தமிழ் அரங்கம்

Saturday, March 25, 2006

மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்

மனித உரிமைகளை மறுக்கும் உலகமயமாக்கம்

பாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், ""இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.

பொது மக்களின் பிரச்சினைகளுக்காகப் பொதுக் கூட்டங்கள் போடுவது; ஊர்வலங்கள், கடையடைப்புப் போராட்டங்கள் நடத்துவது; தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் செய்வது இப்படி இதுநாள்வரை அரசியல் சாசனத்தில் இருந்து வந்த சட்டபூர்வமான ஜனநாயக உரிமைகளை, ஒவ்வொன்றாக நீதிமன் றம் சட்டவிரோதம் என அறிவித்து வருகிறது. இத்தீர்ப்புகள் ஒருபுறமிருக்க, இந்தியக் குற்றவியல் சட்டத் தொகுப்பையே, ""பொடா''விற்கு இணையாகத் திருத்தி எழுதும் முயற்சியில் மைய அரசு ஏற்கெனவே இறங்கிவிட்டது.

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்திற்கு ஏற்றவாறு, சட்டபூர்வ பாசிச ஆட்சி அரங்கேறி வருவதைத்தான், இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

இப்பாசிச அபாயத்தைப் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளை, கடந்த பிப்.18 அன்று, ""உலகமயமாக்கச் சூழலில் மனித உரிமைகளின் நிலை'' எனும் கருத்தரங்கை மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத் திறந்தவெளி அரங்கில் நடத்தியது. மனித உரிமைப் போராளியும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளையின் தலைவருமான ஆர்.நல்லகாமன், இக்கருத்தரங்கை தலைமை தாங்கி நடத்தினார்.

இக்கருத்தரங்கில், ""உள்நாட்டுச் சட்டங்களைச் செல்லாக்காசாக்கும் பன்னாட்டு மூலதனம்'' எனும் தலைப்பில் உரையாற்றிய பெங்களூரைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.பாலன், ""பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இலாப வேட்டைக்கு ஏற்றாற்போல, ஒவ்வொரு துறையிலும் இந்தியச் சட்டங்களை எப்படி மாற்றி அமைக்கின்றன'' என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கினார்.

மதுரை உயர்நீதி மன்ற முன்னணி வழக்குரைஞர் தி.லஜபதிராய், ""சாதியப் படிநிலைகளும் சட்டங்களும்'' எனும் தலைப்பில் உரையாற்றினார். ""பெருவாரியான இந்திய சட்டங்கள் சாதிய கட்டுமானத்தை வலுப்படுத்துகின்ற வகையிலேயேதான் எழுதப்பட்டுள்ளன'' என விளக்கிப் பேசிய அவர், உச்சநீதி மன்றத்தில் புரையோடிப் போயிருக்கும் மேல்சாதி வெறியையும் அம்பலப்படுத்தினார்.

""ஊழல் நீதிமன்றங்களுக்கும் உண்மையான நீதிக்கும் இடையே உள்ள தூரம்'' எனும் தலைப்பில் உரையாற்றிய திராவிடர் கழக மாநிலச் சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் சி.மகேந்திரன், ""காசு உள்ளவனுக்கே நீதி என்பதுதான் நீதிமன்றங்களின் இன்றைய நிலை. நீதிமன்றங்களில் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் பொழுது, அங்கே நீதிக்கு எங்கே இடம் இருக்கிறது'' என வினவினார்.

நெல்லை வழக்குரைஞர் சங்கத் தலைவர் இரா.சி.தங்கசாமி, ""மனித உரிமை மீறல்களும் அதற்கான தீர்வுகளும்'' எனும் தலைப்பில் பேசியபொழுது, ""மனித உரிமைகளை மீட்பதற்கான தீர்வு நீதிமன்றங்களிலோ, அதிகார மட்டங்களிலோ இல்லை. மக்கள் போராட்டங்களே அதற்கான தீர்வு'' எனக் குறிப்பிட்டார்.

""மனித உரிமைகளை மறுக்கும் அதிகார வர்க்கத்தை''ப் பற்றி உரையாற்றிய தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், பிரபல வழக்குரைஞருமான பவானி பா.மோகன், ""ஒரு தவறும் செய்யாத சாமானிய மக்கள் பலர் சிறை, சித்திரவதை போன்ற கொடுமைகளை அனுபவித்து வருவதற்கு அதிகாரிகளே காரணம்; உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களைச் சிறையில் தள்ளி வேடிக்கை பார்க்கிறது அதிகார வர்க்கம். இந்த நிலை மாற வேண்டுமானால் மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகள் வளர வேண்டும்'' என எடுத்துக் கூறினார்.

மக்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டு போராடத் தொடங்கினால், பாசிசம் தவிடுபொடியாகி விடும் என்பதை உணர்த்துவதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

மனித உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.

Thursday, March 23, 2006

ஜனநாயகம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் என்ன?

பி.இரயாகரன்
23.03.2006

டுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடைப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம்;. இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.
இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.

இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. தெரிவு செய்யப்படும் இந்த அமைப்பு மூலமே இது நிகழ்கின்றது. தெரிவு செய்யப்படும் உறுப்பு, ஏற்கனவேயுள்ள ஆளும் அதிகார வர்க்கத்துடன் இணங்கி செயற்படும் ஒரு உறுப்பு மட்டும் தான். தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் நாட்டை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மீறி, சுயாதீனமாக செயல்பட முடியாது. மாறாக இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கும், அதேநேரம் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக அதற்குள் தான் சுயமாக செயல்படமுடியும். மக்களின் தேர்வு என்பது போலியானது. மக்கள் தங்களைத் தாங்கள் ஆள்வதற்கு தேர்ந்தெடுகின்றனர் என்பது சூக்குமமான ஒரு ஏமாற்ற மோசடியாகும்.

உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்கு மிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.

இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.

ஆனால் மக்கள் எந்த ஒரு சக மனிதனையும் அடக்கியொடுக்கி தான் வாழ விரும்புவதில்லை. தான் உழைத்து வாழவிரும்பும் சமுதாயத்தின், ஒரு உயிரியாகவே இருக்கின்றான், இருக்க விரும்புகின்றான். மற்றைய மனிதனை இழிவுபடுத்தி, அவனைத் தாழ்த்தி, இதன் மூலம் அவனின் உழைப்பைப் பிடுங்கி தான் வாழவேண்டும் என்று மக்கள் விரும்புவதில்லை. ஆனால் இதுவே பொதுவான ஆதிக்கம் பெற்ற ஒரு சமுதாய நடைமுறையாக உள்ளது. மக்களின் விரும்பங்களுக்கு அப்பால், இது ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே உள்ளது.

இந்த ஜனநாயகம் என்ற சமூக அமைப்பு, தனது இருப்பு சார்ந்து இதை உருவாக்குகின்றது. ஜனநாயகம் என்பது சக மனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக தன்னை விட மற்றவனை அடக்கவே விரும்புகின்றது. மனிதனை அடக்கி அடிமைப்படுத்தி இழிவாடுகின்றது. ஏன் இப்படிச் செய்கின்றது. மற்றைய மனிதனைச் சார்ந்து, தான் வாழ்தல் இதன் மையமான அடிப்படையாகும். மற்றைய மனிதனின் வாழ்வை பறித்து, அதில் தான் வாழ்தல் இதன் மையக் கூறாகும். இதற்கு பெயர் ஜனநாயகம். பறிக்கும் உரிமை தான் ஜனநாயகம். இதுவே மனித சுதந்திரமாகும். இதற்கு வெளியில் வேறு விளக்கம் எதுவும் கிடையாது. இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.

கடந்த 100, 150 வருடங்களுக்கு முன்னம், மனித அமைப்பில் மனிதர்களையே அடிமையாக வைத்திருத்தல் பொதுவாக சில ஜனநாயக நாடுகளின் சட்டங்களில் காணப்பட்டது. இதையே சமூக நாகரிகமாக அன்றைய மேட்டுக்குடி ஜனநாயகவாதிகள் கருதினர். ஆனால் இன்று அதை அநாகரிகமாகவும், மனிதவிரோதமாக கருதும் நாம், எமது இன்றைய நிலையை அன்றைய வாழ்வுடன் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. ஆனால் இன்று எம்மைப் போல், அன்று அதை அவர்கள் இயல்பான ஒன்றாக கருதினர். அன்று அடிமைகளை வாங்கவும் விற்கவும், குடும்பங்களை பிரித்து சிதைத்து விலங்கிட்டு சந்தையில் நிறுத்தவும், பெண்களை புணரவும், ஏன் கொல்லவும் கூட உரிமையிருந்தது. இதை அன்று சமூதாயத்தின் ஒழுக்கமாக சட்டம் அங்கீகரித்து இருந்தது. இதை அனுபவித்தவர்கள் தான், அன்றைய நாகரிகத்தின் உன்னதமான ஜனநாயக மனிதர்களாக சமுதாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இன்று அவர்களின் வாரிசுகள் உலகை கொள்ளையிடுகின்றனர். அன்று இதைக் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், தமது சிறந்த பண்பின் பெயரால் நியாயப்படுத்தினர். இதை பாதுகாப்பதும், அதை ஒட்டிய சட்டங்களுமே அன்று ஜனநாயகமாக கருதப்பட்டது. இன்று இதை சுதந்திரத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் இதைச் செய்கின்றனர்.

இன்று நாம் அன்றைய நிகழ்ச்சிகளை இழிவானதாக எமது பொதுப்புத்தி மட்டத்தில் கருதிய போதும் கூட, நாம் இன்று உண்மையில் நவீன அடிமைகளாக இந்த ஜனநாயக அமைப்பில் உள்ளோம். உண்மையில் எம்மையே நாம் புரிந்து கொள்ளவில்லை. கொஞ்சம் உள்ளே சென்றாலே நாற்றமெடுகின்றது. உலக அமைப்பு எப்படி உள்ளது. மூலதனத்துக்கு அடிமையாக உள்ளது. இயந்திரத்தின் ஒரு உறுப்பாக மனிதன் மாற்றப்பட்டுவிட்டான். தனது உழைப்பை சந்தையில் விற்க கூட முடியாத புதிய நிலையை அடைகின்றான். இது நவீன அடிமைகளின் நிலை. ஒரு வட்டம் கீறப்பட்டுள்ளது, அதற்குள் நின்று உலகை பார்க்கவும், சிந்திக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றது. இது ஒரு முகம் என்றால், முகத்தின் உள்ளே கொத்தடிமைகள், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அடிமைப்படுத்தப்படும் தாழ்ந்த சாதிகள், இழிவாக கருதப்படும் கறுப்பின மக்கள், இன அடிமைத்தனங்கள், ஆணிண் ஆதிக்கம், மனித உழைப்பைச் சுரண்டும் மூலதனம் என மனித அடிமைத்தனம் பல வடிவில் பலவாக காணப்படுகின்றது. இதையே எமது பொதுப்புத்தி, ஜனநாயகமாக கருதுகின்றது. ஆச்சரியம் தான், ஆனால் இதுவே உண்மை. நாம் இதையே ஜனநாயகம் என்கின்றோம். இதற்கே வாக்களிக்கின்றோம். இதற்கே ஜனநாயக கோசத்தை போடுகின்றோம். நாம் மிகச் சிறந்த ஜனநாயக விரோதிகளாக, நாமாகவே எம்மை அறியாது இருக்கின்றோம். இதை எதிர்த்துப் போராடாத ஒவ்வொருவரும் ஜனநாயக விரோதிதான்.

சற்று விரிவாக போனால், மற்றைய மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை நாம் எப்படி புரிந்து கொள்கின்றோம். ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டுவது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்! சுரண்டுவது எப்படி சுதந்திர உரிமையாக இருக்க முடியம்! இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதிலளித்தேயாக வேண்டியுள்ளது. நாம் சுரண்ட முடியாத நிலையிலும் கூட, மற்றவன் சுரண்டப்படுவதை எப்படி நாம் அங்கீகரிக்க முடியும். சரி நாம் அங்கீகரிக்கவில்லை என்று வைப்போம், அந்தக் கொடுமைக்கு எதிராக நாம் போராடவில்லை என்றால், எப்படி நாம் ஜனநாயகத்தின் பிரதிநிதிகளாக எம்மைச் சொல்லிக் கொள்ளமுடியும். முடியாது, உண்மையில் நாம் ஜனநாயக விரோதியாக, ஜனநாயகத்தை சக மனிதனுக்கு மறுக்கும் ஜனநாயக வாதியாக இருகின்றோம். இதுவே உண்மை. ஜனநாயகத்தை பாதுகாப்பவன் தான், ஜனநாயகத்தை மறுப்பவனாகவும் உள்ளான். இதில் இருந்து வேறுபட்டு நாம் எதைக் கோருகின்றோம் என்றால், ஜனநாயகத்தை ஒழிப்பதைக் கோருகின்றோம். அனைவருக்கும் ஜனநாயகத்தை உறுதி செய்வதன் மூலம், அதை இல்லாதொழிக்கும் சமூக அமைப்பைக் கோருகின்றோம்.

நான் ஒரு தனிமனிதன் என்ற வகையில், எனது உழைப்பை சுரண்டலுக்குள்ளாக்க விட்டுவிட்டுகின்றேன் என்று எடுப்போம். இந்த இடத்தில் இதை நாம், ஜனநாயகமாக அங்கீகரித்தால் இது எப்படி ஜனநாயகமாகும். அந்த ஜனநாயக விரோத செயலுக்கு உடந்தையாளனாகிவிடுகின்றேன். இதை எதிர்த்து நிற்காத எவனும் ஜனநாயகவாதியல்ல. ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் ஜனநாயக உரிமையை கோருவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். அதைப் பாதுகாத்தல் அல்ல. அனைவருக்கும் ஜனநாயகம் என்ற உரிமை பெறுவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். சக மனிதன் மீதான சமூக ஒடுக்குமுறையை இல்லாது ஒழித்தலாகும். இதை நோக்கிய போராட்டம் தான், ஜனநாயகப் போராட்டமாகும்.

இதை மறுத்து, குறித்த காலத்துக்கு காலம் வாக்குப் போடுவதையே ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை மனிதன் சுரண்டுவதையும், சுரண்டும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர். அதேபோல் அறிஜீவிகள் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தையே ஜனநாயகம் என்கின்றனர். இது ஜனநாயகம் என்றால், பரந்துபட்ட மக்களுக்கு இந்த ஜனநாயகத்தால் என்னதான் கிடைக்கின்றது.

