தமிழ் அரங்கம்

Saturday, January 26, 2008

இராணுவத் தீர்வை திணிக்க அரசியல் தீர்வு

பி.இரயாகரன்
27.01.2008

ப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.

இப்படி அரச பயங்கரவாதம் தன்னை மூடிமறைக்க முனைகின்றது. தனது பயங்கரவாத வழியிலான இராணுவத் தீர்வை, தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றது. இதை எங்கும் எதிலும் செய்கின்றது. இதற்கு ஏற்பவே தமிழ் அரசியல்.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பேரினவாதிகள் மட்டுமல்ல, தேசியம் ஜனநாயகம் என்று கூறி பிழைக்கும் கூட்டம் கூட அங்கீகரிப்பது கிடையாது. தேசியம் ஜனநாயகம் என்று கூறி அரசியல் செய்பவர்களும் சரி, இதற்கு இடையில் மிதப்பவர்களும் சரி, தமிழ் மக்களைச் சார்ந்து நிற்பதை மறுப்பதே, அவர்களின் அரசியலாகிவிட்டது. தேசியவிடுதலை என்பது ஆயுதங்களாகி விடுகின்றது. ஜனநாயகம் என்பது இந்திய இலங்கை கூலிக் கும்பலாக மாரடிப்பதாகி விடுகின்றது. இவர்கள் தேசியம் ஜனநாயகம் என்பதை, ஒன்றை ஒன்றுக்கு எதிராக நிறுத்தி, தமிழ் மக்களைக் கூறுகூறாக துண்டு துண்டாக வெட்டுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் எதைத்தான், எப்படித் தான், தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியும்.

இதனாலும், தமது வர்க்க குணத்தாலும், தமிழ் மக்களின் உணர்வுகளை, உரிமைகளைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவை அழிக்கப்படுவதையும் எப்படித் தான் அடையாளம் காணமுடியும், எப்படித்தான் அதை அடையாளம் கண்டு கோரமுடியும்.

விளைவு பேரினவாதம் தனக்கேற்ற ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரிக்கின்றது. ஊர் உலகத்தை ஏமாற்ற, தனது பேரினவாத பாசிச வெறியை அரங்கேற்றும், நாடகங்களை மேடையேற்றி, தமிழ் இனத்தையே அழிக்கின்றது.

இப்படி பேரினவாதம் தானே தீர்வு என்ற பெயரில் ஊற்றிக்குழைத்ததை, தமிழ் மக்களின் முகத்தில் சேறாய் அப்புகின்றது. அதற்கு நன்கு தெரியும், இதை பாதுகாத்துக் குலைக்க நாய்கள் உண்டென்று. இப்படியும், இதன் மூலமும் தமிழ் மக்களை வேட்டையாட முடியும் என்று, அது கருதுகின்றது.

பேரினவாத அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற கூலிக் குழுக்கள், இந்தியாவின் தயவில் அரசியல் செய்யும் அடிவருடிகள், எல்லாம் இதற்கு ஏற்பவே பாட்டுப்பாடுகின்றனர். இப்படி தமிழ் மக்களின் முதுகில் குத்துவதை மூடிமறைக்க, வேஷங்கள். தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது தான், எங்கள் கோரிக்கைகள் வேறுதான், ஆனால் இப்போதைக்கு இதை ஏற்றுக் கொள்வது அவசியம் என்கின்றனர். இப்படி தலைகீழாக நின்றே, இதைப் பாதுகாக்கின்றனர். எலும்புத் துண்டுக்காகவே இப்படி குலைக்கத் தொடங்கிவிட்டனர்.

இதையே புலியெதிர்ப்பு கருத்துத் தளங்கள், இந்தா தீர்வு என்று தமிழ் மக்களின் மீது ஒரே குரலில் வாந்தியெடுக்கின்றனர். தமது துரோகத்தையும், தமது அடிவருடித்தனத்தையும், தமிழ் மக்களுக்களின் விடுதலைக்கான ஒரே பாதை என்கின்றனர். புலிப் பாசிசத்துக்கான மாற்று, இது தான் என்கின்றனர். இதைத்தான் அவர்கள் ஜனநாயகம் என்கின்றனர்.

புலிப் பாசிசத்தின் இடத்தில் பேரினவாதம் கொண்டுவரும் முயற்சியே, இந்த அடிவருடிகளின் சொந்த அரசியலாகின்றது. இதன் மூலம் தாம் நக்கிப் பிழைக்க முடியும் என்றும் கருதுகின்றது. இதனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏறி மிதித்து, தமது சொந்த சிம்மாசனத்தை நிறுவ முனைகின்றனர்.

இதற்கு ஏற்ப பேரினவாதம் தானே வீசியெறிந்ததை, தனது குப்பையில் இருந்து தேடி எடுத்து இந்தா என்று தமிழ் மக்களுக்கு எறிகின்றது. நாய்கள் முகர்ந்து கொண்டு நக்க ஒடுகின்றது. திரும்பி பார்த்து, வள் என்று குலைக்கின்றது. இப்படி அரசியல் என்பது புலியல்லாத தளத்தில் அடிவருத்தனமாகிவிட்டது. அதை தமிழ்மக்களுக்கு பொருத்தமானது என்று வித்தை காட்ட முனைகின்றனர்.

புலிகள் அடிவாங்கிய சாரைப்பாம்பாகி, தொடர்ந்தும் இராணுவவாத எல்லைக்குள் ஊர முனைகின்றனர். இப்படி எதையும் அரசியல் ரீதியாக எதிர்கொண்டு, அதை முறியடிக்க திராணியற்றவராகி விட்டனர்.

மொத்தத்தில் தமிழ் மக்கள் கருத்தற்ற ஊமையாக்கப்பட்டுவிட்டனர். வரும் எதிரான ஓரிரு கருத்துகளை நிறுத்திவிட புதிய தந்திரங்கள். கருத்துள்ள, எதிர்த்துப் போராடக் கூடியவர்கள் காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். எல்லாம் இனம் தெரியாத நபர்களின் பெயரில், அரசியல் இருப்பு உள்ளவர்களின் அரசியலாகின்றது.

புலம்பெயர் நாட்டில் அதே அரசியல் கொண்டவர்கள். இப்படி தேசியம் ஜனநாயகம் பேசும் வள்ளல்கள், இனம் தெரியாத நபர்களாகவே இணையங்களில் வலம் வருகின்றனர். அவர்களின் அரசியல் என்பது அவதூறுகளாக, தனிநபர் தாக்குதலாக மாறி, தமிழ் மக்கள் பற்றிய குறைந்தபட்ச குரல்களை முடக்க முனைகின்றனர்.

இப்படி மொத்தத்தில் தமிழ் மக்களை சுற்றிவளைத்து, அவதூறுகளால் கழுத்தை இறுக்கி கொல்ல முனைகின்றனர். எந்த நிகழ்ச்சி திட்டத்திலும், செயலிலும் தமிழ் மக்களின் உரிமைகளை, மறப்பது அனைவரினதும் அடிப்படை கொள்கையாகிவிட்டது.

இப்படி இன்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடியவர்கள், அவர்களின் உரிமையை முன்வைக்க கூடியவர்கள் யாருமில்லை என்பதையே, எதார்த்தம் எடுத்துக் காட்டுகின்றது. பொறுக்கிகளும், அடிவருடிகளும் எங்கும் நிறைந்து, அவர்களின் சமூக இழிவுகளே கருத்தாகிவிடுன்றது.

தீர்வுத் திட்டம் தொடர்பாக சமூக அக்கறையுடன் கனடா செழியன் வைத்த வாதத்தை, இனம்

தெரியாத ஒரு அடிவருடி கடித்துக் குதற முனைகின்றது. செழியனின் கடந்தகால கவிதை வரிகளான “ஜேர்மென் வீதிகளிலேயே என்னைத் தேட வேண்டாம்” என்பதைக் கொண்டு, தனது நக்கலுக்கு ஏற்ப இணையத்தில் குலைக்கின்றது.

எல்லாம் எதற்காக? மகிந்தாவின் பேரினவாத தீர்வுத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்ற அற்பத்தனத்தை அடிப்படையாக கொண்டு தான் கவிதை வரிக்கு, அர்த்தம் தேடுகின்றது. செழியன் இருந்த அமைப்பு இந்தியாவின் கோமணமாகியது. அடிவருடிகள் அங்கு தேடினால், எப்படி செழியனைக் காண முடியும். அந்தச் செழியனை 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து" இருந்து அல்லவா காணமுடியும்.

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதே உங்கள் அரசியல். மாறாக செழியனின் கடந்த காலம், நிகழ்காலம் இதில் இருந்து மாறுபட்டது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து நிற்கும் நீங்கள் யார்? உங்கள் அரசியல் என்ன? முதலில் யார் நீங்கள் என்று வெளிப்படையாக வாருங்கள். இந்திய இலங்கை அரசின் பின்னால் மறைந்து நின்று, தமிழ் மக்களுக்கு வேடிக்கையா காட்டுகின்றீர்கள்.

தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகள், இப்படிப்பட்ட அற்பர்களால் தான் கூவி விலை பேசப்படுகின்றது. இந்த அடிவருடிகளின் பொறுக்கித்தனத்தையே அரசு பயன்படுத்தி, தமிழ் மக்களின் இருப்புக்கே வேட்டு வைக்கின்றது.

தமிழ் மக்களுக்கு தீர்வு என்ற பெயரில், தமிழ் மக்களின் எந்த பிரதிநிதிகளுமின்றி ஒரு திடீர் தீர்வு. இப்படி தனியொரு பேரினவாத சர்வாதிகாரி, தனது இராணுவத் தீர்வை திணிக்க அரசியல் தீர்வு என்ற எலும்பை வீசுகின்றார்.

இது பயங்கரவாதிகளுக்கு அல்ல என்று கூறி, ஒரு பாசிச இராணுவப் பயங்கரவாதி நடத்தும் நாடகம் இது. இப்படி தமிழ் மக்கள் மீது என்ன அக்கறை! நாட்டை மறுகாலனியாக்கி வரும் பேரினவாதி, சிங்கள மக்களைப் பற்றியே அக்கறைப்படுவதில்லை. இதில் தமிழ் மக்களைப் பற்றி என்ன அக்கறை.

பேரினவாதம் என்பது மோசடி, சுத்துமாத்து மூலம், எப்போதும் எலும்பைப் போட்டு தமிழ் மக்களையே விலை பேசுவது தான்.

வடக்குக்கு மட்டும் இடைக்கால சபை. வடக்கும் கிழக்கும் ஒன்றாக இருக்காதாம். வேடிக்கை தான். இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை. இது பிரதேசப் பிரச்சனைகளோ, அல்லது வேறு எந்தப் பிரச்சனையோவல்ல. அவைகள் யாவும் இனப்பிரச்சனைக்கு உட்பட்டது தான். அல்லது அவை மற்றொரு வேறான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது, இனங்களை அங்கீகரிப்பதில் தொடங்குகின்றது. இலங்கையில் தேசிய இனங்கள் எவை, அவைகளின் உரிமைகள் என்ன, அவை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பானது. இதுவே அடிப்படை முரணற்ற ஜனநாயகம். இதை மறுக்கின்ற அனைத்தும், மனிதவிரோத தன்மை கொண்டது.

உண்மையில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை யாரும் கோருவதில்லை. கோருபவர்களை இல்லாது ஒழித்துவிடுகின்றனர். புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை, தத்தம் பாணியில் இதைச் செய்கின்றனர். அரசு தனது பேரினவாதப் பாணியில் இதை ஊக்குவித்து, தானும் தன்பங்குக்குச் செய்கின்றது.

இப்படி தமிழ் மக்களின் பிரச்சனை வியாபாரப் பொருளாகிவிடுகின்றது. சிலருக்கு இதனால் வாழ்வும் கொழுத்த வருமானமும்.

இந்தியாவின் மாநிலங்கள் கூட இன அடிப்படையிலானது. குறைந்தபட்சம் இதைக் கூட முன்னிறுத்திப் போராட வக்கற்றுப் போன தமிழ் அரசியல். மறுபக்கத்தில் பேரினவாதம் இந்தியாவின் நலன்களுடன் சேர்ந்து நின்று, புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஒடுக்க முனைகின்றது.

சர்வகட்சி மாநாடுகள் என்ற பெயரில் ஊர் உலகத்துக்கு தலைப்பாகை அணிந்தவர்கள், இந்தப் பேரினவாதிகள். பின் வழமைபோல், அதையே குப்பையில் போடுகின்றனர். முன்னர் குப்பையில் இட்டதை குப்பையில் இருந்து கிளறி எடுத்து, இந்தா என்கின்றனர். இப்படி எத்தனை மாநாடுகள், ஒப்பந்தங்கள். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்த போது, எந்த சர்வகட்சி மாநாட்டையும் இவர்கள் நடத்தியது கிடையாது.

செழியனை நோக்கி எழுதும் அடிவருடி 'ஐம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிக்கிடக்கின்ற பிரச்சினையை ஓரிரவுக்குள் சகல அதிகாரங்களுடனும் தீர்க்கப்படவேண்டும் என்று செழியன் கனவு காண்கிறார்" இப்படி அவர் எதற்காக குலைக்கின்றார். கிடைக்கும் எலும்புத்துண்டுக் கனவு, பேரினவாதத்தைப் பாதுகாக்க பாய்கின்றது.

பேரினவாதத்தின் கொடூரத்தை, அதன் கோட்பாடுகளை, அதன் நடைமுறைகளை பாதுகாக்க, ஒரு நாளில் இதை தீர்க்க முடியாது என்கின்றது இந்த அடிவருடி. சாடிக்கு ஏற்ற மூடி.

தமிழ் மக்களுக்கு எதிரான தீர்வுகளை ஒரு நிமிடத்தில் திணிக்க முடிகின்றது. ஒப்பந்தங்களை ஒரே கணத்தில் கிழித்தெறிய முடிகின்றது. வாக்குறுதிகள் நொடியில் காற்றோடு போய்விடுகின்றது. பேரினவாத கட்சிகளோ, இதற்கு என்ன தீர்வு என்று எதையும் வைக்காது கட்சி நடத்துகின்றனர். இந்த பேரினவாதிகளுக்கு ஏற்ப தமிழ் அடிவருடிகள் அரசியல் செய்கின்றனர்.

பேரினவாதிகள் ஊர் உலகத்தை ஏமாற்றி இராணுவத் தீர்வை திணிக்கத் தான், தீர்வை வைக்கின்றனர். இதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தையே இல்லாததாக்கி, அவர்களை ஒடுக்கி அடிபணிய வைக்க முனைகின்றனர்.

புலியெதிர்ப்பு புல்லுருவிகள் பேரினவாத தீர்வு விசர் பிடித்து, மக்களின் உரிமைகளையே கடித்துக் குதறுகின்றனர். இவை புலிகளின் பெயரில், புலியெதிர்ப்பு அடிவருடிகளின் அரசியலாகின்றது. அதற்கு ஏற்ப பேரினவாதிகளின் திடீர் தீர்வு.



மக்களை அதிக நாட்கள் ஏமாற்ற முடியாது

துப்பாக்கிகளையும், அரச அதிகாரத்தையும், நாற்காலிகளையும், பாண்துண்டையும் வைத்து மக்களை அதிக நாட்கள் ஏமாற்ற முடியாது

செழியன் - நன்றி இணையம் கரித்துண்டு

சுமார் ஒன்றரை வருடத்துக்கும் அதிகமான காலத்தை எடுத்து, 63 அமர்வுகளை நடாத்தி ஒவ்வொரு அமரும் பல மணி நேரம் நீடித்து, 11ஆயிரங்கள் பக்கங்களில் அறிக்கை எழுதிய பின்னர் வழங்கப்பட்ட பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான தீர்வுக் குழுவின் தீர்வு திட்டத்தை முறியடித்து மகிந்த வைத்த தீர்வு திட்டத்தைப் பற்றிய எனது விமர்சனத்தையே நான்; முன்வைத்துள்ளேன்.

சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர், 1988இல், இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளை, நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கோரும் ஒரு சிறு வேண்டுகோளுடன் வந்திருக்கிறது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு.

அரசமைப்புச் சட்டத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, சட்டரீதியான அந்தஸ்தும் பெற்றுள்ள இந்த விடயங்களை(13 வது திருத்த சட்டம்) நடைமுறைப்படுத்துவதற்கு யாருடைய சிபார்சும் அவசியமானதல்ல. ஜனாதிபதியே தம்பாட்டில் அதைச் செய்யமுடியும். இதற்காக சுமார் 20 வருட காலம் இலங்கை அரசு காத்திருந்து உள்ளது. அதை மறுபடியும் சிபார்சு செய்வதற்கு இலங்கையின் பதின்நான்கு கட்சிகளுக்கு ஒன்றை வருடம் எடுத்துள்ளது.

சுமார் 20 வருடங்களாக புதைகுழிக்குள் தான் மூடிய தீர்வு திட்டத்தை, சில வாரத்துக்குள் அவசர அவசரமாக தோண்டி எடுத்து, அந்த செத்துப்போன தீர்வுத் திட்டத்தை காட்டி “இதோ இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு தீர்வு வழங்கிவிட்டோம்” என்று வெளிநாட்டு ராஐதந்திரிகளை அழைத்து விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.

ஆனால் உண்மை என்ன என்பது இலங்கை மக்களுக்கும், உலகத்திற்கும் தெரியும்.

இக்குழுவில் உள்ள பதினான்கு கட்சிகளில் பன்னிரண்டு கட்சிகள் மகிந்தரின் அரசில் அமைச்சுப் பதவிகளுடன் ஒட்டிக்கொண்டு இருப்பவை. எனவே அவற்றினால் நியாயத்தை கதைக்க முடியாது. அதை விட முக்கிய பிரச்சனை என்னவென்றால் மகிந்தாவின் தீர்வை எதிர்க்கின்ற கட்சித் தலைவர்களின் உயிர்ப் பாதுகாப்பு, மகேஸ்வரனுக்கு நடந்தது போல “அம்பே” ஆகிவிடும். எனவே சிறுபான்மை இனங்களிற்கான நியாயமான தீர்வுக்காக மகிந்தாவின் கீழ் வேலைபார்க்கும் இவர்களால் ஒரு அளவுக்குத் தான் போராமுடியும். முழுமையான அரசியல் தீர்வுக்காக இறுதி வரை போராட இலங்கை அரசின் தயவில் தங்கியிருக்காதவர்களால் தான் முடியும். அவர்கள் இலங்கையிலும் இருக்கலாம்; வெளிநாடுகளில் உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

வடக்கில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக மாகாண ஆளுநரே ஆட்சி நிர்வாகத்தைத் தொடர்வார். அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கே ஓர் இடைக்கால ஆலோசனைக்குழு அமைக்கப்படுமாம். (மூன்று தமிழர், ஒரு முஸ்லீம், ஒரு சிங்களவர்) அதுவே, ஜனாதிபதியின் விருப்பை நிறைவு செய்யும் விதத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் ஒப்படைக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்கு ஆளுநருக்கு வெறும் ஆலோசனைகளை மட்டும் வழங்கும் சபையை அமைக்க எண்ணும் ஜனாதிபதியும் அவரது அரசுப் பிரதிநிதிகளும், அந்த ஆலோசனைக்குழுவை இடைக்கால நிர்வாகமாகக் காட்ட எத்தனிக்கின்றமை ஆச்சரியமான விடயமில்லை. எசமான விசுவாசம் இது. ஆக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் எதிர்பார்ப்பை சிரமேற்கொண்டு தாங்கி நிறைவு செய்திருக்கின்றது.

ஓரிரவுக்குள் தீர்வு காணப்படவேண்டும் என்று ஒரு காலத்திலும் யாராலும் கனவு காணப்படக் கூடிய விடயங்கள் எதுவுமே உலகத்தில் இல்லை. இலங்கையின் சிறுபான்மை இனங்களின் பிரச்சனையே ஐம்பது வருட பிரச்சனை என்று இருக்க (சந்திரகுமாரே கூறுகின்றார்), அதற்கான தீர்வுகளைக் காண பல தலைவர்கள் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொண்டு தோல்விகளை தழுவிய வரலாறுகளும் இருக்க செழியன் ஓரிரவுக்குள் முடிவு காண கனவு காண்கின்றார் என்று பொ. சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது வருட பிரச்சனைக்கு, ஐம்பது வருடமாக தீர்வு காணமுயற்சித்த ஒரு விடயத்திற்கு, ஐம்பது வருடத்தின் பின்னர் ஆவது ஒரு சரியான தீர்வு வேண்டும் என்று நியாயமான ஒரு கேள்வியை யாராவது கேட்டால், “ஓரிரவுக்குள் முடிவு காணமுடியாது” என்று சிங்களப் பேரினவாதத்தின் காலை நக்கும் ஒருவரால்தான் துணிந்து பதில் கூற முடியும்.

