தமிழ் அரங்கம்

Thursday, December 31, 2009

2009

சுற்றவர முட்கம்பி, நீட்டிய துப்பாக்கிகளுடன் சிங்கள இராணுவம், மாரிகால மழை, வெள்ளம், குளிர் என்ற அனைத்துவகை துன்பங்களுடன் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களுக்கு புது வருடம் பிறக்கிறது. அழிவு அரசியலின் தலைமையால் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டவர்களாக இந்த மக்கள் சிங்கள தேசியத்தின் காலடியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள்.

புலித்தலமையின் அழிவு நிர்க்கதியாக நிற்கின்ற மக்களுக்கு, இதுவரை தெரியாமலிருந்த எதிரிகளையும் தெரிந்துகொள்ள வழிசெய்திருக்கிறது.

“மணியோடர் சமூகமாக” இருந்தமையால் போர்க்காலத்திலும் யாழ்ப்பாணம் புலம்பெயர்ந்த உறவுகளின் உண்டியல்களினால் பொருளாதார ரீதியாக பிழைத்துக் கொண்டது. ஆனால் வன்னி முகாம் மக்களுக்கு இந்த “வசதி” இல்லை. முகாமைப் போய்ப் பார்த்தோம், மகிந்த அவர்களை நன்றாகவே “வைத்திருக்கிறார்” என்ற தமிழ்குடிகளின் அறிக்கைகள்தான் அவர்களுக்குப் பரிசாக கிடைக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், வெளியில் போனால் அவர்களுக்கு வீடில்லை, வருமானம் இல்லை, ஆகவே முகாம்தான் சிறப்பானது என்கிறார்கள். அந்த மக்களுக்கு உதவுவது அவர்களது போர்க்குணாம்சத்தை மழுங்கடித்து விடும் என்று புரட்சிகரமாக முழங்கப்படுகிறது.

2009_1மே 17ஆம் திகதிவரை தமிழீழம் வாழ்க என்று ஆவேசத்துடனும், துடிப்புடனும் இருந்த புலம்பெயர்ந்த தமிழ்தேசிய வீரர்கள் பின்னர் அடங்கிப்போய், இப்போது வேட்டைக்காரன் பார்ப்பவர்கள் துரோகிகள் என போராட்டதின் அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளனர்.

புலி அரசியலால் இல்லாமல் செய்யப்பட்டிருந்த புலி அல்லாத இன்னொரு அரசியல் புலித்தலமைகளின் அழிவின்பின் தமது குண்டாந்தடிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. “உன்னைப் பற்றி எனக்கு முன்பே தெரியும்” என்று ஆளாளுக்கு “ஓடவிட்டு” போர் புரிய ஆரம்பித்துள்ளனர். அரசியலற்ற போரையும், வீடியோவுக்கான இராணுவத் தாக்குதல்களையும் தமிழீழத்துகான ஒரேவழியாக புலம்பெயர் புலித்தேசியம் தாரகமந்திரமாகக் கொண்டிருந்தது. இப்போதும் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பொறுக்கி அரசியல்

இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல; பொறுக்கி அரசியல்! இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் வசவுகள், பேசும் தலைவர்கள் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

""நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது'' என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழவும், அதையே ரசிக்கவும்கூடப் பழகிவிட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர்கள் (Crowd Pullers) கவர்ச்சி நிலை தலைவர்கள் (Charismatic Leaders)தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

""பொறுக்கி அரசியல்'' என்று..............முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, December 30, 2009

தளபதிகளும் தவறு செய்வர்!

தளபதிகளும் தவறு செய்வர்!
அரசின்
படையின்
பாடசாலையின்
பல்கலைக்கழகத்தின்
இணையதளத்தின் - ஏன்
உலகின் ஒவ்வொன்றின்
அதிபதிகளும்
தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்லவே!


சிவகேரம் எனும்
“பேர்”-ஆசிரிய...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, December 29, 2009

பிரபாகரன் செத்தவுடன் திடீர் புரட்சி பேசுவோரும், பு.ஜ.கட்சி கட்டி புரட்சியை கனவு காண வைத்தவர்களும்

தமிழ்மக்கள் மேல் அரச பாசிசமும், புலிப் பாசிசமும் பாய்ந்து குதறிய போது, "முன்னேறிய பிரிவு" என்று தம்மைத்தாம் கூறும் கூட்டம் என்னதான் செய்தது!? அந்த மக்களுக்கு குரல் கொடுத்ததா? வரலாற்றில் அது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடியதாக, எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியாது. அப்படியிருக்க "முன்னேறிய பிரிவு" என்று தன்னை தான் அடையாளப்படுத்திக் கொண்டு, இன்று குழையடிக்கின்றது. இந்தக் கூட்டம் அரசியல் ரீதியாக, மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுத்திருக்கவில்லை.


மக்கள் தங்கள் வாழ்வை இழந்து போராடிக்கொண்டு இருந்தபோது, கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்தவர்கள் ஒருபுறமும். மறுபுறம் புரட்சி பற்றி கனவு காண வைத்துக் கொண்டும் இருந்தனர். பிரபாகரன் செத்தான் என்றவுடன் பதறியடித்துக் கொண்டு, பாயை விட்டு எழும்பியவர்களும், கனவு கலைந்தவர்களும் "மார்ச்சியம்" "புரட்சி" என்று உருவெடுத்தாடுகின்றனர். தம்மைப் போல் தான் அனைவரும் படுத்துக் கிடந்தனர், கனவு கண்டனர் என்ற கூறிக் கொண்டு, சுயவிமர்சனத்தை அனைவரின் பெயரிலும்;, சுயவிமர்சனம் என்றால் என்ன என்று கூறத்தொடங்கியுள்ளனர். இப்படி கனவு கலைந்த கையுடன், இன்று குழையடிக்கும் அரசியலை முன்தள்ளுகின்றனர்.

