தமிழ் அரங்கம்

Saturday, November 1, 2008

அமெரிக்கா

அமெரிக்கா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்


முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?
1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள். ......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, October 31, 2008

சாதீயக்கொடுமைகள்

சாதீயக்கொடுமைகள்

தமிழ்மக்கள் இராணுவப் பகுதிகளில் வாழ்வதையே விரும்புகின்றனரே ஏன்!?


மறுபக்கத்தில் தமிழனை இராணுவம் வெட்டுகின்றான் கொத்துகின்றான் என்ற, பிரச்சாரத்தை புலிகள் செய்கின்றனர். இருந்தபோதும் தமிழ்பேசும் மக்கள் புலிகளுடன் வாழ்வதைவிட, சிங்கள பகுதியில் வாழ்வதையே விரும்புகின்றனர். புலிகளிடம் இருந்து தப்பிச்சென்ற பெரும்பான்மை தமிழ் இனம், சிங்களப் பகுதிகளில் தான் வாழ்கின்றனர். புலிகளின் பகுதிகளில் வாழ்பவர்கள், தப்பிச்செல்ல வழியின்றியும், பொருளாதார ரீதியாக வேறு பிரதேசத்தில் வாழ முடியாதவர்களும் தான் எஞ்சியுள்ளனர். இவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிச்செல்லவும், புலிகளுடன் சோந்து வாழவிரும்பாத எதிர்மனப்பாங்குடன் தான் வாழ்கின்றனர்.

இதுவே இன்றைய எதார்த்தம்;. யுத்தம் கடுமையாகி, புலிகளின் அழிவை தீர்மானிக்கின்ற இக்கட்டான நிலைக்குள், புலிகளின் பாசிசம் பேரினவாதத்தைப் பலப்படுத்தியுள்ளது. புலிகள் தப்பிப்பிழைக்க, எஞ்சியுள்ள மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துவதை புலிகளின் பாசிசம் வழிகாட்டுகின்றனர். யுத்த சூழலை விட்டு தப்பிச்செல்லாத வண்ணம், மக்கள் பலாத்காரமாகவே துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். மக்களிடம் இருந்து அன்னியமான யுத்தத்தில், தமிழ்மக்கள் வலுக்கட்டாயமாகவே பலியிடப்படுகின்றனர்.

பேரினவாதம் குண்டுகள் பொழிந்து அப்பாவித்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

சென்னை : விற்பனைக்கு! இரண்டாவது மாஸ்டர் பிளானின் மகாதிமியங்கள்!

சென்னை, தியாகராய நகர் சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டிடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதால்தான் தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களைக் காப்பாற்றவும் முடியவில்லை என்று தீயணைப்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

அதனால் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நெரிசல் மிகுந்த இடத்தில், எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இன்றி இந்தக் கட்டிடம், இவ்வளவு விதி மீறல்களுடன் கட்டவும், இயங்கவும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சரவணா ஸ்டோர்ஸ் கடை மட்டுமன்றி தி.நகரில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை விதிகளை மீறித்தான் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களினால் பொதுமக்களின் உயிருக்கு எப்போதும் ஆபத்துதான். ஆனால், இதனை ஒழுங்குபடுத்த வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து கவலைப்படுவதே இல்லை. பொதுமக்கள் நலனில் சிறிது கூட அக்கறையில்லாத, லஞ்ச பணத்திற்கு எளிதில் விலை போகக்கூடிய, இப்படிப்பட்ட அதிகாரிகளை நம்பித்தான் இந்த அரசு சென்னை நகரத்தை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியமைக்கப் போகிறதாம். இதற்கென சென்னை மாநகரப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அந்தத் திட்டத்தின்படி, சென்னையைத் தகவல் தொழில்நுட்பத் துறையின் முதலீட்டாளர்களைக் கவரும் நகரமாக மாற்ற உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள், தடையற்ற மின்சார விநியோகம், நல்ல தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை ஏற்கெனவே ஏற்ப டுத்தப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அவை மேலும்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 30, 2008

பிணங்கள் பேசுகின்றன!

