தமிழ் அரங்கம்

Saturday, October 25, 2008

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனையா!? அப்படியாயின் அது என்ன? அதைப் புலிகள் தீர்ப்பார்களா? எப்படி?

இந்தக் கேள்விக்கு இன்றைய (புலித்) தேசியம் பதிலளிக்க முடியாது திணறுகின்றது. புலிகள் தமிழரை ஆளும் உரிமையைத்தான் தமிழர் பிரச்சனை என்று நம்புகின்ற அடிமுட்டாள் தனத்தில் இருந்து இராணுவ ரீதியான பேரினவாத செயலை நிறுத்துவது தான் தமிழரின் பிரச்சனை என்று கருதுகின்ற பொதுவறிவுக்குள் தான், தமிழரின் மேல் சிங்கள மேலாதிக்கம் நிறுவப்படுகின்றது.
புலிகள் அழிக்கப்பட்டால், அதாவது பேரினவாதம் வெற்றிபெற்றால் தமிழர் இரண்டாம் தரக் குடிகளாக அடிமைகளாகி இந்தப் பிரச்சனையே இல்லாது போகும். இது இரண்டு விதத்தில்.

1. தமிழரின் மந்தை அரசியல் நிலை காரணமாக, தமிழரின் பிரச்சினை இதுவாக உணரப்பட்டுள்ளது. இதனால் இதனுடன் இது முடிவுக்கு வந்துவிடும்.

சோல்சனிட்சின் : "அவலத்தில்" பிறந்த இலக்கிய அத்வானி

சோல்சனிட்சின் இறந்துவிட்டார். ஸ்டாலின் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு பனிப்போர் காலத்திய ரசிய வல்லரசு எதிர்ப்பு என்ற நோக்கங்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் கடை விரிக்கப்பட்ட சோல்சனிட்சின் தனது 89 வது வயதில் ரசியாவில் மரணமடைந்தார். அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களைப் பொருத்தவரை அவர்களுக்கு சோல்சனிட்சினின் உடனடிப் பயன்பாடு 80களின் இறுதியிலேயே முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது.

"கம்யூனிசத்தின் முடிவு' கைக்கு எட்டியபின், "அறம்' "ஆன்மீகம்' போன்ற மாயக்கவர்ச்சி கொண்ட சொற்களின் மூலம் கம்யூனிச எதிர்ப்புக்கு உணர்ச்சி வேகமூட்டிய சோல்சனிட்சின், உலக முதலாளி வர்க்கத்துக்குத் தேவைப்படவில்லை. அறமின்மையை நியாயப்படுத்தும் "சித்தாந்தங்களின் முடிவு' தான் இப்போது அவர்களுக்குத் தேவையாக இருந்தது. இந்தத் தேவையை நிறைவு செய்ய பின்நவீனத்துவம் அரங்கிற்கு வந்து விட்டது. இவ்வகையிலும் சோல்சனிட்சின் ஒப்பீட்டளவில் அவர்களுக்குக் காலாவதியாகி விட்டார்.

"சோசலிசம் என்பது கம்யூனிஸ்டு கட்சி அதிகாரவர்க்கத்தின் ஆட்சியே' என்று முத்திரை குத்தி, கம்யூனிசத்தை அவதூறு செய்வதற்கு முதலாளித்துவத்திற்குப் பயன்பட்ட சோல்சனிட்சின் என்ற அந்த ஆயுதம், இன்று அதே அதிகாரவர்க்க உளவுநிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான புடினின் திருக்கரத்தால் ஞானஸ்நானம் செய்து கொண்டு, புதிய ரசியாவின் புனிதச்சின்னமாகப் புத்துயிர்ப்பும் பெற்றிருக்கின்றது.

Friday, October 24, 2008

கஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு

கஞ்சித்தொட்டி எதற்கு உணவுக்கிடங்கையே நொருக்கு

தமிழ்த்தேசியமும் புலித்தேசியமும் ஒன்றுக்கொன்று முரணானது


இதில் ஒரு மயக்கமும், தத்துவக் குழப்பமும் காணப்படுகின்றது. புலித்தேசியமும், தமிழ் தேசியமும் ஒன்று என்றும், புலிப் பாசிசம் தமிழ் தேசியத்தக்காகத் தான் போராடுகின்றது என்றும் நம்புகின்ற, நம்ப வைக்கின்ற கூத்து அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்த பலரும், மாற்று அரசியல் பேசித் திரிந்த சிலரும், தமிழ் உணர்வு என்று இந்தியாவில் பிதற்றுவோரும், இப்படி அரசியலின் பின் கூத்தாடுகின்றனர்.

