தமிழ் அரங்கம்

Saturday, September 6, 2008

மோசடிக்காரன மன்மோகன் சிங் : இந்தியாவை அமெரிக்காவுக்கு விற்றது எப்படி?

இஸ்லாத்தில் மனுவாதிகள் : முஸ்லிம்களிடையே நிலவும் சாதி - தீண்டாமை குறித்து ஆய்வு


பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, ""குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்'' என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.

ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் ............ முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, September 5, 2008

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல... மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!

வாஷிங்டனிலிருந்து அதன் தலைவர் எங்கள் "நிலத்தை வாங்கப் போவதாகச்" சொல்லி அனுப்பியபோது எங்களை அவர் அதிகம் விலை கொடுத்து வாங்கிவிட நினைப்பதாகவே தோன்றியது. நிலங்களை வாங்கிய பிறகும் நமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுப்பதாகவும் அங்கே நாம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பினார் அவர்.

நமக்கு அவர் தந்தைபோல ஆகிவிடுவார்; நாம் அவருக்குக் குழந்தைகளாகி விடுவோம்; அதனாலேயே நம் நிலங்களை அவர் வாங்க அனுமதித்துக் கொள்வோமாம்.

ஆனால், அது அப்படி எளிதாக முடிகிற விசயமல்ல் காரணம் எங்களுக்கு எங்கள் நிலங்கள் புனிதமானவை.

அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடுகிற தூய்மையான தண்ணீர் வெறும் நீரல்ல, அவை எங்களது மூதாதையரின் ரத்தம்.

உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் அது முதலில் புனிதமானதென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அதேபோல உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நிலம் புனிதமானதென்பதை நீங்கள் கற்றுக் கொடுங்கள். படிகம் போன்ற ஏரிகளின் தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்கள் எங்களது மக்களின் வாழ்வில் நடந்த பலவிதமான சம்பவங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

ஓடுகின்ற நீரில் நீங்கள் கேட்கும் முணுமுணுப்பு எங்கள் பாட்டனின் குரல்.

வெள்ளைக்காரன் இருக்கிறானே அவனுக்கு எங்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது. எங்கள் நிலத்தின் எல்லாப் பகுதிகளுமே அவனைப் பொறுத்த அளவில் ஒன்றுதான். இரவிலே திருடன் போல உள்ளே நுழைந்து தான் ஆசைப்பட்ட பொருளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போவதுதான் அவன் பழக்கம்.

கல்லறையில் தந்தையைப் புதைப்பான் மறுகணம் மறந்து போவான் அவனுக்குக் கவலையில்லை. பிள்ளைகளிடமிருந்தே கூட நிலத்தைப் பறித்துக் கொள்வான் அவர்களின் ...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, September 4, 2008

பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்

ஆணாதிக்க அமைப்பு உருவாக்கிய வட்டத்துக்குள் இயங்க முனையும் பெண், அதில் இருந்து விடுபடுவதற்கு பதில், அதை தீவிரமான தனது கடமையாகவே வலிந்து தேர்ந்தெடுக்கின்றாள். சமூக மாற்றங்களை உட்கிரகிக்க மறுக்கும் போது ஏற்படும் வலி, சொந்த வாழ்வியலையே துன்பமாக்குகின்றது.

நிலப்பிரபுத்துவ பெண் கணவனுக்கு ஏற்ப கடமையை வரிந்து கொண்டு, அதில் மகிழ்ச்சியை காண முனைந்தாள். இதுதான் மகிழ்ச்சி என்று கற்பித்துக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக வாழ முனைந்தாள்.

