படும் நிலையில், ஆணைக் கண்டுகளிப்பதும் இல்லாத சூனியத்தை விட மௌனமான விருப்பம் அவளின் எதார்த்தமான வாழ்வாகியது. இதை மீறும் பண்பாடோ, கலாச்சாரமோ அத்து மீறலாகவே ஆணாதிக்கம் கருதித் தண்டித்தது. பெண்ணின் உணர்ச்சியைச் சிதைத்தபோது இவை மீறப்பட்டன. இதனால் தண்டனைகள் வழங்கப்பட்டன. இவைகளை ஒழுங்கமைக்க பெண்களைச் சிதையில் தள்ளியதையும் வரலாறு நீக்கல் இன்றி எமக்குக் காட்டுகின்றது. பழக்கப்பட்ட, நக்கிப் பிழைக்கும் உணர்ச்சியற்ற வாலாட்டும் நாயைப் போல் பெண், ஆணுக்கு முதுகு சொறிந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஆண் அதைக் கண்காணிப்பவனாக மாற்றப்பட்டான். சமூகம் அதை அமுல்படுத்தக் கோரியது. உணர்ச்சிக்கு எல்லை போட்டு, அணைகட்ட முற்பட்ட எல்லா நிலையிலும் அவை இயற்கையாக மீறப்படுவதும், புதிய ஒழுங்குகள் விதிகள் போட்டபோதும் பெண்ணின் போராட்டம் அலையாகத் தொடர்வதும் வரலாறாக எம்முன் உள்ளது. பெண் மீதான சாதிய ரீதியான பாலியலில் வேறுபட்ட அடக்குமுறை என்பது, மற்றைய சமூகங்களில் இருந்து குறிப்பாக வேறுபடுத்துகின்றது. இந்த அடக்குமுறைகள் துல்லியமாக ஆணாதிக்கத் தன்மையையும், தனிச்சொத்துரிமை ஆதிக்கத்தையும் கொண்டது.
கேரளத்தில் சென்ற நூற்றாண்டில் கூட ஈழவர் சாதிப் பெண்கள் தலைவரி கட்டியதுடன், முலைவரியும் கட்ட ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை கோரியது. இந்த அவமானத்தை தாங்க முடியாது ஷசேர்த்தலை என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஈழவர் பெண் தன் இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில் வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தாராம். (அந்த இடம் இன்றும் முலைச்சிப் பறம்பு என்று அழைக்கப்படுகின்றது)... கிறிஸ்தவச் சாணார் பெண்கள் முலை மறைத்து உடை அணிந்ததால் ஆடை களைந்து அவர்களது முலைகள் அறுக்கப்பட்டன..."30 இந்தியச் சாதியச் சமூகத்தில் பெண்ணின் தெரிவுக்கான (இங்கு தெரிவு எதார்த்தத்தில் ஆண் சார்ந்தும் உள்ளது) ஆண்கள், குறுகிய வட்டத்துக்குள் இறுகிப் போயுள்ளது. இது சாதிய ரீதியில் மேலும் ஆணாதிக்கத் தன்மை வாய்ந்தாக வக்கரித்துள்ளது.
இதைத் தகர்க்காத வரை பெண் சுதந்திரம் கிடையாது. இது இந்து மதத்தைத் தகர்ப்பதில் சார்ந்துள்ளது. இந்து மதத்தை எதிர்த்துப் போராடாத யாரும் பெண்ணை விடுவிக்கமுடியாது. இந்து மதத்தின் தனிச் சொத்துரிமைக் கோட்பாடு, ஆணாதிக்கக் கோட்பாடு, சாதியக் கோட்பாடு, இனக் கோட்பாடு, மதக் கோட்பாடு போன்றனவற்றைத் தகர்க்க வேண்டும். அதாவது இந்து மதத்தையே தகர்க்கவேண்டும்;. இது தனிச் சொத்துரிமையைத் தகர்ப்பதில் மட்டுமே சாத்தியம். மற்றையவை எல்லாம் தனிச் சொத்துரிமையில் சீர்திருத்தத்தை முன்வைக்கும் போது, அவை தன்னளவில் இந்துமதத்தின் தனிச்சொத்துரிமை நிலையை இறுகக் கட்டிக் காப்பதாகவே உள்ளது. எனவே தனிச் சொத்துரிமையில் இருந்து உருவான மற்றைய மனிதப் பிளவுகள் என்னதான் போராடினாலும் சுரண்டிக் கொழுக்கும் ஜனநாயகச் சுதந்திரத்தில் ஒட்டிக் கொள்கின்றது.