தமிழ் அரங்கம்

Saturday, October 4, 2008

கொக்கோகோலாவின் ஏகபோக விநியோகத்தை, அதிக வரி மூலம் புலிகள் தமது கட்டுப்பாட்டில்...

புலிகளின் வரவாற்றில் அவர்களை முதன் முதலாக தமிழ் மக்கள் மிக நெருக்கமாகவே, சொந்த அனுபவவாயிலாக புரிந்து கொண்டுள்ளனர். மக்களை நேரடியாக பாதிக்கின்ற உடனடி நிகழ்ச்சி, பரந்துபட்ட மக்களை விழிப்படைய வைத்து விடுவதுண்டு. இது புரட்சிக்குரிய தயாரிப்பு காலங்களில் புரட்சியின் உந்து விசையாகின்றது. தமிழ் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி உடனடி நிகழ்வால் அல்ல, ஒரு குறுகிய கால நடவடிக்கையால் நடந்துள்ளது. அமைதி சமாதானம் புலிகளுக்கு எதிரான மனஉணர்வை தமிழ் மக்களின் உணர்வு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 வருட போராட்டத்தில் அவர்களின் போலித்தனமான வேடங்கள் மக்கள் முன் அம்பலமானது, இந்த அமைதிக்கு பின்னான காலகட்டத்தில் தான், மக்கள் ஒவ்வொருவரும், சுயமாக புலிகளை சொந்த அனுபவம் வாயிலாக மிக நெருக்கமாக புரிந்து கொண்ட நிகழ்வு, முதன் முறையாக நிகழ்ந்துள்ளது. இந்த அனுபவம் துரதிஸ்டவசமாக தவிர்க்க முடியாது, சொந்த இனத்தின் மொத்த நலனுக்கு எதிரானதாக உள்ளடகத்தில் பிரபலிக்கின்றது. எந்த பிரச்சார சமூக வடிவங்களையும் தாண்டிய மக்களின் சொந்த அனுபவம், புலிகளின் அரசியல் அழிவுக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது. தமது சொந்த அழிவுக்கே தாமே வித்திடும் அழிவுக்குரிய மக்கள் விரோத நடவடிக்கைகளை, புலிகள் தமது சொந்த அரசியலாக வரிந்து கொண்டுள்ளனர்....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக .....

மூன்றாவது தமழீழத் தேசிய விளையாடு விழாவை புலிகள் 20.2.2004 கிளிநொச்சியில் நடத்தினர். அந்த தேசிய விழாவில் கொக்கோகோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரியளவில், புலிக் கொடியின் பின்னணியில் வடிவமைக்கப்பட்டடிருந்தது. (பார்க்க 21.2.2004 தினக்குரல் பத்திரிகையில்) சாதாரண செய்திப் பத்திரிகையிலேயே இப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. உத்தியோகபூர்வமற்ற வகையில் புலிகளின் ஆதரவுடன், தமிழீழத் தேசிய குடிபானம் கொக்கோகோலாவாக மாறியுள்ளது. இதன் மூலம் துரோகியான தேசிய குளிர்பானத்துக்கு, துரோக தண்டனையாக மரணதண்டனை வழங்கப்பட்டு விட்டது. இதை யாரும் உரிமை கோரவில்லை. இதற்காக வழமைபோல் யாரும் குரல் கொடுக்கவுமில்லை. புலிகள் பன்னாட்டு பொருட்களின் இடைத்தரகராக மாறிவரும் நிலையில், தேசிய பொருளாதாரத்தின் எஞ்சிய மூச்சுகளும் சேடமிழுக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் கொழும்புத் தரகர்களுக்கு கீழ் இருப்பதை விட, நேரடி தரகராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தான் சிங்கள இனவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற கூத்தை நடத்துகின்றனர்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மறையாது மடியாது நக்சல்பாரி

மறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு)

உலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி!