 

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுபடாத, ஆனால் முதலாளித்துவ எல்லைக்குள் அங்குமிங்குமாக வாழ்கின்ற பெண், இரட்டை வாழ்க்கை முறையைக் கைக்கொள்கின்றாள். நிலப்பிரபுத்துவ ஆணின் குடும்ப அதிகாரத்தை கைவிட்டு விடும் ஆணின் மாற்றம், முதலாளித்துவ உறவுகளினால் உருவாகின்றது. பெண் பற்றி ஆணின் மதிப்பீட்டில் கூட மாற்றம் நிகழ்கின்றது. புதிய சமூக அமைப்புக்கு ஏற்ப, ஆணாதிக்கமாக திரிபடைகின்றது. இந்த வெற்றிடத்தில் நிலபிரபுத்துவ கடமையை தனது அதிகாரத்தின் கருவியாக கையில் எடுத்துக் கொள்ளும் பெண், முதலாளித்துவ ஜனநாயகத்தை குடும்பத்தில் மறுத்துவிடுகின்றாள். குடும்பத்தை மகிழ்ச்சியையே இப்படி சின்னாபின்னப்படுத்துகின்றாள்.

 

ஒருபுறம் ஜனநாயக தன்மையற்ற நிலபிரபுத்துவ வீட்டு அதிகாரம், மறுபுறும் வேலைச்சுமை. இப்படி இயங்குகின்ற பெண், வீட்டு வேலைகள் முதல் பெண்ணின் வெளி வேலை வரையுள்ள கடுமையான வாழ்க்கைச் சுமைகள், மறுபுறும் கையில் எடுக்கும் வீட்டு அதிகாரம் இப்படி தனது மகிழ்ச்சியையே தொலைத்த ஒரு நிலையில் தான், கடமைகள் பெண்ணால் செய்யப்படுகின்றது. இதனால் உண்மையில் கடினமான உழைப்பினால் ஆற்றப்படும் கடமைகள் ஏற்படுத்தும் பயனைக் கூட, அவள் அனுபவிக்க முடிவதில்லை. இதில் மகிழ்ச்சியை காண்பதற்குரிய சொந்த மனநிலையை அவள் கொண்டிருப்பதில்லை. மாறாக பெண்ணின் உணர்வு வகைப்பட்ட எதிர்வினை, பாரிய சொந்த எதிர்வினையைத் தருகின்றது. தனக்கானதும், தன்னைச் சுற்றி உள்ளவருக்குமான பெண்ணின் உடல் உழைப்பு உருவாக்கும் பயன், உணர்வியல் ரீதியாக பெண்ணை எதிர்நிலைக்கு மாற்றிவிடுவதே பல குடும்பத்தில் காணப்படும் பொது நிகழ்ச்சியாகும்;. மகிழ்ச்சியை அவளால் அனுபவிக்கவும், நுகரவும் முடியாத மனநிலைக்குள் சிக்கி, அவளாகவே மனநோயாளியாகின்றாள். செய்வதை மகிழ்ச்சியாக செய்துவிட்டால், அதன் பலன் வேறு.

 

கார்ல்மார்க்ஸ் கூறிய ஒரு வார்த்தை இங்கு எடுத்துக் காட்டுவது சாலப் பொருத்தமானது. மக்களுக்கான போராட்டம் தான் மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்றார். அப்போராட்டம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், மகிழ்ச்சி என்பது நாம் கொண்டுள்ள சமூக நோக்கில் உள்ளது. இங்கு வறுமை, சிறை, எல்லையற்ற எதிரிகள் அனைத்தையும் எதிர்கொள்வதில் கூட ஒரு மகிழ்ச்சி உண்டு. வாழ்க்கைப் போராட்டம் இப்படித்தான் அமைகின்றது.

 

குடும்பத்தின் கடமைகள் இந்த சமூக அமைப்பில் சுமையானவை தான். ஆணோ பெண்ணோ அதை சுமக்க வேண்டியுள்ளது. ஆணாதிக்க அமைப்பினால், பெண் பெரும்பகுதியை சுமக்கின்றாள். இதையே தமது வாழ்க்கையாக புரிந்து கொள்கின்றனர். இதையும் மகிழ்ச்சியாக மாற்றுவது என்பதே, வாழ்வு பற்றிய வாழ்க்கைக் கலையாகும். ஆனால் பலரால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிவதில்லை. நாம் சரியென்றுபட்ட ஒன்றை அல்லது வலிந்து திணிக்கும் வாழ்க்கைச் சுமையை, சதா கூறிப் புலம்புகின்ற வாழ்க்;கை, யாருக்கும் மகிழ்ச்சியை உருவாக்காது. சதா கண்ணீரையும், தனிமையையும், புலம்பலையும், சண்டையையும், பிழைபிடிப்பையும் உருவாக்குகின்றது. இப்படி சதா யாரையாவது திட்டித் தீர்க்கின்ற உறவே, பெரும்பாலான குடும்பத்தின் உறவாகிவிடுகின்றது. வயது போகப்போக இதுவே பாரிய உளவியல் சித்திரவதையாகின்றது. தன்னை மட்டுமல்ல, குடும்பத்தின் பிற உறுப்புகளையும் மகிழ்ச்சியற்ற நிலைக்குள் தரம் தாழ்த்திவிடுகின்றனர்.

