தமிழ் அரங்கம்

Saturday, December 5, 2009

பிரபாகரனின் மரணம் மாற்றுக்கருத்து தளத்தை நேர்மையாக்கி விடுமா!? மக்கள் நலன் கொண்டதாகி விடுமா!? (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 6)


கடந்த வரலாற்றை மூடிமறைத்து மார்க்சியம் பேசுதலே தான், இன்று புதிய எதிர்ப்புரட்சி அரசியலாகும். 1983ம் ஆண்டு இயக்கங்கள் தோன்றியது போல், எல்லா புனித பட்டங்களுடன் மார்க்சியம் பேசத் தொடங்குகின்றனர். தம்மை மக்களின் புதிய மீட்பாளராக காட்ட முனைகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில், அதன் வௌ;வேறு காலகட்டங்களில், என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற ஆய்வை மறுத்து தொடங்குகின்றது இந்த எதிர்ப்புரட்சி அரசியல்.

ஆய்வாளர்களாக வானத்தை நோக்கியும் வழிகாட்டுவதாக கூறும் இவர்கள், புலி மற்றும் அரசுக்கு எதிரானவர்கள் மக்களை நோக்கி எப்படி என்ன அசைவைக் கொண்டு இருந்தார்கள் என்பதை மட்டும் ஆராய எந்த வக்கற்றும் கிடக்கின்றனர். ஓளிவட்டம் கட்டி, மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலை விதைப்பது மார்க்சியம் என்கின்றனர். எதிர் வினையாற்றாது, தங்கள் கடந்தகாலம் சந்தர்ப்பவாதத்துடன் நடத்திய அரசியல் கூத்தை, மூடிமறைத்துக் கொண்டு களமிறங்குகின்றனர்.

கடந்தகாலத்தி...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Friday, December 4, 2009

நடந்த போராட்டத்தை திரித்து மறுக்கும் இனியொருவின் அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 5)

அசோக் தீப்பொறியின் போராட்டத்தையும், தளக்கமிட்டியின் போராட்டத்தையும், பல சிறு குழுக்களின் போராட்டத்தையும், மறுத்தும் திரித்தும், அனைத்தையும் ஒன்றாக இட்டுக் கட்டியதுடன், "எங்களோடும்" என்று கூறி றோ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எவ்யுடன் சேர்ந்து நின்றதை மூடிமறைத்ததைப் பார்த்தோம். இந்த வரலாறு தான் இப்படி என்றால், அசோக் நாவலனுடன் சேர்ந்து கடந்தகால மற்றொரு வரலாற்றை திரித்து மறுக்கும் அரசியல் அசிங்கமோ இங்கு இயல்பில் எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

இங்கு நாவலன் துணையுடன் அசோக் கூறுகின்றார்

"1990களின் பிற்பாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஜிதரன் போராட்டம் தோழர் நாவலன் தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெறாமல் இருந்திருந்தால் உங்கள் பெயரே இன்று எவராலும் இனம்காண முடியாமல் போயிருக்கும். தோழர் நாவலன், தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விஐpதரன் போராட்டக்குழு அமைக்கப்பட்டபோது பல மாணவ தோழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாவலனின் முயற்சியால் அக் குழுவில் சேர்க்கப்பட்டீர்கள்.

அந்த வரலாற்றை இன்று ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

புலிஆண்ட புலத்து மனங்கள்

போர்முரசறைந்த கொடியவர்கள்
நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறு
வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்
போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்
நாட்டைக் காட்டிக்கொடுக்கோமென
இரத்தம் தோய்ந்த கரங்களா
ல்புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்…

பழைய எல்லாத்தீர்மானங்கட்கும் மேலானதாய்

வழங்கப்போவதாய் விஞ்ஞாபனங்கள் தயாராகிறது
புலிகளை வைத்து அரசியல் நடத்தியவர்கள்
யாரை ஆ+ரத்தழுவுவதென குழம்பிப்போய்..நாளை
காலமோட்டும் கனவுகள் மட்டுமாய்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, December 3, 2009

