தமிழ் அரங்கம்

Saturday, June 7, 2008

விவசாயக் கடன் தள்ளுபடி: புண்ணுக்குப் புனுகு

மைய
அரசு 60,000/ கோடி ரூபாய் பெறுமான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது; தமிழக அரசின் பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான வட்டி 4 சதவீதமாகக் குறைப்பு; 1,500 கோடி ரூபாய் பெறுமான புதிய விவசாயக் கடன்; பயிர்க் காப்பீடு திட்டத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு எனச் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து ஏக்கர் வரை விளைநிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள சிறு / குறு விவசாயிகள், 31.3.2007 முடிய பொதுத்துறை வங்கிகள் / கிராமப்புற வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளிடம் வாங்கிய கடன்கள் அல்லது அந்த தேதி வரை நிலுவையாக இருக்கும் அவர்களின் கடன்களை ரத்து செய்ய ரூ.50,000 கோடியும்; ஐந்து ஏக்கருக்கு மேல் நில உடைமை வைத்திருக்கும் விவசாயிகள், தாங்கள் மேற்படி வங்கிகளில் 31.3.2007க்குள் வாங்கிய அல்லது தங்களின் பெயரில் நிலுவையில் உள்ள கடன்களில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் அடைத்து விட்டால், மீதமுள்ள 25 சதவீதக் கடனை ரத்து செய்ய ரூ. 10,000 கோடியும் ஒதுக்கப் போவதாக மைய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த அளவுகோலுக்குள் வரும் விவசாயக் கடன்கள் அனைத்தையும் 30.06.2008க்குள் ரத்து செய்துவிடுவோம் என்றும் மைய அரசு உறுதியளித்திருக்கிறது.

விவசாயத்தில் உலகமயம் புகுத்தப்பட்ட பிறகுதான் இந்தியாவெங்கும் விவசாயிகள், மீளவே முடியாத கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டார்கள். அக்கொள்கைப்படி விவசாயிகளுக்கு மானியம்கூடத் தரக்கூடாது என வாதிட்டு வரும் மன்மோகன் சிங் ப.சிதம்பரம் மான்டேக் சிங் அலுவாலியா கும்பலிடமிருந்து இந்தக் கடன் தள்ளுபடியைப் பெறுவதற்கு, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருந்தது.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா எனப் பரவிய விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் என்ற சூறாவளி கடந்த மூன்று ஆண்டுகளாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில்தான் மையம் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், விதர்பாவைச் சேர்ந்த 1,242 பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் (மார்ச் 22 முடிய) 220 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விதர்பா பருத்தி விவசாயிகளின் இந்தக் "கலகம்''தான், கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாய் அமைந்திருக்கிறது.
.

Friday, June 6, 2008

பாராட பார்ப்பனப் பயலே, உங்கள் மூளையில் வக்கிரத்தை - பகுதி 3

இராசஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, சக்வாரா கிராமம். இங்கு வசித்து வரும் 700 குடும்பங்களில், 70 குடும்பத்தினர் ""பைரவா'' என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்திலுள்ள பொதுக்குளம், அரசின் உதவியோடும், மக்களின் பங்களிப்போடும் தாழ்த்தப்பட்டவர்கள் கொடுத்த நன்கொடை, அவர்களின் உடல் உழைப்பையும் பயன்படுத்திதான் கட்டப்பட்டது.

எனினும், இப்பொதுக்குளத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து, பார்ப்பனர்களும், ஜாட் சாதியினரும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர்.

இத்தீண்டாமைக்கு எதிராக மனதிற்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர், டிசம்பர் 14, 2001 அன்று கலகத்தில் குதித்தனர். இத்தீண்டாமையை முறியடிக்கும் அடையாளமாக, பாபுலால், ராதேஷாம் என்ற இரண்டு தாழ்த்தப்பட்டோர் பொதுக்குளத்தில் இறங்கிக் குளித்தனர். ""அக்குளம் எங்களுக்குப் பயன்படுகிறதோ, இல்லையோ, தீண்டாமைக்கு எதிரான கோபத்தின் காரணமாகவே அக்குளத்தில் இறங்கிக் குளித்ததாக''க் கூறினார், ""கலகக்காரர்'' பாபுலால்.

