தமிழ் அரங்கம்

Saturday, March 14, 2009

நான் நாம் என்பது எதை? : மக்களுக்கான புரட்சிகர வரலாற்றை மறுத்தல், அரசியல் ரீதியான சந்தர்ப்பவாதம்

தமிழ்மக்கள் சந்தித்த துயரங்களும் துன்பங்களும் முடிவற்றுத் தொடர்கின்றது. இப்படி எம்மைச் சுற்றி எதிர்ப்புரட்சி வரலாறு என்பது, மக்களுக்கானதும், அவர்களின் சொந்த விடுதலைக்குமான குரல்கள் அடக்கப்பட்டு அழிக்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட எம்மைச் சுற்றி நிகழ்ந்த இந்த அழிவு வரலாற்றின் போக்கில், எம் மக்களுக்காக நடந்த புரட்சிகர போராட்டங்களை மறுப்பவர்கள் பிற்போக்குவாதிகள்தான். இவர்களில் யாரும், மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் ஒருக்காலும் இருக்க முடியாது.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Friday, March 13, 2009

ஈழப்போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக்கட்சிகளின் கபடத்தனம்.

ஈழத்தமிழ் மக்கள் மீது மிகக்கொடிய இன அழிப்புப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை எச்சரித்து வெளியேற்றிவிட்டு, ஊடகங்களுக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும்
தடைவிதித்துவிட்டு, புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு, முல்லைத்தீவு மக்கள் அனைவரின் மீதும் குண்டு மாரி பொழிந்துள்ளது சிங்கள ராணுவம். முல்லைத்தீவின் பெரும்பகுதியை சுடுகாடாக்கி, புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள புதுக்குடியிறுப்பு பகுதியில் தற்போது மூர்க்கமான இருதித்தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உயிரிழந்தவர்கலை அப்புறப்படுத்த இயலாததோடு, காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி சித்திரவதை அனுபவித்து மெல்ல மெல்லச்சாகும் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது
ஐநா பொதுச்செயல‌ரும் மேலைநாடுகளும் சம்பிரதாயமாக போர்நிறுத்தக்கோரிக்கை வைத்துள்ள போதிலும் இதை அலட்சியப்படுத்திவிட்டு ஆணவத்தோடு போரைத்தொடர்கிறது சிங்கள இனவெறி அரசு. போருக்கு எதிராக குரல் கொடுத்து, சிங்கள அரசை அம்பலப்படுத்திய சிங்கள பத்திரிக்கையாளர்களையும், அறிவுத்துறையினரையும், ரகசிய கொலைப்படையை ஏவி கொன்றொழித்து வருகிறது ராஜபக்சே அரசு.

இலங்கை அரசின்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலிக்கும் - அரசுக்கும் பின்னால், சலசலக்கும் 'மாற்று" அரசியல்

மக்களுக்காக போராட மறுப்பதுதான், இன்று 'மாற்று" அரசியல். அரசுக்கு பின்னால் அல்லது புலிக்கு பின்னால் நிற்பதற்காக, இது தன்னைத்தான் மூடிமறைக்கின்றது. அரசுக்கு பின்னால் நிற்க 'ஜனநாயகத்தையும்", புலிக்கு பின்னால் நிற்க 'சுயநிர்ணயத்தையும்" பயன்படுத்துகின்றது.

இப்படி மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசங்களையும் ஆதரிக்க, இவர்கள் தமக்குத்தாமே போடும் வேசம் தமிழ் மக்களின் உரிமைகளான 'ஜனநாயகம்" மற்றும் 'சுயநிர்ணயம்" மாகும். இவர்களின் இந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தை நாம் இலகுவாக இனம் காணமுடியும். இவர்கள் இவ் இரண்டு உரிமைகளையும், ஒரே நேரத்தில் கோரமாட்டார்கள். ஒன்றை மட்டும் கோரி, மற்றதன் எதிரியாக தம்மைத்தாம் முன்னிறுத்துகின்றவர்கள் தான் இவர்கள். இவர்களின் இரண்டாவது அடையாளம் ஒன்று உண்டு. இவர்கள் உரிமையில் ஒன்றைக் கோரும் போது அதை வெறும் கோசமாக மட்டும் வைப்பார்கள். இவர்கள் அந்தக் கோசத்தின் அரசியல் உள்ளடக்கத்தை மறுப்பார்கள். அதை விரித்துச் சொல்லவும் மறுப்பார்கள்.