வரலாற்றை இருட்டடிப்பு செய்து, அதை தமக்கு ஏற்ப வளைத்து திரிப்பதும், புலிக்கு பிந்தைய அரசியலாகின்றது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 4)

கடந்தகால மனித விரோதங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டதே எம் வரலாறு. படுபிற்போக்கான அரசியல் கூறுகள், தம் வன்முறைகள் மூலம் உண்மைகளை குழி தோண்டி புதைத்தது. சமூகம் அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போனது. இதற்குள் சகல பிற்போக்கு சக்திகளும், தம்மை மூடிமறைத்துக் கொண்டே நீச்சலடித்தனர். (வரலாற்று ஆவணங்கள் இணைப்பு)

வரலாற்று உண்மைகள், அது சார்ந்த ஆவணங்கள், சாட்சியங்கள் அனைத்தும் வரலாற்றின் முன் காணாமல் போய்விடுகின்றது. இதை வைத்து அன்று பிற்போக்கான மக்கள் விரோதநிலை எடுத்தவர்கள், இன்று அதை மூடிமறைத்தபடிதான் மீளவும் எதிர்ப்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றனர்.

சென்ற பகுதியில் குறித்த ஒரு ஆவணம் மூலம், வரலாற்றை திரித்துப் புரட்டும் அசோக்கிசத்தை மட்டுமல்ல, "இனியொரு" வின் சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தையும் சேர்த்துப் பார்த்தோம். அதைச் சுற்றி வெளிவந்த 10 ஆவணங்களை, வரலாற்றை திரிப்பவர்களுக்கு எதிராக முதன் முதலாக இந்த கட்டுரை மூலம் உங்கள் முன் வெளிக்கொண்டு வருகின்றோம்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


போலீசு அதிகாரி கடத்தல் விவகாரம்: பயங்கரவாதிகள் யார்?

மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தின் ஜங்கல் மகால் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மேதினிப்பூர் பகுதியிலுள்ள சங்கராயில் போலீசு நிலையத்தைத் தாக்கி, அதிந்திர நாத் தத்தா என்ற போலீசு அதிகாரியைக் கடந்த அக். 20 அன்று மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். பி.பி.சி. செய்தியாளர்களின் முயற்சியால் அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமிடையே பேரம் பேச்சு வார்த்தை நடந்து அக்.22ஆம் தேதியன்று போலீசு அதிகாரியான அதிந்திரநாத் தத்தா விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 14 பழங்குடியினப் பெண்கள் உள்ளிட்ட 23 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த செப் 3ஆம் தேதியன்று கைது செய்யப் பட்டு, எவ்வித விசாரணையுமின்றி ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லால்கார் வட்டார பழங்குடியினப் பெண்கள் மீது கொலை முயற்சி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள், சதி செய்தார்கள் என்றெல்லாம் பொய் வழக்குகள் சோடிக்கப்பட்டுள்ளன. தாங்கள் எதற்காகக் கைது செய்யப்பட்டோம், தற்போது எதற்காக விடுதலை செய்யப்படுகிறோம் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்த 14 பெண்களுக்கு ஊருக்குத் திரும்பிச் செல்வதற்குக் கூட போக்குவரத்து செலவுக்குக் கையில் காசில்லை. அவர்களது உற்றார் உறவினர்கள் கூட, தங்களையும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று கைது செய்வார்களோ என்ற......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Wednesday, December 2, 2009

தங்கள் தலைமையில் நடந்த கொலைகள் பற்றிப் பேசாத "நேர்மை" அரசியல் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 3)

"மக்களை அரசியல் மயப்படுத்த” காடு மேடுகள் எல்லாம் திரிந்து, அடுத்த புத்தாண்டில் (சித்திரையில்) தமிழீழம் என்றவர்கள் இவர்கள். இப்படி "அரசியல் மயப்படுத்த"ப்பட்டவர்களை ஏமாற்றி பிடித்துச் சென்றவர்கள், அதில் ஒரு பகுதி இளைஞர்களை கொன்றார்கள். இது வரலாறு.

