தமிழ் அரங்கம்

Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Sunday, January 24, 2010

24.01.2010 – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

நாளை மறுநாள்…..

நாளை மறுநாள் இலங்கை மக்கள் ஓர் ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பொன்றை நடாத்தவுள்ளார்கள். இருபதுபேர் வரையில் போட்டியிடுகின்றனர். இவர்களில் சரத் – மகிந்தா இருவருமே முன்னணியில் உள்ளார்கள்.

இலங்கையில் ஜனநா(ண)யமான ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிற்கு மக்கள் வாக்களித்ததாக வரலாறு இல்லை. லஞ்சம் ஊழல் மோசடி தில்லுமுல்லுகளுக்கூடாகவே, ஜே. ஆர். முதல் மகிந்தாவரை வந்துள்ளார்கள். இம்முறைத் தேர்தல்கூட இதற்கு விதிவிலக்கல்ல. நீதியான, சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது. தான் பதவியில் நீடிப்பதில் பயனில்லை என்கின்றார் தேர்தல் ஆணையாளர். அத்துடன் கடந்த காலங்களைப் போலல்லாது, இத்தேர்தல் தேசிய சர்வதேச ரீதியில் பெரும் பொருளாக்கப்பட்டு, இரு முகாம்களாகியுள்ளது. இருமுகாமிலும் நிற்பவர்கள் கூட மக்கள் விரோத ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கிலான ஓர் நாணயத்தின் இருபக்கங்களே.

இருவரும்; “நிறைவேற்று அதிகாரம்” கொண்டதைப் பெற்றுக்கொள்வதற்காக தங்களால் இயன்ற சகலதையும் செய்கின்றார்கள். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதிமுறை, “ஆணைப் பெண்ணாகவு...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


வாக்குச் "சீட்டைச் செல்லுபடியற்றதாக்க", "வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி?"

புதிய ஜனநாயகக் கட்சியின் மதியுரைஞரும் தத்துவ வழிகாட்டியுமான சிவசேகரம், ஒரு பச்சோந்திக் கவிதை மூலம் பாராளுமன்ற பன்றித் தொழுவத்துக்கு உங்களை வழிகாட்டுகின்றார். தேர்தலை நிராகரி!, புரட்சி செய்! என்று கோசத்தின் கீழ், இவர்கள் மக்களை வழிகாட்டுவது கிடையாது. அதற்காக இவர்கள் கவிதை எழுதுவதும் கிடையாது. "சீட்டைச் செல்லுபடியற்றதாக்கு" எப்படி என்ற கவலையுடன், அதை வழிகாட்டி கவிதை எழுதுகின்றார்.


இந்தத் தேர்தல் எப்படிப்பட்டது? யாருக்கு எப்படி எந்த வகையில் சேவை செய்கின்றது என்பதை, தேர்தலை நிராகரி என்று கூறி விளக்குவது கிடையாது. இவர்கள் முன்பு தேர்தலில் நின்றவர்கள்;. இதனால் அரசியல் பச்சோந்தித்தனம் தான், இவர்களின் அரசியல் உள்ளடக்கமாகி விடுகின்றது. தேர்தல் என்னால் என்ன?, அதில் வாக்கு என்றால் என்ன?, என்பதைப் புரிந்துகொண்டு, அதை மற்றவர்களுடன் விவாதித்து, கூட்டாக தேர்தலை நிராகரிப்பது தான், புரட்சிகரமான செயல் சார்ந்த நடைமுறையாகும்.

சமூக அறியாமையில் இருந்து மீள்வதும், அதற்கு உதவுவதும், மற்றவர்களுடன் அதை பகிர்வதுதான் புரட்சிகரமான செயல். தேர்தலை நிராகரி! புரட்சி செய்! இதுதானே சரியான அரசியல் கோசமாகும்.

இதைச் செய்யமால் "சீட்டைச் .....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Saturday, January 23, 2010

எது பயங்கரவாதம்?

"இனியும் இது நீடிக்க முடியாது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்'' என்று வானொளியில் தோன்றிய அமெரிக்காவின் தலைமைக் கொலை வெறியன் öரானால்டு ரீகன் முழங்கினான்.