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

நொய்லா கிராமத்துப் பெண்களுக்குஅதிரடிக் கணினிப் பயிற்சியளிக்கப்பட்டது,இந்தியாவின் குக்கிராமமும் இணையத்துடன்பிணைக்கப்பட்டிருப்பதைக் கிளிண்டனுக்கு நிரூபிக்க.

காஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதிசுட்டுத்தள்ளப்பட்டார்கள் - காஷ்மீர் பிரச்சினையைக்கிளிண்டனுக்குப் புரிய வைக்க.
நாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;பன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;பிச்சைக்காரர்கள் வீதிக்கு வந்தனர்.

35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.

ஏனென்றால் இது நாடகமில்லை.

நோக்கம் எதுவாக .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

கவர்ச்சித் திட்டங்கள் : வறுமையை ஒழிக்குமா?

வறுமை காரணமாக தனது குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அத்துயரக் கதை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதத்தில் சேலம் அருகே வறுமை காரணமாக தான் பெற்று வளர்த்த மூன்று குழந்தைகளை கிணற்றில் தள்ளி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார் ஒரு இளம்பெண். மூன்று குழந்தைகளும் மாண்டுபோக, அவர் மட்டும் காப்பற்றப்பட்டு வேதனையில் விம்மிக் கொண்டிருக்கிறார்.


வறுமையின் கொடுமையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது ஏதோ விதிவிலக்கான துயரச் சம்பவம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. இன்று அந்த மூன்று குழந்தைகள்; நாளை...? ஒருவரல்ல, இருவரல்ல; தமிழகத்தில் பாதிப்பேர் வறுமையில் உழலும் ஏழைகள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்திருக்கிறது, உலக வங்கியின் புள்ளி விவர அறிக்கை.

உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் உலகளாவிய வறுமை குறித்த புதிய ஆய்வுகளை மேற்கொண்டு புள்ளி விவர அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள அளவுகோலின்படி ஒரு டாலருக்கும் கீழான வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என்று உலக வங்கி வரையறுத்தது. ஒரு மனிதனுக்கு உயிர் வாழத் தேவையான, குறைந்தபட்சம் 2100 கலோரிகள் சத்து தரும் உணவை வாங்குவதற்கு எவ்வளவு தொகை தேவையோ அதை அடிப்படையாக வைத்து, சராசரியாக 1.25 டாலருக்கும் (ரூ.55) குறைவான வருமானமுள்ளவர்களை வறுமைக் கோட்டுக்குக்.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 29, 2008

இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

பரோவா. எகிப்திய மன்னன்.தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,தனது ஆடை ஆபரணங்களையும்,பொக்கிஷங்களையும், அடிமைகளையும்தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.பூவுலக வாழ்வைச்சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.ஆசை நிறைவேற்றப்பட்டது.பிறகு அவனுடைய வாரிசுகளும்அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.

ஒருவேளை.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

குஜராத் : அசாருதீன் பிழைத்துவிட்டான் : நீதி செத்துவிட்டது!

இது ஒரு துயரக்கதை என்று வகைப்படுத்திவிட முடியாது. துயரம்வேதனைக்கு நடுவிலேயும் அன்பும் பாசமும் இழையோடும் உண்மைக் கதை. குஜராத்தில் இந்துவெறி பயங்கரவாதிகளோடு, காவிமயமாகிவிட்ட அரசும் போலீசும் நடத்திய பயங்கரவாத வெறியாட்டத்தின் இன்னுமொரு சாட்சியம்தான் இந்தக் கதை.