இந்த 13 வது திருத்த சட்டத்தின் படி பொலிஸ் நிர்வாகம், காணி என்பன நமது கைகளுக்கு வரும் என்று உண்மைக்குப் புறம்பாக ஒரு கதையை விட்டுள்ளார் இந்த சந்திரகுமார். அது உண்மையல்ல. பொலீஸ் நிர்வாகம், காணி நிர்வாகம் என்பன நமக்கு கிடைக்கவில்லை. குடியேற்றத்தை இந்த தீர்வுத்திட்டத்தால் தடுக்க முடியாது. இந்தியாவுக்கு தற்போது விற்கப்பட்டுள்ள காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையினால் நமது நிலத்தடி நிலம் கடல் கொண்டு உப்பு நீராகி பாலைவனமாவதை நாம் தெரிந்து கொண்டாலும் நம்மால் தடுக்க முடியாது. அப்படி ஒரு நிலை நமது தாய் மண்ணுக்கு ஏற்படும் போது ரொட்டி இல்லை சாப்பிடுவதற்கு எதிர்காலத்தில் நமது மக்களுக்கு ஒரு இலை கூட கிடைக்காது.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான தீர்வுக் குழுவின் சரத்து 4.2.ல் கூறப்பட்டதை பார்க்கலாம்.

- சட்டவாக்க குணாம்சத்திலும் பார்க்க நிருவாக ரீதியான தன்மைகளை எடுக்கக் கூடிய பரிகாரநடவடிக்கைகளை எடுப்பதற்கான பல கட்டங்கள் இருக்கின்றன. பின்வரும் நடவடிக்கைகளை அரசாங்கம் அக்கறையுடன் துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(அ) வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமல்ல, நாடு பூராவும் தமிழ் பேசும் மக்கள் பொலிஸ் நிலையங்களில் தங்கள் சொந்தமொழிகளில் தொடர்பாடல்களைச் செய்து அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக போதுமான எண்ணிக்கையில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை ஆட்திரட்டல் செய்ய வேண்டும்

(recruitment of Tamil speaking police officers in sufficient numbers to enable Tamil speaking members of the public, not only in the North and East, but in the country as a whole, to transact business in their own language in police stations)

ஆக இலங்கை முழுதும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் பொலிசார் இருப்பார்களே அன்றி பொலிஸ் நிர்வாகம் நமது ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. சிங்கள பேரினவாதத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆனால் சந்திரகுமார் தனது கட்டுரையில் உண்மைக்குப் புறம்பாக கூறியுள்ளார்.

சந்திரகுமார் என்பவர் என்னைப் பற்றியும் உண்மைக்கு புறம்பான பல விடயங்களை திட்டமிட்டுப் பொய்யாக எழுதியுள்ளார். அவருடைய நோக்கம் இந்த தீர்வு திட்டம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுமா? இல்லையா என்பதை விவாதிப்பதற்கு பதிலாக அப்பட்டமான பொய்களைக் கூறி உண்மைக்கு புறம்பான வழியில் மக்களை திசைமாற்றிச் செல்வதே ஆகும். அவர் திட்டமிட்டு என்னைக் களங்கப்படுத்த வேண்டும் என்று எழுதிய விடயங்களுக்கு என்னிடம் பதில் உள்ளது. ஆனால் தற்சமயம் அதை தவிர்த்துக் கொள்ளுகின்றேன். தேவை ஏற்பட்டால் மக்களுடன் அதை பகிர்ந்து கொள்ள தயங்கமாட்டேன். ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை உள்ளது, எனது எழுத்துகளின் மூலமும், கனடாவிலான எனது கடந்த கால, நிகழ்கால, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளின் மூலமும் மக்கள் என்னுடைய நிலைப்பாடுகளை புரிந்துகொள்வார்கள் என்று.

யார் என்று தன்னை இனம் காட்டிக் கொள்ளத் திராணியற்ற கோழைகளான சந்திரகுமார் போன்ற போலி முகமூடிகளையும் மக்கள் நிச்சயம் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

புலிகள் என்னை யாழ்ப்பாணத்தில் வைத்து கொல்வதற்கு எடுத்துக் கொண்ட தொடர் முயற்சியின் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பது ஏலவே பெரும்பாலான கரித்துண்டு, மற்றும் தேனீ வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். சந்திரகுமார் பொய்யாக கூறியது போல என்னை அவர் சந்து பொந்துகளில் தேடி இருக்க முடியாது. அச்சமயம் அவர் என் மீது அன்பு கொண்டு தேடி இருந்தால் கூட புலிகளின் சிறைக் கூடங்களில், அல்லது ‘அவர்களது’ புதைகுழிகளில் சென்று எனது பிரேதத்தை தேடி இருக்கவேண்டும்.

தமிழ் மக்கள் தம் பிள்ளைகளின் பசியை போக்க ஒரு பாண் துண்டாவது கிடைத்தால் போதும் என்று நினைக்கின்றனர் என்று சந்திரகுமார் கூறுகின்றார். அதற்கு அரசியல் தீர்வு தேவையே கிடையாது. அரசாங்க அதிபரே பாண் துண்டை போடமுடியும். இன்னம் தேவையானால் சந்திரகுமார் போன்றவர்களை நாடினால் எலும்புத் துண்டையும் தமிழர்கள் சுவைக்கலாம்.

இந்த தீர்வுத்திட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் கூட எந்த பாதுகாப்பும், தீர்வும் இல்லை. அப்போ அவர்களுக்கு பாண் துண்டு போடுவது யார்? அவர்களுடைய குழந்தைகள், கணவன்மார்கள், பெண்கள் பள்ளிவாசல்களுக்கும், வயலுக்கும் சென்று வீடு திரும்புவதை உத்தரவாதப்படுத்துவது யார்?

இந்த பதின் மூன்றாவது திருத்த சட்டம் வடக்கு, கிழக்கின் முதல்வர்களுக்கோ, மந்திரிகளுக்கோ, அவர்களின் மனைவி, மக்களுக்குமே பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையில் இந்த தீர்வு வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும், அவர்களுடைய வாழ்க்கை வழமைக்கு திரும்பும் என்று கரடி விடுகின்றார் சந்திரகுமார்.

நடுநிலைமை என்ற ஒரு விடயமே உலகத்தில் இல்லை. இந்த பொது அறிவும் இந்த சந்திரகுமாருக்கு கிடையாது. சரி எது? பிழை எது? என்று இரண்டு விடயங்கள் மட்டுமே உலகத்தில் உள்ளன.

அத்தோடு இன்னும் ஒரு மிக மோசமான செயல்பாட்டை குறிப்பிட்டு இந்த கட்டுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.

புலிகளின் மீது யாராவது விமர்சனம் செய்தால் “இவன் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன்” என்று தமது ஊடகங்களின் மூலம் பொய்பிரச்சாரம் செய்வது புலிகளின் வழக்கம். அது போல இலங்கை அரசின் மீதும், அவர்களின் காலை நக்குபவர்கள் மீதான விமர்சனத்தை யாராவது வைத்தால் “இவர்கள் புலிகளின் பினாமிகள்” என்று கதைவிடுவது சந்திரகுமார்களின் பாணி. எல்லா வேடிக்கைகளையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

துப்பாக்கிகளையும், அரச அதிகாரத்தையும், நாற்காலிகளையும், முகமூடிகளை வைத்தும், பாண்துண்டையும், கறல் பிடித்த பேணியில் புளித்த பாலை கொடுத்தும் உலகத்தில் உள்ள எந்த மக்களையும் அதிக நாட்கள் ஏமாற்ற முடியாது.

கோடானுகோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே

கோடானுகோடி மக்களுக்காக குருதி சிந்திய தோழர்களே

Friday, January 25, 2008

கிரிமனல் மயமாகிவிட்ட அரசியலே, தேசத்தின் அரசியல்

பி.இரயாகரன்
25.01.2008

னக்கென்று ஒரு மக்கள் அரசியல் நிலையை எடுக்காத அனைவரும், நிலவும் கிரிமினல் அரசியலை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவர்கள் தான். புலிகளின் அரசியல், புலியெதிர்ப்புக் கூலிக் குழுக்களின் அரசியலும் இதே வகைப்பட்டவை தான். இவற்றைத் தாண்டி "தேசத்"திடமும் அவற்றை விட எந்த மாற்று அரசியலும் கிடையாது. இதை கொண்டு பரஸ்பரம் தூற்றுகின்ற, இதுவல்லாத மாறுபட்ட கருத்துகள் மீது தனிநபர் தாக்குதலை நடத்தவென உருவாக்கப்பட்டதே, "தேசம்". இதனால் "தேசத்"தில் இருந்த இடதுசாரி கருத்தாளர்களும், அக் கருத்துகளும் துரத்தியடிக்கப்பட்டன. இப்படி "தேசமோ" பக்காக் கிரிமினல்களின், கும்மியடிக்கும் ஒரு தளமாகியது.

வெளிச்சத்திலோ கவுரமான வெள்ளை வேட்டி அரசியல் வாதிகள். இருட்டில் இவர்கள் தமது வக்கிரத்தைக் கொட்டும் கிரிமினல்கள். இதற்கேற்ப உருவாக்கப்பட்டது தான் "தேசம்". எத்தனை வாசகர்கள் தம்மிடம் உள்ளனர் என்று காட்டவே இணைய வித்தை. தமது வாசகர் எண்ணிக்கையை பெருப்பித்துக்காட்டும், இழிவான மலிவான விளம்பர மோசடிகள். தளத்தில் ஒரே நபரே எத்தனை தடவைகள் மீள வந்தாலும் அவ்வருகைகள் எல்லாவற்றையும் (HITS), இலக்கமாக மாற்றி விட்டு, பார்வையாளர் எண்ணிக்கை என்று போட்டுவிடுகின்றனர். எல்லாம் கிரிமினல்களுக்கே உரிய அற்ப உத்தி.

இப்படிப்பட்ட சகலகலாவல்ல பக்காக் கிரிமினல்களுடன் நாம் மோதுகின்றோம். புலி மற்றும் புலியல்லாத முன்னாள் இன்னாள் கொலைகாரர்கள் முதல், அதன் வாரிசுகள் தான் இந்த தளத்தில், இவர்களுக்கு ஆதாரமாக எமக்கு எதிராக உள்ளனர்.

நாங்கள் சமூக மாற்றம் பற்றிப் பேசுவதோ, இவர்களால் சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. எமக்கு முன்னால் இந்தக் கிரிமினல்கள் தொடர்ச்சியாக அம்பலமாவதால், "தேசம்" தனது கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்தை பாதுகாத்துக் கொள்ள முனைகின்றது. இதனால் தம்மைத் தாம் ஊடகவியலாளர் என்று கூறி, தம் மீது பட்டு வேட்டியை போட்டு மூடுவதன் மூலம் அரசியலில் நடிக்கின்றனர். ஊடகவியலாளனுக்கு அரசியல் கிடையாதாம். இந்திய கைக்கூலிகளான ஈ.என்.டி.எல்.எப் அரசியல் செய்யும் ரீ.பீ.சீயும் கூட, தாம் ஊடகவியலாளர் என்று இதையே கூறிக் கொள்கின்றது. இப்படி எல்லா கிரிமினல்களும் வேஷம் போட்டே, மக்களின் முதுகில் அரசியல் செய்ய முனைகின்றனர்.

ஒரு மனிதன், நிலவும் இச் சமூக அமைப்பிலான பொதுவாழ்வில் எதைச்செய்தாலும், தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள போக்குகளையும் சுயவிசாரணை செய்தேயாக வேண்டும். இது யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதிலும் புலியை விமர்சிக்கின்றவன், புலியல்லாத கைக்கூலி அரசியலை கடுமையாக விமர்சித்தேயாக வேண்டும். இதேபோல் புலியல்லாத தளத்தை விமர்சிக்கின்றவன், புலிகளின் பாசிச அரசியலை கடுமையாக விமர்சித்தேயாக வேண்டும். இந்த இரண்டையும் செய்யாதவர்கள், எப்படிப்பட்ட கிரிமினலாக இருப்பான் என்பது வெளிப்படையானது.

"தேசத்"தில் கருத்திடும் வாசகர்களில் பெரும்பான்மை, இப்படிப்பட்ட பக்காக் கிரிமினல்கள். முன்னாள் இன்னாள் கொலைகார கும்பல்கள் அல்லது அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், இருப்பவர்கள் தான். இந்த எல்லைக்குள் தான் "தேசம்", நடுநிலை வேட்டி கட்டி, தனக்கு வேஷம் போடுகின்றது. ஊடகவியலாளன் பெயரில், சமூக பொறுப்பற்ற ஒரு பொறுக்கியாக இருக்க முடியும் என்கின்றது. இதனால், தாம் எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை என்கின்றது. ஊடகவியலாளன் பணி இதுவா! இவர்களா இந்த சமூகத்தை வழிகாட்டுகின்றனர். இல்லை இவர்கள் சமூகத்துக்கு வேட்டு வைக்கின்ற பிழைப்புவாதிகள்.

புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் என்பது, அரசியல் ரீதியாக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இந்த இரண்டும், மனிதத்தையே வேட்டையாடியவை, வேட்டையாடுபவை. இதை யாராலும் மறுக்க முடியுமா? இதைப்பற்றி முடிவெடுக்க முடியாது என்று கூறுகின்றவன் யார்? இவற்றுடன் ஒன்றி சலசலப்பவனை, இதை மறுக்காது இந்த இழிவான நடத்தைகளை கொண்டு அரசியல் வம்பளப்பவனை, நாம் எப்படி அழைப்பது? நாம் பொறுக்கிகள் என்றும் கிரிமினல் என்று கூறுவதில், என்ன தவறு உண்டு. இல்லை என்று யாராலும் இதை மறுக்க முடியுமா?

இப்படி இதற்குள் அரசியலே கிரிமினல் மயமாக்கிவிட்டது. பாசிசம் தேசியமாகிவிட்டது. ஜனநாயகம் கைக் கூலித்தனமாகிவிட்டது. இலங்கை இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை நக்குவதைத் தான் ஜனநாயகம், என்கின்றனர். இப்படி இவற்றுக்குள் இயங்குபவன், எப்படி சமூக அக்கறை உள்ளவனாக இருக்கமுடியும். இதன் மீது விமர்சனம் செய்யாத, விமர்சனம் செய் மறுக்கின்றவர்கள் யார்? இவர்கள் எல்லாம் பக்காக் கிரிமினல்கள் தானே.

இப்படிப்பட்ட "தேசத்"திடம் எந்த நேர்மையும் கிடையாது. '.. 'எனது பதிவு ஒன்றில் இருந்து ஒரு பகுதியை நீக்கிய "தேசம்" அதை அவதூறு என்றது.” இதுவே இரயாகரன் தேசம் மீது கொதிப்படையக் காரணம்" என்கின்றது. இதுவே அப்பட்டமான முழுப் பொய். எமது கருத்தை மறுக்கின்ற, "தேசத்"தின் இழிவான அரசியல் உத்தி. அத்துடன் கருத்துக்கு வெளியில், முதலில் முரண்பாடுகள் தொடங்கியது எங்கே? நான் ஒரு கூட்டத்தில் பேசியதையே "தேசம்" திரித்தபோது தான், விவாதம் தொடங்கியது.

பாரிஸ் தலித் மாநாட்டை தொகுத்த விதமே திரிபுதான். இதை நாம் மறுத்தபோது தான், நேரடி விவாதம் தொடங்கியது. வேறு இருவர் இதே போன்று குற்றச்சாட்டை வைத்தபின் தான், மௌனவிரதத்துக்குச் சென்றார். பின் எம்மீது எதிர் தாக்குதலுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு, தாக்கத் தொடங்கியவர், எனது அரசியலை விமர்சிக்க முடியாது, தனிநபர் தாக்குலை நடத்தத் தொடங்கினார். அவரே கூறுவதுபோல், 'அது ஊடக வரைமுறைகளுக்கு அப்பால் தனக்கென ஒரு அரசியல் கருத்து நிலையை எடுக்காது" என்று மற்றவனை கேனயனாக்கி கதை கூறுகின்றவர்கள், எம்மீது என்ன நிலையை எடுக்கின்றனர். அதுவே தனிநபர் தாக்குதலாகின்றது. அதனூடாக அரசியல் செய்ய முனைகின்றனர். எம்மீது குற்றம் கண்டு பிடிக்க முனைந்தனர், முனைகின்றனர். இப்படித் தான், இதற்குள் தான் அனைத்தும். இதனால் இல்லாத பொல்லாததை, எம்மீது வாரி அறைகின்றனர்.

"தேசம்" ஊடகவியல் நேர்மையைப் பாருங்கள் '4. 'ஈ.என்.டி.எல்.எப் ஏகபோக தலைவர் ராஜனின் சகோதரர் கொழும்பில் காணாமல்போன பின்னணியுடன் இந்த தேன் நிலவு” என்று நான் எழுதியதைப் குறிப்பிட்டெழுதி, 'ராஜனைக் கடத்தியது யார்?"என்கின்றார். ராஜனைக் கடத்தியது யார் என்று நான் எழுதினேனா? எப்போது? எங்கே? ராஜனின் தம்பி கடத்தப்பட்டார் என்று தானே நான் கூறினேன். ஒரு ஊடகவியலாளன் அரசியல் அவதூறுக்காக, ராஜனைக் கடத்தியது யார் என்று கேள்வி எழுப்புவது வேடிக்கை தான். இவரே கூறும் 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? போன்ற கேள்விகளைக் கேட்டு தகவலை உறுதிப்படுத்த வேண்டும்." என்கின்றார். ஆனால் அவரின் இந்த வாக்கு அது எனக்கு விதிவிலக்கு.

ராஜனின் தம்பியை புலி தான் கடத்தியது. இதற்குள் தான் அரசியல் பேரம் நடந்தது. இதற்கு ஆதாரம் இல்லை என்பது, பிழைப்புவாத அரசியலின் திருகுதாளங்கள். இது மக்களுக்கு உதவாது. கிரிமினல்கள் இதை தொடர்வதற்கே உதவும். 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்று எழுதும் இவர்கள், இதன் மூலம் அந்த கிரிமினல்களை பாதுகாப்பவர்கள். ஆனால் எமக்கு எதிராக கற்பிக்கும் கற்பனையை பாருங்கள். 'உடைந்த ரீ.பீ.சீயின் உபகரணங்களை புலிகளே திருத்திக் கொடுத்ததாகவும் எழுதுகிறார்." நாம் சொல்லாத ஒன்றை, இப்படி சொல்ல முனைவது தான் இவர்களின் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஊடகவியல்.

'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்றால் இதை, மூடிமறைத்து இருட்டில் இயங்கும் கிரிமினல்களுக்கு, இதை எப்படி பயன்படுத்துவது? அதன் கொலை அரசியல் முதல் அதன் இழிவான தேசியம் ஜனநாயக அரசியல் வரை எப்படி சுயவிசாரணை செய்வது?

தமிழ் மக்கள் தம்மைத் தாம் சுட்டுக் கொன்றனரா? தம்மை தாம் கழுத்தை அறுத்து கொன்றனரா?. தம்மைத் தாம் கடத்திச் சென்றனரா? மொத்தத்தில் அரசியல் தற்கொலைக்கு உரிய சதி அரசியலையும் பேரங்களையும் தமிழ் மக்களா செய்தனர்? இவற்றுக்கு, 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்று, எந்த நேரடி ஆதாரமும் கிடையாது என்று கூறி, "தேசம்" அதைப் பாதுகாக்கின்றது. அதை தொடர ஊக்கமளிக்கின்றது. இதுதான் "தேசத்"தின் அரசியல்.

மற்றொரு தலையங்கத்தில் தொடரும்.

Thursday, January 24, 2008

ஜிம்ப்ளா மேளம்

ஜிம்ப்ளா மேளம்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...17.

