தமிழ் அரங்கம்

Thursday, November 23, 2006

விண்ணில் தவளும் செங்கொடி! மண்ணில் கமழும் புரட்சி!

நேபாளம்:
விண்ணில் தவளும் செங்கொடி! மண்ணில் கமழும் புரட்சி!

காடுகளின் மணமும் மலைப் பச்சைகளின் மணமும் கலந்து இரவு கனத்திருக்கிறது.


தகத்தகவென ஒளி வீசியவாறு அற்புத ஜாலம் செய்தபடி சலசலவெனச் சிற்றலைகளோடு ஓடுகிறது கர்னாலி ஆறு.


இடம்: நேபாள நாட்டின் மேற்கு மூலை.


கர்னாலி ஓர் அற்புதம் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. இமாலயத் தேசமான நேபாளத்தில் பெருக்கெடுத்தோடுகிற சிறிதும் பெரியதுமான 6000 ஆறுகளில் கடைசிக் காட்டாறு கர்னாலியாகத்தான் இருக்கும். இப்பிராந்தியத்தில் ஓடுகிற மிகப் பெரிய ஆறுகளான கண்டக், மஹாகாளி இரண்டுமே இந்தியநேபாள நாடுகளுக்கிடையிலான சமனற்ற ஒப்பந்தங்களினால் நார்நாராகக் கிழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவை. இந்தியப் பெரியண்ணன் எல்லாத் தண்ணீர் மூலங்களையுமே கொள்ளையடித்துவிட்டது; சின்னஞ்சிறு நேபாள நாடோ தீராத வறட்சியிலும், தொலையாத தாகத்திலும் சிக்கித் தவிக்கிறது.


கர்னாலி ஆற்றின் மீது ஜப்பானியர் மிக அற்புதமான தொங்கு பாலமொன்றைக் கட்டியிருக்கிறார்கள். காடுகளைப் போலவே இங்கும் இரவு அடர்ந்து கரியதிரை விழும்நேரம் சிஸாபானி கிராமக் குழந்தைகள் பாலத்தின் மேல் குதித்து ஓடியவாறு ""ஜனநாயகம் ஜனநாயகம், குடியரசு குடியரசு'' என்று முழங்குகின்றன. அங்கு நிலவும் சுதந்திர மன எழுச்சியின் மழலைப் பாட்டொலியாக அது பரவசம் ஊட்டுகிறது.


இந்தச் சிறிய கிராமத்தின் மக்களும் கூட நெடுஞ்சாலைகளை மறித்து, 19 நாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ""பராஸ் ஒரு மக்கள் விரோதி. அவனைத் தூக்கிலே போடு.'' (பராஸ், மன்னன் ஞானேந்திராவின் மகன்) ""திருட்டு நாயே ஞானேந்திரா, நாட்டை விட்டு வெளியேறு'' என்று நேபாளம் முழுக்க பிரபலமான முழக்கங்களை எழுப்பினர். நேபாளத்தில் நடப்பது சர்வாதிகார மன்னனுக்கும் மக்களுக்கும் இடையேயான போர் என்பதை இது மிகத் துலக்கமாகப் பிரகடனப்படுத்துகிறது.


ஆனால் மன்னனுக்கோ அல்லது அவன் மகனுக்கோ வெளியேற மனமில்லை. மன்னன் ஞானேந்திரா இன்னமும் அங்கு ஒட்டிக் கொண்டே இருக்கிறான். மன்னனைப் போலவே அவனது ராயல் நேபாள ராணுவம் (கீNஅ) இராணுவத் தலைமைத் தளபதியாக இருக்கும் கோமாளி பியார் யங் தாபா, பல வண்ண நிலப்பிரபுத்துவ உள்ளூர்த் தலைவர்களும், பணநாற்றமடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும் இந்த ஏழை நாட்டின் இரத்தத்தையும், வியர்வையையும், இயற்கை வளங்களையும் சூறையாடியும், சுரண்டியும் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.


பத்திரிக்கைக் குரல்வளையை நெரித்து நீதிபரிபாலனத்தில் தலையிட்டு, அரசு நிறுவனங்களை அழித்து, எழுத்தாளர்கள், கலைஞர்கள், வக்கீல்கள், வீட்டுப் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சிறைப்படுத்தி, சித்திரவதைக் கூடங்களில் அடைத்து, அரசு பயங்கரவாத நிலையைக் கட்டவிழ்த்து விட்டு, பல ஆயிரக்கணக்கான ஏழை மக்களை, நேபாள மாவோயிஸ்டு கம்யூனிசப் புரட்சியாளர்களைக் கொன்றார்கள்.


நாங்கள் கர்னாலி நதியைக் கடக்கும்போது நடுச்சாமத்தின் கரிய இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கட்டுறுதி கொண்ட ஒல்லியான தேகத்துடன் சீருடை அணிந்த ஒருவர் எங்கள் பாதைக்குக் குறுக்கே வந்து பின் இருளில் மறைந்து போனார். எங்கள் கார் டிரைவர் குருஜி, ""மாவோயிஸ்ட்'' என்று முணுமுணுத்துக் கொண்டார். கடந்த 9 நாட்களில் சுமார் 1,000 கி.மீ. தூரம் மாவோயிசக் கட்டுப்பாட்டுப் பிராந்தியங்களிலே பயணம் செய்ததால், நாங்கள் ஆச்சரியப்படவில்லை.


நாங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க போர்முனைகள் தகர்க்கப்பட்ட போலீசு நிலையங்கள், மாவோயிஸ்டுகளைக் கொன்று அவர்களது சிதைந்த உடல்களைக் குழிதோண்டிப் புதைத்த பாலத்து அடிகள், தமது இளம்பாலகர்களைப் பறிகொடுத்த கிராமங்கள் என அனைத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் கார் திடீரென ஒரு இராணுவச் சோதனை நிலையம் அமைந்திருந்த யாருமற்ற, வெறிச் சோடிய நெடுஞ்சாலையை அடைந்தது.


என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் சுட்டுத் தள்ளப்படலாம். அவர்கள் யாரையும் நம்புவதில்லை. இது மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. எனவே அனைத்துப் பாதைகளையும் நன்கறிந்தவர்கள் அவர்கள். ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து இராணுவத்தையோ, அல்லது மாவட்டத் தலைநகரத்தையோ தாக்கத் திட்டமிட்டு இருக்கலாம். (கபிலவஸ்துவில் ஏப்ரலில் நடந்தது போல). பெண் தளபதிகள் தலைமையில் 5,000 6,000 என வலிமையான படையோடு தான்சேன் நகரத்தைக் கைப்பற்றியது போன்ற செயலிலும் இறங்கலாம். (மாவோயிச மக்கள் விடுதலைப் படை (கஃஅ)யில் 40மூ பெண்கள் உள்ளனர்.)