இந்த ஜனநாயகத்தால் மக்களின் வறுமையை ஒழிக்க முடிகின்றதா? மனித சமூகம் வாழ்வதற்கு தேவையான சமூக அடிப்படைகளை இது பூர்த்தி செய்கின்றதா. எனின் இல்லை. இந்த ஜனநாயகம் மக்களுக்கு உதவவில்லை. மக்களை அடிமைப்படுத்தி இதை இல்லாதாக்கின்றது என்பதே உண்மை.
மனித தேவையை இது பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த ஜனநாயகம் யாருக்கானது? இந்தக் கேள்வி தெளிவாகவே அதற்கு பதிளிக்கின்றது. பணம் உள்ளவனுக்கே இந்த ஜனநாயகம். பணம் உள்ளவன் பட்டினியுடன் வாழவேண்டிய அவசிமில்லை. நோய்க்கு மருந்தின்றி மரணிக்க வேண்டியதில்லை. வாழ வீடின்றி வீதியில் படுத்துறங்குவதில்லை. எது அவனுக்குத் தேவையோ, அதை இந்த உலகில் இருந்து அவன் பெறுகின்றான். அவனின் வாழ்க்கையைப் பாதுகாப்பது தான், இந்த ஜனநாயகம்;. மிக விசித்திரமான எதார்த்தமான உண்மை இது.

இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கென்று வேறு உண்மைகள் எதுவும் கிடையாது. பணமுள்ளவனின் வாழ்க்கையைத் தான், இந்த ஜனநாயகம் பாதுகாக்கின்றது. அவனின் சொந்தத் தேர்வு தான் இந்த ஜனநாயகம். எப்படி சாதி; பார்ப்பானின் தேர்வோ, அப்படித்தான் இந்த ஜனநாயகம். இது எதை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. பணமுள்ளவன் எப்படி இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றான் என்பதைத் தான். பணம் உள்ளவன் அதை எப்படி ஜனநாயக அமைப்பில பெறுகின்றான் என்பதைத் தான்.

இந்த ஜனநாயக சமூக அமைப்பில் மக்கள் நாள் பூராவும், ஏன் வாழ்க்கை பூராவும் உழைக்கின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இருப்பதில்லை. ஏன்? இந்த ஜனநாயக அமைப்பில் வாழவழியற்றுப் போகின்றனரே ஏன்? ஆனால் சிலர் மட்டும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றனர் என்றால் எப்படி? இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்கள், எப்படி ஜனநாயகத்தை தமது தேர்வு என்று சொல்லமுடியும்! இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்களுக்கும், இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்பவர்களுக்கு இடையில் என்ன வேறுபாடு? எந்த நெருக்கடியுமின்றி வாழ்பவர்களுக்கு, வாழ்வதற்கான பணம் எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைக்கின்றது. வாழ்க்கை ப+ராவும் உழைப்பவன் வாழமுடியாத வகையில் பணத்தைப் பெறமுடிவதில்லையே ஏன்?. பணம் மரத்தில் காய்ப்பதில்லை. மனித உழைப்பில் தான் காய்க்கின்றது. ஆனால் உழைப்பவன் அதைப் பெறமுடிவதில்லையே. ஏன்?

மனித உழைப்பு பணத்தை உருவாக்குகின்றது என்பது உண்மையாக இருப்பதால் தான், உழைப்பவன் அதை கொண்டு வாழமுடியாத நிலை உருவாகுகின்றது. உழைப்பவன் தனது உழைப்புக்கு சொந்தக்காரனாக இருப்பதில்லை. இதனால் தான் அதை அவன் இழந்து விடுகின்றான். யாரிடம் இழக்கின்றான் என்றால் பணமுள்ளவனிடம். இதனால் பணமுள்ளவன் வாழ்கின்றான்;. இந்த இழப்பு எப்படி சாத்தியமாகின்றது என்பதே, அனைத்துக்குமான சூக்குமமாகவுள்ளது. மனித உழைப்பு சுரண்டப்படுபவதன் மூலம் தான், மற்றவனால் வாழமுடிகினறது. உழைப்பவன் வாழமுடியாது போகின்றது. இதை பாதுகாக்கும் இந்த அமைப்புத்தான் ஜனநாயக அமைப்பாகவுள்ளது. இவர்கள் ஜனநாயகத்தின் காவலராக உள்ளனர். இந்த ஜனநாயகத்தின் தீவிர காவலர் யார் என்றால் பணமுள்ளவராக உள்ளனர். அவர்களே முதலாளிகளாக, நிலப்பிரபுகளாக உள்ளனர்.

ஜனநாயகம் என்பது, மற்றவனின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், தான் வாழ்வது தான்;. இதை மூடிமறைக்கவே வாக்களிக்கும் உரிமைப் பிரகடனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீ உனது வாக்கு மூலம், யார் உன்னை ஆள்வது என்பதை தெரிவு செய்யமுடியும் என்று கூறமுனைகின்றனர். விரும்பின் நீயும் ஆள முடியும் என்ற பிரமையும் ஊட்டப்படுகின்றது. இது அதிஸ்ட லாபச் சீட்டுப் போல், கபடமும் சூழ்ச்சியும் நிறைந்த அப்பட்டமான மனித உழைப்பைச் சுரண்டும் அரசியல் சூதாட்டமாகும்.

உனது வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்யும் உனது உரிமை, நீயே ஆளமுடியும் என்ற உரிமை, இதுவே ஜனநாயகம் என்றால் இது எப்படி சக மனிதனை அடிமைப்படுத்துவதை அனுமதிக்கின்றது. சரி இந்த அடிமைத்தனத்தை இது எப்படி ஒழிக்கும்? சக மனிதனையே கேவலப்படுத்தும் சமுதாயத்தை, இது எப்படி மாற்றி அமைக்கும். மனிதர்களை சிறுமைப்படுத்தி கீழ்மைப்படுத்தும் சமூக முரண்பாடுகளை, எப்படி இது இல்லாதாக்கும்? விடை தெரியாத ஜனநாயகப் புதிர்தான் இது. ஜனநாயகத்தின் கடமை இதுவல்ல என்பதே, எதார்த்தம் கூறுகின்ற ஒரு ஜடமான வாழ்வாக உள்ளது.
வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்கின்ற உரிமை, நீ ஆளுகின்ற உரிமை எப்படி எதார்த்தத்தில் உள்ளது. இன்று உலகை ஆளுகின்ற எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக தலைவர்களாக இருந்தாலும் சரி, எந்த சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரமாக இருந்தாலும் சரி, இழிந்துபோன இந்த அமைப்பின் மனித துயரங்களை தீர்ப்பதி;ல்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த ஜனநாயகம் மனிதர்களுக்கு எந்தவித்திலும் பயன்படவில்லை என்பது உண்மையாகின்றது. அனைத்து ஜனநாயகவாதிகளும், மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தருவதாகத்தான் கூறுகின்றனர். ஆனால் எதார்த்தத்தில் அதை மறுதலிப்பவராகவே உள்ளனர். வாக்கு போட்டு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சிகள், அதன் உறுப்பினர்கள் எங்கேயாவது மக்களுக்காக அவர்களின் வாழ்வு பிரச்சனைகளுக்காக உண்மையாக நேர்மையாக வாழ்கின்றார்களா? இன்று ஆளும் வர்க்கமாக உள்ள ஆட்சியாளர்கள், மக்களுக்கு தாம் என்ன தான் செய்ய போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? மக்களுக்கு எதிராக எதைக் கொண்டு வரப் போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? இல்லை. வெளிப்படையாக மக்களுக்கு எதையும் சொல்வதில்லை. சூக்குமமாக தமது திட்டங்களை, மக்கள் புரிந்து கொள்ளாத மொழிகளில் அரூபமாகவே முன்வைக்கின்றனர். அதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. முழு மக்களையும் பாதிக்கின்ற, சொல்லாத பல விடையங்களையே மூலதனத்துக்கு சார்பாக அமுலுக்கு கொண்டு வருகின்றன. பொதுவாக பார்த்தால் மாற்றமுடியாத ஒரு அமைப்பின் விதிகளுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கட்டுப்பட்டு செயற்படுகின்றது.

மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என எதுவும் சொல்வதில்லை. ஒப்பந்தங்கள் முதல் சட்டங்கள் வரை பல இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஒரு மூடுமந்திரமே ஆட்சியின் இயல்பாகின்றது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இவற்றை புரிந்துகொள்ள சில உதாரணங்களை எடுப்போம்.

1.உலகமயமாதல் என்ற உலக ஒழுங்கு இன்று உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. அது உலகில் உள்ள மக்களின் வாழ்வின் ஆதாரங்களை இல்லாததாக்குகின்றது. மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக, அடிமைகளாக மாற்றுகின்றது. நாடுகளையே இல்லாது ஒழிக்கின்றது. உலக நாடுகளையும் அதன் தலைவிதியையும் அழிக்கின்ற இந்த உலகமயமாதல் ஒப்பந்தங்கள் என்ன? யாருக்காவது தெரியுமா? உலகில் உள்ள மக்களுக்கு இது என்னவென தெரியாது. மக்களை விடுவோம், தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக பிரதிநிதிகளுக்குத் தெரியுமா? தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாடும் இந்த தற்கொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கூட இந்த ஒப்பந்தம் என்னவெனத் தெரியாது. ஆனால் கையெழுத்திட்டுள்ளர். உலகின் சகல மனிதர்களின் வாழ்வும், இதற்குள் தான் இயக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அநீதியை நியாயப்படுத்துவதே ஜனநாயகமாகிவிட்டது.

இதைக் கொண்டு வந்த விதமே ஜனநாயகவிரோதமானது. கையெழுத்திட்ட வடிவமே ஜனநாயக விரோதமானது. ஆனால் இதை அமுல்படுத்தும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர்.

கைநாட்டிட்ட இந்த ஒப்பந்தத்தை, வாக்குபோட்டு தெரிவு செய்த பிரதிநிதிகள் யாரும் விவாதித்து அங்கீகரிக்கவில்லை. மக்களின் வாக்களிக்கும் உரிமையே இங்கு செல்லுபடியற்றது. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை கேள்வி கேட்க முடியாது. அந்த ஒப்பந்தச் சரத்துகள் என்ன என்பதை அறியும் உரிமையும் கூட அவர்களுக்கு கிடையாது. வாக்கு அளிக்கும் உரிமை, தேர்வின் உரிமை, தேர்ந்தெடுத்த உறுப்பினரின் உரிமையென எதுவும் இந்த அமைப்பில் அர்த்தமற்ற ஒன்றாகவே உள்ளது. சரி உயர் நீதிமன்றங்கள் கூட இதை கேள்வி கேட்கவோ, தடை செய்யவோ முடியாது. ஜனநாயகம் என்பது இங்கு போலியான வெற்றுச் சொற்களாக இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. யார் இதை உருவாக்கினார்கள்? மக்களுக்கு மேலாக உள்ள அவர்கள் யார்? இதுவே இதைப் புரிந்து கொள்வதில் மிக முக்கியமான கேள்வியாக எம்முன் உள்ளது.

2.இது போன்று ஓய்வூதிய வயதெல்லையை (5 வருடமாக) அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலங்கள் பல நாடுகளில் வருகின்றன. இந்தச் சட்டமூலம் பற்றி விவாதத்தை யார் தீர்மானிக்கின்றார்கள். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுபினர்கள் என்றால், அதன் பின்னால் முதலாளிகள் உள்ளனர். சரி இந்த தெரிவு செய்யபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த சட்டமூலத்தை கொண்டு வரப்போவதாக கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்களா எனின் இல்லை. மக்களிடம் இப்படி கூறி வாக்கு கேட்பதில்லை. உண்மையில் மக்கள் தீர்மானிப்பதில்லை. தனது ஓய்வூதிய கால அளவை கூட்டவுள்ளதாக கூறி வாக்கு கேட்டு இருந்தால், மக்கள் அவர்களை நிராகரித்து இருப்பார்கள். மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற பின்பு, அதை ஜனநாயகபூர்வமான தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஜனநாயகத் தெரிவு என்பது மொத்த மக்களுக்கும் எதிரான மோசடியாகும். இப்படித்தான் பலவற்றை ஜனநாயக விரோத பாராளுமன்றங்கள் ஜனநாயகத்தின் பெயரில் செய்கின்றன. சில சட்டமூலங்கள் பெரும்பான்மை மக்கள் எதிர்கின்ற நிலையிலும், வீதியில் இறங்கிப் போராடுகின்ற நிலையிலும் கூட, அதை மாற்ற முடியாது என்று மக்களுக்கு எதிராக கொக்கரிப்பதே ஜனநாயகமாக உள்ளது.

3.உலகில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை எடுப்போம்;. வேலை நேர அதிகரிப்பு, குறைந் கூலிகள், வேலைவிட்டு நீக்கும் உரிமைகள் என்று அன்றாடம் பல சட்டங்கள் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்றது. யார் அவர்களை தெரிவு செய்தனரோ, அவர்களுக்கு எதிராக அவர்களின் விரும்பங்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த மக்கள் விரோத முதலாளி சார்புச் சட்டங்களை கொண்டு வரப்போவதாக மக்களுக்கு கூறி வாக்கு கேட்டனரா எனின் இல்லை? தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புக்கு வெளியில் கொண்டுவரும் சட்டங்கள், அந்த மக்களை உயிருடன் கொல்லுகின்றது. இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். இதையே மக்களின் தேர்வின் உரிமை என்கின்றனர். இது அப்பட்டமான மோசடியாகும்.

4.உலகில் பொதுவாக போடப்படும் சட்டங்கள் இயற்கை மீதான மனித உரிமையையே இல்லாததாக்குகின்றது. குடிக்கும் தண்ணீரையே ஜனநாயகம் காசாக்குகின்றது. உயிர்வாழ்வதற்கு தேவையான மருத்துவத்தை மறுத்து, உயிர்வாழும் உரிமையை ஜனநாயகம் காசாக்குகின்றது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை கல்வியின் உரிமையை மறுக்கும் ஜனநாயகம், அதையும் காசாக்குகின்றது. வாழ்வதற்கு இந்த ப+மியில் ஒரு துண்டு நிலத்தைக் கூட பெற முடியாத மனித அவலம். இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். உன்னிடம் பணம் இல்லை என்றால் குடிக்கும் நீரை, நோய் தீர்க்கும் மருந்தை, ஒரு நேர உணவை, வாழ்வதற்கான ஒரு இடத்தைக் கூட, இந்த ப+மியில் நீ பெற முடியாது. இந்த உண்மையை பாதுகாப்பது தான் ஜனநாயகம்.

