தமிழ் அரங்கம்

Friday, January 5, 2007

'மார்க்சிஸ்டுகள்" : பார்ப்பன பாதந்தாங்கிகள்!

'மார்க்சிஸ்டுகள்" : பார்ப்பன பாதந்தாங்கிகள்!

முற்றும் துறந்த துறவி வேடத்தில் ஹார்லிக்ஸ் ஷியாமளா, ஸ்ரீரங்கம் உஷா என்று பல பெண்களுடன் உல்லாச சல்லாபம் புரிந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசீர்வாதமும், பல கருப்புப்பண முதலைகளின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழிதான் காஞ்சி சங்கராச்சாரி. சங்கர மடத்தின் முன்னாள் விசுவாசியான சங்கரராமன் எனும் பார்ப்பனர், சங்கராச்சாரியின் இந்தக் காமக் களிவெறியாட்டங்களை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, கூலிப்படையை ஏவி அவரைக் கொலை செய்த பயங்கரவாதிதான் இந்த சங்கராச்சாரி. அவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் கம்பி எண்ணிவிட்டு, தற்போது பிணையில் உள்ள இந்த ஆசாமியைத் தமிழகத்தில் சீண்டக் கூட யாருமில்லை. எங்கே தங்கள் வீட்டுப் பெண்களிடமும் இந்தக் கிழட்டு காம கே(õ)டி கைவைத்து விடுவானோ என்ற பீதியில், பார்ப்பனர்களே கூட காஞ்சி சங்கரமடத்துக்குச் செல்லத் தயங்குகிறார்கள். இப்பேர்பட்ட யோக்கிய சிகாமணிக்கு, ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு விருந்தினர் என்ற சிறப்புத் தகுதியளிக்க உத்தரவிட்டு, அதனைச் செயல்படுத்தி இருக்கின்றார்.

இந்துவெறி பாசிஸ்டுகள் ஆளும் குஜராத்தின் முதல்வரோ அல்லது இராஜஸ்தான், ம.பி. மாநில முதல்வர்களோ இதனைச் செய்யவில்லை. இந்துவெறிக்கு எதிராகச் சவடால் அடித்துவரும் "இடதுசாரி' ஜனநாயகக் கூட்டணி ஆளும் கேரளத்தின் முதல்வர் அச்சுதானந்தன்தான் இப்படி உத்தரவிட்டுச் செயல்படுத்தியுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக, சிறீ உத்திராடம் திருநாள் மகாராஜாவுக்கு ஆசி வழங்க திருவனந்தபுரம் சென்ற இந்த "மட' சங்கராச்சாரிக்கு, கேரள அரசின் 15 துறைகளும் அரசு விருந்தினர் என்ற தகுதியளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று அவர் டிசம்பர் 12ஆம் நாளன்றே உத்தரவிட்டு பக்தியோடு செயல்படுத்தியுள்ளார்.

மார்க்சியத்தின் பெயரால் கட்சி நடத்திக் கொண்டு ஆட்சி செய்யும் சி.பி.எம்.இன் முதலமைச்சரான அச்சுதானந்தன், ஒரு மடாதிபதிக்கு மரியாதை செய்வதே மார்க்சியத்துக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். அதிலும் கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச்சதி, பொய்சாட்சிகளை உருவாக்குதல், கொலை செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினல் மடாதிபதிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' முதல்வர். கூச்ச நாச்சமின்றி, ஒரு இந்துவெறி பயங்கரவாதிக்கு "இடதுசாரி' அரசே மரியாதை செலுத்திச் சிறப்பிக்கும் கீழ்த்தரமான செயலைக் கண்டிக்கக்கூட முன்வராமல், பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, "இடதுசாரி' கூட்டணியிலுள்ள இன்னுமொரு போலி கம்யூனிஸ்ட் கட்சியான வலது கம்யூனிஸ்ட் கட்சி.

ஆனால், முஸ்லிம் லீகின் மாநிலச் செயலாளரான குஞ்ஞாலிக் குட்டி, "இடதுசாரி' அரசின் இச்செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். ""தமிழ்நாட்டில் கொலைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரருக்கு அரசு மரியாதை அளிப்பது முறையல்ல; சங்கப் பரிவாரங்களின் விருப்பங்களுக்கேற்ப அரசின் கொள்கையை மாற்றக் கூடாது'' என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரள தலித் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் இராமபத்ரன், ""இது இந்துத்துவ ஓட்டு வங்கியை அறுவடை செய்ய முயற்சிக்கும் கீழ்த்தரமான செயல்'' என்றும், ""மத அடிப்படையில் மக்களைப் பிளக்கும் செயல்'' என்றும் "இடதுசாரி' அரசைச் சாடியுள்ளார். கொல்லத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான டாக்டர் எம்.எஸ். ஜெயபிரகாஷ், ""அனைத்து சட்டங்களுக்கும் மேலானவன் பிராமணன் என்று மனுதர்ம விதியை உயர்த்திப் பிடித்து, கொலைக் குற்றவாளியானாலும் பார்ப்பான் என்பதால் கேரள அரசு காஞ்சி மட சங்கராச்சாரிக்கு மரியாதை செலுத்துகிறது'' என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

அக்ரஹார அம்பிகளின் கூடாரமான சென்னைத் தொலைக்காட்சியில், ஆண்டுதோறும் தீபாவளியன்று அதிகாலையில் ""கங்கா ஸ்நானம் ஆச்சோ!'' என்று தனது ஊத்தை வாயை இளித்து ஆசி வழங்கி வந்த இந்த ஓடுகாலி சங்கராச்சாரியை, சங்கரராமன் படுகொலைக்குப் பிறகு அத்தொலைக்காட்சி கூட அழைப்பதை நிறுத்திவிட்டது. தமிழக பார்ப்பன பத்திரிகைகளும் இந்தக் காமகே(õ)டியின் அருளாசியை படத்துடன் வெளியிடுவதை நிறுத்தி விட்டன. அவாள்களே புறக்கணித்துவிட்ட இப்பார்ப்பன பயங்கரவாதியிடம் அப்படி என்ன முற்போக்கைக் கண்டார்களோ இந்த போலி கம்யூனிஸ்டுகள்; அரசு மரியாதை அளித்து சிறப்பித்து ஆராதனை செய்திருக்கிறார்கள்!

இவர்கள் இவ்வாறு பார்ப்பனியத்துடன் கூடிக் குலாவுவதும் பார்ப்பனியத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்வதும் புதிய விவகாரமல்ல. வேத மந்திரங்களிலும் வேள்விச் சடங்குகளிலும் புராதனப் பொதுவுடைமைக் கூறுகள் உள்ளன என்று ஆய்வு செய்து, இந்த அபத்தத்தை ""பண்டைக்கால இந்தியா'' என்ற தனது நூல் மூலம் பறைசாற்றினார் போலி கம்யூனிஸ்டுகளின் அந்நாளையத் தலைவர் எஸ்.ஏ. டாங்கே.
நரகலில் நல்லரிசி பொறுக்கிய கதையாக, கம்பராமாயணத்தில் சோசலிசக் கூறுகளைக் கண்டுபிடித்த ப.ஜீவானந்தம், தமிழக கம்யூனிசத் தலைமையையே கம்பன் கழகமாக மாற்றினார். அவரின் சீடரான பெரியவர் நல்லக்கண்ணு கூட இன்னும் தனக்குப் பிடித்த இலக்கியம் என்று கம்பராமாயணத்தைத்தான் குறிப்பிடுகிறார்.

""வேதங்கள், உபநிடதங்கள் முதலான பாரதீய கலாச்சார பொக்கிஷங்களும் மார்க்சிய லெனினிய புரட் சிகர தத்துவமும் இணைந்ததுதான் நான் உயர்த்திப் பிடிக்கின்ற இந்திய மார்க்சியம்'' என்று அறிவித்து, இந்தியாவை ""வேதங்களின் நாடு'' என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார், "மார்க்சிஸ்டு'களின் ஞானகுருவாகிய ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.
அவரது விசுவாச சீடரும், மறைந்த முன்னாள் கேரள "மார்க்சிஸ்டு' முதல்வருமான ஈ.கே.நாயனார், கிறித்தவர்களின் "லோக குரு'வான போப் இரண்டாம் ஜான்பால். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவருக்கு பக்தியோடு பகவத்கீதை நூலைப் பரிசளித்தார்.

அடக்கருமமே! இராம.கோபாலன் செய்கிற வேலையையா இந்தச் செஞ்சட்டை தோழர் செய்தார் என்று நீங்கள் முகத்தைச் சுளிக்கும்போதே, தனது வீட்டைக் கட்டுகையில் செங்கல் பூசை நடத்திய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடின் புரட்சிகர போர்த்தந்திரத்தையும், தனது துணைவியார் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த மறுப்பேதும் சொல்லாத அவரது ஜனநாயக மாண்பையும், தனது பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்திய நாடாளுமன்ற "மார்க்கிஸ்டு' அவைத் தலைவர் சோமநாத் சட்டர்ஜியின் முற்போக்கு சிந்தனையையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது.

