தமிழ் அரங்கம்

Showing posts with label புலி. Show all posts
Showing posts with label புலி. Show all posts

Sunday, May 17, 2009

புலிக்கு ஏன் இந்தக் கதி ஏற்பட்டது!?

புலித்தலைமை முதல் புலிப்பினாமிய வலதுசாரி கும்பல் வரை, இதற்கான அரசியல் காரணத்தை தெரிந்து கொள்ள மறுக்கின்றது. தாமல்ல, பல காரணங்களைக் கற்பிக்க முனைகின்றது. தாங்கள் சரியாகவே இருந்ததாகவும், இருப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. இப்படி அவர்கள் தாங்கள் கற்பிக்கும் காரணங்கள் ஊடாக, தமது தவறான வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து நகர்த்த முனைகின்றனர். தாமல்லாத காரணம் தான், இந்த தோல்விக்கான காரணம் என்ற சொல்ல முனைகின்றனர்.

புலிகளுக்கு வெளியிலான புறநிலையான காரணங்கள் தான் புலியின் அழிவுக்குரிய யுத்தமாக மாறியது என்றால், அதற்கு அகநிலையான காரணமாக புலிகளே இருந்துள்ளனர். இங்கு புலிகளின் அகநிலைக் காரணங்கள் தான், இந்த யுத்தத்தை அவர்களுக்கு எதிரான முழு அழிவுக்கும் இட்டுச்சென்றது. இதை மறுதலிக்கும் வண்ணம், புலிப்பினாமிகள் தம் வலதுசாரிய அறிவிலித்தனத்துடன் புலம்புகின்றனர்.

1. பல நாடுகளின் இராணுவ உதவியை பேரினவாத அரசு பெற்றதாலும், தமக்கு எதிராக உலகம் தளுவிய சதிகளாலும் தான், புலிகள் தோற்றனர் என்கின்றனர். இதுவா காரணம்!?

இந்த வாதம் தமது சொந்த வலதுசாரிய பாசிசத் தவறுகளை நியாயப்படுத்த வைக்கின்ற தர்க்கம். உலகில் எந்த விடுதலைப் போராட்டமும், உலகம் தளுவிய தாக்குதலை எதிர் கொண்டுதான் ஆகவேண்டும். இதை எதிர்கொள்ள முடியாதவர்கள், சரியான...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, May 16, 2009

தமிழனை ஏமாற்றி பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது.

புலி அரசியல் செத்துப் போகவில்லை. தமிழனை ஏமாற்றிப் பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது. புலித் தலைமைக்கு என்ன நடந்தது என்பது, எந்த நேரமும் ஒரு அரச செய்தியாக வெளிவரலாம். அது கைது அல்லது மரணம் அல்லது அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்பது, இதில் நிச்சயமான ஒன்று.

ஆனால் கடந்த 60 வருடமாக தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைத்த அரசியல் செத்துவிடவில்;லை. கடந்த 30 வருடமாக ஆயுதமேந்தி, தமிழ் மக்களை ஏமாற்ற அது போட்ட வேஷம் கலைந்துவிடவில்லை.

இந்த வேஷத்தை காப்பாற்ற, அது பாசிச சர்வாதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் ஏவியது. ஆயிரம் ஆயிரம் மக்களை, இதற்காக நரை வேட்டையாடியது. இரத்தமும் கண்ணீருமின்றி மக்கள் வாழவில்லை. தேசமோ விடியவில்லை. மக்களின் தேசியத்தை, அதன் ஆன்மாவை குழி தோண்டிப் புதைத்தனர்.

ஆனால் இதை அண்டி பலர் பிழைத்துக் கொண்டனர். கோடிகோடியாக சம்பாதித்துக் கொண்டனர். புலி முதல் புலியெதிர்ப்பு வரை இந்த
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 20, 2009

எமது போராட்டம் தமிழ் மக்களின் எதிரிக்கு எதிரானதே ஒழிய, புலிக்கு எதிரானதல்ல

இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். அது வர்க்க அடிப்படையில், அரசியல் ரீதியானது. நாம் எமது சொந்த வர்க்க தேசிய போராட்டத்தை நடத்தவிடாமல், புலிகள் எமக்கு தடைகளை ஏற்படுத்தினர், ஏற்படுத்துகின்றனர்.

