தமிழ் அரங்கம்

Saturday, August 9, 2008

சிறுகதை: நாய்க்கர்

Friday, August 8, 2008

கழிசடை காங்கிரசு வழியில் சி.பி.எம் கட்சி

பட்டுப் போன நச்சு மரமானாலும், அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சியில் கோஷ்டிச் சண்டைகளுக்கு அளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவும், பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கவும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு என்று சாதிமத அடிப்படையில் கட்சிக்குள்ளேயே தனி அணிகளை உருவாக்கி ஓட்டுப் பொறுக்குகிறது, அக்கட்சி.

மதவாத சக்திகளை எதிர்ப்பது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால்பிடித்துச் செல்லும் சி.பி.எம். கட்சி, காங்கிரசின் எல்லா கழிசடைத்தனங்களையும் கொண்ட கட்சியாக நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. காங்கிரசைப் போலவே சி.பி.எம். கட்சியில் கோஷ்டி சண்டைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. வர்க்க அரசியல் அடிப்படையில் மக்களைத் திரட்டிப் போராடும் கம்யூனிச நடைமுறையைக் கைகழுவிவிட்டு, காங்கிரசு கட்சியைப் போலவே ஓட்டுக்காக சிறுபான்மை பிரிவையும் அக்கட்சி இப்போது கட்டத் தொடங்கிவிட்டது.

வேலூர் கோட்டையிலுள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஏற்கெனவே போராட்டம் நடத்தியுள்ளனர். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைக்கான இந்நியாயமான போராட்டத்தை ஆதரித்து, அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டிப் போராட முன்வராத சி.பி.எம். கட்சி,...... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அமெரிக்க சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி

முதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.

நாடாளுமன்றமும் அவைத்தலைவரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தனர். இலஞ்சப் பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. விசாரணை நடத்தி, குற்றவாளி சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று அவைக்கும் மக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது. இதோ, சுமார் 20 ஆண்டுகளாகி விட்டன. தங்கராசு இறந்து போய்விட்டார். ஜெயலலிதா இரண்டுமுறை முதலமைச்சராகி, பல ஆயிரம் கோடி சொத்துடனும், ''இசட் பிரிவு'' பாதுகாப்புடனும் பவனி வருகிறார். திருநாவுக்கரசு, ''நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்குவதற்கு எதிரான யோக்கியர்''களின்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, August 7, 2008

கெட்டாலும் மேன்மக்கள்.....

வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ளயாருக்கும்
ஆர்வம் இல்லை.
பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை

புல்லரிக்க வைக்கவில்லையா?
குற்றவாளிதனது குற்றத்தை

உணர்ந்துகுமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயானஅகழிகளை
நிரப்பும்பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...என்ன
இருந்தாலும்மேன்மக்கள் மேன்மக்களே!

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, August 6, 2008

சரவணன் மீதான வன்முறையும், இதைக் கண்டிப்போரின் வன்முறை அரசியலும்

சரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.


சரவணனை தாக்கிய அரசியல் 'தமிழ்" தேசியம். இந்த 'தமிழ்" தேசியத்தை இன்று புலிகள் கொண்டுள்ளனர் என்பதால், அது புலிக்கு எதிரான கண்டனமாகின்றது. இப்படி புலியெதிர்ப்பு அரசியல் இங்கு, கும்மியடிக்கத் தொடங்குகின்றது. இதனடிப்படையில் தான் கண்டனங்கள் வெளி வந்தன. ஆனால் இது புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.

வன்முறை அரசியலின் மூலம் 'தமிழ்" தேசியத்தில் மட்டுமா உண்டு? இல்லை, 'தமிழ்" தேசிய மறுப்பிலும் கூட அதுவுள்ளது. இதற்கான சமூக அடிப்படையும், அதன் அரசியல் அடித்தளமும், எம் சமூகம் கொண்டுள்ள நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தன சமூக பொருளாதார பண்பாட்டுத் தளத்தில் உள்ளது. இப்படி இந்த வன்முறையின் அரசியல் மூலம், எங்கும் நிறைந்து காணப்படுகின்றது. வன்முறை பலதளத்தில் பல பின்னணியில் நிகழ்கின்றது...

அறிவுக் களஞ்சியம்


இவை பலதளங்களில் இருந்து பெறப்பட்டது. பல உங்களுடையது. இதன் மூலக் குறிப்புகளில் தவறு இருப்பின் அதைச் சுட்டிக்காட்வும்;. அவை திருத்தப்படும்;. உங்கள் அபிராயங்கள், இதில் சேர்க்க கூடியவைகளை தந்து உதவுவது உட்பட உங்கள் பங்களிப்பு கோரப்படுகின்றது. இலகுவாக, வெளிப்படையாக அனுகும் வகையில் தளத்தை அமைக்கின்றோம். இந்த தளத்தில் எந்த ஒரு சொல்லையும், ய+னிக்கோட் மூலம் தேடுதல் பகுதியல் இட்டும், நீங்கள் தேட முடியும்.

தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக ஒப்பந்த பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள்.

தற்காலிகத் தொழிலாளர்கள் காலை 7.30 மணிக்கு ஆலைக்குள் நுழைந்தால், பணிநேரப்படி 4.30 மணிக்கு அவர்களுக்கு வேலை முடிந்தாலும், மாலை 67 மணி வரை கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். இதுதவிர, "இணிட்ணிஞூஞூ " என்ற பெயரில் ஒருசேர இரண்டு ஷிப்ட் (16 மணி நேரம்) வேலை வாங்கிக் கொண்டு, சட்டப்படி தரவேண்டிய இரட்டிப்பு ஊதியத்தைத் தராமல் ஏய்ப்பது, சீருடைபாதுகாப்புச் சாதனங்கள் இன்றி வேலை செய்ய நிர்பந்திப்பது, மருத்து ஈட்டுறுதிக்காகவும்.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, August 5, 2008

கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக...

