தமிழ் அரங்கம்

Showing posts with label அமெரிக்க. Show all posts
Showing posts with label அமெரிக்க. Show all posts

Tuesday, March 24, 2009

அமெரிக்க ஏகாதிபத்தியம் காகிதப்புலிதான்

கொல்லைப்புற வழியாக சோமாலியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா நடத்திய போர் படுதோல்வியில் முடிந்துவிட்டது. சோமாலியா என்றவுடனேயே நமது நினைவுக்கு வருவது, அந்நாட்டைப் பிடித்தாட்டும் பஞ்சமும், பட்டினியால் எலும்பும் தோலுமாகிப் போன அந்நாட்டு மக்களும்தான். இப்படிபட்ட பஞ்சப் பரதேசியான நாடும் அதன் மக்களும், தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போருக்கு ஒரு மரண அடி கொடுத்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தி வரும் ""தீவிரவாதத்துக்கு எதிரான போர்'' வெளியே தெரிந்த அளவிற்கு, சோமாலியா நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் பொதுமக்களின் கவனத்துக்கு வரவில்லை. இதற்குக் காரணம், அமெரிக்கா, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தனது படைகளை இறக்கி, அந்நாடுகளை ஆக்கிரமித்திருப்பதைப் போல் சோமாலியாவில் ஆக்கிரமிப்புப் போரை நேரடியாக நடத்தவில்லை. மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள தனது பிராந்திய அடியாளான எத்தியோப்பியப் படைகளின் மூலம் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. இதன் காரணமாக பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகளால் சோமாலியாவில் நடந்து வந்த இந்தப் போர், சோமாலியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் நடக்கும் அண்டை நாட்டுச் சண்டையாகப் புறக்கணிக்கப்பட்டது.

Saturday, September 13, 2008

தெற்கு ஒசெட்டியா : அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்

ஆகஸ்ட் 7ஆம் நாள் பின்னிரவு. ரஷ்யாவை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு பிராந்தியமான தெற்கு ஒசெட்டியாவின் மீது ஜார்ஜியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. பீரங்கித் தாக்குதலில் அச்சிறு மாநிலத்தின் தலைநகரான ஷின்வெலி தரைமட்டமாக நொறுங்கியது. காகசஸ் மலைப் பிராந்தியமெங்கும் குண்டுகளின் வெடியோசை எதிரொலித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்த இப்போர்த் தாக்குதலில் தெற்கு ஒசெட்டியாவின் நாடாளுமன்றக் கட்டடம், மருத்துவமனைகள், பல்கலைக் கழகங்கள், தேவாலயங்கள் என அனைத்தும் நொறுங்கிக் கிடக்கின்றன. இக்கொடிய போர்த் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட அப்பாவி ஒசெட்டிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உற்றார் உறவினர், வீடுவாசல்களை இழந்து அகதிகளாகியுள்ளனர்.

சோவியத் ஒன்றியம் 1991இல் சிதைந்த போது, அதுவரை ரஷ்யாவுடன் ஐக்கியப்பட்டிருந்த ஜார்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. ஜார்ஜியாவின் வடபகுதியில் ஒசெட்டியர்கள் எனும் தேசிய இனச் சிறுபான்மையினர் உள்ளனர். காகசஸ் மலையின் தெற்கேயுள்ள இப்பகுதி தெற்கு ஒசெட்டியா என்றழைக்கப்படுகிறது. வடக்கு ஒசெட்டியா, ரஷ்யாவுடன் இணைந்துள்ளது.