அமெரிக்க தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டி ஒன்று இடுகாட்டுக்கு இராணுவ மரியாதையுடன் போகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் 40 அமெரிக்கப் பணயக் கைதிகளுடன் நிற்கும் கடத்தப்பட்ட விமானத்திலிருந்து வீசியெறியப்பட்ட கடற்படை சிப்பாய் ராபர்ட் டீன் ஸ்டேதமின் சவப்பெட்டி.

அது புதைக்கப்படும் முன்னரே எல்சால்வடாரின் தலைநகர் சான்சால்வடாரிலிருந்து ரீகனுக்கு அதிர்ச்சியூட்டும் மற்றொரு செய்தி. மேலும் ஆறு அமெரிக்கர்கள் நாலு கடற்படை வீரர்கள், இரண்டு வியாபாரிகள் உட்பட பதின்மூன்று பேர் தெருவோர உணவு விடுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்பே ஜெர்மனியின் பெரு நகரம் ஃப்ராங்க்பர்ட் விமானநிலையத்திலிருந்து இன்னுமொரு துயரச் செய்தி. பயணிகள் மண்டபத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பயணப் பெட்டி வெடித்துச் சிதறியது. இடிபாடுகளிடை÷ய ஒரு போர்த்துக்கீசியன், இரண்டு ஆஸ்திரேலியக் குழந்தைகளின் பிணம், ஓர் அமெரிக்கன் உட்பட ஒன்பது தேசத்தைச் சேர்ந்த 42 பேர் படுகாயமுற்றனர்.

1985 ஜூன் க..........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, January 22, 2010

“நாமல் – எமில்காந்த புகைப்படத்தை வெளியிட்டது தான் என்ற சந்தேகத்தில் என்னைக் கொலை செய்ய ஜனாதிபதி முயற்சிக்கிறார்” – டிரான் அலஸ்

அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நாமல் ராஜபக்~ மற்றும் எமில் காந்தன் தோன்றும் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வழங்கியது தான் என்ற சந்தேகத்தில் ஜனாதிபதி தன்னைக் கொலை செய்ய முயற்சித்துவருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு செயலாளர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தன் வீட்டின் மீது இன்று (22) அதிகாலை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி அறிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கோழைத்தனமானத் தாக்குதல் எனவும் அவர் கூறியுள்ளார். ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


போலி ஜனநாயக தேர்தலும் மக்கள் விரோத கட்சிகளும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் மரண ஓலங்கள் இன்னமும் ஒலித்து கொண்டேயிருக்கின்றது யுத்தத்தினால் அங்கவீனரானோர் மற்றும் காயமடைந்தோர்களின் ரணங்கள் இன்னமும் ஆறவில்லை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்தவர்களது மரண பயம் இன்னமும் அடங்கவில்லை முட்கம்பி வேலிகளின் முகாம்களுக்குள் லட்சக்கணக்கானோர் இன்னமும் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விக் குறியுடன்…

ஆனால் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களும் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளும் இந்த மக்களிற்கு நடந்து முடிந்த 21ம் நூற்றாண்டின் மிகப் பாரிய இன அழிப்பினை பற்றிய எத்தகைய பிரக்ஞையும் இன்றி இனப் படுகொலையை முன்னின்று நடத்திய போhக்; குற்றவாளிகளுக்கு தமிழர்களின் ; பொன்னான வாக்குகளை வழங்கும்படி தமது எஜமான விசுவாசத்தினை காட்டி நிற்கின்றனர்

எமது தமிழ் தலைமைகள் அன்று மலையக மக்களின் வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமையினை சிங்கள ஆட்சியாளர்கள் பறித்த போது அதற்கு ஆதரவாக வாக்களித்து தமது மந்திரி பதவிகளை பாதுகாத்துக் கொண்டனர்

1977 இல் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


அவசரமான தனது தேர்தலில் மகிந்தா தோற்றால், மகிந்தா குடும்பம் இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்யுமா!?