பணத்தை பெறும் உனது உழைப்பை நீ எவ்வளவுக்கு விற்பது என்பதை நீ தீர்மானிக்க முடியாது. இதைத்தான் பாராளுமன்ற ஜனநாயக சட்டங்கள் அன்றாடம் உனக்கு எதிராக உருவாக்குகின்றனர். இதைத் தான் உனது உரிமை என்றும், உனது ஜனநாயகம் என்றும் உனக்கு புகட்டுகின்றனர்.
மக்கள் இந்த பூமியில் வாழவழியற்ற நிலையை உறுதிசெய்யும் சட்டங்களை இயற்றுவதே ஜனநாயகத்தின் ஒரே கடமையாக உள்ளது. தெரிவு செய்யப்பட்ட எந்த உறுப்பினராவது அல்லது கட்சியாவது, இதைத் தமது கொள்கையாக கூறி வாக்குக் கேட்டார்களா? எனின் இல்லை. மக்கள் அவர்களை இதற்காகவா தெரிவு செய்தார்கள் எனின் அதுவும் இல்லையே!
இப்படி பற்பல உதாரணங்களை நாம் காட்டமுடியும்;. மக்கள் முன் முன்கூட்டியே திணிக்கப்பட்ட ஒரு அமைப்பில் தெரிவு செய்யப்படுபவர்கள், தாங்கள் செய்யப் போவதை கூடச் சொன்னதில்லை. அதேபோல் சொன்னதைச் செய்வதில்லை. உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்;படும் ஒரு மக்கள் விரோத கும்பலாகத்தான் உருவாகுகின்றனர். இந்தக் கும்பலின் மக்கள் விரோதச் செயலைத்தான் ஜனநாயகம் என்கின்றனர்? மக்களின் ஜனநாயக உரிமை, தேர்ந்த உரிமை என அனைத்தும், மிக மோசமான வழியில் ஒரு பணக்கார கும்பலுக்கு சார்பாக பயன்படுத்தப்படுகின்றது. மாறிமாறி ஆட்சிக்கு வரும் ஜனநாயகவாதிகள், மக்கள் விரோத சட்டங்களை மீளப் பெறுவதில்லை. அது அடுத்த ஆட்சியிலும் தொடருகின்றது. எப்போதாவது மீளப் பெறப்படுகின்றது எனின், மக்கள் வீதியில் இறங்கி இந்த ஜனநாயக ஆட்சிக்கு சவால்விடும் போது மட்டும் தான் நிகழ்கின்றது. மக்கள் இனியும் இந்த ஜனநாயகத்தை சகித்துக் கொண்டு வாழமுடியாத என்ற நிலையில், வீதியில் இறங்கி ஜனநாயகத்துக்கு சவால் விடுகின்றனர்.
மக்கள் விதியில் இறங்கி புனிதமான ஜனநாயக அமைப்பையே தகர்த்துவிடும் அச்சுறுத்தலைவிடும் போது மட்டும்தான், மக்கள் விரோத ஜனநாயகச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றது. அதாவது மக்கள் விரோத ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டம் மீளப்பெறப்படுகின்றது. உண்மையில் இந்த ஜனநாயக அமைப்பின் எதிர்மறையான அம்சமே இங்கும் செயலாற்றுகின்றது. மக்கள் இந்த ஜனநாயக அமைப்பை ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் அன்றாடம் நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவை, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் தான்;. இந்த ஜனநாயகம் மக்களுக்கு எதிராக இருப்பதால் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இப் போராட்டத்தில் மக்கள் ஜனநாயகத்தை முன்னிறுத்தினாலும் கூட, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான போராட்டமாகவே அவையுள்ளது. இது நிகழாத போது, மக்களின் அன்றாட வாழ்க்கையே கண்ணீர் ஆறாக, இந்த ஜனநாயகத்துக்கு எதிராக பெருக்கெடுகின்றது. இதுவும் அன்றாட மனித வாழ்க்கையில் நடந்தேறுகின்றது.

மக்களுக்கு எதிரான சட்டங்கள், ஒப்பந்தங்கள் ஏன், யாருக்காக உருவாக்கப்படுகின்றன? முழு மக்கள் கூட்டத்துக்கு எதிராக, ஏன் இந்த ஜனநாயகவாதிகள் இயங்குகின்றனர். மூலதனத்தின் நலன் என்பதே, இதன் மையமான அரசியல். ஜனநாயகம் என்பது மூலதனத்தை விரிவுபடுத்துவது தான்;. பணக்காரனை பணக்காரனாக்குவது தான். ஏழையை மேலும் ஏழையாக்குவது தான். இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு என்று வேறு விளக்கம் கிடையாது. பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்து, மூலதனத்தை பெருக்குவது தான் ஜனநாயகம். இந்த உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர். மூலதனம் வாழவேண்டும் என்றால், மக்கள் சுரண்டப்பட வேண்டும். இந்த முரண்நிலையான கூறு எதார்த்தத்தில் ஜனநாயகமாக உள்ளவரை, இந்த ஜனநாயக அமைப்பு ஒரு சார்பு நிலையை எடுத்தேயாக வேண்டியுள்ளது. மனித உழைப்பை சுரண்டுவது அல்லது சுரண்டலை எதிர்ப்பது என்ற எதிர்நிலைப் போக்கு, தெளிவாக துல்லியமாக இதிலொன்றை தெரிவு செய்கின்றது.

இந்த ஜனநாயகம் என்பது மூலதனத்தைப் பாதுகாக்கும் அமைப்பாகவே உள்ளது. இது தவிர்க்க முடியாது மூலதனத்தை பெருக்க, மக்களின் உழைப்பை அதிகளவில் சுரண்டுவதை கோருகின்றது. மக்களிடம் உள்ளவற்றை புடுங்குவதை சட்டமாக்குவது தான் ஜனநாயகமாகி விடுகின்றது. ஆளும் வர்க்கத்தின் மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும், மக்கள் விரோத சட்டங்களை இந்த ஜனநாயக அமைப்பு உருவாக்குகின்றது. ஜனநாயகத்தின் பெயரில் தேர்வு செய்யும் உறுப்பு, அப்படித்தான் உள்ளது. இது தவிர்க்க முடியாது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது.

நிலவும் ஜனநாயகம் என்பது மக்களுக்கு அல்ல, மூலதனத்துக்குத் தான்;. மூலதனத்தின் வாழ்வுக்கு உட்பட்ட சட்டத் திட்டங்களைத் தான், இந்த அமைப்பின் சமூக ஒழுக்கமாக்குகின்றனர். இதற்கு வெளியில் சுயாதீனமாக சுயேட்சையான சட்டதிட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. ஜனநாயகத்தின் எல்லைப்பாடு, இதற்கு வெளியில் எதுவும் கிடையாது.

இந்த ஜனநாயகத்தில் மக்களை மந்தைத் தனத்தில் வைத்திருப்பதன் மூலம் தான், தமது சொந்த இருப்பையே தக்கவைக்க முடிகின்றது. ஜனநாயகத்தின் உறுப்பாக காட்டப்படுகின்ற கருத்து தளங்கள் மிகப்பெரிய ஒரு மூலதன நிறுவனமாக மாறிவிட்டது. மக்களிடம் கருத்தை பெருமளவில் எடுத்துச் செல்லுகின்ற ஊடகவியலில், மக்கள் தமது கருத்தை விரும்பியவாறு சொல்லமுடியாது. ஏன் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற ஒரு கருத்தைக் கூட பிரதிபலிக்க முடியாது. இதில் மூலதனத்தின் நலனுக்கு எதிராக கருத்துரைக்கவே முடியாது. ஊடகமே ஒரு மூலதனத்தின் மேல் வீற்றிருக்கின்றது. ஊடகமே ஒரு மூலதனமாகிவிட்டதால், அதற்கு உட்பட்ட வகையில் செயலாற்றுவதையே அது அனுமதிக்கின்றது. இதற்குள் தான் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்க முடியும்.

ஊடகத்துறை மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைப் பற்றி பேசுவதில்லை. மக்களுக்கு எதிரான சட்டதிட்டங்களையும், ஒப்பந்தங்களையும் பற்றி பேசுவதில்லை. வாக்கு போட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் எப்படி ஏன் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதைப் பற்றியோ, அவர்களின் ஜனநாயக விரோத செயல்பாட்டைப் பற்றியோ பேசுவதில்லை. ஜனநாயகத்தின் பெயரில் ஜனநாயக விரோதமாகவே செயல்படும் அமைப்பைப் பாதுகாப்பதில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை பாதுகாக்கின்ற வகையில் கருத்தை எடுத்துச் செல்லுகின்றன. மக்களுக்கு கருத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்கள் தனிப்பட்ட முதலாளிகளுடையதாக அல்லது ஆளும் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக உள்ளது. இது பரந்துபட்ட மக்களின் வாழ்வுக்கு எதிராக திட்டவட்டமாக செயலாற்றுகின்றது.
இது இப்படி என்றால் ஆளும் கட்சிகளை எடுத்தால் அல்லது எதிர்க்கட்சியை எடுத்தால் இதே நிலைதான். கட்சிகளே பெரும் பண நிறுவனங்களாகவே மாறிவிட்டன. பண முதலைகளின் நிறுவனங்களாகவும், அதை பொறுக்கித் தின்னும் ஒரு அடிபாள்படைகளைக் கொண்ட ஒரு மக்கள் விரோத நிறுவனமாக கட்சிகள் மாறிவிட்டன. மக்களுக்கு முன்னால் தாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொல்லி, நேர்மையாக வாக்கு கேட்பதில்லை. மாறாக எதையும் சொல்வதில்லை. எதையும் மக்களுக்கு தருவதாக கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அதை மக்களுக்கு கொடுப்பதில்லை. மக்களிடம் இருப்பதை புடுங்கும் அரசியல் தான், கட்சிகளின் ஜனநாயகமாக உள்ளது. இது மக்களின் வாக்குத் தொடங்கி உழைப்புவரை விரிந்து அகன்று செல்லுகின்றது. உலகமெங்கும் வீதி தோறும் போராடும் மக்கள் இந்த உண்மையைத் தான், அன்றாடம் உலகுக்கு புகட்டுகின்றனர்.

அமெரிக்கா முதல் இந்தியா வரை மிகப் பெரிய பணக்காரக் கட்சிகள் மட்டும் தான் ஆட்சிக்கு வரமுடியும். கட்சிகளே மிகப் பெரிய (பணம்) நிறுவனமாகிவிட்டது. அந்தளவுக்கு பணம் முதல் அடியாட்படைகள் வரை கொண்ட ஒரு ஆளும் நிறுவனமாகிவிட்டது. மக்கள் வாக்களித்தாலும் சரி, வாக்களிக்கவிட்டாலும் சரி, ஆளும் நிறுவனங்களில் ஒன்று ஆட்சிக்கு வந்தேயாகின்றது. மக்களுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் அன்றாடம் இயற்றுகின்றனர். இதில் இடது வலது வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஜனநாயக அமைப்புக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி கேள்விக்குள்ளாக்கும் போது, அதை பாதுகாக்க சீர்திருத்தம் செய்கின்றனர். இதற்கு மேல் இந்த ஜனநாயக அமைப்பில் மாற்றம் எதையும், இந்த சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் செய்வதில்லை.
வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வாக்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.

இந்த ஜனநாயகம் இப்படித் தான் நிர்வாணமாகியுள்ளது. இந்த ஜனநாயகம் மனிதனின் வாழ்வை குழிபறிப்பதில் தான் உயிர்வாழ்கின்றது. இது இப்படி என்றால், கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரத்தையே ஜனநாயகமாக கொண்டாடும் சிலர் ஜனநாயகத்தை எப்படி விளக்கி வாழ முற்படுகின்றனர் எனப்பார்ப்போம்.

இவர்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கின்றது என்பது பற்றி அக்கறையில்லை. தனக்கு எப்படி இந்த உலகம் இசைவானதாக இருக்க வேண்டும் என்பது பற்றித்தான், அவனின் கவலை. தன்னையொத்த சகமனிதன் சிந்திக்கவே நேரமின்றி, உழைத்தபடி வாழ்கின்றானே என்ற கவலை இவர்களுக்கு கிடையாது. சகமனிதன் கருத்தைக் கூட சொல்ல முடியாத நிலையில், கல்வியறிவு இந்த ஜனநாயக அமைப்பால் மறுக்கப்பட்ட நிலையில் பட்டினியுடன் வாழ்வதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. சக மனிதனுக்கு அவை இல்லாது இருப்பது தான், தனது உரிமை என்கின்றான். இதை அவன் நேரடியாக சொல்வதில்லை. அதை நாகரிகமாக வெளிப்படுத்துகின்றான். அந்த மக்களின் வாழ்வைப்பற்றியும், அதற்கான காரணமாக உள்ள இந்த ஜனநாயகத்தை, தனது ஜனநாயகத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதையே அவன் ஜனநாயகம் என்கின்றான். இதன் மூலம் தன்னை சமூகத்தின் மேலே உயரத்தில் தக்கவைக்க முனைகின்றான்.

முரணற்ற ஜனநாயகத்தை ஒரு ஜனநாயகவாதி கோருவானாகின், நிச்சயமாக இந்த ஜனநாயகத்தை நுகர முடியாத மனித வாழ்வையும் அந்த ஜனநாயக விரோத அமைப்பையும் எதிர்த்து போராடுவான். ஜனநாயகம் மறுக்கப்பட்டு அதை நுகர முடியாத உலகம் மிகப் பெரியது. ஜனநாயகம் சிலருக்கானதாக (பணம் உள்ளவனுக்காக) உள்ள போது, ஜனநாயகம் என்னவென தெரியவே முடியாத நிலையில் கோடானுகோடி மக்களை மந்தைகளாக வாழவைப்பதே இந்த ஜனநாயக அமைப்புத்தான்.

இதை மூடிமறைப்பதும், இதை வேறொன்றாக காட்டுவதும் இந்த ஜனநாயகத்தின் கேடுகெட்ட செயலாகின்றது. அதாவது மனிதனை மனிதன் அடிமையாக்குகின்ற உழைப்புச் சுரண்டலை மூடிமறைக்கின்ற வகையில், சமூகங்களையே சுரண்டும் வடிவங்களாக மாற்றிவிடுகின்றனர். இயற்கையில் உடல் மற்றும் கால விசும்பலுக்கும் உட்பட்ட சமூக வேறுபாடுகளையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் மோதவிடுவது இதன் ஒரு அங்கமாகும். பெண்ணை ஆணைவிட கீழ்நிலைக்கு இட்டுச் சென்றதால், ஆண் மேலாண்மை பெண்ணை இழிவாக்குகின்றது. ஆணின் உழைப்பு சுரண்டப்படுவதை இது மூடிமறைகின்றது. அதேநேரம் பெண்ணை ஆண் சுரண்டவும் முடிகின்றது.

