தமிழ் அரங்கம்

Saturday, July 5, 2008

அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

டேஜியான் சிறைச்சாலையின் முன்னாள் சிறைக் காவலரான லீ ஜூன்யங், ""கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார்கள் என்ற ஒரே குற்றத்துக்காக அப்பாவி மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்'' என்றும், ""பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பல்லாயிரக்கணக்கில் தென்கொரிய பாசிச இராணுவத்தால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர்'' என்றும் இந்த ஆணையத்தில் சாட்சியமளித்துள்ளார். கிம்மான்சிக் என்ற முன்னாள் தென்கொரிய இராணுவ அதிகாரி, அரசியல் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கைகளை பின்புறமாக மடித்து இரும்புக் கம்பியால் அனைவரையும் பிணைத்து சுட்டுக் கொன்ற கொடூரத்தை, தற்போது மனசாட்சிக்குப் பயந்து சாட்சியம் கூறியிருக்கிறார்... .. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, July 4, 2008

தமிழ் எம்.ஏ:படம் குறித்த விமர்சனம்

பிரபாகரின் தற்கொலைக்குத் தூண்டுதல் எது? போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியோடு அமர வைத்த பின்னரும் எப்படி உயிரோடு இருப்பது என்கிற சிந்தனை. சற்று நேரத்திற்கு முன்பாகத்தான். மாணவர்களுக்கு ‘மானம்; நீப்பின்’ எனும் குறளை விளக்கியிருந்தான்.

சேச்சியின் மீதான போலீஸ்காரனின் காமம் தான் பிரபாகர் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கான அடிப்படை. ஆனால் இது பிரபாகருக்குக் கடைசிவரை தெரியாது. பொது இடத்தில் சிகரெட் பிடித்தல் என்கிற செயலைத் தவறாக தன்மீது சுமத்தி போலீஸ் தன்னை அவமானப் படுத்தியது என்றுதான் பிரபாகர் நினைத்துக் கொண்டிருக்கிறான். படத்தின் இறுதியில் தான் இப்படியானதற்கு; காரணம் இவன் தான் என்று போலீசைப் போட்டுத் தள்ளும் பிரபாகருக்கு போலீஸ் ஏன் அப்படி நடந்து கொண்டது என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

பிரபாகருக்கு போலீஸ் சந்திர சேகரின் காமக் கொழுப்புதான் அடிப்படை. ஆனால் அதுவும் இல்லாமலும் போலீசால் அவமானப் படுத்தப்படுபவர்கள் அவமானப் படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், திமிர்தான். அந்தத் திமிருக்கும் காரணம் உண்டு அது, சட்ட பூர்வமான ரௌடிக் கும்பல் என்பது தான். இந்தத் திமிர் அந்தத் துறைக்கு ஊட்டி வளர்க்கப் படுகிறது. ஆக அடிப்படை போலீஸ்திமிர்.
... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும் ...கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, July 3, 2008

நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் தோழர் பாபுராம் பட்டாரய் அளித்த பேட்டி

நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (ஙிOகீகூஊM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்

நேபாளம்: வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்

நேபாளப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்திய மாவோயிஸ்டுகள், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வெற்றியோடு சுயதிருப்தி அடைந்து முடங்கி விடவில்லை. இடைக்கால அரசில் பங்கேற்று முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி விட முடியும் என்று அவர்கள் கனவு காணவுமில்லை. ஒருபுறம், இடைக்கால அரசில் பங்கேற்று ஜனநாயகக் குடியரசை நிறுவ மேலிருந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள், மறுபுறம் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து கீழிருந்தும் நிர்பந்தம் கொடுத்து புரட்சியைத் தொடர்கிறார்கள்.

நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் குடும்பம் அரண்மனையிலிருந்து வெளியேறி சாதாரணக் குடிமகனாக வாழவேண்டும் என்று மேலிருந்து சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவர் தானாக வெளியேறிவிடவில்லை. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் தொடர்ந்த பின்னரே, மன்னர் குடும்பம் மூட்டை முடிச்சுகளோடு அரண்மனையை விட்டு வெளியேறியது. மேலிருந்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களும் நிர்பந்தங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இது எடுப்பாக உணர்த்துகிறது.

