தமிழ் அரங்கம்

Showing posts with label வன்னி. Show all posts
Showing posts with label வன்னி. Show all posts

Wednesday, April 1, 2009

தமிழ்மக்களின்; விடுதலைக்கு, மூன்றாவது பாதைபற்றியே சிந்திக்கவேண்டும்!

வன்னிநில மக்களின் பேரவலம் பற்றி எழுத்தில் எழுதவோ, ஓவியத்தில் வடிக்கவோ முடியாது. அம்மக்களின் வாழ்வு நீண்ட துயராகவே உள்ளது.

வன்னிநில மக்களின் பேரவலத்திற்கு உலகில் குரல் கொடுக்காதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். மகிந்தா-கோத்தபாயா முதல் சர்வதேச சமூகம் வரை மனித அவலம் பற்றி நாளாந்தம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஓபாமாவின் அமெரிக்கா கூட 'தாங்கொனாத் துயரில்" போர்ப் பொறிக்குள் அகப்பட்ட மக்களை வான் ஊர்திகள் கொண்டு அழைத்துச் செல்லலாமா என சிந்தித்தது!

தமிழகத்தில் திராவிடக் கழகங்கள், - ஏனைய அரசியல்; தலைவர்கள் 'தம் உயிரினும் மேலான உடன்பிறப்பபுக்களை இரத்தத்தின் இரத்தங்களை" தொப்புள் கொடி உறவுகளுக்காக (தேர்தல்) போர்க்கோலம் பூண வைத்துள்ளனர்! nஐயலலிதா கூட உண்ணாவிரதம் முதல், (தீக்குளிக்க முற்படாத குறை) உண்டியல் குலுக்கல் வரை போயுள்ளார்! தமிழ்மக்களைக் கொன்றொழிக்கும் மத்திய அரசும் தன்னால் காயப்பட்டவர்களுக்கு, அங்கவீனமானவர்களுக்கும்; மருத்துவத்திற்காக வைத்தியர் குழுவையும் அனுப்பியுள்ளது. பாரதிய ஐனதாக்கட்சியின் தலைவர் அத்வானி எல்லோரையும்விட மே.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, March 28, 2009

புலியைக் காப்பாற்றவும் புலியை அழிக்கவும், தமிழனை தமிழன் கொல்லுகின்றான்

புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.

இப்படி எமனாக நின்றே தமிழ்மக்களைக் கொல்ல பேரினவாதத்திடம், தமிழ்மக்களை பலி கொடுக்கின்றது புலி. இதில் இருந்து தப்பிச் செல்லமுனையும் மக்களையே, புலிகள் சுட்டுக் கொல்லுகின்றனர். கொடுமையிலும் கொடுமை, கொடூரத்திலும் கொடூரம். இன்று தமிழ் மக்களை பாதுகாக்கவும், குரல்கொடுக்கவும் யாரும் கிடையாது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்