""யார் நீங்கள்? இந்த இராத்திரியில் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?'' தூரத்திலே ஒரு குரல்கேட்டது. மிகவும் அந்நியமான குரல். அவர்கள் சிலராக இருந்தனர். அந்த ஒளி எங்களைத் தீவிரமாக ஆய்வு செய்தபடியே இருந்தது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் மிகவும் தடுமாறிப் போனதால் அவர்கள் இராணுவத்தினர் என்பதை உடனடியாக எங்களால் அடையாளம் காண இயலவில்லை. நாங்கள் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் என்பதை குருஜி தெரியப்படுத்திக் கொண்டார். பின்வாங்கிக் கொண்ட குரல் மீண்டும் ஒலித்தது. ""சரி போங்கள், மீண்டும் இரவு நேரத்தில் இங்கே திரும்ப வராதீர்கள்'' என்றது.


இந்த மலைப்பிரதேச இராணுவச் சோதனை நிலையத்தைப் போன்று அனைத்துச் சோதனை நிலையங்களும் அபாயம் கொண்டதல்ல. நேபாளம் நீண்டதொரு அடக்குமுறையின் தளைகள் அறுக்கப்பட்டு மெல்ல பல கருத்துக்கள் பூத்துக் குலுங்கும் ஜனநாயக மலர்ச்சோலையின் முதல் மகிழ்ச்சி அனுபவத்தின் அரைவாசியைக் கண்டு கொண்டிருந்தது. 19 நாள் வன்முறையற்ற புரட்சி மன்னனை ஒரு மூலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆனால் அரண்மனைச் சதிகள், துரோகங்கள் மற்றும் சமரசங்கள் பற்றிய கவலை ரேகைகள் எங்கும் பரவியே இருக்கின்றன.


ஒரு இடைக்கால அரசமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஏழு கட்சிக் கூட்டணியுடனான மாவோயிஸ்டுகளின் 12 ஒப்பந்தங்கள் முழுதாக இணைத்துக் கொள்ளப்படுமா? அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் அதிகார மன்றம் ஏற்படுத்தப்படுமா? மன்னன் மற்றும் இராணுவத்தின் கதி என்னவாக இருக்கும்?


உண்மை என்னவெனில், இப்போது போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வரும் மாவோயிஸ்டுகளே நேபாளத்தின் பெரும்பான்மையான பகுதிகளைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள். முன்பு மன்னனது கட்டுப்பாட்டில் இருந்தவை கடுமையான இராணுவப் பாதுகாப்பு கொண்டிருந்த காத்மாண்டுவும், சில துணை நகரங்களும் மட்டும்தான். 75 மாவட்டங்களின் 75 சதவீதப் பகுதிகள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு நேபாள நிலப்பரப்பு முழுவதும் நிலையான செல்வாக்கையும் பெற்றுள்ளது.


மக்களிடம் ஒரு பயமும் அதே நேரத்தில் அவர்களின் தியாக வாழ்க்கை, கொள்கைப் பிடிப்பு, வீரம் ஆகியவற்றின் மீது உயரிய மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காக வாழ்கிறார்கள், சாகிறார்கள். அவர்களிடையே வேலை செய்து, வாழ்ந்து, பள்ளிகள், சாலைகள் அமைத்துக் கொடுத்து, அனைவருக்கும் நிலம் விநியோகித்து, உடனடி நீதி வழங்கல் முறையை ஏற்படுத்தி, எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல், சமூக அதிகாரத்தை அளித்து, நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைத் தாங்கிப் பிடிக்கும் பழைய கட்டுமானங்களைத் தகர்த்து எறிவதில் மாவோயிஸ்டுகள் முன் நிற்கிறார்கள்.


மக்கள் மன்னனை வெறுக்கிறார்கள். மன்னன் நடத்திய அரண்மனைப் படுகொலைகளை மக்கள் மறக்கவில்லை. ""மன்னன் மற்றும் அவனது மகன், இருவருமே அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம். மன்னன் அப்புறப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்'' என்று நேபாள்கஞ்ச் பகுதி மாவோயிசத் தோழர் "அதக்' குறிப்பிட்டார். இவர் பேக் மற்றும் பாட்டியாவின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். உத்தராஞ்சல் எல்லையில் உள்ள மகேந்திர நகரில் (புரட்சிக்குப் பிறகு, இப்போது பீம்நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1960களில் மிகப் பெரிய விவசாய இயக்கத்தை மேற்கொண்டு பின்னர் மன்னனின் ஆட்களால் கொலை செய்யப்பட்ட பீம் தத் பாண்டே நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது).


கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கிருஷ்ணா தத் குறிப்பிடும் போது ""மாவோயிஸ்டுகள் கண்ணுக்கு நேரே புலப்படாத சக்தி. ஆனால் அவர்கள் எங்கும் நீக்கமற உள்ளனர். அரசாங்கத்தில் கண்டிப்பாக அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இந்த மக்கள் எழுச்சியில் (ஜன அந்தோலன்) மிக முக்கியப் பாத்திரத்தை அவர்கள் வகிக்கிறார்கள்.''


நேபாளம் நெடுகிலும் 90களின் நடுப்பகுதியில் ரோல்பாவில் மாவோயிஸ்டுகள் முதன்முதலில் தொடங்கிய போராட்டத்தில் காணப்பட்ட பிரச்சாரச் சுவரெழுத்துக்கள் சிவப்பு வண்ணத்தில் எங்கும் மிளிர்கின்றன: ""கொலைகாரக் கிரிமினல் சர்வாதிகாரி மன்னனை அழித்தொழிப்போம். ஒரு ஜனநாயக மக்கள் குடியரசை நிறுவுவோம்.'' அவர்களின் நடவடிக்கைகள் மிகத் தெளிவாக எங்கும் உள்ளன. கடந்த ஏப்ரலில், நகரங்களில் ஆயிரக்கணக்கான கிராம மக்களை அணிதிரட்டியவர்கள் மாவோயிஸ்டுகளே.


""வன்முறை நிகழாத அந்த மக்கள் எழுச்சியில் 3 முக்கிய சக்திகள் இருந்தனர் ஏழு கட்சிக் கூட்டணி, மக்கள், மற்றும் மாவோயிஸ்டுகள். சந்தேகமேயில்லாமல், மாவோயிஸ்டுகளே மிகப் பெரிய சக்தி'', என்கிறார் மனித உரிமைகள் வழக்குரைஞர், கோபால் சிவக்குட்டி சிந்தன். மேலும் அவர், "புதிய இடைக்கால அரசாங்கத்தில் மாவோயிஸ்டுகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 1990இன் அரசமைப்புச் சட்டம் தூக்கியெறியப்பட்டு, ஒரு புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். மன்னனும், அவன் மகனும் தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு எல்லா அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட்டு, சட்ட அதிகார மன்றத்தின் ஆட்சி செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், நேபாளம் நிச்சயமாக இரண்டாவது புரட்சிக்குத் தயாராகும்'' என்று விளக்குகிறார்.


நேபாளம் ஏற்கெனவே இரண்டாவது புரட்சி ஒன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.


பீம்நகரில், ஞானேந்திரா மார்க், ஜனமார்க் என பெயர் மாற்றப்பட்டுள்ளது; மன்னர் மாட்சிமையைப் பறைசாற்றிய பெயர்ப் பலகைகள் நேபாளம் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன் காத்மாண்டு பாராளுமன்றத்தில் நேபாள மக்கள் குடியரசின் சின்னமான அரிவாள் சுத்தியல் காட்சி தருகிறது; மன்னன் மற்றும் அவனது மூதாதையர்களின் சிலைகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன் புதிய பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன் கிரிமினல்கள் மற்றும் மக்களை ஒடுக்கிய ஒடுக்குமுறையாளர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் மிகவும் உன்னிப்பாக ஏழு கட்சிக் கூட்டணியைக் கண்காணித்து வருகிறார்கள்.