இதற்குள் தான் எமது போராட்டமும், அரசியல் நிலைப்பாடுகளும் உள்ளடங்குகின்றது. இலங்கை மக்களின் பிரதான எதிரி அரசே ஒழிய, புலிகளல்ல. ஆனால் புலியல்லாத தரப்பில் எத்தனை பேர் இதை ஏற்றுக்கொள்கின்றனர்!? என்பது, இன்று அடிப்படையான அரசியல் கேள்வியாகியுள்ளது.

தமிழ்மக்களை விடுதலைப் புலிகள் கட்டிப்போட்டு நடத்திய அரசியலால், அதுவே தமிழ் மக்களின் பிரச்சனையாக பொதுவாகப் பார்க்கப்பட்டது. புலிகளுக்கு வெளியில் மாற்று அரசியல் தளம், அரசியல் ரீதியாக புலிகளால் முடக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக போராடியவர்கள் புலிகளை தமது முதன்மையான இலக்காக கொண்டது தவறல்ல.
.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, April 18, 2009

தமிழீழக் கனவு வெற்றுக் கானல் நீர் தான்

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில், அதை வலிந்து புலி அரசியல் வரவழைத்துக் கொண்டேயுள்ளது. இதைப் பயன்படுத்தி பிழைப்புவாத அரசியல் பொறுக்கிகளும், கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் தமிழீழக் கனவைக் கவ்விக்கொண்டு ஊரைக் கூட்டி ஊளையிடுகின்றன. இந்தக் கும்பல் தமிழ் சமூகத்தையே நடுவாற்றில் இறக்கிவிட்டு, வெள்ளத்தின் போக்கில் அடித்துச் செல்ல வைத்துள்ளனர். எது நடக்கும் எது நடக்காது என்று தெரியாத ஒரு சூனியத்தில் மக்கள் வாழ்வுக்காக தத்தளிக்கின்றனர்.

சொந்த அரசியல் வேலைத் திட்டம் எதையும் அடிப்படையாக கொள்ளாத புலிகளின் தன்னியல்பான இராணுவவாத நடத்தைகள், தமிழீழம் எமது தாகம் என்பதைத் தாண்டி எதையும் கொண்டிருப்பதில்லை. தமிழீழத்தை எப்படி, எந்த வழியில் சாதிக்க முடியும், என்ற நடைமுறை ரீதியான சாத்தியமான வேலைத்திட்டத்தை அவர்களால் முன்வைக்க முடியாது போயுள்ளது. மாறாக தன்னிச்சையான தன்னியல்புக்கு ஏற்ப, நிகழ்ச்சிகள் மீது எதிர்வினையாற்றுகின்றனர். உண்மையில் இதை பற்றி அவர்களுக்கே எதுவும் தெரிந்து இருப்பதில்லை.

இதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு...........
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 17, 2009

அரசியல் ரீதியாக தோற்ற புலிகள், இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?


ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொண்ட யுத்தம், இன்னமும் ஆயிரமாயிரம் இளைஞர்களை பலியிடத் தயாரான யுத்தம், பல பத்தாயிரம் மக்களை அழித்தொழித்துள்ளது. மக்கள் தமது வாழ்வை இழந்து, சொத்து சுகத்தை இழந்து அனாதையாகின்றனர். இதுவரை மக்களுக்கு புலிகள் எதையும் புதிதாக பெற்றுக்கொடுத்தது கிடையாது. இருந்ததை அழித்ததுக்கு அப்பால், எதையும் புலிகள் சாதிக்கவில்லை, சாதிக்கப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் புலிகள் எதை எமக்கு பெற்றுத் தந்தனர் என்று சுயவிசாரணை செய்தால், அவர்கள் இருந்ததை அழித்ததை தவிர, தம்மிடம் புடுங்கியதை தவிர வேறு எதுவும் இல்லை என்ற உண்மையைக் காண்பான். மக்களின் உழைப்பைச் சூறையாடி, ஒரு சில பத்தாயிரம் பேர் உழைப்பின்றி மக்களின் உழைப்பில் சொகுசாக வாழ்கின்றதை மக்கள் காண்பர்.