இன்னும் இரண்டு வருடங்கள் மகிந்தா குடும்பம் கொள்ளையிடவும், ஒட்டுமொத்த இலங்கை மக்களை ஒடுக்கவும், தமிழ் மக்களை இனவழிப்பு செய்யவும், சட்டப்படியான ஒரு கால அவகாசம் இருந்தது. இருந்தும் இன்று அவசரமாக தேர்தலை நடத்தக் காரணம் என்ன?


மக்களுக்கு ஒரு சுபீட்சத்தை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்கவா!? இல்லை. இன்னும் ஏழு வருடங்கள், மக்களை ஓடுக்கி அவர்களை சுரண்டி தின்பதற்குத் தான் இந்த அவசரமான தேர்தல் கூத்;து. இன்னும் இரண்டு வருடத்தின் பின் தோதலை நடத்தினால், தாங்கள் வெல்ல முடியாது என்று உறுதியான ஒரு நிலையில் தான், இந்த அவசரமான திடீர் "ஜனநாயகத்" தேர்தல்.

ஆனால் விளைவு என்ன? இன்றே மண்ணை கவ்வி விடுவார் என்ற அச்சம், பீதி மகிந்த குடும்பத்தையே ஆட்டிப்படைக்கின்றது. தோற்றால் ஒரு இராணுவ ஆட்சி மூலம், தங்கள் சர்வாதிகார அதிகாரத்தை தக்க வைக்கும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றது.

அடுத்த இரண்டு வருடம் பின்னான தேர்தலுக்கான அவசியம் ஏன் இன்று எழுந்தது? எதிர்காலத்தில் மக்களுக்கு எதிரான அரசியல் விளைவுகள் எது.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…

அரியணைக்கனவொடு ......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Thursday, January 21, 2010

துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்

மே 2009இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகள் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப் போராட்டத்தைப் பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை பகையுணர்வு, மவுனம்.


புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த ஒரு சூழலில், அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக, விமரிசிப்பது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை என்பது அவர்களுடைய கருத்து. பாராட்டுபவனே நண்பன், விமரிசிப்பவன் எதிரி என்ற ஓட்டுக்கட்சி அரசியலின் பண்பாடு இவர்களுடைய பார்வையின் மீது செலுத்தும் செல்வாக்கு இத்தகைய கருத்து உருவாவதற்குக் காரணமாக இருக்கின்றது.

ஒரு போராட்டத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமரிசிப்பதென்பது, அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குச் செய்யப்படும் உதவி. குறிப்பிட்ட இயக்கங்கள் அல்லது தலைவர்களின் கவுரவத்தையும் நலனையும் காட்டிலும், மக்களுடைய போராட்டத்தின் நலன் மேம்பட்டது. வெளிப்படையான அரசியல் விமரிசனங்களும் விவாதங்களும்தான் தவறுகளிலிருந்து மீள்வதற்கும், சரியான வழியைக் கண்டறிவதற்கும் வழி என்பது எங்களுடைய பார்வை.

விமரிசனங்கள் முடக்கப்படும் இடத்தில் தான் துரோகிகள் பெருகுகின்றார்கள். வெளிப்படையான அரசியல் விவாதம் மறுக்கப்படும் இடத்தில்,........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


பிரபாகரன் துப்பாக்கி முனையில் உருவாக்கிய புலித்தேசியம், இன்று துரோகத்துக்காக தனக்குள் மோதுகின்றது

புலித் தலைவர் முள்ளிவாய்க்காலில் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கே துரோகம் செய்தார். அவரின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்ந்த புலித்தேசியம், பிரபாகரனின் துரோகத்தைப் போல் போட்டிபோட்டு புளுக்கின்றது. மகிந்தா, சரத்பொன்சேகா முதல் ஏகாதிபத்தியம் வரை ஆளுக்காள் தங்கள் தலைவரின் புலித்தேசியம் இதுதான் என்ற விளக்கத்துடன், தங்கள் நக்குண்ணித்தனமான துரோகத்தை தேசியமாகக் கூறிப் பிரகடனம் செய்கின்றனர்.


