தமிழ் அரங்கம்

Saturday, March 24, 2007

நீலகண்டனின் பூணூல் அறிவு

நீலகண்டனின் பூணூல் அறிவு

உழைக்கும் மக்கள் காறி உமிழும் பார்ப்பனிய சுரண்டல் அமைப்புத்தான், மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரையிலான அனைத்து சமூக இழிவையும் புகுத்துகின்றது.


பி. இரயாகரன்
24.03.2007


னித உழைப்பு சார்ந்த இந்த உண்மையை மறுப்பது கருத்து முதல்வாதம். அரவிந்தன் நீலகண்டனின் "மார்க்சியமும் அறிவியலும்" என்ற கட்டுரை வெற்று அலட்டல். கருத்தியல் ரீதியாக விமர்சிக்க, அதில் எந்தக் கருத்துமில்லை. மார்க்சியத்தை தாக்க, சில சம்பவங்களை பொறுக்கியெடுத்து செம்மறி மந்தைகள் போல் ஓடி மேய்கின்றார். நிகழ்ச்சிகளையும் சம்பவங்களையும் மூலவேரில் இருந்து வெட்டியெடுத்து, அதை அறிவியலாக வித்தைகாட்ட முனைகின்றார்.


இதன் பின்னுள்ள அவரின் மையமான அரசியல் நோக்கம் தெளிவானது. பொருள் முதல்வாதத்தை மறுப்பது, கருத்து முதல்வாதத்தை திணிப்பது அவரின் பூணூல் கனவு. இதன் மூலம்


1. மனிதனை மனிதன் சுரண்டுவதைப் பாதுகாக்க வேண்டும்


2. பார்ப்பனர்கள் பார்ப்பனீயம் மூலம் சுரண்டும் சாதிய இந்துத்துவ அமைப்பை பாதுகாக்க வேண்டும்.


3. இதை எதிர்த்து அழிக்க முனையும் மார்க்சியத்தை இழிவுபடுத்த வேண்டும். இந்த வகையில் அதற்கு அக்கம் பக்கமாக செயற்படும் பெரியாரியம், அம்பேத்காரியம், பெண்ணியம் போன்ற அனைத்துக் கோட்பாடுகளையும் கொச்சைப்படுத்துவதே அவரின் நோக்கமாக உள்ளது.


இதுவே அவரின் மையநோக்கம். இந்த எல்லைக்குள் அறிவியலை பூணூல் வழியாக அறிவிலித்தனமாக கசிய விடுகின்றார். அதை அவர்


1. பரம்பரை ரீதியானதும், பிறப்பு ரீதியானதுமான மரபுசார் தன்மையை முதன்மைப்படுத்துகின்றார்.


2. இயற்கை மற்றும் சமூக சார் முரண்பாட்டின் விதியை மறுதலிக்கின்றார்.


3. மனித வாழ்வியல் வேறுபாடுகள் இயற்கையானதாகவும், அதை மாற்ற முடியாததாக கற்பிக்க முனைகின்றார்.


4. பொருளுக்கு வெளியில் கருத்து இருக்க முடியும் என்பதை சொல்ல முனைகின்றார்.


5. பொருள்முதல்வாதம் கட்டாயமாக உண்மையாக இருக்கவேண்டியதல்ல, கருத்து முதல்வாதமும் உண்மையா இருக்க முடியும் என்கின்றார்.


இதுவே அறிவாக கூறிக் கொண்டு முன்வைத்த குப்பைக்குள், உள்ளார்ந்தமாக வெளிப்படுகின்றது. இதை அவர் நிறுவ எந்த அறிவியல் அடிப்படையையும் தன் கட்டுரையில் கொண்டிருக்கவில்லை. பார்ப்பனீய சூழ்ச்சியையும் சதியையும் அடிப்படையாக கொண்டு, செம்மறி மந்தையாக சம்பவங்கள் மீது ஒடி மேய்கின்றார். இதற்கு "மார்க்சியமும் அறிவியலும்"என்று பூணூல் பாணித் தலைப்பு வேறு.


உண்மையில் மார்க்சிய அறிவியல் தளத்தை, அதன் அடிப்படை சமூகக் கூறுகளை அடிப்படையின்றி எழுந்தமானமாக மறுதலிக்கின்றது அவர் கட்டுரை. மனிதனின் அறிவை மறுதலிக்கின்ற, மாற்றாக இருக்கின்ற பிற்போக்கான சமூக அமைப்பின் மாற்றங்களை மறுக்கின்ற, அறிவியல் மறுப்புக் கூச்சலாகும். இதை மூடிமறைக்க கடந்த கால சம்பவங்களை தனக்கு சார்பாக திரிப்பதையே, இந்தக் கும்பல் அறிவாக பீற்றிக்கொள்கின்றது.


இதை நிறுவ இந்த கும்பலுக்கு பார்ப்பனீய அடையாளம் உதவுகின்றது. இந்து பாசிச பார்ப்பனிய சாதிய நாய்கள், தமது தன்மைக்கும் குணத்துக்கும் ஏற்ப குலைக்கின்றது. இந்திய சமூக அமைப்பில் தம்மை தாம் அறிவாளியாக காட்ட பூணூல் தேவைப்படுவது எவ்வளவு உண்மையோ, அது இங்கும் மறுபடியும் நிறுவப்படுகின்றது. இந்த பூணூல் உரிமையை பிறப்பால் வரையறுத்து, மொத்த சமூகத்தையும் நலமடித்த கோட்பாடு தான் பார்ப்பனியம். இந்திய மக்களின் அறிவின் அனைத்து கூறையும் சிதைத்து, சாதி என்ற எல்லைக்குள் இந்திய அமைப்பையே பாதுகாப்பது தான் பார்ப்பனியம். அறிவையே மறுக்கும் இந்த பார்ப்பனியத்தின் பூணூல்கள், உலகில் மறுக்கப்பட்டதாக கற்பிக்கும் அறிவு பற்றி உளறுவது தான் வேடிக்கை. இன்று வரை தாழ்த்தப்பட்ட சமூகம், கல்வி கற்கும் உரிமையைக் கூட அங்கீகரிக்காதவர்கள், அதை வன்முறை மூலம் ஒடுக்குபவர்கள், மார்க்சியம் அறிவை புறந்தள்ளியதாக கூறுவதானது தார்மீகப் பலம் எதுவுமற்ற உள்நோக்கம் கொண்ட பார்ப்பனிய சூழ்ச்சியின் சதியின் மீது ஆதாரம் கொள்கின்றது.


சக மனிதனை விடவும் தன்னை உயர்ந்தவனாக கற்பித்து, அதன் மூலம் சலுகை பெற்று வாழும் இழிந்த சமூகவிரோதக் கும்பல்கள், அதையே அரசியல் அமைப்புச்சட்டத்தில் புகுத்தி மொத்த மக்களின் அறிவை, வாழ்வை ஒடுக்குபவர்கள், மார்க்சியம் பற்றி சேறு அடிப்பதுதானே இயல்பு. இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது.


இந்த சேறடிப்பை "இக்கட்டுரை சட்டீஸ்கரில் மார்க்சிய பயங்கரவாதிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட காவல்துறையினரின் குடும்பங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது." என்கின்றார். ஆள்காட்டிகளாக, எடுபிடிகளாக நக்கித் தின்னும் கும்பல்கள் ஒன்றுசேர்ந்து, ஒன்றையொன்று பார்த்து குலைக்க முனைகின்றது. இந்த பொலிஸ் குண்டர் படையின் பாதுகாப்பில்தான், இந்திய பார்ப்பனிய சுரண்டல் அமைப்பே நீடிக்கின்றது. அதன் மீதான தாக்குதல், அதை அண்டி வாழ்கின்ற புல்லுருவிகளுக்கு அதிர்வை உருவாக்குகின்றது. அந்த அதிர்வை தான் பூணூல் வழியாக இந்த அறிவிலி வெளிப்படுத்துகின்றது. அரச பயங்கரவாதம் நடத்துகின்ற கோரமான ஒடுக்குமுறைகளின் காவலர்கள் தான், இந்த பூணூல் பேர்வழிகள். இந்திய சமூக அமைப்பில் அனைத்து சமூக கொடுமைகளுக்கும், அதன் துன்பங்களுக்கும் காரணமான ஒரு பார்ப்பனிய சுரண்டல் சமூக அமைப்பை முண்டு கொடுப்பவன் எப்படி அறிவாளியாக இருக்க முடீயும்? அறிவாளி என்பது நகைப்புக்குரியது. பூணூல் சதியையும், சூழ்ச்சியையும் ஆதாரமாக கொண்டு மேய்வது தான், அந்த அறிவின் இழிநிலையாகும். கொடூரமான மனிதவிரோதிகள் தமது சொந்த செய்கையை நியாயப்படுத்துவதையே அறிவு என்று, மக்களுக்கு எதிராகவே வாழும் வர்க்கம் ஊளையிடுவது இயல்பு. பூணூல்களின் குடும்பி சும்மா ஆடுவதில்லை.


1. பார்ப்பனீயம் என்னும் கொடூரமான சாதிய இந்துத்துவ கோட்பாடு ஜனநாயகத்துக்கே எதிரானது.


2. சக மனிதனின் உழைப்பை திருடும் சுரண்டல் அமைப்பே ஜனநாயகத்துக்கு எதிரானது.


3. சமூக முரண்பாடுகளை உருவாக்கி, மக்களை அங்குமிங்குமாக அதற்குள் மோத விடுவதே ஜனநாயகத்துக்கு விரோதமானது.


இதை கட்டிப் பாதுகாப்பதைத்தான், இந்த நீலகண்ட பூணூல்கள் புலம்பகின்றன. ஜனநாயகம் பற்றி, மனிதாபிமானம் பற்றி மூக்கால் சிந்துகின்றனர். உண்மையில் இந்த ஜனநாயக விரோத போக்கை ஒழிப்பதையே மறுத்துரைக்க விரும்புகின்றனர். ஜனநாயக விரோதத்தை தக்கவைக்கும் நிறுவனங்கள், கோட்பாடுகள், சிந்தனைகள் அனைத்தையும் தகர்ப்பதை வன்முறையாக காண்கின்றனர். இதை ஜனநாயக விரோதம் என்கின்றனர்.


உண்மையில் அனைத்து மக்களின் ஜனநாயகத்தை மறுப்பவர்கள், மக்களை ஓடுக்கி தாம் மட்டும் வாழ்வதை மூடிமறைக்க, பார்ப்பனிய சுரண்டல் அமைப்பையே இயல்பானதாக காட்ட முனைகின்றனர். அதை மீறுவதை ஜனநாயக விரோதம் என்கின்றனர். இந்த மக்கள் விரோத ஜனநாயக விரோத பாசிச பார்ப்பனிய இயந்திரம் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட குடும்பத்துக்காக, மனிதாபிமான வேடம் போடுகின்றனர். (இதை நான் அடுத்த கட்டுரையில் விவாதிக்க உள்ளேன்.) உண்மையில் இறந்த கும்பல் பற்றிய பார்ப்பனிய சுரண்டல் அமைப்பின் எடுபிடிகளின் கருசனை போலித்தனமானது. நீலிக்கண்ணீர்.


மனிதாபிமானம் என்ற பிரச்னையில் உண்மையில் அக்கறை உள்ளவன், அனைத்து மனிதாபிமான பிரச்சனைiயும் பொதுவில் காண்பான். அவன் பக்கத்தில் குறைந்தபட்ச நேர்மையை நாம் தேடமுடியும். இந்தப் பூணூல் பேர்வழிகள் அப்படி எதையும் பார்ப்பதில்லை. தனது பார்ப்பனியம் சார்ந்த சாதி, தனது வர்க்கம் சார்ந்த சுரண்டல் அமைப்பு, என்று ஒரு பூதக்கண்ணாடி மூலம் பார்த்து குறுகிய வட்டத்தில் ஊளையிடுகின்றனர். இதுதான் இவர்களின் மனிதாபிமான எல்லை. கோடானுகோடி மக்கள் ஒரு நேரக் கஞ்சிக்கு இந்தப் பார்ப்பனிய ஜனநாயகத்தில் வாழவழியற்று, மரணிக்கின்றனர். இவை மீது எந்த மனிதாபிமானமும், இந்த சமூக விரோத புல்லுருவிகளுக்கு வெளிப்படுவதில்லை. இன்று உலகில் வருடாந்தம் 10 கோடி பேர் இந்த உலகமயமாதல் என்ற ஜனநாயக அமைப்பின் விளைவால் மரணிக்கின்றனர். இதன் எதிர் வினையில் செல்வந்தர்கள் பெருச்சாளிகள் போல் பெருகுகின்றனர். 10 கோடி மரணத்தில் ஐந்தில் ஒரு பகுதி இந்தியாவில் கொல்லப்படுகின்றனர். இவற்றை இயற்கையான மரணமாக காட்டுவதும், சர்வதேச விவாதங்களில் மட்டும் இதன் காரணத்தை கணக்கு காட்டுவதுமாக, இந்த ஜனநாயகம் புதை குழிக்கு மேல் உட்கார்ந்து காவல் காக்கின்றது. இந்த சமூக விரோத அமைப்புத் தேவைதானா?


இந்த புதை குழி காக்கும், பூணூல் காவலர்கள் தான், சோவியத் மற்றும் சீனாவின் வரலாற்று ஆவணங்கள் மேல் பூணூல் பூதக்கண்ணாடி வைத்து எதையோ தேடி அலைகின்றனர். பூணூல்கள் பூசும் விபூதி போல், அவதூறை பூச அலைகின்றனர். கிட்லர் கட்டமைத்த முன்னைய கற்பனைகள் எல்லாம் பொய்யும் புரட்டுமாக இருந்ததால், அதை நிறுவ முடியவில்லை. இதை விரிவாக தெரிந்து கொள்ள வெளிவராத எனது நூலான "இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்." என்ற நூலைப் பாக்கவும்


அன்றைய சோசலிச சமூகத்துக்கு எதிரான எந்த செயற்பாட்டுக்கும் தண்டனை என்பது அரசியல் அமைப்பு சட்ட ரீதியாகவே உருவாக்கப்பட்டது. ஒரு மக்கள் புரட்சி அதை தெளிவுபடுத்துகின்றது. சட்ட ரீதியாக வரையறுக்கப்பட்ட ஒரு புரட்சி, சுரண்டுவதற்கும் மற்றைய மனிதனை இழிவுபடுத்துவதையும், சமூக முரண்பாடுகளை தோற்றுவிப்பதையும், அதை கடைப்பிடிப்பதையம் அங்கீகரிப்பதில்லை. இது சோசலிச நாடுகளின் பொதுவான சட்ட விதிகள்.


இந்த வகையில் இச்சடடங்கள் பொருளாதார அறிவாளிகள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். சுரண்டலை ஆதரிக்கின்ற, கருத்தை முதன்மைப்படுத்தி முன்வைக்கின்றவர்களின் சிந்தனைகள், கருத்துகளை அவரவர் வைத்திருப்பதை பற்றி எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால் அதை சமூகத்தின் முன் எடுத்துச்செல்லுவதற்கு முடியாது. தன்னை ஒடுக்க முனைவதை அந்த சமூகம் மறுக்கின்றது. இதை அனுமதிப்பது என்பது, சமூகத்தை பிளக்கின்ற, சமூகத்தை சுரண்டுகின்ற ஒன்றாகி விடுன்றது. அதை மீறிக் கொண்டு செல்லும் போது தண்டனை இயல்பானது. இதுதான் அங்கு நடந்தது. இதில் சில தவறுகள் நடந்தன என்பதை, விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாகவே, அந்த வர்க்க சமூகம் செய்துள்ளது.