குன்றக்குடி அடிகளாரை ""முற்போக்கானவர்'', ""ஆன்மீக கம்யூனிஸ்ட்'' என்றெல்லாம் பிதற்றித் திரிந்தவர்கள் முந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையினர் என்றால், ""நான் முதலில் பார்ப்பான்; அப்புறம் இந்து; அதன்பிறகுதான் கம்யூனிஸ்ட்'' என்று மே.வங்க "மார்க்சிஸ்டு' அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி வெளிப்படையாக அறிவிப்பதும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கைகட்டி நிற்பதும் இந்நாளைய போலி கம்யூனிசத் தலைமையின் மகிமைகள்!

தமது அதிகாரபூர்வ நாளேடான தீக்கதிரில் நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம் முதலானவற்றுக்குச் சிறப்பு மலர் வெளியிடுவதோடு, தொழிற்சங்க அணிகளோடு சேர்ந்து ஆயுத பூசை விழா கொண்டாடி மகிழும் இப்போலி கம்யூனிஸ்டுகள், இனி வெட்கப்படாமல் பூணூலை மாட்டிக் கொண்டு காஞ்சி சங்கர மடத்தில் சங்கமிக்கலாம்; அடுத்து வரும் தேர்தல்களில் ""காஞ்சிப் பெரியவாளின் ஆசி பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்!'' என்று விளம்பரம் செய்யலாம்; கலை இரவுகள், தொழிற்சங்கக் கூட்டங்களுக்கு ஆசீர்வாதம் வழங்க "காம'ரேடு காமகே(õ)டியையே அழைக் கலாம்; போலி கம்யூனிஸ்டுகள் எதையும் செய்வார்கள்; யார் கண்டது!

இத்தனைக்கும் பிறகும், இந்துமதவெறி பாசிசத்தை சி.பி.எம். தலைமையில் அணிதிரண்டு வீழ்த்திவிட முடியும் என்று "மார்க்சிஸ்டு' கட்சியினர் யாராவது சொன்னால், சிந்திக்கத் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்!· இரணியன்

அன்று வியட்நாம் இன்று ஈராக்

அமெரிக்காவின் போர் குற்றங்கள்: அன்று வியட்நாம் இன்று ஈராக்

மெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் தினந்தோறும் நடத்திவரும் பச்சைப் படுகொலைகளும் அதை மூடிமறைக்க ஜார்ஜ் புஷ் கும்பல் அவிழ்த்துவிடும் புளுகுணிப் பிரச்சாரமும் இட்லரையும், கோயபல்சையும்கூட வெட்கப்பட வைத்துவிடும்.


கடந்த அக்டோர் 16ஆம் தேதி, ஈராக்கின் ரமாடி நகரில் அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலொன்றை நடத்தியது. ""இத்தாக்குதலில் 75 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அந்த ஊரைச் சேர்ந்த மக்களுக்குச் சிறுகாயம் கூட ஏற்படவில்லை'' என்றும் அமெரிக்கா தனது எடுபிடி பத்திரிகைகள் மூலம் பிரச்சாரம் செய்தது.


அன்று அமெரிக்கா நடத்திய விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுள் 6 வயதான முகம்மது சாலிக் அலியும் நான்கு வயதான சாட் அகமதுவும் எட்டு வயதான ஹைஃபாவும் அடக்கம் என்பது ஈராக்கியர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.


அன்று, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போராளிகள், ரமாடி நகரில் ஒரு அமெரிக்க இராணுவக் கவச வண்டியைக் குண்டு வீசித் தகர்த்து, ஐந்து அமெரிக்க சிப்பாய்களைக் கொன்றனர். குண்டு வீச்சில் சிதைந்துபோன அந்த வண்டிக்கு அருகே இந்தக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுதுதான், அமெரிக்கா இராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது. குண்டு வீச்சுக்குப் பலியான இந்தக் குழந்தைகளும், அப்பாவி பொதுமக்களும்தான் ""தீவிரவாதிகளாக'' அறிவிக்கப்பட்டனர்.


அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் போராளிகளைப் பிடிப்பதற்கு, அவர்கள் வீட்டுப் பெண்களைப் பிணைய கைதிகளாகக் கடத்திக் கொண்டு போகும் கீழ்த்தரமான ""தாதா'' வேலையை, அமெரிக்க இராணுவம் ஈராக்கில் மதிப்புமிக்க தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக்கி விட்டது.


அமெரிக்க இராணுவம் ஒரு ஈராக்கியரைக் கைது செய்ய, அவர் போராளியாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ""எதிர்காலத்தில் போராளியாக மாறுவார்'', ""எதிர்காலத்தில் தற்கொலைப் படை மனித வெடிகுண்டாக மாறுவார்'' என்று "கண்டுபிடித்து', அமெரிக்க இராணுவத்தால் கை காட்டப்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். இப்படிப்பட்ட கற்பனையான குற்றச்சாட்டின் கீழ் மட்டும் 122 பெண்கள் சிறையில் எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ளனர்.


அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த வியட்நாம் மக்கள் மீது ""ஏஜெண்ட் ஆரஞ்சு'' என்ற இரசாயன ஆயுதம் வீசப்பட்டது போல, ஈராக்கில் பலூஜா நகரைப் போராளிகளின் பிடியில் இருந்து கைப்பற்ற, அமெரிக்கா நடத்திய சண்டையின் பொழுது, வெள்ளை பாஸ்பரஸ் என்ற தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதம் அந்நகரின் மீது வீசப்பட்டது. மேலும், அச்சண்டையில் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சுவதன் மூலம், எதிரிகளை மூச்சுத் திணற வைத்துக் கொல்லும் இரசாயன ஆயுதங்களையும் அமெரிக்க இராணு வம் பயன்படுத்தியிருக்கிறது.


பலூஜா நகர் மீது இரசாயனக் குண்டுகள் வீசப்பட்ட பொழுது, ஏறத்தாழ 50,000 பொது மக்கள் அந்நகரில் இருந்தனர். இவர்களுள் எத்தனை ஆயிரம் பேர் உடனடியாக இறந்து போனார்கள்? எத்தனை பேர் எதிர்காலத்தில் சிறுகச் சிறுக உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போவார்கள் என்பது மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலை பற்றி பத்திரிகை நிருபர்கள் கேட்டதற்கு, அமெரிக்க இராணுவ மந்திரி டொனால்டு ரம்ஸ்ஃபெல்டு, ""நாங்கள் பிணங்களை எண்ணுவதில்லை'' எனத் திமிராகப் பதில் அளித்தார்.


இந்த அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, நாகரிக உலகம் போர் குற்றங்கள் என்கிறது. ஆனால், ஜார்ஜ் புஷ்சும், மன்மோகன் சிங் போன்ற அவரது எடுபிடிகளும் இந்த போர் குற்றங்களைத் தான் "ஜனநாயகம்' என்கிறார்கள்!



Wednesday, January 3, 2007

அபு கிரைப்: சித்திரவதையின் நோக்கம்!

அபு கிரைப்: சித்திரவதையின் நோக்கம்!

பு கிரைப் சிறைச்சாலையில் இராக் மக்கள் மீது அமெரிக்க துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவகைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன் முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கன்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்க்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஸ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.


இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் இராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச் சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.


"துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் இராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில் உறைந்து போனேன்." என்றார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்டின் டி.மிகான். "நரகத்தின் படுகுழிக்குள் தள்ளப்படுவது போல இருந்தது. ஆனால் இது நாம் உருவாக்கியிருக்கும் நரகம்" என்றார் செனட்டர் ரிச்சர்டு ஜே. டர்பின்.


இவ்விதழில் வெளியிடப்பட்டிருப்பவை அமெரிக்க அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்ட படங்கள். இவற்றை வெளியிட்டுயிருக்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்துச் சீர்குலைக்கின்றது (Hacking) புஸ் அரசின் கூலிப்படை. அமெரிக்காவின் மீது வளைகுடா மக்களுக்கு வெறுப்பைத் தோற்றுவிற்பதற்க்காகவே பரப்பப்படும் போலிப் புகைப்படங்கள் இவை" என்று கேலிக்குரிய ஒரு பொய்யையும் பரப்பி வருகின்றது புஸ்அரசு. பொய், புனைசுருட்டுக்கள் அனைத்துக்குமான அறிவுச்சொத்துடமையைத் தனது மரபு உரிமையாக வரித்துக்கொண்டுள்ள அமெரிக்க அரசுக்கு நாம் விளக்கம் தரத்தேவையில்லை. நம்மிடையே பெருகிவரும் அமெரிக்க மோகிகளுக்கும் அமெரிக்க தாசர்களுக்கும் தான் விளக்கம் தேவைபடுகின்றது. அவர்களுது தடித்த தோலையும், இலவம் பஞ்சு மூளையையும் ஊடுருவும் வகையிலான விளக்கம் தேவைப்படுகின்றது. எனவேதான் இப்படங்களை வெளியிடுகின்றோம். சொற்கள் தீண்டமுடியாத சொறனையை இந்த விகாரமான படங்கள் தீண்டக் கூடும் என்பதால் வெளியிடுகின்றோம்.


இந்தப் படங்களைக் கண்டு ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தில் யாரையும் முகம் சுளிக்கக் கூடுமெனில் அத்தகையோருக்கு தமது போராட்டத்தின் வாயிலாக மணிப்பூர் பெண்கள் ஏற்கனவே பதிலளித்து விட்டார்கள். இராணுவத்துக்கு மட்டுமல்ல, பெண்ணை உடலாக மட்டுமே உணர்ந்து கிளர்ச்சி கொள்ளும் ஒவ்வொரு ஆண் மனதுக்கும் வழங்கப்பட்ட செருப்படி அந்தப்போராட்டம். இந்தப் புகைப்படங்களும் தான்.


