தமிழ் அரங்கம்

Saturday, January 19, 2008

லுங்கி ( நாடகம் ) !!!

லுங்கி (நாடகம்)

Friday, January 18, 2008

சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது!!!

லங்கையில் ஒரு சிங்கள பேரினவாத இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மத்தியில் கூட, இந்த விடையம் உணரப்படவில்லை. அந்தளவுக்கு புலிப் பாசிசம் எதிர்முகம் காட்டி நிற்கின்றது. இந்த சிங்கள பேரினவாத பாசிச சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்த, புலிப்பாசிசமே தடையாகி நிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதற்கு, புலிப்பாசிசம் தடையாக நிற்கின்றது. புலிகள் தமிழ்மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மறுக்கும் வரை, இந்த ஒற்றுமை என்பது எப்படி சாத்தியமற்றதோ, அந்தளவுக்கு தமக்கான சொந்த எதிரிகளையும் அன்றாடம் புதிதாக உற்பத்தி செய்கின்றனர். சிங்கள இனவாத பாசிச இராணுவ சர்வாதிகாரம் தமிழ் மக்களுக்கு மறுக்கின்ற அடிப்படை உரிமை மீறல்கள் மீதான எதிர்வினை என்பது, உள்ளடகத்தில் எதுவுமற்றதாகி விடுகின்றது.

நிலைமை ஒன்றை மீறி ஒன்று பரஸ்பரம் சமனிலைப்படுத்தப்படுகின்றது. அவை இனம் காணமுடியாத சூக்குமத்தில், அரசியலற்ற வெற்றுத் தளத்தில் சர்வசாதாரணமான நிகழ்வாக ஜீரணிக்கப்படுகின்றது.

பேரினவாத சிங்கள இராணுவ இயந்திரம், சர்வாதிகார பாசிச வழிகளில், சில இரகசிய நபர்களின் வக்கிரங்களுக்கு ஏற்ப பூரணமாக இயக்கப்படுகின்றது.

1. பெருமளவில் வகை தொகையின்றி தெரிவு செய்யப்பட்ட நபர்கள் இன்று கொல்லப்படுகின்றனர்.

2. பலர் அன்றாடம் காணமல் போகின்றனர்.

3. பெருமளவிலான கப்பமும், அதற்கான கடத்தலும் அன்றாட விடையமாகிவிட்டது.

4. தமிழர் என்ற அடையாளம், அவர்களை குற்றவாளி சமூகமாக்க போதுமான காரணமாகிவிட்டது. அந்த வகையில் பல செயல்பாடுகள் செய்யப்படுகின்து.

5. தமிழ் மக்களின் உரிமையைப் பற்றி பேசியபடி, அதன் கழுத்தை அறுத்துப் போடுகின்றனர். தமிழரின் உரிமைக்கான அனைத்து சமூகக் கூறையும் அழிப்பது இன்று விரிவாகிச் செல்லுகின்றது.

உண்மையில் தமிழ் மக்களின் தாலியறுக்கப்படுகின்றது. தமிழர்கள் விதைவைக் கோலம் பூண்டு, வெள்ளைச் சீலை அணிந்து நாதியற்று செயலற்று கிடக்கின்றனர். வாழ்விப்போர், வழிகாட்டுவோர் யாரும் கிடையாது. சொந்த மக்கள் தமக்காக, தாம் போராடும் உரிமையை, புலிகளிடமே இழந்து நிற்கின்றனர். இதை மீறினால் புலிப்பாசிட்டுகள் அவர்களை துரோகி என்கின்றனர். அதற்காகவே அவர்களை கொன்று போடுகின்றனர்.

இன்று தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப்பற்றி யாருக்கும் எந்த அரசியல் அக்கறையும் கிடையாது. புலி, அரசு இதைச் சுற்றியே இயங்கும் வௌ;வேறு பிரிவுகளின் பின்னால், பிழைப்புக்காக நக்குகின்ற கூட்டம் தான் அனைத்துமாகிவிட்டது. தமிழ் மக்களின் அன்றாட வாழ்வு, இருப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது. அச்சம், பீதி, மன உளைச்சல் இதைத் தவிர, தமிழ் மக்கள் வேறு எதையும் தமது வாழ்வாகப் பெறவில்லை. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைக்காக, அதை மறுப்பவர்களுக்கு எதிராக போராடாத வரை, இதுவே தமிழ் மக்களின் தலைவிதியும் கூட. இதற்கு வெளியில் தமிழ் மக்களின் உரிமையை பெற, வேறு எந்த மாற்று உண்மையும் கிடையாது.

பி.இரயாகரன்
08.06.2007


ராமனுக்கு 

ராமனுக்கு

Thursday, January 17, 2008

அரசு சாராத அமைப்புகள் யுத்தத்துக்கு துணைபோகும் கிரிமினல்களே !!!

ரசுசாராத அமைப்புக்கள் எப்படிப்பட்ட யுத்த கிரிமினல்கள் என்பதற்கு, இலங்கை யுத்தம் சிறப்பான எடுத்துக்காட்டாகி வருகின்றது. மனித விரோத யுத்தத்தை நடத்துபவன் மட்டுமல்ல, அதற்கு துணையாக அதன் பின்னணி தளத்தில் செயற்படுபவனும் குற்றவாளி தான்.

புலியொழிப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக பேரினவாதம் தமிழ் மக்கள் மீதே யுத்தம் செய்கின்றது. இந்த யுத்தத்தின் பின்னணியில், தன்னார்வக் குழுக்கள் யுத்தத்துக்கு துணையாக செயலாற்றுகின்றன.

யுத்தம் செய்பவன் இழைக்கின்ற மனிதக் குற்றத்தை மூடிமறைக்கின்ற, அதை சாந்தப் படுத்துகின்ற நடவடிக்கைகள் தான், தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள். இது தான் அவர்களின் அரசியல் நோக்கம். இதன் மூலம் யுத்தத்தை மேலும் நடத்தவும், யுத்தம் நடத்துபவன் மக்களிடம் அம்பலமாகாது இருக்கவும், யுத்தப் பின்னணியை கழுவித் துடைக்கின்ற வேலையை இந்த அரசு சாராத தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன. யுத்தத்தின் விளைவை எதிர்கொள்ளும் மக்கள் கூட்டமும், அதைச் சுற்றியுள்ள மக்களும், இதை சுயமாக எதிர்கொள்ளும் ஆற்றலை நலமடிப்பதன் மூலம், ஒரு சமூகத்தின் சுய இருப்பை நலமடிப்பதே இதுவாகும்.

மனித துயரங்களையும், அவலங்களையும் போக்குதல் என்ற பெயரில், யுத்தத்துக்கு கைகொடுத்து உதவுகின்ற பணியைத்தான், இலங்கையில் அரசுசாராத நிறுவனங்கள் வெளிப்படையாகவே செய்கின்றன. பேரினவாத அரசு இயந்திரம் இராணுவ சர்வாதிகாரமாகி, அது நடத்துகின்ற இன அழித்தொழிப்பு, இன்று அனைத்து தரப்பாலும் என்றுமில்லாத வகையில் ஊக்கப்படுத்தப்படுகின்றது. இதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் இந்த தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன.

