தமிழ் அரங்கம்

Saturday, November 12, 2005

மதத்துக்கு எதிராக

எப்படிப் போராட வேண்டும்

லெனின் "... நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். இது அனைத்துப் பொருள்முதல் வாதத்தின், ஆகவே மார்க்சியத்தின் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள் முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும்; அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள் முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான – சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது; அத்தகைய போதனையாக அதைச் சுருக்கிவிடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.... விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான... மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார்
முதலாளித்துவ வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே; மதம் ஓழிக; நாத்திகம் நீடூழி வாழ்க; நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்லளூ இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய, கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லைளூ அவற்றைப் பொருள் முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை, இன்று மதத்தின் மிக ஆழமான வேர், பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக ரீதியில் கீழே அழுத்தப்பட்டுக் கிடக்கும் நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் தான்ளூ முதலாளித்துவம் யுத்தங்கள், பூகம்பங்கள், இதரவைகளைப் போன்ற அசாதாரணமான சம்பவங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கடுமையைக் கொண்ட மிகவும் அதிகமான அளவுக்கு மோசமான துன்பம், மிகவும் அதிகமான அளவுக்குக் காட்டுமிராணடித் தனமான சித்திரவதையைச் சாதாரணமான உழைக்கின்ற மக்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஏற்படுத்துகிறது. 'அச்சம் கடவுள்களைப் படைத்தது' மூலதனத்தின் குருட்டுச் சக்தியை – பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது – பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் 'தீடிரென்ற', 'எதிர்பாராதவிதமான', 'தற்செயலான' அழிவை நாசத்தை, ஏழையாகவும் பாப்பராகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதை, பாட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகின்றது. இது தான் நவீன மதத்தின் வேர்;... முதலாளித்துவத்தின் குருட்டுத் தனமான அழிவுச் சக்திகளின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதனத்தின் ஆதிக்கத்தைன் எல்லா வடிவங்களையும் எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வுபூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்ற வரை எந்தக் கல்வி புகட்டும் புத்தகமும் அவர்களுடைய மனங்களிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது...

ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதி, அதாவது மதத்தின் விரோதியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞான ரீதியான, ஒருபோதும் மாற்றம்மடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்" என்றார்.

இங்கு ஒரு விடையத்தின் இரண்டு பக்கங்ளையும், அதாவது மதத்தை எதிர்க்காது அதை அப்படியே பாதுகாத்தல் என்ற வர்க்கப் போராட்டத்தின் பின் மதத்தை ஒழித்தல் அல்லது மதத்தை முதலில் ஒழித்த பின் சமூக இயக்கம் என்ற இரண்டு பிற்போக்கு தத்துவக் கூறுகளை எதிர்த்து எப்படிப் போராட வேண்டியுள்ளது என்பதை லெனின் தெளிவாக மதம் சார்ந்து எடுத்துக் காட்டுகின்றார்.

இன்றைய சமூக எதார்த்ததில்

எதைத் தான் நான் செய்ய முனைகின்றேன். இது எனது சுயபுராணமோ விளம்பரமோ அல்ல


இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டிய ஒரு எதார்த்த சூழல் அவசியமாகி விடுகின்றது. நான் வைக்கும் கருத்துகள் மீதும், கட்டுரை வடிவங்கள் மீது, எனது போராட்ட நடைமுறைகள் மீது சிலர் அபிராயங்களை வைக்கின்றனர். இதில் சில விமர்சனங்களாகவும்;, சில என்னை ஒத்த முன்மாதிரிகளுடன் செயல்பட முனைவதாக பலவிதமான கருத்துகள் முன்வைக்கின்றனர். இந்த நிலையில் நான் சிலவற்றை உங்களுடன் நேரடியாக பேசியேயாக வேண்டியுள்ளது.

உதாரணமாக தமிழ்மணம் விவாதத் தளத்தில் ஜனநாயகம் "அறிவைப் பயனுள்ள முறைமைகளில் பயன்படுத்துதல் அவசிமானதால் 'தமிழ் அரங்க' ஆசிரியர் இரயாகரன் கூட தமிழ்மணத்தைத் தவிர்க்க முடியாத தளமாகக் கண்டு இங்கும் பதிவிட வந்துள்ளார். ஆதலால் பலரைப் படிக்கத் தூண்டும் ஒரு தளத்தை எப்படிதான் வளர்த்தெடுக்கிறது? இதுகுறித்துச் சிந்திக்காதவர்கள், ப்புளக்கரை தமிழ்மணத்தைவிட்டு வேறெங்கோ பதிவுகளிட ஆலோசிப்பது அறிவார்ந்த செயற்பாடாகத் தெரியவில்லை. நாம் சமூகமாகக் காரிமாற்றப் போகிறோமா? அப்போ வாருங்கள்!" என்று ஜனநாயகம் விவாதத்தளம் கூறுகின்றது. இது போன்று பலர் வேறுபட்ட கருத்துகளுடன் தூண்டில் விவாதத் தளம், மயூரன் விவாதத் தளம்... இப்படி பல.

மற்றொரு தரப்பினர் எனது கட்டுரைகள் பொரிதாக இருக்கின்றன என்கின்றனர். சிறிய கட்டுரையாக விடையத்தை சுருக்கிச் சொல்லவும் கோருகின்றனர். வேறு சிலர் கட்டுரைகள் விளங்கவே முடியாதுள்ளதாக கூறுகின்றனர். மற்றறொரு பகுதியினர் பரந்துபட்ட மக்களுக்கு எற்றவகையில் எழுதக் கோருகின்றனர். இப்படி பல கருத்துகள், விமாசனங்கள் என்னை நோக்கி முன்வைக்கப்படுகின்றது. இவற்றைக் கடந்து என்னை தூசணத்தால் புணர்ந்து எழுதுவதும், தூற்றுவதும், வதந்திகளை புனைந்து புணர்ந்து பரப்புவதும் மற்றொரு தரப்பாரின் அரசியலாகவுள்ளது.

பொதுவாக ஒருபுறம் கட்டுரையின் வடிவங்கள் மீதான விமர்சனங்கள் மறுபுறம் என்னை முன்மதிரியாக தேர்ந்தெடுக்கும் போக்கு குறித்து, நான் உங்களுடன் பேசியேயாக வேண்டியுள்ளது. இன்றைய சமூக எதார்த்தம் சார்ந்த சூழலில் நான் தனித்து போராடுகின்ற ஒருநிலையில், தனிமைப்பட்டுள்ளேன். சமூகம் சார்ந்த அறிவின் பின்புலம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எங்கும் நுனிப்புல் மேய்கின்ற சமூக போக்கில், நான் தனித்து நடத்தும் போராட்டம் மிகக் கடினமானதாகவே உள்ளது, கடுமையானதாக மாறிவருகின்றது. உளவியல் ரீதியாக நான் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்டு, உண்மைக்காகவும் மனித விடுதலைக்காக சளையாது போராடவது என்பதைக் கூட ஒரு அரசியல் கலையாக நான் வளர்த்துள்ளேன்.
யாருடனும் கருத்துகளைப் பகிரமுடியாத தனிமைப்படுத்தப்பட்ட எனது கருத்த சார்ந்த விவாத உணர்வையே, கடுமையாக நெருடுகின்ற ஒன்றாகவே சமூக எதார்த்தம் என்முன் உள்ளது.

இந்த நிலையில் எனது கருத்தை நான் சமூகம் முன்கொண்டு வருவதே, மரண தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. சாதரணமாக மற்றவர்கள் போல் நான் சுதந்திரமாக வீதிகளில் இயல்பாக நடமாடமுடியாது ஒருநிலை. அதாவது எச்சரிக்கை உணர்வின்றி நாம் சுதந்திரமாக நடமடமுடியாத ஒருநிலையில் வாழ்கின்றேன். வீட்டில் கூட எச்சரிக்கை உணர்வுவின்றி சுதந்திரமாக இருக்க முடியாதநிலை. கொலையாளிகள் எந்த ரூபத்திலும் எப்போதும் எமானாக காட்சியளிக்க கூடிய வகையில், வக்கிரம் பிடித்த வகையில் அலைகின்றனர். வீட்டில் யன்னலுக்கு அருகில் இருப்பதற்கு கூட, எச்சரிக்கை உணர்வுகள் இன்றி, நான் உயிர் வாழ்ந்துவிடவில்லை. வீதியில் நிற்கும் போது, நடமாடும் போது கூட பின்னால் யார் நடமாடுகின்றனர் என்ற சுய உணர்வுவின்றி, நான் உயிர் வாழ முடியாதுள்ளது.
வெளியில் உணவு உண்ணும் போதும் கூட, அதில் நஞ்சு கலக்கப்பட்டுவிடும் என்ற எச்சரிக்கை உணர்வின்றி நான் உயிர்வாழ முடியாத ஒரு நிலை. கொலையாளிகள் எமன் கோலத்தில் எப்படியும் வருவார்கள் என்பதையே, எமது சமூக எதார்த்தம் சார்ந்த அனுபவம் காட்டுகின்றது. இது கடந்தகாலத்தின் எனது சொந்த அனுபவம் கூட. கடுமையான நெருக்கடிக்குரிய ஒரு புறச் சூழலில், இயல்பு தன்மையைக் கடந்த ஒரு போராட்டத்தின் பின்பே எனது எழுத்துகள் வெளிவருகின்றது. இதைக் கூட, யாரும் இன்று புரிந்துகொண்டது கிடையாது.
நான் அன்றாடம் பயணங்களின் போதே பெருமளவில் நூல்களை வாசிப்பது வழக்கம்.
பயணுத்துக்காக ஒரு புகையிரத நிலையத்தில் புகையிரத்துக்காக காத்து நிற்கும் போது கூட, பாதுகாப்பான ஒரு நிலையில் நின்றுதான் நூலை வாசிப்பது வழக்கம். புகையிரதத்தில் தள்ளிக் கொலை செய்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுவின்றி, நான் வாழ முடியாத அவலம். இதுவே அன்றாட மனநிலை கூட. கிரகித்தலுக்குரிய ஒரு அமைதியான சூழல் எப்போதும் கடுமையாகவே பாதிக்கப்படுகின்றது.

இது என் சார்ந்த பொதுச் சூழல். இந்த ஒரு நிலையில் தான், சமூகத்தை விடுதலைக்காக அதன் உண்மைக்காக போராடவேண்டிய நிலையில் உள்ளேன். ஆனால் நான் காணும் சமூகத்தில் சமூக அவலங்களை பகட்டுத்தனத்தால் மூலமிடப்படுகின்றது. ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளல் என்பது, நுனிப்புல் மேய்வது போல் மேய்ந்து தெரிந்து கொள்ளமுடியாது. இந்த நுனிப்புல் மேய்தலே அறிவாகிவிட்ட ஒரு நிலையில், தமிழ் சமூகத்தின் புத்திஜீவிகளையே இயல்பாக இல்லாதாக்கி வருகின்றது.

சமூகத்தில் பொதுவாக கொஞ்சம் விடையம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளும் இன்றைய இலக்கிய மற்றும் அரசியல் தளத்தில் கூட, இதுவே நிலைமை. இவர்களின் சமூக அறிவை எடுத்து ஆராய்ந்தால், உள்ளடக்க ரீதியாக வெற்றுக் கோம்பைகளே என்பதை தெரிந்து கொள்ளமுடியும்;. அந்தளவுக்கு அவர்களின் சமூக அறிவின்மை மூடிமறைக்கப்பட்டுள்ளது.

பொதுவான சமூகத்தின் பலவீனமான பொது அறிவு மந்த புத்தி கொண்டதாக இருப்பதால் தான், இவர்கள் அவர்கள் முன் தங்களை தாங்கள் அறிவளிகளாக காட்டிக் கொண்டு நடிக்கமுடிகின்றது அவ்வளவு. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சமூகக் கூறுகளை நெருங்கி அனுகமுடியாத வகையில், இவர்களின் வீம்பு (வம்பு) பேச்சுகள் தான் அனைத்தையும் மேவி நிற்கின்றன. இன்று பொதுவாக வாசிப்பு திறனை முற்றாகவே எமது சமூகம் இழந்து நிற்கின்றது. குறிப்பாக இவர்கள் வசிப்பது என்வென்று தேடினால், குளுகுளுப்பை எற்படுத்தும் இந்திய சந்தையை நிரப்பும் கழிசடைக் குப்பகைளே. சந்தையை மையமாக கொண்டு மக்களின் சிந்தனையை சீராழிவாக்கி, அதில் காசு பண்ணும் இந்த சமூக விரோத வக்கிரங்களையே இவர்கள் விரும்பிப் படிக்கின்றனர். இதையே தான், தாம் அறிவாளியாக சமூகத்துக்கு காட்டிக் கொள்ளும் புத்திஜீவிகளும் கூட விரும்பிப் படிக்கின்றனர். இதற்கு வெளியில் எமது தமிழ் மீடியாக்கள் பரப்பும் பொய்யையும் புரட்டையும், அப்படியே விமர்சனமின்றி சமூகம் உள்வாங்குகின்றனர். இதற்கு எற்ப சமூகத்தின் அறிவின் மட்டத்தையே நலமடித்துள்ளனர், நலமடிக்கின்றனர். இது உண்மையில் தனிநபர் புகழ்பாடும், சொந்த பினாமிய பிழைப்பைச் சார்ந்து வழங்கப்படும், மலிவான வக்கிரமான மனிதவிரோத சிந்தனைக் கொத்துக்களே. இதுதான் இன்றைய எமது தமிழ் சமூகத்தின் அறிவின் உயர்ந்தபட்ச எல்லையாகும். அதை உதாரணமாகவும் சிறப்பாக புரிந்தகொள்வோமாயின், அனைத்தையும் துரோகி தியாகி என்ற வார்த்தைக்குள் அடக்கிவிடுவார்கள்.