சற்றே நொண்டி நடக்கும் கால்கள்; கொக்கி போல் வளைந்த ஒரு கை; ஆனால், தீர்க்கமான மன உறுதி; அவ்வப்போது முகத்தில் அரும்பும் புன்னகை – இதுதான் அசாருதீன் என்கிற சிறுவனின் அடையாளம். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் நடத்திய இந்து மதவெறித் தாக்குதலின் இரத்த சாட்சியாய் வாழ்ந்து வருபவன்தான் இந்தச் சிறுவன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு, கோத்ரா இரயில் தீப்பிடித்த சம்பவத்தைச் சாக்காக வைத்து குஜராத் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் இந்துவெறிப் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் வீடுகளை இழந்து அகதி முகாம்களுக்குத் துரத்தப்பட்டனர். முஸ்லிம் பெண்களின் வயிற்றைத் திரிசூலங்களால் குத்தி உள்ளே இருந்த சிசுக்களையும் இந்துபயங்கரவாதிகள் சிதைத்தார்கள். இந்த நரவேட்டைகள் நின்ற பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து, திடீரென ஒருநாள் இரண்டு விசுவ இந்து பரிசத் தொண்டர்களின் பிணங்கள், அகமதாபாத் நகரத்தின் புறநகர்ப் பகுதியான ரமோல் என்னும் கிராமத்திற்கு அருகில் நெடுஞ்சாலையில் கிடந்தன.

இந்துவெறியர்களுக்கு பாடம் கற்பிக்கவே அவ்விருவரும் ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, October 28, 2008

காலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1

காலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1

தேசியத்தை மறுப்பது என்பது சாராம்சத்தில் உலகமயமாதலை ஆதரிப்பதுதான்

புலியை தேசியமாக பார்ப்பவர்கள், தேசம் தேசியம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை காணமுடியாதவர்களாவே உள்ளனர். புலியெதிர்ப்புக்கு தேசிய மறுப்பு தத்துவம் வழங்க முனையும் ராகவனாக இருக்கலாம், ஸ்ராலினை மறுக்கும் திரோஸ்க்கியம் பேசுகின்றவர்களாக இருக்கலாம், சாராம்சத்தில் அவர்களின் அரசியல் ஒத்துப் போகின்றது.

தேசம், தேசியம் என்பது கற்பனையான பொருளற்ற வெறும் சிந்தனையல்ல. அதாவது கருத்துமுதல்வாதக் கற்பனையல்ல. மாறாக பொருள் வகைப்பட்ட ஒன்றின் மீதான சிந்தனை. இதை திரொஸ்கிகள் தேசிய மறுப்பின் ஊடாக மறுக்கின்றனர். ராகவன் கருத்தமுதல்வாதமாகவே பாhக்கின்ற அளவுக்கு, புலியெதிர்ப்புவாதம் அவரின் கண்ணை மூடிநிற்கின்றது.

தேசம் என்பது பொருள் வகைப்பட்டது என்ற எதார்த்ததை மறுக்கவே, ஸ்ராலினை மறுப்பது அவசியமாகின்றது. தேசத்தின் பொருள் வகைப்பட்ட எதார்த்தத்தின் குறைந்தபட்ச வரையறை இருப்பதை, புரட்சிக்கு தலைமை தாங்கி ஸ்ராலின் தான் முதன் முதலில் வரையறுத்துக் காட்டுகின்றார். இதனால் தத்தவமேதையான லெனின் அதை மிகச் சிறந்த மார்க்சிய வரையறையாக, உலகம் முன் அங்கீகரித்தார். வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் இருந்து ஒரு சமூகப் பிரச்சனையை, ஸ்ராலின் மார்க்கிச வரையறை நேராக்கிவிடுகின்றது. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையிலான இந்த நிலையை, திரோஸ்கி அன்று ஏற்றுக்கொண்டது கிடையாது. இன்றுவரை அது தான் அவர்களின் நிலை. லெனின் - ஸ்ராலின் தேசம் பற்றி மார்க்சிய அடிப்டையில் தான்,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, October 27, 2008

மாத்தையாவும் பிரபாகரனும் - பிள்ளையானும் கருணாவும்

செம்மறித் தமிழர்களுக்கு எல்லாரும் நாடகம் காட்டுகின்றனர். மோதலும் - சமாதானமும் என்று, போட்டோவில் காட்சியளிக்கின்றனர். ஆம் அன்று மாத்தையாவும் பிரபாகரனும் இப்படித்தான் தமிழ் மக்களுக்கு கதை சொன்னார்கள். கடைசியில் மாத்தையாவின் கதை அனைவரும் அறிந்ததே.

