தமிழ் அரங்கம்

Saturday, May 19, 2007

இந்திய கோயபல்ஸ்சுகளும், புலிப் பாசிட்டுகளும்

இந்திய கோயபல்ஸ்சுகளும், புலிப் பாசிட்டுகளும்


பி.இரயாகரன்
19.05.2007



கூட்டமாக கூடி அம்பலமாகின்றனர். மயக்கம், தயக்கம் அனைத்தும் வெகுளித்தனமாக அம்பலமாகியது. புலிப் பாசிட்டுகளைப் பொறுத்த வரையில், மக்கள் என்பது அவர்களின் தேவைக்கு ஏற்ப பலியிடப்படும் மந்தைகள் என்பதே, அவர்களின் அரசியல் நிலைப்பாடு. இவர்களுக்கு ஏற்பவே மக்களை கோமாளியாக கருதும் இந்திய கோயபல்ஸ்சுகள்.



புலிகளால் கடத்தப்பட்ட இந்திய மீனவர்களின் கதைதான், மண்ணுக்குள் மண்ணாய் புதைந்து போன பலரின் சொந்தக் கதை கூட. எத்தனை மறுப்புகள், எத்தனை அடாவடித் தனங்கள். இந்த நிலையிலும் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேராக இருக்க, 12 பேரை விடுவித்ததாக புலி ஊடகங்கள் செய்தி பரப்புகின்றன. மீண்டும் இதிலும் அதே கோயபல்ஸ் நாடகம்.



12வது நபர் எங்கே? மாலைதீவுக்கு அருகில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய வள்ளம், இந்த மீனவர்களுடையது. அந்த மீனவர்களின் வள்ளத்தில் சென்ற புலிகளிடமிருந்து முதலில் தப்பியவர் தான், 12வது நபர். அந்த வள்ளம் புலிகளுடையது அல்ல. கைது செய்யப்பட்டவர்கள் தமது ஆட்கள் அல்ல என்று புலிகளின் கோயபல்ஸ் அறிக்கை, பாசிச மொழியில் வெளிவந்த போதும், எல்லாம் புஸ்வாணமாகிப் போனது.



இப்படித் தான் புலிகளால் வரலாற்றில் பல படுகொலைகள், கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டது. கோயபல்ஸ் பாணியில் பாசிட்டுக்களுக்கே உரிய வழியில், முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்க முயன்றவர்கள். சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலையை பயன்படுத்தி, புலிகள் நடத்துகின்ற படுகொலைகள், இந்திய மீனவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.



உண்மையில் புலிகளின் ஆயுத முனையில் மனித வரலாற்றை சாதிக்க முடியும் என்ற, அராஜகவாத வலது பாசிச தத்துவமே அனைத்தையும் தீர்மானிக்கின்றது. மக்களின் உயிர்களை இட்டு என்றும் அக்கறைப்படுவதில்லை. சொந்த அமைப்பில் கூட அதே விதி தான். மனித உயிர்கள் என்பது, புலிகளைப் பொறுத்த வரையில் மிக குறுகிய நலனுக்கு உதவக் கூடிய அவர்களின் அடக்கமுறைகளுக்கும் உறுக்கல்களுக்கும் உட்பட்ட விளையாட்டுப் பொருட்கள் தான்.



புலிகள் மக்களின் வாழ்வையிட்டு எந்தவிதத்திலும் அக்கறைப் படுவதில்லை. மாறாக மக்கள் தாம் சொல்வதை கிளிப்பிள்ளை போல் சொல்லவேண்டும். இது மக்கள் மேல் திணிக்கப்பட்ட புனிதமான ஒழுக்க விதி. மீறினால் மரணம். இதைவிட மக்கள் தாம் உழைத்த பணத்தை கேள்வியின்றி புலிகளுக்கு தரவேண்டும். இதுதான் அவர்கள் மக்கள் பற்றி கொண்டுள்ள நிலை மட்டுமின்றி, உறவும் கூட.



புலிகளால் மக்கள் கூட்டம் கூட்டமாகவே எட்டி உதைக்கப்படுகின்றனர். போராட்டம் என்பது மக்களைச் சார்ந்து, மக்களால் நடத்தப்படுவது என்பதை மறுத்து உறுமுபவர்கள். இதற்கு பலியானவர்கள் பல ஆயிரம். அனைத்தையும் துப்பாக்கி முனையில், படுகொலை வழிகளில் அரங்கேற்றும் லும்பன்களை கொண்ட ஒரு மாபியா இயக்கம. ஓட்டு மொத்தமாக தமிழ் மக்களின் எதிர்காலத்தையே குழிதோண்டிப் புதைப்பதைத் தான், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டமாக நடத்துகின்றனர்.



இதில் ஒன்று தான் தமிழக மீனவர்கள் மீதான தமிழ் தேசிய வெறியாட்டம். இதற்கு கோயபல்ஸ் புழுகுகள், விளக்கங்கள் எல்லாம் இனியும் கூட பாடை கட்டி வெளிவரும். இங்கு உள்ளது போல், இந்தியாவிலும் புலிகள் வீசும் எச்சில் பணத்துக்கு வாலாட்டும் நாலு நாய்கள், அதை கவ்வி குலைக்காமலா விடப்போகின்றது.



இந்திய மீனவர்கள் கடத்தலின் பின், அவர்கள் உயிர் தப்பியது அதிஸ்ட்டம் தான். புலிப் பாசிச வரலாற்றில் அவை புதைந்து மறைந்து போகாது மிதந்தது தற்செயலான விபத்துதான். புலிகளின் படுகொலையில் இருந்து மீனவர்கள் உயிர் தப்பியது என்பது, என்னவாக இருந்தாலும் ஒரு வரலாற்று நிகழ்வுதான். பலர் எப்படி அவர்களின் வரலாறே தெரியாதபடி மண்ணுக்குள் மண்ணாக புலிகளின் வரலாற்றில் வரலாறாகிப் போனார்களோ, அதேபோல் இது போகாமல் தப்பி பிழைத்துள்ளது.



உண்மையில் ஜந்து புலிகள் கடலில் வைத்து கைது செய்யப்பட்ட நிகழ்வுடன் தான், இந்த மீனவர்களுக்கு அதிஸ்ட்டமாக மீண்டது. அந்த ஜவருடன் கைது செய்யப்பட்ட படகு தான் முன்னைய மீனவர் படுகொலையை நடத்தியது என்பதை இந்திய மீனவர்கள் அடையாளம் கண்டதைத் தொடர்ந்தே, அவர்களின் தகவலின் அடிப்படையில் கைதும் நடந்தது. அப்போதும் தம்மை சிங்களவராக காட்டிக்கொள்ளவே முயன்றனர். அதைத் தொடர்ந்து தாம் தான் 12 மீனவர்களை கடத்தியது என்பதை ஓத்துக்கொண்டதும், அவர்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்வு புலியை முதலில் இக்கட்டில் மாட்டிவிட்டது. அப்போதும் அந்த ஜவரும் தமது ஆட்கள் அல்ல என்று கோயம்பல்ஸ் பாணியில் புலிகள் மீண்டும் புளுகினர்.



இதன் பின்பும் புலிகள் 12 மீனவர்களை தாம் பிடிக்கவில்லை என்றனர். தாம் தேடுவதாக கூறினர். இறுதியில் தாம் பிடிக்கவில்லை என்று அடித்தே கூறிவிட்டனர். இந்திய பொலிசின் வழமையான குற்றவாளிகள் பற்றிய இட்டுக்கட்டல்களை சாதகமாக கொண்டு, இந்திய கோயபல்ஸ்சுகள் இதை தமிழ் மக்களுக்கு எதிரான சதியாக, தமது சொந்த பாசிச சதியை அவிழ்த்துவிட்டனர்.



மீண்டும் ஒரு உண்மை அனைத்தையும் தகர்க்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாலைதீவில் அவர்களின் கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட வள்ளம் இந்த மீனவர்கள் உடையது என்பது அம்பலமானது. அத்துடன் புலிகள் கடத்தி வைத்திருந்த அந்த வள்ளத்தில் இருந்து முதலில் தப்பியோடிய மாலுமி, கடத்தப்பட்ட மீனவர்pல் 12 வது நபர் என்பது வெளி உலகுக்கு அம்பலமானது. இதன் போதும் கூட அந்த வள்ளம் தம்முடையதல்ல என்று புலிகள் மீண்டும் கோயபல்ஸ் பாணியில் அறிக்கை விட்டனர். ஆனால் எல்லாம் அம்பலமாக, தாம் பிடிக்காததென கூறிவந்த அந்த மீனவர்களை விடுவித்தனர்.



இப்படித்தான் விடுதலை நாடகம் அரங்கேறியது. இந்த விடையத்தில் வழமை போல் அல்லாது புலிகள் அவர்களை விடுவித்தது என்பது ஆச்சரியமானது. புலிகளின் பாசிச வரலாற்றில் அப்படி நடப்பது அரிதிலும் அரிது. கையும் களவுமாக மாட்டிய நிலையில், இதன் விளைவை தவிர்க்கவே விடுவிக்கும் நாடகம் அரங்கேறியது.



இந்திய கோயபல்ஸ்சுள்



புலிகளின் இந்த கடத்தல் மற்றும் படுகொலைகளை மறுத்து, சொந்த மக்களுக்கே துரோகம் செய்த கோயபல்ஸ்சுகள் அம்மணமாகி நிற்கின்றனர். புலிகளிடம் கையூட்டு வாங்கிக் கொண்டும், வெளிநாட்டு பயணங்களுக்காகவும் நக்கும் இந்த இழிந்த சமூக விரோதக் கும்பல்கள், எத்தனை எத்தனை அரசியல் பம்மாத்துகளை விட்டவர்கள். புலிகள் எப்படியும் மீனவர்களை உயிருடன் விடாது கொன்று விடுவார்கள் என்ற நம்பிக்கை, அவர்களை குலைக்க வைத்தது.



புலிகள் அவர்களை வழமைபோல் கொன்றுவிடுவதை, தமது சொந்த அரசியல் ஆதாயத்துடன் விரும்பினார்கள். அதற்காகவே பிரார்த்தித்தார்கள். இந்த பாசிச எடுபிடிகளாக திரியும் கோயபல்ஸ்சுகள், தமது சொந்த மக்களுக்கு வெட்கமின்றி துரோகம் செய்தனர். புலிகள் அவர்களையும் காப்பாற்ற முடியாது போனது. சொந்த பாசிச மாபியா நடத்தைகளை மூடிமறைக்க முடியாது போய் அம்பலமானார்கள். அவர்கள் தம்மை மட்டுமின்றி, தாம் போட்ட எச்சில் காசில் நக்கிய கோயபல்ஸ் துரோகிகளின் வேட்டியை உருவிவிட்டனர். வரலாறு இப்படித் தான் இந்த நிகழ்வை எழுதும்.



அரசியலில் வித்தை காட்டுவது

அரசியலில் வித்தை காட்டுவது

பி.இரயாகரன்

18.05.2007


ரசியலில் வித்தை காட்டுவதும், சமூக அறியாமையை உட்செரிப்பதன் மூலமும், ஒரு சமூகத்தின் புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படுகின்றது. வெளிப்படையானதும், நேர்மையற்றதுமான, அணுகுமுறையுடனான அரசியல் பித்தலாட்டங்கள் அரங்கேற்றப்படும் விதம் சூழ்ச்சிகரமானது.


இப்படி ஒரு பக்கம். மறுபக்கத்தில் இவர்களே புலி அல்லாதவர்களிடையே ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, ஜக்கியம் என்கின்றனர். எப்படி? எதனடிப்படையில்? புலி அல்லாதவர்pடையேயான ஜக்கியம் என்பது, இவர்களைப் பொறுத்த வரையில் புலியெதிர்ப்பின் அடிப்படையில் மட்டும் தான். புலிகளும் இப்படித் தான் ஜக்கியம் ஒற்றுமை என்கின்றனர். வேடிக்கையான ஒரே அரசியல்.


இப்படி ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணா அணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்று அனைவரையும் உள்ளடக்கிய வகையில் விட்டுக்கொடுப்புடன் கூடிய ஜக்கியம். இப்படி புலியெதிர்ப்பு அரசியல் கூத்தை ஆடிக்காட்ட முனைகின்றனர். இப்படி உள்ளவர்கள், மக்கள் பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று கேட்பதோ கேட்க கூடாத கேள்வி.


இப்படி அவர்களோடு கூடி மக்களின் முதுகில் குத்தவரும்படி புலியெதிர்ப்பு அணி கூவுகின்றது. இவையெல்லாம் அண்மையில் சபாலிங்கத்தின் பெயரில் நடத்திய கூத்தில் அரங்கேறியது. எதையும் அரசியல் ரீதியாக செய்வதை மறுக்கும் இந்த புலியெதிர்ப்பு, ரீ.பீ.சீ பின்னால் அனைவரையும் குலைக்க கோருகின்றது. இதன் பின்னால் சுயவிமர்சனம், விமர்சனம், ஜனநாயகம் என்ற பெயரில், எடுப்பார் கைப்பிள்ளை போல் எடுபடுவோரை அப்பாவிகள் என்பதா? அல்லது சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகள் என்பதா?


சபாலிங்கம் கூட்டம் ரீ.பீ.சீ கூட்டமாகிய கதை


இவை எல்லாம் எங்கே அரங்கேறியது என்றால், 13 ஆண்டுகளுக்கு முன் பாரிசில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் நினைவுக் கூட்டத்தில் அரங்கேறியது. ஒரு மரணத்தைக் கூட, தனது மக்கள் விரோத புலியெதிர்ப்பு அரசியலுக்காக ரீ.பீ.சீ பயன்படுத்தியது. இதை விட வேறு எந்த அரசியலும் ரீ.பீ.சீ க்கு கிடையாது.


இந்தியாவின் கூலிக் குழுவாக பிறப்பெடுத்து, அவர்களை அண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் ஈ.என்.டி.எல்.எப் வின் வானொலி தான் ரீ.பீ.சீ. அதன் ஒரு உறுப்பினரால் இவ் வானொலி நடத்தப்படுகின்றது. இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மை தான். ஆனால் அப்படி இல்லை என்ற நினைப்பில் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனையாட்டம் விவாதம் சிலர் செய்ய முனைகின்றனர். இதற்கு எப்போது சுயவிமர்சனம் செய்வார்களோ! தெரியாது.


ரீ.பீ.சீ நடுநிலையாக, எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்கியே ரீ.பீ.சீ. செயல்படுவதாக கூற முற்படுகின்றனர். அப்படி அவர்கள் எமக்கு சினிமா காட்ட முனைகின்றனர். அந்த வகையில் எம்மையும் அழைக்கின்றனர். தீவிர ஜனநாயகவாதிகளாக பாசாங்கு செய்யும் இவர்கள் அனைவரும், எமது எதிரான கருத்தை மாற்றுக் கருத்தாகவே அங்கீகரித்து கிடையாது. அரசியலற்ற புலியெதிர்ப்பு கருத்து மட்டும் தான், அதுவும் தம்மை அங்கீகரித்த கருத்தை மட்டும் தான், இவர்கள் மாற்றுக் கருத்தாக கருதுகின்றவர்கள்.


ரீ.பீ.சீ பின் (புலியெதிர்ப்பின் பின்) உள்ள எந்த நபரும் எப்படியும், எந்த இயக்கத்திலும் இருக்கலாம். ஆனால் வானொலி (புலியெதிர்ப்பு தளங்கள்) அப்படி இருக்காது என்று காட்ட முனைகின்றனர். இன்றைய அரசுகளை வர்க்கமற்ற அனைவருக்குமான அரசாக காட்ட முனைகின்ற புல்லுருவிகள் போல், இதுவும் முன்வைக்கப்படுகின்றது.


கருணா என்ற புலிக் கொலைகாரனுக்கு பின்னால் நிற்பவர்கள் முதல் எல்லா மக்கள் விரோத குழுக்களும் இணைந்து அல்லது அதன் எடுபிடிகள் சேர்ந்து வானொலியை நடத்துகின்றனராம். நல்ல அரசியல் வேடிக்கை. காலகாலமாக மக்கள் காதில் பூச் செருகியபடி, அவர்களின் தாலியையே அறுத்த கதை தான் இங்கும். மக்களின் அவலங்களின் மேல், அதைப்பற்றி பேசாது குதிரை ஓட்டுகின்றனர்.


இது ஒருபுறம். மறுபக்கம் யார் எப்படி என்பதற்கு அப்பால், வானொலியின் நோக்கம் என்ன என்பதே அடிப்படையான கேள்வி. புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை மறுப்பதே, தமது அரசியல் கொள்கை என்கின்றனர். அரசியல் ரீதியாக மக்களை அணுகுவதல்ல அரசியல் என்கின்றனர். மாறாக புலியைப் போல் கொசிப்பு அரசியலை செய்வதே சரி என்கின்றனர். இவர்கள் வானொலியில் செய்வது அரசியல், ஆனால் அரசியல் நாங்கள் பேச மாட்டோம் என்கின்றனர். இது ஒரு மக்கள் வானொலியாம்! வானொலியில் அரசியல் கொசிப்பு அடிப்பது தான் சரியாம். புலிகள் புலியாதரவு வானொலி நடத்துகின்றனர் என்றால், இவர்கள் புலியெதிர்ப்பு வானொலி நடத்துகின்றனர். மக்களை பற்றி கதைக்கும் அரசியல், வானொலிக்கே தீட்டு என்கின்றனர். இப்படி அவர்கள் நல்ல திருட்டு பார்ப்பனிய பூசாரிகள் தான்.


புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்க மறுப்பதும், மக்களை அரசியல் ரீதியாக விழிப்புற வைப்பதை மறுப்பதுமே, ரீ.பீ.சீ வானொலியின் அடிப்படையான அரசியல் நோக்கமாகும். இந்த வகையில் சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் கூடி கூச்சலிடுகின்றனர். மக்களின் வாழ்வியல் அரசியலை மறுத்து, புலியெதிர்ப்பு கொசிப்பை முன்னிலைப்படுத்துகின்றனர். இப்படியாக மக்கள் விரோத அரசியலை நிலை நிறுத்துவதே, அதன் மைய அரசியல் நோக்கமாகும்.


உண்மையை மூடிமறைக்கும் சூழ்ச்சியும், மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாத நரித்தனங்கள் மூலம், தம்மை நடுநிலை வானொலியாக அரங்கேற்ற முனைகின்றனர். சபாலிங்கத்தின் கூட்ட பின்னணியில் மூடிமறைக்கப்பட்ட உள்நோக்கம், கூட்டத்தின் இறுதிவரை மூடிமறைக்கப்பட்டு இருந்தது. இவை இடையிடையே அங்கும் இங்குமாக வெளிப்பட்டது. ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, ஜக்கியம் என்ற பெயரால் இது வெளிப்படபோதும், அது கூட்டத்தின் முடிவில் சொந்த முகத்துடன், தமது குறுகிய நோக்கத்துடன் எழுந்து நின்றது.


சபாலிங்கத்தை இதில் இருந்து புனிதப்படுத்தி, தமது நேர்மையை அப்பழுக்கற்றதாக காட்ட, கூட்டத்தை இரண்டாக பிரித்து நாடகமாடினர். இரண்டாவது கூட்டத்தில் விரும்பியவர்கள் பங்கு பற்றலாம் என்ற நாடகம் அரங்கேறியது. உண்மையில் நேர்மையற்ற அரசியல் வேடிக்கை தான்.


இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்த நண்பர்கள் வட்டம், இரண்டாவது சுற்றில் ரீ.பீ.சீ யின் ஏஜண்டுகளாக (பிரான்சின் பிரதிநிதிகளாக) வெளிப்பட்டனர். சதிகளும், சூதும் அரசியலாகிவிட்ட எமது அரசியல் சூழலில், அதுவே வாழ்வு முறையாக இருப்பதை இது அம்பலமாக்கியது. புலிகள் அதில் மூழ்கிவிட்டனர் என்றால், புலியெதிர்ப்பும் அப்படித்தான் என்பதை தனிநபர் வேறுபாடுகளின்றி தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றனர்.


புலியெதிர்ப்பு அரசியலாகக் கொண்ட ரீ.பீ.சீ அரசியல் சூழ்ச்சி தான், சபாலிங்கம் நினைவாகிப் போனது. எதையும் வெளிப்படையாக நேர்மையாக வெளிப்படுத்த முடியாத அரசியல் சூதாட்டங்களே, புலியெதிர்ப்பு அரசியலின் உள்ளடக்கமாகும். ரீ.பீ.சீ பின்னால் நடப்பதும் அது தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளை, தமது சொந்த அரசியலாக கொண்டிராதவர்களின் அரசியல் வாழ்வு என்பது, மக்களுக்கு எதிரான சூதும் சதியும்தான். இது தன்னைத்தான் மூடி மறைத்துக் கொண்டே சதா இயங்குகின்றது. இப்படித்தான் அந்தக் கூட்டமும் அன்று அரங்கேறியது. மக்களுக்கு எதைத்தான், இவர்கள் பெற்றுத் தரப் போகின்றார்கள்?