சமூக அறிவின் மட்டம் தொடர்ச்சியாகவும், மிக வேகமாகவும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. விவாதங்கள், விவாதத் தளங்கள் எங்கும் இதே கதிதான். சமூக நேசிப்புள்ள எழுத்துகள் அறவே கிடையவே கிடையாது. சமூகத்தை புரிந்துகொள்ளும் முயற்சிகள் முற்றாகவே சிறுமைப் படுத்தப்படுகின்றது. சமூகத்தின் உயிர்துடிப்புள்ள ஆற்றல் உள்ள புரட்சிகர சமூக அறிவு கிடையாது. நலமடிக்கப்பட்ட அறிவாக, மலட்டுத்தனம் கொண்டு கணப்படுகின்றது. இதற்கு இசைவான வகையில், லும்பன்தனமான மூடர்களின் வன்முறையிலான காட்டுமிராண்டி சமூகமே கட்டமைகப்படுகின்றது. எமது சமூகம் ஆதிகத்தில் உள்ள பாசிசத்தின் சமூக இருப்பில் இருந்து, இது மேலும் ஆழமாக சிதைந்து நற்றமெடுக்கின்றது.

இந்த நிலையில் தான் சமூகம் சார்ந்த எனது எழுத்துகள், மிகவும் பின்தங்கிய எமது சமூக அறிவில் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு நிலைக்குள் சமூகம் தாழ்ந்து கிடக்கின்றது. இது என் எழுத்துக்களை மட்டுமல்ல, சமூகம் சார்ந்த உலகளவிய விடையங்களைக் கூட புரிந்து கொள்ளமுடியாத நிலைக்கு தாழ்ந்து கிடக்கின்றது. இன்று ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்க வேண்டிய நிலைக்கு, இதுவே காரணமாகின்றது. இல்லாதுபோனால் அதை மொட்டையாக குறுக்கி, துரோகி தியாகி என்று கூறுவது போல் கருத்தையே திரித்து தமது அறிவின்மைக்கு எற்ப பயன்படுத்திவிடுவது அன்றாடம் நிகழ்கின்றது. அறிவு சார்ந்த உண்மையை, தனித்துவமாகவே முரணற்ற வகையில் மீண்டும் சமூகத்திடம் எடுத்துச்செல்ல வேண்டியுள்ளது.

அடுத்து சமூகத்தின் பினள்தங்கிய அறிவினால், ஒரு விடையத்தைப் பற்றி விரிவாக விளக்க வேண்டியநிலை உருவாகின்றது. மறுபக்கத்தில் வசிப்புத் திறனையே இழந்து சீராழிந்து வரும் சமூகத்தில், விரிவான கட்டுரை என்பது விலகியோடவும் வைக்கின்றது. இதனால் எழுதுவதை நிறுத்திவிட முடியுமா! இன்று நூல்கள் சமூகத்தில் என்ன பாத்திரத்தை வகின்றனவோ, அதேயொத்த பத்திரத்தையே எனது எழுத்துகள் அடிப்படையாக கொண்டது. ஒரு செய்தி பத்திரிகைக்குரிய செய்திகள் அல்ல எனது கட்டுரைகள். ஒரு நூலில் சொல்லும் விடையத்தை சிறிய பகுதியில் கூறிவிடமுடியாது. இந்த அடிப்படையில் எனது கட்டுரைகள், பெருமளவில் தத்துவ ஆழம் செறிந்த வகையில் உள்ளது. 80, 100 பக்கத்தில் பலரும் புரியும் வகையில் விரிவாக எழுதவேண்டிய ஒரு விடையத்தை, நான் சுருக்கி எழுதுகின்றேன். இதனால் கட்டுரை ஆழம் செறிந்தாக உள்ள அதேநேரம், எல்லோரும் புரிந்து கொள்வதில் சிரமங்கள் எற்படுகின்றது. இதற்கு சமூகத்தின் அறிவில் எற்பட்டு வரும் வீழ்ச்சியும் ஒரு காரணம். தொலைக்காட்சியை பார்த்து அறிவை வளர்க்கும் குருட்டுச் சமூகம் அப்படித்தான் இருக்கும். வாசிப்பது கடினமானதாக சிரமானதாக கருதும் இவர்கள் தான், சிறிய கொசுறுச் செய்திகளை தரும்படி வேண்டுகின்றனர். சமூக சார்ந்த எழுத்தாளன் முன் எதைச் செய்ய வேண்டும் என்பதிலும், செய்வதிலும் ஒரு முரனே எற்படுகின்றது. சமூக அறிவின் மட்டும் வீழ்ச்சியான ஒரு நிலையில் விரிவாகவே அனைத்தையும் சொல்ல வேண்டியுள்ளது. அதேநேரம் சுருக்கமாக சொல்ல வேண்டியுள்ளது. இதை ஒருங்கே தீர்க்க முடியாதுள்ளது. எமது நோக்கம் சார்ந்த வாசகன் யார் என்பதை தெரிவு செய்யும் படி ஒரு முடிவை எற்படுத்திவிடுகின்றது. நான் யாரை நோக்கி எழுத வெண்டியுள்ளது என்பதை, லெனின் கூறுவது ஊடகவே உடறுத்துக் கண்கின்றேன். லேனின் ".. வெகுஜனங்கள் வாழ்க்கையின் வாயிலாகவே கற்றறிகின்றனர், புத்தகங்களின் வாயிலாய் அல்ல" என்பதை நான் தெளிவாக புரிந்து கொண்டே வினையாற்றுகின்றேன்.

இந்த நிலையில் சமூகத்தில் இன்று வாசிப்புத் திறனை பலர் கொண்டிருப்பதில்லை. இதனால் கருத்துகளை புரிந்து கொள்வதில் சிராமம் எற்படுகின்றது. சமூகத்தின் நிகழ்வது தொடர்ச்சியான ஆழமான சமூகச் சிதைவுதான். இதற்கு சமூக பொரளாதார அரசியல் காரணங்களே அடிப்படையாகவுள்ளது.

இதில் முக்கியமானது தமிழ் தேசியத்தின் பாசிசக் கூறே. பாசிசம் தனது இருத்தல் என்ற அடிப்படையில், சமூக அறிவின் இருத்தலையே நலமடித்து அழித்தொழிக்கின்றது. சுயமான சிந்தனையைக் கூட, தேசத் துரோகமாக கருதி அழிக்கின்றது. இதற்கு இசைவாக இசைவாக்கம் அடைந்த செக்கு மாட்டுத்தனமே, சமூகத்தின் பொதுப் போக்காகியுள்ளது. இதனடிப்படையில் தான் தமிழ்தேசியத்தின் பெயரில் அதிகாரத்தில் உள்ள புலிகள், தமிழ் மக்கள் வாசிக்கவே கூடாது என்பது அவர்களின் அடிப்படையான சித்தாந்தமாக இருந்தது. உதாரணமாக பிரபாகரனுடன் முன்பு புலிகள் இயக்கத்தில் இருந்தோர் எதாவது வாசிக்க முற்பட்டபோதெல்லாம், அதை அவர் இழிவாக பார்த்ததுடன் இந்த நடவடிக்கைகளை கூட நக்கலடித்து பழிக்கப்பட்டது. இதுவே பின்னால் படிப்படியாக வசிப்பது கூட துரோகமாகக் கருதப்பட்டது. ஏன் பின்னால் வாசிப்பது என்வெனக் கூட கண்கணிகப்பட்டது. வாசிப்பவர்கள் விசேடமாக கண்கணிக்கப்பட்டார்கள். நூல்கள் வாசிப்பவர்கள் இயக்கத்தின் ஒற்றுமையை சிதைப்பவராகவும், மக்களை குழப்புபவராகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரானவராகவும் கூட கருதப்பட்டனர். நூல்களின் இருத்தல் கூட, இன்று இடம் மாறியுள்ளது. தம்மை அறிவாளியாக காட்டும் புலித்தலைவர்களின் விளம்பரப் படங்களின் பின்னால், நூல்கள் அலங்கரிக்கும் ஒரு அலங்காரப் பொருளாகவே தரம்தாழ்ந்து போனது. இப்படி அறிவின் வளர்ச்சி என்பது, தமது சொந்த இருப்பிற்கே ஆபத்து என்பது புலியின் பாசிச சித்தாந்தம், மக்களின் அறிவின் வளர்ச்சியை முடக்கி முடமாக்கியது.

வாசிப்பும் அது எற்படுத்தும் சமூக அறிவும், இயல்பாகவே இன்றைய எதார்த்த சமூகம் மீது ஆழமான ஒரு சமூகக் கேள்வியை உருவாக்கும். கேள்விகளே, இச் சமூக அமைபின் இருத்தலையே மாற்றக் கோரும். இதை புலிகள் அனுமதிக்கவில்லை. அறிவை விருத்தி செய்த புத்தகங்களைக் அன்று கைப்பற்றிய புலிகள் அவற்றையே எரியுட்டினர் அல்லது அதை கறையானுக்கு இரையாக்கினர் அல்லது தம்மை அறிவாளியாக காட்டவே தமக்கு பின்னால் அலங்காரப் பொருளாக்கி அதை அடுக்கினர். அன்று எனது வீடு உட்பட பலரது வீட்டில் இருந்த நூல்களை, புலிகள் பலக்காரமாகவே அள்ளி எடுத்துச் சென்றனர். அன்று புலிகள் நபர்களை மட்டும் கடத்திச் செல்லவில்லை, அந்த நபர்களின் கருத்தை உருவாக்கிய நூல்களையும் கூட கடத்திச் சென்றனர். புலிப் பாசித்துக்கு அஞ்சி ஒட நிர்பந்தித்த போது, குழந்தைகளின் அறிவை வளர்த்த நூல் வைத்திருக்கவே பல பெற்றோர்கள் பயந்தனர். அச்சம் காரணமாக அதைப் புதைத்தனர் அல்லது எரித்தனர். இப்படி தமிழ் சமூகத்தின் அறிவே நலமடிக்கப்பட்டு சிதைக்கப்பட்டது.

எமது சமூகத்தில் அறிவு சார்ந்த சமூக நூல்கள் முற்றாக தடுக்கப்பட்டன. வாசிப்பு துரோகமாக கருதப்பட்டது. இப்படி பொதுவாகவே சமூகத்தின் அறிவின் வீழ்ச்சி விரைவாகவே நடைபெற்றது. மறுபுறம் அறிவைப் கொஞ்சம் பெற்றவர்கள், அதைக் கொண்டு பிழைத்து வாழும் வகையில் சீராழிந்தனர். தமது அறிவைக் கொண்டே, அறிவுமட்டம் குறைந்த சமூகத்தை எமாற்றி வாழும் ஒரு இழிவான வாழ்வை வந்தடைந்தனர். புலிகள் அறிவு சார்ந்து எதைச் செய்தனரோ, அதையே இந்தக் கும்பலும் செய்தது. மற்றொரு பிரிவு பினாமியாகவும், பிழைப்புவாதிகளாகவும் நக்கிப்பிழைக்கவும், தமது குறைந்தபட்ச அறிவை பயன்படுத்திக் கொண்டனர். சமூகத்தின் மிக பின்தங்கிய அறிவுமட்டமே, இவர்களின் மேலன்மையாகியது. இன்னுமொரு பக்கம் அறிவு என்பதைக் கொண்டு சமூக மேலன்மையை எற்படுத்த முடிந்த நிலையில், கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலைக்குள் இந்தக் கும்பல் சீராழிந்தனர். இருக்கும் மலட்டுச் சரக்கைக் கொண்டு, தம்மைத் தாம் அறிவளியாகக் காட்டிக் கொண்டனர்.