சாதியத்தின் படிநிலைப்பட்ட சமூக அமைப்பில், உயர்சாதி தாழ்ந்த சாதியை இழிவுபடுத்துவதன் மூலம் தாழ்ந்த சாதியை உயர்ந்த சாதி சுரண்டுகின்றது. இங்கு சுரண்டல் என்பது பண்பாட்டுத் தளத்தில் தொடங்கி உழைப்பு வரை விரிந்த ஒரு தளத்தில் காணப்படுகின்றது.

இதே போல் தான் நிற முரண்பாடுகள். வெள்ளையினத்தை உயர்ந்த இனமாக காட்டுகின்றது. இது மற்றைய நிறங்களை இழிவாக பார்ப்பதன் மூலம், மற்றயை நிறங்கள் மீதான் சுரண்டலை நடத்துகின்றது. இதுபோல் இனமுரண்பாடு ஒரு இனத்தை மேன்மை இனமாக காட்டுவதன் மூலம், மற்றயை இனம் சுரண்டப்படுகின்றது. இப்படி சமூக முரண்பாடுகளை முன்தள்ளி சுரண்டுவதன் மூலம், சுரண்டல் வடிவங்கள் இடம்மாறி சுரண்டப்படுபவர்களை மோதவிடுகின்றது. அதேநேரம் மேனிலையில் உள்ளவன், சுரண்டுவதன் மூலம் அதிக லாபங்களை அடைகின்றான்;. கீழ்நிலையில் உள்ளவன் நியாயமாக தனக்கு மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக போராட, மேனிலையில் உள்ளவன் அதை பயன்படுத்தி கொழுக்கின்றான். மூலதனம் தனக்கு இசைவாகவே இதைப் பயன்படுத்துகின்றது. இப்படி எங்கும் எதிலும் மூலதனத்தின் லாபங்களே குறிக்கோளாகிவிடுகின்றது.

இதன் மூலம் சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. சகமனிதனையும், சக சமூகங்களை இழிவாடி கொள்ளையிடுவதற்கு இந்த ஜனநாயகம் உரிமையளிக்கின்றது. கிட்லரும் கூட ஜனநாயகத்தின் ஊடாகவே யூதரை இழிவுபடுத்தியே, ஆரிய மேன்மை பேசி ஆட்சிக்கு வரமுடிந்தது. இன்று உலகை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா ஆட்சி முதல், உலகை அடக்கியாள்வதற்கு கூட இந்த ஜனநாயகம் இடம்விட்டு கொடுக்கின்றது. மக்கள் விரோத அனைத்துச் செயலையும், ஜனநாயகம் வழிகாட்டுகின்றது.

இந்த நிலையில் ஜனநாயகத்தை நாம் எதிர்நிலையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது ஜனநாயகத்தில் உள்ள முரணற்ற கூறுகளை பயன்படுத்தி, ஜனநாயக விரோதத்தை ஒழிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமற்றதாக்க வேண்டும். அனைத்து மக்களின் ஜனநாயகம், ஜனநாயகத்தை இல்லாது ஒழித்துவிடுகின்றது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு நாம் போராட வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் சொல்லுகின்ற பொய்யையும் புரட்டையும், ஏன் அந்த வர்க்க சர்வாதிகாரத்தையும், அது உருவாக்கும் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தைப் பெறுவதே ஜனநாயகமாகும். மற்றவனுக்கு ஜனநாயகத்தை மறுப்பதை ஜனநாயகம் என்று சொல்வதன் மேல், மக்கள் தமது சர்வாதிகாரத்தை நிறுவவேண்டும். அதாவது பெண் என்றும், தாழ்ந்த இனமென்றும், தாழ்ந்த நிறம் என்றும், தாழ்ந்த சாதி என்று பேசும் ஜனநாயக உரிமை மீதும், சகமனிதனின் உழைப்பைச் சுரண்டும் ஜனநாயக உரிமை மீதும் மக்கள் சர்வாதிகாரத்தை நிறுவி அதை மறுக்க வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம். மக்கள் சர்வாதிகாரம் தான், அனைவருக்கமான ஜனநாயகத்தை வழங்கும. இது ஜனநாயகத்தின் பெயரில் உள்ள மனித இடைவெளியை அகற்றி, அதை இல்லாதாகும்.

Wednesday, March 22, 2006

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்:அறிவாளிகளா, உளவாளிகளா?

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்:
அறிவாளிகளா, உளவாளிகளா?

சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் விற்பனையாகின்றன. அப்பேர்ப்பட்ட அறிஞர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் உளவாளியாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.

பிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. ""ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்'' என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். ரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் உண்மையில் கம்யூனிச எதிர்ப்பு உளவாளிகள் என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். அறிவுலகத்தினரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்செய்தி 1996 ஜூலையில் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ஃபிரான்டியர் (ஜூலை 2531, 1999) வார இதழ் வெளியிட்டுள்ள ஓர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

ரஸ்ஸல் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பாட்டனார் பிரிட்டிஷ் பிரதமர். இளமைக்காலத்திலிருந்தே ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் ""கம்யூனிஸ்டு அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும்'' என்பதில் வெகு கவனமாக இருந்தவர். எனவே ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே அதை எதிர்த்தார். பிறகு 1920இல் ரசியா சென்று வந்தவுடன் ""போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்'' என்ற நூலின் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். மார்க்சிய தத்துவம், பொருளாதாரம் இரண்டையுமே அவர் நிராகரித்தார். ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்து கொள்வது, புதிய சமுதாயத்தை அமைக்கப் போராடுவது என்பதெல்லாம் தவறு என்று அவர் கருதினார்.

ஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலைவெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. ஐயவாதமும் அறியொணாவாதமும் "சித்தாந்தம்' என்ற ஒன்று இல்லாதிருப்பதும்தான் சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் கருதினார். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ரஸ்ஸல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அனைவரையும் துணுக்குறச் செய்தது. அளப்பரிய தியாகங்கள் செய்து நாஜி ஜெர்மனியை முறியடித்திருந்தார்கள் ரசிய மக்கள். உலக மக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் கம்யூனிசத்தை நோக்கியும், ரசியாவை நோக்கியும் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிசக் கொள்கை காட்டுத் தீயாய்ப் பரவிய காலமது. அப்போது ரஸ்ஸல் அறிவித்தார்: ""ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுகுண்டு வீசி அழித்துவிட வேண்டும்.'' ஒரு கொள்கைக்காகத்தான் என்றாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பேசிய அகிம்சாவாதி, கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆறில் ஒரு பங்கு மனித இனத்தையே அழிக்கக் கோரியதை என்னவென்பது?

ஆனால் 60களில் ரஸ்ஸல் மீண்டும் "ஜனநாயகவாதி' ஆகிவிட்டார். அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தை முன் நின்று நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் சமாதானத்தில் நாட்டமா, அல்லது ரசியாவும் அணுகுண்டு தயாரித்துவிட்டது என்ற அச்சமா எனும் கேள்வி எழுகிறது. அதேபோல அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் ரஸ்ஸல். அந்த காலகட்டத்தில் உளவு நிறுவனத்துடன் அவருக்கிருந்த உறவு அறுபட்டதால் இந்த "ஜனநாயக உணர்வு' தோன்றியதா, அல்லது உலகு தழுவிய அமெரிக்க எதிர்ப்பு கம்யூனிச ஆதரவாக மாறிவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் உளவுத்துறை தீட்டிய திட்டத்தின் அங்கம்தான் ரஸ்ஸலின் அமெரிக்க எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுகிறது.

ஜார்ஜ் ஆர்வெல் இந்தியாவில் பிறந்து பர்மாவில் சிறிது காலம் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர். பிறகு அவர் ஒரு "சுதந்திர' இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டார். 1943இல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கெதிராக ரசிய மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதுதான் கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் "விலங்குப் பண்ணை' எனும் நாவலை எழுதினார் ஆர்வெல். இரண்டாவது உலகப்போர் முடிந்த பின் ரசியாவுக்கெதிரான பனிப்போரை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கின. அந்தத் தருணத்தில்தான் வெளிவந்தது ஆர்வெல்லின் ""1984'' எனும் நாவல். ஆர்வெல்லின் இந்த இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நாவல்களையும் பிரபலப்படுத்தி விற்பனை செய்யுமாறு மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. குறிப்பாக முஸ்லீம்கள் பன்றிகளையும், நாய்களையும் வெறுப்பவர்களாதலால், ""விலங்குப் பண்ணை நாவலில் வரும் பன்றி, நாய் ஆகிய பாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் குறிக்கின்றன'' என்று இசுலாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்யுமாறும் தனது தூதரகங்களுக்கு வழிகாட்டியது.

பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

""1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.''

சமுதாயம் முழுவதையும் எப்போதும் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அரசுதான் சோசலிச அரசு என்று சித்தரிப்பதற்காக ""1984'' எனும் நாவலில் ஆர்வெல் உருவாக்கியதுதான் ""பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்!'' (ஆடிஞ் ஆணூணிவடழூணூ டிண் தீச்வஞிடடிணஞ் தூணித!) என்ற பிரபலச் சொற்றொடர். ஆனால் இந்தச் சொற்றொடரை உருவாக்கிய "மேதை'யோ ஒரு போலீசு உளவாளி.

ஸ்டீபன் ஸ்பென்டர் 1930களில் பிரிட்டனில் இருந்த பிரபல இடதுசாரி கவிஞர்களில் ஒருவர். பின்னர் அவர் ஒரு வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பாளராக மாறினார். பனிப்போர் காலகட்டத்தில் விதவிதமான கம்யூனிச எதிர்ப்புப் பத்திரிக்கைகள் மேற்குலகிலிருந்து வெளியாயின. ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவை அத்தகைய சனரஞ்சகப் பத்திரிக்கைகள். "என்கவுண்டர்' (உணஞிணிதணவழூணூ) (சந்திப்பு அல்லது மோதல் என்று பொருள்) என்ற பத்திரிக்கை "அறிவுத்தரம்' கொண்ட ரகத்தைச் சேர்ந்தது.

ஸ்பென்டர் இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். ""பண்பாட்டுச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்'' என்ற அமைப்பு இந்தப் பத்திரிக்கைக்கு நிதி கொடுத்து வந்தது.

இந்தப் பத்திரிக்கை அமெரிக்க உளவு நிறுவனத்தால் (சி.ஐ.ஏ) நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை கனார் க்யூரி ஓ ப்ரியன் என்ற ஐரிஷ் ராசதந்திரி அறுபதுகளின் மத்தியில் வெளியிட்டார். உடனே ஸ்பென்டரும் அவருடன் சேர்ந்த அறிவாளிஃ உளவாளிகளும் இதை மறுத்தனர். ஆனால் என்ன துரதிருஷ்டம்! ""நாங்கள் தான் பணம் கொடுக்கிறோம்'' என்ற உண்மையை அமெரிக்க உளவு நிறுவனமே ஒப்புக் கொண்டது. உடனே கவிஞர் ஸ்பென்டர் பல்டியடித்தார். தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் புலம்பினார். ஆசிரியர் பதவியையும் உடனே ராஜினாமா செய்தார்.

ஆனால் இந்த "அப்பாவி முற்போக்குக் கவிஞர்' பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தனது பத்திரிக்கைக்கு யார் பணம் தருகிறார்கள், என்ன நோக்கத்துக்காகப் பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் கவிஞர் ஸ்பென்டருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ராஜினாமா நாடகமெல்லாம் ""சுதந்திரமான முற்போக்குக் கவிஞர்'' என்ற தன்னைப் பற்றிய கருத்துருவைப் பாதுகாத்துக் கொள்ளும் கீழ்த்தரமான மோசடியே. உளவாளி என்று ஊர் சிரித்துப் போனபின்னரும் "அறிவாளி'யின் ஆன்மா தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை தந்திரங்கள் செய்கிறது!

கீஸ்லர் பிரிட்டிஷ்காரரல்ல. ஹங்கேரி நாட்டுக்காரர். பிறப்பால் யூதர். 30களில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார். ஸ்பெயினில் நடந்த பாசிச எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார். பிறகு சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அந்தப் போரில் அவர் பாசிச எதிர்ப்புப் பத்திரிகையாளராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்போதே அவர் உளவாளியாகவும் இருந்தாரா எனத் தெரியவில்லை. கீஸ்லரின் பிரபலமான (பிரபலம் ஆக்கப்பட்ட) நூல் ""பகலில் இருள்''. தோழர் ஸ்டாலினைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கும் நூல் இது.

சோவியத் அரசுக்கெதிராகச் சதி செய்ததற்காக புகாரின், ஜினோவியேவ் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மீது அப்போது நீதிமன்ற விசாரணை நடந்தது. பகிரங்கமாக நடைபெற்ற இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டனர். சோவியத் ஆட்சியை ஒழிப்பதற்கு அப்படியொரு சதியை மேலை ஏகாதிபத்தியங்கள் செய்தன என்பதும் பலவிதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இந்த விசாரணை தொடர்பாக கீஸ்லர் எழுப்பும் கேள்வி முக்கியமானது. ""அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்?'' என்று கேட்கிறார் கீஸ்லர். உலகப் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக விசாரணை நடைபெற்றதால் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்றும் கீஸ்லரால் சொல்ல முடியவில்லை. ""அவர்கள் இத்தனைக் காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம்தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறிஞ்சி விட்டது'' என்கிறார் கீஸ்லர். இந்தக் கூற்று கோமாளித்தனமானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் "கோமாளித்தனத்தின்' தத்துவ ஞானம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கம்யூனிசக் கோட்பாட்டிற்கு எதிரான கீஸ்லரின் மையமான வாதத்தில் அது வெளிப்படுகிறது. ""நாம் முரணற்றவர்கள் அல்ல் முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா? அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்!'' என்கிறார் கீஸ்லர். முரண்பாட்டை "உறிஞ்சும்' மார்க்சியத்தின் முயற்சி, எதிர்ப்பு உணர்வை உறிஞ்சும் நடவடிக்கையாகக் கீஸ்லருக்குப்படுகிறது. "தவறிழைத்தவன் தன்னுடைய தவறை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்' என்பதுதான் கீஸ்லரின் கேள்வி. எனவே சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு மார்க்சியம் மேற்கொள்ளும் முயற்சி அவருக்குத் தீயொழுக்கமாகவும், மோசடியாகவும் படுகிறது. முரண்பாடுகளுடன் வாழ்வதை ஏற்றுக் கொள்வதும், அதை அங்கீகரிப்பதுமே நல்லொழுக்கமாகவும், நேர்மையாகவும் அவருக்குத் தெரிகிறது. எனவே ஏற்றத்தாழ்வு, சுரண்டல், கொடுமைகள் ஆகிய அனைத்து முரண்பாடுகளும் நிறைந்த முதலாளித்துவம், அதன் முரண்பட்ட நிலையின் காரணமாகவே ஒழுக்கமானதாகவும், எனவே சுதந்திரமானதாகவும் அவருக்குத் தோன்றுகிறது.