வன்முறையற்ற இந்த இயக்கம் 21 உயிர் இழப்புக்களைச் சந்தித்தது. அவற்றில் ஒன்று குகுகயின் முன்னணியாளர் துர்ஜா குமார் ராய் சுட்டுக் கொல்லப்பட்டு, காத்மாண்டுவில் வெட்டவெளியில் தொங்க விடப்பட்டு இருந்தார். ஊனமாக்கப்பட்டவர்கள் பலர். பார்டியா மாவட்டத்தில், குலேரியா கிராமத்தின் விவசாயி யம்லால், காலில் சுடப்பட்டுள்ளார். ""அவர்கள் துரோகம் இழைத்தால் மறுபடி தெருவில் இறங்கிப் போராடுவேன்'' என்கிறார் அவர். அப்போது சுட்டுக் கொல்லப்படும் நிலைமை வந்தால் என்ன செய்வார்? ""நாட்டிற்காக நான் சாவேன். எங்களுக்கு ஒரு குடியரசு வேண்டும். மன்னன் இங்கிருந்து வெளியேற வேண்டும்'' என்கிறார் தீர்க்கமாக.


கஜூரா கிராமத்தின் ஏழை தலித் மக்கள் காலனியில், ஷாகித் சேது பிக்காவின் பலவீனமான 3 குழந்தைகள் எங்களைச் சுற்றி ஓடிக் கொண்டே ஜனநாயகத்தை வாழ்த்தி சில முழக்கங்களை எழுப்பியபடி இருந்தன. ""உங்கள் அம்மா எங்கே போயிருக்கிறார்கள்?'' என்று நான் கேட்டேன். ""மன்னன் எங்கள் அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டான்,'' என்று பதிலளித்தான் ஆசிஷ். இருபத்தாறே வயதான சேது 10 கி.மீ. தூரம் நேபாள் கஞ்சுக்குப் பயணம் செய்து இந்தப் போராட்டத்தில் பங்கு எடுத்து உள்ளனர். அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் சுஷ்மா என்ற பெண், ""அப்போது ஒரு லட்சம் மக்கள் நேபாளத் தெருக்களில் நின்றிருந்தார்கள். கண்ணீர்ப் புகைகுண்டு ஒன்று ஆசிஷ் தாய் மீது விழுந்ததால் மூச்சு திணறி இறந்து போனாள்'' என்று சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.


அந்த நிலப்பரப்பு முழுவதும் இதுபோன்ற வீரமும், தியாகமும் நிறைந்த நம்பமுடியாத பல கதைகள் உள்ளன. சேது இறந்த உடனே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, போலீசுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு நேபாள் கஞ்சில் உள்ள ஞானேந்திரா சவுக்கில் அமைந்திருக்கும் ஞானேந்திரா நினைவிடத்தைத் தகர்த்தெறிந்தனர். இப்போது, தகர்க்கப்பட்ட அந்த நினைவிடத்தில் ஒரு புதிய பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது ""ஷாகித் (தியாகி) சேது பிகா சவுக்.''


மாவோயிஸ்டுகள் மீதான பயங்கரவாதிகள் முத்திரை நீக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வெளிப்படையான நடவடிக்கைகளில் உள்ளனர். ஆயினும், ஆபத்தை ஊகித்துணரும் வகையில் எச்சரிக்கை நிலையிலே உள்ளனர். அவர்கள் இந்த இராணுவத்தையும் அரசாங்கத்தையும் நம்பவில்லை. எனில், இப்படி வெளிப்படையாக இயங்குகின்ற நிலையை எப்படி அவர்கள் உணர்கிறார்கள்? இதற்கு தோழர் ரமில்ராம், (வயது 25) விடையளிக்கிறார்: ""எங்களைக் கொல்ல நடக்கும் சதிகள் குறித்த எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்கும். மக்களின் உறுதியான ஆதரவு எமக்கு இருப்பதால், அவர்களே எங்களுக்குப் பாதுகாப்பு. எனவே சண்டை நிறுத்தத்தை அறிவித்ததனால் மட்டுமல்ல, வேறுவழிகளிலும் எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.''


இது எப்போதும் சாத்தியமில்லை. தோழர் அதக் கூறும் போது 12,000 மக்கள் கடந்த 10 வருடங்களில் போலீசு மற்றும் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5,000 பேர் மாவோயிஸ்டுகள், 7,000 பேர் சராசரி மக்கள் மற்றும் மாவோயிஸ்ட் அனுதாபிகள். இதுபோக 2,000 மாவோயிஸ்டுகள் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். 1,400 தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் "காணாமல்' போய் உள்ளனர். அதாவது கொல்லப்பட்டு விட்டனர். போக்ராவுக்கு அருகே கஸ்கி மாவட்டத்தின் துல்கவுடா கிராமத்தில் மளிகைக் கடைக்காரரான ஆர்த்தி ஷர்மாவின் கணவன், தங்கா ஷர்மா "காணாமல் போனவர்'களில் ஒருவர். ""என் கணவர் ஒரு மாவோயிஸ்ட் தான்'' என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.


சித்திரவதை, கடத்தல், கற்பழிப்புகள் மற்றும் கொலைகள் குறித்த சோகக் கதைகள் நேபாள மக்களின் உண்மைக் கதைகள். ஆனால், மக்கள் காட்டும் உறுதிப்பாடு வியப்புக்குரியது. எளிமையும், அன்பும், உணர்ச்சி வேகமும் கொண்ட நேபாள மக்கள் அனைவரிடமும் உயரிய விழிப்புணர்ச்சி நிலையும், அரசியல் தெளிவும், உறுதியும் இருப்பதை நகரத்திற்கு நகரம், கிராமத்திற்குக் கிராமம் காணலாம். நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மை, வறுமை மற்றும் ஒடுக்குமுறைகளால் நொறுக்கப்பட்ட மக்கள் சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதியைப் பெற்றுத் தரும் ஒரு சுதந்திரக் குடியரசுக்காகச் சாகவும் தயாராக இருக்கிறார்கள்.


போக்ராவின் கஸ்கி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான தோழர் சுராஜ், தனது இளமைப் பருவத்திலிருந்தே தலைமறைவாக இருந்தவர். பல்வேறு ஆயுதத் தாக்குதல்களில் கலந்து கொண்டவர். சமீபத்திய பெனியில் நடந்த தாக்குதலில் 64 தோழர்களை இழக்க நேரிட்டதைக் குறிப்பிடுகிறார். ஹெலிகாப்டர்களில் எங்கள் மீது குண்டு பொழிந்ததும், நாங்கள் அவர்களைத் திருப்பிச் சுட்டதும் ஒரு சாகச அனுபவம். இறந்த தோழர்களின் நினைவுகள் ஏற்படுத்திய வலி பலநாட்களுக்கு என்னை வருத்தியபடியே இருந்தது''. ""எதுவரினும் எங்கள் கடமையைத் தொடர்ந்து தானே ஆக வேண்டும்''.