இதை நாம் அனைத்து மக்கள் விரோத அரசியல் தளத்திலும் தெளிவாக இனம் காணமுடியும். மக்களுக்கு எதிராக இருத்தல், செயற்படுதல் தான், இதன் ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, March 12, 2009

கருணாவும் – பிள்ளையானும் 'ஜனநாயகத்துக்கு" திரும்பிய கதை

இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?

'ஜனநாயகத்துக்கு" திரும்பியதாக கூறுகின்றனரே, இவர்களால் மக்களுக்கு என்ன ஜனநாயகம் கிடைத்துவிட்டது. இவர்கள் 'ஜனநாயகத்துக்கு" திரும்ப முன், அப்படி 'ஜனநாயக" விரோதமாக என்னதான் செய்தனர்? அதையாவது சொல்லுங்கள். ஆயுதம் ஓப்படைக்க முன், ஆயுதத்தை ஓப்படைத்த பின், கருணா சுதந்திரக் கட்சியில் சேர முன், சேர்ந்த பின், இந்த 'ஜனநாயகத்தின்" அருமை பெருமைகளை எல்லாம் மக்களுக்கு சொல்லவேண்டியது தானே.

எந்த கொள்கையும் கோட்பாடுமற்ற இரண்டு சுயநல பொறுக்கிகளின் 'ஜனநாயக"க் கதையிது. கைக் கூலித்தனத்தை மூலதனமாகக் கொண்டு, படுகொலைகளை ஏணியாகக் கொண்டு, அதிகாரத்தை தக்கவைத்த கதையிது. இந்த தனிமனித அதிகார வெறி, படுகொலைகளாகி தொடர்ந்தன, தொடர்கின்றது. இதன் இன்றைய அத்தியாயம் தான் ஆயுத ஓப்படைப்பு முதல் பேரினவாத சுதந்திர............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Wednesday, March 11, 2009

நாம் புலிகளிடம் கோரிய ஜனநாயகம் போராடுவதற்கே ஒழிய, போராட்டத்தை குழிபறிப்பதற்கல்ல

தமிழ்மக்களின் போராட்டத்தை குழிபறிப்பதற்கே ஜனநாயகம் என்கின்றனர், அரசும் அரசு சார்ந்த புலியெதிர்ப்பு புல்லுருவிகளும். இதை புலியின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். இப்படி புலிகள் மறுத்த ஜனநாயகமும், மக்கள் விரோதிகள் வழங்கும் 'ஜனநாயகமும்" மக்களுக்கு விரோதமாகியுள்ளது. மக்களின் உரிமையை மறுப்பதற்கே, இன்று 'ஜனநாயகமும்" உச்சரிக்கப்படுகின்றது.

சிங்களப் பேரினவாதமும், இதைச் சார்ந்த புலியெதிர்ப்புவாதிகளும், எப்போதும் புலிகளை முன்னிறுத்தி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த 'ஜனநாயகத்தை" வழங்கப்போவதாக கூறினர், கூறுகின்றனர். சரி அந்த 'ஜனநாயகம்" தான் என்ன? என்று கேட்டால், ஆளைக் காணோம் பதிலையும் காணோம் என்று ஓடுகின்றனர்.

சரி, புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்த ஜனநாயகம் என்ன? தமிழ்மக்கள் தமக்காக தாம் போராடக் கூடாது என்பதைத்தான் புலிகள் தமிழ்மக்களுக்கு மறுத்தனர். சிங்களப் பேரினவாதத்தை கூட, யாரும் எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான், புலியின் அடிப்படையான ஜனநாயக...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Tuesday, March 10, 2009

இந்தியத் தேர்தலும் ஈழத்தமிழரும்

1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.