1983 இல் இயக்கங்கள் வீங்கி வெம்பிய போது, அது மார்க்சியத்தையும் சோசலிச தமிழீழத்தையும் கூட சேர்த்தே முன்வைத்தது. இது நந்திக் கடற்கரையில் முடியும்வரை ஆயிரம் வே~ம் போட்டது. பிரபாகரன் செத்தவுடன், 1983 இல் நடந்தது போல் மீண்டும் மார்க்சியம் புரட்சி ..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, December 28, 2009

வினவாதே மூடு !

இன்னும் வெட்டவும் புரளவும் தலைகள் இருக்கின்றன.
புதைப்பதற்கு சவுக்கந் தோப்புக்களும்
எலும்பும் கிடைக்காமல் எரிப்பதற்கு சுடலைகளும்
எங்கள் கண்காணிப்பில் தான்
வினவு என்பது வீண் வார்த்தை
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, December 27, 2009

"மே18"காரர்கள் புலியிடம் கோருவதையே, குழையடித்து அரசியல் செய்யும் அனைவரிடமும் கோருகின்றோம்

"மே 18" இயக்கம் புலிகளிடம் விமர்சனம் சுயவிமர்சனத்தைச் செய்யக் கோருகின்றனர். இதை புலிகள் செய்யாமல் இருத்தலும் மறுப்பதும் "அயோக்கியத்தனம்" என்கின்றனர். இதை நாம் இவர்களிடம் கோரும் போது, அதைக் கோருவதே தவறு என்கின்றனர். கடந்த 30 வருடமாக, புலிகளுக்கு வெளியில் நடந்த மனிதவிரோத அரசியலைப்பற்றி பேசுவதும் கோருவதும் அரசியல் ரீதியாக மறுதலிக்கப்படுகின்றது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக கூடி குழையடித்து, ஒரு எதிர்ப்புரட்சி அரசியலை மீளவும் எம்முன் முன்தள்ள முனைகின்றனர்.

கடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராகப் "போராடியவர்கள்", மக்களுக்கு ஏற்படுத்திய சமூக விரோதக் கூறுகளைப் பற்றி பேசுவது அவசியம். அன்றும் இன்றும், இது தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. சிலர் இன்று புலியிடம் மட்டும் கோருவது போல், இதை நாம் கோர முடியாது. அப்படி கோருகின்ற அரசியல், தம்மை மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகும். இன்று இதுவே மீண்டும் எதிர்ப்புரட்சி அரசியலாக, மேலோங்கி வருகின்றது.

புலிகள் மட்டும் மக்களை கொன்று புதைக்கவில்லை. புலியல்லாத இயக்கங்கள் முதல் இயக்கத்துக்கு மாற்றாக மாற்று அரசியல் செய்தோர் வரை, தங்கள் மக்கள் விரோத அரசியல் மூலம் மக்களை ஓடுக்கினர், ஓடுக்கவுதவினர். இக்காலத்தில் "மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின்" பெயரில் இயங்கிய புதிய ஜனநாயகக் கட்சி கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியது கிடையாது. குரல் கொடுத்ததும் கிடையாது.

புலிகள் செத்த பின்பு, வரிந்து கட்டிக்கொண்டு புலிக்கு அந்தியேட்டி நடத்த முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு துடக்கு கழித்து,.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

திருச்சி (தஞ்சை) மாநாட்டிற்கு சென்ற சிவாஜிலிங்கம் திருப்பி அனுப்பப்பட்டார்.

தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து செல்வதற்காக சென்ற ஜனாதிபதி வேட்பாளர் (சுயேட்சை) சிவாஜிலிங்கம், திருச்சி விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்ப்பபட்டுள்ளார்.

தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிவாஜிலிங்கம் வரவில்லையென்பதை இந்தியா நாடுகடத்தலின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளது. புலிகளுக்கே அந்நிலையென்றால் சிவாஜிலிங்கம் எம்மாத்திரம்!

2005-ல் ஜனாதிபதித் தேர்தலின் போது, புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் – இன்று தமிழ்மக்கள் எதிர்;கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணம் – இரா சம்பந்தன்

நீங்கள் அசல் கிரிமினல் வக்கீல்கள். உங்களின் வக்கீல் வாதங்களை, பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலை, தமிழ்மக்களின் அவல வாழ்வோடு வைத்து கூத்தாடுகின்றீர்;கள். பிரபாகரனின் மண்டை பிளக்கப்படும் வரை, உங்கள் சிந்தனைச் செயற்பாடு, அவரின் மண்டைக்கூடாகவே வந்தது. இப்போ யாருக்கூடாக சொல்கின்றீர்கள் – செயற்படுகின்றீர்கள் என்பது பரம ரகசியமல்ல.

பொன்சேகாவின் யுத்தம்......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Saturday, December 26, 2009

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள்! : மாவீரன் ஜிரோநிமா!!

சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க நாயகர்களின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்தது எனக்கு தெரியவந்தது.

நான் வாசித்த கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா? என்.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


நாவலனின் புரட்சிகர அரசியலும், வியாபார அரசியலும் (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 10)

இனியொரு மற்றும் தேசம்நெற் மூலமே, மீண்டும் திடீர் மார்க்சிய அரசியலில் பிரவேசிக்கின்றார் நாவலன். தான் எப்படியாவது ஒரு அரசியல் பிரமுகராக வந்துவிட வேண்டும் என்ற அவாவுடன், அரசியலில் காய்நகர்த்தலைச் செய்கின்றார். முதலில் திடீர் மார்க்சிய அரசியலை சந்தைப்படுத்த, அ.மார்க்ஸ்சை நாடுகின்றார். அவரின் முன்னுரையுடன், நாவலனுக்கு ஏற்ற ஒரு "மார்க்சியத்தை" முன்வைத்து, மீண்டும் தன்னை அறிமுகம் செய்கின்றார்.


