தமிழ் அரங்கம்

Saturday, September 24, 2005

ராஜனி திராணகம நேர்மையான...

ராஜனி திராணகம நேர்மையான அரசியலை திரிப்பதற்கு எதிராக

ராஜனி திராணகம தனது நடைமுறை சார்ந்த சொந்த போராட்டத்தில் மக்களுடன் சோந்து நின்றார். மிக கொடூரமான எதார்த்த நிலைமைகளில் கூட, அவரின் வீரம்செறிந்த போராட்டம் மக்களைச் சார்ந்து இருந்தது.

அதை அவர் தனத சொந்த நடைமுறை சார்ந்து முறிந்தபனைக்கான நூலில் எழுதிய போது "எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்ததிற்குள் நாமும் புதைந்து போய்விடுகிறோம். புத்தி சுவாதீனத்தின் மெல்லிழையையும் இழந்து, எந்தவிதமான எதிர்ப்புனர்வுமின்றி இந்தப் பயங்கரவாத வன்முறைப் புதைகுழிக்கு சமூகம் இடங்கொடுத்துவிடப் போகிறதோ என்றும் நாம் அஞ்சுகின்றோம்;. மனித ஆளுமைகள், ஆற்றல்களை எல்லாம் பறிகொடுத்துவிட்ட நிலையில் சமூகம் இருகின்றது. ஒவ்வொரு புத்தியுள்ள மனிதனும் எரிந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறான். எங்கள் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் இல்லை. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் இல்லை. ஏஞ்சினியர்களோ மேசன்மாரோ அல்லது வேறு தொழிலாளர்களோ இல்லாததால் -----" ஒரு தேசத்தின் வாழ்வியல் விதியை குறித்து ராஜனி திராணகம தனது படுகொலைக்கு சில நாட்களின் முன்பு இப்படித் தான் எழுதினார்.

அவர் தொடர்ந்தும் எழுதும் போது "எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டவும் அதனை ஒழுங்குறச் செய்வதற்கான சில வழிவகைகளைத் தேடவும் இது முக்கியம் என்பதற்காகத்தான், புறநிலை ஆய்வு என்பதை வெறும் கல்விவளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சியாக மட்டும் நாம் கருதவில்லை. புறநிலை நோக்கும், சத்திய தேடலும், விமர்சபூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும் எமது சமூகத்தத்திற்கு இன்று மிக அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம். இதனை விட்டால் நமது சமூகத்திற்கு வேறு மார்க்கமில்லை என்ற ரீதியில் நாம் இதை கைக்கொண்டுள்ளோம்" என்றார். ராஜனி திராணகமவின் எழுத்து எவ்வளவு முக்கியத்துவமுடையதோ, அந்தளவுக்கு அவரின் ஏழுத்தில் உள்ள உண்மையும் மிக முக்கியத்துவம் உடையதாகவே எம்முன் உள்ளது.

அவர் இதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி கூட எழுதியுள்ளார். ராஜனி திராணகம படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களின் முன்பாக எழுதிய கட்டுரையில் "... மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான – தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள்ளிலிருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் உருவாக மாட்டாது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட கடினமான பணியாகும்" என்றார்.

இதையா இன்று ராஜனி திராணகம பெயரில் செய்கின்றனர்? இல்லையே! ராஜனி திராணகம பெயரில் பாய்விரித்து விபச்சாரம் செய்கின்றனர்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

கோழைகள் தயாரிக்கின்ற..

"கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடத்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்."

மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசீச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர்.

விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net

தனியார்மயத்திற்கு மனித...

தனியார்மயத்திற்கு மனித முகம் பொருந்துமா?

...சில வாரங்களுக்கு முன்புதான் அது நடந்தது. கோவையை நெருங்கிக் கொண்டிருந்த சேரன் துரித ரயில்வண்டி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து, இரண்டு பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. இரயில் பெட்டியின் கழிவறையில் எரிந்து கரிக்கட்டையாகிப் போன ஒரு இளைஞனின் பிணம் கிடந்தது.

காற்றில் இலையசைந்தால் கூட தீவிரவாதிகள் என்று பீதியுற்று கண்மண் தெரியாமல் சரமாரியாகச் சுடும் போலீசுச் சூரப்புலிகள் துப்புத்துலக்குவதற்கு முன்பே வழக்கமான புரளி கிளப்பிவிட்டார்கள்: ''யாராவது தற்கொலைப் படைத் தீவிரவாதியாக இருக்கலாம்!''

கடைசியில் ஒருவழியாக உண்மை தெரிய வந்தது. எரிந்து போனவர் ஒரு தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்தான்! ஆனால், எந்தவொரு தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப் படையுமில்லை. ''வேலையில்லாத் தற்கொலைப் படை''யைச் சேர்ந்தவர்! கோவைப் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டயப் படிப்புப் படித்த வேலையில்லா இளைஞர். சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் நிறுவனங்களில் அடுத்தடுத்து தற்காலிக வேலை செய்து விரட்டப்பட்டவர். வாழ்க்கையில் வெறுப்படைந்து வீடு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார்.

''2012இல் இந்த நாட்டில் நாற்பது கோடிப்பேர் வேலை தேடி அலைவார்கள். தனியார்துறையும் அரசுத்துறையும் சேர்ந்து ஒரு ஆறுகோடிப் பேருக்குத்தான் வேலை தர முடியும்'' என்று எச்சரிக்கிறார் டாடா நிறுவனத்தின் இயக்குநர். இந்த எச்சரிக்கையின் எதார்த்த விளைவை நேரிலே அனுபவித்தவன்தான் தன்னைத்தானே கொளுத்திக் கொண்ட அந்த இளைஞன்.

ஆனால், நாட்டின் முதன்மைக் கோமாளி அப்துல் கலாம், மாணவர்கள் இளைஞர்களைப் பார்த்துச் சொல்கிறார், ''கனவு காணுங்கள்! 2020இல் இந்த நாடு ஒரு மேல்நிலை வல்லரசாகிவிடும்!''

அந்த இளைஞன் கண்ணை மூடினாலும் சரி, திறந்தாலும் சரி இருண்ட எதிர்காலமே தெரிந்திருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்விகளும் தொடர்ந்த வெறுப்புமே அவர் சாவைத் தழுவிக் கொண்டதற்கான காரணங்கள். தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற சூத்திரம் அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கி 15 ஆண்டுகளாகி விட்டன. இருந்தும் இதுதான் நிலைமை.
மனித முகங்கொண்ட சீர்திருத்தம், அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவு எரிந்து கரிக்கட்டைகளாகிப் போகும் முகங்களைக் கொண்டவர்களாக மனிதர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது!

மு சிவராஜ்
நன்றி புதியகலச்சாரம்

விரிவான கட்டுரைக்கு http://www.tamilcircle.net/

Friday, September 23, 2005

சந்தர்ப்பவாதத்துடன் கூடிய..

சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம்
பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுறை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதவைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிச தமிழீழமே எமது இலட்சிய தாகம் என பிரகடனம் செய்தனர். அதையே தமது சொந்தக் கைகளால் புதைகுழிக்குள் அனுப்பிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பாத மந்தைக் குணம் கொண்ட தமிழ் சமுதாயத்தில் தான், புதுவை இரத்தினதுறை கதை சொல்லுகின்றார். தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் காதுக்கு பூ வைக்க முனையும் ஒரு மோசடிதான் இது. அன்று அன்ரன் பாலசிங்கம் ரொக்சிய கட்சியில் இருந்து பெற்ற திரிபுவாத அரசியலை அடிப்படையாக கொண்டு, புலிக்கு இடதுசாயம் பூச முயன்றவர். புலிகளின் கொள்கைகளை வகுப்பளராக தன்னைத் தான் பாரட்டிக் கொண்டவர்கள். தளத்தில் புலிகளின் கொள்கை வகுப்பளராக இருந்த மு.நித்தியானந்தன், புலிகளின் பத்திரிகையில் சொந்த நடைமுறைக்கு புறம்பாகவே மாவோவின் மேற்கோள்களை அச்சிட்டு இடது சாயம் தெளித்து மக்களை எமாற்ற முயன்றவர்கள். புலிகளுக்கு ஒரேயொரு ஆயுள் தலைவர் இருப்பது போன்று, கொள்கை வகுப்பளபரும் ஒரேயொருவர் மட்டுமே இருக்க முடியும் என்ற அடிப்படையில், மு.நித்தியானந்தன் கழித்து விடப்பட்டார். இதனால் புலி எதிர்ப்பாளராக வெளிவந்த மு.நித்தியானந்தன், காலத்துக்கு காலம் புலியின் நிலைக்கு எற்ப தாளம் போட்டு தனது பிழைப்புக்கு எற்ற நிலைப்பாட்டை நடத்தி வருகின்றார்.

இந்த வரிசையில் புதுவை இரத்தினதுரை "நான் இன்றும் மார்க்சியவாதியே" என்று கூறுவதன் மூலம், நக்கி பிழைக்கும் தனது நிலைப்பாடு சார்ந்து தான் இருக்கும் அமைப்பை மார்க்சிய இயக்கமாக சித்தரித்துக் காட்ட முனைகின்றார். பிழைப்புத் தனத்தின் கடைக் கோடியில் நின்ற இப்படி புலம்புவது நிகழ்கின்றது. 1960 களில் நடந்த சாதிய போராட்ட வரலாற்றில் அதற்கு ஆதாரவாக இருந்த இவர், அதையையே மார்க்சிய போரட்டமாக சித்தரிப்பது ஒரு விசித்திரமான விடையம். சண் தலைமையிலான கட்சி முன்னெடுத்த சாதிப் போராட்டமே, ஒரு வர்க்கப் போராட்டம் அல்ல. வர்க்கப் போராட்டத்தின் உள்ளார்ந்த ஒரு அம்சம் மட்டும் தான். அடிப்படையில் ஒரு ஜனநாயக கோரிக்கை மட்டும் தான். சண் தலைமையில் நடந்த போராட்டம், வர்க்க அடிப்படையிலான கட்சியை கட்டுவதிலும் சரி, வர்க்கப் போராட்டத்தையும் சரி முன்னெடுக்கவில்லை. மாறக பொருளாதார போராட்டங்களை வர்க்கப் போராட்டமாக காட்டி, வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பி சீராழித்தனர்.

அன்றைய ஜனநாயக போராட்டத்தில் கலந்த கொண்ட புதுவை இரத்தினதுரை, ஒடுக்கப்பட்ட சாதியின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் இந்த நிலைப்பட்டை எடுத்து இருந்தார். அதை மார்க்சியமாக நம்பியதும், அதையே மார்க்சியமாக விளக்குவதும், இதுவே அவரின் சித்தாந்தமான போது இயல்பில் புலிகளில் இணைவதை நியாயப்படுத்தியது. ஜனநாயகக் கோரிக்கையில் நிற்கும் ஒருவன் நிலைமைக்கு எற்ப ஊசாலாடுவது, புதுவை இரத்தினதுரைக்கு விதிவிலக்கல்ல. இந்த நிலையில் தான் புதுவை இரத்தினதுரை, ஜனநாயகக் கோரிக்கையை கைவிட்டு வலதுசாரிகளான புலிகளில் இணைந்தார். வலதுசாரிக் கருத்துக்காக தன்னையும் தனது தோலின் நிறத்தையும் மாற்றிக் கொண்டதுடன், அவர்களின் கருத்துகளையும் அச்சடித்தது போல் பிரச்சாரம் செய்தவர். அன்றாட நிலைமை சார்ந்து வலதுசாரிய கருத்தின் அப்படையில் பல கவிதைகளை புனைந்தவர். இந்த கவிதைகளில் அவர் முன்னர் போராடிய சாதிய அம்சத்தை மருந்துக்கு கூட இணைக்கத் தவறியவர். பிழைப்புக்கும் அந்தஸ்துக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு, மக்களின் தியாகங்களை கேவலப்படுத்தி ஒருவரே புதுவை இரத்தினதுரை.

பிழைப்புக்கு சோரம் போன புதுவை இரத்தினதுரை நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப கவிதை பாடியவர். புலிகளின் தளத்துக்கு ஏற்ப அதற்கு இசைந்து பாடியவர். சொந்த உணர்வில் இருந்து கவிதை படிக்கவில்லை. புலியின் உணர்வுக்கு எற்ப கவிதை படித்தவர். மக்களின் அடிப்படை உணர்வு சார்ந்த ஜனநாயகத்தை எறி மிதிப்பதில், தன்னை தான் இசைவாக்கியவர். புலம்பெயர் சமூகம் பற்றி பாடிய கவிதை ஒன்றை உதாரணத்துக்கு எடுப்போம்.

".. பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல
தாயகம் தீயல் எரிகையில் விட்டு
விமானத்தில் ஏறி பறந்தவர்
வீரம் இல்லாதவர் நாயிலும் கீழானவர்
சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்
சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால்
விட்டுப் பறந்த கோழைகள் நாளையே
வீடு திரும்பினால் காறியே துப்புவோம்
கப்பல் ஏறி ஜெர்மன், பிரான்ஸ் உடன்
கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்
அப்பு ஆச்சியை கவணம் கவணம் என்று
அங்கேயிருந்துமே கடிதம் எழுதினர்
தப்பிப் பிறந்தவர் தம்பியும் வாவென
தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்
துப்புக் கெட்டவர் அகதி லேபலில்
தூசு தட்டியே காசு பிழைத்தனர்
ஓடியவர் ஓடட்டும் ஊழைச் சதையர்
எல்லாம் பேடியர்கள் ஓடட்டும் போனவர்
போகட்டும் பாய்விரித்தால் போதும்
படுதுறங்கும் இவர்கள் எல்லாம் நாய்சாதி
நாய்சாதி ஓடி நக்கில் பிழைக்கட்டும்
தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி
கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும் .."

