தமிழ் அரங்கம்

Saturday, November 8, 2008

சுரண்டிக் குவிக்கும் அமெரிக்காவின் வெம்பிய வடிவத்தை, பாதுகாப்பதுதான் ஓபாமாவின் கடமையாகும்

ஓபாமா தலைகீழாக நின்றாலும், இதை மாற்றமுடியாது. இதைச் செய்வதுதான் ஓபாமாவின் ஜனநாயகக் கடமை. இதைத் தாண்டி ஓபாமா, எதையும் மக்களுக்காக மாற்றப்போவதில்லை. இது இப்படியிருக்க, இனம் தெரியாத மாற்றம் பற்றி நடுதர வர்க்கத்தின் குருட்டு நப்பாசைகள் ஒருபுறம்.

மிகக் குறைந்தபட்சமான சமூக சீர்திருத்தத்தைச் செய்வதாக இருந்தால் கூட, அதற்கு நிதி வேண்டும். இதற்கு செல்வத்தை குவித்து வைத்திருப்பவனிடமிருந்து, செல்வத்தின் ஒருபகுதியை மீளப் பெறவேண்டும். அத்துடன் அடிநிலையில் உள்ள எழை எளிய மக்களுக்கு இன்று கிடைப்பது பறிபோகாத வண்ணம் (சுரண்டாத வண்ணம்) முதலில் பாதுகாக்கவேண்டும். அதாவது பணக்காரன் மேலும் பணக்காரணாகாத வண்ணம் தடுத்து நிறுத்தி, அவனிடம் குவிந்துள்ள செல்வத்தின் ஒரு பகுதி எடுத்த மீள எழை எளிய மக்களிடம் கொடுக்கவேண்டும். இதுவே குறைந்தபட்டசமான சமூக சீர்திருத்துக்கான அடிப்படையாகும். சாரம்சத்தில் சுரண்டிக்குவிக்கும் வடிவத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உலக மக்களுக்காக இதையா ஓபாமா மாற்றப்போகின்றார். கேனத்தனமாக பதில் சொல்லாதீர்கள்.

இதை ஓபாமாவால் நிறைவேற்ற முடியுமா எனின், முடியாது. செல்வத்தைக் குவிக்கும் உலகமயமதாலை கைவிட்டுவிடுவரா எனின், அதுவும் முடியாது. ஓபாமா ஆட்சியிலும் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பவன் அதைக் குவித்துக் கொண்டே இருப்பான், இழப்பன் இழந்து கொண்டு இருப்பான்;. இது இந்த சமூக அமைப்பின் சொந்தவிதி. அதாவது ஜனநாயகமும், சுதந்திரமும்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

வீடும் போச்சு… வேலையும் போச்சு! அந்தோ பரிதாபம் - அமெரிக்க மக்களின் வாழ்க்கை!

"இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.''— ஜார்ஜ் டபிள்யூ. புஷ்.

அமெரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ் அளித்துள்ள வியாக்கியானம் இது. இதுவரை அமெரிக்கா கண்டிராத கோமாளி அதிபரான புஷ்ஷின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெரிக்காவின் முரண்படும் சமூக இயக்கத்தினை தெளிவாக விளக்குகின்றன. சந்தையில் சூதாடுவதற்கு முதலாளிகளுக்கு சுதந்திரம்; அந்தச் சூதாட்டச் சுமையினை ஏற்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யவேண்டியது மக்களின் ...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
மேலும் பல

Friday, November 7, 2008

மக்களின் அறியாமையே ஓபாமாவின் மூலதனம் மட்டுமின்றி வெற்றியும் கூட

அமெரிக்க சமூக அமைப்பை பற்றி மக்களின் அறியாமைதான், ஓபாமா பற்றி பிரமைகளும், நம்பிகைகளும். இது ஏதோ ஒரு மாற்றம் வரும் என்ற எதிர்பார்புகளாகின்றது. மக்களின் செயலற்ற தன்மையும், விழிபற்ற மூடத்தனமும், ஓபாமா மீதான நம்பிக்கையாகின்றது.

இதை ஓபாமா மட்டும் தனது மூலதனமாக்கவில்லை. உலகின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் இதை மூலதனமாக்கி, மக்களின் முட்டாள் தனமான நம்பிக்கை மீது சவாரி செய்கின்றன. ஊடாகங்கள் ஆளும் வர்க்கங்களின் இருப்பு மீதான் நம்பிக்கையை ஊசுப்பேற்றி, மக்களை மேலும் மூடர்களாக்கின்றன. இந்த சமூக அமைப்பில் ஊடாகவியல் என்பது, மக்களின் மூடத்தனத்தையும் அறியாமையும் கட்டமைப்பதுதான்.