இதையா அசோக் புளாட் வரலாறாக சொல்லுகின்றார். இந்த கொலைகாரப் புளட்டை எதிர்த்து புளாட்டில் இருந்த வெளியேறி வாழ வழியற்று வாழும் டேவிட் ஐயா எழுதிய "கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும்" என்ற நூலில் 286 படுகொலைகள் பின்தளத்தில் நடந்ததாக எழுதியுள்ளார்.

இப்படி உட்படுகொலையை புளாட் செய்தது. அதன் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தான் அசோக்.

கொலைகார முகுந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவர் தான் இன்று ஈ.என்.டி.எல்.எவ் ஏஜண்டாக இருக்கும் ஜென்னி.

டேவிட் ஐயாவுக்கு இருந்த நேர்மை ஒரு துளிதன்னும் இவர்களுக்கு கிடையாது.

யார் இந்த........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Tuesday, December 1, 2009

வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை ஜாரையும் விட்டு வைத்ததில்லை -ஜீவமுரளி

வரலாறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்ற தத்துவம் முன் எப்போதையும் விட இன்று பரவலாகவும் அடிக்கடியும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லது பரவலாக பல அர்த்தங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. யாருடைய வரலாற்றிலிருந்து யார் பாடம் கற்றுக்கொள்வது? யாரிடம் கற்றுக்கொள்வது? யாருக்காக கற்றுக்கொள்வது? என்ற முரண்நகையான சந்தேகங்களை மாக்சிடம் கேட்பதற்கு அவரும் உயிருடன் இல்லை. ஜார் மன்னனிடம் என்னதான் கற்றுக்கொண்டீர் எனக் கேட்பதற்கு லெனினும் இல்லை. இப்படி ஒரு துர்ப்பாக்கிய சூழலில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். -உயிர்மெய் 2009 மலரிலிருந்து-எனது வரலாறு ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு மார்ச் மாதம் பதினைந்தாம் திகதி தாயாரின் பிறந்தநாள் அன்று தொடங்குகின்றது. அன்று தமிழீழம் காணுவதற்காக கள்ளத் தோணியில் வல்வெட்டித்துறையில் இருந்து புறப்பட்டு வேதாரணியத்தில் கால்வைத்து இன்று ஐரோப்பாவில் வாழ்ந்து வருகிறேன்.


வரலாறு என்பது மக்களின் போராட்டங்களே என மாக்ஸ் எழுதிவைத்துப் போவதற்கு முன்னரும், அவர் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னரும், மக்கள் வாழ்ந்தார்கள். மன்னர்களும் வாழ்ந்தார்கள். மன்னர்கள் கொலைகளும், மக்கள் போராட்டங்களும் செய்தார்கள். மக்களின் வரலாற்றை மாக்ஸ் மன்னர்களுக்காகவன்றி மக்களுக்காகவே தொகுத்து தந்தார். மாக்ஸின் உழைப்பிலே மனிதர்கள் குறைந்தபட்சம் கற்றுக்கொள்ள........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

அரசியல் நேர்மை என்பது உண்மைகளைச் சார்ந்தது (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 2)

இன்று ஒரு அரசியல் இயக்கம் முதல் தனி மனிதன் வரை கொண்டுள்ள அரசியல் நேர்மையானது என்பதை, நாம் எப்படி இனம் காண்பது? கடந்த காலத்தை எப்படி அவர்கள் காட்டுகின்றனர் என்பதுடன் தொடர்புடையது. தாங்களும், மற்றவர்களும் அதில் என்ன அரசியல் பாத்திரத்தை வகித்தனர் என்பதுடன் தொடர்புடையது. அதை விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு எப்படி உள்ளாக்கினர் என்பதுடன் தொடர்புடையது.