பொலிஸ்காரனின் குடும்பத்துக்காக போலியாக திடீர் மனிதாபிமானம் பேசுகின்ற பூணூல் பேர்வழிகள், அங்கு செயற்பட்ட எதிர்ப்புரட்சிகர கும்பலுக்காக வழக்காடுவது இயல்பு. அந்த வர்க்கம் அதற்காக அதை தேடுகின்றது. மக்களின் வாழ்வை மேம்படுத்திய ஒரு புரட்சிகரமான வரலாற்றினை அவதூறாக கட்டமைப்பதன் மூலம் தான், நிலவுகின்ற சொந்த பார்ப்பனிய சுரண்டல் அமைப்பை செழிப்பானதாக காட்டமுடியும் என்ற பரிதாபமான நிலையில் பூணூல் அறிவு உள்ளது.


முன்பு அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஐதுரை போன்றவர்கள் நிறையவே இந்த இழிநிலையை செய்து தோற்றவர்கள். அந்த வரிசையில் இன்று பூணூல் பேர்வழிகள் புதிதாக சொல்ல ஒன்றும் இருப்பதில்லை. இதை சொல்வதற்கு எந்த அடிப்படை அறிவு கூட குறைந்தபட்சம் இருப்பதில்லை.


வேதகால ரிக்வேதம் போல், இன்றும் அதே வெற்றுப் புலம்பல். பார்ப்பனிய சுரண்டல் சமூக இருப்பை தக்கவைக்க, மார்க்சியத்துக்குள் அல்லது ஜனநாயகத்தை முன்வைக்கும் கோட்பாடுகளுக்குள், அவர்கள் கற்பிக்கும் தாசித் தனத்தை புகுத்துகின்றனர். மனித வாழ்வியலைச் சார்ந்து நின்று அறிவால் வெல்ல முடியாத இந்த பூணூல்கள், சூழ்ச்சியால், சதியால், அவதூறால் காறி உமிழ்கின்றனர். இந்திய சமூக அமைப்பின் உள்ளார்ந்த மனித கொடூரங்களை விவாதிக்க வக்கற்ற இந்த பூணூல் பார்ப்பனியம், இந்திய சமூக அமைப்பை மாற்ற முனையும் மனிதர்களுக்கு எதிராக அவதூறைப் பொழிகின்றனர். அந்த வகையில் சர்வதேச ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றனர். பார்ப்பனிய சாதிய மேலாண்மையை எப்படி சூழ்ச்சியால், சதியால் நிறுவினார்களோ, அந்த வழியில் தம்மை தக்கவைக்க முனைகின்றனர். இதை அறிவால், முரணற்ற ஜனநாயகத்தால் சாதிக்க முடியாது.


அறிவை கருத்து முதல்வாதத்தினால் ஒருநாளும் உருவாக்க முடியாது. அறிவு என்பதை பொருள்முதல் வாதத்தினால் மட்டும் தான் உருவாக்க முடியும். இதை மறுப்பது தான், பூணூல் பார்ப்பனியம். பொருளுக்கு வெளியில் உலகில் எந்த இயக்கமும் கிடையாது. பொருட்களின் இயக்கம் தான் அனைத்தும். இதற்கு வெளியில் அறிவு இருக்க முடியாது. அப்படிச் சொல்வது மக்களை முட்டாளாக்கி, அடிமைப்படுத்தி சிலர் வாழவிரும்பும் அற்பத்தனமாகும். இதுவே உள்ளடகத்தில் அறிவீலித்தனம். சிலரை மட்டும் வாழவைக்கும் எடுகோள்கள், கோட்பாடுகள் அறிவீலித்தனத்தின் உள்ளடக்கமாகும்.


இயற்கை மனிதனுக்கு முன்பே எப்படி இருந்ததோ, அதேபோல் தான் அது சார்ந்த உண்மையும் இயற்கையானது. இயற்கையின் பொருட்கள் பற்றிய அறிவு தான், மனித அறிவு. இயற்கையான செயற்பாடு பற்றிய அறிவும், அதன் மீதான மனித செயற்பாடும் தான் அறிவின் வளர்ச்சியாகும். இப்படித் தான் அறிவு இருக்கமுடியும்.


இதற்கு வெளியில் அறிவு இருக்க முடியாது. மார்க்சியம் இந்த வகையில் தான் அறிவையும், அதன் இயற்கை விதிகளுடனும் இணைந்து வழிகாட்டுகின்றது. இந்த வகையில் அனைத்து கருத்து முதல் வாதத்ததையும், பொருளற்ற புலம்பல்களையும் நிராகரிக்கின்றது. பொருளற்ற அனைத்தும், கற்பனையான கருத்து முதல்வாதம் தான்.


உதாரணமாக மரபு சார்ந்த அறிவியலை திரித்து, கருத்துமுதல் வாதமாக கற்பிக்கப்படுகின்ற உண்மையைப் பார்ப்போம். மரபு சார்ந்த பரம்பரைக்கூறை, புறச் சூழலின் நிகழ்ச்சிப் போக்கில் இருந்து நிராகரிக்கப்படுகின்ற கோட்பாடுகள், பலதளத்தில் கருத்துமுதல்வாதமாகவே கட்டமைக்கப்படுகின்றது. மரபுக்குரிய கூறுகளின் தனித் தன்மை, ஒரு பரம்பரைக்குரிய அல்லது ஒரு குடும்பத்துக்குரிய அல்லது ஒரு இரத்த வழிக்குரிய அல்லது ஒரு இனத்துக்குரிய தனித்தன்மையில் இருந்தும் முரண்படுகின்றது. இந்த அறிவியல் உண்மையை கருத்துமுதல்வாதம் குழிதோண்டி புதைக்கின்றது. மரபின் தனித்தன்மை, ஒரு பரம்பரைக்குரிய அலகில் நெருங்கியும், அதே நேரம் விலகியும் செல்லுகின்றது. பொருள் சார்ந்த முரண்பாட்டின் விதி அங்கிருக்கும் அறிவியல் உண்மையை மறுத்து, கருத்து முதல்வாதம் செயல்பட முனைகின்றது. இது அறிவாகவே இருப்பதில்லை.


இதே போல் மரபுத்தன்மை என்பது புறசூழலின் நிகழ்ச்சி போக்குக்கு ஏற்ப மாற்றத்துக்கு உள்ளாகின்றது. இந்த உண்மையை, கருத்து முதல்வாதம் மறுக்கின்றது. புறச் சூழல் என்பது, இயற்கை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் கூட மாறுகின்றது. இந்த உண்மையை மறுப்பது கருத்துமுதல்வாதம்.


அண்மைக் காலமாக மரபு சார்ந்த அறிவு மூலம், கிட்லரை மறுபடியும் உருவாக்க முடியும் என்ற கூச்சல், கருத்து முதல்வாதமாகவே வெளிப்பட்டது.. மரபு சார்ந்த அறிவைக் கொண்டு அதே ஒத்த உருவத்தை உருவாக்க முடியும் என்ற அறிவு, திரிக்கப்பட்டு கருத்து முதல்வாதமாகவே அதன் உள்ளார்ந்த அறிவு மலடாக்கப்பட்டது. இது இரண்டு விதத்தில் கருத்து முதல்வாதமாக திரிக்கப்பட்டது.


1. அதே தோற்றம் உடைய உருவம் எந்த மாற்றத்துக்கும் உள்ளாகாத ஒன்றாக கற்பிக்கப்பட்டது.


2. அதே தோற்றத்துக்குரிய முந்தைய நபரின் தன்மை அப்படியே, அதாவது மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரையிலான அனைத்தும் கொண்டிருப்பர் என்பது


இவை பூணூல் வகை கருத்துமுதல்வாதக் குப்பை. அறிவீலிகளின் அலட்டல். கிட்லரின் தோற்றத்தை உற்பத்தி செய்தால், அவர் மற்றொரு கிட்லராக இருப்பார் என்பது அபத்தமானது. இதை அறிவியல் என்று கூறுவது வேடிக்கை. உண்மைக்கு புறம்பானதும், பொருளுக்கு புறம்பானதுமான கருத்து முதல்வாதமாகும். இந்தக் கருத்துமுதல் வாதத்தை நாம் அங்கீகரிப்பதோ, இதை அறிவியலாக ஏற்றுக்கொள்வதோ கிடையாது. மரபு சார்ந்த அறிவியல் உண்மை முற்றிலும் வேறானது. இதை பூணூல் அறிவீலிகளால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதையொட்டிய ஒரு மலட்டுவாதத்தைப் பார்ப்போம்.


"சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன." என்று கூறும் பூணூல் அரவிந்தன் நீலகண்டன் மரபு தொடர்பாக எடுத்து வைக்கும் "புதைந்து" கிடந்த அந்த ஆவணக் குறிப்பைப் பார்ப்போம். "புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா! மேலும் மாவோ ஒரே இன செடிகள் ஒன்றோடொன்று போட்டி போடாது ஏனெனில் அவற்றுக்கு வர்க்க ஒற்றுமை இருக்கும் என கருதினார். இந்த கருத்து ஒரு அறிவியல் உண்மையாக செயற்படுத்தப்பட்டது" என்கின்றார். பூணூல் தன்னை இப்படித்தான் கருத்துமுதல்வாதமாக அறிவின்மையில் கொப்பளிக்கின்றது.


"புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா!" என்ற வாதம் எதை மறுக்கின்றது. புறச் சூழல் ஏற்படுத்தும் மாற்றத்தை மறுக்கின்றது. இது தான் கிட்லரை உருவாக்க முடியும் என்கின்றது. கிட்லரை மட்டுமல்ல லெனினையும் கூட உருவாக்க முடியாது. இது பல அறிவியல் கூறுகளை மறுத்துத் தான், எழ முடியும்.


இந்தக் கருத்து முதல்வாதம் சரி என்றால், முதலில் மருத்துவத் துறையை இழுத்து மூடவேண்டும. அதனால் தான் பூணூல்கள் உலகமயமாதலை ஆதரிக்கின்றனரோ! மருத்துவதுறைக்கு பதில் மதத் துறையை நம்பி, வேதகால "அவி"க்குத் தான் செல்ல வேண்டும்.


முதலில் மரபு சார்ந்து கடத்தப்படும் நோய்கள் எப்படி உருவாகின்றது? புறநிலை சார்ந்தா? அல்லது அகநிலை சார்ந்தா? அல்லது மரபு சார்ந்தா? ஐயா பார்ப்பனிய பூணூல் நீலகண்ட பதில் சொல்லுங்கள்? மரபுசார்ந்த நோய்களும் புறநிலை மற்றும் அகநிலை சார்ந்தது. அதாவது உடல் புறநிலையில் இருந்து உருவாகும் ஒரு நோய்க்கு எதிராக, எதிர்வினையாற்றும் ஒரு நோய்க்குரிய எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்காத போதே நோயாகின்றது. நோய்க்குரிய மருத்துவம், புறநிலையில் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஒரு நடவடிக்கை மூலம் நோய் எதிர் கொள்ளப்படுகின்றது. இது இயற்கை சார்ந்த உணவு முதல் புறநிலை சூழலை இசைவாக்குவதன் மூலம் அல்லது நேரடியான குறிப்பான மருத்துவ வழிகள் முதல் அல்லது இவை இரண்டும் மூலம் செய்யப்படுகின்றது. இது எப்போதும் புறநிலையாகத் தான் அகநிலை மீது நிகழ்கின்றது. இயற்கையில் நாம் அறியாமல் நோயை தொடர்ச்சியாக வெற்றி கொள்கின்றது அல்லது செயற்கையுடன் இணைந்து வெற்றி கொள்கின்றது. உடலுக்குள்ளும் புறநிலைத்தன்மை உண்டு. நோய் கிருமி கூட, மற்றொரு (ஒன்றை ஒன்று சார்ந்த புறநிலை) உயிரினம் தான்.


மரபுசார் நோய் அந்த பரம்பரையின் முழு உறுப்பினருக்கும் ஏன் இருப்பதில்லை. அண்ணணுக்கு இருக்கும் நோய் கட்டாயம் தம்பிக்கு இருப்பதில்லை. அது மரபுக் கூறுகளில் இருந்தும், புற கூறுகளிலும் இருந்தும் மாற்றத்துக்கு உள்ளாகின்றது.


மரபுசார் நோய் ஏன் முழு மனித குலத்துக்கும் இருப்பதில்லை. ஒரு குரங்கு இனத்தில் இருந்து தோன்றிய மனிதன் என்பதால், அனைவருக்குமல்லவா இருக்கவேண்டும். மனித அடையாளத்துக்குரிய தன்மை எப்படி ஒன்றாக இருக்கின்றனவோ, அப்படி அல்லவா மரபு நோயும் இருக்க வேண்டும். மரபுசார் நோய் புறநிலையாக எப்படி இடையில் தோற்றுகின்றதோ, அப்படி இதையும் மாற்றுகின்றது. இந்த புறநிலை அம்சத்தில் அகநிலை அம்சமும் இணைகின்றது.


மனித குலம் குறித்த மரபுசார் பரம்பரை நோய்க்குள் இருப்பதில்லை. புறநிலை மாற்றத்துக்குள்ளாகி மாற்றத்துக்குள்ளாகின்றது. புறநிலைத் தாக்கத்துக்கு உள்ளாகி நோய் எதிர்ப்பு தன்மை பெற்று இசைவாக்கமடைகின்றனர். இங்கு ஒரு குரங்கு இனத்தில் இருந்து தோன்றிய மனிதன், பல சூழலுக்கு உட்பட்டு நிறம் முதல் உடலின் உட்கூறுகள் வரையாக மாற்றத்துக்கு உள்ளாகின்றான். மனிதன் புறநிலை சூழலால் சதா மாற்றத்துக்குள்ளாகி, மாறிக்கொண்டே இருக்கின்றான். மருத்துவ மற்றும் மரபு அறிவியல் இதை உறுதி செய்துள்ளது. இது போல் தான் நோயும் கூட.


"மாவோ ஒரே இன செடிகள் ஒன்றோடொன்று போட்டி போடாது ஏனெனில் அவற்றுக்கு வர்க்க ஒற்றுமை இருக்கும் என கருதினார். இந்த கருத்து ஒரு அறிவியல் உண்மையாக செயல்படுத்தப்பட்டது" செடிக்குள் வர்க்கம் இருப்பதிலலை என்ற உண்மை, இந்த அரைவேட்டு அறிவீலி பூணூலுக்கு நீலகண்டனுக்கு தெரிவதில்லை. மாவோவின் பெயரில் இந்த அறிவிலி கற்பிக்கின்றது. வர்க்கமற்ற இயற்கையில் வர்க்கம் இருப்பதில்லை. ஒரே இனச் செடிகள் தமக்குள் யார் பெரியவன் என்றோ, யார் அதிகம் நுகர வேண்டும் என்றோ, யார் அதிகம் சொத்துச் சேர்க்க வேண்டும் என்றோ ஒன்றோடொன்று போட்டி போடுவதில்லை. இப்படித்தான் இருப்பதாக மனிதன் தன் இழிநிலையில் இருந்து, இயற்கை மீது கற்பிப்பது கருத்து முதல்வாதம். இயற்கை விதிக்கமையவே அவை இயங்குகின்றது. இயற்கை போட்டி போட்டு வாழ்வதல்ல. இவையெல்லாம் மனிதன் கற்பிக்கும் கற்பனையான கருத்துமுதல்வாதக் கோட்பாடுகள். ரிக்வேதகால ஆரியர்கள் இயற்கை ஒன்றுடன் ஒன்று சண்டை பிடிப்பதாகவும், அதில் தமக்கு சார்பானவர்கள் தமக்கு உதவுவதாக கற்பித்து "அவி" இட்டவர்கள். அதே வழியில் மற்றைய மக்களை கொன்று செல்வத்தை அபகரித்தவாகள். இப்படி இயற்கையை கற்பித்த அதே கோட்பாடு தான் இதுவும்.