ஓரு பெண்ணின் மீதும் கைதிகளின் மீதும் ஏவப்படும் பலியல் வன்முறையைமட்டும் சித்தரிப்பவையல்ல இந்தப்படங்கள். ஒரு தேசம் அதன் சுதந்திரம், இறையாண்மை, கலாச்சாரம் ஆகிய அனைத்தின் மீதும் ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தும் கற்பழிப்பின் உருவகம் இது. எண்ணைக்கான யுத்தம், டொலருக்கான யுத்தம் என்றுமட்டும் இந்த ஆக்கிரமிப்பை புரிந்து கொள்ளும் பொருளாதார சவங்களுக்கு, உயிரின் துடிப்பை உணர்த்தும் படங்கள் இவை. "இந்தப் பாவத்தின் சம்பளம் தான் நீங்கள் அடைய விரும்பும் தங்கம்" என்ற உண்மையை அமெரிக்காவில் கரைசேரத்துடிக்கும் ஒவ்வொரு மைதாசுக்கும் உணர்த்தும் படங்கள் இவை.


தம்மை நாகரிக உலகம் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு ஓநாய்கூட்டம், மனித நாகரிகத்தின் உண்மையான தொட்டிலின் மீதும், அதன் குழந்தைகளின் மீதும்


நாம் பேசும் மொழியை, எழுத்தை, சுதந்திரம் எனும் சொல்லை முதன்முதலில் உச்சரித்த அந்த மழலைகள் மீதும்


நடத்தும் தாக்குதல் - உன் மீதும் என் மீதும் நடத்தப்படும் தாக்குதல்தான் என்பதை உறைக்கச் செய்வதற்க்கான படங்கள் இவை.


அமெரிக்கா தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் கொடூரத்தை, காலனியாதிக்கத்தின் அநீதியை நிருபிப்பதற்கு இந்தப்படங்கள் தேவையில்லை. ஆனால் தோற்கடிக்கப்பட்ட மக்களின் கையில் வெற்றியாளர்கள் படும் பாட்டை, உடலால் அடக்கப்பட்டாலும் உள்ளத்தால் பணிய மறுக்கும் ஒரு தேசத்தை, அத்தேசத்தின் ஆன்மாவை, அடக்கியாள முடியாமல் வெறி கொண்டு துடிக்கும் அமெரிக்க வல்லரசின் கையாலாகாத்தனத்தை நிருபிப்பதற்க்கு இந்தப்படங்கள் தேவை.


அமெரிக்க கொடும்கொலர்களின் பிடியிலிருந்து விடுபடத்துடிக்கும் இந்தச் சுதந்திரப் பறவைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தகுதி நமக்கில்லை. நம் கையறு நிலைக்காக அவர்கள் வேண்டுமானால் நம்மீது அனுதாபப் படலாம்.


அமெரிக்க ஓநாய்களின் கோரப்பிடியில் இந்த உலகம் சிக்கி விடாமல் தன்னந்தனியே தடுத்து நின்று கொண்டிருக்கும் இராக் மக்களின் வீரத்தைப் போற்றுவோம்.


அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெறும் கொடுமைகளை முதன்முதலில் தெரிவித்தவை மே மாதம் வெளியான புகைப்படங்கள் அல்ல. டிசம்பர் 2003-இல் சிறையிலிருந்து கடத்தப்பட்ட நூர் என்ற இராக்கியப் பெண்ணின் கடிதம். (கார்டியன், மே--20-2004)


"ஒவ்வொரு நாளும் ஆண் கைதிகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினரின் முன் எங்களை அம்மணமாக நடக்க வைக்கின்றார்கள். உங்களுடைய தாயோ, சகோரரியோ இந்தச் சிறையில் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் அமெரிக்கச் சிப்பாய்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு. கருத்தரித்திருக்கிறார்கள் என்பது உறுதி. தயவு செய்து எங்கள் மீது குண்டு வீசுங்கள். இந்தச் சிறையின் மீது அணுக்குண்டைக் கூட வீசுங்கள். எங்களைக் கொன்று விடுங்கள்" இவ்வாறு அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடும் இராக் போராளிகளிடம் மன்றாடுகின்றது அந்தக் கடிதம். (கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டர்)


இக்கடிதம் குறித்த செய்தி இராக் மக்களிடையே பரவத் தொடங்கியவுடனே இதனைப் பொய்யென்று நிராகரித்தது அமெரிக்க அரசு. ஆனால் அமெரிக்க இராணுவம் அமைத்த இரகசிய விசாரணைக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் அந்தோணி தகுபாவின் அறிக்கையோ அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளவையனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்கின்றது.


ஓபெக் (opec) தலைமையகத்தின் எரிபொருள் ஆய்வுத்துறைத் தலைவராக இருந்த சதல்லா அல்பாத்திகல்ப் நியூஸ் (Guil
news
) எனும் பிரபல பத்திரிகையில் எழுதுகிறார். "இதுநாள் வரை நான் எண்ணெய் வணிகம் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதோ, இதை எழுதும்போதே நான் அழுகின்றேன்... என் தேசத்தில் நடந்ததற்காகவும், நடந்துகொண்டுருப்பதற்காகவும் மட்டுமல்ல, அவுகிரைப் கொடூரங்கள் பற்றிப் பலவாதங்கள் முன்பே கேள்விப்பட்ட போதும், அதை நம்ப மறுத்தேனே, அதற்க்காக அழுகிறேன்."


"நான் மேல்நாடுகளில் படித்தவன் வாழ்கையின் பெரும்பகுதியை அங்கேயே கழித்தவன். ~நாகரிகம் பொருந்திய மேலைநாட்டு அரசுகள் இவ்வாறெல்லாம் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள் என்று இத்தனைக் காலம் நம்பியிருந்தேனே, அதற்க்காக அழுகிறேன்".


"எங்களைக் கொன்று விடுங்கள் என்று அபு கிரைப் சிறைச்சாலையின் பெண் கைதிகள் அனுப்பும் கடிதங்களைப் பற்றி நான் கடந்த மார்ச் மாதமே அறிந்தேன். அப்போதும் அதை நான் நம்ப மறுத்தேன். அது உண்மையல்ல என்பதனால் அல்ல, அந்த உண்மை தோற்றுவிக்கும் மன உளைச்சலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்க்காக அதை நம்பமறுத்தேன்."


"அடுத்த சில நாட்களில் பாக்தாத்திருந்து வந்த என் நண்பர் சொன்னார். ~பக்கத்து வீட்டுப் பெண்கள் இருவர் சில வாரங்கள் சிறையிலிருந்தனர். விடுவிக்கப்பட்டபின் அவர்களைச் சந்தித்து என்ன நடந்ததுதென்று அறிய முனைந்தேன். கண்ணீர் தான் அவர்கள் தந்த விடை நீண்ட நேரத்திற்குப் பின் விசும்பியபடியே ஒரு பெண் சொன்னால், என்னைத் தொட்டுவிட்டார்கள்." "இப்போதும் நான் நம்பமறுக்கிறேன். சில நேரங்களில் உண்மை எனத் தெரிந்தும் அதை நம்புவதற்க்கு நாம் விரும்புவதில்லை அல்லவா? அப்படித்தான் நானும் இந்த உண்மையை நம்ப மறுக்கிறேன்."


நாதியா இப்போது விடுவிக்கப் பட்டுவிட்டாள். ஆனால் தனது கன்னிமை சூறையாடப்பட்ட அந்த இருண்ட நாட்களின் கொடிய நினைவுகளிலிருந்து அவள் விடுபடவே முடியாது. லண்டணிலிருந்து வெளிவரும் அல்கியாத் நாளேட்டிற்கு அவள் அளித்த பேட்டியிலிருந்து: 'ஆயுதங்களைத் தேடுவதாக கூறி அமெரிக்கத் துருப்புக்கள் என் வீட்டில் நுழைந்தார்கள். என்னைத் தூக்கிச்சென்றார்கள். சிறையில் வைத்து என்னைத் துகிலுரிந்து நிர்வாணமாக்கி ஆணும் பெண்ணுமாக அமெரிக்கச் சிப்பாய்கள் சுற்றி நின்று கொண்டார்கள். பெண் ஆயுத வியாபாரிகளும் இராக்கில் உண்டு என்று இப்போதுதான் கேள்விபடுகிறேன்" என்று நக்கலடித்தாள் ஒரு பெண் சிப்பாய் நான் மறுத்துப் பேச முற்பட்டவுடன் தாக்கத் தொடங்கினாள். நான் செயலிழந்தேன். ஒரு குவளை தண்ணீர் கொடுத்தாள். ஓரு மிடறு விழுங்கியவுடனே சுயநினைவை இழந்தேன். நினைவு திரும்பிய போது நான் வண்புனர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்".


"அடுத்த சில நாட்களில் 5 சிப்பாய்கள் கும்பலாக வந்தார்கள். காமவெறியைத் தூண்டும் இரைச்சலான இசையை அலரவிட்டு அதனை ரசித்தபடியே மாறிமாறி என்னை வேட்டையாடினார்கள்."


