தமிழ் அரங்கம்

Saturday, August 11, 2007

இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள்

ந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.


இப்படிப்பட்ட வக்கிரங்கள் தான், இன்று பின்நவீனத்துவம் கோரி முன்வைக்கும் வக்கரித்த ஆண் - பெண் உறவுகளின் அடிப்படையாகும். இன்று இதைக் கோரியும், எழுதியும்;, முன்வைக்கும் அனைத்துக்கும் முன்னோடியாக இந்து மதத்தின் வக்கரித்த உறவுகள் உள்ளன. இன்று பின்நவீனத்துவவாதிகள் வைக்கும் பலவற்றை அன்றே இந்து மதம் முன்வைத்தது என்ற உண்மையை எடுத்துக் காட்டுவதன் மூலம், இன்றைய நவீன ஏகாதிபத்தியப் பாலியல் வக்கிரமும் அம்பலமாகிவிடும்.


பார்ப்பனச் சனாதனத் தர்மமாக மனுசாஸ்திரத்தின்படி வர்ண, சாதி வகையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை விடுவிப்பதாகக் கூறிய புத்த மதம் இந்தியத் துணைக்கண்டத்தில் செல்வாக்குப் பெற்றது. அதனால் பார்ப்பன சனாதன மதம் அழிந்து போகும் நிலையை எட்டி பல ஆண்டுகளாகத் தலையெடுக்க முடியாமல் கிடந்தது. இந்நிலையில் காலடியில் தோன்றிய ஆதிசங்கரன் காசிவரை பயணம் செய்து அத்வைதத்தைப் பரப்பினார். வர்ண, சாதி வதையில் ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களை மீண்டும் பார்ப்பன மதத்துக்குள் ஈர்ப்பதற்காகச் சிறுதெய்வங்களை எல்லாம் பெருந்தெய்வங்களின் அவதாரங்கள் என உறவுபடுத்தும் மதக்கோட்பாடுகளை உருவாக்கினார். அதாவது குல, கண தெய்வங்கள் எல்லாம் புராண, இதிகாசக் கடவுள்களுடன் உறவுபடுத்தி புனைவுகளை உருவாக்குவதன் மூலம் பார்ப்பன மதத்துக்குப் புத்துயிர் கொடுக்க முனைந்தார்.


இந்துமத உருவாக்கத்தினூடாக, வக்கரித்த உறவுகள் புனையப் பட்டபோது, சிறுவழிபாடுகள் சீரழிக்கப்பட்டன. இங்கு சிறுவழிபாட்டுக் கடவுள்கள் ஏன், எதற்காக, எந்த உற்பத்தி மீது உருவாயின என்பதை ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்தச் சிறுகடவுள்களைப் புணர்ந்தும், வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்தும் உறவாக்கிக் குடும்பத்தில் இணைத்ததன் மூலம், அவற்றோடு இந்துமதம் சார்ந்த உறவுகள் அங்கீகாரம் பெற்றன. அவற்றின் நாற்றத்தையும் ஆபாசத்தையுமே அம்பலப்படுத்துவதில் கவனமெடுக்கின்றது இப்பகுதி. இங்கு சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன. உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)


"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...

காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடகாளின்"31


காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது. இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.


"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்

மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"143


தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது. நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.


இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!


இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்;. மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்;. இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப்படுத்துகின்றான்.


ஒரு பெண் ஆணை விரும்பி திருமணம் செய்யக் கோருவது குற்றமா? இதை இராமாயணம் மறுக்கிறது. பெண்ணின் உடலைச் சிதைப்பதுதான் இராமாயண நீதி. இன்று பெண் மீதான சித்ரவதைகள் இதுபோன்று இராமனின் வழிகாட்டலில் நடப்பதை நாம் எதார்த்தத்தில் காண்கின்றோம். காட்டுக்குச் சென்ற இராமன் சீதையின் மடியில் தலைவைத்துப் படுத்து இருக்கும்போது, கடவுளாகப் போற்றப்படும் இந்திரனுடைய மகன் சயந்தன் காக்கா வேடம் போட்டு வந்து, சீதையின் முலைக் காம்பைக் கொத்தி தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்த போது, அது குற்றமாகி விடவில்லை. சீதையின் கற்பின் ஒழுக்கத்தைக் கணவன் சார்ந்து மானம்கெட்டுப் போற்றப்படுகின்றது. இன்று பெண்களின் முலையை விளம்பர உலகம் முதல் பாடசாலை மாணவர்கள் ஈறாகத் தோல் உரித்து இரசித்துப் பார்க்க விரும்பும் ஆணாதிக்கப் பண்பாட்டையே, இந்து மதம் போற்றி இரசித்த வரலாற்றுக் கதைகள் எழுதியவர்கள், அதன் தொடர்ச்சியில் இன்றும் அதைப் போற்றுகின்றனர்.


சீதை இராமனின் சகோதரி என்ற இராமாயண வரலாறு மூலம், சகோதர - சகோதரி திருமணம் நிகழ்ந்த சமுதாயத்தையே எமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றது. வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது. இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், "இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை"33 என்று தனது ஆணாதிக்க வக்கிரத்தை வெளிப்படுத்தினான். மேலும் அவன் "உன் (சீதை) நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப் பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.."33 என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால் கற்பழித்திருப்பேன் என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;. இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப் பார்ப்போம். "நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே."33 இந்த இராமன், இராவணனிடம் இருந்து மீட்ட சீதை மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி கட்டாயப்படுத்தினான்;. கற்பு பற்றி ஆணாதிக்க இறை ஒழுக்கம் வக்கிரம் பிடித்திருப்பதை இது காட்டுகின்றது. நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் ஆணாதிக்கக் கற்பு ஒழுக்கத்தை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில் துரத்திவிட்டான். இந்த இறைத் தூதர்களின் ஆணாதிக்கம் பெண்வதைகளைக் கொண்டது.


இன்று எதார்த்தத்தில் பெண் மீதான சந்தேகங்கள், அது சார்ந்த சித்ரவதைகள், இதனால் பெண்ணைக் கைவிடுதல் போன்றவற்றின் முன்னோடியான தந்தையாக ஆணாதிக்க இராமன் இருக்கின்றான் என்றால் அதை மறுக்கமுடியாது. இங்கு இராவணன் சீதையைத் தூக்கிச் சென்று நடத்திய முறைகள் பொதுவான எல்லையில் ஆணாதிக்கக் கண்ணோட்டம் கொண்டவையல்ல. இராவணன் சீதையைத் தூக்கியதே, தங்கை சூர்ப்ப நகைக்கு நடந்த கொடுமையின் அடிப்படையில்தான்;. இந்த இடத்தில் இதற்காகச் சீதையைக் கொண்டு சென்றது குற்றமே ஒழிய ("வால்மீகி இராமாயணப்படி, சீதை இராமனை விட்டுவிட்டு இராவணனுடன் தானாகவே சென்றாள்."34), இராமன் செய்தது போன்ற இழிந்த ஆணாதிக்கக் குற்றமல்ல.


வரலாற்றில் மத யுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை நடந்ததைப்போல பெண்களைக் கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது வைப்பாட்டியாக வைத்திருப்பதும் என்ற ஆணாதிக்கக் கொடூரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்றபோது, அவளின் விருப்பமின்றித் தொடுவதைக் கூடக் கைவிட்டவன்;. சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளைக் களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக, பெண்ணைப் பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணைத் தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டிய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தைச் சொல்லுவதே இராமாயணம்.


சீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது. உத்தர காண்டம் சரகம் 42, 43 இல், முறையே சுலோகம் 8,1 இல், "குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான்;. சீதை அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில் ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில் புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள் போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கி கிடந்தனர். சர்கா 4,2 செய்யுள் 18.21 இல், "மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள், நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப் பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.


சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி வீபீ"ணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின் ஆணாதிக்க நீதி. இதுபோல் வாலியின் மனைவி தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான். பெண்களை, பெண்களாக ஏற்றுக் கொள்ளாத இந்து மதம், வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கைப்பற்றுவதும் கொடுப்பதுமாகப் பெண்களைச் சிறுமைப்படுத்தியது.


ஆணாதிக்க இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;. 12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை இராமன் சென்று பார்த்தது கிடையாது. 12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின் மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான்;. அங்கு இராமன் மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக் காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள். அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச் செல்லுகின்றாள்;. கடவுளாகக் காட்டப்படும் ஆணாதிக்க இராமனின் யோக்கியதை இது. இதுதான் இந்தியாவின் இந்து ஆணாதிக்கமாகும். ஒரு பெண்மீதான அவதூறுகள், இழிவுகள் இராமனின் வழியில் இன்று இந்துப் பண்பாடாக இருப்பது சமுதாயத்துக்கே கேவலமானது. இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவுகட்டாத வரை நாம் மனிதனாக வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.


வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்? பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள். அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும், நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள். அன்று பெண்கள் மீதான கற்பழிப்புகள் இறைக் கட்டளையாகக் கூறி பெண்கள் மீது நடத்திய கொடுமைகளே இன்று, இராமனின் பெயரால் முஸ்லிம் பெண்கள் மீதான கற்பழிப்பாக மாறியுள்ளது. இன்று இவை இராமன் என்ற கடவுளின் பெயரில் நடப்பதுதான் வேறுபாடு.


பாரதப் புராண இலக்கியத்தைப் பார்ப்போம். யார் இந்தப் பாண்டவர்கள், துரியோதனர்கள் என்று பார்ப்போம். சந்தனு என்ற மன்னன் பரிமளகத்தியை இரண்டாம்தாரமாக மணந்தபோது, அவளுக்கும் அது இரண்டாவது திருமணமாகும். இது புராணம் எழுதப்பட்ட காலத்தில் மறுமணச் சுதந்திரம் பெண்ணுக்கு இருந்ததைப் பிரதிபலிக்கின்றது. இது இன்று மறுப்புக்குள்ளாவதை நாம் காணமுடிகிறது. இந்தப் பரிமளகத்தி முதலில் மச்சகந்தி என்ற பெயரில் இருந்தவள். இவள் தோணியோட்டியாக இருந்தபோது பராசன் என்ற முனிவன் உடலுறவு கொண்டு வேதவியாசன் என்ற முனிவன் பிறந்தான்;. இதற்குப் பின்னால் சந்தனுவுடன் நடந்த திருணத்தில் இரண்டு குழந்தைகள். மூத்தவனைக் கந்தரூபன் கொன்றுவிட இரண்டாமவனான விசித்திரவீரியன் பட்டத்துக்கு வந்தான். இவன் அம்பிகை, அம்பாலிகை என்ற இரண்டு மனைவிமாரை வைத்திருந்தான்;. இருந்தும் அவன் பிள்ளையில்லாமல் இறந்துபோக, அவள் தாய் தனது மூத்த புரு"னின் மகன் வேதவியாசன் என்ற முனிவனைக் கொண்டு, இருபெண்களையும் புணரச்செய்தாள். இதனால் அம்பிகை குருட்டு திருதராட்டினனைப் பெற்று எடுக்க, அம்பாலிகை பாண்டுவைப் பெற்று எடுத்தாள். வேதங்களை எல்லாம் வகுத்ததால் வேதவியாசன் என்ற பெயரைப்பெற்று பாரதக் கதையை எழுதியதுடன், ஐந்தாம் வேதமாக மாற்றிய இந்த முனிவர், அம்பாலிகையின் தாதியுடன் புணர்ந்து விதுரன் உருவானான்.


பாண்டுவும் இரண்டு பெண்டாட்டிகளாகக் குந்தி, மாதிரி என இருவரைக் கொண்டிருந்தான். குந்தி திருமணத்தின் முன்பே அதுவும் காது கன்னத்தின் வழியாக, கர்ணனைப் பெற்றெடுத்தாள். நம்பித் தொலையுங்கள். அத்துடன் அதை மறைத்து பச்சைக் குழந்தையைக் கைவிட்டாள். காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டு இரண்டு மான்கள் புணரும்போது அதன் மீது அம்பு செலுத்தினான். அங்கு புணர்ந்து கொண்டிருந்தது மாறுவேடம் கொண்ட முனியும் மனைவியுமாம். இதனால்தான் இன்றைய நீலப்படங்கள் மிருகத்துடன் புணர்வதை ஜனநாயகப் பண்பாடாக்கிப் படமாக்குகின்றனரோ?!


பாண்டு வீசிய அம்பைக் கண்டு கோபம் கொண்ட முனிவர் சாபம் போட்டாராம். நீ உன் மனைவியைத் தொட்டால் மண்டை வெடித்துவிடும் என்று. இதனால் காட்டில் வாழத் தொடங்கிய பாண்டு, ஒருநாள் மாதிரி மீது மோகம் கொண்டு தொட பாண்டு மண்டை வெடித்து விடுகின்றது. இதனால் கொள்ளி வைக்க பிள்ளையற்ற நிலையில், குந்தி எமதர்மனையும், வாயுபகவானையும், இந்திரனையும், புணர்ந்து முறையே தருமனையும், பீமனையும், அருச்சுனனையும் பெறுகின்றாள். மற்றைய இரண்டாவது பெண்டாட்டி "மாதிரி, அசுவினி தேவதைகள் மூலம் கருவுற்று நகுலன், சகாதேவர்களை ஈன்றதாக மகாபாரத்தில் காணமுடியும.;"11 யார் இந்த அசுவினிகள்?


அசுவினிகள் என்ற கடவுளின்; பிறப்பை விஷ்ணுபுராணத்தில் இருந்து பார்ப்போம். "சூரியனுக்குச் சப்ஜ்ஞாவில் முதலில் மனு, யமன், யமி என மூன்று குழந்தைகள் பிறந்தனர். அதற்குப் பிறகு சூரிய ஒளியைத் தாங்க இயலாமல் சப்ஜ்ஞா, அவருக்குப் பணிவிடை செய்ய சாயாவை அமர்த்தி விட்டுக் காட்டுக்குச் சென்று தவம் செய்தாள். பெண் குதிரையின் வேடம் பூண்டே அவள் தவம் செய்தாள். சூரியன் அசுவ (குதிரை) வடிவம் பூண்டு அங்கே சென்றார். அங்கே வைத்து அந்தக் குதிரைகள் இணைந்தன அப்படிப் பிறந்த புதல்வர்களே அசுவினி குமாரர்கள்."11


இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததைத் தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டுக்கு ஒருவர் அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் பொதுமகளிர் என்பதால், அவளைத் துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, இப்படி கூறிய வரலாற்றைத் தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தைக் கொண்டிருக்கவில்லை, பாண்டவர்கள் யுத்தம் மற்றும் மரபைத் தாண்டி, அநியாயமாகக் கிருஷ்ணனின் சதி உபதேசம் மூலம் நடத்திய யுத்தத்தில் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாகக் கீதையில் இணைக்கப்பட்டதே.


இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் திரௌபதி உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது. பலர் முன்னிலையில் உரிந்தபோது, முன்பு பொது விபச்சாரத்தில், பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனையவில்லை. பெண் - ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில், உரிவதைப் பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை.


இந்தத் திரௌபதி பாண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ளத் துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்கவாதி பாண்டவரிடம் கூறியதாகப் பாண்டவர் வரலாறு கூறுகிறது. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை, முன் நிறுத்தி (இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தைக் காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்தப் பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கும், ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது.


பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணாதிக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது.

"அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய

ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர"35


- என்ற கூற்றின் அர்த்தம் "கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது"35 என்று கூறும்போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான், இதனால் அமைதியை விரும்புகின்றான். இதேபோல் வர்க்க முரண்பாடற்ற, அமைதியான, சுரண்டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவைத் தடுக்கவும், ஆணாதிக்கச் சிதைவைத் தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளைப் பேண முனைகின்றனர்.


பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.

"தானம் த்வி"த க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன்

க"பாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ"35


- இதன் அர்த்தம் "என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்"35 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்தத் திமிர்ப் பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்கப் பார்ப்பனியத் திமிர்கள்தான். இந்தத் திமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்கப் பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம்.


"ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி

மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி"35

- இதன் அர்த்தம் "குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர், என்னை எய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்"35 என்று அருச்சுனனுக்குக் கூறும்போதே, சாதியத்தைக் கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாகக் கொள்ள, ஆணாதிக்கத்தை ஆயுதமாகக் கையாள்வதைக் காணமுடிகின்றது.


கிருஷ்ணனின் கீதை, பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளையொட்டிய சூத்திரங்களில், "பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து


பிறந்தவர்கள்"23 என்று ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சாதியக் கட்டமைப்பையே சமுதாய மயமாக்குகின்றது. ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற இராதா இராபாணனின் மனைவியாவார். இந்த இராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவார். இதேநேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 1,80,000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16,000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதி" மன்னனை யுத்தத்தில் வென்றபோது, அவன் அரண்மனையில் இருந்த பெண்களைத் தனது மனைவியாக்கியவன். பெண்களைச் சிறைமீட்டு விடுவித்து விடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிரக் கடவுள் கிருஷ்ணன். இந்தப் பாலியல் கூத்துகளை "இராசலீலை" என இந்துமதம் போற்றுகின்றது. இந்தக் காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது. தேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10, அத்22 இல்) "கோபிகளைத் தழுவிக் கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ணப் பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்"27 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது.


இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டியும் கிருஷ்ண லீலையாகும். இந்தக் கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியைக் கண்டு காமம் கொண்டு, தனது மனைவி இராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் ஆணாதிக்க முகமாகும். உண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், ஆணாதிக்க அடிமைகளாகப் பெண் தெய்வங்களை மாற்றி கிருஷ்ணனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்தெய்வ வழிபாடுகளை உருவாக்க முடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மன் தன்மகள் ருக்மணியை (இவள் "பட்டமகிஷி" என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லின் அர்த்தம் எருமை மாடாகும்.) சிசுபாலன் மன்னனுக்குத் திருமணம் முடிக்க இருந்த நேரம், கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவைச் சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்கப் பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே ஆணாதிக்க மதமல்லவா. இந்தக் கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்ச்சுனன் சுபத்திரையைப் பலாத்காரமாகக் கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான். இந்தக் கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனமாடுவது, பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியைத் திருடி இரசிப்பது என்று பல அற்புதங்களைச் செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கத்தைச் சாதகமாகக் கொண்டு, பெண்களின் உடுப்புகளைத் திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்திக் கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக இரசித்தவன். இதை இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம்.


"புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்கமான உறவைத் தந்துவிட முடியுமா? எனவே, அடுத்த பிறவியில் அவர்கள் அனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்."23 இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப்புக் காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல.


பெண்களின் உறுப்புகளை வக்கரித்துக் காட்டும் ஆணாதிக்கம், அதை இரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்குகின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி, ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களைக் கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டை விடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தைப் போற்றுவதே இந்து மதம்தான். இந்தப் பாலியல் வக்கிரத்தில் எப்படிக் கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். "... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவி செய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திபடுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 9,00,000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திபடுத்திட அவனும் 9,00,000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 18,00,000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா!.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறி பதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்."23 பாலியல் ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விவரிப்புதான் இது.


கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோ"த்துக்குக் குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதைப் பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனிதச் சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புரு"ன் ஆவான். பெண்களின் உடல்களைப் பிராண்டிக் கடித்து நடத்தும் இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களைப் பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.


"மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய

யே பிஸ்யூ பாபயோயை

ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர

ஸ்தேபி யாந்தி பராம்கதி"35

இதன் அர்த்தம் "அர்ச்சுனா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்"35

- என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல.


"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"

- என்று கூறி நியாயப்படுத்தும்போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்கச் சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது, குரங்குகளாகக் குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.


இந்தக் கிருஷ்ணன் விரகத் தாபத்தைக் கோபிகளுக்கு ஏற்படுத்தி விட்டுத் திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தைத் தீர்க்க மரங்களைக் கட்டிப் பிடித்தனராம்;. மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதத்தின் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியைச் சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள்தான். அவர்கள் தமது மன வக்கிரத்தை அடிப்படையாகக் கொண்டு இரசித்து முன்வைத்த கீதையை, இன்று அதே கண்ணோட்டத்தில் படிக்கின்றனர். அடுத்து இதில் ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;. காமத்தைப் போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தைக் கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கைத் தாமேயெடுத்து, புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர். அந்தப்புரப் பெண்கள் மத்தியில் பெண்களின் ஓரினச் சேர்க்கை உணர்வு எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாகக் கீதை எடுத்துவைத்து நியாயப் படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை ஆயிரக்கணக்கில் அடைத்து வைத்து, தமது இச்சையைத் தீர்த்தபின் விடப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் ஓரினச்சேர்க்கை கொள்வது எதார்த்தமாகின்றது. இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஓரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய ஓரினச்சேர்க்கையின் தந்தையாகக் கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன. இந்த இந்துமதத்தின் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.


"க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்

குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"23

- இதன் அர்த்தம் "வீட்டிற்குள்ளேயே தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், "மகா" மாதத்தில் பசுக்களின் தசையை உண்ணுவதைப்போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்."23 பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பிப் பிழைத்து தன்னைப் பாதுகாத்து வாழும் பெண்ணின் இருப்பைக் கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியைத் தின்பதோடு ஒப்பிட்டுக் கேவலப் படுத்துகின்றது. அதாவது அன்று பார்ப்பனர் உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம் பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணைக் கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்கச் சமூக உலகத்துக்கும், வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கும் இடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, பெண் கணவனின் தசையைத் தின்பதாகக் காட்டி ஒப்பிட்டு இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப் போதிக்கின்றது.


பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்தப் பிள்ளையாரைக் கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க ஆணாதிக்கப் பாலியல் வக்கிரங்கள் பல கொண்டது, பலபிறப்பு வரலாற்றையும் கொண்டதாகும். அவைகளைப் பார்ப்போம்.


1. சிவமகாபுராணத்தில், பார்வதியார் குளிக்கப்போனபோது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில் இருந்த ஊத்தையைப் (அழுக்கு) பிராண்டி அதற்கு உயிர் கொடுத்து, அதைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார். சிவபெருமான் வந்து உள்ளேபோக முற்பட்டபோது சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் மோதல் ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது. உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான் யானைத் தலையை வெட்டிப் பொருத்தியதாகப் பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு தெய்வமான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்குத் துணிவுள்ளவர்கள் யார்? இது ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது.


எனவே, கடவுள்கள் ஆணாதிக்கம் கொண்டவை என்பதையும், பெண் தெய்வங்கள் பாதுகாப்பற்ற எல்லையில் வாழ்ந்ததையும் காட்டுகின்றது. பெண்கள் தமது கற்புரிமையைப் பாதுகாக்க ஆண் கடவுள்களுடன் போராட வேண்டியிருந்ததை அம்பலப்படுத்துவதுடன், கடவுளின் பொய்மை, நீதி அம்பலமாகின்றது. இந்த ஆணாதிக்க ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள் எப்படிப் பாதுகாப்பைப் பெறமுடியும். ஏனெனில் அந்தத் தெய்வங்களே பல வக்கிரங்களில் பிறந்ததுடன், கற்பழிப்புகளும் கூடிய வன்முறைகளில் ஈடுபட்டவர்கள். பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண் தெய்வங்களும் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்களும் சரி, பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க இரசனையில் இரசிக்கின்றன அல்லவா? இதைத்தான் பிள்ளையார் கதை தெளிவாக்குகின்றது. கற்பழிப்பு முதல் கடவுள்களின் வக்கிரங்கள் எல்லையற்றவை. அவைகள் பலவற்றை இக்கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம்.