சென்னைகுரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்ஆசிரியர் கழகம் மூலம் 7ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ. 1,500, 11ஆம் வகுப்புக்கு ரூ. 2,500, அரசு இலவசமாகத் தரும் பாடப்புத்தகங்களுக்கு ரூ.100 என கடந்த ஆண்டில் பல லட்ச ரூபாயை மாணவர்களிடம் கொள்ளையடித்த நிர்வாகம், இவ்வாண்டு வசூல் வேட்டையை நடத்தியது. இதனையறிந்த புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியினர், ""பெற்றோர்ஆசிரியர் கழகம் எனும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்போம்! சட்டவிரோத கட்டாய நன்கொடைக்கு முடிவு கட்டுவோம்!'' எனும் முழக்கத்துடன் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் இப்பகுதியில் விரிவாகப் பிரச்சாரம் செய்து, அதன் தொடர்ச்சியாக பெற்றோர்களையும் மாணவர்களையும் அணிதிரட்டி 17.6.08 அன்று காலை 11 மணியளவில் பள்ளித் தலைமையாசிரியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெருந்திரளாகப் பெற்றோர்களும் மாணவர்களும் சூழ, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தால் அரண்டு போன பள்ளி நிர்வாகமும் பெற்றோர்ஆசிரியர் கழகப் புள்ளிகளும் இனி நன்கொடை ஏதும் வாங்கமாட்டோம்; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். மாவட்டக் கல்வி அதிகாரிகள் இப்போராட்டச் செய்தியை அறிந்ததும், மறுநாளே அப்பள்ளியில் சோதனை நடத்தி, மாணவர்களிடம் கட்டாயமாகப் பறித்த தொகையை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நன்கொடை எதுவும் மாணவர்களிடம் வாங்கக் கூடாது என்று அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமணா அறிவித்துள்ளார்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, August 4, 2008

துரோகியின் மரணம்


வெளிவரவுள்ள நூலில் இருந்து

ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். அவரின் நூலான ~~தி குலாக் ஆர்சிபிலாகோ மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது. இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முனைந்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் நடந்த முதலாளித்துவ மீட்சியில் தப்பி ~~ஜனநாயகவாதியானவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.

ஸ்டாலினை தூற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அமெரிக்காவுடன் தேன்நிலவை தொடக்கிய சமாதான சக வாழ்வு நாயகன் குருசேவின் துணையுடன், 1962 இல் தனது நூல்களை பதிப்பிக்க தொடங்கினான். ஒரு கைதியின் வாழ்க்கை என்ற ''ஐவான் டெனிசோவிச" என்ற 'வாழ்வின் ஒரு நாள்" என்பது அவர் பதிப்பித்த முதல் நூலாகும். இதையே குருசேவ் ஸ்டாலின் எதிர் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தினான். சோல்ஜெனித்சின் நூலான ~~தி குலக் ஆர்சிபிலோகோ என்ற அவரது நூலுக்கு 1970 இல் ஏகாதிபத்திய ஆதாரவுடன் நேபால் பரிசு பெற்றது. இவர் ஏகாதிபத்திய நாடுகளின் பிரபலமான ~~ஜனநாயகவாதியாகி, சோவியத் எதிர்ப்பிரச்சாரத்தின் கள்ளத் தந்தையானன். 1974 இல் சோவியத் குடியுரிமையை துறந்து சுவிட்சர்லாந்திலும், பிறகு அமெரிக்காவிலும் குடியேறினார். அவர் ஒரு நாஜி அனுதாபி, ஆதரவாளன் என்பது மறைக்கப்பட்டு, உழைப்பு முகாம் .......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!

எங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?

புலிகள் ஒரு எதிர்தாக்குதலை நடத்தவே, தந்திரமாக பின்வாங்குவதாக நம்பும் பிரமை அதிகரித்துள்ளது. எதிர்த்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கனவு, எதார்த்தத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படையை தளபதிகளுக்கு காட்ட வெளிக்கிட்டது முதல், தளபதிகள் மிக விரைவில் வெற்றித் தாக்குதல் என்ற அறிக்கைகள் விட்டு, அவை ஒய்ந்துள்ள நிலையிலும், கனவுகள் பிரமைகள் நம்பிக்கைகளாகின்றது.

புலிகள் முதல் அரசு வரை இப்படி நம்புவது, ஒருதலைப்பட்சமாக அதிகரித்து பல்வேறு ஊகங்களாகின்றது. இந்த எல்லைக்குள் ராஜதந்திரிகள் முதல் தொடர்ச்சியாக கருத்துரைப்பவர்கள் அனைவரும், இப்படியே இதற்குள்ளேயே கருத்துரைப்பதுடன், அதையே எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். நிலைமையை ஆராய அடிப்படையான தரவுகளின்றி, கடந்தகால அனுமானங்களில் இருந்து இவை வெளிப்படுகின்றது.

நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை.... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 3, 2008

சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை - ஒரு தொழிற்சங்கம் உருவான கதை

ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், குகீகீ, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் ""மாவீரன்'' ஜேப்பியாருக்கு ""என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?'' என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.

கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே "வாடா! போடா! என்ன மயிரு?' என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.