இந்த நிலையில் எமது சமூகத்துக்கு வழிகாட்டக் கூடிய அறிவுத்துறையின்றியும், சமூகத்தின் அறியாமை மீதும் எமது சமூகம் இழிந்து கிடக்கின்றது. இந்த சமூகத்தை அனுகும் போது, என் மீதான விமர்சனமும், முன்மாதரியான எடுகோலாகவும் மாறிவிடுகின்றது. மறுபக்கத்தில் பொது சமூகத்தில் பைத்தியம் பிடித்த ஒரு மனநோயாளியாகவே என்னைக் கருதுகின்றனர். அன்று 1986 இல் ராக்கிங்கை எதிர்த்து நான் தனித்து கருத்தியல் ரீதியாக அம்பலப்படுத்தி பல்கலைக்கழகத்தில் ஒரு துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தேன். அதன் போது இதை எதிர்த்து அதை வாபஸ் வாங்கக் கோரியும் பல்கலைகழக பகிஸ்கரிப்பை நடத்திய மாணவர்கள், இதை மனநோய்க்குரிய ஒரு செயலாக கூறி ஒரு துண்டுபிரசுரத்தை வெளியிட்டதுடன், அதை அன்று ஈழநாடு பத்திரிகையிலும் கூட பிரசுரிக்க வைத்தனர். இப்படிதான் இன்று எனது எழுத்தை அல்லது எனது நடத்தையை மனநோய்க்குரிய ஒன்றாக சிலர் எள்ளிநகையாடுகின்றனர். குறுகிய வாழ்க்கை வட்டத்தில், அந்த சிந்தனைக்கு உட்பட்டு வாழ்வதையே, இயல்பான மனநிலைக்குரிய ஒன்றனதாகக் கூட கருதுகின்றனர். அந்தளவுக்கு எமது சமூகம் தரம் தாழ்ந்து மற்றவரின் கால் தூசு துடைத்தபடி மண்டியிட்டு கிடக்கின்றது.

அறிவு என்பது இயங்கியல் ரீதியானது. அன்றாடம் நாம் கற்றுக் கொள்ளும் விடையங்களே, எமது அறிவை மேலும் ஆழமாக்கின்றது. வயதின் முதிர்ச்சியுடன் கூடிய கற்கும் அறிவும், வாழ்வின் அனுபவ அறிவும், ஆளுமையுள்ள சமூக வழிகாட்டிகளையே உருவாக்கும். இதுவே பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான மதிப்பைக் கூட உருவாக்கியது. மாறாக கற்றுக்கொள்வது என்பதையே மறுக்கும் ஒரு சமூகத்தில், வயதுசெல்ல எற்படும் அறிவின்மை விதண்டவாதமாகவும், கண்மூடித்தனமான வழிபாடாகவும் மாறுகின்றது. இந்தப் பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், வெறுமனே லும்பன்களாகவே உருவாக்கப்படுகின்றனர். சாதாரணமாக சக மனிதனுடன் விவாதிக்கவும் பேசிக்கொள்ள முடியாத வகையில், வன்முறை கொண்ட குழந்தைகளையே எமது சமூகம் உருவாக்கின்றது.
எமது சமூக இயலாமை, படிப்படியாகவே சமூக இருப்பின் மேலான கண்மூடித்தனமான நம்பிக்கையை விதைக்கின்றது. அதை கண்ணை மூடிக்கொண்டு பாதுகாக்க முனைப்புக் கொள்கின்றது. அதைவிட்டால் எதுவும் கிடைக்காது என்ற அங்கலாய்பும், பதைபதைப்பும் உருவாகின்றது. கண்மூடித்தனமான நம்பிக்கையும், அது சார்ந்த வாழிபாடு உருவாகின்றது. கருத்துகள், சிந்தனைகள் விதண்டவாதமான வக்கிரமாக மாறுகின்றது. விவாதப் பண்பே சமூகக் குற்றமாக கருதும் நிலைக்கு சமூகம் தரம் தாழ்ந்து போகின்றது.

மறுபக்கத்தில் சமூகத்தின் பின்தங்கிய அறிவின் மட்டம், சிலருக்கு சமூகத்தையே அடிமையாக பயன்படுத்தி தமது வாழ்வை வளப்படுத்தவதில் முடிகின்றது. அதாவது சிலர் சமூகத்தை எமாற்றி வாழவும், சொகுசாக இருக்கவும் இதுவே உதவுவதால், சமூக அறியாமை பாதுகாக்கவே அறிவின் மீது அடக்குமுறையை எவுகின்றனர். அறிவை சொச்சைப் படுத்துகின்றனர். அறிவின் மீதான திட்டமிட்ட கொலைகள் முதல் தூசணதல் பலக்காரமாக புணர்தல் வரை, அன்றாடம் நாம் இதை சமூகத்தில் பலவிதத்தில் காணமுடிகின்றது.

சமூகத்தையே கேள்விக்குள்ளாக்கல், எமது வாழ்வை கேள்விக்குள்ளாக்கல் என்று எதையும் நாம் செய்ய மறுக்கின்றோம். சமூகம் மேலும் மேலும் எமாற்றப்படுவதை கண்டுகொள்ள முடியாத ஒரு குருட்டுச் சமூகமாக மாறுகின்றது. சமூகத்தின் அவலத்தையே தெரிந்துகொள்ள முடியாத வகையில், மந்தைக் கூட்டமாக மாற்றப்பட்டு விடுகின்றது. மக்கள் பட்டியில் அடைக்கப்பட்ட ஒரு நிலையில், வரையறைக்குட்பட்ட எல்லைக்குள் வினையற்று அனுமதிக்கப்பட்டுள்ளர். பட்டியை வீட்டு மீறி வெளிவருபவர்களுக்கு, உயிர் வாழ்வதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. பட்டியில் உள்ள மந்தைக்குரிய குணம்சத்துடன் தான், தமிழ் சமூகம் பாசிசமாக ஒழுங்கமைகப்பட்டுள்ளது.

இதில் இருந்து மீட்சி என்பதே, சமூகத்தை இயல்பாக இயற்கையாகவே சிந்திக்கத் துண்டுவதே. அதாவது மனிதனின் இயல்பான இயற்கை இயல்பை மீண்டும் பெறத் துண்டுவதே இன்றைய எனது பணியாகும். அந்த வகையில் சமூகத்தை நாம் கற்கத் துண்டுகின்றோம். வாழ்வின் அனுபவங்களை தொகுக்கக் கோருகின்றோம். பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட நூல்களை, சுயமாகவே படிக்க கோருவது இதில் ஒரு அம்சமாகும். கற்றல் என்பது உள்ளடக்க ரீதியாகவே, சமூக அறிவை திரட்டி ஒருங்கமைந்த நூல்களை கற்கத் துண்டுவதன் மூலம், சொந்த வாழ்வின் அனுபவத்தையே சுயமாக இனம் காணத் துண்டுகின்றோம். அதாவது இன்று கற்றலை வரையறையற்ற வகையில் துண்டுவதன் மூலம், கற்கும் முறைமையையே சமூகத்துக்கு உருவாக்குவது அவசியமாகும்.

பொதுவாகவே எமது சமூகம் அதிகமாகவே சுயநலம் கொண்டது. மிக குறுகிய வட்டத்தில் மேலும் சிதைந்து போகின்ற நிலையில், கல்விசார் அறிவு மட்டம் கூட தரம்குறைந்து வருகின்றது. பாடப் புத்தகத்தை அப்படியே பாடமாக்கி ஒப்புவிக்கும் எமது இளம் தலைமுறையின் அறிவுமட்டம், வெறுமனே மந்தைக் குணம் கொண்டதாகவே அமைகின்றது. அதாவது பண்ணை மந்தைக்கு ஒரு சில உணவை மட்டும் போட்டு, சந்தை விளைச்சலுக்காக வளர்ப்பது போல்தான், எமது குழந்தைகளுக்கு கல்வியும் திணிக்கப்படுகின்றது. இதில் பெற்றோரின் குறுகிய புத்தியுள்ள சுயநலப்பண்பு, இக் கல்வியை மேலும் சிறுக்கவைக்கின்றது. சேடம் கட்டிய குதிரையாட்டம், கவ்வி இயந்திரத்தன்மை வாய்தாக மாற்றி அறிவை ஒப்புவிக்கும் எல்லைக்குள் மலடாக்கின்றனர்.

அதாவது குழந்தைகளுக்கே உரிய துடிப்புள்ள கேள்விகளும், ஆராய்வு முறைகளும் கூட மலடாக்கப்படுகின்றது. இன்று சமூகத்தை வழி நடத்தக் கூடிய, சமூகப் பொறுப்புள்ள குழந்தைகள் உருவாவதில்லை. ஒரு இயந்திரத்தின் ஒரு புரியாக மட்டும், குழந்தையின் கல்வி சிறுக்க வைக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த சமூகத்தின் சமூகக் கல்வியின்மை, அது சார்ந்த அறிவின்மையும், சமூகத்தின் வீழ்ச்சியை பறைசாற்றி நிற்கின்றது. இதைப் பாதுகாக்கும் அரசியல் தலைமையே எம்மை சர்வாதிகாரமாக ஆட்சி செய்கின்றது.

இந்த நிலையில் இதை புரிந்துகொண்டு மாற்றியமைக்கும், நடைமுறை சார்ந்த ஒரு சமூக இயக்கத்தை உருவாக்க முடியாத அரசியல் சூழல் காணப்படுகின்றது. தனித்த ஒரு மனிதனாக நான் இதை மாற்றிவிட முடியாது. இன்று இலங்கையில் நான் மட்டும்தான் பெருமளவில் சமூகம் சார்ந்த உணர்வுடன், சமூக விடையங்கள் மீது எழுதுகின்றேன். அதற்காக தனித்து குரல் கொடுக்கின்றேன்;. இதைப் பைத்தியக்காரத்தனம் என்று என்னைச் சுற்றியுள்ள, சமூக அறிவில் குறைந்துள்ள சமூகம் என்னை எள்ளி நகையாடுகின்றது.

எந்த சமூக ஆதாரவுமின்றி, எள்ளி நகையாடும் பலவிதமான சமூக எதிர்வினைகளை எதிர்கொண்டு எதிர் நீச்சலீடுவது என்பது கூட, கடினமான ஒரு போராட்டமாகவே என்முன்னுள்ளது. லெனின் கூறியது போல் "கஸ்டங்களையும் தவறுகளையும் கண்டு அஞ்சுவது கோழைத்தனம்; பொறுமையான, தொடர்ச்சியான, உறுதியான பாட்டாளி வர்க்க முயற்சிக்கு அறிவாளியின் 'கூச்சல்' மாற்றாக உள்ளது." என்ற அடிப்படை உள்ளடகத்தில் நான் செயல்பட முனைகின்றேன். இந்த நிலையில் சமூகம் சார்ந்த எனது எழுத்தை, பத்து பேர் படித்தால் கூட மிகப்பெரிய விடையம்தான். இது நான் சந்திக்கும் எதார்த்தம். இந்த நிலைமையை நான் முதலில் தெளிவாக புரிந்து கொண்டுள்ளேன்;. எனது சொந்த உழைப்பில் தான், எனது நூல்களை அச்சில் கொண்டு வந்துள்ளேன்;, கொண்டு வருகின்றேன். இருந்தும் இந்தப் புத்தகங்கள் காசு கொடுத்த வாங்குவோர் கிடையாது. இதுவும் உண்மை. சமூகத்தில் உழைப்பபை வீடாகவும், ஆடம்பர நுகர்வாகவும் மாற்றும் போது, நான் எனது உழைப்பை இப்படி நூலாக்கின்றேன்;. இதைக் கூட சமூகத்தின் ஒரு முரண்பாடகவே பலர் பார்ப்பதுடன், பைத்தியக்காரத்தனமானதாக கூட சமூகம் இழிவாடுகின்றது.

நான் எனது சேமிப்பில் வைத்துள்ள 3000 மேற்பட்ட நூல்களின் பெறுமதி கூட, 12 முதல் 15 ஆயிரம் ஈரோ (டொலர்) பெறுமதியானவை. பணத்தை செலவு செய்து இப்படி சேகரித்துள்ள நூல்கள் பைத்தியக்காரத்தனமானதாகவும், வீட்டில் அவை வெறும் குப்பையாகவும், அழகுணர்ச்சியற்ற நடவடிக்கையாகவும் கூட இழிவுபடுத்தப்படுகின்றது. அந்தளவுக்கு எமது சமூகத்தின் அறிவுசார் கண்ணோட்டம் மிக மோசமானதாகவும், வெறுப்புட்டுவதாகவும் கூட அமைகின்றது. நான் எனது உழைப்பில் சேகரித்த இந்த நூல்களை எனது மரணத்தின் பின், சமூகத்தின் ஒரு பொதுச் சொத்தாக இலங்கை அல்லது இந்திய அல்லது பிரான்சில், ஒரு பொது நூலகத்துக்கு கொடுக்கவே எனது குடுபத்திடம் கோரியுள்ளேன்;. சமூகத்தின் இன்றைய அறிவு சார்ந்த உணர்வு மட்டும், இதையும் கூட முன்கூட்டியே கோரவைக்கின்றது. உழைப்பு, வாழ்க்கை எங்கும் சமூகம் சார்ந்த உணர்வுடன் இயங்க முனைகின்றேன். ஆனால் வெறும் நடைப்பிணமாகவே தனித்து நிற்கின்றேன். அந்தளவுக்கு எமது சமூகத்தில், சமூக உணர்வு கொண்டோரை சமூகத்தில் காண்பதரிது.