கடந்த காலம் முதல் எம் மக்களை இன்றைய இழிநிலைக்கு யார் கொண்டு வந்தனர் என்பதையும், அதைச் செய்தவர்கள் யார் என்பதையும் இனம் காட்டினரா என்பதையும், அதற்கு எதிராக போராடினரா என்றும் பார்க்கவேண்டும். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்கள் என்ன செய்தனர், எதை மக்களுக்கு முன்வைத்தனர். யாருடன் சேர்ந்து நின்றனர் என்பதை எல்லாம் நாம் பார்க்கவேண்டும். நேர்மையான அரசியலை, இங்கு இதனுடாக நாம் இனம் காணமுடியும்.

மக்களுக்கு எதை அவர்கள் முன்வைத்தனர். எதை தீர்வாக வழிகாட்டினர். இப்படி அரசியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யாத அனைத்தும்,.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவு

Monday, November 30, 2009

புலத்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு நடந்ததென்ன? நடப்பது என்ன?

புலம்பெயர் சமூகம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். நாடு கடந்த தமிழ் ஈழத்தை பொறுப்பேற்க வேண்டும்! இதுவே தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்கின்றனர் புலம்பெயர் புலிச் «சிந்தனையாளர்கள்.»

இதை நோர்வேயின் பெரும் பான்மைத் தமிழ் மக்கள் நிராகரித்தே விட்டனர். இத்தேர்தலை புலிகளின் ஒரு பகுதியினர் கூட விரும்பவில்லை. இதை அங்கிருந்து வரும் செய்திகள் ஊர்ஐpதம் செய்கின்றன.

நோர்வேயில் தமிழ்மக்களின் எண்ணிக்கை 27,000. வாக்களிக்கத் தகுதி பெற்றோர் 20,000. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களித்தோர் 2,677 பேர் மட்டுமே.

தமிழ் மக்கள் புலிகளின் தமிழ் ஈழப்போரின மூலம் பலவறறைப்பட்டறிந்துள்ளனர். அதிலிருந்து பிழையான பலவற்றை மௌனமாக, அமைதியாக நிராகரிக்கின்றார்கள். தற்போது அவர்கள் போராடும் வல்மையை இழந்துள்ள நிலையில், அவர்களின் அண்மைக்கால போரும்-ஆயுதமும் மௌனமும் நிராகரிப்புமே. இவ் ஆயுதம்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

எதிர்புரட்சி அரசியலோ தனக்கு தானே லாடம் அடித்து தன்னைத் தான் ஓட்ட முனைகின்றது. (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 1)

பிரபாகரனுக்கு முந்தைய காலத்தின் அனைத்து மனித விரோத சமூக விரோத தவறுகளுக்கும், புலிகளே பொறுப்பு என்கின்றனர். இப்படி கூறுகின்ற அரசியல் பொதுத்தளத்தில், எதிர்ப்புரட்சி அரசியல் ஒரு அரசியல் கூறாக மீளவும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தான் இனியொருவும், அசோக்கும் கூட, தமக்குத்தாமே லாடமடித்து அரசியல் வித்தைகாட்ட முனைகின்றனர். இதற்கமைய பொய், புரட்டு பித்தாலாட்டம், சூழ்ச்சிகள் இன்றி, இந்த வண்டியை ஓட்ட முடியாத வண்ணம் கடந்தகால அரசியல்.