தற்போது, இடைக்கால அரசை நிறுவுவதிலும் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன; மாவோயிஸ்டுகளுக்கு இதர அரசியல் கட்சிகள் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு முடக்கத் துடிக்கின்றன; முந்தைய அரசின் பிரதமரான கொய்ராலா, பதவி விலக மறுக்கிறார். இவற்றையும், புதிய முற்போக்கான சட்டங்கள் இயற்றுவதையும் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் நிர்பந்தங்கள் மூலமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி ஜனநாயகக் குடியரசை நிறுவ முடியும் என்பதையே நேபாள நிலைமைகள் படிப்பினையாக உணர்த்துகின்றன.

புரட்சியின் வளர்ச்சிப் போக்கில், இடைக்கால அரசில் பங்கேற்று மேலிருந்து போராடுவது என்ற மார்க்சியலெனினிய போர்த்தந்திர உத்தியை நேபாளத்தின் பருண்மையான நிலைமைக்கேற்ப செயல்படுத்தி வெற்றியைச் சாதித்துள்ள மாவோயிஸ்டுகள், அப்போர்த்தந்திர உத்தியின் வழியில் கீழிருந்தும் மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (ஙிOகீகூஊM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனித இன வரலாற்று ஆய்வாளர்களான ஸ்டீபன் மைக்செல், மேரி டெஸ் செனே ஆகியோருக்கு அவர் அளித்த பேட்டி, இவ்வானொலியில் மே 4ஆம் தேதியன்று ஒலிபரப்பானது. இப்பேட்டி ""எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில வார இதழிலும் (மே 1016, 2008) வெளிவந்துள்ளது. மிக விரிவான இந்தப் பேட்டியைச் சுருக்கி சாரத்தை மட்டும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
— ஆசிரியர் குழு

* இம் மே நாளில் தொழிலாளர்களுக்கு உங்கள் கட்சி விடுத்துள்ள செய்தி என்ன? நேபாளத்தில் நாங்கள் முற்றிலும் சொந்தக் காலில் நின்று போராடி புரட்சியின் வெற்றியைச் சாதித்துள்ளோம். அதேசமயம், நாங்கள் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஏராளம். நேபாள பிற்போக்குவாதிகள் வரலாற்று அரங்கிலிருந்து வெகு எளிதில் விலகவிட மாட்டார்கள். அவர்கள் கடும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்கவே செய்வர். எனவே இந்தச் சவாலை நாங்கள் பாரதூரமானதாகக் கருதிச் செயல்பட வேண்டியுள்ளது. தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.

அடுத்து, நாங்கள் ஒரு புதிய நேபாளத்தை உருவாக்க வேண்டும். சமாதானம், ஐக்கியம், முன்னேற்றத்தைக் கொண்ட ஒரு புதிய தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை வீழ்த்தி,... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, July 2, 2008

மக்கள் போராட்டம் என்றால் என்ன?

இது பிரதான முரண்பாட்டில் மட்டும் தனித்து இயங்குவதில்லை. மாறாக சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடும், பிரதான முரண்பாட்டுடன் முழுமை தழுவியதாகவே இயங்குகின்றது. உதாரணமாக இனம், சாதி, வர்க்கம் என எந்த முரண்பாட்டிலும் ஒன்று எப்போதும் முன்னிலை பெற்ற போதும், மக்கள் இயக்கம் என்பது அந்த ஒன்றுக்குள் மட்டும் குறுகிவிடுவதில்லை.

ஒரு முரண்பாடு சார்ந்து ஒரு குறுகிய எல்லையில் போராட்டம் குறுகும் போது, அது இயல்பாகவே வறட்டுத்தனமாக மாறிவிடுகின்றது. இதனால் மக்களிடையே நிலவும் அனைத்தும் தழுவிய பன்முக முரண்பாடுகளை எதிராக பார்க்கின்ற அதேநேரம், அதை ஒடுக்குகின்ற போக்கும் வளர்ச்சியுறுகின்றது. உண்மையில் இந்த குறுகிய வரட்டுத்தனமான தன்மை என்பது, பிரதான முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய வகையில் பார்ப்பதை படிப்படியாக மறுத்துவிடுகின்றது.

பிரதான முரண்பாட்டை சுரண்டுகின்ற வர்க்கம் தலைமை தாங்குகின்ற நிலை உருவாகும் போது, அதுவே முற்றாகவே மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகின்றது. இதனால் பிரதான முரண்பாடு சுயநலம் சார்ந்து, அது சுரண்டும் வர்க்கத்தின் அற்ப தேவைகளை ப+ர்த்திசெய்யும் ஒரு முரண்பாடாக சீரழிகின்றது.