புலி முகமூடியை மூடிமறைத்தபடி பல புதிய இணையங்கள் முதல் தமிழ்வுணர்வு என்று கூத்தாடும் இந்தியப் புல்லுருவிகள் வரை இதில் அடங்கும். தமிழ்மக்கள் பற்றி எந்த அக்கறையுமற்றது, அவர்களின் சொந்த செயலுக்கு வழிகாட்ட மறுக்கும், தனிமனித வழிபாடு சார்ந்த குறுகிய பிதற்றல்கள்.

பொதுவாக அரசியல் ரீதியாக சமூகத்தைப் பார்க்கின்றவர்கள் பலர், இன்று புலிகளின் தோல்வி தமிழ் தேசியத்தின் தோல்வி என்று கூறுகின்ற மட்டமான அரசியல் நிலைக்குள் வீழ்ந்து புதுப் புலியாகின்றனர். புலிகளின் வெற்றியில் தான் தமிழ் இனத்துக்கு ஏதாவது கிடைக்கும் என்று கூறுகின்ற அளவுக்கு, இவர்களின் அரசியல் தரம் கெட்டுக்கிடக்கின்றது. பேரினவாதத்தின் வெற்றியால், தமிழ் மக்களுக்கு எதுவும் கிடையாது என்ற எதார்த்தம் சார்ந்த தர்க்கத்தை முன்னிறுத்துகின்றனர். இப்படி புலியை நியாயப்படுத்த, பேரினவாதத்தை துணைக்கு அழைக்கும் தர்க்கம். இதை ஆதரி அதை எதிர் என்ற எல்லைக்குள், மக்கள் தேசியத்தை மீண்டும் மீண்டும் தூக்கில் போடுகின்றனர்.

புலிகள் சரி, பேரினவாதம் சரி மக்களை எப்படி கையாளுகின்றது என்பதையிட்டு இவர்களுக்கு அக்கறை கிடையாது. இருசாராருமே தமிழ் மக்களை தமது சொந்த எதிரியாகவே கருதுகின்றனர். தமிழ்மக்களின் உரிமைகளை, தத்தம் நலனுக்கு எதிரானதாகவே கருதுகின்றனர். இதனால் தமிழ் மக்களை ஒடுக்குகின்றனர்...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா?

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. ஊடகங்களும் நீதிமன்றங்களை இப்படித்தான் பயபக்தியுடன் அணுகுகின்றன. யாராவது அப்படி தப்பித் தவறி பேசிவிட்டால் பிடித்தது சனி! உலகமறிந்த அருந்ததிராயையே ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்தார்களே!

ஆக, இவ்வளவு பாதுகாப்பு வசதிகளையும், புனிதத் திருவுருவங்களையும் கை வரப் பெற்றிருக்கும் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேட்கப் போகிறார்கள்? நீதித்துறையில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தப்பித் தவறி ஒரு சிலர் பிடிபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு வரலாறுதான்.

1990களில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றியவர் சௌமித்ரா சென். இவரை..........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, October 23, 2008

தமிழ் மக்களின் சொந்த தீர்வு எது

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக, பொதுவாக இரண்டு வழிகள் தமிழர் தரப்பில் வைக்கப்படுகின்றது. இவ்விரண்டும் மக்களின் சொந்த நிலைப்பாட்டுக்கே எதிரானவை. இப்படி

1.புலிகளால் புலித் தமிழீழம் வைக்கப்படுகின்றது.

2. புலியெதிர்ப்பு அணியால் புலியொழிப்பு வைக்கப்படுகின்றது.

இப்படி ஆதிக்கம் பெற்ற இந்த இரண்டு அரசியல் போக்கும், தத்தம் இந்த வழிகள் மூலமே, தமிழ் மக்களின் பிரச்சனையை தாம் தீர்க்க முடியும் என்கின்றனர்.

