தமிழ் அரங்கம்

Saturday, January 13, 2007

ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்?

ஆரியர் யார்? பார்ப்பனர்கள் யார்?

பி.இரயாகரன்
13.01.2007



ரலாற்று ரீதியாக இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது மிகவும் சிக்கலுக்குரிய ஒன்று. வரலாற்று ஆய்வுகளில் உள்ள குளறுபடிகள், அதை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் தெளிவாக சில வரலாற்று முடிவுகளை, வரலாறு சார்ந்து எடுக்கமுடியும்.


1. ஆரியர்கள் என்போர் வந்தேறிகளே. அவர்கள் கி.மு 1000 க்கும் கி.மு 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள்.


2. ரிக்வேதம் ஆரியருடையதும், ஆரியரால் பின்பட்ட ஒரு வாழ்வுமுறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை அடிப்படைiயாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று.


3. ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரின் ஒரு பிரிவு, அதுவும் இந்திய சமுதாய கலப்பின் ஊடாகத்தான் பார்ப்பனர்களானார்கள். மற்றைய ஆரிய பகுதி இந்திய சமூகத்துடன் ஒன்று கலந்து இனம் காணமுடியாது போய்விட்டனர். அத்துடன் இன்றைய பார்ப்பனர்களின் ஒரு பகுதி, ஆரிய கலப்பற்றவர்கள். அதாவது இவர்கள் ஆரிய பார்ப்பனர்களால், பார்ப்பனர்களானவர்கள்.


4. ஆரியரின் எந்தப் பகுதி பெரும்பகுதி பார்ப்பனர்களானார்கள் என்றால், ஆரியரில் இருந்த பூசாரிகள் தான். அனைத்து ஆரியரும் பார்ப்பனராகவில்லை.


5. பார்ப்பனம், பார்ப்பனீயம் தோன்றுமளவுக்கு ஆரிய சமூகத்தின் சிதைவு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவு அதன் மூலமொழியை இழந்து போகுமளவுக்கு நிகழ்ந்துள்ளது.


6. ஆரிய சமூக அமைப்பை வழிநடத்திய பூசாரிகள், சமுதாய எண்ணிக்கையில் மிகச்சிறிய பிரிவினராவர். ஆனால் பொருளாதார ரீதியாக வலுவுள்ள ஆதிக்க பிரிவினராகும். தமது பலத்தினை நிலைநிறுத்தக் கூடிய வகையில், குதிரைகளை சொந்தமாக கொண்ட ஒரு பிரிவும் கூட. ஆரிய சமூக சிதைவின் போது, அவர்கள் தனிமைப்படுமளவுக்கு தனித்துவமான சடங்குகளை பேணும் ஒரு குழுவாக எஞ்சினர். அவர்கள் தமது தனித்தன்மையை பேணியபடி, தனிச் சலுகையையும் கொண்டபடி, இந்த பூசாரிகளும் சமுதாயத்தினுள் சிதைந்தனர். இந்த சிதைவின் மூலம் தமது மூல வேத ஆரிய மொழியை இழந்தனர். ஆனால் தனிச் சலுகை பெற்;ற ஒரு பூசாரிக் குழுவாக இருந்ததாலும், வழிபாட்டு முறைகள் ஏற்கப்பட்டதாலும், அந்த பழைய சடங்கை அவர்கள் பாதுகாக்க முடிந்தது. ஆனால் தனது சொந்த மூல மொழியை இதனூடாக பாதுகாக்க முடியவில்லை. அதாவது வேத ஆரிய கால சடங்குகளை மற்றொரு மொழி ஊடாக செய்ய முனைந்தன் மூலம் தான், அது தப்பிப்பிழைத்தது. சமுதாயத்தில் சிதைந்ததன் மூலம், ஆரிய வேத மூல மொழியையே இழந்தனர்.


இந்த நிகழ்வு நீண்ட நீடித்த ஒரு கால பகுதியில், அதாவது சில தலைமுறைக்குள்ளான ஒன்றாக இருந்துள்ளது. சடங்கு நிலையில் எஞ்சிய அவர்களின் வாழ்வுமுறை மிகவும் தனிமைப்பட்ட நிலையிலும், சமுதாய போக்கில் ஒன்றிணைந்ததன் விளைவு, அவர்கள் ஆரிய வேத மொழியின் நீட்சியை இழந்தனர். எஞ்சி இருந்த சடங்கு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தின் சடங்காக மாறிய போது, சிதைந்த மூல மொழியில் இருந்தும், வாழ்ந்த சமுதாயத்தின் மொழிகளுடனும் கலந்து சமஸ்கிருதம் என்ற இரகசிய பூசாரிகளின் மொழி உருவானது. இது சமுதாயத்தின் பேச்சு மொழியாக உருவாகவில்லை. சொல்லப்போனால் ஆரியர்கள் அனைவரும் பேசும் மொழியாக மீள் உருவாக்கம் செய்யப்படவேயில்லை.


7 .வேதகாலச் ஆரிய சடங்குகளை செய்யக் கூடிய இந்த ஆரிய வழிவந்த பிரிவு, சமுதாயத்தில் தனிச்சலுகை பெற்ற ஓன்றாக மாறியது. இது சலுகை பெற்ற ஒரு தனியான சுரண்டும் வர்க்கமாக, தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், அதை இரகசியமாக்கவும், தனது பழைய மொழியின் சிதைவில் இருந்து ஒரு மொழியை தக்கவைத்துள்ளது. அதுதான் சமஸ்கிருதம். இதை கடவுளுக்கு மட்டும் தெரிந்த ஒரு மொழியாக கூறிக்கொண்டதுடன், கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களின் ஒரு இரகசிய மொழியாகவும் இதைப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள், கடவுளுடன் பேசக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை கட்டமைக்கப்பட்டது.


8. இந்த சமஸ்கிருத மொழியின் தோற்றம், அதுவும் பார்ப்பனரால் மட்டும் பேசப்பட்ட மொழியாக வரலாறு இந்த மொழியை அடையாளம் கண்டுள்ளது. இதை கடவுள் மொழி என்று கூறிக்கொண்டனர். மறுபக்கத்தில் ஆரிய மூல மொழியை மீட்க முடியாத அளவுக்கு, ஆரிய சிதைவு சமுதாயத்தினுள் நிகழ்ந்துள்ளது.


9. இந்த ஆரிய வேத மொழி சிதைவும், பார்ப்பனர் மட்டும் பேசும் சமஸ்கிருத மொழியின் தோற்றமும், ஆரியரின் சிதைவை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இடைப்பட்ட இக் காலத்தில் ஆரியர் என்ற அடையாளமே இன்றி, அது ஓரு தனித்துவமான மக்கள் கூட்டம் என்ற அடையாளமே இன்றியே, அது அழிந்துபோனது.


ஆரிய சமூகம் ஆரிய வேத மொழியை பேசிய காலத்தில், பல்வேறு தொழில்களைச் செய்யும் ஒரு சமூகமாகவே அது இருந்துள்ளது. அது வெறும் பூசாரிகளை மட்டும் கொண்ட கற்பனைக் கூட்டமல்ல. ஒரு சமுதாய அலகாக, தனது சமுதாயத்தினுள்ளான தேவைகளை பூர்த்தி செய்யும் பலதுறை சார்ந்த ஒரு குழுதான் ஆரியர். இதை நாம் ஆரிய ரிக்வேத சடங்குகளிலும் காணமுடியும். இரண்டாவதாக ஆரிய நாடோடி வாழ்க்கை அதன் முழுச் சிதைவு வரை, பல தலைமுறை கொண்டது. நாடோடிகளாக இந்தியாவின் ஒருபகுதியை வந்தடைந்த காலம் வரை, தனது சமூகத்தின் தேவையை அது தனக்குள்ளேயே பூர்த்தி செய்தது. இப்படி பல்வேறு சமூகத் தேவையையொட்டி, சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினை அதற்குள் இருந்தது. இந்த ஆரிய நாடோடிகள், அப்படியே இரத்த உறவு கொண்ட பார்ப்பனராக இடம் பெயரவில்லை. அப்படி காட்சிப்படுத்துவது என்பது, அப்படி நம்புவது என்பது, மூடர்களினதும், முட்டாள்களினதும் பிழைப்புவாதிகளினதும் செயலாகும்.


இப்படி வந்த நாடோடி ஆரிய சமூகம் இந்தியாவினுள் தனித்துவமாகவும், ஆரிய சமூகமாகவும் நீடிக்க முடியவில்லை. இந்திய சமூகத்தை வென்று அடக்கவும் முடியவில்லை. அவர்கள் சிதைந்தனர். சிதைந்த போது தமது சடங்கு முறை மூலம், இந்திய சமூகத்துக்கு நஞ்சிட்டனர். அந்த நஞ்சு தான், பார்ப்பனீயமாகி சாதியாக நீடிக்கின்றது. இந்த ஆரிய சடங்கு முறையைத் தவிர, ஆரிய மூலம் எதுவும் இனம் காணமுடியாத வகையில் அது சிதைந்துள்ளது.


மீட்கப்பட்ட ஆரிய வேத சடங்குமுறை தனது மூலத்தை தக்கவைத்தபடி, இன்றைய எல்லைவரை அது பலவாக திரிந்து வந்துள்ளது. ஆரிய வேத நாடோடி மக்களின் சிதைவு, தனது மொழியையும், அதன் மூலத்தையும் இழந்தது. தனது நாடோடித் தனித்துவத்தை பேண முடியாத ஒரு காரணத்தினால் தான் அழிந்து, பொதுவான சமூக ஓட்டத்தில் சிதைந்து கலந்தனர். இப்படி அந்த வேத ஆரிய மொழி சிதைவுற்று, அதன் மூல மொழி அழிகின்றது. இதன் மூலம் அவர்களின் இரத்த வழியான சமூக நாடோடி உறவு முறையே அழிகின்றது.


ஆனால் வேத ஆரிய சடங்குகளை பின்பற்றும் ஒரு பிரிவினர், இருக்கத்தான் செய்தனர். ஆனால் அவர்கள் ஆரியராகவோ, ஆரிய வேத மொழியை பேசுபவராகவோ இருக்கமுடியவில்லை. அதன் பெயரால் அவர்கள் தம்மைத்தாம் அடையாளப்படுத்தவும் கூட முடியவில்லை. அவர்கள் வாழ்ந்த சமூதாயத்தில் சிதைந்தபடி, தமது சடங்கை பின்பற்றுபவராக இருந்துள்ளனர். இந்த மதச் சடங்கை பின்பற்றியோர், பெருமளவில் ஆரியரில் இருந்த பூசாரிப் பிரிவாகும். இவர்களால் மட்டும் தான், தனது சடங்குகளையும் அது சார்ந்த நினைவுகளையும் தொடர முடிந்தது. மதம் ஊடாகவும் அவர்களின் பராம்பரியமாக மனப்பாடம் செய்யும் கல்வி முறையூடாகவும் இதைப் பேண முடிந்தது. அதாவது வசதியும் வாய்ப்பும் கொண்ட, உழைப்பில் ஈடுபட்டு வாழவேண்டிய தேவை இல்லாத பிரிவு மூலம் தான், இது ஒரு மதச் சடங்காக பாதுகாக்கப்பட்டது.


மறுபக்கத்தில் தனிச்சொத்துரிமை குடும்ப அலகை அடிப்படையாக கொண்டது என்ற வகையில், ஆரம்ப உழைப்பு பிரிவினைகள் பரம்பரைத்தன்மை கொண்டவையாகவே இருந்தது. அதாவது அது இயற்கையானது கூட. உற்பத்தி சார்ந்த அறிவு, அது சார்ந்த நுட்பத் திறன், அது பற்றிய கல்விமுறை பெற்றோர் வழியாக குழந்தைக்கு சென்றது. குழந்தை பிறந்தது முதலே, இது ஒரு வாழ்வாக மாறிவிடுகின்றது.


இந்த வகையில் ஆரியவேதச் சடங்குகளை, பூசாரிகள் தம் குழந்தைகள் ஊடாக பரம்பரையாக கடத்தப்பட்டது. ஆனால் இந்த பாரம்பரிய சடங்கை வேத ஆரிய மொழியில் தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவிய மொழியில், வெறும் சடங்குகளாகவே அவை சிதைந்து வெளிப்பட்டது. வேத ஆரிய மொழிச் சிதைவு கலந்த ஒரு மந்திரமாகவே, சமஸ்கிருத மொழியின் முந்தைய வடிவங்கள் நீடித்தன. சமஸ்கிருத மொழி மந்திரம் என்ற நிலையைக் கடந்து, ஒரு மொழியாக உருவாகியது என்பது, ஆரிய வேத சடங்குக்கு இருந்த சமுதாய மதிப்பு தான் அடிப்படைக் காரணமாகும். இப்படி சமஸ்கிருதம் ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகியது. இந்த மொழி ஒரு மக்கள் கூட்டத்தால் பேசப்படவில்லை. மாறாக மற்றவர்களை ஏமாற்றி தொழில் செய்யும் ஒரு கூட்டத்தின், தொழிலுக்குரிய மொழியாகியது.


இப்படி இந்த சமஸ்கிருதம் ஒரு குறித்த பூசாரிகளின் கூட்டத்தின் மொழியாவது என்பது, வேதஆரிய சடங்குகள் சமுதாயமயமாகியதன் பின் நிகழ்கின்றது. வேத ஆரியரின் முன்னயை சடங்கு முறைகள் சமுதாயத்தில் மதவழிபாடாக ஆதிக்கம் பெற்ற போது, சமஸ்கிருதமே அந்தச் சடங்குக்குரிய மந்திர மொழியாகின்றது.


10. இந்த தனி மொழியின் தேவை ஏன் எதனால் எழுகின்றது? வேதகால ஆரிய மதச்சடங்கு நல்ல வருவாயுள்ள ஒன்றாகவும், சுரண்டல் வாழ்க்கைக்கு அத்திவாரமானதன் விளைவு, அந்த சடங்கு மந்திரங்கள் தனித்தன்மை பெற்று அவை இரகசியமாகின்றது. வருவாயுள்ள தொழிலை மற்றவர் தெரியக் கூடாது என்பதால், இந்தச் சடங்கை மற்றவர்க்கு புரியாத, புரிய முடியாத வகையில் கட்டுப்படுத்த தனிமொழியின் தேவை அந்த சுரண்டும் வர்க்கத்துக்கு நிபந்தனையாகின்றது. இதை சில இரகசிய மந்திரங்கள் மூலம் செய்வதையும் உறுதி செய்வது, தனிச்சொத்துரிமை அமைப்பின் சுரண்டல் விதியாகும். மற்றவர் புரியாத மொழியில் செய்வது மட்டும் தான், இந்த சுரண்டலை தனித்தன்மையுடன் பாதுகாக்கவும், அதன் தனித்தன்மையை சிலர் கொண்டிருக்கவும், அதை பரம்பரைத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவது, வர்க்க சுரண்டல் அமைப்பில் வாழ்வுக்கான அடிப்படை விதிகளில் ஒன்று. தனிச்சொத்துரிமை அமைப்பில் இது எல்லா தொழிலுக்கும், அன்றும் இன்றும் பொருந்துகின்றது.


வேத ஆரிய சடங்கை இரகசியமாக்க உருவான, இரகசிய சுரண்டல் மொழிதான் சமஸ்கிருதம். இதை அந்த பூசாரிகள் மட்டும் பேசுகின்ற வகையில் தனித்தன்மை பெற்று, அவர்கள் மொழியானது. இந்த மொழி ஒரு கூட்டத்தின் மொழியாக இருந்த போது, சமூகத்தில் மற்றொரு மொழியே மக்கள் மொழியாக இருந்தது. இந்த மொழியின் இருப்பு என்பது, பூசாரிகள் ஒரு சுரண்டும் வர்க்கமான போது அதாவது அவர்கள் சுரண்டும் பார்ப்பனர்களாகியதால், அவர்களின் பேசும் மொழியாகியது. இந்த சுரண்டும் சமஸ்கிருத மொழி, பொதுவான பூசாரிகளில் இருந்து அவர்களை பிரித்து பார்ப்பனராக்கியது.


இந்த மொழிக்கு என்று சமுதாய மூலம் எதுவும் கிடையாது, இந்த மொழிக்கு என்று தனி வரலாறு கிடையாது. இது பூசாரிக் கூட்டத்தின், அதாவது பார்ப்பனியரின் சுரண்டும் ஓரு இரகசிய மொழி. இந்த மொழியை சாதிய அமைப்பு மேலும் இறுக்கமாக்கி, அதை ஒரு சாதிய மொழியாக்கியது. இது என்றும் எங்கும் ஒரு மக்கள் மொழியாக இருந்ததில்லை. இதனால் இதற்கென்று வரலாறு கிடையாது. இதை ஆரிய வேதச் சடங்கின் மூலம் மட்டும் தான், இனம் காணவேண்டியுள்ளது.