ஜ்ரங்கியின் உரிமை கொண்டாடும் புகழ்ச்சிக்கு இன்னும் வேறு காரணங்ளும் உண்டு. பர்ஜானியா என்ற திரைப்படம் அஹ்மதாபாத்தில் திரையிடுவதை தனியொரு மனிதனாக நிறுத்தியவன். இப்படம் திரையிடப்பட இருந்த திரையரங்க உரிமையாளர்களை இவன் வெளிப்படையாகவே மிரட்டியும் கூட, அரசு நிர்வாகம் மெளனம் சாதித்தது. "இப்படம் ஹிந்துக்களுக்கு எதிரானது" என்னும் காரணம் மட்டுமே இவனுக்கு போதுமானதாக இருந்தது.. ஹிந்துக்களை நேசிப்பதான பஜ்ரங்கியின் வரைவிலக்கணம் என்னவென்றால், முஸ்லிம்களையும் இன்னும் அவர்கள் தொடர்புடைய எல்லாவற்றையும் வெறுப்பதுவே ஆகும். "எனக்கு தூக்குத்தண்டனை கொடுக்கபட்டாலும் கவலைபட மாட்டேன்; எனது கடைசி ஆசை என்னவென்று கேட்டால், நான் இறப்பதற்கு முன், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி, ஒரு பத்து பதினைந்தாயிரம் முஸ்லிம்களை கொல்லவே நான் விரும்புவேன்."

அவனுடைய (பஜ்ரங்கி) சொந்த நடவடிக்கைகள் தவிர, முஸ்லிம்கள் (இந்தியாவில்) இருப்பதனால் உள்ள "பிரச்சனைக்கு" "தீர்வு" காண, இவனிடம் ஏராளமான யோசனைகள் உள்ளன. "(முஸ்லிம்களை) கொல்வதற்கு டெல்லி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" - மேல்ஜாதிகாரர்களும், பணக்காரர்களும் இதனை செய்ய மாட்டார்கள். ஆனால் குடிசையில் வசிப்பவர்களும் ஏழைகளும் செய்வார்கள். எனவே இவர்களுக்கு (ஏழைகளுக்கு) மட்டுமே உத்தரவிட வேண்டும். இவர்களிடம் கூறவேண்டும், "முஸ்லிம்களிடமிருந்து என்னென்ன வேண்டுமோ, நிலமா?, சொத்துக்களா?, வீடுகளா? எதுவானாலும் அவர்கள் விரும்பியவாறு எடுத்துக் கொள்ளுங்கள் - ஆனால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்ய வேண்டும்". நாடு முழுவதும் முஸ்லிம்கள் இல்லாது அழித்தொழிக்க மேற் சொன்ன திட்டம் உறுதி செய்யும். முஸ்லிம்கள் ஒரு திருமணம் செய்யவும் இன்னும் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளவும் சட்டம் இயற்றப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு ஓட்டுரிமையை மறுப்பதுவும் சிறந்த ஒரு கருத்தாகவே தெரிகிறது.

இனப் படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகள்

சபர்மதி இரயில் தீக்கிரையாக்கப்பட்ட தினமான பிப்ரவரி 27 அன்று பஜ்ரங்கி கோத்ரா செல்கிறான். சபர்மதி இரயில் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த பின்பு , கோத்ராவிற்காக மறுநாளே நரோடா பாட்டியாவிலுள்ள முஸ்லிம்களைப் பழிவாங்க சபதம் எடுத்ததாக தெஹல்காவிடம் அவன் கூறினான். "நான் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விட்டேன் - கோத்ராவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமான பயங்கரத்தை பாட்டியாவில் இருக்குமாறு நான் பார்க்கிறேன்" என முதல் சந்திப்பின் போதே தெஹல்காவிடம் பஜ்ரங்கி சொன்னான். அவன் அஹ்மதாபாத்துக்கு திரும்பி சென்று அன்றிரவே படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். சிறிய ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஹிந்துகளிடமிருந்து 23 கைத்துப்பாக்கிகள் பெறப்பட்டன, எவர்கள் தங்கள் ஆயுதங்களை தரவிரும்பவில்லையோ, அவர்கள் ஹிந்துக்களாக இருப்பினும் கூட மறுநாள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டார்கள். ஏராளமான அளவு எளிதில் தீப்பற்றக் கூடிய திரவங்களும் தேடி பெறப்பட்டது. ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சொந்தக்காரர் இலவசமாக பெட்ரோல் வழங்கினார். முஸ்லிம்களை உயிரோடு எரிப்பதற்குப் பின்னர் இதனைப் பயன்படுத்தியதாகவும், பஜ்ரங்கி தெஹல்காவிடம் கூறினான்

படுகொலைகள்

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தொ(கு)ண்டர்கள் காலை 10 மணியளவில் நரோடா பாட்டியாவிற்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் முதல் தாக்குதலை நடத்திய போது முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பால் புறமுதுகிட்டு ஓடிவிட்டதாக, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் கூறினான். இந்த சந்தர்பத்தில் தான், பஜ்ரங்கியின் ஏராளமான ச்சாரா அடிவருடிகள் காவி கும்பலுடன் சேர்ந்து புது தாக்குதலை தொடர்ந்தனர். 10:30 அளவில் நரோடா பாட்டியாவிலுள்ள நூரானி மஸ்ஜிதிலுள்ள மினாராவை அவர்கள் உடைத்தனர். அதைத் தொடர்ந்து எரிபொருள் முழுமையாக நிரப்பப் பட்ட டேங்கரை மஸ்ஜிதின் கட்டிடத்தின் மீது கொண்டு இடிக்கவே, அது வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. டேங்கரிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் முஸ்லிம்களையும் இன்னும் அவர்களின் வீடுகளை எரிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.

முதல் சுற்று கடுமையான தாக்குதல்களுக்குப் பின், தாக்குதல்கள் தீவிரபடுத்தபட்ட பின்பு மாலை 3 மணி வரை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே ஒழிந்துக் கொண்டனர். அன்று மாலை 5லிருந்து 6 வரை வன்முறை கும்பல்கள் தங்கள் வெறியின் உச்சத்தை அடைந்தனர். அநேக பெண்களும் இன்னும் இளவயது பெண்களும் முதலில் கற்பழிக்கபட்டனர். அதன் பிறகு மண்ணெண்ணை மற்றும் பெட்ரோலால் நன்கு நனைக்கப்பட்டு எரிக்கபட்டார்கள். பக்கத்திலுள்ள மாநில ரிசர்வ் போலீஸ் தங்கியுள்ள முகாமிற்கு, சில டஜன் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் புகலிடம் தேடி ஓடினர். அந்த முகாமிலிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் தலைவரும் ஒரு முஸ்லிமே. அவர் இவர்களுக்குப் புகலிடம் அளித்தார். இல்லையெனில் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.

நரோடா தாக்குதல்களில் பங்குபெற்ற சிலர் காக்கி கால்சட்டை அணிந்திருந்ததோடு, தங்கள் நெற்றியில் காவி கயிற்றையும் கட்டியிருந்தனர். அரசு போக்குவரத்து கழகத்தினுடைய பணிமனையிலிருந்து மண்ணெண்ணை, டீசல் மற்றும் எண்ணெய் ஆகியவை கேன்களில் நிரப்பப்பட்டு அநேகர் தூக்கிச் செல்வதைப் பார்த்தாகச் சாட்சிகள் கூறுகிறனர். (முஸ்லிம்களில்) எவர்கள் இவர்களது (காவி வெறியர்களின்) அருகாமையில் வருகிறாரோ அவர்கள் மீது இந்த திரவ எரிபொருள்களை ஊற்றி, பின்னர் தீ வைத்து கொளுத்தினார்கள். இன்னும் எவர்களை(முஸ்லிம்களை) நெருங்க முடியவில்லையோ அத்தகையோர்கள் மீது எரிபொருளால் நன்கு தோயக்கப்பட்ட துணியைப் பந்து போல் சுற்றி அதில் நெருப்பு வைக்கப்பட்டு அவைகள் வீசப்பட்டன. நரோடாவிலுள்ள ஒரு திறந்த வெளியில் மிகப் பெரிய குழி ஒன்று உள்ளது. அதன் ஒரு புறத்தில் சாய்வான ஒரு தளம் அக்குழிக்குள் கொண்டு செல்லும். மறுபுறமோ மிகச் செங்குத்தானது. இந்தக் குழிக்குள் ஏராளமான முஸ்லிம்கள் பதுங்கியிருந்த போது வன்முறை வெறி கும்பல் அக்குழியை சூழ்ந்துக் கொண்டு, எரிபொருள்களை அதனுள் கொட்டி தீ வைத்தது.

நரோடா பாட்டியாவில் அன்றைய ஒரே நாளில் 97 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாலும், உயிர் தப்பியவர்கள் கூறும் காணாமல் போன மற்றும் தங்கள் கண்ணெதிரே சாகடிக்கபட்ட உற்றார் உறவினர்களை குறித்து தரும் விளக்கமான பட்டியல்களைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும் போது இறந்தவர்களின் தொகை இதனை விட மிக மிக அதிகமான எண்ணிக்கையாகும் என்பதே உண்மை என்பது புலனாகிறது.

கொல்லப்பட்வர்களில் பெரும்பாலானோர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எரிந்து கருகி போய் இருந்தார்கள் அல்லது உடல் பகுதிகள் சிதைத்து சின்னா பின்னமாக்கபட்டிருந்தனர். "நாங்கள் கண்டம் துண்டமாக வெட்டினோம், எரித்தோம். இது போல ஏராளாமானவர்களை செய்தோம்" என பஜ்ரங்கி கூறினான். "நாங்கள் அவர்களை தீயிட்டு கொளுத்துவதையே சரி என்று கருதினோம். ஏனென்றால், ---மகன்கள் சொல்லுகிறார்கள், இவர்கள் இறந்தவர்களை தகனம் செய்ய மாட்டார்களாம், இவனுங்க பயப்படுறானுங்க; எனவே அது தான் அவனுங்களுக்கு நேர்ந்தது”. உயிர் தப்பியவர்களில் பெரும்பாலானோர் இறந்தவர்களின் உடலை பெறுவதற்காக உரிமை கோரமுடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். பதவியிலிருந்து நீக்கப்பட்ட டஜன் எண்ணிக்கையிலான சாட்சிகள், நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பாக குழந்தைகள் எரிக்கப்பட்டது, இன்னும் பெண்கள் கற்பழிக்கப்பட்டது போன்ற எக்கச்சக்கமான கோர வன்முறை சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். "நாங்கள் அவர்களில் எவரையும் விட்டு வைக்கவில்லை" என பஜ்ரங்கி கூறினான். இவர்களின் (முஸ்லிம்கள்) ஜனத் தொகை பெருகுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அவர்கள் யாராக இருந்தாலும் சரி, பெண்கள் அல்லது குழந்தைகள் இருப்பினும் கூட ஒன்றும் கவலையில்லை, அவர்களை வெட்டி தள்ளனும், நையப்புடைக்கனும், கண்டம் துண்டமாக வெட்டி சாய்க்கனும், பின் ......மகன்களை எரிக்கனும்" என்று பஜ்ரங்கி கூறினான்.


கவுஸர் பானு என்ற பெண்மணி அன்றைய தினத்தில் 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுடைய வயிறு கிழித்து எறியப்பட்டது. இன்னும் பிரசவிக்கும் நிலையில் முழு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த அவளுடைய கருசிசுவானது வெளியே இழுத்தெடுக்கப்பட்டு, பின் வாளின் நுனியில் வைத்து தூக்கப்பட்டு, பின் தரையில் வீசி எறிந்து, இறுதியில் தீயில் வீசப்பட்டது. தான் கவுசர் பானுவின் வயிற்றை கிழித்து வேறாக்கிய விதத்தை பஜ்ரங்கி சிலாகித்து நினைவு கூறினான், "ஒரு கர்ப்பிணி......................."(எழுதக் கைநடுங்குவதால் தவிர்க்கப்படுகிறது). வெறி கொண்ட பகைமையின் அர்த்தத்தை அவன் எவ்விதம் முஸ்லிம்களுக்குக் காட்டியுள்ளான்! "நீங்கள் எங்களுக்கு தீங்கிழைத்தால், எங்களால் தகுந்த பதிலடி தரமுடியும்".

மிகப் பெரிய அளவில் (காவி வெறியர்களால் நிழ்த்தபட்ட) தாக்குதல்களும் இன்னும் அதன் கொடூரங்களும், உயிர் தப்பிய அனைவர்களையும் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து ஓடிப் போகச் செய்தது. ஒவ்வொரு வீடும் கொள்ளையடிக்கப்பட்டது. சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. உயிர் தப்பியவர்களில் அநேகமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இன்னும் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்தினரை விட்டும் பிரிந்து ஒரு வாரம் 10 நாட்கள் வரை ஒன்றிணைய முடியவில்லை .மேலும் சிலருக்கு இன்னும் அதிக நாட்கள் ஆகியது. ஏராளமான பெண்கள் தங்களது மானத்தை மறைப்பதற்கு கூட துணி எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் நிவாரண முகாம் வரையிலும் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஏராளமான கற்பழிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், அவற்றில் ஒன்றில் தானும் ஈடுபட்டதாகவும் சுரேஷ் ரிச்சர்ட் தெஹல்காவிடம் கூறினான்.

தெஹல்கா: ச்சாராக்களும் கற்பழிப்புகளைச் செய்ததாக கூறப்படுகிறது........

ரிச்சர்ட்: இங்கே பார்..... ஒன்று மட்டும் உண்மை..... ஆயிரக்கணக்கான பசியுடையவர்கள்(காமம்) போகும் போது, சிலர் பழங்களைச்(பெண்களை) சாப்பிடத் தான் செய்வார்கள், மற்றவர்கள் மாட்டார்கள்... எப்படியிருந்தாலும் பழங்கள் கசக்கப்பட்டு வீசி எறியபடப் போகிறது.... பார்! நான் பொய் சொல்லவில்லை... மாதா என் முன்னே இருக்கிறது ( ஒரு சிலையை நோக்கி சைகை காட்டுகிறான்)..... ஏராளமான இளம் வயது முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு இன்னும் தீயிட்டு சாகடிக்கப்பட்டார்கள், சிலபேர் பழங்களை எடுத்துக் கொண்டு தங்களுக்கே உதவி செய்து கொண்டனர்....

தெஹல்கா: கண்டிப்பாக சில கற்பழிப்புகள் நடந்திருக்க வேண்டும்....

ரிச்சர்ட்: அதிகமாகவே (கற்பழிப்புகள்) இருந்திருக்க வேண்டும்.... எங்களுடைய சகோதரர்களும், எங்களுடைய ஹிந்து சகோதரர்களும், விஹெச்பியை சார்ந்தவர்கள் மற்றும் RSS யை சார்ந்தவர்களும் இருந்தனர்...... யாரும் தனக்கு தேவையானதை (பெண்களை) எடுத்திருப்பார்கள்....பழங்கள் இருக்கும் போது எடுக்காமல் யார் தான் இருப்பார்கள்?..... அவர்களை(முஸ்லிம்களை) எவ்வளவு அதிகம் துன்பப்படுத்தினாலும் அது குறைவானதே... நான் உண்மையிலேயே அவர்களை வெறுக்கிறேன்.... அவர்களை விட்டு வைக்க விரும்பவில்லை ... பார் என் மனைவி இங்கே தான் அமர்ந்து இருக்கிறாள். ஆனால் நான் ஒன்றை சொல்கிறேன்..... பழம் இருந்தது எனவே அது சாப்பிடப் படவேண்டும்... நான் கூட சாப்பிட்டேன்... ஒரு தடவை சாப்பிட்டேன். (அடத்தூ! மானங்கெட்டக் காட்டுமிராண்டிகளை விடக்கேவலமானவர்களே. உங்களுக்கெல்லாம் சிறிது கூட வெட்கம் என்பது இல்லையா? நிச்சயம் ஒருநாள் வந்தே தீரும். அந்நாள் இதற்கெல்லாம்..... - இறை நேசன்)

தெஹல்கா: ஒரு தடவை தானா?

ரிச்சர்ட்: ஒரு தடவை தான்.... பிறகு மீண்டும் கொல்வதற்குப் போகணும்.... (உறவினர் பிரகாஷ் ரத்தோடிடம் திரும்பி அவன் கற்பழித்துக் கொலை செய்த பெண்ணைப் பற்றி சொல்கிறான்).... உபயோகமில்லாதப் பொருட்களை வாங்கும் வியாபாரியின் மகளான நசீமா.... நசீமா குண்டான ஒருத்தி... நான் மேலே......

தெஹல்கா: நீ அவள் மேலே ஏறினாயா?

ரிச்சர்ட்: ஆம், உண்மையாகவே.....

தெஹல்கா: அவள் பிழைத்திருக்கவே மாட்டாள், பிழைத்தாளா?

ரிச்சர்ட்: இல்லை, பிறகு அவளை நான் கூழாக்கினேன்... அவளை ஊறுகாயாய் ஆக்கிவிட்டேன்.

தொடரும்

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

வெள்ளை வேட்டி அரசியல்

பி.இரயாகரன்
23.01.2008

ப்படி தமது அரசியல் என்னவென்று சொல்லாது வித்தை காட்டுபவர்கள் தேசம். புலி, புலியெதிர்ப்பு அரசியலில் மிதப்பவர்கள். அரசியல் ரீதியாக எதையும் தெளிவாக முன் வைக்காதவர்கள். மற்றவன் தனிநபர் தாக்குதல் செய்வதாக கூறியபடி, எந்த அரசியலுமின்றி தனிநபர் தாக்குதலை நடாத்துபவர்கள். தேசத்தினதும், அதில் இயங்கும் வெள்ளைவேட்டி தெருப் பொறுக்கிகளினதும், அரசியல் இதுவே ஆகி விடுகின்றது.

எல்லா பொறுக்கிகளைப் போலவும் மரணித்தவரை வைத்து, அரசியல் செய்ய முனைகின்றது. தேசம் கூறுகின்றது 'தனக்குள்ளேயே முரண்பட்டு சமூகத்தை நிந்தித்து திட்டித் தீர்த்து தன்னையொரு இடதுசாரி புத்திஜீவி என அவர் நிரூபிக்க முயல்கின்றார். அவர் மரணித்தவர்களையும் விட்டுவைப்பதில்லை." என்கின்றார். நாம் சமூகத்தை திட்டி தீர்க்கின்றோமாம்! சரி, எங்கே? எப்போது? எப்படி? அதை எடுத்து வைக்க வேண்டியது தானே. சமூகத்தை அணிதிரட்ட முடியாது என்று கூறி, இலங்கை இந்திய அரசுகளுடனும், ஏகாதிபத்தியங்களுடனும் சலசலக்கும் நீங்கள், சமூகம் பற்றிக் கதைப்பதே அரசியல் வேடிக்கை தான்.

இவர்கள் சமூகத்தை என்று கூறுவது எதை? புலியெதிர்ப்பு கும்பலைத் தான். மக்களுக்கு எதிராக, இலங்கை இந்திய முதல் ஏகாதிபத்தியம் வரை கூலிக்கு மாரடிக்கும் ஜாம்பவான்களைத் தான் சமூகம் என்கின்றனர். இவர்களின் அரசியல் வரையறைப்படி, புலியெதிர்ப்பில் எந்த வர்க்க முரண்பாடும், சமூக முரண்பாடுகளும் பிரதிபலிப்பதில்லை. நாங்கள் எல்லாம் ஒன்று தான் என்ற போலி மூகமுடியை அணிந்துகொண்டு, எதிர்புரட்சிக்கு முற்போக்கு முலாம் பூசுவது தான், இதன் பின்னுள்ள அரசியல். புலியை எதிர்த்தால் அது முற்போக்கு. அதை நாம் கேள்விக்குள்ளாகினால் மனநோய், தனிநபர் தாக்குதல் என்கின்றனர்.

இப்படிக் கூறி தேசம் முதற்கொண்டு தமது அரசியலை மூடிமறைக்கின்றனர். தமது அரசியல் பின்புலம் மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில், இப்படி அதிதமான அக்கறை. இதனால் எமது எழுத்து விளங்குவதில்லையாம்! யாரும் வாசிப்பதில்லையாம்! எத்தனை பேர் உள்ளனராம்!

இப்படி கோயபல்ஸ் பாணியில் விடாக்கண்டர் போல் மீளமீளப் புலம்புகின்றனர். இவை எல்லாம் எதற்காக கூறுகின்றனர். உங்கள் அரசியல் என்ன? எப்படி மக்களின் விடுதலைக்கு வழி சொல்லுகின்றீர்கள் என்று நாம் கேள்வியை எழுப்பியதால் கூறுகின்றனர். தம்மை எவரும் இவ்வாறு அம்பலப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தான் இப்படி அவதூறு செய்கின்றனர்.