இந்த அவலமான துயரமான நிலையில், இந்த யுத்தம் சாதிக்கப் போவது எதுவுமில்லை. இன்று இந்த யுத்தம் தோல்வி கண்டுவரும் நிலையில், ஒரு இனத்தின் மொத்த அழிவும் நிதர்சனமாகியுள்ளது. புலிகள் ஒருபுறமும், மறுபக்கமாக புலியெதிர்ப்பு ஒநாய்க் கூட்டமும், மக்களை தமது எடுபிடிகளாக்கி, தாம் நினைத்த தமது மக்கள் விரோத வக்கிரங்களை தமிழ் மக்களின் .........
..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெறுவார்களா?

துரோகம் செய்யாது புலிகள் போராடி மடிந்தால், புலிகள் மீளவும் புத்துயிர்ப்பு பெற முடியாது. துரோகம் செய்தால், அரசுடன் சேர்ந்த கூலிக்குழுவாக நீடிப்பார்கள். இதற்கு வெளியில் முன்புபோல் அவர்கள் இருக்க முடியாது. இங்கு புலிகள் போராடி மடிந்தாலும், புலிகள் உருவாக்கிய வர்க்கம் தொடர்ந்து இருக்கும். ஆனால் அதன் பிரதிநிதியாக புலிகள் இருக்க முடியாது.

ஏன்? புலியின் அழிவை நாம் அரசியல் ரீதியாக புரிந்துகொண்ட விதம் தான், இதை எம்மால் உறுதியாகவும் தீர்மானகரமாகவும் கூறமுடிகின்றது. புலியின் அழிவை முன் கூட்டியே நாம் சொல்ல முடிந்தது என்பது, புலியின் அழிவை புரிந்து கொண்ட அரசியல் அடித்தளத்தின் மூலம் தான். அதன் வர்க்க அடித்தளத்தை மட்டுமல்ல, அந்த வர்க்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாட்டையும் அடிப்படையாக கொண்டு, இந்த அழிவை பற்றி நாம் முன் கூட்டியே எம் கருத்தை முன்வைக்க முடிந்தது.

புலி எப்படி அழிந்தனர் என்று பார்த்தால், மக்கள் தான் புலிகளை தோற்கடித்தனர். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு தா
............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, April 15, 2009

புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்!

முகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.

1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும்? புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன?

2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று? இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க?

3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்?

இவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்.............
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, April 14, 2009

அரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது


முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.

ஆனால் அது வர்க்க முரண்பாடல்ல. சொந்த வர்க்கத்தின் அதிருப்திகள் தான், புலியை தோற்கடிக்கும் முரண்பாடாகியது. இதனால் தான், உள்ளிருந்து புலி தோற்கடிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக புலிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகவில்லை. உள் (தனிமனித) முரண்பாடுகள் தான், புலிக்கு எதிரானதாக வெளிப்படுகின்றது. ஆனால் அது இன்று புலியின் அழிவாக மாறி நிற்கின்றது. தமிழ் மக்களின் எதிரி மூலம் அழிகின்றது.

இன்றைய இந்த நெருக்கடியில் பிரதான எதிரிக்கு எதிராக புலிகள் துரோகம் செய்யாது போராடினால், புலிகளின் இறுதி முடிவு என்பது அறுதியானதுதானதும், முடிவானதுமா...........
முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, April 13, 2009

நெருக்கடிக்கு உள்ளாகும் அரசியலும், அரசியல் பார்வைகளும் (பகுதி -1)

தமிழினத்தைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் திரிபுகளாக நெருக்கடியாக மாறுகின்றது. தொடர் நிகழ்சிகள், அவை மாறுகின்ற வேகம், அதையொட்டிய கருத்துகள் எல்லாம், இன்று நெருக்கடிக்குள்ளாகின்றது. எதிர்காலம் பற்றிய கேள்விகள் பல, முரண்பாடாகின்றது.