இந்த மக்கள் விரோத அரசியலை விமர்சிக்க மறுப்பவர்கள், இதற்குள் வம்பளப்பதன் மூலம் அரசியல் இழிதனத்தை கொண்டு பிழைக்கின்ற சுரண்டும் வர்க்கத்தினராகி விடுகின்றனர்.

பாராளுமன்ற அரசியல் கட்சிகள் முதல் பாராளுமன்றம் செல்லாத இயக்கங்கள் வரை, சுரண்டும் வர்க்க நலனை பேணுவதில் உள்ள வர்க்க ஒற்றுமையை நாம் காணமுடியும். அவர்கள் மக்களின் வாழ்வியல் அவலத்தை உருவாக்கி, அதன் மூலம் தாம் மட்டும் பிழைத்துக் கொள்கின்றனர்.

இந்த வகையில் ஒரு இலட்சம் மக்களை பலியிட்ட தமிழீழப் போராட்டத்தை எடுப்போம். இப் போராட்டம் 25000 பேரை விடுதலையின் பெயரிலும், 10000 பேரை துரோகியின் பெயரிலும் கொன்று குவித்துள்ளது. பல பத்தாயிரம் விதைவைகளை உற்பத்தி செய்துள்ளது. சில... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கையேந்தி வல்லரசுக்கு கையேந்திபவன் இழுக்காம்!

டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல, ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் அழகுபடுத்தப்படும் உலகப் பெருநகரம். உலகமய விளம்பரதாரர்கள் ""உலகமயம் என்பது உலக யதார்த்தம், அது வந்தே தீரும். நமது சொந்த விருப்பத்தினால் வருவதும் போவதும் அல்ல'', என்று சொல்கிறார்கள். அதாவது அந்த எடுபிடிகளின் டெல்லி மாநகரத்தில், ஒரு பொது விடுதியில் லெபனான் சமையல் மணக்கிறது; ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நவீன இசை கதறுகிறது; உள்ளே ஐரீஷ் நாட்டுப் பீப்பாய்களிலிருந்து சாராய மழை பொழிகிறது; மேட்டுக்குடி பள்ளிக்கூடத் திடலில் ஏதோ ஒரு ஆங்கில இசை நாட்டிய நாடகத்துக்கான அறிவிப்பு விளம்பரத் தட்டியாகக் கண்ணைப் பறிக்கிறது. சுருக்கமாக, அரசியல் வியாபாரம் உடல்நலம் கேளிக்கை பொழுது போக்கு என்று அனைத்துத் துறைகளும் உலகமய முத்திரையோடு உருமாறி டெல்லியில் உலாவுகின்றன. நமது டெல்லி நகரத்தை அவர்களின் ஆட்சி மெல்ல மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கிறது.

மேட்டுக்குடிகளின் சொர்க்கபுரியாக மாற்றப்படும் டெல்லி நகரத்தில் அந்த மாற்றத்துக்காக உழைத்து உருக்குலையும் சாதாரண மக்களுக்கு இடமில்லை. அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன.

· சுற்றுச்சூழலுக்கு நல்லது என்ற பெயரில் ஆட்டோ, டாக்சி, பேருந்து எல்லாமே எரிவாயு மூலம் ஓட்டவேண்டும். மற்ற வாகனங்கள் தடை செய்யப்படும்.

· மூன்று சக்கர வண்டிகள், மீன்பாடி வண்டிகள், பார வண்டிகள், மாடுகுதிரை வண்டிகள் நகர்ச்சாலைகளில் ஓடக்கூடாது.

· குடியிருப்புப் பகுதிகளில் கடைகளே இருக்கக்கூடாது. நடுத்தர வியாபாரிகளின் கடைகளுக்குப் பூட்டு போட்டுச் சீல் வைத்தார்கள்.

· குடிசைப் பகுதிகள் ஒட்டு மொத்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டருக்கு வெளியே அள்ளி வீசப்பட்டன.

— இவை அத்தனையும் உச்சநீதிமன்ற ஆணைகளாக வெளிவந்து மக்கள் மீது திணிக்கப்பட்டவை.

