தமிழ் அரங்கம்

Saturday, June 28, 2008

உள்ஒதுக்கீடு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்

இந்திய சமூகத்தில் சாதிய அமைப்பு இன்னமும் நீடித்திருப்பதற்கும் கட்டிக் காக்கப்படுவதற்குமான காரணங்களில் இது முக்கியமானதாகும். ஆனால், இங்கே ஒவ்வொரு சாதியும் தனது நிலை குறித்துப் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் பொழுது, தற்போது தலித்துகள் என்றழைத்துக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட பட்டியலின சாதிகளிலேயும் கூட அருந்ததியர்கள் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய சாதிகள் மட்டும் அத்தகைய வாய்ப்பு இல்லாத அடிமட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

மொத்த சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதிகள் (ஒட்டு மொத்த பட்டியலின சாதிகள்) எப்படி மிகக் கீழான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ, அதேபோல அவர்களிலும் மிக மிகக் கொடூரமான அவலங்களையும் அடக்குஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்பவர்களாக அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதிகள் உள்ளன. சமூகப் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்பட்ட இடஒதுக்கீடு ஏற்பாடு கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் அமலில் இருந்தும், அது உண்மையான சமூக நீதியை வழங்கவில்லை என்பதற்கு உயிருள்ள வரலாற்றுச் சாட்சியமாக விளங்குபவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

கல்வி மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு முன்னுரிமை வழங்கி தக்க வாய்ப்பளிப்பதற்கானதே இடஒதுக்கீடு என்பது ""சமூகநீதி''க்காரர்களின் நியாயவாதம், கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களை விட, அந்த வகைகளில் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயினும் பொருளாதார ரீதியில் மிகமிகப் பின்தங்கியவர்களுக்கும் தக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முற்பட்ட சாதியினர் முன்வைக்கும் எதிர்வாதம். ஆனால், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மட்டுமல்ல, வேறு எந்த ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் மிகமிக அடிமட்டத்தில் வாழ்பவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கின்படி அல்லாமல், ஒடுக்கப்பட்ட சாதிகள் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகளின் அளவுகளின் அடிப்படையில் சமூகநீதி வழங்கப்படுமேயானால், இந்த அருந்ததிய மக்களுக்கும் புதிரை வண்ணார்களுக்கும்தான் முதன்மை முன்னுரிமை அடிப்படையில் மிகக் கூடுதலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு வகுக்கப்பட்டிருக்கும் முறையோ, இம்மக்களை முற்றாகப் புறக்கணித்ததோடு, இம்மக்களின் முதுகிலேறி இச்சாதிகளுக்கு மேலுள்ள சாதிகள் இடஒதுக்கீட்டின் பலன்களை அறுவடை செய்து கொள்ளும்..... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Friday, June 27, 2008

""தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்!''

""விலைவாசி உயர்வுக்குக் காரணம் யார்?'' என்ற சிறு வெளியீடு மற்றும் மே நாள் அறைகூவலைக் கொண்ட துண்டறிக்கைகளோடு, இவ்வமைப்புகளின் தோழர்கள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர். வீடுகள், தெருக்கள், கடைவீதிகள், பேருந்துகள், புறநகர் ரயில் பெட்டிகள் அனைத்தும் பிரச்சார மேடைகளாகின. தனியார்மயம் தாராளமயத்துக்கு எதிரான புரட்சிகர அரசியல், மே நாளன்று இவ்வமைப்புகள் நடத்திய பேரணி. பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகளில் எதிரொலித்தது.

பின்னலாடை, ஆயத்த ஆடை, சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், கோவை ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த இவ்வமைப்புகள் இணைந்து, மே நாளன்று மாலையில், செங்கொடிகள் விண்ணில் உயர எழுச்சிமிகு முழக்கங்களோடு பேரணியை நடத்தின. சாமுண்டிபுரம் சாலை குமார் நகரில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் சீனிவாசன் (ம.க.இ.க) ஆற்றிய சிறப்புரையும் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்த அறைகூவுவதாக அமைந்தன. புதுச்சேரி மற்றும் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடலூரில், தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து திருப்பாப்புலியூர் தேரடி வீதி வரை விண்ணதிரும் முழக்கங்களுடன் மே நாள் பேரணியை நடத்தின. ஜெயகாந்த்சிங் (வி.வி.மு), துரை.சண்முகம் (ம.க.இ.க) ஆகியோரின் சிறப்புரைகளும், கலைநிகழ்ச்சிகளும் இன்னுமொரு விடுதலைப் போருக்கு நாடும் மக்களும் ஆயத்தமாக வேண்டிய அவசியத்தை உணர்த்தின......