'ஒரு மாதத்திற்குப் பின் ஒரு சிப்பாய் வந்தான் என்னைக் குளிக்கச் சொன்னான். குளித்துக் கொண்டிருக்கும்போதே குளியலறைக் கதவை உதைத்துத் திறந்தான். நான் அவனை அறைந்தேன். அவனோ மிருகங்கள் புணர்வதைப் போல என்னைப் புணர்ந்தான். இன்னும் இரண்டு பேரையும் என் மீது ஏவிட்டான்."


'நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு பெண் சிப்பாய் நான்கு ஆண்களுடன் வந்தாள். ஆவர்கள் கையில் டிஜிடல் கமெரா. என்னை அம்மணமாக்கி என் மீது ஒரு ஆணைப் போல அவள் நடந்து கொண்டாள். மற்ற ஆண்கள் கைகெட்டிச் சிரித்தபடியே இதனைப்படமெடுத்தனர். அவளிடமிருந்து என்னைப் விடுவித்துக் கொள்ள போராடினேன். அவள் ஆத்திரமடைந்து என்னை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டாள். தோட்டாக்கள் தலையை உரசிச் சென்றதால் நான் திகிலில் உறைந்தேன். உடனே நான்கு ஆண்களும் என்மீது விழுந்து குதறத் தொடங்கினார்கள். நான் நினைவிழந்தேன்.


'நினைவு திரும்பிக் கண்விழித்தபோது என்னை அவர்கள் குதறிய காட்சி வீடியோத் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. கண்ணை மூடிக்கொண்டேன். எங்களை மகிழ்விக்கத்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்! கண்ணைத் திற, பார், பார் என்று அவள் மிரட்டினாள்."


'ஆறு மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டேன். ஒரு நெடுஞ்சாலையில் பொட்டல் வெளியில் என்னை இறக்கி விட்டு கையில் கொஞ்சம் காசு கொடுத்து ~போ, போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கிக் கொள் என்று விரட்டிவிட்டான் ஒரு அமெரிக்கச் சிப்பாய்."


நாதியா என்ற புனைபெயரில் வாழும் இந்தப் பெண் அவமானத்தால் வீடு திரும்பவில்லை. சொந்த ஊரை விட்டு இராக்கின் வேறொரு மூலையில் வீட்டு வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறாள்.


நாதியா ஒரு அதிசயம். அபு கிரைப் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் பெண்களில் பலர் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். கருத்தரித்த பெண்களோ அமெரிக்க நாய்கள் கொடுத்த பிள்ளையைச் சுமக்க மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத்தினரே பெண்ணைக் கொல்ல முயல்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்திய ஒரு சம்பவத்தை நினைவு கூறுகின்றார் பாக்தாத் பல்கலைக் கழகத்தின் பேராசிரியையும், அம்னாஸ்டி இன்டர்நேசனனின் பிரதிநிதியுமான நுவாய்ய்மி.


'எங்களைக் குண்டு வீசிக் கொன்றுவிடுங்கள்" என்று கடிதம் அனுப்பி அபுகிரைப் சிறையின் கொடுமைகளை உலகிற்கு அறிவித்த பெண் பெண் யார் என்பதைக் கண்டுபிடித்து, பாக்தாத் நகரில் அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடிச் சென்றார் பேராசிரியை நுவாய்மி. நூர் என்ற அந்தப் பெண்ணின் குடும்பமே ஊரை விட்டுப்போய்விட்டது. 'அவள் உயிருன் இருக்க வாய்பில்லை" என்கின்றார் நுவாய்மி.


ஆஸ்வாய் இருபது வயதுப் பெண் திடீர்யென்று ஒருநாள் அவளுடைய தாய் காணாமல் போய்விட்டால். ஓருவேளை கைது செய்யப்பட்டிருப்பாளோ என்று அஞ்சி அபு கிரைப் சிறைக்கு நடையாய் நடக்கிறாள் ஆஸ்வாய். 'ஆப்படியாரும் இங்கே இல்லை" என்று கூறி விரட்டுகிறார்கள் அமெரிக்க சிறையதிகாரிகள்.


ஆபுகிரைப் சிறையின் வீடியோ காட்சிகள் என்ற குறுந்தகடு மர்மமான முறையில் பாக்தாக்கில் புழங்கக் தொடங்குகிறது. அதில் தன்னுடைய தாயின் படத்தை பார்த்த ஆஸ்வாய் 'இது உண்மையாய் இருக்க முடியாது" என்று கதறுகிறாள்.


அடுத்த சில நாட்களில் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வந்த கடிதம். 'உங்கள் தாய் அபுகிரைப் சிறையில் இருக்கிறார்" என்று தெரிகிக்கிறது. என் அம்மாவுக்கு எதுவும் நேராமல் கூட இருக்கலாம். ஆனால் யார் நம்புவார்கள்? என்று கூறி விசும்புகின்றாள் ஆஸ்வாய்.


அபு கிரைப் படங்கள் வெளிவந்ததையொட்டி அமெரிக்கக் கட்சிகளும் ஊடகங்களும் வெளியிட்டு வரும் அதிர்ச்சியும் கண்டனங்களும் அயோக்கியதனமான மோசடிகள் என்கின்றார் பிரண்ட் லைன் இதழின் அமெரிக்கச் செய்தியாளர் விஜய் பிரசாத்.


'கலிபோர்னியா சிறையில் கைதிகளை கிளாடியேட்டர் பாணியில் ரத்தம் சொட்டச் சொட்ட மோதவிட்டு இந்த விளையாட்டைக் கண்டு களித்தனர் சிறையதிகாரிகள். விசாரணைக்குப் பின் யூன் 2001-இல் இந்த அதிகாரிகளைக் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தது அரசு."


'பெண்கள் சிறையில் 16 பென் கைதிகளை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 11அதிகாரிகள் 1999இல் தண்டிக்கப்படனர்."


'இளம் பெண்களுக்கான சீர்திருத்தப் பள்ளியொன்றில், அப்பெண்களை நிர்வாணமாக்கி கைகளை அகலவிரித்து விலங்கிட்டு, உடலெங்கும் மிளகாய் பொடியைத் தடவி ஒவ்வொருநாளும் 23மணிநேரம் தனிமைச்சிறையில் வைத்தனர் சிறையதிகாரிகள்" என்று அமெரிக்கச் சிறைகளின் யோக்கியதையைப் பட்டியலிடும் பிரசாத், 'அமெரிக்கச் சிறைகளின் நீட்சிதான் அபுகிரைப். இது விதிவிலக்கல்ல" என்றுநிறுவுகிறார்.


தன் சொந்த மக்களையே விலங்குகள் போல நடத்தும் அரசு, ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை எப்படி நடத்தும் என்பதை புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.


'எங்களை மகிழ்விப்பதற்க்காகதான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்" என்று நாதியாவிடம் சொன்னாளே அந்தப் பெண் சிப்பாய், அது அளுடைய தனிப்பட்ட கருத்தல்ல, அமெரிக்க அரசின் கொள்கை. தாங்கள் சுகிக்கவும், சூறையாடவும், கசக்கிப் பிழியவும், பருகவும் தான் இந்த உலகம் தேவனால் உண்டுபண்ணப்படிருக்கிறது என்பதே அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளின் கருத்து.


சமூக உணர்வற்ற தனிநபர்களாய் நொறுக்கிச் சிதறடிக்கப்பட்ட அந்தச் சமூகமோ 'தானும் தன் இன்பமுமே ஜீவன், அதை வழங்கவல்ல டாலரே சத்தியம்" என்று நம்புகிறது. காதல், அன்பு, பாசம், நட்பு, இரக்கம் போன்ற மனிதனுக்குரியவை அனைத்தையும் துறந்து, நாக்கும் வயிறும் குறியுமே இன்பத்தின் திறவுகோல்கள் என்று கொண்டாடுகிறது. ஏனவே, துடிக்கும் புழுவைப் புணரவும், விம்மி வெடிக்கும் கண்ணீரைச் சுவைக்கவும் அமெரிக்கப் படையினரால் இயலும் நிறவெறி மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்' பண்பாட்டு விழுமியம்


அரசுப் படையைக் காட்டினும் கூலிப்படைச் சிப்பாய்களுக்குச் சம்பளம் அதிகமென்பதால், இராணுவத்திலிருந்து ராஜீனாமா செய்து கூலிப்படையில் சேருகின்றார்களாம் அமெரிக்க வீரர்கள். அமெரிக்காவால் புதிதாகப் பயிற்றுவிக்கப்பட்ட இராக்கிய வீரர்களோ, சொந்த மக்களைச் சுட மறுத்து போராளிகளின் அணியில் போய்சேருகின்றார்கள்.