சரி தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்ன என்றால், அதை வரட்டுத்தனமாக ஒருமையில் திணிக்கின்றனர். அதை வெறும் பேரினவாதமாகவும், வெறும் புலியாகவும் காட்டுகின்றனர். இதற்கு அப்பால் சிந்திக்க, செயல்பட யாரையும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக அதன் அரசியல் சாரத்தை முன்வைக்க மறுப்பவர்கள். முன்வைக்க முனைபவர்களை ஒடுக்குவதே, இவர்களின் வர்க்க அரசியல் நிலையாகும். வலதுசாரிய அரசியலின் கடைந்தெடுத்த கேடுகெட்ட போக்கிரிகளே இந்தக் கோட்பாட்டின் பிரதிநிதிகள்.

இதனால் இதை சாதிப்பதில் பேதம்
எதுவுமற்.....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

ஓரிசா : பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடு! இந்து மதவெறியின் சோதனைச்சாலை!!

ஒரிசா, பார்காரா மாவட்டத்திலுள்ள பாதம்பூரில் தொழுநோயாளிகளுக்கான சேவை மையம் மற்றும் ஒரு அனாதை இல்லத்தையும் பாதிரியார் எட்வர்டு சீகொய்ரா நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு 25ஆம் தேதி அவரது மையத்தின் கதவு வேகமாகத் தட்டப்படுகிறது. யாரோ உதவி கேட்டு தட்டுகிறார்கள் என்று நினைத்த பாதிரியார் உடனே கதவைத் திறக்கிறார். வெளியே ஆயுதங்களுடன் இந்து மதவெறிக்கூச்சலோடு ஒரு கும்பல் உள்ளே நுழைகிறது.
சுமார் 45 நிமிடம் அந்தக் கும்பல் அவரை அடித்து நொறுக்குகிறது. தோளிலும், கையிலும் , மண்டையிலும் அடிபட்ட பாதிரியார் சுயநினைவற்று வீழ்கிறார். அவரை குளியலறையில் அடைத்த கும்பல், இல்லத்தில் இருக்கும் ரஜ்னி மஜ்கி எனும் 19 வயதுப் பெண்ணை உயிரோடு கொளுத்துகிறது. "ஃபாதர், என்னைக் கொளுத்துகிறார்கள்; எப்படியாவது காப்பாற்றுங்கள்'' என்று அந்தப் பெண் கத்துவது அரை நினைவோடு மயக்கத்திலிருக்கும் பாதிரியாரின் காதில் மெல்லக் கேட்கிறது. இறுதியில் அந்தப் பெண்ணைக் கொன்ற கும்பல் சேவை மையத்தை தீ வைத்துக் கொளுத்துகிறது. தற்போது உடலில் பல எலும்பு முறிவுகளுக்காக மும்பையில் சிகிச்சை பெறும் இந்தப் பாதிரியார், உதவி கேட்டு அந்த இளம் பெண் கதறியது தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும் என்று வருந்துகிறார்.

பெற்றோராலும், பின்னர் வளர்ப்பு பெற்றோராலும் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் தஞ்சம் புகுந்து இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட
....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, October 22, 2008

ஒப்பந்தங்களும் பேரினவாதிகளும்

எப்போதும் ஒப்பந்தங்களை கிழித்தலே, பேரினவாதிகளின் அரசியல். பேரினவாதமோ மீண்டும் மீண்டும் இப்படித்தான் கோலோச்சுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்தலே, பேரினவாத அரசியல். அதற்குள் வாழ்தலே சிறுபான்மையினரின் அரசியல். ஆயுதம் ஏந்தியவர்கள்
முதல் அரசுடன் கூட்டு முன்னணி அமைப்பவர்கள் வரை, இந்த பேரினவாத எல்லைக்குள் தான் தம்மையும் குறுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் எதையும், இவர்கள் யாரும் கண்டுகொள்வதே கிடையாது. மக்களின் துன்ப துயரங்களை உருவாக்குவதன் மூலம், தாம் வாழ்வதே அவர்களின் அரசியல் கொள்கையாகிவிட்டது.