"கம்யூனிசம் தோற்றுவிட்டது; தனியார்மயம் தாராளமயம் உலகமயம்தான் ஒரே தீர்வு!'' என்று எக்காளமிட்ட முதலாளித்துவம், அனைத்துலக முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவிலேயே முதுகெலும்பு முறிந்து மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டு விட்டது. அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; கட்டுப்பாடற்ற ஊகவணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகள் இவற்றால் விபரீத விளைவுகள் நேரிடும் என்று தெரிந்தே "அப்படியெல்லாம் நடக்காது; எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்ற ஆணவத்தோடு செயல்பட்ட தனியார் ஏகபோக நிதிக் கழகங்கள், "சப் பிரைம் லோன்'' எனும் தரமற்றவர்களுக்கு தரப்படும் கடன்களால் ஆதாயமடைந்த பின்னர், நெருக்கடி தீவிரமாகி அடுத்தடுத்து திவாலாகி குப்புறவிழுந்து கிடக்கின்றன.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மாக் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியதும் அமெரிக்க அரசு, அவற்றை அரசுடைமையாக்கி நிதிச் சந்தையை தூக்கி நிறுத்த 20,000 கோடி டாலரைக் கொட்டியது. அதைத் தொடர்ந்து, உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமேன் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. அதற்கடுத்து, மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. எனப்படும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் குருப் நிறுவனம் திவாலாகி, அமெரிக்க அரசு 8500 கோடி டாலரை இழப்பீடாகக் கொடுத்து அரசுடைமையாக்கியது. தற்போது............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, October 3, 2008

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு :

1.காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

 

2.வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தை

 

3.கருவாகி உருவான கதை

 

4.விசுவாச நாய்கள்

 

 

5.தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

 

6.சாத்வீகச் சதிச் செயல்

 

7.கை கொடுத்துக் காலை வாரிய காந்தி

 

8.நிலப்பிரபுக்களின் தாசன்

 

9.மூக்கில் நாறிய சுயராச்சியம்!

 

10.அகிம்சையின் நோக்கம்

 

11.மகான் அல்ல; மக்கள் விரோதி!

 

12.பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

 

13.ஏகாதிபத்தியங்களுக்குப் பாதபூசை

 

14.மக்கள் முதுகில் குத்திய காந்தி

 

15."சுதந்திரம்' ஒரு கபட நாடகமே!

 

16.குழப்பவாதிகள்

 

17.படுபிற்போக்காளர்கள்

 

18.இந்து சநாதனி

 

19.சர்வாதிகாரிகள்

 

20.ரௌடிக் கும்பல்

 

21."வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

 

22.மேலும் சில ஆதாரங்கள்


ஏகாதிபத்தியங்களும் - பேரினவாதிகளும் - புலியெதிர்ப்பு உண்ணிகளும் - புலிகளும்

பேரினவாத பேயோ யுத்தத்தை வெல்லும், உச்சக் கொப்பளிப்பில் கொக்கரிக்கின்றது. தமிழ் மக்களை நாயிலும் கீழாக தாழ்த்தி முடிந்தளவுக்கு சிறுமைப்படுத்துகின்றனர். பேரினவாதத்தை ஊர்ந்து நக்கும் கூட்டம், தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்து வருவதாக ஊளையிட்டுக் கூறுகின்றனர்.

இந்த புலியெதிர்ப்பு ஜனநாயகம் என்பது, புலியல்லாத பிரதேசத்தில் புலிக்கு நிகரான பாசிசம். எங்கும், எதற்கும் படுகொலை, கடத்தல், காணாமல் போதல், கைது, புலியென முத்திரை குத்தல், இழிவுபடுத்தல் என அனைத்தும், இந்த ஜனநாயகத்தில் அரங்கேறுகின்றது. இதுவே ஜனநாயகமாக, இந்த பாசிசம் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளது.