நீங்கள் கூறுவது போல் நாம் 'சமூகத்தை நிந்தித்து திட்டித் தீர்த்து" அரசியல் செய்வதாக எடுப்போம். அந்த சமூகத்தை தீட்டித் தீர்ப்பதாக கூறும் நீங்கள், எப்படி சமூகத்துடன் இணைந்து நிற்கின்றீர்கள். அரசியல் ரீதியாக எப்படி சமூகத்தின் அரசியலை பேசுகின்றீர்கள்? அதை முதலில் வையுங்கள். அதை வைக்க, உங்கள் அரசியலால் முடியாது. ஆகையால் தான், எம்மை தாறுமாறாக அவதூறு செய்து திட்டுகின்றீர்கள் அல்லவா!

அடுத்து என்ன சொல்லுகின்றீர்கள். 'மரணித்தவர்களையும் விட்டுவைப்பதில்லை." என்கின்றீர்கள். 'பராவின் மரணம் தொடர்பான இரயாகரனின் கட்டுரையையும் அந்நண்பர் தந்து அவற்றுக்குப் பதிலளிக்கும்படி கேட்டுக் கொண்டார். முதலில் பதிலளிப்பதில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது." இப்படி வேடிக்கை காட்டுகின்றார். பின் '.. நீங்கள் பராவுக்கு மட்டும் செய்யவில்லை சபாலிங்கத்திற்கும் செய்துள்ளீர்கள் உங்கள் உறவினரான கலைச்செல்வனிற்கும் செய்துள்ளீர்கள்" என்று நண்பரின் மொழியில் கூறுகின்றார். என்ன செய்ய சொல்கின்றார். நாங்கள் மரணத்தை வைத்து அரசியல் செய்வோம், ஆனால் அதை கண்டு கொள்ளக் கூடாது என்கின்றார். தாம் செய்யும் அரசியலோ புனிதமானது. அதை விமர்சிக்க கூடாது என்கின்றார்.

நீங்கள் முரண்பாடாக கூறுவதை பாருங்கள். 'மரணம் என்பது நிரந்தரமான பிரிவு. ஈடுசெய்ய முடியாத இழப்பு. இது வெறுமனே இசங்களுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அதற்கும் அப்பால் மனித நேயத்துடன் சம்பந்தமானது." என்கின்றீர்கள். இதை உங்களால் காப்பாற்ற முடிகின்றதா? மரணத்தை அரசியலாக்கி விலை பேசுவது யார் ? இலாபம் தேடுவது யார்?. நீங்கள் கூறியவாறே மரணத்தை அரசியல் அறுவடைக்காக இல்லாத எல்லைக்குள் அணுகினால், அந்த துயரத்தை அப்படிப் பகிர்ந்து கொண்டால், நாம் சொல்வதற்கும் எதுவுமில்லை. அதே துயரமும், மனக்கவலையும் எமக்கும் உண்டு.

இதைவிடுத்து மரணத்தின் துயரத்தை அரசியலாக்கினால், அதை அரசியலாக பயன்படுத்தினால், அந்த அரசியல் மீது எமக்கு விமர்சனம் உண்டு. உண்மையில் இங்கு துயரம் பகிரப்படுவதில்லை, மாறாக கீழ்த்தரமான அரசியல் செய்யப்படுகின்றது. அந்த போலித்தனத்தை, அந்த போக்கிலித் தனத்தை, அந்த இழிவான கேடுகெட்ட அரசியலை நாம் அம்பலப்படுத்துகின்றோம்.

மரணத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? உயிருடன் வாழ்ந்த போது முதுகுக்கு பின்னால் மரணித்தவரை தீட்டித் தீர்த்தவர்கள், மரணத்தின் பின்னால் கட்டியழுது அங்கு அரசியல் கோமாளி நாடகங்கள் ஆடவில்லை என்று உங்களால் சொல்ல முடியமா? இப்படி கேடுகெட்டவர்கள் மரணத்தை அரசியல் ஆக்கினால், நாம் அதன் மீது கருத்துக் கூறுவோம்.

நாம் எந்தவிதத்திலும் இந்த அரசியலுடன் சம்பந்தப்படாத, மரணம் அடைந்த குடும்பத்தினரின், உறவினர்களின், நண்பர்களின் துயரத்தை என்றும் கொச்சைப்படுத்தியது கிடையாது. அவர்களின் துயரம் மலையளவானது. பராவின் மரண நிகழ்வில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்து இருப்பின், நாம் கலந்து கொண்டு இருப்போம். ஆனால் அரசியல் செய்வதற்காகவல்ல.

மரணங்கள் சொல்லும் செய்தி வலிமையானது. அதன் துயரமும், கவலைகளும் மனித இனத்துக்கு பொதுவானது. அப்படி நாங்களும், நீங்களும் கலந்து கொள்ளும் வரை, எமக்கு இதையிட்டு விமர்சனம் கிடையாது.

மாறாக மரணத்தை அரசியலாக்கினால், எரிகின்ற வீட்டில் அள்ளியது இலாபம் என அரசியல் ஆதாயம் தேடினால் அதன் மீது விமர்சனம் உண்டு. பொது வாழ்வில் ஈடுபடும் நபரின் நடத்தைகள், அவரின் அரசியல், அதை வைத்து பிழைப்பு நடத்துகின்ற அரசியல் பொறுக்கிகள் மீதான விமர்சனம், இப்படி தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.

'மரணித்தவர்களையும் விட்டுவைப்பதில்லை." என்று கூறி, சபாலிங்கத்தை, கலைச்செல்வனை மட்டும் நாம் விமர்சிக்கவில்லை. நாம் ராஜீவ், சிவராம், பாலசிங்கம், உமாகாந்தன், புஸ்பராஜா, டயானா, அன்னை தெரேசா, அரபாத் என்ற நீண்ட, எல்லையில், மரணத்தின் பின்னான விமர்சனத்தை செய்துள்ளோம். அப்படியிருக்க சபாலிங்கத்தையும், கலைச்செல்வனையும், பராவையும் சொல்லி, உங்கள் நண்பருடன் சேர்ந்து பிழைப்புவாத பொறுக்கி அரசியலா செய்கின்றீர்கள். பொது வாழ்வின் மீதான விமர்சனமும், சாதாரண மனிதர்கள் மீதான விமர்சனமும் ஒன்றல்ல.

அந்த தாய் பற்றி எனது கருத்து, அப்படிப்பட்டதே. ஒரு சாதாரண பெண் என்ற குறிப்பிட்டுத்தான், அவரின் உயர்வான விதிவிலக்கான சமூகம் சார்ந்த, பொதுவில் மற்றவர்கள் செய்ய முடியாத விடையத்தை அடிப்படையாக கொண்டு அஞ்சலிக் கட்டுரையாக்கினேன். ஒரு சாதாரண பெண் என்பதன் ஊடாக, இந்த சமூகத்தில் உள்ள அனைத்து சமூக குறைபாடுகளின் ஒரு பகுதியை அவர்களும் கொண்டு இருந்தனர். அதுவே சமூக போக்காக காணப்படுகின்றது. எந்த சாதாரண மனிதர்களும் திட்டமிட்டு, உங்களைப் போல் பிழைப்புவாத அரசியலையும் செய்தது கிடையாது. மரணத்தை அப்படி குறுக்கி, அரசியல் உள்நோக்கத்துடன் அணுகுவது கிடையாது. அவர்கள் முன், அதுவோ துயரம் தரும் மரணம், அதாவது மரணம் தான்.

இதை விடுத்து பிணத்தை வைத்து பணம் சம்பாதிப்பது, மக்கள் விரோத அரசியல் செய்வது, எமது இலங்கை அரசியலில் பொதுவான போக்காகிவிட்டது. புலி மட்டுமல்ல, புலியெதிர்ப்பும் அப்படித்தான். ஏனென்றால் எந்த மக்கள் அரசியலும் இவர்களிடம் கிடையாது. பிணத்தை வைத்து, மக்கள் விரோத அரசியல் செய்வதே, இவர்களின் அரசியல் பிழைப்பாகிவிடுகின்றது.

இதனால் தான், விமர்சனம் என்பது இதன் மீது தவிர்க்க முடியாது. ஒரு மரணம், அரசியல் நிகழ்வாக மாற்றப்படும் போது, அது விமர்சனத்தை உள்ளடக்கியது தான். இது எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பம் மீதானதல்ல. மாறாக அரசியல் பொறுக்கிகள் மீதானதே.

இப்படி விமர்சனம் செய்தால் 'உங்கள் உடற்பேழையைத் தாங்கிச் செல்லக் கூட ஒருவரும் இருக்க மாட்டார்கள்" என்கின்றீர்கள். போலிகளும், பொறுக்கிகளும் எனது பிணத்தை வைத்து அரசியல் செய்வதைவிட, அனாதையாக சாவதே மேலானது. அரசியல் நேர்மையற்றவர்கள், சமூக அக்கறையற்றவர்கள், பொதுவாழ்வை கேடாக பயன்படுத்துபவர்களா! எனது பிணத்தை தூக்க வேண்டும். அதையா நான் அரசியல் இலட்சியமாக எதிர்பார்க்கின்றேன். அதை நான் வெறுக்கின்றேன். அதைத் தடுக்கவே, மரணத்தின் பின்பும் எனது கருத்துப் போராடும்.

நாய் கடித்து குதறித் தின்றால் கூட, அது மேன்மையானது. பொறுக்கிகளை விட நாய் மேலானது. முகம் தெரியாத வகையில் எத்தனை மனிதர்களைக் கொன்றவர்கள், அதை ஆதரித்தவர்கள், அந்த அரசியலை இன்றும் கொண்டுள்ளவர்கள், அனாதைப் பிணங்களை விதைக்கும் அரசியலைக் கொண்டவர்கள், பிணங்களை வைத்து அரசியல் செய்கின்றவர்களா, எனது பிணத்தை தூக்க வேண்டும். சீ, வெட்கக் கேடு.

இதைவிட அனாதை மரணம் மேலானது. இதற்காக அரசியல் சமரசம் செய்பவர்கள் அல்ல. அது மூடிமறைக்கப்பட்ட பிழைப்புவாதிகளின் வெள்ளை வேட்டி அரசியல்.


மற்றொரு தலையங்கத்தில் தொடரும்.

Wednesday, January 23, 2008

மக்களின் சேமிப்புகளை அபகரிப்பதே பங்குச் சந்தை

பி.இரயாகரன்

இக் கட்டுரை அண்மையில் வெளியாகிய உலகமயமாதல் பாகம் இரண்டில் வெளிவந்தது. காலத்தின் தேவையை ஒட்டி பிரசுரமாகின்றது.

ங்குச்சந்தைக்கு வரும் பணம் எங்கிருந்து வருகின்றது. அங்கு இலாபம் எப்படிப் பெறப்படுகின்றது. எதுவும் வானத்தில் இருந்து திடீரென இறங்குவதில்லை. மாறாக ஒருவரிடம் இருந்து ஒருவர் திருடுவது தான் பங்குச் சந்தை. ஒருவன் உழைப்பை, அவனின் சேமிப்பை அபகரிப்பதற்கான முதலாளித்துவ சுதந்திர வழிதான், பங்குச் சந்தை. இது ஒரு சூதாட்டம் தான்.

பணம் என்பது மனித உழைப்பிலானது. இந்த பணம் தான் பங்குச் சந்தையில் திருடப்படுகின்றது. உழைப்பின்றி மூலதனத்தை பெருக்கலாம் என்று ஆசை காட்டி, உழைப்பிலான பணத்தை திருடுவதே இதன் சூக்குமம். இப்படி மத்தியதர வர்க்கத்தினதும், அதற்கு மேற்பட்ட வர்க்கத்தினதும் சேமிப்புப் பணத்தை உறிஞ்சும் இடம் தான், பங்குச்சந்தை.

உள்ளடக்க ரீதியாக இதுவொரு சூதாட்டம். பணத்தைப் பெருக்கும் அற்ப முதலாளித்துவ சுதந்திர ஒழுக்கக் கோட்பாட்டு விதிக்கமைய, இதைக் கவர்ந்து எடுக்கும் திட்டம் தான் இந்த சூதாட்டம். வாங்கி விற்றல் என்ற, சாதாரணமான இலாபநட்ட கணக்குக்குள் தான் சேமிப்புகள் பிடுங்கப்படுகின்றது.

உண்மையில் பங்குச் சந்தை எந்த உழைப்பையும் செய்வதில்லை. நானும் நீயும் வைத்துள்ள பணத்தை முதலீட்டுப் பங்குகளில் போட வைப்பதன் மூலம், என்னுடைய பணத்தை உன்னிடம் எப்படி வரவைப்பது என்பதுதான் அதன் விதி. பங்குகளின் விலை நிலையானதோ, அந்த பணம் திருப்பித்தரப்படுவதோ அல்ல. அதை வாங்கலாம் விற்கலாம். அதாவது இலாப நட்ட கணக்கு உட்பட்டது. மூலதனம் திடீரென்று திவாலாகும் போது, போட்ட பணம் அதோ கதி தான்.

பங்கு ஏன் விற்கப்படுகின்றது. ஒன்று மற்றவன் பணத்தை திருடுவது. இரண்டு முதலீடு என்பது, உண்மையான மூலதனம் நிலையானதாக இருப்பதில்லை. போலியான மூலதனத்தின் நெருக்கடியை தவிர்க்க, அதன் திவாலை மூட, இலாப விகிதத்தினை ஈடுசெய்ய, பணத்தை சொந்த உற்பத்திக்கு வெளியில் இருந்து கறக்கவே, பங்குகள் பங்குச் சந்தைக்கு வருகின்றது.

பங்குக்கு வரும் முதலீடும், அது உருவாக்கும் உற்பத்தி இலாபமும், பங்கை வாங்குபவனுக்கு பகிரப்படுவதில்லை. பங்கு மற்றவன் வாங்கிய பங்குப் பணத்தில் இருந்துதான், திருட வேண்டும். அதேநேரம் பங்கு வாங்க கொடுக்கும் பணத்தின் ஒரு பகுதி, உற்பத்தி மூலதனத்தின் அசலான நபரிடம் பெருமெடுப்பில் குவிகின்றது.

உண்மையில் யார் இழக்கின்றனர். பங்கை வாங்கி விற்கின்றவர்கள் தான், தமது பணத்தை ஒவ்வொரு சதமாக இழக்கின்றனர். ஒருவர் அதிகம் பெற்றால், மற்றவர்கள் அதைக் கட்டாயமாக இழக்க வேண்டும். தனது பணத்தை இழப்பது, அல்லது பெருக்குவது என்ற எல்லைக்குள் தான் சிலர் பிழைத்துக்கொள்ள, பலர் அதில் அழிகின்றனர்.

உற்பத்தி முதலீடு திவாலாகிவிடும் போது, அதில் இயங்கும் பங்குகள் எல்லாம் ஒரு வினாடியில் பஸ்பமாகி விடுகின்றது. இப்படி பங்குகள் என்பது, மத்தியதர வர்க்கமும் அதற்கு மேற்பட்ட வர்க்கமும் ஒரு வர்க்கமாக இருக்கும், அதன் அடிப்படையாக உள்ள சேமிப்பை சூறையாடுகின்றது. அதாவது வர்க்கத்தின் இருப்பை, கீழே தள்ளுகின்றது.

2000ம் ஆண்டு பங்குனி மாதம் பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, 670000 கோடி டொலர் காணாமல் போனது. காணாமல் போனது என்றால், அது சிலரால் திருடப்பட்டது. அத்துடன் இது போலியாக வீங்கி உள்ளிழுத்த பணம் சேர்ந்து காணாமல் போய்விட்டது. இது உலகம் தளுவிய வகையில், அதன் திவால் தெரியாதவரையில், இது இதற்குள் அதற்குள் அமிழ்ந்து காணப்படுகின்றது.

இப்படி உற்பத்தி மூலதனத்தையும், நிதி மூலதனத்தையும் பெருக்கும் அடிப்படையில் இயங்குவது தான் பங்குச்சந்தை. இப்படி பரந்துபட்ட மக்கள் சொத்துரிமை எதுவுமற்ற மந்தைக் கூட்டமாக மாற்றுவதில், பங்குச் சந்தையும் ஒன்று. இன்று இந்த சூதாட்டத்தில் அன்னிய பணம், தாராளமாக புகுந்து சூறையாடுகின்றது.

1999 இல் பாரிஸ் பங்குச் சந்தையில் 40 சதவீகிதம் வெளிநாட்டு பணமாக இருந்தது. அந்தளவுக்கு இது ருசி கண்ட பூனையாகவே உலகெங்கும் அலைகின்றது. இந்திய பங்குச் சந்தையில் இதுதான் நடந்தது.

2004 ம் ஆண்டு தேர்தலுடன் இந்திய பங்குச் சந்தையில் நடந்த சோகத்தைப் பாருங்கள். 133000 கோடி இந்திய ரூபா திடீரென காணாமல் போனது. உண்மையில் என்ன நடந்தது? இந்திய அரசை தமக்கு சாதகமாக நடக்கக் கோரி, விடுத்த மிரட்டல் மூலம் நிகழ்ந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வர வேணடும் என்ற அடிப்படையிலும், அன்னிய மூதலீட்டு நிறுவனங்கள் 18000 கோடி இந்திய ரூபாவை திடீரென்று பங்குச் சந்தையில் கொட்டின. அதை இப்படி ஊதிப்பெருக்கியது. மறுபக்கத்தில் பா.ஜ.க விளம்பரம் செய்து வெல்ல வைக்க, 150 கோடி ரூபாவை செலவு செய்தது, இந்தா இந்திய ஒளிர்கின்றது என்றது. ஆனால் பா.ஜ.க தோற்க, அன்னிய நிறுவனங்கள் பங்கை விற்கத் தொடங்கியது. அதே நேரம் அரசை மிரட்டத் தொடங்கியது. 'நாங்கள் பங்குகளை விற்றுவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறினால் உங்களின் அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து போகும். அதனால் எங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுங்கள்" என்று மிரட்டியது. இப்படித்தான் சுதந்திரமான ஜனநாயக சந்தைகள் கொழிக்கின்றது. இந்திய அரசில் அன்னிய செலவாணி கையிருப்பில் 10300 கோடி டொலர் இருந்தது. இதில் 3130 கோடி அன்னிய மூதலீட்டு நிறுவனங்களின் நிதி. இப்படி மிரட்டி இந்திய அரசை தனக்கு சாதகமாக இயங்க வைத்தது. இதற்குள்ளான இழப்பு தான் 133000 கோடி ரூபா. எப்படிப்பட்ட உண்மை, இந்த சூதின் சூக்குமத்தை நிர்வாணமாக்குகின்றது.

அதேநேரம் பொருளாதார நெருக்கடியும், மூதலீட்டு நெருக்கடியும் சுற்று வழிப் பாதைகளால் மக்களின் பணத்தைக் கொண்டு அடைக்கப்படுகின்றது. அமெரிக்கா 1999 இல் பங்குச் சந்தை பணத்தில் இருந்து 15000 கோடி டொலரை முதலீட்டுக்காக உறிஞ்சிக் கொண்டது. இதை செய்ய முன், அமெரிக்காவின் ஒய்வூதியப் பணத்தில் இருந்து 680000 கோடி டொலரை பங்குச் சந்தையில் கொட்டியது.

இப்படி நெருக்கடிகள் சுற்றிவளைத்து ஈடுகட்டப்படுகின்றது. திவாலைத் தடுக்க, மக்களின் பணத்தை உறிஞ்சி அதை அங்கும் இங்குமாய் கைமாற்றப்படுகின்றது. இன்று திருப்பிக் கொடுக்க முடியாத மக்களின் சேமிப்புப் பணம், ஒய்வூதியப் பணம், பங்கு மூலதனமாக்கி நாட்டை விழுங்கும் நடைமுறை புகுத்தப்படுகின்றது.

வீங்கிவெம்பிய வடிவங்களின் ஊடாக, ஊதிப்பெருக்கி பொருளாதார நம்பிக்கை என்ற மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. அதைக் கொண்டு மக்களின் சேமிப்புகளை இழுத்தெடுத்து அதை சூறையாடிக் கொடுப்பதும், திவாலை மூடிமறைப்பதும் நடக்கின்றது. மக்கள் ஒவ்வொருவரும் தனது உழைப்பிலான பணத்தை தாமே வைத்திருந்தால், வங்கி திவாலாகிக் கிடப்பதையும் நாடு நடுரோட்டில் அம்மணமாகிக் கிடக்கின்ற உண்மை வெளிப்படையாகவே வெளிப்படும்.

