தமிழ் அரங்கம்
Showing posts with label புலி. Show all posts
Showing posts with label புலி. Show all posts
Sunday, May 17, 2009
Saturday, May 16, 2009
தமிழனை ஏமாற்றி பிழைக்கும் புதுக்கதையும், புதுப் படமும் தயாராகின்றது.
Labels:
கோடிகோடி,
புலி,
புலியெதிர்ப்பு
Monday, April 20, 2009
Saturday, April 18, 2009
Friday, April 17, 2009
Wednesday, April 15, 2009
Tuesday, April 14, 2009
அரசுடனான ஒரு துரோகத்துக்கு வெளியில் புலிகள் நீடிக்கமுடியாது
முதல் பகுதியில் புலி தன் சொந்த வர்க்கத்திடம் இன்னமும் அம்பலமாகாது இருப்பதையும், அதனால் அது இன்னமும் தன் வர்க்கத்தின் துணையுடன் நீடிக்க முனைகின்றது என்பதைப் பார்த்தோம். புலிகள் இன்று மக்களின் எதிரியிடம் தோற்கக் காரணமாக இருப்பது, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான்.
ஆனால் அது வர்க்க முரண்பாடல்ல. சொந்த வர்க்கத்தின் அதிருப்திகள் தான், புலியை தோற்கடிக்கும் முரண்பாடாகியது. இதனால் தான், உள்ளிருந்து புலி தோற்கடிக்கப்படவில்லை. அரசியல் ரீதியாக புலிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகவில்லை. உள் (தனிமனித) முரண்பாடுகள் தான், புலிக்கு எதிரானதாக வெளிப்படுகின்றது. ஆனால் அது இன்று புலியின் அழிவாக மாறி நிற்கின்றது. தமிழ் மக்களின் எதிரி மூலம் அழிகின்றது.
இன்றைய இந்த நெருக்கடியில் பிரதான எதிரிக்கு எதிராக புலிகள் துரோகம் செய்யாது போராடினால், புலிகளின் இறுதி முடிவு என்பது அறுதியானதுதானதும், முடிவானதுமா...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Labels:
புலி
Monday, April 13, 2009
Friday, April 10, 2009
Sunday, April 5, 2009
Saturday, March 28, 2009
புலியைக் காப்பாற்றவும் புலியை அழிக்கவும், தமிழனை தமிழன் கொல்லுகின்றான்
புலிகளின் துணையுடன் தான், இன்றும் ஏன் நாளையும் கூட வன்னியில் மக்கள் இறப்பார்கள். இன்று தமிழ் மக்களின் எமன் புலி. புலியிருக்கும் வரை தமிழ் மக்களின் இறப்பு மட்டும்தான், புலி தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அரசியலாக புலியிடம் எஞ்சியுள்ளது.
இப்படி எமனாக நின்றே தமிழ்மக்களைக் கொல்ல பேரினவாதத்திடம், தமிழ்மக்களை பலி கொடுக்கின்றது புலி. இதில் இருந்து தப்பிச் செல்லமுனையும் மக்களையே, புலிகள் சுட்டுக் கொல்லுகின்றனர். கொடுமையிலும் கொடுமை, கொடூரத்திலும் கொடூரம். இன்று தமிழ் மக்களை பாதுகாக்கவும், குரல்கொடுக்கவும் யாரும் கிடையாது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
இப்படி எமனாக நின்றே தமிழ்மக்களைக் கொல்ல பேரினவாதத்திடம், தமிழ்மக்களை பலி கொடுக்கின்றது புலி. இதில் இருந்து தப்பிச் செல்லமுனையும் மக்களையே, புலிகள் சுட்டுக் கொல்லுகின்றனர். கொடுமையிலும் கொடுமை, கொடூரத்திலும் கொடூரம். இன்று தமிழ் மக்களை பாதுகாக்கவும், குரல்கொடுக்கவும் யாரும் கிடையாது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Friday, October 3, 2008
ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும்
Labels:
புலி,
புலியெதிர்ப்பு,
பேரினவாத,
ஜனநாயகம்
Monday, September 29, 2008
Saturday, September 27, 2008
Tuesday, September 9, 2008
பெரியவர்களையே தேசியத்தின் பெயரில் அடித்து உதைப்பதை எம் சமூகம் எண்ணிப் பார்த்திருக்குமா!?
Labels:
புலி,
புலித் தேசியம்
Thursday, July 24, 2008
பிரான்சில் பேரினவாத அரச ஆதரவுக் கும்பலுடன் கூடிய, 25ம் ஆண்டு யூலைப் படுகொலை நினைவு நிகழ்ச்சி
3. 83 யூலைப் படுகொலையைப் பற்றி புலி மற்றும் அரச ஆதரவுக் குழுக்களின் நினைவு கூரலுக்கு மாறாக, மக்களுக்கான நினைவு கூரலூடாக இதை நீங்கள் எப்படி முன்னெடுக்கின்றீர்கள் என்பதையும் தெளிவாக முன்வைக்குமாறு கோரினோம்.