முன்பு புலிகளின் பகுதியில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ முனைந்தவர்கள், புலியல்லாத பிரதேசத்தில் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் வாழமுனைந்தனர். ஆனால் இன்று, புலியல்லாத பிரதேசத்தில் சுதந்திரமாக வாழமுடியாது என்ற நிலை. அரசின் கூலிக் கும்பலாக எடுபிடிகளாக மட்டும் தான், யாரும் வாழமுடியும் என்ற நிலை. அரசுக்கு கைக்கூலியாக இருந்தல் தான், சுதந்திரம் என்றளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதையும் சுதந்திரமாக பேசவும், சொல்லவும், செய்யவும் முடியாதளவுக்கு, பாசிசம் மனித சுதந்திரத்தை வேட்டையாடுகின்றது. இதையே தமிழ் மக்களின் ஜனநாயகம் என்கின்றனர். இதைத் தான் தமிழ் மக்களின் தீர்வு என்கின்றனர்.

தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு, இரண்டு பாசிசங்கள் தமிழ் மக்களையே விலங்கிட்டுள்ளது. கண்காணிப்பும், படுகொலை அரசியல் வெறியாட்டமும்,.........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 2, 2008

வெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?)

வெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா?)

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! – பாகம் 2 மருதையன்

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! – பாகம் 2 மருதையன்

தேசம் தேசியம் என்பது புலிகளின் கண்டுபிடிப்பா?

இப்படிச் சொல்வதற்கு ஏற்ற அரசியலுடன் தான், புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. புலியை ஒழிக்க யாருடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ள புலியெதிர்ப்பு கூட்டம், எப்படிப்பட்ட கோட்பாட்டையும் தனக்கு ஏற்ப வைக்கத் தயாராகவே உள்ளது.

அந்த வகையில் 'தமிழ் தேசியத்தை விமர்சித்தால் புலி எதிர்ப்பு, சிங்கள தேசியத்தை விமர்சித்தால் அரச எதிர்ப்பு என கருப்பு வெள்ளையாக பார்க்கும் சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்கின்றது. இப்படி கேட்பது ராகவனுக்கு வேடிக்கையாகி விடுகின்றது.

'..சிந்தனை முறையிலிருந்து எம்மை நாம் விடுவிப்பது எப்போது" என்று கேட்கும் இதில் இருந்து விடுபடும் நீங்கள், எதை அதற்கு பதிலாக எம்முன் வைக்கின்றீர்கள். முதலில் அதைச் சொல்லுங்கள். அப்போது தானே நாமும் விடுபட முடியும். நீங்களே விடுபடுவில்லை என்பதல்லவா உண்மை. நீஙகள் எல்லாவற்றையும் புலிக்கூடாக, புலியொழிப்புக்கு ஊடாக பார்க்கவில்லையா? இது தானே கறுப்பு வெள்ளைக் கோட்பாடு. சொல்லுங்கள்.

ராகவன் எழுப்பும் இந்த தர்க்க வாதமே, அரசியல் உள்ளடகத்தில் தவறானது. விமர்சித்தல் என்பது,..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 1, 2008

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கம்பலை விரட்டு! – பாகம் 1 மருதையன்

இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கம்பலை விரட்டு! – பாகம் 1 மருதையன்

யாழ் மக்கள் சுபீட்சமோ, பேரினவாத 'ஜனநாயக"த்தில் கிடைக்கின்றதாம்!

ஜனநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை முறை எதுவும் கிடையாது. நாம் இதில் இருந்து வேறுபட்டுப் பார்க்கின்றோம்.

மக்களின் அடிப்படை உரிமைகளில் இருந்து இதை நோக்குவதால், புலி மற்றும் புலியெதிர்ப்பு பிரிவுகளிடம் இருந்து கடுமையான எதிர்த்தாக்குதலை ஒரே நேரத்தில் சந்திக்கின்றோம். அவர்கள் இதைக் கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ள முடியாது என்பதால் தான், தனிமனித அவதூறுகளாக சந்திக்கின்றோம். அரசியல் ரீதியாக இதைப் புறந்தள்ளிக்கொண்டு தான், மக்களின் உரிமைகளை நோக்கி முன்னிறுத்தி முன்னேற முடியும். இதை எமது அனுபவம் மட்டுமின்றி, விமர்சனமும் சுயவிமர்சனமும் கூட எடுத்துக் காட்டுகின்றது.