அதேநேரம் இந்திய அரசியல் பிரமுகர்களை சந்திக்கின்றார். அவர்களுக்கு தனது மார்க்சிய அரசியல் அறிவைக் காட்ட முனைகின்றார். அதேநேரம் மற்றவர்களை பற்றி இல்லாத பொல்லாததை போட்டுக் கொடுக்கின்றார்.

தான் அரசியலில் இல்லாத காலத்தைப் பற்றி, தனது திடீர் அரசியல் பிரமுகத்தனத்துக்கு ஏற்ப திரித்துக் காட்டுகின்றார். இக்காலத்தில் எப்படியெல்லாம் மற்றவனை ஏமாற்றி, என்னனென்ன சுத்துமாத்து தொழில்களை செய்தார் என்பதை பற்றி அவர் பேசவில்லை. அதை "மார்க்சிய" அறிவு மூலம் எதுவுமற்றதாக்கி, தன்னை திடீர் "மார்க்சிய" பிரமுகராக முன்னிலைப்படுத்தி நிலைநிறுத்த முனைகின்றார்.

அதற்கிசைவாக அரசியலைத் துறந்த தனது கடந்தகாலத்தை மூடிமறைப்பதுடன், அக்காலத்தில் நடந்த போராட்டத்தையும் மறுத்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, December 25, 2009

புலியெதிர்ப்பு அரசியல், சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாக மாறியது ஏன்?

கடந்தகால புலியெதிர்ப்பு அரசியலோ, இன்று மகிந்த சார்பாக துதிபாடும் அரசியலாகி நிற்கின்றது. அது சரத்பொன்சேகா எதிர்ப்பு அரசியலாகியுள்ளது. சரத்பொன்சேகாவை ஆளத் தகுதியற்றவராக, புலியெதிர்ப்பு இணையங்கள் இன்று கூப்பாடு போடுகின்றது. தேனீ இணையமே, இந்தப் பிரச்சாரத்தில் மையமாக திகழ்கின்றது.


இவர்களுக்கு பின் இரண்டு பிரதான சுயநலன்களை இனம் காணமுடியும்.

1.புலியெதிர்ப்பு அரசியல் செய்ய, மகிந்தா கும்பல் புலியெதிர்ப்புக்கு கொடுத்து வந்த ஆதரவு மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய கவலை. சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால், அன்று அது நின்று விடும் என்ற அங்கலாய்ப்புகள்.

2.தமிழ்மக்கள் இயல்பாகவே மகிந்தாவுக்கு எதிராக கொண்டுள்ள எதிர்ப்பு, தங்களுக்கு எதிரான அரசியலாக இருப்பதால் அதையும் எதிர்க்கின்றனர். அரசியல் ரீதியாக தமிழ்மக்களை எதிர்த்து அரசியல் செய்து வந்த இந்தக் கூட்டத்தின் இருப்பு அரசியல், இயல்பான எதிர்ப்பு அரசியலாக மாறுகின்றது.

இப்படி தமிழ்மக்களின் நலன்களை என்றும் அரசியலாக முன்வைக்;காத புலியெதிர்ப்புக் கும்பல், மகிந்தாவுக்கு ஆதரவுக் கும்பலாக மாறி இந்த தேர்தலை சுயநலத்துடன் அணுகுகின்றது. இந்த வகையில் கடந்தகாலத்தில், தமிழினத்தை பேரினவாதிகள் படுகொலை செய்ததை, புலிகளைச் சொல்லியே நியாயம் கற்பித்தவர்கள் தானே இவர்கள்.

இன்று சரத்........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, December 24, 2009

இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும்!

பசுமைப் புரட்சியின்” தந்தை என வர்ணிக்கப்படும் “அம்பி” எம்.எஸ்.சுவாமிநாதனை மகிந்த இலங்கைக்கு அழைத்திருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக நடத்தப்பட்ட யுத்தத்தில் புலிகளின் தலைமையை முற்றாக அழித்தொழித்த அரசு வன்னிப் பெரும் நிலப் பரப்பைக் கைப்பற்றியது. மூன்று இலட்சத்துக்கும் மேலான அகதிகளான மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு துரித அபிவிருத்திகளுக்காக “அம்பியை” அவர் அழைத்திருந்தார். விதைப்புக்காலம் தொடங்க இருப்பதால் ஒக்டோபர் மாதத்திற்குமுன் தம் பணிகளைத் தொடங்க ஒரு பெண்கள் குழாமை அவர் அமைக்க முற்படுகிறார். இப்பெண்களைக் கொண்டு அவர் முதற் கட்டப் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார்.

உலக அரிசி உற்பத்தியில் 2005ம் ஆண்டு சீனா முதலாவது இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஏழு மில்லியன் தொன் அரிசியை உற்பத்தி செய்தது (1947). அம்பி சுவாமிநாதனின் முன்னெடுப்பின் பின்னர், யப்பான் மற்றும் மெக்ஸிக்கன் நாடுகளில் விளைந்த தானியங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி மெக்ஸிக்கன் விதைத் தானியங்களை இந்தியாவிற் பயிரிடுவதற்கு உகந்ததாக மாற்றினார். 1964ம் ஆண்டில் பதினெட்டாயிரம் தொன் மெக்ஸிக்கன் தானியங்களை இறக்குமதி செய்து காலநிலைக்கு உகந்ததாக மாற்றப்பட்டு பயிரிடப் பட்டது. 1968ல் இந்தியாவின் உற்பத்தி 12மில்லியன் தொன்னில் இருந்து, 17மில்லியன் தொன்னாக உயர்ந்து “நிறைப் புரட்சி”யை உண்டு பண்ணியது. அதற்காக இந்திய அரசு அன்று ஒரு முத்திரையையும் வெ...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


போர்க்களமான புனித பூமி

“இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாராமே?”
“யாருக்குத் தெரியும்? அவர் ஏற்கனவே வந்திருப்பார். ஆனால் அவர் பிறந்த இடம், யுத்தபூமியாக வருந்துவது கண்டு வெறுத்துப் போய் சொர்க்கத்திற்கே திரும்பிப் போயிருப்பார்.”
இந்த நகைச்சுவை துணுக்கு, மும்மதத்தவராலும் உரிமை கோரப்படும் புனித பூமியின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றது.