அசோக்கின் இந்த கட்டுரை மக்களுக்காக போராடுபவர்கள் முன், ஒரு பலமான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. கடந்த காலத்தில் மக்களுக்காக போராடிய மனித வரலாற்றை, அதன் போர்க்குணாம்சத்தை கொச்சையாக்கி, அதை மிக இலகுவாக தமக்கு ஏற்ப சேறடிக்கின்றதும், அதைத் திரித்து புரட்டுகின்ற போக்கையும், அதன் எதிர்ப்புரட்சிகர அரசியல் குணாம்சத்தை எம்முன்னால் எடுத்துக் காட்டுகின்றது. கடந்தகால வரலாற்றையும், அதன் ஆவணங்களையும் தேடி முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பை, எமக்கு உறைக்கும் வண்ணம் முகத்திலறைந்து கூறியுள்ளது. செய்யவேண்டிய அரசியல் பணியில் (இதை நாம் முன்பே தொடங்கி இருந்தோம்) இதுவும் முதன்மையானது;) என்பதை, இந்தப் புரட்டான புரளிக் கட்டுரை எடுத்துக்காட்டியுள்ளது.

புலிகள் கடந்தகால....
.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, November 29, 2009

புலிகளின் இறுதி வாரமும், அதன் அழிவுகளும்...புதிய படங்கள் இணைப்பு

மகிந்த ராசபக்சா யோர்தானுக்குச் செல்லும் முன்னர், இராணுவம் ஒரு செய்தியை வெளியிட்டது. ''இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகளை தாம் செயலிழக்க செய்துவிடுவோம்'' என்பதே அச்செய்தியாக இருந்தது. இவ்வாறு இராணுவம் அறிவித்த போது, அரசின் நீதித்துறை: புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் உட்பட நால்வருக்கான பிடியாணையை மீண்டும் ஒரு முறை அறிவித்தது!

மே-14ம் திகதி ஜக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான அமர்வில், அவசர (புலிகளுக்கு உதவ) அமர்வொன்றை நடாத்த முற்பட்டபோதும் அது சாத்தியமாகவில்லை.

மே 15ம் திகதி அதிகாலை முல்லைத்தீவு கடற்பரப்பில், சர்வதேச கடல் எல்லையை நோக்கி விரைந்து கொண்டிருந்த அதிவேகப் படகொன்றை கடற்படையினர் இடைமறித்தனர். இதில் சூசையின் மனைவி முதல் மகன் மகள், மைத்துனி உட்பட பலர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.

இதுவே அன்று முதலில் இணையத்தளத்தில்....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

ஆந்திர முதல்வர் நாற்காலிச் சண்டை: திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் சவால்!

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் உயிரிழந்ததையடுத்து, யாரை முதல்வராக்குவது என்ற நாய்ச்சண்டை அங்கே ஆரம்பித்தது. அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கும் முயற்சிகள் சாவுச்செய்தி அறிவிக்கப்படும் முன்பே தொடங்கின. ராஜசேகர ரெட்டியின் இரங்கல் கூட்டத்தில் ஜெகன்மோகனின் ஆதரவாளர்கள் கலாட்டா செய்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருப்பினும், காங்கிரசு மேலிடம் ஆந்திர காங்கிரசின் மூத்த தலைவரான ரோசய்யாவை தற்காலிக முதல்வராக்கியது.
ஜெகன்மோகனின் ஆதரவாளர்களோ 120 எம்.எல்.ஏ.க்களிடமும், 40 எம்.பி.க்களிடமும் அவரை முதல்வராக்க விரும்புவதாகக் கையெழுத்து வாங்கியும், சோனியாகாந்திக்குத் தந்தியடித்தும் மேலிடத்தை மிரட்டினர்.

அம்மாநில அமைச்சர்கள், ரோசய்யா கூட்டிய எந்தவொரு கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். சில அமைச்சர்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினார்கள். ஆந்திராவில் நோய் வாய்ப்பட்டும், வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொண்டும் இறந்து போன 420 பேர்கள், ராஜசேகர ரெட்டியின் சாவினால் அதிர்ச்சியடைந்தும், தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக அறிக்கை ஒன்றைத் தயாரித்து சுற்றுக்கு விட்டனர். இதன் மூலம் மக்களிடையே......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்