 

இப்படி தவிர்க்க முடியாத வாழ்வின் அம்சங்களை சுமையாக கருதுகின்ற வாழ்க்கைமுறை உருவாகிவிடுகின்றது. அதை வேண்டாவெறுப்பாக செய்கின்ற போது, அதன் வெளிப்பாட்டில் எங்கும் மகிழ்ச்சி இருப்பதில்லை. வெறும் கடமையாகவும், அதுவே உணர்ச்சியற்ற சடங்காகவும் சீரழிகின்றது. அந்த உழைப்பில் மகிழ்ச்சியோ, மனநிறைவோ இருப்பதில்லை. உண்மையில் அநேகமான குடும்பங்களில் மகிழ்ச்சி சிதைந்து போகின்றது. இதுவே அவர்களுக்கு இடையிலான பாலியல் உறவிலும் கூட பிரதிபலிக்கும். சினிமா ரசனைக்குள் எமது சமூகம் மூழ்கிக் கிடப்பதற்கு, இதுவும் ஒரு அடிப்படைக் காரணமாகும்;. கனவுலகில் மட்டும், மகிழ்ச்சியாக இருக்க முனைகின்றனர். நிஜத்தில் அப்படி அவர்களால் இருக்க முடிவதில்லை.

 

பிள்ளைகளுக்கான கடமை, அவர்களை வழிகாட்டுவதை ஓட்டிய பெண்ணின் கடின உழைப்பு ஏற்படுத்தும் உணர்வுகள் கூட, மகிழ்ச்சியான மனநிலையான இயல்பான உணர்வில் செய்யப்படுவதில்லை. கடமைக்காக, தன் தலைவிதியாக எண்ணி, சம்பிரதாயபூர்வமாக இவ் உழைப்பு சடங்காக இயக்கப்படுகின்றது. இந்த எதிர்நிலை விளைவை, அவள்(ன்) உணர்வதில்லை.

 

இப்படியாக தனது சொந்த வாழ்வை பெண் அழித்துவிடுகின்றாள். உண்மையில் இந்த சுழற்சிக்குள் தான் பெண்ணாகிய அவள் தானாக வலிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றாள்;, என்பதைக் கூட அவள் உணர்வதில்லை. இந்த நிலையில் கடமையை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பதை கற்றுக்கொள்வதன் மூலம் தான், அவள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

 

உண்மையில் ஆண்களிடம் இருக்க கூடிய மகிழ்ச்சி பற்றிய புரிந்துணர்வு, இரட்டைக் கலாச்சார வாழ்க்கையை கொண்ட பெண்களிடம் இருப்பதில்லை. பெண்ணிடம் உயரிய தாய்மைப் பண்பு இருந்தும் கூட, மகிழ்ச்சி;யை பெண்களிடம் காண்பது என்பது அரிது. பெண்ணின் தாய்மைப் பண்பு, குழந்தைக்கு வழங்கும் பாதுகாப்பையும் அன்பையும் கூட, பெண் இன்று குழந்தைக்கு மறுப்பவளாகிவிட்டாள். பெண் உடல் என்பது தாய்மை சார்ந்தது. அதாவது இயற்கையாகவே சமூகத்தன்மை சார்ந்தது. அதைத் தான் இயற்கை தேர்வு செய்தது. ஆனால் இன்றைய பெண் உடலை வெறும் பாலியல் நுகர்வு சார்ந்த ஒன்றாக, அதை அழகுபடுத்தி காட்டும் உறுப்பாக கருதி வாழ்கின்ற எல்லைக்குள் சீரழிக்கப்பட்டுவிட்டாள்.