ஆயுதம், பணம், பயிற்சி, அரசியல் என்று, ஒரு இனத்தின் சொந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, வெறும் கூலிக் குழுக்களின் போராட்டமாக ஈழ ஆதரவு என்ற பெயரில் சிதைத்தனர். இப்படி உருவான கூலிக் குழுக்கள், சொந்த மக்களை ஒடுக்கத் தொடங்கியது.

இதன் பின்னணியில் தான் அன்று இந்திய அரசு முதல் இன்று போலிக் கம்யூனிஸ்டுகள் வரை இயங்குகின்றது. இப்படி ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான போராட்டத்தை உருவாக்கியதன் மூலம், இந்த மனிதவிரோத செயலை செய்தனர். அதையே அரசியலாக ஊக்குவித்தனர். இவர்கள் கொடுத்த ஆதரவு, எதிர்ப்பு என்று அவை எந்த நிலையில் இடம்மாறினாலும், இது ஈழ மக்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. அதாவது இவர்கள் எதைச் செய்தாலும், அது ஈழத்தமிழ் மக்களுக்க எதிராகவே இருந்துள்ளது.

ஈழ ஆதரவு பிழைப்புவாதிகளின் விருப்பம் மற்றும் துணையுடன் அத்துமீறி ஆக்கிரமித்த இந்தியா, இதன் மூலம் புலிகளை அவமானப்படுத்தியு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

பரிஸ்சில் நடந்த சுயவிளம்பரப் போராட்டம்

தமிழ்மக்களின் பெயரில், தமிழ் மக்களிள் உரிமைப்போரை கொச்சைப்படுத்தி நடத்திய சுயவிளம்பரப் போராட்டம். ஏதோ வன்முறையாம்! அதுவும் இலங்கையில்! சரி உங்களில் யாருக்காவது தெரியுமா! இப்படி தெரியாத சிலதுகள், சுயவிளம்பரத்துக்காக நடத்திய போராட்டம்; தான் பாரிஸ் போராட்டம். தடிக்கும் நோகாது, பாம்பை அடிக்கும் சுயவிளம்பரக் கோசங்கள்.

தமிழ்மக்கள் சாவா, வாழ்வா என்ற எல்லைக்குள் நாதியற்று கிடக்க, புளட்டின் 'சதி" அரசியலை, மீண்டும் புளட் அல்லாத தளத்தில் அசோக் என்பவர் மேடையேற்ற முனைந்தார்.

இதற்கு சுழியோடிப் பிடித்த நபர் தான் றமணன். றமணன் இங்கு உள்ள அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகளுடன் கொண்டிருந்த செயல்பாட்டை பயன்படுத்தி, தன் சொந்த சதிக்கூத்தை அதற்குள் அசோக் அரங்கேற்ற முனைந்தார்.

இதற்கு அமைய பயன்படுத்தப்பட்ட அனார்க்கிஸ்ட்டுகள் மற்றும் ரொக்கிஸ்ட்டுகள் கூட, சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதில்லை. இப்படி பேரினவாத தேசியத்துக்கு உதவும் அவர்களின் சொந்த அரசியல் மனப்பாங்கை, தம் சொந்த சதி மனப்பாங்குடன் இணைத்து, அரங்கேற்றிய நாடகம் தான் இந்த அர்த்தமற்ற பாரிஸ் போராட்டம்.

தமிழ் மக்களை இன்று சிங்களப் பேரினவாதம் கொன்று குவிக்கின்றது. ஒரு இன அழிப்பாக, இனச் சுத்திகரிப்பாக, இனக்களையெடுப்பாக, அதைச்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Monday, March 9, 2009

சின்னச் சின்னப் ''பார்வை"கள்....

எப்பவோ கேட்ட குரல்
தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு முற்றட்ட 30 வருட காலமாக, வகுப்புவாத தமிழ்ப் பாராளுமன்ற அரசியற் கட்சிகள் என்ன சொன்னார்கள்: பாராளுமன்ற அரசியல் மூலம் எல்லவற்றையும் "கேட்டுப் பெறலாம்" என்றார்கள்.