இதை அவர்கள் எழுத்தில் எம்மிடம் கோரியதால், நாம் அதை எழுத்தில் முன் வைத்தோம். ஆனால் இதன் பின் எந்த பதிலுமே எமக்கு அளிக்கப்படாத ஒரு நிலையில், அரச ஆதரவு அணிகளை திருப்தி செய்யும் வகையில் தான் கூட்ட அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. இப்படி அரச ஆதரவு கும்பல் இன்றி, மக்களுக்காக தனித்துவமாக போராட மறுக்கின்ற புலம்பெயர் நடத்தைகளும் நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிரானது. பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில், அந்த மக்களை மீண்டும் மீண்டும் ஏறி மிதிக்கின்ற தொடர்ச்சியான வழமையான சடங்குத்தனமான முயற்சிகள் தான் இவை. ... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Labels:
அரச ஆதரவு,
புலி,
யூலைப் படுகொலை
Sunday, June 22, 2008
மகிந்தாவின் மடியில் குந்தியபடி புலிப்பாசிசம் பற்றி பேசுபவர்கள்
இதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.
இப்படி கிழக்கு மக்களுக்கு மேல் ஒரு நரகலை அள்ளி தெளித்ததுக்கு அப்பால், அந்த மக்கள் அதை கழுவக் கூட முடியாத வகையில், பிள்ளையான் - மகிந்தவின் பாசிச கொடூரங்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புலி பாசிசக் கும்பல் ஒழிந்தால் சரி என்று கருதும் 'ஜனநாயக" கும்பல் பக்கப்பாட்டு பாட, ராஜேஸ் பாலாவோ இந்தப் பாசிசத்துக்கு ஆராத்தியெடு;த்தார். கிழக்கு மக்களின் அடிமைத்தனம் தான், கிழக்கின் விடுதலை என்கிறார். இப்படி மகிந்தவுக்கு ஏற்ப தளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி, இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.
எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
இப்படி கிழக்கு மக்களுக்கு மேல் ஒரு நரகலை அள்ளி தெளித்ததுக்கு அப்பால், அந்த மக்கள் அதை கழுவக் கூட முடியாத வகையில், பிள்ளையான் - மகிந்தவின் பாசிச கொடூரங்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புலி பாசிசக் கும்பல் ஒழிந்தால் சரி என்று கருதும் 'ஜனநாயக" கும்பல் பக்கப்பாட்டு பாட, ராஜேஸ் பாலாவோ இந்தப் பாசிசத்துக்கு ஆராத்தியெடு;த்தார். கிழக்கு மக்களின் அடிமைத்தனம் தான், கிழக்கின் விடுதலை என்கிறார். இப்படி மகிந்தவுக்கு ஏற்ப தளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி, இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.
எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Labels:
கூலிக் கும்பல்,
கோமாளி,
புலி,
விடிவெள்ளி
Monday, June 16, 2008
பாசிசத்தின் கூடாரம் தான் தேசம் நெற்
புலி – அரச ஆதரவு பாசிட்டுகளும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளும், தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு கொசிக்கும் இடம் தான் தேசம் நெற். இதைத் தவிர இதனிடம் வேறு எந்த சமுதாய நோக்கமோ, சமூக விழுமியங்களுமோ கிடையாது. இதை வைத்து தேசம் நெற் ஆசிரியர், தொழில் என்ற பெயரில் வியபா(பச்சா)ரம் செய்கின்றார். 'தொழில் நேர்மை" என்ற பெயரில், சமூக அவலத்தை தொழில் மூலதனமாக்கும் ஒரு பொறுக்கியாக தேசம்நெற் ஊடாக உலா வருகின்றார்.
பாரிஸ் கூட்டத்தை திரித்தும், புரட்டியும், தேசம்நெற்றை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக விளம்பரப்படுத்த முனைந்தனர். இதை ஜனநாயகத்தின் பெயரில், அதன் ஜனநாயக விரோதத்தை இட்டுக்கட்டுவது கூட பாசிசம் தான்;. (இதை எழுதிய சுரேஸ் பினாமியா? அண்மையில் கள்ள கிரடிற்காட்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதற்காக, இதே சுரேஸ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தது பலர் அறிந்ததே. இதில் இவர் அறியா வண்ணம் பினாமியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்படி தேசநெற்றிலும் இவர் பினாமியா? என்ற சந்தேகம் உண்டு.)
கேள்வியே இது தான். தேசம்நெற்றை கண்டிப்பது, இதற்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது, அதை பார்க்க வேண்டாம் என்று கோருவது கூட, ஒரு ஜனநாயக உரிமையா? இல்லையா?. இங்கு இதை மறுப்பது தான் பாசிசம்.