இன்று உலகில் அனைவரது பார்வையும் மத்திய கிழக்கு பக்கம் திரும்பியுள்ளது. “மத்திய கிழக்கு” என்ற சொற்பதம் கூட இஸ்ரேலிய மையவாத அரசியலில் இருந்து பிறந்தது தான். பைபிள் காலத்தில், இஸ்ரேல் உலகின் மத்தியில் அமைந்திருப்பதாக நம்பப்பட்டது. அதிலிருந்து இஸ்ரேலின் கிழக்குப் பக்கம் “மத்திய கிழக்கு” என அழைக்கப்பட்டது. அவ்வாறு தான் இஸ்ரேலிற்கு மேற்கே இருப்பதால் ஐரோப்பா “மேற்கத்திய நாடுகள்” என அழைக்கப்பட்டது.

பைபிளில் ஆதியாகமம் கூறுவதன்படி நாம் வாழும் பூமி, கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஆண்டவரால் படைக்கப்பட்டதாக யூத மத அடிப்படைவாதிகள் நம்புகின்றனர். ஆனால் அதற்கு மாறாக, கி.மு. 9000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலஸ்தீனத்தில் மனிதர் வாழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் பல பண்டைக்கால நாகரீகங்களின் விளைநிலங்களாக இருந்தன. பைபிள், மற்றும் வரலாற்றுச் சான்றுகளில் இருந்து அங்கே பல்லின மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். பினீசியர்கள், பிலிஸ்தீனியர்கள், கானானியர்கள் ஆகிய இனத்தவர்கள், கி.மு. 3000 ஆண்டுகளிலேயே நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தனர். இவர்களிடம் இருந்து தான், கிரேக்கர்கள் எழுத்து வடிவங்களை கற்றுக் கொண்டனர். சிறந்த கடலோடிகளான பினீசியர்கள், இன்றைய....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, December 23, 2009

சந்தர்ப்பவாத "மே 18" அரசியலும், பிழைப்புவாத தேசம் நெற்றும்

நேர்மையான அரசியல் பண்பை மறுத்து, அரசியலற்ற கதம்பத்தில் "மே 18" இயக்கத்தை நடத்த, அது இன்று வியூகமாகின்றது. இதன் பின்னுள்ள தனிப்பட்ட நபர்கள் நேர்மையற்றவர்கள். வெளிப்படையாக எதையுமே முன்வைக்க முடியாத, அதை எதிர்கொள்ள முடியாத பச்சையான அரசியல் சந்தர்ப்பவாதிகள். சமரசமும், மூடிமறைப்புடனும் கூடிய அரசியல் நக்குண்ணித்தனம்.

தமிழீழக் கட்சி புலியின் உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக இருந்ததையும் சரி, தீப்பொறி கேசவன் யாரால் எப்படி எந்த நிலையில் காட்டி கொடுக்கப்பட்டார் என்பதைக் கூட சொல்ல வக்கற்றவர்கள் இவர்கள். கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்த மறுக்கும், அரசியல் சந்தர்ப்பவாதம் கொப்பளிக்கின்றது. "மே 18" இயக்கம் கேசவனுக்கு அரசியல் ரீதியாக அஞ்சலி செலுத்தி, அரசியல் செய்ய முடியாத சந்தர்ப்பவாத பிழைப்புவாத பிரமுகர் தனத்தை அரசியலாக்குகின்றனர்.

இன்று இதை இவர்கள் அரசியலாக செய்யும் போது ஜானுக்குரிய அரசியல் அங்கீகாரம் தீப்பொறியுடன் இருந்தவர் என்பதுதான். தேசம்நெற் ஜெயபாலனுக்கு உள்ள அரசியல் தகுதி, இந்த ஜான் ஜெயபாலன் வீட்டில் தலைமறைவாக இருந்தவர் என்பதுதான்.

இதற்கு வெளியில்...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, December 22, 2009

திடீர் அரசியல் சாக்கடையில், மக்களுக்கு எதிரான வரலாறுகள் புதைக்கப்படுகின்றது

தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் மூலம் ஆயிரம் ஆயிரம் கொடுமைகள் நிகழ்ந்த போது, அதற்கு ஆதரவாக "முன்னேறிய பிரிவு" என்று கூறிக்கொள்ளும் கூட்டம் செயல்பட்டது. இதற்கமைய ஆழ்ந்த உறக்கத்தில்; கிடந்தவர்களும், எதிர்ப்புரட்சி அரசியலை அரசியலாக செய்தவர்களும், "திடீர் ஆய்வு", "திடீர் மார்க்சியம்" "திடீர் புரட்சி" என்று இன்று கடைவிரிக்கின்றனர்.


சரணடைந்து புலித் தலைவர் "மே 18" செத்ததாக பேரினவாதிகள் அறிவிக்க, திடீர் அரசியல் பிழைப்புவாதமும் உசுப்பேற்றப்பட்டது. அந்த "மே 18" பெயரில் இயக்கம் முதல் சுயவிமர்சனம் என்றால் என்ன என்று விளக்கும் இலங்கை பு.ஜ கட்சி ஈறாக, அரசியலில் புதுவே~ம் போடுகின்றனர். புலிகள் மே 18 இருந்தவரை, தமிழ்மக்கள் பட்ட துன்பங்களுக்கும் சரி, தேசிய விடுதலையில் பெயரில் புலிப் பாசிட்டுகள் மாபியாத்தனத்துடன் நடத்திய கொடுமைகளையும் கண்டு கொள்ளாத கூட்டம் தான், அன்று தாம் அதற்கு எதிராக போராடியதாக இன்று கூறுகின்றது. திடீர் மார்க்சியம், ஆய்வுகள், அறிக்கைகள், விளக்கங்கள் என்று கடைவிரிக்கின்றனர். இதற்கு அமைவாக கடந்த தங்கள் எதிர்ப்புரட்சிக் காலத்தையும், பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், இருட்டில் வைத்திருக்க தீவிரமாக முனைகின்றனர். அன்று நடந்த போராட்டத்தை எதுவுமற்றதாக காட்ட, தாம் விரும்பியவாறு முத்திரை குத்துகின்றனர். "கம்யூட்டர் புரட்சி" என்றும், "மார்க்சிய கோசங்கள்" என்றும், "தனிநபர் தாக்குதல்கள்" என்றும், "மேல் ப+ச்சு சிவப்பு கோசங்கள்" என்றும், "யாழ் மேட்டுக்குடி" மொழி என்றும், "ஜனநாயகமற்ற எழுத்தென்றும்" தாங்கள் எதிர்ப்புரட்சி அரசியல் பேசிய காலத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை இட்டுக்காட்ட முனைகின்றனர்.