என்று அன்று படியவர். இன்று அதுபற்றி வழங்கிய பேட்டியில் என்ன சொல்லி நாக்குகின்றார் எனப் பார்ப்போம். "கவிதை எழுதுவதற்காக அந்த நேரத்தில் நான் பெற்றுக் பெற்றுக் கொண்ட மன உணர்வின் வெளிப்பாடு.... அப்போது போராளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த சமயத்தில் பெருவாரியான இளைஞர்களின் இடம்பெயர்வு எனக்குக் கோபத்தை தந்தது. அதே புலம்பெயாந்த தமிழர்கள் இப்போது புகலிட நாடுகளிலிருந்து உணர்வு குன்றிவிடாமல், எமது போராட்டத்தைத் தாங்குவதில் பெரும் பலமாக இருக்கின்றார்கள்." என்ற இன்று நக்கிப் பிழைத்த படி பினாற்றுகின்றார். இன்று வெளி நாட்டில் உழைத்து வாழும் மக்களின் பணத்தில் நக்கி பிழைக்கின்ற நிலைக்கு புலிகள் தங்கி இருப்பதால் தான், இந்த குத்தக் காரணம்;. பணம் தருவதைத் தான் கவிஞர் உணர்வு குன்றதவர் என்கின்றார். பணத்துக்காக தன் நிலைப் பாட்டையே மாற்றிவிடும் இந்தக் கவிஞர், பணத்தை பாய்யாக விரித்தால் அதையே புணரக் கூடியவர் தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. இது கவிஞரின் இன்றைய உணர்வு.

அன்று எண்ணிக்கை குறைந்த நிலையில் தான், இப்படி துற்றியதாக ஒப்புக் கொள்ளும் இவர் அதை அன்றைய உணர்வு என்கின்றார். அந்த உணர்வு சார்ந்து வெளிநாடு சென்றவர்களை பயந்து பறந்தோடிய கோழைகள் என்ற காரணத்தை கற்பிக்கின்றார். உண்மையை புதைகுழிக்கு அனுப்பிவிட்டு அதை தூப்பாக்கி முனையில் பாதுகாத்தபடிதான் தூற்றமுடிகின்றது. நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் பயந்து ஒடும் கோழைகள் என்பதாலா, நாட்டை விட்டு வெளியேறினர். இல்லை ஒரு நாளும் இல்லை. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் கொண்டிருந்த மக்கள் விரோத அரசியலே, புலம் பெயர வைத்தது. பிரதானமானது தேசிய பொருளாதார கொள்கை தொடர்பானது. இரண்டாவது மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பானது. இந்த இரு பிரதான காரணத்தினாலும் தான் புலம் பெயர்வு ஒரு விதியாகியது. இன்று வன்னியை விட்டே வெளியேற முடியாத பாஸ் நடைமுறை மூலமே, வன்னியில் இருந்து மக்கள் வெளியேறுவதை புலிகள் கட்டுப்படுத்துகின்றனர். சொந்த தேசிய அரசியலால் அல்ல.

வெளிநாட்டை நோக்கிய புலம் பெயர்வில் பொருளாதார ரீதியான தனிமனித முன்னேற்றம் சார்ந்த அன்னிய மோகம், தேசத்தின் தேசியத்தின் அடிப்படைப் பண்பாக கொள்கையாக இருக்கும் வரை, எதையும் தூற்ற புலிகளுக்கு எந்த தார்மிக பலமும் கிடையாது. மக்களிடம் இருந்த அன்னியப்பட்ட இளைஞர் குழுவாக, மக்களின் அடிப்படை வாழ்வியலுடன் ஒன்றினையாத நிலையில், அதற்கு எதிராக செயல்பட்டபடி உருவான ஒரு இயக்கமே. இந்த இயக்கம் இராணுவ தாக்குதலை நடத்திவிட்டு கோழையைப் போல் ஒடி ஒழித்துவிடும் நிலையில், அருகில் உள்ள கிராமங்கள் சிங்கள இராணவத்தின் சூறையாடலுக்கு உள்ளாக்குவதே ஒரு போராட்டமாகியது. தாக்கியவன் கோழையைப் போல் பயந்து ஒடி ஒழித்தவிடும் போது, தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் அங்கிருந்தும் அந்த மண்ணில் இருந்தும் தப்பியோடுவது ஒரு இயங்கியல் விதி.

இதில் பொருளாதார ரீதியாக ஒரு சாண் வயிற்றுக்கு வழி காட்ட முடியாத தேசிய பொருளாதார கொள்கையை பிரகடனம் செய்யும் (இன்ற தேசியத்தை அழிக்கும் எகாதிபத்தியத்திடம் கையேந்தி நிற்கின்றனர்) புலிகளின் அதிகாரத்தில், சொந்த மண்ணை விட்டு சிங்கள தேசம் நோக்கிய புலம் பெயர்வும், அங்கிருந்த புலம் பெயர்வையும் புலிகள் தான் ஊக்குவித்தனர். இது மட்டுமா இல்லை. புலிகள் ஜனநாயத்தை மக்களுக்கு மறுத்து அதன் தொடர்ச்சியில் அனைத்து அரசியல் அமைப்புகளையும் வேட்டையாடிய போது, ஈவிரக்கமற்ற படுகொலைகளே தேசிய அரசியலாக்கியது. இந்த நிலையில் மற்றயை அரசியல் பிரிவுகளும், இயக்க ஆதாரவாளர்களும் அவர்கள் குடும்பத்தினர் முதல் கொண்டு அனைவரும் படுகொலைகளில் இருந்து தப்ப புலம் பெயர்வை ஒரு நிபந்தனையாக்கினர். எப்படி வாய் மூடி மக்கள் செம்மறிகளாக வாழ வேண்டும் என்பதை புலிகளின் உத்தியபூர்வமாக அன்று வெளியிட்டு கருத்தில் நாம் காணமுடியும். "40 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆயுதம் எந்திப் போராட வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விமர்சனங்களை நிற்பாட்டிவிட்டு உங்களுடைய வாய்களை முடி வைத்துக் கொள்ள வேண்டும்." என்று புலிகளின் மத்திய குழு உறுப்பினர் யோகி கூறியதில் இருந்தே புதுவை இரத்தினதுறை கவிதையின் கருவைத் தேடியவர். இதை அவர் தாண்டவில்லை. சாமி சரணம் போட்டபடி வாய் உண்பதற்கு மட்டு;ம் திறக்க கோரியவர்களுக்கு, அவற்றை இசையாக்கியவர். மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் வழங்கினால், புலிகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவர்கள் என்று தலைவரின் பெயரில் துண்டு பிரசுரம் போட்டு, அந்த தளத்துக்கு எற்ற மெட்டில் தான் இன்று புதுவை இரத்தினதுரையின் சொல் அலங்கரங்களும், அவரின் பிழைப்புச் சார்ந்த செழிப்பும் உயிர் வாழ்கின்றது. மக்கள் மக்கள் என்ற ஒப்பரிகளும் தொடருகின்றது. எல்லாம் புலிமயமாகி அதுவே துப்பாக்கியின் ஒரேயொரு மொழியான நிலையில், வாய் முடிய சமுதாயத்தில் பலவீனமான சமூக அறிவியலில் பின் தாங்கி பெண்களை, இளம் குழந்தைகள் புலிகளின் ஆதார சக்தியாகினர். இப்படித் தான் புலிகள் மீண்டும் ஆள் திரட்ட முடிந்தது. தற்போது கட்டாய இராணுவ சேவை மறைமுகமாக அழுலுக்கு வந்துள்ளது.

அன்றும் சரி இன்றும் சரி தேசிய முதலாளிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் சொத்துகளை பலாக்கரமாக அபகரித்தும், மிரட்டியும் கறக்கின்ற நிலையில், அவர்களும் கூட நாட்டைவிட்டே வெளியேறினர், வெளியேறுகின்றனர். இப்படி பற்பல காரணங்களை அடிப்படையாக கொண்டே புலம் பெயாந்தனர், புலம் பெயர்கின்றனர். 1983 க்கு பிந்திய இரண்டு வருட காலமே இயக்கத்தின் இணைவு மிக ஊச்சத்தில் இருந்த காலம்;. இந்த நிலையை பின்னால் ஒருக்காலும் அடையவில்லை. புதுவை இரத்தினதுரை காட்டும் காரணம் போலியானது. ஆயிரம் ஆயிரமாக 1983 - 1985 க்கும் இடையில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இயக்கங்களில் இணைந்தனர். ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் புதைகுழியில் புதைத்த போது இது தலைகீழானது. புலம் பெயாந்தவனை திட்டி தீர்ப்பதால் உண்மை பொய்யாகாது.

புலம் பெயாந்தவனின் உழைப்பை பற்றி கொச்சைப்படுத்தும் போது "தூசு தட்டியே காசு பிழைப்பவாகள்" என்ற உழைப்பின் மீதான வெறுப்பை பாடத் தயங்கவில்லை. ஆனால் அவர்கள் வேர்வை சிந்தி சொந்த உழைப்பில் வாழ்ந்தார்கள். ஆனால் உழைப்பில் ஈடுபடாதவர்கள் தூசு தட்டிய காசை இன்று பல்வேறு வழிகளில் வறுகுபவர்கள் மாறியுள்ளனர். அன்று கிண்டல் அடித்த அதே புலிகள் தான், இன்று அதில் தங்கி நிற்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்காக, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களின் நியாயமான போராட்டம் எதையும் புலிகள் முன்னெடுப்பதில்லை. அதற்கு எதிராக இருந்தபடி மூலதனத்துக்கு சேவை செய்வதில், தம்மைத் தாம் தலைசிறந்தவராக காட்டிக் கொள்கின்றனர். புதுவை இரத்தினதுரை காலத்துக்கும் இடத்துக்கும் எற்ப பாடிப் பிழைப்பவர் தான். மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் இருந்து பாடியவர் அல்ல.

தமது சொந்த நடத்தையை நியாயப்படுத்த மக்களுக்கு எதிராக பற்பல கதைகள் பல சொன்ன போதும், ஒன்றை மட்டும் தற்போதைக்கு எடுத்துக் கொள்வோம். இவர் வழங்கிய மற்றொரு பேட்டியில் "இனங்களுக்கிடையிலான சமத்துவம் எமது கனவுகளில் ஒன்றுதான். கனிசமான அளவு அது நனவாகி வருகின்றது. இனத்தின் அடையாளத்தின் மீதான அழிப்புக்கு எதிராக ஆரம்பித்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இப்போது இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பற்றிச் சிங்கள சமூகத்தை சிந்திக்க வைத்திருக்கிறது. இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தினுள்ளே சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். (உறைந்து போகும் அடக்கு முறையை மீறியும் படுகொலையில் இருந்து தப்பியும் என்பதை செர்லாமல் சொல்லி விடுகின்றார்.) நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சோந்தவன். இந்த வெப்பிராயரம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்ககள் நடத்தி இருக்கிறேன்;. தீண்டாமை ஒழிப்பு வெகுஞனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் எற்றுக் கொள்ளமாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை" புலம்பி புலம்பி உள்ளடகத்தை மளுங்கடிக்க முனைகின்றார்.

பல்வேறு அடிப்படையான கருத்துகள் மீது உண்மையை குழி தோண்டி புதைக்கின்றார். இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி சிந்திப்பதாக கூறும் இவர், இந்த ஐக்கியத்துக்கு புலிகள் குண்டு வைக்கவில்லையா? ஏன், நீர் சிங்களவன் என்று ஒருமையில் அழைத்து கவிதை பல பாடி, ஐக்கியத்தை வேட்டு வைக்கவில்லையா? அப்பாவி சிங்கள மக்களையும், இனவாதிகளையும் பிரித்தறியும் அரசியலை புலிகள் எப்போது எங்கே எந்த விடையத்தில் கையாண்டார்கள். இதை உங்கள் கவிதையில் எங்கே எப்படி சொல்லியிருக்கின்றிர்கள். அப்பாவி சிங்கள மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைளை எற்ற சிங்கள மக்களையும் கூட இனம் காண மறுத்த தமிழ் குறுந்தேசிய வாதிகள் அல்லவா நீங்கள். எல்லைகளை கடந்த நரைவேட்டையாடியும் குண்டு வைத்த போதே ஐக்கியம் தூளாகியது. அதை கூட்டி அள்ளி இன்றைக்கு சிங்களவனை ஒருமையில் அழைத்தபடி, ஒட்டவைப்பதாக கூறுவது நகைப்புக்குரியது. இங்கு ஐக்கியத்தை புலிகள் நடவில்லை. மாறக ஏகாதிபத்தியங்கள் தமது தேவைக்கு இசைவாக நடத்துவிக்கும் பேச்சு வார்த்தை மேடையை அலங்கரிக்கும் சொற்தொடர்கள் தான், சிங்கள் மக்களுடன் ஐக்கியம் பற்றி கூறும் வார்த்தை ஜாலங்கள்;. உண்மையான ஐக்கியத்தை தமிழ் தேசிய போராட்டம் கையாண்டு இருந்து இருந்தால், ஒடிப் போன 60000 சிங்களப் படை வீரர்கள் புலிகளுடன் எப்போது இனைந்து இந்த இனவாத அரiசையே தூக்கி எறிந்து இருப்பார்கள்.