இந்த அடக்குமுறை ஆணைகளில் கடைசியாக வந்திருப்பது, தெருவோர சாப்பாட்டுக்... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, July 1, 2008

புலியிசத்தை யாராலும் இனி காப்பாற்ற முடியாது.

புலி தான் விரும்பினாலும் கூட, தனது சொந்த புலிப்பாசிச முகத்தை மூடிமறைக்கவே முடியாது. அண்மைக் காலமாக மீளவும் புலிகளின் பாசிச அரசியலை ஓதத் துவங்கிய யோகி,


தனது வானொலிப் பேட்டி ஒன்றில் 'தமிழகம் உட்பட புலம்பெயர் நாடுகளில் பரப்புரைப் பணிகள் - தடைகளுக்கு முகம் கொடுப்பது எப்படி?" என்று புலம்பியுள்ளார். புலிகள் சந்திக்கும் தொடர் நெருக்கடிகளில் இருந்து மீளும் நப்பாசை, இதில் பிரதிபலிக்கின்றது. இதனால் அனைத்து புலி ஊடகங்களும், இதனை முதன்மை கொடுத்து பிரசுரித்துள்ளனர்.

ஆனால் நிலைமை என்ன? மக்களுக்கு எதிரானவர்களை, மக்களே தோற்கடிக்கின்றனர். இதுதான் நடக்கின்றது. இதனைக் கூட புலிகளால் உணர முடியாதளவுக்கு, புலியிசம் பிரபானிசமாகி எங்கும் எதிலும் புளுக்கின்றது.

இப்படி புலியிசம் தனக்குள்ளாகவே, அழுகி நாறுகின்றது. மறுபக்கத்தில் மக்களே தமது சொந்த வரலாற்றுப் போக்கை தீர்மானிக்கின்றார்கள். இந்த வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிணநாற்றத்துடன் கூடிய சொந்த மரணத்தை கண்டு, புலிகள் உளறத் தொடங்குகின்றனர். தனது புலியிசத்தை தாமே வலிந்து நடுச் சந்தியில் நிறுத்திவிட்டு, மூச்சிரைக்க அலம்புகின்றனர்.

புலிகள் தாமே வலிந்து உருவாக்கிய இந்த புலியிச நெருக்கடிகளை களைவதற்கு, புலியிசம் முனையவில்லை. மாறாக அதை பாதுகாக்க, புறநிலை மாற்றத்தைப் பற்றி கனவு காண்கின்றனர். தமது எதிர்கால மரணத்தை, புறநிலை மாற்றம் தடுக்கும் என்ற சுயநம்பிககையை கனவாக காண்கின்றனர். அதை நிகழ்காலத்தில் சொல்லி, ஒப்பாரியாகவே புலம்புகின்றனர்.

புலிகள் தொடர்ச்சியாக சந்திக்கின்ற அரசியல் இராணுவ நெருக்கடிகள், அகநிலை சார்ந்ததே ஒழிய புறநிலை சார்ந்ததல்ல. அகநிலையில் மாற்றமின்றி, புற நிலையில் எந்த மாற்றமும் நிகழாது. இந்த அரசியல் உண்மையை மறுக்கும் புலி யோகி, புறநிலை மீது அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு ஒடக் கோருகின்றார். அக நிலையை பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனை தான், இதில் உள்ள வேடிக்கை. இப்படி வித்தை காட்டி, முக்கி முனங்கியாவது ஈன வேண்டும் என்கின்றார். தாய் மரணித்தாலும், முண்டத்தை ஈனுவது முக்கியம் என்கின்றார்.

போராட்டத்தின் பெயரில் ஆயிரம் ஆயிரம் மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு, புலியிசத்தை அனைத்தையும் தூக்கிவைத்து வேடிக்கை காட்டமுனைகின்றனர். பாவம் யோகி, தானே தனக்கு ஊதி, தானே ஆடும் நம்பிக்கை. அதை அவர் கூறும் விதம் தான் நகைச்சுவையானது. 'அதனை வழிநடத்துகின்ற தலைவரிடம் உண்டு." என்கின்றார். அனைத்தையும் தலைவரின் மீது பொறுப்பாய்ப் போட்டுவிட்டு, மறுபடியும் தப்பி ஒடிவிடுகின்றார். ஒரு அரசியல் வழி,... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அரசின் முற்றுகை தூள்! தூள்!!