ஜார்ஜியா தனிநாடாகியபோது, தெற்கு ஒசெட்டியர்கள் சுயாட்சி உரிமை கோரிப் போராடினர். அதேபோல ஜார்ஜியாவின் மேற்குப் பகுதியிலுள்ள அப்காசியர்கள் எனும் சிறுபான்மை தேசிய இனத்தினரும் சுயாட்சி உரிமை கோரி போராட்டங்களைத் ..............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, September 11, 2008

பிணக்காடாகிறது ஈராக் : அமெரிக்க ஆக்கிரமிப்பால் கொல்லபட்ட ஈராக்கியர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தைத் தாண்டிவிட்டது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் பன்னாட்டு விமானநிலையத்தில், கடந்த ஜூன் 25 அன்று பரபரப்பான காலை நேரத்தில் பொதுமக்கள் செல்லும் பாதையில் கார் ஒன்று அனைத்துவிதமான பாதுகாப்புப் பரிசோதனைகளையும் முடித்து விட்டுச் செல்கிறது. அலுவலக வேலைகள் தொடங்க இன்னும் சற்று நேரமே இருக்கும் நிலையில், 8.40 மணிக்கு அமெரிக்க இராணுவ வண்டி ஒன்றில் இருந்து 9 வீரர்கள் அக்காரை நோக்கிச் சரமாரியாகச் சுடுகின்றனர். சிறிது நேரத்துக்கெல்லாம் அக்கார் தீப்பற்றி எரிந்து போகிறது.

அதே விமான நிலையத்தில் இருக்கும் ரஷீத் வங்கியின் மேலாளர் ஹபீத் அபோத் மஹ்திதான் அக்காரை ஓட்டி வந்தவர். பெண் ஊழியர்கள் இருவரையும் வங்கிக்குத் தனது காரிலேயே அவர் அழைத்து வந்து கொண்டிருந்தபோதுதான் இவ்வாறு கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நூறு முறைக்கும் மேலே சுடப்பட்டு சல்லடையாக்கப்பட்ட காரின் எஞ்சின் தீப்பற்றி மூவருமே சாம்பலாகிவிட்டனர்.

உடனே அமெரிக்க இராணுவம் "மூன்று குற்றவாளிகள் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றனர்; திருப்பச் சுட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி வெடித்ததில் மூன்று குற்றவாளிகளும் மாண்டனர்'' என அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இராணுவ வண்டியில் இரண்டு இடங்களில் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருப்பதாகவும் மேலும் அது கதையளந்துள்ளது.

மஹ்தியின் கார் குண்டுகளால் துளைக்கப்பட்ட செய்தி அறிந்ததும், அவரது ஆறாவது மகன் முகம்மது ஹபீத் அங்கு விரைந்திருக்கிறார். தன் கண் முன்னாலேயே தீப்பிழம்புகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த தனது தந்தையை நெருங்க விடாமல் அமெரிக்கப் படைவீரர்கள் அவரைத் தடுத்து விட்டனர். மஹ்தியின் ஆறு குழந்தைகளையும் அநாதைகளாக்கிவிட்ட அமெரிக்க இராணுவமோ பத்தாயிரம் டாலரை இழப்பீடாக அக்குடும்பத்துக்கு வழங்க முன்வந்தது. அதை வாங்க மறுத்த அக்குடும்பத்தினர், "இப்படுகொலையில் ஈடுபட்ட அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் ஈராக் அமெரிக்க நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, August 16, 2008

மிதக்கும் சிறைச்சாலைகள்: அமெரிக்க பயங்கரவாதத்தின் புதிய முகம்

இன்றுவரை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாத 26 ஆயிரம் பேர் இரகசியச் சிறையில் இருப்பதாய் அமெரிக்க அரசு சொல்லி இருப்பினும், 2001 முதல் கைது செய்யப்பட்டவர்கள் 80 ஆயிரம் என்கிறது மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை. அந்த 80 ஆயிரம் பேரும் எங்கே உள்ளனர்? அவர்களின் கதி என்ன? என்பதை அமெரிக்கா முழுமையாகத் தெரிவிக்க வேண்டும் எனும் குரல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி யுள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதி அமெரிக்காதான் எனும் உண்மையும் பலருக்குப் புரியத் தொடங்கி யுள்ளது.
வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர்களை அந்தமான், மலேயா போன்ற கண்காணாத தீவுகளுக்கு நாடு கடத்தினார்கள், அன்றைய காலனியாதிக்க வாதிகள். அவ்வீரர்களை தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாய்ப் பெயர வைப்பதன் மூலம் எதிர்ப்புணர்வைக் கருகச் செய்து விடலாம் என்று கணக்குப் போட்டனர். அன்று மட்டுமல்ல, இன்றும் ஆளும் வர்க்கங்கள் உலகெங்கிலும் இதே போன்ற பல ஒடுக்குமுறைகளைத்தான் ஏவி வருகின்றன.