"சாதி அமைப்பு அப்படியே உறைந்து போய் இருப்பதாக கள நிலை அறியாமல் பரப்புரை செய்யும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் ஒடுக்கபட்ட சமூகத்தைச் சோந்தவன். இந்த வெப்பிராயரம் வேக்காடுகள் எல்லாம் எனக்கு புரியாதவையல்ல. சாதி ஒழிப்புக்கு எதிராக கவிதைகளையே ஆயுதங்களாக்கி ஊர் ஊராகச் சென்று கவியரங்ககள் நடத்தி இருக்கிறேன். தீண்டாமை ஒழிப்பு வெகுஞனப் போராட்டாம் நடத்தி ஒழிக்கவேண்டிய நிலையில் இருந்த அதே சாதி அமைப்பு இப்போது இருக்கின்றது என்பதை நான் எற்றுக் கொள்ள மாட்டேன். அதே சமயம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை" என்ன வக்கிரமான கூற்று. சாதியம் உறைந்த காணப்படுகின்றது என்பதை மறுக்கும் இவர், அதற்காக போராடத் தேவையில்லை என்கின்றார். அதே நேரம் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று கூறுகின்ற போது பிழைப்பவாதத்தின் முரண்பாடு தொங்கி நிற்பதையும், சாதியை பாதுகாக்கும் புலிகளின் அரசியல் நிலையை வக்காளத்து வாங்குவது தொங்கி நிற்பதை மறைக்க முடியவில்லை. சாதி அமைப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, புலிகளின் மேல் சாதிய யாழ் ஆதிக்க நிலைக்காக வாக்காளத்து வாங்குகின்றார். ஆனால் வேருடன் கிள்ளியெறியப்பட்டு விட்டது என்று சொல்வதற்கும் நான் தயாரக இல்லை என்று குசு விடும் போது, தன்னையும் மீற மணத்து விடுகின்றது. ஆனால் இந்த பேட்டியை துணிச்சாலாக முரண்பாட்டுடன் வழங்க பின்பலம் உண்டு. இதை புரிந்த கொள்ள சரிநிகருக்கு 1990 களில் வந்த ஒரு வாசகர் கடிதத்தில் நடைமுறை சார்ந்த எதார்த்த உண்மை இதை சுட்டிக் காட்டுகின்றது. "தயவு செய்த புலிகள் பற்றித் தப்பாக எழுதுவதை இன்றுடன் நிறுத்தும்படி மிக மன்னிப்பாக கேட்கிறேன். நீர் எங்கிருந்தாலும் உமது காதுச்சாவு விரைவில் துப்பாக்கிக்குண்டு பட்டு வெடித்து நீர் அமெரிக்காவை விட்டு உமது பிள்ளைகளையும் பிரிந்து மேலே போகும் நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள்" சரிநிகர் பத்திரிகைக்கு இந்துமதி எழுதிய வாசகர் கடிதத்தின் உள்ளடக்கமே, இன்றும் விமர்சனம் மீதான எதார்த்தமாகும். இந்த பலத்தில் இருந்தே அனைத்தையும் தலைகீழாக புரட்டி கருத்துரைக்கின்றனர். நாங்கள் விமர்சிக்கும் போதும் எமது காதுச் சவுகளை நோக்கிய துப்பாக்கிகளின் சன்னங்களின் ஊடுருவல் முதல் இரைப்பையை நோக்கி நஞ்சூட்டல் வரையிலான எல்லாவிதமான எதார்த்தமான நிலைமைகளை கடந்து கருத்துரைக்கவில்லை. எமது மரணத்தை முகத்துக்கு முன்னால் எதார்தத்தில் நாள் தோறும் எதிர்கொண்டே, தமிழ் தேசியம் படைத்த ஜனநாயகத்தில் வாழ்கின்றோம். கருத்துரைக்க வேண்டிய உன்னதமான உணர்வுகளை மற்றவனுக்கு மறுத்தபடி தான், புதுவை இரத்தினதுரை சாதியைப் பற்றி பிதற்றுகின்றார். புலிகள் உயர்சாதிய யாழ் இயக்கம் தான் என்பதும், வலதுசாரி அரசியலால் தன்னை உலகமயமாக்கின்ற ஒரு அமைப்புதான் என்பதற்கு யாரும் மாறுப்பு கூற முடியாது. இந்த இயக்கம் சாதியத்தை ஒரு நாளும் ஒழிக்காது. சாதியத்தை பாதுகாத்து, அதன் அடித்தளத்தில் உருவான படிமுறையான அடுக்குகளின் உதவியுடன் தான் மக்களைச் சுரண்டி ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் இயக்கம் தான். புதுவை இரத்தினதுரை தனது இயக்க அரசியல் சார்ந்த சாதிய ஒடுக்குமுறையை நியாயப்படுத்த, சொந்த தனது ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரால் கூறி நியாயப்படுத்தவும் பின்நிற்கவில்லை. ஷஷஒடுக்கபட்ட சமூகத்தைச் (சாதி) சோந்தவர்" என்பதால் தலித்துகள் விரும்பின் குண்டியைக் கழுவி விடலாம். ஆனால் சாதியத்துக்கு எதிரான போராட்டம் என்பது, இந்து மதமும் அதனுடன் ஒட்டிப் பிறந்த சாதியமும் உள்ள வரை (மூளை ஒன்றாகவும் உடல் இரண்டாகவும், அதாவது மதமும் சாதியுமாக உள்ளது) தொடர்வதை, எந்தத் தலித்தும் எந்த இயக்கமும் தடுத்து விடமுடியாது.

சாதியம் உள்ளிட்ட ஜனநாயக போராட்டங்களை நடத்த முற்பட்ட, நடத்திய சில நூறு பேர் புலிகளால் கொல்லப்பட்ட போது புதுவை இரத்தினதுரை அதற்கு வெண்சாமரை வீசி அரசனையும் சபையையும் வாழ்த்தி வாழ்த்துபா பாடிக் கொண்டிருந்த பெட்டைக் கோழியாவர். இதற்கு பாரிசாக அவரை உயர்சாதி நிலைக்கு, கவிதையின் அந்தஸ்து சார்ந்து உயர்த்தப்பட்டார். இதனால் சாதியம் ஒழிந்த விட்டதாகவும், அதற்கு எதிராக போராட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறும் இவர், சாதிய வேர் இருந்த போதும் பயப்பட வேண்டிய தேவையில்லை என்ற கூவ முயலுகின்றார். இதை அவர் "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்ற கூறி அதன் மூலம் கொக்கரிக்க முயலுகின்றார்.

1.7.2003

www.tamilcircle.net

'கோக்' அடிமைத்தனத்தின் ..

'கோக்' அடிமைத்தனத்தின் சுவை

...கோக்பெப்சி விளம்பரப் படங்களின் காட்சிகளை அமைத்திருக்கும் விதமே அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. அழகான பெண்கள், ராக் இசை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டிகள், மேட்டுக்குடி கல்லூரி வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், சொகுசுக் கார்கள், சினிமா கதாநாயகர்கள், நாயகிகள், கிரிக்கெட் வீரர்கள், கல்லூரி மாணவர்கள் என இவர்கள் தங்கள் பானத்துடன் சேர்த்து ஒரு பண்பாட்டுச் சூழலையும் விற்கிறார்கள். தொலைக்காட்சி, எஃப்.எம், செய்தித்தாள், பிரம்மாண்ட விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்கள், வாகன விளம்பரங்கள், தோரணங்கள், கடைகளின் பெயர்ப் பலகைகள், தொப்பிகள், தட்டிகள், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் ஏன் இமயமலைப் பாறைகளைக் கூட சிவப்பும் நீலமுமாக மாற்றியிருக்கின்றன கோக்பெப்சி நிறுவனங்கள்.

மேற்கூறியவை போல நேரடி விளம்பரங்கள் மட்டும் அல்லாமல் சினிமா, டிவி சீரியல்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், நுகர்பொருள் கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கை நடனங்கள் போன்றவற்றின் விளம்பரதாரர்கள் இவர்கள்; பீட்சா முதல் தோசை வரை அனைத்து உணவுப் பொருட்களுடனும் இலவசமாகவோ, கூட்டாகவோ, பெப்சி கோக் வழங்குகிறார்கள்; ரெயில்வே நிலையம், பேருந்து நிலையம், கல்லூரிகள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்ட்டுகள், உடற்பயிற்சி நிலையங்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் குடிநீர்த் தொட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை கோக்பெப்சியின் தானியங்கி இயந்திரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.
இவைதவிர 'பெப்சி குடி சினிமாவில் நடி', 'கோக் லேபிளைப் பிரி செல்போன் ஃப்ரீ' என்னும் போட்டிகள்! தனது விளம்பரச் செலவுகளுக்காக மட்டும் பல நூறு கோடிகளை வாரி இரைத்து, நடுத்தர வர்க்கத்தை நான்கு திசைகளிலிருந்தும், அணுகுண்டு போல தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கித் தனது குளிர்பானங்களில் அமெரிக்க நுகர்வெறிப் பண்பாட்டைக் கலந்து பருக வைத்து, அடிமையாக்கி இருக்கிறது கோக்.

பூச்சி மருந்துப் பிரச்சினை ஒருபுறமிருக்கட்டும். ஒரு மென்பானம் என்ற முறையில் கோக்கின் சுவையில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? அது நமது நாட்டின் விதவிதமான பழச்சாறுகள் வழங்கும் சுவையைக் காட்டிலும் உன்னதமான சுவையா என்றால் அதுவுமில்லை.

முதன்முதலில் கோக் குடிப்பவர்கள் அதைச் சிரமப்பட்டுத்தான் விழுங்குகிறார்கள். உலகத்துக்கே 'பிடித்தமான' இந்தச் சுவை நமக்கு மட்டும் பிடிக்காமல் போனால் அது இழிவோ என்று அஞ்சி சகித்துக் கொள்கிறார்கள். பிறகு மெல்ல மெல்ல அதற்குப் பழகி அடிமையாகி விடுகிறார்கள்.
வணிகமும் லாபமும் மட்டும்தான் இலக்கு என்றால், ஏற்கெனவே இந்திய மக்களின் நாவுக்குப் பிடித்தமானதாக இருக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைச் சுவைகளிலேயே தனது பானத்தை கோக் அறிமுகப்படுத்திக் காசு பார்த்திருக்கலாம்.

ஆனால் காசுக்காகக் 'கொள்கை' யைத் துறக்க கோக் நிறுவனம் தயாராக இல்லை. ''இதுதான் கோக்கின் சுவை! இந்தச் சுவைக்கு ஏற்ப உன் நாக்கை மாற்றிக் கொள். நான் மாற முடியாது!'' என்கிறது கோக்.
''இந்தியச் சந்தையில் எங்கள் முதல் எதிரி எலுமிச்சைச் சாறுதான்'' என்று பத்தாண்டுகளுக்கு முன் அறிவித்தார் கோக் நிறுவனத்தின் தலைவர். பல்வேறு விதமான உணவுகள், பல்வேறுவிதமான சுவைகளுக்குப் பாரம்பரியமாகப் பழக்கப்பட்டிருக்கும் மக்களுடைய நாவின் சுவை நரம்புகளையே தான் சொன்னபடி ஆட்டி வைக்க முயலும் இந்த ஆதிக்க மனோபாவத்திற்கு இன்னுமென்ன விளக்கம் வேண்டும்?

'ஒரே பண்பாடு, ஒரே வாழ்க்கை முறை, ஒரே சுவை' என்று வெளிப்படையாகச் சொல்லாமல் நடைமுறையில் இந்த அடிமைத்தனத்திற்குத் தன் ரசிகர்களைப் பழக்கப்படுத்தியிருக்கிறது கோக். அதனால்தான் 'கோக்'கின் மீதான விமரிசனங்களைத் தன் மீதான விமரிசனமாகவும், தனது ஆளுமை மீதான விமரிசனமாகவும் கருதுகிறார்கள் கோக் ரசிகர்கள். ரஜினி ரசிகனைக் காட்டிலும் இழிந்த இந்த மனநிலை 'பூச்சிமருந்தை'ச் சுவைத்துக் குடிப்பதில் வியப்பில்லை.கோக் குடிப்பவர்கள் அதன் கலாச்சார வன்முறைக்கு இலக்காகிறார்களென்றால், அதனைக் குடிக்காதவர்கள் 'கோக்'கின் நேரடி வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

ஒரு லிட்டர் கோக் தயாரிக்க ஏழு லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகின்றன கோக்பெப்சி ஆலைகள். வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும் மேலும் எட்டு லிட்டர் நிலத்தடி நீரை மாசுபடுத்திப் பயனற்றதாக்குகிறது என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள். ஆக 1 லிட்டர் கோக் தயாரிக்க 56 லிட்டர் நல்ல நீர் அழிகிறது. ஏற்கெனவே நிலத்தடி நீரில்லாமல் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இந்திய விவசாயிகளின் தலையில் இடியென இறங்கிக் கொண்டிருக்கின்றன கோக்கின் ஆலைகள்.....

நன்றி புதியகலச்சாரம்

www.tamilcircle.net

அனைவருக்குமான அடிப்படை..

அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது
தேசிய கொள்கையாகின்றது.

உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு, மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு குழந்தையாக கல்வி மறுப்பதும், கல்வியை தனியார் மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்க்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம், தேசிய பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில், தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது. தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரியருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது, அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது, கல்வியை விலை பேசி விற்பது, இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.


1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவர்கள் பாடசாலையை எட்டிப் பார்ப்பதில்லை. அதாவது இது அண்ணளவாக மூன்று லட்சமாக இருந்து. இது 2003 இல் 4.5 லட்சமாக மாறியுள்ளது. கல்வி மறுப்பு இலங்கைத் தேசியமாகி வஐகின்றது. பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில்; 14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர். மறு தளத்தில் பாடசாலைகள் பல மூடப்படுகின்றது.


இலங்கையில் பாடசாலைகள் எப்படி மூடப்படுகின்றது. என ஆராய்வோம்.

ஆண்டு பாடசாலைகளின் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை
1946 5946 5 93 000
1976 9683 25 72 000
1992 10590 42 89 000
1997 10983 42 60 000
2000 9992 41 90 000
2001 9987 41 84 957

1994-2001 இடையில் மூடப்பட்ட பாடசாலைகள் மகாண ரீதியாக

மேற்கு 80
மத்திய 44
தெற்கு 72
வடகிழக்கு 149
வடமேற்கு 101
வடமத்திய 18
ஊவா 08
சப்பிரகமுவ 54
மொத்தம 526

இதில் 2002 இல் மட்டும் 500 பாடசாலைகள் மூடப்ட்டள்ளது. 1990க்கு பின் மெதுவாக பாடசாலைகளை மூடத்; தொடங்கி அரசு, அதை மிக வேகமாக மூடுவதை துரிதப்படுத்தியதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. பாடசாலைகளை மூடுவது என்ற கொள்கை 1990 களில் இருந்து வேகம் பெற்றது என்பதையும், இது வேகம் பெற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் நேரடியாக தொடர்புடையதையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அடிப்படைக் கல்வி என்ற விடைத்தை ஆராயின், முதலாம் ஆண்டு வகுப்புககான மாணவர் அமைதி குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

1980 3 64 500
1985 3 72 000
1990 3 87 000
1995 3 42 000
1999 3 43 000
2001 3 30 000
2002 3 30 000

1997-2002 இடையில் 1096 பாடசாலைகள் மூடப்பட்டன. 1990 இல் 3.87 லட்சமாக இருந்த முதலாம் ஆண்டு மாணவர் அனுமதி, 2002 இல் 3.3 லட்சமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்து வரும் முதலாம் ஆண்டுக்கான குழந்தைகளின் இணைவு ஒருபுறம் சமுதாயத்தின் கல்வி மறுப்பை உறுதி செய்ய, கல்வி வெறும் சடங்காக மாறுகின்றது. குழந்தைகள் பாடசாலைக்கு அனுப்பவதன் மூலம் கிடைக்கும் அற்ப மதிய உணவைப் பெறவும், அன்றாட பிழைப்புக்கு சென்று திரும்பு வசதி கருதி பாடசாலை அனுமதி தொடருகின்றது. ஆனால் கல்வி தரம் மேலும் ஆழமாக வீழ்ச்சி அடைவதை அரசு தனது கொள்கையாக னெபண்டு திட்டமிட்டே கையாளுகின்றது. அரசு கம்பனிகளை நட்டமடைய வைத்து தனியாருக்கு தரைவார்ப்பது போல், கல்வியின் வீழ்ச்சி அடையவைத்து கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு முன்கையெடுப்பது தேசிய கொள்கையாகி உள்ளது.