பிரபாகரன் தன் துப்பாக்கி மூலம் மேய்த்த புலித் "தேசியம்", படுகொலைகள் மூலம் கட்டமைக்கப்பட்டது. இது புலித்தேசியமாக மாற, துரோகம் தியாகம் என்ற வறையறையின் எல்லைக்குள் அரசியலை முடக்கியது. இதற்கு வெளியில் சிந்திப்;பது துரோகமாக காட்டி, பிரபாகரன் தன் வழியில் அனைத்தையும் போட்டுத் தள்ளினான்.

இதற்கு அப்பால் பிரபாகரனின் துப்பாக்கிக்கு கீழ் வாழ்வதே தேசியமாகியது. இப்படி துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள் தேசிய தியாகிகளாக, அதை மீறி மேய்ந்தவர்கள் துரோகிகளானார்கள். இன்று அதை மேய்க்க பிரபாகரனுமில்லை, அவனின் துப்பாக்கியுமில்லை. அவனின் துப்பாக்கிக்கு கீழ் மேய்ந்தவர்கள், இன்று பிரபாகரனை மேய்கின்றனர்.

அன்று பிரபாகரன் தன் துப்பாக்கி.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்!

அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. ""அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

நேபாளத்தின் புதிய இராணுவத் தலைமைத் தளபதி சத்ரமான் சிங் குருங், கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லிக்கு வந்து இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூரையும் அரசுத் தலைவர் பிரதீபா பட்டீலையும் சந்தித்திருக்கிறார். அரசுமுறை மரியாதை நிமித்தம் இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், மாவோயிஸ்டுகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி விவாதிக்கவே அவர் வந்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு போடப்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் இராணுவப் படை நேபாள இராணுவத்துடன் இணைக்கப்பட்டு, புதிய நேபாள இராணுவம் கட்டியமைக்கப்பட வேண்டும். ஆனால், இந்தியத் தலைமைத் தளபதியோ, அவ்வாறு........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, January 20, 2010

இன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு இலங்கையில் நிலவிய இரண்டு பாசிசப்போக்குகளும் தம் சொந்த இருப்பு சார்ந்து, அது நடத்திய யுத்தமும் களையெடுப்பும் சமூகத்தை இயல்பான சமூக ஓட்டத்தில் இருந்து அன்னியமாக்கியது. ஒரு பாசிசம் அழிந்ததன் மூலம், யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் சமூக முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை. அவை பல முனையில், பலவாக தீவிரமாகின்றது.


சமூக முரண்பாடுகளை களையும் வண்ணம், சமூகத்தை வழிநடத்தக் கூடிய ஒரு முன்னேறிய சமூக முன்னோடிகள் பிரிவு இன்று இலங்கையில் கிடையாது. இதனால் சமூகமோ பல முனைகளில் ஒடுக்கப்படுகின்றது. ஓடுக்குபவன் முரண்பாட்டுகளுக்கு பின்னால், மக்களை பிரித்து வழிநடத்துகின்றான்.

விளைவு சமூகம் பல முனைகளில், பாரிய சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. மனிதனாக வாழ்வதற்குரிய எந்த அடிப்படையான வசதிகளும் இன்றி தத்தளிக்கின்றது. மக்களின் அடிப்படையான வாழ்வியல் உரிமைகள் மறுக்கப்படுகின்றது. மக்களுக்கு இடையில் திணிக்கப்பட்ட பிளவுகளால், சமூகங்களுக்கு இடையில் பல பிளவுகள். பிளவுகள் கொண்ட சமூகமாக மொத்த நாடும் மாறியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் இடத்துக்கிடம் வேறுபட்டு நிற்கின்றது. பல முரண்கொண்ட முரண்பாடுகளுடன்,...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, January 19, 2010

யாழ் சமூகம் 20 வருடத்துக்கு முந்தைய மாதிரி ஒரு சமூக அமைப்பல்ல!?