இயற்கை போட்டி போடாதது எப்படியோ, அப்படி ஒரே இனச் செடியும் தனக்குள் ஒன்றுடன் ஒன்று போட்டி போடாது. அங்கு வர்க்கம் இருப்பதில்லை. இது அறிவியல் உண்மை. மாவோவின் பெயரில் செடிக்குள் "வர்க்க ஒற்றுமை" என்பது, கற்பித்து அதைத் தலைகீழாக திரிப்பதாகும்.


"கோதுமையை அருகருகே நட்டால் அது செழித்து வளர்ந்து அதற்கு மேல் குழந்தைகள் கூட நிற்க முடியுமாம்." இதில் எந்த அறிவியல் உண்மையும் நிராகரிக்கப்படவில்லை. உழைப்பையே அறியாத பூணூல் பேர் வழிகளின் கருத்தமுதல்வாதம் இதை மறுப்பது, அதன் மலட்டுத்தனத்துக்குச் சான்று. அடர்த்தி அதிகரிக்கும் போது, ஏன் அதன் மேல் நடக்க முடியாது? நாம் நிலத்தில் தொட்டபடி நடக்கின்றோம். எமது பாதத்துக்கும் நிலத்துக்கும் இடையில் எதுவுமில்லை, அதனால் தொட்டபடி நடக்கின்றோம். இதற்குள் ஒரு பொருளை வைத்தால், அதன் மேல் நடக்கின்றோமல்லவா! இதே உண்மைதான் நெருக்கமாக ஆணி அடித்து அதன் மேல் கால்வைத்து நடக்கமுடியும். இந்த உண்மையை கடவுளின் பெயரால் ஏமாற்றலாம், அறிவின் பெயரால் சொல்லமுடியாதது என்பது பித்தலாட்டம். இதன் பின்னால் பொருள் சார்ந்த உண்மை உண்டு.


இதேபோல் தான் காலுக்கும் நிலத்துக்கும் இடையில், எந்த பொருளையும் வைக்க முடியும். அது எதுவாகவும் இருக்கலாம். இங்கு அதன் அடர்த்தி தான் எப்படி நடத்தல் என்பதைத் தீர்மானிக்கின்றது. இது அறிவியல் உண்மை. இங்கு கோதுமை எடுக்கப்படுகின்றது என்றால், அதன் ஒற்றைத் தன்மையில் வைத்துப் பார்த்தல், அதன் பலம் என்ற எமது அறிவீலித்தனத்தில் இருந்து, பூணூல் கண்ணால் காண்பதாகும். ஒரு செடியில் இருந்து அவை அடர்த்தியாக அடர்த்தியாக, நாம் அதன் மேல் நடக்க முடியும். கோதுமை வைக்கோலை நிமிர்த்தி வைப்பதன் மூலம், அதன் மேல் நாம் நடக்க முடியுமல்லவா. ஏன் அடர்த்தியாக வளர்க்கப்பட்ட வேலி போன்ற அமைப்பிலான (பூஞ்)செடிகள் மேல் நடக்க முடியும். இதேபோல் தான் அடர்த்தியான கோதுமை மீதும் நடக்க முடியும். இது அடர்த்தி தொடர்பான விதி. இந்த விதிதான் இன்றைய நவீன அறிவியலின் மூலமாகவும் உள்ளது.


பூணூல் ஊடாக அறிவைத் தேடும் பார்ப்பனிய நீலகண்டன் அறிவிலி "மனித சூழலில் இந்த பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியல் உற்பத்தி உறவுகளாக பரிணமித்து அதன் அடிப்படையிலேயே அனைத்தும் (மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை) உற்பத்தி உறவுகளின் மீது அமைக்கப்படும் மேல்-அமைப்புகளாக காணப்படுகின்றன. இச்சித்தாந்தத்தின் மூலம் அரசு அதிகார விழைவு கொள்ளும் ஒரு இயக்கத்தில், அறிவியல் இந்த அடிப்படை உண்மையை உறுதி செய்வதாகவே அமைய வேண்டும். இந்த உறுதிப்பாடே அறிவியலின் இருத்தலுக்கான நியாயமாகும். உறுதி செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தன் இயக்கத்தின் மூலம் உறுதி செய்வதே அறிவியலுக்கு அளிக்கப்பட்ட ஒரே பணியாக மத்திய கால கிறிஸ்தவ உலகில் இருந்ததை போன்றதோர் நிலையே இதுவும்." வழக்கமாக மார்க்சியத்தை மறுக்க விரும்பும் கும்பல்கள், தமது கருத்து முதல்வாதக் குப்பைகளை தக்கவைக்க, தம்மை முற்போக்காக காட்டிக்கொள்ள "மத்திய கால கிறிஸ்தவ உலகில் இருந்ததை போன்றதோர் நிலையே" என்ற முத்திரை குத்துவதை இந்தப் பார்ப்பனிய பூணூலும் எடுத்து வைக்கிறது.


"மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை" எப்படி உருவாகின்றது. அதை அல்லவா விளக்க வேண்டும். மார்க்சிய சாரம் சார்ந்த "பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியல் உற்பத்தி உறவுகளாக பரிணமித்து அதன் அடிப்படையிலேயே அனைத்தும் (மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை) உற்பத்தி உறவுகளின் மீது அமைக்கப்படும் மேல்-அமைப்புகளாக காணப்படுகின்றன." என்பதனை மறுப்பதன் மூலம், எதைச்சொல்ல முனைகின்றனர். கிறிஸ்துவ கருத்துமுதல்வாதத்தையே, ஆனால் இந்த பூணூல் பேர்வழிகள் பார்ப்பனியத்தை முன்வைக்கின்றது.


மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை இந்திய சமூக அமைப்பில் எப்படி தீர்மானிக்கப்படுகின்றது. அது பார்ப்பனிய சுரண்டல் அமைப்பியல் ஒழுங்கில் தான், அனைத்தும் தீர்மானமாகின்றது. தமிழ் மணத்தில் மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை, அதன் கருத்துத்தளம் அப்படித்தான் பிரதிபலிக்கின்றது. இதற்கு வெளியில் அல்ல. பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் காறி உமிழும் பார்ப்பனிய சுரண்டல் அமைப்புத்தான், மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கும் வரையிலான அனைத்து சமூக இழிவையும் புகுத்துகின்றது. இதுவே அனைத்துக்குமான உண்மை.


குறிப்பு: கட்டுரையின் நீளம் கருதி விவாதம் சுருக்கப்பட்டுள்ளது.


தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?

தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?

பெங்களூரில், கடந்த டிசம்பரில் 8 வயது சிறுமி வெறி பிடித்த தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் கலங்கச் செய்து விடும். காட்டில் வாழும் சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகள் கூட்டாகச் சேர்ந்து மான்களை வேட்டையாடுவது போல, இந்தச் சிறுமியை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன. பெயிண்டராக வேலை பார்க்கும் தனது தந்தையை உணவருந்த அழைக்கச் சென்ற சிறுமி ஸ்ரீதேவி இப்படி நாய்களிடம் மாட்டிக் கொண்டதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாமல் திகைத்தனர். கற்களைத் தூக்கியெறிவதைத் தவிர அவர்களால் அந்த வெறிநாய்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறிபிடித்த நாய்களோ சிறுமியைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டுத்தான் அகன்றன.


தகவல் தொழில்நுட்பத் துறையின் சொர்க்கமாக விளங்கும் பெங்களூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சந்திரா லேஅவுட் பகுதியில் காலை 7.30 மணிக்கு நடந்த இந்தக் கொடூரம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. சமீபத்தில் கொடைக்கானலிலும் இது போன்றே ஒரு சிறுவனை நாய்கள் கூட்டமாகக் கடித்துக் குதறின. சில மாதங்களுக்கு முன்பு இதே பெங்களூரில் 16 பேரை ஒரு நாய் கடித்தது; மணிப்பூரில் ஒரே சமயத்தில் 18 பேர் நாய் கடித்தததால் ""ரேபிஸ்'' நோய் தாக்கி உயிரிழந்தனர். சேலத்திலும் ஒரு சிறுவன் நாய் கடித்து உயிரிழந்தான். கோவைசெல்வபுரத்தைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு மாண்டு போனான். கோத்தகிரியைச் சேர்ந்த நாகராஜ் என்ற சிறுவன் தெரு நாய்களால் வேட்டையாடப்பட்டு நீண்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளான். இப்படி நாய்க் கடியால் மக்கள் அவதியுறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


இவையெல்லாம் பத்திரிக்கைச் செய்திகளில் வந்தவை மட்டுமே; இன்னும் செய்திகளில் வராத எத்தனையோ நாய்க்கடிகளும், அதனால் மக்கள் படும் அவதிகளும் தினமும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மாதம் ஒன்றிற்கு மட்டும் குறைந்தது 5000 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் நாய்கடிக்கு சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், அரசின் கணக்குகளில் வராத எத்தனையோ நாய்கடிகளும், அரசு மருத்துவமனைகளில் மருந்தின்றி கைவிடப்பட்டவர்களும் ஏராளம்.


நாய்க்கடியில் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்கள், பெரும்பாலும் உழைக்கும் ஏழை, நடுத்தர மக்களே. இரவு வேலைக்குச் சென்று திரும்பும் உழைப்பாளிகளும், பள்ளிக்கோ, வேலைக்கோ சென்று திரும்பும் அவர்களது குழந்தைகளுமே. இப்படி நாய்களிடம் கடி வாங்கி அல்லற்படுகின்றனர்.


இப்படி நாளுக்கு நாள் பெருகிவரும் நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பெங்களூரின் தென்பகுதி சுகாதார அதிகாரி நாகராஜ் என்பவர் ""மக்கள் தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவதும், அனுமதி இல்லாத இறைச்சிக் கடைகள் அதிகரித்துள்ளதும் நாய்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன'' என்கிறார். பெங்களூர் மாநகர கமிஷனர் ஒருபடி மேலே போய், ""மக்களுக்கு சமூக அக்கறை வேண்டும், சாலையோரங்களில் கழிவுகளைக் கொட்டுவது கூடாது, சட்ட விரோதமாய் இயங்கும் இறைச்சிக் கடைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்'' என்று பழியை மக்கள் மீதே சுமத்துகின்றõர்.


தமிழகத்தில் ""சிக்குன் குன்யா'' நோய் பரவிய போது மக்களிடம் உள்ள சுகாதாரக் கேட்டினால்தான் நோய் பரவிவிட்டதாகக் கதைவிட்ட அரசின் அதே திமிர்த்தனம் இப்போது நாய்க்கடியினால் மக்கள் அவதிப்படும்போதும் வெளிப்படுகின்றது.


இப்படிப் பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு ஏன் முன்வரவில்லை? நகரங்களில் பெருகிவரும் தெரு நாய்களுக்குக் காரணம், மக்களா? அல்லது அதைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசா?


இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் லட்சக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிவதும், அவை கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகுவதும் மக்களின் நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றி வருகின்றன.


முன்பெல்லாம் முனிசிபாலிட்டி நாய் வண்டி வந்து எல்லா தெரு நாய்களையும் பிடித்துச் சுருக்கு மாட்டியோ, நச்சுப் புகை கொடுத்தோ கொன்று விடுவர். ஆனால் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லையே, ஏன்?


நாய்களின் மேல் அக்கறை கொண்ட ""ப்ளூ கிராஸ்'' போன்ற மிருகாபிமான தன்னார்வ நிறுவனங்கள் தெரு நாய்களைக் கொல்லாமல் அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் அவற்றைப் பெருக விடாமல் தடுத்துவிடலாம் என்று அரசிடம் பரிந்துரைத்துச் செயல்படுத்தி வருகின்றன. கொக்கின் தலையில் வெண்ணை வைத்த கதையாக, பிடித்த நாயைக் கொல்லாமல், குடும்ப கட்டுப்பாடு செய்து வரும் இவர்களிடம் பிடிபடாத நாய்களில் ஒன்று, வருடத்திற்கு 10 முதல் 15 குட்டி போடுவதும், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு தெருவில் விடப்படும் நாய்கள் மக்களைக் கடிப்பதும் தெரியாதா?


குளிர்சாதனம் செய்யப்பட்ட வண்டியில், ஏதாவதொரு பகுதிக்குச் சென்று நாய்களைப் பிடித்து கு.க. செய்து தெருவில் விட்டுவிட்டுக் கணக்கு காட்டும் இந்தத் தன்னார்வக் குழுக்களிடம் நாய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை ஒப்படைத்ததை மறைக்கவே அரசும் அதிகாரிகளும் மக்களின் மேல் பழி போடுகின்றனர்.


இப்படி கு.க. செய்யும் முறை பயன் தராது என்று சென்ற நூற்றாண்டிலேயே நிரூபிக்கப்பட்டும், நாய்களின் மேல் உள்ள ""கருணை''க்காக ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்கு டாலர் கருணை காட்டுவதால், அதனைக் கைவிட இந்த தன்னார்வக் கூலி நிறுவனங்கள் மறுக்கின்றன. குளுகுளு நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் நடத்தித் தங்களது மிருகாபிமானத்தை வெளிப்படுத்தும் இவர்களிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?


இன்றைக்கு உலகமயமாக்கலினால் கிராமங்களில் வேலையும், நிலமும் இழந்து நகரங்களை நோக்கி ஓடிவந்து, ஒருவேளை சோற்றுக்கே அல்லாடி, தினக்கூலியாய், கொத்தடிமையாய் மக்களே கவனிப்பாறின்றி கிடக்கும்போது நாய்களை யார் கவனிப்பது? இப்படி கவனிப்பாரற்று தெருவில் விடப்படும் நாய்கள்தான் பல்கிப் பெருகுகின்றன. இப்படி தெருவுக்கு வரும் ஒரு நாயின் மூன்றாவது தலைமுறை, முழுமையாக மனிதனிடமிருந்து பிரிந்து, அதனுள் இருக்கும் விலங்கின் குணம் அதிகரித்து, வீட்டு விலங்காக இல்லாமல் காட்டு விலங்காக மாறி விடுகின்றது.


இப்படி காட்டு விலங்காகிவிட்ட தெரு நாய்கள் கூட்டமாக வாழ்வதும், காட்டு விலங்குகள் போலவே நடந்து கொள்வதும் இன்றைக்குப் பல நகரங்களில் காண முடியும். சிறுமி ஸ்ரீதேவியைக் கூட்டமாக வேட்டையாடிய நாய்களுக்குக் கண்டிப்பாக வீட்டு விலங்கின் தன்மை இல்லை. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தின் புதர்க்காடுகளில் உள்ள மான்குட்டிகளை நாய்கள் கூட்டமாகச் செயல்பட்டு வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது.


காட்டு விலங்குகள் நாட்டிற்குள் வந்து மக்களைத் தொல்லைப்படுத்தினால் அவற்றைக் கொன்றொழிப்பதுதானே அரசின் கடமை! அதனை அரசாங்கம் செய்யாமல் இருப்பது ஏன்? அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.


உலகிலேயே நாய்க்கடிக்கு அதன்மூலம் பரவும "ரேபிஸ்' என்ற கொடிய நோய்க்கு பெருமளவில் பலியாகும் மக்களைக் கொண்ட நாடு, நமது நாடு. இங்கு ஏற்கெனவே மலிவு விலையில் கிடைத்து வந்த "ரேபிஸ்' தடுப்பு மருந்தை இதே தன்னார்வக் குழுக்கள் மூலம் நிறுத்தியாகி விட்டது. போதாக்குறைக்குக் காப்புரிமைச் சட்டமும் திருத்தப்பட்டு விட்டது. இனிமேல் நாய்க்கடிக்கு பன்னாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தரவேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகின்றது.


இப்படி உலகிலேயே "ரேபிஸ்' மருந்து அதிகமாக விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இங்கே நாய்க்கடிகள் குறைந்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாபம் குறையும். இங்கே நாய்களே இல்லையென்றால் அவர்கள் கடையை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!