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சிகர அமைப்புகள் இணைந்து ஓசூரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் துண்டறிக்கை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து, உழைக்கும் மக்களை அணிதிரட்டி பேருந்து பணிமனையிலிருந்து ராம்நகர் வரை, பாட்டாளி வர்க்கப் பேராசான்களின் உருவப் படங்களுடன் செங்கொடிகளை ஏந்தி,

'தமிழர் கண்ணோட்ட"த்தின் அற்பவாதம் : தில்லைப் போராட்டம்

தீட்சிதர்களால் பக்தர்களைத் தடுக்கவும் முடியவில்லை; ஆறுமுகசாமிக்கு பக்தர்கள் வழங்கும் இந்த மரியாதையைச் சகிக்கவும் முடியவில்லை. எனவே, புழுங்குகிறார்கள். தங்களது "ஏரியாவுக்குள்' அத்து மீறி நுழைந்த ஒருவன் தங்களுக்கு மட்டுமே உரித்தான திருநீறு வழங்கும் "அத்தாரிட்டி'யையும் பறித்துக் கொண்டுவிட்டதை எண்ணி வயிறு வெந்து துடிக்கிறார்கள்.

தமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் தம்மையே வாளும் கேடயமுமாக நியமித்துக் கொண்டுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும்கூட தீட்சிதர்களைப் போலவே தீராத சூலை நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஏப்ரல் 2008 ""தமிழர் கண்ணோட்டம்'' இதழில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது.

"இந்திய தேசியர்களும், மறைமுகப் பார்ப்பனீயர்களும், துக்ளக் சோ வுக்கு இணையான சூழ்ச்சிக்காரர்களுமான ம.க.இ.க.வினர், தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்ட ஒரு போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்று விட்டார்களே, இந்த "விபரீதம்' நேர்ந்தது எப்படி?'' என்ற கேள்விக்கு விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம்.

""சிதம்பரம் நகரில் தமது அமைப்பின் கிளை கூட இல்லாதவர்கள், "நம்ம ஏரியாவில்' (இரண்டு பொருளிலும்) நுழைந்து கொடி நாட்டியிருக்கிறார்களே, த.தே.பொ.க.வின் சிதம்பரம் நகரக்கிளை என்ன செய்து கொண்டிருந்தது?'' என்ற கேள்விக்குத் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம்.

இந்தக் கேள்விகளை அவர்களது வாசகர்கள் எழுப்பினார்களா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவ்வாறு எழுப்பக்கூடுமென்று அஞ்சி, அத்தகைய கேள்விகளிலிருந்து தப்பிப்பதற்கு கட்டுரையாளர் செய்திருக்கும் தந்திரங்கள் மட்டும் அந்தக் கட்டுரை முழுவதும் துலக்கமாகத் தெரிகிறது.

"இது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல' என்று காட்டவேண்டும். ஆனால் வெளிப்படையாக அப்படி எழுதிவிடக்கூடாது. ம.க.இ.க.வின் பங்களிப்பை பெருந்தன்மையுடன் அங்கீகரிப்பது போலத் தெரிய வேண்டும். ஆனால் இதனை அவர்கள் மட்டும் சாதித்து விடவில்லை என்று வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும். "நாங்கள்தான் செய்தோம்' என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர்களைப் போல ஒரே வரியில் பச்சையாகப் போஸ்டர் அடித்து ஒட்டி மாட்டிக் கொள்ளக்கூடாது. அதே விசயத்தைக் கரைத்து நான்கு பக்கங்களாக்கி, வெளிர் பச்சையாக வெளிப்படுத்த வேண்டும். இப்படியொரு இலக்கணத்தை மனதில் வகுத்துக் கொண்டு, அது வெளித் தெரிந்துவிடாமல் இந்தச் சொல்லோவியத்தைத் ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Thursday, June 26, 2008

கோள் மூட்டி தேசமும், ஜனநாயக விற்பன்னர்களும்

ஆளுக்காள் கோள் மூட்டி தான் பிழைப்பதே தேசத்தின் ஊடகவியல் தத்துவமாக, அதை 'தொழில் நேர்மை" என்று அது தனக்குள் பீற்றிக்கொள்கின்றது. இதற்குள் ஜனநாயகம் பேசும் விற்பன்னர் கூட்டமோ தமது குறுகிய வக்கிர அற்ப தேவைக்கு ஏற்ப அதற்குள் குத்தி முறிகின்றனர்.
ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற மூக்கால் சிந்தி சிணுங்கும் இக் கூட்டம், புலியல்லாத மாற்றுத் தளத்தில் கடந்த காலத்தில் எப்படி தான் நடந்து கொண்டது.