 

தாய்மை கொண்டுள்ள சமூக பண்பில் வெளிப்படும் மகிழ்ச்சியை தொலைத்து, சமூக பண்பை மறுக்கும் தனிமனித நுகர்வுக்குள் சிக்கிவிடுகின்றாள். இந்த மனநிலையில் மகிழ்ச்சியை தேடுவதே, இதன் முரண்நிலை. தனிமனித சுயநலத்தில் எப்படி மகிழ்ச்சி இருக்கமுடியும். அதில் இல்லாததொன்றை வலிந்து தேடுவதாகும்;. வெறும் பொருட்கள், அது சார்ந்த நுகர்வு, அந்த ரசனை மனித மகிழ்ச்சியை வலிந்து ஏற்படுத்தாது. ஆனால் அது ஏற்;படுத்தும் என்ற விளம்பரச் சந்தையின் வாலில் தொங்கும் பெண்ணின் கண்ணோட்டம், எப்படி மனித உணர்வுகளை மகிழ்ச்சியாக்கும்? உண்மையில் தமது சொந்த மகிழ்ச்சியை இனம் காணாது, அதை இழக்கின்றனர். பொருளே வாழ்க்கையாகிவிடும் போது, வாழ்வியல் துன்பத்தைத் தவிர, வேறு எதையும் படைப்பதில்லை. இதுவே பல குடு;ம்பங்களின் இன்றைய நிலை.

 

மனிதனின் சமூக உணர்வுக்கு அப்பால், அவள் வலிந்து பொருள் உலகில் வாழ முனைகின்றாள்;. அன்பும் பாசமும் என்பதை பொருள் சார்ந்த உறவுக்குள்ளாக சீரழித்;து, அதனூடாக மட்டுமே சமூக உறவினை தீர்மானிக்கின்றாள். பொருட்கள் சார்ந்த எல்லைக்குள், அதற்குள் அன்பையும் பாசத்தையும் கொட்டித் தேட முனைப்பு கொள்கின்றனர். மனித உறவு என்பது இயற்கை சார்ந்த ஒன்று என்பதும், அது பண்பு சார்ந்த ஒன்று என்பதையும், பெரும்பாலான பெண்கள் மறுத்துவிடுகின்றனர். தன்னைச் சுற்றி பொருள் சூனியத்தை உருவாக்கிக்கொண்டு, சமூக உறுப்புகள் மேல் வெறுப்பை கொட்டி தீர்க்கின்றாள்.

 

ஆண் பெற்ற சமூக அறிவு பெண்ணிடம் கிடையாது. அதாவது ஆணாதிக்க அமைப்பில் பெண் பெற்ற குறுகிய அறிவும், பெண்ணை இப்படியாக குறுக வைத்து வக்கிரப்படுத்துகின்றது. பெண் தொடர்ந்து பாலியல் பண்டமாக இருப்பதுடன், ஏன் அவள் அதன் காவியாக மாறுவதன் அடிப்படையிலேயே பெண்ணில் செயற்பாடுகள் அமைகின்றது. தனது அழகு கவர்ச்சி என்று தொடங்கி, பொருள் கவர்ச்சியில் சீரழிகின்றது. மனித உறவுகள் என்பது நுகர்வுப் பண்பாட்டின் இரக்கமற்ற தன்மையில் அல்லாடுகின்றது. குடும்பத்தில் பெண்ணின் மனநிலை என்பது, கலாச்சாரத்தின் நடுவில் தொங்கியபடி அங்குமிங்குமாக அந்தரத்தில் தொங்கி சீரழிகின்றது. இப்படி சதா திருப்தியற்ற ஒரு மனவுணர்வை அடைகின்றாள்.


பி.இரயாகரன்
01.07.2007

Wednesday, September 3, 2008

பெற்றோரின் இணக்கமற்ற முரண்பாடே, குழந்தையின் முரண்பாடாகின்றது.