 

பேரினவாத 'ஜனநாயக"த்தில் மக்களுக்கு 'ஜனநாயகம்" கிடைக்கின்றதா? ஆம் என்று சொல்லுகின்ற, அதை ஆதரிக்கின்ற, கண்டும் காணாமல் விடுகின்ற வகையில் புலியல்லாத 'ஜனநாயக" தளங்கள் இயங்குகின்றது. இதற்குள் தான், இப்படித்தான் புலியல்லாத தளங்கள் அரசியல் பேசுகின்றது. ஜயா 'ஜனநாயக" வாதிகளே, இது எப்படி? என்று கேட்டால், நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். நீ ஒருவன் தானே என்று நக்கலும் நையாண்டியும் அடித்து குலைக்கிறார்கள், கடிக்கின்றார்கள் கடித்துவிட்டு...............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்



Tuesday, September 30, 2008

நாம் இந்து இல்லை சொல்லடா

நாம் இந்து இல்லை சொல்லடா (அசுரகானம்)

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல

புலித்தேசியம் ஜனநாயகத்தை மறுக்கின்றது. புலியெதிர்ப்பு ஜனநாயகம் தேசியத்தை மறுக்கின்றது. இதற்குள் நடுநிலை என்பதும் அல்லது இதில் ஒன்றை ஆதரிக்க கோருவதுமான விமர்சனங்கள் அர்த்தமற்றவை.
இந்தப் போக்குகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. புலியை அழிப்பது ஜனநாயகமும் அல்ல, புலியெதிர்ப்பை அழிப்பது தேசியுமுமல்ல.

அண்மையில் "தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்" என்று புதுவை இரத்தினதுரை அழைக்கின்றார். விசித்திரமான கோணங்கித்தனமான அழைப்பு. யாரைத் தான் அழைக்கின்றார்? அவர் சார்பு ஊடகங்கள் நடத்தும் புலிப் பல்லவிக்கு அப்பால், வேறு எதைத்தான் அவர் படைக்கக் கோருகின்றார். சரி எதைத்தான் ஒரு மனிதன் சுதந்திரமாக படைக்க முடியும்?

சரி, தமிழ் மக்களின் கண்ணீர் கதைகளை உலகுக்கு சொல்வது என்பதானால், எந்த உலகத்துக்குச் சொல்வது? சரி, எந்தக் கண்ணீர் கதையைக் கூறுவது? மக்களின் கண்ணீர் பற்றி மூக்கால் சிந்தி நடிப்பதற்கு அப்பால், புலிக்கு மனிதம் பற்றிய கோட்பாடே கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வு மீது எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் கிடையாது. புலிகளின் மாபியாத்தனத்தையும், பாசிசத்தையும் கேள்விக்கு இடமின்றி ஆதரிக்கும், மந்தைக்குரிய இழிபிறவிகளாக மக்களைக் கருதி நடத்துவதே புலிக்கோட்பாடாகும். இதற்கு வெளியில் தமிழ் மக்களின் நலன் சாhந்த பேச்சுக்கு அங்கு இடமேயில்லை. அவர்கள் மொழியில் கூறுவதானால் அதாவது "மேதகு" தலைவர் பிரபாகரன் பெயரில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று புலிகள் அறிவித்து நிராகரித்.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 29, 2008

இடித்துவிட்டான் மசூதியை

இடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம்)

முடிவாக என்னதான் நடக்கப் போகின்றது


புலிகள் எவ்வளவுக்கு எவ்வளவு காட்டுமிராண்டிகளாக, பண்பாடற்றவர்களாக உறுமுகின்றார்களோ, அந்தளவுக்கு தமிழ் இனத்தில் எலும்பு சிதிலங்கள் மட்டும் எஞ்சுவதை யாரும் தடுக்கமுடியாது. பேரினவாதம் மிகவும் பலமான நிலையில், தமிழ் இனத்தை புலிகளைக் கொண்டே அழிக்கின்ற எதார்த்தத்தை, ஒரு காலமும் தமிழ் இனம் தானாக எண்ணியிருக்கமாட்டது. பேரினவாதத்தின் சூழச்சிமிக்க அரசியல் நரித்தனத்துக்கு எதிராக, நியாயமான ஒரு போராட்டம் (அரசியல் மற்றும் இராணுவம்) அவசியமாக இருந்த போது கூட, அதை நியாயமான மக்களின் கோரிக்கைளால் தனிமைப்படுத்தி வெற்றிகரமான போராட்டத்தை நடத்தும் ஆளுமை காட்டுமிராண்டிகளுக்கு எப்போதும் கிடையாது என்பதை தமிழினத்தின் சார்பாக மீண்டும் புலிகள் நிறுவிவருகின்றனர்.