யுத்தத்தில் சம்மந்தப்பட்டவர்கள், யுத்தம் ஏற்படுத்தும் மனித அவலத்தை போக்க வேண்டிய உறுப்புகள் அல்ல என்பதே, தன்னார்வக் குழுக்களுக்கு பணம் வழங்கும் எகாதிபத்திய அரசியல் நோக்கமாகும். நிவாரணத்தை வழங்கும் தேவையில் இருந்து, அந்த பொறுப்பில் இருந்து, யுத்தம் செய்பவனை விடுவிப்பதன் மூலம், யுத்தத்தின் பின்னணி ஊக்குவிக்கப்படுகின்றது. உலகமயமாதல் அரசு இயந்திரம் என்பது, ஏகாதிபத்திய நலனை பாதுகாக்கும் ஒரு பொலிஸ் நிறுவனம் தான் என்பதை, இலங்கையின் யுத்த பின்னணி எடுப்பாக உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றது.

பேரினவாத சிங்கள இராணுவம் புலிகள் ஒழிப்பு என்ற பெயரில், தமிழ் மக்களை இராணுவ ரீதியாகவே ஒடுக்குகின்றது. இதற்கு துணையாக இதன் பின்தளத்தில், தன்னார்வக் குழுக்களின் கிரிமினல் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

தமிழ் மக்களை புலிகளின் உருவாக்கத்துக்கு முன்னமே, ஒரு இனம் என்ற ரீதியில் ஒடுக்கியவர்கள் இதே சிங்கள பேரினவாதிகள் தான். காலகாலமாக நடத்திய அதே ஒடுக்குமுறையைத் தான், இன்று புலிகளின் பெயரில் அவர்கள் மறுபடியும் தொடருகின்றனர்.

சமாதானத்தின் பெயரில் ஒப்பந்தங்கள், இனப்பிரச்சனைக்கு தீர்வை காணுதல் என்ற பெயரில் வகைவகையான குழுக்கள், கூட்டங்கள், உரைகளை நடத்துகின்ற பேரினவாத அரசு இயந்திரத்தின் நோக்கம், தமிழ் மக்களை அழிப்பதை இதன் மூலம் மூடிமறைப்பது தான். அப்படிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம் தான், தன்னார்வக் குழுக்களின் மனிதாபிமான செயல்பாடுகள்.

இனவழிப்பு யுத்தத்தில் பேச்சுவார்த்தை முதல் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. அனைத்தும் இராணுவ நடவடிக்கையுடன் ஒருங்குகிணைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி நிரல் இலங்கையில் அப்பட்டமாக காணப்படுகின்றது. இராணுவம் எங்கு யுத்தத்தை தொடங்குகின்றதோ, அங்கு இந்த தன்னார்வக் குழுக்கள் உடனடியாக பின்னணியில் செயலாற்றத் தொடங்குகின்றது.

இந்த அரசு சாராத தன்னார்வக் குழுக்களை உருவாக்கி அதன் செயல்பாட்டுக்குரிய நிதியையும் ஏகாதிபத்தியம் என்ற பிசாசே வழங்குகின்றது. ஏகாதிபத்திய நலன்களையும், ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசின் நலன்களையும் பாதுகாக்கின்ற, மக்களிடையே அது அம்பலமாகாது இருக்கின்ற அரசியல் தான், அரசுசாராத நிறுவனங்களின் நோக்கமாகும்.

உலகமயமாதல் பொருளாதார கட்டமைப்பை உருவாக்கி அதில் மிதக்கின்ற ஏகாதிபத்தியம், மனித குலத்தின் அழிவில் தான் இதைச் சாதிக்க முடிகின்றது. மனித அழிவும் அவலமும், சமூக ரீதியான எழுச்சியாக மாறக் கூடாது என்பதற்காக, அவன் உருவாக்கி அவன் கொடுக்கும் பணத்தில் இயங்குவது தான் இந்த அரசுசாராத தன்னார்வக் குழுக்கள்.

ஏகாதிபத்திய பணத்தில் அவனின் நலனை பூர்த்திசெய்வது தான், இதன் அடிப்படை அரசியல் நோக்கமாகும். ஏகாதிபத்தயத்தின் தயவில் இயங்கும் இலங்கை பேரினவாத இராணுவ ஆட்சியை, ஏகாதிபத்தியம் தக்கவைக்க முனைகின்றது. அதற்கு தன்னார்வக் குழுக்கள் உறுதுணையாக செயல்படுகின்றது. பேரினவாத இன ஆக்கிரமிப்புக்கு உறுதுணையாக, அதன் பின்னணி தளத்தில் செயல்படுகின்றது.

இனவழிப்பை நடத்தும் இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் ஏற்படுத்தும் மனித துயரங்கள், வெளி உலக்கும் உலக மக்களுக்கும் தெரியாது மூடிமறைக்கின்ற சதியை செய்வது யார் என்றால், இந்த தன்னார்வ ஏகாதிபத்திய குழுக்கள் தான். இந்த தன்னார்வக் குழுக்களின் நோக்கமும் கருசனையும், அந்த மக்கள் இந்த அவலத்தின் விளைவை சுயமாக புரிந்து அவர்கள் செயல்படாது தடுப்பது தான். மக்கள் இதை சுயமாக எதிர் கொள்ளும் ஆற்றல் ஏற்படாத வண்ணம், அதை நலமடித்து வருகின்றனர். இதனால் தான் ஓடோடிச் சென்று உதவுதாக காட்டி, மக்களின் சமூக செயல்பாட்டை நலமடிப்பதே இதன் அரசியல் பணியாகும்.

மற்றவனை நம்பி இருக்க கூறும் ஒரு சமூக இருப்பை, சமூக இழிவை புகுத்துகின்ற ஏகாதிபத்திய கிரிமினல்கள் தான், அரசுசாராத தன்னார்வ நிறுவனங்கள். இப்படி இந்த நோக்கில் இக் குழுக்களின் செயல்பாடுகள் கிரிமினல் மயப்படுத்தப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய நோக்கத்தையும், பேரினவாத நோக்கத்தையும் ஒருங்கே பூர்த்தி செய்கின்ற பேரினவாத இனவழிப்பு யுத்தத்தின் பின்னணியை, அவன் கொடுக்கும் பணத்தில் சாந்தப்படுத்துகின்றவர்கள் கிரிமினல் மயப்படுத்தப்பட்ட போர் குற்றவாளிகன் தான்.


பி.இரயாகரன்
05.09.2007


ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!

Wednesday, January 16, 2008

ஈழம், கொசோவோ, குர்தீஸ் போராட்டங்கள்: 3

ப. வி. ஸ்ரீரங்கன்
11. 01. 2008

லகில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களைத் தாமே ஆளும் காலங்கள் மிக விரைவாக உருவாகிறது! உலகின் அதீத பொருளாதார முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தும் பல்தேசியக் கம்பனிகளின் குவிப்புறுதியானது மேன்மேலும் கனிவளங்களை நோக்கிய தேடுதல்-கையகப்படுத்தல்-காத்தல் எனும் எதிர்பார்ப்புகளால் தமக்குச் சாதகமான நிலையில் ஒரு தேசத்துக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களைத் தொடர்ந்தும் ஒற்றைத் தேசப் பெரும்பான்மையின ஒடுக்குமுறைக்குள் இருத்திவைத்துச் சுரண்டமுடியாதவொரு சூழலில் அத்தகைய நோக்கில் தேசத்தைத் துண்டாடும் நிலைக்குப் பல் தேசியக் கம்பனிகளின் ஏவல் நாய்களான ஏகாதிபத்திய நாடுகள் ஒத்துழைப்பு நல்கின்றன. இதுவொரு நல்ல சந்தர்ப்பம்! -நமக்கும்தாம்.