இப்படி இவர்களால் வழிபட்டுக்கு உட்படுத்தப்படும் ஓபாமா, இந்த சமூக அமைப்பில் எதைத்தான் மாற்றமுடியும்!?

அமெரிக்கா என்பது, உலகை அடக்கியாளும் ஓரு ஏகாதிபத்தியம். இதுதான் அதன் அடையாளம். இதை ஓபாமா மாற்றிவிடுவரா!?......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஈழம்: ஜெயாவின் "புலி'' பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

"கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் — என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.

Thursday, November 6, 2008

காங்கிரஸ் என்றொரு கட்சி

காங்கிரஸ் என்றொரு கட்சி (அடிமைச்சாசனம்)

ஓபாமா ஒரு கானல் நீர்

கொடூரமான வெள்ளை அமெரிக்கா எகாதிபத்தியத்தில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உலகம் உள்ளது என்பதை, ஓபாமா வெற்றி பற்றிய குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாட்டு மக்கள் முதல் ஏகாதிபத்திய நாட்டு மக்களும் கூட நம்பிகையுடன் ஓபாமாவை பார்க்கின்றனர்!

சிலர் உலகையே ஆளும் கறுப்பு இனத்தவரின் ஆட்சி என்கின்றனர். வேறு சிலர் சிறுபான்மையினத்தவரின் ஆட்சி என்கின்றனர். மற்றும் பலர் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்கின்றனர்.

உலகில் ஒரு மாற்றம் வரும் என்று, குடுகுடுப்புக்காரன் மாதிரி பலரும் கருத்துரைக்கின்றனர். ஆளும் வர்க்கம் முதல் ஆளப்படும் வர்க்கம் வரை இந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏகாதிபத்திம் முதல் மூன்;றாம் உலக நாடுகள் வரை இந்த எதிர்பார்ப்பில் மயங்கி நிற்கின்றனர். அனைத்து வர்க்கங்களும் இலகற்ற எதிர்ப்பார்ப்பில், எதோ மாற்றம் வரும் என்று நம்புகின்றனர். உலக ஊடாகவியல் இதற்கு எண்ணை வார்த்து ஊற்றுகின்றது. ஆம் உலகம் மாறப்போகிறது. எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்கின்றனர்.

ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் .........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில்....

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் - அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்பட்டுள்ளது

நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். ""வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.


செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன ""பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.

அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்

1930ஆம் ஆண்டு அமெரிக்கப் ...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, November 5, 2008

பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!

அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக், ஆப்கான் மீது நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரினாலும்; உள்நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள், ஒரு மாற்றத்தை விரும்புவதாகவும்; அம்மாற்றத்தைப் பிரதிபலிப்பவராக ஒபாமா இருப்பதாகவும் பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும், அமெரிக்காவில் வெள்ளை இனவெறி முன்னைப்போல கோலோச்சவில்லை என்பதற்கு பாரக் ஒபாமாவின் தேர்வு எடுப்பான சான்று என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள பாரக் ஒபாமாவை எதிர்த்து, ஜான் மெக்கெய்ன் என்ற வெள்ளை இன கிழட்டு நரியைக் குடியரசுக் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேல்தலில், ஒபாமா தோற்று, ஜான் மெக்கெய்ன் வெற்றி பெற்றால், அது ஜார்ஜ் புஷ் மூன்றாம் முறையாக பதவியேற்பதற்குச் சமமானதாகும். ஏனென்றால், உலகெங்கிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை விரிவுபடுத்த, ஜார்ஜ் புஷ் எட்டடி பாய்ந்தால், ஜான் மெக்கெய்னோ பதினாறு அடி பாயக் கூடியவர்.

Tuesday, November 4, 2008

சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் சி.பி.கஜீரேல்-நேபாள் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

பேரினவாதத்துக்கு விளக்கு பிடிக்கும் அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பல்

தமிழ்மக்களின் உரிமையை எப்படி 'அரசியல் நீக்கம்" செய்வது என்பதை, அ.மார்க்ஸ் - ஷோபாசக்தி கும்பலிடம் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். அண்மையில் குமுதம் வெளியீடான தீராநதியில், 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்ற தலைப்பில் ஷோபாசக்தியின் பேட்டி ஒன்றை அ.மார்க்ஸ் எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை அவர் 'வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கின்றேன்" என்ற அ.மார்க்ஸ் குறிப்புடன் அது வெளிவந்துள்ளது
'பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்" என்றெல்லாம் கோஷம் போட எங்களுக்குச் சக்தியில்லை. ஆயுதக் கலாச்சாரத்தைக் கைவிட்டு, அனைவருமே ஜனநாயக அரசியல் நெறிகளுக்குத் திரும்பவேண்டும்…" என்கின்றார் ஷோபாசக்தி அன்ட் அ.மார்க்ஸ் கம்பனி. இதைத்தான் பேரினவாதம் அன்று முதல் இன்று வரை கூறுகின்றது. இந்தியாவும் இதைத் தான் கூறுகின்றது. ஏகாதிபத்தியம் இதைத்தான் கூறுகின்றது.