தமிழீழ ஆயுதப் போராட்டத்திற்கு பிற்பட்ட 30 வருட காலமான இன்று, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து விட்டதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்ற அரசியல் கட்சிகள் என்ன சொல்கிறார்கள்: "சோறும், சுதந்திரமும் பேசித்தான் பெறவேண்டிய நிலை" என்கிறார்கள்.

முன்னவர் கூறியதில் (கேட்டுப் பெற-லாம்) ஒரு நம்பிக்கை தொனி இருந்தது. பின்னவர் கூறுவதில், (பேசித்-தான்) ஒரு இழுவை இருக்கிறது. இதற்குள் இன்னொரு அரசியல் தொக்க வைக்கப்பட்டுள்ளது. அதுதான் - இவை அனைத்துக்கும் காரணம் புலி என்கின்ற அரசியல்.

கேட்டுப் பெறலாம் என்பது சரிவராது என்றுதான் பின்னவர்கள் ஆயுதம் துாக்கினார்கள். மீண்டும் அதே கதிரைகளுக்கு இவர்கள் வரும்போது, காரணம் சொல்ல, புலிகளை இதற்குள் வலுக்கட்டாயமாக இழுக்கிறார்கள். இப்பினும் இடைக்காலகட்டத்தில் இவர்கள் நடத்தியது "சுதந்திர விடுதலைப் போராட்டமாம்". உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?
இதில் ஏதாவது உப்புச்சப்பு இருக்கிறதா?

சுதந்திரப்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

புலி ஒழிப்பு 'ஜனநாயகப்" படுகொலைகள்

அரசுசார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், தமிழ் மக்களை அரசு கொல்வதன் மூலம் தான், தாம் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கமுடியும் என்கின்றனர். இதை நாம் தேனீ இணையம் முதல் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி அரசியலின் பின்னும் காணமுடியும்;. இதற்கு மாற்றாக இவர்கள் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கவும், புலியை ஒழிக்கவும், வேறு எந்த மாற்று அரசியல் வடிவமும் இவர்களிடம் கிடையாது.


தமிழ்மக்களை கொல்வதன் மூலம், 'ஜனநாயகத்தை" தமிழ்மக்களுக்கு அல்ல தமக்கு பெற்றுக் கொள்ளல் தான், அரசு சார்பான புலியெதிர்ப்பு அரிசியலாகும். இதைத்தான் இவர்கள் எப்படி எழுதினாலும். எப்படி நியாயப்படுத்தினாலும், நடைமுறையில் புலிக்கு மாறாக வைக்கும் மாற்று அரசியல் வழியாகும்;. அரசின் இன அழிப்பு, இனக் களையெடுப்புத் திட்டத்துக்கு வெளியில், இவர்களுக்கு என்று எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது. அரசு செய்வதை ஆதரிப்பது தான், இவர்களின் ஆய்வுகள், அறிக்கைகள் முதல் வெள்ளை வேட்டி அரசியல் வரை அரங்கேறுகின்றது.

இவர்களுக்கு இடையில் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது. அரசை மையப்படுத்தி இயங்கும் இவர்கள், அரசுக்கு பின்னால் இயங்குகின்றனர். கொலைகளை நியாயப்படுத்த வேண்டிய தேவையும், அதை புலியின் குற்றமாக காட்ட வேண்டிய தேவையும் தான்,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

Sunday, March 8, 2009

பிறப்பை முன்னிறுத்திய 'பெரியாரிய" பொயரில் பார்ப்பானியம்

'சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது! சொல்வது பெரியார்!" என்று ஆழக்கரையிலிருந்த என்ற தளத்தில் 'மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். பெரியரின் பெயரில் அடிக்கும் புலிக் கூத்துகள் இவை. பெரியார் எங்கே ஏன் எதற்கு சொன்னார் என்பது எமக்கு தெரியாது.