இவரைப் போன்ற இளம் மாவோயிஸ்டுகள் மற்றும் இந்தப் போராட்டக் களத்தில் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அல்லாத பிரிவினர் அனைவரும் மிகத் தெளிவான தேர்ந்தெடுத்த வார்த்தைப் பிரயோகமும், அரசியல்கூர்மையும் கொண்டவர்களாக உள்ளனர். ""இப்போது ஒரு அடி முன் நகர்ந்துள்ளோம். அடுத்த அடி எடுத்து வைக்கும்போது அதன் உச்சம், சோசலிசத்துக்கும் மேலானதாக இருக்கும்'' என்கிறார், சுராஜ்.


அவர் தலைமறைவுக் காலத்தில் காட்டில் வாழ்ந்திருக்கிறார். 8 நாட்கள் வரை பசியுடன் இருந்துள்ளார். இராணுவத்தை பலமுறை எதிர் கொண்டிருக்கிறார். ""அப்போது, அது எனக்குச் சிரமமாகத் தோன்றியது. அனைத்தையும் இப்போது யோசிக்கும் போது சுவாரசியமான அனுபவமாக நினைவுகளில் எழுகிறது'' என்று கூறி, புன்னகைக்கிறார். சுராஜின் 21 வயதான மனைவி நிஷாலும் ஒரு மாவோயிஸ்ட் தோழர். அவருடன் மேலும் 4 பெண் தோழர்களைக் கைது செய்த இராணுவம், சித்திரவதைக்குப் பின்னர் கொன்றொழித்தது. சுராஜ் இன்னொரு திருமணத்தை செய்து கொள்வாரா? ஒரு புன்னகையில் தன் வலியை மறைக்கிறார். ""எங்கள் அரசியல் சித்தாந்தத்தை நாங்கள் மணம் முடித்து இருக்கிறோம்... ஆனால், நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள நிலையில், புரட்சியை அதன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டாமா?'' என்று எளிய பதிலளிக்கிறார்.


அடுத்தநாள் காலையில், கஸ்கிகரகா கொடுஞ்சிறையில் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவந்திகா வெளிப்படுத்திய துயரப் புன்னகை, சுராஜின் மனச்சுமையை ஒத்திருந்தது. 25 வயதிலேயே 3 முறை கைதாகியிருக்கும் அவந்திகாவின் சிறை வாழ்க்கை 6 வருடங்கள். அவருடன் சிறைப்படுத்தப்பட்டிருந்த இளம் பெண் தோழர்கள் ஆஷா, ஷர்மிளா மற்றும் லீலா ஆகியோர் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இருபது வயதுப் பிராயத்தில் உள்ள 14 பெண்கள் மற்றும் 73 ஆண் மாவோயிஸ்டு தோழர்களும் கோஷங்களை எழுப்பியவாறு சட்டமியற்றும் அதிகாரமன்றம் வேண்டி உணவு உட்கொள்ள மறுத்து வருகின்றனர்.


பெண்கள், தாம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டது குறித்து, அவர்கள் தலைகளை தண்ணீர்க் குட்டைகளில் வலியத் திணித்து மூழ்கச் செய்தது, உள் பாதங்களில் திரும்ப, திரும்ப அடித்துத் துன்புறுத்தியது, தூக்கமற்ற இரவுகள் முழுக்க விசாரணை செய்தது என ஏகப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். அவர்கள் அனைத்தையும் சொல்லவில்லை. தம்மீது ஏவப்பட்ட இரத்தம் தோய்ந்த வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் சொல்லி அனுதாபம் தேடிக் கொள்ள விரும்பவில்லை. ""எதற்காக இத்தனைப் போராட்டங்களும்?'' நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். ""நேபாளத்திற்கு வேண்டிய சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம்'' என்றனர். ""உங்கள் மாவோயிசத்தின் இலக்கு என்ன?'' ""நேபாளத்திலும் உலகத்திலும் உலகப் புரட்சி கொண்டு வருவதே'' என்றனர்.


எந்த இன்னலையும் தாங்கிக் கொண்டு போராட உறுதி ஏற்ற இளம் ஆண்களும், பெண்களும் மின்னும் நட்சத்திரங்களைக் கொண்ட சிவப்புப் பட்டைகளை தமது தலைகளைச் சுற்றிக் கட்டியவாறு, புரட்சியின் தீர்மானமான சக்தியாக நேபாளம் முழுக்க உள்ளனர். இவர்கள் போலி மோதல் படுகொலையில் கொல்லப்படாத பாக்கியசாலிகள் என்று மட்டும் எனக்குத் தோன்றியது. அஞ்சாத நெஞ்சுறுதி, அரசியல் கூர்மை, தமது அரசியல் நோக்கத்திற்குக் காட்டும் விசுவாசம் அனைத்தையும் வெளிப்படுத்தும் அவர்கள் புன்னகை, மலையிலிருந்து வெளிக்காட்டும் சூரியக் கதிர்களின் பிரகாசத்தை ஒத்திருக்கிறது.


நான் விடைபெறுவதற்காக அவர்களுடன் கைகுலுக்கிய போது என்னைப் பற்றிய கைகளிலிருந்து ஒரு அரவணைப்பும், வீர உணர்வும் என்னுள் படர்வதை உணர்ந்தேன். அநீதிக்கு எதிரான கோபமும், தார்மீக ஆவேசமும் அதன் உக்கிர உணர்ச்சியுடன் ஒன்றாய் மின்னுவதை அவர்கள் கண்களில் பார்த்தேன். தீராத புரட்சி நம்பிக்கை அது ஏப்ரல் புரட்சி நம்பிக்கை போன்றது. ""தோழர்களே உங்களுக்குச் செவ்வணக்கம்'' என்று சொல்லிக் கொண்டு நான் திரும்பி விட்டேன்.


பழைமை எண்ணங்கொண்ட, சீரழிந்த, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகள் ஒருபுறம்; கனவுகளைத் தேக்கி, தமது உயிரைப் பணயம் வைத்து, அவற்றை நிறைவேற்ற துடி துடிப்போடுக் காத்திருக்கும் இளம் லட்சியவாதிகள் மறுபுறம் என நேபாளத்தை இப்போது பார்க்கிறேன்.


இளம் தலைமுறையினர் சுதந்திரத்தையும், நீதியையும் இந்த முதல் புரட்சியின் வழியே பெறவில்லையென்றால், அவர்கள் இரண்டாவது மற்றும் இறுதிப் புரட்சியின் வழியே அதை நிச்சயம் நடத்திக் காட்டுவார்கள்.


ஆம் அது இரண்டாம் புரட்சியாக இருக்கும்!


ஆங்கில மூலம்: அமித் சென்குப்தா, நன்றி: 3.6.2006 தெஹல்கா வார இதழ்.


சுருக்கப்பட்ட தமிழாக்கம்: இளந்தீபன்.