2. ஒருநாள் ஆண் யானையும், பெண் யானையும் புணர்வதைக் கண்ட சிவனும் பார்வதியும், அந்த நினைவில் அவர்கள் புணர்ந்ததால் யானை முகத்துடன் பிள்ளையார் பிறந்தாராம். இதுபோல் மற்றொரு கதையில் சுவரில் ஆண் யானை, பெண் யானையைப் புணர்வது போன்று கீறியிருந்த காட்சியை பார்வதியும் கண்டு, அதுபோல் சிவனும் புணர்ந்ததால் பிள்ளையார் பிறந்தாராம். அருவருக்கத்தக்க புணர்ச்சி வக்கிரத்தில் தெய்வங்கள் திரிந்தன என்பதைக் கூறும்போது, இந்த மாதிரி கற்பனைகளை உருவாக்கிய நபர்களின் பிம்பம் பிரதிபலிக்கின்றது. மிருகங்களின் புணர்ச்சிகளை இரசிக்கும் மனிதப் பண்புகள் மிருகத்தைவிட இழிவானவை. இதில் இருந்துதான் வக்கிரமான நீலப்படங்கள் (புள10பிலிம்) மனிதப் புணர்ச்சியையும் மிருகத்துடன் மனிதன் கலந்த புணர்ச்சியையும் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஜனநாயகச் சந்தையில் மூலதனமாக்கிக் கொடிகட்டி பறகின்றது.


3. பார்வதி கருவுற்று இருக்கையில் சித்துரா அசுரன் (இந்தியாவின் ஆதி மக்களைக் குறிக்கும் சொல்) ஒருவன் காற்று வடிவில்
கர்ப்பப் பைக்குள் சென்று, பிள்ளையார் தலையை வெட்டி விட்டுவந்த நிலையில், பார்வதி யானைத் தலை கொண்ட கஜாசுரன் தலையை வெட்டி ஒட்டவைத்ததாகப் பிள்ளையார் வரலாறு கூறுகிறது. முட்டாள்களே நம்புங்கள்! இந்தப் புளுகு மூட்டையை! இறைவன் வாழும் உலகில் அசுரர்கள் எப்படி வாழ முடியும்? இது எப்படி மனிதனுக்குத்

தெரிந்தது?


4. தக்கனுடைய யாகத்தை அழிக்க சிவன் தனது மூத்த மகனை அனுப்பியதாகவும், அங்கு தக்கன் பிள்ளையாரின் தலையை வெட்டி எறிந்த நிலையில், முருகன் சென்று பார்த்தபோது தலையைக் காணாததால், யானைத் தலை ஒன்றை வெட்டிப் பொருத்தியதால் பிள்ளையாரின்

யானை முகம் பிறந்த கதை. பிறப்புகள் வக்கிரம் பிடித்துக்

கிடப்பதைக் காட்டுகின்றது. யாரும் யாகம் செய்தால் அதை அழிப்பது அதர்மம் அல்லவா? என்ன சிவனுக்கு மட்டுமா யாகம் செய்யும் உரிமை உண்டு? இந்த உரிமையின் பிறப்பு எதன் அடிப்படையிலானது? யார் இந்த உரிமையைக் கொடுத்தது? எங்கு எப்போது இந்தப் பிறப்புகள் எல்லாம் நடந்தன?


5. "பிடியதன் உருவுமை கொள மிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே"36

- என்ற திருஞானசம்பந்தர் தேவாரம் சிவன் ஆண் யானையாகவும், உமாதேவியார் பெண் யானையாகவும் மாறி புணர்ந்து உருவானவரே பிள்ளையார் என்று பிள்ளையார் பிறப்பை விளக்குகின்றது. இதையே சுப்ரபேத ஆகமம் என்ற நூலும் கூறுகின்றது. இந்தத் திருஞானசம்பந்தர் உமாதேவியாரின் பெண் உறுப்புகளைத் தனது தேவாரத்தில் பாடிய விதங்கள் பல வக்கிரத்தைக் கொண்டவை. இதனால்தான் அந்த மூன்று வயது குழந்தைக்கு மார்பில் அல்லாது கிண்ணத்தில் பால் கொடுத்தாரோ. இந்தத் திருஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்க அருள் கோரி "பெண்ணகத்து எழில்சாக்கியப் பேய் அமன் தென்னற் கற்பழிக்கத் திருவுள்;ளமே" என்று ஆணாதிக்க இறைவனை வேண்டிப் பாடியவர் அல்லவா. இவர்தான் தனது சொந்த ஆணாதிக்க வக்கிரத்தை மிருக நிலையில் புணர்ந்து வெளிப்படுத்துகின்றார். மனிதப் புணர்ச்சியைவிட மிருகப்புணர்ச்சி தாழ் நிலை விலங்குக்குரிய தாழ்ந்த நிலையல்லவா? இதை இறைவன் செய்தான் என்பதும், அதைக் கற்பனை பண்ணிப் பாடுவதும் கேவலம்கெட்ட இழிந்த பண்பாடாகும்;. இந்தத் தேவாரத்தைச் சொல்லி நாம் பாடுவதும் எமது முட்டாள்த்தனத்துடன் கூடிய அறிவின்மையில்தான்.


6. பார்வதி தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள இராட்சஷி (அரக்கி) மாலினியைக் குடிக்க வைத்ததாகவும், இதன் காரணமாக மாலினி கர்ப்பம் அடைந்து பிறந்த குழந்தையே பிள்ளையார் என்று ஒரு கதை. எவ்வளவு அருவருப்பைத் தரும் பிறப்புகள். இந்த மாதிரி உருவாக்கிய பிறப்புகள் எல்லாம் ஓரினச் சேர்க்கையில், அதாவது ஒரு பால் உறவில் பிறந்ததாக அல்லவா இருக்கின்றது. ஓரினச் சேர்க்கையாளர்கள் இறைவனில் இருந்தும், இயற்கைக்குப் புறம்பான தமது வக்கிரத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்தப் பிறப்புகளின் வக்கிரம் எல்லையற்ற இழிவுகளாக இருப்பது சகிக்க முடியாதவை.


7. ஒருநாள் பார்வதி தனது உடல் அழுக்கைப் பிராண்டி உருட்டி விளையாடியதாகவும், அப்போது அந்த உடல் அழுக்குக்கு அன்பு சொரிந்து உயிரூட்டியதாகவும் (சிறுபிள்ளைகள் போல்) அதுவே பிள்ளையார் ஆனதாக ஒரு கதை. எப்படி சிவபெருமான் அந்த ஊத்தைக்குத் தந்தையாக முடியும்;? ஒருபால் உறவில் குழந்தை பிறக்கும் அதிசயம் உலகின் அதிசயங்களாகப் பதியாத குற்றத்தை இந்து ஆட்சி நிறைவு செய்யுமோ! மூக்கை நோண்டி, இரசித்து உண்ணும் பண்புபோல் அல்லவா இந்தப் பிறப்புகள் அசிங்கம் நிறைந்து கிடக்கின்றன.


8. பிரம்மாவின் வர்த்தப் புராணத்தில் கணபதி பிறப்பைப் பற்றி, சனிப்பார்வை தோ"த்தால் தலை இல்லாது பிறந்ததால், துயரமுற்ற உமாதேவியாரின் துன்பத்தைத் துடைக்க விஷ்ணு யானைத் தலையை வெட்டி ஒட்டினாராம்;. இது போல் மற்றொரு கதையில் உமாதேவியாருக்குக் குழந்தை பிறந்ததை அறிந்து, அவரைப் பார்க்க எல்லாத் தேவரும் வந்தனராம். அதில் சனி தேவனும் ஒருவராம்;. சனி, தான் பார்த்தால் குழந்தைக்குத் தீது, உண்டாகும் என்று எண்ணி பார்க்காது தவித்ததாகவும், உமாதேவியார் அதை அவமதித்ததாக எண்ண, அதைத் தவிர்க்க சனி பகவான் குழந்தையைப் பார்க்க, குழந்தையின் தலை எரிந்து போனதாம். இதனால் உமாதேவியார் சினம் கொள்ள, கான்முகன் போன்ற தேவர்கள் சமாதானப்படுத்தி சிவன் துணையுடன் யானை முகத்தைப் பொருத்தியதால் பிள்ளையாரானார். எப்படியிருக்கிறது இந்தப் பிறப்பின் பல்வேறு கற்பனைப் பிதற்றல்கள்?


இந்தப் பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்கச் சின்னமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்யும் பலவிதமான கொண்டாட்டங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் ஆணாதிக்க வெறியர்களின் காமப்பசியைத் தீர்க்கும் கற்பழிப்புகளைச் செய்யும் ஊடகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக் கலவரத்தின் தூண்டுகோலாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு) என்பது திருமணத்தின் பின் மணமகனும் மணமகளும் உடலுறவைக் குறித்துக் கூடும் நாளைக் குறித்து உருவானது. ஆனால் இன்று, மதத்தின் பெயரில் நடக்கும் கலவரத்தில் நிகழும் கற்பழிப்புகள் பிள்ளையாரின் பிறப்பைப் போல் வக்கரித்த நிகழ்கின்றது.


இந்தியாவில் சிதம்பரம் கோயிலிலும், பிற ஊர்த் தேர் சிற்பங்களிலும் பிள்ளையார் தனது தும்பிக்கையை ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் விட்டு, தூக்கி வைத்திருப்பது போன்ற காட்சிகளின் பின் எழும் ஆணாதிக்க வக்கிரம், மனிதப் பண்பாட்டையே வக்கரித்துக் கேலி செய்கின்றது. இதற்கு ஒரு கதையாக அசுர ஸ்திரி, அசுரர்களை அழிக்க, அழிக்கத் தொடர்ந்து உற்பத்தி செய்ததால், அதைத் தடுக்க தும்பிக்கையை விட்டுக் கர்ப்பத்தை உறிஞ்சி எடுத்ததாகப் பார்ப்பனிய வக்கிரம் கூறுகின்றது. இந்தியாவின் பழங்குடி மக்களை வந்தேறு குடிகளான பார்ப்பனர்கள் அழித்தபோது, நடந்த ஈவிரக்கமற்ற கொலைகளை நியாயப்படுத்துவதே இந்தக் கதை. இன்று உலகில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் எல்லையில், வறுமையைக் காரணம் காட்டித் திட்டமிட்டுக் கருத்தடை, கருஅழிப்பு செய்வது எல்லாம் இது போன்ற கோட்பாட்டு அடிப்படையில்தான். பெண்ணின், பெண் உறுப்புக்குள் புகுவதே ஆணாதிக்கத்தின் ஒரே நோக்கம் என்பதை, இந்தச் சிற்பங்கள் தனது சொந்த வக்கிரத்தினூடாக நிர்வாணப்படுத்துகின்றது.


லிங்கம் (சிவலிங்கம்) பிறப்பினூடான வழிபாடு ஆணாதிக்க ஆபாசத்தின் தோற்றமாகும். பத்மப் புராணம், சரஸ்வதி காண்டம் அத்தியாயம் 17 இல், பிரம்மா நடத்திய வேள்விக்குச் சென்ற சிவபெருமான் குடிபோதையில் காம விகாரத்தோடு நிர்வாணமாக மாறி ஆபாசமாக நடந்து கொண்டாராம். இதைக் கண்டு ரிஷி பத்தினிகள் சிலர் வீடு நோக்கிச் சென்றனராம். சிலர் சிவபெருமானுடன் உடலுறவு கொண்டனராம். இதைக் கண்ட ரிஷிகள் மயங்கி விழுந்தனராம். மயக்கம் தெளிந்த ரிஷிகள் சபிக்க, சிவபெருமானின் ஆண் உறுப்பு அறுந்து விழ, வானம் - பூமி அதிர்ச்சியினால் கிடுகிடுத்ததாம். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தடுக்க உமாதேவியார் தனது பெண் உறுப்பில் ஆண் உறுப்பை ஏந்தி அமைதிப் படுத்தினாராம். இதனால் அந்த ஆணாதிக்க லிங்கத்தை வழிபடுகின்றனர், ஆணாதிக்கப் பக்திமான்கள்.


இதையே லிங்கப்புராணத்தில் ரிஷி ஒருவர் வீடு சென்ற சிவன், அங்கு ரிஷி இல்லாத நிலையில், அங்கிருந்த பெண்ணைக் கட்டாயப்படுத்தி கற்பழித்தாராம். இந்தநேரம் வீடு திரும்பிய ரிஷி கற்பழிப்பில் ஈடுபட்ட சிவனின் ஆண் உறுப்பு அறுந்து விழக் கடவ எனச் சாபம் இட, அது அறுந்து விழ, இதனால் உலகம் அழிந்துவிடும் என்று பயந்த பார்வதி, தனது யோனியில் தாங்கிய அந்தப் பிண்டத்தையே வழிபடும் மானம் கெட்டவர்கள் இந்துக்கள். கற்பழிப்பை நியாயப்படுத்தி வழிபடும் ஆணாதிக்க இந்து வடிவங்கள், அதிலும் மீண்டும் வக்கிர புணர்ச்சியை உருவாக்கி வழிபடும் பண்பாட்டுக் கோயில்கள் இருக்கும் வரை ஆணாதிக்கம் இந்து இராஜ்ஜியத்தின் பொதுவான ஒழுக்கமாக, சட்டத் திட்டமாக இருப்பது தவிர்க்கமுடியாது அல்லவா?


ஐயப்பனின் பிறப்பு விசித்திரமானது. இரண்டு ஆண் கடவுள்களுக்கிடையில் நடந்த ஓரினச் சேர்க்கையில் பிறந்த கடவுளே ஐயப்பன் ஆனான். கடவுள்களின் ஓரினச் சேர்க்கைக் கூத்தை, இன்றைய ஓரினச் சேர்க்கையாளர்கள் ஜனநாயகம் சார்ந்த பெண்ணியக் கூறாகக் கொண்டாடலாம். ஆனால் அந்த ஆணாதிக்க வரலாற்றைப் பார்ப்போம்.


பத்மாசூரன் என்பவன் சிவனை நோக்கிக் கடும் தவமிருந்ததால், சிவன் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்டாராம். அவன், நான் யார் தலையில் கைவைத்தாலும், அவர்கள் எரிந்து சாம்பல் ஆகவேண்டும் என வேண்டினாராம். சிவன் ஆகட்டும் என்று வரத்தை வழங்கினாராம். உடனே வரம் பலிக்கின்றதா என்று பார்க்க சிவனின் தலையில் கைவைக்கப் போவதாகக் கூற, சிவன் ஓடத் தொடங்கினாராம். இதைத் தொடர்ந்து சிவன் அழிந்து விடுவாரோ என்ற நிலையில், மைத்துனர் மகாவிஷ்ணு அழகிய பெண் மோகினி வடிவம் எடுத்து அவன் முன்தோன்றினாராம். மோகினியைக் கண்ட பத்மாசூரன் அவளை மோகித்து புணரத் துடித்தானாம். அதற்கு மகாவிஷ்ணு நீ சுத்தமாக இல்லை, குளித்துவிட்டு வா என்று கூற, அவன் குளிக்கத் தண்ணீர் தேடி அலைந்து தண்ணீர் இல்லாத நிலையில், என்ன செய்ய என்று கேட்ட போது, சிறு குழியொன்றில் தண்ணீர் உள்ளது, அதில் கையை நனைத்து உன் தலையில் வைத்துவிட்டு வா என்று கூறினாராம். அவன் அப்படி செய்ய அவன் எரிந்து போனான்.


மகிழ்ச்சியடைந்த மோகினி அப்படியே சிவனிடம் செல்ல, ஆணாதிக்கச் சிவனுக்கு அவள் மேல் ஆசைப்பட்டு, புணரத் துடித்தாராம். உடனே மகாவிஷ்ணு மோகினி வே"த்தில் ஓடத் தொடங்க, சிவன் துரத்திச் சென்று விஷ்ணுவின் கையைப் பிடித்தாராம். விளைவு கையில் குழந்தை ஒன்று உருவானதாம். அதாவது வழக்கமான ஆணாதிக்க மொழியில் கையில் போட்டதால் கையப்பன் பிறந்து, அதுவே பின்னால் ஐயப்பன் ஆனான்.


இதையே வேறுவிதமாகக் கூறும் இந்துக் கதைகளில், ஹரியும் ஹரனும் ஓரினச் சேர்க்கையால் உருவான கடவுள்தான் ஐயப்பன். இது கேரளத்தில் நடந்த அருவருப்பான "அற்புதம்" ஆணாதிக்க வக்கிரத்தில் உருவான ஓரினப் புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்துக் கதைகளும், கடவுள்களையும் சுய அறிவற்ற மனிதர்கள் போற்றி வழிபடலாம். ஆனால் இந்த ஆணாதிக்க வக்கிரமான ஓரினச்சேர்க்கையின் பண்பாடுகளை ஈவிரக்கமற்ற வகையில் தோலுரித்து போராடவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.


இங்கு சிவனின் ஆணாதிக்க வெறியைக் கேள்விக்கு இடமின்றி இந்து வழிபாடு அங்கீகரிக்கின்றது. ஒரு பெண்ணைப் புணர்வதற்;குப் பெண்ணின் அனுமதி அவசியமில்லை, ஆணாக இருந்தால் அதுவே அங்கீகாரமாகிவிடும் என்றளவுக்கு, இந்து வழிபாட்டுக் கோட்பாடு
நிஜ விளக்கத்தைக் கொடுக்கின்றது. அத்துடன் அழகான பெண் தனது பாலியல் வடிவத்தைக் கொண்டு, எதையும் சாதிக்க முடியும் என்ற
விபச்சாரப் பண்பாடு, ஆணாதிக்கப் பெண்ணியல் கண்ணோட்டத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இதை நாம் சகித்துக் கொண்டு வாழ
முடியுமா?


தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? மனு இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.

"ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்

அயுதம் ஸோசிராதேவ வாக்பதே ஸமதாமியாத்"37


அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து மதம். ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, எல்லா ஆணாதிக்கக் கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும். விரும்பிய பலன்கள் கிடைக்க நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம் முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன. இவர்கள் தான் சாதியினதும், ஆணாதிக்கத்தினதும் தலைசிறந்த கொடுங்கோலராவர்.


அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத "மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.

"சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்:அர்க்கபுஷ்ப

ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத்

மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன

தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"37


அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான். பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள். இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.


சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?

"... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம் மஹாகாலேன தேவனே

மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத் ஸ்மோவதனாம்

விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ
பவேந்"37


- என்று இந்துமத நூலான மஹோநதி கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.
இந்து மத சிவன் பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்கள் ஈறாக இதை எப்படிப் போற்றமுடிகின்றது? இவை பெண்கள் மீதான வக்கிரமான ஆணாதிக்கப் பார்வையில் இருந்தே, இந்துமதக் கோட்பாடுகள் தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்து வக்கரித்து சொன்னவைகளேயாகும் என்பதை இது காட்டுகின்றது. இதையொத்த மற்றொரு வக்கிரத்தைப் பார்ப்போம்.


கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட கூந்தலையுமுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும். பின் அவளைப் புணர்ந்து பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான். இவ்வாறு பூசா விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.


புணர்வதற்கு, அதுவும் வக்கரித்து இவ்வாறு செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்துப் புரவலர்களின் ஆணாதிக்க வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டைக் கிறுக்கர்களின் அறிவு உளறல்தான் இவை என்று இந்தக் கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி போட்டி போன்றனவற்றின் தோற்றத்துக்கு இந்துமதமே மூலமாகின்றது அல்லவா? ஆடை கொடுத்து, அதை விதவிதமாக அவிழ்த்துவிட்டு, இரசித்துப் புணருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே இந்து மதம் செய்து புணரும்போது அங்கு செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில் இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.


குழந்தை பெற வேண்டுமா அதற்கும் வழியை இந்துமதம் கூறுகின்றது. வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச் சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;. புத்திரன் வேண்டுபவன் தனது மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அருகில் சென்று,


"1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)

2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)

3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)"37

- என்று கூற வேண்டும். இதன் அர்த்தம், "ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன். நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு, "ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்."37 இப்படி சொன்னவுடன் பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் "விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"37 பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள். பின் ஆண் குதிரையி;டம் சென்று, நான் செய்யும் காரியத்தை எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள். இதையே யஜீர் வேதத்தில் புத்திரக் காமேஷ்டி செய்யக் கோருகின்றது. இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும் இதுதான். இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள், மலட்டுக் கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும் கணவனுக்குக் குழந்தையைப் பெற முடியாது. அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே குழந்தையைப் பெற்றுப் போடமுடியும்.


குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று வழியாகும். இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும் சமுதாயத்தில் இருந்துள்ளது. இழந்துபோன பல சொர்க்கத்தை மீளக் கொண்டு வரும் இந்து இராஜ்ஜியக் கனவை அடிப்படையாகக் கொண்டே, இன்று மீளவும் பாசிசச் சதிராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.


தங்கமும் வெள்ளியும் உருவான வக்கிரத்தைப் பார்ப்போம். மகாவிஷ்ணு மோகினி வே"ம் போட்டு அசுரர்களை மோகிக்கும் படி செய்வதாக அறிந்த பரமசிவன், கைலாயத்தில் இருந்து பார்வதியுடன் அவரைக் காணச் சென்றாராம்.
அவரிடம் மோகினி வே"த்தைப் பார்க்க வேண்டும் என்று சிவன் கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, காமுகர்தான் அதை வணங்கி மோகிப்பர் என்ற கூறி மறைந்தாராம்.


சிவன் அவரைத் தேடியபோது, பெண் வே"த்தில் பெண்கள் விளையாடிக் கொண்டிருந்த மைதானம் ஒன்றில் நின்றாராம். சிவன் மகாவிஷ்ணு மீது மோகம் கொண்டு மனைவி உமாதேவி நிற்பதையும் கூட எண்ணாது காமம் கொள்ள, மகாவிஷ்ணு பந்தடிக்கும் கவனத்தில் ஆடையை நழுவவிட்ட நிலையில், சிவன் நிற்பதைக் கண்ட மகாவிஷ்ணு என்ற மோகினி மரத்தின் பின் ஒளிந்தாள். சிவன் அவளைப் பிடிக்க அவள் திமிரியபடி நிர்வாணமாகத் தலைவிரி கோலமாக ஓட, சிவன் துரத்திய படி தன்னுடைய ஆண்விந்தைக் காம வெறியில் சிதறவிட்டபடி துரத்தினர். விந்து வெளியேறிய நிலையில் மகாவிஷ்ணு மறைந்து போனாராம். சிவனின் விந்து எங்கு எங்கெல்லாம் விழுந்ததோ, அவைதான் தங்கம், வெள்ளியாகிப் போனதாம். நம்புங்கள்; இந்த இந்து மத வக்கிரத்தை.


பெண்கள் நீராடி, அழகுபடுத்தி தலையவிழ்த்து கோயில் செல்லும் போது, வீதி தோறும் நிற்கும் ஆணாதிக்கச் சிவன்கள் எல்லாம் இந்தக் கூத்தைத்தான் செய்கின்றனர். கும்பிடும் கோயில் சிற்பங்கள் புணர்வின் வக்கிரத்தில் பக்தியின் பின்னால் அரங்கேற்றுவதையே இந்துமதம் எமக்குப் போற்றித் தருகின்றது. ஆணாதிக்கச் சிவன் தனது மனைவியைத் தாண்டி மற்றைய பெண்களைப் புணரும் தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும்போது உரிமை மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது. உலகத்தைக் கடவுள் படைத்தான் என்ற கற்பனைகள் போல், தங்கம் வெள்ளி கதையும், இந்து மதத்தின் பொய்மையை ஆணாதிக்க வக்கிரத்தினூடாக அம்பலப்படுத்துகின்றது. பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைப்பவர்கள் என்று கருதும் ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வாரிசுகள்தான். இன்று சினிமா முதல் ஆணாதிக்கப் பண்பாட்டுத் தளம் பெண்ணின் மார்பைச் சிவனைப் போல், மோகித்து காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கியக் கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;. இன்றைய ஜனநாயகச் சமுதாயம் "காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், துயரத்தை விரக்தியாகவும்" (ஏப்பிரல் மே 2000)48 மாற்றிவிடும் இன்றைய பண்பாடுகளின், இறுகிய ஆணாதிக்க வக்கிரத்தையே அன்று முதல் இந்துமதம் உருவாக்கி வளர்த்தெடுத்தது. நீங்கள் கழுத்திலும், மார்பிலும் தவளவிடும் தங்கம், வெள்ளி எல்லாம், சிவனின் விந்தாக இருப்பதையே இந்து மதம் பெண்களுக்கு அறிவூட்டுகின்றது. இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்;. ஆனால் அறிவுள்ள மானவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது. இதை வேரறுக்க இந்து மதத்தையே நொறுக்கவேண்டும்.