ஆனால் சாதியில் பிறந்தவன் அதைத் துறக்கமுடியாத என்ற அர்த்தத்தில் கூறியிருந்தால், அது தவறு. சிறுத்தையின் புள்ளி உடம்பில் உள்ள அதன் அடையாளம். சாதி பிறப்புடன் வருவதில்லை. பிறந்த பின்பான சாதிய சமூக வாழ்வியலால் உருவாகின்றது. பார்ப்பனிய வயிற்றில் பிறந்த குழந்தையையும், தலித் வயிற்றில் பிறந்த குழந்தையும் இடமாற்றினால், அவை அந்த குறித்த சாதிய சூழலுக்குள் தான் வளரும். 'பார்பபானின் பிறவிக் குணமும்" என்ற ஒன்று தலித் வீட்டில் நுழையாது. பார்ப்பனிய வீட்டில் தலித் குழந்தை பார்ப்பனிய உணர்வுடன்தான் வளரும். (இதையொட்டி சாதியம் பற்றி எழுதிய எனது நூலில் இருந்து. இது இன்னமும் வெளிவரவில்லை.)
மூடிமறைக்கப்பட்ட அபாயகரமான பார்ப்பனியம்

இது பார்ப்பனியத்தை...................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

எஜமானுக்காக குலைக்குதுகள், 'ஜனநாயகம்" பேசும் நாய்கள்

தமிழ்மக்களைக் கொன்று குவிப்பதை ஊக்குவிக்கும் கொலைகாரர்களின் நடிப்புத்தான், புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்". தமிழ் மக்களை கொன்று குவிக்கும் அரசுக்கு எதிராக போராடாது, புலிகள் தமிழ் மக்களை பணயமாக வைத்திருப்பதை கண்டிக்கவும் தூற்றவும் முடியாது. ஆனால் இதைத்தான் அரசு சார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" செய்கின்றது.

இலங்கையில் அரசுடன் கூடி நிற்கும் கூலிக்குழுக்கள் முதல் புலம்பெயர் புலியெதிர்ப்பு பேசும் 'ஜனநாயகம்", தமிழ் மக்களை அரசு கொல்வதைக் கண்டு கொள்ளக் கூடாது என்கின்றது. இதற்கு அவர்கள் பெறுவது பதவிகள், பட்டங்கள், நாலு சில்லறைகள். இவர்கள் மூடி மறைக்கும் தமிழ்மக்களின் மரணங்களே, இவர்களின் பிழைப்புக்கான அரசியல் அடித்தளம். அரசுக்கு எதிராக இதை கண்டித்தால், இவர்கள் அனுபவிக்கும் 'ஜனநாயகம்" என்ன என்பதை அவர்களே தெரிந்து கொள்வார்கள்.

இங்கு புலிகள் பலி அரசிலை நடத்தி தாம் தப்பிப்பிழைக்க முனைகின்றனர் என்றால், அரசு சார்பு புலியெதிர்ப்புக் கும்பல் பலியை எடுக்கும் அரசை ஆதரித்து, எலும்புகளை நக்குகின்றனர்.

இப்படி கொலைகார ஈ.பி.டி.பி, உட்படுகொலைக்கு புகழ்பெற்ற புளாட், இந்தியக் கைக்கூலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ், கூலிக் கும்பலான ரெலொ, அரச எடுபிடிகளா..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

எங்களுக்குள் இருப்பதும் ஒரு குட்டிப் புலிதான்…

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வீடுவாசல், வயல்தோட்டம் அத்தனை சொத்துக்களையும் கூலிப்படைகளின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட்டு பக்கத்தில் ஒரு மூலையில் பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் அகதிகளா…அல்லது அரசியல் கைதிகளா…என்று கூடப் புரியாமல் உயிரையாவதுதக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய வன்னி மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.

வந்தாரை வாழவைக்கும் வன்னி மண் இன்று தன்னை வாழவைக்க பேரினவாதத்தின் கூடாரத்துக்குள் மற்றவர்களிடம் கையோந்தி நிற்கின்றது. வந்திருப்பவர்கள் புலிகளா என்ற சந்தேகத்திலே பலர் சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டு அடையாளம் தெரியாதவாறு அழித்தொழிக்கப்படுகின்றார்கள். அதுமட்டுமின்றி பல இளம் பெண்கள் துன்புறுத்தப்படுவதுடன் சிறிலங்கா கூலிப்படைகளின் காமவெறிக்கு உள்ளாக்கப்பட்டுகின்றார்கள்.