உதாரணமாக ஊதிப்பெருக்கி வளர்ச்சியடைந்து வருவதாக காட்டப்பட்ட ஒரு துறைதான், தொலைத் தொடர்புத்துறை. 1997-2000க்கும் இடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைக்கு 400000 கோடி டொலரைச் செலவு செய்தது. இதன் பின்னால் ஒரு போலியான மூலதனம் இயங்கியது. பங்குச்சந்தைப் பணத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது. இப்படி ஊதிப்பெருக்கிய பலூனில் இருந்து காற்று வெளியேறத் தொடங்கிய போது, தடாலென உலகப் பொருளாதாரமே சரிந்தது. தொலைத் தொடர்பு துறை தனது தவணைக்கடன் செலுத்த தவறுதல் 6000 கோடி டொலராகியது. இதில் இருந்து தப்பிப் பிழைக்க 2001 முதல் ஆறுமாதத்தில், 3 லட்சம் பேரை தொலைத்தொடர்பு வேலையில் இருந்து நீக்கினர். இதைச் சார்ந்து இருந்த துறைகளில் 2 லட்சம் பேர் வேலையை இழந்தனர். அதே நேரம் ஊதிப்பெருக்கிய பங்குச் சந்தை சரிந்தது. 2000 இல் தொலை தொடர்புத் துறையில் பங்கு மதிப்பு 630000 கோடி டொலராக இருந்தது. இது 2001 இல் 380000 கோடி டொலராக சரிந்து வீழ்ந்தது. ஆசியா நெருக்கடியின் போது பங்குகளின் இழப்போ மொத்தம் 81300 கோடி டொலர் மட்டும் தான். தொலைத்தொடர்பு நெருக்கடியோ அதை தாண்டி 250000 கோடி டொலரை உறிஞ்சி, அதை காணாமல் பண்ணியிருந்தது. அந்தப் பணம் சிலரிடம் விரைந்தோடிச் சென்றிருந்தது. இதை இழந்தவர்கள், பலவழிகளில் மக்கள். தனிப்பட்ட பணக்காரப் பட்டியலில் நடக்கின்ற அதிவுயர் செல்வக் கொழிப்பு இப்படித்தான், அகோர வேகத்தில் வளருகின்றது.

அமெரிக்காவில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமும், தகவல் தொழில்நுட்பத்தில் உலகில் முதல் நிறுவனமான ~~வேல்ட்கொம் கவிழ்ந்தது. அதே நேரம் உலகில் மத்திய தர வர்க்கத்தின் மடியில் அடிவிழுந்தது. 65 நாடுகளில் 150000 கிலோ மீற்றர் நீளத்துக்கு கேபிள் கட்டமைப்பை கொண்டு 80000 ஊழியருடன் இயங்கிய இந் நிறுவனம், எப்படி திவாலானது? மூலதனம் தன்னதை தான் தனக்குள் வீங்க வைத்தது. இது தனக்குள் மோசடிகளில் ஈடுபட்டது. இதன் போது ஏற்பட்டும் நெருக்கடிகள், உண்மையின் சொரூபத்தை நிர்வாணமாக்கி விடுகின்றது. தனது சொந்த பங்கை அதிக விலையில் வாங்க வைக்க, 33.97 கோடி டொலரை பயன்படுத்தியது. சந்தையில் விலையை போலியாக உயர்த்த இது உதவியது. சந்தை களைகட்ட, சேமிப்புகள் வேகமாக உட்புகுந்தது. அதாவது இதன் மூலம் மத்தியதர வர்க்கத்தினதும் மேல் மட்டத்தினதும் சேமிப்புகளை கவர்ந்திழுத்தது. அதேநேரம் 3700 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.

இப்படி மோசடிகள் மூலம், இந்த நிறுவனம் இலாபம் தரும் பங்கு நிறுவனமாக உலகெங்கும் காட்டிக்கொண்டது. அது திவாலாகி அம்பலமானதைத் தொடர்ந்து, விசாரணைகள் மூலம் உண்மைத்தன்மை தெரியவரும் வரை, இது வளர்ச்சி பெற்றுவரும் அதிக இலாபம் தரும் ஒரு நிறுவனமாக உலகில் காட்டப்பட்டது. இதன் விசாரணைகளின் போது, இந்த நிறுவனம் திவாலாகி கிடப்பது அம்பலமானது. 400 கோடி டொலர் நட்டம் ஏற்பட்டு இருந்ததும், அதை மூடிமறைக்க செய்த சதிகளும் அம்பலமானது. அத்துடன் சேவை முதலீடாக காட்டி, வரிச் சலுகை பெற்றதுடன், பங்குச் சந்தையில் தன்னை வீங்க வைத்தது அம்பலமானது. முதலில் பங்கை வாங்கியவர்கள், எதுவுமற்றவராக மாறினர். இதை இயக்கியவர்களின் தனிப்பட்ட சொத்து, பல கோடியால் பெருகியது.

எத்தனை மோசடி. பங்குச் சந்தை மோசடிகளில் ஈடுபட்ட உலக இணையம் (றுழுசுடுனு ஊழுஆ), தனது 4000 கோடி டொலர் கடனை மூடிமறைத்து இலாபம் தரும் நிறுவனமாக உலகை ஏமாற்றியது. 2001 இல் 380 கோடி நட்டம் ஏற்பட்ட போது, இலாபம் சம்பாதித்தாக உலகை எமாற்றி பங்குச் சந்தையை மோசடி செய்தது. தனது சொந்த பங்கை வாங்க, 33.97 கோடி டொலரை கடனாக கூட கொடுத்தது. பங்குச்சந்தையில் பங்குகள் மோசடிகள் ஊடாகவே அவை ஊதிப் பெருப்பிக்கப் படுகின்றது.

பாருங்கள், செரக்ஸ் (Xerox) என்ற அமெரிக்க நிறுவனம், 1997 முதல் தவறான வகையில் தனது இலாப நட்டத்தை முன்வைத்து பங்குச் சந்தையை ஏமாற்றியது. 1997 முதல் 2002 வரையான 5 வருடத்தில், 600 கோடி டொலரை தனது கணக்கு வங்கியில் மோசடியாக புகுத்தியது. தனது வருமானத்தை 200 கோடி டொலரால் அதிகப்படுத்தி காட்டியது. இதன் உயர் அதிகாரிகள் பங்குச் சந்தையின் மூலம், 3,5 கோடி டொலரை சுருட்டமுடிந்தது. இதன் உச்சக்கட்ட பங்கின் விலையோ 60 டொலராக இருந்தது. மோசடிகள் அம்பலமானதை அடுத்து, பங்கு 7 டொலராக சரிந்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் முக்கிய நபர், தனது தனிக்கணக்கில் 2.5 கோடி டொலரை சொந்தமாக்கிக் கொண்டார். யார் இதை இவரிடம் இழந்தனர் என்றால், பங்கை 60 டொலருக்கு வாங்கியவர்கள் தான்.

இது போல் தான் வேல்ட்கொம் (றுழசடனஉழஅ) 400 கோடி டொலரை சேவை மூலதனமாக காட்டி ஏமாற்றியது. இது குறுகிய இலாபத்தை காட்ட உதவியது.

இதுபோல் மருத்துவ நிறுவனமான ரிட் எயட் (சுவைந யுனை) 100 கோடியால் தனது வருமானத்தை உயர்த்திக் காட்டியது. மனித உழைப்பிலான சேமிப்புகளை உறிஞ்ச, மோசடிகள் தான் ஒரே வழி. இதில்தான் பங்குச் சந்தை இயங்குகின்றது.

உலகில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான என்ரோன் இதையே செய்தது. மின்சாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய என்ரோன் என்ற அமெரிக்க பன்நாட்டு நிறுவனத்தின் மோசடியில், அமெரிக்காவின் மிகப் பெரிய இரு வங்கிகளும் சேர்ந்து ஈடுபட்டன. இந்த குற்றத்தை மூடிமறைக்க, வங்கிகள் 25.5 கோடி டொலரை இலஞ்சமாக தரவேண்டும் என்ற உடன்பாட்டை செய்து கொண்டது. என்ன செய்தது, கடன்களைக் கூட பண வரவாக காட்டும் மோசடியைச் செய்தது. இதன் மூலம் பங்குச் சந்தையை கவர்ந்து, பல இலட்சம் மக்களின் சேமிப்புக்களை திவாலாக்கினர். இப்படி மோசடிகள் பல. அதை மூடிமறைக்க, இதில் இழந்த மக்களை ஏமாற்ற விசாரணைகள். அதாவது பங்குச் சந்தை நேர்மையானதாக காட்ட, அதில் தொடர்ந்தும் கொள்ளையிட விசாரணைகள் உதவுகின்றது. திருடர்கள் சேர்ந்து நடத்தும் சுய விசாரணைகள். திருட்டு ஒழுக்கமானதா என்று ஆராய்ந்து, திருட்டுச் சொத்தை சட்டபூர்வமானதாக்குவது தான்.


இப்படித் தான் 1978 இல் அமெரிக்க செனட் 130 தொழில்துறை தொடர்பான ஒரு விசாரணையை நடத்தியது. இதில் 530 தொழில்துறை தலைவர்கள் மற்றைய தொழில் துறை தலைமையகத்தில் திட்டமிடுபவர்களாக இருப்பது தெரியவந்தது. ஒரு திட்டமிட்ட கூட்டுக் கொள்ளை அம்பலமானது. அத்துடன் மூன்றாவது தொழில்துறை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், வருடம் 13000 மாக இருந்ததும் தெரியவந்தது. மூலதனம் கூட்டுக் கொள்ளையை, திட்டமிடப்படுவதை இது மேலும் அம்பலப்படுத்தியது.

உலகில் மிகப் பெரிய பணக்காரப் பட்டியலின் எண்ணிக்கையும், கொள்ளையிட்ட தொகையும் அதிகரித்து வருகின்றது. 2007 க்கும் 2006 க்கும் இடையில் 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு குவித்தோர் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து. இப்படி 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு வைத்திருந்தோர் எண்ணிக்கை, 946 ஆகியது. இது 2005க்கும் 2006 க்கும் இடையில், இந்த அதிகரித்த எண்ணிக்கை 102 யாக இருந்தது. அதே நேரம் 100 கோடிக்கு மேல் செல்வத்தை கொள்ளையடித்து வைத்திருந்தோரின், செல்வத்தின் அதிகரிப்பு 18 சதவீதமாக இருந்தது. இந்த அதிகரிப்பு 2.6 திரிலியன் டொலராக இருந்தது. இதேபோல் உலகில் 10 இலட்சம் டொலருக்கு மேலாக செல்வம் வைத்திருந்தோர் எண்ணிக்கை 2005 இல் 87 இலட்சமாக இருந்த எண்ணிக்கை, 2006 இல் 95 இலட்சமாகியது. செல்வத்தின் அதிகரிப்பு 11 சதவிகிதத்தால் அதிகரித்த அதேநேரம், அது 37.2 ரிலியன் டொலராக இருந்தது. இப்படி தனிநபரிடம் குவியும் செல்வம், எங்கிருந்து எப்படி வருகின்றது? ஆம் உலகமக்களின் உழைப்பில் இருந்து, உழைப்பின் சேமிப்புகளில் இருந்து, முன்னைய தலைமுறை விட்டுச்சென்ற உழைப்புச் செல்வத்தையும் கொள்ளையிடுகின்றது.

இது தான் உலகமயமாதல். உலகை கொள்ளையடிப்பது தான் உலகமயமாதல். உலக செல்வத்தை குவிப்பது தான், ஜனநாயகம் சுதந்திரம். அதற்கு உட்பட்டது தான் அனைத்தும்.

Tuesday, January 22, 2008

அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், மிதக்கும் சூக்குமம்

பி.இரயாகரன்


இக் கட்டுரை அண்மையில் வெளியாகிய உலகமயமாதல் பாகம் இரண்டில் வெளிவந்தது. காலத்தின் தேவையை ஓட்டி பிரசுரமாகின்றது.


மெரிக்காவை உலகின் சூப்பர் பொருளாதார நாடாக இருப்பதாக பொதுவாக நம்பப்படுகின்றது. சமூக விரோதத்தை அடிப்படையாக கொண்ட உலகெங்கும் சுரண்டும் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள் எல்லோரும், தாம் திருடிய பெரும் செல்வத்துடன் அமெரிக்காவுக்குத் தான் ஓடுகின்றனர். இந்த கொள்ளையர்களை வரவேற்கும் விசேட சிறப்பு விசாச் சட்டங்கள். மறுபக்கத்தில் இவர்களுடனான எடுபிடி வாழ்வை விரும்புகின்ற தேசத் துரோகிகளும், அங்கு வாழ்வதற்கு ஏற்ற சிறப்பு விசாச்சட்டம். இப்படிப்பட்டவர்கள் கூடிவாழும் வாழ்வைத்தான், அமெரிக்காவின் சொர்க்கம் என்கின்றனர்.


மனித குலத்துக்கு எதிராக எப்படியும் நுகரலாம், எப்படியும் விபச்சாரம் செய்யலாம், எப்படியும் கொள்ளையடிக்கலாம் என்ற வாழ்வியல் ஒழுங்கியல் முறைதான், அமெரிக்காவின் சொர்க்கம். இதற்கு ஏற்ற அமெரிக்க கொள்கை. உலகில் உள்ள அனைத்தையும் எப்படி திருடுவது உட்பட, அனைவரையும் தனக்கு அடிப்பணிய வைப்பது தான் அதன் உலக ஒழுங்கு. மனித நுகர்வின் சிறு சிறு கூறுகளை எல்லாம், மற்றைய மனிதனுக்கு மறுப்பது அதன் ஜனநாயகம். அதைக் கொள்ளையடித்து மிதமிஞ்சி நுகர்வதே, அமெரிக்க சொர்க்கத்தின் சுதந்திரக் கொள்கை. இதற்கு ஏற்ப உலகம் தளுவிய வகையில் இராணுவ வன்முறைகள், சதிகள், சூழ்ச்சிகள் என்று, எல்லாவித ஆயுதங்களும் கையாளப்படுகின்றது. இதைப் பாதுகாக்கின்ற கும்பல்களே உலகெங்கும் ஆதிக்க வர்க்கமாக உள்ளது. மக்களை எப்படி இதற்கு கீழ் அடிமையாக வைத்திருப்பது என்பதே, இந்த எடுபிடி வர்க்கத்தின் சொந்த அரசுகளாக உள்ளது.


இப்படிப்பட்ட அமெரிக்காவோ திவாலாகி, குமிழிப் பொருளாதாரத்தில் மினுமினுப்பாகி மிதக்கின்றது. உலகத் திருடர்கள் எல்லாம் சேர்ந்தும் கூட, அந்த திவாலை மூடிமறைக்க முடிவதில்லை. சர்வதேச நாணயமாக டொலர் இருப்பதால், சர்வதேச விதிகளை எல்லாம் மீறி டொலரை கொண்டு அது மிதக்கின்றது. அமெரிக்காவின் குமிழிப் பொருளாதாரம் அதன் வங்குரோத்தை மூடிமறைக்க, டொலரை வெறும் பேப்பராக அடித்துவிடுவதையே செய்கின்றது. டொலரின் பெறுமதி குமிழிப் பொருளாதாரத்தினால், வீழ்ச்சி கண்டு வருகின்றது.


1992 இல் அமெரிக்கா தனது உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப, 700000 கோடி டொலருக்கு வெறுமனே பெறுமதியற்ற வெற்றுப் பேப்பரை பணமாக வெளியிட்டது. இப்படி தொடர்ச்சியான விளைவால், ஈரோவோடு ஏற்பட்டு வரும் சரிவில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.


இப்படிப்பட்ட அமெரிக்காவோ உலகில் மிகப்பெரிய கடனாளி நாடாகிக் கிடக்கின்றது. அமெரிக்காவின் உள்ளேயான கூட்டாட்சிகளின் கடன் 1970 இல் 91400 கோடி டொலராக இருந்தது. இது 1987 இல் 184100 கோடி டொலராகியது. மொத்த தேசிய உற்பத்தியில், கடன் 37 சதவிகிதமாகியது. இந்த கடனுக்கான வட்டி 1975 இல் 2320 கோடி டொலரில் இருந்து 1979 இல் 4260 கோடி டொலராகியது. இதுவே 1985 இல் 12940 கோடி டொலராக வீங்கியது. பத்து வருடத்தில் வட்டியாக கட்டும் தொகை 5 மடங்குக்கும் மேலாகியது. வட்டியோ வரவு செலவில் 13.7 சதவிகிதமாகியது. இப்படி அரசுகள் என்பது, மக்களின் பணத்தை திருடி அதை நிதி மூலதனத்துக்கு கொடுப்பதாகிவிட்டது. வரி அறவீடுகள் என்பது, வட்டியை கொடுப்பதற்கான நடைமுறைக் கொள்கையாகிவிட்டது.


1980 இல் 160000 கோடி டொலராக இருந்த அரசாங்கம் மற்றும் தனியார் கடன், 1983 இல் 536000 கோடியாக மாறியது. 1986 இல் 800000 கோடி டொலராக மாறியது. 1990 இல் 1085000 கோடி டொலராகியது. 1991 இல் 1131000 கோடி டொலரில் இருந்து 2000 முடிவில் 1826000 கோடியாகியது. இப்படி அமெரிக்காவின் சொர்க்கப் பொருளாதாரமே, கடன் வட்டி என்ற எல்லைக்குள் இயக்கப்படுகின்றது. மனித குலம் சூறையாடப்படுவதும், அதற்கேற்ற கொள்கையுமே அனைத்துமாகி விடுகின்றது.


இப்படி நிதி மூலதனத்தை கொழுக்க வைக்கின்ற (அமெரிக்கக்) கொள்கையே, உலகமயமாதலாகும். உலக மக்களை கடன் என்ற எல்லைக்குள் வைத்து, அவர்களை சூறையாடுவதே அதன் ஒழுக்கம்.


இப்படிப்பட்ட அமெரிக்கா தனது கடனை அடைப்பதில்லை. அதைப் பெருக்குவதே அரசின் கொள்கையாகும். கடனை அடைத்தல் என்பது, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகி விடுகின்றது. கடனை பெருக்குதல் தான், வளர்ச்சியின் விதியாகின்றது. வளர்ச்சி என்பது கடனை வாங்கி வட்டி மூலம் மூலதனத்தைப் பெருக்குதலாகும். கடனை அடைத்தல் என்பது, நிதி மூலதனத்தை இல்லாததாக்கி மக்களிடம் சூறையாடிக் கொடுப்பதை தடுத்தல். நிதி மூலதனத்தின் பெருக்கத்தை தடுத்தல். நிதி மூலதனத்தின் வளர்ச்சிக்கு இது எதிரானது. இவை முதலாளித்துவ பொருளாதார விதியாகும். இப்படி கடனை பெருக்குவதன் மூலம், மக்களிடம் சுரண்டி நிதி மூலதனத்தை பெருக்குதல் தான் ஜனநாயகக் கொள்கை. இந்த கொள்கை தான், அரசுகளின் கொள்கை. இதுவே உலகளாவிய நிதிக் கொள்கையும் கூட. கடனை அடைத்தல் என்பதை, அனுமதிக்காத உலகமயமாக்கல்.


இந்த வகையில் உருவாக்கப்பட்ட அமெரிக்க பொருளாதாரம், குமிழிப் பொருளாதாரமாகவே மிதக்கின்றது. இந்த போலியான குமிழிப் பொருளாதாரத்தைக் கொண்டு அமெரிக்கா, உலகையே ஆட்டிப்படைக்கின்றது. என்ன தான் வங்குரோத்தில் கிடந்தாலும், கடன் கொடுத்தல், அதைக் கொண்டு கொழுத்தல் என்பதே அமெரிக்காவின் நிதிக் கொள்கை.


இந்த வகையில் 2000 ஆண்டின் முடிவில் ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா கொடுத்த கடன் 219000 கோடி டொலராக இருந்தது. இது 2002 இல் 260000 கோடி டொலராகியது. அதாவது இது மூன்றாம் உலக நாடுகளின் மொத்தக் கடனுக்கு சமனாகும். அமெரிக்கா கொடுத்த இந்தக் கடன், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவிகிதமாகும். அமெரிக்கா கொடுத்த அன்னிய கடன் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் 1997 இல் 12.9 சதவிகிதமாகவும், 1999 இல் 16.4 சதவிகிதமாகவும் இருந்தது. 2002 இல் 22 சதவீதமாகியது.


கடனைக் கொடுத்தல், கடனைப் பெருக்குதல் மூலம், உலகைச் சூறையாடி வாழ்தல் தான் அதன் சர்வதேசக் கொள்கை. மனித உழைப்பைச் சுரண்டி வாழ்தல் போல், நாடுகளையே சுரண்டித் தின்னும் கொள்கை இது. இதுவே உலகத்தின் ஜனநாயகம், இதுவே அதன் சுதந்திரம். கடன் மூலம் உலகை அடிமை கொள்வதுடன், மக்களுக்கு கிடைக்கவேண்டிய வாழ்வாதாரங்களை இல்லாததாக்கி, அதை சூறையாடி வருகின்றனர். ஏழை எளிய மக்கள் வாழ்வியல் அவலம் தான், மற்றவனின் வாழ்வுக்கான ஆதாரம். இப்படித் தான் அமெரிக்காவின் சொர்க்கம், உலக மக்களின் ஏழ்மையின் மீது கட்டப்படுகின்றது.