இதுவரை நான் எட்டு நூல்கள் எழுதி வெளிவந்துள்ளது. மூன்று நூல்கள் வெளிவர வேண்டிய நிலையில் உள்ளது. நான் உழைத்து வாழவும், இந்த நூல்களை வெளிக் கொண்டுவரவும் எனது சொந்த உழைப்பையே பயன்படுத்துகின்றேன்;. சமூகம் எனக்கு எந்த வகையிலும் உதவவில்லை. சமூகம் எனக்கு உதவியிருப்பின், நான் நூல்களை எழுதுவதற்காக எடுத்துள்ள சமூகம் குறிப்புகள் (சாதியம், இலக்கியம்....) சார்ந்து குறைந்தது 30 நூல்களை வெளிக்கொண்டு வந்திருக்க முடியும்;. சமூகம் சார்ந்து எனது வாழ்வை, சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் போது எற்படும் துன்பம் மிகவும் கடுமையானது. ஆனால் இதைப் புரிந்து கொண்டு எதிர்வினையற்ற வேண்டியுள்ளது. உண்மையில் லெனின் கூறியது போல் "மாபெரும் உண்மைகளைக் கூடக் கொச்சைப்படுத்திவிட முடியும், மிகவும் உயர்ந்த நோக்கங்களைக் கூட வெறும் வாய்வீச்சு என்ற அளவுக்குக் குறைத்துவிட முடியும்." இந்த எதார்த்தம் தான் இன்று நான் சந்திக்கும் நிலை.

இந்த நிலையிலும் கூட நான் எனக்காக அல்ல, சமூகத்துக்காகவே என்னை வருத்தியே உழைக்கின்றேன். என்? எனது நண்பர் கூறியது போல் சமூக அங்கீகாரம் கிடைக்கமால் போகலாம், எழுதியவை புத்தகமாக வெளிவாரமல் கூட இருக்கலாம், ஆனால் எழுதுவதை நிறுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை என்னிடம் விடுத்தார். இந்த சமூகம் காணத ஒரு சமூக உண்மையை, எதிர்கால தலைமுறை தன்னும் காணும் என்றார். தீர்க்கதரிசமான உண்மையும் கூட. அவர் இதைக் கூறுவதுற்கு முன்பும், இதே உள்ளடகத்தில் தான் நான் எழுதுகின்றேன்;. இந்த சமூகத்தில் ஒருவர் கூட படிக்கவிட்டாலும் கூட, சமூக உண்மைக்காக, சமூக விடுதலைக்காகவும் எழுதுகின்றேன்;. அதை பாதுகாக்க வாழ்வின் தேவைகளை வரையறுப்பதன் மூலம், எனது உழைப்பையே இதற்கு பயன்படுத்துகின்றேன்.

உண்மையைச் சொல்லப்போனால் எனது நிலையை ஊக்குவிப்போர் யாரும் கிடையாது. ஒருவர் இருவர் ஒரிரு சந்தர்ப்பங்களில் உதவிகளை செய்ததை நான் மறுக்கமுடியாது. ஆனால் இந்த எதார்த்தம் வேறு ஒன்றே. புத்தகத்தின் விலையைக் கூட கொடுத்து வாங்குவதில்லை. சிலர் புத்தகத்தை பெற்றுவார்கள், ஆனால் பணத்தைத் தருவதில்லை. இது நான் சந்திக்கும் எதார்த்தம். உண்மையில் இந்த சமூகம் பற்றிய ஆய்வு சார்ந்த அறிவிற்கான எனது முயற்சியை, உண்மையில் யாரும் புரிந்துகொண்டது கிடையாது. நான் இறந்த பின் அஞ்சலிகளை விடுவதிலும் அல்லது என்னைப் போற்றுவதிலும் கூட எந்தவிதமான அர்த்தமும் இருப்பதாக நான் கருதவில்லை. நான் வாழும்போது, எனது முயற்சிகளுக்கு கிடைத்த சமூக ஊக்குவிப்பு என்ன என்பதே, அரசியல் ரீதியாக முக்கியத்துவமானது. எனது சமூக சார்ந்த எழுத்தின் வரவுக்காக, என்ன பங்களிப்பைச் செய்தீர்கள் என்பதே முக்கியமானது. பாசிசம் சூழந்துள்ள எமது இந்த அமைப்பில், அதை மற்றுவதற்கான அறிவு சார்ந்த சிந்தனை சார்ந்த நடைமுறை முயற்சிக்கு பங்களிப்பு செய்யாதவர்கள் கூட, பாசிசத்துக்கு துணைபோனவர்கள் தான்.

மாறாக அதீதமான துற்றுதலை நான் அனைத்து தரப்பிலும் இருந்து சந்திக்கின்றேன். பாசிசம், பாசித்தை ஒத்த ஏகாதிபத்திய சார்பு எதிரணியும், அத்துடன் இதனுடன் சேராத ஆனால் கலவைக் கோட்பாடுகளைக் கொண்ட அணியினர் அனைவரிடமும் இருந்து, நான் வாசவுகளையும் துற்றுதலையும் எப்போதும் சந்திக்கின்றேன். கருத்தை கருத்தாக எதிர்கொண்டு பதிலளிக்க முடியாத இந்த பிராணிகள், என்னை துற்றுவதே அவர்களின் சொந்த அரசியலாகிவிட்டது. உண்மையில் இவர்கள் முன் நான், நான் சார்ந்த கோட்பாட்டின் சரியான தன்மை மூலம் வானளவுக்கு உயர்ந்து நிற்கின்றேன். மக்களை நேசிப்பதில், அவர்களை தமது சொந்த விடுதலைக்காக சமூக இயக்கத்தில் அவர்களை இயங்கக் கோருவதன் மூலம், ஒரு நடைமுறைவாதியாகவும் கூட உயர்ந்த நிற்கின்றேன். மக்கள் மட்டும் தான் தமது சொந்த விடுதலைக்காக போராடமுடியும் என்ற அரசியல் உள்ளடகத்தை, நான் மட்டும் தான் இலங்கையில் பகிரங்கமாக இதைக் கோருபவனாக உள்ளேன். இதற்காகவே நான் போராடுகின்றேன்;. ஆச்சரியமானது, ஆனால் இதுவே உண்மை. இதற்கு வெளியில், எனக்கு என்று ஒரு தனிவாழ்க்கை கிடையாது. இதற்கு வெளியில் முன்வைக்கப்படும் கருத்துகள் கோட்பாடுகள் என அனைத்தும், ஏன் இலக்கியத்தில் கூட மக்கள் தான் வரலாற்றை படைக்க வேண்டும் என்று கோருவதில்லை. இது இன்றைய எதார்த்தம்.

இந்த நிலையை சமூக முன்னோடிகளாக காட்டிக் கொள்வோர் இடையில் எனது கருத்துகள் புரியாமல் நடிப்பது அல்லது புரிந்துகொள்ள முடியாது இருப்பது இயல்பானது. பொது சமூக மட்டத்தில் விளங்காமை, நீண்ட கட்டுரை என்ற விமர்சனங்கள், என் மீதான விமர்சனமாக வைப்பதில் அர்த்தமற்றது. இதற்கு மாறாக சமூகத்தின் அறியாமை மீது, அதை விமர்சனமாக இனங்கண்டு கொண்டு அதை மாற்றமுனைவது தான், இன்றைய அரசியல் கடமையில் ஒன்றாகும். உண்மையான இதுவே இன்றைய சமூக பணியும் கூட. சொந்த அறிவை விருத்தி செய்யும் வகையில் படிக்கவும், சமூக அறிவை விருத்தி செய்யும் வகையில் சமூகங்களிடையே வாசிப்புத் திறனை அதிகரிக்க வைப்பது அவசியமானது. இதை மையமாக வைத்து போராடுவது இன்றைய சமூகப்பணிகளில் ஒன்றாகும்.


இதை நாம் வறட்டுத்தனமாகவும் ஒருதலைபட்சமாக திணிக்க முடியாது. இது எவ்வளவு பெரிய உண்மையாக இருந்தாலும் கூட இது தான் நிலைமை. அதற்காக உண்மை பொய்யாகிவிடாது. உண்மையை கைவிட வேண்டுமென்பதல்ல. ஆனால் சமூகத்தின் உயிர்துடிப்பள்ள சமூக வாழ்வியலுடன் ஒன்று கலந்த வகையில் மிக நெருக்கமாவே அவர்களை உடறுத்து அனுக வேண்டும். மக்களை ஆழ உடுரூவி அது அவர்களை அடைமையாக்கும் மதத்துக்கு எதிராக எப்படிப் போராட வேண்டும் என்பது பற்றி லெனின் கூறும் கூற்று, இந்த கட்டுரையப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியத்தவம் வாய்ந்தவை.
லெனின் "... நாம் மதத்தை எதிர்க்க வேண்டும். இது அனைத்துப் பொருள்முதல் வாதத்தின், ஆகவே மார்க்சியத்தின் அரிச்சுவடியோடு நின்றுவிட்ட பொருள் முதல்வாதம் அல்ல. மார்க்சியம் அதற்கும் அப்பால் செல்கிறது. மதத்தை எதிர்ப்பது எப்படியென்று நாம் அறிந்திருக்க வேண்டும்; அதற்காகப் பெருந்திரளான மக்களிடையில் நம்பிக்கை மற்றும் மதத்தின் தோற்றுவாயைப் பொருள் முதல்வாத முறையில் நாம் விளக்க வேண்டும் என்று அது கூறுகிறது. மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான – சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது; அத்தகைய போதனையாக அதைச் சுருக்கிவிடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு இப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.... விரிவான பகுதியினரிடமும் பெருந்திரளான... மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கிறார் முதலாளித்துவ வர்க்க முற்போக்காளர், தீவிரவாதி அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதி. ஆகவே; மதம் ஓழிக; நாத்திகம் நீடூழி வாழ்க; நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்லளூ இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய, கருத்து என்று மார்க்சியவாதி கூறுகிறார். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லைளூ அவற்றைப் பொருள் முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை, இன்று மதத்தின் மிக ஆழமான வேர், பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமூக ரீதியில் கீழே அழுத்தப்பட்டுக் கிடக்கும் நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் முதலாளித்துவத்தின் குருட்டுச் சக்திகளுக்கு முன்பாக வெளித்தோற்றத்தில் அவர்களுடைய முற்றிலும் அனாதரவான நிலைமையும் தான்ளூ முதலாளித்துவம் யுத்தங்கள், பூகம்பங்கள், இதரவைகளைப் போன்ற அசாதாரணமான சம்பவங்களால் ஏற்படுவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கடுமையைக் கொண்ட மிகவும் அதிகமான அளவுக்கு மோசமான துன்பம், மிகவும் அதிகமான அளவுக்குக் காட்டுமிராணடித் தனமான சித்திரவதையைச் சாதாரணமான உழைக்கின்ற மக்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் ஏற்படுத்துகிறது. 'அச்சம் கடவுள்களைப் படைத்தது' மூலதனத்தின் குருட்டுச் சக்தியை – பெருந்திரளான மக்கள் அதை முன்னறிய முடியாது என்பதால் அது குருட்டுத் தனமானது – பற்றிய அச்சம் பாட்டாளி மற்றும் சிறிய உடைமையாளரின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலடியிலும் 'தீடிரென்ற', 'எதிர்பாராதவிதமான', 'தற்செயலான' அழிவை நாசத்தை, ஏழையாகவும் பாப்பராகவும் விபச்சாரியாகவும் மாற்றுவதை, பாட்டினிச் சாவை ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்துகிறது, அப்படியே ஏற்படுத்துகின்றது. இது தான் நவீன மதத்தின் வேர்;... முதலாளித்துவத்தின் குருட்டுத் தனமான அழிவுச் சக்திகளின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்திரளான மக்கள் மதத்தின் இந்த வேரையும் மூலதனத்தின் ஆதிக்கத்தைன் எல்லா வடிவங்களையும் எதிர்த்து ஒற்றுமையான, அமைப்பு ரீதியான, திட்டமிட்ட மற்றும் உணர்வுபூர்வமான வழியில் தாங்களே போராடக் கற்றுக் கொள்கின்ற வரை எந்தக் கல்வி புகட்டும் புத்தகமும் அவர்களுடைய மனங்களிலிருந்து மதத்தை ஒழித்துவிட முடியாது...

ஒரு மார்க்சியவாதி பொருள்முதல்வாதி, அதாவது மதத்தின் விரோதியாக இருக்க வேண்டும். ஆனால் ஒரு இயங்கியல் பொருள்முதல்வாதி, அதாவது மதத்துக்கு எதிரான போராட்டத்தைச் சூக்குமமான முறையில் நெடுந்தொலைவே உள்ள, முற்றிலும் தத்துவஞான ரீதியான, ஒருபோதும் மாற்றம்மடையாத போதனையை அடிப்படையாகக் கொள்ளாமல் ஸ்தூலமான முறையில் செய்முறையில் நடைபெற்று வருகின்ற மற்றும் பெருந்திரளான மக்களிடம் வேறு எதையும் காட்டிலும் அதிகமாகவும் சிறப்பாகவும் பாடம் புகட்டுகின்ற வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் செய்பவராக இருக்க வேண்டும்" என்றார். இங்கு ஒரு விடையத்தின் இரண்டு பக்கங்ளையும், அதாவது மதத்தை எதிர்க்காது அதை அப்படியே பாதுகாத்தல் என்ற வர்க்கப் போராட்டத்தின் பின் மதத்தை ஒழித்தல் அல்லது மதத்தை முதலில் ஒழித்த பின் சமூக இயக்கம் என்ற இரண்டு பிற்போக்கு தத்துவக் கூறுகளை எதிர்த்து எப்படிப் போராட வேண்டியுள்ளது என்பதை லெனின் தெளிவாக மதம் சார்ந்து எடுத்துக் காட்டுகின்றார். இதுவே எனது அனைத்துக் கருத்திலும் தெளிவாக வெளிப்படும் வகையில் முன்வைக்கின்றேன்.