நாஜிகளும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளும் ஒரே ரகம்தான் என்று ரஸ்ஸல் கூறியதைப் போலவே கீஸ்லரும் கூறுகிறார். ""ஸ்பெயின் நாட்டின் பாசிச சர்வாதிகாரமும் சோவியத்தின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றுதான். பிராங்கோ தனது சர்வாதிகாரத்தை ஸ்பெயினுடன் நிறுத்திக் கொள்கிறான்; ரசியாவோ அதை உலகெங்கும் பரப்ப முயல்கிறது.'' கீஸ்லரின் கவலை கம்யூனிச அபாயம் பற்றித்தான். மெக்கார்த்தியிசம் என்ற வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அமெரிக்க அரசால் அமல்படுத்தப்பட்டு கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டபோது, அவர் மெக்கார்த்தியிசத்தை ஆதரித்தார்.

""மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பாசிசத்திற்கெதிராக சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைப் போல, இன்று கம்யூனிசத்திற்கெதிராக ஜனநாயகவாதிகளாகிய நாம் மெக்கார்த்தியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்'' என்றார் கீஸ்லர். ""முதலாளித்துவச் சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றே'' என்று சொல்லி இரண்டையும் எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் அறிஞர்கள், தீர்மானகரமான தருணங்களில் முதலாளித்துவத்தின் வெறிபிடித்த ஏவல் நாயாகத்தான் மாறுவார்கள் என்பதற்கு இது இன்னுமோர் சான்று.

இந்த நூற்றாண்டின் மாபெரும் ஜேம்ஸ்பாண்டுகள்! இந்த அறிவாளிகள் ஏன் உளவாளிகள் ஆனார்கள் என்ற கேள்வியைக் காட்டிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறை இந்த அறிவாளிகளை ஏன் உளவாளிகளாகத் தேர்ந்தெடுத்தது என்பதுதான் விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி. இவர்கள் நான்கு பேருமே இடதுசாரிகளாக அறியப்பட்டவர்கள்.

சோசலிசத்தை ""விலங்குப் பண்ணை'' எனத் தூற்றி நூல் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு நச்சுப் பாம்பான ஜார்ஜ் ஆர்வெல், கம்யூனிச எதிர்ப்பு நஞ்சைக் கக்கும் ஒவ்வொரு முறையும் ""தான் சோசலிச எதிர்ப்பாளன் அல்ல'' என்று கூறிக் கொள்ளத் தவறியதே இல்லை. கீஸ்லரோ முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்; ஸ்பென்டர் இடதுசாரி முற்போக்குக் கவிஞர்; ரஸ்ஸலோ "மாபெரும்' முற்போக்காளர்.

""பாருங்கள், சோசலிசத்தைப் பற்றி நாங்கள் (அதாவது முதலாளிகளாகிய நாங்கள்) குறை சொல்லவில்லை. அப்பேர்ப்பட்ட ரஸ்ஸலும், ஆர்வெலும், கீஸ்லரும் ரசியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பாருங்கள்! அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? யோசித்துப் பாருங்கள்!'' இதுதான் இவர்களைப் பயன்படுத்திய முதலாளித்துவத்தின் ஒரே வாதம். முன்னாள் கம்யூனிஸ்டுகள், அல்லது இடதுசாரிகள் என்ற பட்டம்தான் இவர்களது பொய்களும் பித்தலாட்டங்களும் புனிதத்தன்மை பெறுவதற்குப் பயன்பட்ட ஒரே தகுதி. ஏகாதிபத்தியப் போலீசின் மோப்ப நாய்களான இந்த அறிவாளிகளுக்கு, செத்தபிறகும் இடதுசாரி ஒளிவட்டத்தை விட்டுவிட மனமில்லை. ஆர்வெல் ஒரு உளவாளி என்ற செய்தியை 1996இல் வெளியிட்ட பிரிட்டிஷ் உளவு நிறுவன அதிகாரி செலியா மறக்காமல் அதற்கு ஒரு பின்குறிப்பு தருகிறார். ""ஆர்வெல் சோசலிசத்துக்குத் துரோகம் செய்யவில்லை. அவர் கம்யூனிசத்தைத்தான் எதிர்த்தார். மக்கள் இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.''

நாங்கள் கட்சியைத்தான் எதிர்க்கிறோம் கம்யூனிசத்தை அல்ல என்பதும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தான் எதிர்க்கிறோம் சோசலிசத்தை அல்ல என்பதும், யூரோ கம்யூனிசம், பிராங்ஃபர்ட் மார்க்சியம், கட்சி சாராத மார்க்சியம், புதிய இடது ஆகியவையும், கம்யூனிசத்தின் மீதான இடதுசாரி விமர்சனம் ஆகியவையும் ஆர்வெல் செலியாவின் சந்ததிகளே! ஆனால் அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ரசியப் புரட்சியின் வெற்றியும், இரண்டாம் உலகப் போரில் பாசிசத்திற்கு எதிரான சோசலிசத்தின் வெற்றியும் உலகெங்கும் கம்யூனிச ஆதரவு எழுச்சியை உருவாக்கியிருந்தன. உலகெங்கும் அறிவுத்துறையினர் மார்க்சியத்தின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியத்திற்கு மாற்றாக வேறு எந்த "இயமும்' இல்லை.

இன்றோ சோசலிசம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காலம். கறுப்பியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் என ஒன்றையொன்று ஊடறுக்கும் பல்வேறு இயங்களையும், எந்த இயமும் வேண்டாமெனும் பின் நவீனத்துவத்தையும் ஏகாதிபத்தியங்கள் சீராட்டி வளர்க்கின்றன. அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இந்த "கலகக் கோட்பாடுகள்', பல்கலைக்கழகங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல் உளவு என்ற "அநாகரிகமான' சொல் நீக்கப்பட்டு அது "தொண்டு' "ஆய்வு' என்பதாகக் கவுரவமாக அழைக்கப்படுகிறது, தனியார்மயமாக்கலுக்கு "சீர்திருத்தம்' என்று பெயர் சூட்டியிருப்பது போல! இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கு (உளவு நிறுவனம்) இப்போது வாலன்டரி ஏஜென்சி (தன்னார்வத் தொண்டு நிறுவனம்) என்று பெயர். ஆர்வெல்லை செலியா ரகசியமாகச் சந்தித்ததைப் போன்ற துன்பமோ, என்கவுன்டர் பத்திரிக்கைக்கு சி.ஐ.ஏ. விடம் காசு வாங்கிய கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டரின் "தர்ம' சங்கடமோ இப்போது தேவையில்லை.

எந்தவிதச் சங்கடமும் இல்லாமல் சி.ஐ.ஏ.வின் தருமத்தை அறிவாளிகள் பெற்றுக் கொள்ளலாம். பலவிதமான காலனியாக்க வேலைகளுக்கும் கம்யூனிச எதிர்ப்பு வேலைகளுக்கும் உளவாளி தேவை என்று ஆங்கில ஏடுகளில் விளம்பரம் தருகிறார்கள். கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அறிவாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆய்வாளர், பணியாளர், திட்ட இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் என்பனவெல்லாம் உளவாளிகளுக்கு அவர்கள் வழங்கியுள்ள சங்கதேப் பெயர்கள். வறுமை, சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய அனைத்துக் கொடுமைகளையும் "ஒழிக்க' அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை விவரங்கள். தமிழகத்தில் தலித் சாதிகள் எத்தனை, தீண்டாமையின் வடிவங்கள் என்ன, சாதி முரண்பாடுகளின் வரலாறு என்ன, அரசியல் கட்சிகளின் பாத்திரம் என்ன போன்ற பல விவரங்கள். புரட்சிகர இயக்கங்களையும், போராளி அமைப்புகளையும் தன்னுடைய உளவுத் துறையால் சரியாக வேவு பார்த்து விவரம் திரட்ட முடிவதில்லை என்பதால் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோரை குறிப்பிட்ட வேலைக்கான (ணீடிழூஞிழூ ணூச்வழூ) உளவாளிகளாக நம்மூர் காவல்துறை நியமித்துக் கொள்கிறது. இதே வேலைக்கு அறிவாளிகளை நியமிக்கின்றன அந்நிய ஏகாதிபத்தியங்கள்.

தம்முடைய பிழைப்பு நாயினும் இழிந்தது என்பதை இந்தப் போலீசு உளவாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். அறிவாளிகளோ கூச்சமின்றி கம்பீரமாக உளவு வேலை பார்க்கிறார்கள். ஊனமுற்றவர்கள் என்பதால் ஏற்படும் அனுதாபம் மேற்படி போலீசு உளவாளிகளின் தகுதி. முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்பதால் கிடைக்கும் அனுதாபம் அறிவாளி ஃ உளவாளிகளின் தகுதி. ஆந்திராவிலும், காஷ்மீரிலும் போலீசுக்கு ஆள்காட்டும் முன்னாள் போராளிகள் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமில்லை, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும்தான். ரஸ்ஸல், ஆர்வெல் போன்றவர்கள் இப்படி முகத்தை மூடிக் கொள்ள முயன்ற உளவாளிகள்.

""சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு கம்யூனிஸ்டுகள் செய்யும் முயற்சி என்பது ஒரு மோசடி'' என்று அவர்கள் கூறியபோதும் இரட்டை வேடம்தான் மனிதத்தன்மை என்ற கருத்தியல் ரீதியாக அவர்கள் பிரகடனம் செய்த போதிலும், தங்கள் இரட்டை வேடத்தை கம்பீரமாகப் பிரகடனம் செய்து கொள்ளும் "தைரியம்' அவர்களுக்கு அன்று இல்லை. எனவேதான் முக்காடு போட்டுக் கொண்டார்கள். இன்றோ அந்த ஜேம்ஸ்பாண்டுகளின் தத்துவம் பின்நவீனத்துவமாக முற்றிக் கனிந்திருக்கிறது. அதுவா, இதுவா என்று கேட்டால் அதுவும் இதுவும்தான் என்று தத்துவஞான ரீதியில் "தெளிவாக'ப் பதில் சொல்லும் பின் நவீனத்துவ அறிஞர்கள், ""நீங்கள் அறிவாளியா உளவாளியா' என்று கேட்டால் ""அறிவாளியும் உளவாளியும்தான்'' என்று தைரியமாகக் கூறலாம்.

""கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டும்'' என்பது அறிவுலகத்தினர் வலியுறுத்தும் அறிவொழுக்கக் கோட்பாடு. ""ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்க நலனும் ஒரு பொருளாயத சக்தியும் உள்ளது'' என்பது மார்க்சியக் கொள்கை. அந்தப் பொருளாயத சக்தி போலீசாகவும் இருக்கக் கூடும் என்பதுதான் ரஸ்ஸல் வகையறாவின் அனுபவம் தெரிவிக்கின்ற படிப்பினை. அறிவாளியின் கருத்தைக் கருத்தால் சந்திக்கலாம்; உளவாளியின் கருத்தை எதைக் கொண்டு சந்திப்பது?

இந்தக் கருத்து இன்ன வர்க்கத்தின் கருத்து என்று கூறினாலே முத்திரை குத்தாதீர்கள் என்று அலறுகிறார்கள் அறிவாளிகள். உளவாளி எனும் முத்திரையை மறைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்களே இந்த அறிவாளிகள், இனி என்ன செய்வது? இனி "பேரறிஞர்' ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது? கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத்துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா? அல்லது ஒரு உளவாளியின் அவதூறுகள் என்ற முறையில் "மறுவாசிப்பு' செய்வதா?

""இடப்புறம் தர்க்கவியல் வலப்புறம் படிமங்கள், உணர்ச்சி எனப் பிரிந்தும், ஒன்றோடொன்று உள்ள உறவில் இணைந்தும் இயங்குகிறது மூளை'' என்கிறது நரம்பியல் ஆய்வு. தர்க்கத்துக்கும் உணர்ச்சிக்குமிடையிலான உறவை எழுத்தில் இனம் பிரித்துப் புரிந்துணரலாம். ரஸ்ஸலின் எழுத்துக்களில் அறிவுக்கும் உளவுக்கும் உள்ள உறவைப் பிரித்தறிவது எப்படி? கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு? அமைச்சருக்கு ஒரு நீதி, அறிவாளிக்கு ஒரு நீதியா?

"இன்டெலிஜென்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவு, உளவு என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டென்பது ஒரு குரூரமான நகைச்சுவை! இனி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது ""ஐயா ஃ அம்மணி! தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா?'' என்று நாம் கேட்டறிந்து கொள்ளலாம். இவ்வாறு கேட்பது பிற்காலத்தில் மறுவாசிப்பு செய்யும் வேலையை நாம் மிச்சப்படுத்திக் கொள்வதற்குத்தானே ஒழிய, அறிவாளிகளை இழிவுபடுத்துவதற்கல்ல.

பாலன்
(செப்டம்பர், 1999)

இதயத்தை ஈரமாக்குவது
இலக்கியமா? அரசியலா?


வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?

2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,

"".... அரசியல் புத்தகம் படிப்பதற்குத்தான் தோழர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனக்கென்னவோ அரசியலும் இலக்கியமும் இரண்டு தண்டவாளங்கள். ஒன்றுக்கொன்று இணையாகச் சென்றால்தான் நாம் நம்மை வறண்டு போகாமல் இருக்கச் செய்ய முடியும். துன்பப்படுகிற மக்களைப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என ஈரத்தோடு உள்ளே வருகிறவர்கள், எல்லாவற்றிற்கும் அறிவு ரீதியான விளக்கங்கள் அறிந்து கொண்ட பிறகு நெஞ்சில் இருந்த ஈரம் வற்றி விடுகின்றது. இந்த ஈரம் வற்றாமல் பாதுகாப்பது என்னைப் பொறுத்தவரையில் இலக்கியங்கள்தான்...'' என்று குறிப்பிட்டிருந்தார்.