அமெரிக்க சொர்க்கம் என்பது, சில தனிமனிதர்களின் வாழ்வு சார்ந்தது மட்டும் தான். சூறையாடும் அதை அவர்களுக்கு கொடுக்கும் அமெரிக்க அரசின் வரவு செலவு பற்றாக்குறை என்பது பூதம் போல் பெருகிவருகின்றது. கடனுக்கான வட்டியை நிதி மூலதனத்திடம் கொடுக்கவும், உலகை அடிமைப்படுத்தி சூறையாடி சிலரிடம் கொடுக்கவும் தேவையான பணம், பற்றாக்குறையாகின்றது. இப்படி 1992 இல் 5600 கோடி டொலர் என்ற பற்றாக்குறை, 1999 இல் 26000 கோடி டொலராகியது. இது 2004 இல் 52100 கோடி டொலராகியது. 12 வருடத்தில் வரவு செலவு பற்றாக்குறை 10 மடங்கைக் கடந்துவிட்டது.


இப்படி பற்றாக்குறைகள் ஒருபுறம், மறுபக்கத்தில் அமெரிக்கா முதலாளிகளுக்கு 10 வருடங்களில் மொத்தமாக 15500 கோடி டொலர் வரிச்சலுகை வழங்கியது. என்ன கொள்கை. உலகைக் கொள்ளையடிக்கும் அமெரிக்கா முதலாளிகளுக்கு இலாபமும், கொழுத்ததும் போதாது என்பதால் வரிச்சலுகை. அமெரிக்க ஜனநாயகத்தின் உள்ளடக்கமே இதுதான்.


பற்றாக்குறை என்பது வட்டியும், முதலாளிக்கு வரிச்சலுகையும், உலகெங்குமான ஆக்கிரமிப்பாகிவிட்டது. உலகை கொள்ளையடிக்காமல், இதைச் செய்ய முடியாது என்ற நிலை. உலகெங்கும் பலவழிகளில் சூறையாடுவது, அமெரிக்காவின் தேசிய கொள்கையாகிவிட்டது. அதேநேரம் பற்றாக்குறை என்பது, நிதி மூலதனத்தை பெருக்கும் கொள்கை. புதிய கடன் வாங்குவதன் மூலம், மக்களிடம் சூறையாடி கொடுக்கும் வட்டித் தொழில் செழிப்புறுகின்றது. இப்படி நாடுகளின், அரசுகளின் கொள்கைகள் வக்கிரமாகிச் செயல்படுகின்றது.


இது ஒருபுறம். மறுபக்கம் தலை கால் தெரியாத அதீத நுகர்வால் மொத்த ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை பெருகியது. அதிகமாக நுகர நுகர, இதுவும் அதிகரித்தது. இப்படி 1988 இல் அமெரிக்காவின் ஆண்டுப் பற்றாக்குறை 262500 கோடி இந்திய ரூபாவாக மாறியது. அதேநேரம் யப்பானின் ஆண்டு உபரி 175000 கோடி இந்திய ரூபாவாக மாறியது. இதன் விளைவு அமெரிக்க இறக்குமதியில் யப்பானிய பொருட்கள் 40 சதவிகிதமாகியது. அமெரிக்கா பற்றாக்குறையை ஈடுகட்ட, யப்பானின் முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவில் முதலீடாக்கப்பட்டது. 1987 இல் அமெரிக்கா தொழில் கழகங்களில் 435 ஜ ஜப்பான் விழுங்கியது.


உலகில் கடன் வழங்கும் நாடாக இருந்த அமெரிக்கா 1980 இன் இறுதியில் கடன் வாங்கும் நாடாக மாறியது. ஜப்பான் கடன் கொடுக்கும் நாடாக மாறியது. இப்படிப்பட்ட யப்பான் 1965 முதல் இரண்டு சர்வதேச எண்ணை நெருக்கடி ஆண்டுகளைத் தவிர (1973-75, 1979-80), பொருளாதாரம் உபரியாகவே இருந்துள்ளது. 1965 இல் ஜப்பானின் உபரி 1900 கோடி இந்திய ரூபாவாக இருந்தது. இது 1975 இல் பத்துமடங்காக மாறியது. 1985 இல் 90 மடங்காகியது. இப்படிக் குவிந்த யப்பனின் அன்னியச் செலவாணி, ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்குரிய வகையில் அன்னிய நாடுகளில் முதலீடாக மாறியது.


இந்த ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான தொடர்ச்சியான சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தப்பவும், அமெரிக்க மூலதனத்தின் பலத்தை பெருக்கும் வகையில் உருவானதே உலகமயமாதல். சந்தை விதியை அதற்கு உட்பட்ட சுதந்திரத்தின் விதியை ஜனநாயகத்தின் விதியை கொண்டு, அமெரிக்கா அதை உலகளாவில் கொண்டு வந்தது. மூலதனத்தின் விதியை அனுசரித்து, அமெரிக்காவை மீறுவது என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியங்கள் இதை ஏற்றுகொண்டனர். உண்மையில் உலகை அதிதமாகவே சூறையாடி, உலக நெருக்கடியை இதன் மூலம் பின்போட்டனர். உலகமயமாக்கலுக்கு முன் அமெரிக்காவை மிஞ்சிய ஐரோப்பிய யப்பானிய மேலாதிக்கம் என்பது, அமெரிக்காவுக்கு அச்சம் தரும் வகையில் வளர்ச்சியுற்று இருந்தது. அதை தடுத்து நிறுத்தவும், உலகை மேலும் ஆழமாகவும் நுட்பமாகவும் சுரண்டுவதன் அடிப்படையில், உலகமயமாதலை ஒரு ஆயுதமாக அமெரிக்கா கையாண்டது.


இப்படிப்பட்ட அமெரிக்காவின் மேலாண்மை என்பது, முதலாம் உலக யுத்தத்துடன் கூர்மையடைந்தது. ஐரோப்பாவின் உலகளாவிய ஆதிக்கம் என்பது, சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகியது. அமெரிக்கா 1914 இல் அன்னிய கடன் வழங்கல் 250 கோடி டொலராக இருந்தது. இது 1919 இல், அதாவது முதலாம் உலக யுத்த முடிவில் 700 கோடி டொலராகியது. அதேநேரம் வெளிநாட்டு அன்னிய முதலீடு 720 கோடியில் இருந்தது. யுத்தம் காரணமான 330 கோடி டொலராக குறைந்தது போனது. இப்படி சர்வதேச ரீதியாக ஏகாதிபத்திய உள்முரண்பாடுகள் கூர்மையடைய, ஏகாதிபத்தியத்துக்கு இடையில் அமெரிக்க ஆதிக்கம் வெளிப்படையாக உருவாகத் தொடங்கியது.


இதன் பின்னான இதனடிப்படையில் உருவான இரண்டாம் உலக யுத்தம் கூட, இதைத் தடுத்து நிறுத்தவில்லை. இந்த நிலைமை என்பது 1980 களில் முன்பிருந்தே மாற்றமடையத் தொடங்கியது. ஆனால் அது பிரதான முரண்பாடாகிவிடவில்லை. ருசியா ஏகாதிபத்தியத்தின் இருப்பும், அதுவே ஏகாதிபத்தியதுக்கு இடையிலான பிரதான முரண்பாடாகி நின்றது. மற்றைய ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான உருவாகி வந்த முரண்பாடுகளை பின்னுக்கு வைத்தது. பொருளாதார ரீதியான ஆதிக்கமும், மூலதனம் இடமாறிக் கொண்டிருந்த நிலையிலும் தான், ருசிய ஏகாதிபத்தியத்தின் சிதைவு நிறைவுற்றது.


இது இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இதில் இருந்து மீள, உலகை மறுபடியும் புதிய உத்திகள் மூலம் சுரண்டி தணிக்க, உலகமயமாதல் மூலம் வடிகால் வெட்டப்பட்டது.


இப்படி அமெரிக்கா மிதப்பாக காட்ட, கட்டமைத்துள்ள குமிழிப் பொருளாதாரம் அதன் உள் கட்டுமான கட்டமைப்போ மிகமிகப் பலவீனமானது. அன்னிய மூலதனத்தின் இருப்பில், அது மிதக்கத் தொடங்கியது. 1992 க்கு பின் அமெரிக்காவுக்குள் அன்னிய முதலீடுகளிள் உள் செல்லும் அளவு, அமெரிக்க கடனில் 10 சதவிகிதத்துக்கு மேலானதாக இருந்தது. இப்படி உலகில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறம். நிதி மூலதனம் பாதுகாப்பாக குந்துவதற்கு அமெரிக்காவை தேர்ந்துதெடுக்கும் நிலைமைகள் மறுபுறம். இதன் மூலம் அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், போலியாகவே தன்னை மிதப்பாக்கி காட்டுகின்றது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரிய வீக்கத்தை உருவாக்குகின்றது.


இந்த வகையில் உலகின் வெளிப்பாகங்களில் இருந்து, அமெரிக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களை நிதி மூலதனங்களைக் கொண்டு வாங்குவது அதிகரித்தது. இப்படி அமெரிக்காவுக்குள் புகுந்த தொகையோ, 1995 இல் 19720 கோடி டொலராகும். இந்தக் கடன் பத்திரங்களை வாங்குவதற்காக, உலகெங்கம் திருடிய ஒரு தொகுதி பணம் அமெரிக்காவின் உள்ளே ஓடிவந்தது. இது முந்தைய நான்கு ஆண்டுகளின் சராசரியைப் போல், 1996 இல் இரண்டரை மடங்கு அதிகமாகியது. 1996 இல் இது 31200 கோடி டொலராக அதிகரித்தது. 1997 இல் 18960 கோடி டொலராக இருந்தது. குமிழிப் பொருளாதாரம் இப்படி மிதக்கத் தொடங்கியது. வங்குரோத்து மூடிமறைக்கப்பட்டது. அதாவது இதன் மூலம் பூசப்பட்டது.


நிதி மூலதனத்தை தக்கவைக்கும் வகையிலான நம்பிக்கையின்மை பாதுகாப்பின்மை அதிகரிக்க, இயல்பாக எதிர்மறையில் அவை அடைக்கலம் பெறுகின்றது. போலியான ஒன்றை முன்னிறுத்தி, அதன் பின் தன்னை பாதுகாக்க முனைகின்றது. தனது பாதுகாப்பு இன்மையை மூடிமறைக்கவே, நம்பிக்கை ஊட்டுகின்றது. இந்த போலித்தனம் முடிமறைக்கப்பட, அது நம்பிக்கையின் அடையாளமாகி விடுகின்றது. நம்பிக்கையின் பின், நிதி மூலதனம் ஒடுவது அதிகரிக்கின்றது.


இதுவே அமெரிக்காவின் பங்குச் சந்தையை மிதப்பாக்கியது. இந்த மிதப்பு 1994 இல் 2 சதவிகித அதிகரிப்பை உருவாக்கியது. 1995 இல் திடீரென 17.6 சதவிகிதமாகவும், 1996 இல் 23 சதவிகித அதிகரிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் பங்குச் சந்தை வீங்கி வெம்பத் தொடங்கியது. 1997 இல் இது 30 சதவிகித அதிகரிப்பை உருவாக்கியது. அமெரிக்க பங்குச் சந்தை விலைகள், என்றுமில்லாத வகையில் 200 சதவிகித்ததால் உயர்ந்தது. சந்தை சுட்டெண் 1994 இல் 3600 என்ற நிலையை கடந்து 1999 இல் 11000 தொட்டது. 2000 இன் ஆரமப்பத்தில் 11700 ராக உயர்ந்தது.


உலகில் உள்ள திருடர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விடுவதால், திருடிய சொத்தை பாதுகாப்பாக அமெரிக்காவில் வைக்க முனைவதால், அமெரிக்கப் பொருளாதாரம் மிதக்கின்றது. இதுதான் இதன் சூக்குமம். அமெரிக்க பொருளாதாரத்தின் திவால், எட்டப்பர்களால் மிதப்பாக்கியது.


நிதிவரத்தின் அதிகரிப்பு, பணச் சுழற்றியாகின்றது. வரும் பணம் சும்மா உட்கார்ந்து இருப்பதில்லை. அமெரிக்காவின் தனிநபர் வருமானம் மற்றும் உற்பத்தி முப்பது சதவிகிதம் அதிகரித்தது. நிதி மூலதனத்தின் அதிகரித்த வரவு ஏற்படுத்திய வீக்கம், அரைப்பங்கு பணவீக்கத்தை உருவாக்கியது. அதேநேரம் அமெரிக்க நிறுவனங்களின் இலாபம் 60 சதவிகித்துக்கு அதிகரித்தது.


அமெரிக்க நிறுவனத்தின் கடன் ஒருபுறம் அதிகரிக்கின்றது. இலாபமும் அதிகரிக்கின்றது. நாட்டின் கடன் அதிகரிக்கின்றது. வட்டிப் பொருளாதாரமோ வீங்கி வெம்புகின்றது. இந்த பொருளாதாரம் எப்படிப்பட்டது.


ஒரு போலியான ஒரு பொருளாதார கட்டமைப்பை பேணுவதன் மூலம், உலக செல்வங்களின் மிகப் பெரிய ஈர்ப்பை நடத்தி, அமெரிக்கா பொருளாதாரத்தின் மிதப்பை தக்கவைக்க முடிகின்றது. யப்பான், சீனா, சவுதிஅரபியா போன்ற நாடுகள், தமது மிகப்பெரிய உபரி நிதி மூலதனத்தை அமெரிக்காவுக்குள் நகர்த்தி வருகின்றன. சீனா மற்றம் யப்பான் உள்ளிட்ட கிழக்கு ஆசியா, 170000 கோடி டொலர் அன்னிய செலவாணி கையிருப்பை வைத்துள்ளது. இதில் பாதியை அமெரிக்காவின் பங்குப் பத்திரத்தில் இட்டுள்ளது. இப்படி, அதாவது அமெரிக்கா உலகின் மொத்த சேமிப்பில் இருந்து மூன்றில் இரண்டு பங்கை உறிஞ்சிக் கொள்கின்றது. இதன் மூலம் தான் அமெரிக்க பொருளாதாரம், சரிந்து விழாது தன்னை தடுக்கின்றது.


மேற்கின் பொருளாதார இருப்பு, மற்றைய நாடுகளின பணத்தை தனக்குள் உள்ளிழுப்பது தான். கடனை திணிக்கும் இந்த ஏகாதிபத்தியங்கள், அந்த நாட்டின் கையிருப்பு நிதியை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அந்த நிதியை கடனான மீள நிதிச் சொந்தக்காரர்களுக்கு மீள வழங்குவதைத் தான் மேற்கு செய்கின்றது. இதன் மூலம் அந்த நாட்டிடம் வட்டி அறவிட்டும் மேற்கு கொழுக்கின்றது.


இப்படி 2004 இல் தெற்கு நாடுகளின் நிதி, வடக்கில் தங்கிவிட்ட தொகை மிகப்பெரியது.


சீனா - 61000 கோடி டொலர்

மத்திய வருமான உடைய நாடுகள் - 75100 கோடி டொலர்

மிக குறைந்த வருமானம் உடைய நாடுகள் - 23100 கோடி டொலர்


மேற்கின் செல்வ ஆற்றல் என்பது, தெற்கு நாடுகளின் மேலான பலமுனை பொருளாதார தாக்குதல் மூலம் அபகரிப்பது தான். இதன் மூலம் உருவான அமெரிக்கப் பொருளாதாரமோ, ஆழமான நெருக்கடியுடன் கூடியது.


அமெரிக்கப் பொருளாதாரத்தில் எற்படும் எந்த ஒரு நெருக்கடியும், உலகத்தை கவிட்டு போட்டுவிடும். இந்த எல்லைக்குள் தான் உலகப் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஸ்திரமான நிலைக்கு, நாள் ஒன்றுக்கு 100 கோடி டொலர் நிதி அன்னிய நாடுகளில் இருந்து அமெரிக்காவின் உள்பாய்வது நிபந்தனையாகிவிட்டது. இந்த நிதிப் போக்குவரத்தில் ஏற்படும் எந்த நெருக்கடியும், அமெரிக்கா திவாலாவதை அறிவிக்கும் நாளாக மாறும். அமெரிக்கா என்ற கற்பனையான வடிவம், மீள முடியாது தகர்ந்து போகும். உலகமே ஒரு குழப்பத்தில் சிக்கிவிடுவதையும், உலகமே ஒரு கிளர்ச்சிக்குள் செல்வதை முதலாளித்துவ பொருளாதாரத்தினால் தடுக்கமுடியாது.


கற்பனையான அமெரிக்கா பற்றிய மிதப்பு பற்றிய போலியான பிரமைகள் தகர்ந்து போகும். நிதி மூலதனத்தின் வங்குரோத்து அம்மணமாகும். முதலாளித்துவ சரண்டல் சமூக அமைப்பில் என்ன நடக்கின்றது என்பது, ஒரு சரிவின் விளிம்பில் நிதர்சனமாக அனைவரும் சொந்தமாக சுயமாக கற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதைக் காணமுடியும். அதுவரை இந்த உலகமயமாதல் மிதப்பிலான சமூக அமைப்பு, தன்னை பலமானதாக காண்பது நிகழ்கின்றது. இதை புரிந்துகொண்டு மக்களின் அதிகாரத்துக்காக எதிர்வினையாற்றும் முன்னேறிய சக்திகள் மத்தியில் இருந்துதான், புரட்சிகரமான மக்கள் தலைமைகள் உருவாகின்றன



'தேசம் ' எதைக் கட்டமைக்க முனைகின்றது?

பி.இரயாகரன்
22.01.2008

க்களின் விடுதலையா? தமிழ் மக்களின் விடுதலைக்கான ஒரு மாற்று அரசியல் வழியையா? இல்லை. மாறாக அவற்றின் கருக்களைக் கூட அழிப்பதை கடமையாக ஏற்று, அதைக் கட்டமைக்க விரும்புகின்றனர். இலங்கை அரசியலின் ஆதிக்கம் வகிக்கும் அரசியல் இதுதான். இதை படுகொலைகள் மூலம் தொடருகின்ற அரசியலின் தான், தேசத்தின் அரசியல் வரையறை கட்டமைக்கப்படுகின்றது.

தேசம் என்ன செய்ய முனைகின்றது. கிரிமினல்களுடன் சேர்ந்து அரசியலை கொசிப்பு அடிக்கும் வகையில், சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தை மாற்றியமைக்க முனைகின்றனர். இதன் மூலம் தம்மை விமர்சிப்பவர்களை தனிநபர் தாக்குதல் நடத்துவதாக முத்திரை குத்திக் கொண்டு, கேடுகெட்ட தனிநபர் தாக்குதலை இந்த கொசிப்பின் ஊடாகவே நடத்துகின்றனர்.

இன்றைய நிலையைத் தாண்டி, ஒரு சமுதாய மாற்றம் வந்துவிடக் கூடாது என்ற அக்கறை, அவர்களை இப்படியும் வேஷம் போட வைக்கின்றது. இதற்காக அவர்கள் கூறுவதை பாருங்கள். 'தன்னை ஒர் மார்க்சிய அவதாரமாகக் கட்டமைக்கும் இரயாகரனுக்கும்.." என்கின்றார். சரி இப்படியே தான் என்று எடுத்தால், இதற்கு பதிலாக நீங்கள் எதை மாற்றாக வைக்கின்றீர்கள். முதலில் அதைச் சொல்லுங்கள். நாம் அவதாரமாக இருக்கின்றோமா இல்லையா என்பது வேறு விடையம். நீஙகள் இதன் ஊடாக கட்டமைக்க விரும்புவது எதை? அதை வெளிப்படையாக நேர்மையாக வையுங்கள்.

மார்க்சியத்தை ஒரு சில நண்பர்களுடன் சேர்ந்து, நாம் மட்டும் முன்வைத்துக் கொண்டு இருக்கும் நிலைமையை மாற்றப் போகின்றீர்களா? அல்லது மார்க்சியத்தை இரயாகரனிடம் இருந்து மீட்கப் போகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் நல்லது நண்பர்களே, அதை நீங்கள் முதலில் செய்யுங்கள். அப்போது தான் இரயாகரனால் எதையும் கட்டமைக்க முடியாது. முதலில் வம்பளப்பதையும், கொசிப்படிப்பதையும் விடுத்து, இதை உருப்படியாகச் செய்யுங்கள். உங்களிடம் நேர்மை எதாவது இருந்தால், அதை முதலில் செய்யுங்கள்.