இதன் விளைவு தீடிரென நிர்வணமாகத் தொடங்கியுள்ளது. புதிதாக பல பாடசாலைகளை மூடுவதற்கான அடிப்படை விளக்கங்களை கொடுக்கும் புள்ளிவிபரங்களை தயாரித்து வெளியிடுகின்றனர். இதனடிப்படையில் 5 பாடசாலைகள் ஒரு ஆசிரியலுக்கு ஒரு மாணவனும், 18 பாடசாலைகள் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியரும் என பல பாடசாலைகள் இயங்குவதாக புள்ளிவிபரங்களை தயாரிக்கின்றனர். ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவன் என்ற நிலையில் உள்ள சுற்று வட்டரத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்லுகின்றதா என்ற அடிப்படை விடையத்தை மட்டும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். அப்படி அனைத்துக் குழந்தையும் சென்றால், அவர்கள் எங்கே ஏன் செல்லுகின்றனர் என்ற காரணத்தையும், ஏன் இந்த பாடசாலைக்கு செல்வதில்லை என்ற காரணத்தையும் கூட திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். கொள்கை ரீதியாக காரணங்களை மூடிமறைத்தபடி பாடசாலைகளை மூடவும், பாடசாலைகளின் அவலங்களுக்கு காரணமான அரசின் மறுகாலனியாதிக்க கொள்கைகளை பூச்சடிப்பது மூலம் உலகமயமாதல் நிபந்தனை நிறைவு செய்யப்படுவது துரிதமாகின்றது.

மறு தளத்தில் கல்வி மறுப்பை துரிதமாக்கவும், மாணவர்களின் கல்வியை வலுகட்டயமாக நலனடிக்கும் கொள்கையை திட்டமிட்டு அரசு செய்கின்றது. கல்வியில் நம்பிக்கை இழக்க வைக்கவும், பாடாசலைகளை கைவிட்டுச் செல்லும் கொள்கை இங்கு திட்மிட்டே புகுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 41 முதல் 100 மாணவர்களைக் கொண்ட 194 பாடசாலைகள் ஒரு ஆசிரியரைக் மட்டும் கொண்டு இயங்குகின்றது. 14 பாடசாலையில் 75 முதல் 100 மாணவர் கொண்ட அதே நேரம், ஒரு ஆசிரியரே உள்ளனர். மாணவர்களின் கல்விக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி கல்வி முடமாக்கப்படும் கொள்கை இங்கு அழுல் செய்யப்படுகின்றது. 2001 இல் 1 முதல் 15 மாணவாகளைக் கொண்ட பாடசாலைகள் 162 இருந்தன. 16 முதல் 30 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 457 இருந்தன. 31 முதல் 51 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 668 இருந்தன. 51 முதல் 75 மாணவர்களைக் கொண்ட 744 பாடசாலைகள்; இருந்தன. 100 மாணவர்க்கு குறைந்த 2657 பாடசாலைகளின் காணப்படுகின்றது. இந்த பாடசாலைகளின் அழிவு துரித கதியில் நடக்கின்றது. 100 மாணவாகளுக்கு குறைந்த பாடசாலைகளை மூடும் கொள்கை அழுலுக்கு வரவுள்ளது. இந்த வகையில் 2657 பாடசாலைகளின் கதி கேள்விக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் 1 முதல் 2 லட்சம் மாணவர்களின் கல்வி நிரந்தரமாகவே மூடமாக்கி விடுவது உலகமயமாதலின் உடனடிக் கொஙள்கையாகி உள்ளது.. மிகப் பெரிய பாடசாலைகள் நோக்கி கல்வி குவிவதுடன், அங்கு பல்வேறு நிதி அறவீடுகள் மூலம் எழைகள் வடிகட்டி அகற்றப்படுகின்றனர். பண அறவீடுகள் படிப்படியாக அதிகரிப்பதுடன், தனியார் மயமாக்கும் கல்வியின் முதல்படியாக இவை உள்ளது.

திட்டமிட்ட அரசின் உலகமயமாதல் கொள்கைக்கு இணங்க, கல்வியின் தரத்தை குறைப்பது முதல் படியாக உள்ளது. இதன் மூலம் கல்வி மீதான நம்பிக்கையை சிதைத்து தனியார் மயமாக்களை துரிதமாக்குவது தேசிய கொள்கையாக உள்ளது. இதன் முதல்படியாக வசதியான பிரிவு தமாகவே தனியார் கல்வியை நோக்கி செல்வது அதிகரிக்கின்றது. இதைப் பின்பற்றி மற்றைய பாடசாலைகள இட்டுச் செல்வது இலகுவானதாகிவிடுகின்றது. கல்;வியின் தரத்தை குறைக்கு முயற்சியாக, பாடசாலை ஆசிரியர்களின் தகமையைக் குறைப்பது முதல்படியாக உள்ளது. இது இலகுவானதும் கூட. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 9 ஆயிரத்து 876 பாடசாலைகளில் அண்ணளவாக மூவாயிரம் பாடசாலைகளில், அதாவது மூன்றில் ஒரு பாடசாலைகளில் உரிய தகைமைகள் அற்ற அதிபர்கள் நிர்வாகிக்கிபடுகின்றது. பொதுவாக பிழைப்புவாத அரசியல் கட்சிகளுடன் இருந்த பொறுகிகளும், சமூதாய நலனற்ற பிரிவினருமே இப்பதிவிகளில் தொற்றிக் கொள்கின்றனர். சமுதாயத்தின் அனைத்து சமூகச் சிராழிவுகளின் பிரதிநிதிகளாக இவர்கள் உள்ளனர். இவர்கள் கற்பித்தல், கற்றுக் கொள்ளல், சமுதாய நலன்களை முன்னிறுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமிருப்பதில்லை. அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாகவும், பினாமிகளாகவும் நக்கிப் பிழைக்கும் இவர்கள், மாணவர்களின் ஒட்டு மொத்த வாழ்வையே அழிப்பதில் முதல்தரமான சமூக விரோதிகளாக உள்ளனர். அண்மையில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிபர்கள் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வதைப்பதும், மாணவர்கள் மீதான ரவுடித்தனமான வன்முறைகளை எவூவது மட்டுமின்றி, அரசியல் செல்வாக்கு மூலம் அதில் இருந்து தப்பிவிடுவதும் அம்பலமாகி வருகின்றது. இது ஒட்டு மொத்த கல்வி சமூகத்தில் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமேயாகும்.

பாடசாலைகளின் அதிபர் நியமானத்தில் இனவாத அரசியல் புகும் போது, தரம் மேலும் ஆழமான வீழ்ச்சியை துரிதமாக்கின்றது. அமைதி சமாதனம் என்று இன ஒற்றுமை பற்றி பேசிக் கொண்ட வழங்கிய இனவாத நியமனத்தில், அதிபர் சேவை வகுப்பு 1 க்கு வழங்கப்பட்ட 200 நியமனங்களில் 198 சிங்களவருக்கும் ஆசிரியர்களும் ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இப்படி அதிபர் சேவை வகுப்பு 2 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 470 சிங்கள ஆசிரியர்களும் 19 தமிழ் மற்றும் 11 முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதிபர் சேவை வகுப்பு 3 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 487 சிங்கள ஆசிரியர்களும் 13 தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஒருபுறம் சிங்கள இனவாத அமைப்பில் எற்படும் நியமனம் அரசியல் செல்வாக்குக்குள் நக்கிபிழைக்கும் தகுதியற்றவர்களை கொண்டு நிரப்ப, மறுபுறத்தில் இனவாதம் திட்டமிட்டு தமிழ் முஸ்லீம் நியமனங்களை மறுத்த பாடசாலைகளையே ஒட்டு மொத்தமாக இலங்கையில் தகுதியற்றதாக்கின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றிய வடக்கு - கிழக்குக்கு அப்பால் உள்ள அனைத்து சிங்கள ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும், வடக்கு - கிழக்கில் சேவையாற்றிய சுமார் 375 தமிழ் மற்றும் முஸ்லிம் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. திட்டமிட்ட இனவாதம் தமிழ் முஸ்லிம் கல்வியை ஒழித்துக் கட்டுகின்றது என்ற மற்றொரு உண்மையும் இங்கு பொதிந்து கிடக்கின்றது.

ஒருபுறம் தகமையற்ற பொறுகிகள் சமுதாயத்தை வழிநடத்தி நாட்டை படுகுழியில் தள்ளுகின்றனர். மறு தளத்தில் உயர் தகமையுள்ள உயர் கல்வி பெற்ற 26000 பட்டதாரிகள் வேலை இன்றி அலைகின்றனர். எதிரிடையான இந்தப் போக்கு விரிவாகி, சமுதாயத்தின் அனைத்துப் பாகுதியையும்; சீராழிக்கின்றது. ஆசியாவில் உயர்ந்த கல்வி தரமுள்ள நாடு இலங்கை என்பது எல்லாம் கடந்தகால கனவுகளாகிப் போனது. கல்வியின் அடிப்படை தரத்தை நிர்ணயம் செய்வது கணிதப்பாடமாகும்;. இன்று இலங்கை முழுக்க கணித அறிவியல்; பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இதில் ஐpரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணத்தின் கணித அறிவியல் வீழ்ச்சிதான். முதல் தரமான அறிவியல் கொண்ட பிரதேசமாக இருந்த யாழ்மாவட்டத்தை 30 மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, 21ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருபுறம் இனவாத யுத்தம் புலிகளின் கொள்கையும் இதை உருவாகினாலும், ஒட்டு மொத்தமாகவே அரசு உலகமயமாதல் நிபந்தனைக்கு இணங்க திட்டமிட்ட கல்வி மீதான புறக்கணிப்பு இதைச் சாதித்துள்ளது. அத்துடன் கொழும்புக்கு அடுத்த மிகபெரிய நகர் வாழ்வியல் பண்பாடுகளை உள்வாங்கும் யாழ்குடா, உலகமயமாதல் வக்கிரத்தில் புதையுண்டு விட்டதால் கல்வியின் தர வீழ்ச்சி துரிமாகியுள்ளது.

26000 பட்டதாரிகள் வேலை இன்றி உள்ள அதே நேரம், 2003 இல் உயாதரப் பரிட்சையில் 251000 மாணவாகள் தோற்றிய போதும் 16000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி. என்ற முடிவற்ற துயரமும் மாணவர்கள் முன் திணிக்கப்படுகின்றது. 2.35 லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரிட்சை எழுதிய பின் வேலை தேடி அலையும் துயரம் திணிக்கப்படுகின்றது. எந்த நம்பிக்கையான பாதையுமற்ற நிலையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றனர். கட்சிகளின் பொறுக்கி அரசியலுக்கு லும்பனாகவும், அவர்களுக்கு கையூட்டும் கொடுத்த வாழ்வைப் பெறும் அற்ப ஒரு வழிப் பாதை தான் இங்கு ஒரு சமூக நடைத்தையாகிவிட்டது. மற்றொரு பகுதி பொறுக்கிகளாகவும், உலக நகர்புற லும்பன் வாழ்வை அடிப்படையாக கொண்டு வாழவும் கூட இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. இதைவிட்டால் நாட்டை விட்டு ஒடவும், நாயைப் போல் அடிமையாக அடிமைப்பட்டு வாலாட்டு அற்ப தொழில்களை தேடி அலையவே இளைய சமுதாயத்துக்கு இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. நேர்மையாக இளைமைத் துடிப்புடன் இந்த நாட்டில் வாழ, இந்த சமூக அமைப்பில் எந்த இடமும் இளைஞர்களுக்கு இல்லாதாக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் சமூச் சிராழிவு அப்பட்டமாகவே காட்சி அளிக்கின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் ஆறில் ஒன்று ஊழலுக்குள் சிக்கித் தான் வெளிவருகின்றது என்ற உண்மையை இலங்கை அரசின் புள்ளவிபரங்களே தெளிவுபடுத்தகின்றது. ஜனாதிபதி சந்திரிக்கவும், அவரது மகன் விமுக்திக்கும் கொழும்பு கறுவாக் காட்டில் அரசு காணியை (நிலத்தை) பேர்ச் 45 சதத்துக்கு அமைச்சு மூலம் வாங்கியுள்ளனர். இதே போன்று 25 ரூபாவுக்கு பல மந்திரிமார் காணிகளை வாங்கி குவித்துள்ளனர். இன்றைய (2003) காணி அமைச்சு தன் மீதான காணி மோசடிக்கு பதிளிக்கும் போது, இவற்றை ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் தனது காணி மோசடியை சமப்படுத்திக் கொண்டார். உண்மையான ஊழல் இதை விட அதிகமானது என்பதும், சமூகச் சிதைவு விதிவிலக்கற்றதாக இருப்பதையும் மறுக்க முடியாது

www.tamilcircle.net

Thursday, September 22, 2005

இயற்கையை உறிஞ்சும் ...

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!

ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. 'பொதுச் சொத்தின் அவலம்' ((The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

1968 டிசம்பரில் 'சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது.

இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.ஹார்டின் முன்வைக்கும் 'அறிவியல் பூர்வமான' ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.

''இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கட்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய 'தண்டனை' வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால் தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே பொதுச் சொத்துக்களை ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம்; அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்று கூறுகிறார் ஹார்டின்.

கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக் கோட்பாடுதான் ஹார்டின் முன் வைக்கும் 'அறிவியல்' ஆய்வின் வழிகாட்டி. எனினும் இதனை 'இன்னொரு அமெரிக்கக் குப்பை' என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் 'குப்பை' தான் இன்று உலகவங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள 'நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்' என்பதே 'ஹார்டின் சட்டம்' தான்.''