இதற்குள்ளாகத் தான் யுத்தநிறுத்த ஒப்பந்தமும், அதை கிழித்தெறிவது வரையும் நடைபெற்றது. சிரான் ஒப்பந்தம், சுனாமி மீள்கட்டுமான ஒப்பந்தம் என பற்பல. எல்லாம் கிழிக்கப்பட்டது. இது ஒருபுறம். மறுபுறம் உருவாக்கிய ஒப்பந்தம் புதியதாக மனித துயரங்களை உருவாக்கியது என்றால், அதை கிழிப்பதும் மற்றொரு மனித துயரத்தை தொடங்குவது என்று அர்த்தம். மக்களின் நன்மைக்காக யாரும் கையெழுத்திடவில்லை, அது போல் கிழித்தெறிவதுமில்லை. எல்லாம் சுயநலம் கொண்ட கும்பல்களின் குறுகிய அற்பத்தனங்கள் தான் இவை.

எல்லா அரசியல் கட்சிகளும் இதற்குள் தான், தமது இலாப நட்ட கணக்குகளுடன் பினாற்றுகின்றனர். செய்து கொண்ட ஒப்பந்த்ததை கிழிப்பதால், உண்மையில் யார் இலாபம் அடைகின்றனர். பேரினவாதிகள், யுத்த வெறியர்கள், இதை ஆதரிக்கும் அரசியல் வாதிகள், யுத்தம் மூலம் சம்பாதிப்பவர்கள், அரசின் தயவில் இயங்கும் தமிழ் கூலிக் குழுக்கள் தான், யுத்தம் மூலம் நிறைவான இலாபத்தை அடைகின்றனர். தமிழ் சிங்கள மக்களோ, இதைக் கிழித்தெறிவதால் எந்த இலாபத்தையும் அடையப்போதில்லை. அவர்கள் யுத்தத்தின் சுமையிலான துயரங்களையும் துன்பத்தையும் இதன் மூலம் அடைவர்.
மக்களின்..... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பிஞ்சென்றும் பாராது இலாபவெறி

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ நிறுவனம். இந்திய மருத்துவத்தின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதையும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் இலட்சியமாகக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனம். இந்த நிறுவனம்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தரும் டாலருக்காக பிஞ்சுக் குழந்தைகள் மீது, புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகளை நடத்தி, இதுவரை 49 குழந்தைகளைக் கொன்றுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கேட்டிருந்த தகவல் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 4,142 குழந்தைகள் மீது, அதிலும் பெரும்பான்மையாக (2,728) ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீது இந்த நிறுவனம் சோதனைகளைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகளின் போது 49 குழந்தைகள் இறந்துள்ளன.

கடந்த 30 மாதங்களில் 42 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், வெளிநாடுகளில் தயாரான 5 மருந்துகள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டச் சோதனை செய்யப்பட்டுள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், இறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. ஆனால், புதிய மருந்துகளால் ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகள் பற்றியோ, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றியோ எவ்விதத் தகவலும் இல்லை. இது பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என்று எய்ம்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. அதாவது, மருத்துவச் சோதனைகளுக்கு....முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, October 21, 2008

வேஷம் கட்டியாடும் இந்தியப் புல்லுருவிகள்

ஈழத்தமிழ் மக்களின் துயரத்தின் பெயரால், இந்திய தமிழ் இனத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அற்ப அரசியல் தமிழ் உணர்வாக்கப்படுகின்றது. தமிழ் உணர்வு என்பது, பேரினவாதத்திற்கு இந்தியா உதவுவதற்குப் பதில் புலிக்கு உதவக் கோருவதாகிவிட்டது.

இதைப் போன்றுதான் ஈழத் துரோகக் குழுக்களும் இந்தியாவிடம் கோரின. அதாவது தமக்கு உதவும்படி. இப்படி இந்தியாவின் வளர்ப்பு நாயாக நக்கியவர்கள், இன்று இலங்கை அரசின் கால்களை நக்குகின்றனர். இவ்வாறு தேசியம், ஜனநாயகம் எல்லாம் இந்தியாவின் நலனுக்கு சேவை செய்வனவாகிவிட்டன. இதையே தான் தமிழ் உணர்வாளர்கள் மீண்டும் வாந்தி எடுக்கின்றனர். சரி இந்தியாவின் நலன்கள் என்ன? அதனிடம் இருப்பது என்ன மக்கள் நலனா? அதுவோ தென்னாசியாவின் பேட்டை ரவுடி. ரவுடி அரசியலைத் தவிர, அதனிடம் மக்கள் அரசியலா உண்டு!