மார்க்சியத்தின் அவதாரமாக யாராலும் கட்டமைக்க முடியாது. அப்படி நம்பி, காலை வைத்து, மூழ்கிவிடாதீர்கள். என்ன செய்ய வேண்டும்? சமகால நிகழ்ச்சிப் போக்கை, மார்க்சிய அடிப்படையில் அணுகுவதால் மட்டும் தான், ஒருவன் குறைந்தபட்சம் மார்க்சியவாதியாக இருக்க முடியும். இதை யார் செய்கின்றனர். நீங்களா? உங்கள் நண்பர்களா? உங்கள் வாசகர்களா? அல்லது இந்திய இலங்கை அரசா, அது சார்ந்த குழுக்களா?

சும்மா நானும் மார்க்சியவாதி என்றால், மார்க்சியவாதியாகி விட முடியாது. கவுண்டமணி நானும் ரவடிதான் என்று கூறுவது போன்று, கேலிக்குரியது. மார்க்சியத்தை விடுவோம், குறைந்தபட்சம் முரணற்ற தேசிய முதலாளித்துவ புரட்சிகர நிலையில் கூட, உங்களில் யார் சமூகத்தை அதனூடாக அணுகுகின்றனர்?

மார்க்கியம் இரயாகரனின் தத்துவமல்ல. தலித்துகளின் பிழைப்புத்தனத்தில் இருந்து கூறுவது போல், இது வெள்ளாளனிததோ, பார்ப்பனியத்தினதோ தத்துவமல்ல. அது ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவம். அது சுதந்திரமானதாக உள்ளது. எந்த ஒடுக்கப்பட்ட மக்களும், அதை ஆயுதமாய் எடுக்கவும், எடுத்தாளவும் முடியும். சமூகத்தில் அக்கறையுள்ள, சமூக மாற்றத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும், அதை கையில் எடுக்க வேண்டும். அந்தளவுக்கு அது சுதந்திரமாக விமர்சன உலகில் உள்ளது. யாரும் இதற்கு வேலிபோடவில்லை. நாங்கள் அதை தவறாக கையாளுகின்றோம் என்றால், அதை மீட்க வேண்டியது சமூகத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரினதும் சமூகக் கடமை. அதை செய்யுங்கள். அதன் பால் மார்க்சியத்தை உயர்த்துங்கள். இதைவிடுத்து புலம்பாதீர்கள்.

புலம்பவதே அரசியலாகிவிட்டதால் 'இருவேறு அரசியல் தளங்களின் பின்னால் இருந்தே தனிநபர் தாக்குதலையும் சேறடிப்புகளையும் மேற்கொள்கின்றனர்." என்று கூறுவதால் என்னதான் ஆகப் போகின்றது. 'இருவேறு அரசியல் தளங்களின்" பின்னுள்ளது என்பதை சரியாக புரிந்து எடுத்துச் சொல்லும் நீங்கள், அதற்கு மாற்றாக எந்த அரசியல் தளத்தில் நின்று இதை சொல்லுகின்றீர்கள். அதைச் சொல்லும் நேர்மை, துப்பு எதுவும் கிடையாது. வெறுமனே பினாத்த முடிகின்றது. எமது அரசியல் நிலையை தனிநபர் தாக்குதல் என்று கூறிய படி, எம்மீது தனிநபர் தாக்குதலையே செய்ய முடிகின்றது.

எமது நிலையை மொட்டையாக வரட்டுநிலை என்பதால், அது தானாக வரட்டுத்தனமாகிவிடாது. '... அத்தத்துவத்தை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு மக்களை அதிலிருந்து அந்நியப்படுத்தும் ஒரு வரட்டு அரசியலை தனக்காகக் கட்டமைக்கிறார் இரயாகரன்." என்கின்றார். "வரட்டு அரசியலை" தனக்காக கட்டமைப்பதாக கூறும் நீங்கள், அது எப்படி வரட்டுத்தனமாக உள்ளது என்பதை சொல்ல முடிவதில்லையே!

இலங்கை அரசியலைப் பற்றிய எமது பார்வை வரட்டுத்தனமானது? எப்படி? அதை முதலில் சொல்லுங்கள். புலிக்கு எதிரானவர்களுடன் கூடி நிற்கவேண்டுமா? அதைச் சொல்லுங்கள், எப்படி என்று?

இலங்கை இந்திய அரசுடன் சேர்ந்து நிற்காதா எமது நிலை அல்லது புலிகளுடன் சேர்ந்து நிற்காத எமது நிலையா வரட்டுத்தனமானது? எது? இவ்வாறான போக்குகளை அம்பலப்படுத்துவதா எமது வரட்டுத் தனம்? இதிலிருந்தா மார்க்சியத்தை மீட்கப் போகின்றீர்கள்? சொல்லுங்கள்.

இவையெல்லாம் எப்படி மக்கள் விரோத நிலை என்று விவாதியுங்கள். எதையும் மூடிமறைக்காது வெளிப்படையாக சொல்லுங்கள். இதைவிட்டு விட்டு சொற்களில் அரசியல் செய்ய முனைகின்றீர்கள்! இது அழகோ! அறிவோ!

நீங்கள் கூறுகின்றீர்கள் 'இவர்கள் தங்கள் சுயநலன்களுக்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் தமிழ் மக்களினதும் அரசியலைப் பயன்படுத்துவதால் அந்த அரசியலில் இருந்து பிரித்தெடுத்து இவர்களை விமர்சிப்பதும் அம்பலப்படுத்துவதுமே பொருத்தமானது" சரி, பிரித்தெடுத்த பின் என்ன செய்கின்றீர்கள். தனிநபர் தாக்குதலை நடத்துகின்றீர்கள். என்ன அரசியலா செய்கின்றீர்கள்?

இதற்கு மாறாக தமிழ் மக்களின் அரசியலை நீங்கள், எப்படி மக்களுக்காக பயன்படுத்தப் போகின்றீர்கள். பிரித்து எடுத்தீர்கள், என் மீது தனிநபர் தாக்குதலை நடத்தினீர்கள். எல்லாம் சரி, மக்களுக்காக என்ன தீர்வை சொல்லுகின்றீர்கள்.

அதை முதலில் வையுங்கள். அப்போது தெரியும் நீங்கள் யார் என்று? உங்கள் நோக்கம் என்னவென்று தெரியவரும். இந்த அவதூறு கட்டுரை அதைச் செய்யவில்லை. மாறாக பசப்புகின்றது. எதை, எப்படி, ஏன் பிரித்தெடுப்பது அவசியம் என்பதைக் கூறி, அதை நாம் எப்படி மக்கள் மயப்படுத்தப் போகின்றோம் என்பதைச் சொல்லி செய்யுங்கள். அதன் பின் எம்மை விமர்சிக்க தொடங்குங்கள், நாங்களும் உங்கள் பின் வருகின்றோம்.

மற்றொரு தலைப்பில் தொடரும்.


ம.க.இ.க வின் பாடல் ஒலிப் பேழைகள்

ம.க.இ.க வின் பாடல் ஒலிப் பேழைகள்

Monday, January 21, 2008

எதைச் செய்யவேண்டுமோ அதை மறுப்பது தான், தேசத்தின் அரசியல்

பி.இரயாகரன்
21.01.2008

மகால அரசியல் தளத்தில் என்ன செய்யவேண்டும் என்பது, சமூக அக்கறையுள்ள அனைவரின் முன்பும் தெளிவானது. மக்களின் சொந்த செயலுக்குரிய அரசியலை உயர்த்துவதும், அதையொட்டிய செயற்பாடுகளை பாதுகாப்பதும் தான், எம்முன்னுள்ள உடனடி அரசியல் பணி. இதை மறுத்து ஒரு காலில் புலியையும், மறு காலில் புலியெதிர்ப்பையும் மாட்டிக்கொண்டு, லாவணி அரசியல் செய்கின்றது தேசம். அதற்கு ஏற்ப எமக்கு மனநோய்ப் பட்டம் கட்டி, தமது தொலைபேசி எண்ணும் தந்து தமது அரசியலை செய்ய எம்மை அழைக்கின்றது.

இந்தப் போக்கிரி அரசியலுக்கு மாறாக, நாம் ஒவ்வொருவரும் சமகாலப் போக்கின் மீது சில முடிவுகளை எடுத்தேயாக வேண்டும்.

1. பேரினவாதத்தையும், இதைச் சார்ந்து இயங்கும் இந்தியாவையும் ஆதரித்து நிற்பதா? அல்லது எதிர்த்து நிற்பதா? என்ற முடிவை நாம் எடுத்தேயாக வேண்டும். இதனுடன் சேர்ந்து இயங்கும் அனைத்து தமிழ் கூலிக் குழுக்களையும் இனம் காணவேண்டும். இந்தக் குழுக்களை எதிர்த்து செயல்படாத, ஒரு அரசியல் முறிவை இவர்களுடன் கொண்டிராத அனைத்து செயல்பாடுகளையும், தெளிவாக இனம் காண வேண்டும். இப்படி அனைத்து வெள்ளைவேட்டிப் பொறுக்கிகளையும், போலிகளையும் இனம் கண்டேயாக வேண்டும். புலியெதிர்ப்பின் பின், முற்போக்கு வேஷம் கட்டிச் சலசலக்கும் இந்த தவளைகளை இனம் கண்டேயாக வேண்டும்.

2. புலித் தேசியத்தை ஆதரிக்க முடியுமா? இல்லையா என்பதையும், தமிழ் தேசியத்தை உயர்த்துவதா இல்லையா என்பதையும் தீர்மானித்தேயாக வேண்டும்.

3. மக்களைச் சார்ந்து நிற்பதா? அல்லது மக்கள் விரோதிகளுடன் சேர்ந்து நிற்பதா என்பதை ஒவ்வொருவரும் தீர்மானித்தேயாக வேண்டும்.

கிட்லரின் பிரச்சார மந்திரி கோயபல்ஸ் பாணியில், இதை மனநோய் என்பார்கள். இதை தனிநபர் தாக்குதல் என்பார்கள். ஆனால் அரசியல் என்பது தெளிவான நிலையைக் கோருகின்றது. தேசம் இதில் மிதந்தபடி, மக்கள் நலன் கருத்துகளை வெட்டியெறிய விரும்புகின்றது. இதையே அவர்கள் கூறுகின்றனர். 'ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவினதோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்தினையோ தாங்கிச் செல்லும் சஞ்சிகையோ அல்ல" என்கின்றனர். இதுவே இதன் மொத்த வேஷம். தத்துவங்கள் வர்க்க சார்பு கொண்டவை. தமிழ் அரசியல் குழுக்கள் பக்காக் கிரிமினல்கள். எல்லா கிரிமினல்களுடன், இதன் தத்துவங்களுடன் எதற்காக தேசம் உறவு கொண்டு, அதில் தன்னை ஒட்டுகின்றது. இந்த கிரிமினல்கள் பற்றி முடிவெடுக்காமல், அவர்களை எதிர்த்து போராடாமல், மக்களுக்கு ஏதாவது யாரும் சொல்ல முடியுமா? வழிகாட்டத் தான் முடியுமா? இதை செய்யும் எம்மிடம், இந்த கிரிமினல் நடத்தைகளுக்கு ஆதாரம் கேட்பது என்பது, அவர்களைப் பாதுகாக்கும் கிரிமினல் தனம் தான்.

இப்படி தேசம் ஆசிரியர் எல்லா பிற்போக்கு முற்போக்கு எங்கும், முகம் காட்டுகின்ற அரசியல் வித்தை காட்ட முனைகின்றார். மனிதத்தை பாதுகாப்பதும், மனித துயரத்தை இல்லாது ஒழிப்பது என்பதும், இந்த வித்தைகாட்டல் மூலம் செய்ய முடியாது.

சமூகங்கள் வர்க்க ரீதியாக பிளவுபட்டு, சமூக முரண்பாடுகளால் சிதிலமாக்கப்பட்டுள்ளது. இதற்குள் தமது நிலையை தெளிவுபடுத்தி அதற்குள் இயங்க மறுக்கின்ற ஓட்டுண்ணி அரசியல், அரசியல் பிழைப்புத்தனத்தைக் கொண்டது. மக்களுக்கு இதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

தமது இந்த புல்லுருவித்தனத்தை நியாப்படுத்த 'மேலும் பல்வேறுபட்ட கருத்தியல் முரண்பாடுகளைக் கொண்டவர்களும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை பரந்துபட்ட மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கான பொது ஊடகமாக தேசம் - தேசம்நெற் அமைந்து உள்ளது." என்கின்றனர். முரண்பட்டகருத்துக்களின் கலவையான மக்கள் நலன் கொண்ட அந்த கருத்தியல் என்ன? அந்த அரசியல் கோட்பாடு தான் என்ன? இதை தேசம், தனது வரையறையாக எங்கே வைத்துள்ளது. மக்கள் நலன் என்று எதை நீங்கள் கருதுகின்றீர்கள். 'ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவினதோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்தினை தாங்கிச் செல்லும் சஞ்சிகையோ அல்ல" என்கின்றீர்கள். எப்படி இதற்கு மக்கள் நலன் வரும். அந்தக் கிரிமினல் குழுக்கள், அதன் தத்துவங்கள், அதற்கு பின்னால் சலசலக்கும் வெள்ளைவேட்டி தெருப் பொறுக்கிகள், இதில் முரண்பட்ட வர்க்க அரசியல் தத்துவங்கள், இதைக்கொண்டு எதைத்தான் படைக்க முடியும்.

புலியும் தான், மக்கள் நலன் என்று கூறுகின்றது. புலியெதிர்ப்பு அரசியலும் தான் அதைக் கூறுகின்றது. இந்திய இலங்கை அரசும் தான் கூறுகின்றது. இந்திய இலங்கை அரசுகளின் கீழ் இயங்கும் கூலிக் குழுக்களும் தான், மக்கள் நலன் என்று கூறுகின்றது. இதில் இருந்து எந்த வகையில், உங்கள் மக்கள் நலன் வேறுபடுகின்றது? எந்த வகையில், இந்த மக்கள் நலன் என்ற பெயரில் முகமூடி கொண்டவர்களின் மக்கள் விரோதத்தை எதிர்க்கின்றீர்கள். மக்கள் என்றால் யார்? எந்த வர்க்கம்? எந்த ஒடுக்கப்பட்ட மக்கள்? ஒடுக்குபவன் யார்?

மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் இது. இதை அம்பலப்படுத்தும் எம்மையும், நீங்கள் தப்பிப் பிழைக்க எமது எழுத்தையும் கிண்டலடிக்கலாம். அது நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற அந்த அரசியலுக்கு அவசியம். இதனால் தான் நீங்கள் 'பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இன்ரநெற்றில் வர்க்கப் போராட்டமா நடத்துகிறார்?" என்கின்றீர்கள். அத்துடன் 'பிரான்ஸ் நாட்டில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சகல பாதுகாப்புகளையும் அனுபவித்துக் கொண்டு இரயாகரன் சொல்வது வேடிக்கையாக உள்ளது" என்ற கூறுகின்றீர்கள். நல்லது, இதை நாம் செய்யக் கூடாது என்ற உங்கள் ஆவல் புரிகின்றது. இதையே புலி மற்றும் புலி எதிர்ப்பு கும்பலும் சொல்லுகின்றது? இந்த விடையம் எமக்கு புரிய மாட்டேன் என்கின்றது.

புலிகள் மண்ணில் வந்து போராடச் சொல்லி இங்கு உள்ளவன் சொல்லுகின்றான். நீங்களும் இங்கிருந்தபடி, இதை கோருவது சொல்வது ஏன்? எல்லாம் ஒரே அரசியல் வேடிக்கை தான். இவை போட்டுத் தள்ளும் அதே அரசியல். எமது எழுத்தை நிறுத்து என்ற வக்கிரம் தான், இவை. பல விதமாக, பல முகத்துடன், இது அரங்குக்கு வருகின்றது. எல்லாம் ஒரே குரல் தான்.

எம்மைப் பொறுத்தவரையில் தனித்து தனியாக நின்றாலும் சரி, பலரை நாம் அணுக முடிந்தாலும் சரி, எது மக்களுக்கு அவசியமோ, எது நடைமுறையில் சாத்தியமோ, அதை செவ்வனே செய்ய முனைகின்றோம். இதை விட்டுவிட்டு மக்களுக்கு எதிரான அரசியலை அறிமுகப்படுத்தி, அந்த மக்களை கொச்சைப்படுத்தும் உங்களைப் போல், நாம் துரோக அரசியல் செய்யமுடியாது.


மற்றொரு தலைப்பில் தொடரும்.


விடுதலை இயக்கமும் துரோகஞ் செய்ததாகலாம்

மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும் குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்

அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும் முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய
விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற
கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும் இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும்.
இந்தியா சென்றிருந்த அமைச்சர் சந்திரசேகரன் ஜனவரி 10 அன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையை இந்தியா மட்டுமே தீர்க்க இயலும் என்று சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் அரசியல்வாதிகட்கும் இது ஒன்றும் புதிதல்ல. எல்லாருமே பலவிதமான முறைகளில் இந்தியா பலவாறான தீர்வுகளை இலங்கை மீது திணிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அதேவேளை அவர்கள் டில்லி மீது எந்த விதமான நெருக்குவாரத்தைச் செலுத்தலாம் என்றும் அதன் வரையறைகள் பற்றியும் அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆனாலும் அந்த நாடகம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லுகிறவர் இன்று தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சர். அது அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வாக்கெடுப்பு நடத்துகிற போது கையை உயர்த்தத் தவறாத அமைச்சர். அவர் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொன்னதற்காக இந்த நாட்டு அரசாங்கத் தலைமை அவரை மெச்சுமா? இல்லை கண்டிக்குமா? இல்லை அமைச்சர் பதவியிலிருந்து அகற்றுமா? அல்லாமல் போனால் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று அவரும் இந்தியா உதவவேண்டும் என்று சனாதிபதியும் வேண்டிக் கொள்வது ஒரே நோக்கத்துடனா? நம் அமைச்சர் சொல்லுக்கு அங்குஞ்சரி இங்குஞ்சரி பெறுமதி குறைவு.

கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள் எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன்
அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான் நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத்
தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும்.
இன்றைய மலையகத் தமிழ்த் தலைவர்களால் மலையகத் தமிழரது, குறிப்பாகத் தோட்டத் தொழிலாளரது தேவைகள் பற்றி என்ன செய்ய முடிகிறது? தலைவர்களது துரோகங்களால் கசப்படைந்து தொழிற்சங்கங்களின் தலைமைகளை மீறிப் போராடிய தொழிலாளர்களது போராட்டத்தைக் கூடக் காட்டிக் கொடுத்த பெருமை அவர்கட்குரியது. மலையகத் தமிழ் சிறுவர்களது கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. பாடசாலை நிருவாகங்களில் இவர்கள் குறுக்கிட்டுத் தங்களது அதிகார உரிமையைக் காட்டிக் கொள்கிறதன் மூலம் பொறுப்புள்ள ஆசிரியர்கள் மனமுடைந்து போகிறார்கள். தட்டிக் கேட்கிறவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். சாதி, பிரதேசம் போன்ற பலவிடயங்களும் பாடசாலைகள் முதல் வேலைவாய்ப்புகள் வரை பலவற்றிலும் நுழைக்கப்படுகின்றன. மலையகத் தமிழரின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவும் போராடத் தலைமை தாங்கவும் வேண்டிய தலைவர்கள் பதவிக்கட்காகவும் சலுகைகட்காகவும் ஒடுக்குமுறை அரசாங்கங்களிடம் சரணடைகிறார்கள். மேல் கொத்மலைத் திட்ட கட்டிக் கொடுப்புக்குக் கூடாகாத மலையகத் தலைமைகளிடம் எதை எதிர்பார்ப்பது என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே தான் மலையகத் தலைவர்களுக்கு வடக்கு-கிழக்கு பற்றிப் பேசுவது வசதியாகவுள்ளது. அது தமிழகத்தின் உணர்ச்சி அரசியலுக்கு வசதியானது. அங்கு உரிய இடங்களில் பல்வேறு லாபகரமான தொடர்புகளை ஏற்படுத்த வசதியானது.