தேசத்துக்கு எதிராக ஏன் எதற்கு இவை கோரப்படுகின்றது என்பது தான், அதாவது மக்கள் நலனுடன் தொடர்புடையாத இல்லையா என்பது தான், இதன் நோக்கத்தை தீர்மானிக்கின்றது. ஆனால் தேசம்நெற் சதியாளர்கள், இதை மறுக்கும் ஜனநாயக உரிமையையே ஜனநாயகம் என்கின்றனர். இந்த உரிமையை மறுக்கும் பாசிசத்தை, ஜனநாயகம் என்றனர். இதைத்தான் தேசம்நெற் வளர்க்கின்றது. வெட்கக் கேடான மனித விரோத பாசிச காழ்ப்;புகளாகவே, அவற்றைக் கொட்டி தமது பாசிச அரிப்பைத் தீர்க்கின்றனர்.
தமது இந்த பாசிச காழ்ப்புகளை, முன்னைய இயக்க அடையாளத்தின் ஊடாக முத்திரை குத்துவதாக மாறியது. நாயைவிடக் கேவலமான பாசிசக் குலைப்பு. அவர்களின் அரசியலை வைத்து விவாதிக்க முடியாது, அவதூறுகள் மூலம் பினாற்றுவது தான், இவர்களின் மொத்த அரசியல் ஆகிவிட்டது. அவர்கள் என்ன அரசியலைக் கொண்டுள்ளனரோ அதே அரசியலைத் தான், இந்த புதிய பாசிச 'ஜனநாயக" ஜாம்பவான்கள் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.
சமுதாயத்தின் தேவையுடன் இயங்காத எவையும், சமூகத்துக்கு தேவையற்றவை. அவை சமுதாயத்துக்கு எதிரானவை. இவையோ சமுதாயத்துக்கு எதிராக நஞ்சிடுபவை தான். பொருளை உற்பத்தி செய்தாலும் சரி, கருத்தை உற்பத்தி செய்தாலும் சரி, அது சமுதாய நலனுக்கு எதிரானது என்றால், அவை இந்த சமூக அமைப்புக்கு தேவையற்றது.
.
Labels:
அரசியல்,
தேசம் நெற்,
பாசிச,
புலி
Wednesday, June 11, 2008
'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள்
"நடைமுறைச் சாத்தியமான" ஒன்றைக் கோருகின்ற அரசியல் நியாயவாதங்கள் அடிக்கடி பலராலும் முன்வைக்கப்படுகின்றது. தமது எதிர்வாதங்களின் போதும், புலி மற்றும் புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்து, இவை வைக்கப்படுகின்றது.
'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது.
'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்று புலிகள், புலியை ஆதரிக்கக் கோருகின்றனர். தமிழீழத்தை அடைதலே சாத்தியமான ஒரே தீர்வு என்கின்றனர். புலியெதிர்ப்போ அரசை ஆதரிப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" 'ஜனநாயக" தீர்வு என்கின்றனர். அதாவது புலியை ஒழித்தல் தான் சாத்தியமான தீர்வு என்கின்றனர். இவர்கள் இப்படிக் கோருவது இதுவல்ல என்று, மாற்றை யாரும் இதற்கு எதிராக வைக்க முடியாது.
தமிழ் மக்களின் தேசிய உரிமையை மறுப்பதும், ஜனநாயக உரிமையை மறுப்பதும், இதற்குள் உள்ள அரசியல் சாரம். இது சாத்தியமல்ல என்கின்றனர். இவற்றை மறுத்து தீர்வு காணுதல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வு என்கின்றனர். மக்களின் உரிமையை மறுப்பது தான் 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகள் என்கின்றனர்.
இப்படி இதற்குள் தான் அரசியல் வாதங்கள், தூற்றல்கள், படுகொலைகள் என அனைத்தும் அரங்கேறுகின்றது. இந்த 'நடைமுறைச் சாத்தியமான" தீர்வுகளின் பெயரில் தான், படுகொலைகள், கடத்தல்கள் முதல் யுத்தத்தில் பலியிடல் வரை அனைத்தும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இந்த அரசியலை ஆதரிக்கின்ற அனைவரும், இதன் மூலம் இழைக்கின்ற மொத்த குற்றங்களுக்கு உடந்தையானவர்கள் தான்.
இப்படி முடிவின்றி நீண்டகாலமாக இந்த அரசியல் தான் 'நடைமுறைச் சாத்தியமான" தாக கூறிக்கொண்டு, மக்களுக்கு எதிரான 'தேசியத்தையும்" 'ஜனநாயகத்தையும்" ஆதரித்து அரங்கேற்றுகின்றனர். நாம் மட்டும்தான், இதற்கு வெளியில், இதற்கு எதிராக நீண்டகாலமாக, எதிர் வினையாற்றி வருகின்றோம்.
.
Labels:
தீர்வு,
புலி,
புலியெதிர்ப்பு
Subscribe to:
Posts (Atom)