அருணகிரிநாதர் என்ற நாயனார் ஆயிரம் ஆயிரம் பெண்களிடம் அற்பத்தனமான பாலியல் சுகம் கண்ட ஆணாதிக்க வெறியன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால் அவனின் ஆணாதிக்க வரலாற்றைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.


ராகு, கேது பிறப்பு எப்படிப்பட்டது? தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்போது அழகிய பெண்களும், அமிர்தமும் கிடைக்க, தேவர்கள் அமிர்தத்தையும், அசுரர்கள் பெண்களையும் விரும்பினராம். மகாவிஷ்ணு பெண் வேடத்தில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறினாராம். அப்போது இரண்டு அசுரர்கள் கள்ளத்தனமாகத் தேவருடன் அமர்ந்து விருந்து உண்டனராம். இதை அருகில் இருந்த சந்திரன் காட்டிக் கொடுக்க, மகாவிஷ்ணு அமிர்தம் பரிமாறும் அன்னவெட்டியால் அசுரர்களை வெட்டினராம். இந்த அசுரர்களில் ஒன்று அசுரப் பாம்பாம். மற்றது அசுர மனிதனாம். அமிர்தம் உண்டதால் அவர்கள் இறக்கவில்லை. வெட்டுண்ட தலையை மாற்றிப் பொருத்திவிட்டதால், தலைமாறி ராகு கேதுவானார்கள்;. நம்புங்கள். மக்களின் பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பார்ப்பனிய இந்து மதம் செரித்தபோது, இந்தமாதிரிப் புனைக் கதைகள் மூலமே பிறப்பு பற்றிக் கூறிச் சிறுவழிபாடுகளை அழித்தனர்.


இங்கு கடைந்து கிடைப்பது பெண்ணாக இருப்பதும், அதை விரும்பியவாறு பயன்படுத்த முடியும் என்ற புராண இதிகாச விளக்கங்கள், பெண்ணின் சுயத்தை அழித்து அடிமைப்படுத்துகின்றன. பெண்ணை ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்க மறுக்கின்றது இந்து மதம்;. அதைப் போற்றும்போதே ஆணாதிக்க வக்கிரம் கொப்பழிக்கின்றது.


தேய்பிறை வளர்பிறை பிறந்த வரலாற்றைப் பார்ப்போம். சந்திரனுக்கு இறைவன் அருளியதாகக் கூறும் கீதையில், மிகப் பெரிய நட்சத்திரம் சந்திரன் என்று அறிவியலுக்குப் புறம்பாகக் கூறுகின்றது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்து மத விளக்கப்படி 27 மனைவிமார் இருந்தும் சந்திரன் ரோகினி என்ற பெண் மீதே அதிக அன்பாக இருந்தானாம். மற்றவர்களை ஏறுஎடுத்தும் பார்ப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு இன்றைய பெண்ணியவாதிகள் கோரும் ஓரினச் சேர்க்கையைப் பற்றித் தெரியாததாலோ என்னவோ, தந்தை தக்கனிடம் போய் முறையிட, தந்தை சந்திரனுக்குத் "தேய்ந்து அழியக் கடவது" எனச் சாபம் போட்டதால் தேய்பிறையானதாம். இதனால் சிவனிடம் போய் முறையிட, அந்த ஆணாதிக்கச் சிவன் தனது தலையில் அணிந்து, "வளரக் கடவது" என்று சாபம் போட்டாராம். பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியவாதிகளின் ஆண் எதிர்ப்பு போல், சுடச்சுடத் தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியவாதிகளின் மேதையல்லவா?


முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

"கலைக் கோட்டு ரிஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்"38 பிறந்தாக இந்;து புராணங்கள் கூறுகின்றன. இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக விளக்கியது. பரிசுத்த ஆவி இயேசுவின் தாய் மரியாவின் வயிற்றில் புகுந்ததால் இயேசு பிறந்தார் என்ற ஆணாதிக்க விளக்கம்போல், இந்த விளக்கம் மிருகப் புணர்ச்சியாக்கிவிடுவதில், தனது ஆணாதிக்க விளக்கத்தை இந்து மதமாக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகப் புணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய எதார்த்தம்;. அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகையிடம் கேட்ட கேள்வி, நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதை நீங்கள் செய்கின்றீர்களா? இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒரு பகுதி கொண்டிருப்பதை அறிகின்றபோது, மனித - மிருகப் புணர்ச்சி அம்பலமாகின்றது.


பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றிப் பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீட்டுக்குச் சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளைப் புணர அழைத்தாராம். அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந் தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம். தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணர அழைத்தாளாம். அதற்குப் பட்டினத்தார் கோபத்தோடு "உன்னை அழைத்தவன் தொன்னையிலே, என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்"38 என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம்;. இதனால் அப்பெண் கருத்தரித்து குழந்தையைப் பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு கூறுகிறது. நம்புங்கள்;. திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, உங்கள் நிலையை இந்துப் பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களேன் என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பனச் சந்நியாசிகளுக்குப் பாய் விரித்துப் படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்து இராஜ்ஜியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்;றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரைப் போற்றுவதன் மூலம், சொந்தக் கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்துப் பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.


குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம்;. இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாகக் கருதி, அதன் மீது பாய, அது முகத்தைச் சுட்டுப் பொசிக்கிவிட குரங்கின் முகம் பொசுங்கிவிட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும். அனுமானை வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள்த் தனமல்லவா இங்கு சந்தி சிரிக்கின்றது.


வெள்ளைக்காரன் பிறப்பை ஒட்டி இந்துமதம் "நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று ஒரு பிராமணன் தவம் இருக்கின்றான். உனக்கு நல்ல குழந்தை பிறக்கும் என்று சொல்லி கடவுள் அவனுக்கு வரம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணோடு சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும். வேறு ஒன்றும் வழி கிடையாது. கடவுளின் ஆசீர்வாதத்தால் விந்து வழிந்து அவன் இருந்த இடத்திலேயே கீழே விழுந்து விடுகின்றது. ஒரு கொக்கு அதை எடுத்து சாப்பிட்டுவிட்டது. அந்தக் கொக்கின் வயிற்றில் பிறந்ததனால் வெண்காலியன். கொக்கு வெள்ளையாக இருப்பதால் வெள்ளைக்காரன், வெள்ளையாக இருக்கின்றான்."28
எப்படி இருக்கின்றது இந்துமதப் புரட்டுகள். ஆணாதிக்கப் பாலியல், ஆண்களின் விகாரமான போக்கையும் அதன் கொப்பளிப்பையும் காட்டுகின்றன.


நாடார் சாதி மக்களைப் பார்ப்பனியம் இந்துமதத்துக்கு மாற்றியபோது, அடித்தட்டு மக்களின் வழிபாட்டுக் கடவுள்களையும் புணர்ந்து உறவுகளை உருவாக்கினர். இந்தவகையில் பத்திரகாளியின் தோற்றமும் விகாரமாக்கப்பட்டது. பனை சார்ந்து உழைப்பில் வாழ்ந்த மக்கள், தாம் வழிபட்ட கடவுளுக்குப் பனையை ஒட்டி பத்திரகாளி என்ற பெயரை வைத்தனர். இந்த வகையில் நாடார் சாதி மக்களின் பிறப்பை ஒட்டி "மகாவிஷ்ணு, வித்தியாதர முனிவர் வேடமிட்டு ஏழு கன்னிகளைப் புணர்ந்து அதில் பிறந்த குழந்தைகளும், அவர்களுடைய வாரிசுகளும் தான் நாடார்கள்... அண்ணனாகிய மகாவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கை பத்திரகாளியால் வளர்க்கப்பட்ட..."28 மக்கள்தான் நாடார் என்று கடவுள்களின் விளக்கங்களைக் கேட்க வேண்டியுள்ளது. இந்துப் பிறப்பில் பிறந்ததாகக் கூறும் நாடார் சாதி மக்கள் மீது திருவிதாங்கூர் அரசு தலைவரி, முலைவரி என எண்ணற்ற வரிகளை விதித்தது. அதாவது மார்பை மறைப்பதற்கும் வரி. வரிகட்டமுடியாதவர்கள் மார்பை மறைக்க முடியாது. இது ஆணாதிக்க இந்து சாதிச் சட்டமாக இருந்தது.


பதிவிரதையாவதற்;குப் பெண்கள் செய்யவேண்டியது, கடவுள்களின் காமக் கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையைக் கற்பழித்ததை நியாயப்படுத்தி, அகலிகையைப் பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின் வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்குப் பெண்கள் இணங்கி பாய் விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதைப் பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா? மனைவியைக் கூட்டிக் கொடுப்பதும் பதிவிரதைக்கு உயர் பண்பாடாகும். இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்ததால் 63 நாயன் மார்களில் ஒருவரானார். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்குக் கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்N;றாமா? சிந்தியுங்கள் எதைச் செய்யப் போகின்றோம்?


பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாகக் காட்டி, அதற்குத் துணை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாகக் காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தைத் தூண்டும் ஓர் ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படைக் காரணத்தைக் கொண்டே, அவை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது. ஆண்கள் படுக்கையை நாடி வீடு வரும்போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதேநேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்கப் பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லைப் பூச்சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.


காமதகனம் காமத்தைத் தடுக்க இந்து ஆணாதிக்க வழியாகக் கொண்டாடும் விழாதான் "காமூட்டி கொளுத்துதல்" ஆகும். சிவனின் தவத்தைக் குலைக்க மன்மதன் காமத்தைச் சிவன் மீது ஏவியதாகவும், சிவன் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்ததாகவும் கூறும் கதையை அடிப்படையாகக் கொண்டு, "காமூட்டி கொளுத்துதல்" விழாவாக இருக்கின்றது. இன்றைய பூர்சுவா பெண்ணியவாதிகளும், ஓரினச் சேர்க்கையாளரும் ஆணாதிக்கத்தை ஒழிக்க முன்வைக்கும் வழிகளைப் போல், இந்து ஆணாதிக்கம் வைக்கும் கூத்துதான் இது.


தீபாவளியாகக் கொண்டாடும் நரகாசுரன் வதையை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது அவதாரமாகப் பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத் தளத்தில் புணர்ந்து நரகாசுரனைப் பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது. இந்தப் பிறப்பு எப்படிப்பட்டது. இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல், மீட்பவர்கள் அப்பெண்ணைப் புணர்வது என்ற வடிவில் பூமியைப் புணர்வதாகக் கதை உள்ளது. ஆணாதிக்கக் கண்ணோட்டப்படி, மீட்கப்படுவது எப்போதும் பெண். மீட்பவர் எப்போது ஆண். மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஒரே பொதுக் கண்ணோட்டத்தில் காணப்படுகின்றது. இந்த இயற்கை பற்றிய ஆணாதிக்க இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.


விஷ்ணுவின் கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம். பத்மப்புராணம் உத்தரக் காண்டம் 263 இல், ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு அவள் கற்பைச் சூறையாடத் தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றிக் கற்பழித்தார். இதையடுத்து விராந்தா கோபத்துடன் சபித்ததைப் பார்ப்போம்;. "ஓ, விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமாக இல்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய் த்தூ, கடைகெட்ட குற்றவாளி"27 என்று சபித்தாள். கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும்போது, பெண்கள் எப்படி இந்து இராஜ்ஜியத்தில் கற்புரிமையைப் பாதுகாக்க முடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?


எதிரியைத் தோற்கடிக்க எதிரியின் மனைவியைக் கற்பழிக்குமாறு சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்காசுரன் என்ற அசுரனைக் கடவுளால் கொல்ல முடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தைக் கண்டறிந்தாராம். சங்காசுரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியைக் கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ, சிவனே, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாகப் போ!"27 என்று சபித்தாள். மகாபாகவதப் புராணம் (9,24,25) இல், கீழ்ச் சாதிப் பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப் பிரிவுக்குப் பெருமையைக் கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ்ச் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளைக் கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதைப் புராணமாகக் கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரபில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தைப் பெண்கள் எப்படிப் போற்றமுடியும்?


சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓட வைக்கின்றது. சிவனுக்குக் காமம் ஏற்பட மோகினியைக் கட்டிப்பிடிக்க அவள் தப்பி ஓடினாளாம். அதை மகா பாகவதப் புராணம் பெண் யானையைக் காமம் பிடித்த ஆண் யானை விரட்டுவது போல், மோகினியைச் சங்கரன் துரத்திச் சென்றாராம். வீதிக்கு வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள் படும்பாட்டை நாம் அறிவோம். ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான் செய்தான் என்று தெரிகின்றபோதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதைச் சகித்து வழிபடுவது கேவலமானது. இது பெண்களைக் கற்பழிக்க மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.


கடவுள்களின் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) கூட்டுக் கற்பழிப்புகளுக்கு ஊடாகவே இந்துமதம் வக்கரித்து உருவானது. பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட்டாகச் சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்ற போது அனுசூயா சபித்தாள். சாதாரணப் பெண்கள் ஆணாதிக்கக் கடவுள்களின் கற்பழிப்பு முயற்சிகள், கற்பழிப்புகளில் பிழைத்து வாழ்வது என்பது பெரும் போராட்டமாகவுள்ளது. இன்று அந்தக் கடவுள்களின் பெயரில் கற்பழிப்புகள் மற்றைய மதப் பெண்கள் மீதும், சாதி குறைந்த பெண்கள் மீதும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. இதுதான் இந்துமதத்தின் ஆணாதிக்க ஜனநாயகம்.


மகளுடன் உறவு கொண்ட பிரம்மன். பிரம்மன் தன் மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஆணாதிக்க வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது இன்று பெண்களாலும் நடத்தப்படுமளவுக்கு ஆண் - பெண் என்ற விதிவிலக்கு இன்றி தொடருகின்றது. வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளைத் தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும். உலகளவில் பாலியல் நெருக்கடி வளர்ச்சி பெற, சொந்தக் குழந்தைகளைப் பலியிடப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இந்து மதம் இதைத் தனது புராண இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.


கற்பழித்த பின் கொன்ற விஷ்ணுவின் பின்னால் ஊடுருவி நிற்பது அற்பத்தனமான ஆணாதிக்கக் காமமே. இந்திரனுக்கு ஆதரவாக நிரபராதியான பராகுவின் மனைவியின் தலையை வெட்டி எறிந்தான். இதை அடுத்து பராகு சபித்ததைப் பார்ப்போம். "ஓ, விஷ்ணு! மாதர் குலத்தைக் கொல்லலாமா? ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணை ஒழுக்கக்கேடு விளைவித்தப் பின் கொன்று விட்டாயே. தமோ குணம் உள்ள கெட்ட குணமிக்கவனே! நீ பாம்பு போல் நடந்து வருகிறாயே!"27 என்று பார்ப்பன ஆணாதிக்கச் சதிராட்டத்தை வெட்டவெளிச்சமாக்குகின்றான்.


முப்பத்து முக்கோடி தேவர்களின் குருநாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த 9, அத்தியாயம் 20 இல், நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, முறைகேடாக உறவு கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவார். இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதைத் தேவி பாகவதப் புராணம் விளக்குகின்றது. இந்தப் பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறியபோது உருவானவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம் ஆதிபர்வதம் அத்தியாயம் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கிறது இந்து புராணங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே விசித்திரமான வக்கிரமாகும்.


தேவேந்திரனின் கள்ள உறவுகளும் வைப்பாட்டித்தனமும் பற்றி வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல், கூறி நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி அகல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில் தேவேந்திரன் விடைபெறுகின்றான்;. பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதற்கு இந்தியாவில் இந்து மதம் காரணமாகும்;. கடவுள்கள் என்று போற்றி வழிபடும் ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.


பெண்ணைக் கடத்திச் சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் இராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்றான்;. இந்தக் கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப்பெண்கடத்தல், தேவர் அணியைப் பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்குப் பிரம்மன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவைக் கொடுக்க மறுத்துவிட்டான். இதன் மூலம் இந்து மதம் ஆண்களுக்குக் கூறும் போதனை, பெண்களைக் கடத்திச் சென்று ஆணாதிக்கச் சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.


சாதி கடந்த வசிட்டரின் ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையைச் சூறையாடுவதாக இருந்தது. விஷ்ணுவின் அவதாரப் புரு"ன் இராமச்சந்திரபிரபுவின் குரு வசிட்டர், சாதி குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த வசிட்டரின் காம லீலைகளைப் போட்டிக்காரரான விசுவாமித்திரன் புட்டு வைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத்தியாயம் 27 இல்.
விசுவாமித்திரனின் கட்டற்ற பாலியல் நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விசுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்தச் சகுந்தலா துஷ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பாரதனைப் பெற்றாள். இப்படி தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாகக் கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.


கண்ட இடத்தில் காமம் கொண்டு; உறவு கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்தரக்காண்டம் சர்கா 55 இல், மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிட்டரும்.


மானின் வயிற்றில் இருந்து பிறந்த ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது, வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிவருக்கு விந்து வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட, அதை ஒரு பெண் மான் குடித்து கருவுற்று ஸ்ரங்கி ரிஷியைப் பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால் இருகொம்பைக் கொண்ட அவருக்கு "ஸ்ரஸ்ய ஸரங்கி" என்ற பெயர் வந்ததாம். இந்து மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.


விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிரத் தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவதப் புராணம் (6,26,36) இல், தேவர்களின் ஆலோசகரும், திரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோசியருமான நாரதர் சஞ்சய மன்னனைப் பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக் கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாகப் பிறந்து இருக்கின்றாள் என்ற திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்கத் தேவைகளைப் பிறப்பின் தொடர்ச்சி, எனக்காகப் பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக அனுபவித்ததையும், அதைக் கோரியதையும் இந்துமதப் புராணங்கள் நியாயப்படுத்தல்கள் ஊடாக அம்பலப்படுத்துகின்றன.


குருவுக்குப் போதை ஊட்டிவிட்டு அவரின் மனைவியுடன் கூடிக் குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி பாகவதப் புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்குப் போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்.
வேத வியாசர் தனக்குத் தானே புணர்ச்சி செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிப்பாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி பாகவதப் புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்குத் தானே காமச் சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாகத் தனக்குத் தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து "சுகா" என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாகக் கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை. வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.


இலட்சுமியின் கற்புரிமையும், பெண்ணின் ஆணாதிக்கச் சந்தேகங்களையும் தேவி பாகவதப் புராணம் தெளிவாக நிர்வாணமாக்குகின்றது. பெண்ணின் கற்பு பற்றி இந்து ஆணாதிக்கம் பெண்களுக்கு உபதேசிக்கும் வன்முறையைத் தாண்டி, இலட்சுமி விஷ்ணுவைத் திருமணம் செய்யும் முன்பே தனது கன்னி பருவத்தில் தேவேந்திரனால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்டாள். இதைவிட ஒருநாள் துர்வாசமுனிவர் இந்திரனைப் பார்க்க வந்தபோது, இந்திரன் ஆணாதிக்கக் காமத்தில் இலட்சுமியை வெறித்து பார்த்தபடி இருந்ததால், வந்த முனிவரை வரவேற்கக்கூட முடியவில்லை. ஒருநாள் விஷ்ணு தனக்குள் தானே சிரித்து கொள்ள, இலட்சுமி சந்தேகப்பட்டு, "உமது சிரம் துண்டிக்கப்படட்டும்"27 என்று சாபம் போட்டாள். ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் மீதான கற்பழிப்பு, வெறித்த காமப் பார்வைகள், பெண்ணின் சந்தேகங்கள் கடவுள்களையே விட்டுவிடவில்லை. சமூகத்தின் இயல்பான நடத்தைகளை, மனிதன் தான் கற்பனையில் உருவாக்கிய கடவுளுக்கும் பொருத்தியதன் ஊடாக அக்காலக்கட்டச் சமூகத்தைப் புரிந்து கொள்ள இவை
உதவுகின்றன.


சகோதர - சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளைப் தேவி பாகவதப் புராணம் (6,17,53-58) வெளிக் கொண்டு வருகின்றது. சமுத்திரத் தேவனின் செல்வப் புதல்வி இலட்சுமிதேவி. தன் சகோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதைக் கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமுகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"27 என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்குப் பதிலளிக்காது பெண்குதிரை வே"ம் எடுத்து தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள்.


விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்கத் தீர்வுகளும். கலைவாணி, சரஸ்வதி என்ற கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர். இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாகத் தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது"27 என்று கணவனைக் குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியைச் சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியைப் பிரம்மாவிடம் படுக்கும் படியும் கூறி, சக்களத்தி சண்டைக்குத் தீர்வு கண்டாள். இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.


மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையைக் கந்தபுராணம் தக்கக் காண்டத்தில் விளக்குகின்றது. கற்புள்ள அரசப் பெண்ணைக் கற்பழித்ததால், அந்தப் பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக பிறந்தானாம். இந்தக் கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது முட்டாள்த்தனத்தை மெச்சத்தான் வேண்டும்.


கணவனைப் பிரிந்து வாழ இட்ட சாபம். சிவ இரகசியத்தில் இருந்து இதைப் பார்ப்போம்;. விஷ்ணு ஒருநாள் தனது மனைவியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அற்புதர்க்கன் என்ற சிவகணங்களின் தலைவன் அங்கு சென்றானாம். என்ன இப்படி செய்கிறாய் எனக் கேட்க "நீ யாரடா கேட்பதற்கு, எனக் கேட்க இதை நந்தியிடம் முறையிட்டானாம் சிவகணங்களின் தலைவன்;. நந்தி உடனே விஷ்ணுவைப் பூமியில் பிறக்க வைத்து, மனைவியைப் பிரிந்து வாழ சாபம் கொடுத்தாராம்;. ஆணாதிக்கப் பாலியல் நெருக்கடிகளைச் சகித்து வாழவும், அடங்கிவாழவும் கோரும் பண்பாடுகளையும் இந்து ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை வழியில் புகட்டுகின்றது.


இராமனின் குற்றப் பிறப்பும் சரி, பிறந்த பின்னாலான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியைப் (சீதையைப்) பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தும் சமூகத்தின் இழிந்த தண்டனைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப ;படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா?.


மகளைக் (சரஸ்வதியைக்) கற்பழித்த பிரம்மன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரம்மன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாகச் சரஸ்வதியைக் கல்விக்காகப் பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரம்மன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஓடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டுத் துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரம்மனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரி வைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரம்மனை உயிர்ப்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரம்மனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி, சரஸ்வதி பிரம்மனின் பேத்தியான நிலையில் பிரம்மனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்தக் குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டுகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றிப் புகழ்ந்து வழிகாட்டுகின்றது.