புரட்சிகர அமைப்பிற்குள் புதிதாக வரும் தோழர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு, அறிவுரீதியான அரசியல் விளக்கத்தைத் தெரிந்து கொண்ட பிறகு மங்கி விடுகிறது; அப்படி மங்காமல் தங்குவதற்கு அரசியலுக்கு இணையாக இலக்கியமும் அவசியம் என்கிறார் இந்த வாசகர். அரசியலின் அறிவு, இலக்கியத்தின் உணர்வு இரண்டோடும் உறவு கொள்ளும் புதிய தோழர்களைப் பற்றிய இம்மதிப்பீடு தவறாக இருக்கின்றது. மேலும், அரசியல், மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் உருவாக்கியிருக்கும் பொது உளவியலும், அரசியல்வாதிகள் இரக்கமற்றவர்கள், இலக்கியவாதிகள் ஈரமிக்கவர்கள் என்பதையே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இத்தகைய இலக்கியவாதிகளைத்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆரத் தழுவி அங்கீகரிக்கின்றனர். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கென்றே த.மு.எ.ச. போன்ற அரட்டை மடங்களை நடத்துகின்றனர். இலக்கியத்தின் அற்பவாதிகளும், கம்யூனிசத்தின் போலிகளும் ஒருவரையொருவர் பற்றி நிற்பதில் முரண்பாடு ஏதுமில்லை.

ஆனால் புரட்சியை நேசிக்கும் புதிய தோழர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள ஒரு கம்யூனிஸ்டாக மாறுவது குறித்த ஆழ்ந்த பரிசீலனையைத்தான் முதலில் கற்க வேண்டும். வாழ்வில் முதன்முதலாக மார்க்சியத்தைக் கற்கும் இவர்கள் அறிவுரீதியாகப் பெறும் விளக்கம்தான் என்ன?

ஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் "ஈரத்தையும், உணர்வையும்' வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.

இதை எப்படிப் புரிந்து கொள்வது? உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா? வருந்துவார். உயிரின் அறிவுரீதியான விளக்கத்தைக் கற்றதனாலேயே அவர் வருந்தாமல் இருக்க மாட்டார். காரணம் அவரது மனைவியுடன் நெருக்கமான ஒரு வாழ்க்கை உறவு உள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தருமபுரியின் கூலி விவசாயி, எலிக்கறி சாப்பிடும் தஞ்சையின் கூலி விவசாயிகளைக் கேள்விப்பட்டாலே வருத்தப்படுவார். இவருக்கு அறிவு ரீதியான விளக்கமோ, இதயத்தைத் தொடும் இலக்கியமோ தேவைப்படுவதில்லை. காரணம் கூலி விவசாயியாகச் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு அந்தத் துயரத்தை எந்தப் பீடிகையுமில்லாமலேயே உணர்த்தி விடுகிறது.

இப்படிச் சமூகத்திலிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் கல்வியின்றியே, அறிவு விளக்கமின்றியே சக மனிதனை நேசிக்கும் உணர்வு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இதில் சுயநலம் சார்ந்த உறவு (குடும்பம், உறவினர்) பொருளாதார அடிப்படையிலிருப்பதால் நீடிக்கின்றது. அத்தகைய அடிப்படை ஏதுமற்ற பொதுநலம் சார்ந்த உணர்வு (இலக்கியம் மட்டும் படிப்பவர்களையும் உள்ளிட்டு) வெறும் அனுதாபம் என்ற அளவிலே விரைவில் நீர்த்தும் போகிறது. அரசியல் கல்வி நடைமுறையற்ற சகல பிரிவினருக்கும் இதைத் தவிர்த்த உணர்வு ஏதும் கிடையாது.

ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.

வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும்? கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.

அதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.

இப்படிச் சமூக வாழ்க்கையில் பழைய உணர்வுகள் நீர்த்துப் போய் புதிய உணர்வுகள் மலருகின்றன. கூடவே அரசியல் அரங்கிலும் புதிய கடமைகளுக்கேற்ற உணர்வுகள் பிறக்கின்றன. கம்யூனிசத்தை அறிவியல் ரீதியாகக் கற்பதன் மூலம் புரட்சி சமூக மாற்றம் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள் மறைகின்றன. ராபின்ஹ_ட் பாணியிலான சாகசம், புரட்சி என்பது ஒரு ரம்மியமான மாலை நேர விருந்து போன்ற "ரொமாண்டிக்' கற்பனைகள் விரைவிலேயே வெட்கத்துடன் விடை பெறுகின்றன. அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது. ஏழைகளைப் பார்த்து வெறுமனே இரக்கப்படும் பழைய உலகின் இலக்கியங்களும், திரைப்படங்களும் இனிமேலும் புதிய தோழர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தன்னுடைய இயலாமை அற்பவாதத்தையே தியாகமாக நினைக்கும் "அழகி'யின் சண்முகமோ, இந்து மதவெறியை மறைப்பதற்காகச் சோகங்கொள்ளும் "பம்பாயின்' காதலர்களோ, ஒரு மாபெரும் வரலாற்றுக் காலத்தைத் தன்னுடைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சாகேத ராமனின் (ஹேராம் திரைப்படம்) வேதனையோ நமது இதயத்திற்குள் இறங்குவதில்லை.

நம்மைத் தவிர முழு உலகமும் இத்தகைய காவியத் திரைப்படங்களின் கண்ணீரில் முழுகியபோது இந்த மிகையுணர்ச்சிக் கண்ணீரின் கிளிசரின் மோசடியை அகற்றிவிட்டு உண்மையான கண்களையும் கண்ணீரையும் நமக்கு உணர்த்தியது நாம் கற்றுக் கொண்ட கம்யூனிச அரசியல்தான்.

எனவே அரசியல் அறிவு உங்களின் பழைய உணர்ச்சிகளைக் காவு கொள்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; கூடவே புதிய உணர்ச்சிகளை உருவாக்க இடையறாது போராடுகிறது. புதிய தோழர்கள் பெறும் அறிவு விளக்கத்திற்கும், அது அழித்து உருவாக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான இயங்கியல் உறவு இப்படித்தான் இருக்கிறது. ஆதலால் அரசியல் அறிவு உணர்ச்சியை வற்ற வைப்பதில்லை; உண்மையான ஊற்றைத் தோண்டிச் சுரக்க வைக்கின்றது; கண்ணீர்க் குளமாக்குகிறது; இதுவரையிலும் அழாதவற்றுக்கும் அழவைக்கிறது.

ஆயினும் இந்த உண்மையான உணர்ச்சி அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டுவிடுவதில்லை. இதையே ""எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அறிவுரீதியாக அறிந்து கொண்ட பிறகு நெஞ்சிலிருந்த ஈரம் வற்றி விடுகின்றது'' என்று வாசகர் சாக்ரடீஸ் தவறாகக் குறிப்பிடுகிறார். நீக்கமற நிரவியிருக்கும் பிற்போக்கான வாழ்க்கை மதிப்பீடுகளிலிருந்து வரும் ஒரு நபர், ஒரு தோழராக மாறுவதில் பல்வேறு சிக்கல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.

முதலில் புதிய தோழர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவுரீதியான விளக்கங்களை அறிந்து கொள்வதில்லை; அது சாத்தியமுமில்லை. ""முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு'' எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல் செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சமூகத்தை ஆய்வு செய்து வினையாற்றுவதற்கு நம்மிடம் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த வாளே மார்க்சிய லெனினிய ஆய்வு முறையாகும்; ஆயினும் அந்த வாளைத் திறமையாகச் சுழற்றக் கற்றுக் கொள்வதில்தான் அதன் பலம் உறைந்திருக்கிறதே ஒழிய உறையில் போட்டு வைத்திருப்பதனால் அல்ல.

வெளிஉலகில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் அக உலகில் நாம் வரைந்து வைத்திருக்கும் புரட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினை, கேள்வி, ஆய்வு, போராட்டங்கள் ஒரு கம்யூனிஸ்ட கட்சி உயிர் வாழ்வதன் அடிப்படையாகும். இதிலிருந்து மாறுபடுகிறவர்களையே போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கிறோம். மேலும் கட்சியில் புதிதாக வரும் தோழர்களும் தங்களை இறுதி வரை கம்யூனிஸ்டாக வைத்திருப்பதன் பொருளும் மேற்கண்ட பிரச்சினையையும் போராட்டத்தையும் இறுதிவரை செய்வது என்பதே.

முக்கியமாக, இந்தப் போராட்டத்தில்தான் அவர்களது பழைய வர்க்கக் கழிவுகள் நீக்கப்பட்டு மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். அது "நானேதான்' என்று உறுதியான அகந்தையை அழிக்கிறது; சக தோழர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தை ஒழிக்கிறது; தனது தவறுகளைத் தானே கண்டுபிடித்து ஏற்கும் வீரத்தைக் கொடுக்கிறது; கற்றுக் கொள்வதில் பணிவையும், கற்றுக் கொடுப்பதில் பொறுமையையும் உருவாக்குகிறது; அடக்குமுறைக்குப் பணியாத கம்பீரத்தைத் தருகிறது; மக்களுடன் இரண்டறக் கலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.

இவையெல்லாம் ஓரிரு வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ கற்றுக் கொள்ளும் பாடமல்ல. சாகும் வரையிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய புரட்சியின் கடினமான பாடம். ஏனெனில் புரட்சியை நேசித்துக் கட்சியால் ஈர்க்கப்படும் தோழர்கள் உழைக்கும் மக்களையும் அப்படி ஈர்க்கின்ற வேலையே அவர்களது அரசியல் வேலையின் சாரமாக இருக்கின்றது.

கள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகளோ, அரசியல் அறியாமையிலிருக்கும் தொழிலாளிகளோ, கருத்தாதரவும் செயலின்மையும் ஒருங்கே கொண்ட நடுத்தர மக்களோ, புத்தம் புது மலர்களாக இருக்கும் மாணவர்களோ இத்தகைய மக்கட் பிரிவினரிடம் சென்று, ஒன்றி, வாழ்ந்து, கேட்டு, கற்று, இறுதியில் வென்று காட்டும் அந்த பாடம்தான் புதியவர்களைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் காட்டும். பழைய உலகின் உணர்ச்சிகள் சூழ வாழும் புதிய தோழர்கள் இந்தப் பாதையின் செங்குத்துச் சரிவில் களைப்படைவதும், சோர்வடைவதும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களிடமிருக்கும் உற்சாகமும், துடிப்பும், உணர்வும் இடையில் சற்று வறண்டு போவதன் காரணம் இதுதான். ஆயினும் இறுதியில் சிகரத்தின் உச்சியைத் தொடுவோம் என்பதால் இடையில் வரும் இந்தத் தடங்கல்களுக்கு அயர வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமது இதயம் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.

ஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா? இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.

ஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.


நன்றி - புதிய கலாச்சாரம்

Tuesday, March 21, 2006

தமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி!

தமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி!ஏகாதிபத்திய சேவையில் ஓரணி!

நன்றி புதிய ஐனநாயகம் மார்ச்

வமானம்! தமிழகம் மிகப்பெரும் அவமானத்தைச் சுமந்து நிற்கிறது. தனது""பணப்புழக்க'' ஆட்சியில், போராடிய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வந்த பாசிச ஜெயா, தேர்தல் நெருங்கிவிட்டதும் இப்போது சலுகைகளை வாரியிறைக்கிறார். கடன்சுமை தாளமுடியாமல் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, ""வைப்பாட்டி வைத்திருந்த விசயம் வெளியே தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக'' அவதூறை அள்ளி வீசிய அதே ஜெயா, இப்போது விவசாயிகள், நெசவாளர்கள், மாணவமாணவியர், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கோடிகளில் திட்டங்களை அறிவித்து இழுக்கப் பார்க்கிறார். அடுத்தகட்டமாக லாட்டரி, சாராயம், மணல் குவாரி, தனியார் பேருந்து முதலானவற்றைத் திறந்து விடுவதற்குக் காய்களை நகர்த்துகிறார்.

""தமிழர்கள் சூடு சொரணையற்ற நாய்கள். எட்டி உதைத்தாலும் எலும்பை வீசினால் வாலாட்டும் இழிபிறவிகள்'' என்று பார்ப்பனபாசிசத் திமிரோடும் கான்வெண்ட் கொழுப்போடும் தமிழக மக்களை மீண்டும் இச்சலுகை அறிவிப்புகள் மூலம் இழிவுபடுத்தி வருகிறது பாசிச ஜெயா கும்பல். ""எல்லோரையும் விட சர்வ வல்லமைமிக்க மக்கள் கூட்டணியைக் கட்டிக் கொண்டுள்ளதாக'' அறிவித்துக் கொண்டு, பண பலம்சாதிய பலம் கிரிமினல் பலத்துடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கக் கிளம்பியுள்ளது; ""அன்னபூரணி, எம்மைப் பாரு நீ!'' என்று டிஜிட்டல் பேனர்களை வைத்து, எடுபிடிகள் தமது விசுவாசத்துக்குக் கருணை காட்டுமாறு "அம்மா'வுக்கு வேண்டுகோள் விடுத்து, தேர்தல் திருவிழாவைச் சூடேற்றுகின்றனர்.

தமிழகத்தின் அவமானகரமான இந்தப் பாசிசப் பேயாட்சிக்கு எதிராகப் போராடாமல் ஐந்தாண்டு காலம் முடங்கிக் கிடந்த எதிர்க்கட்சிகள், மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டு தமது ஏழு கட்சி கூட்டணி பலத்தோடு தேர்தலைச் சந்திக்கக் கிளம்பியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் போலவே, இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிக் கனி பாலில் விழுந்து தம் வாயில் வந்து விழுந்து விடும் என்று தி.மு.க. தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி நம்புகிறது.

ஏழு கட்சி கூட்டணி தி.மு.க.வுக்கு பலம் என்றால், அதுவே அதன் பலவீனமாகவும் உள்ளது. கூட்டணியிலுள்ள கட்சிகள் அனைத்தும் அதிகப்படியான இடங்களைக் கேட்கின்றன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்பது, கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்பையும் நிறைவேற்றுவது எப்படி என்று புரியாமல் தடுமாறுகிறது தி.மு.க.