அரசியல் ரீதியாக எதையும் இன்று வரை வைத்தது கிடையாது. அதாவது மக்கள் தாம் போராடி, தமது சொந்த விடுதலை அடையும் வகையில், எந்த அரசியலையும் இந்த 'ஜனநாயக இலக்கிய வாதிகள்" வைத்தது கிடையாது. இதை எப்போதும் நிராகரித்தே வந்துள்ளது. இதை வைக்கும் போது, அதைத் தூற்றியது. வைப்பவருக்கு எதிரான தடையாகவும், தாக்குதலாகவும் கூட மாறியது. உண்மையில் எதை அவர்கள் ஜனநாயகம் என்றனரோ, அதையே அவர்கள் மறுத்தனர். இதற்கு நிறையவே உதாரணங்கள் உண்டு.

1. அண்ணளவாக 15 வருடங்களுக்கு முன்னம் 14வது இலக்கியச் சந்திப்பு பாரிசில் நடந்த போது, இது வெளிப்படையாக சந்திக்கு வந்தது. அந்த இலக்கிய சந்திப்பில் கருத்துக் கூற முடியாது என்று, எனக்கு மட்டும் சிறப்பு நிபந்தனை போட்டு தடை விதித்தனர். இது கூட்டத்தில் வைத்து கலைச்செல்வனால் அறிவிக்கப்பட்டது. ஒரு விடையத்தில் ஒரு நிமிடத்துக்கு மேல் நீ பேச முடியாது என்றனர். இது எனக்கு மட்டுமான சிறப்புத் தடை. இதையடுத்து, நாம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்தை விட்டு வெளியேறினோம்.

அன்றும் இன்றும் ஜனநாயகம் வேஷம் போடும் ஜம்பவான்கள் எல்லாம் கூடியிருக்க, மௌனம் சாதித்து இதை ஆதரித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், பத்திரிகை சுதந்திரத்தை புலிகளிடம் மட்டும கேட்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், அங்கு ராஜமரியாதையுடன் கொலுவேற்று இருந்தார்.

இப்படி எனக்கும், நான் வைத்திருந்த கருத்து போக்குக்கும் புலம்பெயர் இலக்கிய சந்திப்பு முதல் புலம்பெயர் புலியல்லாத செயற்பாடுகள் கருத்துச் சுந்திரத்தை மறுத்தே வந்தது. இதுவே தான் எனக்கு எதிரான கல்வெட்டாகியது. இதுதான் இன்று வரையான பொதுவான நிலை. இந்த சீரழிவு தான், இன்று, எங்கும் எதிலும் அம்மணமாகி கிடக்கின்றது. அன்று என்ன நடந்தது என்பதை சமர் 7 பதிவாக்கியது. அதை தெரிந்து கொள்ள
1.இலக்கிய சந்திப்பும் மறுக்கபட்ட கருத்துச் சுதந்திரமும்

2.இலக்கியச் சந்திப்பும் நிகழ்ச்சிகள் மீதான எமது நிலையும்

3.இலக்கிய சந்திப்பும் பிழைப்புவாதப் பிரமுகர்களும்

2. பாரிலில் 29.09.2002 நடந்த குறும்பட விழாவில் இதே கலைச்செல்வன் எம்மீது வன்முறை நடத்த முனைந்தான்;. தீக்கொழுந்து என்ற ம.க.இ.க வின் படம் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென படம் இடையில் நிறுத்தப்பட்டது. கலைச்செல்வன் அறிவித்தான், இந்த படம் சில பெண்களுக்கு பார்க்க தலையிடிப்பதாகக் கூறினான். தமது வர்க்க அடிப்படையை படம் தகர்ப்பதை சகித்துக் கொள்ள முடியாத, பெண்களின் பெயரால் பார்வையாளர்களின் கருத்துக் கேட்காது நிறுத்தினான். தலையிடித்தால் வெளியில் செல்ல வேண்டியது தானே! கருத்துச் சுதந்திரத்தை கோரும் யாரும், இன்றுபோலவே அன்றும் இதைக் கண்டிக்கவில்லை.