பெண்களை நிர்வாணமாக்கி இரசித்த ஆணாதிக்கக் காமுகன் சிவன் இந்துக்களின் கடவுள். "இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்துப் புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாகப் பிச்சை போடும்படி கேட்டும், சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்கக் காமமாகும்."34 இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிரக் காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியைப் போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா? இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ? உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்கப் போக்குக்குச் சிவன் தந்தையல்லவா? இதனால் தான் இந்து இராஜ்ஜியத்தை உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ?


வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;. காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார். இந்தக் கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா? இவை ஆணாதிக்க வக்கிரப் புத்தியல்லவா?


விபச்சாரியிடம் சுந்தரமூர்த்திக்காகத் தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தைப் பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காகப் பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகு வேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்குச் செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்கக் காமத்தைத் தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?


பல நூறு இந்து மதப் பிறப்புகள் இது போன்று வக்கரித்த ஆணாதிக்கப் பிறப்பாகும். பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டித் தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச் சேர்க்கை, சுயப் புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சி வடிவங்களை இந்துப் புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி, ஆணாதிக்க வக்கிரமாகக் காணப்படுகின்றது. இன்று பாலியலில் புரட்சி செய்வதாகக் கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவச் சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து, நிறைந்து காணப்படுகின்றனர். சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமதப் புராண, இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்து கொள்ள இந்த வக்கிரங்களே எமக்குப் போதுமானவை.

Friday, August 10, 2007

ஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும்

பழந்தமிழ் இலக்கியங்கள் பெண் வழிபாட்டின் பல்வேறு தகவல்களை விட்டுச் சென்றுள்ளது. பெண்ணே உலகத்தைப் படைத்தவள் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. "மோடு" என்பது வயிறு என்று பொருள். எல்லோரையும் பெற்ற வயிறு என்ற பொருளில் தாய்த் தெய்வம் மோடி என்றழைக்கப்பட்டாள்31 (பெரும்பாணாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை - 458), மேடடேந்தரிவை (இராவண காண்டம் - 106), பெருமோட்டுக்கிழதன் (தனிப்பாடல்), பெரு மோட்டாள் (தகடூர் யாத்திரை)22 என்ற பெண் தெய்வங்கள் ஆண் உறவின்றி கன்னியாகவே உலகத்தைப் படைத்தாள் என்ற கருத்து, பெண்தெய்வ வழிபாட்டின் மூலம், பெண்; தலைமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றது. இதையே தாயுமானவர்,"அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையேபின்னையும் கன்னியென மறைபேசும்..."22- என்ற பாடலும் சரி, திருவாரூர் புராணம் "உலக முழுதீன்ற பெருங்கன்னி..."22 என்ற வரிகளும் சரி, "யமுனை, கங்கை, சரஸ்வதி, காவேரி போன்ற பெண்ணின் பெயரிலான ஆறுகளும் சரி, கடல்கொள் செல்வி (அகநானூறு-370) கானமர் செல்வி (அகநானூறு-345) காடமர் செல்வி (மணிமேகலை-6.53, 18.115) நீர் நிலக் கடவுள்.134 இதுபோன்ற பல பெண் தெய்வ வழிபாடுகள் இலக்கியச் சான்றாக எம்முன் எஞ்சிக் கிடக்கின்றது. காட்டை அடிப்படையாகக் கொண்டு "காடுகாள், கானமர் செல்வி, காடுகிழாள், காடமர் செல்வி"31 போன்ற பெண் தெய்வங்களை மக்கள் வழிபட்டனர். இங்கு காட்டின் செழிப்பை, காடமர் செல்வி என்று பெண்ணின் இளமைச் செழிப்பை அடிப்படையாகக் கொண்டு, பெண் தெய்வமாக வழிபட்டனர். இதை மாற்றிய ஆணாதிக்கம், பெண் தெய்வங்களை ஆண் தெய்வத்துக்கு அடிமைப்படுத்துவது அவசியமாகியது.

இந்து மதம் உயிரின் தோற்றத்தை "ஜீவாத்மா, அழியாத ஒன்று, கூடுவிட்டுப் பாய்வது ஆத்மா, அதனால் மனிதர்கள் பிறக்கின்றனர்"23 என்று விளக்கிச் சொல்லுகின்றது. இந்திய மதம் சார்ந்த தத்துவவியலில் உலகம் தோன்றியது பற்றி பால் சார்ந்து இரு விளக்கங்கள் இருக்கின்றது. உலகை ஜகன்மாதா பெற்று எடுத்ததாகவும், பிரமன் படைத்ததாகவும் உள்ள புனைவுகள் பெண்வழிச் சமூகம், ஆண் வழிச் சமூகத்தின் இரு வேறுபட்ட படைப்பு பற்றிய விளக்கங்கள் ஆகும்;. பார்ப்பனிய இந்து ஆதிக்கம் ஆண் வழிப்பட்ட போக்கில் பிரமனையும், சிறு வழிபாடுகள் தாய் வழிப்பட்ட போக்கில் ஜகன்மாதாவையும் குறிப்பிடுவதும், இன்று அவை ஆண்வழிப்பட்ட ஒற்றைப் போக்கில் மாறிச் செல்வதையும் நாம் காணமுடியும்.

உலகில் எந்த மதம் என்றாலும் விதிவிலக்கின்றி பெண்ணை ஆணுக்குக் கீழ் நிலையில் வைப்பதைத் தவிர்க்கவில்லை. மதங்களும், அதன் கோட்பாடுகளும் தனியுடைமை சமூகத்தின் பின்னால் உருவாக்கப்பட்டதால், ஒட்டுண்ணிகள் மதத்தை வைத்து வாழ இருக்கும் சமுதாயத்தைப் பிரதிபலிக்க வேண்டியிருந்தது. எதுவெல்லாம் எதார்த்தமாகச் சமுதாயத்தின் போக்காக இருந்ததோ, அதை எல்லாம் அதன் பிளவுகளில் நியாயப்படுத்த மதம் பின்நிற்கவில்லை. இதில் தமது நலனையடைய சீர்திருத்தத்தைத் தான் மதங்கள் செய்தன. இருந்த மனிதப் பிளவுகளைப் பண்பாட்டுக் கலாச்சார ரீதியில் இறுக்கி அதைக் கடவுளின் பெயரில் மனித மூளையில் அறையும் வேலைகளை மதம் வெற்றிகரமாகச் செய்து முடித்தது.

மனிதப் பிளவுகள் மனிதத் துன்பத்தின் ஆத்மா ஆகியது. இதனால் மனிதனின் அச்சம், கண்ணீர், இயலாமை, துயரங்களை வடிகால் இட்டு வளர்த்தெடுத்த மதமும், மதக் கோட்பாடுகளும் மனிதப் பிளவுகளைப் புறநிலையாக இட்டுக் காட்டின. இந்த வகையில் பெண்ணின் தாழ்ந்த நிலையை நியாயப்படுத்தின. இந்த வளர்ச்சி என்பது சமூகமயமாகியபோது அக்காலத்திய இலக்கியங்கள் அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது இருந்த ஆணாதிக்கச் சமூகத்தைச் சட்ட நெறி ஒழுங்குக்குள் நியாயப்படுத்தி, ஒழுக்கமாகப் புகட்டப்பட்டது. இதை மீறுவது மதக் குற்றமாகக் கடவுளின் பெயரில் அடக்குமுறைகள் பரிசாக வழங்கப்பட்டது. மத ஆதிக்கம் மூலம் நீடித்த சட்ட ஒழுங்குகள் பெண்ணை வீட்டு ஜென்மங்களாக, வளர்ப்பு நாய்களாக வாலாட்டக் கற்றுக் கொடுத்தது. இருந்தும் வீட்டு அதிகாரத்தையும் இழந்த பெண் பாலியலை வழங்கும் ஒரு இயந்திரமாக, குழந்தையை வளர்க்கும் இயந்திரமாக, ஆணுக்குச் சேவை செய்யும் வேலைக்காரியாக மதங்கள் புகழ்ந்து பெண்ணின் இழிவைப் புகழ்ச்சிக்குரியதாக மாற்றின. இதில் எந்த மதமும் விதிவிலக்கை வழங்கி விடவில்லை.

பெண் வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகத்தை உருவாக்கிய போது, பெண்வழிக் கடவுள்களுக்குக் கட்டாயமான திருமணத்தை ஆண் தெய்வங்களுக்குப் பார்ப்பனர்கள் செய்வித்தனர். அதேநேரம் பல மக்கள் கூட்டத்தில் இருந்த ஆண் தெய்வங்களை ஒரு ஆண் தெய்வமாகக் காட்டி, அவற்றுக்குப் பல பெயர்களைக் கொடுத்தனர். பல தெய்வங்களை ஒருதாரக் குடும்ப அமைப்பின் வடிவில் உறவினராக்கினர். இதுதான் இன்று உருவாகியுள்ள இந்துமதக் குடும்பத்தின் வடிவமாகும். இந்துக் குடும்பத்தில் பெண் தெய்வங்கள் தமது கடந்தகால மேன்மையை இழந்தன. இன்றும் இந்தியாவில் சில பாகங்களில் இந்துப் பெண் தெய்வ வழிபாட்டில் சில தேவதைகள் எஞ்சியுள்ளனர். "பிலிமாக்கா, புதுபுடிக்கி, தார்சி, டோய், கொல்ல, கடாபா, கங்காதிகாரா, ஒக்காலு, காங்கா, வறந்தி, வறல்லிகர், ஒக்கலிகா, வெறலவ, வெறாலெயா, இடிகா"11 போன்ற தேவதைகள், இந்தப் பார்ப்பன ஒருதார மணத்துக்குள் சிக்கிக் கொள்ளவில்லை. இன்றும் அவை, "பச்சைவாழி அம்மன், அங்காளம்மன், பொறையாத்தா, பொன்னியம்மன், கங்கையம்மன், பிடாரி, குடிதாங்கி அம்மன், திரௌபதி அம்மன், கீப்பாஞ்ச அம்மன்...."28 போன்ற பெண் தெய்வங்களாகக் கிராமப்புறத்தில் எஞ்சிக்கிடக்கின்றனர்.

இந்து சமயத்தில் பெரும்பாலும் எல்லாப் பெண் தெய்வங்களும் சுதந்திரமான வௌ;வேறு மக்கள் கூட்டத்தின் பெண் வழிக் கடவுளாக இருந்தவர்களே.

ஆணாதிக்கம் பெண்களுக்கு மேல் திணித்த கட்டாயத் திருமணத்தையே கடவுளுக்கும் பொதுவாக்கினர். பார்ப்பனர்கள் தமது ஆண் வழிக் கடவுள் மற்றும், உருவான ஆணாதிக்கக் கடவுளர்களாகக் கட்டாயமான திருமணம் மற்றும் உறவு வழியூடாக இந்து மதத்தை ஆணாதிக்க ஒருதார மணவடிவில் உருவாக்கினர். அதேநேரம் திருமணம் புரியாத பெண் கடவுள்களை மோசமான தெய்வங்களாகக் காட்டி மாற்றியதுடன், அவைகளைக் கிராமப்புற எல்லைக்கு ஆணாதிக்கச் சமூகம் துரத்தியடித்தது. அதேநேரம் கிராமப்புறத் தெய்வங்கள் ஆண் பாதுகாப்பை உள்ளடக்கியதாக்கி, ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் தெய்வங்களை அடிமையாக்கினர்.

அனைவருக்கும் தெரிந்த உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. சிவபெருமான் உமாதேவியாருக்கிடையில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து அதில் முடிவின்றி நீடித்ததால், நாட்டியத்தை ஆடுகின்றனர். நாட்டியத்தைச் சிவபெருமான் தொடர முடியாததால் திடீரென ஒருகாலைப் பூமியிலும் மறுகாலை விண்ணிலும் வைத்து ஆடுகின்றார். இதில்தான் உமாதேவியார் காலைத் தூக்கி வைத்து ஆடுவது, பெண்ணின் ஒழுக்கமல்ல என்பதால் தோற்கின்றார். இங்கு ஏன் உமாதேவியார் காலைத் தூக்கிவைத்து ஆடமுடியாது என்ற கேள்விக்கு, ஆணாதிக்க அமைப்பு பெண்ணின் மீதான ஒழுக்கக் கோவையால் கட்டுப்படுத்துகின்றது. ஏன் சிவபெருமான் போட்டியைக் குழப்பி, அத்துமீறிக் காலை மேல் நோக்கி வைத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கின்றார். இது அதர்மமான நடத்தையல்லவா?. ஒரே நிலையில் உமாதேவியரோடு போட்டியிட்டு வெல்ல முடியாத நிலையில்தானே, அடுத்த கட்டத்தைச் சிவபெருமான் தொடங்குகின்றார். வென்றது உமாதேவியார் அல்லவா!. ஆணாதிக்க ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அல்லவா, சிவபெருமானின் வெற்றி ஏற்கப் படுகின்றது. ஆனால், ஆணாதிக்க அமைப்பு உமாதேவியார் வெற்றியை மறுக்கின்றது. ஆணாதிக்க அமைப்பில் தோற்ற உமாதேவியாரின் ஆணவத்தை அடக்க, சிவன் பூலோகம் சென்று வாழ சாபம் இடுகின்றார். அப்போதும் உமாதேவியாரின் துணையாக முருகன் (மகன்) அனுப்பப் படுகின்றான்.

பெண் ஆணுக்கு அடங்கி பாதுகாப்புப் பெற்று வாழமுடியுமே ஒழிய, சுதந்திரமாக வாழும் உயிரல்ல என்பதைத்தான், ஆணாதிக்கக் கதை தனது சமூக இருப்பை நோக்கி புனைந்து காட்டுகின்றது.

ஆண் லிங்க வழிபாடுகள் எல்லாம் இதில் இருந்து உருவாகின்றது. உமாதேவியாரின் பெண் உறுப்பில் தாங்கி நிற்கும் லிங்கத்தை நோக்கிய வழிபாடு எல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தி, ஆணைத் தாங்கி வாழ வேண்டுகின்றது. இந்தியாவில் சில இடத்தில் காணப்படும் "குடிதாங்கி அம்மன்"28 பெண் உறுப்பால் ஆனவை. இது பெண் வழிபாட்டின் எச்சமாக இருக்கின்றது. இன்று அப்பெண் உறுப்பைப் பாவாடைகட்டி மறைக்கின்ற போதே, ஆணாதிக்கப் பண்பாட்டின் வெளிபாடாகின்றது. பின் அதற்கு ஆண் தெய்வக் கண்காணிப்பு என்று தொடரும் நடத்தைகள் எல்லாம், எப்படி ஆணாதிக்க மதமாகக் கடவுள்கள் சமுதாயத்தையொட்டி மாறிவந்ததைக் காட்டுகின்றது.

இந்து சமயத்தின் ஆதாரமான ரிக்வேதத்தில் பெண்ணைக் குறித்த ஆணாதிக்கம் "பிரகஸ்பதி உன்னை எனக்காகக் கொடுத்திருக்கின்றான். நீ, நான் ஆகின்ற கணவனோடுச் சேர்ந்து சந்தானவாதியாக இருப்பாய். ஒரு நூறு சம்போகத்தின் ஆயுளை அனுபவித்துக் கொண்டு என்னுடைய அடிமையாக இருப்பாய்"10 என்று பெண்ணின் அடிமைத்தனத்தை ரிக்வேதம் பறைசாற்றுகின்றது. இந்து மதத்தின் அடிப்படையில் அதன் பின்னால் உள்ளோரின் கோட்பாடுகள் இவைதான். மேலும் "திருமணத்திற்குப்பின் பெண் கணவனின் வீட்டிற்குச் செல்ல வேண்டியவள்"10 என ரிக்வேதம் கூறுகின்றது. பெண் வழிச் சமூகத்தை மறுத்து ஆண் வழிச் சமூகத்தை மதம் மூலம் இறுக்கும் ரிக்வேதம், தாய்வழி வீட்டில் இருந்து பெண்ணை அகற்றுவதைக் காட்டுகின்றது. இங்கு இந்த உபதேசங்கள் பெண்ணின் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. இந்த ரிக்வேதம் கி.மு 1200 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு, கி.மு 600 களில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பெண் வழிச் சமூகம் ஆணாதிக்கச் சமூகமாக வளர்ச்சி பெற்ற போராட்டத்தையே இந்த ரிக்வேதச் சுலோகங்கள் எமக்குக் காட்டுகின்றன.பார்ப்பனிய இந்து மதம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பு சார்ந்து, கடவுளை அடைய உருவாக்கிய தானங்களில் பெண்ணும் உள்ளடங்கியிருந்தாள். பத்து வகையான தானங்களை சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் கொடுப்பதன் மூலம் மோட்சத்தை, புண்ணியத்தை, பண்பாட்டைப் பேணமுடியும் என்று கூர்மப்புராணம் கூறுகின்றது. "1.தங்கம், 2.குதிரை, 3.திலா, 4.நாகம், 5.அடிமைப் பெண், 6.இரதம், 7.நிலம், 8.வீடு, 9.மகள், 10.பசு"27 என்று கோருவதில், மகளும், அடிமைப் பெண்ணும் ஆணாதிக்கத் தேவையை அடிப்படையாகக் கொண்டே இந்துப் பார்ப்பனியம் தானமாக்கியது. இது நடைமுறையில் அமுலில் இருந்ததற்கு நாயன்மார் வரலாறுகளும், இந்துப் புராணங்களும் நிறையவே ஆதாரங்களைத் தருகின்றது. இன்றைய சடங்குகள் அதன் தொடர்ச்சியாக இருப்பது வேடிக்கையான நிகழ்ச்சிகள் அல்ல. திருமணத்தில் "கன்னிகாதானம்" கூட பார்ப்பனர்களின் உரிமை வழியாகத் தொடரும் ஒரு சடங்குதான்.

பெண்ணை அடிமையாகவே இந்து மதம் கருதுகின்றது. "உயர் சாதிப் பெண் கணவனிடம் நன்றியுள்ளவளாக இல்லாதிருந்தால் அவள் நாய்களால் விழுங்கப்பட வேண்டியவள் (நாய்க்கு உணவாக்கப்படுபவள்). அவளைச் சோரம் இழைத்தவன் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் கிடத்திக் கொல்லவேண்டும்"27 என்று மனுநீதி 374, 375 குறிப்பிடுகின்றது. அதேநேரம் கீழ்ச்சாதிப் பெண்ணைக் குறித்து மனுநீதி (11-178 இல்) "ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்துவிட்டால் அத்தகைய குழந்தை உயிரோடு இருந்தாலும் பிணம் போன்றதே" அத்துடன் அக்குழந்தை தந்தையின் சாதிக்கு ஏழு தலைமுறைக்குப் பின் உயர்த்தப்பட முடியும் என்ற மோசடியுடன் கூடிய சதி நிர்வாணமாகின்றது. இங்குச் சூத்திரப் பெண்களின் அடிமைத்தனம், வைப்பாட்டித்தனம், இணங்கிப் போகும் அடிமைத்தனத்தை இந்துமதம் ஆணாதிக்கம் சார்ந்து சமூகப் பண்பாக்கியது. இந்து மதம் பெண்கள் மேல் குறிப்பிட்ட சில வன்முறைகளைக் கையாண்டது.

தேவதாசி பிரதா என்ற சடங்கின் மூலம் கடவுளுக்குப் பெண்களைத் திருமணம் செய்து வைப்பதன் மூலம்;, கோயில் விபச்சாhரிகளை உருவாக்கியது.

சதிபிராரா என்ற சடங்கின் மூலம் கணவனின் சிதையில் பெண் ஏற வைக்கப்பட்டாள். பெண் மறுத்தபோது பலாத்காரமாகத் தள்ளி எரியூட்டினர்.
கங்கா பிரவர் என்ற சடங்கின் மூலம் குழந்தை இல்லாத பெண்கள் கங்கையில் நீராடியதுடன், முதல் குழந்தையைக் கங்கை நீருக்குப் பலிகொடுத்தனர்.

நரவதா என்ற சடங்கின் மூலம் ஒரு குழந்தையின் நலனுக்காக, ஏழைக் குழந்தைகள் அல்லது அநாதைக் குழந்தைகளைப் பிடித்து வந்து தேவதைக்குப் பலி கொடுத்தனர்.

கன்யவதா என்ற சடங்கில் இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யும் போது, உறவினர்க்கு முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பதால், இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைகளைக் கொன்றனர். இது போன்று காலத்தால் அழிந்தும், அழியாததுமான பல நூறு காட்டுமிராண்டிச் சடங்குகள், 2000 விரதங்கள், அது சார்ந்த தானங்கள் என நீண்டு, இந்துமதம் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.

பெண்ணின் நிலை பற்றி, "சிவனும் சூரியனும் உன்னுடைய கரங்களைப் பிடித்திருக்கின்றனர். அதனால் நீ தர்மபூர்வமாக என் மனைவியாய் இருக்கின்றாய். நான் உன் கணவனாகவும் இருக்கின்றேன்;"10 என்பதன் மூலம் மதத்தின் பெயரில் இந்து மதம் பெண்ணை இழிவுக்குள்ளாக்குகின்றது. பெண் ஆணின் கரத்தைப் பிடித்திருக்கவில்லை, ஆணே பிடித்திருப்பதன் மூலம் பெண் ஓடிவிடாது சிறைப்பிடிப்பதையே காட்டுகின்றது.

இ;ன்று சிவசேனை முதல் இந்திய பாரதிய ஜனதாக் கட்சி ஈறாக இந்து மதச் சிவில் சட்டத்தை இந்து மக்கள் மீது திணித்து பாசிசக் காட்டுமிராண்டித்தனத்தை அமுல் செய்யத் துடிக்கின்றனர். இந்த இந்துச் சட்டம் என்பது பார்ப்பனியத்தின் ஆதாரமான மனுவின் சட்டமே. இந்த மனுவின் ஆணாதிக்கம் பெண்ணை அன்றில் இருந்து அடிமைப்படுத்தியதையும், இன்று இந்து இராஜ்ஜியத்தில் பெண்ணையும் அவள் வென்ற உரிமைகளையும் தாழ்த்தத் துடிக்கின்ற ஆணாதிக்கக் கோட்பாடுகளை மேலே ஆராய்ந்துள்ளேன், பார்க்க.
பெண்கள் குறித்து இந்து சமயத்தின் பல்வேறு இலக்கியங்கள், வரலாறுகள், மத ஆவணங்கள்.... எப்படி அடிமைப்படுத்தி இழிவுபடுத்தின என்பதைத் தொடர்ந்து ஆராய்வோம்.

ரிக்வேதம் 8.3.17 இல், "பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்"32 என்ற கூற்றின் பின் பெண்கள் பற்றிய ஆணாதிக்கத்தின் நிலை இன்றுவரை மாறிவிடவில்லை. பெண்கள் உறுதியற்றவர்கள், நேர்மையற்றவர்கள் என்ற பழிப்புரை ஆணாதிக்கத்தின் அதிகாரத் திமிராகும். பெண்களைச் சமூகத்தில் இருந்து நசுக்க, அவர்கள் சமூக இயக்கத்தில் பங்கு கொள்வதைத் தடுக்க இந்த நிபந்தனை அடிப்படையானதாகின்றது. பெண் படிப்படியாக ஆணாதிக்கப் பண்பாட்டு வடிவமாக மாற்றப்பட்டாள். தொடர்ந்து ரிக் வேதம் 10.95.10 இல், "பெண்கள் நட்பு நீடித்ததல்ல, அவர்கள் கழுதைப் புலியின் தன்மையுடையவர்கள்"32 என்ற கூற்று பெண்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியாத தனிமனித வாதங்களின் மையம் என்கிறது ரிக்வேதம். ஆண்களின் தனிச் சொத்துரிமையும், அதனால் ஏற்பட்ட தனிமையின் மையவாதத்தையும் திருப்பி பெண்கள் மீது அள்ளி வீசி விடுவதே இவை. அத்துடன் கழுதைப்புலி என்றதன் மூலம் ஆண்களைப் புலியாக உருவகமாக்கியதன் மூலம் பெண்கள் இழிவுபடுத்தப்படுகின்றனர். பெண்களின் ஒன்று சேர்ந்த செயல் மற்றும் அவர்களின் போராட்டம் போன்றவற்றை மறுக்க, அதை நட்புக்குப் பங்கமானதன் குறியீடாகவும், அதேநேரம் அவை கழுதைப்புலிக்கு ஒத்ததாகவும் காட்டிச் சிறுமைப்படுத்திய ஆணாதிக்கத்தின் கொச்சைத்தனங்கள்தான் இவை.

