தமிழ் அரங்கம்

Saturday, October 11, 2008

இசையும் பிரச்சாரமும்

இசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-1 தோழர்.மருதையன்

என்னை (கொமினிச) படுகொலை செய்யக் கோரும் ஒரு பேப்பர் கதை

சில நாட்கள் கழித்து உடுவில் பகுதியில் ஒரு வாசகசாலையில் புகுந்து பத்திரிகைகளைப்புரட்டினேன். உதயன் பத்திரிகையில் முதற்பக்கத்தில் ஒரு செய்தி. ""யாழ்மாவட்டத்தின் ரஸ்ய சார்பு கொமினிச அமைப்பாளரான விஜயானந்தன் சுட்டுக்கொலை."" அந்தக்கொமினிச பிசாசிற்கு குழையடிக்கப்பட்டு விட்டது.எனக்குத்தெரியும் நிச்சயமாக அவன் நரகலோகம்தான் போயிருப்பான். ஆனால் இன்று புலம்பெயர்ந்த தேசங்களிலும் கொமினிசம் பேசியபடி சில பிசாசுகள் உலவியபடிதான் இருக்கின்றன.இவைகள் குழையடிக்கப்படுவது எப்போ????????.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, October 10, 2008

தூங்கிறயா நடிக்கிறியா

தூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா? )

ஹியுலுநாக்கின் கொட்டடி மரணம் : அமெரிக்க மோகிகளுக்கு ஒரு பாடம்

தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்க்கும் அல்லது அத்துறையில் படித்து வரும் இந்திய இளைஞர்களின் கனவு, அமெரிக்காவுக்குப் போய் எப்படியாவது பச்சை அட்டை (எணூஞுஞுண இச்ணூஞீ) வாங்கி, அமெரிக்காவிலேயே "செட்டிலாகி'' விட வேண்டும் என்பதுதான். இயற்கையின் பிழையால், இந்திய நாட்டில் பிறக்க நேர்ந்து விட்ட அமெரிக்க மோகிகளின் மனசாட்சியை, இந்தக் கதை உலுக்க முடிந்தால், அது நமது "அதிருஷ்டம்'தான்!

இது, கற்பனைக் கதையல்ல; அமெரிக்காவின் பச்சை அட்டையைப் பெறும் முயற்சியில் தோற்றுப் போனதோடு, அதில் தனது உயிரையும் இழந்துவிட்ட ஹியு லு நாக் என்ற சீன இளைஞனின் உண்மைக் கதை இது.

கள்ளத் தோணி மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்து, அந்நாட்டிலுள்ள "வியர்வைக் கடைகளில்'' நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, ஏதாவதொரு பொந்தில் தூங்கி எழுந்து வாழ்க்கையை ஓட்டும் ஆசியக் கொத்தடிமை தொழிலாளி போன்றவர் அல்ல, ஹியு லு நாக்.

அவர் கணினிப் பொறியாளர். நியூயார்க் நகரில் உள்ள புகழ் ............... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இராணுவத் தீர்வை திணிக்க அரசியல் தீர்வு

இப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.

இப்படி அரச பயங்கரவாதம் தன்னை மூடிமறைக்க முனைகின்றது. தனது பயங்கரவாத வழியிலான இராணுவத் தீர்வை, தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றது. இதை எங்கும் எதிலும் செய்கின்றது. இதற்கு ஏற்பவே தமிழ் அரசியல்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பேரினவாதிகள் மட்டுமல்ல, தேசியம் ஜனநாயகம் என்று கூறி பிழைக்கும் கூட்டம் கூட அங்கீகரிப்பது கிடையாது. தேசியம் ஜனநாயகம் என்று கூறி அரசியல் செய்பவர்களும் சரி, இதற்கு இடையில் மிதப்பவர்களும் சரி, தமிழ் மக்களைச் சார்ந்து நிற்பதை மறுப்பதே, அவர்களின் அரசியலாகிவிட்டது. தேசியவிடுதலை என்பது ஆயுதங்களாகி விடுகின்றது. ஜனநாயகம் என்பது இந்திய இலங்கை கூலிக் கும்பலாக மாரடிப்பதாகி விடுகின்றது. இவர்கள் தேசியம் ஜனநாயகம் என்பதை, ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, தமிழ் மக்களைக் கூறுகூறாக துண்டு துண்டாக வெட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் எதைத்தான், எப்படித் தான், தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும்.

இதனாலும், தமது வர்க்க குணத்தாலும், தமிழ் மக்களின் உணர்வுகளை, உரிமைகளைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவை அழிக்கப்படுவதையும் எப்படித் தான் அடையாளம் காணமுடியும், எப்படித்தான் அதை அடையாளம் கண்டு கோரமுடியும்.

விளைவு பேரினவாதம் ..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 9, 2008

தண்ணி வந்தது…

தண்ணி வந்தது…(அடிமைச்சாசனம்)

அண்ணாதுரை : பிழைப்புவாதத்தின் பிதாமகன்

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?