ஆனாலும் சுரண்டும் பூசாரி வர்க்கப் பிரிவின், ஆதிக்கம் பெற்ற ஒரு இரகசிய மொழியாக இருந்தது. இப்படி வேத ஆரியரை சடங்குகள் மூலம் தம்மை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தான் பாரப்பனர்கள். அவர்களினது சுரண்டும் இரகசிய மொழி தான் சமஸ்கிருதம்.


இந்த அடிப்படையில் தான் வேத ஆரிய பார்ப்பன வரலாற்றின் தொடர்ச்சியை நாம் இனம் காணமுடியும். ஆரிய வேத மக்களின் மூலத்தை, அதன் வாழ்வியல் கூறையும், இந்திய சமுதாயத்தில் தொடர்ச்சியாக அதன் மூலத்துடன் இனம் காணமுடியாது. வேத ஆரிய சடங்குகள் மூலம் அவை மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. ஆரியரின் தொடர்ச்சியில் வந்த பூசாரி பிரிவுகளால் அவை மீள் அறிமுகமாகியது. இந்த பூசாரிகள் ஆரியராக அறிமுகமாகவில்லை, மாறாக சமுதாயத்தில் சுரண்டித் தின்னும் பார்ப்பனராக, புதியதொரு வர்க்கமாக, தமது சடங்குகள் மூலம் அறிமுகமாகின்றனர். இதுவே வருண அமைப்பில் வீற்று இருக்கும் பார்ப்பானாகின்றான். பார்ப்பான் வருண அமைப்பில் ஒரு சுரண்டும் ஒரு உறுப்பாகத்தான், வரலாற்றில் அவன் மீளவும் ஆரிய வேத சடங்கு மூலம் அறிமுகமாகின்றான். சாதி அமைப்பில் இது மற்றொன்றாக வேறுபடுகின்றது. இதை தனியாக நான் விளக்கியுள்ளேன்.


தனது சுரண்டல் தொழிலின் இரகசியம், அது சார்ந்த இழிந்த கேடுகெட்ட வாழ்க்கை முறை, உழைப்பின் மீதான வெறுப்பு, இயல்பாகவே அவர்களை பண்பு ரீதியாக பண்பு கெட்ட சூழ்ச்சிக்காரராக, சதிகாரராக வரலாறு முழுக்க வாழவைக்கின்றது. அது மட்டும் தான், அவர்கள் உருவாக்கிய வாழ்க்கை முறையாகியது. இதற்காக எதையும் செய்யவும், எப்படியும் வாழ்வும், சமுதாயத்தை எப்படியும் இழிவுபடுத்தவும், அவர்கள் ஒருகணம் கூட தயங்கியதில்லை. அவர்கள் வாழ்க்கையே சூழ்ச்சியாகி சதியாகியது. இந்த வாழ்க்கை முறை மூலம், முழு இந்தியாவையும் தனக்கு அடிமைப்படுத்தியது. அதில் ஒன்று தான் சாதிய வடிவம். இவற்றை தனியாக நான் ஆராய்ந்துள்ளேன்.


11. இங்கு ஒரு அடிப்படைக் கேள்வி எழலாம். இன்றைய பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு அடியைச் சேர்ந்த, 4000 வருட வழி வந்த இரத்த உறவு வாரிசுகளா? எனின் இல்லை. வர்க்க அமைப்பின் விதி, தனிச்சொத்துடமை அடிப்படையில் யாரையும் சாதிய அமைப்பு போல் கட்டுப்படுத்துவதில்லை. சாதிய அமைப்பில் சொத்துடைமையை, அதாவது வர்க்க நிலையை சில சாதிகளின் உரிமையாக்கியது. ஆனால் வருண வர்க்க அமைப்பு அப்படி இருக்கவில்லை. வருண அமைப்பில் சொத்துடைய யாரும் மேலே உயர முடியும். அதேநேரம் சொத்தை இழந்தவர்கள் கீழே விழமுடியும். இதை கட்டுப்படுத்தும் எந்த சாதிய விதியும், அங்கு கிடையாது. பாhப்பனர்கள் முதியவர்கள் போன்ற தகுதிக்குரிய அந்தஸ்தை சிறப்பாக பெற்று இருந்தபோது, தனிச்சொத்துடமை விதி பலமானது. அது ஒரு இயற்கை விதியாக, தனிச்சொத்துரிமை அமைப்பின் போக்கில் அதை நிர்ணயம் செய்தது.


இந்த வருண அமைப்புக்கு முன்னமே வேத ஆரிய மூலத்தையும், அந்த மொழியையும், வாழ்ந்த சமுதாயத்தினுள்ளாக சிதைந்ததன் மூலம், தமது இரத்த உறவு வழியான தூய்மை என்று சொல்லக் கூடியதையே இழந்தனர். ஆரியர் என்ற வரலாற்று மூலத்தைக் கூட இழந்து காணப்பட்ட ஒரு சமூகத்தில் தான் பார்ப்பனர்கள் உருவானார்கள். கலப்பு அடிவந்த ஆரிய பரம்பரை தான் இன்றைய பார்ப்பனர்கள். ஆனால் இதற்கு வெளியில் பலர் பார்ப்பனரானார்கள்.


பார்ப்பன பூசாரி சுரண்டும் வர்க்கம் வேத ஆரிய சடங்குமுறையையும், அதன் இரகசியத்தை தனிமொழி மூலம், தனிச்சொத்துரிமை வருண அமைப்பில் தற்பாதுகாக்க முடியாது போனது. தற்பாதுகாப்பு அடிப்படையில் உருவான இரகசிய மொழியான சமஸ்கிருதம் வெறும் மொழியே ஒழிய, சாதி போல் வலுவுள்ள தற்பாதுகாப்பு ஆயுதமல்ல. சாதியில் மட்டும், அதுவும் நிலபிரபுத்துவ காட்டுமிராண்டி அடக்குமுறைச் சமூக அமைப்பில் மட்டும், அது இரத்த உறவு பரம்பரை முறையை பாதுகாக்க முடிந்தது. ஆனால் வருண அமைப்பில், அதன் பரம்பரைத்தன்மையை, இரத்த வாரிசு உறவுக்கு வெளியில் இட்டுச் சென்றது.


வருண அமைப்பின் விதிக்கமைய அதாவது வர்க்க விதிக்கமைய, பார்ப்பனரின் வர்க்க வீழ்ச்சியும், பணம் சம்பாதிக்கும் விதியும், குருகுலக்கல்வி முறையும், ஒரு இரத்த உறவு கொண்ட பரம்பரைக்குரிய ஒன்றாக, ஆரிய வேதச் சடங்கை பாதுகாக்க முடியவில்லை. நல்ல வருவாய் கொண்ட இந்த சுரண்டலில், பலர் புதிய பார்ப்பனரானார்கள். ஆரிய வேதச் சடங்குகள் அதாவது பார்ப்பனீயம் மற்றைய மதங்களைப் போல் துறவை, மனித சேவையை முன்வைக்கவில்லை. தன்னை முன்னிலைப்படுத்தி, தன்னை கடவுளாக்கி, அது தனக்கேயுரிய சுரண்டலை முன்வைத்தது. இந்த வகையில் ஆரிய வேத சடங்கு வருவாயுள்ள பார்ப்பனீய தொழிலாகியது. மற்றைய மதங்கள் போல் துறவை மேற்கொண்டு, மக்களிடம் கையேந்தி உண்ணவில்லை. மக்களைச் சுரண்டித் தின்றது. உழைத்து வாழ விரும்பாத சமூக பொறுக்கிகளின் தூய தங்குமிடமாக, வேத ஆரிய சடங்கு மாறியதில் ஆச்சரியமில்லை. சூதும், சூழச்சியும் கொண்ட சதிகள் மூலம், சதியாளர்கள் புதிய பார்ப்பனரானார்கள்.


இந்த ஆரிய வேத சடங்கு ஒரு மதமாக இந்திய சமுதாயத்தில் வெற்றிபெற்றதற்கான மூலம், இது தனக்காக சுரண்டிய மதம் என்பதால், அது செயலூக்கமுள்ள ஒன்றாக எப்போதும் இருந்ததால் இருப்பதால் வெற்றிபெற்றது. அது தோற்ற போதெல்லாம், வென்றதை செரித்தபடி சமுதாயத்தின் கூறுகள் மீது பார்ப்பனீயத்தை நஞ்சாயிட்டது. சமுதாயத்தினுள் பார்ப்பனீயம் நஞ்சை இடுவதில், அதன் சுரண்டும் வர்க்க மூலம் மீட்சிக்கான கூறாக இருந்ததும், இன்றும் இருந்தும் வருகின்றது.


இரத்த உறவைத் தாண்டியே, இந்த பார்ப்பனீயம் பலரை பார்ப்பனீயமாக்கியது. சுரண்டும் ஆரிய வேதச் சடங்கின் செல்வாக்கு, குறித்த இடத்தைத் தாண்டிச் செல்ல ஊக்கியாக்கியது. பல பிரதேசத்தை சேர்ந்த தூர இடங்களில் இருந்து வந்து கற்கவும், அதை தெரிந்து கொள்ளவும் இது தூண்டியது. இந்த சுரண்டும் சூது வாதுகளை கற்பிப்பது நல்ல வருவாயுள்ள தொழிலாகியது. இது குருகுலக் கல்விக்கூடாக, புதிய பார்ப்பனர்களை உருவாக்கியது. இந்தக் கல்வி இரகசிய மொழியான அதே சமஸ்கிருத்தில் கற்றதாலும், கற்று வந்ததாலும், சமஸ்கிருதம் அவர்களுக்குரிய ஒரு தனிமொழியாகியது. எந்த சமூக பொருளாதார அடிப்படையிலான எந்த தொடர்ச்சியுமற்ற இந்த சமஸ்கிருத மொழி, வேத ஆரிய சடங்கு மூலம் சுரண்டலை செய்தவரிடையேயான ஒரு மொழியாக நீடிக்க முடிந்தது. இது ஒரு சுரண்டும் வர்க்கத்தின் இரகசிய மொழியாகவும், அதை மட்டும் இந்த மொழி ஆதாரமாக்கியதால் அதன் இருப்புக்கான அடிப்படையாகியது. மற்றொரு வகையில் இந்த மொழியில் மட்டுமே, வேத ஆரிய சடங்குமுறைகள் இருந்ததுடன், அதை கடவுளின் மொழியாகவும் கற்பிக்கப்பட்டு இருந்தது.


வரலாறு தெரிந்த காலம் முதலே, வேத ஆரிய பார்ப்பனீய சடங்கை முன்னிலைப்படுத்தி வெளிவந்த அனைத்தும், சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது மட்டுமின்றி, அவை பார்ப்பனரால் தன்னை தான் முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டது. சாதியக் கோட்பாட்டை மதக் கோட்பாடாக்கியதுடன், பார்ப்பனீயம் இப்படித்தான் சமூகமயமாகியது.


12 .ரிக் வேத ஆரிய வரலாறு தொடங்கி, இந்தியாவில் அவர்கள் நிலைபெறல் வரையிலான காலத்தை உள்ளடக்கிய வேதம், நாகரிகம் பெற்று சமூகத்தை அடிப்படையாக கொள்ளவில்லை. அவர்களின் போர்கள் நாகரிக சமூகத்துக் எதிராக இருந்துள்ளது. அவர்கள் போற்றும் ரிக்வேதம் தொடங்கிய இடத்தில் இருந்து நிலைபெற்ற வரையிலான வேத காலத்தில், அவர்களின் போராட்டம் நாகரிக கோட்டைகளை அழித்தலாகும். நிலையாக உழைத்து வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை அழித்தலாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்து அதில் அவர்கள் வாழ முயலவில்லை. அழித்தல் என்பது சூறையாடலை அடிப்படையாக கொண்டது. நெருப்பு சார்ந்த சடங்குகள், விலங்கு பலியிடல் அனைத்தும் இதற்கு உட்பட்டதே. இதைத் தனியாக பின்னர் பார்ப்போம்.


இந்திரன் கோட்டையை அழிக்கும் ஒரு கடவுளாகவே, ஆரியர் முன் நிற்கின்றான். அப்படித்தான் ஆரிய வேத மக்கள் இந்திரனை நம்பினர். ரிக் வேதத்தில் கோட்டை கட்டி ஆரியர் வாழ்ந்ததாக எந்த குறிப்பும் கிடையாது. சாராம்சத்தில் கோட்டை தமது கடவுள் கோட்பாட்டுக்கு எதிரானதாகவும் கூட மாறிவிடுகின்றது. நாகரிக எதிர்ப்பாளரான ஆரியர் வாழ்வியல் முறை, அவர்களின் வழிபாடாக மாறிவிடுகின்றது. ரிக்வேத ஆரிய மந்திரம் ஒன்று, அக்கினியிடம் கோட்டையை காப்பாற்றுவது போன்று, எம்மையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரி வழிபடுகின்றனர்.


இப்படி அக்கால நாகரிக அமைப்புக்கு வெளியில் ஒரு நாடோடிகளாகவே ஆரியர் வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்களின் அழிவு வரை, அவர்களால் நிலைபெற்று வாழ முடியவில்லை. அவர்களின் பின் பல பண்பாட்டு கூறுகள் ஓட்டிக்கொண்டு வருகின்றது. குதிரை, இருப்பு முதல் இறந்தவரை புதைத்தல் எரித்தல் வரை பல கலப்பு பண்பாட்டின் கலவைகளாக வேத ஆரிய வழிபாடு அறிமுகமாகின்றது. அவர்கள் பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பையும், இந்த சடங்கு முறைக்கு வெளியில் பெற முடியவில்லை. வரும் வழியெங்கும் சிலவற்றை உள்வாங்கினர், சிலவற்றை இழந்தனர். தொடங்கி முடியும் வரலாற்றுக்கு இடையில் பிணத்தை எரிப்பு முதல் புதைப்பது வரை, அவர்களின் பண்பாட்டுத் தளமே அதிர்ந்தது. இந்த நாடோடிக் குணாம்சம், மூலமேயின்றி சடங்கு முறையுடன் எஞ்சி அழிந்தனர். அவர்களின் கோட்பாடு நாகரிகத்துக்கு எதிராக இருந்ததால், அவர்கள் நிலைபெற்று ஒரு சமூகமாக நாகரிகமாக உழைத்து இன்றுவரை வாழ முடியவில்லை.


நகரும் ஒரு நாடோடிச் சமூகமாக, அதையே பல தலைமுறை செய்ததால் நாகரீகத்தின் மூச்சை அவர்களின் வரலாற்றின் பின் இனம் காணமுடியாது. வரும் வழியெல்லாம் அவர்கள் கொள்ளையிடுகின்றனர். கால்நடைகளை திருடுகின்றனர். இதை ரிக் வேதம் இத் திருட்டையும் கொள்ளையையும், இந்திர கொடையாக கூறுகின்றது. இப்படி கொள்ளையிட்டு, அதை புசித்து உண்டு வாழும் சமூகம் காட்டுமிராண்டி சமூகமாக இருப்பது ஆச்சரியமன்று. இப்படி கொள்ளையடித்த கால்நடைகளை பலியிட்டு உண்டபடி தான், அதுவும் பல தலைமுறை ஊடாக குறிக்கோளின்றி இந்தியா வரை வந்தடைந்த ஆரியர் வாழ்வியல் முறை அரைக் காட்டுமிராண்டித்தனமானது தான்.


நீண்ட பல தலைமுறை கொண்ட ஒரு நாடோடி அரைக் காட்டுமிராண்டிகளை, குறைந்தபட்சம் நாகரிகப்படுத்தியது என்றால் அவர்களின் வாழ்வியல் நெருக்கடிதான். இந்த நாடோடிகள் உணவுக்காக கொள்ளையிட்ட போதும், அது அவர்களின் வாழ்வைப் பூர்த்தியாக்கும் வகையில், கொள்ளை வளம் போதுமானதாக இருக்கவில்லை. முதலில் எரியூட்டியவர்கள், ஒரேயடியாக பலியிட்டவர்கள், இதில் இருந்து தப்பிப்பிழைக்க கால்நடைகளை பராமரிப்பது பெருக்குவதை அவசியமாக்கியது. அன்றைய இருப்பில் கால்நடை இன்றிய நகர்வு, தற்கொலைக்கு ஒப்பானது. உணவை நகரும் பாதையில் பெறுவது என்பது சாத்திமற்ற ஒன்று. எனவே கால்நடைகளை தொடர்ந்து பராமரிப்பதும், அதை இனவிருத்தி செய்வதும் அவசியமாக இருந்தது. ஒருபுறம் ஆரிய வேதம் கூறுவது போல் வரும் வழியெங்கும் சடங்கின் பெயரில் கால்நடைகளை தின்பதும், மறுபுறம் கால்நடை வளர்ப்பும் அவசியமானதாக இருந்தது.