மேலும் ரிக்வேதத்தில் 4.17.16 இல், "இந்திரன், நாம் விரும்பும் மனைவிகளைக் கொடுப்பவன்," 5.31.3 இல், "இந்திரா! உன்னை விட மேலானவன் வேறு யாருமில்லை, ஏனெனில் மனைவியில்லாதவருக்கு மனைவிகளை - காதல் கிழத்திகளைத் தருகிறாய்"32 என்று இந்திரன் என்ற பார்ப்பானை வணங்கும் இந்த விதியில் பெண் ஒரு பொருளாக ஆண் இனம் காண்பதைக் காட்டுகின்றது. இந்து மதத்தில் பெண்ணைக் குறித்துக் காட்டும் பொருள் பற்றிய மதிப்பீட்டுக்கு எதிரான போராட்டமின்றி பெண் விடுதலையடைய முடியாது. பொருட்களைப்பற்றி மனித மதிப்பீட்டை மாற்றாது, பெண் என்ற பொருளைப் பற்றிய மனிதச் செயற்பாட்டையும் மாற்றமுடியாது.

அத்துடன் இந்துச் சூத்திரம் பெண்ணை ஆணின் போகத்துக்குரிய படைப்பாக இந்திரன் படைத்தான் என்று கூறுவதன் மூலம் பெண் பாலியல் பண்டமாகின்றாள். அத்துடன் யுத்தங்களில் வென்று வரும் வீரனுக்குப் பெண்கள் பரிசளிக்கப்பட்டதுடன், பெண்கள் பலாத்காரமாக அவர்களின் குடும்பத்தில் இருந்த மற்றைய பொருட்களுடன் சேர்த்து சூறையாடப்பட்டாள். இதற்கு வேதங்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. இங்கும் பெண் பண்டத்துடன் பண்டமாகக் கவரவும், கற்பழிக்கவும் இருந்த உரிமையை இந்து மதம் அங்கீகரித்தது. பெண் ஒரு உயிருள்ள மனுசி என்பதை மறுத்த இந்து ஆணாதிக்கம், பெண்களின் உணர்வுகளை என்றும் மதித்ததில்லை, மதிக்கப் போவதுமில்லை.

போர் வீரர்களின் வெற்றியைப் பறைசாற்ற ரிக்வேதத்தில் 8.48.88 இல், "ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்"32 என்று கூறும்போதே யுத்தத்தின் ஆர்வத்தை, கொடுமையை எமக்குக் காட்டுகின்றது. இன்று உலகு எங்கும் யுத்தத்தில் பெண்கள் சூறையாடப்படுவதும், யுத்தத்தின் முன்னும் பின்னும் பெண்களை ஆண்களுக்கு விநியோகிப்பதும் காணமுடிகின்றது. சிங்கள இனவெறி அரசு இனவாத இராணுவத்துக்கு எல்லைப்புற பெண்களையும், ஏழைப்பெண்களையும் விபச்சார வாடகைக் கூலிகளாக மாற்றிப் பணிபுரியவைத்ததை எல்லா எல்லைப் புறமும் காட்டுகின்றது.

யுத்தத்தில் பெண்கள் பகடைக்காயாகவும், அவள் சூறையாடப்படவும் கூடியநிலையில் தான் யுத்தத்தை ஒடுக்கும் வர்க்கம் கட்டியமைக்கின்றது. பெண்கள் யுத்தத்தில் ஊக்கத்தைக் கொடுக்க கூடிய பண்டமாகின்றனர். அதேநேரம் அப்பெண்களை ஆக்கிரமிப்பாளன் கற்பழிக்கும் உரிமையை வேறு சுவீகரித்துக் கொள்கின்றான். இதற்குப் பெண்கள் எதிர்ப்பது என்பது சமூகத்துக்கு எதிரான குற்றமாகக் காட்டப்பட்டது. பெண்களின் உணர்வுகள், உரிமைகளை ஒவ்வொரு யுத்த ஆக்கிரமிப்பும் மேலும் அடக்கியதாகவே வரலாறு காட்டுகின்றது. ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் பெண்ணைச் சிலநேரத்தில் விடுவித்தும், சிலநேரத்தில் மோசமான அடக்குமுறையையும் கூட கையாண்டுள்ளது. விடுதலை என்பது அதன் இலட்சியத்தின் வழியில் மக்களின் அணிதிரட்டலுக்கு உட்பட்டதாக எல்லைப்படுத்தியது.

பெண்களை ஆண்களின் சொத்தாகக் கருதிய ஆணாதிக்க ரிக்வேதம் அதை எப்படி பெண்கள் மீது அடக்கி ஆண்டதுடன், அதை நாட்டின் பாதுகாப்புடன் உவமையாக்கினர் எனப் பார்ப்போம்;. ரிக்வேதம் 7.2.63 இல், "பொதுவான கணவன் ஒருவன் தன் காதல் கிழத்திகளை வைத்திருப்பதுபோல், தான் கைப்பற்றிய கோட்டைகளைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்."32 இதேபோல் தர்மநீதி என்ற நூலை எழுதிய யக்ஞவல்கியர் பெண் பற்றிக் குறிப்பிடுவதைப் பார்ப்போம். "உடைமைகளில் ஒன்றான பெண்களை மனிதன் கொள்ள வேண்டும்;."32 "மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டுவைக்காதே"32 என்று பெண்ணை ஆணின் உடைமையாக்கி அதை நியாயப்படுத்திய அடக்குமுறையைக் காட்டுகின்றது. பொருள், கல்வி, பெண் வேறுபாடு இன்றி சொத்தாக மதிப்பிடும் தனிச்சொத்துரிமை பெண்ணை மனுசியாக மதித்ததில்லை. பெண் செல்வங்களில் ஒன்றாக மாற்றியதையும், அவள் ஆணின் தனிச் சொத்துரிமையின் ஒரு அங்கமாக இருக்க நிர்பந்தித்ததும், பெண்ணை அடக்கி ஆளாகக் கூடிய ஒரு வீட்டு நாயாக வளர்க்க ஆண் கற்றுக் கொள்ளும் உரிமையை நியாயப்படுத்துவதே, இந்து ஒழுக்கநூல்கள் மற்றும் மத நூல் விளக்கங்கள்.

இதை மேலும் ஆராய்வோம்;. பீஷ்மர், "வேத சாஸ்திரி கட்டளைப்படி புருஷர்கள் தங்கள் மனைவிகளை, பூர்வீகப் புண்ணியத்தினாலோ அல்லது தெய்வச் சங்கற்பத்தாலோ தானடைந்த பொருளாகவே கருத வேண்டும்."32 ஆண் அடையும் தனிச் சொத்துரிமையில் பெண் ஒரு அங்கம் தான் என்பதைத் தனிச் சொத்துரிமை வளர்ந்து வந்த காலத்தில் எடுத்தியம்பப்பட்டது. அத்துடன் பெண்ணைச் சமூகத்தின் முன்மாதிரியான மரியாதைக்குரியவளாகக் கருதிய சமூகத்தை மாற்ற இவ்விதிகள், கொள்கைகள், விளக்கங்கள் அவசியமாகியதை வேறு இது நிறுவுகின்றது. சமுதாயம் இதற்குப் புறம்பான வழியில் இருந்து வந்ததையும், இதற்குப் புறம்பான போராட்டத்தையும் கொண்டு இருந்த மனித வரலாற்றில் பெண் மீதான அடக்கமுறையைப் புராணங்கள் மூலம், மதம் மூலம் அடக்கி ஆண்ட வரலாற்றை இவை காட்டுகின்றன.

அத்துடன் பெண்ணின் இடத்தை அடையாளம் காட்டிய மதக் கோட்பாட்டாளர்கள், அவளுக்கான கடமையாக அடிமைவேலை, அதன் கடமை, சமூகத்தில் அவளின் நிலை பற்றி குறிப்பிடுவதைப் பார்ப்போம். அதர்வன வேதம் 14.1.52 இல், "மேலும் அவள் (கணவனால்) அவனுடைய போஷ்யா அல்லது அடிமை கீழ்ப்பட்டவள் என்று அழைக்கப்பட்டவள்."32 "உபநிடதத்தில் மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே, காமவேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள்."32 "மனிதன் தனக்கு உதவிக்காக நீண்ட நாள் கஷ்டப்பட்டான். கடைசியாகத் தன்னுடைய இச்சைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய, தனக்கு எல்லா இன்;பத்தையும் தரக்கூடிய ஒன்றை மனைவி என்ற உருவத்தில் பெற்றான்."32 பெண் போகத்தின் இடமாகவும், மனிதனுக்குப் படைக்கப்பட்ட பொருளாகவும் கருதும் பார்ப்பனிய இந்து தர்மம் பெண்ணை மனுசியாகவே மதிக்கவில்லை. ஆணின் உதவியாளாகப் பெண்ணை நிலைநிறுத்தி, ஆணின் கஷ்டத்தைப் போக்கும் ஒன்றாகவே மனைவி உருவத்தில் ஆண் பெற்றான் என்ற விளக்கம் ஆணின் மேன்மையைப் போற்றிப் பெண்ணைச் சிறுமைப்படுத்துகின்றது. ஏதோ ஆண்தான் சமூகத்தைக் கட்டியமைத்ததாகவும், பெண் அதற்கு இடையில் வந்து உதவியதாகவும் கூறுவதன் மூலம் பெண்ணின் உழைப்பு மற்றும் கண்டுபிடிப்பை மறுப்பதில்தான் ஆணாதிக்கம் தனது கிறுக்குத்தனத்தை நிறுவியது. பெண்ணை அடிமையாக விளக்கிய அதேநேரம், குழந்தை பெறும் இயந்திரமாக, அதிகாரபூர்வ மனைவியின் வேலைக்காரியாக, அதிகாரபூர்வமற்ற மனைவியாக்கப்பட்டாள். ஆணின் காமத்தைத் தணிக்கும் ஒரு ஊடகமாகவே கருதிய இந்துப் பார்ப்பனியம் பெண்ணின் காமத்தை இட்டும், அவர்களின் உணர்ச்சியையிட்டும் கவலைப்படவில்லை. மாறாகப் பெண்ணின் காம உணர்ச்சியை மறுத்து பெண்ணை மனரீதியாக மனநோயாளியாக்கினர். இந்த மனநோயாளர்களின் அத்து மீறல்களைத் தடுக்க பெண் மீதான இரும்புப் பிடியிலான ஆணாதிக்க ஒழுக்கம், சட்டம் பெண்ணைக் குதறியது. அத்துடன் பெண்ணைக் கொச்சைப்படுத்தியது. அதைப் பார்ப்போம்.

மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல், "பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. - எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! - எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள். - நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்"32 என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக் கூறுகின்றது.

பெண்களின் பிறப்பை ஒரு கேவலமான படைப்பாகக் காட்டும் ஆணாதிக்கம் சமூகத்தின் அனைத்துக் கேடுகளுக்கும் பெண்ணைக் குற்றம் சாட்டுகின்றது. தனிச் சொத்துரிமை வடிவில் மனிதர்களின் வாழ்க்கையைத் தனிமனிதர்களின் நலனில் இருந்து சிலருக்காக மாற்றியபோதுதான் ஆணாதிக்கம் சமூகத்தின் கேடுகளுக்கான மூலமாகியது. பெண்களின் தாய்வழி உரிமையைத் தனிச் சொத்துரிமையின் வளர்ச்சியில் படிப்படியாகப் பறித்தெடுத்த ஆணாதிக்கம், பெண்ணை இழிநிலைக்குத் தள்ளியதுடன், அதை நிரந்தரமாக்கப் பெண்ணின் பிறப்பு முதல் அனைத்தையும் கேவலப்படுத்தியுள்ளது. பெண்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யாத ஆணாதிக்கத்தின் சுயத்திருப்தி போக்கால், பெண் அதிர்வுற்று அத்துமீறி பாலியல் பூர்த்தியை அடைய முயல்வதை ஆணாதிக்கம் கொடூரமான வகையில் இழிவுபடுத்தப் பின்நிற்கவில்லை.

அத்துடன் பலதாரமணத்தில் பெண்ணுக்கு இருந்த பாலியல் உரிமையைக் கட்டுப்படுத்த, பெண்ணின் பாலியல் உரிமையை ஒருதாரமணத்தில் நிலைநிறுத்த, பெண்ணின் பாலியல் நாட்டத்தை இழிவுபடுத்துகின்றது. ஆண்களின் அடங்காத பாலியல் வேட்கை, ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப எல்லையின் அத்துமீறும் ஆண் பலதாரமணத்தில் இருந்தபடியே, ஒருதார மணத்தைக் கடைபிடிக்க மறுப்பதாகப் பெண்கள் மீது குற்றம்சாட்டிக் கேவலப்படுத்துகின்றனர். அத்துடன் பெண்கள் பற்றி எவ்வளவு கேவலமாக உவமைப்படுத்தித் திட்டமுடியுமோ அந்தளவுக்கு ஆணாதிக்கம் பெண்ணை இழிவுசெய்கின்றது. மகாபாரதம் போன்ற இதிகாசக் கற்பனைக் கதைகள் மூலம் பெண்களை இழிவுபடுத்தும் பாதையை மீளக் கட்டியமைக்க முயலும் முயற்சியில் மதவாத அரசியல் அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அங்கு பெண்கள் பற்றிய பார்வை இதைவிட மேலான நிலையில் இருந்து விடப் போவதில்லை. பெண்பெற்ற உரிமைகளை இழப்பதற்கான பாதையில் இவை மீள் உருவாக்கம் பெறுகின்றன.

தொடர்ந்து மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39.8 இல், "அதாவது பெண்களின் அறிவு, கண்டு பிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது." 49.22 இல், "பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. 43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள். 43.24 இல், உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். ஒருவனுடன் கூடி வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டு, முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள். 43.24 இல், அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். 43.24 இல், "ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின் சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்."32

பெண்ணை ஆண் தனது பாலியல் தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய ஓர் இயந்திரமே என்று இந்துப் பார்ப்பனியம் கூறுகின்றது. இந்து தர்மம் தனது தர்மத்தில் பெண்ணை ஜடமாக அணுகுகின்றது. மற்ற மிருகத்தில் கருணை காட்டுவதுபோல் நடிக்கும் இந்து மதம், பெண்கள் விடயத்தில் கருணையைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாகப் பெண்ணை இயந்திரமான வேலைக்காரியாகக் காட்டுவதும், ஆணின் ஒருதலைப்பட்சமான பாலியல் இன்பத்துக்குப் பயன்படுத்தக்கூடிய உருவமாகக் காண்கின்றது. பெண்ணின் அறிவைத் தந்திரத்தின் சதியாகக் காண்பதும், அதன் மீதான ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆழமான தந்திரமாகக் காண்கின்றது.

வியட்நாம் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின்போது வியட்நாம் மக்களின் தந்திரமான யுத்தத்தைக் காட்டுமிராண்டித்தனமாகக் கண்டதுபோல், ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் எதிர்ப்பை ஆழமானதும் தந்திரமானதுமாகத் தூற்றுகின்றது. அத்துடன் அவளை வஞ்சகத்தின் வடிவமாகவும், பாலியலில் தான் விரும்பியவனைத் தவிர பிற ஆண்களுக்குச் சுதந்திரமாக விட்டுக் கொடுக்க மறுப்பதாகவும் தூற்றுகின்றது. தான் விரும்பியவனுடன் உடன் புணரவும், தேவையெனின் பிரிந்து செல்லவும் தயாரான ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம்தான் இன்றைய அடக்குமுறை ஆணாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டது. பெண் தான் நேசிப்பவனுடன் வாழவும், தேவையெனின் பிரிந்து சென்ற அன்றைய வரலாற்றினைக் காட்டும் இந்த அவதூற்று ஆதாரங்கள், பெண் கடந்த காலத்தில் பெண்ணுரிமையைப் பெற்று இருந்ததை நிறுவுகின்றது. இதன் மீதான அவதூறும், பெண்ணின் திருப்தி ஒரு ஆணிடம் சாத்தியமில்லை என்றதன் மூலம், பெண்ணைக் கொச்சைப்படுத்தி பெண்ணை விலங்கிட்ட ஆணாதிக்கமே, தான் ஒரு பெண்ணிடம் திருப்தியடையாது, பல பெண்களை நாடும் பலதார மணத்தை இன்றுவரை விட்டுக் கொடுத்துவிடவில்லை. பெண்ணிடம் எதுவும் இல்லை. அவர்களிடம் கருணையில்லை. அவர்களிடம் அன்பு வைத்தல் கூடாது என ஆண்களை எச்சரிக்கும் இந்து தர்மங்கள் அதை மீறுபவன் அழிந்து போவான் என்று சாபம் இட்டு, இதற்கு எதிராக ஆண்களை மிரட்டி, ஆணாதிக்கத்தைப் பணியவைத்து, நிறுவியது.

மனு இதை 9.15 இல், "எல்லா மனிதர்களும் கடவுளர்களாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள். பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து, மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களைச் சிருஷ்டி செய்தார். ஆகவே, பெண்கள் மனிதச் சமுதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகின்றது. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களாதலால் அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும், அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும் இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்."32

எல்லோரும் மனிதர்களாக வாழவும், எல்லோரும் தமது தேவைக்கு ஏற்ப வாழ்வதையும் மறுத்த இந்து தர்மம் பெண்ணை இழிநிலைக்குத் தள்ளியதைப் புராணங்கள் மூலம் நியாயப்படுத்தினர். தேவர்கள் என்ற பார்ப்பனர்கள் சாதி வடிவத்தை உருவாக்கி, அதில் பெண்களை இழிநிலைக்குத் தள்ளிய, தனிச்சொத்துரிமையின் பிரதிநிதிகளான பார்ப்பனர்களின் கனவைப் பெண்களின் வீழ்ச்சியுடன் நிறைவாக்கப்பட்டது. பெண்கள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்ததையும், அவர்கள் வீPழ்ச்சிக்காகப் பிறந்ததாகவும் பார்ப்பனியப் புளுகுகளுடன் ஆணாதிக்கம் நிறுவப்பட்டது. பெண்களின் வாழ்வு அந்தஸ்து பறிக்கப்பட்டதைப் புராண இலக்கியங்கள் ஒத்துக்கொள்வதை வேறு இது நிறுவுகின்றது. இந்த வீழ்ச்சிக்குப் பெண்கள் பலம் இல்லாதது தான் காரணம் என்று விளக்கம் கூறப்பட்டது.

மனிதனை மனிதன் சுரண்டி, உபரியை ஆண் திரட்டத் தொடங்கிய போது பெண் அங்கு பலவீனமான ஜீவன் ஆக்கப்பட்டாள். பெண்கள் வீட்டிலும் விவசாயத்திலும் தங்கியிருக்க, ஆண் பெண்ணை விட அதிக உணவாக இறைச்சியை உண்ணத் தொடங்கி, இறைச்சியை வேட்டையாட ஆயுதங்களை உருவாக்கியதைத் தொடர்ந்து அவன் உயிர்கள் மீதான அழிப்புக் கண்ணோட்டத்தைப் பெற்றதுடன், பெண்ணைவிட அதிக பலம் பெற்றான். குரங்கு மனிதக் குரங்காகவும், பின்னால் மனிதனாகவும் மாறிவந்த காலக்கட்டத்தில், மனிதன் நிலையாக வாழத் தொடங்கும் முன்பு, நிலத்தில் வாழத் துவங்கியபோதே விலங்குகளுக்கு எதிரான தற்காப்பு யுத்தம் அடிப்படையான நிபந்தனையாக இருந்தது. இந்தத் தற்காப்பில் கொல்லப்பட்ட மிருகங்கள் மனிதனின் புதிய உணவாகின. இந்தத் தற்காப்பில் பலம் பெற்றபோது தாக்குதல் நிலைக்கு மாறி இறைச்சி பிரதான உணவாகியது. பெண் குழந்தைகளின் தற்காப்பு கருதி, நிலையாகத் தங்கி, பாதுகாப்பை உறுதி செய்யாதபோது, பெண்கள் முக்கியமான திருப்பமாகத் தாவர உற்பத்தியைக் கண்டுபிடித்ததன் மூலம் தாவர உணவு உண்பதும் பிரதான வழக்குக்கு வந்தது. தற்காப்பு மாறி மிருக வேட்டையை உணவாகவும், பின்னால் வளர்ச்சிபெற்ற அழிப்புக் கண்ணோட்டமே மனிதர்கள் மீது உபரி அடிப்படையில் மேலும் வலு பெற்றபோது, அவன் பலசாலியாக நினைக்கத் தொடங்கிய அதேநேரம் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றி சீரழிந்தான். பெண்; அதிகளவு உணவு தாவரம் சார்ந்து இருந்;த அதேநேரம், விவசாய உற்பத்தி மற்றும் சிறு விலங்குக் குட்டிகளை வளர்த்தல் போன்றவற்றால் கருணையும், பரிவும் கொண்டவளாக இருந்தாள். இது ஆணின் அழிப்புக் கொள்கைக்கு எதிராக இருந்ததால், இதைப் பலவீனமாக ஆணாதிக்கம் விளக்கியது. இதன் தொடர்ச்சியில் உணவு வகையில் ஏற்பட்ட இரண்டு வேறுபாட்டால், உடல் பலத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நீண்ட பரிணாம வளர்ச்சியில் உடல் கூறுகளின் சில இயல்புகள் தீவிர மாற்றம் கண்டது. இதையே புராண இந்து தர்மம் பெண்ணின் பலவீனமாகக் கூறி அவளை வீழ்ச்சியின் மையமாக விளக்கியது.

இன்று உலகில் பலமான சமூகம் என்பது நவீன ஆயுதங்கள், தனிச் சொத்துரிமையின் பலம் (சொத்துள்ளவன்)ளூ அதிகாரத்தில் உள்ளவன் பலமானவனாக இருப்பதும், மக்கள் பலவீனமானவர்களாக இருப்பதும் பொதுவான மதிப்பீடாகும்;. இது நாட்டுக்கு நாடு கூட பொருந்தும். ஆனால், மக்கள் சக்தி அணிதிரண்டால் இந்த பலம் என்பது நொறுங்கி விடுவது எதார்த்தமாக உள்ளது. இதுதான் ஆண் பெண்ணுக்கிடையிலான நிலையும் கூட. ஆணாதிக்கம் பெண்ணைப் பலவீனமாகக் காட்டுவது என்பது தனது சமூக அதிகாரத்தில் இருந்துதானே ஒழிய மக்களின் பலத்தில் இருந்து அல்ல.