வரும் மாதம் கொசோவோ தனது தனிநாட்டுப் பிரகடனத்தைச் செய்கிறது. இது எத்தகையவொரு பாதிப்பை ஐரோப்பாவுக்குள் உருவாக்குமென்று, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வாளர்கள் மண்டையைப் பிய்த்து வருகிறார்கள். நாங்கள் இலங்கையில் நாயிலும் கேவலமாக அடக்கியொடுக்கப்படுகிறோம். இதுவரை இலட்சம் தமிழ் பேசும் மக்களை இலங்கைப்பாசிச அரசு கொன்று குவித்துவிட்டது! இது உலகத்தில் மிகவுமொரு பாரிய இனவொடுக்கு முறையாகும். இத்தகைய வொடுக்கு முறையை எந்தவொரு யுக்கோஸ்லோவியச் சிறுபான்மை இனங்களும் காணவில்லை! எனினும் அங்கே பற்பல நாடுகள் தம்மைத் துண்டித்துவிட்டன. இப்போது செர்பியாவிலிருந்து கொசோவோ பிறப்பெடுக்கிறது. அதைத் தொடர்ந்து இன்னும் பத்துக்கு மேற்பட்ட தேசங்கள் ஐரோப்பிய மண்ணில் பிறக்கும் நிலையைப் பெறுகின்றன. இதற்கான முன்னுதாரணமாகக் கொசோவோ இருக்கப் போகிறது. நமக்கும் கொசோவோ முன்னுதாரணமாக இருக்குமோ அல்லது இந்தியாவிடம் மடிப்பிச்சை எடுப்போமா?

மேற்கு ஐரோப்பாவின் கனிவளத் தேவையானது கொசோவோவின் இறைமையாக விரிகிறது. »Kunststaaten« wären nach diesem Maßstab übrigens die meisten Länder der Welt. Und so ist das herbeigeschriebene Schicksal Belgiens denn auch nur ein Menetekel für Kommendes. In der Ankündigung des FAZ-Artikels heißt es: »Ein Staat zerfällt. Dieses Szenario werden wir bald noch häufiger erleben, bei den Schotten, den Kosovaren, auch den Südtirolern. « கொசோவோவின் கனி வளங்களால் தமது உற்பத்தியின் வீச்சையும் அதன் தொடர்ந்த வலிமையையும் பேணும் தேசங்கள் கொசோவோவின் பிறப்பை ஆதரிக்கக் காத்திருக்கிறது. உற்பத்திக்குத் தோதான மூலப் பொருள்களுக்குக் கொசோவோவானது மிகவும் முக்கியம் பெறுகிறது. இங்கே, இந்த நிமிடம்வரை கொசோவோவின் சுயநிர்ணயம் அங்கீகரிப்பதற்கானதான அரசியல் வியூகமே மேற்கு ஐரோப்பாவிடம் இருக்கிறது. எனவே, இதைப் பயன்படுத்தி அகண்ட ஸ்ப்பானியச் சாம்பிராச்சியம் உடைவதற்கான முன் நிபந்தனைகளுடன் வியூகம் அமைக்கும் ஸ்ப்பானியச் சிறுபான்மை இனங்கள்-உதாரணமாக பஸ்கன் மக்கள் முனைப்போடு காய் நகர்த்துகிறார்கள்.

இன்றைய பெல்ஜியம் தன்னைப் பிரித்து இன்னுமொரு நாட்டைப் பிறப்பிக்கும் நிலைக்குள. ; அங்கேயும் சிக்கல்கள் எழுகின்றன. (Belgien kann sich mit einiger Wahrscheinlichkeit in einen nördlichen, flämischen Teil, dessen Bewohner niederländisch sprechen und sich eher nach den Niederlanden hingezogen fühlen, und einen südlichen, französischsprachigen wallonischen Teil spalten. )பிரஞ்சு மொழி பேசும் மக்களின் வழிவந்த வலோனியன் மக்களுக்கும் ஒல்லாந்து மொழி பேசும் மக்களினத்தின் வழி வந்த பி§லேமியன் இனத்துக்கும் பாரிய முரண்பாடு உருவாகிறது. இது இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியின் முரண்பாடாகவும,; வளர்ச்சிகுன்றிய பிரஞ்சு மொழி பேசும் வலையத்துக்குத் தாம் தொடர்ந்தும் நிதி வழங்க முடியாதெனவும் முரண்பாடுகள் முற்றுகின்றன. அங்கே, இன்னொரு தேசத்தை உருவாக்குவதற்காக மேற்குலகப் பகாசூரக்கம்பனிகள் முயற்சிக்கின்றன.

ஆழ்ந்த மெளனத்திலிருக்கும் சுவிட்ஸர்லாந்தில்(Auch in der stillen Schweiz gibt es Separatisten. Die Befreiungsfront von Jura fordert seit mehr als 30 Jahren die Unabhängigkeit des Kantons Jura von der Eidgenossenschaft. Einst wurde das von französischsprachigen Katholiken bevölkerte Jura dem Kanton Bern angegliedert, der größtenteils von deutschsprachigen Protestanten bevölkert ist. Doch die Anführer der Front sehen ein, dass die Chancen auf einen Sieg äußerst gering sind. ) யூரா கன்டோன் மாநிலத்துப் பிரஞ்சு மொழிபேசும் மக்கள் தமது கன்டோன் தனி நாடாக வேண்டுமென்று வாதிட்டு வருகிறார்கள். அங்கே அமுக்கி வைக்கப்பட்ட பிரிவினைவாதம் இப்போது மேலெழுந்து வெடிக்கக் காத்திருக்கிறது. இலங்கைக்குச் சிவிஸ் அரசியல் முறைமைகளைப் பரிந்துரைத்தவர்கள் முகத்தில் கரி பூசுக!

