தமிழ் அரங்கம்

Showing posts with label பார்ப்பனியம். Show all posts
Showing posts with label பார்ப்பனியம். Show all posts

Sunday, June 8, 2008

முன்னுரை : இந்து மதப் பார்ப்பனிய தத்துவ சாரம் தான் சாதியம்

எதுவெல்லாம் இந்துத்துவமோ, அதுவெல்லாம் சாதியாக இருக்கின்றது. எதுவெல்லாம் சாதியோ, அதுவெல்லாம் இந்துத்துவமாக இருக்கின்றது. எதுவெல்லாம் மனிதர்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கின்றதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இருக்கின்றது. எவையெல்லாம் மனித விரோதத் தன்மை கொண்டதோ, அதுவெல்லாம் இந்துத்துவ சாதிய வடிவில் இயங்குகின்றது.

இப்படி ஒரு இந்துத்துவ சமூக அமைப்பு என்பது, சாதிய சமூக அமைப்பாகவே உள்ளது. இது தனது சமூக அமைப்பின் அனைத்து மனித விரோதத் தன்மையையும், தனக்குள் உள்வாங்கி பிரதிபலிக்கின்றது. எதுவெல்லாம் சமூகத்துக்கு எதிரான கொடூரங்களாகவும், கொடுமைகளாகவும், சமூக விரோத செயலாகவும் உள்ளதோ, அவையெல்லாம் இந்துத்துவ சாதி வடிவில் நீடிக்கின்றது.

இப்படி சாதியமும், அதன் தத்துவமான இந்துத்துவமும் மனிதத் தன்மையற்றது. இது சகமனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இந்த இந்துத்துவ சாதிய சமூக அமைப்போ, காட்டுமிராண்டித்தனமானது. இதற்கு அடங்க மறுத்து மீறும் போது, அது கொல் என்கின்றது. அனைத்தையும் பார்ப்பான் என்ற ஒரு சாதியின் குறுகிய நலனில் இருந்து தான், இந்த இந்துத்துவக் கோட்பாடு பார்ப்பனியமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைத் தான் சாதிய சமூகம்;அடிப்படையான வாழ்வுசார் ஓழுக்கமாக்கி, மனித வாழ்வை இந்துத்துவத்தின் சித்தாந்தமாக்கியுள்ளது.

இந்த வகையில் இது சக மனிதனை வெறு என்று, சாதிய இந்துத்துவம் கற்பிக்கின்றது. சக மனிதனை சாதி மூலம் இழிவாடக் கோருகின்றது. மனிதத் தன்மையற்ற நடத்தைகளையே, தனிமனித ஒழுக்கமாகக் கோருகின்றது. இப்படி சாதிய இந்துத்துவ வாழ்வியலை இயந்திரமயமாக்கி, அது பார்ப்பனியத்துக்கு இயல்பாக சேவை செய்ய வைக்கின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய சிந்தனைகளை, தனது சாதிய பார்ப்பனிய எல்லைக்குள் உள்வாங்கி அதை பாசிசமாக்குகின்றது. சாதியம் ஒரு இந்துவின் தனிப்பட்ட சுதந்திர தெரிவாக காட்டி விளக்குகின்றது. இதை இந்துவின் ஒரு உன்னதமான வாழ்வியல் ஒழுங்காக பண்பாடாக, இது காலகாலமாக நீடித்து மாறாது இருப்பதாக கூறிக்கொண்டு, மற்றவனை ஒடுக்கி அடிமைப்படுத்துகின்றது. இந்த சாதிய-தீண்டாமை என்ற சமூக ஒழுங்கு தான், இந்துத்துவம். இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏற்று நடப்பது தான், இந்தியாவின் ஜனநாயகம் என்கின்றனர். இதை சகிப்புத் தன்மை கொண்ட இந்திய சமூகத்தின், இயற்கையான இயல்பு என்கின்றனர்.
.

Friday, June 6, 2008

மற்றவன் மூளையை கழற்றிவைத்து விட்ட திமிரில், மூளை இருக்க என்று கேட்பதே பார்ப்பனியம் - பகுதி 2

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகள்தான், அவற்றின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மக்களின் தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. எனினும், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளைஉயர்த்தாமல், பெட்ரோல் விலையில் இரண்டு ரூபாயும்; டீசலின் விலையில் ஒரு ரூபாயும் மட்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் காட்டி, தன்னை மக்களின் வேதனையை அறிந்தவனாகக் காட்டிக் கொள்கிறது, காங்.கூட்டணி ஆட்சி.

இவ்விலை உயர்வின் மூலம் கிடைக்கும் இலாபம் ஒருபுறமிருக்க, பெட்ரோல்டீசல் விற்பனையின் மூலம் மைய/மாநில அரசுகளுக்குக் கிடைத்துவரும் வரி வருமானம், 6,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டண உயர்வின் மூலம், பட்ஜெட்டிற்கு முன்பாகவே மக்களிடம் ஒரு வரிக் கொள்ளையை நடத்திவிட்டது, மன்மோகன் சிங் கும்பல்.

எப்பொழுதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதனை நியாயப்படுத்த, ஒரு ""ரெடிமேட்'' காரணத்தைக் கூறி வருகிறது, மைய அரசு. ""சர்வதேச சந்தை விலையை ஒப்பிடும்பொழுது, இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை மலிவாக விற்கப்படுவதாகவும்; அதனால் அரசு நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நட்டம் ஏற்படுவதாகவும் (தற்போதைய நட்டக் கணக்கு ரூ. 70,000 கோடி); அந்த நட்டத்தை இனியும் தாங்க முடியாது என்ற நிலையில்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் மிதமாக ஏற்றப்படுவதாகவும்'' மைய அரசும், அதன் எடுபிடிகளும் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், பெட்ரோலியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையைப் படித்தால், அரசு கூறிவரும் நட்டக் கணக்கு, நியாயவாதங்கள் அனைத்தும் மிகப் பெரிய பித்தலாட்டம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
.