இனம் காணமுடியாத ஜனநாயகவாதிகள்


இந்த கூட்டத்தில் புலி உளவாளிகள் முதல் அனைத்து உளவாளிகளும் கலந்த கொண்ட ஒரு கூட்டம். ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் என்று அனைத்து தரப்புமாக, மொத்தம் 50, 60 பேர் கொண்ட கூட்டம்.


இவர்கள் எல்லாரும் சேர்ந்தே கொலைகளை கண்டித்தல், புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்டல் பற்றி புலம்பல்கள். வேடிக்கையான அரசியல் தளம். நாங்களும் அதில் கலந்து கருத்துரைப்பது சரியா பிழையா என்ற முரண்நிலையான சொந்த நிலைப்பாடுகள். நாங்கள் மக்களின் வாழ்வு சார்ந்த கருத்தியலை முன்வைப்பதன் மூலம், உதிரியான சிலருக்கு அதை உணர்த்த முடியுமா என்ற முனைப்பின் அடிப்படையில், இதில் பங்கு பற்றி கருத்துக்களை முன்வைக்கின்றோம். உண்மையில் மக்களைப் பற்றி சிந்திப்பவர்களின் போராட்ட வழி என்ன என்பதை, இங்கும் சுட்டிக்காட்ட முனைகின்றோம்.


இந்த வகையில் இந்த கூட்டத்தில் நாம் முன்வைத்த கருத்துகளைக் கூட, நடுநிலை வானொலியாளர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. எனக்கு நேரம் முடிந்துவிட்டதாக கூறிய அற்பத்தனங்கள். மீண்டும் இதே பாரிஸ் மண்ணில் திடீர் திடீரென அரங்கேறியது. மற்றவர்களை விட அதிக நேரத்தை நான் எடுத்திருக்கவில்லை. மக்களின் நலன், அவர்களின் வாழ்வியல் சார்ந்த அரசியல், மற்றவர்களை விட அழுத்தம் திருத்தமாக முன்வைப்பதை சகிக்க முடியாததன் விளைவு, நேரத்தை வழங்க அவர்களால் முடியவில்லை. மறுபக்கத்தில் எந்த ஜனநாயகவாதியும் இதை கண்டிக்கவில்லை.



எனது உரை










எமது கருத்துக்கள் ஏற்படுத்தும் உண்மை, உண்மையில் மக்களுக்காக சிந்திப்பவர்களை தடுமாற வைக்கின்றது. மக்கள் விரோத குழுக்கள், நபர்கள் இதனால் அதிர்ந்து போகின்றனர். இதனால் இதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறுவது நடக்கின்றது. அதாவது தாம் அதற்கு விரோதிகள் அல்ல என்று காட்டி, சிந்திப்பவனின் குறைந்தபட்ச அரசியல் உணர்வை நலமடித்து சிதைப்பது இவர்களின் கைவந்த மோசடியாகின்றது. உண்மையில் சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளைச் செரித்து, அதன் சுவடே தெரியாது பூசி மொழுகிவிடுவதே கடந்த 30 வருட தமிழ் அரசியலாகும். இதை ஒரு தந்திரமாக, பல தளங்களில் அரங்கேறுகின்றனர். இவை கடந்தகாலத்தில் சொந்த அமைப்பில் ஒரு அரசியல் முரண்பாடாக எழுந்தபோது, உட்படுகொலைகள் மூலம் மூடிக்கட்டியவர்கள், இன்றும் அதை பச்சையாகவே விபச்சாரம் செய்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்திலும் இவை எழுப்பப்படுவதும், அதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறியே அனைவரையும் ஏமாற்றி கூட்டங்களை நடத்துகின்றனர். கடைந்தெடுத்த கயவாளிகள். அரசியல் உள்ளடகத்தை ஏமாற்றி மோசடி செய்து மக்களின் முதுகில் காலகாலமாக குத்தி வருபவர்கள். இந்த நிலையில் நாங்கள் மட்டும், நாங்கள் மட்டும் தான், சமூகப் பிரச்சனைகளின் அடிப்படையில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இதுவே அனைவருக்கும் எமக்குமான அரசியல் முரண்பாடு.


விட்டுக்கொடுப்பு, ஜக்கியம், ஒற்றுமை என்பதன் பெயரில், மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை, அரசியல் ரீதியாக நீத்துப்போகச் செய்கின்ற கூத்துகளே உண்மையில் அரங்கேறுகின்றது. இதை எதிர்த்து நாம் குரல்கொடுக்கும் போது, மார்க்சியம் என்ற முத்திரை குத்தியே மக்களின் முதுகில் குத்துகின்றனர். நாம் மார்க்சியத்தைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால், அதை செவிமடுப்பதற்கும் செயல்படுவதற்கும் குறைந்தபட்ச சமூக அறிவு வேண்டும். மக்கள் பற்றியே சிந்திக்காத, அதை வெறுக்கின்ற மக்கள் விரோத ஓட்டுண்ணிக் கூட்டத்தினர்க்கு, எப்படி மார்க்சியத்தை முன்வைக்கமுடியும். மற்றவர்களின் எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக, முன்னைய குழுக்களின் செல்லப்பிள்ளைகளாக, பழைய குழுவாத அடையாளங்களையே நக்குகின்றவர்கள், குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தை கூட அங்கு உள்வாங்குகின்றதும், பேசுகின்றதுமான அரசியல் தகுதி கிடையாது. எப்படி புலிகளுடன் நாம் மார்க்சியத்தை, முதலாளித்துவ ஜனநாயகத்தைப்பற்றி பேச முடியாதோ, அதே நிலைதான் புலியெதிர்ப்பு அணியின் முன்பும் உள்ளது. புலிக்கும், புலியெதிர்ப்பு அணிக்கும் அரசியல் ரீதியாக நாம் வேறுபாட்டை காணமுடியாது. அதனால் தான் இருதரப்பும் தத்தம் தரப்பு அரசியலை முன்வைப்பதுமில்லை, மாற்றுத் தரப்பை அரசியல் ரீதியாக விமர்சிப்பதுமில்லை.


இந்த நிலையில் நாங்கள் சாதாரண தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள், அவர்களின் பிரச்சனைகள் மீது மீண்டும் மீண்டும் விவாதத்தை நடத்த முனைகின்றோம். அதைக் கோரிய எமது விவாதத்தையே மார்க்சியம் என்கின்றனர். சரி நீங்கள் மக்கள் நலன் என எதைத்தான், எப்படி, எந்த அரசியல் வழியில் முன்வைக்கின்றீர்கள்? முன்வைக்காத உங்களிடம் எமது இந்தக் கேள்வி அபத்தம் தான். உண்மையில் அரசியல் ரீதியாக சீரழிந்தவர்கள், மக்களின் பிரச்சனையை முன்னெடுப்பது மார்க்சியத்தின் கடமை என்பதையே, இந்த முத்திரை குத்தலின் ஊடாக ஒத்துக்கொள்கின்ற தர்க்கம் உருவாகின்றது.


புலியெதிர்ப்பு அணியின் பின்னுள்ள ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ்சின் அரசியல் என்ன? இவர்கள் எப்படி மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார்கள்? புலியை விட அரசியல் ரீதியாக எப்படி, எந்த வகையில் மாறுபட்டவர்கள்! வாயைத் திறந்து கூறுங்கள். மௌன விரதமோ. சூழ்ச்சியும், சதியும் ஒருங்கே கொண்ட செயல்பாடுகள் தான் இவர்களின் அரசியல். மக்கள் விரோத சக்திகளின் பின்னால் கூலிக் குழுவாக நிற்கின்றவாகள். இவர்கள் எப்படி மக்களின் பிரச்சனையை தீர்ப்பார்கள். கடந்த காலத்தில் உட் படுகொலைகள் மூலம் அல்லது அவர்களை ஒரங்கட்டுவதன் மூலம் சொந்த அமைப்புகளின் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்தவர்கள். இன்று அவற்றை எல்லாம் கழுவேற்றிய கூலிக்குழுக்கள் தான். சரி அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக புலியெதிர்ப்பின் பின் செல்பவர்களான நீங்களாவது பதிலளியுங்கள்.


இப்படிப்பட்ட நிலையில் சாதியம், பெண்ணியம் போன்ற சமூக ஒடுக்குமுறைகளை ஒழிப்பதில் நாம் உடன்பாடு தான் என்று கூறிக்கொள்கின்றனரே, எப்படி? அதன் அரசியல் வழி தான் என்ன? நீங்கள் செயல்படுகின்ற இயக்கங்கள் அல்லது உங்கள் செயல்பாடுகள் அதை எப்படி எந்த வகையில் ஒழிக்கும்? உண்மையில் இந்த சமூகப் பிரச்சனைகளை ஏற்றுக்கொள்வதாக கூறி செரிக்கின்ற அரசியல் சதி தான், புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் உத்தியாகும். இதையே புலியும் செய்கின்றது.


உண்மையில் இந்த சமூக ஒடுக்குமுறைகளை பாதுகாக்கின்ற நுட்பமான அரசியல் சதியாகும். இதைத் தான் புலிகளும் செய்கின்றனர். அவர்களும் கூட சமூக ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், அதை செரிப்பது அவர்களின் உத்தியும் கூட.


எப்படி கடந்தகால இயக்கங்கள் சோசலிசம் வரை பேசி மக்களின் முதுகில் ஆழமாக குத்தினரோ, அதே உத்தி, அதே தந்திரம் இங்கும். சொற்களில் அதை அலங்கரிப்பது, நடைமுறையில் இருப்பதைப் பாதுகாப்பது. உண்மையில் இவை அரசியல் சதிகள். சமூக முரண்பாடுகளை ஏற்றுக்கொள்வதாக காட்டி அதைச் உட்செரிப்பது, நடைமுறையில் அதை மறுப்பதுமாக அரங்கேறுகின்றது. இதுவே எம்முடன் நிலவும் அடிப்படையான முரண்பாடு. அன்றைய கூட்டம் இதை எல்லாம் செரித்து, ரீ.பீ.சீ யின் குறுகிய நலன்களுடன் தான் நிறைவேறியது.


கடந்து வந்த வரலாற்றில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளமுடியும் இந்தக் குழுக்கள் சமூக முரண்பாடுகளை களையப் போவதில்லை என்பதை நிறுவியே உள்ளனர். அதைவிட கேடுகெட்ட கூலிக் குழுக்களாக இன்று அவை உள்ளள. ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ்சின் கடந்தகால இயக்க நடைமுறைகள், அதன் அரசியல் எந்த வகையிலும் புலிகளில் இருந்து மாறுப்பட்டது அல்ல. குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரொஸ் பேசிய இடது அரசியல் கூட, அடிப்படையில் புலி அரசியலுக்கு உட்பட்டது தான். ஈ.பி.ஆர்.எல்.எப் அடிமட்டத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை அதிகம் அணிதிரட்டிய போதும் கூட, அது வர்க்க ரீதியாக புலி அரசியலையே கொண்டிருந்தது. அதாவது இந்திய எடுபிடிகளாகவே, கூலி கும்பலாகவே உருவானது. அடிமட்ட சமூகத்தில் எழும் சாதி மோதல்களை மட்டும், தனது சொந்த அணி திரட்டலுக்காக பயன்படுத்தியது. உதாரணத்துக்கு இந்தியாவின் வன்னியர், தலித் இயக்கங்கள் போன்றதே.


இந்த இயக்கங்களின் இன்றைய பிரதிநிதிகள் எப்படி தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவார்கள்? குறிப்பாக இவர்கள் யாரும் புலிகளின் வர்க்க அரசியலை விமர்சிப்பது கிடையாது. புலிகளின் அரசியலை விமர்சித்தால், யாருக்காக? எப்படி? எந்த மக்களுக்காக என்ற விடையம் வெளிப்படுவதை அவர்கள் திட்டமிட்டு தவிர்க்கின்றனர். இதற்கு பதிலாக விமர்சனமற்ற வெற்றுக் கோசங்களைக் கொண்டு, அரசியல் கொசிப்பை செய்வதன் மூலம் தம்மை மூடிமறைக்க விரும்புகின்றனர். இதுவே இயக்கங்களுடன் இல்லாத, தனிநபர்களின் நிலையும் கூட. அரசியல் ரீதியான விமர்சனம் அற்ற கொசிப்பே, இவர்களின் அரசியலாகி அவர்களின் இருப்பின் மையமாகின்றது.


ரீ.பீ.சீ பின்னால் வாலாட்டும் ஜனநாயகவாதிகளே!


நீங்கள் எதைச் சாதிக்க கோமணத்தை கட்டிக்கொண்டு அவசர குடுக்கையாக ஒடுகின்றீர்கள். கடந்த பல வருடமாக நீங்கள் செய்த அரசியல், எதைச் சாதித்தது. எந்த அரசியலை நீங்கள் மக்களுக்காக முன்வைத்தீர்கள். சொல்லுங்கள். இவ்வளவு காலமும் சரியான ஒன்றை உங்களால் ஆதரிக்கமுடிந்தா? பின்பற்ற முடிந்ததா? இல்லை ஏன்? சரி நீங்கள் இன்று செய்வது சரி என்று உங்களால் சொல்லமுடியுமா? நாளை இதை மறுத்து சுயவிமர்சனம் செய்வீர்களோ?


சரி புலியெதிர்ப்புக்கு (ரீ.பீ.சீ க்கு) பின்னால் எதைச் சாதிக்கப் போகின்றீர்கள்? எப்படி எந்த வழியில்? மக்களுக்காக எதை செய்யப் போகின்றீர்கள்? உங்களால் மக்களுக்காக ரீ.பீ.சீயில் எதையும் செய்யவும் முடியாது. சாதிக்கவும் முடியாது. இதை நீங்கள் இன்று உணர மறுத்தால், வரலாறு உங்களுக்கு திருப்பிக் காட்டும்.


புலியெதிர்ப்புக்கு (ரீ.பீ.சீ) க்கு குடைபிடித்துக் கொண்டு செல்வதற்கு முன், அதன் பின்னால் அணி திரண்டுள்ளவர்கள் பற்றி என்ன நினைக்கின்றிர்கள்? ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ்சுடன் சேர்ந்து புலியை திட்டி தீர்க்கப் போகின்றீர்களா அல்லது அன்னிய சக்திகளுக்கு பாய்விரிக்க போகின்றீhகளா? சொல்லுங்கள். எப்படி தமழ் மக்களின் பிரச்சனையை புலியெதிர்ப்பு மூலம் தீர்க்கப் போகின்றீர்கள். சம்மந்தப்பட்டவர்கள் இவற்றுக்கு பதில் சொல்வது கிடையாது, நீங்களுமா? இலங்கை பேரினவாத இராணுவப் பிரிவு நடத்துகின்ற இணையச் செய்தியை, புலியெதிர்ப்பு இணையங்கள் தமிழில் மொழிபெயர்த்து விடுவதும், புலிக்கெதிராக வெளிவரும் செய்திகளை வெளியிடுவதன் மூலம், தமிழ் மக்களிடம் எதைச் சாதிக்க முனைகின்றீர்கள். புலிச் செய்தியைப் போல் தான் புலியெதிர்ப்புச் செய்தியும். இதற்குள் அரசியல் ஆய்வு என்ற பெயரில் புலிக் கொசிப்பு. சமூகம், மக்கள் என்று எதுவுமற்ற மலட்டுக் கூட்டத்தின் வக்கிரங்கள் கொசிப்பாகின்றது. இவர்கள் பின்னணியில் ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலொ, பிளாட், ஈரொஸ் என்று அனைத்து மக்கள் விரோதக் குழுக்களும் உள்ளனர். இவர்களை புலியெதிர்ப்பு அணியினர் ஜனநாயகத்துக்கு திரும்பியவர்கள் அல்லது ஜனநாயகவாதிகள் என்கின்றனர்.


இலங்கை அரசுடன், இந்தியா அரசுடன், ஏகாதிபத்தியத்துடன் கூடி கூலிக் குழுவாக நிற்கும் இந்தக் குழுக்களின், கும்பலின் அரசியல், தமிழ் மக்களுக்கு எதிரானதா இல்லையா என்று விவாதிக்க மறுக்கின்ற ஜனநாயகம் தான், இவர்களின் புலியெதிர்ப்புக்கான வேலி.


இந்தக் குழுக்களின் அரசியல் இருப்பு கூலிக் குழுக்கள் தான். யார், எந்த அரசு, இவர்களின் உண்மையான எஜமானர்களோ, அவர்களின் விருப்பப்படி அனைத்தையும் செய்யத் தயாரான காட்டுமிராண்டிகள் தான். ஜனநாயகம் என்பது தங்களைத் தாங்களே புனிதப்படுத்தி காட்டிக் கொள்ள பயன்படுத்தும் பார்ப்பான் கொடுக்கும் தீர்த்தம் தான்.


1. இலங்கை அரசின் கீழ் இயங்கும் ஈ.பி.டி.பியின் ஆயுதப் பிரிவு இயங்கும் தளத்தில் அல்லது அவர்கள் ஆதிக்கம் உள்ள இடத்தில், நீங்கள் யாராவது ஜனநாயக பூர்வமாக அவர்களை விமர்சித்து செயல்பட அவர்கள் அனுமதிப்பார்களா? சொல்லுங்கள் நிச்சயமாக முடியாது.


2. இந்தியாவில் கூலிக்கும்பலாக இயங்கி, அங்கேயே அவர்கள் தயவில் காத்திருக்கும் ஈ.என்.டி.எல்.எப் கும்பல் உள்ள இடத்தில், உங்களால் சுயாதீனமாக செயல்பட முடியுமா? அவர்களை விமர்சனம் செய்ய முடியமா? முடியாது. உங்கள் எல்லோருக்கும் இவை நன்கு தெரியும்.


3. இதேபோல் புலிக் கருணா அணியும். அவர்கள் பிரதேசத்தில் நீங்கள் வாய் திறக்க முடியாது. இதை எல்லாம் மறுக்கும் அரசியல் உங்களிடம் உண்டா?


இதேபோல் தான் மற்றைய குழுக்களும். இப்படிபட்டவர்கள் எல்லாம் கூடித்தான் புலியெதிர்ப்பு கும்பலலாக உள்ளனர். இதற்குள் எத்தனையோ வெட்டுக் குத்துகள். இவர்கள் எல்லாம் ஜனநாயகவாதிகள். வேடிக்கை தான்.


அன்று ரீ.பீ.சீ சார்பாக இயங்கும் முன்னாள் புலி ராகவன் கூட்டத்தை தலைமை தாங்கிய போது, அவரின் புலி ஜனநாயகம் பல்லிளித்தது. நான் பேசும் நேரத்தை மட்டுப்படுத்தியதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? அது புலி அரசியல் தான். அன்று கூட்டம் முடிக்க அவசரப்பட்ட இதே ராகவன், கூறிய காரணம் என்ன? மேலதிக நேரம், கூட்ட மண்டபத்துக்கு அதிக பணத்தை செலுத்த வேண்டும் என்றாரே. கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் அதே இடத்தில் இம் மண்டபம் இலவசமானது என்று போட்டு உடைத்தனர். சூதும் சதியும், ஒருங்கே கூட, பொய்யும் புரட்டும் காரணங்களாகின்றது. இவர்கள் தான் புலியெதிர்ப்பு அணி. உண்மையில் இந்த கூட்டத்தின் முடிவில், ரீ.பீ.சீ யின் இரண்டாம் கட்ட கூட்டம் ஆரம்பமாக இருந்த சதி பின்னால் தெரியவந்தது.


இப்படிப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து புலியெதிர்பாக (ரீ.பீ.சீயாக) குழுமுகின்றனர். எம்மையும் இந்தக் கூத்துக்கு அழைக்கின்றனர். மக்களின் பிரச்சனைகளை கைவிட்டு, உங்கள் கருத்தை முன்வைக்க வாருங்கள் என்ற வாதங்கள். இதில் சிலர் அப்பாவிகள். பலர் அரசியலை வாழ்வாக கொண்டு, வாழமுடியாத நேர்மையற்ற சந்தர்ப்பவாதிகள்.


ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எப், கருணாஅணி போன்ற கூலிக் குழுக்கள், ஜனநாயகத்தின் அரிச்சுவடியைக் கூட அனுமதிக்க மறுப்பவர்கள். மக்களின் சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு செயல்படாத வலதுசாரிகள் யாரும், ஜனநாயகத்தை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. தமது கூலித்தனத்தையும், வலதுசாரி பாசிசத்தையும் நிறைவேற்ற ஜனநாயகத்தை தொட்டுக் கொள்ளவே பயன்படுத்துபவர்கள். இவர்கள் தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்டுத் தரப்போகின்றார்கள். நல்ல அரசியல் வேடிக்கை தான். இவர்கள் மக்களின் சமூக முரண்பாடுகளை களைந்து, மக்கள் விடுதலையை வென்று தரப் போகின்றார்களாம். முட்டாள்களே நம்புங்கள்.


ஜனநாயக விரோதிகள், மக்கள் உரிமைக்கு எதிரானவர்கள், சமூக ஒடுக்குமுறையை செரித்து அதை மூடிமறைப்பவர்கள், கூடி நடத்தும் வானொலி (புலியெதிர்ப்பு) அல்லது பயன்படுத்தும் வானொலியின் அரசியல் என்ன? அது மட்டும் சூக்குமம். அது தான் புலியெதிர்ப்பு அரசியல். புலியை அரசியல் ரீதியாக விமர்சிக்காத அரசியல் தான் புலியெதிர்ப்பு. இதன் மூலம் தமது புலி அரசியலை பாதுகாக்கின்றனர். புலியின் அதே அரசியலைக் கொண்டு, புலியை கவிழ்க்கும் அரசியல் சதிதான், புலியெதிர்ப்பு அரசியல்.


மக்களுக்கு வெளியில் விடுதலை உண்டோ?


உண்டு என்று புலியெதிர்ப்பு சொல்லுகின்றது. அதைச் செய்வதாக (புலியெதிர்ப்பும்) ரீ.பீ.சீயும், அதன் பின் உள்ளவர்களும் சொல்லுகின்றனர். எப்படி ஜயா? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள். மாயமா! மந்திரமா! அல்லது எப்படி அந்த விடுதலை? மக்களின் பிரச்சனையை பேசாது எப்படி மக்கள் விடுதலையைப் பெறமுடியும்? இதை சாதிக்கும் மந்திரக்கோல் வைத்துள்ளனரா? அண்ணைமாரே கோவியாதையுங்கோ, அதை ஒருக்கா விளாவாரியா சொல்லுங்கோ.


உண்மையில் யாருக்கும் அதைச் சொல்லும் தைரியம் கிடையாது. எந்த அரசியல் நேர்மையும் கிடையாது. நாங்கள் சொல்வது தவறு என்று சொல்லும் நேர்மையும் கூட கிடையாது. உண்மையில் இந்த விடையம் மீது விமர்சனம், விவாதம் நடத்தும் அரசியல் அருகதை கூட கிடையாது. சூதும், சதியும் புலியெதிர்பு அரசியலாக இருப்பதால், இந்த நிலை.


மக்களின் பிரச்சனைகளை இனம் காணல், அதை மக்களின் விடுதலைக்காக எழுப்புதல் என்பதை மறுப்பதே இவர்களின் அரசியலாகும். இதையொட்டி விவாதிப்பதை மறுப்பது தான், இவர்களின் ஜனநாயக மறுப்பாகும். அண்மையில் பாரிஸ் வந்த ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கம் அரசின் தீர்வுத்திட்டம் தொடர்பாக பேசிய கூட்டத்தில், மக்கiளின் பிரச்சனைகளை இனம் காணுதல் என்ற எனது தர்க்கமே பெரும்பான்மையினரின் கருத்தாக மாறியது. இதுவே கூடியிருந்தவர்களின் ஏற்புடைய கொள்கையாக இருந்தது. இதை உருவாக்க சிவலிங்கம் உட்பட்டவர்கள் பொறுப்பாக இருக்க, அக் கூட்டம் கோரியது. ஆனால் அதை உண்மையிலே செய்ய மறுத்தல், செய்யாமல் இருத்தல் புலியெதிர்ப்பின் மையமான அரசியலாகும். மாறாக அரசு அல்லது யாராவது வைக்கின்ற ஒன்றை கவ்விக்கொண்டு வள்வள்ளென்று குலைப்பதே, மக்கள் நலன் என்கின்றனர். புலியெதிர்ப்பின் பின் இருப்பது வேதாளக் கதை தான்.


மக்களின் பிரச்சனைகளை இனம் காணமல் இருத்தல், அதை மூடி மறைப்பது, அதை இனம் காணமல் விட்டுவிடுவதும் என்பதே, இவர்களின் அடிப்படை நோக்கமாக உள்ளது. மக்களின் பிரச்சனையில் இருந்து புலிகளை அம்பலப்படுத்துவதை மறுப்பதே, இவர்களின் தலையாய அரசியல் உத்தியாகும். உண்மையில் புலியின் அரசியலை விமர்சிக்க மறுப்பதே, இவர்களின் அரசியல் நலன்களாகும். இதைப் புரிந்து கொள்ளாமல் விட்டில் பூச்சியாக அதில் வீழ்ந்து மடிபவர்களை, நாம் பரிதாபத்துடன் பார்க்கவே முடியும்.


கடந்து வந்த காலத்தில், எது எந்த அரசியல் புலியை உருவாக்கியது? உங்களில் யாராவது அதை விவாதிக்க முடியமா? அதை சொல்ல, அதை மாற்ற உங்களால் முடியுமா? முடியாது. அதையே நீங்கள் புலியெதிர்ப்பு அரசியலாக கொண்டுள்ளீர்கள். அதையும் மறுக்க உங்களால் முடியாது. இவை எல்லாம் பற்றி பேசாதா அரசியல் தான், புலியெதிர்ப்பு கொசிப்பு. அதை பற்றி நீங்கள் பேசினால், உங்கள் அரசியல் தெளிவாகும். புலியைப் போல் உங்களுக்கும் புரட்சிகரமான மக்கள் நலன்கொண்ட அரசியல் எதுவும் கிடையாது.


புலியின் ஊடகமும், புலியெதிர்ப்பு (ரீ.பீ.சீ) ஊடகமும்


அரசியல் ரீதியாக என்ன வேறுபாடு? காட்ட முடியுமா? அரசியல் ரீதியாக காட்ட முடியாது. புலிகள் எப்படி மக்களின் வாழ்வு சார்ந்த அரசியலை நிராகரிக்கின்றனரோ, அதையே புலியெதிர்ப்பும் செய்கின்றது. இந்த எல்லைக்குள் தான், இந்த இரண்டு எதிரெதிரான ஊடகவியலும் இயங்குகின்றது. இரண்டு தரப்புக்கும் மக்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. இதனால் அவர்களிடம், மக்களுக்கான அரசியல் அடிப்படையே இல்லாமல் போய்விட்டது. மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசாது விசில் அடிப்பதும், கொசிப்படிப்பதுமே அரசியலாகிவிட்டது.


மற்றவர்கள் சொல்வதை தூக்கிவைத்து விபச்சாரம் செய்வதே இதன் பொது அரசியல் கொள்கையாகிவிட்டது. உதாரணத்துக்கு இந்தியாவின் அரசியல் பொறுக்கிகளாகவே வாழும் குரங்கு ஒன்று சொன்னால் அதை வைத்தும், மறுபக்கத்தில் புலியெதிர்ப்பு அந்த குரங்குகளை ஆளும் அனுமான் சொன்னால் அதை வைத்து ஆடுவதுமாகவே, இவர்களின் கொசிப்பு அரசியல் அரங்கேறுகின்றது. மக்களின் பிரச்சனையை வைத்து பேச வக்கற்றுக் கிடக்கின்றனார் புலியைப் போல் சம்பவங்கள், நிகழ்ச்சிகள் மேல் மிதக்கின்றனர். புலியைப் போல் வெற்று வேட்டுத்தனம்.


மக்களின் அடிப்படை பிரச்சனையைப் பற்றி பேசாது இருத்தல், விளைவுகளைப்பற்றி மட்டும் பேசுவதே இருதரப்பினரதும் உத்தி. உண்மையில் இவை திட்டமிட்ட மக்கள் விரோத செயல்பாடாகும் மக்களின் ஜனநாயகம் பற்றி யார் பேச வேண்டும் என்றாலும், மக்களின் அன்றாட அரசியல் பிரச்சனைக்கு வெளியில் அது பற்றி பேச எதுவும் கிடையாது. அதனால் தான் புலிகள் முதல் புலியெதிர்ப்பு வரை, மக்களைக் கண்டு அஞ்சும் ஜனநாயக விரோதிகளாக இருக்கின்றனர். உள்ளடகத்தில் பாசிசத்தை சாரமாக கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்குகின்றனார். புலிகள் முதல் ஈ.என்.டி.எல்.எவ் வரை மக்களை ஒடுக்கும் பாசிசம் தான், அவர்கள் அரசியல் இருப்பின் அடிப்படையாகும். இந்த ஊடகங்கள் மக்களின் பிரச்சனையை ஒரு நாளும் முன்னெடுக்கப் போவதில்லை. அதை தனித்துவமாக நாங்கள் செய்ய முனைகின்றோம் என்பதே மறக்க முடியாத உண்மை. ஆம் தனித்து பலவீனமாக இருந்தாலும், பலமாக நாம் அனைத்து தளத்திலும் முட்டி மோதுகின்றோம். இதை விட வேறு அரசியல் வழி எம்முன் இன்று கிடையாது.


Thursday, May 17, 2007

அடங்கிப் போ, ஒத்துஊது!" -புதிய தலித்திய முழக்கம்!

அடங்கிப் போ, ஒத்துஊது!"

-புதிய தலித்திய முழக்கம்!


டங்க மறு; அத்து மீறு!'' இது சுவரெங்கும் விடுதலை சிறுத்தைகள் எழுதி வைக்கும் முழக்கம். இதை வாசித்துவிட்டுப் பொங்கி எழும் தலித் இளைஞர்கள் அத்துமீறினால் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தராமல், அந்த இளைஞர்களையே ஆதிக்க சாதியிடம் ""அடங்கிப் போ'' என எந்தத் தலைவராவது வற்புறுத்துவாரானால், அவரை நாம் நிச்சயமாக தலித் துரோகி எனச் சொல்லி விடலாம். ஆனால், அவ்வாறு அடங்கிப் போகச் சொல்வதே விடுதலைச் சிறுத்தைகளின் தலைமைதான் எனும்போது, அச்செயலை அம்பலப்படத்தி விமர்சிக்காமல் தலைமையை வியந்தோதி ""சேரிப்புயல்'' என்றோ, ""வாழும் அம்பேத்கர்'' என்றோ நாணயமுள்ளவர்கள் துதிபாடிக் கொண்டிருக்க முடியுமா?


புதுக்கூரைப்பேட்டை, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் உள்ள சிறு கிராமம். இக்கிராமத்தின் தலித் காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசனும், அதே ஊரின் ஊராட்சித் தலைவர் துரைசாமியின் மகள் கண்ணகியும் 8.7.2003 அன்று நஞ்சு ஊற்றிக் கொல்லப்பட்டு உடனடியாக எரிக்கப்பட்டனர். பொறியியல் பட்டம் படித்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த முருகேசனை, வன்னியப் பெண்ணான கண்ணகி காதலித்ததாலேயே, அப்பெண்ணின் வீட்டார்உறவினர்களால் இருவரும் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, ஊருக்கு வெளியேயுள்ள முந்திரிக் காடொன்றில் கட்டி வைத்து உதைக்கப்பட்டனர். கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிதான் முருகேசனின் வாயில் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றிக் கொன்றார். முருகேசனின் தந்தையும், சித்தப்பா அய்யாசாமியும் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததால் இக்கொடுஞ்செயலைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அன்றைக்கு அவர்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.


தாழ்த்தப்பட்ட சாதிக்காரனைக் காதலித்துத் தன் சுயசாதிக் கவுரவத்தைச் சிதைத்துவிட்ட தங்கையின் வாயில் விசம் ஊற்றினார் அண்ணன் மருதுபாண்டி. வாயைத் திறக்க தங்கை மறுத்திடவே, அவரின் மூக்கிலும், காதுகளிலும் விசத்தை இறக்கிச் சாகடித்தனர். சிறிது நேரத்திலேயே பிணமாகிப் போன இருவரையும் தனித்தனியே எரித்துத் தடயத்தையும் அழித்து விட்டனர்.


நெஞ்சை உறைய வைக்கும் இப்படுகொலைகள் நடந்தவுடன் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொலைபேசியில் சாமிக்கண்ணுவைத் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார். போலீசு கண்டிப்பாய் நடவடிக்கை எடுக்கும் என்றார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, இந்தப் பயங்கரத்தை வெளியுலகிற்கு அம்பலப்படுத்தினார்.


இந்தச் சம்பவத்தில் ஆதிக்க வன்னிய சாதிக்கு ஆதரவாய் செயல்பட்டு வந்த போலீசு, இந்த வன்னிய சாதிவெறி பயங்கரவாதம் அம்பலமானவுடனேயே முருகேசனை தலித்களும், கண்ணகியை வன்னியர்களும் கொன்றதாக வழக்கு சோடித்து இரண்டு தரப்பிலும் சிலரைக் கைது செய்தது. தன் கண் முன்னரே தன் பிள்ளை சாவதைப் பார்க்க நேரிட்ட சாமிக்கண்ணுவையும் கொலையாளி ஆக்கிய போலீசின் இக்கொடுமையைக் கேள்வியுற்ற சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ரத்தினம், தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ""சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்'' என வழக்குத் தொடர்ந்தார். வழக்குரைஞர் ரத்தினம்தான் மேலவளவு கொலையாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்தவர்.


இந்த வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்கத் தொடங்கிய அதே சமயம், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பா.ம.க.வுக்கும் இடையே மீண்டும் உறவு மலர்ந்தது. இதன்பின் சாமிக்கண்ணுவின் உறவினரான ஊத்தாங்கால் சண்முகம் என்பவர் மூலம் திருமாவளவன் இவ்வழக்கு விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய முயன்றார்.


""கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்'' என திருமாவளவன் சாமிக்கண்ணுவின் தம்பி அய்யாசாமியிடம் தொலைபேசி மூலம் பேசி சமரசமாகப் போகச் சொன்னதும், அய்யாசாமி திகைத்துப் போய்விடடார். ""என்ன இப்படி சொல்றீங்க?'' எனக் கேட்ட அய்யாசாமியிடம் திருமா, ""அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்'' என நைச்சியமாகப் பேசவே அய்யாசாமி ""வக்கீலிடம் கேட்டு சொல்கிறேன்'' என்று கூறியுள்ளார்.


கடுப்பான திருமாவோ ""வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கீலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடிவெடுங்க. ஒத்துக்கிட்டா பணம் கூட கணிசமா தருவதா சொல்றாங்க'' என்று பேரத்துக்கு நேரடியாக இறங்கியதும், ""காசு வரும். எம் புள்ள வருமா?'' என்று பொட்டில் அடித்த மாதிரிக் கேட்டு விட்டு, செல்போன் மூலம் நடந்த இந்த உரையாடலை நிறுத்தினார்.


கட்டப் பஞ்சாயத்து செய்ய வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஊத்தங்கால் சண்முகத்தை முருகேசனின் குடும்பம் ""இந்த மாதிரி வேலை செய்யுற நினைப்பிருந்தா சொந்தக்காரன்னு கூடப் பார்க்க மாட்டோம்'' எனத் திட்டித் தீர்த்தது.


""சி.பி.ஐ. ஆரம்பத்துல ஒழுங்காத்தான் விசாரணை நடத்துச்சு. தலித்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதால விடுதலை சிறுத்தை பிரச்சனை பண்ணும்னு பயப்பட வேண்டியதில்லை, அதை படையாச்சிங்க சரிக்கட்டிட்டாங்கன்னு தெரிஞ்சோ அல்லது வேறு என்ன காரணமோ திடீர்னு குற்றப்பத்திரிகையில முருகேசனோட சித்தப்பா அய்யாசாமியை நாலாவது குற்றவாளியா சேர்த்தது சி.பி.ஐ.'' என்று கூறுகிறார், வழக்கறிஞர் ரத்தினம்.


பொறியியல் பட்டம் பெற்று தன் குடும்பத்தையே உயர்த்துவான் முருகேசன் — எனப் பல நூறு கனவுகள் கொண்டிருந்த அந்தக் குடும்பம், இன்று வழக்காடி எப்படியும் வன்னிய சாதி வெறிக் கும்பலுக்குத் தண்டனை பெற்றத் தருவது என்பதில் உறுதியாய் உள்ளது.


ஆனால், சமாதானத் தூது முயற்சியில் தோல்வி கண்ட விடுதலைச் சிறுத்தைகள் தன் தளரா முயற்சியோடு தனது விவசாய அணிச் செயலாளர் திருச்சி கிட்டுவை, வாய்தா நாளன்று நீதிமன்ற வளாகத்துக்கே அனுப்பி பேரம் பேச முயன்றது. அடுத்து, நெய்வேலி சிந்தனைச் செல்வன் எனும் விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகரை அனுப்பி வைத்துத் தனது "சமுதாயப் பணி'யைத் தொடர்ந்து செய்து வருகிறது.


ஓட்டுப் பொறுக்கி அரசியலை விமர்சித்து "தின்பது வாழைப்பழமாக இருந்தாலும் கழிவது மலம்தான்' எனக் கண்டுபிடித்த திருமா, வாக்குச்சீட்டு அரசியலுக்கு வந்ததும் முதல் வேலையாக பண்ணை ஆதிக்க சாதிவெறி மூப்பனாரைக் கரம் பிடித்தார். தமிழ்நாட்டின் அரசியல் கேவலம் வைகோவையே விஞ்சிடும் வண்ணம், அடுத்தடுத்து அணிதாவினார். தற்போது, ஒடுக்கப்படும் தன் சுயசாதி மக்கள் பக்கம் நின்று போராடாமல் கட்டப் பஞ்சாயத்துப் புரட்சி செய்கிறார். இன்னமும் இத்தகைய தலைவர்கள் தங்களது விடுதலையைப் பெற்றுத் தருவார்கள் எனத் தலித் மக்கள் நம்பிக் கிடப்பது, மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயல்வது போன்றதுதான்.


குறிப்பு: ""புதுவிசை'' என்ற கலாச்சார பத்திரிகையின் ஏப்ரல் ஜூன் 2007 இதழில் வெளிவந்த ""சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்'' என்ற கட்டுரையில் காணப்படும் முருகேசனின் உறவினர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

· இருட்டு

Tuesday, May 15, 2007

சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸே வெளியேறு!

சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸே வெளியேறு!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


லகப் பணக்காரன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், சென்னை நகரில் காய்கறிக்கடை தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஒரேயொரு முதலாளி கோடிக்கணக்கில் கொள்ளை இலாபம் அடிப்பதற்காகப் பல இலட்சம் சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் விவசாயிகளுடைய தொழிலை நாசமாக்கி, அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்ல அரசாங்கம் தெரிந்தே அனுமதி வழங்கியிருக்கிறது.


கிரிமினல் ஃபோர்ஜரி வேலைகள், திருட்டு, லஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகரில் மொத்தம் 100 இடங்களில் தனது கடைகளை விரிவுபடுத்த இருக்கிறது.


சென்னை மாநகரத்திற்கும் அதன் சுற்றுவட்டாரங்களுக்கும் தேவையான காய்கனிகளை விநியோகித்து வரும் கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்பொழுதே 40% வீழ்ச்சி அடைந்து விட்டதாகக் குமுறுகிறார்கள் வியாபாரிகள். கோயம்பேட்டுக்கு வரும் சில்லறை வணிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அவர்கள் வாங்கும் சரக்கின் அளவு குறைந்துவிட்டது. வெளியூர் லாரிகளின் வரத்து குறைந்து வி! ட்டது. தொழிலாளிகளுக்கு வேலை குறைந்து வருமானமும் குறைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.


2500 காய், கனி, பூக்கடை வியாபாரிகள், சுமார் 20,000 தொழிலாளர்கள், அன்றாடம் அதிகாலை 2 மணி முதல் ஆட்டோக்களிலும், வேன்களிலும், இரு சக்கர வண்டிகளிலும் வந்து காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரக்கணக்கான மளிகைக் கடைக்காரர்கள், கோயம்பேட்டில் சரக்கு எடுத்து, தள்ளு வண்டியி லும் கூடையிலும் மைல் கணக்கில் சுமந்து தெருத் தெருவாய்க் கூவி விற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண், ப! ண் உழைப்பாளிகள்...


திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, நீலகிரி, பொள்ளாச்சி, கம்பம், நெல்லை, தூத்துக்குடி, சேலம், தருமபுரி என்று தமிழகத்தின் பல்வேறு சந்தைகளில் காய்கனிகளைக் கொள்முதல் செய்யும் பல்லாயிரம் வணிகர்கள், அந்தச் சந்தைகளில் பணியாற்றும் பல இலட்சம் தொழிலாளர்கள், அந்தக் காய்கனிகளை எல்லாம் சென்னைக்குச் சுமந்துவரும் லாரிகள், வேன்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள்... அனைவர! ுக்கும் மேலாக இந்தக் காய்கனிகளையும் பூக்களையும் விளைவிக்கும் பல இலட்சம் விவசாயிகள்... என்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஒரேயொரு கோடீசுவரக் கொள்ளையனின் இலாபவெறிக்குக் காவு கொடுத்திருக்கின்றன மத்திய மாநில அரசுகள்.


சென்னை நகரில் பாரம்பரியமாக காய்கனிச் சந்தைகள் உள்ள இடங்களில் எல்லாம் கடை தொடங்கியிருக்கிறது ரிலையன்ஸ். எல்லா இடங்களிலும் இந்தச் சந்தைகள் வெறிச்சோடி விட்டன. மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து ஒரு நாளைக்கு 50100 சம்பாதித்த ஏழை வியாபாரிகளின் குடும்பங்கள் எல்லாம் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. ""இனிமேலும் தாங்க முடியாது. வேறெந்தத் ! தொழிலுக்கும் போகவும் முடியாது'' என்று பரிதாபகரமான நிலைக்குப் பல ஆயிரம் குடும்பங்கள் தள்ளப்பட்டு விட்டன.


ரிலையன்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து காய்கனிகளை நேரடிக் கொள்முதல் செய்யத் தொடங்கிவிட்டதால் தங்களுடைய சந்தைக்கு காய்கனிகள் வருவதில்லை என்று மேட்டுப்பாளையம் வியாபாரிகள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கம்பம் பகுதியிலும் காய்கனிக் கொள்முதல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்களின் தேவைக்கே காய்கனி கிடைக்காது என்ற நிலைமை பல ஊர்களில் உ! ுவாகி வருகிறது. சுனாமியைப் போலக் குறுகிய காலத்தில் மக்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை உருவாக்கியிருக்கிறது ரிலையன்ஸ்.


""ஒரேயொரு ரிலையன்ஸ் நிறுவனம் இத்தனைக் கோடி மக்களின் வாழ்க்கையை அழித்து விடமுடியுமா?'' என்று நீங்கள் எண்ணலாம். ஒன்றல்ல இரண்டல்ல, 25,000 கோடி ரூபாய் முதலீடு போட்டு நாடெங்கும் சில்லறை விற்பனைக் கடைகளைத் தொடங்க இருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சென்னை நகரில் மட்டும் 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு ஒரு கடை வீதம் நூற் றுக்கணக்கான கடைகளைத் தொடங்கவும் திட்டமிட்ட! ருக்கிறது.


ஏற்கெனவே பான்டலூன் நிறுவனம் வடபழனியில் தொடங்கியிருக்கும் பிக் பஜார், ஆர்.பி.ஜி குழுமத்தின் ஸ்பென்சர் டெய்லி, ஜெர்மன் நிறுவனமான ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்கள் சென்னை நகரின் பல இடங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்திருக்கின்றன.


சில்லறை வணிகத்தில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் அமெரிக்க வால்மார்ட் நிறுவனமும் ஏர்டெல் முதலாளி மிட்டலும் இணைந்து ஆகஸ்டு 15 முதல் சென்னை நகரில் கடை திறக்கப் போகிறார்களாம். உலகின் இரண்டாவது பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான "காரஃபோர்' உடன் கூட்டு சேரப் போகிறார் அம்பானி. ஆஸ்திரேலியாவின் உல்வொர்த் நிறுவனத்துடன் இணைந்து மளிகைக் கடை போடப் போகிறார், டாடா.


சென்னை நகரில் நாளொன்றுக்கு நடைபெறும் காய்கனி விற்பனையின் மொத்த மதிப்பு சுமார் 20 கோடி ரூபாய். இதை அப்படியே விழுங்கிவிடத் துடிக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். சில்லறை வணிகத்தில் உலகிலேயே நான்காம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டொன்றுக்கு 12 இலட்சம் கோடி ரூபாய் புரளும் இந்தியாவின் சில்லறை விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் 4 கோடிப் பேர். சுமார் 20 கோடிப் பேர! ுக்குச் சோறு போடும் இந்தச் சில்லறை விற்பனைத் தொழில் முழுவதையும் விழுங்கி விடத் துடிக்கின்றன சில பன்னாட்டு நிறுவனங்கள்.


இது வணிகப் போட்டி அல்ல, பயங்கரவாதம்!


கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று ஒழிக்கும் இந்த அயோக்கியத்தனத்தைவிடப் பெரிய பயங்கரவாதம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? 4 கோடிக் குடும்பங்களை நரபலி கொடுத்து 4 முதலாளிகளைக் கொழுக்க வைக்கும் கொள்கையை விடக் கொடூரமான பயங்கரவாதக் கொள்கை வேறு ஏதாவது உண்டா?


காய்கறிக் கடையும், மளிகைக் கடையும் நடத்த நமக்குக் கற்றுக் கொடுக்கத்தான் அம்பானியையும் அமெரிக்காக்காரனையும் இங்கே அழைத்து வருகிறதா இந்த அரசாங்கம்? ரிலையன்ஸ் கடை வைக்காததால் சென்னையில் "ஃபிரெஷ்ஷான' காய்கனிகள் கிடைக்கவில்லை என்று இந்த அரசாங்கத்திடம் மக்கள் முறையிட்டார்களா?


நன்கொடை என்று கொள்ளையடிக்கின்றன தனியார் பள்ளிகள்; புதிதாக அரசுப் பள்ளிகள் துவங்குவது இல்லை, இருக்கின்ற பள்ளிகளிலும் போதிய ஆசிரியர்கள் இல்லை. கழுத்தில் கத்தி வைத்துப் பணம் பறிக்கின்றன தனியார் மருத்துவமனைகள்; அரசு மருத்துவமனைகள் இல்லை. இருக்கின்ற மருத்துவமனைகளிலும் மருந்தில்லை. சின்னம்மைக்குத் தடுப்பூசி இல்லை. நாய்க்கடிக்குக் கூட மருந்தில்லை. போதுமான ! ேருந்துகள் இல்லை. குண்டும் குழியுமான சாலைகளைச் சரி செய்ய வக்கில்லை. கோடை வந்தால் குடிநீரில்லை, கொசுவை ஒழிக்கத் துப்பில்லை. அவசரத்துக்கு ஒதுங்குவதற்குக் கூட சாலையோரங்களில் கழிப்பறை இல்லை.


இவையெதற்கும் எதுவும் செய்ய வக்கில்லாத அரசாங்கம் ""மக்களுக்கு ஃபிரெஷ்ஷாகக் காய்கனிகள் கிடைக்கவில்லையே'' என்று ரொம்பவும் கவலைப்பட்டு "ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷை' அழைத்து வந்திருக்கிறது.


படித்த இளைஞர்களுக்குக் கூட வேலை தர வக்கில்லாத அரசாங்கம், மக்கள் தானே முயன்று, கையை ஊன்றிக் கரணம் போட்டு, வாழ்வதற்கு ஒரு வழி தேடிக்கொண்டால் அதில் மண் அள்ளிப் போடுவதற்கு அம்பானியையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் அழைத்து வருகிறது.


சென்னை நகரில் காய்கனி விநியோகத்துக்கு என்ன குறை? எல்லாப் பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகள் இருக்கின்றன. வீதிக்கு வீதி காய்கறிக் கடைகள் இருக்கின்றன. தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் இருக்கின்றன. தெருத் தெருவாகக் கூவி விற்க தள்ளுவண்டி வியாபாரிகளும் வீடுவீடாகக் கூடையில் சுமந்து சென்று விற்க பெண்களும் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோ! ையும் ஒழித்துவிட்டு அம்பானியைக் கொழுக்க வைக்க வேண்டுமென்று யார் கேட்டார்கள்?


அம்பானியின் கடையில் அடுக்கி வைத்திருப்பவையெல்லாம் என்ன அதிசயக் காய்கனிகளா? கோயம்பேட்டில் விற்கப்படும் அதே ஊட்டி முட்டைக்கோசும், கம்பம் கத்தரிக்காயும்தான். ஆனால் அதையே கழுவித் துடைத்து கண்ணாடி ஷோ கேஸில் வைத்து, கடைக்கு குளுகுளு வசதியும் செய்து சுத்தம் என்றும் ஃபிரெஷ் என்றும் பிரமிக்க வைக்கிறார்கள்.


தமிழகத்தின் கிராமப்புறங்களில் விவசாயிகளிடமிருந்து காய்கனிகளை நேரடியாகவே கொள்முதல் செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். எந்தக் காய் எங்கே மலிவோ அதை நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் கொண்டு வந்து புழல் அருகில் ஒரு குளிரூட்டப்பட்ட கிடங்கில் காய்கனிகளைக் குவிக்கிறது. அங்கிருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்புகிறது. வெங்காயம், காரட் உள்ளிட்ட காய்களை எந்! ிரங்களில் வைத்து வெட்டி பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்கிறது.


""காய்கறி வாங்கினால் சர்க்கரை இலவசம்; 100 ரூபாய்க்கு காய் வாங்கினால் ஒரு டோக்கன்; தொடர்ந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வீட்டு டெலிவரி, 50,000 ரூபாய்க்கு ரிலையன்ஸ் விபத்துக் காப்பீடு'' என்று சலுகைகளை வாரி வழங்குகிறது. இதில் மயங்கி அங்கே வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது.


துவங்கிய சில நாட்களுக்குள்ளேயே சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற காய்கனிக் கடைகள் எல்லாம் சுடுகாடாகி விட்டன. கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குப் பல வியாபாரிகள் தள்ளப்பட்டு விட்டார்கள். தமிழகத்தின் காய்கனிச் சந்தையையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தில் 3,000 கோடி ரூபாய் மூலதனத்தை தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒதுக்கியிருக்கிறது ரிலையன்ஸ! ் என்கிற இந்தப் பிசாசு.


ஐந்து வட்டிக்கும் பத்து வட்டிக்கும் கடன் வாங்கி, அதிகாலை 3 மணிக்கு ஷேர் ஆட்டோ பிடித்து, கோயம்பேட்டில் சரக்கெடுத்து, அதை நாள் முழுவதும் தெருத்தெருவாகக் கூவி விற்று, விற்காத சரக்கு அழுகிப் போகுமே என்று பயந்து, வந்த விலைக்குத் தள்ளி விட்டு, கந்து வட்டிக் கடனடைத்து, மிச்சமுள்ள காசில் கஞ்சி குடிக்கும் ஏழை வியாபாரிகளால் இந்தப் பிசாசுடன் எப்படிப் போட்டி போட முடி! ும்?


"இன்றைக்குள் விற்காவிட்டால் நாளை அழுகி நட்டமாகி விடுமே' என்ற கவலை ரிலையன்சுக்கு இல்லை. அவனிடம் குளிரூட்டப்பட்ட கிடங்குகள் இருக்கின்றன. இந்தக் கடையில் விற்காவிட்டால் இன்னொரு கடைக்குக் கொண்டு செல்ல வாகனங்கள் இருக்கின்றன. இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழுகாமல் பதப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது.


அவன் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கத் தேவையில்லை. அரசு வங்கிகளில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் சொந்தப் பணத்தைப் போலப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு அம்பானிக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது. அவன் போலீசு மாமூல் கட்ட வேண்டியதில்லை. அரசும் அதிகாரவர்க்கமும் நாயைப் போல அவன் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கின்றன.


"விலையைக் குறைத்து விற்றால் நட்டமாகிவிடுமே' என்ற கவலையே அவனுக்கு இல்லை. இரண்டு வருடங்கள் நட்டத்தில் தொழில் நடத்தி, சந்தை முழுவதையும் கைப்பற்றிய பிறகு, ஆறே மாதத்தில் போட்ட காசை எடுக்கும் கலை அவனுக்குத் தெரியும்.


காய்கனி வியாபாரத்திலும் ஏகபோகம்!


""அம்பானி புகுந்த கோயம்பேடு, ஆமை புகுந்த வீடு'' என்பது அரசாங்கத்துக்குத் தெரியாதா? தெரியும். தெரிந்தேதான் அம்பானி முதல் அமெரிக்கக் கம்பெனிகள் வரை அனைவரையும் சில்லறை வணிகத்தில் அனுமதித்திருக்கிறது அரசு.


சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளையும், அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் ""விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இடைத்தரகர்களை ஒழித்து விடுவதால் நுகர்பவர்களுக்கும் மலிவான விலையில் பொருள் கிடைக்கும்'' என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.


பொள்ளாச்சிச் சந்தையில் விவசாயியிடமிருந்து காய்கனிகளையும் தானியங்களையும் கொள்முதல் செய்யும் வியாபாரி முதல், அதைத் தள்ளுவண்டியில் போட்டு வேகாத வெயிலில் தெருத்தெருவாகக் கூவி விற்கும் தள்ளுவண்டிக்காரர் வரையில் எல்லோரும் இடைத்தரகர்களாம். இவர்களையெல்லாம் ஒழித்து விட வேண்டுமாம். இப்படி ""கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை ஒழித்துக் கட்டிவிட்டு வால்மார்! ்டையும் டாடா, பிர்லா, அம்பானியையும் வளர்த்துவிடுவதுதான் நாட்டுக்கு நல்லது'' என்று வெளிப்படையாகக் கூறும் ஒரு தேசத்துரோகி இந்த நாட்டுக்கு நிதியமைச்சராக இருக்கும்போது மக்கள் எப்படி வாழ முடியும்?


""சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதால் சிறுவணிகர்களுக்கு எவ்வித ஆபத்தும் வந்துவிடாது'' என்று தைரியம் சொல்கிறார் மன்மோகன் சிங். ""நாம் கடை வைத்திருப்பதைப் போல அவனும் ஒரு கடை வைக்கிறான். யாரிடம் சரக்கு தரமாகவும் மலிவாகவும் இருக்கிறதோ அவர்களிடம் மக்கள் வாங்கப் போகிறார்கள். இதில் கவø0லப்படுவதற்கு என்ன இருக்கிறது'' என்று எண்ணிவிட வேண்டாம். ! ஒரு அம்பானி என்பவன் ஆயிரம் சரவணா ஸ்டோர்சுக்கு சமம். ஒரு வால்மார்ட் நூறு அம்பானிகளுக்குச் சமம்.


சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் மற்ற கடைகளில் விற்பனை படுத்துவிடும் என்பது மட்டுமல்ல பிரச்சினை. கொள்முதல் சந்தைகள், மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை இவையெல்லாம் பொருளாதாரத்தின் ஒரு முனை. விவசாயம், நெசவு, தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தித் துறைகள் பொருளாதாரத்தின் மறுமுனை. ஒருமுனையைத் தன் பிடிக்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தின் மற! முனையான உற்பத்தித் துறை முழுவதையும் தம் வசப்படுத்திக் கொள்ள முயல்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.


ரிலையன்ஸ் வருவது விவசாயிக்கு நல்லதா?


சில்லறை விற்பனை இவர்களுடைய பிடிக்குள் சென்றால், நமது நாட்டின் உணவு தானிய உற்பத்தி, காய், கனி, மலர் உற்பத்தி அனைத்தும், அதாவது விவசாயம், தொழில்துறைகள் அனைத்தும் அந்நியக் கம்பெனிகள் மற்றும் அம்பானியைப் போன்ற சில தரகு முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும்.


இன்று பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், ஊட்டி முதலான காய்கனிச் சந்தைகளில் மற்ற வியாபாரிகளைக் காட்டிலும் அதிக விலை தருவதாக ஆசை காட்டி விவசாயிகளைக் கவர்ந்திழுக்கும் ரிலையன்ஸ், கொஞ்ச காலத்தில் அந்தச் சந்தைகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். பிறகு கத்தரிக்காய்க்கும் வெண்டைக்காய்க்கும் ரிலையன்ஸ் சொல்வதுதான் விலையாக இருக்கும். மற்றவர்! ளை எல்லாம் ஒழித்துக் கட்டிவிடுவதால் அவனுடன் போட்டி போட சந்தையில் வேறு வியாபாரிகளே இருக்க மாட்டார்கள்.


""விதை தருகிறேன், உரம் தருகிறேன், பூச்சி மருந்தும் தருகிறேன், காய்கனிகளைப் பயிர் செய்து கொடு'' என்று விவசாயிகளுக்கு வலை விரித்து அவர்களைத் தன்னுடைய குத்தகை விவசாயிகளாக மாற்றும் வேலையையும் ரிலையன்ஸ் இப்போதே தொடங்கிவிட்டது. இந்த வலையில் சிக்கிய விவசாயிகள் கொத்தடிமைகளைப் போல அதிலிருந்து மீளமுடியாமல் சிக்கிக் கொள்வார்கள்.


அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்ட மராத்திய விவசாயிகளும் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட நிலைமையைத் தமிழகத்தின் விவசாயிகளும் எதிர்கொள்ள நேரும்.

இது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நவீனப் பண்ணை விவசாயம், பல்லாயிரம் ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டங்கள் போன்றவற்றை ரிலையன்ஸ் ஏற்கெனவே அமைத்திருக்கிறது. இந்த நவீன விவசாயத்தில் விளையும் பொருட்களுடன் சிறு விவசாயிகளின் பொருட்கள் சந்தையில் போட்டி போடவே முடியாது. திவாலாகி நிலத்தை ரிலையன்சுக்கே விற்றுவிட்டுக் கூலி வேலை தேடி நகரங்களுக்கு ஓடி வருவதைத் தவிர! அவர்களுக்கு வேறு வழியும் இருக்காது.


நீலம், ருமானிக்குப் பதிலாக இனி பிர்லா, அம்பானி மாம்பழங்கள்!


காய்கறி விற்பனையில் ரிலையன்சும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதென்பது வியாபாரிகளையும் விவசாயிகளையும் மட்டும் பாதிக்கின்ற பிரச்சினை அல்ல. நுகர்வோர் அனைவரையும், மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்சினை. கீரைகளில் பலவகை, காய்களில் பலவகை, மாம்பழத்தில் பலவகை என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய விவசாயிகள் உருவாக்கி வைத்திருக்கும் ரகங்கள் எல்லாவற்றையும் பன! னாட்டு நிறுவனங்கள் அழித்துவிடும். பல வகையான ரகங்கள், பல வகையான சுவைகள், பல வகையான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கனிகள் எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு, எந்த ரகத்தை விளைவித்தால் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்குமோ அந்த ரகத்தைத் தவிர வேறு எதுவுமே உற்பத்தியாகாமல் செய்துவிடும்.


பங்கனபள்ளி, நீலம், சிந்தூரா, ருமானி என்ற மாம்பழங்களின் வகைகள் எல்லாம் அழியும். "ரிலையன்ஸ் மாம்பழம்', "பிர்லா மாம்பழம்' என்று இந்த முதலாளிகள் உற்பத்தி செய்யும் பழங்கள் மட்டுமே சந்தையில் இருக்கும். இதெல்லாம் கட்டுக்கதையல்ல. மேற்கத்திய நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் இதைத்தான் செய்திருக்கின்றன. பல்வேறு சுவைகள், பல்வேறு ரகங்கள் என்பதெல்லாம் அழிந்து பருத்! திக் கொட்டையும் பிண்ணாக்கும் தவிர வேறு எந்தச் சுவையும் அறியாத மாடுகளாக நுகர்வோரெல்லாம் மாற்றப்பட்டு விடுவார்கள்.


இது என்றோ நடக்கவிருக்கும் கதையுமல்ல. இன்று நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் கதை. இந்தியாவில் சிகரெட் உற்பத்தி செய்யும் ஐ.டி.சி. என்ற நிறுவனம் இன்று தானியக் கொள்முதலும் செய்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் "ஆசீர்வாத் ஆட்டா' நாடு முழுவம் ஒரே சுவையுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்ற விதையை விநியோகித்து ஒரே விதமான கோதுமையைப் பயிரிடும்படி பல ! ாநிலங்களின் விவசாயிகளை அந்நிறுவனம் மாற்றிவிட்டது. பலவிதமான ருசிகளைக் கொண்ட கோதுமை ரகங்கள் இப்படி திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன.


