தமிழ் அரங்கம்

Friday, October 2, 2009

மானுடராய் வாழ்தலிற்காய் இணைக

நந்திக்கரைவரை நம்மினத்தை
கூடவே குழிபறித்த கூட்டெல்லாம்
வெட்டிவிடு முள்வேலியை என்கிறது
மெல்லத்தடவி மகிந்தவை
வெல்லலாம் என ஏய்க்கிறது
செல்லக்கண்டிப்பாய்---ஜ.நா பலமுறை சென்று திரும்புகிறது
வல்லவனாய் எழாதிருத்தி
மனஉளைச்சல் கொடுக்கிறது
நல்கூட்டு உலக வல்லவர்கள்
சொல்லெல்லாம் மாயை
கல்லில் நார் உரிப்போமென்கிறது

Monday, September 28, 2009

அடக்குமுறை – வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பள்ளி மாணவர்கள்

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

பள்ளி நிர்வாகி ஜேம்ஸ் ஆபிரஹாம் தனது மகள்கள் மற்றும் மருமகன்களையே ஆசிரியர்களாக நியமித்துக்கொண்டு, வரைமுறையற்ற முறைகேடுகளையும் வன்கொடுமைகளையும் இழைத்து வந்திருக்கிறார்.

இக்கும்பலின் கொடுமைகளை காணச்சகிக்காது, மாவட்டகல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்த குற்றத்திற்காக லாமெக் என்ற ஆசிரியரை, பள்ளிமாணவர்களின் முன்னிலையிலேயே கொலைமிரட்டல் விடுத்துக் கன்னத்தில் அறைந்திருக்கிறார், ஜேம்ஸின் மகளான ஸ்டெல்லா மேரி. தமக்காக வாதாடிய ஆசிரியர் தம் கண் எதிரிலே அவமானப்படுத்தப்படுவதைக் கண்டுகொதித்த மாணவர்கள் உடனே, சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். மனுகொடுத்தும் மறியல் நடத்தியும் கூட நடவடிக்கை எதுவுமில்லை!

இந்நிலையில், இ...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Sunday, September 27, 2009

நீதியின் வறட்சியும் பாயும் நிதியும்


இது ஒன்றும் சொடுக்குப் போடும் கணத்தில் நடந்துவிடவில்லைதான். 2004தேர்தல் முடிந்தபோது துவரம் பருப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 34 தான். அதுவே, 2009 தேர்தலுக்கு முன் ரூபாய் 54. தேர்தலுக்குப் பின் அது, ரூபாய் 62 ஆகி, இப்போதோ ரூபாய் 90ஐயும் தாண்டி, மூன்றிலக்கத்தைத் தொட்டுவிடத் துடிக்கிறது.

மாண்டேக் சிங் அலுவாலியாவின் "கஷ்ட காலத்தைக்கடந்து கரையேறிவிட்டோம்'' என்ற சொல்லாடலும் ஜூலைமாதக் கூத்தில் கலந்திருந்தது (இவ்வாறு அவர் சொல்லிவைப்பது முதல்முறையல்ல; ஜூனிலும் இப்படித்தான்சொன்னார். ஏன், அதற்கு முன்பும் சொல்லியிருக்கலாம்). இதையெல்லாம் சொன்னவர், நமக்குக் கஷ்டகாலம் எப்போதிலிருந்து தொடங்கியது என்பதை உரைத்திடாததால், கரையேறித் தப்பித்ததை அறிந்து பாராட்ட நம்மால் இயலவில்லை.

"உள்ளபடியே,...
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்