நமது நாட்டு மக்களின் சாவில் லாபம் பார்க்கக் காத்திருக்கும் வல்லூறுகளாக இந்தப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் உள்ளன. அந்நிறுவனங்கள் தரும் எச்சில் காசில்தான் இந்தத் தன்னார்வக் குழுக்கள் தங்களது மிருகாபிமானத்தைக் காட்டுகின்றன. இக்குழுக்களை நம்பித்தான் நாய்களுக்கு கு.க. செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஒப்படைத்துள்ளது. நகராட்சிகளின் நிர்வாக ஆணையம் இதற்காக ஐந்து கோடியே எழுபத்தெட்டு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாக நாட்டு மக்களின் உயிரை இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளிடம் அடகு வைத்துவிட்டது இந்த அரசு.


மறுகாலனியாக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாய்படாத பாடாகி விட்டது. வீட்டு விலங்குகள் இயல்பு நிலை பிறழ்ந்து காட்டு விலங்குகளாக மாறி மக்களைக் கடித்துக் குதறி அச்சுறுத்துகின்றன. வெறிபிடித்த தெருநாய்களை அடித்துக் கொல்வது மட்டுமல்ல; அதற்கு முன்பாக ஏகாதிபத்திய மறுகாலனியாக்க வெறி நாய்களையும் அவற்றின் எடுபிடிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கான பெரும் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டியுள்ளது.


· அழகு

Thursday, March 22, 2007

உலகமயத்தின் கீழ் தரகு முதலாளிகளின் புதிய பரிமாணம்

டாடா-கோரஸ் இணைவு:
உலகமயத்தின் கீழ் தரகு முதலாளிகளின் புதிய பரிமாணம்



""இந்தியா உண்மையில் ஒளிர்கிறது; உறங்கிக் கிடந்த இந்தியா என்ற புலி கம்பீரமாக எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கி விட்டது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும் கௌரவமும் மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது. வெள்ளைக்கார காலனியாதிக்கக் கம்பெனிகளிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாடு, அந்த அடிமைத்தளைகளை விலக்கி, வெள்ளைக்கார நிறுவனத்தையே விலைக்கு வாங்கி பதிலடி கொடுத்துள்ளது!''


கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியத் தரகு பெருமுதலாளித்துவ நிறுவனமான டாடா நிறுவனம், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ""கோரஸ்'' என்ற எஃகு உற்பத்தி நிறுவனத்தை 54,000 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, இந்திய ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் இப்படி ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.


""இது மகத்தான சாதனை; நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இந்தியத் தொழிலதிபர்களின் தன்னம்பிக்கை தைரியத்தையும் இந்த நிகழ்ச்சி உலக அரங்கில் நிரூபித்துக் காட்டியுள்ளது. இது தொடக்கம்; இது தொடரும்'' என்று முதலாளித்துவப் பத்திரிகைகள் அட்டைப்படக் கட்டுரைகளை வெளியிட்டு ஆரவாரத்துடன் குதூகலிக்கின்றன.

கோரஸ் நிறுவனம், ஆண்டொன்றுக்கு 180 லட்சம் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஐரோப்பா கண்டத்தின் மிகப் பெரும் ஏகபோக நிறுவனம். இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் டாடா எஃகு நிறுவனமானது, உலகில் அதிகமாக எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம், ஏறத்தாழ 40,000 தொழிலாளர்கள் என பிரம்மாண்டம்; அதைவிட ஏழைநாட்டின் எஃகு நிறுவனம் ஏகாதிபத்திய நிறுவனத்தைக் கைப்பற்றிய அதிசயம் என பூரித்துப் புளகாங்கிதமடைகின்றன, முதலாளித்துவப் பத்திரிகைகள்.


இங்கிலாந்து நாட்டின் அரசுத்துறை நிறுவனமான ""பிரிட்டிஷ் ஸ்டீல்'' நிறுவனமும் டச்சு நாட்டு எஃகு நிறுவனமும் இணைந்து 1991ஆம் ஆண்டில் கோரஸ் எஃகு நிறுவனம் உருவாகியது. இது ஏகாதிபத்திய உலகிற்கே உரித்தான சர்வதேச தொழில் கூட்டின் ஓர் அங்கமாகும். கடந்த 15 ஆண்டுகளில் இதுபோல பல ஏகபோக நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து மூலதனத்தையும் உற்பத்தியையும் ஒன்று குவித்துப் பன்னாட்டு ஏகபோக தொழிற்கழகங்களாக வளர்ந்து உலகச் சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.


மிகப் பிரம்மாண்டமான அளவில் மூலதனத்தை ஒன்று குவித்து உலகச் சந்தையில் போட்டியிடும் இத்தகைய ஏகபோக நிறுவனங்கள், பொதுமக்களிடம் பங்குகளை விற்று மூலதனத்தைத் திரட்டுகின்றன. இதனாலேயே பல தொழில் நிறுவனங்களில் சிறு முதலீட்டாளர்களின் பங்குகள் மிக அதிகமாகவும், அந்நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் முதலாளிகளின் பங்குகள் குறைவாகவும் இருக்கின்றன. இத்தகைய நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை யார் வேண்டுமானாலும், அப்பங்குகளை வைத்துள்ளோரிடமிருந்து ஏலத்துக்கு வாங்க முடியும். ஒரு நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ஒருவர் வாங்கி, அதன்பிறகு மொத்த நிறுவனத்தையே வாங்கி விடலாம்.

இப்படித்தான் கோரஸ் நிறுவனத்தை டாடா நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. கோரஸ் நிறுவனத்தில், அதை நிர்வகிக்கும் ஏகபோக முதலாளிகளின் பங்கு 1 சதவீதத்துக்கும் கீழானதாக இருந்தது. இதனால் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவன நிர்வாகத்தின் பங்குகளையும் இதர பங்குதாரர்களின் பங்குகளையும் ஏலத்தில் வாங்க முயற்சித்தது. ஏறத்தாழ 5 மாதங்களுக்கு முன்பு, கோரஸ் நிறுவனப் பங்குதாரர்களிடமிருந்து ஏலத்தில் பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பமும் கொடுத்தது.


ஏலத்தில், டாடா அறிவித்த விலைக்கு மேலாக அதிகம் கொடுப்பதாக தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள ஏழை நாடான பிரேசிலைச் சேர்ந்த சி.எஸ்.என் என்ற எஃகு நிறுவனம், சில ஏகாதிபத்திய வங்கிகளோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது. டாடா மற்றும் சி.எஸ்.என். நிறுவனங்களின் போட்டா போட்டியில் கோரஸ் நிறுவனப் பங்குகளின் விலைகள் உயர்ந்து கொண்டே போயின. இறுதியில், இங்கிலாந்து அரசின் கம்பெனி ஏல அமைப்புச் சட்டப்படி ஒரே நாளில் 9 சுற்று ஏல முறைப்படி கடைசிச் சுற்றில் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கே கம்பெனி உடைமையாகும் என முடிவாகியது. அதன்படி, சி.எஸ்.என் நிறுவனத்தைவிட, அதிக விலை கொடுத்து கடைசிச் சுற்றில் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்க டாடா நிறுவனத்துக்குப் போதிய நிதியில்லாத நிலையில், சர்வதேச நிதிமூலதன வங்கிகளான ஏ.பி.என். அம்ரோ வங்கி மற்றும் ஜெர்மானிய வங்கி ஆகியவற்றோடு கூட்டுச் சேர்ந்து டாடா நிறுவனம் இந்தக் கைப்பற்றுதலைச் சாதிக்க முடிந்துள்ளது. இல்லையேல் கோரஸ் நிறுவனத்தை பிரேசில் நாட்டின் சி.எஸ்.என் நிறுவனம் கைப்பற்றியிருக்கும்.


மூலதனம் உலகமயமாகியிருப்பதும், மூலதன ஒன்று குவிப்பை அடிப்படையாகக் கொண்ட தேசங் கடந்த தொழில் கழகங்களும் நிதி மூலதன வங்கிகளும் புதிய ஏகபோகங்களாக வளர்ந்திருப்பதும் ஏகாதிபத்திய சகாப்தத்தின் புதிய கட்டத்தை உணர்த்துகின்றன. இதன்படியே, பல்வேறு நாடுகளில் தொழிற்கூட்டுகளும், கைப்பற்றுதல்களும் மறுகூட்டுகளும் போட்டா போட்டிகளும் வேகமாக நடக்கின்றன. இவையெல்லாம் ஏகாதிபத்திய நாடுகளில்தான் நடக்கும்; ஏழை நாடுகளின் தரகுப் பெருமுதலாளிகள் அத்தகைய போட்டா போட்டிகளில் ஈடுபடவே மாட்டார்கள் என்பதல்ல. இந்தியாவின் டாடாவும் பிர்லாவும் ரிலையன்சும் இத்தகைய போட்டா போட்டிகளில் ஏற்கெனவே இறங்கியுள்ளதோடு, வெளிநாடுகளில் முதலீடு செய்தும் அந்நாடுகளது பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்துள்ளனர். அதேபோல, ஏழை நாடான பிரேசிலின் சி.எஸ்.என்; தென்கொரியாவின் சாம்சங், ஹூண்டாய், இந்தோனேஷியாவின் சலீம் குழுமம் எனப் பல தேசங்கடந்த தொழிற்கழகங்கள் நிதி மூலதன வங்கிகளின் துணையோடு வெளிநாடுகளில் முதலீடு செய்தும் பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்கின்றன.


இதற்கு முன்பு, இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் தமது மொத்த சொத்து மதிப்பில் 50% அளவுக்கு மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும் 10 கோடி டாலருக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது என்றும் இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கட்டுப்பாடுகள் விதித்திருந்தன. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து, இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும், அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி பிற உள்நாட்டு வெளிநாட்டு நிதி மூலதன வங்கிகளிடமிருந்து திரட்டிக் கொள்ளலாம் என்றும் எல்லா கட்டுப்பாடுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள ஒரு பெருந்தொழில் நிறுவனம், தாம் செய்துவரும் தொழிலுக்குத் தொடர்பேயில்லாத வேறு பிற தொழில்களில், வெளிநாட்டில் முதலீடு செய்யவும், அத்தகைய தொழில் நிறுவனங்களைக் கைப்பற்றிக் கொள்ளவும் இந்திய அரசு தாராள அனுமதி கொடுத்துள்ளது. இந்திய அரசே உலகமயமாக்கலுக்கு ஏற்ப தனது சட்டங்களையும் விதிகளையும் மாற்றித் தகவமைத்துக் கொண்டுள்ள நிலையில், டாடா நிறுவனம் உலகளாவிய போட்டியில் இறங்கி, கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இத்தகைய நிகழ்வினால் தரகுப் பெருமுதலாளிகளின் அடிப்படைத் தன்மையில் மாற்றங்களும் நிகழ்ந்துவிடவில்லை.


கோரஸ் நிறுவனத்தை டாடா கைப்பற்றியது மட்டுமல்ல; கடந்த ஐந்தாண்டுகளில் டாடா நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றைக் கைப்பற்றியுள்ளது. பிரிட்டனின் டெட்லி டீ நிறுவனம், அமெரிக்காவின் எனர்ஜி பிராண்ட்ஸ், சிங்கப்பூரின் நாட்ஸ்டீல், தாய்லாந்தின் மில்லினியம் ஸ்டீல், தென்கொரிய டேவூ மோட்டார் நிறுவனத்தின் கனரக வாகனப் பிரிவு என அடுத்தடுத்து பல்லாயிரம் கோடி மதிப்பில் பல கைப்பற்றுதல்களை டாடா நிறுவனம் செய்துள்ளது. அதேபோல பிர்லாவின் ஹிண்டால்கோ எனும் அலுமினிய உற்பத்தி நிறுவனம் நோவலிஸ் நிறுவனத்தையும், சுஸ்லான் நிறுவனம் ஆர்.இ.பவர்சிஸ்டத்தையும், வீடியோகான் நிறுவனம் தென்கொரியாவின் டேவூ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தையும் கைப்பற்றுவதற்கான பேரங்கள் முடிந்துள்ளன. டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ், விப்ரோ, சுஸ்லான், ரான்பாக்சி, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், பாரத் ஃபோர்ஜ், மகிந்திரா முதலான 21 இந்தியத் தரகு பெருமுதலாளித்துவ நிறுவனங்கள், அமெரிக்கஐரோப்பிய நிறுவனங்களைக் கைப்பற்ற பேரங்கள் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றன.


சிறிய மீன் பெரிய மீனை விழுங்க முடியுமா? இந்தியப் பெருந்தொழில் நிறுவனங்கள் ஏகாதிபத்திய நாடுகளது பெருந்தொழில் நிறுவனங்களைக் கைப்பற்ற முடியுமா? இது எப்படி சாத்தியமாயிற்று? ""இன்றைய உலகமய சூழலில் மூலதனமானது உலக நாடுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாகப் பாய்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு எந்தவொரு சிறிய நிறுவனமும் பெரிய நிறுவனத்தைக் கைப்பற்ற முடியும். மேலும், மூலதன அழுத்தம் கொண்ட பல பெருந்தொழில் நிறுவனங்களில் ஒப்பீட்டளவில் லாபம் குறைவாகவும் அதிக செலவு பிடிப்பதாகவும் உள்ளதால், மேற்கத்திய நாடுகள் இத்தகைய நிறுவனங்களைக் கைப்பற்ற பொதுவில் போட்டி போடுவதில்லை. அந்நாடுகள் கணினி, செயற்கை இழை உள்ளிட்ட இரசாயனத்துறை மற்றும் நிதிமூலதனம், தகவல்தொழில்நுட்ப சேவைத் துறைகளிலேயே கவனம் செலுத்துகின்றன. அனைத்துலக வங்கிகள் மூலம் மூலதன வாய்ப்பும், குறைந்த செலவில் மனித ஆற்றலும் மூலாதாரங்களும் கிடைப்பதால் இந்திய நிறுவனங்கள் பிற வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்துவதில் போட்டி போட முடிகிறது'' என்கிறார் சுஸ்லான் நிறுவனத் தலைவரான துளசி டாண்டி.


அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியினால் ஏற்பட்டுள்ள பலன்களை அறுவடை செய்து ஆதிக்கம் செலுத்தும் நோக்கில், கொள்ளை இலாபம் தரக்கூடிய சேவைத்துறைகளில் ஏகாதிபத்தியங்கள் மூலதனத்தைக் குவிக்கின்றன. அதேசமயம், ஒப்பீட்டு ரீதியில் சற்றே குறைவான லாபம் தரக்கூடியதும் அதிக அளவில் மனித ஆற்றலைக் கொண்டதுமான கனரகத் தொழில்களை ஏழைநாடுகளது தரகுப் பெருமுதலாளிகள் கைப்பற்றிக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் தடையோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை. இதேபோல சுற்றுலாஓட்டல்கள், மருத்துவமனைகள், அடிக்கட்டுமான துறை முதலானவற்றில் மூலதனத்தைக் குவித்து தரகுப் பெருமுதலாளிகள் விரிவடையவும், வெளிநாடுகளில் இத்தகைய தொழில்களைத் தொடங்கவும் ஏகாதிபத்தியங்கள் தடையாக நிற்பதில்லை. இந்தியாவின் ஓபராய் நிறுவனம் ஆஸ்திரேலியா வரை ஓட்டல் தொழிலில் விரிவடைந்திருப்பதும், டாக்டர் ரெட்டி குழுமமும் ரான்பாக்சி நிறுவனமும் ஏகாதிபத்திய மருத்துவ நிறுவனங்களைக் கையகப்படுத்தியிருப்பதும், லண்டன் மற்றும் நியூயார்க் பங்குச் சந்தைகளில் பல இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இதை நிரூபித்துக் காட்டுகின்றன.