அத்துடன் இது சிறியளவிலான தேவையை ஓட்டி சிறிதுகாலம் தங்குவது, பயிர் செய்கையை செய்வதும் உருவானது. இது ஒரு நிலையான பிரதேசத்தில் அல்ல, நகரும் வழிகளில் இதை அவர்கள் செய்தனர் அல்லது கொள்ளையிட்டு அழித்த சமூகத்தின் பயிர் செய்கையை பராமரித்து, அதை அறுவடை செய்து பாதுகாத்தனர். இது தான் அவர்களின் காட்டுமிராண்டிகளற்றதாக காட்டுகின்ற ஒரு உயர்ந்தபட்ச நாகரிகம். அத்துடன் அங்கு இருந்த உழைப்புக் கருவிகளையும், தற்பாதுகாப்பு கருவிகளையும் திருடிக்கொண்டு தம்மை பலப்படுத்தினர். இதை வைத்து முகர்ந்து தேடும் ஆய்வாளர்கள், அவர்களை நாகரிக சமூகமாக காட்ட அலைகின்றனர்.


இந்த ஆரிய நாடோடிகளின் பெயர்வு நிலையற்ற ஒரு நீண்ட பல தலைமுறை கொண்டது. அப்படித்தான் சமூக இருப்பு கொண்ட ஆதி சமூகங்கள் பல இருந்துள்ளது. மனிதன் கால்படாத பல புதிய பகுதியூடான இடப்பெயர்ச்சி, பல இடத் தரிப்புகளை கொண்டதாக இருந்தது. வளமும் வாய்ப்பும் நிறைந்த பூமியில், கொள்ளையும் கொழுப்பும் நிறைந்த இடத்தில், அந்த வளம் வற்றும் வரை தங்கி வாழ்தல் மூலமே ஆரிய இடப்பெயர்ச்சி மெதுவாக நடந்தது. பெண்கள் குழந்தைகள் முதல் முதியவர் ஈறாக கொண்டு, கால்நடைகளை பராமரித்தபடியான இந்த இடப்பெயர்ச்சியை ஒரு புள்ளியாக, ஒரு நேர் கோடாக சுருக்க முடியாது. இது போன்ற வாழ்க்கை முறையுடன் கூடிய நாடோடி வாழ்க்கை முறை, செவ்விந்திய மக்கள் மத்தியில் அமெரிக்காவின் அழித்தொழிப்பு நிகழ்ந்த காலத்திலும் கூட காணப்பட்டுள்ளது. இங்கு அது இயற்கை மாற்றத்தை ஒட்டி இந்த இடப்பெயர்ச்சி பருவகாலத்தின் போக்கில் நடந்தது.


மெதுவான ஆரிய இடப்பெயர்ச்சி மூலம், அவர்கள் கொள்ளையடித்து வைத்திருந்த குதிரைகள் இனவிருத்தி ஊடாக பெருகியதுடன், சுற்றுச்சூழலுக்கு அவை இசைவாக்கம் அடைந்தது. உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் குதிரையைக் கூட பலியிட்டு உண்டனர். அதாவது முதிர்ந்த, செயலற்ற, நகர்வுக்கு தடையாக பெருகிவிட்ட, உணவு இல்லாத நிலையில் குத்pரை கூட பலியிடப்பட்டது. வேத ஆரிய பார்ப்பனீய சடங்கின் போது, பலியிடப்பட்ட குதிரையுடன் அரசி புணரும் சடங்கு பின்னால் ஒரு சூக்குமம் உள்ளது என்பது தெளிவு. அது முறையற்ற ஒரு செயலின் மீதான குற்ற உணர்வை நீக்குவதாக இருக்கலாம்;.


இதற்கு நல்ல உதாரணம் டார்வின் ஆய்வு நடத்திய காட்டுமிராண்டி சமூகத்தில், வேட்டை கிடைக்காத போது தமது வேட்டைக்கு உதவும் நாய்களுக்கு உணவிட, வேட்டையாட முடியாத முதியவர்களை கொன்று நாய்க்கு உணவிட்டதை அவர் பதிவாக்கியுள்ளார். இந்த வகையில் இந்த நாடோடி ஆரிய நகர்வு நடந்தது. ஆரிய இடப்பெயர்ச்சி என்பது ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்தை நோக்கி போதலை அடிப்படையாக கொண்டதல்ல. பல வரலாற்று ஆய்வாளார்கள் இதைக் காணத் தவறி, ஆரிய வரலாற்றை அங்குமிங்கும் முகர்ந்து ஆரிய மூத்திரம் தென்படுகின்றதா என்று முகர்ந்து தேடுகின்றனர்.


ஆரிய சமூகம் நிலையான சமூகமாக உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அல்ல. அதனால் வரலாற்றில் நிலையான வாழ்வற்றவர்கள். ஆதிய சமூகத்தில் நிலையான வாழ்வமைத்து, உற்பத்தி உறவுடன் பின்னிப்பிணையாது அலைந்துதிரியும் காட்டுமிராண்டி சமூக குழுக்களில் ஒன்று தான் ஆரியர். இதற்குள் நிலைபெற்ற நாகரிக பண்பாட்டை அகழ்வாராய்ச்சியில் தேட முடியாது.


பிரதானமான வேள்வி முறையையும், அக்கினி சடங்குகளையும் கொண்ட வேத ஆரியரின், அக்கினி பலிபீடங்களை தேடியவர்களுக்கு அதன் சுவடே காணமுடியவில்லை. அக்கினி வழிபாடு மற்றும் பலியிடல், ஆரிய சடங்கில் கொள்ளையிட்ட சமூகத்தின் மீதான எதிர்வினைதான். இவை ஒரு நிலையான சமூகமாக இல்லாத ஒரு நாடோடிகள் என்பதால், வேள்வி முதல் பலியிடல் வரை வந்த இடத்துக்கு ஏற்ப தற்காலிகமானது தான். அவை அழிந்து போகக் கூடிய எல்லைக்குள், அவை வரலாற்றில் காணாமல் போய்விடுகின்றது.


ஆரிய வேத சடங்கு முறைகள் சிலவற்றை கொண்ட, அதன் எச்சத்தை மீளமைப்பு செய்த பார்ப்பனீயம் இல்லையென்றால் ஆரிய வரலாற்றைப் பற்றிய எந்தக் குறிப்பும் எமக்குக் கிடையாது போய் இருக்கும். இது போன்ற எத்தனையோ சமூகத்தின் தனிக் குறிப்புகள் இல்லாமல் போனது போல் ஆகியிருக்கும். இது ஒன்றும் வரலாற்றுக்கு புதிதல்ல.


------------------------------------------------------------------------------------------


எனது கட்டுரையின் உள்ளடக்கம் புத்தகம் வெளிவரும் வரை, தொடர்ச்சியான திருத்தத்துக்கும், இணைப்புக்கும், நீக்கத்துக்கும் உள்ளாக்குகின்றது. அதேபோல் கட்டுரையின் தலைப்பு, கட்டுரைகள் வரவேண்டிய இடம், கட்டுரையின் உள் மேலும் கீழுமாக இடம்மாறும். அந்த வகையில் இவை தொடர்பான எனது கற்றலும், உங்கள் ஆக்கபூர்வமான விவாதமும் இதற்கு உதவும். இந்த வகையில் உங்கள் தர்க்கங்கள், வாதங்களையும், ஆலோசனைகளையும் கூட எதிர்பார்க்கின்றேன்.


அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது

இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்:
அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது

ந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கை கையெழுத்தான நாளில் இருந்தே, அதனை அடிமைச் சாசனம் என அம்பலப்படுத்தி, நாம் எழுதி வருகிறோம். அதேசமயம், அமெரிக்க அடிவருடிகள் அனைவரும், ""அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக''க் கூறி, இந்திய மக்களின் காதுகளில் பூ சுற்றி வந்தார்கள். இந்தக் கெட்டிக்காரர்களின் குட்டை, இன்று அமெரிக்காவே புட்டு வைத்து விட்டது.


இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னிபந்தனையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் இந்தியா அமைதிக்கான அணுசக்தி கூட்டுறவுச் சட்டம், ""இந்தியா எவ்வளவு யுரேனியத்தைக் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்பதில் தொடங்கி இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது முடிய அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை இனி இந்திய நாடாளுமன்றத்திற்குக் கிடையாது; அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தான் உண்டு'' எனப் பச்சையாகக் குறிப்பிட்டுள்ளது.


காலனிய ஆட்சி காலத்தில் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் கீழ் காலனிய இந்திய அரசு செயல்பட்டதைப் போல, இப்பொழுது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் "சுதந்திர' இந்திய அரசு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இந்திய நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரிவிக்காமல், அமெரிக்காவில் வைத்துதான் கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கையில் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டார். இந்த அறிக்கை கையெழுத்தாகி (ஜூலை, 2005) ஒன்பது மாதங்கள் கழித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வந்தபொழுது, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான், ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை, சிவில் அணு உலைகள், இராணுவ அணு உலைகள் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்; சிவில் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா முன்வர வேண்டும்; அணுகுண்டுகள் தயாரிக்கத் தேவைப்படும் யுரேனிய வகைகளை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் பல்நாட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்'' என்பன உள்ளிட்டு, அமெரிக்கா விதித்த பல்வேறு நிபந்தனைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது மறுக்க வழியின்றி அம்பலமானது. இதன் பிறகுதான், இந்திய அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கத் தொடங்கினர்.


இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களைச் சமாதானப்படுத்தும் முகமாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே சில வாக்குறுதிகளைக் கொடுத்தார்; அணுசக்தி விஞ்ஞானிகளையும் நேரடியாகச் சந்தித்துப் பேசியதோடு, இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ""ஹைட் சட்டம்'' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமெரிக்கச் சட்டமோ, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது.


···


""சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஆற்றல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும்; சிவில் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளைச் செறிவூட்டுவது; கனநீரை உற்பத்தி செய்வது உள்ளிட்ட உரிமைகளை இந்தியாவிற்குத் தருவதோடு, அவற்றுக்கான தொழில்நுட்பத்தையும்; சாதனங்களையும் பெறும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும்; சிவில் அணு ஆற்றல் தொடர்பாக மேலை நாடுகள் அனுபவிக்கும் அதே உரிமைகள் இந்தியாவிற்கும் கிடைக்கும் என்ற வாக்குறுதியை அமெரிக்கா வழங்க வேண்டும்'' இது, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளுள் ஒன்று.


அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யுரேனியத்தைச் செறிவூட்டவும், மீண்டும் புத்தாக்கம் செய்யவும் பயன்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏற்கெனவே தன்னிறைவு அடைந்துள்ள இந்தியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து முன்னேறிய தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தது. குறிப்பாக, உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் யுரேனியம் இந்தியாவின் தேவைகளை ஈடு செய்ய முடியாமல் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தியபிறகு, அதனை இந்தியாவிலேயே செறிவூட்டிக் கொள்ளும் உரிமையும் கிடைக்கும் என இந்திய அரசு எதிர்பார்த்தது.


ஆனால், அமெரிக்கச் சட்டமோ, இந்த உரிமைகளையும், இதற்கான தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்கா உள்ளிட்டு 45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அணுஆற்றல் வழங்குவோர் குழுமம், இந்த உரிமையை தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விடாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


இந்தியா அமெரிக்கா இடையே அணு ஆற்றல் கூட்டுறவு தொடர்பாகப் பேச்சு வார்த்தை தொடங்கிய பொழுது, இந்தியா, ""தனது சிவில் அணு உலைகளை, தனது விருப்பப்படிதான் சர்வதேச அணு ஆற்றல் கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தும்'' எனக் கூறியதாகவும், அதன் பின்னர்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு, ""தனது சிவில் அணு உலைகளை, அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் எவ்வித நிபந்தனையும் இன்றி சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தச் சம்மதித்ததாகவும்'' கூறப்படுகிறது. ""இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை, அந்த அணுஉலைகளின் ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்த பிறகே, இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டதாக'' மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


அமெரிக்கச் சட்டமோ, ""இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு எவ்வித உறுதியும் அளிக்காததோடு, இந்த அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்தியா இறக்குமதி செய்து சேமித்து வைக்கவும்'' தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவை ஓரங்கட்டிவிட்டு, அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தைச் சேர்ந்த மற்ற நாடுகளிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா முயன்றால், அதனையும் தடுக்க வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது.


அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது போல, அமெரிக்காவின் விருப்பம், கண்காணிப்பின்றி, இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை இயக்கும் சுதந்திரத்தை இந்தியாவிற்குத் தரக்கூடாது என்பதுதான் இச்சட்டத்தின் நோக்கம்.


""அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியிருப்பதால், இந்தியாவிற்கு அணுஆயுத வல்லரசு என்ற தகுதி வழங்கப்பட வேண்டும்; அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய ஐந்து அணு ஆயுத வல்லரசுகளை எந்தளவிற்கு சர்வதேச அணுசக்தி கமிசன் கண்காணிக்குமோ, அதைப் போலத்தான் இந்தியாவையும் கண்காணிக்க வேண்டும்; இதற்காக, சர்வதேச அணுசக்தி கமிசனில் இந்தியாவிற்கெனத் தனி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்'' எனக் கோரியிருப்பதாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


அமெரிக்கச் சட்டம் இவற்றுள் ஒன்றைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே, இந்தியாவின் 14 அணு ஆலைகள் அணு சக்தி கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்மோகன் அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, அணுசக்தி கமிசனின் கண்காணிப்புக்கு இந்தியா உட்படுத்தப்பட்ட பிறகுதான், ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என அமெரிக்கச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


""அமெரிக்காவின் கண்காணிப்பாளர்கள் இந்திய அணு உலைகள் பக்கம் சுற்றுவதை அனுமதிக்க மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார், மன்மோகன் சிங். அமெரிக்கச் சட்டமோ, ""அமெரிக்கா அணுசக்தித் துறையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இந்தியாவின் சிவில் அணு உலைகளைக் கண்காணித்து, அவை பயன்படுத்தப்படும் விதம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.


""அமெரிக்க அதிபர், இந்தியாவின் அணுசக்தி பயன்பாடு குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தரவேண்டும்; அதன் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும்'' என்ற நிபந்தனையை அமெரிக்கா இப்பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே விதித்தது. இந்த நிபந்தனைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும் வந்த எதிர்ப்பையடுத்து, மன்மோகன் சிங், ""இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார்.


அமெரிக்கச் சட்டமோ, ""சான்றிதழ்'' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ""மதிப்பீடு'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மேல், வேறெந்த சலுகையினையும் வழங்கவில்லை.


""இந்தியாவில் கட்டப்படும் புதிய அணுக்கரு உலைகள் பற்றி; அணு ஆயுத உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டால், அம்மாற்றங்கள் பற்றி; அணுகுண்டினைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருளின் சேமிப்பு பற்றி; அவை என்னென்ன வகையான மூலப்பொருள் என்பது பற்றி; சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் வராத, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அணு உலைகளின் செயல்பாடு பற்றி; ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு யுரேனியம் இந்தியாவிலேயே வெட்டி எடுக்கப்படுகிறது; அதில் எவ்வளவு யுரேனியம் அணுகுண்டு தயாரிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது; அணுசக்தியின் மூலம் ஓர் ஆண்டில் எவ்வளவு யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது'' என்பது பற்றியெல்லாம் அமெரிக்க அதிபர் ""மதிப்பீடு'' செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.


""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்; அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.''


""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை (அணுகுண்டு) உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஈரானைக் கட்டுப்படுத்தவும்; தேவை ஏற்பட்டால் ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தியா முழுமையாகவும், ஊக்கத்தோடும் ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என அமெரிக்கச் சட்டம் குறிப்பிடுகிறது. இதனைப் பச்சையாகச் சொன்னால், இந்தியா, அமெரிக்காவின் உளவாளியாக, அடியாளாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.