தான் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கு வறுவலுக்குப் பொருத்தமான ஒரே வகை உருளைக் கிழங்கை மட்டும் உற்பத்தி செய்யும்படி பஞ்சாபின் சில மாவட்டங்களையே மாற்றியிருக்கிறது பெப்சி நிறுவனம்.


தானிய ஏகபோகத்தின் விளைவுதான் விலைவாசி உயர்வு!


உணவு தானிய விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை இன்றே நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளிடம் தானியக் கொள்முதல் செய்வதிலிருந்து மெல்ல விலகிக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதல் செய்து கொள்ள ஊக்குவித்து வருகிறது அரசு. அது மட்டுமல்ல, அரிசி, கோதுமை, பருப்பு முதலான அனைத்திலும் முன்பேர வணிகத்தையும் ஆன்லைன் வணிகத்தையும் மத்! ிய அரசு அனுமதித்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் இன்று தானிய விலைகள் தாறுமாறாக உயர்ந்திருக்கின்றன.


இந்த விலை உயர்வால் விவசாயி 5 காசு கூட ஆதாயம் அடையவில்லை. உற்பத்தி செய்யும் விவசாயி கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கிறான். வாங்கிச் சாப்பிடும் மக்களும் விலைவாசி உயர்வால் கடனாளி ஆகியிருக்கிறார்கள். பன்னாட்டு வர்த்தகச் சூதாடிகள் மட்டும்தான் கொழுத்திருக்கிறார்கள். இவர்கள் சில்லறை வணிகத்திலும் நுழைந்துவிட்டால் பஞ்சத்தையும் பேரழிவையும்தான் மக்கள் எதிர்! ொள்ள வேண்டியிருக்கும்.


பொருள் உற்பத்தி, கொள்முதல், சில்லறை விற்பனை ஆகியவற்றில் இன்று கோடிக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும் ஈடுபட்டிருப்பதனால்தான் விலைவாசி ஓரளவுக்காவது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவையனைத்தும் வால்மார்ட், கார்கில், ஐ.டி.சி., அம்பானி, டாடா, பிர்லா என 10, 20 முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டால் என்ன நடக்கும்? பிறகு அவன் வைத்ததுதான் விலை. இன்று சிமெண்! ் முதலாளிகள் தமக்குள் பேசி வைத்துக் கொண்டு விலையை ஏற்றியிருப்பதைப் போலவே, நாளை அரிசி, கோதுமை, வெங்காயம், தக்காளி அனைத்திலும் இவர்கள் பகற்கொள்ளை அடிப்பார்கள்.


இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றிக் கேட்டால் ""அதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்? சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து விட்டது'' என்று பதில் சொல்லும் அமைச்சர்கள் நாளை அரிசி கிலோ 50 ரூபாய் விற்றாலும், வெங்காயம் கிலோ 100 ரூபாய் விற்றாலும் ""சர்வதேசச் சந்தையில் விலை ஏறிவிட்டது. நாங்கள் என்ன செய்ய முடியும்?'' என்ற பதிலைக் கூசாமல் சொல்வார்கள்.


""சில்லறை விற்பனையில் வால்மார்ட்டும் ரிலையன்சும் நுழைந்தால் விவசாயிகளுக்கு முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு நியாய விலை கிடைக்கும்'' என்ற பேச்செல்லாம் முழுப்பொய். கத்தரிக்காய்க்கு நியாயவிலை கொடுப்பதற்காகத்தான் 3000 கோடி ரூபாயை மடியில் கட்டிக் கொண்டு குஜராத்திலிருந்து வந்திருக்கிறானா அம்பானி? துணிக்கும் துடைப்பக் கட்டைக்கும் நல்ல விலை கொடுப்பதற்காக! ்தான் வால்மார்ட் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறதா?


இந்திய நாட்டின் விவசாயிகளையும், நுகர்வோரையும் இந்த நாட்டின் சில்லறை வணிகர்கள் கொள்ளையடித்து வருகிறார்கள் என்றும், அவர்களிடமிருந்து நுகர்வோரைக் காப்பாற்றுவதற்காகத் தான் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்குள் கொண்டு வருவதாகவும் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கூறுகிறார்கள். இத்தகைய முதலாளிகளின் பிடியில் இருக்கும் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும்! இந்தப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைக்கின்றன.


நேற்று வரை காய்கனி வாங்கிய மார்க்கெட்டையும், காய்கறிக் கடையையும், மளிகைக் கடையையும் மறந்துவிட்டு, விளம்பரத்தையும், ஏ.சி. ஷோரூமையும் இலவசத் திட்டங்களையும், கண்டு மயங்கி இன்று "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடைக்குச் செல்லும் படித்த முட்டாள்களும் இதை நம்புகிறார்கள்.


இது அப்பட்டமானதொரு பித்தலாட்டம். சிறுவணிகர்களுக்கு எதிராக நுகர்வோருக்குக் கொம்பு சீவிவிடும் சதி. ""பாக்கெட்டில் போடாமல் திறந்து வைத்திருக்கும் பொருளை வாங்காதீர்கள்'', ""ஈ மொய்க்கும் பொருளை வாங்காதீர்கள், சுத்தமான பொருளை வாங்குங்கள்'', ""பில் கொடுக்காத கடையில் பொருள் வாங்காதீர்கள்'' என்று சிறு வணிகர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை நயவஞ்சகமாகக் கட்டவ! ிழ்த்து விடுகிறது அரசு. பில் போட்டு விற்க முடியாத சிறிய மளிகைக் கடைகள், சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் ஆகிய அனைவரையும் நுகர்வோரை ஏமாற்றும் கிரிமினல்கள் என்பதைப் போல வேண்டுமென்றே சித்தரிக்கிறது அரசு.


""தள்ளுவண்டியில் திறந்து போட்டு வியாபாரம் செய்பவர்களிடம் பொருள் வாங்காதே, பில் போடாத மளிகைக் கடையில் சாமான் வாங்காதே'' என்று பிரச்சாரம் செய்யும் இந்த யோக்கியர்கள், அவர்களிடம் ""ஓட்டு வாங்கமாட்டோம்'' என்று மட்டும் ஏன் சொல்வதில்லை?


தெருவில் சாக்கடை ஓடுவதற்கும், கார்ப்பரேஷன் குழாயில் சாக்கடைத் தண்ணீர் வருவதற்கும், சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியிருப்பதற்கும், குப்பைகள் குவிந்து கிடப்பதற்கும் சிறு வணிகர்களா பொறுப்பு? ஈயையும் கொசுவையும் அவர்களா உற்பத்தி செய்கிறார்கள்? அரசாங்க மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் பேருந்து நிலையங்களும் என்ன யோக்கியதையில் இருக்கின்றன? இதற்கெ! ல்லாம் யார் பொறுப்பு?

ஃபிரெஷ்ஷான புற்றுநோய்!


சிறுவணிகர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் யோக்கியதை என்ன? பளபளப்பான தாளில் பேக்கிங் செய்து விற்கப்படும் காட்பரீஸ் சாக்லெட்டிற்குள் புழு இருக்கிறதென்று பல ஊர்களிலிருந்து புகார் வந்து மகாராட்டிரா மாநிலம் முழுவதும் அதன் விற்பனை தடை செய்யப்படவில்லையா? கோக் பெப்சி பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சியும், பல்லியும், ஆணியும் கிடக்! கவில்லையா? புற்று நோயை உருவாக்கும் பூச்சி மருந்துகள் அதில் கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் கோக்கும் பெப்சியும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லையா?

கலர் கலரான ஜிகினாத்தாள் பாக்கெட்டுகளில் சரம் சரமாகக் கடைகளில் தொங்கும் ""லே'ஸ்'' நொறுக்குத் தீனிகளில் கலந்திருப்பது என்ன? பல மாதங்கள் விற்காமல் கிடந்தாலும் காரல் வாடை வரக்கூடாது என்பதற்காக அதில் கலக்கப்படும் இரசாயனப் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை என்றும், அந்த நொறுக்குத் தீனிகளை வாங்கித் தின்னும் பள்ளிப் பிள்ளைகளுக்கு மாரடைப்பு வருவது உறுதி என்! பதும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையில்லையா?


சுத்தம் சுகாதாரம் என்ற இவர்களுடைய பேச்செல்லாம் முழு மோசடி. அழுகிப் போன பழத்தையும், ஈ மொய்க்கும் தின்பண்டத்தையும் வாங்கித் தின்றால் வாந்தி, பேதி போன்ற சின்ன நோய்கள்தான் வரும். அவற்றைக்கூட சமாளித்து விடலாம். பன்னாட்டுக் கம்பெனிகளின் ஜிகினாத்தாள் சரக்குகள் சின்ன நோய்களை எல்லாம் உருவாக்குவதில்லை. புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பது, இதயந! ய் போன்ற பெரிய ஆட்கொல்லி நோய்களைத்தான் அவை உருவாக்கும். அதற்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால், சொத்தை விற்று லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ஏனென்றால் நோயை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் அதற்கான மருந்தையும் உற்பத்தி செய்து அதிலும் கொள்ளையடிக்கின்றன.


கொள்ளை இலாபம் ஈட்டுவதொன்றுதான் பன்னாட்டுக் கம்பெனிகளின் நோக்கம். அதற்காகத்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள். இவ்வாறு விளைவிக்கப்படும் காய்கனிகள் மனிதனின் உடலுக்கு என்ன தீங்குகளை ஏற்படுத்தும் என்பது பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இத்தகைய விதைகளைத் திருட்டுத்தனமாகப் ப! ன்படுத்துவதற்கும் சோதனை செய்து பார்ப்பதற்கும் இந்திய அரசே அவர்களை அனுமதித்திருக்கிறது.


இத்தகைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைத்தான் சமீபத்தில் கோவை விவசாயிகள் பிடுங்கி எறிந்தார்கள். தன்னுடைய இலாபத்துக்காக எத்தகைய கொலைபாதகத்தையும் செய்வதற்கு அஞ்சாத ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களை நம்பி நம் வயிறை ஒப்படைப்பதென்பது, கொலைகாரனின் கையில் உயிரை ஒப்படைப்பதற்குச் சமமானது.


பில் போடாத அண்ணாச்சி! பில் போட்டுத் திருடும் அம்பானி!


"ரிலையன்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நம்பகத்தன்மை என்று பொருள். ஆனால் நம்பிக்கைத் துரோகத்தின் மொத்த உருவமே ரிலையன்ஸ் நிறுவனம்தான். "ரிலையன்ஸ் ஃபிரஷ் கடையில் கறிவேப்பிலை வாங்கினாலும் பில் போட்டுக் கொடுக்கிறான்' என்று படித்த அறிவாளிகள் சில பேர் சிலிர்த்துக் கொள்கிறார்கள். பில்லை வைத்துத் தாளிக்கவா முடியும்? அன்றாடம் பத்து லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் ! ெய்யும் கடையில் ஆள் வைத்து பில் போடுவதில் என்ன அதிசயம் இருக்கிறது?


காலை 3 மணிக்கு எழுந்து கோயம்பேட்டுக்குச் சென்று சரக்கெடுத்து ஒரு வண்டி காய்கறியை டி.வி.எஸ்.50இல் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கி, ""இரண்டு ரூபாய் கத்தரிக்காய், ஒரு ரூபாய் வெங்காயம்'' என்று கேட்கும் ஏழை மக்களுக்கு அதை விற்பனை செய்யும் அண்ணாச்சி, கம்ப்யூட்டர் வைத்து பில் போட்டு வியாபாரம் பார்க்க முடியுமா?


வாட் விரிவிதிப்பும், பில் போட்டு வியாபாரம் செய்யச் சொல்லி சிறுவணிகர்களுக்கு அரசாங்கம் கொடுத்துவரும் நிர்ப்பந்தமும் நுகர்வோரின் நலனுக்காகச் செய்யப்படுபவை அல்ல. சிறுவணிகர்களை வரி விதிப்புக்கு உள்ளாக்கி, அதிகாரிகள் மூலம் சித்திரவதை செய்து தொழிலை விட்டே துரத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களை வளர்த்து விடுவதுதான் அரசின் நோக்கம்.


பில் போட்டுக் கொடுத்துவிட்டால் நுகர்வோரின் நலன் எப்படிப் பாதுகாக்கப்படும்? ரிலையன்ஸ் தொலைபேசியின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் பேசிய கால்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயைப் பில் போட்டுத்தான் வசூலித்தார் அம்பானி. அரசு தொலைபேசியின் சேவையைப் பயன்படுத்தி இப்படி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டு வெளிநாட்டுக் கால்களை! ெல்லாம் லோக்கல் கால் என்று கணக்கெழுதி 1300 கோடி ரூபாய் மோசடியும் செய்தார். ஆயுள் தண்டனை வழங்கவேண்டிய இந்தக் கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் முழுத்தொகையைக் கூட வசூலிக்காமல் கொஞ்சம் அபராதம் மட்டும் வாங்கிக் கொண்டு நண்பர் அம்பானியை "மன்னித்து' விட்டுவிட்டார் அமைச்சர் தயாநிதி மாறன்.


மண்ணையும் கல்லையும் காலி அட்டைப் பெட்டிகளையும் பில் போட்டு வெளிநாடுகளுக்கு "ஏற்றுமதி' செய்து, கோடிக்கணக்கான ரூபாய் மானியத்தை அரசாங்கத்திடமிருந்து சுருட்டினார் திருபாய் அம்பானி. அப்பன் செய்த திருட்டுகளைப் பட்டியல் போடவேண்டுமென்றால் அதற்குத் தனியாகப் புத்தகமே போட வேண்டும். அப்பனை விஞ்சுகிறார்கள் பிள்ளைகள். ஜவுளி, எண்ணெய் சுத்திகரிப்பு, பங்குச்சந்தை,! தொலைபேசி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட் என்று கால் வைத்த துறைகளிலெல்லாம் களவாணித்தனம் செய்கிறார்கள்.


சென்ற ஆண்டு ரிலையன்ஸ் மொபைல் நிறுவனம் அறிவித்த "ஃபிலிம் தமாகா' என்ற பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு 8888 என்ற எண்ணுக்கு 6 ரூபாய் கட்டணம் செலுத்தி 6000 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி, 36,000 ரூபாய் பில்லையும் கட்டிவிட்டு, ""இதுவரை போட்டியும் நடத்தவில்லை, யாருக்கும் பரிசும் கொடுக்கவில்லை'' என்று ரிலையன்ஸ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார் ஒரு வா! ிக்கையாளர் (இந்து, மார்ச், 16). எத்தகைய சில்லறைத்தனமான மோசடியிலும் இறங்கத் தயங்காதது அம்பானியின் நிறுவனம் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?


பில் போட்டுத் தொழில் நடத்துவதாகப் பீற்றிக் கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அம்பானி, டாடா, பிர்லா போன்றோருடைய நிறுவனங்களின் யோக்கியதை இதுதான். இந்த யோக்கிய சிகாமணிகள்தான் அரசு வங்கிகளுக்கு 1.5 இலட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்திருப்பவர்கள். ஆண்டுதோறும் 15,000 கோடி, 20,000 கோடி வரிபாக்கி வைப்பவர்கள். இந்தியாவுக்கே இரண்டு ஆண்டுகளுக்குப் பட்ஜெட் போடுமளவு! ்கு வரி ஏய்ப்பு செய்து கறுப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்பவர்களும் இவர்கள்தான்.


இந்த விவரங்களையெல்லாம் நாம் புலனாய்வு செய்து கண்டுபிடிக்கவும் இல்லை. இட்டுக் கட்டிச் சொல்லவுமில்லை. இவையெல்லாம் சர்வகட்சிகளையும் சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள். எல்லாப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்திகள்.


நடப்பது பன்னாட்டுக் கம்பெனி ஆட்சி!


தங்களுடைய கொள்ளை இலாபத்துக்காக எந்தவிதமான கிரிமினல் வேலையையும் கொலைபாதகத்தையும் செய்யத் தயங்காதவர்கள் இந்த முதலாளிகள் என்பது அரசுக்குத் தெரியும். அப்புறம் ஏன் இவர்களைப் பாக்கு வைத்து அழைத்து, தொலைபேசி, மின்சாரத்தில் தொடங்கி தானியக் கொள்முதல், சில்லறை வணிகம் வரை அனைத்தையும் அரசாங்கமே இவர்கள் கையில் ஒப்படைக்கிறது? பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் உள்ளூ! ர் விவசாயமும், தொழிலும், வணிகமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லாப் பிரிவு மக்களும் எதிர்த்துப் போராடினாலும் அதைப் பற்றி எந்தக் கட்சியும் கொஞ்சம் கூடக் கவலைப்படாதது ஏன்?


கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறி விட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் "தனியார்மயம், தாராளமயம், உலகமயம்' என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளை அடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லாக் கட்ச! அரசாங்கங்களும் நிறைவேற்றுகின்றன.

தனியார்மயம்!


கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! லாபமீட்டும் அரசுத் துறையான தொலைபேசித் துறையைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவு கொடுத்தார்கள். ரிலையன்ஸ் நிறுவனமும் பிற பன்னாட்டு நிறுவனங்களும் செல்போன் கம்பெனி ஆரம்பித்து வாடிக்கையாளர்களைப் பலவிதமாகப் பித்தலாட்டம் செய்து கொள்ளையடிக்க அனுமதித்துவிட்டு, அரசாங்கத்தின் பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடைசியாகத்தான் செல்போன் சே! ையைத் தொடங்கியது.


வெளிநாடுகளுக்கு தொலைபேசி சேவை வழங்கி லாபமாக மட்டும் ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய் ஈட்டி வந்த வி.எஸ்.என்.எல். நிறுவனத்தையே வெறும் 1440 கோடி ரூபாய்க்கு டாடாவிடம் தூக்கிக் கொடுத்தது பாரதிய ஜனதா அரசு. 5000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள பாரத் அலுமினியம் கம்பெனி என்ற அரசுத்துறை நிறுவனம், வெறும் 552 கோடி ரூபாய்க்கு ஸ்டெர்லைட் முதலாளிக்கு விற்கப்பட்டது. ஏழைகளுக்கும! மருத்துவமனைகளுக்கும் மலிவு விலையில் தரமான ரொட்டியை வழங்கி வந்த 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள "மாடர்ன் புட்ஸ்' என்ற அரசுத்துறை நிறுவனம் வெறும் 104 கோடி ரூபாய்க்கு இந்துஸ்தான் லீவர் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அரசு வங்கிகள், இன்சூரன்சு, அனல்மின் நிலையங்கள் அனைத்தும் இப்படித்தான் அந்நிய நிறுவனங்களுக்குக் கூறு கட்டி விற்கப்படுகின்றன.


இரும்பு, நிலக்கரிச் சுரங்கங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மட்டுமல்ல, ஆறுகளையும் அணைக்கட்டுகளையும் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது அரசு. நம்முடைய நாட்டின் தேவைக்கே வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும்போது, வங்காள விரிகுடாவில் எண்ணெயும் எரிவாயுவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை அரசுடைமை ஆக்காமல் அம்ப! னிக்கு உடைமை ஆக்குகிறது அரசு.


தனக்கு கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டித்தரும் அரசுத்துறை நிறுவனங்களையே அந்நியக் கம்பெனிகளுக்கு விற்கத் தயங்காத அரசு, கோயம்பேட்டு சந்தையை அம்பானிக்குக் காவு கொடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?


பள்ளிக்கூடம், கல்லூரிகளை அரசாங்கம் கட்டுவதில்லை. இருக்கின்ற பள்ளிகளையே பராமரிப்பதில்லை. போதுமான ஆசிரியர்களை நியமிப்பதில்லை. அரசுப் பள்ளியில் படித்தால் பிள்ளை உருப்படாது என்ற நிலைமையை அரசாங்கம் திட்டமிட்டே உருவாக்குகிறது. நர்சரிப் பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை அனைத்தும் தனியார் முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. கந்த! வட்டித் தொழிலைக் காட்டிலும் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக இருப்பதால் எல்லாக் கட்சி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கல்வித் தொழில் நடத்தி கல்லா கட்டுகிறார்கள்.


அரசாங்கம் மருத்துவமனைகள் கட்டுவதில்லை. அரசு மருத்துவ மனையே சவக்கிடங்கு போலத்தான் பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனைகளில் மருந்து கிடையாது. இப்போது சென்னையில் சின்னம்மை பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் அதற்கு தடுப்பூசி கிடையாது. தடுப்பூசியின் விலை 1300 ரூபாய். நாய்க்கடிக்கு மருந்து கிடையாது. அதை மருந்துக் கடையில் வாங்கினால் 1500 ரூபாய். இருக்கிற மருத்துவம! ைகளில் போதிய மருத்துவர்களும் கிடையாது. கல்வியைப் போலவே மருத்துவமும் முதலாளிகள் கொள்ளை லாபமடிப்பதற்கான தொழிலாக மாற்றப்பட்டு விட்டது.