இதன் மூலம் தான் தமிழ் மக்களின் உரிமையை 'அரசியல் நீக்கம்" 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே" என்பதானால் அடையமுடியும்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இடதுகளான சி.பி.எம். மின் புரட்சித் திட்டம்

அடுத்த தேர்தலில் யாருடன் இலட்சியக் கூட்டணி கட்டுவது என்ற பெரும்பிரச்சினையை சி.பி.எம் கட்சி ஒருவழியாகத் தீர்த்துவிட்டது. அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான என்.வரதராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாக "அப்பாயின்ட்மெண்ட்'' வாங்கி, இரவு 9 மணிவரை காத்திருந்து "புரட்சிக்கலைஞர்' விஜயகாந்தை சந்தித்துக் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார். விஜயகாந்தும் "முதலிலேயே சொல்லி இருந்தால் விருந்து வைத்திருப்பேனே' எனச் சொல்லி தோழர் மனதைக் குளிரவைத்ததோடு, தமிழ்நாட்டில் இருக்கும் இடதுசாரிகள் "அரசியலில் ஊழலையும், வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தூய உள்ளத்தோடு செயல்படுபவர்கள்' என்று இவர்களுக்குச் சான்றிதழும் கொடுத்து விட்டார்.


இனி தேர்தலில் "புரட்சிக்கலைஞரின் ஆசிபெற்ற' சின்னம் என்று அரிவாள் சுத்தியல் சின்னத்துக்கு முன்னால் அவர்கள் ஒரு அடைமொழியைப் போட்டுக்கொள்ளலாம்.

தமிழகத்தில் விஜயகாந்த் என்றால், ஆந்திரத்திலோ நடிகர் சிரஞ்சீவியின் கட்சியுடன் போர்த்தந்திரக் கூட்டணி அமைக்க சி.பி.எம். பேரம் பேசுகிறது.

இடதுகளான சி.பி.எம். மின் புரட்சித் திட்டம் இப்படி என்றால், வலதுகளான சி.பி.ஐ. கட்சியோ "புரட்சித்தலைவி'யுடன் பேச இருப்பதாகச் சொல்லிவிட்டது. ஆனால், புரட்சித்தலைவியோ தனது துணைப்பிரதமர் கனவுக்கு சி.பி.ஐ.யின் தயவெல்லாம் தேவைப்படாது என்பதனால், பாஜகவுடன் பேச்சு நடத்திவருகிறார். அ.தி.மு.க.–பா.ஜ.க. பேரம் கைகூடாவிட்டால், புரட்சித் தலைவியுடன்..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, November 3, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! -மருதையன்

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டம் வெல்க! பொதுக்கூட்ட உரைகள் -மருதையன்

ஏ.ஐ.டி.யு.சி. வழங்கும் முற்போக்கு கொழுக்கட்டை!

காங்கிரசையும் பா.ஜ.க.வையும் புறக்கணித்து விட்டு, மதச்சார்பற்ற மூன்றாவது அணி கட்டப் போவதாக கூறி வருகிறார், வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன். மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதங்களின் பண்டிகைகள் விழாக்களில் ஊக்கமாகப் பங்கேற்று, கூடிக் குலாவி வாழ்த்து தெரிவிப்பது மத நல்லிணக்கத்தைப் பேணுவது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் கற்பித்துக் கொண்டுள்ளன. இதன்படியே, தமிழகமெங்கும் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள், இந்துமத ஆயுதபூஜை பண்டிகையை நீண்டகாலமாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றன. சி.பி.எம். கட்சியின் சி.ஐ.டி.யு.வை விட முற்போக்கான சங்கமாகக் காட்டிக் கொள்ளும் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் கோவில்பட்டி நகரக் கிளை, இவ்வாண்டு இந்துமத விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சீரும் சிறப்போடும் கொண்டாடி, பூசைகள் நடத்தி மக்களுக்கு கொழுக்கட்டை வழங்கியிருக்கிறது. இது அச்சங்கத்தின் 13வது ஆண்டு விழாவாம். இதற்காக பேருந்து நிறுத்தத்தில் அலங்கார வளைவு அமைத்து அசத்தி விட்டார்கள்.