அரசியலற்ற எம் சமூகத்தில், தனிமனித முனைப்புகள் அகவயமான முடிவுக்கு இட்டுச் செல்லுகின்றது. அகவயமான, மானசீகமான விருப்பத்தை, சமூகத்தின் பொதுக்கருத்தாக கருதி முடிவுகளை எடுக்கின்றனர். இவை குறுகிய தன் அரசியல் எல்லைக்குள் முடங்கி, வெம்பி வெளிப்படுகின்றது. இதையொட்டிய பல்வேறு விடையங்கள் மீதான அரசியல் கேள்விகள், விவாதங்கள், அவதூறுகள் மேலான தத்துவார்த்த விவாதம் இது.

புலி-புலியெதிர்ப்பு அரசியல் அடித்தளத்தில் மக்களை கொல்லுவதன் மூலம், புலியை பாதுகாத்தல் - புலியை அழித்தல் என்ற நிகழ்ச்சி நிரல் அரசியல் நெருக்கடியாகவில்லை. புலி-புலியெதிர்ப்பு வெளிப்படையாக இல்லாத பொதுத்தளத்தில், அரசியல் நெருக்கடிகளை இது உருவாக்குகின்றது. பொதுவாக இது

1. புலிகளின் இறுதி முடிவு எப்படி அமையும்
2. புலியல்லாத சூழல் மீதா......
.முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, April 10, 2009

புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்?

இந்த அரசியல் கேள்வி, எமக்கு புலி முத்திரை குத்தி விலகிச் செல்லும் அரசியலாக வெளிப்படுகின்றது. இது இயங்கியலை புரிந்துகொள்ள முடியாத, அற்பத்தனமான இருப்புக்கான அரசியலாக மாறுகின்றது. எமக்கு புலி முத்திரை குத்துவது, உணர்ச்சிவசப்பட்ட ஒன்றாக இதை திரித்து புரட்டி அனைத்தும், இதை அரசியல் காழ்ப்புடன் அணுகுவதாகும்.

புலிகளை துரோகி என்ற சொல்லுக்குள் அடக்குவதும் கூட, ஒரு புலி அரசியல் தான். துரோகி, தியாகி என்ற சொற்களுக்குள் மொத்த அரசியலும் இயங்குவதில்லை. அரசியலில்லாத லும்பன்கள் தான், இதற்குள் இயங்குகின்றனர். புலிகளை துரோகி என்று ஒரு சொல்லுக்குள் மொட்டையாக அடக்கி, நாம் கருத்துச் சொல்ல முடியாது. அது இன்று உள்ளடகத்தில் புலிகளினதும், புலியெதிர்ப்பு அரசியலினதும் அடிப்படைக் கூறாகும்.

புலிகள் இன்று துரோகம் செய்தால், என்ன நடக்கும்? இதை நாம் ஆராய்வோம்.

1. புலித் தலைமை சரணடையாதும், துரோகத்தைச் செய்யாதும், மரணிக்கின்றனர். இதை எப்படி அரசியல் ரீதியாக நாம் மதிப்பிடுவது?
...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, April 5, 2009

யாழ் சமூக கட்டமைப்பின் சமூகவிளைவா, விடுதலைப் புலிகள்?

யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.

இதை நாங்கள் தெளிவாகவே மறுக்கின்றோம். இந்த முடிவை கூறுபவர்கள் அனைவரும், புலி பாசிச சூழலை எதிர்கொள்ள திராணியற்றவர்கள். ஒரு மாற்று அரசியல் வழியை மக்களுக்கு முன் வைக்கத் தவறியவர்கள் அல்லது அதில் தோற்றவர்கள். ஒரு அரசியல் வழியின்றி, தம் சொந்த அடையாளத்தையே இழந்தவர்கள்;. தமது இன்றைய இந்த நிலையை நியாயப்படுத்திக் கொள்ள, இந்த தர்க்கத்தை முன்வைக்கின்றனர். இதன் மூலம் தமது செயலற்ற தன்மையையும், கருத்தற்ற ஓடுகாலித்தனத்தையும் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் சாரம், யாழ் சமூகக் கட்டமைப்பின் தன்மையைத் தாண்டி, புலிக்கு மாற்றாக எதுவும் உருவாகியிருக்கவே முடியாது என்கின்றனர். இதனால் தான், தாம் சமூகத்தை மாற்ற எதுவும் செய்யமுடியாது இருக்கின்றோம் என்று கூறி, சமூகக் கடமையை நிராகரிக்கின்றனர். இதன் மூலம் கருத்துத்தளத்தில் தம் கருத்தையே கை விடுகின்றனர்.