இந்தியா தன் சொந்த மக்களை ஒடுக்கும் ஒரு அரசு. சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காக, குலைக்கும் அரசு. இலங்கையில் உள்ள இந்திய மூலதனத்தின் நலன்களைத் தாண்டி, அதன் அங்கம் அசையாது. எந்தத் தலையீடும் இதற்கு உட்பட்டது. சிங்கள பேரினவாதத்தை அது திருப்தி செய்வதன் மூலம்தான், இலங்கையில் இந்தியாவின் நலனையும் செல்வாக்கையும் நிலைநிறுத்த முடியும். இல்லாது போனால் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் கையில் சிக்கும். இது பொதுவான நிலை. சும்மா குலைப்பதால், இதை மீறி எதுவும் நடவாது. இந்தியக்
......முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

தேசத்துரோகியாகணும்னா பெப்சியைக் குடி

தேசத்துரோகியாகணும்னா பெப்சியைக் குடி – ம.க.இ.க

இந்தியத் தலையீட்டைக் கோரும் தேசியம்

இதைக் கோருவதுதான் புலித் தேசியம் என்றால், தமிழ்நாட்டு தமிழ் உணர்வும் இதற்குள் தரங்கெட்டு கிடக்கின்றது. ஒரு இனம் தனக்காக தான் போராடமுடியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளது. இயக்கங்கள் முதல் இந்தியா வரை, தமிழ்மக்கள் தமக்காக போராடுவதை திட்டமிட்டே தடுத்து நிறுத்தினர்.

இதன் முதிர்வில் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்மக்கள் போராடுவது, புலிக்கு எதிராக போராடுவதாக கூறி அவர்கள் மேல் புலிப்பாசிசம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இப்படி ஒரு இனத்தின் மேல் அவலத்தை விதைத்தவர்கள், இன்று அதில் குளிர் காய்கின்றனர். ஒரு இனத்தை எந்தளவுக்கு இழிவுபடுத்தமுடியுமோ, அந்தளவுக்கு மீண்டும் மீண்டும் அதைச் செய்கின்றனர். சமகால அரசியல் நிகழ்ச்சிகள், 1983, 1987 களில் இந்தியா தலையிட்டது போல் மீண்டும் அழைப்பு விடுக்கின்றது. 1987 இல் எப்படி இந்தியத் தலையீடு கோரப்பட்டதோ, அதே போன்று ஒரு நிலைமை உருவாக்கப்படுகின்றது.

பேரினவாதம் தமிழ்மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள இராணுவ வெறிச்செயல், மனித துயரத்தையே ஆறாக பெருக்கெடுக்க வைக்கின்றது. இதை தடுத்து நிறுத்த, இந்தியத் தலையீட்டை முன்வைக்கின்றனர். இதுபோல் 1987 இல் தலையீடு நிகழ்ந்த போது என்ன நடந்தது!?

பல ஆயிரம் தமிழ்மக்களை கொன்ற இந்திய இராணுவம், இலட்சக்கணக்கான மக்களை அகதியாக்கியது. பல நூறு பெண்களின் கற்பையே சூறையாடிவர்கள், பொருளாதாரத்தை சுடுகாடாக்கினர். இதைத்தவிர எதையும், இந்திய ஆக்கிரமிப்பாளன் தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை. அன்று தம்முடன் சேர்ந்து நின்ற கூலிக்குழுவான ஈ.என்.டி.எல்.எப், வை இன்றும், இந்தியா பராமரித்து வருகின்றது.

பேரினவாதத்துக்கு
இணையா.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

சுப்ரமணியபுரம்: ரசிக்கத்தக்க ரவுடித்தனம்?


