தமிழ் அரங்கம்

Saturday, January 16, 2010

அரசியற் குறிப்புகள் (மார்கழி-09 – தை-10)

ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நிகழும் என்ற எதிர்பார்ப்புக்கு இம்மாதத் தொடக்கத்தில் பதில் கிடைத்திருந்தது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இத் தேர்தலில் மகிந்தாவும் எதிரணி பொது வேட்பாளராக சரத்தும் போட்டியிடுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. புலிகளையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட்டியது தாம் தான் என இருவரும் உரிமைகோரும் போட்டிப்பலத்துடன் களத்தில் குதித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியவில்லை என்பதால் இரு வருடத்துக்கு முன்னரே தான் தேர்தலை வைப்பதாக தமிழ் மக்களின் மனங்களை லேசாகத் தொட முயற்சிக்கிறார் மகிந்தா. கடந்த தேர்தலில் புலியுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை நயிசாக மென்று விழுங்கியும் விடுகிறார்.

சரத்தோ தானேதான் களத்தில் நின்று போராடி புலிப் பயங்கரவாத்தை ஒழித்தவன் என்றும் ஆனாலும் மனிதாபிமானம் இல்லாமல் புலிகளைக் கொன்றது தனக்குத் தெரியாது என்று கைகளைக் கழுவி சுத்தம் செய்து விடுகிறார். தான் ஜனாதிபதியாக வந்தால் இவற்றுக்கு விசாரணை நடத்துவேன் என்று தன்னை நிரபராதியாகக் காட்டியும் விடுகிறார். உண்மையில் சரத் புலிகள் கொல்லப்பட்ட அடுத்த நிமிடம் தனது பதவியைத் துறந்திருந்தால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் ஏதாவது இருந்திருக்கும். யுத்த காலத்தில் சிறுபான்மை இனங்கள் இந்த நாட்டில் வாழலாமே தவிர உரிமைகளைக் கோர முடியாது என்று சொன்னது ஒருவேளை இராணுவ நாக்காக இருந்திருக்குமோ தெரியாது.

புலிகள் இருந்த காலத்தில் ஆளும் எதிர் மற்றும் யேவிபி கட்சிகளின் வாக்கு வங்கிகள் புலிகள் மற்றும் தமிழ் மக்கள்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


தேர்தல் சந்தடி ஊடாக தமிழினத்தை அமைதியாக அழிக்கும் புதிய தந்திரங்கள்

யுத்தத்தை நடத்த தீர்வு பொதியைக் காட்டுவது, பேரினவாதத்தின் இனவழிப்பு தந்திரம் என்பதை அனைவரும் அறிவர். இது போல் தேர்தலை வெல்ல, தேர்தல் வாக்குறுதிகள். இதே போல் தமிழினத்தை அமைதியாக அழிக்க, அதிரடியான தேர்தல் நாடகங்கள். இந்தவகையில் முன்வைக்கும் அதிரடித் தீர்வுகள், அந்த மக்களின் இருப்பையே சிதறடித்து வருகின்றது.


யுத்தம் மூலம் தமிழ் மக்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கியவர்கள், தங்கள் யுத்தக் குற்றத்தை மூடிமறைக்க அந்த மக்களை முட்கம்பிக்கு பின்னால் பலாத்காரமாக அடைத்து வைத்தனர். இங்கு அவர்களை மூச்சுவிடக் கூட விடவில்லை. எல்லாவிதமான வன்முறையும் அவர்கள் மேல் ஏவப்பட்டது. பாலியல் வன்முறை முதல் அரச எடுபிடி குழுக்களின் கப்பங்கள் வரை பரிசாக கிடைத்தது. இதையே இந்த மக்கள் முட்கம்பிக்கு பின்னால் ஒரு வாழ்வாக அனுபவித்தனர். இப்படி அந்த மக்களை முட்கம்பிக்கு பின்னால் கூட இந்த அரசு நிம்மதியாக இருக்க விடவில்லை. எந்த சுதந்திரக் காற்றையும் சுவாசிக்க கூட அனுமதிக்கவில்லை. தமக்கு நடந்ததைச் சொல்லி புலம்பக் கூட உரிமையிருக்கவில்லை.

ஏன் இந்த முட்கம்பிக்கு பின்னால் பலர் காணாமல் போனார்கள். பலர் வாழ்விழந்தனர். பலர் நிரந்த நோயாளியானார்க...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


"லவ் ஜிகாத்" ஆர்.எஸ்.எஸ். - இன் அவதூறுக்கு நீதின்றமே பக்கமேளம்!

வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், ""அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்'' எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், ""அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்ட தாக'' ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின. குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.


ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு, அசாதாரணமான மதக்கலவரச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நகர்ந்ததையடுத்து, அனிதா காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கத் தனி போலீசு படை அமைக்கப்பட்டது. இரண்டே வாரத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்த போலீசார், ""அனிதா, மோகன்குமார் என்ற பாலியல் வக்கிரம் பிடித்த கொலைகாரனால் கொல்லப்பட்ட'' உண்மையைப் போட்டு உடைத்தனர். மேலும், மோகன்குமார் அனிதாவைப் போல 17 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிக் கொன்ற பயங்கரமும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

எனினும், முசுலீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் சதித்தனமான வெறியூட்டும் பிரச்சாரம் மட்டும் ஓய்ந்துவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புதிய பரிசோதனைச் சாலையாகக் கருதப்படும் வடக்கு கர்நாடகாவிலும், கேரளாவிலும் ""இந்து'' மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, அப்பெண்களைக் கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்ப.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Friday, January 15, 2010

விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை நாமல் ராஜபக்~ லண்டனில் சந்தித்துள்ளார்

இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்~ அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் கண்ணனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு எந்தவிதத்தில் நடைபெற்றது என்பது குறித்து உடனடியாக நாட்டிற்குத் தெரியப்படுத்துமாறு அவர்கள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை வலியுறுத்தியுள்ளனர்.

சரத் பொன்சேக்காவின் தேர்தல் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

எமில் காந்தன் மற்று...........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


முன்னாள் "இடது புலிக்கு" வாக்குப் போடக் கோருகின்றனர், "மே18" என்ற "இடது" புலிக் கும்பல்

"இது முடிவல்ல, புதிய தொடக்கம்" என்று கூறி, பன்றித் தொழுவத்துக்கு வழிகாட்டுகின்றனர். மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தால், கள்ள வாக்கு போடுவார்களாம்! தேர்தல் மோசடிகளுக்கும் வழிவகுக்குமாம்! ஆகவே மக்களே தேர்தலை பகிஸ்கரிக்காதீர்கள். மக்களே வாக்கு போட்டு எங்கள் பெட்டியை நிரப்புங்கள்! என்கின்றனர்.

தேர்தலில் வாக்குப் போட்டால் தேர்தல் மோசடிகளும், கள்ளவோட்டு போடுவதும் நடைபெறாதாம். இதனால் நாம் இந்த பன்றித் தொழுவத்தில் நிற்கும் பன்றிகளுக்கு வாக்குப் போட்டு, இந்தப் போலி ஜனநாயக மோசடியை தேர்தல் மோசடியின்றியும் கள்ளவோட்டின்றியும் பாதுகாக்க வேண்டுமாம்!

இதை "மார்க்சியத்தை"யும் பேசிக்கொண்டு, மக்களின் காதுக்கு பூ வைக்கின்றது "மே18" என்ற புலிக் கும்பல் சொல்லுகிறது. புலித்தேசியத்தை அரசியலாக கொண்ட கும்பல் "மார்க்சியம்" பேசிக்கொண்டு, இன்று தேர்தல் கடையையும் விரிக்கின்றனர். கடந்த காலத்தில் புலியின் உளவு அமைப்பாக, ஆள்காட்டி அமைப்பாக இருந்ததுடன், கேசவனை நேரடியாக காட்டிக் கொடுத்து கொன்றவர்கள் இவர்கள். இன்றும் அதே சதி அரசியல். இவர்களின் கடந்தகால அரசியல் புலியுடன் நடந்தது. நிகழ்கால அரசியல் இன்று வாக்கு போடக் கோருகின்ற அளவுக்கு, அது " கள்ள வாக்கு" ஊடாக தன்னை நியாயம் கற்பிக்கின்றது.

இவர்களால்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


விவசாயிகள் – மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்

தனியார்மய தாராளமயத் தாக்குதலை மேலும் மூர்க்கமாகத் தீவிரப்படுத்தக் கிளம்பிவிட்டனர் காங்கிரசு துரோகிகள். பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைத்துள்ள திமிரில், உழைக்கும் மக்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடவும் துணிந்துவிட்டனர்.

தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகளின் கொள்ளைக்காகவும், வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை இறக்குமதியைத் தாராளமயமாக்கவும், மாநில அரசுகளுக்குப் பெயரளவில் இருந்த அதிகாரங்களைப் பறிக்கவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்முதல் விலையைக் கொண்டுவருவது என்ற பெயரில், அக்டோபர் இறுதியில் கரும்பு விலை நிர்ணய அவசரச் சட்டத்தை மைய அரசு அறிவித்தது. கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.1298 எனத் தன்னிச்சையாகக் கொள்முதல் விலையை நிர்ணயித்து, இந்த “”நியாயஆதார” விலைக்கு மேல், மாநிலஅரசுகள் பரிந்துரை விலையை அறிவித்தால், இந்த விலை வித்தியாசத்தை மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் மீது இதைச் சுமத்த முடியாது என்று இச்சட்டம் கூறுகிறது. இதை ஏற்க மறுத்து, கரும்பு விவசாயிகளைத் திரட்டி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து, இச்சட்டத்தின் 5ஏ விதி திருத்தப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு புதிய மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த ஒரு விதியில் மட்டுமே சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர, கரும்பு விவசாயத்தையும் விவசாயிகளையும் போண்டியாக்கும் கொள்முதல் விலை மற்றும் பிறவற்றில் எந்த மாற்றமுமில்லை.

இதேபோல, மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மசோதா (2009), நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படவுள்....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Thursday, January 14, 2010

வர்க்க ரீதியான (புலிப்) படுகொலை அரசியலை மூடிமறைக்க, முன்வைக்கும் கோட்பாடு "தன்னியல்புவாதம்" (வியூகம் : பகுதி 03)

புலிகள் கொண்டிருந்த "தன்னியல்புவாதம்" தான், படுகொலை அரசியலே ஒழிய. அவர்களின் சுரண்டும் வர்க்க அரசியல்ல என்கின்றனர். தேசியத்தை வர்க்கம் மூலம் அணுகுவதே தவறானது, அதன் தோல்வியை "தன்னியல்புவாதம்" மூலமே அணுக வேண்டும் என்கின்றனர். இதைத்தான் இன்று "மே18" காரர் திட்டமிட்டு "வியூகம்" போட்டுச் சொல்லுகின்றனர். புலி மண்ணைக் கவ்விய நாளை, தங்கள் இயக்கத்தின் பெயராக கொண்டு, தாங்கள் "தன்னியல்புவாதம்" அல்லாத வர்க்கமற்ற வகையில் தொடர்ந்து தேசியத்தை முன்னெடுப்பதன் மூலம், வெற்றிகரமாக தமிழ் தேசியத்தை வழிநடத்த முடியும் என்கின்றனர்.

நாம் சென்ற தொடரில் "தன்னியல்புவாதம்" என்ற கோட்பாடு மூலம், பிற்போக்கான சுரண்டும் வர்க்க தமிழ் தேசியத்தை எப்படி "மே18"காரர்கள் நியாயப்படுத்துகின்றனர் என்ற அரசியல் சூக்குமத்தைப் பார்த்தோம். சுரண்டும் வர்க்கம் தன்னியல்பு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டதாகவே இயங்குகின்றது என்ற அரசியல் உண்மையை "மே18"காரர்கள் .........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


ஏரில்லை பூட்டுவதற்கு எருதுமில்லை வாக்குப்பெட்டியுடன் வாருங்கள்…

அதேஉரப்பும் உரைகளும் உறுதிமொழிகளும்
உபதேசம் செய்தபடியே மீளவும் மேடையேறுகிறது
எறிகணைகளைவிடவே கொடூரமானதாய்
கரங்களை அசைத்தபடியே வருகிறார்கள்
எந்தப் பதுங்கு குழிகட்குள்ளும் ஒதுங்கமுடியாதபடியாய்
யுத்தத்தில் எஞ்சியவர்கள் கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்

போரின் கோரமும் இழப்புகளும் ஆறாத்துயரும்
கொதிதணலாய் நெஞ்சத்துள் வெந்துகிடக்கிறது
கருகிய பிஞ்சுகளின் கதறல் கண்மூடா கொடும் இரவுகளாய்
ஜயோ முருகாவென்று.....
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Wednesday, January 13, 2010

சுரண்டும் வர்க்கம் எப்போதும் "தன்னியல்புவாதம்" கொண்டது. இதை மறுப்பது திரிபுவாதமாகும். (வியூகம் முன்னுரை மீது : பகுதி 02)

பிரபாகரனில் இருந்து தமிழ் தேசியத்தைத் தொடரவே, அதற்கொரு கோட்பாட்டை மே18 இயக்கம் வியூகம் மூலம் முன்தள்ளுகின்றது. இவர்கள் வேறுயாருமல்ல. தீப்பொறி முன்வைத்த அரசியலை கேசவனுக்கு பின் மறுதலித்தவர்கள். தீப்பொறியை கைவிட்டு, உயிர்ப்பு சஞ்சிகை மூலம் அரசியலை புலிக் கோட்பாடாக்கியவர்கள்.