இந்த தர்க்கம், இதன் சாரம், இதன்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, March 28, 2009

புலியைக் காப்பாற்றவும் புலியை அழிக்கவும், தமிழனை தமிழன் கொல்லுகின்றான்

புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.

இப்படி எமனாக நின்றே தமிழ்மக்களைக் கொல்ல பேரினவாதத்திடம், தமிழ்மக்களை பலி கொடுக்கின்றது புலி. இதில் இருந்து தப்பிச் செல்லமுனையும் மக்களையே, புலிகள் சுட்டுக் கொல்லுகின்றனர். கொடுமையிலும் கொடுமை, கொடூரத்திலும் கொடூரம். இன்று தமிழ் மக்களை பாதுகாக்கவும், குரல்கொடுக்கவும் யாரும் கிடையாது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, October 3, 2008

ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும்

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, புலியல்லாத பிரதேசத்தில் புலிக்கு நிகரான பாசிசம். எங்கும், எதற்கும் படுகொலை, கடத்தல், காணாமல் போதல், கைது, புலியென முத்திரை குத்தல், இழிவுபடுத்தல் என அனைத்தும், இந்த ஜனநாயகத்தில் அரங்கேறுகின்றது. இதுவே ஜனநாயகமாக, இந்த பாசிசம் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது.

முன்பு புலிகளின் பகுதியில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ முனைந்தவர்கள், புலியல்லாத பிரதேசத்தில் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் வாழமுனைந்தனர். ஆனால் இன்று, புலியல்லாத பிரதேசத்தில் சுதந்திரமாக வாழமுடியாது என்ற நிலை. அரசின் கூலிக் கும்பலாக எடுபிடிகளாக மட்டும் தான், யாரும் வாழமுடியும் என்ற நிலை. அரசுக்கு கைக்கூலியாக இருந்தல் தான், சுதந்திரம் என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதையும் சுதந்திரமாக பேசவும், சொல்லவும், செய்யவும் முடியாதளவுக்கு, பாசிசம் மனித சுதந்திரத்தை வேட்டையாடுகின்றது. இதையே தமிழ் மக்களின் ஜனநாயகம் என்கின்றனர். இதைத் தான் தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.

தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களையே விலங்கிட்டுள்ளது. கண்காணிப்பும், படுகொலை அரசியல் வெறியாட்டமும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 29, 2008

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது


புலிகள் எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுமிராண்டிகளாக, பண்பாடற்றவர்களாக உறுமுகின்றார்களோ, அந்தளவுக்கு தமிழ் இனத்தில் எலும்பு சிதிலங்கள் மட்டும் எஞ்சுவதை யாரும் தடுக்கமுடியாது. பேரினவாதம் மிகவும் பலமான நிலையில், தமிழ் இனத்தை புலிகளைக் கொண்டே அழிக்கின்ற எதார்த்தத்தை, ஒரு காலமும் தமிழ் இனம் தானாக எண்ணியிருக்கமாட்டது. பேரினவாதத்தின் சூழச்சிமிக்க அரசியல் நரித்தனத்துக்கு எதிராக, நியாயமான ஒரு போராட்டம் (அரசியல் மற்றும் இராணுவம்) அவசியமாக இருந்த போது கூட, அதை நியாயமான மக்களின் கோரிக்கைளால் தனிமைப்படுத்தி வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் ஆளுமை காட்டுமிராண்டிகளுக்கு எப்போதும் கிடையாது என்பதை தமிழினத்தின் சார்பாக மீண்டும் புலிகள் நிறுவிவருகின்றனர்.

