தமிழ் அரங்கம்

Showing posts with label பிரம்மம். Show all posts
Showing posts with label பிரம்மம். Show all posts

Sunday, January 24, 2010

நாட்டு மக்கள் மீதான போர்தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர்

"ஆபரேசன் கிரீன் ஹண்ட்' (காட்டு வேட்டை) என்ற பெயரில் மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்தும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.


சுமார் ஒரு லட்சம் போலீசு மற்றும் துணை இராணுவப் படையினருடன் சல்வாஜுடும், ஹர்மத் வாகினி, நாகிரிக் சுரக்சா சமிதி, சன்லிட் சேனை முதலான அரசு ஆதரவு பெற்ற கூலிப் படைகளும் மாவோயிஸ்டுகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் எதிராகக் களத்தில் நிற்கின்றன. ""இராணுவம் நேரடியாகக் களத்தில் இறங்காது'' என்று கூறிக் கொண்டே சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராக ரூ. 7,300 கோடி நிதி ஒதுக்கி, இராணுவ ஹெலிகாப்டர்கள் துணையுடன், இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்தப் போர் நடத்தப்படுகிறது. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப் படைகளின் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் நசுக்குவதற்கென்றே எல்லா வகையான ஆள் தூக்கிக் கருப்புச் சட்டங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ""இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி'' என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார், சட்டிஸ்கர் மாநில டி.ஜி.பி விசுவரஞ்சன்.

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இதுதான்: தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அற்புதமான அரிய .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Saturday, January 23, 2010

அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர்.

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை அதாவது தீட்சிதர்களை!

பண்டங்களால் மனிதர்கள் ஆளப்படும் இந்தக் காலத்தில், அதிகாரத்தின் குறியீடுகளும் அஃறிணைப் பெயர்களால் அழைக்கப்படுவது ஆச்சரியத்துக்குரியதல்ல. தில்லியைப் போல தில்லையும் அதிகாரத்தின் ஒரு குறியீடு.

தில்லை நடராசர் கோயிலின் நிர்வாகத்தை அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்ததன் மூலம், தங்களது மத நம்பிக்கையிலும், மத உரிமையிலும் தமிழக அரசு அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்திருக்கிறது என்பது தீட்சிதர்களின் குற்றச்சாட்டு.

கோயிலுக்குச் சொந்தமான 2500 ஏக்கர் நிலம், இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை வரை பரவியிருக்கும் கோயிலின் சொத்துகள், இடுகாட்டுச் சாம்பல் பூசித் திருவோடேந்தித் தாண்டவமாடும் பெருமானின் தலைக்கு மேலே தகதகக்கும் பொன்னோடு, அவரது உடல் மீது வேயப்படும் ஆபரணங்கள் உள்ளிட்ட கிலோக் கணக்கிலான நகைகள், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள்… இன்ன பிற சிவன் சொத்துகள் அனைத்தும் தங்கள் குலத்துக்கே சொந்தம் என்றும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மேற்படி.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்