இதை விடுத்து சிலர் தமது சொந்த அரசியல் அரிப்புக்கு எற்பவே, என்னிடம் கட்டுரைகளை எதிர்பாக்கின்றனர். உதாரணமாக புலிசார்பு, புலியெதிர்ப்பு அணியினர் குறிப்பாக தமது சொந்த அரிப்புக்கு எற்பவே சிறிய கட்டுரையை எதிர்பார்க்கின்றனர். இதை நான் செய்யவே முடியாது. சமூக விடுதலை என்ற அடிப்படையில் சமூகத்தைச் சிந்திக்கத் துண்டுவதே, எனது சமூக கடமையாக நான் கருதுகின்றேன். இதையே அனைவரும் கட்டாயம் செய்யவேண்டியதும் கூட. இதைவிடுத்து நாம் வம்பளக்க முடியாது. எனது சக்தியை விரயம் செய்யமுடியாது. சமூக அடி நிலையில் உள்ள மக்களுக்கு விளங்கும் வகையில், நான் எனது எழுத்தை மாற்ற முடியாது. மாறாக சமூகத்தை வழிநடத்தக் கூடிய முன்னணியாளர்ளை உருவாக்கும் அடிப்படையில் தான், நான் எழுத வேண்டியுள்ளது. சமூகத்தையே புரட்சிக்கு இட்டுச் செல்லக் கூடிய சமூக முன்னோடிகளே, இன்று சமூகத்துக்கு தேவையாக உள்ளனர். சமூகத்தை தலைமை தாங்கக்கூடிய முன்னணி சமூக சிந்தனையளார்களை உருவாக்கும் வகையில், அவர்களின் சமூக அறிவின் பரந்த தளத்தை உருவாக்கும் அடிப்படையில் தான், எனது எழுத்து குறிப்பான திசையில் நகர்கின்றது.

இதை ஒருவர் அடைந்தாலும் கூட அது எனது வெற்றிதான். இதுவே எனது உடனடி இலட்சியமாக உள்ளது. இதை அடைவது என்பது ஒரே நாளில் சாத்தியமில்லை. குறிப்பாக எனது அறிவு என்பதும், அறிவு சார்ந்த சமூக நடைமுறை என்பது ஒரு நாளில் எற்பட்டதல்ல. கடந்த 25 வருடமாக சமூகம் சார்ந்த அரசியல் ஈடுபட்டதன் மூலம், முரணற்ற வகையில் சமூகத்துடன் செல்லும் ஒரு உறுதியான போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. சமூக நடைமுறை மற்றும் சமூகம் சார்ந்த தேடுதல் அறிவை, ஒரு நாளில் ஒருவருக்கு எற்படுத்திவிட முடியாது. நான் எனது குடும்ப வறுமை காரணமாக, சமூகத்தில் சிறுவயது முதலே உழைத்து வாழவேண்டிய நிலைமைக்கான சமூகக் காரணத்தைக் தேடவெளிக்கிட்டவன். சிறுவயது உழைப்பு, அது சார்ந்த வாழ்வின் அனுபவம் கூட, எனது பிந்திய அரசியல் வாழ்வில் பாரிய பாதிப்பை எற்படுத்தியது.

அனைத்தையும் ஒருங்கு சேர உருவான எனது அறிவு. சமூக நடைமுறையில் இருந்து அன்னியமான ஒரு புதிய சூழலில், கடந்த 15 வருடங்களாக வாழ் நிhப்பந்திக்கப்பட்டுள்ளேன். ஒட்டும் உறவுமான எனது சமூகத்தில் இருந்த அன்னியமான ஒரு நிலையிலும், எனது சமூகத்தை புரிந்து கொள்வதில் பிழையற்ற ஒரு சமூக அனுகுமுறைக்கு சமூகத்தின் உணர்வுடன் ஒன்றி நிற்பதை உறுதி செய்ய வேண்டியிருந்தது. சமூகத்தை நெருங்கி பார்த்தல் என்பது, இலகுவாக உருவாகிவிடுவதில்லை.

இதுவும் ஒரு நாளில் நடந்து முடிவதில்லை. இங்கும் ஒரு போராட்மே அவசியமானது. நான் வாழும் பூர்சுவா சூழல், தனிமைப்படுத்தப்பட்ட எனது சிந்தனையும், தனிமனித வாவைத் தண்டி முன்னேறவே போராடுவது அவசியமானதாக இருந்தது. இதை யாரும் எடுத்த மாத்திரத்தில் வந்தடைந்து விடமுடியாது. அப்படி சிலர் எண்ணுகின்றனர். முற்றிலும் தவறானது, அபத்தமானது கூட. சமூகத்தை முரணற்ற இயங்கியல் வகையில் புரிந்து கொள்வது அவசியம். சமூகத்தின் பிரச்சனைகளை அவர்களின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. அதனடிப்படையில் நான் எனது வாழ்வையே, முரணற்ற வகையில் இட்டுச் செல்வது அவசியம். மார்க்ஸ் கூறியது போல் "கண்டிப்பான விஞ்ஞானக் கருத்தும் சாதகமான போதனையும் இல்லாமல் வேலை செய்யும் மனிதனை நாடுவது என்பது நேர்மையற்ற, வெற்று பிரச்சார விளையாட்டிற்குச் சமமானது; இது ஒருபுறம் உத்வேகம் நிறைந்த தீர்க்கதரிசியையும் மறுபுறத்தில் வாயைப் பிளந்து கொண்டு இவனைக் கேட்கும் கழுதைகளையும் ஊகிக்கிறது... இதுவரை எப்போதும் யாருக்கும் அறியாமை உதவியதில்லை" நாம் சமூக விஞ்ஞானத்தின் உண்மைகளை, உண்மைகளாகவே எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்பூர்வமாகவே உள்வாங்க வேண்டியிருந்தது. உணர்பூர்வமாகவே அதை செறிவூட்டி மீள சமூகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கின்றது. சமூக விஞ்ஞானம் என்பது எப்போதும் எங்கும் சமூகத்துக்கு முரணற்றதாக இருப்பதை, சரியாக உள்வாங்க வேண்டியதன் அவசியத்தைக் புரிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது.

சமூகம் சார்ந்த எனது உண்மையை யாராலும் நிராகரிக்க முடியாது என்ற அடிப்படை, எனது கருத்தின் சரியான தன்மைக்கான அடிக்கட்டுமானமாக உள்ளது. இதனால் தான் என்னால் தனித்தும் கூட, இந்த சமூகத்தின் முன் அச்சமின்றி நிமிர்ந்து நிற்க முடிகின்றது. பல தளத்தில் என்னைத் துற்றுவோர், என்ன கருத்தியல் தளத்தில் எதிர்கொள்ளவே முடியாது வக்கற்றுப் போகின்றனர். சமுகத்தின் எதிரிகளாகவே உள்ள இவர்கள், சமூகத்தின் நலன் சார்ந்த கருத்து பலத்தில் உள்ள என்னை நெருங்கக் கூட முடிவதில்லை. அவர்களால் முடிந்ததெல்லாம் தனிமனித தூற்றுதல்கள் மட்டுமே. ஆனால் அவை எல்லாம் எப்போதும் வழமைபோல் சருகாகிப் போகின்றன.

எனது கட்டுரையின் வடிவம் சார்ந்த விமர்சனங்கள் என்னை நோக்கி அல்ல, சமூகத்தை நோக்கி திருப்ப வேண்டும். சமூகத்தின் பின்தங்கிய அறிவின் நிலையை மாற்றவேண்டிய அவசியத்தையும், அதை நீங்களே செய்ய வேண்டியது உங்கள் சமூகக் கடமையாகும். மிகவும் சிரமானது கடுமையானதும் கூட. நீங்கள் ஒரு சமூக முன்னோடியாக, முன்னணியாளராக, சமூகத்தின் உண்மையான ஒரு தலைவனாக மாறவேண்டிய அடிப்படையில், நீங்கள் உங்களையே சுயவிமர்சனம் செய்து சமூகத்துக்காக போராடவேண்டும்;. என்னை பின்பற்ற முனைபவர்கள் நிச்சயமாக சமூகத்தை, முரணற்ற வகையில் புரிந்துகொள்ள வேண்டும் எந்தக் கருத்தையும் சமூகத்தின் உண்மையான வாழ்வியல் நலன்களுடன் தொடர்புபடுத்தி, அதில் இருந்து சமூகத்தில் ஆழமாக ஊடுருவவேண்டும்;. எமது குறுகிய சிந்தனை முறைக்குள்ளும், எனது விருப்பு வெறுப்புக்குள்ளும் சமூகத்தை உட்படுத்தி, சமூகத்துக்கு ஒருக்காலும் யாரும் வழிகாட்டமுடியாது. குறைந்தபட்சம் சமூகத்துக்கு நேர்மையாக கூட அவர்களால் வாழமுடியாது.

Wednesday, November 9, 2005

பாரிஸ் தொடரும் இன வன்முறைகளை

நிறவெறி ஆட்சியாளர்களே ஊக்குவிக்கின்றனர்.


பிரான்சில் தொடரும் இனவாத வன்முறைகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுடன் நேரடியாகவே தொடர்புடையவை. வன்முறையை கட்டுப்படுத்தல் என்ற நிறவெறிக் கூச்சலே, அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்யும் என்ற நம்பிக்கையே வன்முறையை ஊக்குவிக்கின்றது. அந்த வகையில் பொலிசாரின் நடத்தைகள் மூலம், வன்முறை மேலும் தீ விட்டு எரியும் பிரச்சனையாக மாற்றப்படுகின்றது. பின் இதைக் கட்டுப்படுத்தி காட்டுவதன் மூலம், அடுத்த ஜனாதிபதியாகிவிட முடியும் என்ற இன்றைய உள்துறை அமைச்சாரின் அரசியல் வியூகம், எதிர்வினையான வன்முறையாக மாறுகின்றது. இந்த வன்முறையைக் கட்டுப்படுத்தும் இனவாதம் சார்ந்த அரசியல் அனுகுமுறையே, தீவிர நாசிக் கட்சியான தேசிய முன்னணி அரசியலாக கடந்த காலத்தில் இருந்து வந்தது. அதை இன்று ஆளும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சார் தனது அரசியல் கோரிக்கையாக்கி அதை வன்முறையை எரியவிட்டுள்ளார்.

பாரிஸ் சுற்றுப்புறங்களில் தொடங்கிய வன்முறை படிப்படியாக பிரான்ஸ் முழுக்க பரவிப் படர்ந்து வருகின்றது. 27.10.2005 அன்று 15, 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயர் அழுத்த மின்சார மின் அழுத்திக்குள் சிக்கி இறந்து போன நிகழ்வைத் தொடர்ந்தே, இந்த வன்முறைகள் பீறிட்டுக் கிளம்பின. சம்பந்தபட்ட இருவரின் மரணம் எதோ ஒரு வகையில் பொலிஸ்சாருடன் தொடர்புடையதாக இருந்தது. இவ் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பது பற்றி சரியான உண்மையான தரவுகளை பெறமுடியாது உள்ளது. பொலிஸ் தரப்பு செய்திகளே பொதுவான செய்தியாக, உத்தியோகபூர்வமற்ற செய்திகள் பற்பலவாக உள்ளது. குறிப்பிட்ட இடத்தில் பொலிசார் இருந்துள்ளனர் என்பதும் உண்மை. பொலிசார்ருக்கும் அவர்களுக்கும் இடையில் என்ன நடந்தது என்பது மர்மாகவே உள்ளது. மின் அழுத்தியைச் சுற்றி இருந்த அண்ணளவாக 4 மீற்றர் உயரமான மதிலை எப்படி அவர்கள் கடக்க முடிந்தது என்று, பல மர்மங்கள் நிறைந்த கேள்வியாக எம்முன் உள்ளது. சம்பந்தபட்ட இருவரும் இதுவரை எந்தக் குற்றத்திலும் ஈடுபட்ட ஆதாரங்கள் கூட கிடையாது. இப்படி சம்பவம் மர்மாகவே உள்ளது. இச் சம்பவம் ஒருபுறம். நாம் பிரான்சின் இந்த நிலையை சரியாக புரிந்துகொள்ள, இந்த சம்பவத்துடன் மட்டும் வைத்து நிலைமையை ஆராயமுடியாது.

1.இருவரின் மரணத்துடன் பரிஸ் புறநகரப் பகுதியிலும், பின் பிரான்ஸ் தேசம் முழுக்க இன வன்முறைகள் நடப்பதற்கான சமூக அடிப்படைகள் என்ன?
2.இந்த வன்முறைக் கலவரங்களில் யார் ஏன் ஈடுபடுகின்றனர்?
3.இது பற்றிய பல்வேறு தரப்பு சார்ந்த கருத்துகள் என்ன?
4.தமிழ் தரப்பின் கருத்துகள் என்ன?