கூலிக்குத் தம் உயிரை விலை பேசியிருக்கும் அமெரிக்கக் கூலிப்படைதான் இராக்கில் ஜநாயகத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கபடும் உற்பத்தி இலக்கைப் போலவே. கூலிப்படையினருக்கும் ~இலக்குகளை நிர்ணயிக்கின்றது புஸ் அரசு. கொல்லப்பட வேண்டிய போராளிகள், கைப்பற்றப்பட வேண்டிய ஆயுதங்கள், சதாம் அரசின் அதிகாரிகள், உருவாக்கப்பட வேண்டிய உளவாளிகள் - அனைத்திற்கும் இலக்கு தீர்மானிக்கப்படுகின்றது. இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளுக்கு வரம்பு இல்லை, முழுசுதந்திரம்! அந்தச் சுதந்திரத்தின் விளைவை அனுபவிக்கிறாள் இந்த இராக்கியப் பெண். (பின் அட்டை)


அவள் ஒரு போராளியின் மனைவியாக இருக்கக் கூடும், பிணைக்கைதியாக பிடித்து வரப்பட்ட சகோரதியாக இருக்கக் கூடும், சும்மா முகர்ந்துவிட்டு எறிவதற்காகக் கடைவீதியிலிருந்து இராணுவ வண்டியில் தூக்கிப் போடப்பட்ட யாரோ ஒரு பெண்ணாக இருக்கக் கூடும்,. அல்லது உளவாளியாக மாற மறுக்கும் போராளியாவும் இருக்கக் கூடும்.


உளவாளிகளை உருவாக்கும் 'கலை யில் அமெரிக்க இராணுவத்தைப் பயிற்றுவித்து வருகிறார்கள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள். கைது செய்யப்படும் பாலஸ்தீனப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும், நிர்வாணப் படமெடுத்தும் வைத்துக்கொண்டு அவர்களை விடுவிப்பது@ சில ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படங்களைக் காட்டி ஜந்தாம் படை வேலை செய்யச் சொல்லி நிர்பந்திப்பது, இல்லையேல் உன் குடும்ப வாழ்க்கையைச் சீர் குலைப்போம் என மிரட்டுவது.... இது இஸ்ரேலின் மொசாத் உளவுப்படை கையாண்டு வரும் வழிமுறை. இந்த வழிமுறைதான் இராக்கிலும் இன்று பின்பற்றப்படுகின்றது.


எனவே கற்பழிப்பைப் படம் பிடித்ததென்பது சிப்பாய்களின் வக்கிரம் மட்டுமல்ல, இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்க இராணுவம் கடைடித்துக் கொண்டிருக்கும் அதிகாரபூர்வமான போர்த்தந்திரம்.


'ஒன்று அராபியர்களுக்கு புரியக் கூடிய ஓரே மொழி வன்முறை, இரண்டு அவர்களுடைய மிகப் பெரிய பலவீனம் அவர்களது மான உணர்ச்சி" ~என்று அராபிய மனம் (The Arab
Mind
1973) எனும் நூலில் குறிப்பிடுகிறான் ரபேல் பதாய் என்ற அமெரிக்க ஆய்வாளன். 'இந்தப் நூல்தான் இன்றைய புஸ் அரசின் வேதப் புத்தகமாக பயன்படுகின்றது" என்று அபு கிரைப் கொடுமைகளை விளக்குகிறார் {நியூயாக்கர் நாளேட்டின் செய்தியாளர் செய்மர் கொர்ஷ்.


மானத்தைத் துனியில் தேடும் தேசமா ஆயிரம் சவப்பெட்டிகளை அமெரிக்காவுக்கு அனுப்பியிரும்? தமது வீரத்தை கவசவண்டிக்குள் ஒளித்துகொண்ட அமெரிக்க சிப்பாய்களிடம் 'கால்செருப்பில் இருக்குதடா வீரம என்று கற்பித்தவர்கள் இராக்கின் சிறுவர்கள். தொருவோரக் கல்லும் தீக்குண்டாகு என்று இஸ்ரோலுக்கு நிருபித்து வருபவர்கள் பாலஸ்தீன இனைஞர்கள்.


உரியப்படும் ஆடை ஒவ்வொன்றுக்கும் ஓர் உடலைப் பரிசளிப்பார்கள் இராக் மக்கள். சவப்பெட்டிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை டில்லியை ஆளும் சவங்கள் கணக்கிடட்டும். அமெரிக்கச் சொர்க்கத்தை அடைவதற்க்காக விரதமிருக்கும் சவங்கள் இந்த படங்களைப் பார்த்த பின்ராவது உயிர் பெறட்டும்.


சூரியன்.


அபு கிரைப் மிச்சமிருக்கிறது மனச்சாட்சி!


சென்ற யூன் 22ம் திகதி அமெரிக்காவின் மஸா சூசெட்ஸ் நகரில் ஜெப்ரி லுசி என்ற 23 வயது இளைஞன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அவன் இராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்க இராணுவச் சிப்பாய்.


மார்ச.2003-இல இராக்கின் நசிரியா நகரில் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட நிரயுதபாணிகளான இராக் மக்களைத் ~தன்னுடைய இராணுவம் கொலை செய்வதைக் கண்டு தவித்தான் லூசி. 'நான் இங்கே அறநெறியற்ற அநீதிகளைச் செய்து கொண்டியிருக்கிறேன்" என்று தன் காதலிக்கு கடிதம் எழுதினான்.


அமெரிக்கா திரும்பியவுடன் தன் தந்தையிடம் பேசினான், 'நாங்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் ஒவ்வொரு நாளும் கொன்றிருக்கிறோம். என் வயதையொத்த இரண்டு இளைஞர்களை நெற்றியில் சுட்டுக் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அவர்கள் கண்களைப் பார்த்தேன், அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்காதா? தடுமாறினேன், சுட்டுவிட்டேன்" என்று கூறி அழுதான்.


செத்துப்போன லூசியின் கழுத்தில் இரண்டு அடையாள அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவனால் கொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் படங்கள்.


சென்ற யூலை மாதம் மட்டும் இராக்கிலேயே 24 அமெரிக்கச் தற்கொலை செய்து கொண்டியிருக்கிறார்கள். இராக் சென்று திரும்பிய சிப்பாய்களில் 17சதவீதம் பேர் தற்கொலைக்குச் செல்லும் அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருபதாகக் கூறுகிறது இங்கிலாந்துன் மருத்துவ ஆய்வுப் பத்திரிகை.


இராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்கச் சிப்பாய்கள் அமைப்பாகத் திரண்டு (IVAW) இது ஏகாதிபத்திய யுத்தம் என்று பிரகடனம் செய்கிறார்கள். 'என் கணவன் போருக்குச் சென்றிருக்கிறான் என்று என்று பெருமை பேசாதே... சாதனையாளர்களை எண்ணித்தான் பெருமைப்பட முடியும். வேறு வழியில்லாமல் சிக்கிக் கொண்டவர்களைப் பார்த்து யாராவது பெருமை கொள்ள முடியுமா? எங்களுக்காக அனுதாபப் படுங்கள், கண்ணீர் விடுங்கள்" என்று இராக்கிலிருந்து கடிதம் எழுதுகிறார் ஒரு சிப்பாய். 2000 அமெரிக்கச் சிப்பாய்களின் குடும்பத்தினர் 'இராணுவத்தை திரும்பப்பெறு" என புஸ்சை எதிர்த்துப் போராடுகிறார்கள்.


இராக்கிலிருந்து திரும்பிய சார்ஜென்ட் காமிலோ மெஜியோ மீண்டும் இராக் சென்று போரிட மறுத்துச் சிறை சென்றுயிருக்கிறார். கடும் தண்டனை விதித்தால் சிப்பாய்களிடையே கலகம் தோன்றுமோ என்று அஞ்சி ஓராண்டு மட்டுமே தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.


'இராணுவத்தில் சேர்ந்து இராக் செல்லும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம்" என்று ஏழை இளைஞர்களுக்குத் தூண்டில் வீசுகின்றது புஸ் அரசு.'எங்களுடைய போர், களத்தில் துவங்கவில்லை, கல்விக் கூடத்தில் தொடங்கின்றது" என்று கண்டிக்கிறார் இராணுவ ஆளெடுப்பு மையத்தின் அதிகாரி.


ராபின் பான்டன் என்ற 13 வயதுச் சிறுமி... இராக் சென்றிருக்கும் சிப்பாயின் மகள் - அமெரிக்க நடாளுமன்றத்தின் முன் தன்னந்தனியே மறியல் செய்கிறால். 'என் தந்தையை எனக்குத் திருப்பிக் கொடு. ஓரு பொய்க்காக அவர் உயிரை விடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்" என்கிறது அவள் ஏந்தியிருக்கும் முழுக்க அட்டை.


அபு கிரைப்: நாடகம் கூறும் உண்மை


அபு கிரைப் கொல்கத்தாவில் நாடகமாக்கப்பட்டுள்ளது. 'இது கற்பனைக் கதையல்ல, அபு கிரைப் குறித்த மனித உரிமைக் குழுவின் ஆய்வறிக்கை, இராணுவ அதிகாரி அந்தோனியோ தகுபாவின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந் நடகம் தயாரிக்கப்ட்டுள்ளது. கதைமாந்தர்களும் உண்மையானவர்களே" என்கின்றார் நாடகாசிரியர் சங்க்ராம் குகா.


ஒரு நீதிமன்ற விசாரணையைப் போல வடிவமைக்கப் பட்டுள்ள இந்நாடகம், வெறுமனே சித்திரவதையின் மட்டும் சித்தரிக்கவில்லை. 'சித்திரவதையின் நோக்கமென்ன?" என்ற கேள்வியை எழுப்பிக் கீழ்க்கண்டவாறு விடைசொல்கின்றது.