Sunday, November 2, 2008

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2 தோழர்.கதிரவன்

பெரியாரியம் பேசும் பினாமி ஒன்று, விடுத்துள்ள கொலை பயமுறுத்தல்

பச்சைத் தூசணத்தால், பெண்ணின் பாலியல் உறுப்பால், எனது அம்மாவின் பெயரால், என்னை கொலை செய்யத்தவறியது புலிகளின் மாபெரும் தவறு என்கின்றார் காசிபராதி என்று பெயரில் தளம் வைத்துள்ளவர். 'புலிகள் பின் வாங்குகின்றனரா! புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா!!" என்ற எனது கட்டுரைக்கு இப்படி ஒரு பின்னோட்டம் விட்டுள்ளது.


இப்படி அனுமதிகப்படாத பல பின்னோட்டங்கள் இதுவும் ஒன்று. அதை அப்படியே கிழே மீளத் தருகின்றோம். மொழியல் ரீதியாக தமிழையும், பெண்ணையும் இது இழிவுபடுத்திய போதும், புலித்தேசியத்தை தலையில் வைத்து ஆடுபவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த பின்னோட்டம் உதவும்.

இதற்கு பெரியரையும், பகுத்தறிவையும் எப்படிப்பட்ட பொறுக்கிகள் எல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதையும், ஒரு இந்தியனாக நடித்தபடி ஒரு இணையத் தளத்தை பயன்படுத்தி நிற்கின்றனர் என்பதை, காசிபாரதியின் தளத்தில் சென்று நீங்கள் காணமுடியும்;. இந்திய மக்களை எமாற்ற முனையும் இந்த ஈழத்து புலிப் பொறுக்கி, பெரியாரைக் கூட விபச்சாரம் செய்கின்ற இழிவான புலித்தேசிய நடத்தையையே இது காட்டுகின்றது.

புலிப் பாசிசம் எப்படிப்பட்டது என்பதை இந்த பின்னோட்டம் காட்டுகின்றது. நான் 1987 இல்; புலிகளின் வதைமுகாமில் இருந்து தப்பமுன், அடி எதை ஊடாக அனுபவித்த வார்த்தைகள் தான் இவை. தமிழ் மக்கள் இந்த மொழி ஊடாகத்தான் அடிமையாகப்பட்டுள்ளனர்

இதுதான் அந்த பின்னோட்டம்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தீராத யுத்தம் தீர்க்க முனையும் தீர்வு-என்ன?

"மக்கள் நலன்,மனிதாபிமானம்,மனிதவுரிமை,ஜனநாயகம்-பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் அர்த்தம் புரியாதவொரு வார்த்தை விளையாட்டாக இவர்களின் ஊடாக நமக்குள் வந்துகொண்டபின், யுத்தங்கள் நம்மைக் கருவறுப்பதில் தமக்கான நியாயத் தன்மைகளையும்,பெரும் ஆதரவையும் நிலைப்படுத்தி பொருள்வயத் தேவைகளை-பிராந்திய நலன்களை எட்டுகின்றன.யுத்தத்துக்குள் மூழ்கிய தமிழ் மக்களின் அழிவைத் திட்டமிட்டு நகர்த்திய இந்திய அரசு, இப்போது ஒன்றுந்தெரியாத பாப்பாவாக நடிக்கிறது.வாய்ச் சவடால் விட்ட புலிகளோ மரணத்தின் விளிம்பில் மக்களைத் தள்ளிவிட்டுத் தாமும் அழியும் அரசியலைக்கொண்டியங்கித் தமிழ் நாட்டிடம் உதவி கேட்கும் போராட்டத்தோடு தமது கதையை மெல்ல முடித்துவருகிறார்கள்.தேசியத் தலைவர்,தளபதிகள்,அரசியல் ஆலோசகர்கள்,அரசியல் பொறுப்பாளர்கள் எல்லோரும் தமிழக ஓட்டுக்கட்சிகளிடம் மண்டியிட்டுத் தமது உயிர்வாழ்வுக்காக உயிர்பிச்சை எடுக்கும் ஒருமுகமாகச் சினிமாக்கூட்டத்திடம் "இனவுணர்வுப் போராட்டம்"செய்யத் டுகின்ற்ரானர்.புரட்சி,விடுதலை,சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது.இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்.புலிகள் இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்