மாநிலத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள் அதிகாரிகள் வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது; ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12,000'' என்ற விதிமுறைகளின் பொருள் வேறென்ன?''

எனக்குப் பிள்ளையில்லை; நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப்பேகிறதா?'' என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர்வளத்தைப் பாதுகாப்பதோ, இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதலாளிகளின் நோக்கமல்ல் அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.''

உங்களுக்கு வேலை கொடுப்பதற்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்'' என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள், 'இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு'த்தான் அதனைத் தங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.''

இது பேராசை அல்ல் இயற்கையைப் பாதுகாப்பதற்கு இதுதான் அறிவியல்பூர்வமான வழி'' என்றும் நமக்கு விளக்கமும் சொல்கிறார்கள்.''

தனக்குச் சொந்தமில்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்க மாட்டான்; ஏனென்றால் தனிச் சொத்தைச் சேர்ப்பதுதான் மனிதனின் இயல்புணர்ச்சி. எனவே பொதுச் சொத்தான இயற்கையைத் தனிச் சொத்தாக்குவதொன்றுதான் இயற்கையைப் பாதுகாப்பதற்கான வழி'' என்பதே முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் முன் வைக்கும் வாதங்கள்.

சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்புணர்ச்சி! பொதுச் சொத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலாளித்துவம் முன்வைக்கும் 'அறிவியல் பூர்வமான' இந்தக் காரணத்தைத்தான் பொதுவுடைமைக் கொள்கையை எதிர்ப்பதற்கும் முதலாளித்துவம் பயன்படுத்தி வருகிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்குப் பயன்பட்ட இந்தக் காரணம், இன்று தேசியத்தை எதிர்ப்பதற்கும், உலகின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முதலாளித்துவ சர்வதேசியத்தை நியாயப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப் படுகிறது.

பொதுச் சொத்தைச் சூறையாடத் தூண்டும் இதே 'இயல்புணர்ச்சி'தான் கோடிக்கணக்கான சிறு உடைமையாளர்களின் தனிச் சொத்தைச் சூறையாடுமாறும் பன்னாட்டு முதலாளிகளைத் தூண்டுகிறது.

எனவேதான், தண்ணீர் முதல் கடல், காடு, மலை, உயிரணுக்கள், விதைகள் ஈறான அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஏகாதிபத்திய வெறித்தனத்தை இன்று கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு அல்லாத பலரும் எதிர்த்துப் போராடுமாறு தள்ளப்படுகிறார்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் இத்தகைய போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவையெனினும் இவர்கள் முன்வைக்கும் மாற்றுகள் பலவீனமானவை, முரண்பாடானவை. முதலாளித்துவ சொத்துடைமையை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் தற்போதிருக்கும் நிலையைத் தக்க வைப்பது, சிறு தொழில் மற்றும் சிறு உடைமைகளைப் பாதுகாப்பது, மரபுரிமைகளைக் காப்பது என்ற பல கோணங்களிலேயே இந்த மாற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.

சூழலியம், புவி ஜனநாயகம், மையப்படுத்துதல் எதிர்ப்பு, மரபுக்குத் திரும்புதல் போன்றவை எவையும் முதலாளித்துவத்தைத் தகர்ப்பது பற்றிப் பேசுவதில்லை.

'சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்பு' என்று கூறும் முதலாளித்துவத்தை இவர்கள் யாரும் சித்தாந்த ரீதியில் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, வௌ;வேறு விகிதங்களில் அந்தக் கருத்துடன் உடன்படுகிறார்கள்.

ஆனால், ''சொத்துரிமை மனிதனின் பிரிக்கவொண்ணாத உரிமை'' என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் சொத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் உரிமை, அதாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் உரிமையும் மேற்படி பிரிக்கவொண்ணாத உரிமையின் அங்கமாகி விடுகிறது.

எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.

அனைவரும் அறிந்த ஒரு உதாரணத்திலிருந்து தொடங்குவோம். நகராட்சிக் குழாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. குடம் நிறைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வழிப்போக்கர் குழாயை மூடிவிட்டுச் செல்கிறார் அவர் அந்தக் குழாயின் உரிமையாளர் அல்ல.

விளைந்த பயிரை மாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழியே செல்லும் விவசாயி அதனை விரட்டிவிட்டுச் செல்கிறார் அவர் அந்த நிலத்தின் உடைமையாளரல்ல.

தண்ணீரின் பயன் மதிப்பையும் தானியத்தின் பயன் மதிப்பையும் அவர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் அவர்களது நடவடிக்கைகள்.

ஒழுகும் குழாயைக் காணும் ஹார்டினும் பதறுகிறார்; சுமார் எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கும் என்று மதிப்பிட்டு அதனை 12 ரூபாயால் பெருக்கிப் பார்க்கிறார். தண்ணீருக்கு முதலாளித்துவம் நிர்ணயித்திருக்கும் சந்தை மதிப்பின்படி சுமார் 1200 ரூபாய் தண்ணீர் வீணாகியிருக்கிறது. ''தனியார்மயம்தான் இதற்குத் தீர்வு'' என்று உடனே குரல் கொடுக்கிறார்.

வழிப்போக்கனின் பார்வையில் அங்கே வீணாகிக் கொண்டிருந்தது பயன் மதிப்புமிக்க தண்ணீர். எனவேதான் அவர் குழாயை மூடுகிறார். ஹார்டினின் வர்க்கத்øத் சேர்ந்தவர்கள் குழாயை மூடுவதில்லை.

ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை குடத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீருக்கும் வழிந்து தெருவில் ஓடும் தண்ணீருக்கும் வேறுபாடு இல்லை. ஏனென்றால் அது விலைமதிப்பு நிர்ணயிக்கப்படாத நகராட்சித் தண்ணீர், இல வசக் குடிநீர். சரக்காக மாற்றப்படும் வாய்ப்பில்லாத தண்ணீர், குடத்தில் நிரம்பினாலும் தெருவில் ஓடினாலும் அது அவர்களைப் பொருத்தவரை வீணானதுதான்.

மனிதன் உள்ளிட்ட இயற்கை அனைத்தையுமே முதலாளித்துவம் பண்டமாகவும், உற்பத்திச் சாதனமாகவுமே பார்க்கிறது. எனவே அத்தகைய பண்டம், தான் மட்டும் நுகரக் கூடியதாகவோ, தான் மட்டுமே சுரண்டக்கூடியதாகவோ, தன்னால் விற்கப்படக் கூடியதாகவோ இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் அது பொருட்படுத்துவதில்லை.

''தனிச் சொத்துடைமை நம்மை முட்டாள்களாகவும் ஒரு தரப்பானவர்களாகவும் செய்து விட்டபடியால், ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தான் அது நம்முடையதாகிறது'' என்றார் கார்ல் மார்க்ஸ். பொதுச் சொத்துகளையும் இயற்கையையும் வீணாக்கும் பொறுப்பற்ற தன்மை மக்களிடம் நிலவுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் முதலாளித்துவம் அவர்களிடம் தோற்றுவித்திருக்கும் சிந்தனையும் பண்பாடும்தான்.

முதலாளித்துவத்தால் இன்னமும் தின்று செரிக்கப்படாமல் மக்களிடம் எஞ்சியிருக்கும் மரபுகளும், விழுமியங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய பொதுமை நாட்டமும்தான் 'நமக்குச் சொந்தமில்லாததையும் நம்முடையதாகக் கருதும்' பண்பாட்டை மக்களிடம் நிலவச் செய்திருக்கின்றன.முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச் சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சில எடுத்துக்காட்டுகள். முதலாளிகள் இயற்கையை நேசிக்குமாறு செய்யும்பொருட்டு இயற்கை வளங்களை ஹார்டினின் அறிவுரைப்படி தனியார்மயமாக்கி விடலாம்தான். ஆனால் அவற்றைச் சூறையாடுவதன் வாயிலாகத்தான் முதலாளித்துவம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட பிளாச்சிமடாவின் நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கொக்கோ கோலா ஏன் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்? பல லட்சம் ஆண்டுகளாய் சூரியனின் வெப்பத்தால் உருவாகிச் சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும் எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து விட்டு 'சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம்', 'புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள்', 'காற்றிலிருந்து மின்சாரம்', 'கடல் நீரிலிருந்து குடிநீர்' என்று எதற்காகத் தவிக்க வேண்டும்?

பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும் வளைகுடாவின் எண்ணெய்க் கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் ஏழைகளால் பெற்றுப் போடப்பட்ட மக்கள் கூட்டமல்ல. யாரிடம் இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டுமென ஹார்டின் சொல்கிறாரோ, அந்தப் பணக்கார வர்க்கத்தின் கார் தாகமும் பெப்சி தாகமும்தான், ஏனைய மக்களைத் தாகத்தில் தள்ளியிருக்கிறது.

இந்தப் பணக்கார வர்க்கத்தின் தாகமும் இயல்பான தேவையிலிருந்து எழுந்ததல்ல் இதுவும் விளம்பரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட தாகம்; மூலதனத்தின் தாகத்தை, முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையைத் தணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தாகம்.

'இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு'. அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை, ஒரே ஒரு கம்பெனி இரண்டே ஆண்டுகளில் அழித்து விட்டது.

நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற ஒப்பந்தத்தின் வரம்புக்குள் நின்று பத்தாண்டுகளுக்கு உற்பத்தியை விரிவாக்காமல் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு கோக் நிறுவனம் ஒரு விவசாயி அல்ல் தாமிரவருணியிலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமென்பது ஒப்பந்தக் காகிதத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அட்லாண்டாவில் உள்ள கோக்கின் தலைமையகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 'தண்ணீருக்குப் பதிலாக கோக்' என்பதைத் தனது முழக்கமாக வைத்துள்ள கம்பெனியின் தாகம் தாமிரவருணி ஆற்றையே பாட்டிலில் அடைத்தாலும் அடங்கப் போவதில்லை.

இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளும் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவச் சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.

குடகு மலையின் காடுகளை அழித்து பல்லாயிரம் ஏக்கர் காப்பித் தோட்டம்! மழை பொய்த்தது, காவிரி வறண்டது, விவசாயம் அழிந்தது. திக்கற்றவர்களாக திருப்பூருக்கு ஓடிவரும் விவசாயிகளை 12 மணிநேரம், 15 மணிநேரம் என்று வேலை வாங்கி அவர்களையும் 40 வயதுக்குள் முடமாக்கி, மனிதக் கழிவுகளாக்கி வெளியேற்றுகிறது முதலாளித்துவம்.

இயற்கையின் ஆதாரப் பொருளான தண்ணீரை நஞ்சாக்குவதைப் போலவே, இயற்கையின் அதிஉன்னதப் படைப்பான மனிதனையும் அது நஞ்சாக்குகிறது. மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும் மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாரபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்துப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?

''சமூகத்தைப் போலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தில் (முதலாளித்துவ) உற்பத்தி முறை உடனடியான விளைவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ள செயல்களின் எதிர்கால விளைவுகள்... பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன.

''''உற்பத்தி செய்த, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட சரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்றவுடன் அவன் (முதலாளி) திருப்தியுறுகிறான். அதன் பிறகு அந்தச் சரக்கிற்கோ அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை'' என்றார் எங்கெல்ஸ்.

முதலாளித்துவத்தின் அருந்தவப் புதல்வனான ப.சிதம்பரம் எங்கெல்சின் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டிவிட்டார். சிகரெட் தயாரிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனமான ஐ.டி.சி. நடத்திய வரி ஏய்ப்பை 'மன்னித்து' 350 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். புற்று நோய்க்கான மருந்தின் விலையை 100இலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திக் கொள்ளும் ஏகபோக உரிமையை நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுத்ததன் மூலம், சிகரெட் புகைப்பவர்களுக்கு என்ன நேர்கிறது என்பது குறித்தும் தான் 'கவலை' கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம்; நிலத்தடி நீரை அழித்து முடித்தவுடனே கடின நீரை நன்னீராக்கும் கருவிகளின் விற்பனை; ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!

''இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைகளுக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது'' என முதலாளித்துவத்தின் கையில் அகப்பட்ட இயற்கையின் அவலநிலையையும், அறிவியலின் தரத்தையும் விமரிசித்தார் மார்க்ஸ்.

இயற்கையின் மீதான தனது வினைகள் எத்தகைய எதிர்வினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை. ''ஆறு வற்றினால் நிலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல்நீரைக் குடிநீராக்கு...'' என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது. ஒவ்வொரு அழிவும், ஒவ்வொரு மாற்றமும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற தூரப்பார்வை அதற்குக் கிடையாது.

''மனிதகுலம் உயிர்வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம்'' என்ற கிட்டப்பார்வைதான் முதலாளித்துவத்தை வழிநடத்துகிறது. இயற்கையை அழிக்கும்போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.

இயற்கையின் அதியுன்னதப் படைப்பான மனிதன் உயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாசமாக்கப்படுகிறான். கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு. ''ஒரு நுகர் பொருள் தோற்றுவிக்கும் நோயைக் குணப்படுத்த இன்னொரு நுகர்பொருள்'' என்று மனிதனின் உடலையே தனது லாப வேட்டைக்கான சுரங்கமாக மாற்றுகிறது முதலாளித்துவம். முதலாளித்துவப் போட்டியும் நெருக்கடியும் வேலை இழப்பும் பதட்டமும் நிச்சயமற்ற வாழ்க்கையும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தைச் சின்னாபின்னமாக்கி மன நோயாளிகளைப் பெருக்குகிறது.

பல லட்சம் ஆண்டுகளாய் நிலத்தடியில் சேமிக்கப்பட்ட எரிபொருட்களைச் சூறையாடும் அந்த லாபவெறி, மனிதன் எனும் இயற்கையின் அற்புதப் படைப்பையும் ஊனப்படுத்திச் சிதைக்கிறது. ''இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதர்களைக் கொல்ல வேண்டும்'' என்று பேராசிரியர் ஹார்டினைச் சொல்ல வைப்பது இயற்கையின் பால் அவர் கொண்ட காதல் அல்ல் அது லாபத்தின் மீதான காதல். இயற்கையின் சிறந்த படைப்பாகக் கூட மனித உயிரை மதிப்பிடவிடாமல் அவருடைய கண்ணை மறைக்கின்ற லாபவெறி!

முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இயற்கையைப் போலவே மனிதனும் ஒரு உற்பத்திச் சாதனம்; இயற்கை வளத்தைப் போலவே மனித உழைப்பும் ஒரு விற்பனைச் சரக்கு. தேய்ந்து போன உற்பத்திச் சாதனங்களைத் தூக்கியெறிவதைப் போல, விற்க முடியாமல் தேங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவதுபோல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்கவிரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்திப் பொருட்களாகக் கருதுகிறார்.

யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின், யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு ஆணையிடுகிறார். ''பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் 'மனித உணர்ச்சி'யை கட்டுப்படுத்த முடியாது; அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!'' என்று மக்களை, குறிப்பாக, ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.

அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் பிறப்பியல்பு. சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது; ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம் - என்பது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள். தானே தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து தான் விடுபடுவதற்காக போர்கள், பட்டினிக் கொலைகள் மூலம் முதலாளித்துவம் மனிதனைச் சூறையாடுகிறது, இயற்கையையும் சூறையாடுகிறது.

இயற்கை பதிலடி கொடுக்கிறது. பெருமழையாக, வறட்சியாக, பனிப்பொழிவாக, சூறைக்காற்றாக..., உடனுக்குடனோ, சற்றுத்தாமதித்தோ பதிலடி கொடுக்கிறது. ''இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது'' என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.

தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. 'தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்' இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.

இயற்கையைத் தனது உடலாகவும், உழைப்பைத் தனது சாரமாகவும் கருதுகின்ற பொதுவுடைமைச் சமூகத்தில் மட்டுமே இயற்கையுடனான முரண்பாட்டை மனிதகுலம் சரியாகக் கையாள முடியும். தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.

உலகமயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்தின் உள்ளடக்கம் முதலாளித்துவம். வேறொரு வகை முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இதனை முறியடிக்க முடியாது. மனித குலமும் உயிரினச் சூழலும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் அழிந்தாக வேண்டும்.

''பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் ஹார்டின். ''இரண்டும் ஒன்றுதான்'' என்ற பதிலே இத்தகைய அற்பர்களுக்குப் போதுமானது.

எனினும் ஹார்டினையொத்த முதலாளித்துவ அற்பமதியினரின் வாதங்களை முன் ஊகித்துத் தனது மூலதனத்தில் விடையளித்திருக்கிறார் மாமேதை கார்ல் மார்க்ஸ்:''ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது தனிச்சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ஙனம் (இன்று) அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல, ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் (இன்று) இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச் சொத்துடைமை என்பதும் (நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்தப் பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்தப் பூமியில் (வாழப்)பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் அவ்வளவுதான். 'ஒரு நல்ல குடும்பத் தலைவன் செய்வதைப் போல', தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்.''

மு மருதையன்

நன்றி புதியகலச்சாரம்

www.tamilcircle.net

மார்க்ஸ் எதைக் கற்க ...

மார்க்ஸ் எதைக் கற்க கோருகின்றார்

"மார்க்சுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது யாதென்றால், தாம் ஆராய முற்பட்டுள்ள புலப்பாடுகளின் விதியைக் கண்டுபிடிப்பதேளூ குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்திற்குள் திட்டமான வடிவத்தையும் பரஸ்பரத் தொடர்பையும் கொண்டுள்ள இப்புலப்பாடுகளை ஆளுகிற விதி மட்டுமன்று அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவை திரிந்து மாறுபடுவது பற்றிய, வளர்;ச்சியடைவது பற்றிய, அதாவது ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு, தொடர்புகளின் ஒரு வரிசையிலிருந்து வேறுறொரு வரிசைக்கு மாறிச் செல்வது பற்றிய விதி அவருக்கு இன்னுமதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த விதியைக் கண்டுபிடித்தவுடனேயே, அதனை சமூக வாழ்வில் வெளிக்காட்டுகிற விளைவுகளை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார். ஆதலால் மாhக்ஸ் ஒன்றைப் பற்றி மட்டுமே கவலை கொள்கின்றர்ளூ சமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்பகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர வேண்டிய அவசியத்தை விடாக்கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும், அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக அவருக்குப் பயன்படுகிற உண்மைகளை முடிந்த வரை பாரபட்சமின்றி நிலைநாட்டுவதைப் பற்றியும் கவலை கொள்கிறார். இன்றுள்ள அமைப்பின் அவசியம், இவ்வமைப்பு தவிர்க்க முடியாமலே மறைந்து அதனிடத்துக்கு வர வேண்டிய இன்னொருஅமைப்பின் அவசியம் ஆகிய இரு அவசியங்களையும், மனிதர்கள் நடம்பினாலும் நம்பா விட்டாலும், உணர்ந்திருந்தாலும் உணராதிருந்தாலும் இப்படித்தான் நிகளுமென்பதையும் அவர் ஒருங்கே நிரூபித்த விட்டாலே இதற்க்குப் போதுமானது. மார்க்ஸ் சமுதாயத்தின் இயக்கத்தை இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார்........... நாகரிகத்தின் வரலாற்றில் உணர்வு அமிசம் இவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கிற தென்றால், நாகரிகத்தைக் கருப்பொருளாகக் கொண்ட ஒரு விமர்சன ஆராய்ச்சி உணர்வின் எந்த வடிவத்தையும் அல்லது எந்தப் பயனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பது கூறாமல் விளங்கும். இப்படிச் சொல்வதன் பொருள் அதன் தொடக்க ஆதாரமாகப் பயன்படக் கூடியது கருத்தன்று. பொருளாயதப் புலப்பாடேஎன்பதாகும். இப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒரு நிகழ்வை கருத்துகளோடு அல்லாமல், இன்னொரு நிகழ்வோடு மோத விட்டும், ஒப்பிட்டும் பார்ப்பதுடன் நின்று கொள்ளும். முடிந்தவரை சரிநுட்பமாக இரு நிகழ்வுகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று தொடர்புபடுத்தினால் உண்மையிலேயே ஒரு பரிணாமத்தின் வௌவேறு அமிசங்களாக அவை அமைவதும் இவ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்ளூ ஆனால் அனைத்திலும் மிக முக்கியமானது இப்படியொரு பரிணாமத்தின் வௌ;வேறு கட்டங்கள் வெளிப்படுகிற அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் தொடரை, வரிசைக் கிரமங்கள் மற்றும் சங்கிலித் தொடர்களை விடாக்கண்டிப்புடன் பாகுத்தாய்வதாகும்"

www.tamilcircle.net

உலகின் கடன் எதை ..

உலகின் கடன் எதை நோக்கி

1990 இல் வட்டி மற்றும் மிள கொடுத்தல் வருடம் 11400 கோடி டொலர் என்ற நிலையைத் தொட்டது. 1989 இல் மூன்றாம் உலக நாடுகளின் மொத்த கடன் 132000 கோடி டொலரகியது. இதில் பாதி வட்டி விகித உயர்வினால் எற்பட்டது. 1983-1989 ஆகிய 7 ஆண்டில் வருடம் 5000 கோடி டாலர் வருடாந்தம் லாபமாகவும் வட்டியுமாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு சென்றது. இந்தக் கடன் பின் தங்கி நாட்டுக்குள், மிகவும் பின்தங்கிய புதிய நாடுகளை உற்பத்தியாகியது. 1983 இல் 30 யாக இருந்த மிகப் பின்தங்கிய நாடுகள், 1989 இல் 42 யாக உயர்ந்தது. திணிக்கப்பட்ட கடன் பல நாடுகளின் தலைவிதியையே காலில் போட்டு எறி மிதித்தது. எங்கும் வறுமை கோரப்பிடியாக, இதுவே சமூக போக்காகியது.

1991 இல் வளரும் (மூன்றாம் உலக) நாடுகளின் மொத்தக் கடன் 90000 கோடி டொலராகும்;. இந்தக் கடனை நிர்வாகிக்கவும்;, இதற்கான வட்டியாகவும் அந்த வருடம் வளரும் (மூன்றாம் உலக) நாடுகள் செலுத்திய தொகையோ 11400 கோடி டொலராகும்;. இத 2001 இல் 38000 கோடி டொலராகியுள்ளது. அதேநேரம் 1980 இல் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 58000 கோடி டொலராகவே இருந்தது. இது 2001 இல் 240000 கோடி (2.4 டிரில்லியன்) டொலராகியது. கடன் பெருகிச் செல்வதையும், கடனில் இருந்து மீள முடியாத வகையில் நாடுகளின் தொத்தடிமைத்தனத்தையுமே இது எடுத்துக் காட்டுகின்றது.

இந்த கடன் மூலம் கொள்ளையடித்த தொகையோ மிகப்பிரமாண்டமானது. கடனக்கான வட்டியாகவும் மீள் கொடுப்பனவாகவும் 1980 முதல் 2001 வரை கொடுத்த மொத்த தொகை 460000 கோடி (4.6 டிரில்லியன்) டொலராகும்;. உண்மையில் 2001 இல் இருந்த கடனைப் போல் அண்ணளவாக இரண்டு மடங்கு தொகையை வட்டியாகவும் மீன் கொடுப்பனவாகவும் 1980 முதல் மூன்றாம் உலக நாடுகள் செலுத்தியுள்ளனர். இது ஒரு ஆச்சரியமான உண்மை. மேற்கு மிகப்பெரிய ஒரு தொகையை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கடத்திச் சென்றுள்ளதை இது எடுத்துக் காட்டகின்றது. இந்த தொகையை எங்கிருந்து எப்படி அவர்கள் அறவிட்டனர். மூன்றாம் உலகமக்களிள் உழைப்புத் தான் இப்படி மேற்கு நோக்கிச் சென்றது. முழு இழப்பும் மூன்றாம் உலகமக்களின் வாழ்க்கையில் இன்று பிரதிபலிக்கின்றது. மூன்றாம் உலகநாடுகளின் வறுமைக்கு, மேற்கின் இந்த சூறையாடல் ஒரு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். மேற்கின் செல்வத்துக்கு மூன்றாம் உலக நாட்டு எழை மக்கள் உழைக்கின்றனர். மூன்றாம் உலகம் மீதான மேற்கின் சூறையாடல் இவைகள் மட்டுமல்ல. இதை பல வழிபாதைகளில் நடக்கின்றன.

உண்மையில் இந்த கடன் என்ன செய்கின்றது. 1980இல் ஒரு டொரரை கடனாக பெற்றவர்கள், அதற்கான வட்டியாக கொடுத்தது 8 டொலர். அதே நேரம் கொடுக்க வேண்டிய முதல் 4 டொலராக மாறியது. இதைத் தான் எல்லோரும் மேற்கின் கருணை சார்ந்த உதவி என்கிறார்கள். முன்றாம் உலக நாடுகளும், அந்த நாட்டு மக்களும் எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உழைத்துக் கொடுக்கின்றார்கள் என்பதை இது தெளிவாக எமக்கு எடுத்துரைக்கின்றது. இது முடிவல்ல, உலகமயமாதலில் முடிவற்ற தொடர் கதையும் இதுதான். இது முன்பைவிட கொடூராமாகவே களமிறங்கி நிற்கின்றது.

http://www.tamilcircle.net/

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல...

பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல...
மனிதன்தான் பூமிக்குச் சொந்தம்!

கி.பி. 1851இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர்இ சுக்வாமிஷ் என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர் சியாட்டில், அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான கடிதம் இது. ஐரோப்பாவில் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை உலுக்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், முதலாளித்துவத்தைச் சகிக்க வொண்ணாத பண்டைப் பொதுவுடைமையின் குரலாய் இது ஒலிக்கிறது. அறிவியல் பூர்வமான பொதுவுடைமை, முதலாளித்துவத்திற்கு சாவுமணி அடிக்கத் தொடங்கிய அதே வேளையில், மனித குலத்தின் மழலை முதலாளித்துவத்தின் முகத்தில் காறி உமிழ்கிறது. உலக முதலாளித்துவத்தின் முகத்தில் அந்த எச்சில் இன்னும் வழிந்து கொண்டிருக்கிறது.

நிலத்துக்கு வெதுவெதுப்பூட்டும் வானத்தை நீ எப்படி விலைக்கு வாங்க முடியும்? எப்படி விற்க முடியும்? நல்ல வேடிக்கை. காற்றின் தூய்மையும், தண்ணீரின் ஒளியும், எங்களுடைய தனிச்சொத்துகளல்ல் பிறகு அவற்றை எப்படி நீ வாங்க முடியும்?

பூமியின் ஒவ்வொரு துகளும் எங்களின் மக்களுக்குப் புனிதமானது.
பளபளக்கும் ஊசி இலைகளும், மணல் பரந்த கடற்கரைகளும், இருண்ட காடுகளுக்குள்ளே பரவிய பனியும், காடு திருத்திய நிலங்களும், ரீங்கரிக்கும் பூச்சி இனங்களும் எங்கள் மக்களின் நினைவுகள் வழியாகப் புனிதமாக நிலைத்திருக்கின்றன. மரங்களுக்குள்ளே செல்லும் நடுத்தண்டு சிவப்பு இந்தியனின் நினைவுகளை பல தலைமுறைகளாகத் தாங்கி வருகிறது.
நாம் பூமியின் அங்கம்; பூமியும் நம்மில் ஓர் அங்கம்.

எனவேதான், வாஷிங்டனிலிருந்து அதன் தலைவர் எங்கள் 'நிலத்தை வாங்கப் போவதாகச் சொல்லி' அனுப்பியபோது எங்களை அவர் அதிகம் விலை கொடுத்து வாங்கிவிட நினைப்பதாகவே தோன்றியது. நிலங்களை வாங்கிய பிறகும் நமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுப்பதாகவும், அங்கே நாம் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் சொல்லி அனுப்பினார் அவர்.

நமக்கு அவர் தந்தைபோல ஆகிவிடுவார்; நாம் அவருக்குக் குழந்தைகளாகி விடுவோம்; அதனாலேயே நம் நிலங்களை அவர் வாங்க அனுமதித்துக் கொள்வோமாம்.

ஆனால், அது அப்படி எளிதாக முடிகிற விசயமல்ல் காரணம், எங்களுக்கு எங்கள் நிலங்கள் புனிதமானவை.

அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடுகிற தூய்மையான தண்ணீர் வெறும் நீரல்ல, அவை எங்களது மூதாதையரின் ரத்தம்.