'அபு கிரைப் சிறையில் கைதிகள் அனைவரும் சோதனைச் சாலை எலிகள். சித்திரவதையின் எந்தக் கட்டத்தில் ஒரு கைதி நொறுங்கிப்போய்ச் சரணடைகிறான் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அந்தத் தருணத்தில் அவனுடைய இரத்தத் துளிகள் சோதனைக்கு எடுக்கபடுகின்றன. இரத்தத்தின் மரபணுக் கட்டுமானத்தில் (Genetic
structure
) சித்திரவதை செய்யப்பட்ட மனிதனின் மனதில் உருவான பீதி என்ன விதமான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது எனபது கண்டுபிடிக்கப்படுகின்றது. சித்திரவதை தோற்றுவிக்கும் இந்தப் பீதியை, மரபணுக் கட்டுமானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் வாயிலாகவே ஒரு கைதியின் மனதில் தோற்றுவித்து விட முடியுமா என்பது அமெரிக்காவில் ஆராயப்படுகிறது. 'இதுதான் நாடகம் சுமத்தும் குற்சாட்டு." புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம்" என்று அழைக்கப்படும் உலக மேலாதிக்கத் திட்டத்தின் ஒரு அங்கம் தான் அபுகிரைப் சித்திரவதைகள் என்று நிறுவுகிறது நாடகம். இந்நாடகம் எழுப்பும் கேள்வி அதீதமானதோ, கற்பனையானதோ அல்ல, கைது செய்யப்பட்ட சீன மக்களைக் குறுக்கு நெடுக்காகப் பிளந்து பார்த்து அறிவியல் ஆய்வு நடத்தியது ஜப்பான் இராணும். மருத்துவ விஞ்ஞானிகளைப் பயன்படுத்தி இட்லர் நடத்திய ஆய்வுகளை அம்பலப்படுத்தியது 'மருத்துவர்கள்" என்ற ஜெர்மன் நாடகம்.


அமெரிக்கா நடத்தும் உயிரியல் யுத்தம் என்பது விஞ்ஞானக் கதையல்ல, எதார்த்தம். நேற்று வியத்நாம்-- இன்று இராக்.


நன்றி புதியகலாச்சாரம்


Sunday, December 31, 2006

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பார்ப்பனீயம் பற்றி ஒரு ஆய்வும், விவாதமும்

பி. இரயாகரன்.
01.01.2007


னித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.


பார்ப்பனீயம் பற்றிய அடிப்படை ஆய்வை நாம் நடத்த முனைகிறோம். இதுபற்றி புனைவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், எதிரி பற்றிய குழப்பங்கள் உள்ளடங்கிய வகையில் உள்ள தெளிவின்மையை நாம் எதிர்கொள்கின்றோம். சாதிய ஒழிப்பு அவசியம் என்றதில் உள்ள தெளிவு, அதைப் பற்றிய உள்ளடக்கம் மீதானதில் தெளிவு கிடையாது.


சாதியம் பற்றிய அதிதீவிரமான கருத்துநிலைப் போக்கு, உள்ளடகத்தில் அறிவியலுக்கு புறம்பாகவே பல சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகின்றது. சாதியம் மனித குலத்துக்கு எதிரானது என்ற வகையில், அதை வேர் அறுப்பது மனிதனின் கடமை. சாதியைக் கடந்த மனிதன் மட்டும் தான், இயற்கையின் மனிதனாக உள்ளான். இதை மறுத்து, இதை பாதுகாக்க விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தவிர்க்க முடியாதவொன்று.


எதிரி பற்றி சூக்குமமாகவும், பிறப்பை அடிப்படையாக கொண்டும், வெறும் நம்பிக்கைகளின் பின்னால் நின்றும், கற்பனையான புனைவுகளின் பின்னால் மிதக்கும் கருதுகோள்களில் நின்றும் சாதியை ஒழிக்க முடியாது. உதாரணமாக சாதியை பிறப்பை அடிப்படையாக கொண்டு வரையறுகப்படுகின்றது. இது பார்ப்பனீய கோட்பாட்டு விளக்கத்தில் ஒன்று. அதாவது இந்துமதத்தின் அடிப்படை விளக்கமும் கூட. இந்த நிலையில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, போராடப் போவதாக பாசாங்கு செய்வது நிகழத்தான் செய்கின்றது. அதாவது இந்த சாதியை எதிர்த்து போராட, பிறப்பை அடிப்படையாக கொண்டு, இனப்பிரிவை அடிப்படையாக கொண்டு போராடுவதாக கூறுவது கூட, உள்ளடகத்தில் பார்ப்பனீயம் தான்.


பார்ப்பானாக பிறப்பதும், பார்ப்பனீயமும் ஒன்ற அல்ல. பிறப்பு சாதிய வடிவில் இதன் போக்கில் உள்ளது உண்மை. ஆனால் பார்ப்பனீயத்தை மறுக்கும் பார்ப்பான், தன் சாதியை உதறும் பார்ப்பான் அவனை எப்படி வரையறுப்பது. ஒரு மனிதனாக மாறுவதை எப்படி நாம் வேறுபடுத்துவது! அதை எப்படி செய்யக் கோருவது! இதை நாம் எதிர்நிலையில் கீழ் இருந்தும் காணமுடியும். பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பனீய சித்தாந்தத்தை, அதற்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்த நினைப்பது உண்மையில் பார்ப்பனீயத்தை பாதுகாக்கின்றது.


இந்த பார்ப்பனீயத் தன்மை எதிர்நிலைப் போராட்டத்தில் பல கற்பனை புனைவுகளின் வெளிப்பாடாக மிதக்கின்றது. எதிரியை தவறாகவும், பகுதியாகவும் வரையறுத்து மனிதகுல எதிரிக்கே உதவுவது தொடருகின்றது. இந்த வகையில் சாதியம் பற்றிய ஒரு தெளிவை, சந்தேகங்களை எழுப்பியும், விடை காணமுடியாத புதிர்களை விடுவிக்கவும் விரும்புகின்றோம். உங்கள் பங்களிப்பை இதற்காக எதிர்பார்க்கின்றோம்.


அந்த வகையில்


1. பார்ப்பனீயம் என்பது மனித இனத்துக்கு எதிரானது. ஏன்? ஏப்படி?


2. நாம் பிறப்பை குறித்து பார்ப்பனீயத்தை வரையறுக்கவில்லை. ஏன்?


3. பார்ப்பனீய நடைமுறை உள்ளடகத்தின் வெளிப்பாட்டைத் தான், நாம் எதிராக காண்கின்றோம்.


4. ஆரியர் திராவிடர் என்ற வரையறைக்குள் பாhப்பனீயத்தை பொதுமைப்படுத்துவதை, நாம் எதிர்க்கின்றோம். ஏன்?


5. பார்ப்பானுக்கு எதிர் மற்றைய சாதிகள், என்ற பிறப்பை அடிப்படையாக கொண்ட சாதியக் கோட்பாட்டை நாம் எதிர்கின்றோம். ஏன்?


6. அம்பேத்கார் வருணம் மற்றும் சாதி இரண்டையும் ஒன்றாக காட்டிய, ஒன்றின் நீட்சியாக இந்திய சாதிய ஆய்வு முறையை நாம் மறுதலிக்கின்றோம்.


7. வருணத்தை தொழில் பிரிவினையாக காட்டிய அம்பேத்கார் வாதம் உட்பட, இது போன்ற குருட்டு வாதங்கைள நாம் மறுக்கின்றோம்


8. சாதியம் தோன்ற முன்பு இருந்த நான்கு வருண அமைப்பு என்பது, சாதியத்துக்கு முன்னம் அவை அழிந்து போய்விட்டது. ஒரு இடைக்காலம் நான்கு வருணம் அற்ற அமைப்பாகும். குறிப்பாக பாhப்பனீய வருண அமைப்பு முதல் வருணமாகவே இருக்க முடியாது சிதைந்து, மற்றைய இரண்டாம் முன்றாம் நாலாம் வருணத்துடன் கலைந்து போனது. எதிர்ப்புரட்சி மட்டும் தான், அவர்களை முதன்மை இடத்துக்கு சாதிய வடிவில் கொண்டு வந்தது.


9. தொல்காப்பியத்தில் வருணம் இருந்ததா எனின் ஆம் என்று நாம் தெளிவாக பதிலளிக்கின்றோம். அது இடைச்செருகல் என்பதை மறுக்கின்றோம்


10. சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்ற மிகை வாதங்களை கேள்விக்குள்ளாக்குகின்றோம்.


11. அன்றைய ஆரியர் அல்லது பார்ப்பானே, இன்றைய பிறப்பை அடிப்படையாக கொண்ட பார்ப்பான் என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றோம். இன்றைய பார்ப்பான், அன்றைய பார்ப்பான் வேறுவேறானவர்கள்.


12. பார்ப்பான் என்ற ஒரு சாதியில் பிறந்தவர்கள என்பதால், அவர்களை பார்ப்பனீயமாக பொதுமைப்படுத்தி வகைப்படுத்துவதை நாம் மறுக்கின்றோம். பார்ப்பனீயம் பிறப்புக்குள்ளும், வெளியிலும் இயங்குகின்றது.


14. சிந்துவெளி நாகரீகம் ஆரிய நாகரீகம் என்பதை நாம் மறுக்கின்றோம். ஏன்?


15. இந்திய சமூக அமைப்பை வருண மற்றும் சாதிய அமைப்பு என்ற எடுகோளில் பின்னால், வர்க்க அமைப்பு எங்கே போனது? இந்திய சமூக அமைப்பு வர்க்க அமைப்பாக இருக்கவில்லையா? இந்த கேள்வி அவசியமற்றதா?