இக்கலகத்தால் இரத்தம் கொதித்துப் போன பார்ப்பன ஜாட் சாதி வெறியர்கள் சாதி பஞ்சாயத்தைக் கூட்டி, தாழ்த்தப்பட்டோர் சாதிக் கட்டுப்பாட்டை மீறியதற்கான தண்டனையாக 50,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனக் கட்டளை போட்டனர்; மேலும், கிராமத்திற்குள் தாழ்த்தப்பட்டோருக்கு அத்தியாவசியப் பொருட்களை யாரும் விற்கக் கூடாது; அவர்களை வயல் வேலைக்குக் கூப்பிடக் கூடாது; அவர்களுக்கு கடன் தரக் கூடாது எனப் பல்வேறு ""ஃபத்வா''க்களையும் போட்டுச் சமூகப் புறக்கணிப்பும் செய்தனர்.
.

பாராட பார்ப்பனப் பயலே, உங்கள் மூளையில் வக்கிரத்தை - பகுதி 2

குஜராத் தேர்தலில் பார்ப்பன பாசிச மோடியின் வெற்றியை குறித்து பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதிய ஒரு கட்டுரையில், ""குஜராத் இனிமேலும் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்'' எனக் குறிப்பிட்டார். "இனிமேல்' என்பது 2002லேயே துவங்கி விட்டது. மேற்கு இந்தியாவில் நிலைபெற்றுள்ள அப்பாசிச சித்தாந்தத்தின் இன்னொரு சோதனைச்சாலை கிழக்கு இந்தியாவில், ஒரிசாவில் "வளர்ந்து' வருகிறது.

குஜராத் இனப் படுகொலையை இன்னமும் "சூறாவளி' என்றே குஜராத்திகள் அழைக்கிறார்கள். அத்தகையதொரு சூறாவளியை, புயல், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களுக்காக மட்டுமே பெரும்பாலும் செய்தி ஊடகங்களில் இடம் பெறும் ஒரிசா, கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில் கண்டது. இதே ஒரிசாவில், 1999இல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்ற கிறிஸ்தவ சேவை நிறுவன ஊழியரும், அவரது இரு பச்சிளம் பாலகர்களும் ஒரு வேனில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டதும், 2002இல் ஒரிசா சட்டசபைக்குள்ளேயே சங்கப் பரிவார கும்பல் புகுந்து எதிர்க்கட்சியினரைத் தாக்கியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அடுத்த படிநிலை வளர்ச்சியாக, கந்தமால் மாவட்டம் முழுவதும் தலைவிரித்தாடியது "சூறாவளி'!

கந்தமால் மாவட்டம் தாழ்த்தப்பட்ட பனா கிறிஸ்தவர்களும், கந்தா பழங்குடியினரும் வசித்து வரும் மலைப்பகுதிகள் அடங்கிய பின்தங்கிய மாவட்டமாகும். கடந்த பத்தாண்டுகளாகவே பழங்குடி மக்கள் அதிகம் நிறைந்த ஒரிசாவில், கட்டாய மதமாற்ற எதிர்ப்பு என்ற நச்சுப் பிரச்சாரத்தை முன்வைத்து, விசுவ இந்து பரிசத் (வி.இ.ப.), வனவாசி கல்யாண் ஆசிரமம் (வ.க.ஆ.), பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் இடைவிடாத மதவெறிப் பிரச்சாரத்திலும் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளன.
.

பாராட பார்ப்பனப் பயலே, உங்கள் மூளையில் வக்கிரத்தை - பகுதி 1


கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.


காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் குவிக்கப்பட்டுள்ள அரசு பயங்கரவாத போலீசு, இராணுவ, துணை இராணுவப் படையினரில், 1990 முதல் 2007 மார்ச் மாதம் வரை மாண்டு போனவர்களின் எண்ணிக்கை 5100 பேர். பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாண்டு போன அச்சிப்பாய்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமும் கருணைத் தொகையும் ஓய்வூதியமும் பதக்கங்களும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், ஆண்டுக்கு ஏறத்தாழ 22,000 பேர் துப்புரவுப் பணியாற்றும்போது மாண்டு போகிறார்கள். அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரணமோ, உதவிகளோ செய்யப்படுவதில்லை.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அரியானா மாநிலத்தின் ஹல்தேரி கிராமத்தில் 50 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயதான குமார் காஷ்யப் என்ற சிறுவனை மீட்க இராணுவப் படை விரைந்தது. மீட்புப் பணியைப் பார்வையிட மாநில முதல்வர் ஹூடா, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அங்கே குவிந்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அச்சிறுவன் மீட்கப்பட்டதை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்தன. நாளேடுகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. மீட்கப்பட்ட அச்சிறுவனுக்கு ரூ. 7 இலட்சம் பெறுமான பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால், பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்புகளை நீக்கும்போது நச்சுவாயு தாக்கி தத்தளிக்கும் துப்புரவுத் தொழிலாளியை மீட்க எந்த இராணுவமும் வருவதில்லை. இராணுவம் கிடக்கட்டும்; தீயணைப்புப் படையின் மீட்புக் குழுகூட வருவதில்லை. எந்த அமைச்சரும் எட்டிப் பார்ப்பதில்லை. மாண்டுபோன துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமும் இல்லை.
.

மற்றவன் மூளையை கழற்றிவைத்து விட்ட திமிரில், மூளை இருக்க என்று கேட்பதே பார்ப்பனியம் - பகுதி 3

ஒரு லட்ச ரூபாய்க்கு ""நானோ'' கார் எனும் குட்டிக்காரை சந்தைக்கு கொண்டுவந்து, தரகு பெருமுதலாளி டாடா, கார் புரட்சி செய்யப்போகிறாராம். இவர் செய்யப்போகும் புரட்சிகூட இரண்டாவது புரட்சிதானாம். முதல் புரட்சியை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ""மாருதி'' நடத்தி விட்டதாம். இம்மாபெரும் உண்மைகளை ""இந்தியா டுடே'' நமக்கு உணர்த்தியிருக்கிறது.

சொந்தமாக ஒரு கார் என்பதுதான், நடுத்தர வர்க்கத்தின் அந்தஸ்தையும் கவுரவத்தையும் தூக்கி நிறுத்தும் அம்சமென்று கடந்த சில பத்தாண்டுகளாகவே விளம்பர உலகம் பிரச்சாரம் செய்து வரும் சூழலில், ஒரு லட்ச ரூபாய்க்குள் ஒரு கார் என்பதும், அதற்காக ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் கடன் தர இருப்பதும் நல்ல விசயம்தானே என்று மக்களில் பலரும் மயங்கிக் கிடக்கின்றனர். வணிகப் பத்திரிக்கைகள் எல்லாம் ஏதோ ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் பால்வார்த்து டாட்டா மாபெரும் தியாகமே புரிந்துள்ளதாகப் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகின்றன.

டாட்டா அறிவித்துள்ள மலிவுவிலைக் காரின் மகத்துவத்தை நாம் அலசுமுன், சிங்கூர் மக்களின் துயரக்கதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

டாட்டாவின் மலிவுக் காருக்காக 997 ஏக்கர் விளைநிலத்தை சிங்கூர் மக்கள் பறிகொடுத்துவிட்டு, மாற்று வேலை கிடைக்காமல் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று சிங்கூரில் நிலத்தை இழந்து, வேலையையும் இழந்த குத்தகை விவசாயியான காளிபடா மஜ்ஹி, பட்டினியால் மாண்டு போயுள்ளார். கார் தொழிற்சாலையில் கிடைத்த காவலாளி, தோட்டக்காரர் போன்ற அற்ப வேலைகளும், விரைவில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததும் சிங்கூர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.
.