இந்தியாவின் டாடா மட்டுமல்ல; சீனாவின் கணினி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ""லெனோவோ'' நிறுவனம் உலகின் மிகப்பெரிய ""ஐ.பி.எம்.'' கணினி நிறுவனத்தையும், ஜெர்மானிய ஏகபோக நிறுவமான சீமென்ஸ்இன் செல்பேசி தயாரிப்பு நிறுவனத்தை தைவானின் ""பென்கியூ'' நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் அந்தந்தத் தொழில்துறைகளில் உற்பத்தியை மையப்படுத்திக் குவித்து சந்தையைக் கைப்பற்ற இந்நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதேபோலத்தான், டாடா நிறுவனமும் இந்தியாவின் இரும்புத்தாது சுரங்கங்களை ஐரோப்பிய சந்தையுடன் இணைத்து, "மலிவான' விலையில் எஃகு உற்பத்தி செய்து, தனக்குப் போட்டியாக உள்ள ""அர்சலர்மிட்டல்'' எஃகு நிறுவனத்தையும், தென்கொரியாவின் ""போஸ்கோ'' நிறுவனத்தையும், பின்னுக்குத் தள்ளிவிடும் நோக்கத்துடன் கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்காகவே ஒரிசா, ஜார்கண்ட், சட்டிஸ்கர் மாநிலங்களின் இரும்புத்தாது சுரங்கங்களை ஒருங்கிணைக்கவும் மலிவான கச்சாப் பொருளையும் "மலிவான' மனித ஆற்றலையும் ஒன்று குவித்து மலிவான விலைக்கு எஃகு உற்பத்தி செய்து ஐரோப்பிய சந்தையைக் கைப்பற்றத் துடிக்கிறது.


இதே உத்தியோடு, தொழிலாளர்களை அற்பக் கூலிக்குக் கசக்கிப் பிழிந்து நுகர்பொருட்களை மலிவான விலைக்கு உற்பத்தி செய்து, அமெரிக்க நுகர்பொருள் சந்தையில் பாதிக்கு மேல் சீனா கைப்பற்றியுள்ளது. இதர ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் அது கால் பதித்து வருகிறது. உற்பத்தியையும் மூலதனத்தையும் ஒன்று குவித்து சீனப் பெருமுதலாளிகள் உலகச் சந்தையில் போட்டி போட்டு முன்னேறுவதைக் காட்டி ""இது மாபெரும் பாய்ச்சல்; சீனா வல்லரசாகிவிட்டது'' என்று ஏகாதிபத்தியவாதிகள் துதிபாடினர். அதேபோலத்தான் இப்போது டாடா நிறுவனம், கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றி உலகச் சந்தையில் போட்டி போடுவதைக் காட்டி இந்தியா உண்மையிலேயே ஒளிர்கிறது என்றும் காலனியாதிக்கவாதிகளுக்குக் கொடுத்த பதிலடி என்றும் இந்திய ஆளும் வர்க்கமும் பத்திரிகைகளும் கூத்தாடுகின்றன. உலகமயமாக்கலின் கீழ் நடக்கும் இந்தப் போட்டாபோட்டியில் நாளை டாடா நிறுவனத்தை வேறொரு நிறுவனம் கைப்பற்றிக் கொண்டு கவிழ்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் ஏகாதிபத்திய உலகயமாக்க அராஜகத்தின் தவிர்க்கவியலாத விளைவு!


இவற்றையெல்லாம் பூசிமெழுகிவிட்டு டாடா நிறுவனம், ஏகாதிபத்திய நிறுவனத்தையே விலைபேசும் அளவுக்கு உயர்ந்து விட்டது என்றும் இது தாராளமய உலகமய கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றும் பிரமையூட்டி ஆட்சியாளர்களும் பத்திரிகைகளும் நம்பச் சொல்கின்றனர். ஆளும் வர்க்கத்தினர்தான் இப்படி ஆனந்தக் கூத்தாடுகிறார்கள் என்றால், "புரட்சி' பேசும் போலி கம்யூனிஸ்டுகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கூத்தாடுகின்றனர். சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ வங்கமொழி நாளேடான ""ஜனசக்தி'', கோரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றிய டாடாவுக்கு உச்சிமுகர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து தலையங்கமே தீட்டியுள்ளது. உள்நாட்டில் தொழிலை விரிவுபடுத்துவதோடு, உலக அளவில் விரிவடைந்து டாடா நிறுவனம் வெற்றியைச் சாதிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து, இதற்காக இந்தியர்கள் பெருமைப்பட வேண்டும் என்கிறது.


ஆளும் வர்க்க அடியாட்களாகச் சீரழிந்துவிட்ட போலி கம்யூனிஸ்டுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழினப் பிழைப்புவாத தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் டாடா நிறுவனம் கோரஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியுள்ளதைக் கண்டு பூரித்துப் போகிறது. ""இந்தியப் பெருமுதலாளிகள் உலகமய முதலாளிகளாக மாறிவிட்டதற்கு இன்னுமொரு சான்று இது. ஐரோப்பா உள்ளிட்டு உலகச் சந்தைக்குப் போட்டியிடும் அனைத்திந்திய பெருமுதலாளிகளை இதற்குப் பிறகும் தரகு முதலாளிகள் என்று வரையறுப்பது அறியாமை என்பதையும் டாடாகோரஸ் இணைவு தெளிவுபடுத்தும்'' என்று அக்கட்சியின் இதழான ""தமிழர் கண்ணோட்ட''த்தில் அக்கட்சியின் "தானைத் தலைவர்'களுள் ஒருவரான கி.வெங்கட்ராமன் தனது அடிமுட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி குதூகலித்துள்ளார். (தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2006)


ஏகாதிபத்தியம், மேல்நிலை வல்லரசு, மறுகாலனியாக்கம், உலகமயமாக்கம் என்பனவற்றைப் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாத திருவாளர் கி.வெ., ""உலகமயத்திற்கு எதிராக இந்திய சுதேசியம் பேசுவதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிர்நிலையில் இந்தியத்தை வைப்பதும் போலியானவை போகாத ஊருக்கு வழிகாட்ட முயல்பவை'' என்று வேறு உபதேசமும் செய்கிறார்.


இந்தியப் பெருமுதலாளிகள் தரகு முதலாளிகளாக இல்லாமல், "உலகமய' முதலாளிகளாகிவிட்டதால், தமது கட்சித் திட்டம் மற்றும் நடைமுறை வேலைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் பற்றி இவர் விளக்க முன்வரவில்லை. மாறாக, மார்க்சிய லெனினியப் புரட்சியாளர்கள் இந்தியப் பெருமுதலாளிகளை தரகு முதலாளிகள் என்று வரையறுத்திருப்பது தவறாகி விட்டது என்று நிரூபிக்க முயற்சித்து, அதற்கு டாடா கோரஸ் இணைவைச் சான்றாகக் காட்டி குதியாட்டம் போடுகிறார்.


""தரகு முதலாளிகள் எனப்படுவோர் அன்னிய வர்த்தக நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி அல்லது நிர்வாகியாவர்; இவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாவர்'' என்று சீனப் புரட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்த தரகு முதலாளிகளின் தன்மைகள், செயல்பாடுகளைத் தோழர்கள் ஸ்டாலினும் மாவோவும் வரையறுத்திருந்தனர். அதை அப்படியே இந்தியப் பெருமுதலாளிகளுக்கு ஒப்பீடு செய்து ""பார்த்தீர்களா, இவர்கள் தரகு முதலாளிகளே இல்லை'' என்பதுதான் இந்த கிணற்றுத்தவளை அறிஞரது வாதம். ஆனால், தரகு முதலாளிகளின் தன்மையிலும் செயல்பாடுகளிலும் தொடர்ந்து நடந்து வந்த பரிணாம வளர்ச்சிக்கேற்ப தோழர்கள் ஸ்டாலினும் மாவோவும் புதிய வரையறுப்புகளை முன்வைத்துள்ளனர். இதை ஹோகான்சியின் ""நவசீனப் புரட்சியின் வரலாறு'' என்ற நூல் தெளிவாகவே விளக்குகிறது.


உலகமயமாக்கத்தின் கீழ் தரகு முதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டில் பரிணாம மாற்றங்களே இருக்காது; அவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யவோ ஏகாதிபத்திய நிறுவனங்களைக் கையகப்படுத்தவோ மாட்டார்கள்; அப்படிச் செய்தால் அவர்கள் தரகு முதலாளிகளே அல்ல என்பதுதான் இந்த அறிஞரின் குதர்க்கவாதம். ஏகாதிபத்தியங்கள்தான் ஏழை நாடுகளில் முதலீடு செய்யும்; நிறுவனங்களை இணைக்கும்; அதுபோல இந்தியப் பெருமுதலாளிகளும் செயல்படுவதால் இவர்களும் ஏகாதிபத்தியஉலகமய முதலாளிகள்தான் என்று அரிய கண்டுபிடிப்பை அவிழ்த்துவிட்டுள்ளார் இந்த அறிஞர். கட்டபொம்மனுக்கு வல்லிய மீசை இருந்தது என்றால், மீசை வைத்தவனெல்லாம் கட்டபொம்மன்தான் என்கிறார் இவர். இவரது வாதப்படி இந்தியத் தரகு முதலாளிகள் மட்டுமல்ல; பிரேசில், தென்கொரியா, தைவான், இந்தோனேஷியா முதலான பல ஏழை நாடுகளின் பெருமுதலாளிகளும் இனி தரகு முதலாளிகள் அல்ல; அந்நாடுகளிலும் உலகமயத்துக்கு எதிரான தேச விடுதலைப் புரட்சிகள் சாத்தியமே இல்லை என்பதுதான். இதைக் கேட்டால், இந்த ஏழைநாடுகளின் புரட்சியாளர்களும் போராளிகளும் வாயால் சிரிக்க மாட்டார்கள்.

பொருளாதாரப் புள்ளி விவரங்களைக் காட்டி தரகுப் பெருமுதலாளிகளின் அரசியல் தன்மையை மூடி மறைக்கக் கிளம்பியிருக்கிறார், திருவாளர் கி.வெ. உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு அமெரிக்காதான் என்று பொருளாதாரப் புள்ளி விவரங்கள் காட்டுவதால், அமெரிக்காவை ஏழை நாடு என்று வரையறுக்க முடியுமா? அரசியலும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்துள்ள நிலையில், தரகு முதலாளிகளின் பொருளாதார அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அம்முதலாளிகளின் அடிப்படைத் தன்மையை வரையறுக்கக் கிளம்புவது அபத்தமான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும். தரகு முதலாளிகள் ஏகாதிபத்தியத்தோடு எத்தகைய அரசியல் உறவைக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்காமல், தரகு முதலாளிகள் பொருளாதார ரீதியில் வீங்கி விரிவடைவதைக் காட்டி, இவர்கள் தரகு முதலாளிகளே அல்ல என்று வரையறுப்பதும், அரசியல் வரையறையே இல்லாமல் பொதுவில் ""உலகமய முதலாளிகள்'' என்று குறிப்பிடுவதும் அடிமுட்டாள்தனமானது என்பது சொல்லாமலேயே விளங்கும்.


தரகுப் பெருமுதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டிலும் உலகமயமாக்கம் புதிய மாற்றங்களை ஏற்பத்தியிருப்பதோடு, அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டங்களுக்கும் புதிய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. தேசங்கடந்த முதலீடுகளாலும் கூட்டிணைவு கையகப்படுத்தல்களாலும் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் சர்வதேசியமயமாகியுள்ளதால், தென்கொரிய ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டம் தமிழக ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டமாக விரிவடையும். டாடாகோரஸ் நிறுவனத்தின் டச்சு நாட்டுத் தொழிலாளர்களின் போராட்டம் இங்கே ஜாம்ஷெட்பூரில் எதிரொலிக்கும். இப்புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு உலகமயத்திற்கு எதிராகவும், தரகுப் பெருமுதலாளிகளுக்கு எதிராகவும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்திப் போராடுவதும், போலி கம்யூனிசப் புரட்டல்வாதிகளோடு பல வண்ண குதர்க்கவாதிகள் சீர்குலைவுவாதிகளை அரசியல்சித்தாந்த ரீதியில் முறியடிப்பதுமே புரட்சிகரஜனநாயக சக்திகளின் இன்றைய கடமையாக உள்ளது.

· பாலன்

Wednesday, March 21, 2007

Indian security forces and police rape women

Indian security forces and police rape women if they protest,
Indian Parliament rocks

Wed, 2007-03-21 03:32

By Subash Mohapatra (www.asiantribune.com)

In Nandigram the massacre of farmers and rape of women by security forces and police stalled proceedings in Indian Parliament for the fifth consecutive day on Tuesday, forcing adjournment of both Houses.

At least 14 people were killed and 71 injured in Nandigram in East Midnapore, about 150km southwest of Kolkata on March 14 as police opened fire to quell mobs protesting acquisition of farmland for a special economic zone (SEZ).

Two women, who are under treatment at the Tamluk hospital, had filed a formal complaint with police. In a statement, the victims, both housewives aged 27 years and 25 years, alleged that police personnel cornered them during the melee after the firing at Sonachura village on March 14 and raped them.

Indian security forces and police are charged with many allegations of rape and torture, and mostly the incidents are denied without any investigation. This is not an isolated case or an exception. It exposes the inhuman and barbaric face of Indian law enforcement officials.
On March 9, the National Commission for Women in India received a petition stating that 8 tribal women were raped in Sirisguda village of Chhattisgarh including a student in the 10th standard on Feb 26. The victims were dragged out of their home in the morning and gang raped by police personnel, some in uniform. These women victims were opposing the land acquisition by the government for the TATA Steel Company. A rape victim was able to read the nameplate of one of the men who raped her and his surname is Sahu. The Superintendent of Police refused to register the complaint in a first information report.

On February 3rd 2007, while returning from the market at 5 P.M., a young tribal woman was dragged into the forest and gang raped by 4 members of the Mizo Security forces deployed in Dantewada. The men of the Mizo Security force gagged her to prevent her from shouting and she lost consciousness. When she regained consciousness, she was alone and naked in the woods. Her back was badly injured and her arms and legs were scratched and bruised from rocks and branches in the forest and now she can hardly move.

The officer-in-charge of Nakulnar police station denied her the right to register the case. With help from two other women, the victim submitted a written statement of the incident seeking justice but the Superintendent of Police of Dantewada refused to accept it and denied her case without investigation. However, she asked for help from the media, and finally, one week after the incident the complaint was registered against the un-identified persons. So far, no arrest has been made.

On November 28th, the UT Chandigarh Head Constable Ramkumar and three others brought Santosh Kumar from Karnal to Chandigarh and kept her in police lock-up on charges of illegal sale of alcohol despite claims by her husband and neighbors that she was innocent. She was sexually harassed and raped in the police station by Ram Kumar and an unidentified policeman. She was then moved to the Burail jail, where she was kept for 14 days until she was granted bail by the court.

“I was sexually exploited in the police station lock-up by two police personnel on the night of November 28,” Santosh Kumar alleged. She added “I kept telling the police that I had never even seen a police station in my entire life and that they were wrongly arresting me. My neighbors, too, stood by me, but the police refused to listen to anybody and sent me to jail here.”
On 27 December 2006, after the guilty party – another woman from the village named Santosh Singh - confessed in court, a fact-finding inquiry was marked to the Sub-Divisional Police Officer (South) DSP K I P Singh. Instead of expediting the matter and providing justice to the innocent Ms. Kumar, who had endured the mental agony, trauma and humiliation of being in jail for 14 days through no fault of her own, the inquiry officer took her fingerprints and sent these to the Fingerprints Bureau.

The inquiry report, which was received in the court of Chief Judicial Magistrate on 19 January 2007, clarified that Santosh Singh was found guilty and Santosh Kumar was innocent of the charges.