பெண்கள் மீதான பாலியல் கட்டுப்பாட்டை ஆண் தனக்குச் சார்பாக ஆணாதிக்கப் பலத்தில் இருந்து கையாளும்போது பெண் வஞ்சிக்கப் படுகின்றாள். வஞ்சிக்கப்பட்ட பெண் அந்த ஆணிடம் விசுவாசமாக நடக்க மறுத்து, தனது உணர்ச்சியைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்தால், ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, அதை அவளின் நிலையற்ற தன்மையின் பலவீனமாக இட்டுக்காட்டுகின்றது. அவள் பாலியலில் அடங்காப்பிடாரி என்ற கோட்பாட்டை ஆணாதிக்கச் சூறையாடலின் பின் ஜோடிக்கின்றது. அவள் ஆணாதிக்க அடக்குமுறையின் கீழ் ஒருவனின் மனைவியாக இருக்க மறுக்கும்போது, ஆசையும் நிலையற்ற பலவீனத்தின் வீழ்ச்சியையும் கொண்டவள், எனவே ஆண்கள் அவளைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆள வேண்டும் என புராணங்கள் சமூகத்துக்கு ஆலோசனை வழங்கி, அடக்கியது.ஆணாதிக்கம் பல மனைவியைச் சட்டப்படியும், சட்டத்துக்குப் புறம்பாகவும் கொண்டு பலவீனமாக வாழ்ந்தபடி, ஒருதார மணத்தில் பலதார மணத்தை ஆண் தொடர்வதுடன், விபச்சாரத்தை ஆதாரமாகக் கொண்டு தன்னைப் பாதுகாத்து நிலைநிறுத்துகின்றது.. இதற்காக மதத்தின் பெயரிலும், சடங்கின் பெயரிலும், உரிமையின் பெயரிலும் பெண்களை இழிநிலைக்கு இட்டுச் சென்று ஆண் அனுபவிப்பதைப் பலமானதாக ஜோடித்தது. ஆண் பல பெண்ணுடனான பாலியல் உறவு கொள்ளும் நடத்தை பலமானதாகவும், பெண்ணின் பல ஆணுடனான நடத்தை பலவீனமானதாகவும் ஆணாதிக்கம் விளக்கம் கொடுத்து பெண்ணை நசுக்கியது. ஆண் - பெண்ணுக்கிடையில், ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான விளக்கத்தை ஒரே நடத்தையைக் கொண்டு விளக்கப்பட்டது. இதன் மூலம் ஆணின் நடத்தை சமூக அங்கீகாரத்துக்கும், பெண்ணின் நடத்தை சமூகத் தூற்றலுக்கும் உள்ளாகியது. இதன் மூலம் பெண்ணின் நடத்தை தடை செய்யப்பட்டது. ஆணின் நடத்தை நியாயப்படுத்தப்பட்டதுடன், இன்றுவரை இதுவே ஆண் - பெண் முரண்பாட்டின் எதிர்த் தன்மையில் பொதுப் போக்காகவுள்ளது. இதிலிருந்து எந்தச் சமூகமும், எந்த மதமும் விலகி நின்றுவிடவில்லை.

இதை மேலும் இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல், "உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்."32 பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள், எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும் இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்தது. இது எதார்த்தத்தில் பெண்மீதான அடக்குமுறையாக உள்ளது. ஆணாதிக்கக் கூற்றுக்களின் பின்னால் இவை எல்லாம் ஆணின் பொதுப்போக்காக இருக்க, அதைப் பெண்ணுக்குப் பூச் சூட்டியது ஏன்? அதுதான் இந்தியப் பெண்கள் தலையில் பூச் சூட்டுகின்றனரோ? ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அதிகாரத்தில் பெண் நுழைவதைத் தடுக்கவும், அதை எதிர்த்துப் பெண் போராடுவதை முறியடிக்கவுமே இப்படி பெண்மீது ஜோடித்து அழகுகாட்டுகின்றனர்.

பெண்ணின் அவல நிலை கண்டு அதற்கு எதிராகப் போராட முயலும் ஆண்களைக் கட்டுப்படுத்த, பெண்ணின் குணம் பற்றிய விளக்கம் ஆணை மந்தையாக்குகின்றது. பெண் ஆணின் ஆணாதிக்கத்தின் மீது குற்றஞ்சாட்டும் போது அது கொடுமையானது என்று, ஆணாதிக்கப் பார்ப்பனியம் எதை எல்லாம் ஆணுக்கு நியாயப்படுத்தி பெண்ணுக்குக் கொடுமையாகக் காட்டியதோ, அதேவழியில் பெண்ணைக் கொடுமைக்காரியாக்கியது. பெண், குழந்தைக்குக் கொடுத்த பின்பே மிகுதியை உண்ணும் தாய்மை உணர்வை, தனக்கும் சேர்த்து கடமையாக்கிய ஆணாதிக்கம்தான், உள்ளமில்லாதவர்கள் என்று பெண்ணைக் குற்றம் சாட்டுகின்றது. தாய்மை உணர்வு குழந்தைக்குச் செய்த கடமைகளை, ஆணாதிக்கம் தனக்கு நிபந்தனையாக்கி, வீட்டு வேலைக்காரியாக்கிய பின்தான் உள்ளமில்லாதவள் என்கின்றது. பெண்ணின் இயற்கையான பாலியல் உணர்வும், குழந்தை பெறுவதையும் ஆணாதிக்கம் தனது உணர்வுக்கும், பொருளாதார நலனுக்கும் தீனிபோடும் பாலியல் ஊடகமாக்கியது. அத்துடன் ஆணின் தனிச் சொத்துரிமைக்கு வாரிசுகளைப் பெறும் பண்டமாக்கி, அவளை ஆணுக்குக் கடமை செய்யும் பெண்ணாக்கிய பின்பு, அவளைக் கருணையற்ற உள்ளமில்லாதவள் என்கின்றது. உண்மையில் கருணை பற்றியும், உள்ளம் பற்றியும் பேசும் அருகதை ஆணாதிக்கத்துக்கு இருக்கமுடியாது. இந்தக் கொடூரத்தைச் செய்த ஆணாதிக்கம், அதைப் பெண்ணுக்கு இல்லை என்பதுதான் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையின் சமூகப் பலமாகும்;. சமூகப் பலம் சொத்துரிமையின் வடிவில் எப்போதும் தீர்மானிக்கப்படுவதால் அதைப் பெற்றுள்ள ஆணாதிக்கப் பண்பாடு சமூகமயமாகியது.

பெண் ஆணாதிக்கத்துடன் முரண்பட்ட போராட்டத்தில் ஆணைவிட மேன்மையான பாத்திரத்தை, ஆணுக்கான கடமையில் வழங்குவதன் மூலம் பெண்ணைத் திருப்திப்படுத்தவும், ஆணின் நோக்கங்களை நிறைவு செய்வதும் அவசியமாக இருந்தது. ஆணாதிக்கம் பெண்ணைப் பாலியல் பண்டமாகவும் ஆணின் சுகத்தைப் பூர்த்தி செய்ய படைக்கப்பட்டதாகவும் புராண மற்றும் இந்து தர்மம் கூற்றுகளை நிறைவு செய்ய பெண்ணைப் புகழ்ந்தவற்றைப் பார்ப்போம். இராமாயணத்தின் பிந்தியகால விளக்கங்களில் "பெண்ணின் முகங்கள் பூக்களைப் போன்றவைகள். அவர்களின் மொழிகள் தேன் போன்றவைகள். அவர்கள் உள்ளம் சவரக் கத்தியின் கூர்மையைப் போல் கெடுதி செய்யக்கூடியது. அவர்களது உள்ளத்தின் ஆழத்தை அறிந்தவர் யாருமில்லை"32 என்ற விளக்கங்கள் ஆணாதிக்கத்தின் பாலியல் வெற்றியைப் பறைசாற்றுகின்றது.

பெண்ணின் முகம், மொழி ஆணாதிக்கப் பாலியல் கண்ணோட்டத்துக்கு இசைவாக உள்ள நிலையில் அதை ஆணாதிக்கம் புகழ்கின்றது. பாலியலில் ஈடுபடும் ஆணின் தேர்வுகள் இந்த எல்லைக்குள் அலைபாய்கின்றன. இந்த இரண்டும் இல்லை என்றால் அவளை அரக்கியாக வருணிக்கத் தொடங்குகின்றது. பெண் தனது உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்க்கும்போது, அது ஆணின் கொடூரத்தை அம்பலப்படுத்தும் போது, ஆணின் கருணை உள்ளமில்லாத் தன்மை அம்பலப்படும்போது, அவை ஆணாதிக்கத்தின் நாற்றத்தால் அம்பலப்படும்போது, இதை அடிப்படையாகக் கொண்டு இழிவான நடத்தை கொண்டதாகக் குறிப்பிட்டுப் பெண்ணை ஆணாதிக்கம் வருணிக்கின்றது. இதனால்தான் பெண் கணவனையோ, ஆணையோ நிமிர்ந்து, எதிர்த்துப் பேசக் கூடாது என ஆணாதிக்க இந்து தர்மம் கோரி அமுல் செய்கின்றது.

இந்துப் பண்பாட்டில் உருவான ஆணாதிக்கம் பெண்ணிடம் இரகசியம் சொல்ல முடியாது என்கின்றது. ஏனெனின் அவள் பகிரங்கமாக்கி விடுவாள் என்று கூறும் நடைமுறையில் உள்ள பழமொழிகள், பண்பாடுகள் ஏன் ஏற்பட்டன எனக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். சமூக இயக்கத்தில் இருந்து பெண் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சொந்தக் குடும்பத்திலேயே ஆணுடன் பேச முடியாத சூழலில், சொந்த மொழியையே சில எல்லைக்குள் வைக்கும்படி ஆணாதிக்கம் மட்டுப்படுத்தியது. அவளின் தொடர்புகள் சுற்றுவட்டாரத்தில் அதேநிலையில் வாழும் பெண்ணாக இருப்பதால், அவளின் மொழி எல்லை குறுகிய நிலையில், அவர்கள் பேசிக்கொள்ள விடயங்கள் அற்ற நிலையில் பேசியே ஆக வேண்டிய துயரத்தால் பீடித்துப் போய் நிற்கின்றாள். இது மட்டுமே அவளின் துயரத்தைப் போக்கும் வடிகாலாக எஞ்சுகின்றது.

கணவனின் ஆணாதிக்கக் கொடூரத்தை வெளியில் சொல்ல முடியாத வழிபாட்டு, பண்பாட்டு அடக்குமுறை, இதனால் தனக்கு எதெல்லாம் தெரிந்ததோ அதை எல்லாம் கொட்டித் தீர்த்து, பரம இரகசியமாவது தவிர்க்க முடியாத எல்லையாக இருந்தது. பெண்ணின் மொழி இதற்கு அப்பால் விரியாத நிலையில், பெண்ணின் உள்ளத்தில் இருப்பதை எல்லாம் பகிரக் கோருகின்றது. அத்துடன் அவள் பகிர்ந்துண்டு வாழ்ந்த வாழ்க்கை மனிதச் சமூகத்தில் ஆணாதிக்க வழி சுரண்டும் இரகசிய மொழியை இயல்பில் தன்னையறியாமலே மறுக்கின்றது. இது ஆணாதிக்க மட்டத்தில் மோதல்களையும், புகைச்சலையும் கொண்டுவருகின்றது. இதில் இருந்தே ஷஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்று பெண்ணை இழிவுபடுத்துகின்றது ஆணாதிக்கம். பெண் பேசும் பொருட்களின் எல்லை சுருங்கி பெண்ணை அன்னியப்படுத்திய ஆணாதிக்கம், பெண்ணை மௌனிக்கக் கோரியது. பெண் தனது குறுகிய வட்டத்தில் பரம இரகசியமாகத் தெரிந்ததைப் பேசுவது மட்டுமே அவளின் மொழியைப் பாதுகாத்தது மட்டுமல்ல, அவளின் மொழி இதுவாகவே இருந்தது. மொழியின் வளர்ச்சி என்பது ஆணாதிக்கப் பொருட்களிலும், பெண்ணை அடிமைப் படுத்திய உழைப்பின் எல்லைக்குள்ளும், அதன் வர்க்கப் போராட்டத்துக் குள்ளும் கட்டியமைக்கப்படுகின்றது.

பெண்ணை இழிவுபடுத்துவது ஆணாதிக்கத்தின் பண்பாகியது. இதனால் உருவான இலக்கியம் ஆணாதிக்க ஒழுக்கத்தைப் பெண் மீது திணித்தது. பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், "ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்."32 இதையே சுக்ரன் "பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்."32 சுக்ரா 3.163 இல், "பெண் இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம், 4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்"32 என்று புராண இலக்கியங்கள் தனது ஆணாதிக்கப் பெண் மதிப்பீட்டை முன்வைத்தது மட்டுமின்றி, பெண் கொடுமைப்படுத்தப்பட்டாள். பெண் உண்மையில் ஒருவனை நேசிக்க முடியாதவள் என்று கூறி, பெண்ணை அடக்கி, ஆணாதிக்கம் கட்டுப்படுத்தியதை இது காட்டுகின்றது. இது அன்று ஆண் அடக்குமுறைக்குள் பெண் நேசிக்க மறுத்த போராட்டத்தைக் காட்டுகின்றது. பெண்வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகம் வளர்ச்சி பெற்றபோது பெண் தனது சுதந்திரத்தைத் தக்கவைத்த போராட்டத்தில் தனது உரிமையினை நிலை நாட்டியபோது அதைத் தூற்றி, ஆண்வழிச் சமூகத்தைப் பெண்ணடிமைத்தனம் மீது கட்டியமைத்ததைக் காட்டுகின்றது. ஆணாதிக்கச் சமூகத்தில் பெண் ஒருவனை மட்டும் நேசிக்கக் கற்றுக் கொண்டாள். ஆனால் ஆண் அதை எப்போதும் மறுத்தான்.

இந்த நேசிப்பு என்பது ஆணாதிக்கப் பாலியல் வேட்கையின் தற்காப்பில் பெண் ஒரு ஆணைத் தெரிவு செய்த நிகழ்வுளூ அதைத் தொடர்ந்து காதலிக்க தொடங்கிய வரலாற்றில், அக்காதல் ஒருதார மணத்தில் நிபந்தனையாக இருந்ததில்லை. மாறாக, பெண் ஆணைத் தெரிவு செய்து கூடி வாழ்வதும், விலகிச் செல்வதும் அவளின் சுதந்திரமாக இருந்தது. இந்தச் சுதந்திரம் மறுக்கப்பட்ட வளர்ச்சியின் நீட்சியில்தான் பெண் மீதான நேசமற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ஆணாதிக்கம் குறிப்பிட்ட தனி ஒரு ஆணை நேசிக்க நிர்ப்பந்திக்கின்றது. அத்துடன் முன்னைய சமூகங்கள் பெண்வழிச் சமூகமாக இருந்ததால், ஆண்வழிச் சமூகம் தனக்குள் கட்டுப்படுத்த முயன்றபோது அதை எதிர்த்து பெண்வழிச் சமூகம் போராட நிர்ப்பந்தித்தது. இதனால் பெண்ணின் போராட்டத்தை மறுத்த ஆணாதிக்க ஒழுக்கவியல், பெண்ணைக் கொலைக்காரியாக்கிக் குற்றம் சாட்டுகின்றது.

பெண்வழி, ஆண்வழி உறவுமுறையால் அடக்கப்பட்டது இலகுவாக நடந்துவிடவில்லை. மாறாக, கடினமான போராட்டத்தைக் குடும்பத்துக்குள்ளும், வெளியிலும் பெண் நடத்தினாள். பெண்வழிச் சடங்குகள், கடமைகள், உரிமைகள் பறிக்கப்பட்டபோது, பெண் அதற்காக உயிரைக் கூட விட்டு உள்ளதை, அவளின் பழைய தொடர்ச்சியான சடங்குகள் காட்டுகின்றன. இதை மேலே விவாதித்துள்ளேன். பெண்ணின் குணமாகக் காட்டப்படுபவை ஆணின் தனிச்சொத்துரிமையின் பகைமையான பக்கங்கள் ஆகும்;. ஆணுடைய தனிச் சொத்துரிமையின் மூர்க்கமான போக்குகள் அம்பலப்படும்போது, அதைப் பெண்ணின் குணங்களாகக் காட்டுவது ஆணாதிக்கத்துக்கு அவசியமாகின்றது. தனிச் சொத்துரிமையைக் கைப்பற்ற பொய், அதன் மீதான நிலையின்மை, அதை அடைய வஞ்சகம், இதற்காக இயற்கையை அழித்து சூறையாடும் மூடத்தனம், இதற்காகப் பேராசை, நேர்மையற்ற உள்ளத்தைக் கொண்ட மாசு, மனிதனைச் சூறையாடுவதில் கொடுமை, இதை எல்லாம் அடைவதில் வெட்கமற்ற துடுக்குத்தனம் ஆகியவை ஆணாதிக்கத்தின் பொதுப்பண்பாகும்.

பெண் உழைப்பில் (குழந்தை வளர்ப்பு, வீட்டுவேலை...) நேர்மை, அதைச் செய்வதில் உறுதி, குழந்தைகளில் அன்புடன் கூடிய நேர்மை, அறிவில் சமூகப் (இயற்கை அறிவு) புத்திசாலித்தனம், பகிர்ந்து உண்ணல், இதைச் செய்வதில் மாசற்ற தன்மை, இதை அடைவதில் பரிவு, இதைச் சாதிப்பதில் சகிப்பு ஆகியவை பெண்ணின் பொதுப்பண்பாகும். இதுதான் மனிதப் பண்பாகும். பாலியல் நடத்தைகள் என அனைத்திலும் இந்த ஆணாதிக்க மதிப்பீட்டுக்கு எதிர்மறைத் தன்மை காணப்படுகின்றது. ஆணாதிக்கத்துக்கும் பெண்ணுக்கும் உள்ள பிளவால் இவை பொதுவாகப் பிளந்து போயுள்ளது. ஆணாதிக்கம் பெண் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஆணாதிக்க ஆணினுடையவை. இதைப் பெண்கள் மீது திணித்துப் பெண்ணை எப்படி அடக்கியது எனப் பார்ப்போம்.அர்த்த சாத்திரம் 3-3-59 இல், "பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டில் மீது அடிகள் கொடுக்கலாம்;."32 இதை இராமாயணம் 25-17 இல், "ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம். சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் - அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கொன்று விடலாம். உலகத்தையே விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார். ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளைத் தடுத்ததற்காகத் தாடகை என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்."132

ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகள், அதனால் எழுந்த சமூக ஒழுக்கத்தை, வன்முறை மூலம் இந்து தர்மம் பெண்கள் மீது கட்டியமைக்கின்றது. பெண்கள் மீதான ஆணின் அதிகாரம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் என்பது ஆணாதிக்கம் பெண்ணை அடிக்கும் உரிமையை வழங்கியது. அத்துடன் சமூகத்துக்குத் தீங்கு என்ற கண்ணோட்டத்தில் பெண்கள் கொல்லப்பட்டனர். அதாவது ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தைத் தகர்த்து, கேள்விக்குள்ளாக்கும் பெண்கள் கொல்லப்பட்டனர். பார்ப்பனிய முட்டாள்த்தனம், மூடநம்பிக்கை, அடிமைப்படுத்துதல், அவதூறுகள், வன்முறை ஆகியவை மீது கேள்வி எழுப்பிய பெண்கள் கொல்லப்பட்டனர்.

இவை எல்லாம் உலகளாவிய சமூகத்திலும் பொதுவாக நடந்தவைதான். மதத்தின் ஆதிக்கம், அதன் அதிகாரச் செல்வாக்கு மனித ஒழுக்கத்தை ஒழுங்கமைத்து, கண்காணித்து, கட்டுப்படுத்தியது. பெண் பற்றிய ஆணாதிக்க வரையறைகள் மீறப்பட்டபோது அவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஆணாதிக்கத்தால் கொல்லப்பட்டு, ஒழுக்கத்தை நிலைநாட்ட உதாரணம் காட்டும் பெண்களான தாடகை, மாதா வரலாறு முதலியவற்றை, அவர்கள் ஏன், எதற்காகக் கொல்லப்பட்டனர் என்பதை ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணின் போராட்ட வழியில் ஆராய வேண்டியுள்ளது. இது பற்றிய விபரம் முழுமையாக எடுக்க முடியாததால் இதை இத்துடன் விட்டுவிடுகின்றேன்.

சமூகத்தில் ஆணாதிக்கம் கோலோச்ச, கோலோச்ச பெண்கள் மீதான வெறுப்பு அதிகரித்தது. ஆண் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பும், இலாபமும் உடையவனாக மாறியதால், அவன் சமூகத்தின் மேலான நபராக மதிக்கப்பட்டான். பெண்ணைச் சமூகத்தின் இழி பிறவியாகப் புராண இலக்கியங்கள் மக்களுக்குப் புகட்டின. ஆண் பரிசம் கொடுத்து பெண் பெற்ற முறைக்குப் பதில், பெண் சீதனம் கொடுக்கும் முறை பெண்ணைச் சுமையாக்கியது. சொத்துரிமை ஆணின் கையில் இருந்த நிலையில் மேலும் சீதனமூடாக அவளது சொத்தைத் தனதாக்கும் கண்ணோட்டத்தில், சீதனம் கொடுப்பது பெண் மீதான சுமையாக மாறியது. எனவே, சொத்தற்ற பெண் சீதனம் கொடுக்க சொந்தக் குடும்பத்தில் ஆணைச் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒழுக்கமாக மாறியது. இதனால் பெண்ணின் வாழ்வு மேலும் இழிநிலைக்குத் தரம்தாழ்ந்தது. பெண் குழந்தைகள் மீதான வெறுப்பு ஆண்களிடத்தில் உருவானது. இது குறித்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சொத்தை ஆணின் சொத்து கவர்ந்தது. பெரிய மூலதனம் சிறிய மூலதனத்தை விழுங்குவது போல், எஞ்சியிருந்த பெண்ணின் சொத்தையும், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சொத்தையும் சீதனம் சூறையாடியது. இதனால் பெண்குழந்தை மீதான ஆணின் வெறுப்பை, ஆணாதிக்கப் புராண இதிகாச ஒழுக்கங்கள் விளக்கம் கொடுத்து சமுதாயமயமாக்கியது.

அதர்வண வேதத்தில் 6-2-3 இல், "குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண் மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை. பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும் இங்கே ஆண் மகவு பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்."32 காதபாசன் ஹிதா 27ஏ யில், "பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்"32 என்று சொத்துரிமை பறிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்திய ஆணாதிக்க விளக்கத்தினூடாக வெறுக்கப்பட்டாள். ஆண் குழந்தை வேண்டி வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தை பெற்ற தாய், குழந்தைப் பேறு இல்லாத பெண் சமூகத்தால் தூற்றுதலுக்கு உள்ளாக்கப்பட்டாள். ஆணாதிக்கம் இதற்காகப் பெண்ணைத் துன்புறுத்தியது. அடிப்படையில் ஆண் சார்ந்த வாரிசுக் கண்ணோட்டமும், பெண்ணின் சொத்திழப்புமே ஆணாதிக்கம் கோலோச்சியதற்கான அடிப்படையாகும்.

இது இன்று எப்படி பொதுவாகச் சொத்துடைய வர்க்கம் மற்றைய வர்க்கத்தைச் சுரண்டி, அதையே ஜனநாயகமாகக் கையாண்டு கேவலப்படுத்தி, அடிமைப்படுத்துகின்றதோ அந்தளவுக்கு நிகரானது. இன்று பெண் குழந்தை பற்றிய இந்து - இந்தியச் சமூகத்தில் காணப்படும் கண்ணோட்டம் இந்த வரலாற்று வழி உருவாக்கப்பட்டவையே. இவை நவீனப்பட்டபோது நாகரிகமாக, பெண்ணின் பூர்சுவா சுதந்திரக் கோரிக்கையின் பின், பெண் குழந்தையைக் கருவிலேயே கொலை செய்வதும் சரி, இதற்கு வசதியற்றவர்கள் பெண் சிசுவைப் பிறந்தபின் கொல்வதும் சரி பிறந்த பின் பெண் குழந்தையை வேண்டாவெறுப்பாக வளர்ப்பது, திட்டுவது, புறக்கணிப்பது, ஒதுக்குவது, சொந்தக் குடும்பத்திலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது எல்லாம் பழைய ஆணாதிக்க இந்து தர்ம ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பட்டவைதான். பெண் கரு அழிப்பு, குழந்தைக் கொலை, பெண்ணின் ஒதுக்கப்பட்ட வளர்ப்பு ஆகியவற்றுக்கு ஆதாரமான ஆணாதிக்கத்தைத் தகர்ப்பது என்பது இந்து தர்மத்தைத் தகர்ப்பதால் மட்டுமே வெற்றிபெற முடியும். இது அனைத்துப் பிரிவு மக்கள் ஒற்றுமைக்கும் அதாவது சர்வதேச ஆணாதிக்க ஒழிப்புக்கும் முன்நிபந்தனையும் ஆகும். அந்தளவுக்கு இந்து தர்மம் மனித ஒழுக்கத்தைக் கட்டிப்போட்டு ஆணாதிக்க வக்கிரத்தைப் பெண்கள் மீது திணிக்கின்றது.

