தமிழ் அரங்கம்

Saturday, December 15, 2007

மனிதனாக வாழ்தல் கூட, இந்த சமூக அமைப்பில் எடுத்துக்காட்டுத்தான்

பி.இரயாகரன்
15.12.2007



சுயநலமும், குறுகிய நோக்கமும் கொண்ட இந்த சமூக அமைப்பில், மனிதனாக வாழ்தல் என்பது கூட விதிவிலக்குத் தான். தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற குறுகிய வட்டத்தில் வாழ்கின்ற மனிதர்களிடையே, விதிவிலக்காக வாழ்ந்த ஒரு தாயின் மரணச் செய்தியை கேட்க நேர்ந்தது.


சாதாரணமாகவே இந்த சமூக அமைப்பில் வாழ்ந்து மடிந்த ஒரு பெண் தான் நாகலிங்கம் சிவகெங்கை. சபேசனின் அம்மாவாக அறிமுகமாகி, எமக்கு எல்லாம் அம்மாவாக இருந்த அந்த தாய், தனது முதிர்ந்த வயதில் 13.12.2007 அன்று லண்டனில் மரணமானார்.


நான் இன்று பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கின்றேன். அந்த தாயின் அர்ப்பணிப்பை, மனிதம் பற்றிக் கொண்டிருந்த அந்த சமூகப் பண்பை, எந்த சுயநலமுமின்றி எம்முடன் வாழ்ந்த அந்த தாயின் தாய்மைப் பண்பை, மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கின்றேன்.


எம்மோடு வாழ்ந்த ஒவ்வொரு தோழர்கள் துன்பத்திலும் பங்கு கொண்டவர். ஒவ்வொருவரிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது உணவைக் கூட எம்முடன் சரி சமனாக பகிர்ந்தவர். நாம் அவரின் உற்றார் உறவினர்கள் அல்ல. யாரென்று தெரியாத எம்மை, அவரின் மகன் மூலம் அறிமுகமானதால் மட்டுமோ, மகனுக்காகவோ எம்மை அனுசரிக்கவில்லை. மகன் நாட்டைவிட்டு வெளியேறிய பின் தான், எமது உறவு கூட மிகப்பலமானதாக மாறியது.


சமுதாயத்தின் விடுதலைக்காக போராடிய பலரை, அரவணைத்தவர். நேரடி யுத்த களத்தில் போராடுபவன் மட்டும் வரலாற்றில் பங்கு பற்றுபவனல்ல, தியாகத்துக்குரியவர்கள் அல்ல. மார்க்சிம் கார்க்கியில் தாய் நாவலில் வரும் தாய் போல், பல தளத்தில் சிலர் (தாய்மார்கள்) போராடுகின்றனர். எந்த சுயநலமும் இன்றி, எந்த குறுகிய நோக்கமுமின்றி இயங்குதல், வாழ்தல் என்பது, இந்த சமூக அமைப்பில் அசாத்தியமானது. இவற்றை மீறி எம்முடன் எம் நினைவுகளுடன் வாழ்ந்தவர். இந்த மனிதப் பண்பை, போராடுபவர்கள் மத்தியில் கூட காண்பது அரிது. இதைத்தான் இந்த இடத்தில் என்னால் மீள நினைத்துப் பார்க்க முடிகின்றது.


உள்ளத்தில் ஒன்றைவைத்துக் கொண்டு, அவர் மற்றவருக்கு உதவியவரல்ல. கள்ளம் கபடமற்ற இதய சுத்தியுடனான அவரின் மனித உறவுகள், இந்த மரணத்தின் மூலம் எம்மை உலுப்பித் தான் விடுகின்றது. அதைக் கற்றுக் கொள்ளத்தான் கோருகின்றது.


எமக்கு மட்டும் அவர் உதவியவர் அல்ல. அடிக்கடி இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி சுற்றுவட்டாரமே அகதியாகும் போதும், அவர்களின் ஒரு பகுதியினரின் தங்குமிடமாக இவர்கள் வீடு இருந்தது தற்செயலானதல்ல. நான் மண்ணைவிட்டு வெளியேறிய பின், எனது குடும்பம் அகதியாகிய போதும் கூட இந்த தாயிடம் தான் ஓடிவந்தார்கள். அந்தளவுக்கு முகம் சுழியாது, இருப்பதை பகிர்ந்து உண்பது முதல், தமது அன்பால் இன்முகத்தால் அனைவரையும் அரவணைத்தவர். தமது வாழ்வை, அவரின் மூத்த மகளுடன் சேர்ந்து, இப்படித் தான் என்று வாழ்ந்து காட்டியவர். இது சாதாரணமானதல்ல. சுயநலம் கொண்ட எமது சமூக சிந்தனை முறையில் இருந்து விடுபட, மனதளவில் இதற்கு நிறையவே தியாகம் செய்யவேண்டும், போராட வேண்டும். இயல்பான இயற்கையான மனிதப் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


இதற்கு இந்த தாய், இந்த பெண், இந்த மனிதர், இந்த சமூகத்தின் தம்மளவில் எடுத்துக்காட்டாக தான் வாழ்ந்தார்.


இதற்கு பின்னால் பலருக்கும் இல்லாத மனிதத்தன்மை இருந்தது. மனிதப் பண்பு இருந்தது. மனித உணர்வு இருந்தது. இவை அவர் பற்றிய குறுகிய புகழ்ச்சியல்ல. மாறாக எதார்த்தத்தில் மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் வாழ்ந்து காட்டியவர்.


பல உயிர் ஆபத்தான இயக்கப் படுகொலை நிகழ்வுக் காலங்களில் கூட, துணிச்சலுடன் எதிர் கொண்டவர். சில துன்பகரமான நிகழ்வுகள், அவதூறுகளின் பின் கூட, அவர்கள் தம் முந்தைய மனிதப் பண்பை துளியளவும் கூட இழந்தது கிடையாது. அந்த தாய் தன்னலமற்ற வகையில் பலருக்கு உதவியதை, காலத்தால் பலர் மறந்திருக்காலம். ஆனால் அதை மீட்கின்ற போது, இலகுவாக யாரும் புறந்தள்ளிவிட முடியாது.


சுயநலமே சமூக அமைப்பாகிவிட்ட எல்லைக்குள் இதை எண்ணிப் பார்க்கின்றேன். மனிதனாக வாழ்தல் என்பது எடுத்துக்காட்டுத் தான். இந்த வகையில் இந்த தாய் விதிவிலக்குத் தான். மற்றவர்களுக்கோ இது எடுத்துக் காட்டுத்தான்.

Friday, December 14, 2007

வால் மார்ட்:மலிவு விலையில் மரணம்!

திர்ப்புகளை மீறி கள்ளத்தனமாக இந்தியாவின் உள்ளே நுழைந்து விட்டது வால்மார்ட். சில்லறை வணிகத்தில் நுழைய முடியாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாயிற்கதவைச் சாத்தியிருப்பது போல பாவ்லா காட்டிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக வால்மார்ட்டை உள்ளே அழைத்து வந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு.


வால் மார்ட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனத்தின் முதலாளி ராஜன் பாரதி மிட்டல் சென்ற மாதம் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பாரதி நிறுவனம் தனக்குத் தேவையான பொருட்களை வால்மார்ட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளும். அரிசி பருப்பு முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் வால் மார்ட் என்ற முத்திரை (பிராண்டு) இருக்கும். பொருள் கொள்முதல், வணிக நிர்வாகம் ஆகிய அனைத்தையும் திரைமறைவில் வால்மார்ட் நடத்தும். ஆனால் கடையின் பெயர் மட்டும் வால் மார்ட் என்று இருக்காது. கடைக்கு வேறு பெயர் வைத்துக் கொண்டு, வால்மார்ட்டின் முகவராக பாரதி நிறுவனம் இயங்கும்.


இந்த கள்ளத்தனமான ஏற்பாட்டுக்கு உதவும் வகையில் சில்லறை வணிகம் குறித்த தனது கொள்கையை திட்டமிட்டே வடிவமைத்திருக்கிறது காங்கிரசு அரசு.

ஏகாதிபத்தியங்கள் பல இருந்தாலும் அவற்றின் தலைவனாகவும் மேலாதிக்கச் சக்தியாகவும் அமெரிக்கா இருப்பதைப் போல, சில்லறை வணிகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும், வால்மார்ட் அவை அனைத்துக்கும் மேலான ஒரு பயங்கரமான அழிவுச் சக்தி. அமெரிக்க இராணுவம் நடத்தும் ஆக்கிரமிப்புப் போருக்கும் வால்மார்ட் தொடுக்கும் வர்த்தகப் போருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது — துப்பாக்கி ஒன்றைத் தவிர.


அமெரிக்க மேலாதிக்கத்திற்க்கும் வால்மார்ட்டுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவைப் புரிந்து கொள்ள உதவும் சமீபத்திய உதாரணம் ஒன்று இருக்கிறது. அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்கு மன்மோகன் சிங் நியமித்த தூதர்களில் முக்கியமானவர் வால்மார்ட்டின் இந்தியக் கூட்டாளியான மிட்டல். சில்லறை வணிகத்திற்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்திற்கும் உள்ள தொடர்புதான் வால்மார்ட்டுக்கும் மறுகாலனியாக்கத்திற்கும் உள்ள தொடர்பு.


மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் ஏந்தியிருக்கும் ஆயுதம். இந்த ஆயுதத்தின் மூலம் உலக மக்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு முதல் அவர்களுடய அரசியல் கருத்துகள் வரை அனைத்தையும் மாற்றுகிற வால்மார்ட். நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட். அதற்குப் பலியான அமெரிக்க மக்கள், தம் இரத்தத்தில் ஊறி சிந்தனையையும் செரித்து விட்ட வால்மார்ட் எனும் இந்த நச்சுக் கிருமியிடமிருந்து விடுபடமுடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


இந்தியாவின் உடலுக்குள் நுழைந்து விட்டது அந்த நச்சுக்கிருமி. இதனை எதிர்த்த போராட்டம் நீண்டது, நெடியது. அந்தக் கிருமியின் வரலாற்றைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது இந்த தொற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த்துப் போராடவும் உதவும்.

இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம் வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்ற பலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்ற கடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையை விட மலிவாகவும் விற்றது வால்மார்ட்.


உறுதியாக நட்டம் விளைவிக்கக் கூடிய இந்த வியாபார உத்தியை மேற்கொள்ள சாம்வால்டன் இரண்டு வழிமுறைகளைக் கையாண்டார். ஒன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம், இரண்டாவது, உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் சரக்கெடுப்பது. இந்தக் கொள்கைகள் காரணமாக வால்மார்டின் வளர்ச்சி மெதுவாக இருப்பினும் 1969ம் ஆண்டுக்குள் 31 மில்லியன் டாலர் ஆண்டு வருமானத்துடன் தன் முதல் கடைக்கு 200 மைல் சுற்றளவிற்குள்ளாகவே 32 கடைகளைத் திறந்தார் சாம் வால்டன்.


இந்த வணிகமுறையினால் வருமானத்தை மீறிய கடன்பட்ட சாம் வால்டன், தன் நிறுவனத்தைக் காப்பாற்ற அதிரடியாக மேலும் பல கடைகளை திறந்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பல வங்கிகளிடம் கடன் கோரினார். வங்கிகள் சாம் கோரியது போல் அல்லாமல் கடனுக்கு வரம்பு விதித்தனர். வங்கிகளை நம்பிப் பயனில்லை என உணர்ந்த சாம் பங்குச் சந்தையின் உதவியை நாடினார். அமெரிக்காவின் அந்நாளைய சட்டப்படி எந்த ஒரு நிறுவனமும் முதல்முறை நேரடியாக தன் பங்குகளை விற்க முடியாது, வேறொரு நிதி நிறுவனத்தின் மூலமாக மட்டுமே பங்குகளை விற்க முடியும்.


இந்தப் பணிக்கு சாம் இரண்டு பெரும் கிரிமினல் வங்கிகளை தனக்காக அமர்த்தினார். ஒன்று, அமெரிக்க உளவுத்துறையின் அடியாளாக அறியப்பட்டு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலுக்காக 1990இல் தண்டிக்கப்பட்ட அர்கன்ஸாஸின் ஸ்டீபன்ஸ் வங்கி. மற்றொன்று, ஆங்கிலேய அரசுக்கு கைக்கூலியாக இருந்து, அமெரிக்கப் புரட்சிக்கு துரோகமிழத்த பாஸ்டன் தேசிய வங்கி. பின்னாளில் ஒயிட்வெல்ட் ஸ்விஸ் கடன் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த வங்கி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் நிதி ஊழலுக்காகவும் 1985இல் தண்டிக்கப்பட்டது.


இந்த இரண்டு கிரிமினல் வங்கிகளும் 1970இல் 4.5 மில்லியன் டாலர் பணத்தை சாம் வால்டனுக்குப் பங்குச் சந்தை மூலமாகப் பெற்றுத் தந்தனர். இதற்குப் பிரதி உபகாரமாக கிரிமினல் பேர்வழி ஸ்டிபன்ஸை வால்மார்டின் ஒரு இயக்குனராக்கினார் சாம் வால்டன்.


70களில் பங்குச் சந்தையின் உதவியை நாடியது வால்மார்ட். 80களிலோ நாப்தா, எஃப்.டி.ஏ.ஏ போன்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் தென் அமெரிக்க நாடுகளையும் கனடாவையும் ஊடுருவ வால்மார்டின் உதவி அமெரிக்கப் பங்குச் சந்தைக்குத் தேவைப்பட்டது. வால்மார்ட் தயாராக இருந்தது.

உலகமயமாக்கம் வால்மார்ட்டின்

அசுர வளர்ச்சி

தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தொடர்ந்து அத்துறையில் கொள்ளை இலாபமீட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்க முதலாளிகள் தம் மூலதனத்தை உற்பத்தித் துறையிலிருந்து அதற்கு மாற்றினர். அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. பல அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஏழை நாடுகளின் கொத்தடிமைக் கூடாரங்களில் உருவாக்கப்படும் மலிவு விலை பொருட்களை நுகரும் சமூகமாக அமெரிக்கா மாறியது.


இத்தகைய பொருட்களை அமெரிக்காவெங்கும் விற்பனை செய்யும் ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக வால்மார்ட் உருவாகியிருந்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட். வால்மார்ட்டை உலகமயமாக்கலின் சிறந்த ஆயுதமாகக் கண்டு கொண்ட அமெரிக்க பங்குச் சந்தை, வால்மார்ட்டிற்கு பணத்தை வாரியிறைத்தது. வால்மார்ட் வெறித்தனமாக வளர்ந்தது.


80களின் இறுதி வரை 70,000 சதுரஅடி பரப்பிலான பிரம்மாண்டமான கடைகளை நடத்தி வந்தது. (மற்ற அமெரிக்கப் பெருவணிகக் கடைகளின் சராசரி அளவு 40,000 சதுர அடி). போட்டியாளர்களை அழிக்க ஆணி முதல் உணவு வரை 1,20,000 பொருட்களை விற்கும் 2,00,000 சதுரஅடி பரப்பிலான (4 கால்பந்து மைதானம் அளவில்) சூப்பர் சென்டர்களை 1987 முதல் வால் மார்ட் நிறுவனம் துவங்கியது.


1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட் அடுத்த 12 ஆண்டுகளில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி 25,000% வளர்ச்சியடைந்தது. இதே காலகட்டத்தில்தான் உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது.


1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட் இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, சீனா, எல்சால்வடார், ஜெர்மனி, குவாதிமாலா, ஹோன்டுராஸ், ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, போர்டோரிகோ மற்றும் பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பலநாடுகளில் சில்லறை வணிகத்தில் முதல் இடத்தில் இருக்கிறது.


வளர்ச்சியின் மர்மம்


வால்மார்டின் இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கும் அமெரிக்க ஏகபோகங்கள் ஏழை நாடுகளை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொண்டு அழித்து வருவதற்குமான உறவு தற்செயலானதல்ல. இத்தனை ஆயிரம் கடைகளைக் கட்டத் தேவையான பல லட்சம் கோடி டாலர்கள், வரிச்சலுகைகளாகவும், இன்றைய தேதியில் வால்மார்டின் கடன் எத்தனை லட்சம் கோடி என்று வெளியே தெரியாத அளவிற்கு கடன் பத்திரங்களாகவும் உலகின் முன்னணி வங்கிகள், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் காப்பீடு நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளில் மறைந்துள்ளன.


இந்த வால்மார்ட் சாம்ராஜ்ஜியம் உலகம் முழுவதிலிருந்தும் உறிஞ்சும் பல லட்சம் கோடி டாலர்களும் நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வைத்திருக்கும் சாம் வால்டனின் குடும்பத்தின் வயிற்றுக்குள் செல்கிறது. லாப ஈவுத்தொகை (Dividend) மூலமாக மட்டும் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்களைக் கொள்ளையடிக்கும் சாம் வால்டன் குடும்பத்தினர் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் வரிசையில் 5 முதல் 9 இடம் வரை நிரம்பியுள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பைக் கூட்டினால் உலகின் நிரந்தரப் பணக்காரக் குடும்பமே இவர்கள்தான்.