உங்களுக்கு எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால், அது முதலில் புனிதமானதென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; அதேபோல உங்கள் குழந்தைகளுக்கும் இந்த நிலம் புனிதமானதென்பதை நீங்கள் கற்றுக் கொடுங்கள். படிகம் போன்ற ஏரிகளின் தெளிந்த நீரில் தெரியும் பிம்பங்கள் எங்களது மக்களின் வாழ்வில் நடந்த பலவிதமான சம்பவங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

ஓடுகின்ற நீரில் நீங்கள் கேட்கும் முணுமுணுப்பு எங்கள் பாட்டனின் குரல்.
வெள்ளைக்காரன் இருக்கிறானே, அவனுக்கு எங்களின் பழக்கவழக்கங்கள் தெரியாது. எங்கள் நிலத்தின் எல்லாப் பகுதிகளுமே அவனைப் பொறுத்த அளவில் ஒன்றுதான். இரவிலே திருடன் போல உள்ளே நுழைந்து தான் ஆசைப்பட்ட பொருளையெல்லாம் சூறையாடிக் கொண்டு போவதுதான் அவன் பழக்கம்.

கல்லறையில் தந்தையைப் புதைப்பான், மறுகணம் மறந்து போவான்இ அவனுக்குக் கவலையில்லை. பிள்ளைகளிடமிருந்தே கூட நிலத்தைப் பறித்துக் கொள்வான்இ அவர்களின் எதிர்காலம் பற்றி அவனுக்கு அக்கறையில்லை.

தந்தையின் ஆன்மா இருந்த கல்லறை, சந்ததியின் உரிமை இரண்டையுமே அவன் வெகு சுலபமாக மறந்து போகிறான். தாயாகிய பூமியை, சகோதரனாகிய வானத்தை, ஆடுமாடுகளைப் போல பொன்மணிகளைப் போல விற்கக்கூடிய வாங்கக்கூடிய கொள்ளையடிக்கக் கூடிய பொருள்களாக மட்டுமே அவன் பார்க்கிறான்.

பச்சைப் பூமியை எடுத்து விழுங்கி எல்லாவற்றையுமே வறண்ட பாலைவனமாக்கி விடுகிற அகோரப்பசி அவனுக்கு.

எப்படிப் பார்த்தாலும், எங்கள் பாதைகள் வேறு, உனது பாதைகள் வேறுதான். எங்களுக்கு உங்கள் நகரங்களைப் பார்க்கும் போதே எரிகிறது, வேதனை வாட்டி எடுக்கிறது. காட்டுமிராண்டிகளுக்கு நகரங்களை விளங்கிக் கொள்ள முடியாதென்கிறாய்.

வெள்ளையனின் நகரங்களில் அமைதியான ஒரே ஒரு இடத்தைக் கூட உன்னால் காட்ட முடியாது; வசந்த காலத்தில் இலைகள் விரியும் ஓசைகளை அங்கே கேட்க முடியாது. ஒரு பூச்சியின் சிறகுகள் அசையும் ஓசையைக் கூடக் கேட்க முடியாது.ஒருவேளை, நான் காட்டுமிராண்டி என்பதால் எனக்குப் புரியாது என்பாய்.

உனது நகரங்களின் இரைச்சல் காதைக் கிழிக்கிறது. இரவில் ஒற்றைப் பறவையின் ஏக்கம் தொனிக்கும் குரலோ, குளத்தின் அருகே தவளைகளின் சுவையான விவாதங்களோ கேளாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? நான் ஒரு செவ்விந்தியன், எனக்கு விளங்கவில்லை.

குளத்தின் மேல் தடவிச் செல்லும் காற்றின் ஒலியை விரும்புகிறான் ஒரு செவ்விந்தியன். பகலில் பெய்யும் மழை சுத்தப்படுத்திய காற்றின்இ ஊசி இலையில் பரவி வந்த காற்றின் வாசனையே அவன் விரும்பும் வாசனை.
காற்று அவனது பொக்கிஷம். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என்று எல்லா சீவராசிகளுமே ஒரே மூச்சுக் காற்றைத்தான் சுவாசிக்கின்றன.ஒரு வெள்ளையன் தான் சுவாசிக்கும் காற்றை என்றைக்காவது நின்று கவனித்திருப்பானா?

பல நாட்களாகவே மரணப் படுக்கையில் விழுந்து விட்டவனைப்போல அல்லவோ நாறும் காற்றில் அவன் மூச்சிறுகிக் கிடக்கிறான்.உங்களுக்கு நிலத்தை விற்கிறோம் என்றால்இ காற்று எங்களின் பொக்கிஷம் என்று அறிந்து கொள்ளுங்கள். எல்லா உயிருக்கும் காற்றே ஆதாரம், அவற்றில் எல்லாம் காற்றின் ஆன்மா பாய்ந்து ஓடுகிறது. எங்கள் பாட்டனுக்கு எது முதன்முதலில் உயிரானமூச்சைக் கொடுத்ததோஇ அதே காற்றுதான் அவருக்கு மரணத்தின்போது பெருமூச்சையும் கொடுத்தது.

எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால்இ தனியே அதை நீ புனிதமாகக் கருதவேண்டும், பாதுகாக்க வேண்டும். அங்கே போகிற வெள்ளையன்கூட பூக்களின் இனிய மணம் நிறைந்த காற்றைச் சுவாசிக்கலாம்.
நானொரு காட்டுமிராண்டி எனக்கு வேறு விதமாகப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை.

புல்வெளியில் ஆயிரம் எருதுகளின் சடலங்கள் அழுகிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன் அவை, அருகே ரயிலிலிருந்து வெள்ளையர்களால் பொழுதுபோக்குக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டவை. புகை விட்டுச் செல்லும் உன் ரயில் எங்கள் எருதுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது? எனக்கு விளங்கவில்லை நானொரு காட்டுமிராண்டி.

விலங்குகள் இல்லை என்றால் மனிதன் ஏது? விலங்குகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டால் ஆன்மாவை விட்டு விட்ட கூடுபோல மனிதன் செத்துப் போவான்.

விலங்குகளுக்கு என்னவெல்லாம் நேர்ந்ததோ, மனிதனுக்கு அவை சீக்கிரத்திலேயே நடக்கும். எல்லாமே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை.உன் குழந்தைகளுக்கு நீ கற்றுத்தா அவர்களின் காலடியில் உள்ள மண் பாட்டன்மாரை எரித்த சாம்பல் என்று. அதனால்தான் அவர்கள் நிலத்தைப் போற்ற வேண்டும் என்கிறேன். எங்கள் சுற்றத்தாரின் வாழ்க்கையால் நிரம்பிய பொக்கிஷமே இந்தப் பூமி என்பதை உன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்.பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம்; அதை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.

பூமி மனிதனுக்குச் சொந்தமல்லஇ மனிதன் தான் பூமிக்குச் சொந்தம் இது எங்களுக்குத் தெரியும்.

பொருள்கள் எல்லாம் உள்ளே இணைந்தவை ஒரு குடும்பத்தை ரத்தச் சம்பந்தம் பிணைப்பது போல. எல்லாப் பொருள்களும் உள்ளுக்குள்ளே இணைந்தவை.

பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.
மனிதன் வாழ்க்கை என்ற வலையைப் பின்னவில்லை; அவன் அதில் ஓர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனைக்கேடுகள் செய்தாலும், அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான்.

கடவுளே வந்து அந்த வெள்ளையனோடு தோளோடு தோள் சேர்ந்து நடக்கலாம்; நண்பர்களைப் போலக் கலந்து பேசலாம் ஆனால் அவனுக்கும் இறுதித் தீர்ப்பிலிருந்து விதிவிலக்கு இல்லை.

என்ன இருந்தாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தானே, இதோபார்.
வெள்ளையர்களாகப் பிறந்தவர்களும் உலகை விட்டு நீங்கத்தான் வேண்டும் மற்ற எல்லாப் பழங்குடியினரைவிடச் சீக்கிரமாகவே மறைந்தும் போகலாம். நீ படுத்துறங்கும் நிலத்தை நீயே அசுத்தப்படுத்தினால் ஓரிரவில் உன் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி நீ செத்துப் போகலாம்.

அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர்போல. எருதுகள் படுகொலையையும், காட்டுக் குதிரைகளைப் பழக்கி விடுவதையும், காடுகளுக்குள்ளே எங்கு பார்த்தாலும் மனித நடமாட்டம் அதிகரிப்பதையும், பழைய பூர்வீகமான மலைகளை மறைத்து தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும் நாம் விளங்கிக் கொள்ளாமலேயே இருக்கிறோம். வரப்போகிற அந்த இறுதி முடிவு ஒரு விளங்காத புதிர் போல.

புதர்க் காடுகள் எங்கே? எல்லாம் போயிற்றுமலைக் கழுகுகள் எங்கே? அவையும் மறைந்தன.விரைவாக ஓடும் மட்டக் குதிரைகளையும் வேட்டையாடிஅழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ன நடக்கிறது?இப்படி வாழவேண்டும் என்ற அவர்களின் வாழ்க்கை முடிந்து விட்டது எப்படியோ மீதமிச்ச வாழ்க்கை மட்டும் நடந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம் எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்ததுபோலவே நீங்களும் நேசியுங்கள்; நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்; எங்களிடமிருந்து நிலம் பெறுகின்றபோது எப்படி இருந்தது என்பதை மட்டும் நினைவில் வைத்திருங்கள்; எல்லா உறுதியுடனும், எல்லா வலிமையோடும் முழுமையான விருப்பத்தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். இந்நிலத்தை நேசியுங்கள்... கடவுள் நம் எல்லோரையும் நேசிப்பதுபோல.

மொழியாக்கம்: புதூர் இராசவேல்
நன்றி புதியகலச்சாரம்

Sunday, September 18, 2005

ஆபிரிக்காவின் இன்றைய ...

ஆபிரிக்காவின் இன்றைய இழிநிலைமைக்கு யார் காரணம்

முழுக்க முழுக்க ஏகாதிபத்திங்களே காரணமாகும். ஏகாதிபத்திய சூறையாடல் தான் ஆபிரிக்காவின் இன்றைய நிலைக்கு காரணமாகும். இந்த சூக்குமத்தை நாம் தெரிந்து கொள்வதே எம்முன்னுள்ள மிகப் பெரிய சவாலாக உள்ளது. ஆபிரிக்கா மக்களை அமெரிக்கா மூலதனம் கறுப்பு அடிமைகளாக சந்தைகளில் வாங்கி, அவர்களின் உடல் உழைப்பை பிழிந்து சுரண்டத் தொடங்கிய போதே அந்த மக்களின் வாழ்வு திட்டமிட்டே அழிகப்பட்டது. அமெரிக்கா மூலதனம் இப்படித் தான் அடிமைகளின் உழைப்பைக் கொண்டு கொழுத்தது. இப்படி அமெரிக்கா கண்டம் சார்ந்த மூலதனம் அண்ணளவாக 10 கோடி கறுப்பின அடிமைகளையே ஆபிரிக்காவில் இருந்து சுரண்டலுக்காகவே கடத்திச் சென்றது. இதைத்தான் ஐரோப்பிய மூலதனம் செய்தது. கூலியற்ற அடிமை உழைப்பு வேகம் பெற்ற போதே, அந்த நாடுகளையே காலனியாக்கத் தொடங்கினர். காலனிகள் மூலம் அந்த மக்களின் அடிப்படையான சமூக நுகர்வை புடுங்கி சுரண்டியதன் மூலம், மேற்கு நாடுகளில் செல்வம் குவியத் தொடங்கியது. மேற்கின் மூலதனம் இப்படித் தான் கொழுத்து வீங்கியது. இதைக் கொண்டே உலகமயமாதல் என்ற நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்ட ஒரு வரலாற்று காலகட்டத்தில் நாம் இன்று உள்ளோம். இன்று இந்த நாடுகளை தமது அடிமை நாடுகளாக மாற்றிய வரலாற்றுப் போக்கில் தான், அந்த நாட்டு மக்கள் கையேந்திய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

இன்றும் உலகில் வளங்கள் செறிந்த இடம் ஆபிரிக்காவாகவே உள்ளது. 30 சதவிகிதமான யூரேனியம் ஆபிரிக்காவிலேயே உள்ளது. வைரத்தில் 96 சதவிகிதத்தையும், குரோமியத்தில் 90 சதவிகிதத்தையும், பிளாட்டனத்தில் 85 சதவிகிதத்தையும், கோபால்ட்டில் 50 சதவிகிதத்தையும், மாங்கனீசில் 55 சதவிகிதத்தையும், பாக்சைட்டில் 40 சதவிகிதத்தையும், செம்பில் 13 சதவிகிதத்தையும், பாஸ்பேட்டுகளில் 50 சதவிகிதத்தையும் ஆபிரிக்காவே கொண்டுள்ளது. இதைவிட இரும்பு, நிக்கல், ஈயம் என்று அனைத்து மூலவளங்களும் அங்கு செறிவாக உள்ளது. 10 ஆபிரிக்கா நாடுகளே எண்ணை வளத்தில் பெரும் பகுதியை உற்பத்தி செய்கின்றன. இதைவிட பெரும் நீர் வளங்களையும் கொண்ட ஆபிரிக்கவே, இன்று உலகின் வறுமையின் கோரப்பிடியில் காணப்படுகின்றது.

இவை இன்றும் உற்பத்தி செய்யப்படுகின்ற இன்றைய நிலையலும் இதுதான் நிலை. என் இந்த சமூக அவலம்;. இவ் உற்பத்திகள் முழுக்கமுழுக்க அன்னியனின் கட்டுபாட்டுக்குள் சென்றுள்ளது நிலையில், சமூகத்தின் வறுமை அவலமாகவே காட்டியளிப்பதில் வியNhதுமில்லை. ஆனால் இன்றைய உலகளவிய சமூகப் பொதுப்புத்தி மட்டம் இதை எற்றுக் கொள்வதில்லை. இதனால் எதார்த்த உண்மை புதைகுழியில் புதைக்கப்பட, மனித பிணங்களை அதன் மேல் போட்டு நிரபப்படுகின்றன. இதுவே இன்றைய ஆபிரிக்காவின் சமூக எதார்த்தம்.