அரசாங்கம் சாலை போடுவதில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்கும் டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டு விட்டன. அவர்கள் வழி நெடுக சுங்கச் சாவடி வைத்து எல்லா வாகனங்களுக்கும் வரி வசூல் செய்கிறார்கள்.


சாராயம் விற்கும் அரசாங்கத்தால் மக்களுக்கு சுத்தமான குடிநீர் தர முடியவில்லை. கோகோ கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய ஆறுகள் ஏரிகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து அதை பாட்டில் 14 ரூபாய் என்று நமக்கே விற்பனை செய்கிறார்கள். நிலத்தடி நீர் என்னும் பொதுச்சொத்தை ஒரு பன்னாட்டு முதலாளியின் தனிச்சொத்தாக மாற்றிக் கொள்ளையடிக்க அனுமதி வழ! ்குகிறது அரசாங்கம்.


அரசாங்கத்தால் சென்னை நகரில் குப்பை வாரக்கூட முடியவில்லை. அதையும் "ஓனிக்ஸ்' என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. அவன் வெள்ளைக்காரனை வைத்தா குப்பை வாருகிறான்? நம்முடைய இளைஞர்களை குறைந்த கூலிக்கு மாடுபோல வேலை வாங்கி கோடிக்கணக்கில் லாபத்தைக் கொண்டு போகிறான்.


""அரசாங்கம் மக்களுக்கு எந்தவிதமான சேவைகளையும் வழங்க வேண்டியதில்லை. கல்வியோ, மருத்துவமோ, தண்ணீரோ, கக்கூசோ எதுவாக இருந்தாலும் அவனவன் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இவை எல்லாமே பன்னாட்டு முதலாளிகளும் இந்நாட்டு முதலாளிகளும் லாபம் பார்ப்பதற்கான தொழில்கள்'' என்று கூறும் தனியார்மயம் என்ற இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் மேற்சொன்ன எல்லா அயோக! ்கியத்தனங்களும் தேசத்துரோக நடவடிக்கைகளும் நியாயப்படுத்தப்படுகின்றன.


கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தையும் காசுக்கு விற்கும் கடைச்சரக்காக மாற்றி, இல்லாதவர்களும் ஏழை எளியவர்களும் பரிதவித்துச் சாவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கம், அம்பானியின் காய்கறி வியாபாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய வியாபாரிகளையும், தொழிலாளிகளையும் பற்றியா கவலைப்படப் போகிறது?


தாராளமயம்!


இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள். அந்த விவசாயிகள் விளைவிக்கும் உணவு தானியங்களுக்கு நியாயமான விலை கிடைத்தால்தான் அவர்களால் வாழமுடியும், விவசாயம் செய்யவும் முடியும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் ஒன்னேகால் இலட்சம் விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அரசாங்கமே புள்ளி விவரம் கொடுக்! கிறது. பல கோடி விவசாயிகள் வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலை தேடி நகரத்தை நோக்கி ஓடி வருகிறார்கள்.


ஏன் இந்த நிலைமை? ""விவசாயிக்கு சலுகை வழங்கக் கூடாது, வங்கிக் கடன் கொடுக்கக் கூடாது, உரமானியம் கொடுக்கக் கூடாது, அரிசி, கோதுமை முதலானவற்றை அரசாங்கம் கொள்முதல் செய்யக்கூடாது, பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும், ரேசன் கடைகளை இழுத்து மூட வேண்டும்'' என்பதெல்லாம் உலகவங்கி, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகள்.


இந்த ஆணைப்படிதான் எல்லா அரசாங்கங்களும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன. அரசாங்கம் நெல் கொள்முதலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. இந்திய உணவுக்கழகம் கையில் வைத்திருந்த தானியங்களை பாதி விலைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றது. இந்திய விவசாயிக்கு கிலோ கோதுமைக்கு 7 ரூபாய் கொள்முதல் விலை கொடுக்கும் அரசாங்கம் கிலோ 10 ரூபாய் ! விலையில் அமெரிக்காவிலிருந்து கோதுமையை இறக்குமதியும் செய்திருக்கிறது.


ஏழை மக்கள் சோறு தின்ன வேண்டுமே என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல், தாராளமயக் கொள்கைகளின் கீழ் உணவு தானிய வியாபாரத்திலேயே பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருக்கும் இந்த அரசாங்கம், அவர்கள் குழம்பு வைப்பதைப் பற்றியா கவலைப்படப் போகிறது?


காய்கனி விற்பனையில் மட்டுமல்ல, கறிக்கடை வைக்கவும் பன்னாட்டு நிறுவனங்களை அழைக்கிறது அரசு. சென்னையில் இறைச்சி வியாபாரமும் தொடங்கப் போகிறது ரிலையன்ஸ். சென்னையில் இறைச்சிக் கூடங்களையும் கறிக்கடைகளையும் நம்பியிருக்கும் 50,000 தொழிலாளர்களின் வாழ்க்கையும் இன்று கேள்விக்குறி ஆகியிருக்கிறது.


உலகமயம்!


நம்முடைய நாட்டில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகளைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்திருப்பது யார்? அரசாங்கமா அல்லது டாடா பிர்லா அம்பானி போன்ற முதலாளிகளா? கைத்தறியும், சிறு தொழில்களும், சில்லறை வணிகமும்தான் மீதியுள்ள மக்களில் கணிசமான பேருக்குச் சோறு போடுகின்றன. இந்தத் தொழில்களைப் பாதுகாக்கத் தவறினால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவதைத் தட! ுக்க முடியாது.


எனவேதான், ""குறிப்பிட்ட சில ரகங்களைச் சேர்ந்த நூல்கள் கைத்தறிக்கு மட்டும் ஒதுக்கப்பட வேண்டும்'' என்ற விதிமுறை இருந்தது. ""தீப்பெட்டி, நோட்டுப்புத்தகம், ஊறுகாய், ஊதுபத்தி, தின்பண்டங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் சிறு தொழிற்சாலைகளில்தான் உற்பத்தி செய்யப்பட வேண்டும், பெரிய தொழிற்சாலைகள் அவற்றை உற்பத்தி செய்யக்கூடாது'' என்று விதி இருந்தது.


""பன்னாட்டு நிறுவனங்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் நுழைந்து என்ன தொழிலை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருக்கின்ற சட்டங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்'' என்ற உலகமயமாக்கல் கொள்கையின் கீழ் கடந்த 15 ஆண்டுகளில் மேற்கூறிய விதிமுறைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ரத்து செய்யப்பட்டு விட்டன. தீப்பெட்டி முதல் ஊதுபத்தி வரை அனைத்தி! லும் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்து விட்டன. பல சிறு தொழில்கள் அழிந்து விட்டன. மிச்சமிருப்பது சில்லறை வணிகம். அதையும் அழிப்பதற்கு அம்பானியும், டாடாவும் பிர்லாவும் அமெரிக்கக் கம்பெனிகளும் கைகோர்த்துக் களம் இறங்கியிருக்கிறார்கள். வழக்கம் போல அரசாங்கம் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

இனி போவது எங்கே?


சிறு வியாபாரிகளும் சில்லறை வணிகத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களும் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்ற காசைப் போட்டுக் கடை வைக்கும் அண்ணாச்சிகள், பெரிய கம்பெனிகளிலிருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள், சிறு தொழில்கள் அழிந்ததால் சில்லறை வணிகத்துக்கு வந்த சிறு தொழில் முதலாளிகள், வேலை கிடைக்காததால் வீ! ட்டை விற்று சுயதொழில் தொடங்கிய படித்த இளைஞர்கள்.

கோயம்பேடு சந்தையில் மூட்டை தூக்குபவர்களும் வண்டி இழுப்பவர்களும் யார்? விவசாயம் அழிந்து போனதால் கிராமப்புறத்தில் வாழ முடியாமல் நகர்ப்புறத்துக்கு வேலை தேடி வந்த நிலமற்ற விவசாயிகள், தலித் மக்கள்.


அங்கே கூடைகளில் சரக்கெடுத்துச் சென்று வீடுவீடாக நாள் முழுவதும் கூவி விற்றுக் கஞ்சி குடிப்பவர்கள் யார்? வேறு வேலை எதுவும் கிடைக்காத ஏழைகள். விற்றுத் தொழில் செய்ய சொத்து இல்லாமல் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி சரக்கெடுத்து விற்று நேர்மையாக வாழ முயலும் உழைப்பாளிகள். கணவனால் கை விடப்பட்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக குடும்பத்தைத் தலையில் சுமக்கும் நிரா! ரவான ஏழைப் பெண்கள், சோறு போட யாருமில்லாததால் தள்ளாத வயதில் வேகாத வெயிலில் வண்டியைத் தள்ளிச் செல்லும் முதியவர்கள்.


எல்லா தொழில்களிலிருந்தும் துரத்தப்படும் பரிதாபத்துக்குரிய மக்கள் அனைவரும் கடைசியாக வந்து சேரும் புகலிடம்தான் சில்லறை வணிகம். இந்த பரிதாபத்துக்குரிய மக்களின் வயிற்றிலடித்து சொத்து சேர்க்கலாம் என்று ஒரு முதலாளி நினைக்கிறான் என்றால் அவனை விடக் கொடூரமான கொலைகாரன் வேறு யாராவது இருக்க முடியுமா? கோட்டு சூட்டு போட்டு ஆங்கிலத்தில் பேசுவதால் இந்த மிருகங்கள! யெல்லாம் மனிதன் என்றுதான் மதிக்க முடியுமா? வயலில் நுழைந்து விளைச்சலைத் தின்று அழிக்கும் காட்டுப்பன்றிகளை வெடி வைத்துக் கொல்வார்கள் விவசாயிகள். இரக்கமே இல்லாத இந்தப் பணக்காரப் பன்றிகளைக் கண்டதுண்டமாக அறுத்துக் கொல்ல வேண்டும்.


எங்கே போனார்கள் ஓட்டுக் கட்சிகள்?


கேட்டாலே நமக்கு இரத்தம் கொதிக்கிறதே, ஆனால் இந்த அநீதிகளைக் கேட்பதற்கு ஒரு நாதியில்லையே ஏன்? சிவாஜி கணேசனின் பேரன் கல்யாணத்துக்கும் பேத்தியின் காதுகுத்துக்கும் ஆசி வழங்கத் தெரிந்த தானைத்தலைவரின் காதுகளுக்கு கோயம்பேடு தமிழர்களின் கூக்குரல் மட்டும் எட்டவில்லையே ஏன்? தன்னுடைய மேயர் பதவி பறிபோனவுடன் பதறித் துடித்த தளபதி, ஒரு இலட்சம் தமிழர்களின் வாழ்க்கை ! றிபோவதை வேடிக்கை பார்க்கிறாரே, இவர் யாருக்குத் தளபதி? உலகத் தமிழர்களுக்காகவெல்லாம் சீறும் புரட்சிப் புயல் வைகோ, அம்பானிக்கு எதிராகச் சீறாத மர்மம் என்ன? தன்னுடைய திருமண மண்டபம் இடிக்கப்படுவதை உலகப் பிரச்சினையாக்கிய கேப்டன், கோயம்பேடு தொழிலாளர்களின் வாழ்க்கை இடிக்கப்படுவதை எதிர்த்து வீரவசனம் கூடப் பேசவில்லையே, ஏன்?


இந்தக் கேள்விகள் எதற்கும் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்ப்பது போல நடிக்கிறார்கள். ""இன்னும் பத்தே நாட்களில் சென்னையில் உள்ள தன் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு ரிலையன்ஸ் ஓடி விடவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டியிருக்கும். நாங்கள் எந்த விலை கொடுக்கவும் தயார்'' என்று சீறினார் ராமதாஸ். சில்லறை வணிக! ்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது முதல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்து முடிவுகளையும் மைய அரசுதான் எடுத்திருக்கிறது. அமைச்சரவையின் முடிவுகளில் மகன் அன்புமணி கையெழுத்துப் போடுகிறார். தந்தையோ இங்கே தாண்டிக் குதிக்கிறார்.


கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் சிறுவியாபாரிகள் சங்கமும், தொழிற்சங்கமும் ரிலையன்சை விரட்ட வேண்டுமென்று போராடுகின்றன. ""வணிகர்கள் தங்களுடைய வரம்பில்லா லாபத்துக்கு போட்டியே இருக்கக் கூடாது என்று கருதுகிறார்கள்'' என்று அம்பானிக்கு வக்காலத்து வாங்குகிறார் விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார். ""ரிலையன்ஸ் வந்ததனால் ! ென்னை நகரின் சிறுவணிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது'' என்று சாதிக்கிறார் திருமாவளவன்; தொலைபேசித் துறையைக் கொள்ளையடித்துப் பிடிபட்ட திருடன் அம்பானி தொலைபேசித் துறையில் மாபெரும் புரட்சி செய்திருப்பதாகப் புகழாரமும் சூட்டுகிறார்.


இங்கே ரிலையன்ஸை எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் மார்க்சிஸ்டு கட்சி மே.வங்கத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அம்பானிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்குகிறது. முதல்வர் புத்ததேவோ அமெரிக்க வால்மார்ட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார். அம்பானியை விடப் பன்மடங்கு பெரிய கொம்பானியான "மெக்டொனால்டு' எனும் அமெரிக்க நிறுவனம் கல்கத்தா நகரெங்கும் "ட! பன் கடை' போட அனுமதித்து திறப்புவிழா நடத்துகிறார்.


கோயம்பேடு வியாபாரிகளை ஆதரிப்பதாக நாடகமாடும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிப்பதே அம்பானியின் காசில்தான் என்பது அகில உலகமும் அறிந்த இரகசியம். சென்ற பாரதிய ஜனதா ஆட்சியில் பிரமோத் மகாஜன் தொலைபேசித் துறை அமைச்சராக இருந்தபோது தொலைபேசித் துறை அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட ஊழல் சந்தி சிரித்தது உங்களுக்கு நினைவில்லையா?


தண்ணீருக்குத் தவிக்கும் தென்மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, தாமிரவருணி ஆற்றையே அமெரிக்க கோகோ கோலாவுக்குத் தூக்கிக் கொடுத்த ஜெயலலிதா, அம்பானியை எதிர்ப்பதாக அறிக்கை விடுவது அப்பட்டமான மோசடியில்லையா?


ஆட்சியில் இருக்கும்போது தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என்ற இந்த நாடகத்தை எத்தனை ஆண்டுகளாக இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? இந்த மோசடி நாடகத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அவர்கள் பதில் சொல்லப் போகிறார்களா என்ன?


அதிகாரபூர்வமான கணக்கின்படியே இந்திய அரசியல்வாதிகளில் முதல் பணக்காரர் ஜெயலலிதா. இரண்டாவது கருணாநிதியாம். மூன்றாவது இடத்துக்குப் போட்டி போடுகிறார் ராமதாஸ். கோடிகளைக் குவிப்பது எப்படி என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் இவர்களா தள்ளுவண்டி வியாபாரிகளின் பிரச்சினைக்கு வழி சொல்லப் போகிறார்கள்? நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.


நீங்கள்தான் இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள். ""அந்த ஆட்சிக்கு இந்த ஆட்சி பரவாயில்லை, இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சி பரவாயில்லை'' என்று கடந்த 15 ஆண்டு காலமாக இவர்களையெல்லாம் ஆட்சியில் அமர்த்தியது நீங்கள்தான். எனவே, நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.


""எல்லாம் திருட்டுப்பயல்கள். பெட்டி வாங்கியிருப்பார்கள்'' என்று இப்போது குற்றம் சாட்டுவதில் பயனில்லை. பெட்டி வாங்குவதென்பது இன்று நேற்றா நடக்கிறது? இவர்களெல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்று நம்பி யாராவது ஓட்டுப் போட்டார்களா? வாட் வரிவிதிப்பை அமல்படுத்தப் போவதாக சிதம்பரம் சொன்னபோது அதை ஜெயலலிதா எதிர்த்தார். ஜெயலலிதா சொன்னபோது கருணாநிதி அதை எதிர்த்தார்.! ""எல்லோருமே உலகமயமாக்கல் கொள்கையை அமல்படுத்துபவர்கள் என்பதால் இவர்கள் யாரையுமே நம்ப முடியாது'' என்று வணிகர் சங்கம் இந்தத் தேர்தலில் தனியே வேட்பாளர்களை நிறுத்தியது.


ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான கொள்கையை யாராவது அமல்படுத்தி விட முடியுமா? முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் இந்த அரசமைப்பில் தேர்தலில் நிற்க முடியும். ஆட்சி நடத்தவும் முடியும். ஒரு இலட்சம் மக்களின் வாழ்க்கை பறிபோகிறதே என்று எந்த நீத! மன்றத்தில் முறையிட்டாலும் அம்பானியின் கடைக்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கப் போவதில்லை.


தேர்தல் பாதை தீர்வல்ல!


ஏனென்றால் இது சுதந்திர நாடு அல்ல. உலக வங்கிக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சாசனம் எழுதிக் கொடுத்திருக்கும் அடிமை நாடு. திராவிடம், தேசியம், தமிழினம் என்று ஓட்டுக் கட்சிகள் பேசும் பேச்செல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள். வெறும் வாய்ச் சவடால்கள். இவர்களுடைய வாய்ச்சவடால்களால் அம்பானியின் கடையிலிருந்! து ஒரேயொரு கத்தரிக்காயைக் கூட வெளியே தூக்கியெறிய முடியாது.

உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும்தான் இவர்களுடைய உண்மையான எசமானர்கள். ஏகாதிபத்தியங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைச்சேவகம் செய்வதன் மூலமும், ஃபோர்டு, ஹூண்டாய், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளைப் பாக்கு வைத்து அழைப்பதன் மூலமும்தான் நம்முடைய நாடு முன்னேற முடியும் என்பதே இவர்களுடைய கொள்கை.


பெரும்பான்மை உழைக்கும் மக்களுடைய தொழிலையோ வாழ்க்கையையோ இவர்கள் ஒருக்காலும் பாதுகாக்க மாட்டார்கள். நம்முடைய போராட்டங்களை ஆதரிப்பதாக இவர்கள் சவடால் அடிப்பதை நம்புவதும், இவர்களை மேடையில் உட்கார வைத்து மாலை மரியாதை செய்வதும், இவர்களிடம் நடையாய் நடந்து மனுக்கொடுப்பதும் ஏமாளித்தனமில்லையா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.


பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விலைபேசும் இந்தக் கொள்கைகள் திடீரென்று இன்றைக்கா அமல்படுத்தப்படுகின்றன? 1994இல் காட் ஒப்பந்தத்தில் நரசிம்மராவ் அரசு கையெழுத்திட்ட நாளிலிருந்து படிப்படியாக அமல்படுத்தப்பட்டு இன்று மிகத் தீவிரமாக அமலாகி வருகின்றன. தொலைபேசி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், இன்சூரன்சு மற்றும் வங்கி ஊழியர்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகத் ! தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், பருத்தி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், நீலகிரி தேயிலை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், வணிகர்கள் என்று எல்லாப் பிரிவு மக்களும் தமக்குப் பாதிப்பு வரும்போதெல்லாம் போராடியிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்கள் நடந்திருந்தபோதிலும் அநேகமாக யாரும் வெற்றி பெறவில்லையே, ஏன்?


ஏனென்றால், ஒரு பிரிவு மக்கள் இப்படிப் போராடும்போது மற்றவர்கள் அதைப்பற்றிக் கடுகளவும் கவலைப்பட்டது கூட இல்லை. அவர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் ஒடுக்குவதைக் கூடக் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று ஒதுங்கி இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில்கூட மற்றவர்கள் அக்கறை காட்டியதில்லை.


ஆனால் எதிரிகளைப் பாருங்கள். டாடாவுக்கும் பிர்லாவுக்கும் அம்பானிக்கும் வால்மார்ட்டுக்கும் என்னதான் தொழில் போட்டி இருந்தாலும் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு வருவதற்கும், வாட் வரிவிதிப்பை அமல்படுத்துவதற்கும், வங்கி இன்சூரன்சு துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவதற்கும் ஒரே அணியில் நின்று அரசை நிர்ப்பந்திக்கிறார்க! ்.