புலிகள் இயக்கமே பதவி வெறியர்களாலும், கொள்ளையடிப்போராலும், சுத்துமாத்துகாரர்களும், ஒட்டுண்ணிகளாலும், பிழைப்புவாதிகளாலும் சூழப்பட்டுவிட்டது. அது இன்று ஒரு போராட்ட இயக்கமே அல்ல என்ற நிலைக்கு, படிப்படியாக தனக்குத் தானே நஞ்சிட்டு சீரழிந்து சிதைந்து வருகின்றது. இந்த சிதைவுகள் சமூகத்துக்கே நஞ்சாகின்றது. தியாகங்கள் எல்லாம் சிலரின் நலனுக்கானதாக மாற்றப்பட்டுவிட்டது. புலிகளை பயன்படுத்தி தாம் நன்றாக வாழமுடியும் என்று நம்புகின்ற பொறுக்கிகளின் கூட்டமே, புலியைச் சுற்றி இன்று.......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, September 28, 2008

அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு


அமெரிக்கா போலே எங்க நாடு ஆகுது வல்லரசு

'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது

தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது. இந்த புலியெதிர்ப்பு அரசியல், மக்களை தமது நடைமுறை அரசியல் போராட்டங்களில் இருந்து எட்டியுதைக்கின்றது. மாறாக மக்களை தமது சொந்த எடுபிடி அரசியலுக்கு பயன்படுத்த கூவியழைக்கின்றது. மக்களை புலிகள் எப்படி தமது சொந்த குறுகிய நலனுக்கு பயன்படுத்த முனைகின்றனரோ, அப்படியே புலியெதிர்ப்பு கும்பலும் செய்ய முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பல் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஏற்ற மறுகாலனிய சூழலையுருவாக்க, மக்களை தமது அரசியல் எடுபிடிகளாகவே வரக்கோருகின்றனர்.


 இதைவிட வேறு எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் கிடையாது. இந்தக் கும்பல் இதைத்தான் தமிழ்மக்களின் புதிய தலைமை என்கின்றனர். இதனடிப்படையில் ஒரு கட்டுரை தேனீ இணையத்தில் வெளியாகியது. "தமிழ்மக்களுக்கு இன்று புதியதொரு ஜனநாயக தலைமைத்துவம் தேவை." என்ற தலைப்பில் வெளியாகியது. ஞாநி என்ற புனைபெயரில் எழுதும் திரோஸ்கியவாதி புலியெதிர்ப்பு எடுபிடி அரசியலை, அரசியல் மயப்படுத்த முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பலுக்கு அரசியல் அடியெடுத்து கொடுப்பவர்கள் இந்த திரோஸ்கியவாதிகள் தான். புலிக்கு அரசியல் வழிகாட்டியவர் முன்னாள் திரோஸ்கிய பாலசிங்கம் என்றால், புலியெதிர்ப்பு கும்பலுக்கும் திரோஸ்க்கிய அன்னக்காவடிகள் வழிகாட்ட முனைகின்றனர்.


எங்கள் எல்லோருக்குமுள்ள அடிப்படையான சந்தேகமே, அனைத்துக்குமானதாக உள்ளது. இந்த "புதியதொரு ஜனநாயக" தலைமை ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமா? பேரினவாதத்தை எதிர்க்குமா? சுரண்டலை எதிர்க்குமா? சாதியம், ஆணாதிக்கம் போன்ற சமூக அநீதிகளையும், சமூக முரண்பாடுகளை ஒழிக்குமா?............
...முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்