இப்படி இற்றாலி, ருமேனியா, பிரித்தானியாவின் ஸ்கோட்லாந்து(In Großbritannien hat sich der Mittelpunkt der separatistischen Stimmungen aus Ulster nach Schottland verschoben. Bei der letzten Parlamentswahl ging in Schottland die Nationale Partei als Sieger hervor, die einen neuen unabhängigen Staat fordert. ) என்று தொடர்கதையாக இன்னும் பல பத்துத் தனிநாடுகளை உருவாக்கித் தத்தமது கைகளுக்குள் போட்டுவிடத் துடிக்கும் பல்தேசியக் கம்பனிகளும் தேசங்களும் இத்தகையவொரு தனிநாட்டுப் பிரகடனங்களுக்கு இப்போது தலை சாய்க்கும்(மட்டுப்படுத்தப்பட்டு) வியூகத்தோடு காய்களை நகர்த்த முனைகிறார்கள்.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தைத் தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று செர்பியா பராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளை, அதாவது ஐரோப்பியக் கூட்டமைபை எச்சரிக்கிறது. »Serbien wird niemals ein unabhängiges Kosovo akzeptieren«, sagte Tadic im Parlament. Kostunica bezeichnete ein unabhängiges Kosovo als »Marionettenstaat«. Die USA würden ihn nur aus eigenen militärischen und Sicherheitsinteressen anerkennen. Er rief zu weiteren Verhandlungen auf und forderte einen »Kompromiss«. தமக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும் கைச்சாத்தாகிய அனைத்து ஒப்பந்தங்களையும் தாம் முறித்துவிடுவதாகவும் எச்சரிக்கிறது. எனினும்,கொசோவோ தனிநாடாவதை செர்பியாவால் தடுத்திட முடியாது. இதை உணர்ந்த செர்பியா அமெரிக்காவை நேரடியாகத் திட்டுகிறது. கொசோவோவில் தனது இராணுவப் பொருளியல் ஆர்வங்களுக்காகத் தனிநாடாவதை அமெரிக்கா ஆதரிப்பதாகச் சொல்கிறது செர்பிய அரசு. கூடவே, கொசோவோ அமெரிக்காவால் ஆட்டிவிக்கப்படும் "பொம்மை"அரசாகவே இருக்கும் என்றுரைக்கிறது.

நவ லிபரல்களான இன்றைய மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் அதன் நிதி மூலதனமும்(Der Kapitalismus neoliberalen Zuschnitts macht sich auf, die Landkarte Europas neu zu zeichnen. Die nationalen Bourgeoisien sind an großen und einheitlichen Territorien immer weniger interessiert, spielen doch Grenzen dank der EU-Binnenmarktfreiheiten für den ungehinderten Kapital- und Warenfluß keine Rolle mehr. Doch Nationalstaaten sind nach dem Ende des Zweiten Weltkrieges in harten Klassenauseinandersetzungen und unter dem Eindruck des Vorbilds des Ostens auch Sozialstaaten geworden. In ihnen wird Solidarität durch den Transfer erheblicher Mittel zugunsten notleidender Regionen geübt. Dafür ist die EU kein Ersatz. Der Kampf für den Erhalt des Nationalstaats ist daher in erster Linie eine soziale Auseinandersetzung. Traditionelle und liebgewordene antietaistische Sichtweisen trüben in diesem Kampf nur den Blick auf die wirklichen Gefahren. )தத்தமக்குத் தோதாகத் தேசங்களை உருவாக்கி அத் தேசங்களில் தமது மூல வளங்களையும் மற்றும் இராணுவக் கேந்திர நிலைகளையும் காக்க முனைகின்றது. எனவே, கொசோவோ என்பது இத்தகைய நகர்வுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காககவே அதைப் பல்தேசியக் கம்பனிகள் ஆதரிக்கின்றன. இதை மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது அந்தப் பல்தேசியக்கம்பனிகளின் தேச அரசுகள் ஏற்கும் நிலையொன்று உருவாகிறது.

செயற்கையான ஒருமையான தேசங்களை உடைப்பதில் நோக்கமாக இருக்கும் பல் தேசிய மூலதனம் செயற்கையான இந்தியாவையும் உடைக்கும் அதற்காக இலங்கையை உடைக்கும் முன்னதாகவென்று இந்தியாவுக்கும் பயம். எனவே, இலங்கையின் ஒருமைப்பாடு அதற்கு அவசியம்.

நமக்கு?

எமக்கென்றொரு தேசம் உருவாவது அவசியமாக இருக்கிறது சிங்களக் கொடுமைக்கு எதிராக- நமது நாடோடி வாழ் நிலைக்கு மாற்றாக!

இதில் நமது அரசியல் வியூகம் இந்தியாவுக்குக் கால் கழுவாமல் நமது காலில் நின்றபடி உலகின் மாறிவரும் சூழலைக் காண்க!

அங்கே, கொசோவோ என்றால் இங்கே ஈழமும் சாத்தியம்.

இதை நமது விடுதலை இயக்கத்தின் இளைய தலைமுறை புரியுந் தரணங்கள் மெல்லத் தெரிகிறது. புதிய தலைமுறை இந்த நிலைமைகளைத் தரசித்து வரும்போது உருவாகப்படும் புதிய தேசங்களில் ஒன்றாக ஈழம் இருக்கவேண்டும். அது உழைப்பவரின் தேசமாக இருப்பதே எமது அவா! அதற்கு முன் தேசிய முதலாளியத்தை ஊக்கப்படுத்துக! இதை ஒருபோதும் ஏகாதிபத்தியம் விரும்பாது. தேசிய பூர்ச்சுவாக்களை ஏகாதிபத்தியம் ஒழிப்பதற்காகவே சிறு தேசங்களை உருவாக்கித் தமது முகவர்களாக்கி வரத் திட்டங்கள் அரங்கேறுகிறது.

இது ஒன்றும் பித்தலாட்டம் அல்ல!

உலகத்தின்-பொருளாதார ஆர்வங்களின் புதிய வியூகம் இப்படியே நகரும் இனி.

ஒருசில ரொஸ்கிய வாதிகள் சொல்வதுபோன்று ஏசியா, ஐரோப்பாவென்ற கண்ட அரசியல் தேசங்களை இன்னும் ஒன்றாக்கும் என்பது இனி நடவாது. எங்கே, செயற்கையான தேசங்கள் தேசிய இனங்களை அடிமைப்படுத்திச் செயற்கையாக இணைத்திருக்கிறதோ அங்கே, உடைவுகளோடு பல தேசம் உருவாகும்-உருவாக்கப்படும். அது எந்த ஏகாதிபத்தியக் கம்பனியின் பக்கம் இருக்கும் என்பதே இனிவரும் பிரச்சனையாக இருக்கும்.

இந்தியா இருபதுக்கு மேற்பட்ட குட்டிகனை ஈன்றெடுக்கும். இலங்கை ஈழத்தை ஈன்று வருகிறது!

இங்கே, எமது தரப்பின் சாய்வு எங்கே-எப்படியென்பதே நமது கேள்விகள். அதற்கு முன் புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியா விரும்புகிறது. இதற்காக இலங்கைத் தேசிய குட்டிப் பூர்ச்சுவாக்களை உசுப்பிவிட்டுப் போருக்கான தளபாடங்களை இலங்கை இராணுவத்துக்கு வழங்கும்-வழங்கிவருகிறது. தனது உளவுப்படையூடாகப் புலிகளைப் பிளந்து பலவீனமாக்கிப் பின்னடைவைச் செய்தது. இன்னும் அதிகமாக இந்தியா செய்யும். இங்கே, நமது போராளித் தேசபக்த இளைஞர்கள் புதிய வியூகங்களைச் செய்தாகவேண்டும். இளைஞர்கள் உலகத்தின் மாற்றங்களை மிக அவதானமாகக் கணிக்கத் தவறுவது நமக்கு அழிவாக அமையும்.