உலக அரசியலின் படுபிற்போக்கு சக்திகளான புஷ், டிக் செனி வகையறாக்களுக்கு சாம் வால்டன் குடும்பம்தான் நிரந்தரப் புரவலர்கள். அமெரிக்காவில் கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்குவதற்குத் தீவிரமாக முயலும் கும்பல்களுக்கும் தலையாய புரவலராக இருப்பதுடன், பின்தங்கிய நாடுகளை அதன் பிடியில் வைத்திருக்கும் பல அரசுசாரா நிறுவனங்களையும் வால்டன் குடும்பம் பராமரித்து வருகிறது.


உலகமயமாக்கல் கொள்ளைக்காகத் திட்டமிட்டே வளர்க்கப்பட்ட வால்மார்ட் இன்று 6100 கடைகள், 18 லட்சம் ஊழியர்கள், ஆண்டு விற்பனை 312.4 பில்லியன், லாபம் மட்டும் 11.2 பில்லியன் என உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியாகியுள்ளது. 42 மணி நேரத்திற்கு ஒரு புதிய கடை என திறந்த வண்ணம் உள்ளது. வால்மார்ட் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் 21வது பணக்கார நாடாக இருந்திருக்கும். இதன் ஆண்டு வருமானம் பல ஏழை நாடுகளின் வருமானத்தை விடவும் அதிகம்.


ஏகபோகத்தின் வீச்சு


வாரத்திற்கு 10 கோடி அமெரிக்கர்கள் வால்மார்ட்டின் கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர்.


அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35%, மொத்த மருந்து மாத்திரை சந்தையில் 25%, வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%, ஆடியோ வீடியோ விற்பனையில் 25%என்று அமெரிக்கச் சந்தையையே தனது கோரப்பிடிக்குள் கைப்பற்றி வைத்திருக்கிறது வால்மார்ட்.

அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித் தாள் விற்பனையாளரும் வால் மார்ட் தான். வெளிவரும் பத்திரிகைகளில் ஏறத்தாழ 20% வால்மார்ட் மூலம் விற்பனையாகிறது. அமெரிக்கச் சந்தையில் இப்படியென்றால் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் மொத்தச் சந்தையில் 50% வால்மார்ட்டின் கையில் இருக்கிறது.

அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), வீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்ற பல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன.


இத்தகைய ஏகபோகத்தின் மூலம் உற்பத்தியாளர்களைத் தன்னை அண்டிப் பழக்கும் அடிமைகளாகவே மாற்றியிருக்கிறது வால்மார்ட். தன்னுடன் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டிப் படைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் தமது பொருட்களின் விற்பனை விலை என்ன என்பதை பல பன்னாட்டு நிறுவனங்கள் வால்மார்டிற்குச் சொல்லி வந்தன. இன்றோ சந்தையைத் தன் பிடியில் வைத்திருக்கும் வால்மார்ட், தான் சொல்கிற பொருளை, கோருகிற விலையில் இந்நிறுவனங்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செலுத்துகிறது.


வால்மார்டிற்குப் பிடிக்கவில்லையா, பத்திரிக்கையின் அட்டை வடிவமைப்பு மாற்றப்பட வேண்டும், வால்மார்ட் ஆட்சேபித்தால் காசெட்டின் பாடல் வரிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும். வால்மார்ட் கோரினால் பொருட்களின் நிறத்தை மாற்ற வேண்டும். விலையைக் குறைக்கும் பொருட்டு உற்பத்திப் பொருளின் தரத்தைக் குறைக்கச் சொன்னால் அதையும் செய்யவேண்டும். அமெரிக்க மக்களின் தலைவலி காய்ச்சலுக்கான மாத்திரையை முடிவு செய்வது கூட வால்மார்ட்தான்.


தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. அதே போன்ற வேறு நிறுவனத்தின் பொருட்கள் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.


ஏற்கனவே சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்டின் பங்கு தான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளி நாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.


உற்பத்தியைக்
கட்டுப்படுத்துதல்


ஒவ்வொரு நாளும் பென்டான்வில் எனப்படும் வால்மார்ட்டின் தலைமையகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து உற்பத்தியாளர்கள் படையெடுக்கிறார்கள். அவர்களை இனவாரியாகப் பிரித்து தனியறைகளில் அமர்த்தி வால்மார்ட் தலைகீழ் ஏலத்தைத் துவங்குகிறது.


அதாவது, யார் மிகக் குறைவான விலையைக் கூறுகிறார்களோ அவர்களுக்கே அவ்வாண்டு ஒப்பந்தம். மீண்டும் அடுத்த ஆண்டு சென்ற ஆண்டின் விலையை விடக் குறைத்துக் கொடுக்க அந்நிறுவனங்கள் நிர்பந்திக்கப்படும். கச்சாப் பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு என அந்நிறுவனங்கள் மறுத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஏலம் துவங்கும். வால்மார்டின் மூலமாக இந்நிறுவனங்களின் வியாபாரம் பன்மடங்கு அதிகரித்தாலும், கட்டுப்படியாகாத உற்பத்திச் செலவினால் பல நிறுவனங்கள் திவாலாகின்றன. அல்லது அமெரிக்காவில் ஆலைகளை மூடிவிட்டு, உற்பத்தியை சீனா, பங்களாதேஷ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாற்றியிருக்கின்றனர்.


அமெரிக்காவின் ஐந்து பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் எலக்டிரிகல்ஸ், வால்மார்டின் நிர்பந்தத்தினால் தனது உற்பத்தியை மெக்ஸிகோவிற்கும், சீனாவிற்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் மாற்றிவிட்டது. அமெரிக்க (IUE) யூனியனின் கூற்றுப்படி கடந்த ஏழு ஆண்டுகளில் ஜெனரல் எலக்டிரிகல்ஸில் மட்டுமே 1,00,000 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.


பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் கூட்ட முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான "ரப்பர் மெய்ட்'. வால்மார்ட் விலையுயர்விற்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இன்று நியூவெல் நிறுவனம் தொடர்ந்து வால்மார்ட்டுடன் வர்த்தகம் செய்வதற்காக தனது 400 ஆலைகளில் 69ஐ மூடிவிட்டு ஆசியாவிற்கு உற்பத்தியை மாற்றியது. இதனால் இந்நிறுவனத்தில் இதுவரை வேலை இழந்தோர் 11,000 பேர்.


இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி, உள்ளிட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து 15 லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.


உழைப்புச் சுரண்டல்


அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை மடக்கிப் போட்டு வியர்வைக் கடைகள் எனப்படும் கொடூரமான கொத்தடிமைக் கூடாரங்களை வால்மார்ட் இரகசியமாக நடத்துகிறது. சீனா மற்றும் இதர ஆசிய நாடுகளிலோ வெளிப்படையாகவே இவை நடத்தப்படுகின்றன. இங்கு ஆணி, பொம்மைகள், மின்விசிறிகள் போன்ற பல்லாயிரம் விதமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.


நாளொன்றுக்கு 13 முதல் 16 மணி நேரம் வேலை, வார விடுமுறை கிடையாது என்று தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படும் இது போன்ற கூடாரங்களில் விழாக்கால, பண்டிகை விற்பனை சீசன்களில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள்.


நினைத்தே பார்க்க முடியாத இந்தக் கொடூர வேலைக்கு மாதச்சம்பளம் 42 டாலர்கள். இது சீனாவின் குறைந்தபட்ச கூலியை விட 40% குறைவு. இந்த தொழிலாளர்கள் 7 அடிக்கு7 அடி அறையில் 12 பேர் அடைக்கப்பட்டு அதற்கு வார வாடகை 2 டாலர்களும், மட்டமான உணவிற்கு வாரத்திற்கு 5.50 டாலர்களும் வசூலிக்கப்படுகிறது. இந்த வேலைக் கொடுமையினால் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அது அவர்களுடைய சொந்தச் செலவு. சீனாவில் மட்டும் வால்மார்டிற்கு இது போன்ற 5000 கொத்தடிமைக் கூடாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


ஏழை நாடுகளின் தொழிலாளர்களைப் போலவே தனது சொந்த ஊழியர்களையும் வால்மார்ட் ஒடுக்குகிறது. உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஆனால் எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. முன்னர் எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் ஒருவர் இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வேலை வாய்ப்பு இல்லை.


அதே போல எந்தக் கடையிலாவது தொழிற்சங்கம் அமைக்கப்படும் எனச் சந்தேகித்தால் அந்தக்கடை ஊழியர்களை ரகசியக் காமிராக்கள் கொண்டு கண்காணித்து சந்தேகத்திற்கு உரிய நபர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்கிறது. தனது தலைமையகத்தில் இதற்கென்றே உருவாக்கி வைத்திருக்கும் சிறப்பு தொழிற்சங்க எதிர்ப்புப் படையை வரவழைத்து கருங்காலிகளை உருவாக்கி, சங்கம் அமைக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளுகிறது.


தொழிற்சங்கங்கள் இருக்கும் மற்ற நிறுவனங்களின் ஊழியர்களை விட வால்மார்ட் ஊழியர்களின் சம்பளம் 23% குறைவு. வால்மார்ட் ஊழியர்களில் மூன்றில் இரண்டு பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். காப்பீடு செய்யவில்லையென்றால் மருத்துவமே பார்த்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் உள்ள அமெரிக்காவில் வெறும் 38% வால்மார்ட் ஊழியர்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.


சிறப்பு விற்பனை நாட்களில் தனது ஊழியர்களை வெளியில் செல்லக்கூட அனுமதிக்காமல், கடையில் வைத்துப் பூட்டும் வால்மார்ட், கூடுதல் பணி நேரத்திற்கு தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட ஓவர்டைம் வழங்குவதில்லை. பெண் தொழிலாளிகளுக்கு ஆண்களை விட குறைவான சம்பளம், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க மறுப்பது, குழந்தைத் தொழிலாளர் முறை என நீண்டு கொண்டே செல்கின்றன வால்மார்டின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள்.


இந்தக் கொடுமைகளை எதிர்த்து கனடா நாட்டில் வால்மார்டின் இறைச்சிக்கடை ஊழியர்கள், சங்கம் அமைத்தவுடன், அந்நாடு முழுவதுமுள்ள தனது கடைகளில் இறைச்சிப்பகுதியையே இழுத்து மூடி தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது. தனது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் 38 மாநிலங்களில் வழக்குகளைச் சந்தித்து வருகிறது வால்மார்ட். இது தவிர அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வழக்கான 16 லட்சம் முன்னாள், இந்நாள் வால்மார்ட் ஊழியர்கள் இணைந்து தொடுத்துள்ள வழக்கும் அதன்மேல் நிலுவையில் உள்ளது.


அடுத்த குறி இந்தியா


சமூகச் செல்வங்களான உழைப்பையும், உற்பத்தியையும் தின்று செரித்து, வேலையின்மையையும், வறுமையையும் எச்சங்களாக விட்டுச் செல்லும் பொருளாதாரப் புற்று நோய் வால்மார்ட். இதன் அடுத்த இலக்கு இந்தியா. சில்லறை வணிகத்தை நம்பி வாழும் 4 கோடி குடும்பங்கள், பல கோடி விவசாயிகள் ஆகியோருடைய வாழ்க்கையையும், 10 லட்சம் கோடி மதிப்பு கொண்ட உலகின் நான்காவது பெரிய சில்லறை விற்பனைச் சந்தையுமான இந்தியாவை விழுங்க பல்லாயிரம் கோடி முதலீட்டுடன், வருகிறது வால்மார்ட்.

மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் நாம் மரணத்தை வாங்கப் போகிறோமா?

தசரத் மான்ஜி:மலையை அகற்றிய வீரக்கிழவன்!

முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். ""அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?'' என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன்.

முட்டாள் கிழவன் சொன்னானாம், ""நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு மனமிரங்கிய இரண்டு தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த மலைகளைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு பறந்து விட்டார்களாம்

இந்த நீதிக்கதையை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குக் கூறிய மாவோ, ""ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும்தான் நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் மலைகள். சீன மக்கள்தான் நம் தேவதைகள். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விடாப்பிடியாக உழைத்தால் மக்கள் எனும் தேவதைகளின் மனதைத் தொடுவோம். மக்கள் நம்முடன் இணைந்தால் அடுத்த கணமே இந்த மலைகளை நாம் தூக்கி எறிந்துவிட முடியும்'' என்றார்.

அந்தச் சீனத்துப் புனைகதையை நிஜமாக்கியிருக்கிறான் ஒரு வீரக்கிழவன். 22 ஆண்டுகள் ஒற்றை மனிதனாக நின்று ஒரு மலைக்குன்றையே உடைத்து 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தசரத் மான்ஜி என்ற மாவீரர் சென்ற ஆகஸ்டு மாதம் மறைந்து விட்டார். வாழ்ந்த காலம் வரை அந்த 74 வயதுக் கிழவனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு மாமனிதனின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியனாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரனின் கதை.

பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும்தான் அவர்களுடைய உணவு.

1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்தாள். ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்....?

கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை.

தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. ""மலையை உடைக்கப் போகிறேன்'' என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை "வரலாறு படைக்க வந்த மாவீரன்' என்று மக்கள் கொண்டாடவில்லை. "பைத்தியம்' என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.

அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்.

22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்.

ஆனால் ""இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை'' என்று மறுக்கிறார் மான்ஜி. ""அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது'' என்கிறார் மான்ஜி.

அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.

தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவன் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டான். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை.

தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, ""அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை'' என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகாரின் அதிகார வர்க்கம்.

1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. ""இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?'' என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.

தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. ""நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன். அவ்வளவுதான்'' அவரது உளியில் பட்டுத்தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுகின்றன சொற்கள்.

மான்ஜியின் உளி பட்டுத் தெறித்துப் பிளந்து கிடக்கும் அந்தக் கற்பாறை ஒரு நினைவுச்சின்னம். மரணத்துக்குப் பின்னும் அந்த மாவீரனை மதிக்கத் தவறிய இந்த அரசின் இரக்கமற்ற இதயத்துக்கு இது நினைவுச்சின்னம் அதில் எந்த ஐயமும் இல்லை.

அதே நேரத்தில் 22 ஆண்டுகள் ஒரு மலையோடு தன்னந்தனியனாக ஒரு மனிதன் மோதிக்கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தச் சமூகத்தின் பாறையை விஞ்சும் "மன உறுதி'க்கும் இதுதான் நினைவுச்சின்னம்.

உணவும் தண்ணீரும், உளியும் சுத்தியலும் வழங்கினார்கள் மக்கள். உண்மைதான். ஆனால் அவற்றைத் தவிர வேறு எதையும் அந்தப் பாதையால் பயனடையப்போகும் மக்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாதா? தசரத் மான்ஜியுடன் கைகோர்த்திருக்க முடியாதா? மலையைப் பிளந்து பாதையைத் திறந்து காட்டிய அந்தத் தருணம் வரை ""இவன் மூடனல்ல வீரன்'' என்னும் உண்மையை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண எண்ணும்போது நெஞ்சம் நடுங்குகிறது.

நூற்றாண்டுகளாய்ப் புதுப்பிக்கப்படும் அடிமைப் புத்தியும், சாதுரியமான விதிவாதமும், கபடம் கலந்த கருணையும் செயலின்மையில் பிறந்த இரக்கமும், அம்மணமான காரியவாதமும் சேர்ந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது மக்களின் "புறக்கணிப்பு' என்னும் பாறை. இந்தப் பாறையை உளியும் சுத்தியலும் கொண்டு பிளக்க முடியாது. கரைக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து வைத்திருந்த அந்த எளிய மனிதனின் அறிவை எண்ணும் போது வெட்கம் வருகிறது.

மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று, 22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி. இந்த வீரத்தின் பரிமாணம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. சேர்ந்து ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்திருக்கிறானே, அந்தக் காதல் நம்மைக் கண் கலங்கச் செய்கிறது.

சீனத்துக் கிழவனைப் போல "என்றோ ஒரு நாள் இந்த மலை அகன்றே தீரும்' என்று தன் நம்பிக்கையைக் கனவில் பிணைத்து வைக்கவில்லை தசரத் மான்ஜி. தான் வாழும் காலத்திலேயே கனவை நனவாக்கும் உறுதியோடுதான் உளியைப் பற்றியிருக்கிறது அவனுடைய கரம். உளியின் மீது இறங்கிய சுத்தியலின் ஒவ்வொரு அடியும் "இன்றே.. இன்றே' என்று அந்த மலையின் மரணத்திற்கு நாள் குறித்திருக்கிறது.

உணவுக்கும் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்கி, "இத்தனை ஆண்டில் இந்தப் பணி முடிப்போம்' என்று திட்டம் போட்டுச் செயலாற்றும் "திறமை'யெல்லாம் எலி பிடிக்கும் சாதியில் பிறந்த அந்த ஏழை மனிதனுக்கு இல்லை.

""என்று வருமோ புரட்சி ... இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்'' என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின் புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. "இயலாததை'ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப் படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.

விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை, அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயாசமாகத் துளைத்துச் செல்கிறது.

மக்கள் மீது கொண்ட காதலில் தோய்ந்து தன் இளமையைக் கொண்டாடிய அந்தக் கிழவனின் வாழ்க்கை, நம் இளைஞர்களுக்குக் காதலைப் புதிதாய்க் கற்றுக் கொடுக்கிறது.

ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன் ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது. நெருங்க நெருங்க கனத்துக் கவியும் சோக இசையாய் அழுத்துகிறது. அந்தக் கணமே ஒரு அறைகூவலாய் மாறி நம்மைச் செயலுக்கு இழுக்கிறது. தேவதைகளின் இதயத்தை இளக்கி, கருணையைப் பிழிந்தெடுத்த அந்தக் கிழவனின் ஆவி மெல்ல நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.