இதன் மூலம் ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


யுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம் யுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம்


குருதிக்கறை படிந்தபடியே.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, December 20, 2009

புலியின் உளவு அமைப்பான தமிழீழக் கட்சி தான் இன்று "மே 18" இயக்கமாகும்

தீப்பொறியின் அரசியலுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 1990 களில் அந்த அரசியல், புலியிடம் காட்டிக்கொடுக்கப்பட்டது. தீப்பொறியை தமிழீழக்கட்சியாக்கி, புலியின் ஆள்காட்டியாக மாற்றியதுடன், புலிகள் போட்டுத்தள்ளவும் உதவியது. இப்படி புலியின் உளவு அமைப்பாகி இயங்கியவர்கள தான்; மீண்டும் இன்று "மே 18" இயக்கமாக வெளிவருகின்றனர். தீப்பொறி அரசியலை அழித்து, புலி உளவு அமைப்பாக மாற்றிய அதே அரசியல், அதே தர்க்கம்.

புலியின் அழிவின் பின், எதிர்ப்புரட்சி அரசியலே மீளவும் தன்னை மூடிமறைத்துக் கொண்டு மக்களின் முதுகில் குத்த களமிறங்கியுள்ளது. உலகின் உளவு அமைப்புகள் முதல் இலங்கை இந்திய அரசியல் புலனாய்வுப் பிரிவும் கூட இதற்குள் தான் இயங்குகின்றது. கடந்தகால வரலாற்றை மூடிமறைத்தும் திரித்தும், வரலாறு தெரியாத அப்பாவிகளுக்கு வலை வீசுகின்றது.

கடந்த காலத்தில் யாரெல்லாம் மக்களுடன் நிற்கவில்லையோ, அவர்கள் தொடர்ந்தும் மக்களுக்கு எதிராகவே நிற்கின்றனர். கடந்த மக்கள் விரோத வரலாற்றை வரலாற்றில் இருந்து அகற்றி, திரிக்கப்பட்ட ஒரு வரலாற்றை கூற முனைகின்ற..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Saturday, December 19, 2009

ஜனாதிபதி தேர்தல் கூத்தில், புதிய ஜனநாயகக் கட்சி முன்வைக்கும் "மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனை"!

"தேர்தலை நிராகரி" என்கின்றது இலங்கை பு.ஜ கட்சி. அட!, இலங்கை பு.ஜ கட்சி வர்க்கப் போராட்டத்தை முன் வைக்கின்றது என்ற ஆச்சரியத்துடன், என்ன எது என்று பார்த்தால் "50 வீத வாக்குகள் பெறமுடியாத நிலைமையை ஏற்படுத்தியிருந்தால் இன்றைய ஜனாதிபதி முறைமைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்தித்திருக்க முடியும்" என்று நம்பி தேர்தலில் பங்கு பற்றக் கோரிய ஒரு "வர்க்கக்" கட்சி, அந்த காரணத்தைச் சொல்லியே மீண்டும் தேர்தலைப் பகிஸ்கரிக்கக் கோருகின்றது.

இப்படி இலங்கையில் ஒரு "மா.லெ.மா சிந்தனையை" முன்னிறுத்தும் ஒரு கட்சியாக, தன்னை அடையாளப்படுத்துகின்றது. இந்த புதிய ஜனநாயகக் கட்சி, வர்க்கப் போராட்டத்தையா இப்படி முன்னெடுக்கின்றது!? சண் தலைமையிலான மா.லெ.மா கட்சியில் இருந்து 1970 களில் பிரிந்தவர்கள் தான் இந்த புதிய ஜனநாயகக் கட்சி. இதற்கு பிந்தைய மிகக் கொந்தளிப்பான இலங்கை வரலாற்றில், இக்கட்சி மா.லெ.மா சிந்னையை என்றும் முன்னிறுத்தியதில்லை. இது வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து, சமூகத்தை புரட்சிகரமான ஒரு அரசியல் வழியில் மக்களை வர்க்கங்களாக அணிதிரட்டவில்லை.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றிய அதன் அரசியல் நிலைப்பாடு, மா.லெ.மா சிந்தனைக்கு முரணான சந்தர்ப்பவாதமாகும். அக்கட்சி.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிண எண் 1084 இன் அம்மா

"நான் ஒரு கனவு காணுகிறேன் அம்மா. அது ஒரு அற்புதமான கனவு. அது எல்லாவற்றையுமே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற கனவு. அது எல்லாவற்றையும் மாற்றும். இந்தச் சூழல், இந்த நிலமைகள், இந்தச்
சமூகம் எல்லாவற்றையும்... அந்த உலகம் ஏழ்மை, நோய், அசுத்தம், பசி, ஊழல், மோசடி என எல்லாவற்றிலிருந்தும் விடுவிக்கப்பட்ட ஒரு உலகமாக இருக்கும்."
..... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, December 18, 2009

பிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் மே -18ம் திகதி சுட்டுக் கொன்றிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரும், தனது ஆருயிர் நண்பனுமான பிரபாகரன் மே -17ம் திகதி மதியவேளை இராணுவத்துடனான நேரடிச் சமரில் வீரமரணம் அடைந்ததாக, புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும் அவரின் நண்பருமான கே.பி அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ 7 வாரங்கள் கழிந்து போகும் நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்த எழுத்தாளர் மு.திருநாவுக்கரசின் பேட்டியோடு, பிரபாகரன் மே -15 பின்னிரவு அல்லது மே -16 அதிகாலை தப்பிப் போய்விட்டதாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறும் அணியினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாள் வித்தியாசத்திலும் இம் மூன்று பகுதியினரும் தத்தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

யோர்தானில் இருந்த ராஜபக்சாவுக்கு மே -18 ம் திகதிதான் பொருத்தமாக இருப்பது போலத் தெரிகிறது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாக முதலில் கூறிய கே.பி க்கு, ‘நாடுகடந்த தமிழீழத்துக்கு’ வசதியாக மே -17 தான் இருந்துவிடும் போல் தெரிகிறது. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சொல்கிற வைகோ, நெடுமாறன், மு.திருகாவுக்கரசு …. மற்றும் ‘வட்டுக்கோட்டை தீர்மானக்காரருக்கு’,.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிற்போக்குத் தேசியத்துக்கு அங்கீகாரம் வேண்டுமாம் அதுவும் மார்க்ஸியத்தின் பெயரால்

உயிர்ப்பு இதழ் மூன்று தனது அரசியல் வழியை தெளிவாக இனம் காட்டி வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஆசிரியர் தலையங்கம் உட்பட மற்றைய மூன்று கட்டுரையும் மார்க்சியத்தை குழிதோண்டி புதைத்துவிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

ஆசிரியர் தலையங்கத்திற்கு சமர் 9 இல் பதிலளித்தோம். பெண்ணும் புரட்சியும் என்ற கட்டுரை வேறுபலரின் கட்டுரைகள் இன்மையால் விமர்சிக்க முடியாதுள்ளது. இக்கட்டுரை மார்க்சியத்தை குழிதோண்டிப் புதைப்பதாகவே உள்ளது. அதை ஒரு(உ-ம்) ஊடாகப் பார்க்கலாம்.

சோசலிசத்தை உருவாக்குவதற்கான போராட்டம் வேறுவேறான நலன்கள் கொண்ட குழுக்கள் அணிச்சேர்க்கை உருவாக்கும் அடிப்படையில் ......... இருக்கவேண்டும் என்கின்றார். மார்க்சியம், பெண்கள் இரு வௌ;வேறு நலன்களை பிரதிபலிப்பதாக கோருவதன் ஊடாக நலன்கள்(வர்க்க) வேறுபாட்டையும் அதன் இருப்பையும் கோருகிறார் இதன் ஊடாக முதலாளித்துவ இருப்பை காப்பாற்றுகின்றார். எல்லாவகை முரண்பாடுகளும் அதன் உள்ளடக்கமும் வர்க்க போராட்டத்துடன் ஒன்று கலந்தவையே.

நாம் ஆய்வுக் கட்டுரையையோ, புதிய கட்டுரைகளையோ இவர்களுக்குப் பதிலாக வைப்பதை விட இக்கட்டுரைகளின் ஒவ்வொரு வரியின் மீதும் விமர்சிப்பதையே கைக்கொள்கிறோம். பொதுவான ஒரு கட்டுரையின் போக்கில் வாசகர்களை தெளிவாகப் பார்க்கமுடியாது என்பதாலும், ஒவ்வொரு வரி மீதுமான விமர்சனம் மூலம் வாசகர்களை தெளிவாக ஆராய வைக்கமுடியும் என்பதாலும் இதையே கைக்கொள்கிறோம்.

மார்க்சியத்துக்கு எதிராக மார்க்சியத்தை.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, December 17, 2009

என் பெயரில் ஈமெயிலை தயாரித்து, தேசம்நெற்றில் போட்டுக் காட்டி "வியூகம்" படம்

இதன் மூலம் "மே 18" இயக்கத்தையே நடுச் சந்திக்கு கொண்டு வருகின்றனர். தேசம்நெற் அசோக்கின் துணையுடன், என்பெயரில் தயாரித்து எனக்கு எதிராக முன்வைத்த ஈமெயில் மூலம் "மே 18" இயக்கத்துக்கு அரசியலை செய்கின்றனர். இவர்கள் தயாரித்த ஈமெயில் உள்ள அரசியலை, இங்கு குறிப்பாக கேள்விக்குள்ளாக்குவது அவசியமாகின்றது.

”அசோக் நீ இப்போது கூட்டு வைத்திருக்கும் ஜான் மாஸ்டர் தான் கட்டன் நாசனல் வங்கிப்பணத்தை திருடிக்கொண்டு கனடாவிற்கு ஓடியவன். இதையும் நாம் அம்பலப்படுத்துவோம்.” என்கின்றது, இவர்கள் என் பெயரில் வெளியிட்ட ஈமெயில். இதை யார் எழுதியது? கடந்தகாலத்தில்; இயக்க அரசியலில், இது போன்று அரசியல் செய்தவர்கள்தான்.

நான் அசோக்கை அம்பலம் செய்து எழுதும் கட்டுரையில், கற்றன நசனல் வங்கிப் பணம் பற்றி பதிலளிக்கப்படும் என்று எழுதியவுடன் என் பெயரில், ஜான் மேல் இந்த அவதூறு கட்டமைக்கப்பட்டது. கடந்தகாலத்தில் இதை வைத்து எனக்கு எதிராக அரசியல் செய்யும் இந்த "மாற்றுக் கருத்து" பேர்வழிகள் விழித்துக்கொண்டனர். கற்றன் நசனல் வங்கிப் பணத்துக்கு........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


உயிர்ப்பின் திசை மாற்றம்

எமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதே இதழில் மார்க்சிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை வெளியிட்டு அது தொடர்பாக தமது கருத்தை முன்வைக்காது ஜரோப்பாவில் வரும் பத்தோடு பதினொன்றாக தாமும் மாற முயன்றுள்ளனர்.