புலிகள் இயக்கமே பதவி வெறியர்களாலும், கொள்ளையடிப்போராலும், சுத்துமாத்துகாரர்களும், ஒட்டுண்ணிகளாலும், பிழைப்புவாதிகளாலும் சூழப்பட்டுவிட்டது. அது இன்று ஒரு போராட்ட இயக்கமே அல்ல என்ற நிலைக்கு, படிப்படியாக தனக்குத் தானே நஞ்சிட்டு சீரழிந்து சிதைந்து வருகின்றது. இந்த சிதைவுகள் சமூகத்துக்கே நஞ்சாகின்றது. தியாகங்கள் எல்லாம் சிலரின் நலனுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகளை பயன்படுத்தி தாம் நன்றாக வாழமுடியும் என்று நம்புகின்ற பொறுக்கிகளின் கூட்டமே, புலியைச் சுற்றி இன்று.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, September 27, 2008

நிதர்சனம் டொட் கொம் நித்திரையில் கனவு காண்கின்றது

''ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!" என்று நிதர்சனம் டொட் கொம் அறை கூவுகின்றது. (இக் கட்டுரை முழுமையாக கீழ் உள்ளது.) எல்லாம் முடிந்த பின், முடித்து வைத்த பின், எதைத் தான் இனி தமிழ் இனம் பாதுக்காக்க முடியும். விமர்சனம் சுயவிமர்சனமின்றி, எதையும் குறைந்தபட்டசம் யாரும் மீட்க முடியாது. செத்துக் கொண்டிருக்கும் புலி தேசியத்தை விமர்சிக்காமல் விட்டுவிடுதால், அது உயிர் வாழ்ந்துவிடமா!?

உயிருடன் அணுயணுவாக செத்துக் கொண்டிருக்கும் புலியை விமர்சிப்பதற்கு இனி எதுவுமில்லை. அது தனது சவப்பெட்டிக்கே, தானே ஆணி அடித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்படி ஏன் இந்த நிலையை அடைந்தது என்பதை திரும்பிப் பார்ப்பது மட்டும் அவசிமாகின்றது..................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 9, 2008

பெரியவர்களையே தேசியத்தின் பெயரில் அடித்து உதைப்பதை எம் சமூகம் எண்ணிப் பார்த்திருக்குமா!?

வயது முதிர்ந்தவர்களை, பெரியவர்களை அடித்து உதைப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? புலித் தேசியத்தின் பெயரிலும், புலியின் குறுகிய நலனுக்காகவும், சமூகத்தால் கவுரவமாக மதிக்கப்பட்டவர்கள் தாக்கப்படுகின்றனர்.

அம்மா, அப்பா, பாட்டன், பாட்டி என அனைவரும் பகிரங்கமாக வெளிப்படையாகத் தாக்கப்படுகின்றனர். முன்பு இதை இரகசியமாகச் செய்ய, அவர்களை தம் வதைமுகாமுக்கு எடுத்துச் செல்வார்கள் புலிகள். தற்போது அவர்களின் வதைமுகாம்கள் நிரம்பி அங்கு இடமின்மையால், கண்ட கண்ட இடத்தில் பகிரங்கமாகவே அடித்து நொருக்குகின்றனர்.

இப்படித் தாக்குதலின் போது கால், கை முறிந்தவர்கள், எலும்பு உடைந்தவர்கள், அங்கவீனமானவர்கள், மரணமானவர்கள், அவமானத்தாலும் இயலாமையினாலும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையோ, எண்ணில் அடங்காது.

இதனால் முற்றாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம், மறுபக்கம் மனநோய்க்குள் முழுச் சமூகம் சேடமிழுக்கின்றது.

இதை செய்பவர்கள் அவர்களின் குழந்தைகளின் ஒத்த வயதுடைய, புலி காடையர் கும்பல்கள் தான். எந்த இலட்சியமுமற்ற, நோக்கமுமற்ற, பொறுக்கித்தின்னும் லும்பன் கும்பலாக வளர்ந்த வேட்டை நாய்கள் தான். அந்த வேட்டைக் கும்பலின் வக்கிரத்தை, அதன் இழிந்த நடத்தைகளையும் அனுபவரீதியாக காணாத, அனுபவிக்காத எந்த மக்களும் இன்று வன்னியில் கிடையாது.