· சூரியன்

Thursday, December 13, 2007

சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்

சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம்



'தேவன் இல்லை - ஆன்மா இல்லை -இயேசுவே.. நீரும் இல்லை அன்னை தெராசா


""பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?''

""என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.''

""என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.''

துயரம் ததும்பும் இந்தச் சொற்கள் "அன்னை' தெரசாவின் இதயத்திலிருந்து கசிந்தவை.

1949இல் கல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி என்ற அமைப்பை அவர் தொடங்கியது முதல் 1997 இல் மரிக்கும் வரையில் இடையறாது அவரது இதயத்தை அரித்துக் கொண்டிருந்த "அவிசுவாசத்தை' எழுத்து பூர்வமாகவே பதிவு செய்திருக்கிறார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு "புனிதர்' பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள "அன்னை தெரசாவா என் ஒளியாய் இரு' என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அதிக முக்கியத்துவமின்றி சில ஆங்கில நாளேடுகளில் மட்டும் தெரசா குறித்த இச்செய்தி வெளியாகியிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் இது பரவலாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசுவுக்கு அடுத்தபடியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மதிக்கத்தக்க குறியீடாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் சின்னமாகவும், ஐஸ்வர்யா ராய் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரும் போற்றிப் பணியும் தெய்வமாகவும் வனைந்து உருவாக்கப்பட்ட தெரசா என்ற திருஉரு, திடீரென்று நொறுங்கிச் சரிவதை ஆளும் வர்க்கங்கள் விரும்பாததில் வியப்பில்லை.

இக்கடிதங்களை ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையே வெளியிட்டிருப்பதால் இதை விசுவாசிகள் யாரும் "நாத்திகர்களின் சதி' என்று கூறி மறுக்க முடியாது. தனது மரணத்துக்குப் பிறகு இக்கடிதங்களை அழித்துவிட வேண்டுமென்று தெரசா கோரியிருந்ததையும் மீறி இவை வெளியிடப்படக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சிலுவையின் முன்புறத்தில் இயேசுவையும் பின்புறத்தில் உண்மையையும் அறைந்து வைத்திருக்கும் திருச்சபை, உண்மையின் பால் கொண்ட காதலால் இவற்றை வெளியிட்டிருக்காது என்பதை மட்டும் நாம் நிச்சயமாகக் கூறலாம்.

""இக்கடிதங்களின் காரணமாகப் "புனிதர்' பட்டம் பெறும் தகுதியை தெரசா இழக்க மாட்டார்'' என்று கூறுகிறது வாடிகன். ""இயேசுவும் கூட சிலுவையில் மரிக்குமுன் தன்னைக் கைவிடப்பட்டவராகவே உணர்ந்தார்..... தெரசாவிடம் நாம் காணும் "விசுவாசம் நிரம்பிய மன உறுதி' என்பது ஒரு காப்பியச் சிறப்பு மிக்க ஆன்மீக வீரம்'' என்கிறார் இந்நூலாசிரியர் கலோடிஜெக்.

ஆன்மீகத் துயரம் என்று கத்தோலிக்க குருமார்களால் வருணிக்கப்படும் தெரசாவின் இந்த உளவியல் வேதனை குறித்து பொருள் முதல்வாதிகளாகிய நாம் மகிழவும் தேவையில்லை, வருந்தவும் தேவையில்லை. தெரசாவிற்குள் "தேவன்' இறங்கியதெப்படி, வெளியேறியதெப்படி என்பதைப் புரிந்து கொள்வதுதான் நம் அக்கறை.

பின்தங்கிய நாடான அல்பேனியாவின் விவசாயக் குடும்பமொன்றில் பிறந்த தெரசா, பரிதாபத்துக்குரிய கன்னியா ஸ்திரீகளின் கூட்டத்தில் ஒருவராக இந்தியாவிற்கு வருகிறார். 1929 முதல் கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த "அற்புதம்' நிகழ்ந்தது.

""இயேசு என்முன் தோன்றினார். "நீ திறமைகள் ஏதுமற்ற பலவீனமான பாவி என்பதை நான் அறிவேன். அதனால்தான் என்னுடைய புகழைப் பரப்ப உன்னைப் பயன்படுத்த விரும்புகிறேன். நீ மறுப்பாயா?' என்று கேட்டார். எனவே எனக்கு இந்த ஆசிரியைப் பணி வேண்டாம். நான் நிராதரவான ஆன்மாக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்'' என்று தனது திருச்சபை மேலிடத்திடம் கோரினார், தெரசா. "ஒரு உண்மையான விசுவாசி' கைவசம் இருப்பதைக் கண்டுகொண்ட ஆர்ச் பிஷப், வாடிகனின் அனுமதியைத் தெரசாவுக்குப் பெற்றுத் தந்தார். 1948இல் கல்கத்தாவில் தொடங்கியது தெரசாவின் "மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி.'

இரண்டே மாதங்களில் தெரசாவின் வெறுமையும் விசுவாசமின்மையும் தொடங்கி விட்டன. துன்பங்களற்ற வசதியான பள்ளி ஆசிரியை வாழ்க்கையை 16 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டு திடீரென தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்ற ஏழைகளின் "பொந்துக்குள்' வீழ்ந்ததனால் ஏற்பட்ட அதிர்ச்சியும், இந்தச் சூழலை வலியத் தருவித்துக் கொண்டதனால் தன்மீதே தோன்றியிருக்கக் கூடிய வெறுப்பும் தெரசாவிடம் "விசுவாசமின்மை' துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

""பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?'' என்று பின்னாளில் அவர் எழுதும் கடிதம் அந்த மனக்காயத்தின் ஆழத்தைக் காட்டுகிறது.

தமது விருப்பங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள இயலாமல் திருச்சபைச் சூழலில் நிரப்பப்பட்டிருக்கும் போலி ஒழுக்கப் புகைமூட்டம், தவறுகளை வெளிப்படையாகப் பரிசீலனைக்கு உட்படுத்துவதைத் தந்திரமாகத் தவிர்க்கும் பாவமன்னிப்பு முறை, அம்பலப்படாத தனது சுய ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ளும் பதற்றம், நெஞ்சில் ஆழப்பதிய வைக்கப்பட்டிருக்கும் தேவதூஷணம் குறித்த அச்சம், ஊன்றி நிற்பதற்குத் தேவையான விசுவாசமோ, திரும்பச் செல்வதற்கான துணிவோ இல்லாததால் தோன்றக்கூடிய விரக்தி.. இத்தகைய சூழலில் சிக்கிக்கொண்ட ஒரு முதிர்கன்னி இதுதான் 1949இன் தெரசா.

தனது வெறுமை குறித்தும், நம்பிக்கையின்மை குறித்தும் தனக்கு உயர் தகுதியில் உள்ள அருட்தந்தைகளுக்கு தெரசா இடையறாமல் கடிதம் எழுதியிருக்கிறார் எனினும், பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்மணியை விடுவிக்க திருச்சபை முயலவில்லை. மாறாக, அவரைச் சிலுவையில் அறைவதற்கான ஆணியைத்தான் தயார் செய்தது. 1969இல் கத்தோலிக்க மத வெறியனான மால்கம் மக்கரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர் தெரசாவைப் பற்றிய செய்திப் படம் ஒன்றைத் தயாரித்தார். பி.பி.சி இதனை ஒளிபரப்பியது. இருட்டறையில் விளக்குகள் இல்லாமலேயே ஒரு காட்சி பதிவாகியிருப்பதாகவும், அது தெரசா நிகழ்த்திய அற்புதம் என்றும் கூவினார் மக்கரிட்ஜ். தனது விசுவாசமின்மை குறித்து கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருந்த தெரசாவும், "தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக' அந்தப்படத்தில் பேட்டியளித்தார்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் எழுந்த வியத்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏகாதிபத்தியவாதிகளைத் தனிமைப்படுத்தியிருந்தன. மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை அவர்கள் காட்டவேண்டியிருந்தது. இப்படி உருவாக்கப்பட்டதுதான் தெரசாவின் ஒளிவட்டம். நோபெல் சமாதானப் பரிசு உள்ளிட்ட பரிசுகளை அவர் மீது பொழிந்தது ஏகாதிபத்தியம். தாட்சர், டயானா, ரீகன், பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள்.. என்று தரிசனத்துக்கு வரும் பிரமுகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. மெலிந்து சுருங்கிய தோற்றமும், வெள்ளைக் கைத்தறி ஆடையும், ஆதரவற்றோர் சேவையும் தெரசாவை மதச்சார்பு கடந்த ஒரு புனிதத் திரு உருவாக ஏகாதிபத்தியங்கள் முன்நிறுத்துவதற்குப் பயன்பட்டன.

ஆனால் உலகமே கொண்டாடிய அவரது சேவையோ, விருதுகளோ, பணிந்து வணங்கிய பல நாட்டு அதிபர்களோ, இவையனைத்தும் வழங்கியிருக்கக் கூடிய மனநிறைவோ தன்னிடம் இல்லை என்கின்றன தெரசாவின் கடிதங்கள். தெரசாவின் இறைநம்பிக்கை ஏன் தகரவேண்டும்? விசுவாசமில்லாத நிலையிலும் அவர் காட்டிய மன உறுதியை வியக்கிறார் கலோடிஜெக். அவருடைய விசுவாசத்தைப் பறித்தது எது? விசுவாசம் தளர்ந்த பின்னரும் அவருடைய மன உறுதியைத் தாங்கி நின்றது எது?

மாபெரும் தத்துவஞானிகளும், விஞ்ஞானிகளும்கூட "கடவுள்' தோற்றுவிக்கும் இத்தகைய மனத்துயருக்கு ஆட்படுவதுண்டு. அது அறிவுத்தேடல் தோற்றுவிக்கும் மனத்துயர். அத்தகைய அறிவுத்தேடலின் சாயல் கூட தெரசாவின் கடிதங்களில் இல்லை. அவர் அறிவின் சாயல் கூட எஞ்சியிராத வண்ணம் கத்தோலிக்கத் திருச்சபையின் உலைக்களத்தில் உருக்கி அடிக்கப்பட்ட அடிமை.

நீதியற்ற உலகின் நீதியாய், இரக்கமற்ற உலகின் இதயமாய் கடவுளைச் சரணடையும் மக்களின் மத உணர்வு கூட ""கடவுளே உனக்குக் கண்ணில்லையா'' என்று குமுறி நம்பிக்கை இழக்கும். தெரசாவைச் சூழ்ந்திருந்த ஏழைகளும் நோயுற்றவர்களும் அநாதைகளும் வடித்த கண்ணீர் "தேவன் இருக்கிறானா' என்ற கேள்வியை அவருக்குள் எழுப்பவில்லை.

""ஏழ்மையைச் சகித்துக்கொள்வதும் கிறிஸ்துவின் துயரத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அழகானது. ஏழை மக்களின் துயரம் இந்த உலகுக்கு பெரிதும் உதவுகிறது என்று நான் கருதுகிறேன்'' என்று 1981இல் ஒரு பேட்டியில் குறிப்பட்டார் தெரசா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் சகோதரி நிர்மலா இதை மேலும் தெளிவுபடுத்துகிறார், ""ஏழ்மை என்பது இருக்கத்தான் செய்யும். தங்களுடைய ஏழ்மையை சரியான கோணத்தில் ஏழைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்''. வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு புற்றுநோயாளியிடம் தெரசா பேசுவது படமாகப் பதிவாகியிருக்கிறது, ""சிலுவையில் இயேசு துன்புற்றதைப் போல நீ துன்புறுகிறாய். இயேசு உன்னை முத்தமிடுகிறார் என்று நினைக்கிறேன்'' என்கிறார் தெரசா. ஆனால், தான் நோய்வாய்ப்படும்போது இயேசுவால் முத்தமிடப்படுவதை தெரசா விரும்பவில்லை. மன உறுத்தல் ஏதுமின்றி அமெரிக்காவில் மருத்துவம் பார்த்துக் கொண்டார்.

தெரசாவின் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக உலகெங்கும் ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வடிகட்டிய பொய். அங்கே வலியால் துடிப்பவர்களுக்கு வலி நிவாரணி மருந்து கூடத் தரப்படுவதில்லை என்ற உண்மையை பல மருத்துவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். கல்கத்தா இல்லத்தைக் காட்டி தெரசா உலகெங்கும் வசூலித்த பல நூறு கோடி ரூபாய்களில் ஒரு மருத்துவமனை கூட அங்கே கட்டப்படவில்லை. மாறாக, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒயினும் கறியும் புழங்கும் 500 செமினரிகளை அமைத்திருக்கிறார் தெரசா.

இந்த இரக்கமின்மை அவரது தனிப்பட்ட குணாதிசயம் அல்ல. இதுவே ஒரு சித்தாந்தமாக, மதக் கோட்பாடாக அவர் சிந்தனையில் பதிந்திருக்கிறது. இத்தகைய சிந்தனையின் மீதான விசுவாசமின்மை எதையும் அவரது கடிதங்கள் எழுப்பவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

தெரசாவை அம்பலப்படுத்தும் "நரகத்தின் தேவதை' என்ற செய்திப்படத்தைத் தயாரித்த கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் கூறுகிறார்: ""தெரசா ஒரு வெகுளி என்றோ புத்திசாலி என்றோ நான் நினைக்கவில்லை. சிக்கலான மனப்பாங்கும் அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு வகையான சூழ்ச்சித் தன்மை அவரிடம் இருந்தது. அவர் கத்தோலிக்க வெறி பிடித்த ஒரு கடுங்கோட்பாட்டுவாதி, ஒரு மோசடிப் பேர்வழியும் கூட'' என்கிறார். தெரசாவின் மீது மதிப்புக் கொண்டவர்கள் இதனைப் படித்ததும் ஆத்திரப் படலாம். ஆனால் இக்கூற்று ஆதாரமற்றதல்ல.

ஹெய்தி நாட்டின் சர்வாதிகாரியும், அமெரிக்கக் கைக்கூலியுமான டுவாலியரை ""அற்புதமானவர். ஏழைகள் என்னமாய் அவரை நேசிக்கிறார்கள்'' என்று வியந்தார் தெரசா. போபால் விஷவாயுப் படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ""இது ஒரு விபத்தாக இருக்கலாம். மன்னித்து விடுங்கள்'' என்று உபதேசித்தார். பங்குச் சந்தை மோசடி மூலம் அமெரிக்க சிறுமுதலீட்டாளர்களிடமிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தைச் சூறையாடிய கீட்டிங் என்பவனிடமிருந்து நன்கொடை வாங்கினார் தெரசா. ""பாவப்பட்ட மக்களிடம் திருடிய பணம் தன்னிடம் தரப்பட்டால் கிறிஸ்து என்ன செய்திருப்பாரோ அதைச் செய்யுங்கள். பணத்தை மக்களிடம் திருப்பிவிடுங்கள்'' என்று அமெரிக்காவிலிருந்து தெரசாவுக்குக் கடிதம் எழுதினார் அரசு வக்கீல். தெரசா பதிலளிக்கவில்லை. மாறாக, ""கீட்டிங்கின் தண்டனையை ரத்து செய்யுங்கள்'' என்று நீதிபதிக்குக் கடிதமெழுதினார் தெரசா. பெண்களுக்கு மணவிலக்கு உரிமை இல்லாத அயர்லாந்தில் அது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தபோது ""மணவிலக்குக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு தேவனிடம் மன்னிப்பே கிடையாது'' என்று பிரச்சாரம் செய்தார்; அடுத்த 2 மாதங்களில் டயானாவின் மணவிலக்கை ஆதரித்து கருத்து வெளியிட்டார்.

அரசியல் அறிவற்ற பரிதாபத்துக்குரிய ஒரு கன்னியாஸ்திரீயாக தோற்றம் தந்தாலும், திருச்சபையின் ஆதரவு பெற்ற கொடுங்கோலர்களின் பக்கம்தான் தெரசா எப்போதுமே நின்றார். போராடும் மக்களின் பக்கம் தவறிக்கூட அவர் நின்றதில்லை. அறமோ நேர்மையோ இல்லாத இந்த நடவடிக்கைகள் அவரது விசுவாசிகளையே துணுக்குறச் செய்தன. ஆனால் இவையெதுவும் தெரசாவிடம் மனப்போராட்டத்தைக் கூடத் தோற்றுவிக்கவில்லை.

தெரசாவின் இதயத்தில் தேவன் இல்லையேயொழிய, ஏகாதிபத்தியங்களின் கைக்கருவியான "திருச்சபை' உறுதியாகவே அமர்ந்திருந்தது. எனவே, திருச்சபையின் ஊழல்கள், ஒழுக்கக் கேடுகள், அறம் வழுவிய செயல்கள் எதுவும் அவருடைய இந்த ஆன்மீக நெருக்கடிக்குக் காரணமாக அமையவில்லை. பிழைப்பதற்குரிய தொழிலாக தேவ ஊழியத்தைத் தெரிவு செய்து கொண்டிருக்கும் விசுவாசமற்ற பாதிரியார்களிடமிருந்து இந்த விசயத்தில் தெரசா எந்த வகையிலும் வேறுபட்டவராக இல்லை.