இந்த அரசியல் கோட்பாட்டின் மூலம், புலிகளின் உளவு அமைப்பாக மாறியவர்கள் தங்களை தமிழீழக் கட்சியாக்கினர். இதை அன்று ஜான் "தன்னியல்பு வாதம்" என்ற கோட்பாட்டின் மூலம், புலிக்கு பின்னால் அழைத்துச் செல்ல முடிந்தது.


இன்று பிரபாகரன் இறந்த "மே18"இன் பெயரில், ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதற்கு "வியூகம்" போடும் வண்ணம் வியூகம் சஞ்சிகை மூலம், மறுபடியும் "தன்னியல்புவாதம்" என்ற தனது முந்தைய கோட்பாட்டை கொண்டு வரலாற்றை "தன்னியல்புவாதமாக" திரித்துக்காட்ட முனைகின்றார். இந்த "தன்னியல்புவாதம்" என்ற கோட்பாட்டின் ஊடாக, பிற்போக்கான ஒடுக்கும் (சுரண்டும்) வர்க்கங்கள்; முன்தள்ளிய தேசியத்தில் இருந்த வர்க்க அடிப்படைகளை நீக்கி, அதன் அரசியல் சமூக கூறுகளையும் மறுதலித்து "தன்னியல்பு வாதமாக" காட்டமுனைகின்றனர். தமிழ்தேசிய சுரண்டும் வர்க்கம் கடந்த தன் வரலாற்றில் தனிமனித முனைப்புடன் அது ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தை, வர்க்க அடிப்படையில் இருந்து பிரித்து "மே 18" இயக்கம் காட்ட முனைகின்றது. இதை கடந்த வரலாறாக்கி, அதை "தன்னியல்புவாத"த்தின் அரசியல் விளைவாக இட்டுக்கட்ட முனைகின்றனர்.

நாம் முதலில் ....... முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )

போரிலும் பகையிலும்

முதல் பொருளாய்

அவளையே சூறையாடினாய்:

அவளுக்கே துயரிழைத்தாய்

உன்னால் அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளையெல்லாம்

அவளிடமே ஒப்படைத்தாய்

தலைவனாகவும் தேவனாகவும் நீ தலை நிமிர்ந்து நடந்தாய்

(கவிஞர் ஃபஹீமாஜஹானின் ‘ஒரு கடல் நீரூற்றி’ தொகுப்பிலிருந்து)

பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும் விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும் பகைகளிலும் பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ........ முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Tuesday, January 12, 2010

இருண்டு போகுமா? - வன்னி அகதி முகாமில் இருந்து

விடைக்காய் காத்திருக்கிறோம்
எங்கள் எண்ணங்களும்
வாஞ்சைகளும் மொத்தமாய்
வாடி வதங்கிப்போய் கருகக் காத்துக் கொண்டு இருக்கின்றன
உணவுக்கும் தண்ணீருக்குமே நாங்கள்
வரிசையில் காத்துக்காத்து நின்ற......
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

Monday, January 11, 2010

தை 2010 தேர்தல் பெறும் அர்த்தம் – தாயகத்திலிருந்து ரவி

உலகின் வினோதமான அரசியல் போக்கு ஒன்றின் குவிமையப்படுத்தலாக இலங்கை எதிர்கொள்ளும் இன்றைய ஜனாதிபதித்தேர்தல் அமைந்திருக்கிறது. இதுவரையிலான இலங்கையின் தேர்தல்கள் ஏதோவொருவகையில் அதன் தலைவிதியை வரையறுப்பதாக அமைந்ததுண்டு. இன்றைய தேர்தல் அடிப்படையில் எந்த மீட்சிக்கும் நம்பிக்கையற்றதாக முகங்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும், இதுவரையில்லாத அளவில் கடும்போட்டி நிலவுவதாகவும் இது அமைந்துள்ளமை நகைமுரன். ஓரிரு வாரங்களுக்கு முன்வரை ஆளுந்தரப்பின் வெற்றி நிச்சயம் என்பதாக இருந்தபோதே போட்டி வலுவானது என்பதாக உணரப்பட்டது. போட்டிக்கு மூன்று வாரங்களுக்குட்பட்டதாக நாட்கள் நகரும் போது எதிர்த்தரப்பு வெல்ல வாய்ப்பு வலுத்துவருகின்றமையை அவதானிக்க முடிந்த போதிலும் கடுமையான போட்டி என்பது மாறிவிடவில்லை..