ஈழத்தைப் பிரகடனப்படுத்தி, அதை எவரும் அங்கீகரிக்காது போனாலும் அது கேலிக்கூத்தல்ல! அதற்குப் பின்பான அரசியலை நேர்த்தியாக்க நமக்கு அது பாடமாக இருக்கும். எனினும், ஈழம் என்பது மெய்யாகும் என்பதற்கான உலகச் சூழல்-பொருளாதார வியூகம் இப்போது உலக அரங்குக்கு வருகிறது. இது நமக்குச் சாதகமானவொரு பக்கத்தையும், பாதகமானவொரு பக்கத்தையும் கொண்டிருக்கிறது. இதில் காய்களை நகர்த்த நமது அரசியல் விவேகமாக இருக்க வேண்டும்.

திரு. பிரபாகரனின் 2007 க்கான மாவீரர் உரைக்கு இலண்டனிலுள்ள தமிழ் வக்கீல்கள் தீபம் தொலைக்காட்சியில் விளக்கம்-பொழிப்புரைத்தபோது"சிங்கள ஏகாதிபத்தியம்"என்று பல முறைகள் கூறிக்கொண்டார்கள். இத்தகைய"அறிவு"தமிழருக்கு இருந்தால் நாம் அழிவதைத் தடுக்கமுடியாது! வக்கீல்கள் எல்லாம் அரசியல் விஞ்ஞான நிபுணர்களில்லை. இளைஞர்களே உங்கள் விவேகங்களை இனிவரும் காலத்தில் காட்டுங்களேன்! -அது நமக்கென்றொரு தேசத்தை உருவாக்கட்டும்-அது தொழிலாளருக்கு எற்ற பொருளாதாரத்தைக் கனவாகக் கொண்டெழட்டும்!

இக்கட்டுரையை மேலும் விருத்தியாக்கித் தத்துவார்த்த நெறியோடு பின்பு எழுதுகிறேன்.

தொடரும்.


Tuesday, January 15, 2008

நாம் இந்து இல்லை சொல்லடா

நாம் இந்து இல்லை சொல்லடா

Monday, January 14, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...16.

"குஜராத் வன்முறைகள் சம்பந்தபட்ட வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். அதுவும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்கக் கொண்டுச் செல்லபட வேண்டும்" என்று தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இன்னும் சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் தாக்கல் செய்த மனு கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. குற்றவாளிகள் பிணையில் வெளியே இருக்கிறார்கள். நரேந்திர மோடி மிகப் பெரும்பான்மையாக தேர்தலில் வெற்றி பெற்றான். இன்னொரு தேர்தலுக்கு தயாராகியும் வருகிறான்(அதிலும் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளான்). கலவரத்தின் போது உயிர் தப்பியவர்களில் அதிகமானோர் அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள சேரி பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிய சிலரோ, ஒடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதோடு, பொருளாதரத்தில் கீழ்நிலையிலும் பக்கத்தில் வாழும் ஹிந்துக்களால் சமூக புறக்கணிப்பும் செய்யப்படுகின்றனர்.

நரோடா: அமைப்பும் மக்கள் தொகை புள்ளிவிபரமும்

அஹ்மதாபாத் நகர மையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா, பெரும்பாலும் கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இடங்களிலிருந்து வந்து குடியேறியக் கிட்டத்தட்ட 2000 தினக்கூலிகளான முஸ்லிம்களுடைய வசிப்பிடமாக இருந்தது. இந்த பகுதியானது நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலையின் ஓரமாக அமையப்பட்ட இடமாகும். இந்த இடத்திலிருந்து சாலையின் மறுபக்கத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பண்டகசாலையும், பக்கத்திலேயே ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கோபினாத் மற்றும் கங்கோத்ரி சமூக குடியிருப்புகளும் உள்ளன.

70 வருடங்களுக்கு மேலாக இருக்கும் நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா நகர்புறத்தில் இருக்கும் சேரிகளாகும். இவ்விரண்டும் அஹ்மதாபாத் மாநாகராட்சியின் கீழ் உள்ளன. நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியாவுக்கு இடைபட்ட தூரம் 1 கிமீ கூட இருக்காது. நரோடா காவ்ன் சற்றே சிறியதாகும். குறுகலான சந்துகள் அமைந்த சிக்கலான நெருக்கடியான, அசுத்தமான கட்டிடங்கள்; அவைகளில் சில கட்டிடங்கள் தான் இரண்டடுக்கு மாடிகளை விட சற்று உயரமானவைகள். இத்தகைய அமைப்பிலுள்ள முஸ்லிமகள் வசிக்கும் பகுதி தான் நரோடா பாட்டியாவாகும்.

நரோடா பாட்டியாவோவிலிருந்து சாலையின் மறுபக்கத்தில் ச்சாரா இனத்தவர்கள் வசிக்கும் மிகப் பெரிய ச்சாராநகர் உள்ளது. வெளியில் அதிகமாக அறியப்படாதது இந்த ச்சாரா இனம்; இம்மக்களோ பொதுவாக குற்றம் செய்கின்றவர்களாகக் கருதபடுகிறவர்கள்; அதிலும் முக்கியமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது, சூதாடுவது போன்ற குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகிறவர்களாவர். இவர்கள் ஹிந்துக்களாக இருந்தாலும், ஹிந்து மதத்திலுள்ள ஜாதிகள் அடிப்படையில், இம் மக்கள் மிக தாழ்த்தப்பட்ட இனத்தவராகவே கருதபடுகிறார்கள்.

குற்றவாளிகள் யார்?

நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா சம்பவங்கள் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டது. நரோடா காவ்னில் 8 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக பதிவு செய்யபட்டுள்ளது. நரோடா பாட்டியாவில் நேரில் பார்த்த சாட்சிகள், சில நூறுகளாவது இருக்கும் என்று ஊர்ஜிதப்படுத்துகிறது. இருப்பினும், சரியாக எத்தனை முஸ்லிம்கள் அன்றைய தினம் நரோடாவில் கொல்லப்பட்டனர் என்பதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. கொலைகும்பல் மட்டுமே ஒரு வேளை அறிந்திருக்கக் கூடும்.

கலவரத்தின் போது உயிர்ழைத்தவர்கள் தங்களைத் தாக்கியக் கும்பல்களில் பல டஜன் எண்ணிக்கையில் சங்பரிவாரகாரர்களை அடையாளம் காட்டியதோடு, பாஜக சட்டமன்ற உறுப்பினரான மாயபென் கோட்னானி மற்றும் பஜரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி ஆகியோரே வன்முறை கும்பலை முன்னின்று வழிநடத்திய மாபாதகர்கள் என திரும்பத் திரும்ப பலமுறை கூறினார்கள். இருப்பினும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபடும் போது, கோட்னானி மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்துவிட்டது. மிகக் குறைவான எண்ணிக்கையில் சில பாஜக மற்றும் விஹெச்பி ஆட்களுடன், சில டஜன்கள் எண்ணிக்கையிலான ச்சாரா இனத்தவரையும் சேர்த்து பாபு பஜ்ரங்கி மட்டுமே குற்றம் சாட்டப்பட்டான்.