இந்தியா வருங்காலத்தில் புதிதாக அணுகுண்டு சோதனைகளை நடத்தாமல் தடுப்பதற்காக, ""அணுகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும்'' எனக் குறிப்பிடும் இச்சட்டம், ""எந்தக் காரணத்தை முன்னிட்டாவது, இந்தியா மீண்டும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துமானால், அமெரிக்கா இந்தியா அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ஒருதலைபட்சமாக முறித்துக் கொள்ளலாம்; இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு அளித்த சாதனங்கள் அனைத்தையும், அமெரிக்கா திரும்பப் பெற்றுவிட வேண்டும்; ஒப்பந்தம் முறிந்து போன பிறகும்கூட, இந்தியாவின் சிவில் அணுஉலைகளை மூன்றாவது நபர்கள் கண்காணிப்பதை அமெரிக்கா உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.

···

இந்தியாவின் அரைகுறை இறையாண்மையைக் கூட உருவிக் கொண்டுவிட்ட இந்தச் சட்டம், இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளுமே, இந்த விசயம் குறித்து கூட்டுக் களவாணிகளாகத்தான் செயல்பட்டு வந்துள்ளன.


அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரானையே தூக்கியெறியத் தெம்பில்லாத பா.ஜ.க., இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோருவதை, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையோடுதான் ஒப்பிட முடியும்.


1998இல் பா.ஜ.க. ஆட்சியில் இரண்டாம் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியபின், ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக்க, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி, ""இனி இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தாது'' என ஐ.நா. மன்றத்திலேயே வாக்குறுதி அளித்தார். அப்பொழுது பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் அணு உலைகளைக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரச் சம்மதிப்பதாக, அமெரிக்காவின் உள்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல்லிடம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு இவைதான் அடிப்படைகள் என்கிறது அமெரிக்கா. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க. போட்டுச் சென்ற கோட்டில், காங்கிரசு ரோடு போட்டுவிட்டது என்பதுதான் உண்மை.


···


இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவோ, இந்தியாவை வல்லரசாக்கும் நோக்கத்திற்காகவோ உருவாக்கப்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் ஈரான் நாடுகளிடையே உருவாகவிருந்த எரிவாயு ஒப்பந்தத்தைத் தகர்ப்பதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அரசுதந்திரம்தான் இந்த ஒப்பந்தம்.


""ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், இந்தியாவிற்கு அணுசக்தி துறையில் உதவுவோம்; இந்தியாவை வல்லரசாக்குவோம்'' என ஆசைகாட்டிய அமெரிக்கா, ""இதற்கு மறுத்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்போம்'' என கடந்த மார்ச் 2005இல் மிரட்டல் விட்டது.


இது ஒருபுறமிருக்க, ""புதிய நூற்றாண்டுக்கான அமெரிக்காவின் திட்டம்'' ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்டுத்தக் கோருகிறது. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நோக்கத்திற்கு இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது, அமெரிக்கா. ஏற்கெனவே சீன எதிர்ப்பில் மூழ்கிப் போயிருக்கும் இந்தியா; தெற்காசியாவில் அமெரிக்காவின் அடியாளாக அங்கீகாரம் பெறுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த இந்தியா, அமெரிக்கா வீசியெறிந்த இந்த எலும்புத் துண்டை, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இந்தியா இடையே நடக்கவிருக்கும் அணுசக்தி வியாபாரத்தில் தனியார் முதலாளிகளும் பங்கு பெறலாம் என்பதால், இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள். 4,50,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவே, ""இறையாண்மை, சுயசார்பு'' போன்ற பழைய முகமூடிகளை அவிழ்த்து வீசிவிடத் தயாராகி வருகிறார்கள்.


அதனால்தான், நாட்டின் சுயமரியாதைக்கே எதிராக உள்ள இந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கத் துணியாத மன்மோகன் சிங் கும்பல், ""இந்தச் சட்டம் அமெரிக்க அதிபரைத்தான் கட்டுப்படுத்தும்; இந்தியாவை அல்ல'' என சால்ஜாப்பு சொல்கிறார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே உருவாகவுள்ள ""123 ஒப்பந்தத்தில்'' ங்""ஹைட்'' சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே கையெழுத்தாகவிருக்கும் ஒப்பந்தத்தின் பெயர் தான் "123 ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் இந்தியாஅமெரிக்கா இடையே அணுசக்தி கூட்டுறவும், வர்த்தகமும் தொடங்கப்படும்.சி இந்த விதிகளைச் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என வீராப்பு பேசுகிறார்.


""அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இந்தியா பணிந்து போன இரகசியம் மார்ச் மாதம் அம்பலமானபொழுது, அமெரிக்கச் சட்டம் வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கினார்கள்; அமெரிக்க சட்டம் வந்த பிறகு "123 ஒப்பந்தம்' வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்'' என மன்மோகன் சிங்கின் வீராப்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.என். பிரசாத் அம்பலப்படுத்துகிறார்.


சர்வதேச அணுசக்தி கமிசனில் ஈரானுக்கு எதிராக இந்தியா மூன்று முறை வாக்களித்தது; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட வெனிசுலாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வெள்ளை மாளிகையில் இருந்துவந்த தொலைபேசி மிரட்டலைப் பூசி மெழுகியது போன்ற விவகாரங்கள், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காதான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளன.


அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு துப்பாக்கி ரவையைக் கூடச் சுட முடியாது என்ற கேவலமான உண்மையும், நாடாளுமன்றத் தாக்குதலின் பின் நடத்தப்பட்ட படை திரட்டலின் பொழுது பச்சையாகத் தெரிந்துவிட்டது. எனவே, புதிய அணுகுண்டு சோதனைகள் நடத்த வேண்டிய தேவையும் இந்தியாவிற்குக் கிடையாது.

இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கச் சட்டத்தில் உள்ள நிபந்தனைகள், ""123 ஒப்பந்தத்தில்'' சேர்க்கப்பட்டாலும், சேர்க்கப்படாவிட்டாலும், இந்தியாவின் அமெரிக்க அடிவருடித்தனத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதே உண்மை.


தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடே மறுகாலனியாக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும், அணுசக்திக் கொள்கையும் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடின்றிச் சுதந்திரமாக இயங்க முடியும் என நம்புவதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ, கடந்த ஆண்டு ஜூலையில் புஷ்ஷûக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, அமெரிக்கச் சட்டமும், 123 ஒப்பந்தமும் இருக்க வேண்டும் எனக் கூச்சல் போடுகிறார்கள். அடியாளாக இருந்தாலும், கொஞ்சம் கௌரவமான அடியாளாக இருக்க வேண்டும். (இசுரேலைப் போல!) என்பதுதவிர, இந்த எதிர்ப்புக்கு வேறு பொருள் கிடையாது.

· செல்வம்

Thursday, January 11, 2007

டாட்டா-பிர்லா கூட்டாளி!

டாட்டா-பிர்லா கூட்டாளி!
பாட்டாளிக்குப் பகையாளி!!

மார்க்சியம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்; ""டாடா மார்க்சியம்'' பற்றி உங்களுக்குத் தெரியுமா?


அதென்ன டாடா மார்க்சியம்? மார்க்சியத்துக்கு ""டாடா'' காட்டிவிட்டு, செங்கொடி பிடித்துக் கொண்டே தரகுப் பெருமுதலாளி டாடாவுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதற்குப் பெயர்தான் ""டாடா மார்க்சியம்''. இதைப் பற்றி நீங்கள் விளக்கமாக அறிய வேண்டுமானால், "டாடா மார்க்சிஸ்டுகள்' ஆளும் மே.வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள சிங்கூர் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தைப் பார்த்தாலே போதும்.


""டாடாபிர்லா கூட்டாளி; பாட்டாளிக்குப் பகையாளி'' என்று முன்னொருக் காலத்தில் முழங்கிவந்த "மார்க்சிஸ்டுகள்', இப்போது மே.வங்க மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு சிவப்புக் கம்பளம் விரித்து மறுகாலனியாக்கச் சேவையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றனர்.


இதன்படி, சிங்கூர் கிராமத்தில் இருபோகம் சாகுபடியாகும் 997.1 ஏக்கர் நிலத்தை மே.வங்க "இடதுசாரி' அரசே ஆக்கிரமித்து, தரகுப் பெருமுதலாளித்துவ டாடா நிறுவனத்துக்குத் தாரை வார்த்துள்ளது. இங்கு கார் தொழிற்சாலையை நிறுவி நடுத்தர மக்களும் எளிதில் வாங்கும் வகையில் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் உற்பத்தி செய்யப் போவதாக டாடா நிறுவனம் கூறுகிறது. இதை எதிர்த்து, ""விளைநிலங்களை ஆக்கிரமிக்காதே! வாழ்வுரிமையைப் பறிக்காதே!'' என்று சிங்கூர் மக்களும் பல்வேறு இடதுசாரிஜனநாயக இயக்கங்களும் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றன.


போராடும் சிங்கூர் விவசாயிகளையும் பிற இயக்கத்தினரையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை சீர்குலைக்கும் அராஜகவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்திச் சாடும் "மார்க்சிஸ்டு' ஆட்சியாளர்கள், சிங்கூர் விவசாயிகள் சுய விருப்பத்துடன் நிலங்களை அரசிடம் கையளித்து, உரிய நிவாரணத்தையும் பெற்று விட்டார்கள் என்றும், அரசியல் ஆதாயத்துக்காக எதிர்த்தரப்பினர் வெளியிலிருந்து ஆட்களைத் திரட்டி வந்து போராட்டம் என்ற பெயரில் அராஜகம் செய்வதாகவும் கூறுகிறது. கடந்த நவம்பர் 30ஆம் தேதியன்று டாடா ஆலை அமையவுள்ள நிலத்தில் முள்கம்பி வேலி போட்டும், போராடிய மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் தடியடி தாக்குதல் நடத்தியும், 144 தடையுத்தரவு பிறப்பித்தும், சிங்கூரில் டாடா ஆலையை நிறுவியே தீருவோம் என்றும் "இடதுசாரி' அரசு கொக்கரிக்கிறது.


போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியதும், பிழைப்புவாத திரிணாமுல் காங்கிரசு தலைவியான மம்தா பானர்ஜி, தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள, தாமும் டாடா ஆலைத் திட்டத்தை எதிர்ப்பதாக மறியல் கடையடைப்புப் போராட்டங்களை நடத்தினார். சிங்கூரில் அவர் நுழையத் தடை விதிக்கப்பட்டதும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவரது போராட்டத்துக்கு நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் மேதாபட்கர் முதல் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் வரை பல்வேறு தரப்பினரும் ஆதரவு தருவதைக் கண்டு பீதியடைந்துள்ள டாடா மார்க்சிஸ்டுகள், தமது துரோகத்தனத்திற்கு நியாயவாதங்களை அடுக்கி மேலும் அம்பலப்பட்டு வருகின்றனர்.


""சிங்கூரில் இதுவரை 9020 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கி விட்டோம்; இன்னும் ஏறத்தாழ 3000 பேர் மட்டுமே உள்ளனர். டிசம்பர் மாத இறுதிக்குள் அவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விடும். சிங்கூரில் ஒரு ஏக்கர் நிலத்தின் உத்தேச மதிப்பு ரூ. 6.02 லட்ச ரூபாயாக உள்ள போதிலும், ஒரு ஏக்கருக்கு ரூ. 8.6 லட்சம் கொடுத்து நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளோம். இதற்காக அரசு ரூ. 76.64 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது'' என்று புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர் மே.வங்க ஆட்சியாளர்கள்.


கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதலாக தொகை கொடுத்துள்ளதாக போலி கம்யூனிஸ்டுகள் வாதிடுவதே மோசடித்தனமானது. நிவாரணத் தொகை என்பது பத்திரப் பதிவுப்படி, நடப்பிலுள்ள மூன்றாண்டுகளில் அந்த நிலத்தின் சராசரி மதிப்பேயாகும். பத்திரப் பதிவு செலவுகளைக் குறைக்க, நிலத்தின் மதிப்பை ஏறத்தாழ 5060 சதவீதத்துக்குக் குறைத்துக் காட்டி பதிவு செய்வதென்பது நாடெங்கும் எழுதப்படாத விதியாகவே உள்ளது. இந்நிலையில் நிலத்தின் சராசரி மதிப்பைக் கணக்கிட்டு அதனுடன் கொஞ்சம் கருணைத் தொகையை இடதுசாரி ஆட்சியாளர்கள் சேர்த்துக் கொடுத்தாலும், நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு நிலத்தின் உண்மை மதிப்பின்படி நிவாரணத்தொகை கிடைக்காது.


ஏற்கெனவே கொல்கத்தாவின் புறவழிச்சாலை மற்றும் ராஜர்ஹட் நகரியத்துக்காக நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சராசரியாக ரூ.3 லட்சம் தரப்பட்டது. ஆனால் அந்த இடத்தின் சந்தை விலையோ ரூ.10 லட்சத்துக்கும் மேலாகும். எனவே, சிங்கூரில் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் அளித்துவிட்டதாக போலி கம்யூனிஸ்டுகள் பசப்புவது கடைந்தெடுத்த மோசடித்தனமேயாகும்.


பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வுக்கான உத்தரவாதம் ஏதுமின்றி, நிவாரணத் தொகை தருவதையே மறுவாழ்வு என்று ஏய்ப்பது போலி கம்யூனிஸ்டுகள் செய்யும் இன்னுமொரு மோசடி. 1947இலிருந்து 2000 வரை "வளர்ச்சி'த் திட்டங்களுக்காக மே.வங்கத்தில் 47 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் அரசால் பறிக்கப்பட்டு, 70 லட்சம் மக்கள் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படாமல் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களில் 9% பேருக்கு மட்டுமே மறுவாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன.


"இடதுசாரி' ஆட்சி நடக்கும் மே.வங்கத்தைவிட ஒப்பீட்டு ரீதியில் மேலானதாக இதர மாநில அரசுகள் மறுவாழ்வுநிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. ஆந்திராவில் 28 சதவீத அளவுக்கும், ஒரிசாவில் 34 சதவீத அளவுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மைய அரசின் புள்ளியியல் துறையின் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இதுவும்கூட, உலக வங்கியின் நிர்பந்தம், மேற்கத்திய நாடுகளது மனித உரிமை அமைப்புகளின் கண்டனம் முதலானவற்றுக்குப் பிறகு கண்துடைப்பாகவே செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அதைக்கூட செய்யாமல் ஒப்பீட்டு ரீதியில் "இடதுசாரி' அரசு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.


மே.வங்கத்தில் பல லட்சகணக்கான மக்கள் "வளர்ச்சி'த் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஒருங்கிணைந்த மறுவாழ்வுக் கொள்கை எதையும் இதுவரை "இடதுசாரி' அரசு வகுக்கவோ செயல்படுத்தவோ இல்லை. சிங்கூரில் போராட்டம் தொடர்வதாலேயே, இப்போது மறுவாழ்வுக்கான நிவாரணமளிப்பதாக "இடதுசாரி' அரசு கூறுகிறது. ஆனால், ஏற்கெனவே இதேபோல பல்வேறு தனியார்அந்நிய ஏகபோக நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக எந்தக் கொள்கையோ, திட்டமோ இதுவரை இல்லை.


மே.வங்கத்தில் குத்தகை விவசாயிகள்தான் பெருமளவில் விவசாயம் செய்கின்றனர். சிங்கூரிலும் குத்தகை விவசாயிகள் கணிசமாக உள்ளனர். நிலவுடைமையாளர்களுக்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகையில் 25% தொகை, பதிவு பெற்ற குத்தகை விவசாயிகளுக்குத் தரப்படும் என்கிறது "இடதுசாரி' அரசு. ஆனால், பெரும்பாலோர் வாய்வழி ஒப்பந்தம் மூலம் குத்தகை விவசாயம் செய்யும் பதிவு செய்யப்படாத குத்தகை விவசாயிகளாக உள்ளதால், இவர்களுக்கு நிவாரணமோ மறுவாழ்வோ கிடைக்காது.


இதே நிலைமைதான் சிங்கூரிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி விவசாயிகளுக்கும் நேரும். ஏனெனில், கையகப்படுத்தப்படும் நிலத்தின் உடைமையாளர்களுக்குத்தான் அரசு நிவாரணம் தருமேயொழிய, மற்றவர்களுக்கு எதுவும் கிடைக்காது. இக்கிராமத்தைச் சார்ந்து வாழும் நாவிதர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், சிறுவியாபாரிகள் முதலானோர் எவ்வித நிவாரணமோ, மறுவாழ்வோயின்றி கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, நகரங்களில் கூலி வேலை தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இவை ஒருபுறமிருக்கட்டும். நிலம் தேவையெனில் டாடா நிறுவனமே சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள விவசாயிகளிடம் பேசி வாங்கிக் கொள்ளலாமே! ஏன், அரசு அதைக் கையகப்படுத்தி டாடாவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் மையமான கேள்வி. 1894ஆம் ஆண்டின் நிலக் கையகப்படுத்தல் சட்டப்படி, பொதுநலனுக்காக பொதுப் பயன்பாட்டுக்காக மட்டுமே நிலத்தைக் கையகப்படுத்தலாம். அதாவது, அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்துரயில் நிலையம், குடியிருப்புகளை நிறுவ இச்சட்டத்தின்படி விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தலாம். ஆனால், ஒரு தனியார் தரகுப் பெருமுதலாளியின் ஆதாயத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதென்பது சட்டவிரோதமானது. சட்டத்தைப் பார்த்தால் மாநிலத்தைத் தொழில்மயமாக்க முடியாது என்று நியாயவாதம் பேசும் "மார்க்சிஸ்டுகள்', டாடாவுக்காக சட்டத்தையே வளைத்து முறுக்குகிறார்கள்.