Sunday, November 19, 2006

மக்களை கேனயர்களாக்கிய புலியெதிர்ப்பு அரசியல்

மக்களை கேனயர்களாக்கிய புலியெதிர்ப்பு அரசியல்

பி.இரயாகரன்
19.11.2006

புலியெதிர்ப்பையே தமது அரசியலாகக் கொண்டவர்கள் ஒன்று கூடி, தமது அரசியல் பொறுக்கித்தனத்தை மறுபடியும் நிறுவிக் காட்டியுள்ளனர். அந்த அரசியல் பொறுக்கித்தனத்தையே ஒரு தீர்மனமாகவும் வெளியிட்டனர். மக்களை முட்டாளாக்கும் இந்த கழுதைகள், மக்களை கேனயர்களாக்கியபடி முதுகு சொறிகின்றனர். பேரினவாத மற்றும் ஏகாதிபத்திய மனிதவிரோத வக்கிரத்தையே, புலிப் பாசிசத்தின் துணையுடன் சுமப்பதே தமது உயர்ந்த இலட்சியமாக பிரகடனம் செய்கின்றனர்.


நவம்பர் 11, 12 திகதி ஜெர்மனி ஸ்ருட்கார்ட்டில் கூடிய புலியெதிர்ப்பு அரசியல் பொறுக்கிகள் எல்லாம் ஒன்றாக கூடி தமது துரோகத்தின் இருப்பைக் கனைத்துக் காட்டினர். 'இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும், புலம்பெயர்வாழ் தமிழ்பேசும் மக்களும்" என்ற பெயரில், தமது சமூகவிரோத ஏகாதிபத்திய சார்பு அரசியலை புலிப்பாசிசத்தின் பெயரில் அரங்கேற்றினர். இந்த அரங்கேற்றம் தடல்புடலாகவே வேஷம் கட்டி ஆடப்பட்ட போதும், சாம்பாறுக் குழையல் தான் விருந்தாக வழங்கப்பட்டது. இதை மக்களுக்கு உருட்டிக் கொடுப்பதே இலட்சியம் என்கின்றனர். இப்படி மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையையே, புலிப் பாசிசத்தின் துணையுடன் தான் எள்ளி நகையாடினர். எல்லா அரசியல் மோசடிக்காரர்களும் கூடினால், மோசடியான தீர்மானத்தை தவிர வேறு எதையும் அவர்களால் தரமுடியாது. இப்படித்தான் அங்கு ஒரு கோமாளிக் கூத்தே அரசியல் ஆபாசங்களாக அரங்கேறியது.


இந்தக் கூத்தில் மிக முக்கியமானது 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்றனர். இந்த தீர்மானத்தினுள்ளேயே முரண்பாடும், இதுவே ஒரு மாபெரும் அரசியல் மோசடியுமுண்டு. அரசியல் ஆபாசத்தைத் தவிர இது வேறு எதுவுமல்ல. இதை எல்லா அரசியல் பொறுக்கிகளும், பொறுக்குவது எப்படி என்று கூடிக் கனைத்து பின் வைத்தனர். பாசிச புலிகளும், அவர்களுக்கேற்ற கோயபல்ஸ் தமிழ்செல்வனும், இந்த புலியெதிப்பு பொறுக்கிகள் முன்னால் கையேந்தி பிச்சை எடுக்கலாம. அவ்வளவு மோசடித்தனமானது.


இந்த தீர்மானத்தை இந்துமத சாதிய பாசிச தர்மகர்த்தாக்கள் முதலாய் தலித்தியவாதிகள் ஈறாக ஆதரித்து ஒன்று கூடி முன்வைத்தனர். இப்படி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட 10 அம்ச அறிக்கையில் உள்ள இந்த விடையம், மாபெரும் அரசியல் மோசடித்தனம் என்பதை அனைவரும் தெளிவாக அறிவர். அதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். மக்களின் அடிப்படைப் பிரச்சனை இதற்குள் இருப்பதாலும், மக்களின் அரசியல் கோரிக்கைகள் இதற்கு வெளியில் இல்லையென்பதாலும், இதை நன்கு திரித்து அரங்கேற்றும் இந்த மோசடியை துணிந்து முன்வைக்கின்றனர். இதில் கூடிக் கனைத்தவர்கள் யாரும் இதற்காக உண்மையாக நேர்மையாக போராடுபவர்கள் கிடையாது. அதற்கான ஒரு அரசியல் பார்வையைத் தன்னும் கொண்டிருப்பது கிடையாது. இந்த புலியெர்திர்ப்பு அரசியல் பொறுக்கிகள், இந்த கோசத்துக்காக உண்மையாக நேர்மையாக கருத்துரைப்பது கிடையாது. இந்த கூட்டத்தின் முக்கிய பங்காற்றிய ஒரு சிலரின் கருத்துகள், தமது சொந்த பிரகடனத்துக்கு எதிராக இருப்பதை, இந்த போலிப் பிரகடனம் தடுத்து நிறுத்தவில்லை.


புலிகளினதும், பேரினவாதிகளினதும் அரசியல் மோசடியை விட, தாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்களல்ல என்பதையே மக்களுக்கு நிறுவிக்காட்டினர். நாங்கள் தமிழ்மக்களின் தலையில் ஏறியிருந்தே மொட்டை அடிக்கும் கயவாளிப் பயல்கள் தான் என்பதையே, மீண்டும் தமது சொந்தக் கனைப்பு மூலம் உறுதிப்படுத்தினர்.


'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்ற இந்தத் திரிபுவாத தீர்மானத்தை முன்கொண்டு வந்த ஆனந்தசங்கரி, அரசியலில் கடைந்தெடுத்த அரசியல் போக்கிரி. அதையே மறுபடியம் நிறுவிக் காட்டியுள்ளார். தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்த ஒரு பிழைப்புவாத சுயநலக் கட்சியைச் சேர்ந்த ஒருவர். பிரபாகரனுக்கும், அவரின் புலிக்கும் அ, ஆ அரசியல் கற்றுக் கொடுத்த ஒரு கட்சியின் முக்கியஸ்த்தர். புலிகளை தமது கட்சியின் அரசியல் ரவுடிகளாக வளர்த்து, யாரை சுட வேண்டும் என்று ஆள்காட்டி படுகொலைகளையே தொடக்கி வைத்த ஒரு கட்சிக்கு இன்று தலைவர். அகிம்சை வேடம் போட்ட ஒரு பச்சோந்தி புலி. எந்த அரசியல் சுயவிமர்சனமும் செய்யாதவர்கள். சுயவிமர்சனம் செய்ய மறுப்பவர்களில் புலிக்கு முன்னோடிகள் மட்டுமின்றி, பாசிச வழிகாட்டிகள் கூட. புலிகளுக்கு அ, ஆ பாசிச அரசியலைக் கற்றுக்கொடுத்ததுடன், அவர்களுக்கு பாசிச சோறூட்டி தாலாட்டி வளர்த்தவர்கள். இன்றைய சகோதர மனித அவலங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் புலிகள் அல்ல, கூட்டணியே.