மற்றவன் மூளையை கழற்றிவைத்து விட்ட திமிரில், மூளை இருக்க என்று கேட்பதே பார்ப்பனியம் - பகுதி 2

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளைஉயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.

இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.

எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு ""ரெடிமேட்'' காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. ""சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்'' மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
.

மற்றவன் மூளையை கழற்றிவைத்து விட்ட திமிரில், மூளை இருக்க என்று கேட்பதே பார்ப்பனியம் - பகுதி 1

விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்! கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த விலைவாசி உயர்வு, இப்பொழுது எரிமலையைப் போல வெடித்திருக்கிறது. அரிசி, கோதுமை, சோளம், சமையல் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்கள் தொடங்கி, இரும்பு, நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற மூலப்பொருட்கள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தாறுமாறாக உயர்ந்து வருகின்றன. இந்தியா மட்டுமின்றி, ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த அனைத்து ஏழை நாடுகளும் இவ்விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த சுமதி, மூன்றுநான்கு வீடுகளில் வேலை பார்ப்பதன் மூலம் மாதம் ரூ. 3,000 வரை கூலி பெறுகிறார். ""தனது மாதாந்திர வருமானம் உயராதபொழுது, விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டே செல்வதாக''க் கவலைப்படும் சுமதி, ""இவ்விலை உயர்வைச் சமாளிக்கத் தனது குடும்பத்தின் உணவுத் தேவைகளைச் சுருங்கிக் கொண்டதாக''க் கூறுகிறார்.

வங்காள தேசத்தில், ஒரு கூலித் தொழிலாளி உணவுக்காக இரண்டு கிலோ அரிசி வாங்க வேண்டும் என்றால், தனது தினக்கூலியில் சரிபாதியை அரிசிக்கு மட்டுமே ஒதுக்க வேண்டிய அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள ஏழைநாடான ஏமனில், ஒரு ""லோஃப்'' ரொட்டியின் விலை, தொழிலாளர்களின் தினக்கூலியில் கால் பாகத்தை முழுங்கி விடுகிறது.

இந்த விலை உயர்வினால், பல்வேறு ஏழை நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுவார்கள் என உலக வங்கியே எச்சரித்திருக்கிறது.

எனினும் மன்மோகன் சிங்ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்சினையே அல்ல. ""பொருளாதார வளர்ச்சி இருக்கும்பொழுது, விலைவாசி உயரத்தான் செய்யும்'' என்ற பொருளாதார சூத்திரத்தைக் கூறி அவர்கள் இக்கொள்ளைநோயை நியாயப்படுத்தியும் வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என அவர்களும், தரகு முதலாளிகளும் பீதியூட்டுகிறார்கள். மேலும், ""மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி, அவர்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பதால்தான், (அதிக கிராக்கி, குறைந்த வரத்து என்ற அடிப்படையில்) அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதாக''க் கூறி, பழியை மக்களின் தலையில் சுமத்துகிறார்கள். விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், ""தென்னிந்திய மக்கள் அதிகமாக சப்பாத்தி சாப்பிடத் தொடங்கியதையடுத்துதான், கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக''க் கூறியிருக்கிறார்.
.