ஏற்கெனவே பல தனியார் ஆலைகளுக்கு மே.வங்க அரசு நீண்ட கால குத்தகைக்குத்தான் நிலங்களைக் கொடுத்து வந்துள்ளது. இப்போது டாடாவுக்கு குத்தகை அடிப்படையில் நிலத்தைத் தராமல், மொத்தமாகக் கையகப்படுத்தி தாரைவார்க்கக் காரணம் என்ன என்பதைப் பற்றி மே.வங்க இடதுசாரி அரசு இன்றுவரை வாய் திறக்க மறுக்கிறது. மேலும், மே.வங்க அரசிடம் குத்தகை அடிப்படையில் நிலத்தைப் பெற்று தொழில் தொடங்கிய பல தனியார் நிறுவனங்கள் நசிவடைந்து மூடப்பட்டு, அந்நிலங்கள் மீண்டும் அரசின் பொறுப்பில் உள்ள நிலையில், அவற்றை டாடாவுக்குக் கொடுப்பதை விடுத்து புதிதாக சிங்கூரில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்குக் காரணம் என்ன என்பதையும் தெரிவிக்க மறுக்கிறது.


கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் கார் தொழிற்சாலையை மட்டும் டாடா நிறுவப் போவதில்லை. உபரியாக உள்ள நிலத்தில் உற்பத்தி அல்லாத பிற நடவடிக்கைகளுக்கு அதாவது அடுக்குமாடி குடியிருப்புகள், அங்காடிகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளது. இப்படித்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் நிறுவப்படுகின்றன. ஆனால், சிங்கூரில் டாடா நிறுவுவது கார் தொழிற்சாலைதான்; அது சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்ல என்கிறது "இடதுசாரி' அரசு. அத்தகைய மண்டலம் அல்ல என்றால், உபரியாக ஏராளமான நிலத்தை டாடாவுக்குத் தாரை வார்ப்பது ஏன் என்பதற்குப் போலி கம்யூனிஸ்டுகள் விளக்கம் தர மறுக்கிறார்கள்.


ஒரு தனியார் நிறுவனத்துக்காக விளைநிலங்களை அரசு கையகப்படுத்த தனிச்சட்டமும் விதிமுறைகளும் உள்ளன. இச்சட்டப்படி, அத்தனியார் நிறுவனம், மாவட்ட ஆட்சியரிடம் நிலத்திற்கான தொகையையும் மறுவாழ்வு நிவாரணத் தொகையையும் முன்பணமாகச் செலுத்தி ஒப்பந்தம் போட வேண்டும். ஆனால் டாடா நிறுவனம் மே.வங்கத்தின் ஹூக்ளி மாவட்ட ஆட்சியரிடம் அப்படியொரு ஒப்பந்தம் போடவில்லை; மறுவாழ்வு நிவாரணத் தொகையையும் முன்பணமாகச் செலுத்தவில்லை.


இருப்பினும், டாடா நிறுவனம் ஆண்டுக்கு 0.01 சதவீத வட்டியோடு ரூ. 20 கோடியை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிவாரணத் தொகையாகத் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக "இடதுசாரி' ஆட்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உள்ள ரூபாயின் மதிப்போடு ஒப்பிட்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 1112 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், இன்றைய ரூபாயின் மதிப்புப்படி ஏறத்தாழ ரூ.12 கோடி கொடுத்துவிட்டு, ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை டாடா நிறுவனம் சுருட்டிக் கொண்டு விட்டது. இந்தப் பகற்கொள்ளைக்கான சிவப்புத் தரகர்களாக போலி கம்யூனிஸ்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


1988ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13வது விதியின்படி, அரசாங்க அதிகாரத்தைக் கொண்டு விதிமுறைகளை மீறி ஒரு தனிநபருக்கோ, நிறுவனத்துக்கோ சலுகை காட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதன்படி பார்த்தால், டாடாவுக்கு விதிமுறைகளை மீறி விளைநிலங்களைத் தாரை வார்த்துள்ள மே.வங்க "இடதுசாரி' அரசாங்கமே ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள குற்றவாளியாகும்.


இவையெல்லாம் மாநிலத்தைத் தொழில்மயமாக்குவதைத் தடுக்கும் அபத்தமான வாதங்கள் என்று தமது துரோகத்தனத்தை நியாயப்படுத்தும் டாடா மார்க்சிஸ்டுகள், இதர மாநில அரசுகளையெல்லாம் விஞ்சும் வகையில் மறுகாலனியக் கொள்கைகளை போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். அதற்கு சிங்கூர் விவகாரமே எடுப்பான சாட்சியமாக உள்ளது.


சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும், அவை அன்னிய பிரதேசங்கள் தனி சமஸ்தானங்கள் என்றும், இந்தியக் குடிமகனாக இருந்தாலும் இந்த சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி அதாவது ""விசா'' வாங்க வேண்டும் என்கிறது மைய அரசு. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதாகக் கூறும் டாடா மார்க்சிஸ்டுகள், இதே விதியைத்தான் சிங்கூரிலும் செயல்படுத்துகின்றனர். சிங்கூரில் நிறுவப்படும் டாடா ஆலைக்கெதிராக விவசாயிகளும் பிற இயக்கத்தினரும் போராடத் தொடங்கியதும், டாடா சமஸ்தானத்திற்குள் நுழையக்கூடாதென 144வது பிரிவின்படி தடையுத்தரவு, ஊரடங்கு உத்தரவு போட்டு, மீறுவோரைக் கைது செய்துள்ளனர். மேதாபட்கர், அருந்ததிராய் உள்ளிட்டு எவருமே டாடா சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று கெடுபிடி செய்து விரட்டியுள்ளனர். மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஆளும் வர்க்கத் தரகர்களாக மாறி துரோகமிழைப்பார்கள் என்பதை இவையனைத்தும் தெளிவாகவே நிரூபித்துக் காட்டிவிட்டன.


சிங்கூரில் தொடரும் போராட்டம், வெறுமனே நிவாரணம் மறுவாழ்வுக்கான போராட்டமல்ல; சாராம்சத்தில், இது நாட்டை மீண்டும் காலனியாக்கிவரும் ஆட்சியாளர்களுக்கும், தனியார் அன்னிய ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கும், போலி கம்யூனிச துரோகிகளான டாடா மார்க்சிஸ்டுகளுக்கும் எதிரான போராட்டம்!


""போஸ்கோ'' ஒப்பந்தத்தால் தமது மண்ணிலிருந்து பிய்த்தெறியப்பட்ட ஒரிசா பழங்குடியின மக்களின் போராட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் வாழ்விழக்கும் விவசாயிகளின் போராட்டம், நகரை அழகுபடுத்தும் திட்டங்களால் வீடு வாசல் இழந்து நிற்கும் நகர்ப்புற சேரி மக்களின் போராட்டம், தமது பிழைப்புக்கான இடத்திலிருந்து விரட்டப்படும் சிறுகடைதரைக்கடை வியாபாரிகளின் போராட்டம், தனியார்மயதாராளமயத் தாக்குதல்களால் மூண்டெழும் விவசாயிகள்தொழிலாளர்களின் போராட்டம் — என நாடெங்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் பரவிவரும் போராட்டத்தின் ஒரு அங்கம்தான், சிங்கூரில் தொடரும் போராட்டம். சொல்லிலே சோசலிசம் பேசிக் கொண்டு செயலிலே உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்குச் சேவை செய்யும் சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், மறுகாலனியத் தாக்குதலுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதே சிங்கூர் உணர்த்தும் பாடம்.

· பாலன்

எனது புதிய நூல்

எனது புதிய நூல்

'மனித சாரத்தை மறுப்பதே உலகமயமாக்கம்" என்ற 256 பக்கத்தைக் கொண்ட எனது நூல் வெளியாகியுள்ளது. இதன் விலை 100 ரூபா. இதை நீங்கள் கீழைக்காற்று வெளியீட்டகத்தில் பெற முடியும்.

அத்துடன் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு முன்னால் நடைபெறும் புத்தக கண்காட்சியில், அதாவது 250-251 கூந்தமல்லி நெடுங்சாலையில் உள்ள கீழைக்காற்று நூல் விறபனையகத்திலும் பெறமுடியும். இதை விட எனது அனைத்து நூல்களும் அங்கு பெறமுடியம்.

அத்துடன் கீழைக்காற்று வெளியீட்டகம் மனித அறிவை சிந்திக்க செய்யும் நூல்களை மட்டும், மனிதர்கள் முன் அறிமுகம் செய்யம் சிறப்பு விற்பனையகம். அங்கு உங்களுக்க தேவையான அறிவு சார்ந்த, மனிதம் சார்ந்த நூல்களை பெறமுடியும்.

இதன் முகவரி.

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.

தொலை பேசி எண்: 04428412367

பி.இரயாகரன்

Wednesday, January 10, 2007

ஈழம் : தொடரும் சிங்கள இனவெறி பாசிசம்!

ஈழம் : தொடரும் சிங்கள இனவெறி பாசிசம்!
அனாதைகளாகும் தமிழ் மக்கள்!

""தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதும் முன் வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெள்ளத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு என்பதைத்தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை'' என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது பிறந்தநாளான மாவீரர் எழுச்சி நாள் உரையில் அறிவித்திருக்கிறார்.


இதன் மூலம், ஒரு பக்கம் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் பேரழிவுப் போரை நடத்திக் கொண்டே மறுபக்கம் அமைதி வழித்தீர்வு காணப் போவதாக இரட்டை நாடகமாடும் சிங்களப் பேரினவாதக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவைப் போலன்றி பிரபாகரன் வெளிப்படையாகவே போர்ப் பிரகடனம் செய்துள்ளார். இலங்கையில் மீண்டும் மூண்டிருக்கும் இந்தப்போர் இதுவரை கண்டிராத அளவு மூர்க்கமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈழதேசத்தை மேலும் நாசப்படுத்தும் அவ்வாறான யுத்தமானது இலங்கையின் வடக்குகிழக்கோடு நின்று விடாது. தென்னிலங்கையின் முக்கியக் குறியிடங்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி, முழுநாடும் பேரழிவுக்குள் சிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.


""சர்வதேச சமூகம்'' என்று சிங்களப் பேரினவாத அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் மதிக்கும் ஏகாதிபத்தியத்தின் நெருக்குதல், சமாதானத்தையும் இயல்பு வாழ்வையும் விரும்பிய ஈழத் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களின் யுத்த எதிர்ப்பு நிலை மற்றும் சிங்களப் பேரினவாத அரசியல் சக்திகளிடையே நிலவிய கூர்மையான பிளவு ஆகியவை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையிலான போர்நிறுத்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் சமாதான முயற்சிகள் முன்னெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன.


ஆனால் இந்த முயற்சிகள் ""நாட்டைப் பிளவுபட வைப்பதாகவும், தமிழ் பயங்கரவாதிகளிடம் சரணடைய வைப்பதாகவும், அந்நிய சக்திகளிடம் இலங்கையின் இறையாண்மையை அடகு வைப்பதாகவும் இருக்கின்றன'' என்று அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பீதியையும், சிங்கள பேரினவெறியையும் கிளப்பினார். இதில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உறுமய என்ற பௌத்த குருமார்களின் கட்சி ஆகிய சிங்கள பேரின வெறி கடுங்கோட்பாட்டு இயக்கங்களோடு கைகோர்த்துக் கொண்டு, தாம் சிறுபான்மையாக இருந்த நாடாளுமன்றத்துக்கு ஒரு திடீர்த் தேர்தலைக் கொண்டு வந்தார்.


சமாதான முன்னெடுப்புகளில் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயின் தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டும், விடுதலைப் புலிகளின் தனிநபர் அழித்தொழிப்பு மற்றும் தற்கொலைப் படைத் தாக்குதல்களை மிகைப்படுத்தியும் பீதியூட்டி சிங்கள பேரின வெறியைக் கிளப்பி 2004 நாடாளுமன்றத் தேர்தல்களிலும 2005 அதிபர் தேர்தலிலும் சந்திரிகா ராஜபக்சே கும்பல் வெற்றி பெற்றது. விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அரசியல் நிலைப்பாடும் இதற்கு ஒருவகையில் மறைமுகமாக உதவியிருக்கிறது. போர்நிறுத்தமும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஈழத்தில் தாம் தலைமை வகிக்கும் ஒரு இடைக்கால நிர்வாகத்துக்கு வழிவகுக்கும், மேலைநாடுகளின் உதவியாக வரவிருந்த வளர்ச்சிப் பணிகளில் தமக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்த விடுதலைப் புலிகள் இயக்கம் அவ்வாறான வாய்ப்புகள் மறுக்கப்படுவதை 2002, 2003ஆம் ஆண்டே உணர்ந்தது.


கிழக்கில் தளபதி கருணாவின் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு கணிசமான அளவு நிதியையும் ஆயுதங்களையும் படையணியையும் இழந்தது, அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் புலிகளுக்குப் பின்னடைவைக் கொடுத்தது. சுனாமி பேரழிவைத் தொடர்ந்து வந்த நிவாரணப் பணிகள் மற்றும் மறுகட்டுமான வேலைகளில் விடுதலைப் புலிகளைப் பங்கேற்க விடாமல் விலக்கி வைப்பதில் ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் நெருக்குதல்களை இலங்கை அரசு அப்படியே ஏற்றுக் கொண்டபோதே, இனி சமாதான முயற்சிகள் எவ்வித பலனுமளிக்காது, ""விடுதலைப் போர் ஒன்றே வழி'' என்ற முடிவுக்கு புலிகள் வருவதற்கு இது ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது. இவ்வாறான காரணங்களினால் சிங்களப் பேரின அரசியல் சக்திகள் அனைத்தையும் ஒருசேர எதிர்ப்பது என்ற நிலையிலிருந்து இலங்கை நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்களில் புலிகள் எடுத்த நிலைப்பாடு சந்திரிகாராஜபக்சே கும்பலின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.


ரணில் மற்றும் புலிகளுக்கிடையிலான புரிந்துணர்வு யுத்த நிறுத்தம் மற்றும் சமாதான முன்னெடுப்புகளை முறியடிக்கும் முயற்சியினூடாக சிங்கள பேரினவாதம் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் மகிந்த ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஒரு வலுவான சிங்களப் பேரினவாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது. அதன் சித்தாந்த தலைமையாக ஜே.வி.பி. மற்றும் ஜாதிகா ஹெல உருமய ஆகிய சிங்களப் பேரினவெறி அமைந்திருக்கிறது. இறுதியில் ரணிலும் கூட இந்த கூட்டணியுடன் சமரசம் செய்து கொண்டு ஐக்கியப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு என்ற பழைய முயற்சியே மேற்கொள்ளப்பட்டாலும் தற்போதைய போரை தெளிவான, திட்டமிட்ட யுத்த தந்திர அடிப்படையிலேயே சிங்களப் பேரினவாதம் வழிநடத்துகிறது. இதன்படி போரை வழிநடத்துவதற்கான அதிகாரம் முழுக்கவும் இராணுவத் தளபதிகளிடமும், இராணுவ அமைச்சகத்திடமும் கையளிக்கப்பட்டிருக்கிறது. கிழக்கில் கருணாவின் கைக்கூலிப்படையைக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தாக்கி பலவீனப்படுத்துவது; கடந்த நான்காண்டுகளில் புதிதாகத் திரட்டப்பட்டிருக்கும் படைபலத்தையும், ஆயுத பலத்தையும் வைத்துக் கொண்டு புலிகளின் வலுவான இலக்குகளைத் தாக்கி பலவீனப்படுத்துவது; ஈழத் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுவீச்சுகளை நடத்தி படுகொலைகள் செய்வது; பொருளாதார முற்றுகையிட்டு ஈழ மக்களை பட்டினிச் சாவில் தள்ளுவது; இதன் மூலம் புலிகளின் மக்கள் செல்வாக்கை வடியச் செய்வது; இலங்கை அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற அந்நிய நாடுகளுடன் இராணுவக் கூட்டை ஏற்படுத்திக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உலகப் போரோடு புலிகளுக்கு எதிரானப் போரையும் இணைப்பது என்பதுதான் சிங்களப் பேரினவாதத்தின் தற்போதைய யுத்தத் தந்திரமாக இருக்கிறது.