Despite the fact that the victim Santosh Kumar has been repeatedly raising serious allegations of sexual harassment she experienced while inside the police lock-up, the Chandigarh Police denied her allegations without any investigation.

In an alleged murder case 3 tribal women were arrested and taken to Sundarpahar police station on January 9. The women were allegedly physically assaulted, and witnesses confirm that there were marks of police brutality on their bodies. The three female victims (all aged between 28 and 31) claimed that they were illegally detained, and that during that detention they were subjected to torture, raped, stripped and paraded naked around the police station.
They also claim that the police stole Rs.120 from them. The victims have identified the perpetrators as the officer-in-charge Dipnarayan Mandel and another officer, Mahadev Oraon. Rajmahal Member of Indian Parliament Hemlal Murmu claims to have visited the ladies at the jail where they are being detained. He alleges to have seen marks of violence on the women’s bodies. A doctor from Godda sadar hospital who examined the women also confirmed (on condition of anonymity) that the bleeding of one of the victims had not yet stopped.

According to Indian National Human Rights Commission, there were 1,039 cases of human rights violations by the security forces from 1990-1999, an average of 109 per year. The National Human Rights Commission reported a marked decline since that period, with 16 cases reported in 2003, and 4 in the current year. The NHRC reported that it registered 756 cases against the military, 172 against paramilitary forces and 109,902 against the police since 2001.
The National Crime Record Bureau records report that the courts tried 132 policemen for custodial rape in 2002 but only 4 were convicted. The Ministry of Defence reported that it filed 17 rape cases against army personnel from 2003-2004. To date only one rape case ended in a guilty verdict. In the remaining cases, the investigations are still in process.

நந்திக்கிராமமும் டாடாயிஸ்ட் சி.பி.ஐ.(எம்) குண்டர்களும்

நந்திக்கிராமமும் டாடாயிஸ்ட் சி.பி.ஐ.(எம்) குண்டர்களும்
"சந்திப்பு" என்ற நபரும்

பி.இரயாகரன்
21.03.2006

ந்திப்புக்கு தன்னைத்தவிர ஊரில் உள்ளவன் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு. நந்திக்கிராம மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி சொச்சைப்படுத்த, சி.பி.ஐ.(எம்) இது போன்ற நிகழ்சிகளை செய்வதில்லை என்று கதை சொல்ல முனைகின்றார். மூலதனத்தின் அரசியல் குண்டர்களான சி.பி.ஐ.(எம்) இன் வக்கிரத்தை, அறிவும் நேர்மையும் தர்க்கம் எதுவுமின்றி போராடும் மக்கள் மீது காறித் துப்புகின்றனர்.

சி.பி.ஐ.(எம்) டாடாயிஸ்டடுகள் சிறப்பு பொருளாதார சட்ட விதிக்கு மாறாக விளை நிலங்களை கையகப்படுத்தவில்லையா? சிங்கூரில் டாடா கார் தொழிற சலைக்கு 997,1 ஏக்கர் நிலத்தை மக்களிடம் இருந்து திருடவில்லையா? இதை எதிர்த்து போராடிய விவசாயிகள் ஒடுக்கப்படவில்லையா? அந்த நிலத்தில் உழைத்த 1320 குத்தகை விவசாயிகள், 3000 நிலமற்ற கூலிகள், இதை அண்டி தொழில் செய்த 10000 பேரின் கதி என்ன? சி.பி.ஐ.(எம்) காரன் மக்கள் வரிப்பணத்தில் மூலதனத்துக்காக திருடிய 120 கோடியில் வாங்கிய நிலத்தை, வெறும் 20 கோடிக்கு டாடாவிடம் கொடுத்த மாமாக்களின் மர்மம் என்ன? இப்படி நிலத்தை சலுகை விலையில் கொடுக்கவில்லையா? இந்த நிலத்துக்கு இதை விட சலுகைகள் பல. ஆட்சியில் உள்ள சி.பி.ஐ.(எம்) காரன், தனது புரட்சியில் அந்த மண்ணில் வாழும் மக்களுக்கு என்ன தான் செய்துள்ளான். மற்றைய மாநிலங்களை விட எதைத்தான் சிறப்பாக செய்துள்ளான்? தான் கொழுத்ததைத் தவிர வேறு எதையுமல்ல. 250 ஏக்கர் மட்டும் தேவைப்பட, ஏன் 1000 ஏக்கரை சி.பி.ஐ.(எம்) இடமிருந்து பறித்து கொடுத்தது? சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களிடம் திருடி கொழுப்பதே புரட்சியாகிவிட்டது.

அடுத்து அதேவழியில் நந்திக்கிராமமும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் சி.பி.ஐ.(எம்) உருவாக்கியது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும், 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்குமாக தாரை வார்க்கப்பட இருந்தது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம். மக்களின் போராட்டமே இதை தடுத்து நிறுத்தியுள்ளது.

சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல் 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்பது உண்மையல்ல. மக்கள் போராடி தமது சொந்த உயிரை இழந்து அதைத் தடுத்துள்ளனர். இது தான் புரட்சி. இதற்கு எதிரான வகையில் சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் புலம்புவது எதிர் புரட்சி.

மக்கள் நடத்திய இந்த நில கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிரான போராட்டத்தை சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் தமது எதிர்புரட்சிகர வழியில் எப்படி வருணிக்கினறனர். 'நந்திகிராமத்தையே கடந்த மூன்று வாரங்களாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அங்குள்ள சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு, அபாயகரமான ஆயுதங்களை வைத்துக் கொண்டு, மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்கின்றனர். நல்ல வேடிக்கை. 'இது தவிர, நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்று கூறும் இந்த முட்டாள்கள் தான் இதையும் சொல்லுகின்றனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும், சந்திப்பும் கூறுவது போல், மக்கள் எல்லாம் கேனயன் என்ற நினைப்பு.

'..மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்குதான் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றால் அது படுகொலை மூலம் தான . இது சரி என்றால், 'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." இது என்ன புளுடாவா! இதில் எது சரி? எதிர்புரட்சிகர சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் மக்களின் புரட்சிகர போராட்டத தின் முன்னால் தோற்ற போது, இப்படி அங்குமிங்குமாக சாக்கடை புழுககள் போல் நெளிகின்றனர். இதை அப்படியும் இப்படியும் நெளியவைப்பத்து சந்திப்பின் திருகுதாளமாகும்.
'சி.பி.ஐ.(எம்) ஆதரவாளர்களை வெளியேற்றிவிட்டு" என்றால் சி.பி.ஐ.(எம்) காரனின் தேவைக்காக நடந்த துப்பாக்கி சூடு அல்லவா! அதைத்தானே இது வெளிப்படுத்துகின்றது. சரி மக்கள் விரோத சி.பி.ஐ.(எம்) காரன் ஏன் அங்கிருந்து ஓடினான்? அதற்கு ஏன் துப்பாக்கி சூட்டை நடத்த வேண்டும்?

இதற்கு சற்று முன்னால் அங்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்
சோனாசுரா கிராமத்தில் 'நந்திகிராம நிலப பாதுகாப்பு கமிட்டி" கூட்டம் நடத்துவதை அறிந்து, சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் அக்கிராமத்தை தாக்கினர். சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் வெளியில் இருந்து திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்களே இத்தாக்குதலை நடத்தினர். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது. இப்படி சி.பி.ஐ.(எம்) குண்டர்கள் ரவுடிகளாக அந்த மக்களை தாக்கி கொன்றனர். இந்த மக்கள் விரோத ரவுடிகள் மக்கள் எதிர்ப்பதும , அதில் இருந்த தப்பி ஒடுவதும் இயல்பு.

ஒருவரல்ல, இருவரல்ல, ஆறு பேர் கொலை. அந்த மண்ணில் 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. எல்லாம் எதற்கு? சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் கையகப்படுத்த முடியாத அந்த நிலத்துக்காக. அதாவது '.. நந்திகிராமத்தில், இதுவரை ஒரு துண்டு நிலத்தை கூட அரசு கைப்பற்றவில்லை." என்ற உண்மையை பொய்யாக்குவதற்காகத்தான் 'மார்க்சிஸ்ட்" எம்.பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். ஒருபுறம் வன்முறை, மறுபுறம் பணத்தைக் காட்டி விலை பேசுவது என்று மூலதனத்தக்காக புரட்சி செய்கினறனர். சி.பி.ஐ.(எம்) குண்டர்களும் அவர்களின் எடுபிடிகளும். இவவனைததையும செய்துவிட்டு ஊரையும் உலகத்தையும ஏமாற்ற நக்சலைட் அவதூறுகள்.

மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தான் எதிர் வன்முறையாகின்றது. பின் அந்த குண்டர்படைகளினதும் பொலிசாரினதும் மனிதாபிமானப் பிரச்சனை பற்றி ஒப்பாரி வைப்பது தொழிலாகிவிட்டது.

அந்த மக்களின் நிலத்தை அபகரிக்க சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கு துணையாக பொலிசாரும் கூட்டாகவே களமிறங்கினர். இங்கு ஒரு கேள்வி. 'மம்தாவும் - நக்சலிசவாதிகளும் ஆடிய ரவுடித்தனத்திற்கு" பதில் தான் இந்த படுகொலை என்கின்றார் சந்திப்பு. நல்ல அரசியல் வேடிக்கை. சரி எதிர்க கட்சி போராடக் கூடாதோ! போராடாமல் இருத்தல் தான் ஜனநாயகமோ! சரி எதிர் கட்சிகள் எங்கு இருந்து உருவாகின்றது. அதே மக்களில் இருந்து தானே. அந்த மக்கள் ஆளும் மூலதனத்தின் எடுபிடிகளுக்கு எதிராக போராடக் கூடாது. மேற்கு வங்கத்தில் கம்யூனிச ஆட்சியா நிலவுகின்றது. அப்பட்டமான மூலதனத்தின் கெடுபிடியான பாசிச ஆட்சியே அங்கு நிலவுகின்றது.

யார் பயங்கரவாதி? யார் எதிர்வினையையும் அது சார்ந்த வன்முறையையும் உற்பத்தி செய்கின்றனர். சி.பி.ஐ.(எம்) காரன் மூலதனத்துக்காக சேவை செய்யும் போது, மக்களின் போராட்டத்தைக் கண்டு மூலதனத்தின் எடுபிடிகள் ஒடுகின்றனர். மக்கள் புரட்சி இப்படித்தான் நடக்கும். மக்களை படுகொலை செய்வதே மூலதனத்தின் ஜனநாயகமாக இருக்கின்றது.

மக்கள் போராடுவதே தவறு என்பதே சந்திப்பின் மைய விளக்கம். மக்களை கொள்ளை அடிப்பதை அனுமதிப்பது தான் சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி. ஜனவரி 6ஆம் திகதி சி.பி.ஐ.(எம்) காரனினால் கொல்லப பட்டவர்கள் யார்? அந்த ஊரில் வாழும் உழைக்கும் மக்கள். சி.பி.ஐ.(எம்)காரன் பொலிசார் மூலம் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? அவர்களும் மக்கள் தான். ஆயிர ஆயிரமாக திரண்ட மக்கள், எதிர்கட்சியோ, நக்சலைட்டுகளோ அல்ல. சி.பி.ஐ.(எம்) குண்டர்களால் வாழ்வு இழக்கப்பட்ட சாதாரணமான உழைக்கும் மக்கள். இப்படி கொல்லப படுவது தான், சி.பி.ஐ.(எம்) காரனின் புரட்சி என்பதே சந்திப்பின் தர்க்கம்.

அதை அவரின் கட்சியைச் சோந்த மூலதனத்தின் எடுபிடி குண்டர்கள் 'சில அரசியல் கட்சிகளும் அங்கே ஆத்திரமூட்டும் செயல்களில் இறங்கியுள்ளன. இவர்கள் யாரும் அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்களது நடவடிக்கைகளை அக்கிராம மக்கள் எதிர்த்தார்கள்." என்கின்றனர்.

காயமடைந்த, கொல்லபட்டவர்கள் யார் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் சி.பி.ஐ.(எம்) குண்டர்களுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அது தெரிவதில்லை. வெளியார் என்கின்றனர்.பார்ப்பனிய எடுபிடிகள் வழமையாக கூறுவது போல், பாகிஸ்தானிய முஸ்லீம் கைக் கூலிகளோ!

இதே அளவைக கொண்டே ம.க.இ.க நடத்திய கோக்கோலா எதிர்ப்பு போராட்டம் முதல் அனைத்தையும் துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒடுக்கமுடியும் என்பதே, சந்திப்பின் அரசியல் தர்க்கம். சி.பி.ஐ.(எம்) துப்பாக்கி சூட்டை நடத்தலாம் என்றால், ஏன் மற்றவர்கள் அதே காரணத்தை கூறி நடத்த முடியாது?

குஜராத்தில் பார்ப்பனிய மோடி நடத்திய வெறியாட்டமும் இதே காரணத்தைச் சொல்லி நடந்தது, அதை பார்ப்பனிய பாதம் நக்கிகள் நியாயப்படுத்தினர். போராடிய மக்களை, புரட்சிகர மக்களை கொன்று போட்டுவிட்டு, பாசிச கோயபலஸ் பாணியில் விளக்கம் சொல்வதிலும் இந்த குண்டர்கள் மூலதனத் திமிர் வெளிப்படுகின்றது.

'நந்திகிராமத்தில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்காக சி.பி.ஐ.(எம்) வருந்துகிறது." என்ன வேடிக்கை. நியாயப்படுத்தப்படும் போது, அன்னியர், அது நக்சலைட்டுகளின் சதி என்று புலம்பல். 'தற்போது, தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்க பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று அக்கட்சி மூலதனத்துகாக விளக்கம் தருகின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகின்றார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன. இப்படி ஒன்றுக்கொன று முரணாக புலம்பும் இந்த மூலதனத்துக்கு வாலாட்டும் நாய்களுக்கு சூடுசுரணை இருப்பதில்லை.

ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் துப்பாக்கி சூடு நடக்க முன்னம் புலம்பினார். 'நந்தி கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பணிகள் அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டு விட்டன." என்கின்றனர். என்ன முரண்பாடு. இவர்கள் செய்வது என்ன?

1. மக்களை ஒடுக்கி அவர்களின் மேல் நடத்துகின்ற வெறியாட்டம்

2. மறுபக்கம் அதை தாம் செய்யவில்லை என்று ஊரையும் உலகத்தையும ஏமாற்றும் வக்கிரம்.

3. செய்ததை நியாயப்படுத்த, அதை மற்றவர்களின் குற்றமாக காட்டும் சூழ்ச்சிகளும், சதிகளும்

4. மூலதனத்துக்காக நாயாக நக்கி உழைப்பதே புரட்சி என்பது இவர்களின் வாழ்க்கை நெறி

மக்களின் எதிரிகளை, எதிர்புரட்சிகர சக்திகளை எந்தவகையில் மக்கள் தண்டிக்க விரும்புகின்றனரோ, அந்த வகையில் சி.பி.ஐ.(எம்) கட்சியை தண்டிப்பார்கள். சந்திப்பின் (5) கேள்விகள் எல்லாம் பிரச்சனையை திசை திருப்புகினற பார்ப்பனிய அரசியல் வித்தைகள்.

குறிப்பு.:

1.அரவிந்தன் நீலகண்டன் என்ற நபர் இந்திய மக்களின் கடைந்தெடுத்த எதிரி. உள்ளடக்க ரீதியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம கடடமைத்துள்ள அனைத்து மக்கள் விரோத செயற்பாட்டுக்கும் துணை நிற்கும் ஒரு பூணூல். பார்ப்பனிய வழியாக கட்டிப பாதுகாக்கும் மூலதனத்தின் அசலான அடிவருடி. இந்த பூணூல் மார்க்சியமும் அறிவியலும் என்ற தலைப்பில், தனது பூணூல் வழியாக ஒரு பதிவைப் போட்டுள்ளது.