மார்க்கிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை நாம் அடுத்த சமர் 10 விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். அடிப்படை மார்க்சியத்தை உயத்துவதை வரட்டுவாதம் எனவும், நாம் வைத்த திட்டம் தன்னியல்பானது எனவும், சீரழிந்த பிரமுகர் புத்திஜீவிகளுக்காக வக்காலத்து வாங்கியும், திரிபுவாதத்துக்கு வக்காலத்து வாங்கியும், தமது விமர்சனத்தை செய்தவர்கள் இவைகளை கருத்தியல் ரீதியில் புரியவைக்க முடியாது தமது முகங்களை இனங்காட்டியுள்ளனர்.

நாம் தவறு இழைக்கும் பட்சத்தில் அதை தத்துவார்த்த விளக்கங்களுடன் புரிய வைக்கவேண்டும் எம் மீதான சொற்களுடன் மட்டும் அமைந்த விமர்சனத்துக்கு பதில் முக்கியமானதும், தீர்க்கமானதுமான தத்துவார்த்த விவாதத்துக்குரிய இவ் விடயத்தை, வெறும் சொற்களுக்கு அப்பால் நகர்த்த முடியாது போயுள்ளனர். இதன் பின் கோட்பாட்டு விவாதம் முக்கியத்துவம் எனக் கோரின் அது நகைப்புக்குரியதே. இது மனிதத்திடமிருந்து வாந்தியெடுத்து தம்மை அவர்கள் உடன் இணைத்ததற்கு அப்பால் ஒரு அடியைக் கூட முன்வைக்கவில்லை.

தேசிய சக்திகள்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, December 16, 2009

தேசம்நெற் மூலம் கிடைத்த அதிர்ச்சி! ஆச்சரியம்!! - அவதூறுக்கு மறுப்பு

நாம் அசோக்குக்கு ஈமெயில் எழுதியதாக எம் பெயரில் கருத்துச் சொல்லி, ஒரு ஈமெயிலை தேசம்நெற் வெளியிட்டுள்ளது. இதை நாம் எழுதியிருக்கவில்லை. இப்படி எழுத வேண்டிய அவசியமும் எமக்கு கிடையாது. ஜான் பற்றி அசோக்கோடு கதைக்க, எமக்கு அப்படி என்ன வேண்டியிருக்கின்றது!? அசோக்குக்கு வேண்டியவர், ஜானை துணைக்கழைக்க இது உதவுகின்றது.

இதை இவர்கள் திட்டமிட்டு தயாரித்தார்களா அல்லது மூன்றாவது நபர்கள் இடையில் புகுந்து விளையாடுகின்றார்களா என்பது எமக்குத் தெரியாது.

ஆனால் தெளிவாக கற்றன் நசனல் வங்கிப் பணத்துக்கும் தீப்பொறிக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புள்ளது என்று நன்கு தெரிந்த நபர், இதை திட்டமிட்டு செய்துள்ளார். இது ஜானுக்கு எதிரான அவதூறை புனைந்துள்ளதுடன், அதை எம்பெயரில் செய்துள்ளனர்......... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது

கொபென்ஹெகேன் நகரில் கலவரத்தீ பற்றிக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை, இடதுசாரி இளைஞர்களுக்கும், போலீசுக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில், ஐ.நா.கூட்டிய பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடும் பாதுகாப்புடன் வாரக்கணக்காக நடைபெற்று வருகின்றது. உலகத்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு வெளியே, சாமானியரின் மாநாடு வீதிகளில் கூட்டப்படுகின்றது. உலகம் முழுவதிலும் இருந்து வந்த இடதுசாரி ஆர்வலர்கள் கோபென்ஹெகன் நகரில் குழுமியுள்ளனர். பெரு வணிக நிறுவனங்கள் காலநிலை மாற்றத்தையும் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாற்ற எத்தனிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்தனர். அனைத்து மக்களுக்குமான கருத்தரங்குகளில் Naomi Klein போன்ற தீவிர முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அனேகமாக ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் யாவும் கோபென்ஹெகன் நகரின் முக்கிய தெருக்களில் இடம்பெற்றுள்ளன.

அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் “கிறிஸ்டியானா” பகுதியில் இடம்பெற்றுள்ளன. இதனால் கோபென்ஹெகன் நகரின் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, December 15, 2009

பேரினவாத போர்க் குற்றம் புதிய ஆதாரங்கள் - பிரபாகரனின் மகள் துவாரகாவின் படம் இணைப்பு

புலிகள் தங்கள் போர்க் குற்றங்களையும், சரணடைய வைத்த அரசியல் துரோகத்தையும் மூடிமறைக்க, அரசு செய்த போர்க் குற்றத்தை திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். சரணடந்தவர்களை கொன்றது உட்பட, யுத்தத்தில் ஈடுபடாத குடும்ப உறுப்பினர்களையும் படுகொலை செய்தது, இந்த பேரினவாத அரசு. இப்படித்தான் நடந்தது என்பது, புலத்துப் புலிக்கு நன்கு தெரியும். சரணடைய வைத்தவர்கள் இவர்கள் தான்.