காலில் இரும்பிலான விலங்கு ஓட்டப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டு, எலும்புகள் முறிக்கப்பட்டு கொல்லப்பட்டான் மாத்தையா. தலைவர் உபதலைவர் சண்டை, இப்படித்தான் புலிகளின் வரலாற்றில் முடிந்தது. கொல்லப்பட்ட மாத்தையா ஒன்றும் புனிதமானவனல்ல. இதையே அவனும் அன்றாடம் செய்தவன். புலியின் அதே விதி, அவனையும் விட்டுவைக்கவில்லை.

இதேபோல் இன்று பிள்ளையான் கருணா மோதல். இலங்கை அரசின் கைக்கூலிகளுக்குள் நடக்கும் எலும்புச் (பதவிச்) சண்டை. ஆளையாள் கொல்வதில் தொடங்கிய இந்தச் சண்டை, ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பிரெய்ன்வாஷ்

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.

Sunday, October 26, 2008

குறுகிய சுயநலமே தமிழ் தேசியமாகியது

புலிகள் முதல் தமிழ்நாட்டு சினிமாக் கழிசடைகள் வரை, தத்தம் சொந்த சுயநலத்தையே தமிழ் தேசியமாக்கினர். தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து, கூச்சல் போடுகின்றனர், கூத்தாடுகின்றனர்.

தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றி அக்கறையற்ற தமிழ் உணர்வு என்பது, தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தைக் கொம்பு சீவி விடுவதுதான். தமிழ் இனத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை. தமிழர்களும் ஒடுக்குகின்றனர். அதாவது பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் புலிகளும் தான் ஒடுக்குகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வு என்பது, போலியானது பொய்யானது. அது ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரானது.

கருணாநிதி முதல் கழிசடை சினிமாக் கும்பல் வரை போடுகின்ற கூச்சல், தமிழ்மக்களின் அடிப்படையான உரிமைகள் சார்ந்ததல்ல. அது அவர்களின் சொந்த நலன் சார்ந்தது. அடுத்த தேர்தலை வெல்லுதல், யாருடன் அரசியல் கூட்டு என்ற உள்ளடகத்தில், அறிக்கைகள் கருத்துகள், பிளவுகள், கைதுகள் என்று எல்லாம் அரங்கேறுகின்றது.

இவை எவையும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன.

நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா?கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசிய மென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.


இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு .இல்லாததனாலேயே.................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலியைத் தனிமைப்படுத்தி அழிப்பது

புலியை அழிப்பதும், தமிழ்மக்களை காப்பதும் என்ற அரசியலையே தமிழக அரசியல் ஜனரஞ்சகமாக்கப்படுகின்றது. பேரினவாத யுத்தத்துக்கு, எதைச் செய்யவேண்டும், எதைச்செய்யக் கூடாது என்பதை அடிப்படையாக கொண்டு, புலிக்கு எதிரான யுத்தமாக நெறிப்படுத்தவே அனைவரும் (கருணாநிதி முதல் (ஜெயலலிதா வரை) முனைகின்றனர். புலியை அழிக்கக் கூடாது என்பவர்களை, தன் சட்டத்தின் எல்லைக்குள் ஒடுக்குகின்றது, ஒடுக்கக் கோருகின்றது.

புலியில் இருந்து தமிழ்மக்களை தனிமைப்படுத்துவதும், இதன் மூலம் புலியைத் தனிமைப்படுத்தி அழிப்பது என்ற அடிப்படையில் தான், தீர்வை (சுயநிர்ணயமல்லாத தீர்வை) வைக்கும்படி இந்தியா முதல் அமெரிக்கா வரை தெளிவாகக் கோருகின்றது. இந்த நிகழ்ச்சி நிரலின்படி தான், தமிழகத்தின் இன்றைய அரசியல் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றது. இதற்குள் பேரினவாதம் இறங்கிவர மறுப்பதும், அதை உருவாக்குவதும் தான் திரைமறைவில் நடக்கும் இன்றைய இராஜதந்திரங்களும் முரண்பாடுகளும். பேரினவாதத்திடம் இவர்கள் கோருவது, தமிழினத்தின் சுயநிர்ணயத்தை மறுக்கும் வகையில் ஒரு தீர்வை. அதாவது நாய்களுக்கு ஒரு எலும்பைத் தான்
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்