இதற்கு துணையாக இருந்த இந்தக் கயவாளிப் பயல், மீண்டும் ஒரு அரசியல் மோசடியாக கொண்டு வந்த தீர்மானம் தான் 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுத"லாகும். மீண்டும் ஒரு மாபெரும் அரசியல் மோசடி இது. இதைவிட்டால் வேறு அரசியல் கிடையாது. இந்த மோசடித் தீர்மானம் கடந்தகாலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளினதும், இயக்கங்களினதும் சொந்த தீhமானங்களிலும் தூசிபடிந்தபடி இருப்பதை நாம் காணமுடியும். அதில் இருந்து இது எந்தவிதத்திலும் வேறுபடவில்லை. அன்று அவற்றுக்கு கனவுப+ர்வமாக நம்பிக்கையையும் விளக்கத்தையும் அப்பாவித்தனமாக வழங்கக் கூடியதாக இருந்தது. இன்று இதை புலிப்பாசிசத்தின் அரசியல் துணையுடன், குழைத்து மக்களின் வாய்க்குள் அடைக்கின்றனர்.


இதில் கலந்து கொண்டு இதற்கு ஆதரவாக கனைத்தவர்கள் எல்லாம், இதற்கு எதிராக படுகொலைகளை நடத்தியவர்கள். இப்படி இதில் கலந்துகொண்டு, இந்த தீர்மானத்தக்காக கனைத்தவர்கள் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி), டெலோ (ஸ்ரீசபாரட்ணம் அணி) ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.டி.பி" என்று அனைத்து மக்கள் விரோதக் கும்பல்கள் தான் இதை அமுல் நடத்தப் போவதாக கூறுகின்றனர். இந்தக் கும்பல் நடத்திய உட்படுகொலைகள் முதல் பகிரங்க படுகொலைகள் வரை பெரும்பாலானவை 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" சமுதாயத்தைக் கோரியவர்களையே, பொறுக்கியெடுத்து கொன்றொழித்ததாகும். ஒரு சுயவிமர்சனம் கிடையாது. இவர்கள் சுயவிமர்சனம் செய்யமறுப்பது, அவர்கள் '..ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்" என்ற அடிப்படையில், இதை மோசடியாக திரித்து ஏற்க மறுத்தால் தானோ? எப்படித்தான் இந்த அரசியல் போக்கிரிகள் சுயவிமர்சனம் செய்வார்கள். இவர்களால் எப்படித்தான் மக்களுக்காக போராடமுடியும்.


இதனால் 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" ஒரு சமூகத்துக்காக போராடியவர்களுக்கு ஒரு அஞ்சலி, அவர்களை முன்னிலைப்படுத்திய ஒரு அரசியல் முன்முயற்சி எதுவும் கிடையாது. மக்களுக்கு எதிரான செயலையே, இழிவான வகையில் அன்றாட அரசியல் வாழ்வாகக் கொண்டவர்கள் தான் இவர்கள். இந்த தீர்மானத்துக்கு எதிராகவே அனுதினமும் முக்கியபடி இருப்பவர்கள் புலிகள் அல்ல, இவர்களே.


இந்த அரசியல் போக்கிரிகளுடன் முன்னைய இலக்கிய சந்திப்பு பிதாமக்களும் கூடிக்கொண்டனர். கா கா என்று கத்திய தலித்துகள், உலகமயமாதலுக்காக புலம்பிய பின்நவீனத்துவவாதிகள், முதலாளித்துவ சீரழிவை ஆதரித்த அமைப்பியல் மறுப்பாளர்கள், அரசியலை மறுத்த இலக்கிய குஞ்சுகள், மார்க்சியத்துக்கு திருத்தம் கொடுத்த பிழைப்புவாதிகள் என்று, எல்லா அன்னக்காவடிகளும் சேர்ந்து இந்த தீர்மானத்தை முன்மொழிந்தனர். அதை '..ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்" மூலம் 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" அமைப்பை உருவாக்கப்போகின்றராம். இந்த அரசியல் மோசடியை நம்புங்கள்.


புலியைத் தவிர்த்த எல்லா மனிதவிரோதிகளும், மனித விரோதத்தில் தமக்குள் முரண்பட்டபடி இதற்காக ஒன்றுபட்டு கையுயர்த்தியுள்ளனர். தமிழ் மக்களை ஏமாற்றி, அதில் அரசியல் செய்யும் இவர்கள், நடைமுறையில் இந்த தீர்மானத்துக்கு எதிராகவே வாழ்கின்றனர். மக்களின் அடிப்படை பிரச்ச்னையை தீர்மானமாக காட்டி, மக்களை ஏமாற்றுவதே இந்த பொறுக்கி அரசியலின் அரசியல் கலையாகும்.


'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு" என்கின்றீர்கள். எப்படி? எந்த வழியில்? இது ஒரு அடிப்படையான கேள்வி. இதற்கு சாத்தியமான நடைமுறை விளக்கமின்றி கோசமாக அதையும் திரித்து வைப்பது மோசடித்தனமானது. அத்துடன் இதை '..ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்" என்று கூறுவது அதை விட மோசடித்தனமானது. ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான், அதுவும் மக்களை சார்ந்தே நின்று தான் செய்ய முடியும். அதுவும் நிச்சயமாக ஏகாதிபத்திய எதிர்ப்பை, பேரினவாத எதிர்ப்பை, சமூக முரண்பாட்டின் மீதான மக்களின் எதிரியை தெளிவுபடுத்த மறுக்கின்ற அனைத்தும் மோசடித்தனமானது. மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் வழியில் மட்டும் தான், இது குறைந்த பட்சம் சொல்லளவில் கூட உண்மைப்பட்டதாக இருக்கும். எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும், இவர்கள் இதற்கு எதிரானவர்கள் என்பது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத, பேரினவாதத்தை எதிர்க்காத, நிலப்பிரபுத்துவ தரகு முதலாளிகளை எதிர்க்காத இவர்கள், எதிரி யார் என்பதைக் குறிப்பிடாத இந்தத் தீர்மானம் கடைந்தெடுத்த அரசியல் மோசடியாகும். எதிரியற்ற போராட்டத்தில் புலியெதிர்ப்பில் இதைச் சாதிக்கப்போகின்றனர். சுயபுத்தியற்ற உங்கள் மலட்டுத் தனத்தில் இந்த மோசடியை நம்புங்கள்.


இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு" என்கின்றனர். அதை 'ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்கின்றனர். எப்படி? யாராவது விளக்கம் தரமுடியமா? கடைந்தெடுத்த ஒரு மோசடி அல்லவா! தமிழ் மக்கள் காதுக்கு பூ வைக்கவே, எம்முடன் எம் மோசடியுடன் சேர்ந்து வாருங்கள் என்கின்றனர். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுதலிக்கும் இந்த அரசியல் பொறுக்கிகள், 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" ஒரு அமைப்புக்காக 'ஐக்கிய இலங்கைக்குள்" என்று கவனமாக ஒரு நிபந்தனை போடுகின்றனர். மோசடியைச் செய்வதிலும் கூட ஒரு நுட்பம்.


ஏகாதிபத்தியம் என்ன சொல்லுகின்றதோ, பேரினவாதம் எதை நினைக்கின்றதோ, அதை கிளிப்பிள்ளை போல் பின்பக்கத்தால் மோசடித்தனமாக தீர்மானமாக்குகின்றனர். அது அம்பலமாகாது இருக்க, எல்லா அரசியல் பொறுக்கிகளையும் ஒன்றிணைக்கவும், அழகுபடுத்தி அதை அலங்கரித்து விபச்சாரம் செய்ய 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற" என்ற சொற்களை இணைத்துவிடுகின்றனர். இப்படி போடுவதன் மூலம், ஏதோ சொந்த தீர்மானம் போல் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்ற நினைப்பு. கழுதைகள் கூடி கனைப்பதற்கு இதுவே பாலமாக அமைகின்றது. மனித அவலத்தை நகைச்சுவையாகவே வேடிக்கையாக்கினர்.


