தமிழ் அரங்கம்

Showing posts with label பயங்கரவாத. Show all posts
Showing posts with label பயங்கரவாத. Show all posts

Saturday, July 19, 2008

கொம்பனித் தெரு சம்பவம் புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர்

கொம்பனித் தெரு சம்பவம் : புலிகளின் பெயரில் தான், நாட்டை அன்னியனுக்கு விற்கின்றனர், மக்களின் வாழ்விடங்களையும் கூட அன்னியனுக்காக தரை மட்டமாக்குகின்றனர்.

இலங்கையில் நடப்பது இதுதான். 'பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில் பணம் சம்பாதிப்பது ஒருபுறமாயும் நாட்டின் தேசியவளத்தையும் மக்களின் அடிப்படை வாழ்வையும் விற்பது மறுபுறமாயும் அரங்கேறுகின்றது. 'புலிப்பயங்கரவாத ஒழிப்பின்" பெயரில், பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து சம்பூர் பிரதேசம் இந்திய வல்லாதிக்கத்திடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இதே போல் கொம்பனித் தெருவில் வசித்த 600 குடும்பங்களின் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டு, அவர்கள் 'பயங்கரவாத ஒழிப்பு" இராணுவத்தால் நிர்க்கதியாக அடித்துத் துரத்தப்படுகின்றனர். இவை எல்லாம் யாருக்காக? யாருடைய நலனுக்காக? மக்களின் நலனுக்காகவா எனின், நிச்சயமாக அதுவல்ல. மாறாக பணம் கொழுத்தவன் மேலும் கொழுப்பதற்காகத் தான்.

முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்