பார்ப்பனிய மூலதன அரசியல் அமைப்புக்கு பூணூல் அணிந்த குலைக்கும் ஒருவன் அறிவாளியாக, அறிவியலாக இருக்கவே முடியாது. அதுவும் பார்ப்பனியத்தை ஆதரிப்பவனாக இருந்தால், அதன் அறிவு என்பது சதியும் சூழ்ச்சியும் தான் அதன் மூலதனமாகும். விரைவில் தனிப்பதிவு மூலம் அதைப் பார்ப்போம்.

2 .புரட்சிகர வன்முறை குறித்தும், புரட்சிகர மனிதாபிமானம் குறித்தும தனிப்பதிவாக பார்க்கவுள்ளோம். வன்முறையை வாழ்க்கையாக, மனிதாபிமானத்துக்கு எதிராக வாழ்வதையே நாகரிகமாக கொண்ட சமூகவிரோத ஓட்டூண்ணிகளை தோலுரிப்பது அவசியமல்லலா!

Tuesday, March 20, 2007

வர்க்க அமைப்பில் ஜனநாயகம்

வர்க்க அமைப்பில் ஜனநாயகம்

மார்க்சியம் என்பது தெளிவாகவும் துல்லியமாகவும் அனைத்து துறையிலும் வர்க்க அடிப்படையில் பகுத்தாய்வு செய்கின்றது. வர்க்கப் போராட்டம் என்பது இடைவிடாத தொடர்ச்சியான ஒரு நீடித்த இயக்கமாகும். வர்க்கங்கள் நீடிக்கும் வரை வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு முன்பும் பின்புமாக தொடரும் ஒரு வர்க்க அடிப்படையாகும். இந்த வர்க்கப் போராட்டம் அமைதியாகவும் வன்முறை சார்ந்தும் நீடித்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும். இங்கு ஜனநாயகம் அனைத்து வர்க்கத்துக்கும் கிடையாது. பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டும் தான் ஜனநாயகம் உண்டு. எந்த தனிமனிதனுக்கு விதிவிலக்கல்லாதது. சமூக எல்லைக்கு வெளியில் தனிமனிதனுக்கு ஜனநாயகம் கிடையாது. அப்படி இருப்பதாக கூறுவது சமூகத்தை விட அதிகமாக கோருவதைக் கடந்து விளக்கம் பெறாது. புரட்சியின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க இடைப்பட்ட வர்க்க பிரிவுகளுக்கு ஜனநாயகம் வழங்கப்படுவது உண்டு. அது பாட்டாளி வர்க்க நலனுக்கு இசைவாக மட்டும் தான். இது பாட்டாளி வாக்கப் போராட்டத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் தான் வழங்கப்படுகின்றது. ஜனநாயகம் எல்லா வர்க்கத்துக்கும் இல்லை என்கின்ற போதே, அது மற்றைய வர்க்கங்கள் மேலான சர்வாதிகார அமைப்பாக கட்டமைக்கப்படுகின்றது. இவை மார்க்சியத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். இதை ஏகாதிபத்தியம் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல் டிரொட்ஸ்கிய வாதிகளும் சரி, அனைத்து வகை பினாமிகளும் கூட ஏற்றுக் கொள்வதில்லை. கோட்பாட்டு ரீதியில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை இதில் கையாளுகின்றனர். அனைத்து வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடகத்தில் இருந்தே, அவதூறுகள் கட்டப்படுகின்றன. அவதூறுகள் தேடப்பட்டு முன்வைக்கப்படுகின்றன


ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகம் எப்போதும் எங்கும் ஒரு வர்க்க சர்வாதிகாரம் தான். இதற்கு வெளியில் ஜனநாயகம் இருப்பதில்லை. மற்றைய வர்க்கம் ஜனநாயத்தின் ஒரு கூறைப் பயன்படுத்துகின்றது எனின், அது வெறுமனே ஒரு சலுகை மட்டும் தான். நிலவும் வர்க்க சர்வாதிகாரத்தை மூடிமறைக்கவும், சர்வாதிகாரத்தை நீடித்து பாதுகாக்கவும் வழங்கும் ஒரு இடைநிலை வடிவம் தான். இது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும், முதலாளித்துவ வர்க்க ஜனநாயகத்துக்கும் பொருந்தும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக ஒன்றுக்கு மறுக்கப்படுகின்ற வரை தான், மற்றது உயிர் வாழ்கின்றது. இது அடிப்படையான மார்க்சிய விதியும் கூட. அனைவருக்கும் ஜனநாயகம் உள்ள போது, ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் சமுதாயத்தில் இருந்தே இல்லாமல் போய்விடுகின்றது. இது வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தில் மட்டும் தான் சாத்தியம். மறுக்கப்படும் ஜனநாயகம் உள்ளவரை, ஜனநாயகம் எப்போதும் எங்கும் விதிவிலக்கின்றி ஒரு வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்கின்றது. இந்த அடிப்படை உள்ளடகத்தை ஏகாதிபத்தியம் மூடிமறைக்கின்றது.


ஜனநாயகத்தின் உட்கூறுகளையும், அதன் பண்புகளையும் தெளிவாகவே, எதிர் எதிரான இரண்டு சமுதாயப் போக்கிலும் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் ஜனநாயகம் சுரண்டல் வர்க்கத்துக்கு மறுக்கப்படுகின்றது. முதலாளித்துவமும், அதிலிருந்து உருவாகும் பாசிசமும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கு ஜனநாயகத்தை மறுக்கின்றது. இந்த இரண்டு போக்கிலும் அதன் பண்பியல் கூறுகளை எதார்த்தத்தில் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் கூர்மையடைந்து, சுரண்டும் வர்க்க பாசிசம் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தை ஒடுக்கி சுரண்ட முடியும் என்கின்ற ஒரு நிலை கொண்டிராத எல்லா நிலையிலும், சுரண்டும் சர்வாதிகார ஜனநாயகம் எப்போதும் நிர்வாணமாக இருப்பதில்லை. தன்னை மூடிமறைத்துக் கொள்கின்றது. அது சுரண்டலை தொடர்ந்தும் அமைதியாக நடத்துவதற்காக மற்றய வர்க்கத்துக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், ஜனநாயகத்தை அழகு படுத்துகின்றது. இந்த ஜனநாயகம் ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரமாக இருப்பதை இலகுவாக கண்டு கொள்ளமுடியாது, மூடிமறைக்கின்றது. சமுதாயத்தில் இந்த போலித்தனத்தை யார் யாரெல்லாம் அடையாளம் காணவில்லையோ, அவர்கள் தான் தனிமனித உரிமை பற்றியும், தனிமனித சுதந்திரம் பற்றியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக கூச்சல் எழுப்புகின்றனர். தன்னை மூடிமறைத்து அழகுபடுத்தி நிற்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தில் நிலவும் வர்க்கப் போராட்டம் கூர்மையாகின்ற போதே, சுரண்டலை தொடர்வதற்காக பாசிசத்தை அடிப்படையாக கொண்ட சர்வாதிகாரமாக தன்னை நிர்வாணப்படுத்துகின்றது. பாட்டாளி வர்க்கம் ஒட்டு மொத்தமாகவே இந்தக் கபடத்தை அம்பலம் செய்தே வர்க்கப் போராட்டத்துக்கு தயார் செய்கின்றது.


மனிதனைச் சுரண்டுவது சுதந்திரமான ஜனநாயக உரிமையாகிய போது, ஜனநாயகத்துடன் ஒட்டிப் பிறந்த தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம் கூட, இந்த வர்க்க அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. எல்லோருக்கும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை இருக்குமாயின், இது விவாதத்துக்குரிய பொருளாகவே இருப்பதில்லை. இந்தப் பிரச்சனை சமுதாயத்தில் இருந்தே மறைந்து விடுகின்றது. தனிமனித உரிமை என்பதும், தனிமனித சுதந்திரம் என்பதும் வர்க்க சமுதாயத்தில் மறுக்கப்படும் போதே, அது நீடிக்கின்றது. இது எப்போதும் வர்க்க சமுதாயத்தில் ஒருவருக்கு இல்லாத போது மட்டும் தான், மற்றொருவருக்கு இருக்கின்றது. இதை புரிந்து கொள்ளாத வரை புரிந்து கொள்ள மறுக்கும் வரை, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக வைக்கும் கூச்சல்கள், பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த உரிமைகள் இருக்க கூடாது என்பதைத் தாண்டி விளக்கம் பெறாது. தனிமனித உரிமை, தனிமனித ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திலும், முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் ஒரேவிதமாகவே எதிர்தரப்புக்கு மறுப்பதாகவே உள்ளது. ஆனால் வௌவேறு வர்க்கங்கள் இந்த உரிமையை பெறுகின்றது. இதனால் இது சர்வாதிகார அமைப்பாக உள்ளது.


ஜனநாயகம், சுதந்திரம், தனிமனித உரிமைகள் என அனைத்தும் வர்க்க எல்லைக்கு அப்பால் நீடிக்க முடியாது. இதை ஏற்க மறுப்பவர்கள் தனிமனித நிகழ்வுகளை காட்டி அதை அரசியலாக்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடைக் கோடியில் நின்று கோசம் போட்டு சோரம் போவதைத் தாண்டிவிடுவதில்லை. சுரண்டும் ஜனநாயகத்தின் மூலதனத்தின் அதிகாரத்தை தகர்க்க போராடும் போது அதை எதிர்க்கும் முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகம், தனிமனித உரிமை பற்றிய பேச்சு என்பதை அனுமதிப்பதில்லை. இது போல் பாட்டாளி வர்க்க ஆட்சியில் சுரண்டலைக் கோரும் ஜனநாயகம் மற்றும் மக்களை பிளவு படுத்தும் ஜனநாயகம் உள்ளிட்ட தனிமனித உரிமைகள் எதையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அனுமதிப்பதில்லை. மார்க்சிய அடிப்படைக்குள் தவறுகள் நிகழும் போது, விமர்சனம் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி அதை திருத்துவதில் மார்க்சியவாதிகளாகிய நாங்கள் அவற்றை என்றும் புறம் தள்ளியது கிடையாது.


Sunday, March 18, 2007

எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது

எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது

மது முற்போக்குவாதிகளும் மார்க்சியர்களும் இப்படியொரு சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இது 1918 யூலை 17இல் இடம்பெற்ற சம்பவம். ஆன்று சோவியத் யூனியனில் உள்ள எக்காரெறின்பெரி என்னும் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரவு வேளையில், பதினொருபேர் லெனினது உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொடுங்கோலனாக கருதப்பட்ட சார்மன்னன் இரண்டாம் நிக்களஸ், அவரது மனைவி அலெக்சாந்திரா, பிள்ளைகளான அலெக்சேய்தாத்யானா, ஓல்கா, அனஸ்தாசியா, மரியர் அவர்களது வீட்டுப் பணியாளர்களான ஒரு மருத்துவர், ஒரு சமையற்காரர், ஒரு வேலைக்காரன், ஒரு தாதி, ஆகியோரே அவ்வாறு கொல்லப்பட்டவர்கள். இதன்போது சாரின் வீட்டு நாயும் கொல்லப்பட்டது.


இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நிக்ளஸ் என்று ஒரு திரைப்படமும் இருக்கிறது. அமெரிக்கத் தயாரிப்பான அந்த திரைப்படம் சார் மன்னனுக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விளையாட்டுத்தனமானவர்களாக சித்தரிக்கப்படும் அவனது, அழகான பெண் பிள்ளைகளுக்காக பார்க்கும் எவரும் கண்ணீர் சிந்துவர். மார்க்சியர்கள் குறிப்பாக ரஸ்ய போல்ஷவிக் அமைப்பினர் மிகக் கொடுரமானவர்கள், ஈவிரக்கமற்றவர்கள் என்பதாக ஒரு பார்வையாளர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திரைப்பட இயக்குனரின் அரசியலும் கூட.


ஆனால் இந்த சம்பவம் ஒரு வரலாற்று பின்புலத்தில் வைத்து புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்தது. அந்த நேரத்தில் ரஸ்ய அரசியல் சூழலில் முக்கிய விடயமாக உரையாடப்பட்ட மேற்படி கொலைகள் ஒரு புரட்சிகர அரசியல், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் பின்னனியிலேயே மார்க்சியர்களால் விளக்கப்பட்டது. உண்மையில் மனித உரிமை, ஜனநாயகம் என்ற சொல்கொண்டு மேற்படி சம்பவத்தை நாம் அளவிட்டால் லெனின் ஒரு மோசமான கொலைகாரராகத்தான் தெரிவார்.


ஆனால் ஒரு போராட்டச் சூழலில் அதுவும் வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையில் ஜனநாயகம், மனித உரிமை என்ற சொற்களின் அர்த்தம் வேறு. சாதாரணமான சூழலில் உரையாடப்படும் இவ்வாறான சொற்கள் வழியான அரசியலை ஓர் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட சூழலில் பயன்படுத்த முயன்றால் அது தவறான அரசியல் விளைவுகளையே ஏற்படுத்தும். நமது சூழலில் உள்ள சிலருக்கு இன்றும் விளங்காமல் இருக்கும் விடயமும் இதுதான். மனிதநேயம் பற்றி மாவோ கூறியிருப்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்கின்றேன். “மனித நேயம் பற்றி மக்கள் என்னதான் பேசிக் கொண்டாலும் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் சமூதாயத்தில் உண்மையில் அதை நடைமுறையில் கடைப்பிடிப்பது யாராலும் இயலாத காரியம்” (வர்க்கம் என்ற இடத்தில் நமது இனத்துவ அடையாளத்தை குறித்துக் கொள்ளுங்கள்) இந்தக் கூற்றை அடிப்படையாகக் கொண்டு மாவோவை ஈவிரக்கமற்றவர், கொலைகளை ஆதரிப்பவர் என்று சொல்லிவிட முடியுமா?


மார்க்ஸ் முன்னிறுத்திய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தின் நீட்சிதான் லெனின், மாவோ போன்றவர்களின் அனுகுமுறையும் கருத்துக்களும். பாட்டாளிகள் புரட்சியின்போது எதிரிகளான முதலாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்பதன் உள்ளடக்கம்தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். உண்மையில் மனிதநேய நோக்கில் எதிரியான சாருக்கு பதிலாக சாரின் மனைவி பிள்ளைகள் மீதான கொலை வேதனைக்குரிய ஒன்றுதான். ஆனால் ஓர் அரசியல் பின்புலத்தில் அதற்கான வலுவான நியாயமுண்டு.


எல்லோரும் மனிதர்கள் என்னும் ஞான நிலை புரட்சிக்கு உதவாது. என்னைப் பொருத்தவரையில் லெனின் செய்தது சரி நான் அதனுடன் முழுமையாக உடன்படுகின்றேன். அதற்காக எல்லாவற்றுக்கும் வன்முறைதான் ஒரேயொரு தீர்வு என நான் விவாதிக்க வரவில்லை வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகளுடாவும் சாதிக்கக் கூடிய பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இங்கு முன்னிறுத்தும் வாதமோ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது இடம்பெறும் சில சம்பவங்களுக்கு தத்துவார்த்த விளக்கம் சொல்ல முற்படும்போதும் நமது புலமைச் செருக்கை விடுதலைப் போராட்டத்துடன் உரசிப்பார்க்கும் போதுமே நாம் தவறுகளை நோக்கி பயணிக்கின்றோம். நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அக்கறை கொள்வோமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஆதரிப்பதை தவிர வேறு ஒன்றையும் எம்மால் பெரிதாக செய்துவிட முடியுமென நான் நம்பவில்லை.


