தமிழ் அரங்கம்

Showing posts with label சிறுவர். Show all posts
Showing posts with label சிறுவர். Show all posts

Saturday, January 23, 2010

தாமி

சிறார் கைதிகளின் அவலம் குறித்து HARD TIME என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தவர் கைலி கிரே என்னும் பெண்மணி. இப்படம் இருளில் தவிக்கும் சின்னஞ்சிறு பூக்களின் கருகல் வாசனையைப் பதிவு செய்திருக்கிறது. தாமி போன்ற பல்வேறு சிறுவர்களை முன்வைத்து இப்படம் எடுத்த சூழல் பற்றி அல்ஜசீரா இதழுக்கு விரிவாக விவரிக்கிறார்.

thami

தெற்கு “பிலிப்பைன்ஸ்ஸிலுள்ள செபு நகர சிறையில் அடைக்கப் பட்டிருந்த சிறுவர்களைக் கண்டு உரையாடி, அவர்களது அவலங்களை பற்றி ‘ஹார்டு டைம்’ என்ற படத்தை எடுத்தவர் இயக்குநர் கைலி கிரே. அப்படம் உருவான விதம் பற்றியும், சிறார் கைதிகளின் இதயத்தை நொறுக்கும் கதைகளுக்குப் பின்னாலுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதில் அவர் பேசுகிறார்

சர்வதேச வளர்ச்சி என்ற பாடத்தில் எம்.ஏ பட்டம் பெறநான் படித்துக்கொண்டிருந்த போது, பிலிப்பைன்ஸில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். செபு நகர சிறையில் வாடும் சிறுவர்களுக்காக இலவசமாக வாதாடும் சட்டநிபுணர் நினா வேலன்ஸோனாவை எனது விரிவுரையாளர் அப்போதுதான் சந்தித்திருந்தார். அக்குழந்தைகளின் கதை எனது மனதைவிட்டு அகற்றவே முடியவில்லை.

thami2

தெற்கு „பிலிப்பைன்ஸ்ஸிலுள்ள செபுநகர சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களைக் கண்டு உரையாடி, அவர்களது......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, June 18, 2008

குப்பையாகிப் போன வாழ்க்கை : குப்பையைக் கிளறித் தினியைத் தேடும் கோழியைப் போல வாழும் சிறுவர்களின் அவலக் கதை.

பெருங்குடியின் குப்பை மலையில் அதிகாலையிலேயே கையில் கோணிப்பையுடன் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் கண்ணகி எனும் 8 வயதுச் சிறுமியும் குணா போன்ற பதின்வயதுச் சிறுவர்களும் தினமும் இம்மலையினைக் குடைந்தால்தான் அவர்களுக்கு 20 ரூபாயாவது கிடைக்கிறது. பகலில் எப்போதும் இவர்களைப் போலக் குறைந்தது நூறு சிறுவர்களாவது பெருங்குடிக் குப்பை மலையில் கையில் குப்பை கிளறும் குச்சிகளுடன் அலைகிறார்கள்.

உயிருக்கே உலை வைக்கும் மருத்துவமனைக் கழிவுகளான பேண்டேஜ்கள், அழுகிய சதைத் துண்டுகள், தூக்கியெறியப்படும் ஊசிகள், இரசாயனக் கழிவுகள் என எண்ணற்ற அபாயங்களுடன், எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேட்டில் இச்சிறார்கள் அலைந்து திரிவதால் கை கால்கள் எல்லாம் ஆறாத புண்களுடனும், தீராத இருமல்களுடனும் இவர்களின் இளமை, மொட்டிலேயே கருகி நிற்கிறது. புகை மூட்டத்தினூடே, குப்பைகளைக் கொட்ட வரும் லாரிகளில் அடிபட்டு மாண்ட சிறுவர்கள் பற்றி எல்லாம் வெளியே தெரிவதே இல்லை.

இதே சிங்காரச் சென்னையில் மேட்டுக்குடிக் குழந்தைகள் சனி, ஞாயிறுகளில் சுகமாய் ஓய்வைக் களிப்பதற்கென்றே மாநகரைச் சுற்றிலும் கேளிக்கைப் பூங்காக்கள், வீடியோ கேம்ஸ் மையங்கள், அமெரிக்க இனிப்புச் சோளத்தை கொறித்தபடி வலம் வர சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா என எண்ணற்ற கேளிக்கை மையங்கள் உள்ளன. இக்குழந்தைகள் விளையாடுவதற்கான விலை உயர்ந்த பொம்மைகளை விற்க அரசே கண்காட்சி நடத்துகிறது. தன் செல்ல மகளிடம், அவளுக்குப் பிடித்த பொம்மையை என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்கிச் செல்லும் தாய்மார்கள் உள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் கண்டுகளிக்க ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கிச் சென்று ஊளையிட்டு ரசிக்கின்றனர் மேல்தட்டு வர்க்கச் சிறார்கள். சேப்பாக்கத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ள மெரீனா கடற்கரையில் அதே வயதொத்த சிறார்களோ தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக பட்டாணி, சுண்டல் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
சிங்காரச் சென்னை மட்டுமல்ல,
.