சமூகமே அங்கு புலியைத் தூற்றுகின்றது. அடி உதையைக் கடந்து, எந்தப் பெண் தான் புலிகளைத் தூற்றவில்லை? 'நாசாமாப்போவாங்கள்", 'மண்ணுக்குள் போவாங்கள்" என்று, சாபமிடாத எந்தப் பெண் தான் அங்கு உண்டு! தம் குழந்தைகளை புலியிடம் பறிகொடுத்த தாய்மையும், குழந்தைகளின் பிணத்தை மீளத் தரும் புலிக்கு எதிராக, தூற்றிப் போடும் சாபங்களால், புலித் தேசியம் ஒருபுறம் செத்துக் கொண்டிருக்கின்றது. புலியின் கண்காணிப்பு, அடக்குமுறையையும் மீறி, புலியைக் காறி.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, July 24, 2008

பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி

எந்தப் பேரினவாத அரசு அன்று யூலை இனக்கலவரத்தை நடத்தியதோ, அந்த அரச ஆதரவாளர்களின் துணையின்றி புலம்பெயர் ஜனநாயகம் சற்றேனும் புலம்ப முடிவதில்லை. இன்று 25ம் ஆண்டு யூலைப் படுகொலையைப் பற்றி, அதே பேரினவாத அரச ஆதரவாளர்களுடன் கூடிப் புலம்புவது என்பது, இன்றைய அரச பாசிசத்தை நியாயப்படுத்துவது தான். 25 வருடங்களின் இவர்கள் உருவாக்கிய மனித அவலங்கள் அனைத்தையும் மூடிமறைத்தபடி, அதை புலியின் பெயரில் வாந்தியெடுக்கின்ற கும்பல்கள் எல்லாம் கூடி யூலை நினைவின் பெயரில் மாரடிக்கவுள்ளது.

25 வருடத்துக்கு முன் எதைப் பேரினவாதம் செய்தது என்பதைப் பற்றிப் புலம்புவதற்கு, இவர்களின் கூட்டாளிகள் அதே இனவாத அரசு தான். இப்படி அந்தப் பேரினவாத அரசின் பின் ஜனநாயகம் பேசுகின்ற கும்பலுடன் கூடி, அதைப்பற்றி கும்மாளம் அடிக்கவுள்ள ஒரு கூட்டம் தான், இந்தப் பாரிஸ் கூட்டம்.

இந்தக் கூட்டம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பளார் எம்முடன் தொடர்பு கொண்ட போது, நாம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக சில வேண்டுகோள் விடுத்தோம்.

1. தமிழ் மக்களுக்கு எதிரான புலி மற்றும் அரச பாசிட்டுக்களை எதிர்த்த, ஒரு கூட்ட அழைப்பை விடுக்கக் கோரினோம்.

3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்.

இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. இப்படி அரச ஆதரவு கும்பல் இன்றி, மக்களுக்காக தனித்துவமாக போராட மறுக்கின்ற புலம்பெயர் நடத்தைகளும் நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானது. பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில், அந்த மக்களை மீண்டும் மீண்டும் ஏறி மிதிக்கின்ற தொடர்ச்சியான வழமையான சடங்குத்தனமான முயற்சிகள் தான் இவை.
... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, June 22, 2008

மகிந்தாவின் மடியில் குந்தியபடி புலிப்பாசிசம் பற்றி பேசுபவர்கள்

இதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.

இப்படி கிழக்கு மக்களுக்கு மேல் ஒரு நரகலை அள்ளி தெளித்ததுக்கு அப்பால், அந்த மக்கள் அதை கழுவக் கூட முடியாத வகையில், பிள்ளையான் - மகிந்தவின் பாசிச கொடூரங்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புலி பாசிசக் கும்பல் ஒழிந்தால் சரி என்று கருதும் 'ஜனநாயக" கும்பல் பக்கப்பாட்டு பாட, ராஜேஸ் பாலாவோ இந்தப் பாசிசத்துக்கு ஆராத்தியெடு;த்தார். கிழக்கு மக்களின் அடிமைத்தனம் தான், கிழக்கின் விடுதலை என்கிறார். இப்படி மகிந்தவுக்கு ஏற்ப தளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி, இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.

எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, June 16, 2008

பாசிசத்தின் கூடாரம் தான் தேசம் நெற்

புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார்.

பாரிஸ் கூட்டத்தை திரித்தும், புரட்டியும், தேசம்நெற்றை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக விளம்பரப்படுத்த முனைந்தனர். இதை ஜனநாயகத்தின் பெயரில், அதன் ஜனநாயக விரோதத்தை இட்டுக்கட்டுவது கூட பாசிசம் தான்;. (இதை எழுதிய சுரேஸ் பினாமியா? அண்மையில் கள்ள கிரடிற்காட்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதற்காக, இதே சுரேஸ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தது பலர் அறிந்ததே. இதில் இவர் அறியா வண்ணம் பினாமியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி தேசநெற்றிலும் இவர் பினாமியா? என்ற சந்தேகம் உண்டு.)