நாடு செல்லும் புலம்பெயர் தமிழன் ஒவ்வொருவரும் சொல்வது இதைத்தான். 20 வருடத்துக்கு முந்தைய யாழ் சமூகமல்ல இன்றைய யாழ் சமூகம் என்று சொல்வதன் மூலம், அதில் இருந்து அன்னியமாகின்றனர். புலம்பெயர் தமிழர் தாங்கள் அப்படியே இருக்கின்ற ஒரு மனநிலையில் இருந்து, தம்மில் இருந்த அன்னியமாகிவிட்ட யாழ் சமூகத்தைப் பார்க்கின்றனர்.


அவர்கள் யுத்த சிதைவுகளை வைத்துக் கூறவில்லை. சுற்றுவட்டாரத்தில் நடந்த மாற்றத்தை வைத்துக் கூறவில்லை. கால் இடறும் வண்ணம் உள்ள இராணுவ நடமாட்டத்தை வைத்துக் கூறவில்லை. அவர்கள் எதைக் வைத்துக் கூறுகின்றனர்.

அது தன் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், அது சார்ந்த வாழ்வியல் முறையையும் இழந்து, நிற்கும் லும்பன் தனத்தை வைத்துக் கூறுகின்றனர். ஆம், இன்றைய யாழ் சமூகம் தன் வாழ்வுசார் சமூகப் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கூட இழந்து நிற்கின்றது. இதுதான், இவர்கள் சொல்;லும் செய்தி. அது தன் நுகர்வு வெறியால் வெம்புகின்றது. லும்பன் குணாம்சம் கொண்ட சமூகமாக மாறி, தனிமனிதர்களைச் சுற்றிய ஒரு உலகம் கட்டமைக்கப்பட்டிருகின்றது. லும்பன் தனத்துடன் கூடிய சுயநலம், எல்லா சமூக விழுமியங்களையும் அழிக்கின்றது.

பணம் தான் வாழ்வின் விழுமியமாக, அதை உழையாது பெற்று வாழ்வதும், வரைமுறையின்றி நுகர்வதும் இலட்சியமாகின்றது. உலகமயமாதல் சந்தை முதல் நாடகத் (சீரியல்) தொடர்வரை இதற்கு அமைய, உழைப்பில் இருந்த யாழ் சமூகத்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Monday, January 18, 2010

பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும்-எம்.ஏ. சுசீலா

பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்;அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக…மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.

இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான சோகக் கதையைச் சொல்லி நெக்குருக வைக்கிறது.......

இதன் உள்ளர்ந்த நோக்கம் அனுதாபத்தை மட்டும் கிளர்த்திவிட்டு ,அங்கலாய்ப்புக்களைச் சம்பாதித்துக் கொள்வதல்ல.
பாரதி சொல்வதைப் போன்ற வெற்றுப் புலம்பல்களும்,பரிதாபப் பெருமூச்சுக்களும், உச்சுக் கொட்டல்களும்,இரங்கல் தீர்மானங்களும் இவர்களுக்குத் தேவையில்லை.சமூக விலக்கம்,மனித ஜீவிகளாகவே மதிக்கக் கூசும் மனத்தடைகள் இவற்றிலிருந்து சமூகம் விடுபட்டாக வேண்டும் என்பதே இந்த உரைவழி சுனிதா கிருஷ்ணன் விடுக்கும் செய்தி.

வலியின் கடுமை…அதன் வீரியம் இவற்றின் நிஜமான தாக்க........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, January 17, 2010

அடிப்படை நேர்மையற்ற இலக்கிய திருட்டில் ஈடுபடும் "மே18" என்ற சதிக் கும்பல் (வியூகம் : பகுதி 04)

மே 18 வரை எதையும் மக்களுக்காக முன்வைத்து போராடதவர்கள் இவர்கள். தமிழீழக்கட்சியின் அரசியலுடன் புலிப்பினாமிக் கும்பலாக மாறி, காட்டிக்கொடுத்தபடி படுத்துக் கிடந்தவர்கள் தான் இந்த திடீர் "மே 18" இயக்கக்கரார்கள். மே 18க்கு பின், திடீரென தம்மை "முன்னினேறிய பிரிவு" என்று கூறிக்கொண்டு திடீரென அரசியல் "வியூகம்" போடுகின்றனர்.