அம்பானி என்பவன் தனியொரு முதலாளி அல்ல. கோயம்பேடு பிரச்சினை தனியான பிரச்சினையும் அல்ல. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் ஒரு விளைவாகத்தான் இன்று சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகள் நுழைகின்றன. இதனைக் காய்கனி வணிகர்கள் மட்டும் தனியாகப் போராடி வெல்ல முடியாது.


அம்பானியின் பின்னால் இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு எந்திரமும் போலீசும் கோர்ட்டும் மத்திய மாநில அரசுகளும் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அம்பானிக்குப் பக்கபலமாக நிற்கின்றனர். இந்த மிகப்பெரிய எதிரியை எதிர்கொள்ள வேண்டுமென்றால் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஓரணியில் திரண்ட! போராடினால் தான் முடியும்.

மக்களிடம் செல்வோம்!


மறுகாலனியாக்கத்தை வெல்வோம்!


""இதெல்லாம் ஆகிற கதையா?'' என்று சிலர் கேட்கலாம். தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரசு, பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் ஆகியோரை நம்பிக் காவடி எடுப்பதுதான் ஆகாத கதை. போகாத ஊருக்கு வழி தேடி ஆகாத காரியத்துக்கு மெனக்கிடுவதைவிட ஆகிற கதைக்கு நாம் தாராளமாக மெனக்கிடலாம். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் போன்ற எல! லாப் பிரிவு மக்கள் மத்தியிலும் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று ஆதரவு திரட்டும் வேலையைச் செய்யலாம்.


இன்று ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைக்கு காய்கனி வாங்கச் செல்பவர்கள் யார்? எல்லோரும் அம்பானியின் மாமன் மச்சான்களா அல்லது டாடா பிர்லாவின் சொந்தக்காரர்களா? அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி இன்சூரன்ஸ் ஊழியர்கள் கம்ப்யூட்டர் கம்பெனிகளின் படித்த கொத்தடிமைகள் போன்ற நடுத்தர வர்க்கத்தினர்தான் ரிலையன்ஸ் கடையை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


அங்கே போய் காய்கறி வாங்குவதன் மூலம் தங்களுடைய வாழ்க்கைக்கே குழி பறித்துக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்கக் கொள்ளைக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ""மலிவு, சுத்தம், இலவசம்'' போன்ற பொய்ப் பிரச்சாரங்களில் மயங்கி, உலகப் பணக்காரன் அம்பானியை மேலும் பணக்காரனாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


ரிலையன்ஸ் நிறுவனத்தால் வாழ்க்கையை இழந்த வியாபாரிகள் கோயம்பேடில் உண்ணாவிரதம் இருந்தால் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. கூடைக்காரப் பெண்களும், தள்ளுவண்டி வியாபாரிகளும், மளிகைக் கடை அண்ணாச்சிகளும் ரிலையன்சின் கடை வாசலில் மறியல் செய்ய வேண்டும். ""இத்தனைக் காலமும் உங்கள் வீடு தேடி வந்து வியாபாரம் செய்த எங்களுடைய வாழ்க்கையில் மண் அள்ளிப் போடுவது நியாயம! ?'' என்று அங்கே காய்கனி வாங்கச் செல்பவர்களை மடக்கி நியாயம் கேட்கவேண்டும்.


""ஏ.சி. கடையையும், வண்ண விளக்கையும், பாலித்தின் பாக்கெட்டையும் பார்த்தவுடன் இத்தனைக் காலமும் மளிகை சாமான் வாங்கிய அண்ணாச்சி கடையை மறந்துவிடுவீர்கள் என்றால், நாளைக்கு அம்பானி கடையில் அழகான பிள்ளை விற்றால், பெத்த பிள்ளையைக் கூட குப்பைத் தொட்டியில் வீசி விடுவீர்களா?'' என்று சுருக்கென்று தைப்பது போல அவர்களிடம் கேட்கவேண்டும்.


""ஒரு ரூபாய் மலிவாகக் கொடுக்கிறான் என்பதற்காக 20,30 வருடமாக உங்களுக்குப் பொருள் விற்ற எங்களை ஒரே நாளில் தூக்கி எறிகிறீர்களே, உங்களை விடக் குறைவான சம்பளத்துக்கு நீங்கள் செய்யும் வேலையைச் செய்ய பல பேர் தயாராக இருப்பதால், 10,20 வருசம் சர்வீஸ் ஆன உங்களை வேலைநீக்கம் செய்வதாக உங்கள் நிர்வாகம் கூறினால் அதையும் ஒப்புக் கொள்வீர்களா?'' என்று மண்டையில் அடித்தாற்போலக் க! ேட்க வேண்டும்.


""கேவலம் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாகக் கொடுக்கிறான் என்பதற்காக இந்த நாட்டின் பொதுச் சொத்துக்களையும், மக்களுடைய வரிப்பணத்தையும், நடுத்தர வர்க்கத்தினர் பங்குச் சந்தையில் போட்ட பணத்தையும் திருடி சொத்து சேர்த்த ஒரு கிரிமினலின் கடை வாசலில் கியூவில் நிற்கிறீர்களே உங்களுக்கு இது அவமானமாக இல்லையா?'' என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல அவர்களைக் கேட்க வேண்ட! ம்.


தெரியாமல் தவறு செய்யும் படித்த முட்டாள்களுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டும்; தெரிந்தே தவறு செய்யும் காரியவாதிகளிடம் காறி உமிழ்வதைப் போலப் பேசவேண்டும். இப்படிப்பட்ட ஒரு மக்கள் இயக்கமாக சென்னை நகரின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் இந்த பிரச்சினையைக் கொண்டு செல்ல முடியும்.

எங்கெல்லாம் ரிலையன்ஸ் கடை இருக்கிறதோ அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் உள்ள தள்ளுவண்டி வியாபாரிகளும் மளிகைக் கடை காய்கறிக் கடைக்காரர்களும் ரிலையன்ஸ் எதிர்ப்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தம் கடைகளில் இருந்தபடியே செய்ய முடியும். காய்கறி விற்கும் பெண்கள் தம் கூடைகளில் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத் துண்டறிக்கைகளைக் கொண்டு சென்று வீடு வீட! க இந்தக் கருத்தைப் பரப்ப முடியும்.

தேவை: ஒரு விடுதலைப் போராட்டம்!


இதெல்லாம் நடக்க முடியாத விசயங்கள் அல்ல. பிரிட்டிஷ்காரனின் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக நாம் இருந்தபோது அந்நியத் துணிகள் புறக்கணிப்பு இயக்கம் இப்படித்தான் நடந்தது. விலை குறைவான நைஸான வெளிநாட்டுத் துணிகளைப் புறக்கணித்து முரட்டுக் கதராடையையும் கைத்தறி ஆடையையும் நாட்டுப் பற்றுள்ள மக்கள் அன்று விரும்பி வாங்கத்தான் செய்தார்கள்.


இன்று நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளாச்சிமடா என்ற கிராமத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி சுடுகாடாக்கி, கழிவு நீரை வெளியேற்றி விளைநிலங்களையும் அழித்த கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எதிராக அங்கு மக்கள் நடத்திய போராட்டம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி, இன்று கேரள மக்கள் யாருமே கோக் பெப்சியை விரலால் கூடத் தீண்டுவதில்லை என்ற நிலை அங்கே உருவாகியிருக்கிறது.


அத்தகையதொரு நிலையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாம் இங்கே உருவாக்கினால்தான் நாளை வால்மார்ட்டும் டாடாவும் பிர்லாவும் தமிழகத்தில் நுழைவதற்கே தயங்கிப் பின்வாங்குவார்கள். இந்த ரிலையன்ஸ் எதிர்ப்பு இயக்கம் நாடு முழுவதும் ஒரு பேரியக்கமாகப் பற்றிப் படரும்.


""விலை மலிவு, தரம் அதிகம் என்பதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், எங்கள் நாட்டு வியாபாரிகளிடம்தான் பொருளை வாங்குவேனே தவிர எங்கள் நாட்டைக் கொள்ளையடிக்கும் ஒரு பன்னாட்டு முதலாளியிடம் வாங்க மாட்டேன்'' என்று மக்களைச் சொல்ல வைக்க வேண்டும். ""சிறு வியாபாரிகள், விவ சாயிகளின் இரத்தம் குடிக்கும் ரிலையன்ஸ், டாடா போன்ற கோடீசுவரத் தரகு முதலாளிகள் கொள்ளை இலாபம் அட! ப்பதற்குத் துணை போகமாட்டேன்'' என்று மக்களைப் பேச வைக்க வேண்டும். அத்தகைய நாட்டுப்பற்றும் சுரண்டலுக்கு எதிரான கோபமும் எங்கும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கினால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை அடமானம் வைக்கும் இந்த தேசத்துரோக அரசையும் தூக்கி எறிய மக்கள் தயாராகி விடுவார்கள்.


இவையெல்லாம் சாதிக்க முடியாத சாகசங்கள் அல்ல. ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொழுப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் படுத்து 1000, 500, 200 என்று குறைந்து, மூன்று வேளை சோறு இரண்டு வேளையாகி, பிறகு அது ஒரு வேளையாகக் குறைந்து, கடனாளியாகி மனம் நொந்து சாவதை விட, அவனா நாமா என்று பார்த்து விடுவதுதான் தீர்வு.


மகாராட்டிர மாநிலத்தில் தினந்தோறும் 10, 15 விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை தொடர்கிறதே தவிர அவர்களுக்கு எந்த விடிவும் பிறக்கவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மக்களோ, தங்கள் விளைநிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராகப் போராடினார்கள். 14 பேரை மார்க்சிஸ்டு அரசு சுட்டுக் கொன்ற பின்னர! ும் மக்கள் போராட்டம் அடங்கவில்லை. நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முடிவையே கைவிடுவதாகக் கூறி மேற்கு வங்க அரசு பின்வாங்கியது.


""தங்களுடைய நிலத்தை டாடாவுக்குக் கொடுக்க முடியாது'' என்று போராடிய ஒரிசா மாநிலம் கலிங்கநகரைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சென்ற ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இருந்தாலும் இன்று வரை டாடா நிறுவனம் அங்கே கால் வைக்க முடியவில்லை.


தம்முடைய மண்ணையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தீவிரமாகப் போராடியதால் நந்திகிராம் மக்களைப் பயங்கரவாதிகள் என்கிறது அரசு. 80,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் உலகின் 18வது பெரிய பணக்காரனான முகேஷ் அம்பானி, ஒரு தள்ளுவண்டி வியாபாரியையும் மளிகைக் கடைக்காரரையும் மோதி அழித்தால் அதனை வியாபாரம் என்றா சொல்ல முடியும்? இதுதான் உண்மையான பயங்கரவாதம்.


இந்த எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அரசாங்கமும் போலீசும் கோர்ட்டும் இவர்களுடைய பங்களாவில் வேலை செய்யும் தோட்டக்காரனுக்கும் வாட்ச்மேனுக்கும் சமமானவர்கள். ரிலையன்ஸை ஒழிக்கச் சொல்லி இவர்களிடம் முறையிடுவது வீண். நாய்தான் வாலை ஆட்ட முடியும். வால் நாயை ஆட்ட முடியுமா? அப்படி முடியும் என்று நம்பிக் கெட்டவர்கள் பலபேர். தொலைபேசித்துறை, வங்கி, இன்சூரன்சு, துறைமு! , விமானநிலைய ஊழியர்கள் ஓட்டுக் கட்சிகளை நம்பினார்கள். தங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள். இந்தத் துறைகள் எல்லாம் தனியார்மயமாவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.


உண்ணாவிரதம், தர்ணா, கடையடைப்பு போன்ற "அறவழி'ப் போராட்டங்களுக்கு அம்பானியும் அசையமாட்டான். இந்த அரசும் அசையப் போவதில்லை. நர்மதை அணைக்கட்டுத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேதா பட்கர் நடத்தாத அறவழிப் போராட்டமா? அணைக்கட்டின் முன் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், உச்சநீதி மன்றத்தில் வழக்கு... இத்தனைக்குப் பிறகும், அந்த அணைக்கட்டுக்கா! வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.


அம்பானியையும், வால்மார்ட்டையும் விரட்ட வேண்டுமானால் அதனைத் தம் கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கம்தான் அதைச் செய்ய முடியும். ""தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை விரட்டிவிட்டு உள்நாட்டுத் தொழில்களையும் விவசாயத்தையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டும்'' என்ற கொள்கையுடைய ஒரே இயக்கம் நக்சல்பார! இயக்கம்தான். இது மிகையல்ல, உண்மை. நக்சல்பாரி இயக்கத்தின் கீழ் அணிதிரண்டால் அம்பானியை நாள் குறித்து வெளியேற்ற நம்மால் முடியும். நந்திகிராம் மக்களைப் போலப் போராடினால் எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும்.


கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல நுழைந்திருக்கிறான் அம்பானி. இந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறது அரசு. பாம்பைப் பார்த்து நடுங்கி அன்றாடம் செத்துப் பிழைப்பதை விட ஒரே போடாய்ப் போட்டு விடுவதுதான் அறிவுக்கு உகந்த செயல். மானமுள்ள வழியும் அதுதான்!


சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை ஆதரிப்போம்!

ரிலையன்ஸ், டாடா, பிர்லா தரகு முதலாளிகள்

மற்றும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளைப் புறக்கணிப்போம்!

அந்நிய அடிமை மோகம் உதறி எறிவோம்!

உள்நாட்டுப் பொருட்களை வாங்குவோம்!

தேசிய, சிறு தொழில்களை ஊக்குவிப்போம்!

விவசாயிகள், சிறுதொழில் முனைவோரை வாழவைப்போம்!

நம் மண் மீதும் உழைக்கும் மக்கள் மீதும் பற்று கொள்வோம்!

நாட்டுப் பற்றுணர்வை நாடி நரம்புகளில் முறுக்கேற்றுவோம்!

தனியார்மயம், தாராளமயம், உலகமயம்

மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!


***

Monday, May 14, 2007

புலியெதிர்ப்பு கும்பல் நடத்திய கோமாளிக் கூத்துகள் நிர்வாணமாகின்றது

புலியெதிர்ப்பு கும்பல் நடத்திய கோமாளிக் கூத்துகள் நிர்வாணமாகின்றது

பி.இரயாகரன்

13.05.2007

புலியெதிர்ப்பு கும்பல் நடத்தும் கோமாளிக் கூத்தில் அரசியல் விட்டுக்கொடுப்பு சாத்தியமா? இல்லை. இவை அல்லாத தளத்தில், அரசியல் விட்டுக்கொடுப்புகள் சாத்தியமா எனின், ஆம். அது மக்கள் நலனில் மட்டும் சாத்தியமானது. இதை மூடிமறைக்கவே, பலர் அரசியல் இல்லாதவர்களாக காட்டி நடிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் விட்டுக்கொடுப்பின் பெயரால், எப்படியும் எந்த வகையிலும் சோரம் போகலாம். ஒரு கொப்பில் தொங்கிக் கொண்டு, அங்கும் இங்குமாக தாவித்திரியலாம். ஏன் அங்குமிங்கமாக தாவுகின்றீர்கள் எனக் கேட்டால், மக்களுக்காக என்பார்கள். மக்களுக்காக எப்படி எந்த வழியில் என்று கேட்டால், தமது மூஞ்சையை புலியெதிர்ப்புக்குள் புதைக்கின்றனர்.


புலிகளின் அரசியல் சாரம் என்பது மாபியாத்தனமும், பாசிசமுமாகும். இதைச் சாதிக்க அடி உதை மிரட்டல் முதல் படுகொலைகள் என்பது, அனைத்து மக்களும் நன்கு அறிந்ததே. இதை மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை மக்கள் சொந்த வாழ்வியலாக உணர்ந்து இசைந்து வாழ்கின்றனர். இதை எதிர்ப்பதும், இதற்கு எதிர்வினையாற்றுவதும் என்பது சரியானது. ஆனால் இதுவே அரசியலாகிவிடுமா? எனின் இல்லை.


புலிகள் தமது பாசிச மாபியா இருப்புக்காக, அவர்கள் தமிழ் மக்களிடமிருந்து எதைத் திருடி வைத்திருக்கின்றார்கள் எப்படி அவர்களால் தமது பாசிச மாபியாத்தனத்தை தக்க வைக்க முடிகின்றது.? இதைப்பற்றி எல்லாம் புலியெதிர்ப்பு கும்பல் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்? இதைப் பற்றி பேச மறுத்து, விட்டுக்கொடுப்பு, ஓற்றுமை, ஜக்கியம் என்பது கடைந்தெடுத்த மோசடி. உண்மையில் இவை புலிகள் முன்வைக்கும் அதே வாதம். தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேச மறுப்பதே, இதன் மையமான உள்ளடக்கமாகும். மாறாக அன்றாட சம்பவங்கள் மீது கொசிப்பை அரசியலாக்க முனைகின்றனர்.


உண்மையில் புலியெதிர்ப்பின் பெயரில், தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி புலியல்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்வதில்லை? அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை, அன்றாட சம்பவங்கள் சார்ந்த அரசியல் கொசிப்பில் தீர்க்க முனைகின்றனர். இப்படி மக்களுக்கு வெளியில், தமது சொந்த கொசிப்பு வழியில், தமக்கு பின்னால் உள்ள முன்னைய பாசிச குழுக்களின் பின்னால் நின்று தீர்க்க முடியும் என்கின்றனர்.


மறுபக்கத்தில் புலிகளின் இருப்பு என்பது மாபியாத் தனத்தையும் பாசிசத்தையும் தேசியத்தையும் ஒருங்கிணைத்து, அதை ஒரு அரசியல் உரிமையாக முன்வைக்கின்றனர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துகாகத் தாம் போராடுவதாகவும், தமது பாசிச மாபியாத்தனங்களை இதற்காகத்தான் செய்வதாக, தமிழ் மக்களை நம்பவைக்க முனைகின்றனர். இதை மக்கள் நம்புகின்றார்களோ இல்லையோ, இது ஒரு அரசியல் போக்காக உள்ளது. எந்த நேரமும் பொய்யும் புரட்டும், தாம் புனிதமான ஒழுக்க சீலராக பறைசாற்றுவது வரையிலான, இழிவான நடத்தை கொண்ட மூகமுடி கழிசடைப் பேர்வழிகள் தான் புலிகள். இது ஒரு இழிவு கெட்ட, வியாபாரமான அரசியல் நடத்தையாக உள்ளது. தம் பின்னால் அணி திரட்டும் ஒவ்வொருவனையும் கொலைகளை ரசிக்கின்றதும், இதையே அரசியல் வக்கிரமாக கொண்ட மனநோயாளர்களை கொண்டே, புலிகள் தம்பக்கம் குதர்க்கமான நியாயப்படுத்தல்களைச் செய்கின்றனர்.


உண்மையில் இப்படியாக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை மறுப்பதே புலிகளின் அரசியலாகும். இந்த நிலையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை, புலிகளின் மாபியா பாசிச நடத்தைகளில் இருந்து மீட்பதன் மூலம் தான், தமிழ் மக்களை மீட்க முடியும். மக்களில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இப்படி மட்டும் தான் சிந்திக்கமுடியும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னிறுத்தி, அவர்களில் இருந்து புலிகளை அன்னியப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்த முடியும். இந்த வழியில் தான், புலிகளின் மாபியாத்தனத்தை கொண்ட பாசிசத்தை அடியோடு இல்லாது ஒழிக்கமுடியும். இதுவல்லாது, மக்களுக்காக போராடும் மாற்று வழிகள் எதுவும் கிடையாது. மக்களின் உரிமைகள் உள்ளடங்கிய ஒரு மாற்று அரசியல் தான் மக்களுக்கானது. இது தான் உண்மை. மாற்று அரசியலின்றி, யாராலும் மக்களுக்காக போராட முடியாது. மாற்று அரசியலின்றி மக்களுக்காக தாம் போராடுவதாக கூறுவது பாசாங்குத்தனமானது. உண்மையில் போலியானதும், பொய்யானதுமாகும். இதைத்தான் புலிகள் செய்கின்றனர் என்றால், மறுபக்கத்தில் இதுவே புலியெதிர்ப்பாக உள்ளடகத்தில் இருப்பதையும் காணமுடியும்.


மக்களுக்காக போராடாமல் இருத்தல் என்பதில் புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத புலியெதிர்ப்பு அணியின் அரசியலும் கூட. இதை யாராலும் மறுத்து நிறுவமுடியாது.