கனிம வளம் பொருந்திய, கடற்கரையோரம் உள்ள அந்த இடத்தில், தனது திட்டத்தை செயல்படுத்தினால், சுமார் 6 கோடி டன் இரும்புத் தாதை, தங்களது துறைமுகம் வழியாகவே மிக எளிதில் கொண்டு சென்று விடலாம்; உலகச் சந்தையில் ஒரு டன் இரும்புத் தாதின் விலை 7000 ரூபாய்க்கும் அதிகமென்றாலும், அதனை எடுப்பதற்கான செலவு வெறும் 400600 ரூபாய் மட்டுமே; இதற்கான உரிமைத் தொகையாக இந்திய அரசுக்கு டன்னுக்கு வெறும் 25 ரூபாய் தந்தால் போதும். மொத்தத்தில், வெறும் 48,000 கோடி ரூபாய் மூலதனத்தைப் போட்டுவிட்டு, 4.5 லட்சம் கோடி ரூபாய் பெறுமான இரும்புத் தாதை அள்ளிக் கொண்டு சென்றுவிடலாம் என்று போஸ்கோ நிறுவனத்தினர் கணக்குப் போட்டுக் காத்திருக்கின்றனர்.

படிப்பறிவில்லாத மலைவாழ் மக்களை அங்கிருந்து எளிதில் துரத்திவிடலாம் என்று ஆரம்பத்தில் அரசும், போஸ்கோவும் நினைத்தன. ஆனால், மக்கள் தங்களது நிலங்களையும், காடுகளையும் அந்நியரிடமிருந்து காக்கத் தங்களது உயிரைக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு மெதுவாக உறைக்க ஆரம்பித்தது. கடந்த 2006ஆம் ஆண்டு கலிங்கா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 ஆதிவாசிகள் கொல்லப்பட்ட பிறகும், தொய்வின்றி நடந்து வரும் போர்க்குணம் மிக்க போராட்டங்கள், பட்னா கிராம மக்களை, அவர்களது பூமியில் இருந்து அப்புறப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தியது.

அரசின் அடக்குமுறை ஒருபுறமி ருக்க, போஸ்கோவின் ஆலை வந்தால், உள்ளூரைச் சேர்ந்த 13,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அரசும், போஸ்கோவும் ஆசை வார்த்தை காட்டியதையெல்லாம் கேட்டு பட்னா கிராம மக்கள் மயங்கிப் போய்விடவில்லை. இதனால், போலீசின் அடக்குமுறை யைத் தீவிரப்படுத்தி, பட்னா கிராம மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என போஸ்கோ நிர்வாகம், மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்தது.
இதனையடுத்து, எதிரி நாட்டை ஆக்கிரமிப்பது போல, ஒரிசா மாநில போலீசார் பட்னா கிராமத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். பட்னா .... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, June 30, 2008

கருத்துரிமைக்குக் கல்லறை

கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் (மே 14, 2007) குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் அனைத்திந்திய துணைத் தலைவரும், (சட்டீஸ்கர்) மாநிலச் செயலாளருமான பினாயக் சென், இதே சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம் (பு.ஜ. ஜூலை 2007 - சத்தீஸ்கர்: 'நீ எங்களோடு இல்லையென்றால் நீ தீவிரவாதியோடு இருக்கிறாய்!" அரசு பயங்கரவாதம் விடுக்கும் எச்சரிக்கை ). சர்வதேசப் புகழ் பெற்ற குழந்தை மருத்துவ நிபுணரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னுக்குப் பிணையும் மறுக்கப்பட்டு, அவர் கடந்த ஓராண்டாகவே சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்திய அரசு, பினாயக் சென்னைப் பயங்கரவாதக் குற்றவாளியாகச் சித்தரித்தாலும் அமெரிக்காவைச் சேர்ந்த உலக நலவாழ்வுக் கழகம், சென்னின் மருத்துவச் சேவையைப் பாராட்டி இந்த ஆண்டிற்கான ""ஜொனதான்மான்'' விருதை, அவருக்கு வழங்கியிருக்கிறது. இதனையொட்டி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மருத்துவர்களும் மட்டுமின்றி நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரும் பினாயக் சென்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளுக்கு சட்டீஸ்கர் மாநில அரசு அளித்த அநாகரிகமான பதில், அஜயின் கைது.