பெற்றோருடனான குழந்தையின் முரண்பாடு என்பது, பெற்றோரின் முரண்பாட்டில் இருந்து உருவாகின்றது. குழந்தை தான் விரும்பியதை சாதிக்க நினைப்பது, முரண்பட்ட பெற்றோரின் முரண்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டது. கணவன் அல்லது மனைவியின் ஒன்றுபட்ட ஒரே முடிவை எடுக்க முடியாமையே, குழந்தைகளின் தவறான வழிகாட்டலுக்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும். குழந்தைகள் சொல்வழி கேட்காமை, தாம் விரும்பியதற்காக அடம்பிடித்தல், அதைப் பெறுதல் என எதுவாகவும் இருக்கட்டும், கணவன் மனைவிக்கு இடையிலான வேறுபட்ட முடிவின் அடிப்படையில் தான், குழந்தைகளால் அது சாதிக்கப்படுகின்றது. இது அறிவியல் பூர்வமானதல்ல என்பது மிக முக்கியமானது. இதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

குடும்பத்தினுள் உள்ள முரண்பாட்டையே குழந்தை பயன்படுத்துகின்றது. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஒரு குழந்தை இதைப் பயன்படுத்த முடியுமா எனின், ஆம் என்பதே உண்மை. ஒரு வயது குழந்தை கூட இதை பயன்படுத்துகின்றது. இதை நீங்கள் உங்கள் மொத்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிதானமாக அவதானமாக அணுகிப் பாருங்கள், அப்போது வெளிப்படையாகவே புரிந்து கொள்வீர்கள். கணவன் மறுக்கும் அல்லது மனைவி மறுக்கும் விடையத்தை, இதில் ஒருதரப்பு குழந்தைக்கு அதைப் பூர்த்தி செய்தால் என்ன நடக்கும்? விளைவு குழந்தையின் அதிகாரத்துக்குள் பெற்றோர் சென்றுவிடுகின்றனர். குழந்தை தான் விரும்பியதையே சாதிக்கும். குழந்தை பெற்றோரின் சொல்லைக் கேட்பதை மறுக்கின்ற பொதுவான நிலை உருவாகின்றது. ஆணும் பெண்ணும் தமது குழந்தை விடையத்தில், ஓரே விதமாக இணக்கமான ஒரே முடிவை எடுத்தல் அவசியமானது. இந்த சூழலில் தான் குழந்தை, பெற்றோரின் சொல்லைக் கேட்கும் இணக்கமான குழந்தையாக உருவாகும். சரி பிழையை விவாதிக்கும் இணக்கமான அறிவியல்பூர்வமான குடும்ப சூழல் உருவாகும். இது பொதுவாக இணக்கமாக நடப்பதில்லை. ஒரு பெண் தான் அடைய விரும்பியதை இணக்கமான வழிகளில் அடைவதில்லை. குறுக்கு வழியில்தான் அடைகின்றாள். குழந்தைகள் விடையத்தில் மட்டும் இது எப்படி சரியாக அமைந்துவிடும்.

இயல்பாகவே ஆணாதிக்க மேலாதிக்கம் பெற்றுள்ள சமூக உறவில், பெண் தனக்கு தேவையான ஒன்றை எப்படி சாதிக்க முனைகின்றாள். பெரும்பாலும் வன்முறை கொண்டது. தான் முன் கூட்டியே எடுத்த முடிவை, விவாதத்துக்கு இடமின்றி திணிக்கின்றாள். அது மொழி வன்முறை, அழுவது....... ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, September 2, 2008