நாம் இதற்குள் கட்டுரையை ஆய்வு செய்வது அவசியமாகி விடுகின்றது. பொதுவாக இது பற்றிக் கருத்துக் கூறுவோர் பொலிசை எதிர்த்து அல்லது ஆதாரித்து விவாதம் செய்வோராக சமூகம் பிளவுண்டுள்ளது. இதற்குள் அங்கு இங்கும் கருத்துச் சொல்வோர் உள்ளனர்.
உண்மையில் இதை வன்முறைக்குள்ளும் மற்றும் பொலிஸ் சட்ட ஒழுங்குக்குள்ளும் வைத்து விடையத்தை புரிந்துகொள்ள முடியாது. அப்படி பார்ப்பதே பெரும்பலனோரின் சிந்தனையாக உள்ளது. உண்மையில் என்ன நடக்கின்றது? ஏன் இவை நடக்கின்றது?

குறித்த இரண்டு மரணங்களின் எதிர்வினையல்ல இவை. இவை திட்டமிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் அல்ல. மாறாக தன்னெழுச்சியான பிரஞ்சு அல்லாத சமூகத்தின் எதிர்வினை நிகழ்ச்சியே. பிரான்சில் இந்த வருடம் மட்டும் நகாப்புற கெரிலா தாக்குதலுக்கு உட்பட்ட 30000 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன என்றால், இ;தன் சமூக விளைவுகள் தான் என்ன. பிராஞ்சு சமூகத்தில் அன்றாடம் வன்முறைகள் நிகழ்கின்றன என்பதும், இன்றைய சம்பவங்கள் ஒரு எழுச்சியாக உள்ளது அவ்வளவே. இந்த வன்முறைகள் நேரடியாக, வெள்ளையின மக்களை குறிவைத்து தாக்குதலாக நடப்பதில்லை. மாறாக பொருட்களை சேதமாக்குவதாக, பொலிசுடன் மோதுவதாக உள்ளது. இங்கும் இன அடிப்படையில் திட்டமிட்டு தெரிவு செய்த தாக்குதலாக நடப்பதில்லை. குறிபட்ட இனம் பெருபான்மையாக தாக்குதலில் ஈடுபடும் போது, தனது இனத்தைத் தவிர்த்து அல்லது சலுகை வழங்கி வன்முறையை நடத்துவதில்லை. இது மிக முக்கியமான ஒரு அம்சம் கூட. உதிரியான களவுகளின் போது மட்டும் மனிதர்கள் தாக்கப்படுவதும், இனம் கண்ட வகையில் சிறுபான்மை இனங்கள் மேலானதாக இவை அமைகின்றது.

உண்மையில் இந்த வன்முறையின் மூலம் என்பது, பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொள்கைதான் காரணமாகும்;. சமூகங்களை பிளந்து அவர்களை ஒடுக்க கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சியின் எதிர்வினைகள் தான் இவை. பிராஞ்சு வெள்ளையின ஆளும் வர்க்கம், திட்டமிட்ட வகையில் வெள்ளையின அல்லாத பிரிவுகள் மீதான ஒழுக்குமுறையின் எதிர்வினை தான் இந்த வன்முறைகள்.

இந்த வன்முறையில் ஈடுபடுவர்களின் முதல் தலைமுறையினர் யார் என்று பார்த்தால், பிரஞ்சு தேசத்தை கட்டிய அரையடிமைக் கூலிகள். பிரன்சின் இன்றைய அழகிய தோற்றத்தை நிர்மாணிக்க இறக்குமதியான அன்றைய அரை அடிமைக் கூலிகள்தான், இன்று அதை வன்முறை மூலம் சேதமாக்க முனைகின்றனர். தமது வாழ்வை இழந்து எரிந்து கிடக்கும் சமூகம், அனைத்தையும் எரிக்கின்றது. தனக்கும் தனது வாழ்வுக்கும் உதாவமறுத்த கல்வி நிலையங்களை, தான் நுகர முடியாத வாகனங்கள் என அனைத்தையும் எரியுட்டுகின்றது.

இந்த தலைமுறையின் முதல் தலைமுறை இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து பிரான்ஸ் நகரத்தை மீள நவீனமாக கட்டியமைக்க, அரை அடிமைகளை பிரான்ஸ் ஏகாதிபத்தியம் அரபு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து கொண்டுவந்தனர். அவர்கள் தங்க வைக்கவென நகர்புறச் சேரிகளை உருவாக்கி, அதில் அரை அடிமைகளாகவே வாழ் நிhப்பந்தித்து சுரண்டியது பிரஞ்சு முதாலளி வர்க்கம். மிகக் கேவலமான வாழ்கை முறையையும், வாழ்விடங்களையும் திணித்து, வெள்ளையினம் நெருங்காத வண்ணம் அந்த சமூகத்தையே ஒதுக்கியே வைத்தனர்.

வெள்ளையினம் அவர்களை மிகவும் நகரிகம் குன்றி ஒரு சமூகமாக கருதும் வண்ணம், அவர்களின் வாழ்வை திட்மிட்டே மிகக் கீழ்நிலையில் வாழவைத்தனர். மூன்றாம் உலகில் சேரிகளை ஒத்த குடியேற்றங்களில் அவர்களின் இழிந்துபோன வாழ்க்கை தொடங்கியது. ஒருபுறம் கடுமையான வறுமை, மறுபுறம் குளிரை எதிர்கொள்ள முடியாத குடிசைகளில்; அந்தத் தலைமுறை நசிந்து கிடந்தது. மிகவும் பணிவுள்ள கூலிகளாகவே அடங்கியொடுங்கி இருக்கும் வகையில், பிராஞ்சு முதலாளித்துவ இயந்திரம் கசக்கிப் புளிந்தது. உண்மையில் இந்த மக்களின் இழிவான வாழ்வில், பிரஞ்சு முதலாளி வர்க்கம் கொழுத்து மேலும் நகரிகமடைந்தது.

நகரிகமான பிரஞ்சு தேசத்தின் நவீன நிர்மானங்கள் பூர்த்தியானதைத் தொடர்ந்து, இவர்கள் வேண்டாக் கூலிகளாக மாற்றப்பட்டனர். மறுபக்கம் அரசுக்கு எதிரான பிரஞ்சு தேசமக்களின் சமூக கொந்தளிப்புகளால் மட்டும்தான், அவர்கள் இங்கு வாழவைக்க வேண்டிய ஒரு நிலை உருவானது. அத்துடன் அவர்களின் வாழ்வியல் அடிப்படை மீதான கேள்விகள், அது சார்ந்த போராட்டங்கள், இவர்களுக்காக பிரஞ்சு சமூகத்தின் போராட்டங்களே அவர்களுக்கான நவீன குடியிருப்புகளை அமைக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டது.

இதற்கு எற்ப அரசு வீட்டுத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் வெள்ளையின ஆதிக்க அரசு மிகவும் திட்டமிட்ட வகையில் பிரஞ்சு சமூகங்களுடன் கலக்காத வகையில், திட்டமிட்ட இனக் குடியிருப்புகளையே உருவாக்கினர். இக்குடியிருப்புகள் பல அடுக்கு மாடிகளாகுது. இதற்குள் பிரஞ்சு தேசத்தவர்கள் அல்லாத குடியேற்றத் திட்டங்களாகவே அமைக்கப்பட்டன. சில சந்தர்ப்பங்களின் அவை குறித்த இனங்களின் குடியிருப்புபகளாகவே உருவாக்கினர்.
இப்படி உருவான குடியேற்றங்கள் மிகவும் திட்வட்டமான புறக்கணிப்புக்குட்பட்ட ஒரு சூழ்நிலையில், வெள்ளையின வாழ்விடங்களை விடவும் மிகத் தரம் தாழ்ந் நிலைக்குள் வைக்கப்பட்டது. இந்தக் பெற்றோரின் எதிர்காலக் குழந்தைகளின் கல்வி கூட பெருமளவுக்கு தனித்துவமானதாகவும், பிரஞ்சு சமூகத்துடன் கலக்காத வகையில் குடியேற்றத்தை அண்டிய பகுதியில் அமைந்து இருந்தது. இங்கு இனத் தூய்மை பேனும் நாசிய அனுகுமுறையே இதன் மையக் கூறாக இருந்தது.

இந்த குடியேற்றங்களில் பெருமளவில், சமூக கட்டுமானத்துக்கு என மிகக் குறைந்த கூலிக்காக கொண்டுவரப்பட்டு பின் வேலையிழந்தவர்களின் குடியேற்றமாக மாறியது. சமூக பொருளாதார கூறுகளில் மிகவும் பின்தாங்கிய ஒரு சமூகமாக மாற்றமடைந்தது. இதை மூடிமறைக்க, அவர்களின் சொந்த நாட்டு பண்பாடுகளில் கணப்பட்ட மிகப் பிற்போக்கான சமூகக் கூறுகளை ஊக்குவிக்கப்பட்டது. பிற்போகான சமூகக் கூறும் மிக இறுக்கமான வடிவில் வளாச்சியுற்றது. பிரஞ்சு சமூகத்தில் இருந்த அன்னியமாக இக்குடியேற்றங்கள் மற்றொரு பண்பாட்டு கலச்சாரத்தின் இறுக்கமான போக்கில், தனது பிற்போக்கு அம்சங்களுடன் திருத்தியடைய வைக்கப்பட்டது. வேலையின்மை, வறுமை இதில் இருந்து தப்ப சமூக உதவியை நம்பி வாழ் வேண்டியநிலை. சமூக உதவியை அதிகம் பெற, அதிக குழந்தை என்ற தத்துவம் இக்குடியிருப்புகளின் எழுதப்படாத சட்டமாகியது. எதிர்கால சந்ததியின் நெருக்கடியை இது மேலும் பறைசாற்றியது.

குறித்த சமூகங்கள் பிரஞ்சு சமூகத்திடமிருந்த திட்டமிட்ட வகையில் மிகவும் ஒதுக்கபட்ட ஒரு நிலையில், தமது பிற்போகான சமூகக் கூறுகளின் வளர்ச்சியுடன் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தான் பிரஞ்சு ஆளும் வர்க்கம் விரும்பியது. சொந்த அரசியல் நலனுக்காகவும், வெள்ளையின இனவெறிக் கொள்கைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கும் இது பாதகமான வகையில் திட்டமிட்ட ஒன்றாகவே அமைந்தது. புதிதாக பிரான்சுக்குள் வந்தோரையும் இக் குடியேற்றங்களுக்குள் திணித்தனர். அல்லது இதுபோன்ற குடியேற்றங்களையே உருவாக்கி அதில் நிலைநிறுத்தினர்.

ஆனால் இந்த தலைமுறையின் குழந்தைகளோ, அடங்கியொழுகிய ஒரு சமூகத்தின் (அதாவது பெற்றோரின்) கட்டுக்கோப்பை எற்க மறுக்கும் வகையில் அவர்களின் சூழல் நிர்ப்பந்தித்தது. பெற்றோரிடம் காணப்பட்ட மிக பிற்போக்கான கூறும், வெள்ளையினத்தவரின் திட்டமிட் இன ஒடுக்குமுறையும், அவர்களை தனித்துவமாக்கியது. இது பெருமளவில் லும்பன் கலச்சாரத்தை அடிப்படையாக கொண்ட புதிய ஒரு வன்முறைக் குழுக்களாகவே உருவாகின. இவர்களுக்கென ஒரு தனித்துவமான கலச்சாரத்தை உருவாக்கும் வகையில், பெற்றோரும் பிரஞ்சு வெள்ளையினச் சமூகமும் உதைத்து தள்ளியது. இது நாடு முழுக்க ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலும், ஒரே மாதிரியானதாக குறித்த குடியிருப்புகளில் உருவாக்கியது. இது பிரஞ்சு பொதுக்கலாச்சார நடைமுறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதால், அவர்களைக் கையாள்வது ஒரு முரண்பாடாகவே மாறியது. இதை எதிர் கொள்ளும் போது, இதைப் பிழற்சி குன்றி ஒன்றாக காண்பதில் இருந்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறானதாக மாறியது.

பிரஞ்சு சமூகப் பொருளாதாரத்தில் நுகர்வுக் கலச்சாரமே முதன்மைப் பண்பாடக உள்ள ஒரு அமைப்பில், அதை நுகர்வது என்பது இலட்சியமாக வாழ்க்கையாக ஒழுங்குகமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வாழ்க்கை நெறியாக புகட்டப்படுகின்றது. கல்வி முதல் பொழுது போக்கு ஊடாகங்கள் வரை இதையே மீளமீள ஒதுகின்றன. இந்த நிலையில் இந்த நுகர்வுக் கலச்சாரத்தை அடைய முடியாத வகையில், இக்குடியேற்ற பெற்றோர்கள் வேலையிழந்து அல்லது ஊரில் உள்ள சொந்த பந்தங்கள் என்ற ஒரு வாழ்க்கை முறை உள்ளது. ஒருபுறம் வேலையின்மை, மறுபுறம் மிதப்படுத்தும் பணத்தை சொந்த நாட்டுக்கு அனுப்பவேண்டிய ஒரு நிலைமை. இது இவர்களின் குழந்தைகளுக்கு மிக முரண்பாடன ஒன்றாகவே அமைந்தது. குழந்தை தனது சொந்த நுகர்வில் மட்டும் கவணத்தை குவிக்கும் இச் சமூக அமைப்பில்;, பெற்றோரின் நடத்தைகள் முரண்பாடானதாக மாறுகின்றது. பெற்றோரின் வேறுபட்ட சிந்தனை மற்றும் கலச்சார முறைமை மற்றும் தமது பிற்போக்கு அம்சங்களை குழந்தைக்கு திணிக்க முயலுதன் எல்லாம் முரண்பாடகவே மாறுகின்றது. குழந்தை இதற்கு எதிராக முரண்பாடகவே வளருகின்றது.