இந்த மோசடிக்கு தூணாகவும் துணையாகவும் விளங்கும் ரீ.பீ.சீ ஆய்வாளர் சிவலிங்கமோ, கடைந்தெடுத்த மோசடியை இதற்கு எதிராகவே செய்கின்றார். புலிகள் 'மேதகு தலைவர்", 'தேசியத் தலைவர்" என்று கூறுவது போல், புலியெதிர்ப்புக் கும்பல் 'ஆய்வாளர்" என்று பட்டம் சூட்டியதுக்கு இணங்கவே இதைச் செய்கின்றார். அதை அவர் 'மாற்று அரசியலை நோக்கிய பார்வை" என்ற தலைப்பில் மனித உரிமையையே, தனது விபச்சார அரசியல் வக்கிரத்துக்குள் திரித்துவிடுகின்றார். கைதேர்ந்த அரசியல் மோசடியை, தமிழ் மக்களின் முதுகில் குத்தியே அரங்கேற்றுகின்றார். இவர்களின அரசியல் மோசடித் தீர்மானம் கூறுகின்றது. 'இன, மத, மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு காணுதல்." என்கின்றது. ஆனால் இந்த தீர்மானத்துக்கு கையுயர்த்திய சிவலிங்கம், தனது திரிபுவாதத்தில் 'முழு அளவிலான சமஷ்டித் திட்டங்கள் சாத்தியமில்லாத போதிலும் சமஷ்டி வடிவிலான தீர்வுகளை நோக்கிச் செல்லும் வகையில் ஆட்சி அதிகாரம் படிப்படியாக திருப்பப்பட வேண்டும்" என்கின்றார். யாருடன் சேர்ந்து? எப்படி? இது எப்படி 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூதாயத்தை உருவாக்கும். இவர்கள் நம்பும் 'முழு அளவிலான சமஷ்டித் திட்டங்கள் சாத்தியமில்லாத போதிலும்" என்று கூறுவதன் மூலம், மக்களை இழிச்சவாயன்கள் என்று கூறுகின்றார்.


தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையே மறுக்கும் இவர்கள் அரசியல், புலியின் அரசியல் எல்லைக்கு உட்பட்டதே. புலிக்கு பதில் சொல்லும் இவர்களின் அரசியலும் ஆய்வும், ஏகாதிபத்தியத்தையும் பேரினவாதத்தையும் திருப்தி செய்யும் எல்லைக்கு உட்பட்டதே.


ரீ.பீ.சீயில் விதண்டாவாதம் கதைக்கும் புலிக்கும், புலியெதிர்ப்பு பந்சோந்திகளின் வாலாட்டாலுக்கு ஏற்ப அரசியல் செய்வதே, சிவலிங்கத்தின் அரசியலாகின்றது. இதை மக்களுக்கு செய்யமுடியாது. மக்கள் கோருவது 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூகத்தைத் தான். இது உங்கள் கோசமல்ல. மக்களின் கோசம். அதை மோசடித்தனமாக திரித்து உங்களின் பின்னால் ஒட்டுகின்றீர்கள். நீங்கள் 'முழு அளவிலான சமஷ்டித் திட்டங்கள்" என்கின்றீர்கள்! சரி அது என்ன? மாங்காயா? கத்திரிக்காயா? இது சாத்தியமில்லை! என்கின்றீர்கள்? அப்படியானால் நீங்கள் ஏற்ற தீர்மானம் என்ன? அதை சாத்தியமற்றது என்று எப்போது திருத்துவீர்கள்? ஐயா மோசடிக்கார ஆய்வாளர்களே கூறுங்கள்!


இந்த சிவலிங்கம் என்ற புலியெதிர்ப்பு ஆய்வுக் குஞ்சு சொல்லுகின்றார் 'சுயநிர்ணய உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாகும். மக்கள் தமது சுய விருப்பங்களை வெளிப்படுத்தும் வகையில் சுயமாகவும், சுதந்திரமாகவும், தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும்." எதற்கு உலகளவில் உள்ள சுயநிர்ணயம் பற்றிய கோட்பாட்டை திருத்த கோரவேண்டும். இதையும் ஒரு தீர்மானமாக வைத்திருக்கலாம். ஏகாதிபத்தியத்திடம் இதற்காக ஒரு பரிசை கொடுக்க சிபார்சு செய்த ஒரு தீர்மானத்தையும், இந்தக் கழுதைகள் எடுத்திருக்கலாம். ஆனந்தசங்கரிக்கு மட்டுமா இல்லை, சிவலிங்கத்துக்கும் ஒன்றைக் கோரியிருக்கலாம்.


ஆனந்தசங்கரி பல பத்து இலட்சம் பெறுமதியான யுனேஸ்கோ பரிசை வாங்கிய போது, ஐந்து நாட்களுக்கு முந்தைய தனது தீர்மானத்துக்கு அமைய, அதை அடைவது பற்றிய கொள்கை உரு விளக்கத்தை முன்வைக்கின்றார். 'விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகளிலிருந்து இலங்கையிலுள்ள தமிழ் மக்களை மீட்டெடுக்க உதவும்படி சர்வதேச சமூகத்திடம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்." என்றார். இது எப்படி 'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூகத்தை பெற்றுத் தரும். சரி ஏகாதிபத்தியம் பெற்றுத் தரும் என்றே கூறுகின்றார். நீங்கள் யாராவது எதையாவது சொல்ல விரும்புகின்றீர்களா!


அந்த அரசியல் மோசடிக்காரன் அதனுடன் நிற்கவில்லை. 'ஜனநாயக ரீதியாகவும், சாத்வீக வழிகளிலும் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் எனது சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாக இருந்தது என்று கூறலாம்." இந்த பரிசை தந்ததன் மூலம், ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் செயலை மெச்சி மெய்சிலிர்த்து குறிப்பிடுகின்றார். அதைத் தொடர வாக்குறுதி அளிக்கின்றார். "அனைவரின் தேவைக்கும் உலகில் இடமுண்டு. ஆனால் அனைவரின் பேராசைக்கும் உலகில் இடமில்லை" என்கின்றார். "அனைவரினதும் தேவைக்கும் இடமுண்டு" என்கின்றார், ஆனால் தேவை மறுக்கப்பட்ட சமுதாயமே ஜனநாயகம். பேராசை தான் ஜனநாயகம். இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு எந்த விளக்கமும் கிடையாது. சிலரின் பேராசைக்குத் தான் இடமுண்டு, அதைத் தான் அவர் 'அனைவரின் பேராசைக்கும் உலகில் இடமில்லை என்கின்றார். இவர் எப்படி 'இன, மத, மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூதாயத்தை உருவாக்குவார்?