Thursday, June 5, 2008

யாழ் மேலாதிக்க பேரினவாத பாசிசத்துக்கு ஆதரவாக கூட்டப்படும் இலக்கிய சந்திப்பு


யூன் 15-16 திகதி நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், தேசிய இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக உரையாடும்படி இலக்கிய குழுவைச் சார்ந்த ஒருவர் கோரினார். இதை நாம் திட்டவட்டமாக நிராகரித்தோம். நாம் இதில் கலந்து கொள்வதாக இருந்தால், மக்கள் நலன்சார்ந்த ஒரு அறிவித்தலையும், கூட்டத்தில் கருத்து ஜனநாயகம் பேணப்படும் வகையிலான ஒரு ஜனநாயக வடிவத்தையும் கோரினோம்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

மும்பய்க் கலவர வழக்குகள் : காங்கிரசு கட்டிய கல்லறை

மகாரஷஹ்டிர அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவதை மறுக்கின்றது.
மும்பய்க் கலவரம் நடந்து முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்கலவரத்தை விசாரித்த சிறீகிருஷ்ணா கமிசன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டுப் பலரைக் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருக்கிறது.

எனினும், அரசியல் செல்வாக்குமிக்க குற்றவாளிகளுள் ஒருவர்கூட இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாகக் கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறீ கிருஷ்ணா கமிசன் அறிக்கையை அமல்படுத்துவோம்'' என்ற வாக்குறுதியை அள்ளி வீசி அதிகாரத்தைப் பிடித்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில்தான் மும்பய்க் கலவரம் தொடர்பான 1,371 வழக்குகள் போலீசு விசாரணையின் பொழுதே குழிதோண்டி புதைக்கப்பட்டன. 539 வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்; 253 வழக்குகள் நீதிமன்ற விசாரணை நாடகத்தில் சிக்கிக் கொண்டுள்ளன; 93 வழக்குகள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படாமல், அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டுவரும் இப்படிப்பட்ட நிலையில், சிறீகிருஷ்ணா கமிசன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் உச்சநீதி மன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. மகாராஷ்டிர மாநில காங்கிரசு கூட்டணி அரசு, இவ்வழக்கு தொடர்பாக கடந்த சனவரி 16 அன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், இந்து மதவெறிக்குக் காங்கிரசு பாதுகாவலனாக இருந்து வருவதை மீண்டும் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

மும்பய்க் கலவரம் தொடர்பாக, சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரே மற்றும் அக்கட்சியின் நாளேடு "சாம்னா'' மீதும் ஒன்பது வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மூன்று வழக்குகள் அரசாலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன; நான்கு வழக்குகளில் குற்றப் பத்திரிகை வினையப்படாததால் (Framing of charges) பால் தாக்கரேயும், பிற குற்றவாளிகளும் அவ்வழக்குகளில் இருந்து 1996ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டு விட்டனர்; மீதமுள்ள இரண்டு வழக்குகளிலும், பால் தாக்கரே நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.
.

Wednesday, June 4, 2008

டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?

டாலர் மதிப்புச் சரிவினால் இந்தியாவில் 80 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை எட்டப் போகிறது என மன்மோகன் சிங் கும்பல் ஒருபுறம் ஆரவாரம் செய்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி என்ற கத்தி அவர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

சர்வதேச நிதிச் சந்தையில் அமெரிக்க டாலர் சந்தித்து வரும் சரிவுதான் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தி வருகிறதே தவிர, இதில் இந்தியப் பொருளாதாரத்தின் சாதனை எதுவும் இல்லை. தாராளமயம் தனியார்மயம் தீவிரமாக அமலுக்கு வந்த 1991ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 26,90 ஆக இருந்தது. இது, கடந்த பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாகச் சரிந்து ரூ.45/ஐத் தொட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேச நிதிச் சந்தையில் விழத் தொடங்கியதையடுத்து, தற்பொழுது, ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 39/ ஆக அதிகரித்திருக்கிறது.

நமது நாட்டுச் செலாவணியான பணம் வலுவாக இருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதுதானே எனப் பாமரன் கருதலாம். ஆனால், ஏற்றுமதிக்கு முன்னுரிமை தரப்படும் தற்போதைய இந்தியப் பொருளாதாரத்தில், பணத்தின் மதிப்பு உயர்வு மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அதனால்தான், ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் இந்த "உயர்வை'' வரவேற்க மறுக்கிறார்கள்.