தொகுதிகளைக் கேட்பதில் தியாக உணர்வு தேவை என்று கூட்டணி கட்சிகளுக்கு உபதேசித்தார் கருணாநிதி. இதை ஏற்க மறுத்து, ""கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான்; நாங்கள் கூட்டணி சேரும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும்; எனவே, சட்டப் பேரவையில் கௌரவமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்'' என்று வைகோ பத்திரிகைகள் மூலமாகக் கோரிக்கை வைத்தார். அவருக்கு அடுத்தநிலையில் உள்ள ம.தி.மு.க. தலைவர்களோ, தி.மு.க.வை மறைமுகமாகச் சாடி மேடைகளில் பேசிவந்தனர். அதற்கு ஏற்றார்போல அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து, வெளிப்படையாகவே வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். இத்தனைக்கும் பிறகும் நடப்பது எதுவுமே தெரியாததைப் போல மவுனம் காத்தும், ஈரோட்டமாகவும் மதில் மேல் பூனையாகவும் நின்றார் வைகோ. கடந்த சில வாரங்களாக நடந்த இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்து, தாம் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதாக வைகோ இப்போது அறிவித்துள்ளார். இந்தக் கொள்கை மறவரின் சந்தர்ப்பவாதத்தையும் ஊசலாட்டத்தையும் மூடி மறைத்து இதையே போர்த் தந்திரம், வியூகம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது, அக்கட்சி.

கூட்டணி முடிவான போதிலும் தொகுதிப் பங்கீடுகள் இன்னும் முடிவாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால், ம.தி.மு.க. உள்ளிட்டு எந்தக் கட்சியும் எந்தப் பக்கமும் அணி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசியில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாறத் தொடங்கிவிட்டது. இதை நன்குணர்ந்த பாசிச ஜெயா, ""கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என் அனுபவத்தில் கூட்டணி கடைசி நேரத்தில்தான் முடிவாகிறது'' என்று பிழைப்புவாத பொறுக்கி அரசியலின் மகிமையைச் சந்தி சிரிக்க வைக்கிறார். "கொள்கையாவது, வெங்காயமாவது! எல்லாமே சூட்கேசில் அடக்கம்!' என்று பா.ம.க.வின் 3 எல்.எல்.ஏ.க்களை விலை பேசியும், திண்டிவனம் ராமமூர்த்தி கும்பலை வைத்து காங்கிரசை உடைத்தும் கொக்கரிக்கிறார் பாசிச ஜெயா. நடிகர் விஜயகாந்த் ஒரு கட்சியைத் தொடங்கி நடத்துமளவுக்கு தமிழகத்தின் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.

இப்பிழைப்புவாத பொறுக்கி அரசியல் லாவணியில் பாசிச ஜெயா சசிகலா கும்பல் அடித்த கொள்ளை, டான்சி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், தஞ்சை வறட்சி பட்டினிச் சாவுகள், நெசவாளர்கள் வாழ்விழந்து கஞ்சிக்குக் கையேந்தி நின்ற அவலம், காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை தொடர்ந்து மறுக்கப்படும் அநீதி, சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவுகள், வெள்ள நிவாரணப் படுகொலை என அனைத்தும் கடந்தகால நினைவுகளாக மாற்றப்பட்டு விட்டன.

பாசிசப் பெருச்சாளியைத் தப்பவிட்டு எலிப் புழுக்கைகளை அடித்தவன் கதையாக, தேர்தல் நெருங்கிவிட்டதால், டாஸ்மாக் கடைகளை ஆக்கிரமித்துள்ள மிடாஸ் கோல்டன் டிஸ்லரி என்ற சாராயக் கம்பெனி சசிகலாவுக்குச் சொந்தமானது என்றும், சிப்காட் நில விற்பனையில் ரூ. 200 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும் ஜெயா கும்பலுக்கு எதிராகக் குற்றம் சாட்டினார், கருணாநிதி. ஜெயாவின் கணக்குத் தணிக்கையாளர், மருத்துவர் வீடுகளில் மைய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதற்குப் பதிலடியாக, ஏகபோகமாகக் கொள்ளையடித்து வந்த கருணாநிதி குடும்பத்தின் சுமங்கலி கேபிள் விஷன் உள்ளிட்ட சில எம்.எஸ்.ஓ.க்களை தமிழக அரசு கையகப்படுத்தும் சட்டத்தை உடனே நிறைவேற்றினார், பாசிச ஜெயா. அவ்வளவுதான்! கருணாநிதி வாய்மூடிக் கொண்டார். ஜெயா அறிவித்த கேபிள் டி.வி. சட்டமும் செயல்வடிவம் பெறவில்லை. "நீ என்னைச் சீண்டாதே! நான் உன்னைச் சீண்டமாட்டேன்' என்று இருபெரும் கோடீசுவரர்களும் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். இந்த விவகாரம் மட்டுமின்றி, நாட்டை அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்க கொள்கைகளை விசுவாசமாக செயல்படுத்துவதிலும், மக்களை ஒடுக்குவதிலும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே எழுதப்படாத ஒப்பந்தம்தான் நிலவுகிறது.

விவசாயத்தையும் கைத்தறியையும் ஒழிப்பது முதல் ரேசன் கடைகளை மூடுவது வரை அனைத்துமே உலகவங்கியின் ஆணைகள். கல்விக் கட்டண உயர்வு முதல் பேருந்துக் கட்டண உயர்வு வரை எல்லாமே உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகள். வேலை நிறுத்தத் தடைச் சட்டம் முதல் பொடா சட்டம் வரை அனைத்துமே அமெரிக்காவின் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டளைப்படி போடப்படும் கருப்புச் சட்டங்கள்.

உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை, உலக வங்கியின் அதிகாரத்தை எந்த ஓட்டுக்கட்சியும் எதிர்ப்பதில்லை. நான் ஹ_ண்டாயை அழைத்து வந்தேன், நான் நோக்கியாவை இழுத்து வந்தேன் என்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சேவை செய்யும் இக்கட்சிகள் அனைத்தும் ஏகாதிபத்திய எடுபிடிகள்; உலக வர்த்தகக் கழகத்தின் கங்காணிகள்; உலக வங்கியின் அடிமைகள்.

எனவேதான், மைய அரசில் ஆளுங்கட்சியாகவும் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாகவும் உள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. இடதுவலது கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும், ஜெயலலிதாவை எதிர்க்கின்றனவே தவிர, ஜெயலலிதாவின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை எதிர்ப்பதில்லை. அதேபோல கருணாநிதியையும் காங்கிரசையும் எதிர்க்கும் ஜெயா, மைய அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளை எதிர்ப்பதில்லை. நெல்லையில் கொலைகார கோக்கின் கொள்ளைக்கு பாசிச ஜெயா அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளதை எதிர்த்து இக்கட்சிகள் வாய்திறக்காமல் நழுவிக் கொள்கிறதென்றால், சிறு வியாபாரிகளை ஒழித்துக்கட்ட சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தாராள அனுமதி அளித்துள்ள மைய அரசுக்கு எதிராக ஜெயா வாய் திறக்க மறுக்கிறார். ஏழு கட்சி கூட்டணி, மக்கள் கூட்டணி என்ற வார்த்தைகளுக்கு பின்னே மக்கள் விரோத மறுகாலனியாதிக்கக் கூட்டணி ஒன்றுதான் உள்ளது.

கல்வி இல்லை வேலை இல்லை மருத்துவம் இல்லை உணவு இல்லை; தண்ணீர் இல்லை வாழ்வு இல்லை. வாழ்விழந்த விவசாயிகளும் வேலையிழந்த தொழிலாளர்களும் பலகோடிப் பேராக உள்ள நிலையில் தமிழகத்தின் உயிராதாரமான இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி எந்த ஓட்டுக்கட்சியும் வாய் திறப்பதில்லை. விவசாயம் நசிந்து போனதற்கும், கைத்தறி விசைத்தறி சிறுதொழில்களின் சிதைவுக்கும், பஞ்சம் பிழைக்க மக்கள் ஊரை விட்டு ஓடும் அவலத்திற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன உறவு? மறுகாலனியாக்கத்துக்கும் விவசாயம் சிறுதொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு? இவையனைத்தும் ஓட்டுக் கட்சிகளாலும் செய்தி ஊடகங்களாலும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அரசியலற்ற அற்ப விவகாரங்களும் கிசுகிசுக்களும் வதந்திகளும் ஊகங்களுமே அரசியலாக ஊதிப் பெருக்கிக் காட்டப்படுகின்றன.

இதனால்தான், எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் ஆதரவு அலை வீசவில்லை; எதிர்ப்பு அலையுமில்லை. ஓட்டுக்கட்சிகளுக்கும் முன்நிறுத்திப் பேச முக்கிய விசயமும் இத்தேர்தலில் இல்லை. வென்றாலும் தோற்றாலும் இந்த ஓட்டுப் பொறுக்கிகள் எதையும் இழக்கப் போவதில்லை; எந்தக் கூட்டணி வென்றாலும் தமிழக மக்கள் எதையும் பெறப்போவதுமில்லை.

வசந்தன்

Monday, March 20, 2006

மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும்

மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும்

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு கழிவு.

கம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை.

""வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்...! விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்... என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் "முன்னேறி' விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய "முன்னேற்றம்' இல்லை.''

""மனிதனின் விதவிதமான தேவைகளை எல்லாம் நிறைவு செய்கின்ற, அங்கீகரிக்கின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சீன, ரசிய மக்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்களுக்குத் தெரியவரும்போது அங்கே சோசலிசம் தானே வீழ்ந்துவிடும்''
என்பதுதான் முதலாளித்துவ எழுத்தாளர்களின் முக்கியமான பிரச்சாரமாக இருந்தது.

இன்று சீனாவிலும் ரசியாவிலும் எங்கு திரும்பினாலும் பெப்சி, கோக், சோனி, மிட்சுபிஷி, ஃபோர்டு, டொயோடா ஆகியவற்றுடன் புதிதாகக் கஞ்சித் தொட்டிகள், நடைபாதை வாசிகள், வேலையில்லாதவர்கள், விலைமாதர்கள், கொள்ளைக்காரர்கள், மஃபியா கும்பல்கள் ஆகியவையும் அமெரிக்காவைப் போன்றே உருவாகிவிட்டன.

இந்தத் தற்காலிக வெற்றியின் காரணமாகவே முதலாளித்துவம் நியாயமானதாகிவிட முடியாது; ஒழுக்கமானதாகி விட முடியாது.

""உலக வாணிபம் அநேகமாக முழுமையாக உற்பத்தியின் தேவைகளைச் சுற்றித்தான் நடக்கிறதேயல்லாமல் தனிநபர் நுகர்வுக்குரிய தேவைகளைச் சுற்றியல்ல'' என்று "தேவை'கள் உருவாக்கப்படும் ரகசியத்தை உடைத்த மார்க்ஸ், நுகர்பவனுடைய மதிப்பீடு அவனது செல்வத்தையும், தேவையையும் சார்ந்திருக்கிறது என்றார்.

""சல்லாத்துணி வாங்குகிற வைப்பாட்டியும் சரி, (அதே அளவு காசில்) உருளைக்கிழங்கு வாங்குகிற தொழிலாளியும் சரி இருவரும் தத்தம் மதிப்பீட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களது மதிப்பீடுகளில் உள்ள வேறுபாட்டை அவர்கள் உலகத்தில் வகிக்கும் நிலைகளில் உள்ள வேறுபாடு விளக்குகிறது; இந்த நிலைகளும் சமுதாய அமைப்பின் விளைபொருளே ஆகும்'' (மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை)

""சல்லாத்துணியே முன்னேற்றத்தின் சின்னம்''
என்று கருதும் மேற்குலகைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் 1960களின் துவக்கத்தில் மாவோவின் சீனத்திற்கு சென்றார். ஆல்பர்டோ மொராவியா என்ற அந்த எழுத்தாளர் மார்க்சியவாதியோ கம்யூனிச ஆதரவாளரோ அல்ல. ""
சிவப்பு நூலும் சீனப் பெருஞ்சுவரும்'' என்ற அவரது நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறோம்.

சமுதாயப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியைத் தீர்மானிக்கும் பொதுவுடைமைச் சமூகம் ஒரு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊடாக அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கம்யூனிஸ்டு அரசியல் தேவை சுதந்திரம் இவற்றுக்கிடையிலான உறவு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் இவை அவரது முன்னுரையில் இல்லை.

ஆனால், மேற்குலக மேட்டுக் குடியின் வாழ்க்கையும் வசதிகளும்தான் முன்னேற்றத்தின் அளவுகோல் என்று கருதும் மாயையை இந்த முன்னுரை கிழித்தெறிகிறது. நுகர்வியம் எனும் பண்பாட்டின் விகாரமான முகத்தை அச்சுறுத்தும் விதத்தில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகம் புதிய சமூகத்தின் "தேவை' குறித்து நிச்சயமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டும்.

ஒரு உரையாடல் வடிவில் அமைந்துள்ளது இந்த முன்னுரை.




""ஆ: அப்போ சீனாவுக்குப் போயிருந்தீர்களோ?

அ: ஆமாம், சீனாவுக்குச் சென்றிருந்தேன்.

ஆ. சீனாவில் உங்களைப் பெரிதும் கவர்ந்த விஷயம் எது?

அ: வறுமை.

ஆ: என்னது, வறுமையா?

அ: ஆமாம், வறுமைதான்.

ஆ: சீனமக்கள் அவ்வளவு ஏழைகளோ?

அ: மேற்கத்திய நாடுகளின் அளவுகோலில் பார்த்தால், ரொம்பவும் ஏழைதான்.

ஆ: அந்த வறுமையைப் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது?

அ: ஒருவித நிம்மதி.

ஆ: நிம்மதியா? அடக்கடவுளே. எனக்குத் தெரிந்தவரை வறுமை, ஏழ்மை என்று சொன்னால் சீரழிவும், விரக்தியும் தான். அதெப்படி உங்களுக்கு மட்டும் நிம்மதியாக இருந்தது?

அ: ஆமாம், நிம்மதியாகத்தான் இருந்தது. நான் அப்படித்தான் உணர்ந்தேன். தனது சொந்த மன உணர்வுகளைக் கூட ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? சீனாவில் இருந்த வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அதெப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றி அப்போது நான் யோசிக்கவில்லை. இப்போது வேண்டுமானால் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

ஆ: மேற்கத்திய நாடுகளில் வறுமை நிம்மதி உணர்வைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, அடக்கப்படும் உணர்வையும் அதற்கு எதிராகக் கலக உணர்வையும்தான், தோற்றுவிக்கிறது. உதாரணத்திற்கு அமெரிக்க நீக்ரோக்களைப் பாருங்கள். கோபம் வந்தால் அவர்களின் சேரியையே எரித்து விடுவார்கள்.

அ: அய்யா, அமெரிக்காவிலே ஏழைகளும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கக் காரணம், பணக்காரர்கள். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கக் காரணம், ஏழைகள். ஆனால் சீனாவிலோ ஏழைகள் மட்டுமே இருக்கிறார்கள்.