இதன் ஓர் அங்கமாகவே சம்பூரிலும் பிற இடங்களிலும் குண்டு வீச்சை நடத்தியது. அடுத்து, புலிகளின் கெப்பித்தி கொல்லாவ கிளேமோர் தாக்குதலை சாக்காக வைத்து இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதேபோல மாவிலாறு அணை நெருக்கடியை சாக்கு வைத்து தொண்டு நிறுவனங்கள் உட்பட சிவிலியன்கள் மீதும் குண்டு வீசித் தாக்கியது. செஞ்சோலை சிறுவர்கள் முகாம் மற்றும் வாகரை அகதிகள் மருத்துவமனை மீதும் குண்டுவீசி படுகொலைகள் புரிந்தது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்தத் தாயகத்திலேயே அகதிகளாக்கப் பட்டிருக்கின்றனர்.


இத்தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளது மனித உரிமை அமைப்புகளின் கடும் கண்டனத்துக்குள்ளான போதும், இலங்கை இராணுவம் வெற்றிக் குதூகலத்தில் வடக்கிலும், விடுதலைப் புலிகளைத் தாக்கி பலவீனப்படுத்துவதற்காக யானையிறவைக் கைப்பற்றும் சாகச முயற்சியில் கடந்த அக்டோபரிலும் இறங்கியது. ஆனால், தாக்குதல் தொடுத்த ஒரு சில மணிநேரங்களிலேயே அது பேரிழப்பை சந்தித்தது. 130 போர் வீரர்களைப் பலி கொடுத்ததோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முகாமலை பெருந்தோல்வி எனப்படும் இதையடுத்து ஹப்அரானா எனுமிடத்தில் வெடிமருந்து ஏற்றிய லாரியைக் கொண்டு புலிகளின் தற்கொலைப் படை நடத்தியத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் கொல்லப்பட்டது, மேலும் ஒரு பின்னடைவாக அமைந்தது. சிங்களப் பேரினவாதிகள் கனவு கண்டதைப் போல இராணுவ ரீதியிலான வெற்றி என்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதையே களநிலைமைகள் தெளிவுபடுத்துகின்றன.


விடுதலைப் புலிகளின் யுத்தத் தந்திரமும் கூட ஒரு மாற்றத்துக்குள்ளாகி இருக்கிறது. இராணுவ ரீதியிலான வெற்றியின் மூலமாகவே ஈழ விடுதலையை சாதித்துவிட முடியும் என்று இதுவரை நம்பி வந்த புலிகள், சிங்கள பேரினவாதத்திற்கெதிராக இராணுவ ரீதியிலான மேலாண்மை பெற்று விட்டாலே ""சர்வதேச சமூக நெருக்குதல் காரணமாக, கிழக்கு திமோரில் நடந்ததைப் போன்ற சுயநிர்ணய உரிமைக்கான ஒரு வாக்கெடுப்புக்கான வாய்ப்பு தோன்றும்'' என்று இப்போது கருதுகிறார்கள். இதற்காக ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் அரசியல் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இந்த ரீதியிலேயே, ஈழப் பிரச்சினையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று இங்குள்ள தமிழினவாதக் குழுக்களும் புலி ஆதரவு அமைப்புகளும் திரும்பத் திரும்ப கோருகின்றன. ஆனால், ராஜீவ் காலத்தில் நடந்ததைப் போல இந்தியத் தலையீடு என்பது ஈழத் தமிழர்களுக்கெதிரானதாகவே இருக்கும் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். ஏற்கெனவே மன்மோகன் சிங் சோனியா கும்பல் இராணுவ ரீதியில் இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து வருகிறது. இதுவும் கூட மன்மோகன் சிங் சோனியாவுக்கு தெரியாமல் அதிகாரிகளாகவே மேற்கொள்ளும் நடவடிக்கைதான் என்று அவர்கள் பூசி மெழுகுகிறார்கள்.


சிங்களப் பேரினவாதிகள் கருதுவதைப் போல இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வு, விடுதலைப் புலிகள் கருதுவதைப் போல சர்வதேச சமூக ஆதரவு ஆகிய இரண்டுமே எதார்த்தத்துக்குப் புறம்பான நிலை என்பதையே நடப்பு அரசியல் இராணுவ நிலைமைகள் தெளிவாக்குகின்றன.

நன்றி புதியஜனநாயகம்

Monday, January 8, 2007

சி.ஐ.டி.யு.வின் மன்றம் ஜாடிக்கேத்த மூடி

தகவல் தொழில்நுட்பத் துறையில் சி.ஐ.டி.யு.வின் மன்றம்
ஜாடிக்கேத்த மூடி

கை நிறைய சம்பளம்; வேலை செய்து கொண்டே மேலும் படித்து முன்னேறலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம் என்று பத்திரிகைகளால் பிரமையூட்டப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், கொத்தடிமைகளை விடக் கேவலமான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு 10 12 மணிநேர வேலை, விடுமுறை நாட்களை ரத்து செய்வது, திடீர் வேலை நீக்கம், உத்தரவாதமற்ற வேலை, இது தவிர பாலியல் தொந்தரவுகள் என்பவையெல்லாம் "கால்சென்டர்கள்' எனப்படும் நவீன கொத்தடிமைக் கூடாரங்களின் பொது விதிகள்.


இருப்பினும், இத்தகவல் தொழில்நுட்பத் துறையில் இக்கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகத் தொழிற்சங்கம் அமைப்பதென்பதைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கை போலச் சித்தரித்து வருகிறது, அரசு. இராணுவம், போலீசுக்கு அடுத்தபடியாக சங்கம் அமைக்கக்கூடாத துறை, தகவல் தொழில்நுட்பத் துறை என்பது எழுதப்படாத விதியாகவே உள்ளது. பெங்களூர் கால் சென்டரில் பணியாற்றிய பிரதீபா என்ற இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்; சென்னையில் ஐ.கியூ.நெட் என்ற பி.பி.ஓ. நிறுவனத்தில் 2 மாதங்களாக செய்த வேலைக்குச் சம்பளம் கேட்ட ஊழியர்களை ஆபாசமாகத் திட்டி மிரட்டிய சம்பவம் என அடுத்தடுத்து கால்சென்டர் சொர்க்கங்களின் இருண்ட பகுதியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தபோதிலும் இதுவரை சங்கமோ, ஊழியர் நலச் சட்டங்களோ உருவாக்கப்படவில்லை.


இத்தொழிலில் நாடெங்கும் ஏறத்தாழ பத்து லட்சம் பேர் பணியாற்றிய போதிலும், வேலை பளு தாறுமாறான வேலைநேரம் முதலானவற்றால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், இந்த ஊழியர்கள் இன்னமும் கனவுகளிலேயே மிதக்கின்றனர். இவர்கள் தங்களை நவீன கூலித் தொழிலாளிகளாகக் கருதுவதுமில்லை. தங்களை மேட்டுக்குடியினராகக் கருதிக் கொள்ளும் ஆளும் வர்க்கச் சிந்தனை தான் இவர்களிடம் நிலவுகிறதேயொழிய, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை.


இத்தகையோரிடம் அரசியல் உணர்வூட்டி அமைப்பாக்குவதென்பது இடர்ப்பாடுகள் நிறைந்த பணி. பல்வேறு இடதுசாரி ஜனநாயக சக்திகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சி.பி.எம். கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. அண்மையில் கொல்கத்தா நகரில், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கான சங்கம் ஒன்றைக் கட்டியமைத்துள்ளது. இத்துறையில் சங்கமே இல்லாமல் கொத்தடிமைத்தனம் நிலவும் சூழலில், முதன்முறையாக ஒரு சங்கம் உருவாகியிருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இனி விடிவுகாலம் பிறந்து விடும் என்று நம்பினார்கள்.


ஆனால், நீண்ட நாட்களாக வாய் பேசாமல் இருந்த கைக்குழந்தை, திடீரென ஒருநாள் வாய் திறந்து ""எப்போ அம்மா தாலியறுப்பே?'' என்று தாயைப் பார்த்து கேட்ட கதையாகி விட்டது, போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ள சங்கம். இல்லையில்லை; இது சங்கமில்லை; இதற்குப் பெயர் ""மன்றம்'' (அசோசியேஷன்) என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள். மே.வங்க மாநில சட்டப்படி, பொறியாளர்கள் சங்கம் கட்ட முடியாது என்பதால், ""மன்றம்'' தொடங்கியுள்ளோம் என்கிறார், மே.வங்க சி.ஐ.டி.யு. தலைவரான சியாமல் சக்ரவர்த்தி.


""இந்த அமைப்பை வைத்துக் கொண்டு வேலை நிறுத்தம், போராட்டமெல்லாம் செய்வீர்களா?'' என்று கேட்டால், ஊழியர்களுக்கான அமைப்பு என்ற உடனேயே ஏன் வேலை நிறுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? என்று எதிர்க்கேள்வி கேட்டு பூசி மெழுகுகிறார், சக்ரவர்த்தி. அப்படியானால், இந்த மன்றத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்களாம்?


தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளை அமைப்பாக்கி, அவர்களுக்குப் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுவது குறித்துப் பயிற்சி தருவார்களாம். கணவன், மனைவி இருவருமே இத்துறையில் வேலை செய்தால், அவர்களின் குழந்தைகளைப் பராமரிக்கக் குழந்தைகள் காப்பகம் பால்வாடி முதலானவற்றை நடத்தப் போகிறார்களாம். தங்கள் மன்றத்தில் சேரத் தயங்கும் பொறியாளர்களுக்கு இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதில் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களையும் ஆதரவாளர்களாக இணைத்துக் கொள்ளப் போகிறார்களாம். சில தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய மன்றத்தில் இணைவோரைப் பழிவாங்காமல் இருக்க, இது முன்னேற்பாடான நடவடிக்கையாம். இனி இந்த மன்றம், இன்னும் திருமணமாகாத ஊழியர்களின் ஜாதகங்களைத் திரட்டி, திருமண தகவல் மையம் நடத்த வேண்டியதுதான் பாக்கி.


தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அமைப்பை உருவாக்கியுள்ள பெருமிதத்துடன் பேட்டி தந்துள்ள சியாமல் சக்ரவர்த்தி, இம்மன்றம் அன்னிய முதலீடுகளுக்கு எதிரானது அல்ல என்றும், அன்னியக் கம்பெனிகள் மே.வங்கத்தில் தொழில் தொடங்கி நடத்துவதற்கு எதிரான திசையில் செல்லாது என்றும் உறுதியளித்துள்ளார். ஏற்கெனவே சி.ஐ.டி.யு. சங்கம் இயங்கும் சணல் ஆலைகளிலும், ஜப்பானிய மிட்சுபிஷி நிறுவனத்திலும் போராட்டமோ, வேலை நிறுத்தமோ செய்யவே இல்லை என்று தமது சங்கத்தின் மகிமையை விளக்கி, பன்னாட்டு முதலாளிகளை தாஜா செய்கிறார்.


டி.வி.எஸ்., பொள்ளாச்சி மகாலிங்கம் முதலான தரகுப் பெருமுதலாளிகளின் நிறுவனங்களில், தொழிலாளர்கள் வர்க்க உணர்வோடு சங்கமாகத் திரளுவதற்கு முன்னரே, இம்முதலாளிகள் ஐ.என்.டி.யு.சி. போன்ற கைக்கூலி சங்கத்தைக் கட்டி, அதற்கு அவர்களே புரவலர்களாக இருப்பர். அச்சங்கங்கள் தீபாவளி பண்டு பிடிப்பது, கலை நிகழ்ச்சி நடத்துவது, ஆயுதபூசை கொண்டாடுவது என்பனவற்றையே தமது தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கும். மற்ற சங்கங்களைப் போலல்லாமல், நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சவடால் அடிக்கும் சி.ஐ.டி.யு., தகவல் தொழில்நுட்பத் துறையில் ஐ.என்.டி.யு.சி. பாணியிலான ஒரு மனமகிழ் மன்றத்தைக் கட்டி, இதுவும் தொழிற்சங்கம்தான் என்று நம்பச் சொல்கிறது.


ஒருபறம், தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழிற்சங்கம் கட்டி விட்டோம் என்று பெருமையுடன் சவடால் அடிக்கலாம்; மறுபுறம், இச்சங்கத்தில் சேருவோரிடம் சந்தாநன்கொடை திரட்டி ஆதாயமடையலாம்; இப்படியொரு பிழைப்புவாத உத்தியோடு ஒரு மனமகிழ்மன்றத்தைக் கட்டி நாடகமாடுகிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள்.


· கவி

Sunday, January 7, 2007

மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

பெரியார் சிலை உடைப்பு:

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!

மானமிழந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!!

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சிறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். ""டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!'' என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு திருச்சியைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. இது ஒரு வகையில் சிலை இடிப்புக்கு எதிரிகள் வழங்கிய முன்னறிவிப்பு.


1973இலேயே சிறீரங்கம் நகரமன்றம், பெரியார் சிலைக்காக 144 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, அந்த இடம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ள போதிலும், 33 ஆண்டுகளாக அங்கே சிலை நிறுவப்படவில்லை. இந்த 33 ஆண்டுகளில் பெரியாரின் பெயரில் டஜன் கணக்கிலான நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் பரப்பில் தமிழகமெங்கும் எழும்பியிருக்கின்றன. ஆனால், இந்த 144 சதுர அடியில் பெரியார் சிலை மட்டும் எழும்பவில்லை. இந்தத் தாமதத்திற்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கம் எதுவும் நமக்குப் புலப்படவில்லை.


ஆனால், சிலை எழும்பவிருக்கிறது என்று தெரிந்ததும் பார்ப்பனக் கும்பல் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நவம்பர் 28ஆம் தேதியன்று, திருவரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் ஒன்றிணைந்தன. டிசம்பர் 5ஆம் தேதியன்று கோவையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இந்து ஆசார்ய சபாவின் தலைவர் தயானந்த சரஸ்வதி, ""பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல'' என்று பகிரங்கமாக மிரட்டினார். டிசம்பர் 6ஆம் தேதி பின்னரவில் கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்துமதவெறிக் காலிகள் பெரியார் சிலையை உடைத்தனர்.


இதற்குப்பின் அங்கே நடைபெற்ற சம்பவங்கள், பெரியாருக்கு எதிரிகள் செய்த அவமதிப்பைக் காட்டிலும் கொடிய அவமதிப்பாக இருந்தன. சிலை உடைப்பு பற்றிய செய்தி கேள்விப்பட்டு, திருச்சி நகரத்திலிருந்து மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும் சிறீரங்கத்திற்கு வந்து சேர்ந்தபோது சிறீரங்கம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த இடத்தைப் போல ஒரு கூட்டம் பெரியார் சிலையைச் சுற்றி நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டைத் தொண்டர்கள் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு நின்று கொண்டிருந்த பார்ப்பனர்களும் கேதம் கேட்க வந்த இந்தக் கூட்டத்தில் அடக்கம்.


இந்த மானக்கேட்டைக் காணப்பொறுக்காத ம.க.இ.க. தோழர்கள், தி.க. தொண்டர்களைக் கடிந்து கொண்ட பிறகுதான் சாலை மறியல் தொடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறியலைத் திமிர்த்தனமாக மீற முயன்ற சில தனியார் பேருந்துகள் நொறுக்கப்பட்டன. ""ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகளைத் தடைசெய்! சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய்!'' என்று முழங்கியபடி ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் இராமதாசு தலைமையில் கோயில் ராஜகோபுரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. தி.க., தி.மு.க. அணிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர்.


போராட்டம் பரவத் தொடங்குகிறது என்று அறிந்தவுடனே தி.மு.க., தி.க. கரை வேட்டிகள் களத்தில் இறங்கினார்கள். ""நடப்பது நம்ம ஆட்சி. சிலை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்தச் சிலை இல்லாவிட்டால் வேறு சிலை. எல்லாவற்றையும் கலைஞர் பார்த்துக் கொள்வார்'' என்று சொல்லி, கருஞ்சட்டைத் தொண்டர்களைக் கலைத்துவிட்டார்கள். மானக்கேடான சகஜநிலை மீண்டும் திரும்பியது.