இன்று நடந்ததை மூடிமறைத்து, இந்த போர்க் குற்றத்தை புலிகள் அரசுடன் சேர்ந்து நின்றே மூடிமறைக்கின்றனர். சரணடைந்த புலித் ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சிவப்புக் குல்லா அணிந்தபடி, தமக்கு ஓளிவட்டம் கட்டும் இனியொரு (எதிர்ப்புரட்சி அரசியல் பகுதி 9)

நிகழ்காலத்தில் அரசியலில் ஈடுபடுபவர்கள், கடந்தகாலத்தை மிகத் தெளிவாக விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டும். இதை மறுப்பவர்கள் யார்? கடந்தகாலத்தின் எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை, நிகழ்காலத்திற்கு மூடிமறைக்க விரும்பும் சந்தர்ப்பவாதிகள் தான். குறிப்பாக மாற்று அரசியலின் பெயரில் நிகழ்ந்த பலமுகம் கொண்ட எதிர்ப்புரட்சி அரசியலை பற்றிப் பேசாத, ஒரு "மார்க்சியத்தை" "முற்போக்கை" இன்று கதைக்கவும் முன்வைக்கவும் முனைகின்றனர். இதைத்தான் சமகால அரசியலாக, புது வேசத்துடன் முன்தள்ளுகின்றனர். கடந்த வரலாற்று இயங்கியல் போக்கை நிராகரித்த "மார்க்சியம்" என்பது, மக்களுக்கு எதிரானதை கடந்தகாலத்தில் இருந்து மீள ஏமாற்றித் திணிப்பதுதான்.

பாசிசத்துக்கு எதிராக கடந்தகாலத்தில் மக்களைச் சார்ந்து நின்று எதிர்வினையாற்றாத சந்தர்ப்பவாதிகள், இன்று "மார்க்சியத்தின்;" பெயரில் கும்மியடிக்க முனைகின்றனர். இவர்களுடன் கடந்தகாலத்தில் எதிர்ப்புரட்சி அரசியல் பாத்திரத்தை ஆற்றியவர்கள் கூடி, மார்க்சியம் பற்றி குசு குசுக்கின்றனர்.

"வட்டுக்கோட்டை தீர்மானம்", "நாடு கடந்த தமிழீழம்", "மே 18 இயக்கம்" .. என்று புலிகள், தங்கள் கடந்தகால எதிர்ப்புரட்சி வரலாற்றை.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிரபாகரனின் பின்னான 75 நாட்களும் சதிகளும் – பகுதி -1

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் மே -18ம் திகதி சுட்டுக் கொன்றிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரும், தனது ஆருயிர் நண்பனுமான பிரபாகரன் மே -17ம் திகதி மதியவேளை இராணுவத்துடனான நேரடிச் சமரில் வீரமரணம் அடைந்ததாக, புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும் அவரின் நண்பருமான கே.பி அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ 7 வாரங்கள் கழிந்து போகும் நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்த எழுத்தாளர் மு.திருநாவுக்கரசின் பேட்டியோடு, பிரபாகரன் மே -15 பின்னிரவு அல்லது மே -16 அதிகாலை தப்பிப் போய்விட்டதாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறும் அணியினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாள் வித்தியாசத்திலும் இம் மூன்று பகுதியினரும் தத்தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

யோர்தானில் இருந்த ராஜபக்சாவுக்கு மே -18 ம் திகதிதான் பொருத்தமாக இருப்பது போலத் தெரிகிறது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாக முதலில் கூறிய கே.பி க்கு, ‘நாடுகடந்த தமிழீழத்துக்கு’ வசதியாக மே -17 தான் இருந்துவிடும் போல் தெரிகிறது. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சொல்கிற வைகோ, நெடுமாறன், மு.திருகாவுக்கரசு …. மற்றும் ‘வட்டுக்கோட்டை தீர்மானக்காரருக்கு’, இவ் இறப்புத் தேதிகளுக்கு முன்பே தப்பிச்செல்லும் தேதியாக மே – 16 தான் இறுதியாகவும் இருக்கிறது. இது இவ் முக்கூட்டுச் சக்கரத்துக்குள் இருக்கும் முரண்பாட்டின் விளைவாக, இவ் மூன்று தேதிகளுமே இவர்களுக்கு அதி வசதியாகவும் இருந்துவிடுகிறது.

யூலை மாதம் 2ம் வாரத்தில்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, December 14, 2009

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது. மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது.தற்போது நம் ஊரிலும் அதிகம் கடைவிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.

புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்கமுடியாத முடிவுகள் வந்துள்ளன! என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.

அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள். ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை.

இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு,இறகுகள்,கால்கள் கொஞ்சம்தான் இருக்கும். கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக ...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிரான்ஸ் மாபியாக்கள் நடத்திய "வட்டுக்கோட்டை" தேர்தல் : சமூகப் பொறுப்பற்ற மந்தைகள் வாக்குப் போடுவதும், மொய் எழுதுவதும் ஒன்றுதான்

எதுக்கு வாக்கு போடுகின்றோம்!?, ஏன் போடுகின்றோம்!? என்று எதைத் தெரிந்து கொண்டும் மந்தைகள் வாக்குப் போடுவது கிடையாது. ஆறாவது அறிவை இழந்த மந்தைகளாக, ஒருவரை ஒருவர் கண்காணித்து சாய்க்க, ஒரு தேர்தல் திருவிழா அரசியல் கூத்தாகின்றது.

அவரவரின் அறியாமைக்குள் கிணற்றுத் தவளையாக நின்று பெருமை பேச, வம்பளக்க, பொழுதுபோக்க வட்டுக்கோட்டை மாபியாத் தேர்தல் உதவுகின்றது. இவர்களைத் தலைமை தாங்கும் மாபியாக் கும்பல், மக்களின் பொது நிதியை சூறையாடியதையிட்டு வாய்திறக்க முடியாதவர்களைக் கொண்டு, அவர்கள் தமக்கு வாக்குப் போடவைக்கின்றனர்.

புலி மாபியாத்தனம் மூலம் கட்டமைத்த மாபியா வடிவங்கள் முதல் சடங்குத்தனமான மொய் எழுதும் சமூக வடிவங்கள் மூலம் தமக்கு வாக்கு போடவைக்கப்பட்டது.

புலிகளின் தலைமையைக் கொன்றவர்கள், பினாமிச் சொத்துகளை அபகரித்தவர்கள், நடத்தும் அரசியல் சடங்குகள் இவை. உள்ளுர் சொத்துக்களை........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்