சமூக சேவகரான அஜய் கைது செய்யப்பட்ட விதம் மட்டுமன்று, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் இந்திய அரசின் பாசிச வக்கிர புத்தியைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

2004இல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது, அத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு இ.பொ.க. (மாவோயிஸ்டு) அறைகூவல் விடுத்தது. சட்டீஸ்கர் மாநில அரசோ, எப்படியாவது பழங்குடி இன மக்களை ஓட்டுப் போட வைத்து, மாவோயிஸ்டுகளின் அறைகூவலை முறியடித்து விட வேண்டும் என்ற நோக்கில், மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கிராமங்கள்தோறும் நிறுத்தியது.

இந்த நிலையில், அஜய், பினாயக் சென் உள்ளிட்ட சிலர், மக்களின் மனநிலையை அறிய, தேர்தல் நடந்த நாளன்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அன்று மாலை 4 மணியளவில், ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள், அக்கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்ததைக் கண்டனர். வாக்குச்சாவடியும் ""அநாதையாக''க் கிடப்பதைக் கண்ட அஜய், தனது புகைப்படக் கருவியால் அதனைப் படமெடுக்க முயன்றார்.

அந்த சமயத்தில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் இளைஞர்கள் சிலர், அஜயையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்துக் கொண்டனர். இவர்கள் போலீசின் ஏஜெண்டுகளாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட அந்த இளைஞர்கள், அஜயையும், அவரது நண்பர்களையும் சிறை பிடித்தனர். இரவு வெகு நேரம் கழித்தே அவர்களைக் கிராமத்தில் இருந்து திரும்பிப் போக அனுமதித்தனர். எனினும், அந்த இளைஞர்கள் அஜயிடமிருந்து பறித்துக் கொண்ட புகைப்படக் கருவியைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

இவ்விரும்பத்தகாத சம்பவத்தைக் கேள்விப்பட்ட... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, June 29, 2008

காசுமீர் : புதைக்கப்பட்ட உண்மைகள்

""துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட பிணங்களே இங்கு வருகின்றன. பெரும்பாலும் அடையாளம் தெரியாதவாறு சிதைந்து போயிருக்கும் அவற்றைப் போலீசு அதிகாரிகளின் ஆணைக்கேற்ப நாங்கள் புதைத்து விடுவோம்'' என்கிறார் இக்கல்லறையை நிர்வகிக்கும் குழுவின் தலைவரான முகமது அக்பர் ஷேக். இக்குழு புதைக்கப்படும் பிணங்களைப் புகைப்படமெடுத்து ஆவணமாக்குவதற்கு முயற்சித்தது. ஆனால், இந்த முயற்சி இராணுவத்தால் தடை செய்யப்பட்டது. இறந்து போனவர்களைப் பற்றிய விவரங்கள் குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கின்றன என்று தடைக்கான காரணம் கூறப்பட்டது. ""யாரேனும் காணாமல் போன தனது உறவினரை தேடிக் கொண்டு குப்வாரா காவல் நிலையத்திற்குச் சென்றால், அவர்கள் புகைப்படங்களைக் காட்டுவார்கள். அடையாளம் கண்டு கொண்டால் அவர்களிடம் கல்லறையின் அடையாள எண் தரப்படும். ஆனால் அங்கு புதைக்கப்பட்டிருப்பதோ, பெரும்பாலும் வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்தான்'' என்கிறார் ஒரு போலீசு அதிகாரி.

ஆனால், காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களோ, யூரி மாவட்டத்தைச் சேர்ந்த "மறைக்கப்பட்ட உண்மைகள்' எனும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ""இது வடிகட்டிய பொய். அங்கு புதைக்கப்பட்டிருப்பது பயங்கரவாதிகளல்ல. காஷ்மீரில் காணாமல் போனவர்கள்தான்'' என்கிறார்கள். யூரியில் மட்டும் இதைப் போன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் இருப்பதாக உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. இந்தத் தகவல் வெளியான பிறகு சிறீநகரில், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போலீசு கலைத்தது.

சிறீநகரை ஒட்டியுள்ள கந்தர்பால் மாவட்டத்தில் ""வெளிநாட்டுப் பயங்கரவாதிகள்'' எனப் புதைக்கப்பட்ட 5 பேரினுடைய பிணங்களைத் தோண்டி எடுத்து விசாரணை செய்தபோது,..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்