தமிழ் அரங்கம்

Showing posts with label தீக்குளிப்பு. Show all posts
Showing posts with label தீக்குளிப்பு. Show all posts

Friday, March 27, 2009

வகுப்புவாத பாறாங்கல்லும், அதன் கோளாறு அரசியலும்..(1)

இன்று இலங்கையில் இரத்தப் பெருக்கெடுக்கும் அரசியலைக் கட்டுப்படுத்தும் சக்தி மக்களிடம் இல்லை. அதற்கான மக்கள் இயக்கங்களும் இல்லை. மூன்று சகாப்தமாக இரத்தம் சிந்திப் பெற்ற யுத்தப் படிப்பினைகளை சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் எந்தப் பக்கத்திடமும் இல்லை. இன்னும் தணியாத இந்த யுத்தத்தின் ஊடாக தமிழீழ தாயகத்தைப் பெற்று விடலாம், பெற்றே தீரவேண்டுமென்று வெளிநாட்டுத் தமிழர்கள் தீராத தாகத்துடனேயே இருக்கின்றனர்.

இத் தாகத்திற்கு புலிகளை எப்படியாவது காத்துவிட வேண்டுமென்பது பலரது விருப்பு. புலிகளும் இவ் யுத்தத்துக்குள் தாம் தப்பிப்பிழைப்பதற்கு மக்களை வலுக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அரசோ அதன் அந்தலை வரை முன்னேறுவதில் முனைப்புக்காட்டி வருகிறது. இந்தநிலையில் வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் என்ன செய்வதென்று தெரியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. வன்னி மக்ககள் சாகவும் கூடாது, புலிகளும் அழியாது. போராட்டம் தொடர வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இந்த இரண்டு விசயங்களும் கடந்த ஒரு மாத்துக்கு மேலாக கணத்துக்குக் கணம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. முதலில் வன்னிமக்களின் நிலை முன்னுக்குத் தள்ளப்பட்டது. ஆயினும், அரசிடமிருந்து யுத்த நிறுத்தத்துக்கான எந்தவிதமான இளகும் தன்மையும் கிடைக்காததால், இதன் தெடர்ச்சியி...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்