நீதிக் கட்சியின் தலைவராகப் பெரியார் பொறுப்பேற்றபின், அவரின் தளபதியாகப் பொறுப்பெடுத்துக் கொண்ட அண்ணாதுரை, சரிகைக் குல்லாக்கள் அனைவரையும் விரட்டி விட்டு அத்தேர்தல் கட்சியை சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகமாக மாற்றினார். தி.க.வில் தனக்கென ஆதரவாளர்களை உருவாக்கித் தலைமைக்குப் போட்டியாளரானார். தனது "தம்பிமார்கள்' பதவி சுகம் கண்டு பொறுக்கித்தின்னத் துடித்தபோது, பெரியார்மணியம்மையின் திருமணத்தைக் காரணமாகக் காட்டி "கண்ணீர்த்துளி'களோடு வெளியேறி தி.மு.க.வை உருவாக்கினார்.

தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்லிக்கொண்ட அண்ணாதுரை, கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே நாத்திகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டார். "ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர், பிள்ளையார் சிலையைத் தெருவில் போட்டு பெரியார் உடைத்தபோது, "நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம்'' என்று பித்தலாட்டமாடினார். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்'' என்று புது ஆத்திகத்தை உபதேசித்தார். இந்தக் கொள்கைச் சறுக்கலோ, பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவை தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலு தொடங்கி வைக்கும் வரைக்கும் சீரழித்தது என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவிலிருந்து நர்மதைக்கு தெற்கே உள்ள பகுதிகளை எல்லாம் "திராவிட நாடு'' என்றும் இதனைப் பிரித்து தனி நாடாக்கவேண்டும் என்று............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 8, 2008

கஞ்சி ஊத்த வக்கில்லே

கஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம்)

தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 5இல் நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது. ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான்.

தி.க. மகளிரணியோ "காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மூக்கு, காதுகளில் நகைகளை மாட்டுவதால் அந்தத் துறைக்கான எடுப்பையும் கம்பீரத்தையும் குலைத்துவிடுவதாக, குறைத்து விடுவதாக அமைவதால் அந்த நிலையிலிருந்து அப்பெண்கள் விடுபடவேண்டும்'' எனத் தீர்மானம் போட்டுள்ளது. கூலிகேட்டுப் போராடினாலோ, மறியல் அறப்போரில் ஈடுபட்டாலோ ஆண்போலீசுக்குச் சற்றும் குறையாமல் பெண்போலீசும் வெறிநாய்கள் போல் உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றது . இந்தக் கொடூர மிருகத்திடம் "எடுப்பையும்' "கம்பீரத்தையும்' யாராவது ரசிக்க முடியுமா? நகைகளைத் துறந்து வந்து அடித்து உதைத்தால் "எடுப்பாக' இருக்கிறது என்று ரசிக்கத்தான் முடியுமா?

பெரியார் தி.க.வினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள "தளபதி' வீரமணி, நீதிமன்றத்தில் தன்னை "இந்து' என்று குறிப்பட்டுள்ளார். "இந்து என்றால் .திருட...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, October 7, 2008

சாயி பாபா

சாயி பாபா

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1

தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்குவோம்! பாகம் -1(பகுதி - 01) - மருதையன்

இந்திய அமைதிப்படையா? காமவெறி பயங்கரவாதப் படையா?

உள்நாட்டுப் போரில் நிலைகுலைந்து, வறுமையும் பட்டினியும் பீடித்து, தீராத அவலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, காங்கோ. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள அந்நாட்டின் வடமேற்கே மாசிசி நகரிலுள்ள நிவாரண முகாம்களில் பஞ்சைப் பாராரிகளான கருப்பின மக்கள் உணவுக்காக வரிசையில் காத்திருந்தனர். வாகனங்கள் அணி வகுத்து சீறிக்கொண்டு வந்தன.

நீலநிற இரும்புத் தொப்பி அணிந்த ஐ.நா. மன்றத்தின் அமைதிப்படை சிப்பாய்கள், ரொட்டி, பால், முட்டை முதலான உணவுப் பொருட்களுடன் வந்திறங்கி, அம்மக்களுக்கு விநியோகித்தனர். சிறிதுநேரத்தில் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பலநாட்களாகப் பட்டினி கிடக்கும் பலர், உணவுக்காக அச்சிப்பாய்களிடம் கெஞ்சிக் கதறினர்.

கைக்குழந்தைகளுடன் கதறும் தாய்மார்களைப் பார்த்ததும் அமைதிப்படை சிப்பாய்களுக்கு வக்கிரமான "கருணை' பிறந்தது. "ரொட்டியும் பாலும் முட்டையும் வேண்டுமா? தருகிறோம். அதற்கு நீங்கள் எங்களுடன் படுக்கைக்கு வரவேண்டும். சம்மதமா?'' என்று கேட்டு கெக்கலி கொட்டிச் சிரித்தனர் அச்சிப்பாய்கள். வேதனையும் வெறுப்பும் கொப்பளிக்க, பட்டினியில் பரிதவிக்கும் கருப்பினத் தாய்மார்கள் அங்கிருந்து வெளியேறினர். பசியை ஓரிரு நாட்கள் தாக்குப் பிடிக்கலாம். பாலியல் இச்சைக்கு இணங்காவிடில் ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்காது என்றால், அப்பெண்கள் என்ன செய்ய முடியும்? அகதிகளாக உழலும் அவர்களின் பட்டினியைச் சாதகமாக்கி கொண்டு, காங்கோ .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, October 6, 2008

குறவன் குறத்தி

குறவன் குறத்தி

புரட்சியின் ஓசை கேட்கிறதா?