இதன் மேல் தான் உதவி என்ற பெயரில் ஏகாதிபத்திய மோசடிகள் அரங்கேறுகின்றது. பொதுவாக இந்த சூறையாடும் கடனை, பொதுஜன அறிவியல் மட்டத்தில் உதவியாக மட்டும் காட்டப்படுகின்றது. இதை நாம் உதவி என்று எடுத்தால், அதன் உண்மையான முகம் தான் என்ன? எழைநாடுகளுக்கு உதவி என்ற பெயரில் ஒரு டொலர் கடனாக கொடுக்கும் அதேநேரம், இதற்கு 1.30 டொலர் வட்டியாக செலுத்தும் நிலைக்கு நாடுகள் அடிமையாகிவிட்டன. இதைத்தான் கௌவுரமாக மறைத்து, உதவியாக காட்டப்படுகின்றது. மிக வறிய மிகப் பின்தங்கிய பிரதேசமாக மாற்றப்பட்ட ஆபிரிக்காவில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக செலவு செய்வதை விடவும், நான்கு மடங்கு அதிகமாகவே வட்டியை ஏகாதிபத்தியங்கள் அறவிட்டு வருகின்றன. இதனால் 1994 க்கும் 2000க்கும் இடையில் ஆபிரிக்காவின் வறுமை 50 சதவிகிதத்தால் வளர்ச்சியுற்றுள்ளன. ஆபிரிக்காவில் எற்படும் வறுமையின் அதிகரிப்பு ஏகாதிபத்தியம் வசூலிக்கும் வட்டி இருந்தும் உருவாகின்றது. கடன் அற்ற ஒரு நிலையில், செல்வத்தின் ஒருபகுதி; எதோ ஒரு வகையில் மக்களைச் சென்றடைந்தது. உலகமயமாதல் என்ற வேள்விக் கிடங்கில், விட்டில் பூச்சியாக விழுந்துமடியும் மனித உயிர்கள் என்றமில்லாத வளர்ச்சியை அடைகின்றன. கல்வி மறுப்பு, அடிப்படை மருத்துவ இன்மை, உணவு இன்மை என்று என்னற்ற சமூக நலத்திட்டங்கள் அனைத்து நிறுத்தப்பட்டு, அப்பணமே வட்டியாக மேற்கு நோக்கி செல்வதை கண்காணிக்கும் உலக வடிவத்தின் பெயர் தான் உலகமயமாதல். உலகைச் வரைமுறையின்றி இலகுவாக சுரண்டுவதை துரிதமாக்கி அதைக் கண்கணிக்கும் அமைப்புத்தான் உலகமயமாதல்.

ஆபிரிக்காவின் இன்றைய சமூக அடிமைத்தனத்துக்கு மேற்கு உதவி என்ற பெயரில் வழங்கிய கடன்களே பிரதானமான காரணமாக அமைந்தன. இதன் வரலாற்றைப் பார்ப்போம். அடிமைத்தனத்தின் (பின்)நவீன சித்தாந்தமாக உலகமயமதால் உருவாக முன்பு, வறிய ஆரிரிக்கா நாடுகளின் கடன் 1980 இல் 6060 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 1987 இல் 12900 கோடி டொலராகவும், 2000 இல் 20610 கோடி டொலராகவும், 2004 இல் 27850 கோடி டொலராகவும் மாறியது. கடன்களை வழங்கி அந்த நாடுகளின் தேசிய திவலை உருவக்கிய மேற்கு நாடுகள், அங்கிருந்த செல்வங்களை தொடாச்சியாக கடத்துகின்றது. ஆபிரிக்காவின் மனிதஉழைப்பு, மேற்கின் நுகர்வுவெறிக்கு இலவசமாகவும் அபரிதமாகவும் தினிபோடுகின்றது.

இப்படி மேற்கின் சுகபோக வாழ்வுக்கு எற்ப தினிக்கப்பட்ட கடன், அவர்களின் சொந்த தேசிய வருமானத்தில் மிகப் பெரிய ஒரு பூதமாகவே உருமாறிவிட்டது. வறிய ஆபிரிக்கா நாடுகளின் தேசிய வருமானத்தில் கடன்; 23.4 சதவிகிதமாக 1980 இல் இருந்தது. இது 2000 இல் 66.1 சதவிகிதமாக அதிகரித்தது. 1980 இல் இக் கடன் ஆபிரிக்காவின் ஏற்றுமதி வருவாயில் 65.2 சதவிகிதத்தில் இருந்தது. இது 2000 இல் 180.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 1980 இல் இந்த கடனுக்கான மிள் கொடுப்பனவு (வட்டியாகவும் முதலாகவும்) 670 கோடி டொலராக இருந்தது. இது 2000 இல் 1460 கோடியாகியாகியது. இந்த மீள் கொடுப்பனவு எற்றுமதியில் 7.2 சதவிகிதத்தில் இருந்து 12.8 சதவிகிதமாகியுள்ளது. எப்படி செல்வவளமுள்ள ஆபிரிக்க வளங்கள் திருடப்படுகின்றது என்பதை, இந்த கடனுக்கான வட்டி மற்றும் மீள்கொடுப்பனவு எடுத்துக் காட்டுகின்றது. இந்தக் கொள்ளை பலவகையானது. ஆபிரிக்காவின் பெருமளவில் குவிந்துள்ள இயற்கை வளங்கள் அன்னிய பன்நாட்டு கம்பனிகளின் தனிப்பட்ட சொத்தாக மாறிவிட்டது. இதில் தேசிய அரசுகள் எந்த தலையீட்டையும் நடத்த முடியாத வகையில், கடன் நிபந்தனைகள் அதை உலக மயமாக்கியுள்ளது. அத்துடன் இந்த இயற்கை வளங்களின் விலையை மிகமலிவான விலையில் மேற்கு வரைமுறையின்றி சூறையாடுகின்றது. ஆபிரிக்கா நாட்டு மக்களின் பிரதான உணவாக உள்ள சோளம், மேற்கின் மிருங்களுக்கான உணவாக மற்றப்பட்டு அடிமாட்டு விலையில் கட்டயப்படுத்தி மேற்கினால் வாங்கப்படுகின்றது. ஆபிரிக்க மக்கள் தமது உணவை இழந்து பட்டினி கிடக்க, மேற்குநாட்டு பண்ணை மிருகங்கள் அந்த உணவையுண்டு கொழுக்கின்றன. இந்த மிருகங்கள் சார்ந்த உணவை உண்ணும் மேற்கு மனிதனும் அதீதமாகவே கொழுக்கின்றான்.

1983 இல் உலகில் எந்தவொரு ஆபிரிக்க நாடும் பெரும் கடனாளி நாடுகளின் கடன் பட்டியலில் இடம் பெறவேயில்லை. ஆனால் இன்று அப்படியல்ல. வறிய ஆபிரிக்காவின் மனித அவலங்களுக்கான அடிப்படையான சமூகக் காரணமே, ஏகாதிபத்தியங்களின் வரைமுறையற்ற சூறையாடல் தான் என்பதை இது துல்லியமாகவே எடுத்துக் காட்டுகின்றது. ஆபிரிக்காவில் பசியாலும், மருந்து இன்றியும் இறக்கும் கோடிக்கணக்கான மரணங்களுக்கு, இந்த ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதார கொள்கைதான் காரணம். இதை இனியும் யாராலும் மறுக்கமுடியாது. கடனை அவர்களின் தலையில் சுமத்திவிட்டு, அதற்கு அறவீடுகள் என்ற பெயரில் அந்த நாடுகளை அடிமைப்படுத்தி கொழுக்கும் மேற்கத்திய சமூகப் கூறு தான் இதற்கான முழுப் பொறுப்புமாகும்;. கடனின் அளவு, ஒருநாளும் இந்த கடனை மீளக் கொடுக்க முடியாது என்ற நிலையை தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் சொந்த தேசிய வருமானத்தைவிடவும், அவர்களின் ஏற்றுமதியை விட கடன் அதிக உயரத்தில நின்று நச்சத்திரமாகவே மின்னுகின்றது. ஆபிரிக்கா மக்கள் இந்த கடனில் இருந்து மீள்வது என்பது இந்த சமூக அமைப்பை மறுக்கும் ஒரு புரட்சி இன்றி, இந்தக் கடனுக்கு ஒருநாளும் முடிவு கட்டமுடியாது. தனிப்பட்ட மனிதன் சார்ந்து தனிப்பட்ட நாடுகள், மனித இனத்தையே சூறையாடும் கொள்ளையை அடிபடையாக கொண்ட கடனை தரமறுக்கும் புரட்சி தான், மக்களின் நலனை பேனுவதற்கான மாற்றப் பாதையாக எம்முன்னுள்ளது.

இந்த நிலையில் எகாதிபத்தியத்தினால் ஆபிரிக்க செல்வம் கறக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஆபிரிக்காவில் ஒரு டொலருக்கு குறைவாகவே நாள் ஒன்றுக்கு பெறுவோர் எண்ணிக்கை பெருக்கெடுத்து வருகின்றது. ஒரு டொலருக்கும் குறைவாகவே பெறுவோர் ஆபிரிக்காவில்

1990 24.2 கோடி பேர்
2000 30.0 கோடி பேர்
2015 34.5 கோடி பேர் (2015 இது தான் நிலை என்று சர்வதேச ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

ஆபிரிக்க மக்களின் சமூக சிதைவு என்பது துல்லியமாக அதிகாரித்து வருகின்றது. நேற்றைய வாழ்வை இன்று இழப்பது, அந்த நாடுகளின் தலைவிதியாக மேற்கு தினித்துள்ளது. வாழவழியற்ற எழைகள் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றனர். பின் அந்தநாட்டு மக்கள் கையேந்தி பரிதாபிக்கும் காட்சிகளை உருவாக்கி, உதவியென்ற பெயரில் மேற்கு மக்களின் காதுக்கே பூவைக்கின்றனர். இப்படி ஒரு மனித இனத்தை சூறையாடும் அரசியல் வக்கிரமே அரங்கேறுகின்றது.

உதாரணத்துக்கு எத்தியோபியவில் எற்பட்ட மனித அவலத்துக்கான காரணத்தைப் பார்ப்போம். எத்தியோப்பிய மனித அவலத்துக்கு (பஞ்சத்துக்கு) மழை மேல் குற்றம் சாட்டம் பன்நாட்டு நிறுவனங்களும், எகாதிபத்தியங்களும் உண்மையான தமது சொந்த குற்றத்தையே மூடிமறைத்தனர். 1960 இல் உலகவங்கி ஆவாஸ் பள்ளத்தாக்கில் கட்டிய அணை தான், 10 லட்சம் மக்களை கொன்றதுடன் 80 லட்சம் மக்களை நிரந்தரமான பட்டினிக்கும் தள்ளியது. உலகவங்கி கட்டிய அணை மக்கள் அன்றாட நீர் தேவையையும், மேச்சல் நிலங்களின் வளத்தையும், விவசாய நிலத்துக்கு கிடைத்த நீரையும் தடுத்துநிறுத்தியது. இந்த அணை மூலம் உலகவங்கி ஆபிரிக்கா மக்களுக்கு, அவர்களின் நீரை இல்லாதாக்கியது. இந்த நீரை ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பல்வேறு பன்நாட்டு நிறுவனங்கள் உருவாக்கிய பெரும் வேளண்மை நிறுவனத்துக்கு திருப்பிவிடப்பட்டது. நீரோட்ட பகுதியில் வாழ்ந்த 1.7 லட்சம் மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றி வீதிகளில் அகதி முகாங்களிலும் தள்ளினர். 1972 இல் இப்படி வெளியேற்றப்பட்ட மக்களில் 30 சதவிகிதமான மேச்சல் இன மக்கள் உயிர் இழந்தனர். தொடர்ந்தும் நீர் இன்றி உற்பத்திகளை இழந்த வரண்ட பிரதேச மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர். நீரை பெற்ற பன்நாட்டு வேளண்மை நிலங்களில் உருவான உணவுகள், மேற்கு நோக்கிச் சென்றன. அங்குள்ள கால்நடைகள் கொழுக்க வைக்கபட்ட போது, மக்கள் எலும்பும் தோலுமாக மடிவதைத் தான் உலக ஜனநாயகத்தின் சதந்திரமாகவே நியாயப்படுத்தப்பட்டது. இதற்கு இயற்கை மேல் குற்றம் சாட்டியதுடன், யுத்தமே இதற்கு காரணம் என்று பூச்சூடினர்.

உண்மையில் சமூகத்தில் பற்றக்குறை எற்படும் போது, பற்றக்குறையை எற்படுத்தியவன் அதை சமூகப் பிளவுகள் மூலம் திசைதிருப்பி மோதவிடுகின்றான். இதனால் சமூகங்களுக்கு இடையில் யுத்தங்கள் எற்படுகின்றன. பின் யுத்தம் தான் மனித அவலத்துக்கு காரணம் என்று கூறுவது, எகாதிபத்தியத்தின் அரசியல் அகாரதியில் வழமையான ஒரு அரசியல் மோசடியாகும். எத்தியோப்பிய பஞ்சத்தை தடுக்க குறித்த அணையை தகர்த்தாலே போதும். அந்த மக்களின் நிலங்கள் அந்த நீரில் குளிர்வது போல், அந்த மக்களின் வாழ்வும் குளிரும். ஆனால் உலகத்தில் செல்வத்தினை வைத்திருப்பவர்களின் சூறையாடும் ஜனநாயகத்துக்கு இது எதிரானதாக, அவர்கள் கூக்குரலீடுவர். இதை அவர்கள் பயங்காரவாதம் என்பர். இதில் வேடிக்கை என்னவென்றால் குறித்த அணைiயை கட்ட வாங்கி பணத்துக்கு கூட, எத்தியோப்பிய எழை மக்கள் தான் வட்டி கட்டி கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது சொந்த நீர் வளத்தை அன்னியனிடம் இழந்தது மட்டுமின்றி, தமது சொந்த விவாசாய நிலத்தையும் கூட அவனிடம் இழந்தனர். தமது சொந்த கால்நடைகளைக் கூட இழந்தனர். எந்த அன்னியனிடம் இதையெல்லாம் இழந்தனரோ, அவர்கள் இதை இழக்க வைக்க திட்டமிட்டு திணித்த கடனுக்கு கூட இன்றும் எத்தியோப்பியன் வட்டி கட்டுகின்றான். இது எடுப்பான ஒரு சிறந்த உதாரணம் மட்டும்தான். இதைத் தான் உலககெங்கும் கடன்கள் செய்கின்றன.