கடந்த பத்துவருடங்களாக சில நிலைமைகளை அவதானித்து வந்தவன் என்ற வகையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பிழை பிடிப்பதில் தமது பண்டிததனங்களை செலவிட்ட எந்தவொரு மாற்றுக் கருத்தாளரும் தமிழ் மக்களின் விடுதலைப் பாதையில் எதையும் சாதித்ததாக நான் கருதவில்லை. சில அரை வேக்காட்டு கூட்டத்தினரை உருவாக்கியதும் எதிரிகளுக்கு இடைவெளிகளை இனங்காட்டியதையும் தவிர. ஏதாவது சாதிக்கப்பட்டிருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் என்னை நான் திருத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.


- யதீந்திரா

பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை

பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை


பி.இரயாகரன்
18.03.2007



வை அனைத்தும் மக்கள் விரோதக் கோட்பாடுகள். மனித குலத்துக்கு எதிரான ஒரு வர்க்கம் என்ற வகையில், பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை இணையத்தில், அறிவு நேர்மையின்றியும் தர்க்க அடிப்படையின்றியும் தெரு நாய்கள் போல் குலைப்பது இயல்பாகிப்போயுள்ளது. அது ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மனிதாபிமானம், தனிமனித ஒழுக்கம் என்ற பல வண்ணத்தில், தனது தலையை இதற்குள் மறைத்துக் கொண்டுதான் இணைய தளங்களில் வலம் வருகின்றது. நிஜமான வாழ்வியல் உலகத்தில், மனித குலத்தின் பரம எதிரிகள் இவர்கள். இவர்கள் போற்றி வழிபடும் நிஜமான உலகம் எது?



1. மற்றவன் உழைப்பை சுரண்டி வாழ்கின்ற அற்பர்களை அவர்களின் எடுபிடிகளையும் கொண்டது.



2. மற்றவனை விட தன்னை ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவனாக பீற்றிக்கொண்டு வாழ்கின்ற, வாழ முனைகின்ற மனித விரோதிகளை அடிப்படையாக கொண்டது. சாதியால், பாலால், நிறத்தால், இனத்தால், மதத்தால், இது போன்ற சமூக இழிவுகளை கற்பித்து, மனிதர்களை ஒடுக்கி வாழும் அற்பர்களின் வாழ்க்கையை நியாயப்படுத்துவது. இவர்கள் இணையத்தில் ஜனநாயகத்தின் வள்ளல்களாக வேடம் போடும் பொறுக்கிகள்.



3. சக மனிதனை தன்னை போல் நேசிக்கத் தெரியாத, நேசிக்க கற்றுக் கொடுக்கத் தெரியாத காட்டுமிராண்டிகள்.



இவர்கள் தம்மை அறிவுஜீவிகளாக, விவாதம் செய்வதாக காட்டிக்கொண்டு, இணையத்தில் தமது இழிந்த வர்க்க அரிப்பை வெளிப்படுத்துவார்கள். அரிப்பு தாங்க முடியாது, சொறிவதையே வாழ்க்கையாக கொண்ட தெரு நாய்கள். இந்த நாய்கள் ஆங்காங்கே கடித்து குதறுவதையே இணையத்தில் தொழிலாகக் கொண்டவர்கள்.



நிஜவுலகில் ரவுடிசமாக, பார்ப்பனியமாக, அரசியல்வாதிகளாக, மனிதனைப் பிளந்து அதில் வாழும் அற்பர்களாக, அதிகார வர்க்கமாக, மற்றவனை ஒடுக்கி பொறுக்கித் தின்னும் குண்டர் படையாக வாழும் அற்பர்கள் இவாகள். மனித உழைப்பு எனறால் என்னவென்று தெரியாதவர்கள். அதை தட்டி தின்பது, இவர்களின் ஜனநாயகமாகும்.



கோடானு கோடி மக்களின் வாழ்வை அழித்து அதில் வாழ்பவர்கள். அவர்களின் மரணம் தான், இவர்களின் ஜனநாயக சிம்மாசனம். இந்தக் கும்பல் சக மனிதனுக்கு மறுக்கும் சுதந்திரத்தில் தான், தனது சுதந்திரம் பற்றி பீற்றிக் கொள்ளுவார்கள். இந்தக் கயவாளிகள் கும்பல் தான், மூக்குமுட்ட மற்றவனின் உழைப்பை திருடித் தின்றுவிட்டு ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றது. அப்படி கூறும் போதே மற்றவனுக்கு அதை மறுப்பதில் தான், அது அவர்களது உரிமையாகின்றது. அதனால் அதற்காக கூச்சலிடுகின்னர். உண்மையில் அனைவருக்கும் ஜனநாயகமும், சுதந்திரமும் இருந்தால், இந்த சொல்லே அர்த்தமிழந்துவிடும். ஆகவே அதை மற்றவனுக்கு மறுப்பதைத்தான், ஜனநாயகம் சுதந்திரம் என்கின்றனர்.



நிஜ உலகில் மக்கள் இந்த சமூக விரோத பொறுக்கிகளை இனம் கண்டு வாழ்கின்றனர். சமூகத்தின் அனைத்து தெரிவையும், நுகர்வை இந்தப் பொறுக்கித்தனமான அரசியல் எல்லைக்குள் வரையறுத்து, அதை சுதந்திரம் ஜனநாயகம் என்று ஒப்பாரி வைப்பது தான், இவர்களின் உயர்ந்தபட்ச சமூக கட்டமைப்பாகும். இப்படி சமூகத்தை நலமடித்து திரியும் கும்பல், நிஜ உலகில் மட்டுமல்ல இணையத்திலும் நலமடிக்க முனைவது இயல்பு. இதற்கு வெளியில் இந்தக் கும்பல் சமூகத்தை வேறு எந்த வகையிலும் வழிகாட்ட வக்கற்றது.



நிஜவுலகில் இவர்கள் தம்மைத்தாம் பாதுகாக்க கட்டமைத்துள்ள வன்முறை அமைப்பை எதிர்த்து, மக்கள் சொந்த வாழ்வியல் அனுபவமூடாக அதை ஒழித்துக்கட்ட கற்றுக் கொண்டு போராடுகின்றனர். மக்களின் எதிரி எந்தவகையில் எந்த அரசியல் வழியில் பதிலடி தருகின்றானோ, அதை எதிர்கொண்டு மக்கள் அதே வழியில் பதிலடி கொடுப்பதை எதிரியே கற்றுக் கொடுக்கின்றான். மக்கள் எதிரியின் தொடர்ச்சியான வன்முறையை எதிர்கொண்டு, அதே பாணியில் அதற்கு பதிலடி கொடுக்கும் போது, இந்தக் கும்பல் மனிதாபிமானம், ஜனநாயகம் பயங்கரவாதம் என்று அலட்டத் தொடங்குகின்றது. இவர்கள் கூக்குரலிடும் ஜனநாயகம், மனிதாபிமானம், பயங்கரவாதம் என எவையும், மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைத் தீர்த்துவிடுவதில்லை. மாறாக மக்கள் தமக்கு தெரிந்த வழியில் விடை காண்கின்றனர்.



மக்களின் எதிரிகளை இணையத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதே எம்முன்னுள்ள கேள்வி. இந்த அற்பர்கள் அறிவால் தமது கருத்தை நியாயப்படுத்தி மனித இனத்தை வெல்லமுடிவதில்லை. தம்மை தமது சமூக ஒழுக்கக் கேட்டை நியாயப்படுத்த, இவர்கள் நம்பி ப+சிக்கும் எந்த சமூக நெறியும் அவர்களுக்கே உதவுவதில்லை. அது தனிச்சொத்துரிமை கோட்பாடாக இருக்கலாம், ஆணாதிக்கமாக இருக்கலாம், சாதியமாக இருக்கலாம், பார்ப்பனீயமாக இருக்கலாம், எதுவும் இவர்களின் அறிவிலித்தனத்துக்கு ஏற்ப, அந்தக் கோட்பாடுகளும் உள்ளடக்கத்தில் ஒழுக்கக் கேடாகவே உள்ளது. மாறாக சூதால், சூழ்ச்சியால், நேர்மையற்ற வழிகளால், குறுக்கு புத்தியால், அவதூறை அள்ளித் தெளிப்பதால், தமது சமூக ஓழுக்கக்கேடான அமைப்பையும், அது சார்ந்த கோட்பாட்டையும் பாதுகாக்க முடியும் என்று நம்பி இணையத்தில் வலம் வருபவர்கள்.



மூலதனத்தின் எடுபிடிகளாக, பார்ப்பனிய நக்கித்தின்னிகளாக, நுகர்வு கலாச்சாரத்தின் ஓட்டுண்ணிகளாக விதம்விதமாக வலம்வருபவர்கள். யாரும் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்வின் துயரங்களுடன் வாழ்பவர்களாக இருப்பதில்லை. மூன்று வேளைக்கு விதம்விதமாக பாலும் பாயசமுமாக முண்டிவிழுங்கி விட்டு, தின்ற சோர்வை போக்க இணையத்தில் சொறிபவர்கள் இவர்கள்.



மக்கள் நலனை முன்வைக்கும் கோட்பாடுகள் மீதான அறிவோ, அதை விவாதிக்க நேர்மையோ இன்றி குதறுபவர்கள். இது பெரியாரியம், அம்பேத்காரியம் முதல் மார்க்சியம் என எதுவாக இருந்தாலும், மக்கள் நலன் அனைத்தும் தமக்கு எதிரானதாக கருதுபவர்கள். இது தான் இவர்களின் அரசியல் அடிப்படை. இவர்களின் ஜனநாயகம் என்றாலும், மனிதாபிமானம் என்றாலும் இதற்குள் தான் அனைத்தும் அடங்கும்.



இந்த வகையில் பாராளுமன்ற சாக்கடை மார்க்சியம் பேசும் சந்திப்பு முதல் பா.ஜ.க பார்ப்பனியத்தை பேசும் நிலகண்டம், ஆர்.எஸ்.எஸ் சாதிய பார்ப்பனியத்தை பேசும் டோண்டு வரை அடங்கும். அனைத்து வேடங்களும் எப்படி மக்களை சுரண்டுவது, அவர்களை பிளந்து அடக்கியாள்வது என்ற உள்ளடக்கத்தில் தத்தம் வழிகளில் கூச்சலிடுகின்றனர்.



மனித அவலத்தை அடிப்படையாக கொண்ட இந்த சமூக அமைப்பில், புரையோடிக் கிடக்கும் சாதிய இந்துத்துவ சுரண்டல் அமைப்பை பாதுகாக்க தலைகீழாக நிற்பவர்கள். ஒரு விவாதத்தை அறிவியல் ப+ர்வமாக நடத்த முடியாதவர்கள். நீ உன்னுடைய அப்பனுக்குத் தான் பிறந்தாயா என்று கேட்பது தான், இவர்களின் வழிமுறை. இதற்கு வெளியில் விவாதிக்க துப்பு கிடையாது. சாதாரணமாக இவர்கள் சொறிவது மக்களின் பிரச்சனைகள் மீதான வழிகள் மீதுதான். உண்மையில் இதை விவாதிக்க எந்த தார்மீக நேர்மையும் கிடையாது.



1. நக்சல்பாரிகளின் போராட்ட வழிமுறை தவறு என்றால் அதை கோட்பாட்டு ரீதியாக விவாதிக்க வேண்டும்.



2. சமூகத்தின் பிரச்சனைகளை எப்படி எந்த வழியில் தீர்க்க முடியும் என்று பதிலளிக்க வேண்டும.



3. வன்முறைகள் என்பது மக்களின் புரட்சிக்கு எதிரானது என்றால், அதை தத்துவார்த்த ரீதியாக விளக்க வேண்டும்.



4. தாக்கிவிட்டு பின்வாங்குவது (சந்திப்பு அதை காட்டுக்குள் தப்பி ஒடுவது என்கின்றார்) தவறு என்றால், அதை கோட்பாட்டு ரீதியாக அணுக வேண்டும்.



5. பாராளுமன்ற சாக்கடை மூலம் மக்கள் பிரச்சனையை தீர்க்கும் புரட்சியைக் கொண்டு வரமுடியும் என்றால், அதை எப்படி எந்த வகையில் என்று விவாதியுங்கள். அதை விடுத்து லெனின் கோட்பாட்டை வெட்டியெடுத்து, மூலதன சாக்கடைகளில் மூழ்கி எழும் பன்றிகளுக்கு கோமணமாக கட்டிவிடுவது விவாதமல்ல.



6. சாதிய இந்துத்துவத்தை அதன் சாரமாக உள்ள பார்ப்பனீயத்தை எப்படி ஒழிப்பது என்று கோட்பாட்டு ரீதியாக, அதன் நடைமுறை சார்ந்த வழிகளில் விவாதிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.



இப்படி ஒவ்வொரு பிரச்சனை மீதும் அறிவியல் பூர்வமாக விவாதிக்க துப்பில்லை. மாறாக இணையத்தில் புலம்புலது , சேற்றை அள்ளி வீசுவது மூலம் தமது வர்க்க குரோதத்தை சொறிந்து காட்டுகின்றனர்.



சமூகத்தின் எதிரிகள் மக்களின் முன் தெளிவானவர்கள். பார்ப்பனியம், ரவுடிஸ்ம் முதல் டாடாயிஸ்ம் வரை அதன் மொத்த முகமும் தெளிவானது. இங்கு இதை எதிர்கொள்ளும் அனுபவம் சார்ந்த நடைமுறை, மக்களை மண்டியிட வைப்பதில்லை. மக்களின் எதிரி, எதிரிதான்.



இணையத்தில் மக்களின் எதிரியை எதிர்கொள்வது என்பது, அவர்களின் சொறிவுக்கு பதிலளிப்பது என்பது தவறானது. அது நேரத்தையும் குறிக்கோளையும் முடக்கும். மாறாக அதன் கோட்பாட்டையும், அதன் சாரத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இவை தனிப்பதிவுகளாக, கட்டுரைகளாக அமைய வேண்டும். பரந்துபட்ட வாசகர்கள் முதல் எழுதுபவர்களை அடிப்படையாக கொண்டே இவை செய்யப்பட வேண்டும்.



அவர்கள் சொறிந்து சமூக சாரத்தை உறிஞ்சி விடுவதன் மூலம், சமூக அறியாமையை புகுத்துவதே அவர்களின் நோக்கமாகவுள்ளது. ஒன்றை புதிதாக தெரிந்து கொள்வது, கற்றுக் கொள்வது, கற்றுக் கொடுப்பது, ஏன் விவாதிப்பது கூட, அவர்களின் நோக்கமல்ல. இந்த மாதிரியான மனித விரோத ஜென்மங்களுக்கு பதில் சொல்வது, கருத்துச் சுதந்திரம் வழங்குவது அர்த்தமற்றது. இந்த மாதிரியான சமூக விரோதிகள், எப்படி சமூக விரோதிகளாக இருக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்தி, சமூக பொதுத் தளத்தில் பேசவேண்டும்.



மக்களின் அன்றாட வாழ்வியல் உரிமைகளை, எப்படி எந்தத்தளத்தில் மறுதலிக்கின்றனர் என்பதை பொது தளத்தில் தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள் உரிமை என்று கூச்சல் போடுவதை, எப்படி இவர்களே சமூக தளத்தில் மறுத்து நிற்கின்றனர் என்ற உண்மையை விளக்குவதன் மூலம், போலியான பகட்டுத்தனமான அருவருக்கத்தக்க மூஞ்சையை பொதுத்தளத்தில் தனிமைப்படுத்த வேண்டும். நிஜ உலகில் ஒரு பாhப்பனியம், ரவுடிஸ்சம் முதல் டாடாயிஸ்ம் வரையிலான சமூக விரோதிகள், மக்களின் உரிமைக்காக விவாதிப்பதில்லை. அதே போல் இந்த பொறுக்கிகளுடன் மக்களும் விவாதிப்பதில்லை. இது போல் இணைய பொது தளத்திலும் அம்பலப்படுத்தி, எதிரியை தனிமைப்படுத்துவது அவசியமானது.