மறபுறத்தில் பிரஞ்சு சமூகத்தில் இருந்த நிறம் சார்ந்த இனம் சார்ந்த புறக்கணிப்பு ஒரு முரண்பாடாகவே இக் குழந்தைகள் உணருகின்றன. அனைத்தும் பிஞ்சில் இருந்தே இக் குழந்தைகள் அனுபவித்த ஒரு முரண்பாடகவே வளருகின்றன. வெள்ளையின நிறவெறிக் கொள்கை கல்வி ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாக இவர்களை புறக்ணிக்கும் போது, வீதியில் அராஜகவாத லும்பன்களாக வீசியெறிப் படுகின்றனர். பிரஞ்சு இனவாத நடத்தைகள், இவர்களை வீதியில் அலையும் சமூக லும்பன் கும்பலாக உருவாக்கியது. இது பிரஞ்சு தேசம் முழுக்க குறித்த குடியிருப்புக்களின் தொடர்பற்ற ஒரு நிலையிலும் கூட ஒரு பொதுப்பண்பாகும். அவர்கள் பிரஞ்சு பண்பாடாக உள்ள நுகர்வை அடைய ஒரு வெறிகொண்ட மனிதர்களாகவும், அதேநேரம் பணம் கொடுத்தே வாங்க முடியாத வாழ்கை நிலைமை லும்பதனமான வன்முறையின் பிறப்பிடமாகின்றது. இதுவே அராஜாகவாதக் கும்பலாக மாற்றம் எடுக்கின்றது. இருப்பதை எல்லாம் அடித்து நொருக்கும் பண்பாடாகவே மாறுகின்றது. எந்த சமூக ஓழுங்கையும் மறுக்கும், இயல்பான வன்முறைக் கும்பலாக மாறுகின்றது. மற்றவனிடம் இருப்பதை பறிப்பதும், அதை நுகர்வதும் இதன் கொள்கையாகின்றது.
சமூகத்தையிட்டு ஒரு பொதுப்பார்வை இது கொண்டிருப்பதில்லை.

இப்படி முரண்பாடகவே சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளாகும் ஒரு சமூகம் எதைச் செய்யுமோ, அதை அப்படியே செய்கின்றது. இது எங்கும் யாருக்கும் பொருந்தும்;. தமிழ் பேசும் மக்களுக்கும் கூட பொருந்தும்;. இதன் விளைவு தான் இன்றைய இனம் சார்ந்த சில பிரிவினரின் கலவரம் சார்ந்த வன்முறைகள். எதற்கும் அஞ்சாத வன்முறையாளராக இவர்கள் மாறுகின்றனர். இவர்களுக்கு என்று எந்த இலட்சியமும் இச் சமூக அமைப்பில் இல்லாமையால், எதற்கும் துணிந்து வன்முறையில் ஈடுபடுகின்றது. இதனால் தான் இதை கட்டுபடுத்த முடியாதுள்ளது. சட்டம் மற்றும் தண்டனைகளுக்குள் இது அடங்கிப் போய்விடுவதில்லை. இது சமூக ரீதியாக மட்டும் தீர்க்கப்பட வேண்டியவையாக உள்ளது. ஆளும் வர்க்கத்தினரிடையேயான முரண்பாடாக இது மாறுகின்றது. இதனால் இந்த வன்முறை பிரஞ்சு அரசியலில் மிக முக்கிய இன நிறவாத அரசியல் விடையமாகிவிட்டது.

குறித்த சம்பவம் தொடங்கிய பகுதியில் வேலை இல்லாத் திண்ணடாம் 25 சதவீகிதத்துக்கு மேலாதாக உள்ளது. அதாவது பிரான்சில் வேலை இல்லாத் திண்ணடாம் 10 சதவீகிதமாக உள்ள போது, இங்கு அது 25 சதவீகிதத்தைத் தாண்டியுள்ளது. குறித்த பகுதியில் இளைஞர்களின் வேலையின்மை 50 சதவீகிதத்தை தாண்டுகின்றது. இது வன்முறை பிரதேசங்கள் எங்கும் ஒரெவிதமாக உள்ளது. பொதுவாகவே சமூகத்தில் இருந்தம், இது முற்றிலும் மாறுபட்ட பிரதேசங்களாகவே உள்ளது. வேலையின்மை பெருமளவில் வெள்ளையினம் அல்லாதவர்களிடையே தான் அதிகமாக உள்ளது. வேலையில்லாத நிலையிலும், எந்தவிதமான சமூகப் பொழுது போக்குமற்ற நிலையில், வீதிகளில் வன்முறை கொண்டு திரியும் உதிரிக்குழுக்களாகவே இவர்கள் மாற்றப்படுகின்றனர்.

பிரஞ்சு சமூகம் இந்த வன்முறைக்கான சமூகக் காரணங்களை கண்டறிந்து தீர்க்கத் தவறிவிடுகின்றது. முன்பு அரசில் இருந்த சோசலிச அரசு இவர்களை கட்டுப்படுத்த அவர்களின் தொடர் குடியிருப்புகளையே இடித்து தள்ளி, வன்முறை இளைஞர்களை இடமாற்றி புதிய தொடர் குடியேற்றங்களை நடத்தினர். அதாவது வன்முறை குழுக்களுக்கு இடையிலான தொடர்பை துண்டிப்பதன் மூலம் வன்முறையை கட்டுப்படுத்த போவதாக இதன் மூலம் பீற்றினர். அதத்துடன் அவர்களில் ஒருவரை தெரிவு செய்து பொழுதுபோக்கு கலச்சார மையங்களை கடந்த காலத்தில் திறந்தனர். இதன் மூலம் சமூக வன்முறைகனைக் கட்டுபடுத்த முடியும் என்று நம்பினர். இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின் அந்த சமூக மையங்களையும், காலச்சார நிலையங்களையும், பொழுது போக்கு மையங்களையும் முடியதுடன், அவர்களை வேலையைவிட்டே துரத்தியடித்தது.

அதற்கு பதிலாக பொலிஸ் எண்ணிக்கை அதிகரித்ததுடன், சிவில் உடை பொலிஸ்சாரை பெருமளவில் அமர்த்தி வன்முறையைக் கட்டுப்படுத்த போவதாக கூறி, பொலிஸ்சாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. பொலிஸ் தனது கையில் அதிகரத்தைக் கொண்டு, இந்த சமூகங்கள் மீதான இனவாத அனுகுமுறையைக் கையாளுகின்றது. பொலிஸ் சமூகத்தின் முன் தன்னை வன்முறையற்ற ஒன்றாக காட்டி நடித்து வந்த பாத்திரத்தை தாண்டி, வன்முறை கொண்ட பொலிஸ் குண்டாகளாக நடமாடத் தொடங்கினர். இந்த சமூகத்தை எந்தநேரமும் கண்கணிக்கும் ஒரு இனவெறிக் கும்பலாகவே, தமத சொந்த நடத்தைகள் மூலம் மாறிவருகின்றது.

இந்தப் போக்கு வன்முறை கொண்ட இளைஞர் குழுக்களின் முன் சவாலாக மாறிவருகின்றது. அந்த இளையர்கள் ஆதிக்கம் செலத்தும் பகுதிகள் எங்கும் பொலிசார்ருக்கு எதிரான வகையில், தூசணத்தால் எழுதப்பட்ட சுலோகள் முதல் குறித்த சில மந்திரிக்கு எதிராகவும் கூட சவால் விடப்பட்டு எழுதப்படுகின்றது. உண்மையில் பொலிசாரின் அதிக அதிகாரம் கொண்ட நடத்தைகளை எதிர்த்து, சவால்விடும் வகையில் இளைஞர் குழுக்கள் அனுகத் தொடங்கினர். இதுவே நகர்புறக் கெரிலா வகையிலான வன்முறைத் தாக்குதலாக மாறியது. ஏன் இந்த வன்முறை குழுக்கள் உருவாகின்றன என்ற ஆராய்ந்து திர்க்க முற்பாடத நிலையில், அதிகரித்த அதிகாரம் கொண்ட பொலிஸ் நடைமுறை மற்றும் சட்டங்கள் மூலம் பரிகாரம் காணும் அரசின் நாசி அரசியல் சார்ந்த வழிமுறை, வன்மறையை மேலும் அதிகரிக்க வைக்கின்றது.

இதன் விளைவும் இந்த அராஜகவாத வன்முறைக் கும்பலுக்கும் இடையில் எந்த தொடர்பற்ற ஒரு நிலையலும் கூட, அவர்களின் நடத்தையில் ஒரு ஒருமித்த இணைப்பை எற்படுத்திவிடுகின்றது. இதன் எதிர்வினை சகல மட்டங்களில் பிரதிபலிக்கின்றது. குறிப்பாக இப்படி 1000 மேற்பட்ட இடங்களில், தடக்குள் ஒழுங்கு படுத்தப்படாத அதேநேரம் இனைந்த செயலாற்றக் கூடிய வகையில், பொலிஸ் நடவடிக்கைகளே தன்னியல்பாக இணைப்புகளை உருவாக்கிவிடுகின்றது. உண்:மையில் ஒழுங்குபடுத்தபட்ட நலீன வசதிகளகளைக் கொண்ட பொலிசார், இதைக் கட்டுபடுத்தவே முடியாது திணறுகின்றது. அந்தளவுக்கு சமூக முரண்பாடு தீவிரமான நிலையை அடைந்துள்ளது.

பொலிசாரின் இனவாதம் சார்ந்த அன்றாட நடத்தைகள் தான், இவர்களின் ஒருங்கினைந்து செயல்படக் கூடிய வகையில் ஒரு அடிப்படையாகவே மாறற்றி விடுகின்றது. இந்த நிலையில் இன்றைய உள்துறை அமைச்சர் சாக்கோசியே, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி கட்சின் வேட்ப்பளராக போட்டியிட உள்ளார். அவர் வழமையான வலதுசாரிக் கொள்கைக்கு பதிலாக, தீவிர இனவாதியான லுப்பெனின் அரசியல் கொள்கைகள் சிலவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், வெற்றிபெற முடியும் என்று கருதுகின்றார்.

நாசிய இனவாதியான லுப்பென் கட்சிக்கு உள்ள இனவாத நிறவாத அரசியல் செல்வாக்கை உடைக்க, அக் கட்சியின் இனவாதக் கொள்கைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தனது வெற்றி சாத்தியம் என்று நம்புகின்றார். இந்த வகையில் நாசிய இனவாதக் கொள்கைகள் பலவற்றை தனதாக்கி, லுப்பெனுக்கே சாவல் விடுமளவுக்கு இனவாதியாக வளாச்சியுறுகின்றார். இதை லுப்பெனே தீட்டி தீர்த்து சொல்லும் நிலைக்கு, அரசியல் நிலவாரம் மாறிவருகின்றது.

வன்முறை கட்டுப்படுத்துவதே நிற இனவாதிகளின் அரசியல் கொள்கைகளில் பிரதான கொள்கையாக உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்துவது என்பது, வன்முறையில் பெருமளவில் ஈடுபடும் வெளிநாட்டவர் மீதான நடவடிக்கையே. இதை அடிப்படையாக கொண்டே தேர்தல் வியூகங்கள் நடைமுறையில் வளாச்சியுறுகின்றன. வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு, இன்றைய வன்முறைகள் அவசியமாகிவிட்டது. வன்முறையை அதிகரிக்க வைப்பதன் மூலம், அதைக் கட்டுப்படுத்தும் அரசியல் காதநாயகர்களுக்கே தேர்தல் வெற்றி என்பது இன்றைய உள்துறை அமைச்சரின் கொள்கை மட்டமல்ல, தீவிர இனவாத நாசிகளின் கொள்கையும் கூட. இந்த வகையில் பொலிஸ் வன்முறை இந்த சமூகங்களுக்கு எதிராக அதிகரிப்பதன் மூலம், எதிர் வன்முறையை அதிகரிக்க வைக்கமுடிகின்றது. இதைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அதிகாரத்தை பெறுதல் என்ற இலட்சியம் இன்றைய அரசியலாக உள்ளது.. இதை நோக்கித் தான், இந்த வன்முறை நகருகின்றது.