எதிர்த்தரப்பை வெற்றிகொள்ள வைப்பதற்கு ஐரோப்பா முதன்மைபெறும் இலங்கைக்கான உதவிவழங்கும் நாடுகளது ஒன்றியமும் அமெரிக்காவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காய்நகர்த்தல்களைச் செய்தபடியுள்ளன. சென்ற ஆண்டின் இறுதியில் சமர்ப்பித்திருக்க வேண்டிய வரவு–செலவுத்திட்ட ஆண்டறிக்கையை அரசு சமர்ப்பிக்கவில்லை. உதவிவழங்கும் நாடுகள் நிவாரணங்களின் மீதான கடும் வெட்டுகளை நிர்ப்பந்தித்து உடன்படவைத்த பின்னரே இந்த அரசுக்கு முண்டுகொடுக்க இணங்கியிருந்தனர். அதற்கேற்ற வெட்டு;களுடன் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துத் ........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?, சீனாவின் திபெத்தில் நடந்த இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சதிகள்

மீண்டும் சீன எதிர்ப்பு தேசிய வெறி இந்திய ஆளும் வர்க்கங்களால் கிளறி விடப்படுகிறது. புத்த மதகுருவான தலாய் லாமா அண்மையில் அருணாச்சலப் பிரதேசத்துக்கு "ஆன்மீகப் பயணம்' சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையும், அம்மாநிலத்தின் தவாங் மாவட்டப் பகுதியைத் தனது பாரம்பரிய பிரதேசம் என்று சீனா உரிமை கோருவதையும் வைத்து, இப்போது ஊடகங்கள் சீன எதிர்ப்பு தேசிய வெறியைக் கக்குகின்றன.


சீன ஊடுருவல் அதிகரித்துவிட்டது என்றும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது என்றும், சீனக் கொடியையும் சீனப் பொருட்களையும் எரித்து இந்துவெறியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். ""சீன ஊடுருவல் அதிகரித்துவிட்டது; மைய அரசு எஃகு போன்ற முதுகெலும்பில்லாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது'' என்று சாடி அறிக்கை வெளியிட்டார் பார்ப்பனபாசிச ஜெயலலிதா. பா.ஜ.க. தலைவர்களும் முலயம் சிங் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே எல்லை சச்சரவு நீடித்துவரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உண்மையில் சீன ஊடுருவல் அதிகரித்து விட்டதா? அந்நாடு இந்தியாவை ஆக்கிரமிக்கத் துடிக்கிறதா? அதனால்தான் இப்போது சீன எதிர்ப்பு என்பது முக்கிய விவகாரமாகிவிட்டதா? அதெல்லாம் இல்லை. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டப்படியே, அதன் விசுவாச அடியாளான இந்தியா, இப்போது சீன எதிர்ப்பு தேசிய வெறியைத் திட்டமிட்டு கிளறிவிட்டு வருகிறது.

புதிய நூற்றாண்டுக்கான.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


Sunday, January 10, 2010

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்….10.01.2010

மகஸீன் சிறையில் மூன்று கைதிகளின் நிலை கவலைக்கிடம்

தம்மை விடுவிக்கமாறு கோரி கொழும்பு மத்திய மகஸீன் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூன்றுபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பணிப்பாளர் தேவதாசனும் ஒருவர். இவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக யாழ்சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவோரில் நான்குபேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுகின்றனர்.

தேர்தல்பிரசாரக் கூட்டங்களில் பயங்கரவாதம் களையப்பட்ட பௌத்திரமான பூமி என்கின்றார் மகிந்த மன்னன். புலிகளின் முன்னால் உறுப்பினர்களைக்கூட விடுவிக்கின்றோம் என்கின்றார். அப்போது இவர்கள் என்ன விடுவிக்கப்படமுடியாத மகிந்த சிந்தனையிலான “நவீன” கைதிகளோ?