ஆணாதிக்கச் சுரண்டல் யுத்தங்களில் பெண்களை அபகரித்துக் கொண்டுவந்த போதும் சரி, ஆணாதிக்கத் திருமண எல்லைக்குள் பெண்ணை வன்முறையாகச் சூறையாடிய போதும் சரி, பெண்களின் பாலியல் ரீதியான அத்துமீறல்களுக்கும் தண்டனையாகவே பெண்களைக் கொடுமைப் படுத்தியது. ரிக் வேதத்தில், "யுத்தத்தில் எதிரியிடமிருந்து பிடிபட்ட பெண்களோ அல்லது விவாகச் சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டுச் சாமான்களைப் போலவே நடத்தவேண்டும்."32 ஆணாதிக்க ஒழுக்க மீறலை வெளியில் உள்ள ஆண்கள் அவள் மீது நிகழ்த்தும் போது, பெண்ணின் வாழ்வை மேலும் சீரழிவாக்கி, சித்திரவதைப்படுத்திக் கொடுமைப்படுத்தியது. குற்றவாளியாக ஆணாதிக்க ஆண் இருக்கும் நிலையில், பெண்ணுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்பெண் இருந்த பண்ட மதிப்பில் மேலும் தரம் தாழ்த்தி, சமூக அந்தஸ்து மேலும் குறைக்கப்பட்டு சமூகத்தின் கறையாக்கப்பட்டாள். அவளைச் சமூகத்தில் யாரும் விரும்பியதுபோல் கண்காணிக்கவும், வேலை வாங்கவும், சிறந்த பாலியல் சரக்காகவும், அடிமட்ட வேலைக்காரியாகவும் அப்பெண்களைக் கண்காணித்து, சமூக ஒழுக்கத்தை வரையறுத்து, சித்ரவதை செய்தே சுரண்டியது. இதன் போக்குகள் இன்றுவரைகூட எதார்த்தத்தில் உள்ளதைக் காணமுடிகின்றது.

நீதியின் ஒழுக்கத்தில் சிறந்த கதாநாயகர்கள் ஆக்கி மக்களுக்கு ஒழுங்கமைத்த பாண்டவர் கதையில், பஞ்சபாண்டவர்கள் தமது மனைவியைச் (இங்கு திரௌபதி ஐவருக்குப் பொது மனைவியைக் கூட) சூதாட்டத்தில் பணயமாக வைத்தபோது பெண்ணை ஒரு பொருளாக, சரக்காகத் தரம் தாழ்த்தப்பட்டதையே காட்டுகின்றது. இதுபோல் இராமாயணத்தில் இராமன் பரதனுக்குத் தான் வகிக்கும் பதவி, மனைவி என அனைத்தையும் கொடுத்தபோது, இங்கும் பெண்ணை எப்படி இந்து தர்மம் சரக்காக்கிக் கைமாற்றியதைக் காட்டுகின்றது. இதை வால்மீகி இராமாயணம் 2-19-14 இல், தெளிவாகவே உணர்த்தி விடுகின்றது.

இதை ஒத்த ஒன்றை ரிக்வேதம் 40-31-24 இல் பார்ப்போம். "ஒரு சூதாடுபவன் தனது மனைவியை விட்டுப் பிரிய மனம் தாங்காமல் வருந்துகிறான். தனது மனைவி அழகாயிருப்பதனால் மட்டுமல்ல, பிரியமாயிருப்பதனால் மட்டுமல்ல, அவள் உற்ற தோழியாகவும், சிறந்த ஊழியராகவும் இருப்பதனால்தான் சூதாட்டத்தில் தனது கவனம் அதிகமாக ஈடுபட்டிருக்கையில், மற்றவர்கள் தங்கள் கைகளைத் தனது மனைவி மீது போடுகின்றனர் என்று வேறு கூறுகின்றார்."32 பெண் மிக மோசமாக நடத்தப்பட்டாள். பெண்ணை ஆண் சூதாட்டத்தில் வைக்கத் தடையாக இருப்பது அவளின் அழகு (பாலியல் கவர்ச்சி), அவளின் அன்பு (ஆணின் பாலியலைப் பூர்த்தி செய்யும் சரக்கு), தோழமை (ஆணின் சொத்து), கடமை தவறாத வேலைக்காரி என்ற ஆணின் நலன் சார்ந்த இலாபம்தான். இவைதான் பெண்ணைச் சூதாட்டத்தில் வைப்பதா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகின்றன.

சூதாட்டத்தில் அவனின் பொருள் சார்ந்த சூறையாடும் கவனம் பெண்ணின் உரிமையைப் பணயம் வைக்கின்றது. அதாவது, மற்ற சூதாட்ட ஆண்களின் ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தில் பெண் மீதான கவனத்தைத் திருப்பவும், பெண் மீது கைபோடவும் அனுமதித்து. ஆண் சூதாட்டத்தில் வெற்றியைச் சாதிக்க முனைவதன் மூலம், பெண் பணம் திரட்டும் சரக்காகின்றாள். இதனால் ஆணாதிக்கப் பார்வையில் அழகான பெண்ணின் பாத்திரம், ஆணின் பொருள் ஈட்டவும் ஓர் ஊடகமாக இருக்கின்றது. இன்றுவரை அனைத்து சூதாட்டம் மற்றும் இது போன்றவற்றில், குறிப்பாக ஆணாதிக்க உற்பத்திகளை மக்களின் தலையில் கட்டிவிட, அழகான பெண்மீதான பார்வை மற்றும் அவளின் பாலியல் உடல், அங்ககச் செயல்கள் மீது திருப்பியே மனிதச் சமூகத்தை அடிமைப்படுத்தவும், சுரண்டவும் முடிகின்றது. இதற்கு வெளியில் இந்த முதலாளித்துவச் சந்தைப்படுத்தல் சாத்தியமில்லை.

ஆணாதிக்கம் தகர்கின்றபோது இந்தச் சுரண்டல் அமைப்பும் தகர்ந்து போகும்;. சந்தையே ஆணாதிக்கப் பாலியல் வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதைக் கைவிட்டால் சுரண்டுவதைக் கைவிட்டதாக அர்த்தம்;. எனவே, முதலாளித்துவச் சந்தைப்படுத்தலைத் தகர்க்காமல் பெண் பாலியல் ரீதியில் விளம்பரம் செய்யப்படுவதைத் தடுக்கமுடியாது. ஒன்றுடன் ஒன்று கலந்துறவாடும் இந்த ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையின் நோக்கில், வேறுபட்ட பொருளாதாரச் சமுதாயப் பண்பாட்டிலும் காலத்தைத் தாண்டி, ஒரே போக்கில், ஒரே நிலையில், ஒரே நோக்கத்துக்காகப் பெண்ணை அழகுபடுத்துவது முதல் அனைத்தையும் பயன்படுத்தியது. இங்கு பெண் உடலியல் கூறுகளிலும் சரி, சிந்தனையிலும் சரி, செயலாற்றுவதிலும் சரி இந்த ஆணாதிக்க அமைப்புக்கு வெளியில் சுதந்திரமாக இயங்க முடியாது.பெண், ஆணின் ஆணாதிக்கச் சரக்குப் பண்டமாக இச்சமூகத்தில் இயங்குகின்ற ஓர் இயந்திரம் மட்டுமே. பெண் அன்றும் ஆணின் சொத்துதான். இதற்குப் பொருத்தமாகச் சத்தியத்தின் நாயகனான அரிச்சந்திரன் தான்பெற்ற கடனுக்காகத் தனது மனைவியை விற்கின்றான். மனைவி ஆணை விற்க முடியுமா என்றால் இல்லை. மனைவியைச் சத்தியத்தின் நாயகன் விற்றால் அதில் சத்தியம் இருப்பதில்லை ஆணின் தனிப்பட்ட சொத்தாகின்றது. பொருளைச் சூறையாடுவது, பறிப்பது, சுரண்டுவது, சொத்து சேர்ப்பது போன்றன இச்சத்தியத்தின் குறிக்கோளில் அடங்கும். அந்தவகையில் பெண்ணை விற்பது, வாங்குவது, பண்டமாகச் சந்தையில் விடுவது என எதையும் செய்யக் கூடிய நிலை என்பது ஆணாதிக்கச் சத்தியத்துக்குப் புறம்பானவையல்ல.

பெண் பொருளியல் பண்டம்தான் என்பதை அன்று முதல் இன்று வரை ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை நியாயப்படுத்தி, அமுல் செய்து வருகின்றது. அரிச்சந்திர மயானகாண்டம் எந்தக் கட்டத்திலும் சந்திரமதியை விற்றதைக் கண்டிக்கவில்லை. அதற்காகக் கேட்போர் கூட்டங்களில் சோகத்தை, கண்ணீரை வரவழைக்கவில்லை. மாறாக, இடையில் பறையனாகிய நிகழ்வை மட்டுமே சோகமாகக் கருதியது. வாழ்க்கை முழுவதையும் பார்ப்பனியம் கேவலப்படுத்தியுள்ள பறையனான அந்த மக்களை இட்டு ஒருக்காலும் கண்ணீர் வடித்ததில்லை. சத்தியம், ஜனநாயகம் என்பன ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையில் ஏற்படும் பாதிப்புகள் மீதே கோரப்பட்டன. இவைதான் எல்லா மார்க்சிய எதிர்ப்பு, ஆணாதிக்கக் கோட்பாட்டாளர்களின் சத்தியமாகவும், நீதியாகவும், ஜனநாயகமாகவும் உள்ளது. இது இன்றுவரை எதார்த்தமாகவும், வக்கிரமாகவும் உள்ளது.

இந்த இந்துப் புராணங்கள் இன்று மீண்டும் முன்னணிக்குக் கொண்டுவரப்படும் நிலையில், இராமனின் ஆணாதிக்கக் கற்பு நோக்கு சீதையை இழிவுபடுத்திய வக்கிரத்தைப் பார்ப்போம். ஒரு வண்ணான் சந்தேகப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இறை அவதாரமாகக் கருதப்படும் இந்து நாயகன் இராமன், தனது மனைவி சீதையை, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போதும் காட்டுக்குத் துரத்திவிட்டான். பெண்கள் தம் மீதான ஆணாதிக்கச் சந்தேகத்தை, சாதியச் சமூகத்தில் இழிவாக்கப்பட்ட சாதி, ஆண்களுக்கு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது சாதிப் பிளவைத் தாண்டி அடிநிலைச் சாதி ஆண்கள், உயர்சாதிப் பெண்களின் ஒழுக்கத்தின் மீது கேள்வி எழுப்பவும் கண்காணிக்கவும் உரிமை பெற்று இருப்பதை இது நிறுவுகின்றது. வண்ணானின் வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, இராமன் சீதை மீதான சந்தேகத்தைக் கொண்டு தண்டிக்கும் உரிமையை விளக்கமின்றி அமுல்படுத்த ஆணாதிக்க ஒழுக்கம் கோரியது, கோருகின்றது. இறை அவதாரம் பெற்ற இராமனாகப் புராணங்கள் புளுகிய போதும், இராவணன் இடம் இருந்து சீதையை மீட்டபோது, (முரண்பட்ட பல வரலாற்றுக் கதைகள் இருந்தபோதும்) சீதை தனது கற்பை நிலை நாட்ட தீ மிதித்து ஆணாதிக்க ஒழுக்கத்தை நிறுவ வேண்டி ஏற்பட்டது.

இன்று இராமன் பெயரில் நிகழும் படுகொலைகள், கற்பழிப்புகள்.... பின்னாலான ஆணாதிக்க ஒழுக்கத்தை, அன்றே சொந்த மனைவி மீது நடத்தப்பட்டதை, கற்பின் ஒழுக்கத்தின் பின் நியாயப்படுத்தப்பட்டது. இறைவன் என்று கூறப்படும் பார்ப்பனிய இந்துக் கடவுளான இராமன் ஒரு ஆணாதிக்கவாதியாகவும், சந்தேகத்தின் ஜென்மமாகவும் இருப்பதை, பெண்ணை நாயைப்போல் போடுதடியாக நடத்துவதை எப்படி ஜனநாயகவாதிகள் ஏற்றுக் கொள்ளமுடியும்;. இராம ஜென்ம பூமி சார்ந்த இந்து மதப் பார்ப்பன ஆட்சியாளர்களின் அதிகாரத்தில், இந்துச் சட்டக் கோவை உருவாக்கப்படின் பெண் பெற்று இருந்த உரிமைகள் எல்லாம் இராமன் பெயரால் அடக்கப்படும் என்பது தெட்டத்தெளிவானது.

பஞ்சபாண்டவர்களின் ஒரே மனைவியான திரௌபதி தனது ஐந்து புருசனுக்கு வெளியில் இன்னுமொரு ஆணை விரும்புவதாகக் கூறியபோது, இதை ஆணாதிக்கம் தமது விபச்சார நிலையில் நியாயப்படுத்தியது. இன்று பெண்ணியம் பேசும் ஆணாதிக்கப் பெண்ணியவாதிகள் பலதாரமுறையைத் தாமே எடுத்து நியாயப்படுத்துவதும், வாழ்வதும் இதன் போக்கில்தான். அதாவது சமுதாயத்தில் இருக்கக் கூடிய ஆணாதிக்கப் பலதாரமுறையை இப்பெண்ணியவாதிகள் தமக்கும் விரிவுபடுத்தும் பண்பாட்டில் ஆணாதிக்கமயமாகின்றனர்.

வரைமுறையற்ற ஆணாதிக்கப் புணர்ச்சியை ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் உண்டு என்ற கோரிக்கையின் பின், இது இன்று ஏகாதிபத்தியப் பண்பாடாகின்றது. அதாவது எல்லைகடந்த ஏகாதிபத்தியத் தலையீடு, கைப்பற்றல், அனுபவித்தலையே பெண் - ஆண் மீது செய்யும் ஆணாதிக்க உரிமை ஏகாதிபத்தியப் பெண்ணியமாகின்றது. இந்த வகையில் பெண் குடித்தல், புகைத்தல், பலதார விபச்சாரம் போன்ற ஆணாதிக்கக் கேடுகளில் இருந்து இரவல் வாங்கி உரிமையாகின்றாள். இதுபோன்ற கோரிக்கைகள் ஆணாதிக்கம் தனக்காக வைத்து இருப்பதும், நியாயப் படுத்துவதும், பெண்ணின் ஜனநாயகக் கோரிக்கையாகி விடுவதில்லை. மாறாக ஆணாதிக்கமயமாதலாகும். ஆணின் மனித விரோதச் செயல்களைப் பெண் இரவல் வாங்க முன்வைக்கும் பெண்ணியம் ஆணாதிக்கமாகும்;. இதற்கு எதிராக ஆணாதிக்க ஒழுக்கக் கேடுகளை எதிர்த்து பெண் போராட வேண்டுமே ஒழிய அதைக் கோரி போராடுவது கூடாது.

பெண்ணின் கற்பைப் போற்றும் இந்து தர்மக் கதைகளை ஒட்டி கண்ணகி பாண்டிய மன்னனிடம் கூறியவற்றைப் பார்ப்போம்.

1. காட்டுக்குச் சென்ற அழகிய பெண்ணை ஒருவன் உடலுறவு கொள்கின்றான். பின்னால் அந்த ஆண் அப்பெண்ணைத் தெரியாது என மறுக்கின்றான். பின்னால் இறைவனை வேண்டியபோது அவள் உறவு செய்த குடிசையும், அருகில் இருந்த மரமும் சாட்சி சொன்ன பின்பே அவளை அவன் ஏற்றுக்கொள்கின்றான். இதனால் இவள் பத்தினி.2. இரண்டு பெண்கள் ஆற்றங்கரையில் மண் பொம்மை செய்து விளையாடினர். ஒரு பெண்ணைப் பார்த்து, மணற் பொம்மையை அவள் கணவன் என்று மற்ற பெண் கூறியதால், அப்பொம்மையை வெள்ளம் அடிக்காது பாதுகாத்தாள். எனவே அவள் பத்தினி.3. கரிகாலச் சோழனுடைய மகளின் புருஷனை ஆற்றுவெள்ளம் அடித்துச் செல்ல, அவள் கடலிடம் முறையிட்டுத் திருப்பி பெற்றாள் என்பதால் பத்தினியாகின்றாள்.4. பெண் ஒருத்தியைக் கணவன் விட்டுச் சென்ற நிலையில் கல்லாகி கடற்கரையில் கணவனைப் பார்த்து கிடந்தாள். கணவன் வந்தவுடன் மீள உருவம் பெற்று வீடு வந்தாள். எனவே இவள் கற்புள்ள பத்தினியாகின்றாள்.5. பெண் ஒருத்தியை ஆண் விட்டுச் சென்ற நிலையில், வேறு ஒருவன் அவளை உற்றுப் பார்த்ததால், அவள் தன் முகத்தைக் குரங்கு முகமாக்கிக் கொண்டு வாழ்ந்தாள். கணவன் வந்த பின் அவள் பழையபடி மாறியதால் கற்புள்ள பத்தினியாகின்றாள்.6. ஒருத்தியின் மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழுந்துவிட, தன் குழந்தையையும் கிணற்றில் போட்டு, பின் வெளிவர வேண்டிப் பெற்றதால் இவள் கற்புள்ள பத்தினியாகின்றாள்.7. இரண்டு தோழிகள் விளையாடும்போது, நீ மகளும் நான் மகனும் பெற்றால் அவர்கள் இருவரும் கணவனும் மனைவியாக இருப்பர் எனக்கூறி விளையாடினராம்;. இதைப் பின் அப்பெண் தனது மகளிடம் கூற அவள் தோழியின் மகனுக்கு மனைவியானதால் கற்புள்ள பத்தினியாகின்றாள்.கற்பு பற்றி இந்த ஆணாதிக்கக் கூற்றுகளைக் கூறிய கண்ணகி, பாண்டியனை அழிக்கின்றாள். இவைகள் எதை எமக்கு விளக்குகின்றன. பெண் மீதான அன்றைய ஆணாதிக்கக் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகின்றன. இன்று இதன் போக்குகள் சில வேறுபாட்டுடன் இருப்பது காணமுடியும்.

இன்று ஒரு பெண்ணின் நம்பிக்கையை, காதலைப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி பின் கைவிடுவது எதார்த்தமாக உள்ளது. பெண் காதல் செய்யும்போது தற்காப்பு நிலையிலும், ஆண் தாக்குதல் நிலையிலும் எப்போதும் அணுகுகின்றனர். பெண்கள் மீதான ஆணின் பாலியல் நடத்தைகள் பெண்ணை அனுபவித்தபின் துப்பிவிடத் தயாரான தன்மையில் இருப்பதைப் பொதுவாகக் காணமுடியும்;. கருத்தரிப்பு ஏற்படாதவரை, இவை பகிரங்கமாகச் சமூகத்துக்குத் தெரியவராத வரை, இந்த உறவு சுதந்திரமாக நீடிக்கின்றது. கருத்தரிப்பு ஆணின் மறுப்புக்குச் சமுதாய அடையாளமாகின்றது. அதுவரை சுதந்திரமான காதல் என்பது, பாலியல் அனுபவிப்புவரை எல்லைப்படுகின்றது. இன்று கருஅழிப்பு என்பது இதனால் பெருகுவதும், ஆண் - பெண்ணை ஏமாற்றுவதும் காணமுடியும். பின்னால் ஏமாற்றியவனையே கட்டாயத்தின் பேரில் கட்டிவைப்பதும் நிகழ்வாக உள்ளது. இதுதான் கற்பழிப்புகளின் மீதான பொது வடிவமாக உள்ளது. இது மட்டும்தான் அப்பெண்ணின் நிம்மதியான சமூக அங்கீகாரமாகவும், திருமணமாகவும் இருக்கின்றது.

புராணங்கள் ஊடாகக் கற்பு பற்றிய ஆணாதிக்க ஒழுக்கவியல் கோட்பாடுகள் நடைமுறை வடிவமாக வரும்போது, மணற் பொம்மைகளும், நினைவுகளும் நிறைவேறாத கற்பனை வாழ்க்கைகளும் நிறைந்ததே பெண்களின் கண்ணீர் வாழ்க்கை. மணற் பொம்மைக்கே கணவனுக்குரிய அந்தஸ்தைக் கோரி பெண்ணை மண்டியிடவைத்த ஆணாதிக்கம், ஆணின் எல்லையில்லாத வக்கிரச் சுதந்திரத்தைப் பெண்மீது நிறுவியதை இது காட்டுகின்றது. இதையொட்டியே பெண் வழிபாட்டு முறைகள் கூட உருவாக்கப்பட்டன. அதாவது வெறும் கற்சிலைக்கு அர்த்தமற்ற கடவுள் விசுவாசத்தை எப்படி சமூகம் கொடுக்கிறதோ, அதையே கணவன் விடயத்தில் பெண்ணை அனுசரிக்கக் கோரியது. மணல், கல் என எதிலும் இதை விட்டுவைக்கவில்லை. இதற்கு இசைவாக ஆணாதிக்கப் பழமொழிகளையும் சமூகம் உருவாக்கிக் கொண்டது. "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று கூறியே பெண்ணை ஆணின் அடிமையாகச் சேவகம் செய்யும்படி நிர்ப்பந்தித்தது. பெண்ணின் பாலியல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திய சமூகம், பெண்ணின் உணர்வைத் தடுக்க, கல்லாலான கணவனைக் கூடக் கட்டியழ வைத்தது. குடும்பத்தின் அதிகாரம் பெண்ணின் சுதந்திரத்தை மறுக்கும் எல்லா நிலையிலும் பெண்ணுக்குப் போலியான பொம்மைக் கணவனையோ, வேறு மற்றோ (வழிபாடு.. போன்றன) பரிசளித்து, துயரத்தில் தள்ளிவிடுகிறது சமூகம்.

கணவனை இழந்த பெண் தனது வாழ்க்கையை, இயற்கை உணர்வுகளைச் சுதந்திரமாகத் தீர்க்கமுடியாத ஆணாதிக்கச் சமூகத்தில் பெண், கணவனை நினைத்து உருகக் கோரியது. அவன் வருவான் என்று காத்து இருக்க அல்லது அதை நினைத்து இலயித்திருக்க கோரியது. இல்லாது போனால், அப்பெண்ணின் அழகைச் சிதையவிட்டு வாழ அல்லது ஆணே, பெண்ணின் அழகைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி ஆணாதிக்க ஒழுக்கத்தை நிலைநிறுத்தினர். இதை நிலைநிறுத்த வீட்டில் பெண்ணைப் பூட்டி சிறைவைத்தனர் அல்லது காவலுக்கு ஆள் வைத்தனர். இதன் மீதான சந்தேகத்தைப் போக்க அடித்து நொறுக்கி மிதிப்பது ஒழுக்கக் காப்பாகியது. இப்படி அன்றும் சரி, இன்றும் சரி ஆணாதிக்க நிகழ்வுகள் எதார்த்தமாக நவீனப்பட்டு உள்ளது. அன்று ஒரு பெண்ணின் முகத்தைக் கணவன் அலங்கோலப்படுத்தியும், பெண்ணை வீட்டில் அடைத்துக் கல்லாக இருக்கச் செய்து அன்றும் சரி, இன்றும் சரி ஆணாதிக்கப் பாலியல் ஒழுக்கக் கோட்பாடு;கள் நிறுவப்பட்டன. ஆணின் இயல்பான சந்தேகக் குணம், பாலியலில் ஒருதலைபட்சமான ஆணின் நுகர்வு, பெண்ணை அதே நோக்கோடுச் சந்தேகிக்கின்றது. பெண் எப்படி மௌனமாகப் பாலியல் பூர்த்தியின்றி வாழமுடிகின்றது என்ற கேள்வி, ஆணின் சந்தேகத்தை நியாயப்படுத்துகின்றது. இதனால் பெண்ணை அலங்கோலப்படுத்துவது, துன்புறுத்துவது ஆணாதிக்கச் சந்தேகப் பண்பாடகின்றது.