ஆ: ஓ, சீனாவில் எல்லோருமே ஏழைகளா? அப்படி நான் யோசிக்கவில்லை.

அ: ஆமாம், சீனாவில் எல்லோருமே ஏழைகள்தான். அவர்களை ஏழைகள் என்று பெயரிட்டு அழைப்பது பொருத்தமாகவும் இல்லை. வேறு ஏதாவது தான் பெயரிட வேண்டும்.

ஆ: எடுத்துக்காட்டாக, ஏதாவது வார்த்தை சொல்லுங்களேன்.

அ: என்னால் உதாரணமெல்லாம் சொல்ல முடியவில்லை. பணக்காரனோடு ஒப்பிடாமல் ஒரு ஏழையை அவனது சொந்த நிலைமையை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதுவரை வார்த்தை எதுவும் உருவாகவில்லை.

ஆ: அப்படியானால் என்னதான் அந்த சீனத்து வறுமை?

அ: அது செல்வமில்லாத வறுமை, சரியாகச் சொன்னால், மனிதனின் இயல்பான நிலை அதுதான்.

ஆ: ஆக உங்களைப் பொறுத்தவரை பணக்காரனாக இருப்பது என்பது மனிதனின் இயல்பான நிலை அல்ல் அசாதாரணமான நிலைமை என்கிறீர்கள்.

அ: அசாதாரணமாக இருப்பதாலேயே அது மனிதத் தன்மை அற்றதாகவும் இருக்கிறது.

ஆ: மனிதத் தன்மையற்ற குணம் என்றால்... என்னதான் அது?

அ: தேவையற்றவைகளுக்கெல்லாம் அவசியத்தன்மையும், செயல்பாடும் கற்பிப்பதுதான் இந்த மனிதத் தன்மையற்ற குணம். புதிதாக ஒன்றை, தேவையில்லாத ஒரு பொருளைக் கண்டுபிடித்து, உருவாக்கி அதன் மூலம் பணக்காரனாகிவிட விரும்பும் ஒரு நபர் இருக்கிறான். ""நடக்கும் போதே இசை மீட்டும் செருப்பு'' என்று ஒரு பொருளை அவன் புதிதாக உருவாக்குகிறான். இதையே பெரும் அளவில் உற்பத்தி செய்து மக்களிடம் தள்ளிவிட விரும்புகிறான். இதற்கு அவன் என்ன செய்வான் சொல்லுங்கள்!

ஆ: தெரியவில்லை, விளம்பரம் செய்வான்.

அ: அதேதான். விளம்பரம் செய்வான்; கிராக்கியை உருவாக்குவான். அதாவது "இசை மீட்டும் செருப்பு' என்ற இந்தப் பொருள் விற்பனைக்கு வருவதற்கு முன்னால் இருந்தேயிராத ஒரு கிராக்கியைச் செயற்கையாக உருவாக்குவான். ""உனக்குத் தேவையில்லாத பொருளை நான் உனக்கு விற்கிறேன்'' என்று எந்த உற்பத்தியாளனுமே சொல்ல மாட்டான். ""நான் விற்கிற இந்தப் பொருள் இல்லாமல் நீங்கள் வாழவே முடியாது'' என்றுதான் எப்போதுமே சொல்வான்.

"தேவையற்ற' ஒரு பொருள் "தேவையாக' மாறுகிறதே, இந்த உருமாற்றம்தான் நுகர்பவன் என்பவனை உருவாக்குகிறது.


ஆ: நுகர்பவன் எங்குதான் இல்லை? சீனர்களையே எடுத்துக் கொள்வோமே, அங்கே ஒரு சோடி கால்சட்டை வாங்கும் சீனன் நுகர்பவன் இல்லையா?

அ: இல்லை. அவன் நுகர்பவன் அல்ல. தனக்குத் தேவையான உடையை மட்டுமே அவன் வாங்குகிறான். உடலை மறைக்க ஒரு உடை அணிபவன்தான் மனிதன் என்று ஒரு பொதுக் கருத்து அவனிடம் இருக்கிறதல்லவா, அந்த அளவுக்குத் தேவையான ஒரு உடை. ஆனால் நுகர்பவன் என்பவனோ ஒரு சாக்கடை.

ஆ: என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?

அ: நுகர்வோன் எனப்படுபவன் ஒரு சாக்கடை என்கிறேன். வாயும், குடலும், மலத்துவாரமும் மட்டுமே கொண்ட ஒரு உயிரினம் என்கிறேன். இத்தகைய உயிரினங்கள் வேறொன்றும் செய்வதில்லை; தின்னும், செரிக்கும், கழிக்கும்.

ஆ: அப்படிப் பார்த்தால் கால்சட்டை வாங்கும் சீன நுகர்வோனும் ஒரு சாக்கடைதானே?

அ: இல்லை. ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பொருளை நுகர்வதனால் மட்டுமே நுகர்வோனை நான் சாக்கடை என்று அழைக்கவில்லை; நுகர்வதுதான் தன்னுடைய பணி என்று சில உயிரினங்களைப் போல் அவனும் கருதுகிறான். அதனால்தான் அவன் சாக்கடை. ஆனால், பாவம் ஒரு சீனன் அப்படியில்லை. தான் அம்மணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே அவன் உடை அணிகிறான். சுருக்கமாகச் சொன்னால் நுகர்பவன் என்பவனோ எதை வேண்டுமானாலும் நுகரத் தயாராக இருக்கிறான் — ஒரு மண்புழுவைப் போல. அது தன் குடல் வழியாக எப்படிப்பட்ட மண்ணையும் அனுப்பத் தயாராக இருக்கிறது.

ஆ: சே, நுகர்பவன் புழுவைப் போன்றவன் என்றா சொல்கிறீர்கள்?

அ: சாக்கடைக் குழாய், புழு என்றெல்லாம் நான் சொல்வது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால், வேறுவிதமாகச் சொல்கிறேன். உற்பத்திக்கும் நுகர்தலுக்கும் இடையே விடுபட்ட ஓர் இணைப்பே நுகர்பவன். அது மனித இணைப்பு — இருந்தாலும் அது வெறும் இணைப்புதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதேபோல, நுகர்தலுக்கும் உற்பத்திக்கும் உள்ள இணைப்புதான் உற்பத்தியாளன். உற்பத்தியாளனும் நுகர்பவனும் ஒரே மண்புழுவின் முன் பகுதியும், பின்பகுதியுமாக அமைகிறார்கள்.

ஆ: உற்பத்தியாளனும், நுகர்பவனும் தவிர வேறு ஒன்றுமே இல்லையா? ஒரு மருத்துவன், ஒரு கலைஞன், ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி என்று சொல்ல எதுவுமேயில்லையா அவர்கள் வெறுமனே உற்பத்தியாளனும், நுகர்பவனும் மட்டும்தானா?

அ: "உற்பத்தி', "நுகர்தல்' என்ற சொற்கள் எல்லாவிதமான பொருள்களின் உற்பத்தியையும் அவற்றின் விற்பனையையும் சம்பந்தப்படுத்தியதுதான் — அது மிகமிக உன்னதமானதாக, அதி அற்புதமானதாக இருந்தாலும் சரி.

ஆ: அப்படியென்றால் மேற்கத்திய மனிதன், உற்பத்தி செய்வதையும், நுகர்தலையும் தவிர வேறெதையும் சிந்திக்காதவன் என்கிறீர்களோ?

அ: ஆமாம், அப்படித்தான்.

ஆ: அவன் தன்னைப் பற்றிக் கூடச் சிந்திப்பதில்லையோ?

அ: "தான்' என்று சொல்கிறீர்களே, அப்படி ஒன்று இல்லை. உற்பத்தி செய்யும் அல்லது நுகரும் வேலைகளில் மட்டும் அந்த "தான்' இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் அடிப்படையில் நுகர்தல் என்பதே நுகர்பவனின் தன்மையைத் தீர்மானிப்பதால், நவீன நாகரிகத்தின் முடிவே நுகர்தல் தான்; அதாவது — கழிவுதான்.

ஆ: அய்யோ, என்ன சொல்கிறீர்கள், கழிவா?

அ: ஆமாம், கழிவுதான். வேறுவிதமாகச் சொல்வதென்றால், செரிமானம் ஆனபிறகு உடலிலிருந்து வெளியேற்றப்படும் மலம். ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கு நுகர்கின்றான்; விதவிதமாக நுகர்கின்றான். நுகர்வோர் என அழைக்கப்படுவோரின் வாழ்க்கை லட்சியம் என்ன? நுகர்தல் தான். இந்த லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் அவன் போராடுகிறான்.

ஆனால் இதன் இறுதி விளைவு என்ன? கழிவு. நுகர்பொருள் நாகரீகம் என்பதே கழிவுக் கலாச்சாரம்தான். ஒரு நுகர்வோன் எவ்வளவு கழிவுகளை வெளியேற்றுகிறான் என்பதுதான் அவன் எவ்வளவு பொருட்களை நுகர்ந்தான் என்பதற்கான சிறந்த நிரூபணம்.


ஆ: சரி. அதை ஒரு உருவகம் என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேட்க நன்றாக இல்லை. கழிவு என்ற சொல்லை அதன் நேரடியான பொருளுக்கு மேல் விரித்து அனைத்துக்கும் பொருத்தமுடியுமா? இந்த உலகில் சாப்பிடுகிற பொருள் தவிர வேறு எத்தனையோ இருக்கிறதே.

அ: எது எதையெல்லாம் ஒருவன் நுகர்கிறானோ, அத்தனைக்கும் இது பொருந்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, தொழில்துறை உற்பத்திக்கு இது பொதுவில் பொருந்தும்.

ஆ: அது எப்படி?

அ: நவீன நகரங்களில் உற்பத்தியும், நுகர்வும், அதாவது, தொழில்துறை இடுபொருளும் ஆலைக் கழிவும் அருகருகே வைக்கப்படுகின்றன — நவீன வீடுகளில் சமையலறையும் கழிப்பறையும் அருகருகே வைக்கப்படுவது போல. நகரங்களின் மையத்தை விட்டு வெளியே செல்லுங்கள் — பெரிய ஆலைகள்... மிகப் பெரிய கூரைகள்... வரிசையாக உலைகள்... ஓயாது பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஆலைகளுக்கு வெகு அருகாமையிலேயே வெட்டவெளியில் அவற்றின் கழிவுகள், இரும்புச் சில்லுகள், துருவல்கள், இழைகள் கொட்டிக் கிடக்கின்றன. நகரம் உற்பத்திப் பொருளை நுகர்ந்துவிட்டது. சீரணித்து விட்டது. மீதத்தைக் கழிவாக வெளியே தள்ளியும் விட்டது.

ஆ: பெரிய நவீன நகரத்தில் வெறும் ஆலை உற்பத்தி மட்டுமா நடக்கிறது? எடுத்துக்காட்டாக — கலாச்சாரம் மற்றும் பல விசயமும் இருக்கிறதே?

அ: நிச்சயமாக, கலாச்சாரம் இருக்கிறது. புத்தகக்கடைகள், செய்திப் பத்திரிக்கை விற்பனை மையங்கள், திரைப்படங்கள், டிவி செட்டுகள், ரேடியோ, புத்தகங்களின் சுருக்கமான பதிப்புகள், படங்கள் நிறைந்த ஏடுகள், பாக்கெட் புத்தகங்கள், கலைக் களஞ்சியங்கள், தொகுப்புகள், மலிவுப் பதிப்புகள், மொழி பெயர்ப்புக்கள்... இருப்பினும் இந்தக் கலாச்சாரமும் ஆலைப் பொருள்களைப் போலத்தான் நுகரப்படுகின்றது. ஏராளமாக உட்கொள்ளப்பட்டு, சீரணிக்கப்பட்டு, வதவதவென்று கழித்தும் தள்ளப்படுகின்றது. எல்லாவற்றையும் அள்ளிக் கொள்கிற கலாச்சார நுகர்வோர் அதிலிருந்து எந்தச் சத்தையும் பெறுவதில்லை. அவற்றை விடாமல் நுகர்ந்தாலும், கலாச்சார ரீதியாகச் சொன்னால் நிரந்தரமாகச் சோகை பிடித்தவர்களாகவே இருக்கிறார்கள்.
கலாச்சார நுகர்வு எதையும் விளைவிப்பதில்லை; கலாச்சாரக் கழிவை மட்டுமே அது உற்பத்தி செய்கிறது வேறொன்றுமில்லை.

ஆ: சரி, உற்பத்தி செய்வது, நுகர்வது... இந்த இரு நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலுமா?

அ: தொழில்துறை நாகரீகம் என்பதே கழிவுத்தன்மை கொண்டதுதான் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதன் முடிவு கழிவுதான். தனது கழிவை வெளியேற்றும் ஒரு மனிதனின் நடவடிக்கையை நாம் என்னவென்று அழைக்கலாம்? தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச் சொல்லலாமா?

ஆ: இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அ: சரி. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். அதாவது மறுபடியும் நுகர்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். இங்கே ஆசுவாசம் என்பதே கழிவை வெளியேற்றும் நடவடிக்கைதான். இன்னொருபுறம் அதீதமாக உற்பத்தி செய்கின்ற, அதீதமாக நுகர்கின்ற மனிதனும் இருக்கிறான் — அவனுக்கு அஜீரணம் ஏற்படுகிறது. அதற்கோ நம்மிடம் பேதி மாத்திரை தயாராக இருக்கிறது — வேறு வார்த்தையில் சொன்னால் போர்.

இந்த உற்பத்தி நுகர்வு எனும் சுழலில் அவ்வப்போது ஏற்படுகின்ற மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு யுத்தம் தவிர்க்க முடியாததாகவும் தடுக்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது எனத் தோன்றுகிறது. அமைதிக் காலத்து நுகர்வோனின் பணியை யுத்த காலத்தில் சிப்பாய் மாற்றீடு செய்கிறான். சிப்பாயின் நுகர்வோ அதிதீவிரமாக இருக்கிறது. அதிவேகமானதாக, விதவிதமானதாக, பரந்ததாக இருக்கிறது. அமைதிக் காலத்தில் ஒரு ஆண்டில் நுகரப்படுவதைக் காட்டிலும் அதிகமாக யுத்த காலத்தில் ஒரே நாளில் நுகரப்படுகிறது.

ஏராளமான பொருட்களையும் செல்வத்தையும் நுகர்ந்த பின்னும் திருப்தியடையாத சிப்பாய் மனித உயிர்களை நுகரத் தொடங்குகிறான். முதலில் எதிரிகளின் உயிரை, பிறகு தன்னுடையதை.''


நன்றி ம.க.இ.க

குப்பண்ணன்
ஆகஸ்டு, 1999