16. புத்தன் பார்ப்பனீயத்தை எதிர்த்தான் என்பதை நாம் கேள்விக்குள்ளாக்குகின்றோம். புத்தன் எதை மறுத்தான், எதை பாதுகாத்தான் என்பதை தெளிவாக முன்வைக்க முனைகின்றோம்.


17. சாதியம் எப்படியான எந்த சந்தர்ப்பத்தில் ஏன் தோன்றியது? என்பதை நாம் ஆராய முனைகிறோம்.


18 .பார்ப்பான் என்ற சாதி, சாதிய தோற்றத்தில் என்ன பங்கு வகித்தது என்பதை தெளிவுபடுத்த முனைகின்றோம்.


19. இந்து மதம் என்பது என்ன என்பதை வரையறுத்துக் காட்ட முனைகின்றோம்.


20. ஆபிரிக்காவில் சாதி உள்ளது என்ற வாதங்களை, நாம் மறுதலிக்கின்றோம்.


21. இந்து மதம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பதை அதாவது இதில் சாதி வேறு என்பதை மறுதலிக்கின்றோம்.


22. சாதிய சமூக அமைப்பு விதியை, அதன் சித்தாந்த கோட்பாட்டை பார்ப்பனீயமே உருவாக்கியது. அதாவது பார்ப்பனீயம் எந்த சாதிக்கு முதன்மையாக சேவை செய்கின்றதோ, அந்த சாதியின் கோட்பாடே சாதியம். இது அந்த சாதியை குறிக்கின்றதே ஒழிய, அதில் உள்ள நபர்களையல்ல. யாரெல்லாம் சாதியை வெறுத்து, சாதிக்கு வெளியில் சாதியை துறந்து, தனது அடையாளத்தை இழந்து வாழ முற்படுகின்றனரோ, அவர்களை இது உள்ளடக்காது. யாரெல்லாம் சாதியை கொண்டு அப்பிறப்பைக் கொண்டு சாதியாக வாழ்கின்றனரோ, அவர்களை இது மறுதலிப்பதில்லை. இது ஒடுக்குகின்ற சாதிகளில் பார்ப்பனிய சாதிக்கு மட்டும் குறுக்கிப் பொருந்தாது.


23. நான் பிறந்த சாதியை பார்ப்பனீயமாக வகைப்படுத்துவதை எதிர்க்க வேணடுமென்றால், சாதியை துறந்து ஒரு மனிதனாக வேண்டும்.


24. பார்ப்பனீயம் பார்ப்பான் சாதியைக் கடந்து காணப்படுகின்றது.


இப்படி பலவற்றை நான் எழுதி வரும் நூலினுள் விவாதிக்கின்றேன். இப்படி 50க்கு மேற்பட்ட தலைப்புகள். பெரும்பகுதி முடிந்த நிலையில் உள்ளது. எனது ஆய்வுகள் ஒரு அதிர்வை, அதிர்ச்சியை உண்டாக்கத்தக்கன.


உண்மையில் கடந்தகால நம்பிக்கைகள், ஆய்வுமுறைகள், சமூகத்தின் பிளவு மீதான ப+டகமான எடுகோள்கள், போராட்ட வழிமுறைகள், என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். சாதிய அமைப்பை புதிய முறையில், முன்னைய ஆய்வுக்கு மாறாக முன்வைக்கும் எனது ஆய்வு முறைக்கு, உங்கள் விவாதத்தினூடான பங்களிப்பை கோரி நிற்கின்றேன். உங்கள் கேள்விகள் மற்றும் பதில்கள், உங்கள் விவாதங்கள் மற்றும் மறுப்புகள், சந்தேகங்கள் மற்றும் தெளிவாக்கல் மூலம் நீங்களும் பங்களிக்க முடியும். நான் எனது முயற்சியை விவாதத்துக்காக உங்கள் முன் முன்வைப்பதன் மூலம், இந்த நூலுக்கு உதவும் வகையில் குறிப்புகள், தரவுகள், வாதங்களையும் முன்வைத்து கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி, அவற்றை விவாதிக்க அழைக்கின்றோம்.


தனி நூலுக்கான எனது இந்த முயற்சியில் 150 பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டது. 50 மேற்பட்ட தலைப்பை உள்ளடக்கிய இந்த நூல், இந்தியாவில் வெளியிடப்படும். நூலின் உள்ளடக்கம் விவாதம் மூலம் வளம்பெறும் என்ற வகையில், உங்கள் முன் பல பகுதிகளாக இம் மாத இறுதிக்குள் முன்வைக்க உள்ளேன்.


எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாகும். அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிhபார்க்pன்றேன்.


இந்த நூலை எழுதத் தூண்டியது இலங்கை சாதியப் போராட்டம் தொடர்பான எனது மற்றொரு நூல் தான். சண்முகதாசன் தலைமையிலான கட்சி நடத்திய சாதிய போராட்டத்தின் தோல்விகள் வெற்றிகளை பற்றி எனது நூல் முழுமைபடுத்த முடியாத வகையில் சாதியம் பற்றிய வரலாற்றுப் பார்வை குறுக்கிட்டது.


1. சண் தலைமையிலான கட்சியின் மார்க்சிய பார்வை தவறுகள்


2. சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதியம் பற்றிய அடிப்படைக் கோட்பாடு


அம்பேத்கரின் தவறு இலங்கை சாதிய போராட்டத்திலும் தவறாக வழிநடாத்தியுள்ளது. இலங்கை சாதிய நூலின் வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி, இந்திய சாதியம் பற்றிய ஆய்வுகள் மீதான இந்த நூலை ப+ர்த்தி செய்ய உள்ளேன்.


நான் பார்ப்பனீயத்தின் எதிரி என்றவகையில் இந்த விவாதத்தை எழுதும் போது, பிறப்பை அடிப்படையாக கொண்டு எதிரியை வகைப்படுத்தவில்லை. பிறப்பு தற்செயலானது என்ற வகையிலும், பார்ப்பான் சாதியில் பிறப்பவர் பார்ப்பனீயத்தை பிரதிநிநித்துவம் செய்வர் என்பதை ஒரு எடுகோளாக கொள்வதையும் நான் அங்கீகரிக்கவில்லை. பார்ப்பனீய சிந்தாந்தம், அதன் நடைமுறை அம்சம், அதைக் கொண்டு நியாயப்படுத்தி வாழும் பிரிவுகளே, இந்த மனித குலத்தின் எதிரிகள்.


சாதியம் சித்தாந்த ரீதியானது, அதையொட்டிய நடைமுறை சார்ந்தது. சாதியம் பிறப்பை அடிப்படையாக கொண்டதை பார்ப்பனீயமாக வகைப்படுத்துகின்றது என்ற பொது சாதிய விதியை, அப்படியே போராட்டத்தில் பயன்படுத்துவது என்பது மற்றொரு பாhப்பனீயம் தான். பார்ப்பனீயத்தையே மறுகையில் தாங்கிக் கொண்டு, முதல்கையுள்ள பார்ப்பனீயம் மீது தட்டுவதுதான். மாறாக மனிதன் என்ற வகையில் நின்று தான் இந்த விடையத்தை அணுக முனைகின்றோம்.


இந்த வாதத்தில் பார்ப்பனீயம் சரி என்பதை யாராவது முன்வைப்பார்கள் என்றால், அதற்கான அடிப்படைக் காரணத்தை விளக்குமாறு கோருகின்றோம் ஏன்?, எதனால்? எப்படி?


1. பொருளாதார காரணமா!


2. சாதிய சமூக அந்தஸ்தா!


3. சாதிய பிறப்பா!


4. அல்லது எது?


இதை எந்த வகையில் மனித குலத்துக்கு முரணாக அல்லது சார்பாக நீங்கள் முன்வைத்து எப்படி சரியானது என்கின்றீர்கள்?


இந்தவகையில் இந்த விவாதத்தளம் மூலம் அல்லது எனது ஈமெயில் மூலம்mailto:tamilcircle@tamilcircle.net நீங்கள் பற்பல வழிகளில் உதவமுடியும்.


எமது தளத்தில் இடப்படும் கருத்துகள் நேரடியாக வரமுடியாத வகையில் உள்ளதால், அதை அனுமதிக்கும் வரை நீங்கள் காத்திருக்கவும். கருத்து அல்லாத தனிமனித தாக்குதல் மட்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. கருத்துகள் என்ற வகையில் உள்ள அனைத்தும் அனுமதிக்கப்படும். அடிப்படையான தர்க்கவாதங்களை, உங்கள் நியாயங்களை விளக்கும் வகையில், உங்கள் கருத்துக்களையே நாம் விரும்புவது இயல்பு அல்லவா! ஆமாப் போடுவது விவாதத்தக்குரிய நடைமுறையல்ல.


முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்

முஸ்லீம் விரோதிகளே ஒரு கணம்


நடுநிலையா அது என்ன? அப்படி உலகில் எதுவும் கிடையாது. உங்கள் கருத்தில் கூட!

சாதம் அன்று விஷவாயு மட்டுமல்ல, எந்தனையோ கொலைகளை செய்தபோது அதற்கு துணை நின்று யார்? நாங்களா இல்லயே! மூஸ்லீமா இல்லை! யார்? அமெரிக்கா தான். அதன் அருவடி விசுவாசிகளும் தான்.