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியும்கூடத் திடீரென, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்ட விபத்து அல்ல; மாறாக, அமெரிக்கா திணித்துவரும் உலகமயம் மற்றும் அதனின் மேலாதிக்க நடவடிக்கைகளின் நேரடி விளைவுகள்தான் இந்த வீழ்ச்சி.
.

Tuesday, June 3, 2008

பாசிசத்துக்கு தத்துவம் கொடுக்கும் புலம்பெயர் மாமாக்கள்


மக்கள் தான் புரட்சி செய்ய வேண்டும் என்பதை ஏற்காத அனைவரும், அதற்காக போராடாத அனைவரும், இந்த பாசிசத்தின் ஏக பிரதிநிதிகள் தான். இது புலி மற்றும் புலியெதிர்ப்பு அரசியலுக்குள் புழுத்துக் காணப்படுகின்றது.

இன்று தமிழர் மத்தியில் புரையோடியுள்ள பாசிசத்தை, வெறுமனே புலிகள் மட்டும் பிரதிபலிக்கவில்லை. இலங்கை - இந்திய அரச ஆதரவு குழுக்களும் கூட, பாசிசத்தை பிரதிபலிக்கின்றது.

சமூகத்தின் உயிர்த்துடிப்பான செயல்பாடுகளை எல்லாம் முடக்கி, அதன் இயல்பான இயங்கியல் வாழ்வியலை சிதைத்து, மனிதனின் அடிப்படை உரிமைகளை எல்லாம் பறித்துவிட்டு, 'தேசியம்" 'ஜனநாயகம்" என்பதை, தமது பாசிச வித்தையாக்கினர். இதை மனித முகம் கொண்ட ஒன்றாக காட்டுகின்றனர். தமது இந்த சொந்த செயலுக்கு ஏற்ப மக்களை தலையாட்டும் பொம்மைகளாக்கி, அவர்களை எல்லாம் ஊமையாக்கி விடுகின்றனர் இந்தப் பாசிட்டுகள்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

குஜராத் : இந்து பயங்கரவாத்தின் இன்னொரு முகம்

மோடி ராஜ்ஜியத்தில் 'இந்த"ப் பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை குஜராத்தில் நடந்துவரும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

இந்துவெறி பாசிச பயங்கரவாதி மோடியின் ராமராஜ்ஜிய பேயாட்சிக்கு பாசிச ""துக்ளக்'' சோ விழா எடுத்துப் பாராட்டுகிறார் என்றால், அக்ரஹாரப் பத்திரிகையான ""கல்கி''யோ, தொடர்ச்சியாக மோடி சிறப்பிதழ் வெளியிட்டுத் துதிபாடுகிறது.

மோடி என்றாலே குஜராத்தில் நிலவும் பாசிச பயங்கரவாத ஆட்சியும், முஸ்லீம் இனப்படுகொலையும்தான் நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வரும். இவற்றை மூடி மறைத்துவிட்டு, அந்நிய முதலீட்டைப் பெறுவதிலும் தொழில் வளர்ச்சியிலும் அம்மாநிலம் முன்னோடியாகத் திகழ்ந்து, மோடியின் ஆட்சியில் ""ஊக்கமிகு குஜராத்''தாக மாறிவிட்டதென்று அப்பத்திரிகைகள் ஏற்றிப் போற்றுகின்றன. ஆனால், பார்ப்பனப் பத்திரிகைகளால் ஏற்றிப் போற்றப்படும் குஜராத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட மாணவி மீது நடத்தப்பட்ட வன்புணர்ச்சிக் கொடூரத்துக்கு எதிராக அம்மாநில மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களைத் தொடுத்து, மோடி ராஜ்ஜியத்தின் யோக்கியதையை நாடெங்கும் திரைகிழித்துக் காட்டியுள்ளனர்.