பெண் எப்போதும் கல்லாகவும், குரங்காகவும் இருக்க மாற்றப்பட்டாள். அவளின் கடமைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. அதை மீறுவது குற்றமாகக் காணப்பட்டது. மாற்றாள் குழந்தை தவறி விழுந்து விட்டதால், கடமை தவறிய மனைவியாக இருப்பதைத் தடுக்க தன் குழந்தையையே அவள் கிணற்றில் போடும் அளவுக்குக் கடமை, கட்டுப்பாடு, கற்பு பெண்ணை மிரட்டியது. கடமையைச் செய்யாது என்ன செய்தாய்? யாருடன் குலவினாய்? என்ற சந்தேகங்களை எதிர் கொண்டதால், அவள் தன் குழந்தையையும் கொல்லத் துணிந்தாள், துணிகின்றாள்.

மறுதளத்தில் இன்று வரை நீடிக்கும் குழந்தைத் திருமணம் அன்று குழந்தை பிறக்கும் முன்பே தீர்மானகரமாகியது. இது பெண்ணின் கற்புக்கான எடுத்துக்காட்டுப் பண்பாடாக விளக்கியது. இன்று பெண்கள் கருவில் உள்ள குழந்தையைப் பெறுவது அல்லது அழிப்பது பெண்ணின் உரிமை என்ற ஆணாதிக்கப் பெண்ணியக் கோட்பாட்டைப் போல், அன்று பெண்கள் திருமணத்துக்கு முன்பே குழந்தை மீதான வாழ்க்கையை யாருடன் என்று, தீர்மானிக்கும் ஆணாதிக்க உரிமையைக் கொண்டு பெண் பண்பாட்டைக் கட்டிப் பாதுகாத்தாள். இன்று கருவில் வைத்தே குழந்தை உயிர் வாழ்வதைத் தீர்மானிக்க ஆணாதிக்கப் பெண் விரும்புகின்றாள். இதை இன்று பெண்ணின் உரிமை என்கின்றாள். அன்று அதைப் பண்பாடு, கலாச்சாரம் என்றாள். அன்று கருவுறும் முன்பே பிறக்க போகும் குழந்தை யாருடன் வாழ்வது என்பதைத் தீர்மானித்தாள். இதுதான் பத்தினி பெண்ணின் கற்புக் கோட்பாடாகும். இதுவே இன்று ஆணாதிக்கப் பெண்ணியமாகும்.

இன்று பெண்ணை இழுத்துச் செல்லும் அதிகார வர்க்கம் பெண்ணின் உடலை அனுபவிக்கச் சுதந்திரமாகின்றது. ஆணாதிக்கச் சுதந்திர, ஜனநாயகத்திடமிருந்து பெண்ணைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் வந்துவிடுவதில்லை. துரியோதனன்கள் உடுப்பைப் பிடுங்கியபோது எந்தக் கிருஷ்ணனும் வருவதில்லை. அவள் கற்பு இழந்தவளாகத் தூற்றப் படுகின்றாள். ஏனெனின் அவள், இந்தச் சுதந்திரமான சூறையாடும் தனிச் சொத்துரிமை சட்ட அமைப்பில் குற்றவாளி, எனவே, பெண்ணைக் கற்பழிக்கும் உரிமை அந்த ஆணாதிக்க வர்க்கத்தின் உரிமையாகும்;. இதுதான் இந்தச் சமூகத்தின், பத்தினியின் கற்புத்தனமாகும்;. இதையே கணவனும் ஏற்று, பெண்ணைச் சமூகத்திலிருந்து கேவலப்படுத்தி சித்ரவதை செய்கின்றான்.

இதற்கு மறுபுறத்தில், பெண்ணை உரிந்துவிடுவது பண்பாடாகின்றது. இந்த உரியும் நடத்தை புதிய கலையாகின்றது. விளம்பரங்கள் முதல் டிஸ்கோவரை பெண்ணின் உடுப்பைப் பிடுங்கி உரிவது, பெண்ணின் சுதந்திரத் தாகமாகின்றது. உதாரணமாகப் பெண்ணை, மலம் துடைக்கும் பேப்பர் மூலம் நிர்வணமான பெண்ணை, சுற்றிலும் கட்டற்ற சுதந்திரமான டிஸ்கோவில் நிறுத்தும்போது, சம்பையினின் உள்ளிருக்கும் காற்று அழுத்தத்தைக் கொண்டு பலர் சேர்ந்து மதுவினால்; பெண்ணை ஈரமாக்கி நிர்வாணமாக்கும் நவீன துரியோதனர்கள், கட்டற்ற, சுதந்திர நீதி மூலதனத்தை விரயமாக்க, புதிய மூலதனம் குவிகின்றது. உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் குவிக்கும் மூலதனத்தில், தனது பங்கை மூலதனத்துக்கு வெளியில் ஆணாதிக்க ஆபாசத்தைச் சுதந்திரமாகப் பொழுது போக்கும், சுதந்திரமாகக் கிறுக்குத்தனம் பண்ணும் பல ஆயிரம் மாடல்களாகப் பெண்ணை விபச்சார எல்லைக்குள் நிர்வாணப்படுத்துகின்றது. இது நவீனப் பண்பாடாக வருவதும், பெண்ணியம் இதற்குள் கோட்பாடாகச் சிதைவதையும் அவர்களின் கோரிக்கைகளை மேலும் நிர்வாணப்படுத்து கின்றது.

இன்று கற்பும் காதலும் தன்னளவில் விபச்சாரத்தைக் கோருகின்றது. சகுந்தலையின் தந்தையாகிய விசுவாமித்திரன் முனிவர்களுக்கே முனிவர். இந்த முனிவர் மேனகை மீது காதல் செய்கின்றார். இந்த மேனகை யார்? அவள் தெய்வக் கன்னிகை. தெய்வக் கன்னிகை என்பவர்கள் (தேவதாசிகள்) விபச்சாரிகள். விபச்சாரிகளுடன் உடல் உறவு கொண்ட முனி அதை நியாயப்படுத்த, அவர்கள் தவத்தைக் குழப்ப முயன்றதாகக் கூறியே தன்னை நியாயப்படுத்த முடிந்தது. இந்த முனியின் மகள் சகுந்தலையைத் துஷ்யந்தன் காதல் கொண்டு இச்சையைத் தீர்த்தான். இந்த இச்சைத் தீர்ந்தவுடன் அவனுக்கு அந்த உறவு மறந்து போய்விட்டதாம். எப்படி இருக்கிறது அந்தக்கால ஆளும் வர்க்கங்களினதும், கடவுள் எடுபிடிகளினதும்; ஒழுக்கம்? இந்த ஒழுக்கம் ஆணாதிக்கப் பாலியல் தேவைக்குச் சார்பாகக் கடவுளை உள்ளடக்கி, நியாயப்படுத்துகிறது. ஆண், பெண்ணை அனுபவிக்க காதல், மனைவி, விபச்சாரி என்று எத்தனை வடிவங்கள். அதேபோல் அனைத்தும் ஆணின் தேவையைப் பூர்த்தி செய்ய தெய்வக் கன்னிகைகளானாலும், பெண் பாலியல் நோக்கில் பயன்பாட்டுப் பொருள்தான்.

இதிலிருந்து வீட்டுவேலைக்காரிக்கும், விபச்சாரிக்கும் இடையில் உள்ள வேறுபாடு அனுசரிக்க கோருகின்றது, வழக்கில் உள்ள பழமொழி ஒன்று "காதல் கிழத்தி வாழ்க்கைக்கு உதவாள்", "வாழ்க்கைக் கிளத்தி காதலுக்கு உதவாள்" என்று கூறப்படும் விளக்கங்கள் ஆணின் பலதாரமணத்தை நியாயப்படுத்துகின்றன. இதேபோல் பெண்ணுக்கு ஆணாதிக்கம் உரிமை வழங்கிவிடவில்லை. அதாவது காதலுக்கு வாழ்க்கை மனைவி உதவாள் என்பதன் மூலம் அவளிடம் காதல் செய்ய எதுவுமில்லை. அவள் கணவனுக்கும் அவனைச் சுற்றியும் காதலுக்குப் பதில் வேலைக்காரியாக வாழ்கின்றாள் என்பதையே இப்பழமொழி நிறுவுகின்றது. கணவனின் உண்மையான காதலி அவனின் விபச்சாரி அல்லது வைப்பாட்டிதான் என்பதை நிறுவும்போது இருக்கும் இக்குடும்ப அமைப்பை எதற்குக் கட்டி அழவேண்டும்? பெண் வேலைக்காரியாக வாழக் கோருவதற்கு அப்பால் இருக்கும் இந்தக் குடும்பம் பெண்ணுக்கு வேறு எதையும் வழங்கி விடவில்லை.

அதேநேரம் வீட்டு வேலைக்காரியாகிய மனைவியை முன்நின்று கணவன் கூட்டிக் கொடுக்க ஆணாதிக்க இந்து தர்மம் கோருகின்றது. அதாவது கடவுளின் தொண்டர்களான பார்ப்பனர்கள், பக்தர்கள் இடம் கேட்டால், கேட்பதைக் கொடுக்கும்படி இந்து தர்மம் கோரியது. இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின் மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார். பெண்ணின் பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது பெண்டாட்டியை வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி, அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன். இதேபோல் ஆழ்வார் வீட்டில் ஒரு பக்தன் சாப்பாட்டுக்குப் போனார். உணவு சமைக்க உணவு இல்லாத நிலையில், கடையில் கடன் உதவி கேட்க, அவன் இவன் மனைவியைக் கேட்டான். இதற்கு அவன் பெண்டாட்டியைப் படுக்க விட்டு விருந்து வைத்தாராம்.

எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால் படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், பணக்காரக் கும்பல்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர். குழந்தை மருந்தின்றி உயிருக்குப் போராடும் போதோ, மருந்து வாங்கக் காசு இல்லாதபோதோ, வறுமையில் உணவுக்குக் கையேந்தும்போதோ, வேலை தேடிப் பெண் அலையும்போதோ, உயர் அதிகாரி பெண்ணின் உரிமையை மறுக்கும்போதோ .... படுக்கையில் பெண்ணின் உடலைப் பகிரங்கமாகவே கோருகின்றது, உலகமயமாதல் பண்பாடு. அன்று நிலப்பிரபுத்துவப் பக்திப் பண்பாடு, பக்தியால் பெண்ணைக் கூட்டிக் கொடுக்க கோரியது. அந்தளவுக்குப் பார்ப்பனியம் தனது சொந்தச் சதித்திட்டங்கள் மூலம் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் இருந்தபடி, பெண்ணை அனுபவித்ததை இறைப்பக்தியின் பின் நிகழ்த்தியது. பெண் தனது சொந்தக் கருத்தை விட ஆணின் பண்டமாக, அவனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு ஜந்துவாக, வாழ்ந்ததைக் காட்டுகின்றது, காட்டுகின்றன. இது இன்று பணத்துக்கு முன்னால், பெண் தொடர்ந்தும், ஆணின் பண்டமாகத் தொடர்வது பெண்ணின் வரலாறாக உள்ளது.

ஆண் பலதார மணத்தில் சுகித்திருக்க பெண்ணை அடிமையாக்கினான். இறை புருஷனாகக் கருதப்படும் இராமனின் அப்பன் தசரதன, 60,000 மனைவிகளைக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. இதுபோல் கிருஷ்ணன் ஆயிரக்கணக்கான கோபிகளுடன்; இருந்ததை இன்றும் வெட்கமின்றி, ரோஷமின்றி இரசித்துக் கேட்கின்றோம். இளம் கன்னிகள் தசரதன், கிருஷ்ணன் போன்றோர் முன் நடமாட முடியாத அளவுக்கு அவர்கள் மோசமான ஆணாதிக்க வெறியர்களாகத் திரிந்தனர். பெண்களைத் தமது அந்தப்புரத்தில் சிறைவைத்து, வக்கிரங்களை அரங்கேற்றிய வரலாற்றுப் போக்கில் தான் பெண்கள் தமக்குள்ளும், ஆண்கள் தமக்குள்ளும் இயற்கைக்குப் புறம்பான பாலியல் நடத்தையை, ஆணாதிக்க வழியில் கையாண்டதன் மூலம் அவர்கள் தமது பாலியல் உணர்ச்சியைத் தீர்த்தனர்.

பெண்கள், ஆண்கள் பால் வேறுபாடின்றி ஆணாதிக்க ஒடுக்கமுறையால் தமது பாலியல் தேவையை ஒருதார மணத்தில் பூர்த்தி செய்யமுடியாது போன நிலையில், கூட்டமாக ஆண் - பெண் தனித்து விடப்பட்ட நிலையில் ஓரினச் சேர்க்கை அவர்களின் தவிர்க்கமுடியாத ஆணாதிக்க நிலையாகியது.இயற்கையின் பாலியல் தீர்வை மறுத்து, ஆணாதிக்கச் சமுதாயத்துக்கேயுரிய பாலியல் தீர்வை, மனிதனின் பாலியல் வரலாறாகக் கொள்ளும் எல்லா நிலையிலும் ஓரினச் சேர்க்கை அங்கீகாரத்தைக் கொடுக்கின்றது. இன்று கிடைக்கும் அங்கீகாரமும் போராட்டமும் இயற்கையின் பாலியல் தேர்வில் இருந்து அல்ல, மாறாகச் செயற்;கையான ஆணாதிக்கப் பாலியல் விளைவால், அதற்குள் கோரப்படுபவைதான். இது மனித வரலாற்றை இயற்கையின் வரலாற்றுக்குப் பதில் பூமியின் வரலாறாக இன்று காட்டுவதற்கு ஒப்பானது. அதாவது இயற்கையின் அனைத்தையும் உள்ளடக்கிய வரலாற்றை மறுத்து, மனிதனின் மிகக்குறுகிய வரலாறை இயற்கை வரலாறு ஆக்கிய தனிச் சொத்துரிமைபோல், ஆணாதிக்கப் பாலியல் வரலாறு இயற்கையை மறுத்த பாலியலில் கோருகின்றது. இது ஓரினச் சேர்க்கை முதல் கூட்டுக் கலவிவரை அனைத்தையும் மனிதனின் இயற்கை வரலாறாக மாற்றக் கோருகின்றது. பெண்ணின் போராட்டத்தை ஆணாதிக்கம் இதற்குள் வரையறுக்கின்றது. இதைத்தான் தீவிரவாதமாகக் காட்ட முயல்கின்றது. இதை ஜனநாயகமாக, தனிமனிதச் சுதந்திரமாக இயற்கையை மறுத்து நிறுவமுயல்கின்றது. தனிச் சொத்துரிமையின் தனிமனித ஜனநாயகம், அனைத்து சமூகத்தின் பொதுஇயக்கமாக உள்ள நிலையில், இது அங்கீகாரத்தை எதிர்ப்பின்றி அராஜக வழியில் பெறுகின்றது, கோருகின்றது.

பெண்கள் மீது பெற்றோரால் கையாளப்படும் ஆணாதிக்க அதிகாரம் என்பது, மிருகப் பண்ணைகளை வைத்திருந்த கடந்தகால, நிகழ்கால மனித வரலாற்று வடிவத்துக்கு ஒப்பானது. இந்தப் பண்ணை வளர்ப்பு முறையினால், பெண்களுக்கு இடையில் தவிர்க்கமுடியாத, இயற்கைக்குப் புறம்பான பாலியல் நடத்தைகள் வளர்ச்சிபெற்றன. இதுபோல் நிரந்தர இராணுவங்கள், கட்டாய உழைப்பு, சிறைகள் ஆண்களின் புதியவகையிலான பாலியல் நடத்தையைக் கோரியது. இதைவிட ஆண் - பெண்ணுக் கிடையிலான பாலியல் நெருக்கடிகள், இயல்பான புறத் தடைகள், அகத்தடைகள் போன்றன, மேலும் இயற்கையை மறுத்த புணர்ச்சி வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அடைக்கலமாவது சமூக விளைவாகியது. இது சமூகத்தில் காணப்படும் ஆண் - பெண் பிளவுக்குள், மேலும் பாலியல் நடத்தைகளைத் தீவிரமாக, புதியவடிவில், புதிதானவற்றை இந்தச் சமூகப் பொருளாதார, வர்க்க, பண்பாட்டு எல்லைக்குள் தோற்றுவித்தது.

பெண்ணுக்கு ஒருதாரமணம் நிபந்தனையாக மாற்றப்பட்ட நிலையில், பெண் சந்தித்த பாலியல் நெருக்கடிக்குத் தீர்வு மறுக்கப்பட்டது. விவாகரத்து, சுயமான தெரிவு, கற்புக் கோட்பாடுகள் போன்றனவற்றைப் பெண்ணுக்கு மறுத்து, ஒருதார மணத்தை வன்முறையாக ஆணாதிக்கம் திணித்தது. இங்கும் இயற்கைக்குப் புறம்பான பாலியல் தேர்வு, பெண்ணுக்கு மட்டும் திணிக்கப்பட்ட ஒருதாரமணத்தின் விளைவாக இருந்தது. ஆணுக்குப் பலதாரமணத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம், இயற்கையைச் சார்ந்து மட்டும் பாலியலைத் தேர்ந்துவிடவில்லை. மாறாகச் சமுதாயத்தைப் பெண் உள்ளடக்கி, அடக்கியாள இருந்த நிபந்தனைகள், அவனுக்கு இயற்கைக்குப் புறம்பான பாலியல் தேர்வை விதியாக்கியது.

இந்து சமயத்தில் முருகன் போன்ற கடவுள்கள் இரண்டு பெண்டாட்டிக்காரனாக இருப்பதை இன்று வரை மறுக்காத சமூகம், பெண்ணுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இது எதார்த்த மனித வாழ்வில் வெட்டுமுகப் பக்கங்களாக இன்று உள்ளது. அதேநேரம் கற்பு கோட்பாடுகள் பணப் பலத்தை ஒட்டி மாறுதல் அடைகின்றன. வழக்கில் உள்ள ஒரு கூற்று ஒன்று, "பத்து பணத்துக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை" என்றும், இடம் கிடைத்தால் எந்தப் பெண்ணும் பதிவிரதையாய் இருக்க முடியாதென்றும்"32 தர்மச் சாத்திரம் கூறுகின்றது. இயற்கையில் ஆண் - பெண்ணின் விருப்பங்கள், தேர்வுகள் இந்தச் சமூகத்தின் எல்லைக்குள், அதன் ஆதிக்கத்துக்குள் இருப்பவைதான். இப்போது இருக்கும் ஒழுக்கம் அதன் முரண்பட்ட ஜனநாயக விரோதத் தன்மையால் ஒழுக்கக்கேட்டைக் கொண்டது. இதனுடன் மற்றைய ஒழுக்கமான தனிச்சொத்துரிமையைப் பாதுகாக்கும் பணம், நிபந்தனையின்றி ஒழுக்கக்கேட்டைக் கொண்டது. இரண்டு ஒழுக்கக்கேடுகள் பற்றி ஏங்கெல்ஸ் கூறியது போல், அதாவது கணிதத்தில் இரண்டு எதிர்மறைகளின் பெருக்கம் நேராவதுபோல், இரண்டு ஒழுக்கக்கேடுகள் ஒழுக்கமாகின்றன.

பணமும், ஜனநாயக விரோதமும் ஒன்று சேர்ந்த எல்லாப் போக்கிலும் அவை மறு ஒழுக்கமாகப் புதுவிளக்கம் காண்கின்றன. வரலாறு முழுக்க ஒழுக்கக்கேடுகள் தொடர்ச்சியாக நேராகி ஒழுக்கமாக வந்த நிலையில்தான், பணமும், ஜனநாயக விரோதமும் புதிய ஒழுக்கமாகின்றது. இன்று வரலாற்றில், பணத்தின் வலிமை மரபான நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஒழுக்கத்தைத் தகர்த்துள்ளது. முதலாளித்துவத்தைத் தொடர்ந்து ஏகாதிபத்திய வளர்ச்சியில், பணமும் தனிச்சொத்துரிமையின் தனிமனித ஜனநாயகத்தின் ஒழுக்கமும் சமூகத்துக்கான எதிர்மறை ஒழுக்கக் கேடாக உள்ள அதேநேரம், இவை இரண்டும் இணைந்து நேராகி புதிய ஒழுக்கப் பண்பாட்டை உருவாக்கின்றன. இந்த ஒழுக்கக்கேடு ஆண், பெண்ணை விடுவித்ததாக, தனிச் சொத்துரிமையின் ஜனநாயகத்தால் பூசி மெழுகப்பட்டபோது, இதைப் பெண்ணியமாக முன்வைப்பதும், கோருவதும் அதிகரிக்கின்றது.

இந்தப்போக்கு கடந்த நிலப்பிரபுத்துவ வரலாற்றில் பணத்தை வைத்திருந்தவர்களின் அந்தரங்கமான, அந்தப்புர நடத்தையின் ஒழுக்கமாக இருந்தது. பணம் கற்பை அந்தப்புரத்தில் இல்லாததாக்கியது. ஆனால், சமூகத்தில் அது கற்பாகவே நீடித்தது. இன்று அந்தப் பணம் கற்பைச் சமூகத்தளத்தில் மறுதலிக்கின்றது. பணத்தின் சுதந்திர எல்லை விரிவடைகின்ற போது அதற்கே உரியவகையில், அதற்கு உட்பட்ட சமூக நடத்தையைச் சுதந்திரமாக மாற்றுகின்றது. இந்த மாற்றம் சமூகத்தின் சுதந்திரமல்ல. மாறாகப் பணத்தின் சுதந்திரமாகின்றது. இதை வைத்திருப்பவனின் சுதந்திரமாக எல்லைப்படுகின்றது. இதைப்பாதுகாக்க, இதைச் சமூகச் சுதந்திரம் என்று திரிக்கப்படுகின்றது. இது பெண்ணின் கற்பை மறுக்கின்றது. பெண் பணத்தின் முன் வெறும் பண்டம் தான் என்பதாக இனம் காட்டுகின்றது. அதாவது மனித உழைப்பை இயந்திரங்கள் தனது பாகத்தின் ஒரு உறுப்பாக்கியது போல், பணம் பெண்ணின் நிலையைத் தனக்குள் ஆணாதிக்கம் சார்ந்த அங்கமாக்கியது. பெண் சுதந்திரமாகப் பாலியலில், விபச்சாரத்தில் ஈடுபட, மூலதனம் தனது இரகசியத் தளத்தில் இருந்து இன்று பகிரங்கத் தளத்தில் பண்பாடாகின்றது.

மனித உழைப்பு இயந்திரத்தின் முன் சமூக மதிப்பிழந்து, உதிரிப்பாகமாகிச் சீரழிந்த வரலாறு போல், தனிச்சொத்துரிமையின் உச்சத்தில் உருவான அதன் சுதந்திரத்தில், பாலியல் விபச்சாரத்தைப் பொது அங்கமாக்கி வருகின்றது. பெண் முன்பை விட தனிச்சொத்துரிமையின் ஆதிக்கச் சுதந்திரத்தில் மேலும் மதிப்பிழந்து போனாள், போகின்றாள். இந்துதர்மம் தனது ஏகாதிபத்திய விசுவாசக் கைக்கூலித்தனத்தில், இராணுவ ஒழுங்கமைப்புக்குள் விபச்சாரத்தைத் தீவிரமாக்க மத அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி அதனூடாக ஒழுக்கமாக்குகின்றனர்.