கற்பு, கருத்துச் சுதந்திரம்: மாயையும் உண்மையும்

தீபாவளியோ, சுனாமியோ, சுதந்திர நாளோ, குடியரசு நாளோ, மகிழ்ச்சியோ, எழவோ எதுவாயினும் அவை பற்றிக் கருத்துக் கூறும் உரிமையும், வாய்ப்பும் பெற்றவர்கள் சினிமா உலகினர்தான். தமிழ் மக்களின் நேரம் சினிமா நேரம் என்றாகிவிட்ட நிலையில் கலவி பற்றி குஷ்பு கூறிய கருத்தும், பின்பு அதைக் கொம்பு சீவிவிட்ட சுகாசினியும், இவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் மொத்தத்தில் இந்த நாடகம் இந்தியா டுடே போட்ட பாதையில் பீடு நடை போட்டு வருகிறது.
கற்பின் ஆதரவும், கலவியின் எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகவும், சகிப்புத் தன்மையற்ற பாசிசச் சமூகமாக மாறுவதன் அடையாளமென்றும் ஓநாய் போல வருத்தப்படும் இந்தியா டுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் தமக்கு ஆதரவாக அமீர்கான், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா முதலான அகில இந்திய நட்சத்திரங்களைக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றனர் ..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, September 1, 2008

பதிவர் அனுராதாவின் மரணம் விழிப்புணர்வுக்கு முன் உதாரணம் அல்ல..!

"புற்றுநோய் வந்துள்ள மார்பகத்தைஅறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் -என்று பல டாக்டர்கள் வலியுறுத்திய போது,நான் உறுதியாக மறுத்துவிட்டேன்.அதற்கான காரணங்களைஏற்கனவே விவரமாகச் சொல்லியிருக்கிறேன்.அவையே எல்லோருக்கும் பொருந்தும் என்றுஎடுத்துக் கொள்ளக்கூடாது.ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும்.எனக்கு மார்பகம் அகற்றாமல் இருப்பதுதான் சரி என்று அப்போதுபட்டது."--------- அனுராதாவின் இந்த வரிகளையும் கவனத்தில் நிறுத்துவது நல்லது........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இணங்க வைக்கும் பாலியல் வன்முறையும், இணங்கிப் போன இலக்கியவாதிகளின் எதிர்வினையும்


பெண் அல்லது ஆண் இணங்கிப் போதல் என்ற வார்த்தையின் உள்ளடக்கம் என்ன? இங்கு இணங்க வைக்கப்படுவது கூட வன்முறை சார்ந்ததே. இணக்கம் என்பதும், இணங்க வைப்பதும் சமூக ரீதியானது. இங்கு மோசடிகள், நேர்மையினம், கபடம் என்று, மனித இனத்தில் மிக இழிந்த ஒரு பொறுக்கியின் தளத்தில் இவை இயங்குகின்றது. சந்தையில் பொருட்களை இணங்கி வாங்குவது போன்றது. இங்கு உண்மையில் இணக்கம் இருப்பதில்லை. அதேபோல் இணங்கி உறவு கொள்வது. உண்மையில் சேர்ந்து இணங்கி வாழ்பவர்களும், இந்த மாதிரியான பொறுக்கித்தனத்துக்கும் இடையில் மயிர் இடைவெளியே உள்ளதால், இலக்கியவாதிகளால் பொறுக்கித்தனம் நியாயப்படுத்தப்படுகின்றது. அர்விந் அப்பாத்துரை இணங்கி உறவு கொள்ள முயன்று தோற்றவர். இணங்க வைப்பதில் அவர் தொடர்ச்சியாக கையாண்ட வழியில் வெற்றி பெற்றதாக நம்பிய முயற்சியில் தோற்றபோதே, அதை தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள்.

இந்த இலக்கியவாதிகள் இணங்கிப் போகும் வடிவம் பற்றி பல கதைகள் எழுதியவர்கள் தான்;. இணங்க வைத்தல் என்பதில் பொறுக்கித்தனமான மோசடித்தனமே உண்டு. இதை தெளிவாக நாம் புரிந்துகொள்ள உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்;. புலிகள் தலைமை சுடு என்றால் சுட இணங்கிப் போகும் தன்மை, தற்கொலை போராளியாக இணங்கிப் போகும் தன்மை எவையும், சமூக நோக்கில் இருந்து பார்ப்பதில்லை. அந்த மனிதன் சுயமான வாழ்வியல் அறிவில்............ அரசியல் கூறுகள் எதுவும், கிழக்கு என்ற மேலாதிக்க கூச்சலின் பின் கிடையாது. .......... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, August 31, 2008

யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்


கிழக்கு மேலாதிக்கம் கையாளும் அரசியல் உத்தி, புலியை மட்டும் எதிரியாக சித்தரித்தபடி, பேரினவாதத்தின் வாலில் தொங்குவது தான். பேரினவாதம் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்திய, நடத்தி வருகின்ற கொடூரமான தொடாச்சியான அனைத்து இனவழிப்பு பக்கங்களை மூடிமறைப்பது தான், இவர்களின் உள்ளார்ந்தமான அரசியலாக உள்ளது. இவர்களின் கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத குறுகிய உணர்வுடன், மற்றயை பிரதேச மக்களை இழிவாடுவதன் மூலம், சொந்த பாசிச முகத்தை துணியைப் போட்டே மறைத்துக் கொள்ள முனைகின்றனர்.

தமிழ் மக்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்தப்படுவதை, சிங்கள பேரினவாதம் ஒடுக்கவே எப்போதும் விரும்புகின்றது. அதன் அடிப்படையில் தான், கிழக்கு மேலாதிக்கம் சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. இதன் எடுபிடிகள் தான் கருணா முதல் அனைத்து எடுபிடி பினாமிகளும்.

யாழ் மேலாதிக்கத்தின் சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, வடக்கு மக்களின் கூறுகளாக திரித்து இழிவாடுவது இதன் முக்கிய கூறாகும். இதன் மூலம் மக்களை பிளந்து விடுவதன் மூலம் தான், சிங்களப் பேரினவாதம் கிழக்கையும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாதொழிக்க முனைகின்றது. இந்த வகையில் தான் கிழக்கில் நடக்கின்ற அனைத்து அரசியல் கூத்துகளும் அரங்கேற்றப்படுகின்றது.

கிழக்கில் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று, யாழ் மேலாதிக்க அரசியல் சமூக பொருளாதார கூறுகளை ஒழித்துக்கட்ட முனையவில்லை. அதாவது யாழ் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றுபட்டு செயல்படும் அரசியல் கூறுகள் எதுவும், கிழக்கு என்ற மேலாதிக்க கூச்சலின் பின் கிடையாது.கிழக்கு மேலாதிக்கம் சிங்கள பேரினவாதத்தினதும் கோவணமாகவும் இருக்க விரும்புகின்றது.

கிழக்கு மேலாதிக்கம் கையாளும் அரசியல் உத்தி, புலியை மட்டும் எதிரியாக சித்தரித்தபடி, பேரினவாதத்தின் வாலில் தொங்குவது தான். பேரினவாதம் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்திய, நடத்தி வருகின்ற கொடூரமான தொடாச்சியான அனைத்து இனவழிப்பு பக்கங்களை மூடிமறைப்பது தான், இவர்களின் உள்ளார்ந்தமான அரசியலாக உள்ளது. இவர்களின் கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத குறுகிய உணர்வுடன், மற்றயை பிரதேச மக்களை இழிவாடுவதன் மூலம், சொந்த பாசிச முகத்தை துணியைப் போட்டே மறைத்துக் கொள்ள முனைகின்றனர்.

தமிழ் மக்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்தப்படுவதை, சிங்கள பேரினவாதம் ஒடுக்கவே எப்போதும் விரும்புகின்றது. அதன் அடிப்படையில் தான், கிழக்கு மேலாதிக்கம் சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. இதன் எடுபிடிகள் தான் கருணா முதல் அனைத்து எடுபிடி பினாமிகளும்.

யாழ் மேலாதிக்கத்தின் சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, வடக்கு மக்களின் கூறுகளாக திரித்து இழிவாடுவது இதன் முக்கிய கூறாகும். இதன் மூலம் மக்களை பிளந்து விடுவதன் மூலம் தான், சிங்களப் பேரினவாதம் கிழக்கையும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாதொழிக்க முனைகின்றது. இந்த வகையில் தான் கிழக்கில் நடக்கின்ற அனைத்து அரசியல் கூத்துகளும் அரங்கேற்றப்படுகின்றது.