கேள்வியே இது தான். தேசம்நெற்றை கண்டிப்பது, இதற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது, அதை பார்க்க வேண்டாம் என்று கோருவது கூட, ஒரு ஜனநாயக உரிமையா? இல்லையா?. இங்கு இதை மறுப்பது தான் பாசிசம்.

தேசத்துக்கு எதிராக ஏன் எதற்கு இவை கோரப்படுகின்றது என்பது தான், அதாவது மக்கள் நலனுடன் தொடர்புடையாத இல்லையா என்பது தான், இதன் நோக்கத்தை தீர்மானிக்கின்றது. ஆனால் தேசம்நெற் சதியாளர்கள், இதை மறுக்கும் ஜனநாயக உரிமையையே ஜனநாயகம் என்கின்றனர். இந்த உரிமையை மறுக்கும் பாசிசத்தை, ஜனநாயகம் என்றனர். இதைத்தான் தேசம்நெற் வளர்க்கின்றது. வெட்கக் கேடான மனித விரோத பாசிச காழ்ப்;புகளாகவே, அவற்றைக் கொட்டி தமது பாசிச அரிப்பைத் தீர்க்கின்றனர்.

தமது இந்த பாசிச காழ்ப்புகளை, முன்னைய இயக்க அடையாளத்தின் ஊடாக முத்திரை குத்துவதாக மாறியது. நாயைவிடக் கேவலமான பாசிசக் குலைப்பு. அவர்களின் அரசியலை வைத்து விவாதிக்க முடியாது, அவதூறுகள் மூலம் பினாற்றுவது தான், இவர்களின் மொத்த அரசியல் ஆகிவிட்டது. அவர்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளனரோ அதே அரசியலைத் தான், இந்த புதிய பாசிச 'ஜனநாயக" ஜாம்பவான்கள் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

சமுதாயத்தின் தேவையுடன் இயங்காத எவையும், சமூகத்துக்கு தேவையற்றவை. அவை சமுதாயத்துக்கு எதிரானவை. இவையோ சமுதாயத்துக்கு எதிராக நஞ்சிடுபவை தான். பொருளை உற்பத்தி செய்தாலும் சரி, கருத்தை உற்பத்தி செய்தாலும் சரி, அது சமுதாய நலனுக்கு எதிரானது என்றால், அவை இந்த சமூக அமைப்புக்கு தேவையற்றது.
.

Wednesday, June 11, 2008

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள்

"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.

'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது.

தமிழ் மக்களின் தேசிய உரிமையை மறுப்பதும், ஜனநாயக உரிமையை மறுப்பதும், இதற்குள் உள்ள அரசியல் சாரம். இது சாத்தியமல்ல என்கின்றனர். இவற்றை மறுத்து தீர்வு காணுதல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்கின்றனர். மக்களின் உரிமையை மறுப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள் என்கின்றனர்.

இப்படி இதற்குள் தான் அரசியல் வாதங்கள், தூற்றல்கள், படுகொலைகள் என அனைத்தும் அரங்கேறுகின்றது. இந்த 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகளின் பெயரில் தான், படுகொலைகள், கடத்தல்கள் முதல் யுத்தத்தில் பலியிடல் வரை அனைத்தும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இந்த அரசியலை ஆதரிக்கின்ற அனைவரும், இதன் மூலம் இழைக்கின்ற மொத்த குற்றங்களுக்கு உடந்தையானவர்கள் தான்.

இப்படி முடிவின்றி நீண்டகாலமாக இந்த அரசியல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தாக கூறிக்கொண்டு, மக்களுக்கு எதிரான 'தேசியத்தையும்" 'ஜனநாயகத்தையும்" ஆதரித்து அரங்கேற்றுகின்றனர். நாம் மட்டும்தான், இதற்கு வெளியில், இதற்கு எதிராக நீண்டகாலமாக, எதிர் வினையாற்றி வருகின்றோம்.
.