யுத்தக் குற்ற விசாரனைக்கு ஜ.நா சபை நிபுணர் குழுவை நியமிக்கும்

இலங்கையில் தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை வெளிப்படுத்தும் “சனல் 4-ல்” வெளியிடப்பட்ட ஒளிநாடா...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


"வியூகம்" முன்னுரை : "மே18" இயக்கம் "தன்னியல்புவாதம்" மூலம் முன்மொழியும் வர்க்கமற்ற அரசியல் (பகுதி 01)

"மே 18" இயக்கம் வெளியிட்ட வியூகம் இதழ் தனது முன்னுரையூடாக, கடந்த தமிழ் தேசியத்தின் தோல்விக்கு "தன்னியல்புவாதம்" தான் காரணம் என்கின்றது. இதே காரணத்தையே 1992 களில் "உயிர்ப்பு" சஞ்சிகை ஊடாக கூட இவர்கள் முன்வைத்தனர். இப்படி முன்வைத்ததன் ஊடாக, அது அன்று புலியின் ஆள்காட்டி அமைப்பாக, புலியின் உளவு அமைப்பாக மாறியதே கடந்த வரலாறாகியது.


இன்று மீண்டும் ஜான் அதே "தன்னியல்புவாதம்" கோட்பாட்டை முன்தள்ளுகின்றார். பிரபாகரன் செத்த நாளாக அரசு அறிவித்த மே 18 ஜ, தனது அமைப்பின் பெயராக முன்வைத்து கொண்டு மீண்டும் தமிழ்தேசியம் பேசுகின்றார். இப்படி "மே18" இயக்கம் மூலம் ஜான் முன்தள்ளும் அரசியல் என்பது, தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த "தேசியத்தை" அரசியல் ரீதியாக "தன்னியல்புவாதம்" மூலம் முன்மொழிந்து பாதுகாக்கின்றார். கடந்த காலத்தில் தேசியத்தின் பெயரில் நடத்திய மக்கள் விரோத பாசிச அரசியலை பாதுகாக்க, அதை "தன்னியல்புவாதம்" என்று கூறி, அதையும் பாதுகாத்து நிற்கின்றது "வியூகம்" இதழ்.

"தன்னியல்புவாதம்" தான், தமிழ் தேசியத்தின் தோல்வி என்கின்றனர். அது தேசியத்தின் தோல்வி அல்ல என்கின்றனர். தேசியம் முன்வைத்த அரசியலின் தோல்வியல்ல என்கின்றனர். இங்கு தேசியம் முன்வைத்த அரசியல் சரியானது, "தன்னியல்புவாதம்" தான் தோல்விக்கான காரணம் என்கின்றனர்.

இப்படி "மே 18" இயக்கம் "வியூகம்" ஊடாக வியூகம் போட்டு அதை "தன்னியல்புவாத' மாக முன்தள்ளும் அரசியல், கடந்தகாலத்தின் மக்கள்.......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்


இலங்கை: வகுப்புவாத அரசியல்வாதிகளின் தொழிற்சாலை!

இம்மாதத் தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் வரையான யாழ் மாவட்ட மக்கள் மீள் குடியேற்றத்துக்கு வந்துள்ளனர். ஓகஸ்ட் மாதம் 5ம் திகதியில் இருந்து யாழுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் (03.நவம் 09)அன்று 47,042 பேராக உள்ளது. அன்று இரவு 289 குடும்பங்கனைச் சேர்ந்த 894 பேர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வைத்து, அவர்களது உறவினர்கள் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் சண்டிலிப்பாய் பிரதேசசெயலகத்தைச் சேர்ந்தவர்களாகும். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவை கைக்குள் வைத்து, இரண்டு கிழமைக்கான அரிசி பருப்பு கருவாட்டுடன்: நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சாய்த்து விடப்பட்டுள்ளனர். இவ்வாறு துரையப்பா விளையாட்டு அரங்கிலும் வைத்து பலர் ‘சாயத்;து’ விடப்பட்டுள்ளனர். இதுதான் இக் குடியேற்றத்தின் திருவிளையாடல்!

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து, தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதாக விண்ணப்பித்த 2139 பேர்வரை (02.நவம் 09)ல் யாழுக்கு அனுப்பப்பட்டனர். இதில் 132 குடும்பத்தைச் சேர்ந்த, 466 தீவக மக்கள் சாவகச்சேரியிலிருந்து – அவர்களது பகுதிக்குச் ‘சாய்க்கப்’ பட்டனர். மற்றும் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேரை கரவெட்டி விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்தில் வைத்துச் ‘சாய்க்கப்’பட்டுள்ளனர.;
.

கடந்த பத்து மாதங்களாக......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்