இந்த வியூக அரசியல் எப்படிப்பட்டது? அதன் தார்மிக நேர்மை எப்படிப்பட்டது?

1. கடந்தகால மக்களுக்கான போராட்டங்களையும், தியாகங்களையும் மறுப்பதுடன், அந்த அரசியலையும் (மார்க்சிய லெனிய மாவோ சிந்தனையையும்) தூற்றுகின்றனர்.

2. கடந்தகால எமது விமர்சனங்களை திருடுகின்றனர். அதாவது இலக்கிய திருட்டில் ஈடுபடுகின்றனர். எமது விமர்சனம் முன்வைத்த வர்க்க கண்ணோட்டம் சார்ந்த அரசியல் சமூகக் கூறுகளை நீக்கி, தன்னியல்பு சார்ந்ததாக அதைத் திரித்து தமது கண்டுபிடிப்பாக வெளியிடுகின்றனர்.

3. மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைமுறையை "மார்க்சியத்தின்" பெயரில் மறுத்து சேறடிக்கின்றனர்.

"வியூகம்" இதழின் இறுதிக் கட்டுரையான "விடுதலைப் போராட்டமும் புலிகளும்" புலியை விமர்சிக்கின்றது. இந்த விமர்சனம் புலியை "........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் … செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்ஓ கெயிட்டியே!…..

ஓ கெயிட்டியே!…..

இவ்வருடத்திலாவது எம்மை நிம்மதியாக மனிதனாக வாழவிடு என புத்தாண்டை வேண்டுவோம். ஆனால் இப்புத்தாண்டு பிறந்ததிலிருந்து அரைமாதக் கலன்டர் கடதாசியைக் கூட கிழிப்பதற்கிடையில் இயற்கையின் சீற்றம் கெயிட்டியை (ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்களையும் பல பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்களையும்) காவு கொண்டுள்ளது. நான்கு லட்சம் மக்களை காயப்படுத்தியுள்ளது.

இவ்வுலகின் அதிகாரத திமிர் கொண்ட ஆளும் சுரண்டும் வர்க்கம் எம்பூமியின் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி இயற்கையை அழிப்பது ஒருபுறம். பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அதை போர்களாக்கி உலக மக்களை அழிப்பது இன்னொருபுறம். இயற்கை சீற்றம் கொண்டு மழையாய், வெள்ளப்; பெருக்காய், பெருங் காற்றாய், சூறாவளியாய், நிலநடுககமாய், சுனாமியாய், தொற்று நோய்களாய் எம்மானிடத்தை அழிப்பது மற்றொர்புறம். இவவுலகின் மக்கள் அதிகாரச் செருக்கு, இயற்கைச் சீற்றததிற்கும் ஏதிராகப் போராடுகின்றார்கள். போராடியே தீரவும் வேணடு;ம். மனிதகுலத்தின் வரலாறு அதிகாரத்திற்கும் – இயற்கைக்கும் எதிரான போராட்டமே. இன்றைய இவ்வுலகம் பற்பல லட்சம் வருடங்களாக மக்களின் போராட்டத் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டதே! அண்மையில் அமெரிக்கா கெயிட்டியை ஆக்கிரமித்த போது, அந்த மக்கள் சிந்திய இரத்தம் இன்னும் காயவில்லை, அதற்குள் இயற்கை அந்த மக்களை கொன்று குவித்துவிட்டது. கெய்ட்டி மக்களின் தியாகளுக்கும், மரணங்களுக்கும் தலைசாய்ப்போம்.