தனக்கே விசுவாசமில்லாத ஒன்றின்மீது மற்றவர்களை விசுவாசம் கொள்ளச் செய்யும் மோசடியில் தெரசாவும் ஈடுபட்டிருக்கிறார். தான் இறந்த பிறகும் தன்னிடம் நிலவிய விசுவாசமின்மையை வெளியிட வேண்டாமென்ற அவரது கோரிக்கை, அவரது சிந்தனையில் ஊறியிருந்த கூச்சமற்ற போலித்தனத்தையே காட்டுகிறது.

ஆதரவற்றவர்கள் மீது அன்பு காட்டுவதற்காக அவர் தொடங்கிய சேவையே அவரது இதயத்திலிருந்து அன்பை உறிஞ்சி எடுத்துவிட்டது. ஏழ்மையை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை ஒழிக்கத் துடிப்பவர்களிடம் மட்டுமே ஏழைகள் மீதான அன்பு இடையறாமல் சுரக்க முடியும். ஏழ்மையின் துயரத்தில் கிறிஸ்துவைக் காண்பவர்களால் ஏழைகளை நேசிக்க முடியாது.

கிறிஸ்துவை நேசிக்கும் பொருட்டுத்தான் தெரசா ஏழைகளை நேசித்தார். எந்த அளவுக்கு ஏழ்மையும் துயரமும் அவருக்கு உணர்ச்சியற்றவையாக ஆகத்தொடங்கினவோ, அதே அளவுக்கு கிறிஸ்துவும் அவருக்கு உணர்ச்சியற்றவரானார். ஆனால், ""விசுவாசத்தை இழக்க இழக்க, மேலும் தீவிரமான விசுவாசியாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தன்னைக் குணமாக்கிக் கொள்ள தெரசா செய்த இந்த முயற்சி, தனக்குத் தானே அவர் வெட்டிக் கொண்ட படுகுழியை மேலும் ஆழப்படுத்தியிருக்கும்'' என்கிறார் ஹிட்சென்ஸ்.

தன்னில் கிறிஸ்து இறங்கியதாக கருதிக்கொண்ட அந்த மாயக்காட்சி (Hallucination) அனுபவம் இன்னொரு முறை நிகழுமென்று தெரசா எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால் 1946இல் இருந்தது போல "திறமைகள் ஏதுமற்ற பரிதாபத்துக்குரிய முதிர்கன்னியாய்' தெரசா இல்லையே! நிர்வாகம், நன்கொடை, விருதுகள், விமானப்பயணங்கள், தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என அவரது வாழ்க்கை விரிந்து விட்டது. பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் அவர் இயல்பில் சேர்ந்து விட்டன.

எனினும், தெரசாவுக்குள் மிச்சமிருந்த அந்த அல்பேனிய முட்டாள் பெண் அவ்வப்போது விழித்துக் கொண்டு ஏசுவைத் தேடியிருக்கிறாள். ஆனால், தேவனைக் கதறி அழைக்கத் தேவைப்படும் கையறு நிலை தெரசாவின் வாழ்க்கையிலிருந்து அகன்று விட்டது. எவ்வளவு முயன்றும் அந்த மாயக்காட்சியை இன்னொருமுறை அவரால் தன்னில் தருவிக்க முடியவில்லை.

· மருதையன்

Wednesday, December 12, 2007

தூக்குமரம்

தூக்குமரம் - தமிழ்மக்கள் இசைவிழா 2007 நிகழ்ச்சிகள்





கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...7_8.


மோடியை பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்.

நரேந்திர மோடி எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானச் செயல் திட்டங்களுக்குத் தனது ஆதரவையும், ஒப்புதலையும் அளித்தான் என்பது பற்றி பாஜக, RSS, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் ஆகிய சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்த முக்கிய நபர்கள் வெளிப்படையாகவே பேசினார்கள்.

மேலோட்டம்

கோத்ரா சம்பவத்திற்குப் பின், நரேந்திர மோடியின் கோபம் தெளிவாக அறியக் கூடியதாக இருந்தது. அவன் (மோடி) பழிதீர்க்கச் சபதம் செய்தான். பஜ்ரங்தள் உடைய தேசிய ஒருங்கிணைப்பாளரான ஹர்சத் பட் என்பவனும் ஒருவனாக கலந்துக் கொண்ட ஒரு சந்திப்பின் போது நரேந்திர மோடி, "அடுத்த மூன்று தினங்களுக்கு அவர்கள் என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ அவை அனைத்தும் செய்து கொள்ளட்டும்" என்று (மோடி)சொல்லியுள்ளான். அதன் பிறகு அவன் எங்களை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான். அனைத்தும் நிறுத்தப்பட்டது என பட் தெரிவித்தான்.

அஹ்மதாபாத் நகர விஹெச்பி தலைவனான ராஜேந்திர வியாஸ்க்கு மோடி ஆறுதல் கூறும் போது,"ராஜேந்திர பாய் அமைதியாக இருங்கள். எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆறுதலளித்தானாம்.

மோடியின் அரசு, வன்முறை கும்பல்களுக்கு அவர்களின் வெறி கொண்டத் தாக்குதல்கள் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடத்திட அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கும் முயன்றது. நரோடா பாட்டியா வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு பஜ்ரங்கி என்பவன் மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் தங்குவதற்கு நரேந்திர மோடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்ததோடு, அவனுக்கு பெயில் கிடைக்க உதவிடும் வகையில் இரண்டு நீதிபதிகளையும் மாற்றம் செய்துள்ளான்.

குஜராத் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், காவல்துறையினர் ஹிந்துக்களுக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என மோடி உத்தரவிட்டதால், அது கலவரக்காரர்களுக்கு எவ்வித கட்டுபாடும் இல்லாமல் சுதந்திரமாக மூன்று நாள்கள் செயல்பட உதவியது. எதுவரையில் என்றால் இராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என்னும் அதிகப்படியான நெருக்குதல்கள் மேலிட்டத்தில் இருந்து வரும் வரையிலுமாகும்.

நரோடா பாட்டியாவில் நிகழ்நத மனித இனப்படுகொலைகளுக்குப் பின்னர், முதலமைச்சரே சம்பவ இடத்திற்குச் சென்று, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கியமாக பங்கெடுத்தச் சாரா இன மக்களின் செயல்பாடுகளை "நியாயமானதே" என அங்கீகரித்தான்.

மோடியின் உறுதியான தலைமையினாலேயே, கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடந்த மனிதவர்க்கப் படுகொலைகள் நிகழ சாத்தியமானது என அரசாங்க சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா என்பவன் ஏற்றுக் கொண்டான்.

உங்களுடைய கை, மாபெரும் சட்ட ஒழுங்கில்லாத சமுதாயம்

அரசு நிர்வாகம் திரும்பிக் கொள்ள வேண்டும் என்ற தெளிவானக் கட்டளைகளை நரேந்திர மோடி மட்டும் பிறப்பிக்காமல் இருந்திருந்தால் குஜராத்தில் நடைபெற்ற இன அழிப்பு படுகொலைகளுக்குச் சாத்தியமே கிடையாது என்பதனை குற்றம்சாட்டபட்டவர்கள் ஒருவர் பின் ஒருவர் உறுதி செய்தனர்.

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவர்கள் படுகொலைகளை நிகழ்த்த எவ்வாறு சதி திட்டங்களை உருவாக்கினார்கள்?, சபர்மதி விரைவு இரயில் தீவைப்பு சம்பவம் நடந்த தகவல் கிடைத்த உடன், மிக அதிக அளவில் படுகொலைகள் செய்யப்படுவதற்கான முன்னேற்பாடுகள் உடனடியாக எவ்வாறு துவங்கப்பட்டது? பல்வேறு காவி அமைப்புகளிலுள்ள உறுதி மிக்க தொண்டர்களை உள்ளடக்கிய கொலைகள் செய்யும் குழுக்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கலவரங்கள் நடக்கும் போது காவல்துறையினர் கண்டு கொள்ளாமல் இருந்ததோடு மடடுமல்லாமல், சில சம்பவங்களில் வன்முறை கும்பலுடன் தோளோடு தோள் நின்று பங்கெடுத்தது எப்படி? குற்றவாளிகளுக்கு அவர்களுடைய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதற்கு பதிலாக உயிர் தப்பியவர்களை மிரட்டவும், விலைக்கு வாங்கவும் திட்டமிட்டார்களே அது எப்படி?, போன்ற விபரங்கள் முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.

படுகொலைகளும் இன்னும் அது பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்வது ஆகியன பாஜக அரசாலும் இன்னும் அதன் சகாக்களாகிய விஹெச்பி மற்றும் பஹ்ரங்தள் அமைப்புகளில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ளவர்களால் செய்யப்பட்டது. எனவே குஜராத் படுகொலைகள் ஒரு சூத்திரகாரனுடையக் கட்டளைகளை கொண்டு இயக்கப்பட்ட கொடூர காட்சிகளா அல்லது எவ்வித ஒருங்கியைப்பாளரும் இல்லாமல் தானாகவே நடந்துவிட்ட உணர்வு வெளிப்பாடா? திரைக்குப் பின்னாலிருந்து கண்ணால் காணமுடியாத படி நூல்களை கொண்டு பொம்மலாட்டங்கள் நடத்துவது போன்று, திரைமறைவில் இருந்து கொண்டு யாரேனும் வன்முறை வெறியாளர்களை இயக்கிக் கொண்டிருந்தார்களா?

இம்மனித வர்க்கப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த போது அம் மாநிலத்தை நிர்வகித்து வந்தவனுடைய அரசின் பல்வேறு துறைகளும் வன்முறை கும்பல்களுக்கு உதவிகள் செய்த போது, அவனுடைய நிஜமான பங்களிப்பு எத்தகைய அளவில் இருந்தது? குஜராத் இனப்படுகொலைகளில் காவல்துறையும் குற்றங்களில் பங்கு வகித்ததற்கு மோடி தான் பொறுப்பா?

இரத்த தாகவெறி பிடித்த விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தலைவன்களான பாபு பஜ்ரங்கி, ஹரேஷ் பட் மற்றும் அனில் பட்டேல் போன்றவர்களை, இவ்வெறியாட்டத்திற்கு செல்ல மோடியா கட்டளையிட்டான்?

கொலையாளிகளிடமிருந்தே உண்மைகளைக் கண்டுபிடிக்க தெஹல்கா முயற்சி மேற்கொண்டது. அப்போது இது தான் இக்கயவர்கள் மோடியை பற்றியும் அவனது பங்களிப்பை பற்றியும் சொல்லியது....

கோத்ரா MLA வான ஹரேஷ் பட் மோடியை பற்றிக் கூறும் போது, "எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்".

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...8.

கோத்ரா MLA வான ஹரேஷ் பட் மோடியைப் பற்றிக் கூறும் போது, "எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்" என்றுக் கூறினான்.

ஹரேஷ் பட் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: கோத்ரா சம்பவம் நடந்த போது, நரேந்திர மோடி உடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது?

ஹரேஷ் பட்: அதை நான் உனக்குச் சொல்ல முடியாது.....ஆனால் அது சாதகமாக இருந்தது என்று மடடும் நான் சொல்ல முடியும்......புரிந்துணர்வின் காரணமாக அந்த நேரத்தில் நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.

தெஹல்கா: எனக்குச் சிலவற்றை கூறுங்களேன்.... அவர்.......

ஹரேஷ் பட்: நான் பேசப்பட்ட விஷயங்களைத் தரமுடியாது.....ஆனால் எந்த ஒரு முதலமைச்சரும் எக்காலத்திலும் செய்ய முடியாததை மோடி செய்தார்.

தெஹல்கா: நான் எங்கேயும் அதை மேற்கோளாகக் காட்ட மாட்டேன்....அந்தக் காரணத்திற்காக....நான் உங்களிடம் கூட மேற்கோளாகக் காட்ட போவதில்லை.

ஹரேஷ் பட்: நாங்கள் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வதற்கு 3 நாட்களைக் கொடுத்தார். இம் மூன்று நாட்களுக்குப் பிறகு தன்னால் மேலும் அதிகமான நேரம் எதையும் தரமுடியாது என்றும் சொன்னார்.....இதை வெளிப்படையாகவே சொன்னார்.....மூன்று நாட்களுக்குப் பிறகு நிறுத்துமாறு அவர் எங்களைக் கேட்டு கொண்டார், எல்லாம் நிறுத்தப்பட்டது.

தெஹல்கா: மூன்று நாட்களுக்குப் பிறகு தான் அது நிறுத்தப்பட்டது....இராணுவமும் கூட அழைக்கப்பட்டதே...

ஹரேஷ் பட்: எல்லா படைகளும் வந்தது.... எங்களுக்கு மூன்று நாட்கள் கிடைத்தது..... அந்த மூன்று நாட்களில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தோம்........

தெஹல்கா: அவர் அதைச் சொன்னாரா?

ஹரேஷ் பட்: ஆம்....அதனால் தான் நான் சொல்லுகிறேன் , எந்த ஒரு முதலமைச்சரும் செய்ய முடியாததை அவர்(மோடி) செய்தார்...

தெஹல்கா: அவர்(மோடி) உங்களிடம் பேசினாரா?

ஹரேஷ் பட்: நாங்கள் ஒரு சந்திப்பில் கலந்துக் கொண்டோம் என்று உங்களிடம் சொன்னேனே?

......

ஹரேஷ் பட்: அவர் அரசை நடத்த வேண்டியுள்ளது....இப்போது அவர் சந்திக்கும் கஷ்டம்....அதிகமான வழக்குகள் மீண்டும் திறக்கப்படடுள்ளது...மக்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளார்கள...

தெஹல்கா: பாஜகவில் உள்ளவர்கள் அவருக்கு எதிராக வெறுப்படைந்துள்ளார்கள்....

ஹரேஷ் பட்: பாஜகவில் உள்ளவர்கள்... எதுவெல்லாம் அவர் செய்துள்ளாரோ அது அவரை வாழ்வில் மிக உயாந்தவராக ஆக்கியுள்ளது. அதனை மற்ற அரசியல்வாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...

நானாவதி-ஷா ஆணையம் முன்பு அரசாங்கச் செயல்பாடுகளை நியாயப்படுத்த அரசின் சட்ட ஆலோசகராக நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்ட்யா மோடியைப் பற்றி கூறும் போது, "மோடி மட்டும் அமைச்சராக இல்லாது இருந்திருந்தால், அவரே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பார்" என்றுக் கூறினான். மோடியைப் பற்றிய புகழ்ந்துரையில் அரவிந்த் பாண்ட்யா மேலும் கூறும் போது, குஜராத்தின் முதலமைச்சர் ஹிந்து சமாஜின் புதியக் காவலர் என்று வர்ணித்தான்.

அரவிந்த் பாண்ட்யா தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

அரவிந்த் பாண்ட்யா : (கோத்ரா முஸ்லிம்கள்) தாங்கள் செய்தவை அப்படியே சென்று விடும் என எண்ணினார்கள். காரணம், இயற்கையில் குஜராத்திகள் மென்மையானவர்கள். முன் காலங்களில் அவர்கள் குஜராத்திகளை அடித்துள்ளார்கள்; அவர்கள் உலகத்திலுள்ளவர்களை கூட அடித்துள்ளார்கள். ஆனால் எவரும் அவர்களுக்கு எதிராக எவ்வித தைரியத்தையும் காட்டவில்லை... ஒரு போதும் அவர்களைத் தடுத்ததில்லை... முன்னரெல்லாம் அவர்கள் பிரச்சனைகள் செய்யும் போது எவ்விதச் சிரமமும் இல்லாமல் சென்று விடுவதை போன்று இந்த முறையும் சென்று விடும் என எண்ணினார்கள். முன்பு இங்கே காங்கிரஸ் ஆட்சி செய்தது... அவர்கள் ஓட்டைப் பெறுவதற்காக காங்கிரஸ் குஜராத்திகள் மற்றும் ஹிந்துக்களை அடக்கியது... ஆனால் இந்த முறை அவர்கள் செமையாக அடித்து நையப் புடைக்கப்பட்டார்கள்... இப்பொழுது இங்கே ஹிந்து ஆட்சி நடைபெறுகிறது... குஜராத் முழுவதும் ஹிந்துக்களால் ஆட்சி நடத்தப்படுகிறது. இன்னும் அது கூட விஹெச்பி மற்றும் பாஜகவில் உள்ளவர்களிலிருந்து நடத்தப்படுகிறது....

தெஹல்கா: அவர்கள் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள்...

பாண்ட்யா : இல்லை, என்ன நடந்திருக்கும்....ஒருகால் இது காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால், அவர்கள் ஒருகாலும் ஹிந்துக்கள் முஸ்லிம்களை அடிப்பதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் நிர்வாகப் பலத்தை பயன்படுத்தி ஹிந்துக்களை கீழே இழுத்துப் போடவே முயன்றிருப்பார்கள்... அவர்கள் முஸ்லிம்களைக் கலவரத்திலிருந்து ஒரு போதும் தடுத்திருக்க மாட்டார்கள்... அவர்கள் ஹிந்துக்களை அமைதி காக்கும் படிக் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்களைத் (முஸ்லிம்களை)தொடுவதற்கு கூட ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்... இது போன்றச் (கோத்ரா) சந்தர்பங்களின் போது கூட ஒன்றும் செய்திருக்க மாட்டார்கள்.... ஆனால் இந்தச் சமயத்தில் ஹிந்து அடிப்படை(வாத) அரசாங்கம் உள்ளது... எனவே மக்களும் தயாரானார்கள். இன்னும் மாநில அரசும் தயாரானது.... இது இரகசியமாக உருவாக்கப்பட்டு கண்டும் காணாதிருப்பதுப் போல் நடந்த நல்லதொரு ஆதரவு.