மொத்தத்தில் 49 பேர் குற்றவாளிகளாக நரோடா பாட்டியா சம்பவங்களிலும், அதே எண்ணிக்கையிலான பேர் குற்றவாளிகளாக நரோடா பாட்டியா சம்பவங்களிலும் காவல்துறையால் அறிவிக்கப்பட்டனர். இவ்விரண்டு பட்டியல்களிலுமே வரக்கூடிய ஒரே நபர்கள் என பஜ்ரங்கி உள்பட பலர் இருந்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த பஜ்ரங்கி, மிகப் பெரும் நாடகமாடபட்ட நிலையில் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட 5 மாதங்கள் கழித்து, குஜராத் உயர் நீதிமன்றம் அவனை பிணையில் விடுதலை செய்ய அனுமதித்தது.(திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இன அழிப்பு படுகொலையில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டவனுக்கு 5 மாதங்களிலேயே ஜாமீன்; தமிழக கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அல்ல என விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மஹ்தனி உட்பட 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு வழக்கு முடிவடையும் வரை சுமார் 9 வருடங்களாக ஜாமீன் மறுப்பு. இந்திய நீதிபுருஷர்கள் மனுநீதியின் மறுபக்கத்தை வாழவைக்கின்றனரோ? - இறை நேசன்).

பாபு பஜ்ரங்கி

5அடி 3 அங்குலத்திற்கும் சற்றே குறைவான உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி, இவனுடைய குடும்ப பெயர் பட்டேல், நரோடாவில் மிகப் பெரிய நபராக விளங்குபவன். விஹெச்பி மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள் உடன் 22 வருட தொடர்புகளினால் பலரும் பயந்து நடுங்குகிற உள்ளூர் தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். அதன் பயனால் இன்று நரோடாவிலும் இன்னும் குறிப்பாக ச்சாராநகரிலும் தன்னை ஒரு தலைவனாக பஜ்ரங்கி உருவாக்கிக் கொண்டான். ச்சாராநகரில் இவனது கட்டளைகளைப் பின்பற்றும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இருக்கின்றனர். ச்சாராக்களில் அதிகமானோர் இவனிடத்தில் பெரும் பக்தியுடனான மரியாதை வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இவனோ குற்றம் புரிவதில் அவாகளிடத்திலே (ச்சாரா மக்கள்) இருக்கும் திறமைகளை வெகுவாக புகழ்ந்துரைத்ததோடு, அவர்கள் தான் இவனுடைய "ஆயுதங்கள்" எனவும் உரிமை கொண்டாடினான். இன்னும் சம்பவங்களின் போது அவர்களிடம் இவன் கூறியதெல்லாம், "கொல்லுங்கள் அதைத் தவிர வேறு தேவையில்லை".

நெடுஞ்சாலைக்குச் சற்று அப்பாலுள்ள நரோடா புறநகர் பகுதியில் அமைந்துள்ள அஜந்தா எல்லோரா என்னும் வணிக வளாகத்தில் உள்ள இரண்டாவது மாடியில் இருக்கும் தனது அலுவலகத்தில், கட்டபஞ்சாயத்தை விசாரிக்கும் ஒரு விசாரணை மன்றமே வைத்துள்ளான். மாதத்திற்கு நிரந்தர வருமானமாக சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக ஈட்டும் இவன், தன்னை பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் வியாபாரியாகக் கூறினாலும், முஸ்லிம்களையும், கிருஸ்துவர்களையும் அடிப்பதுவே இவனது முக்கிய அலுவலாகும்.

"முஸ்லிம்களையும், கிருஸ்தவர்களையும் நான் அப்படி வெறுக்கிறேன்", என அவன் (பஜ்ரங்கி) கூறுகிறான். அவனுடைய உள்ளத்திற்கு மிக பிடித்தமானது, முஸ்லிம் பையன்களைத் திருமணம் செய்தோ அல்லது காதலித்து ஓடி போகவோ செய்யும் ஹிந்து இளம்வயது பெண்களைக் காப்பாற்றி விடுவிப்பதாகும். அவனை தினந்தோறும் வந்து சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் இத்தகையப் பெண்களின் பொற்றோர்களே. "இப்பெற்றோர்கள் காவல்துறையிடம் சென்றால், அவர்கள் புகாரைப் பதிவு செய்வதில்லை, என்னிடம் தான் அவர்களை அனுப்பி வைப்பார்கள்" என பஜ்ரங்கி தெரிவித்தான். "957 ஹிந்துச் சிறுமிகளை நான் காப்பாற்றியிருக்கிறேன். முஸ்லிமை திருமணம் செய்த இளம்பெண் சராசரியாக 5 குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். அப்படி பார்க்கும் போது 5000 முஸ்லிம்களை அவர்கள் பிறக்கும் முன்பே நான் கொன்றிருக்கிறேன்." - பஜ்ரங்கி.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

Sunday, January 13, 2008

குஜராத் - இசைச்சித்திரம்

குஜராத் - இசைச்சித்திரம்

உலக மக்களுக்கு எதிரான, மிகக் கொடூரமான பயங்கரவாதி யார்?

பி.இரயாகரன்
13.01.2007

மெரிக்கா கூறுவது போல், நிச்சயமாக அது புலிகள் அல்ல. அது அமெரிக்காவே தான். ஆனால் அமெரிக்காவோ புலிகள் என்கின்றான். புலியெதிர்ப்புக் கும்பலோ, மகிழ்ச்சியுடன் அதற்கு அரோகரா போடுகின்றது. புலியொழிப்பதையே அரசியல் வேலைத்திட்டமாக கொண்ட இந்த புலியொழிப்புக் கூத்தாடிகள், பிசாசுடன் சேர்ந்து இப்படித்தான் தமது மலட்டு அரசியலைச் செய்கின்றனர்.

சிலர் தாம் எந்த ஏகாதிபத்தியத்துடனும் சேர்ந்து செயல்படவில்லை என்று வித்தை காட்டுவது எல்லாம், அரசியலில் பொய்யும் புரட்டுமாகும். அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய பயங்கரவாத வரையறைக்குள், இவர்கள் அங்குமிங்குமாக மிதக்கின்றனர்.

உலகில் மிகப் பயங்கரமான, கொடூரமான, பயங்கரவாத இயக்கம் புலிகள் என்று அமெரிக்கா கூறுகின்றது. புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பல், இதை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். சூடு சுரணையற்ற நக்கித் தின்னும் மலட்டு அரசியல். இந்த இழிநிலையில் தான், புலியல்லாத அரசியல் பம்மி மிதக்கின்றது.

புலியை ஒழிக்க பேரினவாதிகளும், இந்தியாவும், ஏகாதிபத்தியமுமில்லை என்றால், என்ன அரசியலைத் தான், இந்தக் கும்பல் செய்யும். இதற்குள் தான் இவர்கள் சுற்றிச்சுற்றி சுழியோடுகின்றனர். கடந்த 20 வருடமாக, இப்படித் தான், இதற்குள் தான், புலியல்லாத கும்பல்கள், பேயுடனும் பிசாசுடனும் கூடி வாழ்கின்றனர்.