சத்தியவான்களின் குற்றச்சாட்டுக்கள்

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறு தமது நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் முஸம் மிலலுக்கு மூன்று கோடி ருபா லஞ்சம் கொடுத்து விலை பேசப்பட்டதாம். அதில் முப்பது லட்சம் வெள்ளவத்........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, March 26, 2009

காஷ்மீர் சட்டமன்ற தேர்தலும் இந்திய அரசின் பகற்கனவும்

காஷ்மீர் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்ததை தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றியாகக் காட்டுவது அரைவேக்காட்டுத்தனமானது. காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் இந்திய தேசியவாதிகளை ஆனந்தக் கூத்தாட வைத்துவிட்டது. அமர்நாத் பனிலிங்கக் கோவிலுக்கு நிலம்
ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்குக் குலுங்கியதைக் கண்டு கிலி பிடித்துப் போயிருந்த இந்திய அரசு, அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தலாமா எனத் தடுமாறிக் கொண்டிருந்தது. தேர்தலை நடத்தினால், மக்கள் வாக்களிக்க வருவார்களா எனச் சந்தேகப்பட்டுக் கொண்டு இருந்தது.

ஆனால், யாருமே எதிர்பாராதவண்ணம் அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 61.23 சதவீத வாக்குகள் பதிவாகின. அம்மாநிலத் தலைநகர் சிறீநகரில் 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 5 சதவீத வாக்குகள்தான் பதிவாகின. இம்முறையோ அந்நகரைச் சேர்ந்த சட்டசபை தொகுதிகளில் 21.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு நடந்துள்ள தேர்தல்களில், இச்சட்டசபைத் தேர்தலில்தான் 1989ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தபடி அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல்கள் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்துள்ளதைக் காட்டி, காஷ்மீர் மக்கள் "தீவிரவாதத்தை''ப் புறக்கணித்துவிட்டதாகவும்; பிரிவினைவாதத்திற்கு டாட்டா காட்டிவிட்டதாகவும் இந்திய அரசு கூறி வருகிறது. நடுநிலையாளர்களோ, "காஷ்மீர் மக்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை கொண்டு வாக்களித்திருப்பதால், இந்திய அரசு...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, June 19, 2008

மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல் : 'வன்முறையே வெல்லும!"; - "மார்க்கிஸ்டு"களின் தேர்தல் கொள்கை

பஞ்சாயத்துத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே எதிர்க்கட்சியினரைப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல பகுதிகளில் சி.பி.எம்.குண்டர்கள் விரட்டியடித்தனர். குறிப்பாக,சிங்கூர்நந்திகிராமம் பகுதியில் சி.பி.எம் குண்டர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு, தமது வாழ்வுரிமைக்காகப் போராடிவரும் இப்பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ""சிங்கூர்நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்காக கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட சி.பி.எம் கட்சியினருக்கு இத்தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்'' என்று பிரச்சாரம் செய்து வந்த நந்திகிராமத்தைச் சேர்ந்த பூமி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னோடிகள் மீது சி.பி.எம். குண்டர்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தினர். அவர்களின் வீடுகள்வாகனங்கள் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டன.
சிங்கூர்நந்திகிராமம் பகுதியில், அன்னிய சக்திகள் ஊடுருவி மக்களைத் தூண்டிவிட்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகப் புளுகி, அடக்குமுறைகளை நியாயப்படுத்தி வந்த சி.பி.எம் கட்சி, தற்போதைய பஞ்சாயத்து தேர்தல் வெற்றி மூலம் தமது செல்வாக்கை நிரூபிக்கலாம்; பூமி பாதுகாப்பு இயக்கத்தினரை இத்தேர்தலைச் சாதகமாக்கிக் கொண்டு பழிவாங்கி ஒடுக்கலாம் என்று கணக்கு போட்டு, இப்பகுதிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு குண்டர் படைகளை ஏவியது.

சி.பி.எம் குண்டர்படையின் வன்முறைகள் பற்றிய புகார்கள் குவியத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் மத்திய ரிசர்வ் போலீசுப் படையை இப்பகுதிகளில் குவித்தது. ஆனாலும், உள்ளூர் போலீசின் துணையுடன் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதலைத் தொடர்ந்தனர். மத்திய ரிசர்வ் போலீசு பல இடங்களில் சி.பி.எம்.குண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி, பாதுகாப்பு அளித்த பிறகே எதிர்க்கட்சியினர்.. கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்