தெஹல்கா: இது ஹிந்து சமுதாயத்திற்க்கும், ஹிந்து சமாஜ் முழுமைக்கும் கிடைத்த நல்லதொரு அதிஷ்டம்.

பாண்ட்யா : சொல்லுங்கள், ஆட்சியாளரும் உறுதியான குணம் படைத்தவராய் இருந்தார். ஏனெனில் பழிவாங்க வாய்ப்பளித்தார். இன்னும் நானும் தயார்... நாமெல்லாம் கல்யாண் சிங்குக்கு தான் முதல் முதலில் மரியாதை செய்ய வேண்டும் . ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக எல்லாம் நான் தான் செய்தேன்; நான் தான் கட்சி என்று கூறி எல்லா வகையான பொறுப்பையும் தான் ஏற்றுக் கொண்டார்...

தெஹல்கா: பின்னால் அவர் கட்சியை விட்டு மாறிய போது...

பாண்ட்யா : அவர் செய்தார். ஆனால் அவர் தான் முதல் முதலாக உருவாக்கியவர். அவர் உச்ச நீதிமன்றத்தில் முன்பாக தைரியமாக நின்று நான் தான் என்று கூறினார்.

தெஹல்கா: முழுபொறுப்பையும் ஏற்று கொண்டார்.

பாண்ட்யா : அதற்குப் பிறகு இரண்டாவது கதாநாயகனாய்.... நரேந்திர மோடி வந்தார். இன்னும் அவர்(மோடி) காவல்துறையினர் ஹிந்துக்களுடன் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். ஏனெனில் மாநிலம் முழுவதும் ஹிந்துக்களுடன் இருந்தது.

தெஹல்கா: ஐயா! பிப்ரவரி 27ல் மோடி கோத்ரா சென்ற போது விஹெச்பி தொண்டர்கள் அவரைத் தாக்கினார்களாமே, அது உண்மையா?

பாண்ட்யா : இல்லை. அவ்வாறு அவர்கள் செய்யவில்லை...அது இப்படி தான்...அங்கே 58 உடல்கள்.. அதுவும் மாலை நேரம்... நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மக்கள் உரிமையுடன் கேட்டார்கள்.

தெஹல்கா: காலை 8 மணியிலிருந்து மாலை வரை அங்கு வந்திறங்கவில்லை. எனவே விசயங்கள் சூடாகி விடவே, மோடிஜியும் கோபப்படடார்...

பாண்ட்யா : இல்லை அது அப்படி அல்ல.. மோடி நெடுங்காலமாக எங்கள் அணியில் தான் இருக்கிறார்... அந்த விசயத்தை மறந்து விடுங்கள்... அவர் பதவியில் இருக்கிறார். எனவே அவருக்கு நிறையக் கட்டுபாடுகள் இருக்கிறது. இன்னும் முழுமையாக சில உள்ளன. ஹிந்துக்களுக்குச் சாதகமாக எல்லா சைகைகளையும் கொடுத்ததும் அவர் தானே.. ஆட்சியாளர் உறுதியாக இருந்தால் பிறகு எல்லாமே நடக்க ஆரம்பித்துவிடும்.

தெஹல்கா: நீங்கள் சந்தித்தீர்களா... நரேந்திர மோடி 27ம் தேதி கோத்ராவிலிருந்து திரும்பிய பின்..

பாண்ட்யா : இல்லை, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன்.... நான் பதிலளிக்கக் கூடாது.

தெஹல்கா: ஐயா! அவருடைய (மோடி) உணர்வுகள் முதலில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.

பாண்ட்யா : நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக இதை அறிந்த போது அவருடைய இரத்தம கொதித்தது... சொல்லுங்கள் வேறு என்ன சொல்ல முடியும்... உங்களுக்குச் சிலக் குறிப்புகளைத் தந்து விட்டேன். இதற்கு மேல் எதையும் வெளிபடுத்த முடியாது அல்லது பேசக் கூடாது.

தெஹல்கா: இதை தான் நான் அறிய விரும்பினேன்... அவருடைய உணர்வுகள் முதலில் எவ்வாறு வெளிபட்டது...

பாண்ட்யா : இல்லை, அவரது உணர்வின் வெளிப்பாடு இவ்வாறு இருந்தது. அவர்(மோடி) மந்திரியாக இல்லாது இருந்திருந்தால் அவர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்திருப்பார். அவர் சக்தி பெற்றிருந்து, மந்திரியாகவும் இல்லாமல் இருந்திருக்குமானால், அவர் சில குண்டுகளையாவது சுகபூராவில் (அஹ்மதாபாத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பகுதி) வெடித்திருப்பார்.

தொடரும்..

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

Tuesday, December 11, 2007

உயர் கல்வி எனும் லாட்டரி!

டந்த ஜூன் மாதம் 20ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் எனும் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பன்6னீர் செல்வத்தின் கதை, பத்மாவின் கதை போல புலனாய்வுத் தொடருக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்த "சமூகப் பிரச்சினையல்ல.'

மாறாக, பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது மகனுக்கு கல்விக் கட்டணம் கட்ட முடியாத ஒரு ஏழையின் "வழக்கமான தனிப்பட்ட பிரச்சினை.' எனவே, தன் மகனை "அவையிடத்து முந்தியிருப்பச் செய்ய' முடியவில்லையே எனக் குமைந்த அந்த ஏழைத் தகப்பனின் கதையை பத்திரிக்கைகள் அன்றோடு முடித்துக் கொண்டன.

அந்தச் சுவாரசியமற்ற கதை இதுதான். தெருத் தெருவாய் காய்கறி விற்ற பன்னீர் செல்வமும், கூலி வேலை செய்யும் செங்கமலமும் தமது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க ஆசைப்பட்டனர். வறுமைக்கு மீறிப் படித்த மூத்த மகன் சுரேஷ் பிளஸ்டூவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறி பொறியியல் படிக்க ஆசைப்பட்டான். பலர் கையில், காலில் விழுந்து பணம் திரட்டி இரண்டாண்டுகள் படிக்க வைத்தார் தந்தை பன்னீர்செல்வம்.

மூன்றாமாண்டுப் படிப்பிற்குக் கட்டணம் கட்ட நேரம் வந்தது. "எவ்வித நிபந்தனையும் இல்லாமல், வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும்' என்ற செட்டிநாட்டு சிதம்பரத்தின் சத்தியப் பிரகடனத்தை பத்திரிக்கைகளில் படித்துவிட்டு அதை நம்பி வங்கிகளுக்கு நடையாய் நடந்தார். சென்ற இடங்களிலெல்லாம் அவமதிப்பையும், நிராகரிப்பையும் சந்தித்தார். ஒரு கையாலாகாத தகப்பனாக தன் மகனுக்கு முன் நிற்க விரும்பாமல் தற்கொலை செய்து கொண்டார். இப்பொழுது வங்கிகள் அவரது மகனுக்கு கல்விக் கடன் தர முன்வந்திருக்கின்றன.

இது வெறுமனே ஒரு தனிநபரின் சோகக் கதையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் கல்விக் கடன் கிடைக்காததால், ஏழாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவி ரெஜினாவின் துயரக் கதையும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

செஞ்சி சக்கராபுரம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் துப்புரவுப் பணி செய்யும் பழனியம்மாளுக்கு மகனை பொறியியல் படிக்க வைக்க ஆசை. ஆனால் அவரது மாதச்சம்பளம் ரூ.400. அவரது கணவர் மின் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர். அவரது சம்பளம் ரூ.850. பத்மாவதி பொறியியல் கல்லூரியில் பையனுக்கு இடம் கிடைத்து விட்டது. ஆண்டுக் கட்டணம் ரூ.36,250. அரும்பாடு பட்டு 16,250 புரட்டிவிட்டார்கள். மீதிப்பணத்துக்கு வங்கியில் கல்விக்கடன் கேட்டால் "சொத்து இருக்கிறதா' என்று கேட்கிறார்களாம். "கல்விக் கொடையாளர்கள் உதவுங்கள்' என்று கோரிக்கை விடுக்கிறது தினமணி (செப்4).

ஒவ்வொரு கல்வியாண்டு துவங்கும்போதும் இத்தகைய சோகக்கதைகள் வந்தவண்ணமிருக்கின்றன. இந்த ஆண்டு இப்பிரச்சினை இரண்டு அரசியல் பரிமாணங்களை எடுத்தது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நன்கொடைக் கொள்ளையடிக்கும் சுயநிதிக் கல்லூரிகள்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் ராமதாஸ். புகார் கொடுத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசுக்காரனைப் போல தந்திரமாகப் பேசிச் சமாளித்துப் பார்த்தார் கல்வி அமைச்சர். சமாளிக்க முடியாத அளவுக்கு கல்விக்கொள்ளை தலைவிரித்து ஆடவே மொட்டைக் கடிதாசி போட்டாலும் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். பிறகு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் கட்டணம் வாங்கும் தனியார் கல்லூரிகளுக்கு எதிராக அதிரடி சோதனை நாடகங்கள் நடந்தன. பிரச்சினை அத்தோடு முடிந்து விட்டதா என்ன?

கல்விக் கட்டணம்:
தீர்மானிப்பது யார்?

தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்பை வாங்க உதவும் பொறியியல் கல்வியில், ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சம் மாணவர்கள் சேருகின்றனர். இதில் தமிழகத்தில் மட்டும் விரல் விட்டு எண்ணத்தக்க சில அரசுக் கல்லூரிகளோடு சேர்த்து, 262 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவ்வாண்டு பொறியியல் கலந்தாய்வின் மூலம், அரசு நிரப்பவுள்ள இடங்களின் மொத்த எண்ணிக்கை 62,337. இவற்றில், சுயநிதிக் கல்லூரிகளில், ஒரு மாணவனுக்கான கல்விக் கட்டணம் ரூ.30,000/ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 37,838 இடங்கள் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் வருகின்றன. இவற்றுக்கான கட்டணம் சாராயக் கடை ஏலத்தைப் போல பல லட்சங்களில் கல்வி வள்ளல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.

அதிகக் கட்டணம் வசூலிக்கும் பிரச்சினை இருக்கட்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமே நியாயமானதுதானா? நான்கு வருடத்திற்கு கல்விக் கட்டணமாக ரூ.1,20,000 அடங்கலாக இதர செலவுகள் சேர்த்து ஏறத்தாழ 2 லட்சம் ரூபாய் முதலீடாகப் போடுவதற்கு இந்த நாட்டின் எத்தனை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களால் முடியும்? மருத்துவக் கல்லூரியிலோ இதனை விடவும் லட்சங்களின் எண்ணிக்கை கூடுகிறது. மக்களின் வெறுப்பைச் சமாளிக்க, சொத்து ஜாமீன் கேட்காமல் கடன் கொடுக்க வேண்டும் என்று அரசு வங்கிகளுக்கு உத்திரவு போட்டார் சிதம்பரம்.

அப்படிக் கடன் வாங்கும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காவிட்டால் அவர்களால் கடனை அடைக்க முடிவதில்லை. பட்டம் பெற்றவுடன் மாணவர்களுக்கு சிதம்பரம் வேலை வாங்கித் தருவாரா அல்லது வாராக்கடனை அவர் அடைப்பாரா? அரசு வங்கிகளுக்கு உத்திரவு போடும் சிதம்பரம் தனியார் வங்கிகளுக்கு உத்தரவு போடாத மர்மம் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசு வங்கி ஊழியர்கள்.

சிதம்பர இரகசியம்!

""அம்பானிக்கும் டாடாவுக்கும் வாராக்கடனை வாரிக் கொடுக் கிறாயே, ஏழைகளுக்குக் கொடுத்தால் என்ன கேடு? அரசு வங்கிப் பணம் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?'' — என்பது ஏழைப் பெற்றோர்கள் அரசு வங்கி அதிகாரிகளுக்கு எதிராக எழுப்பும் கேள்வி. தங்களுக்கு வழங்கப்படும் கடன் என்பது உண்மையில் தங்களுக்கு வழங்கப்படுவது அல்ல, அது சுயநிதிக்கல்லூரி முதலாளிகளுக்கு தங்கள் வழியாகப் போய்ச்சேரும் மக்கள் பணம் என்பதை ஏழைப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. ஏழை மாணவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக அல்ல, சீட்டு நிரம்பாமல் கஷ்டப்படும் சுயநிதிக் கொள்ளையர்களின் கண்ணீரைத் துடைக்கத்தான் வங்கிப் பணத்தை வாரிவிடச் சொல்கிறார் சிதம்பரம் என்கிற உண்மையையும் அவர்கள் விளங்கிக் கொள்வதில்லை.

பன்னீர் செல்வத்தின் தற்கொலை, ராமதாசின் கிடுக்கிப்பிடி, பொன்முடியின் அதிரடி, சிதம்பரத்தின் எச்சரிக்கை, நீதிமன்றங்களின் உத்தரவு, கல்வி வள்ளல்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி.. என இவையனைத்தும் யாருக்கும் ஏனென்றே புலப்படாத அதிபயங்கரமான சக்திகள் கல்வித்துறையை ஆட்டிப் படைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

90களுக்குப் பிறகான உயர்கல்விக் கொள்கைச் சீர்திருத்தங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று கல்விக்கடன். உயர் கல்வி வழங்கும் பொறுப்பை அரசு கைவிட்டு, அதை முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்ற இந்தச் "சீர்திருத்தத்தின்' விளைவுதான் கல்விக்கடன். பம்பர் லாட்டரி தொழிலதிபர்களைப் போல சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் இப்படிக் கல்விச் சேவையில் தங்களை "அர்ப்பணித்துக்' கொள்ள வேண்டுமென யார் அழுதார்கள்?

தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் சீட் நிரப்பிக் கொடுக்கும் சிரமத்திற்குள்ளாகி, பொன்முடி போன்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதை விட, உயர்கல்வி முழுவதையும் அரசே ஏற்று நடத்தலாமே! இந்தக் கேள்வியை மட்டும் யாரும் எழுப்புவதில்லை. கவ னமாகத் தவிர்க்கப்படும் இந்தக் கேள்விக்குள்தான் அரசின் உடைந்து விட்ட உயர்கல்வி அமைப்பும், அதனை வழிநடத்தும் சூத்திரதாரிகளும் மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

உயர்கல்வி:
ஒரு சின்னத்தனமான வரலாறு

இந்திய உயர்கல்வித் துறை நேருவின் அரைவேக்காட்டு சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் முறையில் துவக்கப்பட்டது. "லைசன்ஸ் ராஜ்' என இன்று முதலாளித்துவவாதிகளால் இகழப்படும் அன்றைய காலகட்டத்தில்தான் இன்று உயர்கல்வியில் பெயரளவு அதிகாரத்தோடு இயங்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1950-51களில் 49.4 சதவிகிதமும், 1986-87களில் 75.9 சதவிகிதமுமாக, உயர் கல்விக்கான நிதி வரவு பெரும்பான்மையாக அரசைச் சார்ந்தே பெறப்பட்டது.

இக் காலகட்டத்தில்தான், மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணமாக பெறப்பட்ட நிதி வரவு 36.8 சதவிகிதத்திலிருந்து, 12.6 சதவிகிதமாகக் குறைந்தது. மேலும், இந்தியாவின் அறிவுக் கோவில்கள் என கொண்டாடப்படும், ஐ.ஐ.டி முதலான உயர் கல்வி நிறுவனங்களும் இக்காலகட்டத்தில்தான் உருவாக்கப் பெற்றன. எனினும், பொதுவில் கல்விக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில், உயர்கல்விக்கு பத்து சதவிகிதம் மட்டுமே இதுவரை ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஸ்டான்லி வோல்போர்ட் எனும் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல, ""நவீன இந்திய அதிகாரம் மற்றும் வாய்ப்பு வசதிகளின் சிகரங்களைத் தொடுவதற்கான வேகமான வழியாக, உயர்கல்வித் துறையை நடுத்தர வர்க்கம் உணரத் துவங்கியது.'' அதிகரித்து வரும் உயர்கல்வித் தேவையை ஈடு கட்ட, புதிய நிறுவனங்களை உருவாக்கவும், சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுமான தேவை உருவாகியது.

இச்சூழலில்தான் 90களின் துவக்கத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டன. 1994, 1995ல் வெளியிடப்பட்ட உயர் கல்வி குறித்த அறிக்கைகளில், ""கல்விக்கான ஒதுக்கீடு அதிகரித்து வருவதால், அடிப்படை மற்றும் பள்ளிக் கல்வியில் முழுமையான, தரமான, நியாயமான வாய்ப்புக்களை வழங்குவதில் போதுமான நிலையை அடையாத நாடுகளில், பொது வளங்களில், உயர்கல்விக்கு அதிகபட்ச ஒதுக்கீடு கூடாது'' என சாணக்கியத்தனமான நீதியை உலக வங்கி முன்வைத்தது. உயர்கல்வியை பள்ளிக் கல்வியின் எதிரியாகக் காட்டுவதன் வாயிலாக, அதிலிருந்து அரசு விலகுவதற்கு வழி சொல்லிக் கொடுத்தது. உலக வங்கியின் இந்தப் பொன்மொழி உயர் கல்விக்கான புதிய மனுநீதியாக இந்திய ஆளும் வர்க்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

யாருக்கு லாபம்?