இந்தப் படத்தில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் உணர்ச்சி எது? ஒரு நண்பர் குழாமின் உயிர்த்துடிப்பான உற்சாகமும் நட்பின் அடிப்படையில் அவர்களிடையே நிலவும் விசுவாசமும்தான் அந்த உணர்ச்சி. அழகர், பரமன், காசி, டுமுக்கான், மற்றொருவன் என ஐவரடங்கிய அந்தக் குழாமின் சேட்டைகள், காதல், பிரச்சினைகள், பிரிவு, மறைவு, அனைத்தையும் பார்வையாளர்கள் அவற்றில் தோய்ந்து ரசிக்கின்றார்கள். எல்லோரிடமும் மலரும் நினைவுகளாய்ப் புதைந்திருக்கும் நண்பர் குழாமின் நினைவுகளை இந்தப் படம் மீட்டுத் தருகின்றது. ஒவ்வொரு நண்பர் குழாமிலும் அப்பாவுக்குத் தெரிந்தே தம் அடிக்கும் வீரர்கள், அப்பாவுக்கு பயந்து ஒளியும் கோழைகள், காதலிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள், அதற்காக அலைபவர்கள், காசை ஒளித்து செலவு செய்யும் காரியவாதிகள், மறைக்காமல் செலவு செய்யும் வள்ளல்கள், தோற்றப்பொலிவு இல்லாததைத் தனது நகைச்சுவை மூலம் ஈடு செய்யும் குழுவின் ஜோக்கர்கள் எனப் பலரகம் உண்டு. பாசம், காதல் மட்டுமல்ல, நண்பர் குழாம் சென்டிமென்டைக் கிளறினாலும் காசு எடுக்கலாம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கின்றது. *

Monday, October 20, 2008

கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும்

இசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்

தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா?

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

பேரினவாதம் குண்டை வீசும் போதும் சரி, ஒரு பிரதேசம் மீதான தாக்குதலை நடத்தும் போதும் சரி, மக்கள் கூட்டத்தை வெளியேற்றும் போதும் சரி, ஏன் இன்று நடக்கும் கொழும்புக் கைதுகள் கூட, தமிழன் மீதான அடையாளம் மீது தான் மீள மீள பேரினவாதத்தை நிறுவிக்காட்டுகின்றன.

இந்த அரசு என்பது சிங்களப் பேரினவாத பாசிச ஆட்சி தான். இதையே அவர்கள் உறுதிசெய்கின்றனர். தமிழ் மக்களுக்கு இந்த அரசால் மீட்சி கிடையாது என்பதையே, வரலாறு தொடர்ச்சியாக நிறுவிக் காட்டுகின்றது.

எப்படித்தான் தமிழ் மக்கள் மீட்சி பெறுவது? தமிழ் மக்கள் சொந்தமாய் மூச்சுக் கூட விட முடியாத வகையில், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தாமே தாம்......

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.
···
அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, October 19, 2008

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1

சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்

சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.

வாய்பேசவே முடியாத அசாதாரணமான ஒரு நிலையில், மக்கள் தேசியத்தின் பெயரில் வாழவைக்கப்படுகின்றனர். மக்கள் தமது சொந்தக் கருத்தை ஊமையாக வெளிப்படுத்தும் விதத்தின் மூலம், இதன் மீதான தமது ஆழ்ந்த வெறுப்பைப் பிரதிபலிக்கின்றனர். தேசியத்தின் பெயரிலான யுத்தம் இப்படி என்றால், தேசியத்தின் பெயரிலான அமைதியும் கூட மக்களுக்கு எதிராகவே உள்ளது. மக்கள் புலித் தேசியத்தின் பெயரில் வாழவழியின்றி, தேசியத்தின் பெயரில் வாழ்வை இழந்து நிற்கின்றனர். சொந்தக் குழந்தையை, குடும்ப உறுப்பினரை, உறவினரை, ஏன் சமூகத்தின் கூட்டைக் கூட இழந்து விட்டனர். இதன் மேல் எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாத நிலையில் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். சொல்பவன் மேலும் இழப்பை தாங்கிக் கொள்ள வேண்டிய துயரமே, எமது புலித் தேசியமாகிவிட்டது.

இது மட்டுமா இல்லையே, உழைப்பை, சொத்துக்களை, சுற்றுச் சூழலை, சிந்தனை ஆற்றலை, ஏன் சமூகத்தின் ஆற்றல்மிக்க பரஸ்பர இயங்கியல் உறவை எல்லாம் தமிழன் இழந்துவிட்டான். இதையே தேசியம் என்கின்றனர். இதையே தமிழ் தேசிய வெற்றி என்கின்றனர். பிரபாகரனும். சுற்றி வாழ்பவர்களின் வாழ்க்கையையும் தான் தேசியம் என்றும், தேசிய வெற்றியும் என்கின்றனர். இந்த சிறு கும்பல் இத........... முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

பிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்.. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.

· தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.