அண்மைக் காலமாக வெளிநாட்டவர்களின் சிறு தொழில் துறைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது என்றுமில்லாத வகையில் கடுமையான கண்கணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றது. சட்டப்படி நடவடிக்கை என்ற பெயரில், வெளிநாட்டவரின் வர்த்தக முயற்சிகள் முடக்கப்படுகின்றன. இது ஒரு இனவாத அடிப்படையில் தொடர்ச்சியாகவே அன்றாடம் நடக்கின்றது. வெளிநாட்டவர்களின் மேல் கடுமையான அழுத்தம் மற்றும் நிர்ப்பந்தங்கள் மூலம் வெறுப்பபை வளர்க்கின்றனர். மறுபுறம் இந்தச் சமூகங்களை குற்றப் பரம்பரையினராக, இது போன்ற நடவடிக்கைகள் மூலம் காட்டி, பிரஞ்சு சமூகத்தை இனவாதமாக்கும் அரசியலலை நகர்த்துகின்றனர்.

இன்று பிரஞ்சு சமூகத்தில் குற்றங்களை எடுத்தால் அதிகளவுக்கு திட்மிட்ட குற்றங்களைச் செய்வோர் பிரஞ்சு சமூக்கத்தவராகவே உள்ளனர். ஆனால் உதிரியான வன்மறையை எடுத்தால், வெளிநாட்டு சமூகமாக உள்ளது. குற்றத்தின் தன்மையே தன்னியல்பான ஒரு சமூக ஆய்வாகி, பலவற்றை போட்டுடைக்கின்றது. திட்மிட்ட குற்றங்கள் தான் ஆபத்தானவை அபாயகாரமானவை. ஆனால் அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இந்த இனவாதிகள் யாரும் பீற்றுவதில்லை. உதிரிக் குற்றங்களை கட்டுப்படுத்துவது பற்றி பீறிடுவது, உள்ளடகத்தில் நிறவெறிக் கொள்கையே.

உண்மையில் இந்த வன்முறையாளர்கள் சமூகத்தில் இருந்து அன்னியமான சூழலில், தனித்தவிடப்பட்ட நிலையிலேயே உருவாகின்றனர். பிரஞ்சு பாட்டாளி வர்க்கத்தில் தனது விடுதலை பற்றி நம்பிக்கையினங்கள் தான், இதற்கான முக்கிய காரணம்;. சமூகத்தின் விடுதலை பற்றி சொந்த உணர்வு சிதையும் போது, பிரஞ்சு எகாதிபத்தியத்தின் நிறவெறிக் கொள்கையை இனம் காணமுடியாத சமூகமாக மாறுகின்றது. இந்த நிலையில் அந்த சமூகதத்தின் அவலநிலையை இனம் காணமுடியாத போது, இதை மாற்றியமைக்கும் போராட்டத்தை பிரஞ்ச சமூகம் முன்னெடுக்க முடிவதில்லை. சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை முன்னிறுத்தி போராட முடியாத ஒரு நிலையில், பாதிக்கப்படும் சமூகத்தில் உதிரித்தனமான லும்பன் தனமான வன்முறைக் கும்பலாகவே அவை சீராழிகின்றது.

பரிஸ் நகரில் கறுப்பின மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டித் தொகுதி முழுக்கவே எரிந்த நிகழ்ச்சிகள் கூட மிக அண்மையில் தான் நிகழ்ந்தன. குறிப்பாக இந்த வீட்டுக் குடியிருப்புகள் நிலைபற்றி தொலைகாட்சிகளில் காட்சிபடுத்தப்பட்டன. துர்நாற்றமும் அதற்கேற்ப அழுகிப்போன வீடுகளில், அந்த மக்கள் மட்டும் வாழவில்லை. பூஞ்சனம் சுவர் வண்ணமாக அலங்கரிக்க அதில் கரப்பான் பூச்சிகள் நீந்தி விளையாடு;கின்றன. எலி முதல் எல்லா உயிரணத்தினதும் குடியிருப்புகள் அவை. இங்கு மனிதர்கள் வாழமுடியாத நிலையில், அங்கு வாழ்க்கை நடத்தும் மக்கள் எப்படி தமது வாழ்வுடன் சிதைந்து போகின்றார்களோ, அப்படித் தான் அந்தப் பெற்றோரின் குழந்தைகளும் கூட சிதைந்து போகின்றார்கள். உலகில் நாகரிகமாக பாரிசில் இப்படி வீடுகளில் வசிக்கும் பல லட்சக்கானக்கான மக்களின் நிலையிட்டு கண்டு கொள்ளாத சமூகம், என்ன தார்மீகப் பலத்துடன் இந்த வன்முறையை கண்டிக்கமுடியும்.

இப்படி பலவிதமாக வளரும் குழந்தைகள், வன்முறையில் ஈடுபட்டால் பெற்றோரைத் தண்டிக்க வேண்டும் என்று வலதுசாரி அரசியல்வாதிகள் வாதிடுகின்றனர். நகைப்புக்குரிய இந்த வாதம் சட்டமானல், நீதிமன்றத்தில் ஒரு பெற்றோரின் ஒரு குழந்தை வன்முறையுடனும் அதே பெற்றோரின் மற்றைய குழந்தை வன்முறையில் ஈடுபடவிட்டால், எப்படித்தான் தீர்ப்பை வழங்குவர். தண்டனை தாய்க்கா! அல்லது தந்தைக்கா! அல்லது இருவருக்குமா! குற்றத்துக்கு காரணம் பெற்றோரின் வளர்ப்பு என்ற வாதமே நகைப்புக்குரியது. குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு கணிசமாக உள்ளது என்ற போதும் கூட, குழந்தையின் மொத்த வளர்ச்சியையும் தீர்மானிப்பது அந்த குழந்தையைச் சுற்றியுள்ள சமூகம் தான். குழந்தைக்கு முன்னால் காட்டப்படும் அனைத்து சினிமாவும் (காட்டூன் உட்பட) வன்முறை கொண்டதே. ஆனால் குழந்தை வன்முறையில் ஈடுபடக் கூடாது என்ற அரசியலே நகைப்புக்குரிய ஒன்று மட்டுமல்ல, சமூகத்தையே ஏமாற்றுவதே.

இதேநேரம் லும்பன் தனம் கொண்ட அராஜக சமூகங்கள் பிரஞ்சு சமூகத்தில் இருக்கின்றன. அவர்கள் இது போன்ற வன்முறையில் ஈடுபடுவதில்லை. மாறாக அரசுக்கு எதிராக மட்டும் வன்முறையில் ஈடுபடுகின்றன. இங்கு திட்மிட்ட ஒழுங்குமுறை உண்டு. ஆனால் அதில் இருந்து இது முற்றிலும் மறுபட்டதுடன், உதிரி வன்முறைக் கும்பலாகவே உள்ளது. உண்மையில் இந்த சமூகத்தின் இனவெறிக் கொள்கைக்கு எதிராக பிரஞ்சு சமூகம் போராடத வரை, இனவாதிகள் விரும்பும் வன்முறையும் பொலிஸ் ஆட்சியுமே மேலும் வக்கிரமடையும்.

இது பற்றி புலம்பெயர் தமிழர்கள் எப்படி எதிh வினையாற்றுகின்றனர். நாங்கள் தமிழ் பாசிசத்தை ஆதாரிக்கும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், பாசிசம் சொல்லும் ஒழுங்கும் கட்டுப்பாட்டை இயல்பில் ஆதாரிப்பவராக மாறிவிடுகின்றனர். பிரஞ்சு உள்துறை அமைச்சரை ஆதாரிக்கும் வகையில் இவர்கள் கூச்சலெழுப்புகின்றனர். சட்டம், ஒழுங்கு என்ற பிதற்றுகின்றனர். வேலையற்றோருக்கு வழங்கும் சமூக உதவியை எடுத்து, திண்டுவிட்டு தினவெடுத்து திரிவதாக வம்பளக்கின்றனர்.

உண்மையில் சமூக உதவி 18 வயதுக்கு கூடியவர்களுக்கு 26 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கிடையாது. அவர்களின் பெற்றொருக்கும் கூட இதற்காக எந்த சமூக உதவியும் கிடையாது. இங்க திண்டு தினவெடுத்தல் என்ற வார்த்தையை ஒரு இழிவான அடிப்படையில் பிதற்றுவதே. ஊரில் "பள்ளு பறைகள்'' திண்டு திணவெடுப்பதாக இழிவாடிய எமது உயர் சாதிய சமூகங்கள், இங்கு "கறுவல் அடை'' என்று இழிவாடுகின்றனர்.

சிலா கேட்கின்றனர் இரவு எட்டு மணிக்கு பிறகு வீதியில் இளைஞர்களுக்கு என்ன வேலை என்கின்றனர். தாம் மிகச் சிறந்த ஒழுக்கமுள்ளதும், சட்டத்துக்கு கட்டுப்பட்டவராகவும் கூட காட்டுகின்றனர். ஆனால் தனது குழந்தைகள் இதில் ஈடுபடுவதில்லை என்றும், ஈடுபடுபடப்போவதில்லை என்றும் நம்புகின்றனர். பணிவுள்ள கூலிகளாக இருப்பதே, தமது இனத்தின் பெருமை என்ற பீற்றுகின்றனர். இதைத் தான் இன்று வன்முறையில் ஈடுபடும் குழந்தைகளில் பெற்றோரும் கூட ஒரு காலத்தில் கூறியவர்கள்.

தமிழ் குழந்தைகளின் இன்றைய நிலையென்ன. அவர்கள் இன்னமும் பெற்றோரின் கட்டுபாட்டில் இருக்கக் கூடிய சிறிய வயதில் பெருமளவில் காணப்படுகின்றளர். ஆனால் அவர்கள் வன்முறையாளரக வளரக் கூடிய அனைத்துச் சூழலும் வீட்டில் காணப்படுகின்றது. உதாரணமாக தமிழ் பெற்றோரின் குழந்தைகள் படுக்கப்போகும் நேரமே, பெருமளவில் இரவு பன்னிரண்டு மணிதான். இந்தக் குழந்தைகள் வளர்ந்த பின்பு, இரவு பன்னிரண்டு மணி வரை பெற்றொருடன் (கிழவன் கிழவியுடன்) வீட்டில் இருக்குமா அல்லது வீதியில் நிற்குமா? நிச்சயமாக வீதியில் தான். வீட்டில் 12 மணிவரை வீட்டில் இருக்கக் கூடிய பொதுச் சூழல் சாத்தியமே இல்ல. மற்றொரு உதாரணம் பெருமளவில் குழந்தைகளை தாய்மார் காட்டுபடுத்த முடியாத நிலைக்குள் சென்று விடுகின்றனர். தமிழ் தாய்மாரின் தொனதொனப்பு குழந்தைகளை வீட்டைவிட்டு வீதியில் நிறுத்தும். இப்படி சாதாரணமாக பல விடையங்களைப் பார்க்கமுடியும். எமது குழந்தைகள் வன்முறையில் ஈடுபடக் கூடிய சூழல் வீட்டில் இருந்தே உருவாகின்றது.

இன்று தமிழ் குழந்தைகள் பலர் வீதிகளில் நிற்கின்றனர். சனத்தொகை வீகிதத்துடன் இதை ஒப்பிடின் வன்முறை கொண்ட தமிழ் குழுக்கள், சில குறித்த தமிழ் பிரதேசங்களில் காணப்படுகின்றது. கொலை, கொள்ளை, அடிதடி, வன்முறை என்று, தமிழரின் சில விசேட குணத்துடன், எதையும் எப்படியும் செய்யும் ஒரு நிலையில் கணப்படுகின்றனர். ஏன் இன்று இந்த வன்முறை பற்றி, முரண்பட்ட நேர் எதிரான அபிராயம் கூட குடும்பத்தில் காணப்படுகின்றது. பெற்றோர் பொலிஸ் பக்கம் நிற்க, சுதந்திரமான குழந்தைகள் இளைஞர்கள் பக்கம் நிற்கின்றனர்.

எமது சிந்தனை முறை துரோகி, தியாகி என்ற மட்டும் மதிப்பிட்டு பழகியதால், பொலிசை ஆதாரிப்பது அல்லது பொலிசாருக்கு எதிரான கும்பல் வன்முறையை ஆதாரிப்பது என்று எங்கும் ஒரு விதண்டவாதங்கள் அரங்கேறுகின்றன. இந்த வன்முறை கும்பலின் உருவாக்கம் என்பது, அந்த சமூகத்துக்கு மட்டுமான பொது விதியல்ல. இது எமக்கும் பொருந்தும். இதை எமது விதண்டவாதங்கள் தடுத்து நிறுத்திவிடாது. மாறாக இதன் உண்மை முகத்தை கண்டு, அதை நாம் உணர்ந்து எதிர்வினையாற்றும் போதுதான், இதில் இருந்து எமது குழந்தைகளையும் சமூகத்தையும் சரியாக வழிகாட்டமுடியும்.

Sunday, November 6, 2005

பாடல்கள், உரைகள் மற்றும் காட்சிகள்

வெவ்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒலி, ஒளி தொகுப்புகள் பாடல்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இது மனித இனம் மனிதனாக வாழவேண்டிய அவசியத்தை பாடல்கள், உரைகள் மற்றும் காட்சிகள் மூலமாக உணரவைக்கின்றது. மனித அவலங்களின் பன்முகத் தன்மையையும், அவற்றுக்கான சமூக காரண காரியங்களை விளக்கி அதை மாற்றக் கோருகின்றது.

இதை கேட்க http://tamilcircle.net/CASTE/caste.main.htm