1997இல் இந்திய அரசின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்ட""இந்தியாவில் அரசு மானியங்கள்'' என்ற அறிக்கை உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கோடிட்டுக் காட்டியது. உயர்கல்வி சமூக நன்மை தராத சேவை என்பதாலும், அதற்கான மானியங்களின் சமூகப் பலனை விடவும், தனிநபர் பலன்களே அதிகமிருப்பதாலும் உயர்கல்விக்கு மானியங்கள் அளிக்கப்படக்கூடாது என வாதிட்டது. ஏதோ அடிப்படைக் கல்விக்கும், பள்ளிக் கல்விக்கும் கோடி கோடியாகக் கொட்டி முன்னேற்றப் போவதைப் போலக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய "முன்னேற்றம்' ஏற்பட்டுள்ளதென்று கூற புள்ளிவிவரங்கள் தேவையில்லை.

உடனடியாக, "நன்மை தரக் கூடிய சமூகநலப் பட்டியலிலிருந்து' உயர்கல்வி நீக்கப்பட்டது. பின்னர் "இரண்டாம் பட்ச சமூகநலப் பட்டியலில்' சேர்க்கப்பட்டது. விவசாயத்தை மாநிலப் பட்டியலுக்குத் தள்ளிவிட்ட மத்திய அரசு, கல்வியை மட்டும் பொதுப்பட்டியலிலேயே வைத்துக் கொண்டது. இதைக் காரணம் காட்டி, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டுமென பொன்முடி இப்பொழுது வாதிடுகிறார்.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்து விட்டால், ஜேப்பியாரையும், உடையாரையும் பொன்முடி உள்ளே தள்ளி விடுவாரோ? அவர்களுடைய காசில் தானே எல்லா ஒட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் கல்லாப் பெட்டியும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தால், இன்னும் பல நூறு ஜேப்பியார்கள்தான் அதிகரிப்பார்கள் என்பது வெளிப்படை.

2001ல் உயர்கல்வி சீர்திருத்தங்களை ஆய்வு செய்ய "மாபெரும் கல்வியாளர்களான' முகேஷ் அம்பானி மற்றும் குமாரமங்கலம் பிர்லா ஆகியோரை உள்ளடக்கிய கமிட்டியை அரசு அமைத்தது. அக்கமிட்டி உலக வங்கியின் புதிய மனுநீதியை அச்சுப் பிறழாமல் வாந்தியெடுத்தது. மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வரவை அதிகரிக்க அரசும், பல்கலைக் கழக மானியக் குழுவும் உருவாக்கிய நீதிபதி புன்னையா கமிட்டி, சுவாமிநாதன் கமிட்டி, பைலி கமிட்டி, அனந்த கிருஷ்ணன் கமிட்டி, முகமதுஉர்ரெஹ்மான் கமிட்டி என அனைத்துக் கமிட்டிகளும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துவதையே முக்கிய நடவடிக்கையாக வழிகாட்டின.

கல்விக் கடன் வழங்குவதன் மூலமும், கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும்தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கான செலவை நிறுவனங்கள் திருப்பி எடுக்க முடியும் என கொள்கை வகுப்பாளர்களால் வழிகாட்டப்பட்டது. இதன் மூலம் அரசு உயர் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து நழுவிக் கொண்டு கல்வி வியாபாரிகள் கடை விரிக்க வழி வகுத்தது.

மறுபுறம் கல்விக் கடன் மூலமாக சுமையை வங்கிகளுக்கும், வங்கிகள் மூலமாக தனிநபர்களுக்கும் மாற்றி விட்டது என்கிறார் கல்வியாளர் கீதா ராணி. ("இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களும், உயர் கல்வி நிதி முதலீடும்', 2003). மேலும், உலகளாவிய அனுபவத்தின் அடிப்படையில் கல்விக் கடன்கள் சரியாகத் திருப்பியளிக்கப்படுவதில்லையென காலப் போக்கில் கைவிடப்பட்டதையும், பெண்களுக்கு எதிர்மறை வரதட்சிணையாகக் கருதப்படுவதையும், நமது நாட்டில் பின்தங்கிய பிரிவினரின் குறிப்பான தகவல்கள், பொருளாதார நிலை, பின்புலம், அதற்கேற்ற வழிமுறைகள், வட்டி, தவணைகள் என சிறப்புக் கவனமின்றி பொத்தாம் பொதுவாக வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டும் அவர், நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் கல்விக் கடன் என்பது தொடராது. மாறாக சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு விடும் என ஆணித்தரமாக வாதிடுகிறார்.

கல்வி: முதலாளித்துவக்
கொள்ளையனுக்கே பாடம்
சொல்லும் இந்தியா!

இக்கொள்கைகளின் விளைவாக 90களுக்குப் பிறகு, அரசுக் கல்லூரிகளில் சுயநிதி படிப்புப் பிரிவுகள் துவக்கப்பட்டன. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டத்திற்கிடையே பல்கலைக் கழகங்களோடு இணைக்கப்பட்டன. தனியார் பல்கலைக் கழகங்கள் புற்றீசல் போலப் பரவின. 200204 ஆண்டுகளில் மட்டும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை நாட்டில் 96% உயர்ந்திருக்கிறது. சுயநிதிக் கல்லூரிக் கொள்ளைக்கோ அளவே இல்லை.

2005ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் மாணவர்களில் 23.2% பேர்தான் தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். இந்தியாவிலோ உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 63.2% பேர் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கின்றனர். முதலாளித்துவக் கல்விக் கொள்ளையில் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாகிவிட்டது இந்தியா.

தரமான பொருளுக்கு விலை அதிகமாகத்தான் இருக்கும் என்ற முதலாளித்துவ மூட நம்பிக்கை வலிமையான பொதுக் கருத்தாக மாற்றப்பட்டு விட்டதால், இந்த அநீதிக்கு எதிரான போராட்டம் மிக அரிதாகவே இருக்கிறது. உயர்கல்வியின் விலை அதிகரித்து விட்ட காரணத்தால்தான்,

1724 வயது வரையுள்ள வயதுப் பிரிவினரில் 7 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பயிலச் செல்லுகின்றனர். வல்லரசு ஜம்பமடிக்கும் இந்தியாவை விடப் பின்தங்கிய நாடுகள் என அழைக்கப்படும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதனை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுகின்றனர்.

கடந்த இருபது ஆண்டுகளில் நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் வழங்கிய தீர்ப்புகள், தனியார் கொள்ளைக்கே வழி வகுத்திருக்கின்றன. 2003 சௌரப் சௌத் வழக்கில், நீதிபதி லட்சுமணன், நிலவும் சூழலை விவரிக்கிறார்.""ஒவ்வொரு ஆண்டும் அட்மிஷன் காலங்களில் தொழில்முறைப் படிப்புகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் அளவில்லாத உளைச்சலையும், முறைகேடுகளையும் அனுபவிக்கிறார்கள். தெளிவில்லாத கொள்கைகள், முரண்பாடான முறைகள், தகவல் பற்றாக்குறை ஆகியவை இதற்குக் காரணம். தொழில் முறைப் படிப்புகளுக்கான கல்லூரிகளும், இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்க, புதிய புதிய படிப்புகள் வந்து குவிய, கல்வி வாய்ப்புகளைத் தேடி மாநில எல்லைகளைக் கடந்து மாணவர்கள் அலைய வேண்டியிருக்கிறது. பெற்றோர், மாணவர்களின் துயரங்கள் ஒவ்வோரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன''. கல்லும் கரைந்துருகும் விதத்தில் பேசும் நீதிபதி, கல்வி வியாபாரமாக்கப்பட்டது தான் இவையனைத்திற்கும் காரணம் என்பதை மட்டும் கூறாமல் தவிர்த்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சுயநிதிக் கல்வி:
வரமல்ல, சாபம்

கல்வி என்பது "சமூக மேம்பாட்டிற்கான லாப நோக்கற்ற சேவை' என்ற நிலையிலிருந்து, விற்கத் தக்க, லாபமீட்டக் கூடிய தொழிற் சேவை என உலக வங்கியாலும், உலக வர்த்தகக் கழகத்தாலும் வரையறுக்கப்பட்டு அதைக் கொள்கை ரீதியில் அரசு பின்பற்றி வருகிறது. எனினும் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகக் கருதப்பட்டு, அவற்றின் வருமானத்திற்கு இன்றளவும் வரிவிலக்கும் அளிக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

இந்த ஆண்டும் கவுன்சலிங்கில் நிகழ்ந்த குளறுபடிகள், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி ஒரு சீட்டிற்கு 14 லட்சம் வசூலிப்பது, நீதிமன்றக் குழப்படிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு சீட்டுகளை நிரப்பித் தருவதில் அரசு காட்டும் முனைப்பு என திக்குத் தெரியாத காடாக, ஐந்திலக்கச் சம்பளக் கனவில் பணத்தைத் தொலைக்கும் லாட்டரியாக உயர்கல்வி, குறிப்பாக பொறியியல் கல்வி மாறி நிற்கின்றது.

நுனி நாக்கு ஆங்கிலமும், டீசென்டான' நடை, உடை பாவனைகளும், தோற்றமும் இல்லாதவர்களுக்கு கல்விக் கடன் மட்டும் மறுக்கப்படவில்லை, பன்னாட்டுக் கம்பெனிகளின் நுழைவாயில்களும் திறக்க மறுக்கின்றன. அவ்வாறு உபரியாகக் கழித்துக் கட்டப்படும் இளைஞர்கள் சென்னையிலும், பெங்களூரிலும் சில ஆயிரங்களுக்கு, சில இடங்களில் சம்பளம் கூட இல்லாமல் கொத்தடிமைகளாக வேலை செய்கிறார்கள். பலர் சொல்லப்படும் பொறியியல் கல்வி தேவைப்படாத கடைநிலைப் பணிகளுக்கு வேறு வழியின்றி தள்ளப்படுகிறார்கள்.

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் (குமுதம், 18.7.2007) சுட்டிக் காட்டுவதைப் போல, 2004ல் ரயில்வேயில் கடைநிலைப் பணியான கலாசி வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் 20,000 பேர் பொறியியல் படிப்புப் படித்தவர்கள் என்றால், அங்கே தெரிகிறது உயர்கல்வியின் லட்சணம்! மேலும், தமிழகத்திலிருந்து ஒவ்வோராண்டும் வெளியேறும் 70,000 பொறியியல் பட்டதாரிகளில் பத்து சதவிகிதத்தினருக்குத்தான் வேலை உத்திரவாதமுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

கல்வியாளர் பி.ஜி. திலக்கின் சொற்களில் சொல்வதானால்,""கணக்கு வழக்கில்லாத சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும், மேலாண்மை நிறுவனங்களும் உயர் தகுதி வாய்ந்த அறிவியல், தொழில் நுட்ப மனித வளத்தை உருவாக்கவில்லை. மாறாக, ஐ.டி. கூலிகளைத் தான் உருவாக்கியிருக்கிறது. முழுமையாகக் குழம்பிக் கிடக்கும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசியல், பொருளாதார அரங்குகளின் நிகழ்வுகள் கண்டு மாணவர்களிடையே பயபீதியைத் தோற்றுவித்துள்ளது.'' ("இந்தியாவில் உயர்கல்வித் தனியார்மயம்', 2002)

இத்தனைக்குமிடையில் இந்தியா டுடே, தினமணி முதல் பல வண்ணப் பத்திரிக்கைகளும், கல்வி, வேலைவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஊதிப் பெருக்குகின்றன. எதிர்கால வேலை வாய்ப்புகளின் புள்ளி விவர மதிப்பீடுகளை அள்ளி வீசுகிறார்கள். ரீடெய்ல் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட், ஏர்ஹோஸ்டஸ் மேனேஜ்மென்ட் என புதிய, புதிய படிப்புகள் சேவைத் துறைக்கு பொற்காலம் வரப் போவதாக உறுமியடிக்கப்படுகின்றன.

இத்தகைய தனித் திறன் தேர்ச்சிப் படிப்புகள் நீண்ட கால அடிப்படையில் உதவாது என்பதையும், ஊதிப் பெருக்கப்படும் துறைகளின் சந்தைத் தேவையின் நிச்சயமற்ற தன்மை, கொள்ளளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, சில ஆண்டுகளில் இச் சந்தைக்கான தேவைகள் தீர்ந்து தேவையற்ற உபரியாக இளைஞர்கள் கழித்துக் கட்டப்படுவார்கள் என கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். மொத்தத்தில், ஒருபுறம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான தரமான, உத்திரவாதமான உயர் கல்வி என்பது இந்தப் பகற்கொள்ளையில் காணாமற் போய்விட்டது. இன்னொருபுறம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு உயர் கல்வி நிர்த்தாட்சண்யமாக மறுக்கப்படுகிறது.

உயர்கல்வி சமூக நன்மை தராத சேவை அதற்கான மானியங்களின் சமூகப் பலனை விடவும், தனிநபர் பலன்களே அதிகம். எனவே, உயர்கல்விக்கு மானியங்கள் அளிக்கப்படக்கூடாது என்று கூறும் அரசின் கொள்கை அறிவிப்பை இப்போது பரிசீலித்துப் பாருங்கள். அரசு இப்படிக் கூறும்போது "கடன் கொடு' என்று அரசு வங்கிகளுக்கு சிதம்பரம் ஏன் உத்தரவிட வேண்டும்?

பன்னாட்டுக் கம்பெனிக்கு
ஆள் சப்ளை

இது சுயநிதிக் கொள்ளையர்களின் லாபத்துக்காக மட்டும் அன்று. ஃபோர்டு, ஹூண்டாய்க்குத் தேவையான பொறியியல் பட்டதாரிகளையும், வால் மார்ட்டுக்கும் அம்பானிக்கும் தேவையான ரீடெய்ல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகளையும் சப்ளை செய்யப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, அந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப "உங்களை நீங்கள் உங்களுடைய சொந்தக் காசிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்' என்று மக்களிடம் கூறுகிறது. பணமில்லாவிட்டால் கடன் கொடுக்கிறேன் என்றும் முன்வருகிறது.

கட்டினால் பெற்றோரின் பணம். கட்டாவிட்டால் அரசு வங்கிகளில் உள்ள மக்கள் பணம். மக்கள் ஆதரவோடு அரசுத்துறையைக் கொல்லுகின்ற ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வேலை இது. விவசாயக்கடன் என்பது உரம், பூச்சிமருந்து, விதை முதலாளிகளுக்குப் போவதைப் போல, வங்கிக் கடன் வள்ளல்களின் கல்லாவுக்குப் போகிறது. பயிற்றுவிக்கப்படும் மாணவனின் திறமையையோ செலவே இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் வரவு வைத்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்ளே நுழைவதற்கான சட்ட மசோதா தயாராகி வருகிறது. தனியார் பல்கலைக் கழக மசோதாவும் பாராளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மருத்துவமனைகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதைப் போல பல்கலைக் கழகங்களும் பங்குச்சந்தையில் குதிக்கின்றன. (பார்க்க: பெட்டிச் செய்தி)

லாட்டரியாக மாறி விட்ட உயர்கல்வியை மென்மேலும் மேலிருந்து சீர்திருத்தங்கள் அல்லது முறைப்படுத்துதல்களைச் செய்வதன் மூலம் மாற்ற முடியாது. கமிசன்களும், நீதிமன்றங்களும் கவைக்குதவாதவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமுமே நாட்டின் உண்மையான எஜமானர்களாக விளங்க, அவர்களுடைய கைத்தடிகளான ஓட்டுப் பொறுக்கிகளிடம், நாம் என்னதான் தொண்டை கிழியக் கத்தினாலும், உயர்கல்வியை அரசு ஏற்று நடத்தப்போவதில்லை.

இது வெறுமனே உயர் கல்வி சார்ந்த பிரச்சினையும் அல்ல. விவசாயத்திலிருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்படுவதும், ஆலைகளிலிருந்து தொழிலாளர்கள் துரத்தப்படுவதும், மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதும் தனித்தனிப் பிரச்சினைகளல்ல. பன்னீர் செல்வமும், ரெஜினாவும், தற்கொலை செய்து கொண்டு மடிந்த 3000க்கும் மேற்பட்ட ஆந்திர விவசாயிகளும், விதர்பா விவசாயிகளும், சுட்டுக் கொல்லப்பட்ட நந்திகிராம் விவசாயிகளும் வெவ்வேறு எதிரிகளால் கொல்லப்பட்டவர்களல்ல. எனவே, இப்புதிய மனுநீதிக்கெதிராக, மறுகாலனியாக்கம் எனும் இந்த பகாசுர எதிரிக்கு எதிராக, கல்வியுரிமை மறுக்கப்படும் மாணவர்களும், மக்களும் முழுமையாக, தீர்க்கமாக அணிதிரண்டு போராடுவதைத் தவிர இதற்கு வேறு தனிப்பட்ட தீர்வு ஏதுமில்லை.

பன்னீர் செல்வம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பின்னிருக்கும் சூத்திரதாரிகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு கனரா வங்கி அதிகாரிதான் எதிரியாகப்பட்டிருப்பார். கடன் வாங்கப்போன பன்னீர் செல்வத்தின் வாழ்க்கையையும், கடன் கொடுக்க மறுத்த கனரா வங்கியின் நிதி நிர்வாகத்தையும் ஆட்டிப்படைப்பவை உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளாத வரை, பன்னீர் செல்வங்கள் கொத்து கொத்தாக செத்து மடிவதை நாம் தடுக்க முடியாது.

பல்கலைக்கழகப் பங்குகளில் இன்றைய விலை...!

அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகமான மும்பை பல்கலைக் கழகத்தை லாபமீட்டும் நிறுவனம் என்று அறிவித்து, அதனைப் பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு டாயிஷ் வங்கி என்ற ஜெர்மன் பன்னாட்டு வங்கியிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். இதனை அமல்படுத்த வேண்டுமானால் பல்கலைக் கழகங்கள் குறித்த மத்திய மாநில அரசின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

""உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் ஒரு அரசுப் பல்கலைக்கழகம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதில்லை.. ஒரு கல்வி நிறுவனத்தைத் தொழில் நிறுவனமாக மாற்றினால் பிறகு செனட், சிண்டிகேட் முதலிய அமைப்புகள் அதனை நிர்வகிக்க முடியாது. கல்வித்துறை மேம்பாடும் அதன் நோக்கமாக இருக்க முடியாது. பங்குதாரர்களுக்கு அதிகமான லாப ஈவுத்தொகையை ஈட்டித் தருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கும். கல்வி என்பது வெறும் வியாபாரம் அல்ல'' என்று கூறி இம்முடிவைக் கண்டித்திருக்கிறார் மும்பை பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எம்.ஆர்.மய்யா. (பிசினெஸ் ஸ்டாண்டர்ட், ஆகஸ்டு 22, 2007)

"அதுக்காக இப்படியா' என்று பங்குச் சந்தைக் காரர்களே பயந்து அலறும் அளவுக்கு அம்மணமாக ஆடுகிறது முதலாளித்துவ லாபவெறி. கல்வியை தொழில்வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி!

· வாணன்

Monday, December 10, 2007

தமிழ்மக்கள் இசைவிழா 2007 நிகழ்ச்சிகள்

தேச விடுதலைப் போரடா



தப்பாட்டம்



Sunday, December 9, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...5_6



போலீஸின் பங்கு

சட்டத்தின் பாதுகாவலர்களே சட்டத்தை உடைத்தெறிந்தக் கயவர்களுடன் இரகசியமாகப் பங்கெடுத்து குஜராத்தின் பயங்கரத்தை மேலும் எவ்வாறு மோசமாக்கினார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்:

மேலோட்டம்

நரோடா பாட்டியாவில் கிடந்த 700-800 இறந்த சடலங்களை இரகசியமாக எடுத்து, அஹ்மதாபாத் முழுவதும் போடுவதன் மூலம் படுகொலைகளின் எண்ணிக்கையை க் (கோரத்தை) குறைத்து காண்பிப்பதற்காக உத்தரவு பிறப்பித்தானாம் (சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் குஜராத் போலீஸ் துறை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட்)போலீஸ் ஆணையாளர் PC பாண்டே.

பஜ்ரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி என்பவன் நரேந்திர மோடி சரண் அடையச் சொன்னவுடன் தான் அவ்வாறு செய்ததாகக் கூறினான். பாபு பஜ்ரங்கியைக் கைது செய்யும் போது இணை ஆணையாளர் (குற்றவியல் கிளை) PP பாண்டேயும் அவன் உடனிருந்த காவல் துறையினரும் இதுவெல்லாம் ஒரு நாடகம் தான் என்று அவனிடம் கூறினார்களாம்.

உள்ளுர் சங்பரிவார் தலைவன் ஒருவனை நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிடப்பட்டிருந்தும், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ND சோலங்கி அவனை விஹெச்பி அலுவலகத்தில் இருக்க அனுப்பி வைத்தார்.





கலுப்பூர் மாவட்ட விஹெச்பி நபரான ரமேஷ் தேவ் என்பவனிடம் DCP காட்வி, தேவ் தன்னிடம் முஸ்லிம்களை இனம் காட்டினால் குறைந்தது நான்கைந்து முஸ்லிம்களையாவது கொல்லுவேன் என உறுதியளித்தானாம். உடனே தேவ் காட்வியை ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கொண்டு முஸ்லிம்களைக் காட்டினானாம். நாங்கள் உணர்வதற்குள் காட்வி 5 நபர்களை கொன்று விட்டான் என தேவ் கூறினான்.

குல்பர்க் முஸ்லிம் சமுதாய குடியிருப்புகளுக்கு வெளியே குழுமியிருந்த வன்முறை கும்பலிடம், அக்கும்பல் தங்கள் வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்திக் காட்ட 3 மணி நேர அவகாசம் மட்டுமே உள்ளது என போலீஸ் ஆய்வாளர் KG எர்டா கூறினான். உடனே வன்முறையாளர்கள் வெறிகொண்டவர்களாய் சென்றார்கள். போலீஸ் ஆய்வாளர் KG எர்டா முன்பாகவே ஒரு மனிதர் துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

முஸ்லிம்களை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தை தீ வைத்து கொளுத்திடுமாறு போலீஸ் ஆய்வாளர் எர்டா விஹெச்பி தொண்டர்களிடம் சொன்னான். இன்னும் அவ்வாகனத்தில் உடன்வந்த காவலரை ஓடிவிடுமாறு கூறிய எர்டா, "இந்நிகழ்வு முழுவதும் இங்கேயே முடிக்கப்பட வேண்டும். பிறகு எவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை", எனக் கூறினான்.

காக்கி கொலையாளிகள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை இரகசியமாக அனுமதித்திலிருந்து முன்னின்று தாக்குதல்களை நடத்தியது வரை, காவல்துறை அவர்களால் முடிந்த ஒவ்வொரு வழிகளாலும் வன்முறையாளர்களுக்குரிய வழியை சுலபமாக்கித் தந்தனர்.

2002 மார்ச் 2ம் தேதியன்று மாலை 6 மணியளவில், பாவாநகர் மாவட்டத்திலுள்ள கோகா ரோடு என்னுமிடத்திலுள்ள ஒரு மதரஸாவில், 200க்கும் மேற்பட்ட முஸ்லிம் குழந்தைகள் தஞ்சமடைந்திருந்த வேளையில், ஒரு ஹிந்து வெறிக் கும்பல் இரத்தத்தை ஓட்ட உறுமலோடு அந்த மதரஸாவினுள் நுழைந்தது. பாவாநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அப்போது பணியாற்றிய ராகுல் சர்மா, துப்பாக்கி சூடு நடத்துமாறு தனது காவல்படையினரை ஆணையிட்டார். அதனால் வன்முறை கூட்டம் கலைந்தோடவே, குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர்.


பாவாநகர் சம்பவத்திற்குப் பின் அடுத்த இரண்டு வாரங்கள் போலீசார் அதே போன்று துணிச்சலான நடவடிக்கைகளை மேலும் சில இடங்களிலும் எடுத்தனர். மார்ச் 16 வரை பாவாநகர் மாவட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் ஹிந்துகளும், இருவர் முஸ்லிம்களுமாவர். சரியான நேரத்தில் காவல்துறை முறையாக தலையிட்டக் காரணத்தால், இம்மாவட்டம் ஏறக்குறைய கொலைகள் நிகழாத மாவட்டமாக திகழ்ந்தது. இந்நிலையில் மார்ச் 16 அன்று கிட்டதட்ட காலை 10:10 மணியளவில், ராகுல் சர்மாவுக்கு அப்போதைய மத்திய உள்துறை இணையமைச்சராக இருந்த கோர்தன் ஜடாபியாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

நான் சிறப்பாக பணியாற்றியதாக ஜடாபியா பாராட்டினாலும், காவல் துறை துப்பாக்கி சூட்டின் போது இறந்தவர்களின் விகிதாசாரம் சரியாக இருக்கவில்லை என குற்றம் சாட்டினார். ஏனெனில் இறந்தவர்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை முஸ்லிம்களை விட அதிகமாக இருந்தக்


காரணத்தினால் அவ்வாறு குற்றம் சாட்டினார். "அதற்கு நான் அவரிடம் கூறினேன்,


இவைகள் எல்லாம் சம்பவங்கள் நடந்த இடத்திலுள்ள நிலமைகளின் அடிப்படையிலும், வன்முறையாளர்கள் நடக்கும் விதத்தின் அடிப்படையிலுமாகும்", என ராகுல் சர்மா பதவி நீக்கம் செய்யபட்ட பின் நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு கூறினார்.

சர்மா மேலும் ஆணையத்திடம் கூறும் போது, 2002 மார்ச் 1ம் தேதி இரவு 10:20 மணியளவில் தான் அப்போதைய காவல்துறை தலைவரான K. சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டு, பாவாநகரில் கூடுதலான காவல் படையினர் நிறுத்தப்பட வேண்டும் என கேட்டப் போது DGP, அவர் மறுநாள் காலை ஒரு மாநில ரிசர்வ் போலீஸ் பட்டாளத்தை அனுப்புவதாகவும், இதற்கு மேல் நான் எவ்வித உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது எனவும் ஏனெனில் ஆட்சியாளர்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் முழுமையாக விட்டு கொடுத்து விட்டனர் என கூறினார்.

ஜடாபியாவுடனும் இன்னும் காவல்துறை தலைவருடனும் ராகுல் சர்மா செய்த இரண்டு உரையாடல்களுமே, 2002 மனித இனப் படுகொலைகளின் போது பெரும்பான்மையான காவல்துறையினர் குஜராத்தை எரித்துச் சுடுகாடாக்கிய வன்முறை கும்பல்களுடன் இணைந்து செயல்பட்டனர் என்பதற்குப் போதுமான சான்றைக் காட்டுகிறது. கொலைவெறி கும்பல்களைக் கொலை செய்யத் தூண்டியதிலிருந்து, அவர்களுக்கு வெடிப் பொருள்களை விநியோகம் செய்தது, வெடி குண்டுகளை மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வது, ஏற்கெனவே ஹிந்து கொலைவெறி வன்முறையாளர்களால் தாக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது போன்றவற்றைச் செய்து மனித இன படுகொலைகள் எளிதாக நடைபெற காவல்துறை எல்லா வழிகளிலும் முடிந்தவரை உதவியது.

கலவரக்காரர்கள் மற்றும் சதி செய்தவர்களிடம் இருந்து பெறபட்ட சில முதன்மையான தகவல்கள், வன்துறையாளர்கள் பெரும்பாலான காவல்துறையினரிடமிருந்து உதவிகள் பெற்றதையும், வன்முறையால் திக்குமுக்காடி திணறிய நாட்களில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டியவர்களே சீருடை அணிந்த வன்முறையாளர்களாக மாறியதையும் தெரிவிக்கின்றது


கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...6.




மாநில அரசு எதை விரும்பியதோ அதை போலீஸ் செய்தது

ஹரீந்தர் பவேஜாவிடம் முன்னாள் கூடுதல் DGP (நுண்ணறிவு)RB ஸ்ரீகுமார் பேசி கொண்டிருக்கும் போது, "கலவரகாரர்களுடைய பார்வையில் அரசாங்கம், அவர்கள் பக்கமே இருப்பதாகக் கருதினார்கள்" என ஒப்புதல் அளித்திருந்தார்.

நீங்கள் கூடுதல் DGP (நுண்ணறிவு)ஆக இருந்த போது, சபர்கந்தாவிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்பட்டன என்றப் புகாரை பதிவு செய்தீர்களா?

2002ல், முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் எடுக்கப்பட்டன. எங்களுடைய தகவல் என்னவென்றால், விஹெச்பியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான, வட்காமிலுள்ள இரும்பு பட்டறையில் தான் இந்த ஆயுதங்கள் தாயாரிக்கப்பட்டன. நான் எழுத்து மூலமாகவே அறிக்கை அனுப்பினேன். மேலும் அப்போதைய அஹ்மதாபாத் போலீஸ் தலைவரான KR கவ்சிக்கிடமும் இது குறித்துத் தகவல் சொன்னேன். அவர்கள் சோதனை நடத்திய போது ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணம், சோதனை நடத்தச் சென்றவர்களே, சோதனை நடத்த வரும் செய்தியைக் கசிய விட்டதால், அங்கே சோதனையின் போது ஒன்றும் கைபற்றப்பட வில்லை என்பதனை பின்னர் நான் தெரிந்து கொண்டேன். இத் தகவல்களை பத்திரிக்கைகள் அறிந்து கொண்டன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் முதல் பக்க செய்தியாகவே வெளியிட்டது. அவர்கள் தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுத்தனர். அதனால் ஒரு பலனும் கிடைக்கவில்லை. அங்கு நாட்டு துப்பாக்கிகள் தாயாரிக்கப்படுவதாக வலுவாக சந்தேகிக்கப்பட்டது.

கலவரத்தின் போது இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா?

இந்தத் தகவல் பின்னரே கிடைத்தது. எனக்கு எதிராக ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது, ஏனென்றால் தகவல்களைப் பரிமாறுவது நுண்ணறிவு பிரிவுக்கு வழக்கமான ஒன்றே என DGP கூறிவிட்டார்.

சோதனையிட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டா?

(சிரிக்கிறார்) சோதனையிட்டவர்களின் செயல்பாடுகள், ஆளும்கட்சியின் அரசியல் ஆதாயத்திற்கு இசைவானதாகவே இருந்தது. காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சட்ட ஒழுங்கு அதன் கட்டுபாட்டுக்குள் இருப்பதாக உணர்த்தும் வகையில், ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் இருந்து கைப்பற்றபட்டதாக காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 தேதியன்று DG வன்ஜராவுக்கும், மற்றவர்களுக்கும் இந்த ஆயுதப் பறிமுதலுக்காக வெகுமதிகள் வழங்கப்பட்டது.

கலவரங்களின் போது ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டது என்று ஏதேனும் புகாரை பதிவு செய்தீர்களா?

நானாவதி-ஷா ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட என்னுடைய முதல் பிரமாண பத்திரத்திலேயே எனது அறிக்கைகளின் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது. சூலாயுதங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் அந்த அறிக்கையிலே உள்ளது. ஏப்ரல் 2002 -ல் பதவியை ஏற்றுக் கொண்டேன். அதன் பிறகு வன்முறை வெறி கீழே இறங்கி விட்டது. FIRகள் முறையாக பதிவு செய்யபடவில்லை என்றும், அதிகமான குற்றச்சாட்டுகள் ஒன்றாக இணைக்கபட்டுள்ளது என்றும், வன்முறை கும்பலுக்குத் தலைமை தாங்கி நடத்திய விஹெச்பி தலைவர்களின் பெயர்கள் FIRகளில் விடுவிக்கப்பட்டுள்ளது போன்ற புகார்களை குறிப்பிட்டு அறிக்கை அனுப்பினேன். இது ஒரு சர்ச்சையாகிற்று. இவ்வாறு கொடுக்கப்பட்ட புகார் அறிக்கைகள் எவற்றின் மீதும், அரசாங்கம் எந்தவொரு அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அல்லது இவற்றை பற்றி எந்த மேலதிக விளக்கங்களையும் கேட்கவிலலை. அது மிகவும் தெளிவு.


நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

பஜ்ரங்கி கூறவரும் கணிப்புபடி, நரோடாவில் அன்றைய ஒரு நாளின் இறுதியில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது 200 க்கும் மேலாகவே இருக்கும். ஆனால் இந்த எண்ணிக்கை மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரசு அறிவிப்பின் படி நரோடா பாட்டியா மற்றும் நரோடா கவுனில் மொத்தமே 105 பேர் தான் கொல்லப்பட்டனர். எப்படியாயினும், அஹமதாபாத் வட்டாரத்தில் நரோடா மட்டுமே ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட இடமாகும். அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் மேக்ஹனி நகரில் விஹெச்பி தலைவர்கள் வெறிப்பிடித்த வன்முறை கும்பலை முன்னின்று வழிநடத்திச் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் குறி முஸ்லிம்கள் காலங்கலமாக வாழந்து வரும் இடமாகிய குல்பர்க் என்றழைக்கப்படும் சமூகக் குடியிருப்புகளாகும்.



இம்மனிதவர்க்கப் படுகொலையில் பங்கெடுத்த மங்கிலால் ஜெய்ன், பிரகலாத் ராஜ், மதன் சாவல் ஆகிய மூவரையும் தெஹல்கா கண்டுபிடித்தது. இம்மூவரும் உள்ளுர் சிறு வியாபாரிகள்; இன்னும் இம்மூவர் மீதும் வன்முறை கலவரத்தில் ஈடுபட்டதற்காக அவர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் கூறியதாவது, இவர்களும் இன்னும் இவர்களுடன் இருந்த வன்முறை கும்பலும், விஹெச்பி தலைவர்களான அதுல் வாய்த் மற்றும் பாரத் தெலி ஆகிய இருவரால் வழிநடத்தி செல்லப்பட்டது. இவ்விருவரும் FIRல் குற்றம்சாட்டபட்வர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது இவ்விருவரும் எல்லா குற்றச்சாட்டிலிருந்தும் நீக்கப்பட்டார்கள். சாவல் என்பவன், "அவனும் அவனுடனிருந்த கொடூரக் குற்றவாளிகளும் காங்கிரஸ் MPயான இஹ்ஸான் ஜாப்ரியை எப்படி துண்டம் துண்டமாக கை வேறு கால் வேறாக வெட்டி, பின்பு துண்டாக்கப்பட்ட அவரது பல்வேறு உடல் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து எரித்தார்கள்" என்றக் கொடுஞ் செயலை விளக்கமான விவரித்தான்.