எனினும், பெரியார் சிலையை திருட்டுத்தனமாக உடைத்த பார்ப்பன மதவெறியர்களுக்கான பதிலடி அன்று மாலையே பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்இன் தேசிய நாயகனான இராமனின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால் அடித்தபடியே, சிறீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டு வந்தார்கள் ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள். பெரியார் பற்றாளர்கள் பலர் தாமாகவே ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று இந்தக் காட்சியைத் தரிசித்தனர். பரவசமடைந்த ஒரு முதிய தி.க. தொண்டர் தம் கால் செருப்பைக் கழற்றி அடித்து இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினார்.


வருணாசிரமத்தின் பாதுகாவலான இராமனின் படத்தை, சேதமடைந்த பெரியார் சிலையின் காலடியிலேயே தீ வைத்துக் கொளுத்தினார்கள் தோழர்கள். படத்தைப் பிடுங்க முயன்ற போலீசை நெருங்கவிடாமல் தடுத்தார்கள் தி.க. இளைஞர்கள். தோழர்களைக் கைது செய்தவுடனே விடுதலை செய்யக் கோரி விண்ணதிர முழங்கினார்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்து கொண்ட போலீசு தோழர்களை அன்றிரவே விடுவித்தது.


""உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிம்மா, நீங்களாவது மானத்தக் காப்பாத்தினீங்க'' என்று பெண் தோழர்களிடம் நா தழுதழுக்க நன்றி கூறினார், ஒரு முதிய தி.க. தொண்டர். திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகியோ, ""தயவு செய்து இதற்கு மேலும் எதையாவது செய்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள்'' என்று தோழர்களைக் கைக்கூப்பிக் கேட்டுக் கொண்டார். சொரணையுள்ளவர்களால் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதென்பதால் போராட்டம் தொடர்ந்தது. மாநிலமெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் அன்றிரவே ஒட்டப்பட்டன.


மறுநாள் ஓசூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் எதிரில் இராமனின் படத்தைத் தீக்கிரையாக்கினார்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து நிற்க, நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது இந்தப் போராட்டம். போராட்டம் முடிந்து அரைமணி நேரத்துக்குப்பின், பா.ஜ.க.வின் மாநிலப் பொருளாளர் நரேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், அந்த வழியே தன் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பு.ஜ.தொ.மு.வின் செயலர் தோழர் பரசுராமனை சுற்றி வளைத்துக் கொண்டது. ""இவனைக் கொலை செஞ்சாத்தாண்டா நாம் நிம்மதியா இருக்க முடியும்'' என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். பேடிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலைத்தான் ""இந்துக்களின் கோபம்'' என்று பொய்யாகச் சித்தரித்தன சில நாளேடுகள்.


மண்டை பிளந்து மயங்கி விழுந்த பரசுராமனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, ஆம்புலன்சில் தருமபுரிக்கு அவரைக் கொண்டு செல்ல முயன்றபோது வழிமறித்து அனைவரையும் கைது செய்தது போலீசு. இரவு முழுவதும் தோழர் பரசுராமனையும் அவரது மனைவியையும் ஆம்புலன்சிலேயே பூட்டி வைத்தது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைத்தார், சதி செய்தார் என்று பல பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்து, விடிந்ததும் சேலம் சிறைக்குக் கொண்டு சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர்தான் சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் கால்களில் விலங்கு மாட்டி வைத்தனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ஜ.க.வினர் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பரசுராமனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் தேன்மொழி.


இதேபோல, சிவகங்கையில் சிலை உடைப்புக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டி ஒட்டியதற்காகத் தோழர் எழில்மாறன், சுவரொட்டியை அச்சிட்ட அச்சக உரிமையாளர், வழக்குரைஞர் ஆகியோர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் கண்டனச் சுவரொட்டி ஒட்டிய இளம் தோழர் கார்க்கி ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.


பெரம்பலூர், சங்கராபுரம், ஈரோடு போன்ற பல இடங்களில் பூணூல் அறுப்பு, சாமி சிலை உடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகப் பெரியார் தி.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த நடவடிக்கைளில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பவர்கள் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர்களும் பெரியார் தி.க. தோழர்களும் மட்டுமே.


16.12.06 அன்று சிறீரங்கத்தில் வெண்கலத்தினாலான பெரியார் சிலை திறக்கப்பட்டு விட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க. பொதுச்செயலர் வீரமணி, எதிர்த்துப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க வேண்டுமென வாய்தவறிக் கூடப் பேசவில்லை. கலைஞர் ஆட்சியை காப்பாற்றும் விதத்தில் போராட்டம் ஏதும் செய்யாமல் அமைதி காத்த தொண்டர்களுக்கு மட்டும் நன்றி கூறினார்.


பெரியார் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? கலைஞர் அரசுக்கு களங்கம் கற்பிப்பதும், நெருக்கடி கொடுப்பதும்தான் இந்தச் சிலை உடைப்பின் நோக்கமாம். வீரமணி, திருமா போன்றோரின் கண்டுபிடிப்பு இது. சிலையை உடைத்தால் கட்டுப்பாடில்லாத பெரியார் தொண்டர்கள் பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம். இதைக் காட்டி நம்மாளின் ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டுத்தான் அவாள் சிலையை உடைத்தார்களாம்.


கேட்பதற்கே கேவலமாக இருக்கும் இந்த விளக்கத்தைச் சொல்வதற்கு தி.க., தி.மு.க.வினர் கூச்சப்படவில்லை. 2000 முஸ்லிம்களின் ஈரக்குலையறுத்த மோடியின் ஆட்சியே கலையவில்லையே, கேவலம் பத்தாம் நம்பர் நூலை அறுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா என்ற கேள்வி அவர்களுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை போலும்!


இவர்களுடைய விளக்கத்தின்படி நம்மாளின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவாளின் பூணூலையும் இராமபிரானையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு கருப்புச் சட்டைகளைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. பூணூல் அறுப்பும் இராமன் எரிப்பும் நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார் டி.ஜி.பி. பெரியார் சிலை உடைப்புக்குச் சதித்திட்டம் தீட்டித் தூண்டிவிட்ட தயானந்த சரஸ்வதி மீது வழக்கு இல்லை. ஓசூர் தோழர் பரசுராமன் மீது 120 ஏ சதிவழக்கு. பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடி சுவரொட்டி ஒட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்மீது வழக்கு இல்லை. பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சிவகங்கைத் தோழர்கள் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு!


""பெரியார் ஆட்சி''யின் நடவடிக்கையைப் பார்ப்பனக் கும்பலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! ""பெரியார் சிலையைச் சட்டபூர்வமான முறையில்தான் அகற்றியிருக்க வேண்டும். சட்டவிராதமான முறையில் உடைத்திருக்கக் கூடாது'' என்று பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி வருத்தம் தெரிவித்த அதே தோரணையில், பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சொல்லி வைத்தாற்போல அறிக்கை விட்டனர்.


பாபர் மசூதியை இடித்தபின், ""சர்ச்சைக்குரிய இடம்' என்று அதற்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் செய்ததைப் போல, ""சர்ச்சைக்குரிய பெரியார் சிலை'' என்று எழுதத் தொடங்கியது தினமலர். பெரியார் சிலைக்கு இரும்புக் கூண்டு போடச் சொன்னார் இராம. கோபாலன். ""இராமன் எரிப்பையும் பூணூல் அறுப்பையும் தூண்டுவதே கருணாநிதிதான்'' என்று மிரட்டினார் எச்.ராஜா. வைகுந்த ஏகாதசிக்கு சிறீரங்கம் வரும் பக்தர்கள் பெரியார் மீது கல்லெறிந்து காறித் துப்புமாறு தலைமறைவாய் இருந்தபடியே அறிக்கை விட்டார் அர்ஜூன் சம்பத். ""சிலை உடைப்பைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்'' என்று கவலை தெரிவித்தார் கார்ப்பரேட் பார்ப்பான் ரவிசங்கர்ஜி. ""பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்று கூறி வெளிப்படையாகவே களம் இறங்கினார் ஜெயலலிதா. திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை, தூத்துக்குடியில் தார்பூச்சு, பட எரிப்பு... என ஆங்காங்கே இந்து வெறியர்கள் மேலேறித் தாக்கினர்.


பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிக் கொள்வோர் என்ன செய்தார்கள்? ""இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடதே'' என்று 2 நாள் கழித்து அறிக்கை விட்டார் வைகோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட "மார்க்சிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. ""இந்து பாசிச அமைப்புகுள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று பயமுறுத்தியது வலது கம்யூனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை! பெரியாரிஸ்டுகள் எனப்படுவோர் சோளக்கொல்லைப் பொம்மைகளாக இருக்கும்போது, பெரியாரை வெண்கலத்தில் உருக்கி வார்த்து என்ன பயன்?


சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கினார்கள் இந்து மதவெறியர்கள். உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப் போல ஏந்திச் சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்தக் கிழவனை, இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரப் பயணம் அழைத்துச் சென்றிருக்கலாம். ""மண்டைச் சுரப்பை உலகு தொழும்'' என்று பாவேந்தர் பாடினாரே, அந்தத் தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயைப் போலப் பற்ற வைத்திருக்கலாம். சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்து தேசிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பன்முகம் காட்டிய அந்தத் தலையை பார்ப்பன மதவெறிக்கெதிரான விடுதலையின் வித்தாய் தமிழகமெங்கும் விதைத்திருக்கலாம்.


பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, பகுத்தறிவுக் கல்லைப் பேச வைத்துக் காட்டியிருக்கலாம். இரும்புக் கூண்டுக்குள் பதுங்க வேண்டியவர் பெரியார் அல்லர். இராம.கோபாலன்தான் என்பதை அந்தப் பார்ப்பனக் கும்பல் பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டிருக்கலாம். சிறீரங்கம் கோயிலென்ன, எல்லாக் கோயில் வாசல்களிலும் சாதியையும் மடமையையும் வழிமறிக்கும் தடையரணாகப் பெரியாரின் சிலையை நிறுவியிருக்கலாம்.


இவையனைத்தும் கொள்கை உறுதி கொண்டவர்களின் செயல்முறைகள். ஆட்சியைக் காத்துக் கொள்ளவும் அதன் உதவியுடன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிந்திப்பவர்கள், கான்கிரீட்... வெண்கலம்... இரும்பு என்று உலோகத்தை உறுதிப்படுத்தும் திசையில்தான் சிந்திக்க முடியும். இறுதியில் அது இரும்புக் கூண்டில் தான் போய் முடியும்.


டிசம்பர் 7ஆம் தேதியன்று பெரியார் சிலையைப் பாதுகாக்கத் தவறிய பரிதாபத்துக்குரிய 4 போலீசுக்காரர்களைக் கடமை தவறிய குற்றத்துக்காகத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. தங்கள் கடமையிலிருந்து தவறிய பெரியாரின் தொண்டர்கள் எனப்படுவோருக்கு யார் தண்டனை விதிப்பது?


இதோ, தண்டனையை எதிர் கொள்வதற்குத் தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருக்கிறார் பெரியார். அவரது சிலையை சட்டபூர்வமாகவே அகற்றுவதற்கான வழக்கைத் தக்க தருணத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. பக்தர்கள் என்ற போர்வையில் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து சிலையின் மீது கல்லெறிய தக்க தருணத்திற்காகக் காத்திருக்கிறார்கள் பார்ப்பன இந்து வெறியர்கள். சுயமரியாதை இயக்கத்தின் துவக்கக் காலத்தில் தன்னந்தனியாக சாதி, மத எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கல்லடியும் சொல்லடியும் வாங்கி, மாபெரும் மக்கள இயக்கத்தைத் தமிழகத்தில் உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரும், அந்தோ, பெரியார் இன்றும் தனியாகத்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார், சிறீரங்கம் கோயிலுக்கு எதிரே அரங்கநாதனுக்கு சவால்விட்டபடி!


align="justify" class="style2">அறுப்பதும் எரிப்பதும்தான் வன்முறையா?


""ஆத்திகர்கள் திரளும் கோயில் வாசலில் ஒரு நாத்திகரின் சிலையை வைக்கலாமா?'' — இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக்கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். ""குடி குடியைக் கெடுக்கும்'' என்று சாராயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும்? ஆத்திகர்கள் கூடுமிடத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதுதான் பொருத்தமானது. சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பிராந்திக் கடைகளும், ஆபாசப் பத்திரிகைகளும், நீலப்பட வியாபாரமும் நடக்கிறதே, அவையெல்லாம் ஆத்திகப் பிரச்சார நடவடிக்கைகளா என்ன?


மேலும், பெரும்பான்மை என்பதனாலேயே ஒரு கருத்து நியாயமாகிவிடாது. பாப்பாபட்டியில் ""தலித்துகள் ஊராட்சித் தலைவராகக் கூடாது'' என்று தடுத்தவர்கள் கூடப் பெரும்பான்மை பலத்தைக் காட்டித்தான் தங்கள் சாதிவெறியை நியாயப்படுத்தினார்கள். ""பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இடத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாது'' என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்திற்கும், ""பெரியார் சிலை கூடாது'' என்பதற்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இது ஆத்திக வேடம் போடும் பார்ப்பன மதவெறி, இறைநம்பிக்கை உள்ள பெரும்பான்மை தமிழக மக்கள், பிள்ளையாரையும், பெருச்சாளியையும் காட்டிக் கட்சி நடத்தும் பா.ஜ.க.வை நிராகரித்திருக்கும்போது, தன்னைப் பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்வதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.


""தமிழ் வழிபாடு கூடாது, பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது'' என்று பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் இந்து முன்னணிக் கும்பல், பெரும்பான்மை ஆத்திகர்களுக்காகக் கவலைப்படுவுது போல நடிக்கிறது. ஆனால், பெரும்பான்மையான சூத்திரபஞ்சம சாதி மக்களைக் கோயிலுக்குள் விடமறுத்த இந்த பார்ப்பன, சாதிவெறியர்களை எதிர்த்துக் கோயில் நுழைவு உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அவர் சிலையை எல்லாக் கோயில் வாசல்களிலும் வைக்கவேண்டும். அதுதான் பொருத்தம்.


""சர்ச் வாசலில் பெரியார் சிலை வைப்பதுதானே!'' என்கிறார் இராம.கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்குக் கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது? எந்தக் கடவுளும் இல்லை என்றுதான் சொன்னார் பெரியார். எனவே, எந்தக் கடவுளும் இல்லாத ஒரு தூணையோ துரும்பையோ இராம.கோபாலன் காட்டட்டும். அங்கே சிலை வைத்து விடுவோம்.


""பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?'' என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்கத் தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணம். வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான்.


மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லிம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தைச் செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.


""பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையையும் மீறும் வன்முறை'' என்று அலறுகிறது. பாரதிய ஜனதாக் கும்பல். அறுப்பதும் எரிப்பதும் எதிர் வன்முறைதான். பூணூல் அணிவதுதான் முதல் வன்முறை. பூணூல் என்பது அவரவர் விருப்பப்படி அணியும் கலர் சட்டையோ, அல்லது ஒரு மதத்தினர் அனைவரும் அணியும் சிலுவை போன்ற சின்னமோ அல்ல. பூணூல் பெரியாரின் மொழியில் சொன்னால், ஒரு தெருவில் ஒரேயொரு வீட்டுக் கதவில் ""இது பத்தினி வீடு'' என்று எழுதிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நரித்தனம். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிவாலை நறுக்கியவர் பெரியார். அய்யர், அய்யங்கார் என்ற பட்டங்களை ஃபாஷனுக்காகத் துறந்தவர்கள், பூணூலையும் துறந்துவிட்டால் அவர்களை நாகரிப்படுத்தும் வேலை மிச்சம்!


· சூரியன்

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் உள்ளனரா?

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்கள் உள்ளனரா?

(ஒரு விவாவதத்தின் தொடர்)
பி.இரயாகரன்
07.01.2006


ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனரே இன்றைய பார்ப்பனர் என்ற பொதுவான உள்ளடக்கம், இயங்கியல் ரீதியாக கேள்விக்குரியதே. பொதுவாக ஆரியரே இன்றைய பார்ப்பனர் என்ற நேர்கோட்டு வாதம் சிதிலமடைந்து காணப்படுகின்றது. இது பார்ப்பனீய ஒழிப்பில், அதாவது சாதிய ஓழிப்பில் தவறாக இட்டுச் செல்லுகின்றது. இது வராலாற்று இயங்கியல் தன்மையை தவறாக எடுத்துச் சென்று, தவறான மதிப்பீடுகளை உருவாக்கி அதனடிப்படையில் முடிவுகளை எடுக்கத் தூண்டி, தவறான வழிகாட்டலையும் செய்கின்றது.