வட குஜராத்தில் உள்ள பதான் நகரின் அரசு ஆசிரியைப் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட மாணவி ஒருவரை (எதிர்கால நலன் கருதி அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை), அக்கல்லூரியின் பேராசிரியர்கள் 6 பேர் அவரை மிரட்டிக் கூட்டாகப் பாலியல் வன்புணர்ச்சி செய்து வந்திருக்கின்றனர். ""தேர்வுகளில் அகமதிப்பீட்டு மதிப்பெண்களைக் குறைத்து விடுவோம்'' என்று மிரட்டியே கடந்த 6 மாதங்களில் 14 முறை அக்கல்லூரியின் கணினிக் கூடத்திலும், ஆய்வுக் கூடத்திலும் வைத்து வன்புணர்ச்சியை ஏவியுள்ளனர்.
.

Monday, June 2, 2008

விடுதலைக்கான (தமிழ் மக்களின்) மாற்றுப் பாதை என்ன?

தமிழ்மக்கள் தாம் போராடாமல், தமக்கான விடுதலையை ஒருநாளும் அடையமுடியாது. இதுவல்லாத அனைத்துமே மக்களுக்கு எதிரானது. மக்களின் விடுதலையில் அக்கறையுள்ள அனைவரும் மக்கள் போராட வேண்டும் என்பதை அங்கீகரிக்காத வரை, மாற்றுப்பாதை என்பது அவர்களைப் பொறுத்தவரை தமது மக்கள் விரோத அரசியலை நியாயப்படுத்த உதவும் வாதத்துக்கு உரிய வெற்றுச் சொல்லாடல்கள் தான்.

மக்கள் போராடாமல், மக்கள் தமது விடுதலையை அடைய முடியாது என்பதை, யாராலும் மறுக்க முடியாது. இந்த உண்மையோ, ஒருபுறம் பளிச்சென்று உள்ளது. மறுபக்கம் மக்கள் தமது எதிரியாக கருதி யாருக்கு எதிராக போராட வேண்டியுள்ளதோ, அவன் தான் கூறுகின்றான் மக்கள் போராட்டம் சாத்தியமில்லை என்று. அதேநேரம் அவனே தான் தன்னை முற்போக்குவாதியாக, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரானவனாக, காட்டி தான் மக்களுக்காக போராடுவதாகவும் கூறிக்கொள்கின்றான்.

கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, June 1, 2008

வேசி... அறம்… அனுபவம்.

அது ஒரு தகரப் பெட்டிக்கடை. வெளியில் நின்றுதான் பாதாம் பால் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளைக் கவனித்தேன். கடையை விடத் தள்ளி கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும் வெளிச்சம் குறைந்த பகுதியில் நின்றிருந்தாள். அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம்கூட பொருந்தாமல் தெரிந்தாள். நடுத்தர வயதிலும் பலமான மேக்கப். வழக்கு மொழியில் சொன்னால் செமகட்டை. நான் பார்ப்பது தெரிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தாள். எனது ஆறாவது அறிவுக்கு உடனடியாகப் புரிந்தது.

""டே ராசப்பா!..... எஸ்கேஏஏஏப்..'' அவசரமாக பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பைக்கை உதைத்தேன். அன்று இரவு என் கனவில் மேக்கப் சுந்தரி சிரித்து விட்டுச் சென்றாள்.

மறுநாள் மாலை ஆக ஆக ஒரு வேலையும் சரியாக ஓடவே இல்லை. ஒரே பரபரப்பாக இருந்தது. பாதாம் பால் வேறு நல்ல சுவையாக இருந்து தொலைத்தது. ""என்னடா! பத்து நாள் கக்கூஸூ போகாதவன் மாறி மூஞ்சிய வச்சுட்டு திரியுற?'' நண்பன் வேறு நக்கலடித்தான். எனது குறுகுறுப்பு அதிகரித்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் ""டே ராசப்பா! இது உனக்கு ஒரு சவால்டா. உன்னோட ஒழுக்கத்தோட பலம் இவ்வளவுதானா? இன்னிக்கு
.