உண்மையில் இதற்குள் அரசியல் ரீதியாக சோரம் போதலையே, அரசியல் வாழ்வாக கொண்டவர்கள் புலிகள் மற்றும் புலியல்லாத தளத்தில் கும்பலலாக நிரம்பிவழிகின்றனர். அடிப்படையில் மக்களின் முதுகில் குத்துவது தான், இவர்களின் கைதேர்ந்த அரசியல் வழி. புலியல்லாத தளத்தில் நீண்ட அனுபவத்தைக் கொண்டவர்கள் கூட, புலி மற்றும் புலியல்லாத அரசியலில் இவர்கள் கற்றுக்கொண்ட அரசியல் தான் என்ன?


இப்படிப்பட்டவர்களின் தனிமனிதர்களின் குண இயல்புகளைக் கடந்து, தனிமனித உறவுகளைக் கடந்து, இவர்களுடனும் அரசியல் ரீதியாக போராடவேண்டிய சூழலும் அவலமும். மக்களைப் பற்றிக் கடுகளவு கூட சிந்திக்காத சமூக இயங்கியல்.


நாம் சதா உயர்வாழ்வுக்கான போராட்டத்தினூடாகவும், இதையும் எதிர்கொள்கின்றோம். புலிகளோ ஆயுதம் மற்றும் பணத்தை வைத்துக்கொண்டு, எதையும் எப்படியும் செயல்படுவதில் பலம் பொருந்தியவர்கள். ஆனால் அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் பலமற்ற கோழைகள். மக்களை கண்டு அஞ்சும் அடக்குமுறையாளர்கள். இப்படிப்பட்ட மக்களின் எதிரியை எதிர் கொள்ளும் போராட்டத்தில், நாம் புலிகள் அல்லாத தளத்தில் போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். ஏன்?


புலிகளில் இருந்து மக்களின் விடுதலை என்பது, மற்றொரு புலியை உருவாக்குவதல்ல. மக்களுக்கு வெளியிலான செயல்பாடுகள் அனைத்தையும், நாம் ஈவிரக்கமின்றி எதிர்க்கின்றோம். ஏன் எதிர்க்கின்றோம் என்றால், அவையும் கூட மக்களுக்கு எதிரானது என்பதால். மக்கள் சம்மந்தப்படாத, மக்கள் உரிமைகளை பேசாத, புலிகளில் இருந்து மக்களை விடுவிக்க முனைவதாக கூறுகின்ற அனைத்துக் கோட்பாட்டையும், நடைமுறைகளையும் நாம் எதிர்க்கின்றோம். மக்களுக்காக, அவர்களின் அரசியல் உரிமைக்காக போராடுவதை தவிர, மாற்று அரசியல் என்பது மக்களின் முதுகில் குற்றும் ஏமாற்று வித்தையாகும். இந்த வகையில் எந்த விட்டுக்கொடுப்பும் மக்களுக்கு வெளியில் கிடையாது. மக்களுக்காக போராடுங்கள், அப்போது நாங்கள் அதில் விட்டுக் கொடுக்கமுடியும். அதை அவர்கள் செய்ய முன்வருவதில்லை.


மக்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்பதைத் தான், விட்டுக்கொடுங்கள் என்கின்றனர். இதுவே புலியினது மட்டுமல்ல, புலியெதிர்ப்பின் மையமான அரசியல். மக்களுக்காக போராடாமல் இருத்தலே, அவர்களை ஒருங்கிணைக்கின்றது. இதுவே அரசியல் ரீதியானதும், எதார்த்தமான உண்மையுமாகும்.


உண்மையில் இவர்கள் கோருவது, மக்களுக்கான அரசியலை கைவிட்டு செயல்படவேண்டும் என்கின்றனர். அரசியல் அல்லாத வெறும் புலியெதிர்ப்பாக தம்மைப் போல் இருப்பதன் மூலமே, விட்டுக்கொடுப்பை பூர்த்தி செய்யக் கோருகின்றனர். இப்படி குறுகிய சொந்த நலன்களுடன், மூடிமறைக்கப்பட்ட திட்டங்களுடன் கும்பல் சேர்க்கின்றனர். இந்த இணைப்புக்கான அரசியல் புள்ளியோ புலியெதிர்ப்பு. நாணமற்ற கடிவாளம் மூலம், தமது அடையாளம் இழந்து குறிகோள்களின்றி தலைதெறிக்க ஒடுகின்றனர்.


இப்படி மக்கள் அரசியலை பின்னுக்கு வைக்கும் படியும், புலியை ஒழிக்கும் வரை அதை முன்வைக்க கூடாது என்கின்றனர். சரி இவர்கள் முன்வைக்கும் விடுதலை? அதுவும் யாருக்கு?


உண்மையில் அரசியல் என்பது மக்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது என்பதை மறுக்கின்றனர். மக்களின் வாழ்வைப் பற்றிப் பேசாது, அவர்கள் எதிர்கொள்ளும் எந்த முரண்பாட்டையும் தீர்க்க முடியாது. இதில் புலியெதிர்ப்பு முரண்பாடு கூட.


மக்கள் அரசியலைப் பேசாது சமூக முரண்பாடுகளை தீர்க்க முடியும் என்று கூறி, புலியெதிர்ப்பின் பின்னால் அரங்கேற்றுவது என்ன? மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.


இப்படி மக்களுக்கு எதிராக செயல்படுவர்களாக உள்ளனர். அனைத்துவிதமான மக்கள் சார்ந்த அரசியல் ரீதியான செயல்பாடுகளை மறுப்பது. புலிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் முன்னிலைப்படுத்தி கும்பல் சேர்ப்பது. அதையே அரசியலாகச் செய்வது. ஒட்டு மொத்தத்தில் மக்களில் இருந்து விலகியிருக்க முனைவது. மக்கள் விரோத நடத்தைகளுக்கு துணைபோவது, இதன் அரசியல் சாரமாகும். இப்படி புலிகளின் பின்னால் அணிதிரண்டவர்கள் எப்படி எந்த வகையில் சொந்த மக்களுக்கு எதிராக செயல்பட முடிகின்றதோ, அப்படித்தான் இந்த புலியெதிரிப்பின் பின்னும் அச்சொட்டாக அரங்கேறுகின்றது. இதை யாராலும் மறுக்க முடியுமா?


புலிகள் பற்றிய பிரச்சனையின் அரசியல் சாரம் என்ன? மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய அரசியலை முன்னனெடுக்கத் தவறியதுதான். அதாவது மக்கள் அரசியலை மறுத்தோடியவர்கள். இதன் மூலம் மக்கள் விரோத அரசியலையே முனனெடுத்தவர்கள். மக்களிடம் இருந்து விலகிய லும்பன் குழுக்களாக, மக்களில் இருந்து விலகி அன்னியமாக தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். மக்களின் அரசியல் கோரிக்கையை, தமது லும்பன் தனத்துக்கு ஏற்ற குறுகிய கோரிக்கையாக்கி, அந்த மக்களையே தமது இராணுவ பொருளாதார பலத்தைக் கொண்டு அடக்கியொடுக்குவதே அவர்களின் அரசியலாகியது. தமிழ் மக்களின் வாழ்வை அழிப்பது தான், அதாவது மக்களின் அரசியல் பொருளாதார உரிமைகளை மறுப்பது தான் புலி அரசியல்.


இதை புலியெதிர்ப்பு, அரசியல் ரீதியாக கேள்விக்குள்ளாகுவதில்லை. அரசியலற்ற புலியெதிர்ப்புக் குழுவாக, கும்பலாக ஒருங்கிணைந்து இருப்பதில் வியப்பேது! இவர்களை ஒருங்கிணைப்பது அரசியல் அல்ல, புலியெதிர்ப்புத் தான். இதை நாங்கள் புலியெதிர்ப்பு என்று கூறுவதில் எந்த தவறும் கிடையாது. புலிகளின் அதே அரசியல் நடைமுறை வழியில் பயணிப்பது தான், புலியெதிர்ப்பாகும். மக்களை மக்களின் அரசியல் பிரச்சனைகளில் இருந்து அணிதிரட்டுவதை எதிர்க்கும் அரசியல் தான், இவர்களின் மாற்று எதிர்வினையாகும்.


புலியெதிர்ப்பு அரசியல் சாரம் என்பது, அதே புலிச் சாரம் தான். நாம் இப்படி கூறுவது குழப்பமற்றது, தெளிவானது. அதாவது அரசியல் ரீதியானது. புலியின் அரசியல் என்னவென்று ஆராய மறுப்பதுதான் புலியெதிர்ப்பு. இதன் மூலம் தனது அரசியல் என்ன என்ற பிரச்சனையை தவிர்க்கின்றது. புலியை எதிர்த்தல், புலி அவர்களை எதிர்த்தல் என்பதின் பின்னுள்ள சித்து விளையாட்டுக்கள் இதுதான். இதற்கென எந்த அரசியல் சாரமும், மக்கள் நலனும் இருப்பதில்லை.


புலியெதிர்ப்பின் பின் கும்பல் சேரும் போது, புலிக்கு எதிரான அனைத்தையும் காவும் சாவியாகின்றது. பின் அதை சுமக்க முடியாது தலையில் ஏற்றி சுமக்கின்றது. பின் அதற்கு விளக்கம் கொடுப்பது அல்லது நியாயப்படுத்துவதே, அதன் அரசியல் எல்லை. நுட்பமாக பார்த்தால் தனித்துவமான, சுயாதீனமான அரசியல் செயல்பாடுகள் அற்றவர்கள். கும்பலாக கோவிந்தா போடுபவர்கள். மற்றவர்களின் எடுபிடிகளாக இருப்பவர்கள். மக்களின் நலன்களை இனம் காணாது, ஒரு இருண்ட சூக்குமத்தில் அந்தரத்தில் மிதப்பவர்கள். இதற்கு பின்னுள்ள காரணங்கள் என்ன?


1. இதை ஒருங்கிணைத்து வழிநடத்தக் கூடியவர்களின் பின்னணி அரசியல் நிலைப்பாடு படுபிற்போக்கானது. இதன் பின்னணியில் சில வலதுசாரிய புலியல்லாத மக்களின் எதிரி சார்பான துரோகக் குழுக்கள் இயங்குகின்றது. அத்துடன் பொதுவான வலதுசாரி தமிழ் சிந்தனைமுறை சார்ந்து புலியெதிர்ப்பு அரங்கேறுகின்றது. அதே சிந்தனையை, வலதுசாரி புலியெதிர்ப்பு அரசியலாக எதார்த்தத்தில் உள்ளது.


அரசியல் என்பது புலிகள் தொடர்பானது மட்டுமல்ல சர்வதேச ரீதியானதும் கூட. இந்த வகையில் இவர்களின் சர்வதேச நிலைப்பாட்டை உரசிப் பார்ப்பதன் மூலம், இலகுவாக புலியெதிர்ப்பு வலதுசாரிய அரசியலை புரிந்து கொள்ளமுடியும். சர்வதேச நிலையைப் பற்றி புலியெதிர்ப்பு வலதுசாரிகளின் மதிப்பீடுகள் கூட, அந்தநாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத எல்லையில் படுபிற்போக்கானது. இவர்களால் தமிழ் மக்களை வழிநடத்தவோ, அரசியல் ரீதியான மாற்றத்தை தமிழ் குடிமக்களின் உணர்வுகளில் ஏற்படுத்தவோ முடியாது.


2. புலியெதிர்ப்பின் பின் உள்ளவர்கள் மக்களின் வாழ்வை, அரசியல் ரீதியாக கற்றுக்கொள்வது கிடையாது. சம்பவ ரீதியாக நிகழ்ச்சிகளை காண்பதும், உதிரியான செய்தி வடிவில் தகவலை பரிமாறுவதுமான வலதுசாரிய கொசிப்யே புலியெதிர்ப்பு அரசியலாகின்றது. அரசியலற்ற கொசிப்பு வெளிப்படுத்தும் குதர்க்கமே, புலியெதிப்பு அறிவாகிவிட்டது. சமூக மலட்டுத்தனமே இவர்கள் விருப்பு சார்ந்த அரசியல் எல்லை. இதை வழிநடத்த முனைபவர்கள், தமக்கு தெரிந்த கிணற்றுத் தவளை அரசியலைக் கொண்டு மக்களை வெளுக்கின்றனர். மக்களின் உரிமைகள் சார்ந்த அரசியல் அறியாமையை உருவாக்கிய புலிகள், எதைச்செய்கின்றனரோ அதை இவர்களும் கும்பலாக செய்ய முனைகின்றனர். மக்களின் சொந்த செயலுக்கு வழிகாட்டும் அரசியல் விழிப்புணர்ச்சி என்பது, புலி பற்றிய விழிப்புணர்ச்சியல்ல.


3. புலியெதிர்ப்பு அணியினர் தாம் கொண்டிருந்த கடந்தகால குழுவாத அரசியல் தொடர்புள்ளவர்களாக அல்லது அதன் எடுபிடிகளாக அல்லது அதன் பாதிப்புகளை கொண்டவர்களாக அல்லது புலியல்லாத அனைத்தையும் கண்மூடிக் கொண்டு ஆதரிப்பவராக உள்ளனர். இது ஒரு விசித்திரமான உண்மை. உண்மையில் குழுவாத குழுக்களின் கும்பல் அரசியல், மக்களுக்கு எதிரானதும் படுபிற்போக்கானதுமாகும். இது வலதுசாரி அரசியலை சாரமாக கொண்டது. புலியெதிர்ப்பு, அதனுடன் அரசியல் ரீதியாக உறவை துண்டிக்க மறுப்பவர்களை அடிப்படையாகக் கொண்டது. அதை அரசியல் ரீதியாக விமர்சிக்க மறுப்பவர்களைக் கொண்டது. அதில் உள்ள நபர்களுடன் அரசியல் ரீதியாக ஏதோ ஒரு தளத்தில் சேர்ந்து நிற்பவர்களைக் கொண்டது. இப்படிப்பட்ட வலதுசாரிய புலியெதிர்ப்பு, எதைத்தான் மக்களுக்கு நேர்மையாக வழிகாட்ட முடியும். ஒரு நாளும் முடியாது.


இப்படி தீவிர புலியெதிர்ப்பு அணி கும்பலாக பலம் பெற்ற அண்மைய காலத்தைய கொசிப்பை சற்றுத் திருப்பிப் பார்ப்போம்.


1. இவர்கள் சாதித்தது என்ன?


2. எதை இவர்கள் முன்னிலைப்படுத்தினர்?


1. கருணா விவகாரம் தொடர்பாக இவர்கள் நடத்திய ஆய்வுகள், விவாதங்கள், பேட்டிகள் முதல் மக்களுக்கு சொல்ல முனைந்த அனைத்தும் வெற்றுவேட்டுத்தனமாகியுள்ளது. நாங்கள் சொன்னவைகள் அப்படியே அரசியல் ரீதியாக நிகழ்ந்துள்ளது. நாங்கள் கொண்டிருந்த அரசியல் சார்ந்த உண்மை, பளிச்சென்று அனைத்தையும் தகர்த்து நிற்கின்றது. எங்கள் அரசியல் ரீதியான விவாதமுறைதான் மிகச் சரியானது என்பதை மறுபடியும் நிறுவியுள்ளது.


உண்மையில் அரசியல் ரீதியாக சரியாக விமர்சித்து சரியான வழிக்கு கொண்டு வரவேண்டிய பணியை கைவிட்டதன் மூலம், கருணா போன்ற வலதுசாரிய கொலைகாரர்களை ஊக்கப்படுத்தியவர்கள் யார்? அவர்கள் மக்கள் பக்கம் வருவதை தடுத்த குற்றம் புலியெதிர்ப்புக்கு உண்டு. அதாவது இந்த கொலைகார வலதுசாரி அரசியலுக்கு புலியெதிர்ப்பு துணை நின்றதன் மூலம், கொலைகளுக்கு உடந்தையாகவும் துணையாகவும் புலியெதிர்ப்பு அரசியல் இருந்துள்ளது என்பதே உண்மை.


கருணா குழுவின் உடைவை நாம் முன் கூட்டியே எதிர்வுகூறியிருந்தோம். ஆனால் அதை ஒரு அரசியல் ரீதியாக நிகழும் என்றே மதிப்பிட்டோம். ஆனால் அது அப்படி நிகழவில்லை. காரணம் இரண்டு.


1. புலியெதிர்ப்பு அணி கருணாவின் அரசியல் வழி சரியென்று நியாயப்படுத்தி, வலதுசாரி கொலைகார மாபியாக் கும்பலாக நீடிப்பதை அரசியல் ரீதியாக பாதுகாத்தனர்.


2. கருணா கும்பல் வலதுசாரிய அரசியல் வழியில் ஆயுதம், பணம் என்ற ரீதியில், அதிகளவுக்கு இராணுவத்தின் கூலிக் கும்பலாக சிதைந்தனர். இதன் மூலம் அரசியல் ரீதியான பிளவாக அல்லாது, கூலிக் கும்பலுக்கிடையான மோதலாக மாறியது.


இவையும் எதிர்பார்க்கப்பட்டது தான். புலியெதிர்ப்பு அணி கருணா விவகாரம் ஊடாக மக்களுக்கு கற்றுக்கொடுத்தது எதை? மக்கள் விரோதிகளை மக்கள் சார்பானவராக காட்டி கும்மியடித்தைத் தான். வலதுசாரி புலியெதிர்ப்பின் போக்கிலித்தனத்தை இது வெளிப்படுத்தியது.


3 .ஜே.வி.பி பற்றி புலியெதிர்ப்பு கொடுத்த அல்வா நகைச்சுவையாகவே அம்லமாகின்றது. ஜே.வி.பியை இடதுசாரிகளாக காட்ட, முதிர் முட்டாள்களின் தொடர்ச்சியாக நடத்திய முண்டியடிப்புகள். உலகமயமாதலை எதிர்ப்பதாக பாசாங்கு செய்யும் ஜே.வி.பி, அதை தமிழர் விடையத்தில் மட்டும் தோண்டியெடுத்து செய்கின்றது. அதாவது தமிழர் உடைய உரிமை விடையத்தில் மட்டும், அதை காண்கின்ற வலதுசாரிய இனவாத அரசியல். நாம் அவர்கள் பற்றி கூறியவை அரசியல் ரீதியாக மிக சரியாக இருக்கின்றது. ஜே.வி.பி பற்றி புலியெதிர்ப்பு மக்களுக்கு கூற முனைந்தது அனைத்தும் வெற்றுவேட்டுதனமாக இருப்பதையே இன்று பார்க்கின்றோம்.


4. மகிந்த அரசு பற்றிய புலியெதிர்ப்பு அரசியலின் அரசியல் கொசிப்புக்கள் அனைத்தும் சந்தியில் நிர்வாணமாகி நிற்கின்றது. எதைத்தான் இப்படி மக்களுக்கு உணர்த்த முனைகின்றனர்.


இப்படி அரசியல் ரீதியாக வலதுசாரி புலியெதிர்ப்பு கும்பல், கும்பலாக கூடி சாதித்தது என்ன? எதையும் மக்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை. சம்பவங்கள் மற்றும் மற்றவர்களின் வலதுசாரி மக்கள் விரோத நிலைக்கு எடுப்பார் கைப்பிள்ளையாகி நியாயப்படுத்தும் கொசிப்புகளை வம்பளந்தனர். புலிகளிடமிருந்து மக்களை அரசியல் ரீதியாக மீட்க, எந்த முன்முயற்சியும் எடுக்க முடியாத அளவுக்கு புலியெதிர்ப்பு கொசிப்பே அரங்கேறியது, அரங்கேறுகின்றது. வலதுசாரிய கும்பலாக கும்பல் சேருகின்ற நடைமுறை. இடதுசாரிய கோசங்கைள இதற்கு அணையாக்க முனையும் வலதுசாரிய சூழ்ச்சியும் சதிகளும். கடந்தகால வலதுசாரிய குழுக்களின் கடைகெட்ட அதே உத்தியும் வழிமுறையும், அதே வக்கிரத்துடன் ஒருங்கே அரங்கேறுகின்றது. அதே மக்கள் விரோதக் குழுக்கள், புலியெதிர்ப்பு அனைத்து தளத்திலும் மெதுவாக, ஆனால் வன்மமாக வெளிப்பட்டு நிர்வாணமாகின்றது. பாவம் இதை நம்பி சவாரி செய்யும் அப்பாவிகளும், அப்பாவி மக்களும். ஜனநாயகம் என்ற பெயரில் முன்னைய இயக்கங்களும், சில உதிரிகளும் சேர்ந்து புலியெதிர்ப்புக் கும்பலாக கும்பல் சேர்ந்து நடத்திய கோமாளிக் கூத்து, கருணாவின் பாசிச வரலாறு போல் தானாகவே கலைந்து போகத்தான் போகின்றது.