குல்பர்க் படுகொலைகளின் எண்ணிக்கை அரசாங்கக் கணக்கின்படி 39 ஆக கூறப்பட்டது. ஆனால் குற்றம்சாட்டபட்டவர்களில் ஒருவன் தெஹல்காவிடம் கூறும் போது கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகாமாகவே இருக்கும் என்றான். இவ்வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் குல்பர்க் சமூகக் குடியிருப்புகளில் வசித்து வந்தவர்கள் போக, அதன் பக்கத்திலுள்ள சேரிகளில் வசித்த ஏழை முஸ்லிம்களும் ஆவர். இவர்கள் வன்முறையாளர்களின் வெறியாட்டத்திலிருந்துத் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க இக்குடியிருப்புகளில் தஞ்சமடைந்து இருந்தனர். இம் மக்களும் சேர்த்தேக் கொல்லப்பட்டார்கள். அஹமதாபாத்தில் வகுப்புக் கலவரங்களுக்கு அதிக வாய்ப்புள்ளப் பகுதிகளாகக் கண்டறியப்பட்டக் கலுப்பூர் மற்றும் தரியாபூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்களைத் தாக்க சதித் திட்டம் தீட்டிய சதிகாரர்களான விஹெச்பியின் தலைவர்கள் ராஜேந்திர வியாஸ் மற்றும் ரமேஷ் தேவ் ஆகியோரிடமும் தெஹல்கா உரையாடியது. பெரும் விளைவுகளை ஏற்படுத்தி விட்ட சபர்மதி விரைவு ரயிலில் பிராயணம் செய்தக் கரசேவர்களின் பிரயாண ஏற்பாட்டின் பொறுப்பாளனும், அஹமதாபாத் நகர விஹெச்பி தலைவனுமான ராஜேந்திர வியாஸ் என்பவன் சொல்லும் போது, ரயிலில் வைக்கப்பட்ட தீ, 59 கரசேவர்களின் உயிரை வாங்கிய தினத்தன்று இவன் விஹெச்பி தொண்டர்களிடம் கூறினானாம், "முஸ்லிம்கள் ஒரு நாள் போட்டியை விளையாடி விட்டு நமக்கு 60ஐ இலக்காகத் தந்துள்ளனர். இப்போது நாம் ஒரு டெஸ்ட் போட்டியை தான் விளையாட வேண்டும். நாம் 600 எண்ணிக்கையை எட்டும் வரையிலும் நிறுத்தக் கூடாது" என்று கூறி உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளான்.

கலுப்பூரில் வசிப்பவனும், தெஹல்காவின் கேமராவில் பதிவாகியுள்ளவனுமாகிய வியாஸ் என்பவன் கூறும் போது, தானே 5 முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் 9 முஸ்லிம் வீடுகளைக் கொளுத்தியதாகவும் விவரித்தான். ரமேஷ் தேவ் என்பவன் தரியாபூரில் விஹெச்பின் முக்கியமான ஆளாக இருந்தான். அவன் சொல்லும் போது, அவனும் அவனது சகச் சதியாளர்களும், 20வது வருடங்களுக்கு மேலாக தாங்கள் தெரிந்திருந்த முஸ்லிம்களையே குறி வைத்து தாக்கிக் கொன்றொழித்ததாக விவரித்தான். மேலும் தேவ் கூறும் போது, அவனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து 10 சிறிய ரக துப்பாக்கிகளைத் தான் ஏற்பாடு செய்ததாக உரிமையும் கொண்டாடினான்.

வதோதரா: எரித்துக் கரியாக்கப்பட்ட நகரம்:

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு இடங்களும் பல கட்டங்களாகத் தாக்கப்பட்டது. இத்தகையத் தாக்குதல்கள் 2 மாதக் காலங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது. பெஸ்ட் பேக்கரியில் மட்டும் 14 மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

அஹமதாபாதில் கட்டவிழ்த்து விடப்பட்டத் தாக்குதலுக்கு நிகராக எதுவுமே இல்லை என்ற போதிலும், குஜராத்தின் இரண்டாவதுப் பெரிய நகரமான வதோதராவில் முஸ்லிம்கள் பலக் கட்டங்களாக தாக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 27 அன்று தொடங்கிய முதல் கட்டத் தாக்குதல்கள் மார்ச் 2 வரை நீடித்தது. அப்போது மார்ச் 1ம் தேதி, ஹனுமான் தெக்ரியிலுள்ள பெஸ்ட் பேக்கரியில் 14 மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டச் சம்பவமே மிக மேசமான படுகொலை சம்பவமாகும். இதற்குப் பிறகு மார்ச் 15லிருந்து 20க்கு இடையிலும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 25லிருந்து மே 2க்கு இடையிலும் குறிவைத்தத் தாக்குதல்கள் தொடர்ந்ததோடு, இவைகளுக்கு இடைபட்ட காலங்களிலும் கூட சிலச் சம்பவங்கள் நடந்தன.

நகரத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் ஒவ்வொரு இடங்களும் தாக்கப்பட்டது. கிஷன்வாடி, சாமா, அஷ்ஹாபிவி சாவ்ல், மாதவ்பூர் 2, மக்கர்புரா, அவ்தூத் நகர், ராகவ்பூரா, நூர் பூங்கா, கரேலிபாக், கோட்ரி கிராமம், ஹாஜி மியான் கா சாரா, ஹனுமான் தெக்ரி, ரோஷன் நகர், பானிகேட், தாய்வாடா மற்றும் மச்சிபித் ஆகியப் பகுதிகளுக்கு ஹிந்து வன்முறை கும்பல் வெறியோடு சென்றனர். முஸ்லிம்களுடைய நூற்றுக்கணக்கான வீடுகளும், வியாபாரத் தலங்களும் கொள்ளையடிக்கப்பட்டதோடு தீக்கிரையாக்கப்பட்டது. ஹிந்துக்கள் பெருவாரியாக வசிக்கும், வதோதராவின் புதியப் பகுதியான சாமாவில் பிப்ரவரி 28 அன்று, 20 பேரை கொண்ட வன்முறை கும்பலொன்று, போரசிரியர் JS பாண்டுக்வாலாவின் வீட்டைத் தாக்கியது. இவர் மாஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றுவதோடு வாதோதராவில் மிக மதிக்கப்படக்கூடிய நபராகவும் இருந்தவர். பேராசிரியர் JS பாண்டுக்வாலாவும் அவரது மகளும், தனதுப் பக்கத்து வீட்டுக்காரான ஒரு ஹிந்து நண்பரின் வீட்டில் பாதுகாப்புப் பெற்றுக் கொண்டதனால், வன்முறை கும்பல் அங்கிருந்து வெறியேறியது.

இருப்பினும் மறுநாள் மார்ச் 1ம் தேதி, மிகப் பெரிய வன்முறை கும்பல் வாயு உருளைகள் உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் இரண்டாவது முறையாக பேராசிரியர் பாண்டுக்வாலா உடைய வீட்டைத் தாக்கியது. இம்முறை தங்களது வன்முறையால் அவரது வீட்டை எரித்துச் சாம்பலாக்கினார்கள். இது தவிரவும் அப்பகுதியில் உள்ள மேலும் இரு முக்கிய முஸ்லிம் உயர் அதிகாரிகளின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. இம்மூன்று வீடுகளுக்கும் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டக் கும்பலில் இருந்த நபரான தீமந் பட் என்ற கலகக்காரனை தெஹல்கா கண்டுப் பிடித்தது. பட் கணக்காளனாக பணி செய்பவன். இவன் மாஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தில், தலைமை கணக்காளனாகவும் தணிக்கையாளனாகவும் பணியில் இருக்கிறான். ஆனால் இவனது உண்மையான பணி என்னவென்றால், முஸ்லிம்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தித் துன்புறுத்துவதேயாகும்.

பட் பல்கலைகழகத்தில் பணியாளனாக இருப்பதோடு, வதோதராவின் தற்போதைய பாஜக MPயான ஜெயாபென் தக்காருக்கு அந்தரங்க உதவியாளனாகவும் இருக்கிறான். சபர்மதி விரைவு ரயில் தீ வைப்புச் சம்பவம் நடந்த அந்த இரவு, வதோதராவிலுள்ள பாஜக, RSS, VHP, பஜ்ரங்தள் மற்றும் ABVP ஆகிய அமைப்புகளில் உயர் பதவி வகிப்பவர்கள் ஒன்று கூடி சந்தித்தத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான். RSS உறுப்பினராகவும் உள்ள பட், அந்த இரவுக் கூட்டத்தில் பங்கெடுத்தாகக் கூறியதோடு, இந்தக் கூட்டத்தில் தான் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்தச் சதித் திட்டங்கள் வரையப்பட்டன எனக் கூறினான். அதே கூட்டத்தில் தான், கலவரத்திற்குப் பின் சட்ட நடவடிக்கைகளை சந்திக்கும் ஹிந்துக்களுக்குச் சட்ட உதவி வழங்குவது குறித்தத் திட்டமும் தீர்மானிக்கப்பட்டது.

வதோதராவிலுள்ள மற்றுமொரு பாஜக தலைவர் தீபக் ஷாவை தெஹல்கா சந்தித்தப் போது, பட் சொன்ன இரவு கூட்டம் குறித்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்தியதோடு, கூட்டம் எங்கே நடைபெற்றது? என்ற தகவலையும் தந்தான். இச்சதி கூட்டம் நர்மதா பண்ணை வீட்டில் வைத்து நடந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்த தாழ்த்தப்பட்டச் சமுதாயத்தைச் சார்ந்த ஹிந்துக்களை காவி அமைப்புகள் பயன்படுத்தியதாக பாபு பஜரங்கி அஹமதாபாத்தில் வைத்து பெருமையாகக் கூறியதை, ஷாவும் ஊர்ஜிதம் செய்தான். இந்த ஷா மஹாராஜா சயாஜிராவ் பல்கலைகழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்கிறான்.


சபர்கந்தா: எங்கேயும் ஓடமுடியாது.

500 முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும் என சபதம் எடுத்திருந்த ஒரு விஹெபி தலைவனால் தலைமை தாங்கித் திரட்டிக் கூட்டிச் செல்லப்பட்ட வன்முறை கும்பலின் உறைய வைக்கும் கூக்குரலாக இருந்தது தான், "வெளியே கதவைப் பூட்டிவிட்டு முஸ்லிமை உள்ளே வைத்து எரி" என்னும் கோஷமாகும்.

சபர்கந்தா மாவட்டத்தில் தான் முஸ்லிம்கள் அதிகப்படியான பொருளாதார இழப்புகளால் பாதிக்கப்பட்டனர். இங்கு முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளும், வியாபாரத் தலங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

இங்கு நடைபெற்ற மனிதஇன படுகொலைகளுக்கு முக்கிய சூத்திரகாரனாக சதித் திட்டங்களை வகுத்தவன்,விஹெச்பியின் முக்கிய தலைமை பிரமுகனான அனில் பட்டேல் என்பவனாவான். சபர்மதி விரைவு ரயில் தீ வைப்பு சம்பவம் நடந்தப் பிறகு, குறைந்தது 500 முஸ்லிம்களையாவதுக் கொல்ல வேண்டும் என்றும், அவ்வாறு கொல்லாமல் போனால், தான் விஹெச்பியில் வகித்து வரும் பதவியை விட்டு விலகி விடுவதாக சபதம் செய்ததாகவும் அனில் பட்டேல் தெஹல்காவிடம் கூறினான். எங்கள் கோஷமே, "வெளியே கதவைப் பூட்டிவிட்டு முஸ்லிமை உள்ளே வைத்து எரி" என்பது தான் என மேலும் அனில் பட்டேல் தெஹல்காவிடம் கூறினான். விஹெச்பி மற்றும் RSS தொண்டர்களிடம், "வெளியே சென்று முஸ்லிம்களைக் கொல்லுங்கள், இன்னும் அவர்களின் சொத்துக்களை எரியுங்கள்" எனப் பகிரங்கமாகவே தூண்டிதாகவும் இவன் கூறினான். சபர்கந்தாவில் முஸ்லிம்களின் வீடுகளோ, வியாபாரத் தலங்களோ எரிக்கப்படாத கிராமங்களே இல்லை என்பதாகவும் பட்டேல் தெரிவித்தான். பட்டேலின் சொந்தக் கிராமமான தன்சுராவில் மொத்தம் 126 முஸ்லிம் வீடுகள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டத் தகவலையும் அவன் வெளியிட்டான்.

"முஸ்லிம்களுக்கு அதிகப்படியான உயிர் இழப்புகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒரே உள்நோக்கமே அன்றி வேறுறொருத் திட்டமுமில்லை" என்பதாக பட்டேல் கூறினான். இம்மனித இனப் படுகொலையின் போது, பிரவீன் தொகாடியா மாவட்ட அளவில் செயல்களை நடத்தியதாகவும் மேலும் அவன் தெரிவித்தான். இன்னும் தொகாடியா படடேலிடம், "முக்கியமான விஹெச்பி ஆட்கள் யாரும் காவல் துறையால் குற்றம்சாட்டப்படக் கூடாது, சிறைக்குச் செல்லக் கூடாது என்பதை உறுதிசெய்யும் வகையில் பணியாற்றுமாறு" கூறியதாகவும் பட்டேல் தெரிவித்தான். சபர்கந்தாவில் 1545 வீடுகளும், 1237 வணிகத் தலங்களும் எரிக்கப்பட்டன. மேலும் 549 கடைகள் சூறையாடப்பட்டன.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...4.

வெடிகுண்டு தயாரிப்பாளர்கள்


வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப்,பெரும்பாலும் போலீஸின் உடந்தையோடு மாநிலம் பரவலாக தாயாரித்து விநியோகமும் செய்தார்கள்.

மேலோட்டம்:

2002-ல் பஜ்ரங்தள் ராஷ்டிரீய ஸசன்யோக்கில் இருந்தவனும், தற்போது கோத்ரா சட்டமன்ற தொகுதியின் (கலவரத்துக்கு முன்பு வரை காங்கிரஸின் கோட்டை) பாஜக MLA ஆகவும் இருக்கும் ஹரேஷ் பட் என்பவன், தனதுச் சொந்தப் பட்டாசு தொழிற்சாலையில் வைத்து குண்டுகள் தாயாரிக்கப்பட்டதாக இதுவரை எவராலும் அறியப்படாத ஒரு தகவலைக் கூறினான். ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட நாட்டு வெடிகுண்டுகள் எல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றத் தகவலையும் அவன் விளக்கினான். இவ்வாறு தாயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பின்னர் அஹ்மதாபாத்திலுள்ள கொலைகார வன்முறை கும்பல்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

2002-ல் அஹ்மதாபாத்தில் ஊரங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், வாள்கள் பஞ்சாப்பிலிருந்தும், நாட்டுத் துப்பாக்கிகள் உ.பி, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்றப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. இவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்ட எந்த மாநிலங்களிலும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லாதிருந்தும் கூடக் கொண்டு வர முடிந்தது என பட் பெருமையாகக் கூறி கொண்டான். பிற மாநில எல்லைகளைக் கடந்துக் கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல்கள் ஒரு முறையல்ல, பலத் தடவைகள் கொண்டு வரப்பட்டன; "குவியல் குவியலாக அவைகள் இருந்தன" என்றத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான்.

குஜராத் கலவரத்துக்குச் சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட, "அவனால் பயிற்றுவிக்கப்பட்ட 40 இளைஞர்கள் டிசம்பர் 1992 பாபரி மசூதி இடித்த சம்பவத்தில் பங்கெடுத்ததாக", அதி முக்கியம் வாய்ந்த மற்றொரு இரகசியத்தையும் பட் வெளிப்படுத்தினான். இராணுவத்தில் தரப்படும் பயிற்சியை ப் போல, தடை ஓட்டப் பயிற்சி, 30 அடி கயிற்றில் எவ்வாறு ஏறுவது போன்றப் பயிற்சிகளை அவன் அந்த இளைஞர்களுக்குக் கொடுத்தானாம். அந்தப் பயிற்சி முகாம் இன்றும் அஹ்மதாபாத்தில் உள்ளது.

(தெஹல்கா அறிக்கை வெளிப்படுத்தும் ஹிந்துத்துவ வெறிநாய்கள் முஸ்லிம்களை அழிக்க எடுத்துக் கொள்ளும் அனைத்து முன்னேற்பாடுகளும், வருங்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில், அதற்காக எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளின் முக்கியதுவத்தைக் குறித்தும், அந்தத் தற்காப்பு நடவடிக்கைகள் எவ்வகையிலெல்லாம் எடுக்கப்பட வேண்டும் என்பதனையும் விரிவாக எடுத்துரைக்கும். முஸ்லிம் சமுதாயம் இவற்றை வைத்து இனிமேலாவதுத் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தும் என நம்புவோமாக! - இறை நேசன்.)

வி.ஹெச்.பியைச் சார்ந்தத் தாவல் ஜெயந் பட்டேல் என்பவன் அவனுடைய குவாரிகளிலுள்ள அபாயகரமான வெடிகளை சபர்கந்தாவில் பயன்படுத்தி உள்ளான். வெடிமருந்துப் பொருள்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற பழம்பெரும் RSS காரனாகிய அம்ருத் பட்டேல் என்பவனுடைய உதவியால், குவாரியிலேயே வெடிமருந்துகள், RDX ஆகியவற்றைக் கொண்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.

வி.ஹெச்.பியின் விபாக் பெர்முக்வாகிய அனில் பட்டேல் என்பவன், எவ்வாறு வெடிகுண்டுகள் சபர்கந்தாவில் உருவாக்கப்பட்டு பின்னர் அஹ்மதாபாத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது என்றத் தகவலை வெளியிட்டான்.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html