இடைவேளையின் போது, பார்வையாளனின் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இங்கும் நான் தான் அதைக் கண்டித்தேன். அப்போது கலைச்செல்வன் பலர் முன்னிலையில் என்னை தாக்குவதற்கு வந்ததுடன், வாயில் வந்தமாரி தாறுமாறாக தூற்றினான். இன்று கருத்துச் சுதந்திரத்தின் பெயரில் தேசத்தில் தூற்றுவது போல் தூற்றினான். அவன் முகத்துக்கு நேரே கையை ஓங்கி வன்முறைக்கு முயன்ற போது.... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Wednesday, June 25, 2008

திடீரென இலங்கையில் அதிகரிக்கும் இந்திய தலையீடும், அதன் அரசியல் நோக்கமும்

இலங்கை அரசின் விருப்பத்துக்கு மாறாகவே, இந்தியா மீண்டும் நிர்ப்பந்தத்தை அடிப்படையாக கொண்ட ஒரு தலையீட்டைத் தொடங்கியுள்ளது. யூன் 16ம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஆளும் வர்க்கத்தைச் சந்தித்த பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் 'இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது" என்ற நம்பிக்கையை பகிரங்கமாக வெளியிட்டார். இதன் மூலம் இலங்கை விரும்பாத ஒரு இந்தியத் தலையீடு இருப்பது, இப்படி வெளிப்பட்டது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு என்பது, பேரினவாத அரசின் துணையுடன் தொடருகின்ற ஒரு நிலையில் தான், இலங்கை விரும்பாத வகையில் ஒரு தலையீடு இருப்பது வெளிப்பட்டது. இதையடுத்து முன் கூட்டியே திட்டமிடாத வகையில், இந்தியாவின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் இலங்கைத் திடீர் வருகையும் அரங்கேறியது. அத்துடன் அவர்களின் சந்திப்புக்கள், கருத்துக்கள், இலங்கையுடனான முரண்பாட்டை வெளிப்படையாக்கியது. மக்களுக்கு எதிரான மிகக் கூர்மையான எதிர்கால மாற்றங்கள், மிக வேகமாக நிகழ்வதற்கான சூழல் காணப்படுகின்றது.

புலிக்கு எதிரான ஒரு அழித்தொழிப்பு யுத்தத்தை, இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியா ஓருபுறம் நடத்திக்கொண்டு இருக்கின்றது. மறுபக்கத்தில் இலங்கை அரசுடன் ஓரு நிழல் யுத்தத்தை நடத்தி வந்தது. அது தற்போது உச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இரண்டும் ஒரு புள்ளியில், ஒரு நோக்கில்தான் இயங்குகின்றது.

ஆனால் நிழல் யுத்தத்ததின் சாரப்பொருள் வெளித்தெரியாத வண்ணம், அது உருத்திரிந்து காணப்படுகின்றது. அது திரிந்து வெளிப்படும் விதமோ, தமிழ் மக்கள் சார்பு வேஷம் போடுகின்றது.

1.புலியொழிப்பு யுத்தம் மூலம் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது என்றும்
2.தமிழ் மக்களி;ன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றது.

இப்படித் தான் இந்தியா இலங்கையுடன் முரண்படுவதாக இட்டுக் கட்டப்படுகின்றது. அப்படித் தான் இந்த முரண்பாடு இருப்பதாக இந்தியா தரப்பும், மறுபக்கத்தில் புலி மற்றும் புலியெதிர்ப்பும் கூறிக்கொள்கின்றது. ஆனால் உண்மையான முரண்பாடோ இதுவல்ல.

மாறாக ... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Tuesday, June 24, 2008

சிறு தொழில்களின் மௌனச் சாவு

முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் கூட, இத்தொழில் வளர்ச்சியை, ""வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி'' Jobless growth) என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஒருபுறம், அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராத பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு; இன்னொருபுறம், விவசாயமும், சிறு நடுத்தரத் தொழில்களும் நசிவடைந்து கொண்டே போவது என்ற சமூக நிலைமையால், வேலை வாய்ப்பற்ற பட்டாளத்தின் எண்ணிக்கை பெருத்துக் கொண்டே போகிறது.