புலிகளை மிக மோசமான ஒரு இயக்கம் என்று சொல்ல அமெரிக்காவுக்கு, எந்த அருகதையும் தார்மீக உரிமையும் கிடையாது. பேரினவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்குகின்றார்கள் என்று புலிகள் தாங்களே தமிழ் மக்களை ஒடுக்கியபடி சொல்லும் உரிமை புலிகளுக்கு எப்படி இல்லையோ, அப்படித் தான் இதுவும்.

உலகிலேயே மிகமோசமான மனித அவலத்தை உருவாக்கி, அதைக் கொண்டு வாழும் அமெரிக்கா புலியைப் பற்றி கூறுவது நகைப்புக்குரியது. அமெரிக்காவின் பயங்கரவாத வழியில், அதன் அரசியல் உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான், புலிகள் இயக்கம்.

இப்படி அரசியல் பயங்கரவாதத்துக்கு, அரசியல் ரவுடிசத்துக்கு, அரசியல் மாபியாத்தனத்துக்கு தந்தையாக தாயாக இருப்பதே அமெரிக்கா தான். இப்படி உலகளாவில் அமெரிக்க மயமாக்கலில், புலிகள் வெறும் எடுபிடிகள் தான். உலகிலேயே மிகக் கோரமான, மனித அழிவுகளை உற்பத்தி செய்கின்ற முதல்தரமான பயங்கரவாதி அமெரிக்கா தான். அதன் ஒவ்வொரு அசைவும், உலக மக்கள் துன்பத்தையும் துயரத்தையும் மனித அழிவுகளையும் உருவாக்குகின்றது. அதன் இராணுவ இயந்திரம் முதல் அதன் பணம் கொடைகள் வரை, உலக பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டது.




இதன் மூலம் சதா மனித உயிர்களை காவு கொண்டபடி, உலகை அதி உச்சத்தில் சுரண்டிக் கொழுக்கின்ற பணக்கார புல்லுருவிகளின் நலனை அடிப்படையாகக் கொண்ட, ஓரு பயங்கரவாத நாடு தான் அமெரிக்கா.

இதற்காக அமெரிக்கா உற்பத்தி செய்த பயங்கரவாத இயங்கங்கள், சதிகள், ஆட்சி கவிழ்ப்புகள், படுகொலைகள், ஆக்கிரமிப்புகள் என்று எத்தனை எத்தனை. இதன் மூலம் கோடான கோடி மக்களை கொன்று குவித்த ஒரு பயங்கரவாத நாடு தான், அமெரிக்கா.

வியட்நாமில் உலகம் அறிந்த பயங்கரவாதத்தை ஏவிய நாடு. இன்று ஈராக்கின் எண்ணைக்காக, அதன் மூலம் சில முதலாளிகளைக் கொழுக்க வைக்க, ஈராக்கை ஆக்கிரமிக்க விரும்பி, அதையே செய்தது, அமெரிக்கா. இதற்காக இந்த பயங்கரவாத நாடு நடத்திய சதிகள், சூழ்ச்சிகள், பேரங்கள், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், பொய்கள், அவதூறுகள் எண்ணில் அடங்காது. இறுதியாக அது நடத்திய ஆக்கிரமிப்பு வரை, ஈராக்கில் இந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டுகின்றது. அந்தப் பயங்கரவாதம் இன்றும் தொடருகின்றது. இந்தப் பயங்கரவாதி சொல்வது, புலியொழிப்பு கும்பலுக்கோ அரோகரா போடக் கூடிய வேதவாக்காக உள்ளது.



ஈராக்கின் எண்ணையைக் கொள்ளையடிக்கவும், இதன் மூலம் சிலர் கொழுக்கவும் தான், இவ்வளவு ஆட்டம் ஆடுகின்றனர். இதற்காக இவர்கள் பேசுவதோ திடீர் ஜனநாயகம்.

உலகப் பயங்கரவாதம் பற்றி பேசும் இந்த அமெரிக்கா தான், ஒசாமா பில்லாடனை கூட தனது பயங்கரவாத தேவைக்காக பயங்கரவாதியாக உற்பத்தி செய்தது. ஆயுதம் முதல் பணம் வரை வாரிக்கொடுத்து, பயங்கரவாதத்துக்கு பயிற்சி அளித்தது. இதன் மூலம் இன்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, அந்த மக்களையே கொன்று போடும் அதிபயங்கரவாதத்தையே அமெரிக்கா செய்கின்றது.

இப்படிப்பட்ட அமெரிக்காவின் பயங்கரவாதங்கள் பற்பல. 1948 வரை இஸ்ரேல் என்ற நாடே மத்திய கிழக்கில் இருக்கவில்லை. பலாத்காரமாக, திட்டமிட்டும், வெளியில் இருந்தும் கொண்டு சென்று யூதர்களை கொண்டு உருவாக்கிய நாடு தான் இஸ்ரேல். மத்திய கிழக்கின் தனது பேட்டை ரவுடியாக, அமெரிக்காவால் திட்டமிட்டு இப்படித்தான் உருவாக்கப்பட்டது.



பாலஸ்தீன நாட்டை இல்லாதாக்கிய அமெரிக்கா, இன்று அதன் ஒரு பகுதியை வழங்குவதா இல்லையா என்று விவாதம் செய்கின்றது. என்ன வேடிக்கை. ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் கொப்பளிப்பு இப்படிப்பட்டது தான்.

இந்த பயங்கரவாத மூதாதையர்களின் கதையும் இதுதான். அமெரிக்கா என்ற தேசத்தை உருவாக்க, அவர்கள் 10 கோடி செவ்விந்தியர்களைக் கொன்றனர். கொல்வதை சட்டமாக, அதை புனிதமாக, பண வருவாயுள்ள தொழிலாகவே அவர்கள் அறிவித்தவர்கள். கால்மார்க்ஸ் மூலதனத்தில் இதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். ""புரட்டெஸ்டென்ட் மதத்தின், கண்ணியமிக்க காவலர்களான நியூ இங்கிலாந்தின் புனிதர்கள், 1703 ல் தங்கள் சபையில் நிறவெறி சட்டங்களின்படி ஒரு சிவப்பு இந்தியனின் மண்டைத் தோலுக்கு, அல்லது சிறைபிடிக்கப்பட்ட சிவப்பு இந்தியனுக்கு 40 பவுண் விலை நிர்ணயித்தனர். 1720 இல் ஒவ்வொரு மண்டைத் தோலின் விலையும் 100 பவுணாக உயர்ந்தது. 1744 ல் மாசாசூசெட்ஸ்பே, ஒரு குறிப்பட்ட சிவப்பு இந்திய இனத்தை கலகக்காரர்கள் என்று பிரகடனம் செய்த பின்பு விலைவாசி பின்வருமாறு இருந்தது. 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆணின் மண்டைத் தோல் 100 பவுன் (புதிய பவுன்). ஆண்கைதி 105 பவுண். பெண் மற்றும் குழந்தைக் கைதிகள் 55 பவுண். ….வேட்டைநாய்களையும், மண்டைத்தோல் உரித்தலையும் "கடவுளாலும், இயற்கையாலும் தனக்கு அளிக்கப்பட்ட சாதனங்கள்" என்று பிரிட்டிஷ் பார்லிமென்ட் பிரகடனம் செய்தது"" இப்படி இந்திய இனங்கள் பூண்டோடு வேட்டையாடப்பட்டது.