புரட்சியின் ஓசை கேட்கிறதா?

Sunday, October 5, 2008

குஜராத் மக்களின் நேருரை பகுதி -01

குஜராத் மக்களின் நேருரை பகுதி -01

தமிழில் இப்படி ஒரு இணையம் கிடையாது


4000 மேற்பட்ட தலையங்களை உள்ளடக்கிய ஒரு இணையம். சமூகத்தின் பல்துறை சார்ந்த கட்டுரைகள் முதல் ஓலி ஒளி பேழைகள் வரை கொண்டவை. விரைவில் 10000 தலையங்களை கொண்டவையாக மாற்ற முனைகின்றோம். மிக இலகுவாக இதை பார்வையிடவும், தெரிவு செய்து படிக்கவும் வகையில், ஒரே முறையில் (கிளிக்கில்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உபதலைப்புக்குள் கூட உட்செல்லத் தேவையி;லை;லை. கீழ் நீலநிறத்தில் உள்ளதைக் கிளிக் செய்து செல்லவும்.
இந்த வகையில்
1.அறிவுக் களஞ்சியம் 40 உபதலைப்பைக் கொண்டது. அண்ணளவாக 700 கட்டுரைகள் உள்ளது.

2.அரசியல் - சமூகம் பி.இரயாகரன் அண்ணளவாக 655 கட்டுரைகள் உள்ளது.

3.புதிய ஜனநாயகம் அண்ணளவாக 630 கட்டுரைகள் உள்ளது.

4.புதிய கலாச்சாரம் அண்ணளவாக 270 கட்டுரைகள் உள்ளது.

5.அரசியல் - சமூகம் 30 மேற்பட்ட எழுத்தாளர்களுடைய கட்டுரைகள். அண்ணளவாக 400 கட்டுரைகள் உள்ளது.

6.நூல்கள் அண்ணளவாக 22 நூல்கள் உள்ளது.

7.ஒலி – ஒளி அண்ணளவாக 9 உப தலையங்கத்தின் கீழ் 440 தலைப்புகளில் 300 மணித்தியாளங்கள் கொண்டவை. இவை பல்துறை சார்ந்தவை.

8.சமூகவியலாளர்கள் 11 பேருடைய 480 கட்டுரைகள் உள்ளது.

9.ஆவணக் களஞ்சியம் 12 உப தலைப்பில் 300 ஆவணங்கள் உள்ளது.

10.இணைப்புக்கள் 55 இணைப்புகள் உள்ளது.

11.நிழற்படங்கள் - பல நூறுபடங்கள்
இவ் இணையத்தை சமூகத்தில் அறிமுகம் செய்யவும். சமூகத்துக்கு தேவையானவை என்று கருதும் எல்லாவற்றையும், நாம் இணைக்கத் தயாராக உள்ளோம். அந்த வகையில் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்கப்படுகின்றது. இணைக்க கூடிய கட்டுரைகளை தந்து உதவவும்;. இதில் இணைகப்பட்டவை மூலம் (உரிமம்) தவறுதலாக பதியப்பட்டு இருப்பின், அதை சுட்டிக்காட்டின் திருத்தப்படும்.

மேலும் தொழில் நுட்ப ரீதியாக இதைச் செலுமைப்படுத்த முனைகின்றோம். இதற்கும் உங்கள் அபிராயங்கள், ஆலோசனைகள், உதவிகள் வரவேற்க்கப்படுகின்றது.

பிள்ளைக்கறி தின்னும் பிரிமியர் மில்!முதலாளியின் இலாபவெறிக்கு இளம்பெண் உயிர்ப்பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்துள்ள சுண்டகாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணவேணி என்ற இளம்பெண். கூலி விவசாயி நடராஜ் என்பவரின் மகளான இவர் ஓசூர் வட்டம் பாகலூரை அடுத்துள்ள பெலத்தூர் பிரிமியர் மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமையாக வேலையில் சேர்க்கப்பட்டார். தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கி, கிருஷ்ணவேணியை 3 மணிநேரம் கூடத் தூங்க விடாமல், அவசர வேலை என்று மிரட்டி ஆலை நிர்வாகம் அவரைக் கசக்கிப் பிழிந்துள்ளது.


இதனால் தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, மாதவிடாய்க் கோளாறுகள் உள்ளிட்ட பல உடல் உபாதைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதை மறந்து ஓய்வு கிடைக்கின்ற 34 மணி நேரத்தில் நன்றாகத் தூங்குவதற்காக ஆலை நிர்வாகமே தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளப் பழக்கப்படுத்தியுள்ளது.

தினமும் 16 மணி நேரத்துக்கு மேல் கடின உழைப்பு,.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்