தமிழ் அரங்கம்

Showing posts with label அரசு-புலி. Show all posts
Showing posts with label அரசு-புலி. Show all posts

Tuesday, April 21, 2009

இனவழிப்பு யுத்தமா அல்லது அரசு-புலி யுத்தமா நடக்கின்றது!?

அரசியலை துறந்தோடிய எம் சமூகத்தில், புலி-புலியெதிர்ப்பு என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிந்தனைக்குள் ஒரு இனவழிப்பு அழகாக நியாயப்படுத்தப்படுகின்றது. இதுவொரு இனவழிப்பல்ல, அரசு-புலி என்ற தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் சொந்த அழிவு யுத்தம் என்று எம்மை அரசியல் ரீதியாக திருத்த முனைகின்றனர். வெட்கக்கேடானதும், மானம் கெட்ட அரசியலாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதைக் கண்டுகொள்ளக் கூடாது. இந்த அழிவை மௌனமாக அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் தமிழினம் மீதான ஒடுக்குமுறையின் தொடர்ச்சியில் ஒரு அங்கம் தான் இது என்பதை, மறுக்கின்றனர். எல்லா புலியெதிர்ப்பு அரசியலும் போல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை விடுதலைப் புலிகளின் அழிவின் ஊடாக பார்க்கின்றனர்.

விடுதலைப்புலிகள் அழிந்தால் நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்கின்றனர். இதற்காக அவர்கள் வைக்கும் காரணங்கள் வேறுபட்ட போதும், விடுதலைப்புலிகளின் அரசியல் அழிவை தம் சொந்த அரசியல் முன்னெடுப்புகள் ஊடாக முன்னெடுக்கவில்லை. இன்று பேரினவாதம் தன் இனவழிப்பின் ஒரு அங்கமாக, அதற்கு தடையாக இருந்த புலிகளை அழிக்கின்றனர். இப்படி தம் சொந்த அரசியல் நெருக்கடியில் சிக்கிய புலிகளிடம், ஆயுதத்தை கையளிக்கவும் சரணடையவும் கோருகின்ற அரசியல் முன்வைக்கப்படுகின்றது. இதன் மறுபக்கத்தில் புலிகளே இந்தத் ஒரு துரோகத்துக்கான அரசியல் பேரங்களை ஏகாதிபத்தியங்கள் ஊடாக நடத்துகின்றனர்.

மொத்தத்தில் ஒ......
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 5, 2009

கொல்வதை நியாயப்படுத்தியும், கொல்லப்படுவதை எதிர்க்கும் பாசிச அரசியல்

அரசு-புலி என்று இரு தளத்திலும், இதுவே இன்று அரசியல். இதில் ஒன்றைச் சார்ந்துதான், புலி-புலியெதிர்ப்புக் கருத்துகள். இப்படி தேசிய வெறியர்களும், தேசிய எதிர்ப்பு வெறியர்களும் மக்கள் விரோத உணர்வுடன் நடத்தும், பாசிச நாடகம். மக்களிள் விருப்பத்துக்கு மாறாக, பலாத்காரமான முடிவுகளை திணிக்கின்றனர். தம் அற்பத்தனமான சுரண்டும் வர்க்க விருப்பையே, மக்களின் பிணத்தின் மேலாக அடைய முனைகின்றனர்.


இதற்காக 50000 மக்களை படுகொலை செய்தாலும் கூட, அதை எதிர்ப்தரப்பு மீது குற்றம்சாட்டி விடத் தயாராகவே புலி-புலியெதிர்ப்பு உள்ளனர். மக்களை படுகொலை செய்வதன் மூலம் தான் தமக்கு தீர்வு உண்டு என்று அடித்துச் சொல்லும் பிரச்சாரங்கள், எம்மைச் சுற்றி சூடுபறக்க நடக்கின்றது. தமிழ் மக்கள் கொல்லப்படுவது என்பதுதான், புலி-புலியெதிர்ப்பு தரப்பின் அரசியல். ஆகவே நாளை தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள். புலி-புலியெதிர்ப்பு அரசியல் இதை நன்கு தெரிந்துகொண்டே, இந்த வழியை ஆதரிக்கின்றனர்.

இந்த துயரத்தை அனு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்