தமிழ் அரங்கம்

Showing posts with label பசியால். Show all posts
Showing posts with label பசியால். Show all posts

Tuesday, June 17, 2008

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்” -திருமதி மங்கையற்கரசி அம்மையார்

நீங்கள் சுட்டுவிரலை நீட்டி யார் யார் துரோகிகள் என வரையறுத்தீர்களோ வீராவேசப் பேச்சில் நரம்பு முறுக்கேற உணர்ச்சிப் பிழம்பாக்கி இரத்தத்திலகமிட்டு தம்பிகளை அண்ணன் அமிர் தளபதியாக விடுதலைக்களத்தில் முளைத்தெழுந்த ”களைகளை” துடைத்தெறிந்து விடுதலையை வென்று வாருங்கள் சிங்களவன் தோலைக் கொண்டு வாருங்கள் செருப்பாய் அணிகின்றேன் என்றெல்லாம் வெறியூட்டி ” ”ஓடையிலே என் சாம்பல் ஓடும்போதும் ஒண் தமிழே சலசலத்து ஓட வேண்டும்” ”பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும்” என கீதங்கள் பாடி அனுப்பி வைத்து எதைச் செய்யச் சொன்னீர்களோ தூண்டினீர்களோ அவற்றையே தான் அவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். அன்று உங்கள் ஆணையில் இருந்தார்கள். இன்று இல்லை.

உங்கள் சுட்டுவிரல் ஏவியது. ”உங்கள் பெடியள்” சுட்டுவிரல்கள் நீங்கள் காட்டிய திசையில் துப்பாக்கியை இயக்கியது. இயக்கி உங்கள் அரசியல் எதிரிகளை துடைத்தெறிந்தார்கள். இதுவே தான் ஆரம்பம் என்பது நீங்கள் புரியாததல்ல. அன்று சுடும் உத்தரவை ”பிறப்பிக்கும்” உங்கள் மேடைப் பேச்சுக்கள் உருவாக்கிய ”வளர்த்த கடாக்கள்” இன்று வேலி தாண்டி விட்டனவே என்ற ஆதங்கமா உங்களுக்கு. உங்கள் வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் ”வளர்த்த கடா உங்கள் மார்பில் பாய்ந்தது” மட்டுமல்லாமல் விடுதலை என்றும் தோட்டப்பயிரை துவம்சம் செய்து நிற்பதிலும் உங்களுக்கு பங்குண்டு என்பதும் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அவற்றையெல்லாம் பேசிக் கொள்ளாமல் மூடி வைத்துவிட்டு மீண்டும் அரசியல் மேடைக்கு வரும் கரிசனை இப்போது தங்களுக்கு ஏற்பட்டது ஏனோ?

ஒருவேளை உங்களுக்கு அதே அரசியல் மேடை இன்றும் இருந்திருந்தால் உங்கள் கட்டளைக்கு அவர்கள் துப்பாக்கிகள் குறிபார்க்கும் நிலைமையும் இருந்திருந்தால் இன்று நடப்பவை யாவும் ” வெறும் களையெடுப்புகளாவும் விடுதலைப் பாதையில் முளைத்த தடைக்கற்கள் எனவும் உங்கள் பாசையில் துரோகிகளாகவும் நீங்கள் தளபதிகளாகவோ விடுதலை வீராங்கனையாகவோ வலம் வந்திருப்பீர்கள். நதியின் ஊற்று ஓடும் நதியை பார்த்து நீ எங்கிருந்து பிறப்பெடுத்தாய் என்று கேட்க முடியுமா?

தேசமும் ராஜேஸ் பாலாவும் மீண்டும் உங்களை தூசு தட்டி தூய்மையானவர்களாக ஏன் தூக்கி நிறுத்துகிறார்கள் ?
.