Friday, August 15, 2008

தரகு வேலையே தேசிய அரசியல் : அணுசக்தி ஒப்பந்ததின் பின்னே இந்தியத் தரகு முதலாளிகளின் நலனும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புட்டு வைத்துவிட்டார், அமர்சிங்.

டெல்லியில் அமெரிக்கத் தூதர் அளித்த விருந்தில் அமர்சிங் கலந்து கொண்டதும் அவரை தூதர் பாராட்டியதும் பத்திரிகையில் வெளிவந்த உண்மைச் செய்திகள். அனில் அம்பானியின் விருப்பத்திற்காக, ஒரு அரசியல் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை திடீரென்று மாற்றிக் கொள்ள முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மக்களிடம் அரசியல் பேசி, அணிதிரட்டி, வசூல் செய்து கட்சி நடத்துவது எல்லாம் அந்தக்காலம். இப்போது பெரும் நிறுவனங்கள் விளம்பரம் செய்து தமது முத்திரைப் பொருட்களை விற்பது போல, அரசியல் கட்சிகளும் "கார்ப்பரேட்'' நிறுவனங்களைப் போலச் செயல்பட்டு அரசியலை விற்பனை செய்கின்றன. சமாஜ்வாதி கட்சியின் கட்டமைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம்......
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற உடனேயே மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்தில் பலர் கைகுலுக்கிப் பாராட்டித் தள்ளினார்கள். ""டைம்ஸ் நவ்'' ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சி ""சிங் இஸ் கிங்'' என்ற தலைப்புப் பாடலை ஆரவாரத்துடன் ஒளிபரப்பியது. சூழ்நிலையின் தாக்கத்தால், தானே ஒரு மிகப்பெரும் தலைவர் என்ற மாயை கூட மன்மோகன் சிங்கிற்குத் தோன்றியிருக்கலாம். ஆனாலும் அனல் பறக்கும் விவாதம் நடந்த இந்த நாடாளுமன்றக் கூத்துக்களுக்குப் பின்னால், அதன் முக்கியமான சூத்திரதாரிகள் இருவர் புன்னகைத்துக் கொண்டிருப்பது மன்மோகன் சிங்கிற்கும், ஏன் எதிர்க்கட்சிகளுக்கும் கூடத் தெரியும்.

அவர்கள்தான் அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்பானிகள்! அண்ணன் முகேஷ் அம்பானியும், தம்பி அனில் அம்பானியும்தான். செத்துப்போன பெரிய அம்பானியின் சுவடுகளில் அரசியலைக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். திருபாய் அம்பானி சட்டங்களை ஏமாற்றித் தொழிலை விரிவு படுத்தினார். இந்திரா, ராஜீவ் முதலான தலைவர்களுக்குத் தேர்தல் நிதியை அள்ளிக் கொடுத்து ஆதாயம் அடைந்தார். பத்திரிகைகள் மற்றும் அதிகார வர்க்கத்தை ஊழல்படுத்திக் காரியங்களைச் சாதித்துக் கொண்டார். அன்றாவது திருபாயின் மோச டிகளை ""மோசடிகள்'' என்று கூற முடிந்தது. இன்று அப்படி யாரும் அழைப்பதில்லை என்பதால், இளைய அம்பானிகளின் தொழில் துறை அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Saturday, July 12, 2008

அமெரிக்க தேல்தல் : "அந்நியப் பெயரைக் கொண்ட ஒரு கருப்பு மனிதனை நம்பி, இந்த நாட்டின் பாதுகாப்பை ஒப்படைக்க முடியுமா?''