தமிழகத்தில் நுழைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையையும்; அவை கொண்டு வரும் மூலதனத்தின் அளவையும் பட்டியல் போடும் தமிழக அரசு, ""சுதேசி'' தொழில்கள் சிறு, நடுத்தர மற்றும் குடி சைத் தொழில்கள் பற்றி வாய் திறக்க மறுக்கிறது. இந்த உள்நாட்டுத் தொழில்களின் நசிவு பற்றி, அதனால் ஏற்படும் வேலையிழப்பு பற்றித் தமிழக அரசு வெள்ளை அறிக்கையினைக் கொண்டு வந்தால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேம்போக்கானது என்ற உண்மை அம்பலத்திற்கு வந்துவிடும்.··· தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக அறியப்படும் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்து, அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் பருத்தி அரவை ஆலைகள்தான் (ஜின்னிங் ஃபாக்டரி) பெரும் பங்காற்றி வந்தன. ஆனால், கடந்த நான்கைந்து ஆண்டுகளாக பருத்தி அரவை ஆலைகள் அடுத்தடுத்து மூடப்படுவது விஷக் காய்ச்சல் போல் பரவி வருவதால், இந்த ஆலைகளில் வேலை பார்த்து வந்த கிராமப்புற பெண்கள் வேறு வேலை தேடி திருப்பூருக்கும், கோவைக்கும் ஓடுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், 1990இல் 46 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இச்சாகுபடி பரப்பு 200405 ஆம் ஆண்டில் 5,090 ஹெக்டேராகக் குறைந்து போனது. இதேபோல், தேனி மாவட்டத்தில் 1990இல் 17 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டது. இது, 200708இல் 834 ஹெக்டேராகக் குறைந்து போனது. பருத்தி சாகுபடியில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிதான், தென் மாவட்டங்களில் இயங்கி வந்த பருத்தி அரவை ஆலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக அமைந்தது.

ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தில் பருத்தியைப் பயிர் செய்ய ரூ.8,000 வரை செலவு செய்ய வேண்டும். அதேசமயம், ஒரு குவிண்டால் பருத்தியை ரூ. 1,600க்கு மேல் விற்று விட முடியாது. பருத்தியின் உற்பத்திச் செலவுக்கு ஏற்பக் கட்டுப்படியாகக் கூடிய விலை விவசாயிகளுக்குக் கிடைக்காதது ஒருபுறமிருக்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை "மலிவான' இயற்கை மற்றும் செயற்கை பஞ்சோடும் போட்டி போட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். பருத்தி விவசாயிகள், இந்த இருதலைக் கொள்ளி நிலையில் இருந்து தப்பிக்க, பருத்தி விவசாயத்தையே கைவிட்டனர். பருத்தி சாகுபடி வீழ்ச்சிக்குப் பின்னுள்ள காரணம் இதுதான்.

பருத்தி விவசாய வீழ்ச்சியால், ..கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Monday, June 23, 2008

முந்தானை விரிக்கும் புலம்பெயர் 'ஜனநாயகம்"

இந்த 'ஜனநாயகம்" தனது சொந்த மனவிகாரங்களையும், முரண்பாட்டையும், தனிமனித காழ்ப்புகளையும்;, அரசியல் முலாம் ப+சி கொட்டித் தீர்ப்பதைத் தான் மாற்றுக் கருத்து என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான கருத்துகளுக்கு புலியெதிர்ப்பு தளத்தில் இடமில்லை. அவை இவர்களால் மறுக்கப்படுகின்றது, மறுபக்கத்தில் அவை அனுமதிக்கப்படுவதில்லை. இது புலியெதிர்ப்பாக வேஷம் போட்டுவிடுகின்றது. மக்களின் விடுதலைக்கான கருத்துகள் இந்த 'ஜனநாயகத்தில்" வைக்கப்படுவது கிடையாது.