இப்படி எல்லா மோசடிக்காரர்களும் கூடி தத்தம் சொந்த விளக்கத்தையே வழங்குகின்றனர். சிவலிங்கம் கூறுகின்றார் சுயநிர்ணயம் என்பது 'தமது வாக்குகளைப் பகிரங்கமாக தேர்தலில் இணைந்து வெளிப்படுத்துவதும் சுயநிர்ணய உரிமையாகும்." என்று கூறுகின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுப்பதில் புலிக்கு நிகர் நாங்களே என்கின்றார். புலிகள் நாலடி பாய்ந்தால் நாங்கள் பத்தடி பாய்ந்து மக்களை ஏறி மிதிப்போம் என்கின்றார். புலிகள் சுயநிர்ணயம் என்பது புலிகள் ஆட்சி என்கின்றனர். புலியெதிர்ப்பு கும்பல் தேர்தலில் இணைந்து வாக்கு போடுவது தான் சுயநிர்ணயம் என்கின்றனர். 1980க்கு முன்னம் மக்கள் வாக்கு போட்டதால் சுயநிர்ணயம் இருந்தது என்கின்றார். அதை புலிகள் இல்லாது ஆக்கிவிட்டனர் என்பதே, சிவலிங்கத்தின் நவீன சுயநிர்ணய ஆய்வு கூறுகின்றது. மக்கள் மீண்டும் வாக்கு போட்டால் சுயநிர்ணயம் வந்து விடுமோ? சுயநிர்ணயம் என்ன உங்கள வீட்டு கத்திரிக்காயா? இப்படி கத்தரிக்காயாக்கி கறிவைக்க முனைகின்றார். அவர் தனது மோசடி ஆய்வில் கூறுகின்றார் 'மக்களின் இறைமை அதிகாரம் வாக்குச் சீட்டின் மூலம் பிரயோகிக்கப்படுகிறது" என்கின்றார். போடு புள்ளடி என்கின்றார். மக்களின் இறைமை 'இன, மத, மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" அமைப்பு அல்ல, வாக்குச் சீட்டே என்கின்றார். சுயநிர்ணயம் என்பது வாக்குச் சீட்டு தான் என்கின்றார். புள்ளடி போட்டால் மக்களின் இறைமை வந்துவிடும், நல்ல வேடிக்கை தான் போங்கள். அவர் நினைக்கின்றார் புலிகள் போன்ற ஐந்தறிவு தான் மக்களுக்கு இருகென்று நினைத்து, ஆய்வுரை செய்கின்றார்.


'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" சமூகம் வேண்டுமா?


1.சாதிபேதமற்ற அமைப்புக்கு ஒரு புள்ளடி!


2.பெண்ணியத்துக்கு ஒரு புள்ளடி!


3.வர்க்க அமைப்புக்கு எதிராக ஒரு புள்ளடி?


4.இனபேதத்துக்கு எதிராக ஒரு புள்ளடி?


கோரிக்கை ஒன்றை நாம் முன்மொழிகின்றோம். சமூக முரண்பாட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில், மக்களுக்கு புள்ளடி போட்டு எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன? இதை தீர்மானத்தில் பதினொன்றாவதாக சேர்க்கவும். எல்லா பிரச்சனையையும் வாக்கு போட்டு தீர்த்துக்கொள்ளமுடியும் அல்லவா? எதற்கும் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பெரிய நாமமாக மக்களின் நெற்றியில் போட்டுவிட வேண்டியது தான். அந்தப் புள்ளடியே போதும்.


'இன, மத ,மொழி, சாதிய, பால், வர்க்க பேதமற்ற சமத்துவ" அமைப்பை உருவாக்கிவிடுவோம் நம்புங்கள் என்கின்றனர். ரீ.பீ.சீ சதா இதையே கதையளக்கின்றனர். 'மக்களின் விருப்பமும், அங்கீகாரமுமே அரசின் ஆட்சி அதிகாரத்திற்கான இருப்பாகும்." என்கின்றனர். அரசு, அதிகாரம், பற்றியும் ஆட்சி பற்றி விளக்கம் மக்களுக்கு எதிரானதும், மிககேவலமானதும் இழிவானதுமாகும். புலிகளை விட மிகக் கேவலமாக தமிழ் மக்களின் தலையில் அரைப்பதாகும். புலிகள் புலி ஆட்சியை தமிழ் மக்களின் விருப்பு என்கின்றனர். இந்த கயவாளிப் பயல்கள் ஏகாதிபத்திய ஆட்சியை மக்களின் விருப்பு என்கின்றனர்.


இந்த அரசியல் மோசடிக்காரன் முன்னைய வரலாற்றில் இருந்து, அதன் நோக்கில் இருந்து திருடி திரித்தபின் கூறுகின்றார் 'பேச்சு, எழுத்து சுதந்திரம், கூட்டம் கூடுதல், இணைதல் போன்ற உரிமைகளை எக் காரணத்தை முன்வைத்து மறுத்தாலும் அது அம் மக்களின் சுயநிர்ணய உரிமையை மீறுதலாகும்." இந்தக் கோரிக்கை முன்பகுதி எம்மால் 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முன்வைக்கப்பட்டது. பரந்துபட்ட மக்கள் மத்தியில் எங்களால் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு அரசியல் கோரிக்கையாகும். இதை சுயநிர்ணயம் என்று திரிக்கின்ற வக்கிரத்தை சிவலிங்கம் செய்து முடிக்கின்றார். சுயநிர்ணயம் என்பதை திரிப்பது, அவர்களின் அரசியல் எஜமானர்களின் தேவையாக உள்ளது. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை அரசினதும் அடிப்படைப் பிரச்சனை, பாசிச புலிகள் மூலம் சுயநிர்ணயத்தை மறுப்பது தான். அதை திரிப்பது தான் புலியெதிர்ப்பு அரசியலின் உடனடிக் கடமையாக உள்ளது. இதுவே களவாளிப்பயல்களின் அரசியலாகின்றது. அன்று பல்கலைக்கழக மாணவர்களாகிய (தலைமை தாங்கி வழிகாட்டியவர்களில் எனது பங்கு தனித்துவமானது) நாம் இந்தக் கோரிக்கையை வைத்த போதும், நாம் சுயநிர்ணயத்தை தெளிவாக உயர்த்தி நின்றோம்.


இந்தக் கோரிக்கை சுயநிர்ணயதுக்குள் அடங்கி உள்ளதே ஒழிய, இதுவே அனைத்தும் தழுவிய சுயநிர்ணயமல்ல. சுயநிர்ணயம் என்பது மக்கள் தமது சொந்த பொருளாதார சுரண்டலற்ற ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதும், அந்த அமைப்பில் அனைத்து சமூக முரண்பாடுகளை களைவதையும் அடிப்படையாகக் கொண்டதே. தமது தேசியபொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட, பண்பாட்டு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு, அதற்கு எதிரான அனைத்தையும் எதிர்த்து நிற்றல் தான் சுயநிர்ணயம். எதிரி பற்றி தீர்மானகரமான நடைமுறை செயற்பாட்டில், மக்கள் பெறும் சொந்த சமூக பொருளாதார அதிகாரத்தில் தான் சுயநிர்ணயம் பிறக்கின்றது. இதற்கு வெளியில் அல்ல.


www.tamilcircle.net