ஈரான் அமெரிக்காவின் பொம்மையாக இருந்த பாசிட் மன்னனுக்கு பின்னால் நின்றதும் அமெரிக்க தான். அங்கு நடத்த கொலைகள் எத்தனை ஆயிரம். அந்த மன்னனுக்கு பின்னால் பாதுகாப்பு வழங்கியது யார்? எங்கே உங்கள் நீதி எங்கே போனது? ஐயோ உங்கள் ஜனநாயகம்?

பின் ஈரான் பழிவாங்க முகமாக ஈராக் மூலமான தாக்குதலை நடத்தியது யார்? நாங்களா? முஸ்லீமா? இன்று இதே குருடிஸ் இனமக்களின் மற்றொரு பகுதிக்கு எதிராக துருக்கி நடத்துதும் படுகொலைக்கு பின்னால் யார் உள்ளனர்? முஸ்லீங்களா? இல்லை. அதே அமெரிக்கா தான். சிலி, வியட்நாம்? பிலிப்பைன்ஸ் எத்தனை ஆதார வேண்டும்?.

சாதம் கொன்ற போதும் அவருக்கு வராத முஸ்லீம் உணர்வு, உங்களுக்கு எதிர்ப்பதற்கு வருகின்றது. எல்லாம் முஸ்லீம் என்று கண்ணை குறுக்கி குறண்டி பார்ப்பது அறிவு கெட்ட தனம். குறைந்த பட்சம் நடுநிலைத்தன்மை என்று நீங்கள் கருதும் உங்கள் அருகதை கூட உங்களுக்கு இல்லாமல் போகின்றது.

சமூகத்திதை பார்பனீயத்தின் ஊடாக பார்த்தல் எல்லாம் காவியாகத் தான் தெரியும். மலைக்கண் நோய் போல் இது காவி நோய். முதலில் மனிதனாக பார்க்க பழகுங்கள்.

மனித குலத்தின் எதிரிகளை மக்கள் மன்னிக்க மாட்டர்கள். குறுக்கி குருட்டு கண் மட்டும் தான் அதற்குள் இழிவாடி வாழ்கின்றது.

அன்று சாதம் அந்த மக்களை கொண்ற போது அதை எதிர்த்தவர்கள் நாங்கள். அன்று அதை ஆதாரித்தவாகள் இன்று போல் அன்றும் அமெரிக்கா விசுவாசிகள் தான். முஸ்லீம் விரோத உணர்வுடன், காவிக் கண் பார்த்தால் எல்லாம் பார்பனீயமாக தெரிவது ஆச்சரியமன்று. அதனால் தான் பார்பனீயம் அமெரிக்கா மயமாகின்றது.

பி.இரயாகரன்
31.12.2006

கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை

கொலைகார கொள்ளைக்காரர்களின் கூலிக் கும்பல் வழங்கிய மரண தண்டனை


ராக்கில் உள்ள ஆக்கிரமிப்புப்படை ஓரு நிமிடம் விலகினாலேயே, ஆட்சியில் நீடிக்க முடியாத ஒரு கூலிக் கும்பலின் பெயரில், சதாமுக்கு வழங்கிய மரணதண்டனை. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்ப ஜனநாயக வேசம் கட்டி ஆடுபவர்கள் தான் இன்றைய ஈராக்கிய ஆட்சியாளர்கள். அமெரிக்காவின் டொலரைக் கொண்டு கூலிப் பொலிஸ் படையை வைத்துக் கொண்டு, அமெரிக்கா இராணுவத்தின் துணையில் மனித வேட்டை நடத்துகின்றனர்.


இப்படி வளர்ப்பு நாயாக பழக்கி வளர்க்கப்பட்ட ஒரு கொலைகாரக் கும்பல் தான் ஆட்சியில் உள்ளது. ஜனநாயகம் கிலோ என்ன விலை என்று விலைபேசி விற்பவர்கள். இவர்களின் நாய் வேசம் இன்றைய ஏகாதிபத்தியங்களின் கொலையையும், கொள்ளையையும் பார்த்து வாலாட்டுவது தான். இதுதான் இவர்களின் ஜனநாயகம் கூட.


இந்த ஜனநாயகம் தான் உருவாக்கிய சர்வதேச விசாரணைக்கே சதாமை உட்படுத்த மறுத்தது. உலக நீதிமன்றம், உலக ஜனநாயகம் பேசும் இவர்கள் நடத்திய கூட்டுச் சதிதான், இந்த மரணதண்டனை. உலகின் குற்றவாளிகள் சேர்ந்து நடத்திய கொலைதான், இந்த மரணதண்டனை.


சொந்தக் கொலைகார முகம் உலகுக்கு தெரியக்கூடாது என்பதால் கமுக்கமாக நடத்திய விசாரணை நாடகத்தின் முடிவு, முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. புஸ்சின் கொலைவெறித் தனம் தான், உலக மக்களின் எதிர்ப்பை மீறி கொன்று போட்டது.


ஈராக் எண்ணை வயல்களில் காய்க்கும் டொலர் நோட்டுக்களை அள்ளிச் செல்லும் அமெரிக்காவின் ஆளும் கும்பல், நடத்துகின்ற தொடர் மனித வேட்டைகளில் சதாமும் ஒருவர்.


இதன் மூலம் உலகை அடிமைப்படுத்திவிடலாம் என்று நம்புகின்ற அதிகார வர்க்கத்தின் திமிர், இது போன்ற வக்கிரங்களால் மக்களை அடிமைப்படுத்திவிட முடியாது. கொள்ளையும் கொலையுமாக மக்களின் உழைப்பையே சூறையாடித் தின்னுகின்ற இந்த ஜனநாயகம், மக்களின் அதிகாரம் நிறுவப்படும் போது தகர்ந்தேபோகும்.


அன்றாடம் கொலையை கேட்டும், தெரிந்து வாழ்கின்ற துரதிஸ்டவசமான எமது நிலையில், சதாமின் கொலை ஒரு கணம் அதிரவைத்தது.


ஒருபுறம் ஆத்திரம், கோபம் ஒருங்கே எழுகின்றது. மக்களை ஏமாற்றி நடத்தும் சதிகளுக்கு எதிராக, இந்த கொலைகார ஏகாதிபத்தியத்தை பழிவாங்க வேண்டும் என்ற அவா இயல்பாகவே எழுகின்றது. மக்களின் மண்டையோடுகளை அடுக்கி அதன் மேல் நடாத்தும் அராஜகமே இது. மக்களை கொள்ளையடித்து மாடமாளிகைகளை கட்டுகின்ற இந்த வக்கிரத்தை, மன்னிக்கவும் மறக்கவும் முடியாது.



சர்வதேச குற்:றங்களின் மொத்த ஊற்று மூலம் இந்த ஏகாதிபத்தியங்கள் தான். சதாமுக்கு பிந்தைய ஈராக்கில் நடந்த குற்றங்களின் அளவுக்கு, சதாம் குற்றம் இழைக்கவில்லை.


இலட்சக்கணக்கான மரணத்தில் தான் அமெரிக்க ஆட்சியாளர்களின் வங்கிக் கணக்குகள் வீங்குகின்றது. அமெரிக்காவை ஆளுகின்ற ஒரு ரவுடியின் தனிப்பட விரும்பம் கூடத்தான் இந்த மரணதண்டனை.


சதாம் போன்ற சர்வாதிகார மக்கள் விரோதிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் தான் இயங்குகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஜனநாயக நாய் வேசம் போட்டு ஆட்டுவிக்கும் ஏகாதிபத்தியங்கள், சதாம் போன்றவர்களைக் கொண்டு தான் உலகையே ஆளுகின்றனர்.


சதாம் ஆட்சியின் பின்னால் இருந்ததே அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் தான். பற்பல தொடர் கொலைக்கு ஆயுதமும் ஆலோசனையும் வழங்கியது அமெரிக்கா தான்.


வளர்ப்பு நாயை உறும அதையே எஜமான் வேட்டை ஆடுவதுபோல், சதாமும் வேட்டையாடப்பட்டவர். வேட்டை ஆடுவது நாயின் தொழில். ஆட்டுவிப்பது எஜமான் தொழில். இதைத்தான் அமெரிக்கா செய்தது. பழைய நாயை, புதிய நாயைக் கொண்டு வேட்டை ஆடினர்.


இந்தப் படுகொலையை நியாயப்படுத்த ஒரு நீதிமன்றம்;. அன்று ஈராக்கை ஆக்கிரமிக்க அமெரிக்கா பொய்யையும் புரட்டையும் சொல்லி ஐ.நாவையே விபச்சாரம் செய்தவர்கள். இன்று நீதியின் பெயரில் அதை மீண்டும் செய்துள்ளனர். இது அமெரிக்க ஜனநாயகம்; மட்டுமல்ல சுதந்திரமும் கூட. இதுவே உலகினதும் என்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதை எப்போது மக்களாகிய நாம் கணக்கு தீர்க்கப் போகின்றோம்.





இந்த பாசிச அமெரிக்காவை, அதன் சுதந்திரத்தை, அதன் ஜனநாயகத்தை விரிவாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள இணைப்புகளை அழுத்துக.


மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்





1. வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்


2. வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்


3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்


4. அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!


5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்


6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்