இவர்களின் வாரிகள் 10 கோடி கறுப்பு அடிமைகளை கடத்தி வந்து, கொழுத்தனர். இதுவும் அமெரிக்கப் பயங்கரவாதிகளினால், சட்ட அந்தஸ்து பெற்றது. கறுப்பின மக்களை யாரும் எப்படியும், நடத்தலாம். கொல்ல முடியும், பாலியல் உறவு கொள்ள முடியும், இப்படி எதுவும் செய்யமுடியும். பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்காவின் செல்வக் குவிப்பு இப்படித் தான் நடந்தது.

செல்வம் குவிய இந்த பயங்கரவாத தொழில் பெருகியது. 1700 களில் கூறப்பட்ட ஒரு புகழ் பெற்ற ஒப்பந்தம் உருவானது. அதுதான் 'அஸியெந்தோ" உடன்படிக்கையாகும். இதன் படி ""இங்கிலாந்து, ஆண்டு ஒன்றிக்கு 4800 நீக்ரோக்கள் வீதம் 1743 வரை, ஸ்பானிஷ் அமெரிக்காவுக்கு அனுப்பும் உரிமையைப் பெற்றது"" அதாவது நீக்ரோக்களை (கறுப்பர்களை) பிடித்து அடிமையாக அனுப்பும் கோட்டாவை பெற்றுக் கொண்டனர். இது இன்றைய வர்த்தக கோட்பாடு போன்றதே, இந்த நாகரீக ஒப்பந்தங்கள். அடிமைகளை அமெரிக்கா சந்தையில், அன்றைய டொலரில் 500 முதல் 1000 டொலர் என்ற பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டனர்.

கூலியற்ற இந்த அடிமைகளின் உழைப்பு, தன்னை வாங்கிய பணத்தையே பலமடங்காக்கியது. இதன் செழிப்பு, அடிமை வியாபாரத்தையே சர்வதேச வர்த்தகமாக்கியது. அன்று அடிமைகள் ஏற்றுமதியில் ஈடுபட்ட கப்பல் நிறுவனமான ""லிவர்பூல் 1730 இல் 15 கப்பல்களையும், 1751 இல் 53 கப்பலையும், 1760 இல் 74 கப்பலையும், 1770 இல் 96 கப்பலையும், 1792 இல் 132 கப்பலையும்"" பயன்படுத்தியது. அடிமை வியாபாரத்தில் நம்ப முடியாத வளர்ச்சி. இப்படி அடிமை வியாபாரத்தில் பல கம்பனிகள். கோடானு கோடி (கறுப்பின) மக்களின் அவலத்தில் இந்த வர்த்தகமும், கூலியற்ற உழைப்பும் செழித்தது. விவர்பூல் 60 வருடத்தில் அடிமைகளை ஏற்றுமதி செய்த கப்பல் எண்ணிக்கையை 9 மடங்காக பெருகியது. அதாவது 117 கப்பல் அதிகரித்தது. கப்பல் தொழில் நுட்பம் பெருகியது. அதிக அடிமைகளை கொண்டுவரும் வகையில், கப்பல் கொழுத்தது. அதிக அடிமைகளை கைப்பற்றும் நுட்பம், அவர்களை கொண்டுவரும் நுட்பம் வளர்ந்தது. அடிமைகளை அடிமைப்படுத்தி உழைப்பை உறிஞ்சும் நுட்பம் பெருகியது. அன்று செல்வத்தின் இருப்பிடமே அடிமை வியாபாரமாகியது. இதனால் கடல் கடந்து இந்த வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தொகை அதிகரித்து. அடிமைகளை கைப்பற்ற பல நாடுகள் போட்டியிட்டன. இதற்கு ஏற்ப சட்டம் சுதந்திரமாகி, அடிமைகைள இலகுவாக கையாளும் வகையில் ஜனநாயகமாகியது. சுதந்திர மனிதன் அடிமைகளை கையாள்வது என்பது, மேலும் சுதந்திரமாகி ஜனநாயகமாக மாறியது. இதனால் அது கொடூரமானதாகியதுடன், காட்டுமிராண்டித்தனத்தையே நாகரீகமாக்கியது.

இப்படி பயங்கரவாதத்தை அரசியலாக கொண்ட அதன் நூற்றாண்டு வரலாறு, இன்றும் தொடருகின்றது. இன்றும் உலகில் மிகப் பெரிய பயங்கரவாத நாடு அமெரிக்க தான். உலகில் உணவின்றி, சுத்தமான நீர் இன்றி, மருந்தின்றி, சுற்றுச்சூழல் மாசடைதலால் மரணிக்கும் 10 கோடிக்கு மேற்பட்ட மக்களின் பச்சைப் படுகொலைக்கு, அமெரிக்கா கையாளும் அரசியல் பயங்கரவாதம் தான் காரணம். இதைவிட ஆக்கிரமிப்புகள், பொருளாதாரத் தடைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள், இப்படி மக்களை அன்றாடம் படுகொலை செய்யும் அமெரிக்காவின் பயங்கரவாதம், உலகம் தளுவிய அதி பயங்கரமானது.

இந்தப் பயங்கரவாத நாடு, புலியை உலகின் முதல்தரமான பயங்கரவாதி என்கின்றது. புலிகளின் பயங்கரவாதம் என்பது, அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டும் போராடாது, மக்களுக்கு (தமிழ் மக்களுக்கும்) எதிராக உள்ளது என்பதால், நாம் அந்த பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம். அதை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டும் அவர்கள் கையாண்டால், அந்தப் "பயங்கரவாத" த்தை நாம் ஆதரிப்போம். புலிகள் மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதம், அமெரிக்காவின் அரசியல் பொருளாதார பயங்கரவாதத்தை பின்பற்றியே செய்கின்றனர். இதற்கு வெளியில் அல்ல. இதன் அரசியல் தன்மை என்பது ஒன்றே.

புலிகளின் பயங்கரவாதம் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களுக்கும் மேலானதாக இருப்பதால், ஒப்பீட்டளவில் அது குறுகியது. அமெரிக்கப் பயங்கரவாதமோ, உலக மக்கள் மேலானது. புலிகளின் பயங்கரவாதத்தின் மூலமாக, அதன் அடிப்படையாக இருப்பது பேரினவாதத்தின் கொடூரமான இன ஒடுக்குமுறை தான். இப்படியிருக்க, அமெரிக்கா புலியின் பயங்கரவாதம் பற்றிப் பேசுவது என்பது, இலங்கையை தனது அடிமை நாடாக மாற்றத்தான். தனது பயங்கரவாதச் சதிகள் மூலம், தலையிடும் உரிமைக்காகத் தான் அது புலம்புகின்றது. அதாவது தனது பயங்கரவாதத்தை இலங்கை மக்கள் மேல் திணிக்கத் தான், புலிப்பயங்கரவாதம் பற்றிப் பேசுகின்றது. இந்த அடிப்படையில் தான், புலியெதிர்ப்பு புலியொழிப்பு வாதிகளும், தமது பங்குக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து மக்களின் முதுகில் குத்துகின்றனர்.