இதனால் தான் இது அரசுடன் அல்லது புலியுடன் தஞ்சமடைகின்றது. இதற்கு வெளியில் இந்த புலம்பெயர் 'ஜனநாயகம்" என எதுவும் சுயமாக கிடையாது. இந்த வெட்டை வெளியில் தான், தேசம் (நெற்) பவ்வியமாக மிதக்க முனைகின்றது. இரண்டையும் பயன்படுத்தி பிழைக்கும் 'தொழில் நேர்மை" ஊடாக, இது ஒரு அலியாக பிறப்பெடுத்துள்ளது. புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு அரச பாசிட்டுகள் துணை இன்றி எப்படி இன்று இயங்க முடியாதோ, அப்படித் தான் தேசமும். புலி புலியெதிர்ப்பு பாசிட்டுகளை சார்ந்தும், புலியெதிர்ப்பு கோஸ்டிகளிடையே முரண்பாடுகளையும் தனது பங்குக்கு உருவாக்கித் தான், தேசம் உயிர் வாழ முடிகின்றது. இதைத் தான் தேசம் பொறுக்கிகள் தமது 'தொழில்நேர்மை" என்கின்றனர். மக்களின் விடுதலைக்கான அரசியலையோ, மக்களின் அவலங்களையோ மையமாக வைத்து, செய்திகளையோ கட்டுரைகளையோ கொண்டு வருவது கிடையாது. இதனால் தொழில் விரிவடையாது என்பது இந்த பொறுக்கிகளின் கணிப்பீடு. அதாவது புலிகள் மக்கள் போராட்டம் சரிவராது என்று ...கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

இந்தியத் தரகு முதலாளிகள் : உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா?

இல்லை; இது வளர்ச்சியில்லை; இது அப்பட்டமான சூறையாடல். பெருமுதலாளிகள் தமது தொழில் திறமையால் இவ்வளவு செல்வத்தை ஈட்டவில்லை. அரசின் தலையீடு கட்டுப்பாடு இல்லாததால்தான் அவர்களால் இவ்வளவு தூரம் முன்னேற முடிந்துள்ளது என்பது அப்பட்டமான பொய்.

உண்மையில், அரசு தலையிட்டு பொதுச் சொத்துக்களை அடிமாட்டு விலைக்குத் தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததால்தான் அவர்களால் கோடிகோடியாய் செல்வத்தைக் குவிக்க முடிந்துள்ளது. இதுதவிர, அரசு தலையிட்டு இத்தனியார் முதலாளிகளுக்குக் கணக்கற்ற சலுகைகளையும் வரிவிலக்குகளையும் வாரியிறைத்ததால்தான் அவர்களால் கொழுக்க முடிந்தது. இந்த உண்மைகளை நிரூபிக்க மாபெரும் ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஆண்டுதோறும் இந்திய அரசின் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டு வரும் அறிக்கைகளே இந்த உண்மைகளை மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

· பொதுத்துறை நிறுவனங்களில் அரசுப் பங்குகளை அவற்றின் உண்மை மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு தனியார் முதலாளிகளுக்கு விற்றதன் மூலம் தனியார்மயம் தாராளமயம் தொடங்கப்பட்ட 199192ஆம் ஆண்டிலேயே அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3,442 கோடிகள். ஆரம்பத்தில், நட்டத்தில் இயங்கும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதாகச் சொல்லி தொடங்கப்பட்ட இக்கொள்ளை, வாஜ்பாயியின் ஆட்சிக் காலத்தில், இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களையும் சூறையாடுவதாக மாறியது. பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. கோரியபடி, பா.ஜ.க. ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் (2004) அவசர அவசரமாக இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த எண்ணெய் எரிவாயுக் கழகம் உள்ளிட்ட ...... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்

Sunday, June 22, 2008

மகிந்தாவின் மடியில் குந்தியபடி புலிப்பாசிசம் பற்றி பேசுபவர்கள்

இதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.

இப்படி கிழக்கு மக்களுக்கு மேல் ஒரு நரகலை அள்ளி தெளித்ததுக்கு அப்பால், அந்த மக்கள் அதை கழுவக் கூட முடியாத வகையில், பிள்ளையான் - மகிந்தவின் பாசிச கொடூரங்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புலி பாசிசக் கும்பல் ஒழிந்தால் சரி என்று கருதும் 'ஜனநாயக" கும்பல் பக்கப்பாட்டு பாட, ராஜேஸ் பாலாவோ இந்தப் பாசிசத்துக்கு ஆராத்தியெடு;த்தார். கிழக்கு மக்களின் அடிமைத்தனம் தான், கிழக்கின் விடுதலை என்கிறார். இப்படி மகிந்தவுக்கு ஏற்ப தளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி, இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.

எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி... கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்