என்றாலும் எல்லாருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியும். தமிழக அரசில் யார் ஆட்சியிலிருந்தாலும் டில்லியை மீறி எதுவுமே தமிழக அரசு செய்யாது எனறும் தெரியும். நாடகமே உலகம் என்பார்கள். நாடகமென்றால் தமிழகத்தில் நடக்கிற உணர்ச்சி அரசியலல்லவா நாடகம். தமிழ் சினிமாவின் முன்னோடியான நாடகமேடைப் பாரம்பரியம் இன்று தமிழகத்தின் அரசியலை ஊடுருவி நிற்கிறது. தமிழ்ச் சினிமா தமிழகத்தின் சீரழிவு, தமிழகத்தின் பண்பாட்டு சீரழிவின் அடையாளம் என்றால் தமிழகச் சட்டமன்ற அரசியலின் சீரழிவு அதன் உச்சக்கட்டம் எனலாம். தமிழ்ச் சினிமாவை உண்மையான வாழ்க்கை என்று நினைக்கக் கூடியவர்கள் உள்ளனர். அது ஒரு காலத்தில் போதையூட்டும் இன்பக்கனவாக இருந்தது. இப்போது அது பயங்கர கனவாகவுமுள்ளது. போக்கிரிகள் தான் இன்றைய கதாநாயகர்களாகக் காட்டப்படுகிறார்கள். சண்டித்தனமே இன்று தலைமைத்துவப் பண்பாகக் காட்டப்படுகிறது. அந்தளவுக்கு மட்டும் அது தமிழகத்தின் அரசியலை யதார்த்தமாக சித்திரிக்கின்றது.

இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சில்லறைப் பாத்திரங்கள் மாதிரி ஈழத்து அரசியல்வாதிகள் போய்த் தலையை காட்டிவிட்டு வரலாம். அவர்களுடைய பங்கேற்பை அரசியல் வசதிக்காக அங்குள்ள அரசியல் தலைமைகள் பயன்படுத்துமேயொழிய அதனால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாது. 1983 வன்முறையை அடுத்துத் தமிழ்நாட்டின் ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் எதிர்பாராத ஒரு உணர்ச்சி அலை எழுந்தது. ஆனால், 1987 அளவில் தமிழக அரசியல்வாதிகள் அதை எப்படிக் கையாண்டு தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்த இயலும் என்பதில் போதிய பயிற்சி பெற்றுவிட்டனர். அன்று முதல் இன்றுவரை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களிற் கணிசமான பகுதியினரை இந்திய ஆட்சியாளர்கள் தங்களது முகவர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போரட்டத்திற்கு மட்டுமல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தைகட்கும் செய்துள்ள துரோகத்தையும் குழி பறிப்பையும் நமது தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோர் நன்கறிவார்கள். ஆனாலும், இன்று வரை ஆக மிஞ்சி அவர்கள் சொல்லக்கூடியதெல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி வருந்துகின்றோம், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம் என்பதுதான். இந்திய அதிகார வர்க்கமும் அதன் அரச நிறுவனமும் எந்தத் திசையில் என்ன இலக்கை மனதிற்கொண்டு செயற்படுகின்றன என்று அறிய முடியாதளவுக்கு இவர்கள் சின்னப்பிள்ளைகளல்ல.

சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து
சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச் சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எந்த வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம்.
வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள் சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன்
மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும்
குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்.

ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய நிலைப்பாட்டில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் அமெரிக்காவுடனான நெருக்கம். ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) இந்தியாவைப் பிராந்திய வல்லரசாக்க உதவியது என்பது இன்றைய இந்திய ஆட்சியாளர்களது நினைவின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கிடக்கலாம். எனினும் இன்னமும் இந்தியாவின் ஆயுதத் தளபாடங்களில் 70 சதவீதம் ரஷ்யாவில் உற்பத்தியானவையயாகவே உள்ளதால் ஏதோ வகையான உறவு தொடரும். எனினும் இந்தியாவின் அமெரிக்கா நோக்கிய நகர்வு, சோவியத் யூனியனின் உடைவையடுத்துத் துரிதமடைந்தது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஏற்படுத்திவருகிற நெருக்கமான உறவை அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கிற இந்தியாவின் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளால் தடுக்க இயலாது. தமிழ்த் தேசியவாதமும் தெலுங்கு தேசியவாதமும் பேசுகிற பிராந்தியக் கட்சிகளும் இந்தியாவின் அயற்கொள்கை பற்றியோ உலகமயமாதலுக்கு இந்தியாவை இரையாக்குவது பற்றியோ கவலை காட்டவில்லை. இந்தியாவின் ஆளும் அதிகாரவர்க்கம் இந்தியாவை அமெரிக்க உலக ஆதிக்க முயற்சிக்கு ஒரு அடியாளாக மாற்றுவதற்கு முழுமையாக உடன்பட்டு வருகிறது. அதற்குப் பிரதியாக இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா தடையாக இராது. இதனால் நட்டப்படப்போவோர் இந்தியாவின் உழைக்கும் மக்கள்தான்.

சீனாவும் ரஷ்யாவும் ஈரானும் இந்தியா-அமெரிக்கா-இஸ்ரேல் என்கிற அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி மூலம் அமெரிக்கா ஆசியாவைத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டுவருகிற முயற்சிக்கு முன்னாற் சும்மா இருக்கப் போவதில்லை. இது இந்து சமுத்திரப் பகுதியில் உள்ள நாடுகளில் புதிய நெருக்கடிகளை உருவாக்கலாம். இந்தச் சூழலில் தேசிய இன மேலும் வலுப்படலாம். எனவேதான் தேசிய இன ஒடுக்கல் விடுதலைக்கான போராட்டங்கள் தமது மூலோபாயங்களைக் கவனமாக வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எந்த வல்லரசையும் நம்பி ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது மூடத்தனம். வல்லரசுகளின் அதிகாரப் பகிர்வின் கணக்கு வழக்குகளில் விடுதலைப் போராட்டங்கள் சில்லரைக் காசுகள் மாதிரி. வல்லரசு அரசியலிருந்தும் பிராந்திய மேலாதிக்கப் போட்டியிலிருந்தும் சுயாதீனமாக இருப்பதன் மூலமும் மக்களைச் சார்ந்து நிற்பதன் மூலமுமே தேசிய இன விடுதலையை வெல்ல இயலும். அதிலும் முக்கியமாக மேலாதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக நிற்கத் தவறுகிற எந்த ஒரு விடுதலை இயக்கமும் குறுகியகாலத்திற் கூடத் தனது மக்களுக்குத் துரோகஞ் செய்ததாகலாம்.

கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையின் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்கள் எனப்படுவோர் எதையுமே கற்கவில்லை என்று நான் நம்பவில்லை. இந்தியாவையும் அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் நம்புமாறு சொல்வதுடன் ஐ.நா. சபையினதும் அதன் அமைதிப்படையினதும் குறுக்கீட்டை வேண்டுவோர் முற்றிலும் அறியாமையால் சொல்வதாக நான் நம்பவில்லை. சரியானதைச் செய்யும்படி மக்களுக்கு அறிவுறுத்த இயலாமல் அவர்களைத் தடுக்கிறது எது என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அரசியல் தலைமைகள் மேலாதிக்க வாதிகளதும் ஏகாதிபத்தியத்தினதும் முகவர்களாகவும் தரகர்களாகவும் மாற்றப்பட்டு வருகிற ஒரு காலத்தில் வாழுகிறோம். தேசிய விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள பின்னடைவுகள் நிலைமைகளை அதற்கு வலுவாக்குகின்றன. எனவேதான் ஒவ்வொரு தேசிய இனத்தின் சார்பிலும் முன்வைக்கப்படுகிற கோரிக்கைகளைத் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விளக்கி அவர்களது உடன்பாட்டைப் பெறாமல் அந்நிய நாடுகளின் குறுக்கீட்டைக் கோருவது சகல மக்களுக்கும் இழைக்கப்படுகின்ற பெரிய துரோகமாகும். அவ்வாறான செயல்களைக் கேள்விக்குட்படுத்துவது நம் ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும்.

நன்றி தூண்டில் தினக்குரல்( மறுபக்கம் )





Sunday, January 20, 2008

புலி – புலியெதிர்ப்பு அரசியலை தனக்கு லாடமாக்கி ஒட முனையும் தேசம்

பி.இரயாகரன்
20.01.2007

ங்கே ஓடுகின்றோம் என்று தெரியாது, ஓடுகின்றது தேசம். சுற்றிச் சுற்றி தமிழ் மக்களை இதற்குள், இந்த அரசியலுக்குள் வாழ் என்கின்றது தேசம். தமிழ் மக்கள், தமது சொந்த அரசியலுக்குள் இட்டுச் செல்லும் எதையும், கருவறுப்பதே தேசத்தின் மைய அரசியல்.

மக்களின் தனித்துவமான சொந்த போராட்டவழிக்குரிய அரசியலை, அதற்கு எதிரான அனைத்து சமூக விரோத போக்கையும் எதிர்த்துப் போராடுவது, மனநோய்க்குரியது என்கின்றது தேசம். இது தான் மனநோய் என்றால், அதையே நாம் தொடர்ந்து செய்வோம்.

இப்படி தேசம் ஆசிரியர் அவரின் நண்பரின் சதி அரசியலுக்கு ஏற்ப ஆடிய ஆட்டத்தையே தான், 17.01.2008 இல் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளார். 'இரயாகரன் - அவரது புனைவுகளும் அவர் கட்டமைக்கும் விம்பமும்" என்ற தலையங்கத்தில் இது வெளியாகியது. எனது அரசியலை விவாதிக்க, எந்த துப்பும் இவர்களுக்கு கிடையாது. அதற்கென்று தேசத்திடம், மக்கள் அரசியல் என எதுவும் கிடையாது. எனவே அவர்களால் எனது அரசியலை விவாதிக்க, விமர்சிக்க முடியாது. என்ன செய்கின்றார், அவரின் தளத்தில் கருத்துரையாடும் பொறுக்கிகளின் பாணியில், பொறுக்கிப் போட முடிகின்றது.

அவர் எனது பல கட்டுரைகளில் இருந்து சொற்களை, வரிகளை பிய்த்தெடுத்து, அதன் அரசியல் உள்ளடகத்தை திரித்து, தனது தேவைக்கு ஏற்ப வேடிக்கையாக கருத்துச் சொல்லுகின்றார். நாங்கள் ஒரு அரசியலைச் சார்ந்து நிற்கின்றோமே, அதற்கு நீங்கள் சொல்லும் மாற்று என்ன? அதை முதலில் சொல்லுங்கள்.

நீங்கள் கூறுவது போல் நாங்கள் மார்க்சியத்தை முன்வைக்கவில்லை என்றால், வரட்டுத்தனத்தை செய்கின்றோம் என்றால், அதற்கான உங்கள் மாற்றுத் தான் என்ன? இதை கண்டுபிடித்து தானே, இதை சொல்லியிருக்க முடியும். ஏன் அதை முன்வைக்க முடியவில்லை? என்ன கற்பனையில், நண்பர்களின் சலசலப்பில் மயங்கியா எழுதினீர்கள்.

என்ன, மாற்று ஒன்று இருக்கும் என்று கருதுகின்ற ஊகமா? எமக்கு மாற்று எதையும் கட்டுரையில், சொல்ல முடியவில்லை. எனது பல கட்டுரைகளில் தேடி சொற்களை, வசனத்தை பிய்த்துப் போட்டால் மாற்றாகிவிடுமா? புலியுடன் நிற்கும் நபர்களுடன் எம்மை ஊற்றிக் குழைத்தும், இதைச் சொல்ல முடியவில்லை. இதற்கு ஏற்ப பதிவிட்ட நாலாம் தரமான வெள்ளை வேட்டி கட்டிய தெருப் பொறுக்கிகளும், அண்ணனுடன் சேர்ந்து இணையத்தில் தவழுகின்றனர்.

தேசம் ஆசிரியர் எடுத்த எடுப்பில் "பரிசில் இருந்து இயக்கப்படும் 'ரமிழ்சேர்க்கிள்' என்ற இணையமும் தேசம் - தேசம்நெற் மீது தனிநபர் தாக்குதல்களையும் சேறடிப்புகளையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன." என்கின்றார். பல கட்டுரைகளை அங்குமிங்கும் குரங்கு போல் தாவித்தாவி பிய்த்தவர், இந்த தனிநபர் தாக்குதலை மட்டும் அவரால் எடுத்துக் காட்ட முடியவில்லை. ஏன்? நாங்கள் ஜெயபாலன் மீது அல்லது சேனனின் மீது தனிநபர் தாக்குதலையா நடத்தினோம். எங்கே? எப்போது?

சொல்லுங்கள். இதை விடுத்து இப்படி ஊகங்கள், புனைவுகள், இட்டுக்கட்டுதல், நண்பர்களில் இருந்து பிரபலிக்கும் மனப்பதிவுகள் கொண்டு, எம்மை மீள அவதூறு செய்ய முடிகின்றது. இப்படி பலரைப் போல் உங்களை சொல்ல வைத்ததில், உங்கள் நண்பர் கை தேர்ந்தவர்.

நீங்கள் இந்த கட்டுரை வெளிவர முன்னம், அந்த நண்பருடன் பரிசில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நாம் அறிய அந்த நண்பரின் அரசியல் என்பது, அன்று முதல் இன்று வரை சதிதான்.

இப்படி அனைவரும் கருத்தை கருத்தாக எதிர்கொள்ள முடியாத கோழைகள். மண்ணில் படுகொலை. இங்கு பகலில் வெள்ளை வேட்டி, இருட்டில் வக்கிரத்தைக் கொட்டும் கருதாடலாம்.

இப்படிப்பட்டவர்கள் தமது சொந்த அரசியலை வைக்க முடியாத போது, தம் மீதான தனிநபர் தாக்குதல் நடப்பதாக கூறுவது அரங்கேறுகின்றது. நீங்கள் வைத்துள்ள அரசியலின் புனிதத்தை, இது எப்படி மக்கள் நலனைப் பேணுகின்றது என்பதை வெளிப்படையாக வையுங்களேன். ஏன் தனிநபர் தாக்குதல் என்று கூறி ஒடி ஒளிக்கின்றீர்கள். நீங்கள் முதலில் உங்கள் அரசியலை வையுங்கள். எந்தப் பொறிக்கியும், எதையும் சமூகத்துக்காக வைப்பதில்லை.

மாறாக இந்திய இலங்கை கூலிக் குழுக்கு பின்னால், குந்தி இருந்து என்ன தான் செய்கின்றீர்கள். இதை நாம் வெளிப்படையாக சொல்லக் கூடாதா? இப்படிச் சொன்னால் மனநோயா? நீங்கள் அப்படி இல்லையென்றால், நீங்கள் யார்? உங்கள் கருத்து என்ன? அதை எங்கே சொல்லியுள்ளீர்கள். முதலில் அதை சொல்லுங்கள். பக்கம் பக்கமாக வம்பளப்பதை விடவும், உங்கள் கருத்தென்ன என்பதை எழுதுவதே மதிப்புக்குரியது. வெள்ளை வேட்டி தெருப்பொறுக்கிகளால், இப்படி பொறுக்கத் தான் முடியுமே ஒழிய, இதைச் சொல்ல செய்ய முடியாது.

இப்படிப்பட்ட அரசியல் வெள்ளைவேட்டி தெருப் பொறுக்கிகள், கடந்தகால மனிதர்களுக்கான போராட்டங்களையே கொச்சைப்படுத்துகின்றனர். இப்படி போராட்டங்களை நடத்தியவர்களை இழிவாடிய போது, அதை நாம் எதிர்த்தோம். இது தேசம் ஆசிரியருக்கு பொறுக்க முடியவில்லை. அவர் 'நாவலன் மீது எப்போது இரயாகரனுக்கு இந்தப் பாசம் வந்தது." என்கின்றார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றார்? நாவலன் மீள அரசியலுக்கு வருகின்ற நிலையில், அதை எதிர் என்கின்றாரா? இதன் பின் உள்ள அரசியல் நோக்கம், இப்படித் தெட்டத் தெளிவாகின்றது.

தேசம் ஆசிரியர் எம்முடன் அரசிலை விமர்சிக்க முடியாது. இதனால் என்ன செய்கின்றார். 'நாவலன் மீது மட்டுமல்ல அவரின் குடும்பத்தின் மீதும் தனிநபர் தாக்குதலை தனித்து நின்று அரங்கேற்றிய, இரயாகரன் ..." என்கின்றார். சரி, எங்கே எப்போது?

நீங்கள் கூறியது போல் 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்று தெரிந்து, ஆதாரத்துடன் தானே இந்த குற்றச்சாட்டை, அவதூறை எம் மீது வைக்கின்றீர்கள். சரி அதை வையுங்கள். அது என்ன? அது எப்படிப்பட்டது?

இப்படி அந்த தனிநபர் தாக்குதல் எங்கே? இவை எல்லாம் ஊகங்கள் தான். நாவலனுக்கும் எனக்கு இடையிலான அரசியல் முரண்பாடு. அவர் கேட்டதற்கு இணங்க எனது கைப்பட, எழுதிக் கொடுத்த கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அரசியல் சாரத்துக்குள் (அவரைப்பற்றியுமல்ல, அவருமல்ல), பல சஞ்சிகைகளில் விவாதமும் நடந்துள்ளது. இதன் பின் அவர் அரசியலில் ஈடுபட்டதை, நாம் அறியவில்லை. இதனால் அவரைப்பற்றி தனிப்பட்ட விடையங்கள், எமக்கு அவசியமற்றதாகவே இருந்தது. தனித்து நின்று தனிநபர் தாக்குதல் என்ற ஜெயபாலனின் அவதூறு, வேடிக்கையானது.

'..பி.இரயாகரனும் இந்த தனிநபர் தாக்குதல்களையும் சேறடிப்புகளையும் திட்டமிட்டு மேற்கொள்கின்றனர்" என்பது முற்றிலும் அபத்தமானது. எனது அரசியலை விவாதிக்க, விமர்ச்சிக்க, துப்புகெட்ட மக்கள் விரோத அரசியலால் முடிவதில்லை. மொட்டாக்கைப் போட்டுக் கொண்டு, மொட்டையாக அவதூறுகளை கட்டமைக்கின்றனர்.

நாம் செய்த தனிநபர் தாக்குதல் எது? அதை முதல் வையுங்கள். சும்மா ஊர் உலகத்துக்கு கதைவிடாதீர்கள். தமது அரசியல் வக்கிரத்துக்கு ஏற்ப கொசிப்பவர்களை உசுப்பி அரங்கேற்றுவதற்காகவே 'இணையத்தின் மூலம் அறிமுகமான பல நூற்றுக்கணக்கான வாசகர்களுக்காகவே இதனை எழுதுகிறேன்" என்கின்றார். இதன் மூலம் 'யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?" என்பது உறுதியாகிவிட்டதால், தேசத்தின் ஆதாரமாகி அதன் கருத்தாகிவிடுகின்றது. இவ்வளவுக்கு பகலில் முகம் தெரிய வெள்ளைவேட்டிகள். இருட்டில் மட்டும் இந்த தெருப் பொறுக்கிகளாகக் கற்பனை புனைவுடன் எழுதுபவர்கள் இவர்கள். புனைவது தான் கருத்து, என்பதுவே இவர்களின் அரசியல்.

இந்த தேசம் தன்னை வெள்ளை வேட்டித் தனத்துடன் காட்டிக் கொள்ள 'ஆனால் தேசம்நெற்றில் அதன் வாசகர்களால் பதியப்படும் கருத்துக்கள் தேசம் சஞ்சிகையினதோ அல்லது தேசம்நெற்றினதோ விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது அல்ல." என்கின்றது. ஆனால் 'இணையத்தின் மூலம் அறிமுகமான பல நூற்றுக்கணக்கான வாசகர்களுக்காகவே இதனை எழுதுகிறேன்" என்கின்றார். என்ன வித்தையா காட்டுகின்றார். போக்கிரித்தனமான அரசியல் இது.

இப்படி ஊகங்கள், அடிப்படையற்ற வகையில், அரசியலை தனக்கு ஏற்ப வேடிக்கை செய்ய முனைகின்றார்.

தேசம் மீதான எமது அரசியல் நிலை என்பது, தெளிவானது. நாம் கூறியது மிகச் சரியானது. அதை எதிர்கொள்ள அரசியல் நேர்மை இருந்தால், அதை எதிர் கொள்ளுங்கள். அதைவிட்டு விட்டு தனிநபர் தாக்குதலாக கதை பரப்பி, வெள்ளை வேட்டிக்கு பின்னால் ஒளித்து நின்று கல் எறிவதுதான், தமிழ் மக்களின் சார்பிலான உங்கள் புழுத்த அரசியல்!

மற்றொரு தலைப்பில் தொடரும்