அன்றைய ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனரே இன்றைய பார்ப்பனச் சாதி என்பது, தொடர்ச்சியாக பிறப்பு சார்ந்த இரத்த வழி எல்லைக்குள் பார்ப்பனீயத்தை முடங்கிவிடுகின்றது. இது உள்ளடகத்தில் பார்ப்பனீயம். சாதிய அமைப்பு தோன்ற முன் இரத்த உறவு ரீதியான இறுகிய சமூகக் கூறு என்பது, சாதிய நிபந்தனைக்கு அப்பாற்பட்டது. சாதிய அமைப்புக்கு பின்பான, இரத்த உறவு வழி பார்ப்பனீய கோட்பாடு தான் பாhப்பனீயமாகியது என்ற போதும், அது பிறப்பு சார்ந்த ஓன்றாக இன்று குறுகி பார்பானுடன் தன்னை நிலைநிறுத்திவிடவில்;லை. பார்ப்பனீயம் சமுதாயமயமாகியது. பார்ப்பனீயம் பார்ப்பான் வாழ்வியல் முறை என்பதுக்கு அப்பால், இதுவே இன்று இந்துத்துவமாகியுள்ளது. உண்மையில் பிறப்பில் இருந்து பார்ப்பனீயத்தை விடுவிப்பதும், அதே நேரம் அதை ஓழித்துக் கட்டுவதும் வரலாற்று இயங்கியலின் ஒரு அரசியல் கூறாகவேயுள்ளது.

ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர்களே இன்றைய பார்ப்பனர் என்று கூறுவதில், ஜெர்மனைச் சோந்த மாக்ஸ்முல்லர்தாம்; பங்கே முதன்மையானது. அவரைப் பொறுத்தவரை தமது நாட்டுக்கு ஒரு நகரிகத்தின் தொடர்ச்சியையும், இரத்த உறவு கொண்ட ஒரு ஆரிய தூய்மையை உருவாக்கவும், ஆரியம் பற்றிய மிதமிஞ்சிய கற்பனை புனைந்தாh. 1859 இல் தொடங்கி அவரின் இந்த முயற்சி, அந்த நூற்றாண்டின் இறுதிவரை அதற்காக முயன்று ஒரு ஆரியமாயை உருவாக்கினார். எல்லாம் ஆரியர் என்று கூறிதன் மூலம், உலக நாகரிகமே ஆரியம் என்று கூறி, பார்ப்பனீயத்தை ஆரியமயமாக்கினார். உண்மையில் இதை ஜெர்மனியுடன் இனைக்க முனைந்தார். இதன் மூலம் ஜெர்மனியருக்கு ஒரு உயர் தகுதியை உருவாக்க முனைந்தாh. ஒன்றுபட்ட ஜெர்மனிக்கு தேவையான இந்த ஆரிய மாயையும், அதற்குரிய ஒரு கோட்பாட்டு தகுதியை உருவாக்க முனைந்தார்.

இப்படி ஆரியம் பார்ப்பனீயம் கோட்பாடாக்கப்பட்டது. உண்மையில் ஆரியம் வேறு, பார்ப்பனீயம் வேறு என்பது நிராகரிக்கப்பட்டது. இன்று பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக, அதாவது எல்லாமே ஒன்றாக காட்டுகின்ற போக்கே ஆதிக்கம் பெற்றுள்ளது. உண்மையில் இது பிறப்புவழி பார்ப்பனீய கோட்பாடே, இதற்கு எதிரான கோட்பாட்டிலும் ஆதிக்கம் பெற்று சமூகமயமாகி நிற்பதைக் காட்டுகின்றது. சாதியம் தோன்றாத சமூக அமைப்பில், இந்;த ஆரியம் பற்றி விளக்கம் தான் என்ன? அது பிறப்பு வழி சார்ந்த இரத்தவழியா? வரலாற்றின் தொடர்ச்சி சார்ந்த மாற்றங்கள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுள்ளது. அதாவது சமூக பொருளாதார மாற்றங்கள், அதன் சமூக உட்கூறுகள் அனைத்தும் புறந்தளப்படுகின்றது.

ஆரியத்தை பிறப்பு சார்ந்த கோட்பாடாக வரையறுத்து, இன்று வரை அதுவே பார்ப்பனீயமாக தொடர்வதாக கூறுவது எப்படித் தான் சரியானது? பொதுவாக எல்லா ஆய்வளார்களும், சாதிக்கு ஏதிராக போராடிய அம்பேக்கா உட்பட, இக் கோட்பாட்டை கோட்பாடளவில் மறுதளிக்கினர். ஆனால் நடைமுறை எதார்த்தில், அதன் எதிர்வினையில் இதுவே ஆதிக்கம் பெற்றுள்ளது. இது பார்ப்பனீயத்துக்கு எதிரான போராட்டத்தின் சரியான வரலாற்று இயங்கியலை இனம்காண முடியாத வெளிப்பாடாகும். அத்துடன் அவர்களின் இன்றைய அரசியல் நிலைகாரணமாகவும், இந்த குறுகிய போக்கு ஆதிக்கம் பெற்று நிற்கின்றது.

இதில் இருந்து இந்த போக்கை விடுவிக்க வேண்டியுள்ளது. ஆரியமாயை தகர்ப்பதன் மூலம, எதிர்நிலையில் கட்டப்படும் திரவிட மாயையும் நாம் கலைத்தேயாக வேண்டும். இந்த பாhப்பனீய மாயையில் இரண்டு கூறுகள் உண்டு.

1.பார்ப்பனீயம் துய்மையானதும், வெளியில் இருந்த வந்துமான ஆரிய வழிப்பட்ட இன்றைய பார்பானர்கள் தான், தாம் என்ற பிரமை.
2.பார்ப்பனீயம் துய்மையானதும் வெளியில் இருந்து வராதுமான இந்தியாவில் தோன்றி ஆரிய வழிப்பட்ட இன்றைய பார்பானர்கள் தான், தாம் என்ற பிரமை.

முதலாவது பிரிவில் பார்ப்பனர்கள் சாதி ரீதியாக தமது தூய்மைக்கும், மேற்கு வரை தமது நகரித்தை பற்றிய பிiமைக்கும், தூய்மைக்கும், தமது வெற்றிக்கும், பெருமைப்படுகின்ற ஒரு கூறாக இதைக் காட்டிக்கொள்கின்றனார். இதற்கு எதிராக வந்தேறிகள் என்ற தளத்தில், இதற்கு எதிhவினை உள்ளது. இதை மறுதளிக்க இரண்டாவது அம்சம் தோற்றுகின்றது. அதாவது முதலாவதின் எதிர்வினையை மறுக்க, நாங்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள், என்றும், தாம் வந்தேறிகள் அல்ல என்ற காட்டும் பார்ப்பன எதிர்வினையும் உள்ளது. வரலாற்றை திரித்து புரட்டுவதன் மூலம், முழு வரலாற்றையும் இக் கூறுகள் சிதிலமாக்கியுள்ளது. மறுபகத்தில் எதிர்வினைகள் திராவிடமே உலக நாகரிகத்தினை முழுமை என்ற காட்டுகின்ற பிரமை கட்டப்படுகின்றது. பொதுவாக மொழி ஆய்வை வைத்துக் கொண்டு, இதை இரண்டு பிரிவும் தத்தம் சமகால அரசியல் தளத்துக்கும், காலத்தின் தேவைகும் எற்ப திரித்துப் புரட்;டு;கின்றனார்.

மித மிஞ்சி கற்பனைகள் ஆய்வுகளாக வருகின்றது. இதில் மொழி ஆய்வு மூலம் இதை நிறவுதல் என்ற பெயரில், அனைத்ததையும் தவிடுபொடியாக்கி குழப்பிவிடுகின்றனார். மக்களின் சமூக கொருளாதார கூறை புறந்தள்ளி, மிகைப்படுத்தபட்ட கற்பனைக்குள் இவைகளை முடங்கி தமது சொந்த முரண்பாட்டுடன் விடுகின்றனர்.

இதில் இருந்து இதை விடுவித்து, தெளிவுபடுத்துவது மிகவும் கடினமானது. நம்பிகைகள், பிரமைகள் மீதான எதிர்வினையாகவே இது உள்ளதாலும், இவைகளை நம்பிய ஒரு போராட்ட வழியாக வாழ்வியலாக உள்ளதால், இது மேலும் விகரமாகி கடினமாககின்றது. மறுபக்கத்தில் கடந்தகால ஆய்வுகள், விளக்கங்கள் சமூக பொருளாதார நோக்கில் செய்யப்பாடமையால், அவை வெற்றிடமாகவே உள்ளது. சிக்கல் நிறைந்த இந்த விடையம் மீது பற்பல கேள்விகளை எழுப்பவும், அதை தர்க்க ரீதியாக விவாதிப்பதன் மூலம் உரு தெளிவை பொதுத்தளத்தில் எற்படுத்த முடியும்.

1.வெற்றி பெற்று வந்தாக கருதும் வந்தேறி ஆரியர்கள் எந்தப்பக்கதில் எப்படி ஆட்சி அமைத்தனர்?
2.வந்தேற முன் அவர்களின் பண்பாட்டு வேர் எங்கு இருந்தது. அதற்கு ஆதாரங்கள் எவை? அதன் அப்படைகள் எங்கே? வந்தேறாத குடிகள் என்றால் கூட, அதன் அடிப்படைகள், ஆதாரங்கள் எங்கே?
3.வெளியல் இருந்து வந்து வெற்றி பெற்ற அல்லது இந்த மண்ணில் வாழந்த ஆரியர்கள் ஏன் ஒரு நாட்டு மக்களாக இந்த மண்ணில் இல்லாமல் போனார்கள்? அவர்களின் வேத மொழி ஏன் வாழவில்லை?
4.அப்படி வந்தேறிகளிள் வெற்றி பெற்ற ஒரு ஆட்சி இருந்து இருந்தால் அல்லத இந்த மண்ணின் உருவான ஆரியர் என்றால், அந்த ஆரியர் ஆட்சியை அழித்து யார்? எப்படி ஏன் அழிக்கப்பட்டது?
5.அவர்கள் தான் இன்றைய இரத்தவழி உறவு பார்பானர்கள் என்றால் அதன் அடிப்படை தான் என்ன? இலலை என்றால் எப்படி?
6.வராலாறு தெரிந்த காலம் முதலே பார்ப்பனர் தனித்து இருந்து ஒரு நாடு அல்லது ஒரு தனி ஆட்சி இருந்ததாக வரலாறு கிடையாது. அதற்கு முந்திய வேத காலத்திலும் அது கிடையாது. அப்படியாயில் பார்hனருக்கு மட்டும் மொழயாக உரிய சமிஸ்கிருத மொழி எப்படி எங்கே உருவானது? அப்படியாயின் பாhபான் யார்?
7.பார்ப்பன சாதி ஒரு பூசாரி பிரிவாக, ஒரே மொழி பேசுகின்ற ஒரு சாதிப் பிரிவாக எப்படி நீடிக்க முடிந்தது. அதற்கான சமூக பொருளாதாரக் கூறு என்ன?
8.வேதகால மக்களின் வர்க்க அமைப்பு என்ன? அது ஒரு வர்க்க அமைப்பு என்பதால், அது எப்படி பார்பனீயமாக ஒருங்கினைந்தது அல்லது சிதைந்தது.?
9.இன்றைய பார்ப்பனர் மூலத்தை வேதத்தில் தேடினால் காணமுடியாது. வேத மக்கள் அதாவது அந்த ஆரியர், வாழ்வு சார்ந்த மக்கள் பற்பல தொழிகளை செய்ததுடன், தமது மக்களின் நலனைக் கோருவதே வேதத்தில் முதன்மை பெற்று நிற்கின்றது. தமது வழிபாட்டை பெருமைப்படுத்தி பேசுகின்றனர். இது எப்படி இன்றைய பார்ப்பனீயமாக இருக்க முடியும்;. அதன் நீட்சியாக எப்படி எந்த வகையில் இருக்கின்றது?
10.பார்பனீயம் எந்த வரலாற்று காலத்துக்கு பிந்தைய கோட்பாடு? இதற்கு முந்தைய வரலாற்றை எப்படி பொருத்துவது அல்லது விவக்குவது?

இப்படி பலபத்து கேள்விகளுக்கு, சமூக பொரளாதார எல்லைக்குள் வரலாறு விடை காணவேண்டியுள்ளது. விடை கண்டதாக கருதப்படுபவை அரூபமாகவேயுள்ளது. அவை பலசந்தர்ப்பத்தில் இலகுவாக பொடிப்பொடியாக தகர்ந்து போய்விடுகின்றது. திரவிடர், ஆரியர் என்ற எல்லைக்குள் இதை அய்வு செய்யமுடியாது. இந்தியா சமூகத்தை சாதி சமூகமாக, சாதி சமூக தோன்றுவதற்கு முந்தை வரலாற்றுக்குள்ளும் நகர்த்தி, அதற்குள் குண்டு சட்டியை ஓட்டுவது அபத்தம்;. பொதுவாக திராவிடர், ஆரியர் என்ஓ தம்மைச் சுற்றி ஒளிவட்டம் கட்டி, உலகம் நாகரிகமே தமது இந்த ஒளிவட்டத்தை சுற்றி நடந்தாக ஆய்வுகள் புனையப்பட்டுள்ளது. அதாவது பூமியைச் சுற்றி இந்த பால்வெளி முதல் சூரியன் வரை சுற்றிவந்தாக நம்பிய அதே அறிவு குருட்டுத்தனமே கொலோசி நிற்கின்றது. இந்தியாலில் மட்டுமல்ல, உலகிலேயே எந்தனை மக்கள் கூட்டம் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்து இருந்துள்ளது. தனித்தனியான சுயதீனமான நகரிகம் இருந்துள்ள்து. எல்லாவற்றையும் குதர்க்கமாக திராவிடம் அல்லது ஆரியம் என்று, எமது அறிவியல் பூதக்கண்ணடி கொண்டு தேடுவதே நிகழ்ந்துள்ள்து.

சமூகங்கள் பற்றிய ஆய்வும் அறிவும், சமூக பொருளாதார வாழ்வியல் எல்லைக்குள், மக்கள் என்ற கோணத்தில் வைத்து ஆய்வு செய்யபட வேண்டும்;. அது செய்யப்படவேயில்லை. குழப்பம் குதர்க்கம் ஆய்வாகி நிற்கின்றது. பாவம் மொழிகள். ஒரு மொழியின் தேமாற்றத்தையே எள்ளிநகையாடுகின்றனர்.. மொழி ஒரு மக்கள் கூட்டத்தின் சமூக பொருளாதார உறவுடன் தொடர்புடையது. மொழியின் ஆரமப் உச்சரிப்புகள், இயற்கையை சார்ந்து, அதன் அடியில் இருந்து இயற்கையாக உருவாகின்றது. அது பெரும்பாலும் இயற்கையின் எதிர்வினையாக இருப்பதால், அதை உள்வாங்கும் மனிதன் அதுவாகவே பிரதிபலிக்கின்றான். இதன் வேர் பொதுவாக எல்லா மொழிக்கும் ஓத்த தன்மை கொண்டவை. உச்சரிப்புத் தன்மையில் மட்டும் வேறுபட்ட உச்சரிப்பு உருவாகின்றது. வாழும் சூழழுக்கும் அவர்களின் சமூக பொருளாதார சூழலுக்கும் உட்பட்டு இயற்கையுடன் மறுபடுகின்றது. இயற்கையுடன் ஓசையை எப்பாத இயற்கை சார்ந்த பொருள் பற்றிய மொழி, பயன்பாட்டுன் தொடர்பு கொண்டதாக மாறுபடுகின்றது. இயற்கை சாhந்த சாரம் அதலி பிரதிபலித்த மொழியின் மரபு வேர் இணைகப்படுகின்து.

மொழியை ஆரியர், திராவிடர் என்ற எல்லைக்குள் திரிப்பதை அனுமதிக்க முடியாது. அதன் சமூக பொருளாதார வாழ்வியலுடன், இயற்கை சார்ந்து இனம் காணவேண்டும். கி.மு 1500 முதல் கி.மு5000 வருட வாழ்வில் மனித வாழ்வு, இயற்கையை சார்தே வாழ்வில் கூறுகள் பெருமளவில் இருந்தது. இந்தவகையில் மொழியில் இயற்கை அம்சமே செறிந்து காணப்படும். மொழியைக் கொண்டு ஆரியர், திராவிடர் என்று சமூகங்களை வகைப்படுத்திய ஆய்வுகள் பல புனைவுத்தன்மை பெற்று நிற்கின்றது.